மோனியர் வில்லியம்ஸ் காலமானார்-1899-ம் ஆண்டுச் செய்தி (Post No.5410)

INDOLOGIST MONIER WILLIAMS PASSED AWAY

பிரபல ஸம்ஸ்க்ருத அறிஞரும், ஸம்ஸ்க்ருத அகராதியை உருவாக்கியவருமான மோனியர் வில்லியம்ஸ் 1899ல் பாரீஸில் காலமானர் அவரைப் பற்றி விவேக சிந்தாமணி வெளியிட்ட அனுதாபச் செய்தி இதோ:

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9 September 2018

Time uploaded in London – 18-15 (British Summer Time)

Post No. 5410

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

 

 

 

 

 

 

 

 

மாக்ஸ்முல்லர் காலமானார்- 1900-ம் ஆண்டு பத்திரிக்கைச் செய்தி (Post No.5409)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 9 September 2018

 

Time uploaded in London – 17-27 (British Summer Time)

 

Post No. 5409

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மாக்ஸ்முல்லர் இறந்தவுடன் விவேக சிந்தாமணி வெளியிட்ட அனுதாபச் செய்தி நேற்று பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. இதோ அந்த இணைப்பு.

 

 

–xxx-xxx

Poet Bharati and Mahatma Gandhi condemned Purdah (Post No. 5408)

Compiled by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 9 September 2018

 

Time uploaded in London – 17-07 (British Summer Time)

 

Post No. 5408

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

Bharati born on 11 December 1882

Died on 11 September 1921

 

Subrahmanya Bharati, the greatest of the modern Tamil poets, condemned purdhah (veil) on Hindu women. he teases animaginary lady love Kannamma on wearing veil.

Here is the poem with English translation by Dr T N Ramachandran

 

Removal of the Veil by Bharati
TN Ramachandran’s Translation

It is the custom with Delhi Muslims
To keep the lotus face with veil covered
The liana waist and the jutting breast
Are to be veiled, as Sastras so prescribe

By veiling the breast and liana waist
Beauty is not under bushel hid;
Cupidry is not taught by word of mouth;
Can love flourish behind a veiled visage?


Noble you say are Aryan custom s old;
Did ever Aryan dames their face s veil?
Having met more than once and love exchange d
Wherefore this coy persistence— all formal?

Who will then dare essay, me to obstruct
If by force I pluck the veil from you r face?
Of what avail is pretension idle?
Can ever rind of fruit the eater defy?

 

Orignal Tamil Verse

 

 

Gandhi on veil from Nehru’s ‘Discovery of India’ (posted yesterday)

 


Anti Purdah
Gandhiji has been, and is, a fierce opponent of purdah and has called it ‘a vicious and brutal custom’ which has kept women backward and undeveloped. I thought of the wrong being done by the men to the woman of India by clinging to a barbarous custom which, whatever use it might have had when it was first introduced, had now become totally useless and was doing incalculable harm to the country. Gandhiji urged that woman should have the same liberty and opportunity of self -development as man.

 

–subham–

குருவியிடம் பாரதியார் கேட்ட கேள்விகள் (Post No.5407)

Written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 9 September 2018

 

Time uploaded in London – 16-28 (British Summer Time)

 

Post No. 5407

 

பாரதியார் பிறந்த நாள்: டிசம்பர் 11, 1882

இறந்த நாள் செபடம்பர் 11, 1921

 

பறவைகளையும் மிருகங்களையும் பயன்படுத்தி மனிதர்களுக்கு பாடம் கற்பிப்பது வேத காலம் முதல் இருந்து வருகிறது. இயற்கையிலிருந்து  தத்தாத்ரேயர் கற்ற விஷயங்களை  முன்னரே பாகவத புராணத்தில் கண்டோம்.

பாரதிக்குக் குருவியும் காகங்களும் போதித்த விஷயங்கள் ஏராளம். இதனால்தான் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடினார் போலும். குருவியின் விடுதலை உணர்வைக் கண்டவுடன் நாட்டு விடுதலை கூட அவருக்கு மற ந்து விட்டது. ஆன்ம விடுதலை பற்றிப் பாடத் துவங்கினார். அதையும் முன்னரே ‘விட்டு விடுதலையாகி’ என்ற பாடலில் கண்டோம். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாப்பா பாட்டில் எல்லா மிருகங்கள் மூலம் கற்க வேண்டிய விஷயங்களை எடுத்துரைத்து அவைகளிடத்தில் இரக்கம் கொள்ள வேண்டும் பாப்பா என்கிறார்.

 

 

இது தவிர குயில் பாட்டு, கிளிப் பாட்டு என்று பறவைகளை வைத்து பல பாடல்கள் வேறு.

ஆயினும் நிறைய பேரை கவந் து ததி ஈர்க்காத பாடல் ஒன்றில் பெரிய பட்டியலே குருவியின் வாய் மூலமாக கேட்கிறார்.

 

பாரதியார் குருவியிடம் கேட்ட கேள்வி:

ஏ குருவியே நீ என்ன வேலை செய்கிறாய்?

எப்படி வாழ்க்கை நடத்துகிறாய்?

 

உடனே குருவி சொன்ன பதிலைப் பாருங்கள்:

 

எங்களிடம், கீழ் ஜாதி , மேல் ஜாதி இல்லை;

அடிமைகளில்லை; எல்லோரும் மன்னர்!

 

 

மேலும் எங்களிடம் காசு பணம் கிடையாது.

ஆனால் எப்போதும், எங்கும் எங்களுக்கு உணவு கிடைக்கும்

 

சின்ன வயிற்றுக்காக ஆட்டுக் குட்டிகள் போல பிறரிடம் கட்டுப்பட்டிருக்க மாட்டோம்.

 

வீடு வாசல் தேவை இல்லை; ஆகாயமே கூரை!

 

உணவோ உயர்ந்த பொருள்கள்தான்.

 

எங்களிடம் ஏழை பணக்காரர் இல்லை.

ஏற்ற தாழ்வு இல்லை.

கள்ளம் கபடம் கிடையாது.

 

கொலை, களவு கிடையாது;

இளையோரை வலியோர் ஏறி மிதிப்பதும் இல்லை.

 

நீங்கள் சின்னஞ்சிறிய வீடுகளில் வசித்தாலும் துன்பத்தில் உழல்கிறீர்கள்; நாங்கள் அப்படித் துன்பப் படுவதில்லை.

 

மரம், செடி, மலர்கள், ஏரி, குளங்கள், மலை, குன்று, வீடுகள் ஆகியவற்றில் சுற்றிச் சுற்றி விளையாடுவோம்.

குடும்பக் கவலைகள் இல்லை.பந்தங்கள் கிடையா.

தீட்டு முதலியன இல்லை.

 

இன்பம்; எப்போதும் இன்பம்.

 

காலையில் எழுந்து கடவுளைத் தொழுவோம்.

மாலையிலும் கடவுளைத் தொழுவோம்.

 

துன்பத்தில் உழலும் உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்வேன்.

 

மெய்ஞ் ஞானத்தைப் பெறுங்கள்;சிறுமைத் தனங்களை உதறி விடுங்கள். இதனால் தேவர் நிலை கிடைக்கும். கடவுள் உங்களுக்குத் துணை இருப்பான். இன்பம் கிட்டும்.

 

அன்பையும் சத்தியத்தையும் கடைப்பிடியுங்கள்;

 

பொய் வேஷம் போடாதீர்கள்;

தர்மத்தைக் கைக்கொள்ளுங்கள்.

 

பயத்தை விட்டு துணிச்சலாக நில்லுங்கள்.

 

இப்படி வாழ்ந்தால் என்றும் இன்பம் என்று குருவி நல்ல யோசனை கூறுகிறது.

நல்ல யோசனைதான்; ஆனால்  பின்பற்றுவதோ எளிதல்ல.

குருவிகளைக் கவனித்தோருக்கு அவை எப்போதும் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் திரிந்து விளையாடுவது வியப்பை ஏற்படுத்தும். அவற்றின் ரஹஸியம் இப்போது நமக்கும் தெரிந்துவிட்டது. ஏற்ற தாழ்வில்லாத சமுதாயம்; அடிமை வேலை இல்லாத சமுதாயம்; காசு பணம் என்று திரியாத சமுதாயம் ; ஏழை பணக்காரர் இல்லாத எப்போதும் உணவு கிடைக்கும் வளமை! பெரிய பங்களாக்கள், மாட மாளிகைகள் இல்லாத எளிமையான வாழ்வு.

 

வாழ்க சிட்டுக் குருவிகள்!

 

 

 

பாரதி நாமம் வாழ்க

 

–சுபம்—

 

பாரதி 97!- PART 1 (post No.5406)

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-23 AM (British Summer Time)

 

Post No. 5406

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

பாரதி 97!- PART 1

 

ச.நாகராஜன்

 

மஹாகவி பாரதி அமராரான நாள் செப்டம்பர் 11. 1921 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். 97 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.அவரது சிறப்பியல்புகள் எத்தனையோ. அவற்றில் 97ஐ இங்கு காண்போம். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் சிறந்துயர்வோம்.

 

 

  1. சிறந்த சம்ஸ்கிருத விற்பன்னர்

1898 ஜூன் மாதம். பாரதியார் காசிக்குப் பயணமானார். அங்கே ஹிந்து கலாசாலையில் சேர்ந்தார். ஸம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையைப் பெற்றார்.அத்துடன்  ஹிந்தி பாஷையிலும் தேர்ந்தார்.

  1. பல்மொழி அறிந்தவர்

பாரதியார் இயல்பாகவே பல மொழிகளை அறிந்து கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.புதுவை வாழ்க்கையில் பிரெஞ்சு மொழியையும் வங்காள மொழியையும் அறிந்து கொண்டார். சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்பதால் அவர் தெலுங்கு மொழியும் அறிந்தவரே. யாம் அறிந்த மொழிகளிலே’ என்ற அவரது பாடல் குறிப்பின் மூலமாக அவரது பன்மொழி அறிவைத் தெரிந்து கொள்ளலாம்.

 

  1. பள்ளி ஆசிரியர்

1903ஆம் ஆண்டு பாரதியார் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக மூன்று மாதம் பணி புரிந்தார்.

  1. சிறந்த பத்திரிகாசிரியர்

இந்தியா உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்ததோடு தேசபக்தி உணர்வூட்டும் பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.

  1. சிறந்த பதிப்பாளர்

பல நூல்களை வெளியிட்டவர். மிகத் தரமான முறையில் குறைந்த விலையில் தன் கவிதை நூல்களை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குண்டு.

  1. கார்ட்டூனை அறிமுகப்படுத்தியவர்

இந்தியா இதழில் கார்ட்டுனை அறிமுகப்படுத்தி சிறந்த கருத்துக்களை சித்திரம் மூலம் வெளிப்படுத்தியவர்

7.சிறந்த கவிஞர்

பல நூறு பாடல்களை இயற்றியவர். இந்தப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

 

  1. சிறந்த கணவர்

தன் மனைவி செல்லம்மாவை உயிரினும் மேலாக நேசித்தார். சம உரிமை தந்து கை கோர்த்து தெரு வீதியில் அந்தக் காலத்திலும் சென்று புதுமை படைத்தார்.

  1. சிறந்த தகப்பன்

தன் குழந்தைகளை உயிரினும் மேலாக நேசித்தார். அவர்களுக்கு அன்பைக் குழைத்து அறிவைத் தந்தார். அவரைப் பற்றி அவரது குடும்பத்தினர் எழுதிய நூல்களில் அவரது அன்பைக் காட்டும் பல சம்பவங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

  1. சிறந்த கதாசிரியர்

ஞான ரதம் உள்ளிட்ட ஏராளமான படைப்புகள் அவர் சிறந்த கதாசிரியர் என்பதை உணர்த்தும்.

  1. சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.

மகாகவியின் எழுத்துக்களில் ஆங்காங்கே நகைச்சுவை கொப்பளிக்கும்.சின்னச் சங்கரன் கதை நல்ல நகைச்சுவை கதையாக மிளிர்ந்தது.

  1. சிறந்த புதுக் கவிதை இயற்றிய புதுமையாளர்

வசன கவிதைகள் பலவற்றை இயற்றிய புதுமையாளர். காட்சி, புகழ் உள்ளிட்டவை இவரது வசன கவிதை  படைப்புகளை இனம் காட்டுபவையாகும்.

13.சிறந்த சொற்பொழிவாளர்

ஏராளமான மேடைகளில் அனல் பறக்கும் தேசிய உணர்வூட்டும் சொற்பொழிவுகளை ஆற்றியவர். ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் ஆற்றியவர்;

  1. சிறந்த மேலை இலக்கிய விற்பன்னர்.

ஷெல்லியின் பாடல்களில் தோய்ந்தவர். ஷெல்லி தாசன் எனப் புனைப்பெயரையே கொண்டார்.ஆங்கிலக் கவிஞன் பைரன், வால்ட் விட்மன் உள்ளிட்ட ஏராளமானோரின் கவிதைகளைப் படித்து உணர்ந்து அனுபவித்தவர்.

 

  1. மஹாத்மாவை இனம் கண்டவர்

மஹாத்மா காந்தி பஞ்சகத்தை இயற்றி இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த மஹாத்மா என்று போற்றினார். மஹாத்மாவை சென்னையில் சந்தித்து அவரது தலைமைக்கும் இயக்கத்திற்கும் ஆசி கூறினார்.

  1. திலகரைப் போற்றியவர்

திலகரிம் பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். வாழ்க திலகன் நாமம் பால கங்காதர திலகர் ஆகிய பாடல்களைப் பாடி அவரைப் போற்றியவர்.

  1. தேசபக்தர்களைப் போற்றியவர்

தாதாபாய் நௌரோஜி, லாலா லஜ்பத்ராய் உள்ளிட்ட பெரும் தலைவர்களைப் போற்றியவர்.

18.வ.உ.சிக்கு நெருக்கமானவர்

‘வ.உ.சி.க்கு வாழ்த்து’ பாடியவர். அவருடன் நெருங்கிப் பழகியவர்.

 

19.நிவேதிதாவைக் குருவாகக் கொண்டவர்

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை 1906ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா காங்கிரஸில் கலந்து கொண்டு திரும்பும் போது சந்தித்து உபதேசம் பெற்றவர். நிவேதிதா தேவி துதி இயற்றிப் போற்றியவர். தனது இரு நூல்களை அவருக்கு சமர்ப்பணம் செய்தவர்.

  1. அரவிந்தருடன் நெருங்கிப் பழகியவர்

அரவிந்தரின் நட்பு புதுவையில் ஏற்பட்டது. அவருடன் அடிக்கடி அளவளாவி பல கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டவர். வேதத்தை அரவிந்தரிடம் கற்றார். அரவிந்தரும் பாரதியாரும் பரஸ்பரம் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

  1. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தியவர்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடியவர். சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும் என அறிவுரை பகன்றவர். தமிழைப் புதிய சிகரத்தில் ஏற்றியவர்.

22.சிறந்த இசை விற்பன்னர்

பல பாடல்களை – கிருதிகளை – தாளம், ராகத்தோடு இயற்றியவர். அவற்றை பலருக்கும் சொல்லித் தந்தவர். தமிழில் உள்ள இசைப் பாடல்களையும் கச்சேரிகளில் பாடுதல் வேண்டும் என முதன்முதலில் முழக்கம் இட்டவர்.

  1. சிறந்த பாடகர்

கணீரென்ற குரலில் தனது பாடல்களை ஆவேசத்தோடு அவர் பாடியதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டு மெய் சிலிர்ப்பது வழக்கம்.

  1. தேவார திவ்ய பிரபந்த விற்பன்னர்

தேவாரத்திலும் திவ்ய பிரபந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவற்றை அடியொற்றிய பாடல்களையும் இயற்றியவர்.

  1. சங்க இலக்கிய விற்பன்னர்

சங்க இலக்கியங்களைக் கற்றவர். இளங்கோ மீது ஈடுபாடு கொண்டவர். திருக்குறளைப் போற்றியவர்.

 

  1. கம்பனில் ஈடுபாடு கொண்டவர்

எல்லையற்ற தன்மையைக் கொண்டவர் என கம்பனைப் போற்றியவர்.கம்பன் பிறந்த தமிழ்நாடு என கம்பனையும் தமிழ் நாட்டையும் உச்சியில் ஏற்றிப் பாராட்டியவர்

  1. வேதம் புகழ்ந்தவர்

வேதம் உடையது இந்நாடு என வேதத்தைப் பெருமையாகப் பறை சாற்றிய ‘வேத அறிஞர்’ பாரதியார்.  ஏராளமான வேதக் கருத்துக்களை தன் கவிதைகளிலும்,கட்டுரைகளிலும் எடுத்துக் காட்டியவர். அரவிந்தருடன் வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.

27.ரஷிய புரட்சியை வரவேற்றவர்.

ஜார் மன்னன் வீழ, ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி என ரஷிய புரட்சியை அழியாத கவிதை மூலம் பாராட்டியவர்.

இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான் ஜாரரசன் என்று பாடினார்.

28.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து பாடியவர்

முதல் உலக மகா யுத்தத்தில் ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த சுதந்திர அரசை வீழ்த்தியபோது திறத்தினால் எளியை ஆகிச் செய்கையால் உயர்ந்து நின்றதாக பெல்ஜியத்தைப் பாராட்டினார். துயருண்டோ துணிவுள்ளோர்க்கே என்று தன் கவிதையை முடித்தார்.

29.பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் படும் பாட்டைக் கண்டு வருந்தியவர்

கரும்புத் தோட்டத்திலே ஹிந்து மாதர் படும் துன்பம் தீர ஒரு மருந்திலையோ என வேதனைப் பட்டார். எங்கு ஹிந்துக்கள் துன்பப்பட்டாலும் தனது வேதனைக் குரலை வெளியிட்டார்.

 

Hindu temple in Fiji

  1. உலக நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்

தனது பத்திரிகை வாயிலாக அறத்தினால் நிமிர்ந்து நிற்கும் அரசுகளுக்கு ஆதரவு தந்தார். புரட்சியை வரவேற்றார். மறத்தினால் ஆளும் ஆட்சிகளை – பிரிட்டிஷ் ஆட்சி உட்பட அனைத்தையும் கண்டித்தார்.

  1. தீர்க்கதரிசி

ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று என்று தீர்க்கதரிசன வாக்குக் கூறியவர்.

  1. வெள்ளையரை விரட்ட குரல் கொடுத்தவர்

வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே என்று வெள்ளையரை இகழ்ந்து சுதந்திரத்திற்காக வெகு ஜன எழுச்சியைத் தன் பாட்டாலும் செயலாலும் சொற்பொழிவாலும் ஏற்படுத்தியவர். பாரத தேசம் பெற்ற சிறந்த தவப்புதல்வர்.

அடுத்த இரு கட்டுரைகளுடன் இந்தத் தொடர் முடியும்.

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

Gandhi condemned Purdah: Nehru (Post No.5405)

 

Gandhi Statue in San Francisco, USA; picture by Krishna Srinivasan

Compiled by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 8 September 2018

 

Time uploaded in London – 18-45 (British Summer Time)

 

Post No. 5405

 
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 
India’s first prime minister Jawaharlal Nehru refers to Gandhi several times in his book ‘Discovery of India’.
Here are some quotations:
Some kind of ethical approach to life has a strong appeal for me, though it would be difficult for me to justify it logically. I have been attracted by Gandhiji’s stress on right means and I think one of his greatest contributions to our public life has been this emphasis.
Xxx

Blood-shot Eyes!

I remember the words that Gandhiji said on that fateful evening on August 8 th,1942( about World War II)
We must look the world in the face with calm and clear eyes even though the eyes of the world are blood- shot today.

Xxxx

 

Bogus Interview
Some weeks earlier a friend in Rome had written to me to say that Signor Mussolini would like to meet me. There was no question of going to Rome. And then there had been the bogus interview with Mr Gandhi which the Giomale d’italia had published in 1931.

Xxxx

Picture of Gandhi Statue by  Krishna Srinivasan, SFC, USA.

Gandhi is not a Brahmin
There are innumerable examples of non- Brahmins and even persons belonging to the depressed classes, being so respected and sometimes
considered as saints.

Even today, in this money age, the influence of this tradition is marked, and because of it Ganghiji who is not a Brahmin can become the Supreme leader of India and move the hearts of millions without force or compulsion or official position or possession of money.

Xxx

 

Tapas- Penance does it!
This idea of some kind of penance, tapasya, is inherent in Indian thought, both among the thinkers at the top and the unread masses below. It is present today as it was present some thousands of years ago, and it is necessary to appreciate it in order to understand the psychology underlying the mass movements which have convulsed India under Gandhiji’s leadership.

Xxx


About Bhagavad Gita
Even the leaders of thought and action of the present day— Tilak, Aurobindo, Ghose, Gandhi— have written on it, each giving his own interpretation. Gandhiji places his firm belief in non -violence on it, others justify violence and warfare for a righteous cause.

Xxx

Caste must be eliminated!
Gandhiji’s references to caste have been progressively stronger and more pointed, and he made it repeatedly clear that the caste as a whole and as it exists, must be eliminated. And again, quite recently, he said:
The caste system, as we know, is an anachronism. It must go if both Hinduism and India are to live and grow from day to day.

Xxx
Anti Purdah

Muslim Voters in Gujarat where Gandhi was born

Gandhiji has been, and is, a fierce opponent of purdah and has called it ‘a vicious and brutal custom’ which has kept women backward and undeveloped. I thought of the wrong being done by the men to the woman of India by clinging to a barbarous custom which, whatever use it might have had when it was first introduced, had now become totally useless and was doing incalculable harm to the country. Gandhiji urged that woman should have the same liberty and opportunity of self -development as man.

Xxx
Tagore and Gandhi have undoubtedly been the outstanding and dominating figures of India in this first half of the twentieth century.

 

Picture by london swaminathan; location Bharatiya Vidhya Bhavan, London

— Subam —

ஸம்ஸ்க்ருதத்தில் 650 நாடகங்கள்- நேருஜி தகவல் (Post No.5404)

Written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 8 September 2018

 

Time uploaded in London – 8-25 am (British Summer Time)

 

Post No. 5404

 
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஸம்ஸ்க்ருத மொழியின் சிறப்புகள் பற்றி எவ்வளவோ படிக்கிறோம். பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) என்ற நூலில் வேறு இடத்தில் கிடைக்காத பல செய்திகளை எழுதியுள்ளார்.

 

ஸம்ஸ்க்ருத மொழியில் பாஷா, காளிதாசன்,சூத்ரகன், ஹர்ஷர் முதல் ஒன்பதாம் நுற்றாண்டு முராரி வரை பலரும் நாடகங்களை எழுதினர். சில்வன் லெவி (SYLVAIN LEVY) என்ற பிரபல இந்தியவியல் அறிஞர் 189 ஆசிரியர்கள் எழுதிய 377 நாடகங்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பின்னர் வெளியான ஒரு பட்டியலில் 650 நாடகங்கள் இருப்பதாக நேருஜி தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.

 

1924 ஆம் ஆண்டிலேயே சூத்ரகன் என்ற பிரபல ஸம்ஸ்க்ருத நாடகாசிரியர் எழுதிய ‘ம்ருச்ச கடிகம்’ (மண்ணியல் சிறுதேர்) நியூயார்க்கில் நாடக மேடை ஏறியதும் அது பற்றி நேஷன் என்ற பத்திரிக்கையின்  கலை விமர்சகர் ஜோஸப் வுட் க்ரட்ச் நீண்ட விமர்சனம் எழுதியதையும் அப்படியே கொடுத்துள்ளார் நேரு.

“அந்த நாடகம் யார் எழுதியது, எந்த நூற்றாண்டில் எழுதியது என்பதைவிட அதன் இதயத்தைத் தொடும் அம்சங்களும், உண்மையுமே மிகவும் கவர்ர்ந்திழுக்கிறது. இது போன்ற ஒரு தூய நாடகத்தை ஐரோப்பாவில் காண முடியாது” என்றார்.

 

ஷேக்ஸ்பியர் எழுதிய Mid Summer Night’s dream

‘மிட் சம்மர் நைட் ட்றீம்’ என்ற நாடகம் அந்தக் காலத்திலேயே , அதாவது 1892 ஆம் ஆண்டில்– ஸம்ஸ்க்ருத மொழியாக்கம் செய்யப்பட்ட செய்தியையும் எழுதியுள்ளார்.

 

 

1789-ஆம் ஆண்டில் ஸர் வில்லியம் ஜோன்ஸ் (SIR WILLIAM JONES) காளிதாசனின் சாகுந்தலம் நடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவுடன் மேலை உலகம் முழுதும் பெரும் வியப்பும் மகிழ்ச்சியும் உண்டானதாகவும் உடனே அவரது மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஜெர்மன், பிரெஞ்ச், இதாலிய மொழிகளில் சாகுந்தலம் வெளியானதாகவும்நேருஎழுதுகிறார். அது மட்டுமல்ல கெதே (GOETHE) போன்ற பெரும் புலவர்களை இது மிகவும்  ஈர்த்தது என்கிறார்.

நாடகங்களுக்கு அறிமுகம்/ பீடிகை (PROLOGUE) எழுதுவது ஸம்ஸ்க்ருத நாடகங்களில் மட்டுமே உண்டு. காளிதாசன் நாடகங்களைப் பார்த்துத்தான் பாஸ்ட் (FAUST) போன்ற நாடகத்தில் அறிமுகம்/ பீடிகை இடம்பெற்றது என்றும் சொல்கிறார்.

 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர் வில்ஸன் (WILSON) பவபூதி, காளிதாஸன் நாடகங்களைப் புகழ்ந்து எழுதியதையும் மேற்கோள் காட்டுகிறார். ‘இசை போன்று ஒலிக்கும் மஹத்தான காவியங்கள்’ என்பது வில்ஸனின் பாராட்டுரை.

 

2800 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி விதித்த வரம்புக்குள் இவ்வளவும் நடந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாடகம் முதலிய கலைத்துறைகள் படிப்படியாகக் குறைந்தமைக்கு இஸ்லாமிய மதத்தின் கலை வெறுப்பே காரணம் என்று ஒரு கருத்து உள்ளது. இந்தக் கலைகள் அனைத்தும் இந்தியாவின் தேசீய மதத்தைத் தழுவி இருந்ததால் ஆட்சியாளரின் ஆதரவு கிடைக்காமல் போயிற்று என்பதைக் குறிப்பிட்ட நேரு இதை முழுதும் ஏற்பதற்கில்லை. ஏனெனில் அதற்கு முன்னரே கலைகளின் வீழ்ச்சியைக் காண முடிகிறது என்பார்.

 

ஸர் வில்லியம் ஜோன்ஸ் சொன்ன கருத்தை அப்படியே கொடுத்துள்ளார்.

 

“சம்ஸ்க்ருத மொழி, எவ்வளவு பழமையாக இருக்கட்டும்; அதன் அமைப்பு மிகவும் அதிசயமானது. கிரேக்க மொழியை விட சிறப்பானது; லத்தீன் மொழியைவிட வளம் பொருந்தியது; இரண்டு மொழிகளையும் விடசெம்மையானது; ஆயினும் வியப்பான ஒற்றுமையைக் காணமுடிகிறது. வினைச்சொற்களின் வேர், இலக்கண அமைப்பு ஆகியவற்றில் அதிக ஒற்றுமை இருப்பதை தன்னிச்ச்சையாக நடந்தது என்று எண்ண முடியாது. எந்த ஒரு மொழி அறிஞனும் அவை ஒரே மூலத்திலிருந்து பிறந்த மொழிகள் என்றே எண்ணுவான். அந்த மூல மொழி இப்போது இல்லாமல் இருக்கலாம்”.

 

நேருவும் தனது சொற்களில் சம்ஸ்க்ருத்த மொழியின் வளமை, பழமை, செம்மை ஆகியவற்றைப் பாராட்டுகிறார்.

 

பாணினி பற்றி (ABOUT PANINI)

உலக மஹா இலக்கண மேதை, உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதிய, பாணினி பற்றி ஜவஹர்லால் நேரு, டிஸ்கவரி ஆப் இந்தியா- வில் கூறுகிறார்:-

“கி.மு. ஆறாவது அல்லது ஏழாவது நூற்றாண்டிலேயே பாணினி என்பவர் ஸம்ஸ்க்ருத இலக்கணத்தை எழுதிவிட்டார். அவருக்கு முந்தி இருந்த இலக்கண வித்தகர்களின் பெயர்களையும் அவர் செப்புகிறார். அவரது காலத்தில் ஸம்ஸ்க்ருத மொழி செம்மொழியாகி  எப்போதும் வளரும் இலக்கியமாக உருப்பெற்றது. அவர் எழுதிய புத்தகம் வெறும் இலக்கண புஸ்தமன்று. அதற்கும் மேலானது . பாணினியின் இலக்கணம் (அஷ்டாத்யாயி) பற்றி சோவியத் (ரஷ்ய) பேராசிரியர் ஸ்டெசர் பாட்ஸ்கி பகர்கிறார்: ‘

‘மனித சிந்தனையின் மஹத்தான சாதனைப் படைப்புகளில் இதுவும் ஒன்று. இதுவும் இதன் மீது பதஞ்சலி எழுதிய மஹாபாஷ்யம் என்னும் பேருரையும் இந்திய விஞ்ஞான சிந்தனையின் அடிப்படையாகத் திகழ்கின்றன.’

 

பாணினிக்குப் பிறகு பல வியாக்கியானங்களும் பிற்சேர்க்கைகளும் வந்த போதும் இன்றும் அது, ஸம்ஸ்க்ருத இலக்கணத்தின் அளவுகோலாக நிற்கிறது. பாணினி யவன லிபி பற்றிச் சொல்லுவது வியப்பானது – அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்னரே இந்தியாவுக்கும் கிரேக்க நாட்டுக்கும் தொடர்பு இருந்ததை இது காட்டுகிறது.

 

பாணினி பல்வேறு நாட்டியங்கள் பற்றி உரைப்பது 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டியம், நாடகம் வளர்ந்ததைக் காட்டுகின்றது.

 

அடிக்குறிப்பு:

கீத் போன்றோர் கி.மு.300 வாக்கில் பாணினி இருந்ததாகச் சொன்னாலும் அவர் புத்தர் காலத்துக்கும் முந்தியவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. பாணினி சொல்லும் விஷயங்களில் எங்குமே புத்தமத வாசனை துளிக்கூட இல்லை.

 

 

வட மேற்கு இந்தியாவில் தற்போதைய பெஷாவர் (பாகிஸ்தானில் உள்ளது) நகருக்கு அருகில்  புத்தர் பிறபதற்கு முன்னர் (2700 ஆண்டுகளுக்கு முன்னர்) தட்ச சீலம் நகரில் ஒரு பல்கலைக்கழகம் இருந்தது. விஞ்ஞானம் மருத்துவம் கலைகள்,சம்யம் ஆகியவற்றைப் போதித்தது (இதுதான் உலகின் முதல் பல்கலைக்கழகம்).அதில் கல்வி கற்க தொலைதூரப் பிரதேசங்களில் இருந்து பிராஹ்மணர்களும் பிரபுக்களின் பிள்ளைகளும் பயமின்றி, ஆயுதப் பாதுகாப்பின்றி பயணம் செய்ததை ஜாதக் கதைகளில் காண்கிறோம். அதில் படித்துப் பட்டம் பெறுவதை பெறும் கௌரவமாகக் கருதினர். பாணினியும் இந்த இடத்தில் கல்வி கற்றவரே.முன்காலத்தில் பிராஹ்மண (வேத) பாடங்கள் கற்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் பௌத்தம் கற்பிக்கும் கேந்திரமாக மாறியது.

 

(அடைப்புக் குறிக்குள் இருப்பது நான் சேர்த்த விளக்கங்கள்.  நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர், சிறைவாசத்தின்போது நேரு எழுதியது டிஸ்கவரி ஆப் இந்தியா. அனைவரும் படிக்க வேண்டிய நூல்)

 

–சுபம்–

செம்பைப் பொன்னாக்கி தந்த கொங்கண சித்தர்! (Post No.5403)

WRITTEN BY S NAGARAJAN

Date: 8 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-58 AM (British Summer Time)

 

Post No. 5403

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

செம்பைப் பொன்னாக்கி அனைவருக்கும் தந்த கொங்கண சித்தர்! (Post No.5403)

 

 

செம்பைப் பொன்னாக்கும் ரஸவாதக் கலையில் தேர்ந்தவர்கள் சித்தர்கள்.கருணை பெருக ஏழைகளுக்கும் தகுந்தவர்களுக்கும் செம்பைப் பொன்னாக்கித் தருவது அவர்களின் வழக்கம். இப்படிப்பட்ட சித்தர்களுள் குறிப்பிடத்தகுந்த பெரிய சித்தர் கொங்கண சித்தர்.

இவர் கொங்கு மண்டலத்தில் உள்ள ஊதியூர் மலையில் வசித்து வந்தார்.

இவரைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 37ஆம் பாடலில் சிறப்பித்துக் கூறுகிறது:

தோற்றிய செம்பு தராவீயம் பித்தளை சூழ்பச்சிலைச்

சாற்றுடனாக ரசங்கந் தகமிட்டுத் தந்திரமாய்

தேற்றுந் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன் செம்பொன்செய்து

மாற்றுரை கண்டது பொன்னூர்தி யூர்கொங்கு மண்டலமே

 

இதன் பொருள் :- செம்பு,பித்தளை முதலிய உலோகங்களுடன் பச்சிலைச் சாறு, ரச கந்தகம் முதலியன சேர்த்துப் பொன்னாக அதை மாற்றிக் காணும் கொங்கண சித்தர் வசிக்கும் ஊதியூர் மலையும் கொங்கு மண்டலத்தில் உள்ளதே ஆகும்.

 

இவர் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

மகதநாட்டு மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அதைப் பார்த்த சுராநந்த முனிவர் என்பவர் அதை நீடித்து வாழ்வாயாக என்று ஆசி கூறிக் காப்பிட்டார்.

சகல கலைகளும் கற்ற அந்த அரசகுமாரன் தேச சஞ்சாரத்தால் ஞானத்தைப் பெறலாமென்று எண்ணினான். அதைத் தன் தந்தைக்கு அவன் தெரிவிக்க உரிய பரிவாரங்களோடு மகனை அனுப்பி வைத்தார் தந்தை. பல ஊர்களையும் சென்றடைந்த பின் ஆதியூருக்கு வந்தான் அரசகுமாரன். அங்கு சுராநந்த முனிவர் தோன்றி அவனுக்கு முக்கால அடைவு உணர்வித்து ஆசி அருளினார்.

இந்த கொங்கண ராஜன் மேல் நாட்டு யாத்திரையாகக் கிளம்பி பல தலங்களையும் தரிசித்து தென் கரை நாட்டில் கொங்கணேசரைத் தரிசித்து அங்கே தங்கி இருந்தான். ஒரு நாள் புன்னாக மர நிழலிலே சிவனைத் தரிசித்து உள்ளமுருகுப் பூசிக்கும் காலத்தில் இறைவன் குருவடிவாகத் தோன்றி அஷ்ட மா சித்தியையும் சிவ யோகத்தையும் தெளிவாக உபதேசித்து அருளினார்.

கொங்கணர் தாமிர முதலியவற்றை பொன்னாக மாற்றும் சித்தியைப் பெற்றதால் விரும்பினோருக்கு அப்படிப் பொன்னாக மாற்றிக் கொடுத்து வந்தார். ஒரு சமயம் ஆகாயத்தில் பறந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட அதைக் கொங்கணர் விழித்துப் பார்க்கவே அது சாம்பலானது.

கொங்கணருக்கு இன்னொரு சித்தரான கோரக்கநாதரின் நட்பும் உண்டானது.

அப்பிரமேய தல புராணம் கூறும் செய்யுள் இது:-

பாத பத்திரம் பற்பல மூலி கொண்

டூது கற்புட முன்வலி யெய்திய

சூத வேதைசிந் தூரத் துகளினால்

வாத சித்தி கனகம் வழங்கினான்

தென்கரை நாட்டில் உள்ள ஊதியூர் சிவபெருமான் கொங்கணேசர் என்ற திருநாமம் கொண்டவர். இங்கு சிவபிரானின் அநுக்கிரகம் பெற்று வசித்தலால் இறைவன் திரு நாமமான கொங்கணர் என்ற பெயரைப் பெற்று வாழ்ந்து வந்தார் இந்த சித்தர்.

இராசிபுர நாட்டிலும் கொங்கண சித்தர் மலை, கொங்கண சித்தர் ஆலயம் ஆகியவை உள்ளன.

கொங்கண சித்தர் அருளிச் செய்த நூல்களாக நம்மிடையே இன்று பஞ்சபட்சி, வாதம், வைத்தியம் ஆகிய நூல்கள் உள்ளன.

 

கொங்கணகிரியில் அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் ஒன்று உண்டு:

 

ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள

ரந்திபக லற்றநிலை                        வருள்வாயே

அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வழுத்தியுனை

அன்பொடுது திக்கமன                   மருள்வாயே

தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்தி பெற

சந்திரவெ ளிக்குவழி                        யருள்வாயே

தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்

சம்ப்ரமவி தத்துடனே                       வருள்வாயே

மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன

முன்றனைநி னைத்தமைய                  அருள்வாயே

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி

வந்தனைய புந்தியினை                     யருள்வாயே

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்

கொண்டுஉட லுற்றபொரு                   ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு

கொங்கணகி ரிக்குள்வள்ர்                    பெருமாளே

அருமையான அர்த்தத்தைக் கொண்ட இந்த அரிய திருப்புகழின் இறுதியில்,

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்

கொண்டுஉட லுற்றபொரு                   ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு

கொங்கணகி ரிக்குள்வள்ர்                    பெருமாளே

என்று வரும் வரிகள் கொங்கண கிரியின் பெருமையைக் கூறுவதைக் காணலாம்.

***

650 Plays! Nehru on Sanskrit Wonders!! (Post No.5402)

Compiled by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 7 September 2018

 

Time uploaded in London – 18-25 (British Summer Time)

 

Post No. 5402

 
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

We read about wonders of Sanskrit language. Jawaharlal Nehru adds more interesting information which most of us don’t know.

Following is taken from his book Discovery of India before Independence: –

“Europe first learned of the old Indian drama from Sir William Jones translation of Kalidasa’s Shakuntala, published in 1789. Something in the nature of a commotion was created among European intellectuals by the discovery and several editions of the book followed. Translations also appeared in German, French Danish and Italian. Goethe was powerfully impressed and he paid a magnificent tribute to Shakuntala.
Xxx


The idea of giving a Prologue to Faust said to have originated from Kalidasa’s prologue, which was in accordance with the usual tradition of the Sanskrit drama.
Xxx
Wilson who used to be Professor of Sanskrit at Oxford university, has said of these two,
‘It is impossible to conceive language so beautifully musical or, so magnificently grand, as that of the verses of Kalidasa and Bhavabhuti.

Xxx
Islamic Rule is cause for decay ??

The stream of Sanskrit drama continued to flow for centuries but after Murari , early in the ninth century, there is a marked decline in the quality. That decline, and a progressive decay, were visible in other forms of life’s activities. It has been suggested that this decline may be partly due to the lack of royal patronage during the Indo -Afghan and Mogul periods and the Islamic disapproval of the drama as an art form, chiefly because of its intimate association with the national religion. But there is little substance in the argument though political changes at the top had some indirect effect. The decline was obvious long before the political changes.

Xxxx


Yet , in spite of all this, it is astonishing the Sanskrit drama continued to be produced right through the mediaeval period and up to recent times. In 1892 appeared a Sanskrit adaptation of Shakespeare’s Midsummer Night’s Dream. Manuscripts of old plays are continuously being discovered. A list of these prepared by Professor Sylvain Levi contained 377 plays by 189 authors. A more recent list contains 650 plays.

Xxx

An English translation of Shudraka’s ‘Mrichakatika’ drama was staged in New York in 1924. Mr Joseph Wood Krutch , the dramatic critic of the ‘Nation’ wrote of it as follows,
‘Here, if anywhere the spectator will able to see a genuine example of that pure art theatre of which theories talk, and here, too, he will be led to meditate upon that real wisdom of the East doctrine but in a tenderness, far deeper and truer than that of the traditional Christianity which has been so thoroughly corrupted by the hard righteousness of Hebraism. A play wholly artificial but yet profoundly moving because it is not realistic but real. Whoever the author may have been, and whether he lived in the fourth century or the eighth century he was a man good and wise with the goodness and wisdom which not come from the lips or the smoothly flowing pen of the moralist but from the heart……..
Nowhere in our European past do we find, this side the classics, a work more completely civilised.

Xxx


Vitality and Persistence of Sanskrit

Sanskrit is a language amazingly rich, efflorescent, full of luxuriant growth of all kinds, and yet precise and strictly keeping within the framework of grammar which Panini laid down two thousand six hundred years ago. It spread out, added to its richness, became fuller and more ornate, but always it stuck to its original roots.

Sir William Jones observed as long ago as 1784,
‘The Sanskrit language, whatever be its antiquity, is of a wonderful structure; more perfect than the Greek; more copious than the Latin and more exquisitely refined than either; yet bearing to both of them a stranger affinity, both in the roots of verbs ,and in the forms of grammar, than could possibly have been produced by accident; so strong indeed, that no philologer could examine them all without believing them to have sprung from some common source which perhaps no longer exists’.
Xxx

Nehru has given a detailed list of Sanskrit books with short descriptions in the Discovery of India.

 

–Subham–

 

 

 

பைத்தியக்கார பாதரஸ சோதனை! (Post No.5401)

written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 7 September 2018

 

Time uploaded in London – 6-47 am (British Summer Time)

 

Post No. 5401

 

 

பிரியாடிக் டேபிள் (periodic table) எனப்படும் மூலக     அட்டவணையில் 80-ஆவது இடத்தைப் பிடித்த மூலகம் பாதரஸம். இது ஒரு விநோதமான மூலகம். திரவ ரூபத்தில் இருக்கும். கண்ணாடி முதலியவற்றில் ஒட்டாது. சிறிய வெப்பம் இருந்தாலும் விரிவடையும். இதனால் உடலில் உள்ள சூட்டை அளக்க இதை தெர்மாமீட்டரில் பயன்படுத்தினர். இதன் விநோதத் தன்மையால் இதைக் கொண்டு ஈயத்தையும் இரும்பையும் தங்கம் ஆக்கலாம் (alchemy) என்று உலகம் முழுதும் நம்பிக்கை இருந்தது. ஒருவர் தலை முடியில் பாதரஸம் இருக்கும் அளவைக் கொண்டு அவர் இவ்வித (alchemy or transmutation of metals) ஆராய்ச்சியில் ஈடுபட்டாரா அல்லது காம சம்பந்தமான (syphilis) நோய்களுக்கு மருந்து சாப்பிட்டாரா என்று இறந்த பின்னரும் தலை முடி காட்டிவிடும். இது அந்தக்காலம். இப்பொழுது மெர்க்யுரி எனப்படும் பாதரஸம் (Mercury) விஷம் என அறிந்ததால் அதை உள்ளுக்கு சாப்பிடும் மருத்துகளில் கலப்பது இல்லை.

 

 

நமது ரிஷி முனிவர்கள் ஈயம், இரும்பு தாமிரம் ஆகியவற்றிலிருந்து தங்கத்தை உண்டாக்கியது உண் மையாக இருக்கலாம். ஆனால் மேலை நாட்டில் எந்த ஒரு ரஸவாத ஆராய்ச்சியும் இதை நிரூபிக்கவில்லை. விஞ்ஞானம் இன்று வரை நம்பாத அஷ்டமா சித்திகள் , இந்துமத முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் உண்டு. ஆகையால் அவர்கள் இப்படி ஒரு சித்தியைப் பெற்றதில் வியப்பில்லை.

 

பாதரஸம் எப்பொழுதுமே திரவ நிலையில் (liquid state) இருக்கும் ஒரு உலோகம் என்ற நம்பிக்கை தகர்ந்து போன ஒரு சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1759-ஆம் ஆண்டில் இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகள் சைபீரியாவில் வேறு ஒரு சோதனைக்காக சென்றனர். ஏ. பிரவுனும் எம்.வி. லோமோனோசோவும் உப்பையும் பனிக்கட்டியையும் கலந்து வெப்பத்தைத் தாழ்த்தும் சோதனை செய்தனர். அமிலத்தையும் பனிக்கட்டியையும் கொண்டு மேலும் வெப்பநிலையைக் குறைக்கலாமா என்றும் ஆரய்ந்தனர். வெப்பத்தை அளக்க முயன்றபோது தெர்மாமீட்டரில் (வெப்பமானி) பாதரஸம் நகரவில்லை! கண்ணாடிக்குள் அது கட்டியாக நின்றவுடன் அதை உடைத்து வெளியே எடுத்தால் கம்பி போல வந்தது. மற்ற உலோகக் கம்பிகளை வளைப்பது போல வளைக்கவும் முடிந்தது. அப்பொழுது முதல் பாதரஸ  மும் ஒரு சாதாரண மூலகமே என்று உலகம் உணர்ந்தது.

கலோமல் (calomel) எனப்பட்டும் மெ ர்க்யுரிக் குளோரைடு (Mercuric chloride) பேதி மருத்தாகவும் நோய்க்கிருமிகளைக் கொல்லும் மருந்தாகவும் இந்தியா உள்பட பல நாடுகளில் உபயோகத்தில் இருந்தது. சீன மருந்துகளில் இப்பொழுதும் பாதரஸ கூட்டுப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. மேலை நாடுகளில்  தோல் நோய்களுக்கு வெளியே (Skin Ointments) பூசும் களிம்புகளில் மட்டும் இருக்கும். இது விரைவில் ஆவியாகக் கூடியதால் சோதனைச் சாலைகளில் சுவாசிப்பதன் மூலம் நுரையீரலில் புகுந்து பலவிதக் கேடுகளைத் தந்தது.

கடல் மீன்களைச் சாப்பிடுவோர் (tuna, Sword fish) இந்தக் கேடுகளுக்கு அதிகம் ஆட்படுவர். நாம் சாப்பிடும் பல உணவுப் பொருட்களில் இது இருந்தாலும் மிக மிகக்குறைவே. அதனால் ஆபத்து ஏற்படாது. கர்ப்பிணிப் பெண்களை மேலை நாடுகளில் சில வகை மீன்களைச் சாப்பிட வேண்டாம் என்று எச்சரிப்பர்.

 

பாதரஸத்தை இப்பொழுதும் மின்சாரக் கருவிகளில் பயன்படுத்துவர். ஆனால் புறச் சூழல் மாசு பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டவுடன் பாட்டரிகளில் அதைப் பயன்படுத்துவது குறைந்து விட்டது.

 

எகிப்தியர், கிரேக்கர், இந்தியர் ஆகியோருக்கு ஆதிகாலம் முதல் தெரிந்த ஒரு உலோகம் இது. எகிப்திய கல்லறையில் தேங்காய் வடிவ குடுவை கிடைத்தது. இது கி.மு 1600 ஆண்டில் செய்யப்பட்டது.

 

ஸ்பெயின் நாட்டில் பழங்கால குகை ஓவியங்களில் சின்னபார் (cinnabar) எனப்படும் மெக்யுரி சல்பைடை (Mercuric sulfide) பயன்படுத்தினர். இது 30,000 ஆண்டு பழமையுடைத்து.

தென் அமெரிக்க இன்கா நாகரீக மக்களும் இதை அறிந்து இருந்தனர். ஆகவே தங்கம் தாமிரம் இரும்பு போல பழங்கால மக்கள் அறிந்த உலோகம் பாதரஸம். ஆனால் இதை வைத்து தங்கம் உண்டாக்கும் முயற்சிகள் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயினவே!

 

-சுபம்-