தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழாரின் பெருமை! (Post No.5367)

WRITTEN BY S NAGARAJAN

Date: 27 August 2018

 

Time uploaded in London – 7-25 AM (British Summer Time)

 

Post No. 5367

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழாரின் பெருமை!

.நாகராஜன்

உலகப் பொதுமறையாம் திருக்குறளை திருவள்ளுவர் அரங்கேற்றம் செய்யப் பட்ட பாடு அனைவரும் அறிந்த ஒரு வரலாறு.

அதைச் சுருக்கமாக இங்கு பார்ப்போம்.

ஒப்பிலாத திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் அதை அரங்கேற்ற மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கத்தாரிடம் சென்றார். அவர்கள் மிகுந்த கல்விச் செருக்கால் இதை ஒரு நூலாக மதிக்கவும் இல்லை; திருவள்ளுவரை அங்கீகரிக்கவும் இல்லை. சங்கப் பலகையில் அவரை அமர வைக்கவும் இல்லை.

நல்ல நூல்களை மட்டுமே சங்கப் பலகை தாங்கும். அந்த சங்கப் பலகையில் இந்தச் சுவடிக்காவது இடம் கொடுங்கள் என்றார் திருவள்ளுவர்.

அதற்கிணங்கி திருக்குறள் சுவடியை சங்கப் பலகையில் வைத்தனர். உடனே திருக்குறள் சுவடி அளவில் சங்கப் பலகை சுருங்க ஏனைய நூல்களும் புலவர்களும் கீழே விழுந்தனர்.

திருக்குறளின் மாண்பையும் சிறப்பையும் அனைவரும் உணர திருக்குறளை வள்ளுவர் அரங்கேற்றினார்.

அதைச் சிறப்பித்துப் பாட அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர். சங்கப் புலவர்கள்  ஆளுக்கொரு பாடலைப் பாடி நூலைச் சிறப்பித்தனர். அசரீரியாக – ஆகாயவாணியாக – ஒரு பாடல் மலர்ந்தது. இடைக்காடர் மற்றும் ஔவை ஆகியோர் ஆளுக்கொரு பாடல் தர மொத்தம் 55 பாடல்கள் ஆயின. இது திருவள்ளுவ மாலை என்ற சிறப்புப் பெயர் பெற்று இன்றும் இலங்குகிறது.

இந்த 55 பாடல்களில் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழாரும் ஒருவர். அவர் கீழ்க்கண்ட வெண்பாவைப் பாடினார் :

புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்          சிலவர் புலவர் எனச் செப்பல் – நிலவு       பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்குஇருள் மாலைக்கும் பெயர்.

அருமையான இந்தப் பாடலை அளித்த தமிழாசிரியர் கிழார் வாழ்ந்த செங்குன்றூர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஊர் என்று அவரைச் சிறப்பித்து கொங்கு மண்டல சதகம் 28ஆம் பாடல் கூறுகிறது:

பாடல் இதோ:

நிலவுல கத்திற் பலகலை தேர்ந்த நிபுணருளே புலவர் திருவள் ளுவரென நேயம் பொருந்தவுரை குலவு மதுரைத் தமிழா சிரியர்செங் குன்றூர்கிழார் வலிமை யுறவரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : பூவுலகத்தில் பல கலைஞானங்களில் சிறந்த புலவர், திருவள்ளுவர் என்று கூறிய மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழாருங் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே என்பதாம்.

திருவள்ளுவ மாலையில் உள்ள அசரீரி கூறிய பாடல் இது:

திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு      உருத்தகு நற்பலகை ஒக்க – இருக்க         உருத்திர சன்மர் என உரைத்து வானில்    ஒருக்கஓ என்றதுஓர் சொல்

கலைமகள் திருக்குறளைப் புகழ்ந்து பாடிய பாடல் இது:

நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்     பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை   எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின் வள்ளுவன் வாயதுஎன் வாக்கு.               இறையனார் திருக்குறளைப் புகழ்ந்து ஈந்த பாடல் இது:

என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத                                   செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்

ஆக திருவள்ளுவரின் தெய்வத் திருக்குறள் நிலைத்திருக்கும் வரை திருவள்ளுவ மாலைப் பாடல்களும் நிலைத்திருக்கும். அதில் ஒன்றைப் பாடியவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்று கொங்கு மண்டல சதகம் பெருமையுடன் கூறுகிறது!

****

 

புத்தரின் ரஹஸிய ஹிந்து வழிபாடு (Post No.5366)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date: 26 August 2018

 

Time uploaded in London – 21-11 (British Summer Time)

 

Post No. 5366

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

புத்தர் ஒரு ‘பக்கா’ ஹிந்து. அவர்  ஹிந்துவாகப் பிறந்து இந்துவாகவே வாழ்ந்தார் என்பது அவருடைய சிலைகளில் இருந்தும் பிறகாலத்தில் புத்த மதத்தினர் செய்த செயல்களில் இருந்தும் தெரிகின்றது..

புத்தர், இந்து மதத்தை எதிர்த்து புரட்சி செய்தார்- குறிப்பாக பிராஹ்மணர்களின் சடங்குகளை எதிர்த்து புரட்சி செய்தார் என்று வெள்ளைக் காரர்கள் எழுதிவைத்தனர். இதனால் ஒரு நன்மை விளைந்தது. எல்லா ‘திராவிடங்களும்’ புத்தர் மிகவும் நல்லவர் என்று தங்கள் வீட்டில் ஏசுநாதர் படத்துடன் புத்தர் படத்தையும் வைத்தனர். அது ஒன்றுதான் நன்மை.

 

நான் மதுரை வடக்கு மாசிவீதியில் (Madurai) ஒரு தி.மு.க டாக்டர் வீட்டுக்கு அருகில் வசித்தேன். அவர்தான் எங்கள் குடும்ப டாக்டர். அவர் வீட்டிலும் புத்தர் படம் அண்ணாதுரை படத்துக்கு அடுத்ததாக இருக்கும்.  பாவம் அவர்கள்  பாலி மொழியில்  உள்ள புத்த மத நூல்களைப் படித்ததும் இல்லை.   புத்த மதத்தினர் உலகெங்கும் என்ன செய்கிறார்கள் என்று அறிந்ததும் இல்லை.

Dharmachakra Mudra

Bhumisparsa Mudra

Varada Mudra

Dhyana Mudra

Abhaya Mudra

 

இந்தக் கட்டுரை எழுதக்   காரணமான புஸ்தகம் 100 ஆண்டுக்கு முன்னர்

ஒருவர் 160 படங்களுடன் வெளியிட்ட ஜாவா (போரோபுதூர், இந்தோநேஷியா)  பற்றிய புஸ்தகமாகும்.

 

அந்த ஜெர்மன் புஸ்தகத்தில்  புத்தரின் தியான  முத்திரைகள்   உள்ளன. அவை அனைத்தும்  இந்துக்கள் பின்பற்றிய தியான முத்திரைகள்.   பௌத்தர்கள்  அவைகளுக்கு ஏதேதோ விளக்கங்கள் சொல்லுவர்.  அதிலும் கூட அவர் பூமாதேவியை சாட்சிக்குக் கூப்பிடும் ‘பூமி ஸ்பர்ஸ’ முத்திரை உள்ளதாகச் சொல்லுவர். அவருக்கும் நம்மைப் போலவே அதர்வண வேதம் சொல்லும் பூமாதேவி மீது நம்பிக்கை இருந்ததை அவர்களும் ஒப்புக்கொள்ளுவர்.

 

புத்த மத நூல்கள் அனைத்திலும் இந்திரனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. இந்திரனும் வந்து புத்தரை வணங்கியதாகக் கதை சொல்லுவர். ஆகவே வேதங்கள் போற்றும் இந்திரனிலும் அவர்களுக்கு நம்பிக்கை உண்டு .

 

 

இதையெல்லாம் விட புத்த மத வேதமான ‘தம்ம பத’த்தில் ஒரு அத்தியாயம் முழுதும் பிராஹ்மணர்களைப் போற்றியுள்ளர் புத்தர். அவர்கள் கொலை செய்தாலும் அரசாட்சியை கவிழ்த்தாலும் நல்லவர்களே என்று அதிரடி அடிக்கிறார்.

 

பின்னர் அவர் எதை எதிர்த்தார? சடங்குகளை எதிர்த்தார். யாக யக்ஞங்களை செய்யாமலும் உயர்நிலையை அடையலாம் என்றார். அதையே உபநிஷத்துகளும் புத்தருக்கு முன்னமேயே சொல்லிவிட்டன. உண்மையில் புத்தர் போல உயர்நிலை எய்திய  ரிஷி முனிவர்கள், யாக யக்ஞத்தைச் செய்யாமல், நூற்றுக்கணக்கான வருடங்கள் தவம் செய்து அவர்கள் மீது பாம்புப் புற்று வளர்ந்த பல கதைகள் புராணத்தில் உள்ளன.

 

“எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்; அவைகளை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை” என்று புத்தரே ஒரு சொற்பொழிவில் சொன்னதை தத்துவப் பேரறிஞர் ராதாகிருஷ்ணன் தம்மபத உரையில் சுட்டிக்காட்டுகிறார். இதன் பொருள் என்ன? நீங்கள் சடங்குகளை செய்துவிட்டு கெட்டவர்களாக இருப்பதைவிட ‘எட்டு நல்ல குண’ங்களைப் பின்பற்றினால் நிர்வாண நிலை அடைவது எளிது என்கிறார். நிர்வாணம் என்ற சொல்லும் உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டதே.

 

மஹாத்மா காந்தியும் சொல்கிறார்: கடவுளை மறுப்பவர்களை நாம் அறிவோம்; உண்மை என்பதை மறுப்பவர்கள் எவருமிலர் என்று.

 

ஆக ஒருவன் நல்ல குணத்துடன் வாழ்ந்தால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் பின்னர் இறைவன் பற்றிய சிந்தனை எழும் என்பது அவரும் அறிந்ததே.

 

இப்போதைய பௌத்தர்கள் புத்தர் சிலையை வைத்து வணங்குகின்றனர். அவரையே தியானம் செய்கின்றனர். அவரோ இப்படி சடங்குகள் வேண்டாம் என்று சொன்னார். அது சரி; புத்தர் எதைத் தியானம் செய்தார்? இவ்வளவு ‘தேஜஸ்’ முகத்தில் தோன்ற காயத்ரி மந்திரத்தை ஜபித்தாரோ? பல ஆண்டுக்காலம் பல பிராஹ்மணக் குருக்கள் முதலிய பெரியோரிடம் கற்றுவிட்டு பின்னர் போதி மரத்தடியிலும் பல ஆண்டுகள் இருந்தாரே. அவர் எதைத் தியானம் செய்தார்? அதைத்தான் அவர் சொல்லவில்லை!

 

இப்பொழுது முத்திரைகளுக்கு வருவோம். முத்திரை என்பது விரல்கள், கைகள் மூலம் காட்டும் சமிக்ஞை ஆகும். இது உடலின் சக்தியை வழிப்படுத்தும் முறை அல்லது அதை அதிகரிக்கும் முறை ஆகும். அதுமட்டுமல்ல அதில் அக்குபிர்ஷர் எனப்படும் உத்தியும் உளது; உடலில் சிலபகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அது ஞானம் பெறுவதற்கான நரம்புகளைச் சுண்டி விடும்.

 

முத்திரைகள் நாட்டியம் முதல், பூஜைகள் வரை பல இடங்களிலும் பயன்படுகின்றன. நாமும் கூட சாலைகளில் போலீஸ்காரகள் காட்டும் முத்திரைகள், காதுகேளாதோருக்கான முத்திரைகளைத் தினமும் காண்கிறோம். தியானத்தில் பயன்படுத்தும் முத்திரைகள் உயர்ந்த வகை முத்திரைகள். ரஹஸியப் பயன்பாடுள்ளவை.

 

பிராஹ்மணர்களும் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் முத்திரைகளைப் பயன்படுத்துவர். பதஞ்சலி யோக சாத்திரம் முதலியன முத்திரைகள் பற்றிப் பேசுகின்றன. இந்துக் கடவுளர் அபய முத்திரை அல்லது வரத முத்திரையுடன் காணப்படுவர். ஆக நம்மிடம் உள்ளவற்றை பௌத்தர்களும் ஏற்று அவைகளைப் பயன்படுத்தினர்.

 

 

‘முத்ரா விதானம்’ என்னும் ஸம்ஸ்க்ருத நூல் சுமார் 130 முத்திரைகளை வரை படத்துடன் காட்டுகிறது. இதை ராமகிருஷ்ண மடம் (மயிலாப்பூர், சென்னை) தமிழிலும் வெளியிட்டுள்ளது. அதன் மூன்று ஸ்லோகங்கள் முத்திரையின் பயன்பாட்டை (பூஜைகளில்) விளக்குகிறது. இதோ அவை:-

எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும் பாவத் தொடர்பைப் போக்குவதாலும் (மோதனாத், த்ராவணாத்) முத்திரை என்று சொல்லப்படும். அது எல்லாக் காமங்களையும் அர்த்தங்களையும் (செல்வம்) தருவதாகும்

தந்திரங்களில் எல்லாம் கற்பிக்கப்பட்ட முத்திரைகளை இனி கூறுவோம். அவைகளைக் காட்டுவதால் மந்திர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள்

 

அர்ச்சனை, ஜபம், தியானம் முதலியவற்றிலும் காமிய கர்மங்களிலும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப் பிரதிஷ்டை, ரக்ஷணம், நைவேத்யம் இன்னும் பிறவற்றிலும் அந்தந்தக் கல்பங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் கண்டுகொள்ள வேண்டும்.

 

இதன் பின்னர் 11 தலைப்புகளில் முத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இவை அனைத்தும் நாம் கண்டு பிடித்து வளர்த்தவை என்பது தெளிவு:-

ஸ்ரீ குருவந்தன முத்திரைகள்

அர்கியஸ்தாபன முத்திரைகள்

அர்ச்சனையில் ஆவாஹனாதி முத்திரைகள்

நியாஸ முத்திரைகள்

ஸ்ரீவித்யா பத்து முத்திரைகள்

நிவேதன முத்திரைகள்

காயத்ரீ முத்திரைகள்

கணேச முத்திரைகள்

சிவ முத்திரைகள்

விஷ்ணு முத்திரைகள்

நானா முத்திரைகள்

முத்திரைகளின் அகராதி

 

 

இன்று உலகம் முழுதும் பௌத்தர்கள் பின்பற்றும் வழக்கங்களில் இருந்து புத்தர் மஹா தோல்வி அடைந்தது தெரிகிறது. யாகத்தில் உயிர்க் கொலை கூடாது என்று சொல்லிய மதத்தில் பன்றியும் பாம்பும் பல்லியும் தினசரி உணவாகிவிட்டன. நான் ஹாங்காங் புத்தர் கோவிலுக்குப் போனபோது எல்லோரும் பன்றிக்குட்டியை அழகிய பாலிதீன் பேப்பரில் சுற்றி பலகையில் வைத்து படையல் செய்ததைப் பார்த்தேன். இலங்கையிலோ பௌத்த பிஷுக்கள் சாலை ஓரத்தில் எவனாவது மான் ஒன்றை அடித்துக் கொன்று கொண்டுவரமாட்டானா என்று காத்து இருக்கிறார்கள்; புத்தர் கொல்லக்கூடாது என்று தானே சொன்னர்; யாரோ கொன்றதைச் சாப்பிட்டால் தவறு இல்லை என்பது பிக்குகளின் வாதம். இதனால்தான் திருவள்ளுவரும் கிண்டல் செய்தார். வாங்குபவன் இல்லாவிடில் மாமிசத்துக்காக கொல்பவனும் இருக்க மாட்டார்கள் என்பது வள்ளுவனின் வாக்கு.

 

புத்தம் சரணம் கச்சாமி!

 

–சுபம்–

தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள் சில! (Post No.5365)

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 26 August 2018

 

Time uploaded in London – 14-29 (British Summer Time)

 

Post No. 5365

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையைச் சேர்ந்த தமிழ் பண்டிதர் கோபாலகிருஷ்ண ஐயர் பல ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளை தமிழில் கவிதை வடிவில் தந்தார். அதில் ஷேக்ஸ்பியரின் சில கவிதைகளையும் நாடக வசனங்களையும் தமிழில் காண்போம்.

 

ஷேக்ஸ்பியர் ஒரு மஹா மேதை என்பதைக் கீழ்கண்ட புள்ளிவிவரமே காட்டும் :

அவர் எழுதிய நாடகங்கள் 37

அவர் நாடகத்தில் எழுதிய வரிகள் 34,896

அவர் எழுதிய நாடகங்களில் மிகப் பெரியது (Hamlet) ஹாம்லெட்- 4042 வரிகள்

சிறிய நாடகம்- (Comedy of Errors) காமெடி ஆப் எர்ரர்ஸ்- 1787 வரிகள்

 

அவர் உருவாக்கிய கதா பாத்திரங்கள்- 1221 பேர்

அவர் கவிதை, நாடகங்களில் பயன்படுத்திய சொற்கள் 8,84,429

ஒப்பற்ற (unique) சிறப்புச் சொற்கள் 28,829

ஒரே முறை மட்டும் வந்த சொற்கள் 12493

 

His plays are: அவருடைய 37 நாடகங்கள்
1 Two Gentlemen of Verona
2 Taming of the Shrew
3 Henry VI, part 1
4 Henry VI, part 3
5 Titus Andronicus
6 Henry VI, part 2
7 Richard III
8 The Comedy of Errors
9 Love’s Labours Lost
10 A Midsummer Night’s Dream
11 Romeo and Juliet
12 Richard II
13 King John
14 The Merchant of Venice
15 Henry IV, part 1
16 The Merry Wives of Windsor
17 Henry IV, part 2
18 Much Ado About Nothing
19 Henry V
20 Julius Caesar
21 As You Like It
22 Hamlet
23 Twelfth Night
24 Troilus and Cressida
25 Measure for Measure
26 Othello
27 All’s Well That Ends Well
28 Timon of Athens
29 The Tragedy of King Lear
30 Macbeth
31 Anthony and Cleopatra

32 Pericles, Prince of Tyre
33 Coriolanus
34 Winter’s Tale
35 Cymbeline
36 The Tempest
37 Henry VIII

 

 

–SUBHAM–

Max Muller’s Sanskrit Knowledge – Abhedananda’s Comment (Post No.5364)

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 26 August 2018

 

Time uploaded in London – 6-58 AM (British Summer Time)

 

Post No. 5364

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Swami Abhedananda was the founder President of The Ramakrishna Vedanta Society
Born October 2 , 1886
Samadhi (Died) 8 September 1939

Swami Abhedananda gives some interesting information while answering three questions sent by Sarvapalli Radhakrishnan, great philosopher and ex-President of India. It was published in 1936 in the book titled ‘Contemporary Indian Philosophy’.

The three questions are
What is your religion?
How are you led to it?
What is its bearing on social life?
ABHEDANANDA said,
I was born in Calcutta October 2,1866 . My father, late Rasiklal Chandra, was a student of philosophy and teacher of English in the Oriental Seminary in Calcutta. I was educated in a Sanskrit school, then in a Bengali vernacular school and afterwards in the Oriental Seminary, from which I successfully passed the entrance examination at the age of eighteen.

From my childhood I wanted to know the cause of everything and used to ask questions about the ‘Why and How’ of all events. When for the first time I read in Wilson’s History of India, that Shankaracharya was a great philosopher, I had a thrilling sensation, and I wanted to become a philosopher and to study his philosophy. At that time, I was a student in the drawing class of the seminary and was learning to paint from nature. Suddenly a thought came to my mind that I didn’t want to be a painter but I would be a philosopher, and so I gave up the study of the art of drawing and painting.

Xxx

I found a copy of the Bhagavad Gita in my father’s private library and began to study it. When my father saw me reading that book, he took it away from me, saying that’ the Bhagavad Gita was not for boys; it would make you insane’. But his remarks could not stop me from reading it.

Xxx
In my youth I was fond of listening to discourses on Hindu philosophy and used to hear lectures on various religionsas well. I studied Patanjali’s Yoga system. Then I studied ‘Siva Samhita’, a treatise on the practical methods of Rajayoga. But I was told not to practise any of the methods without being instructed by a competent Guru. My class mate asked me to go to Sri Ramakrishna.
One Sunday morning I reached the temple garden at Dakshineswar where I met the great yogi Sri Ramakrishna Paramahamsa and I asked him whether he could teach me practical methods of Yoga Philosophy. He replied ‘Yes’, and after reading of my past life, he said, ‘you were a great yogi in your past incarnation. Come my boy! I will teach you how to practise Yoga’. Then he initiated me and then gave me instructions in concentration and meditation. He touched my chest and aroused my ‘Kundalini’, the ‘Serpent Powe’r and I went into Samadhi, the state of super consciousness.

In him I found the embodiment of the Absolute truth of the highest philosophy, as well as of the Universal Religion. I became his humble disciple.

Xxx

Image of Max Muller
I travelled bare footed from place to place, depending entirely on alms cooked and uncooked, whatever chance would bring to me. I endured all sorts of privation and hardship, practised austerities of all kinds, walked up to the sources of Yamuna and Ganga. I stayed for three months in the caves of the Himalayas at the altitude of 14000 feet above the sea level, spending most of my time in contemplation of the Absolute. I realised that the phenomenal world was like a dream. Thus wandering for ten years all over India visiting sacred places, I met great sages and saints like Trailinga Swami, Swami Bhaskarananda at Benares, Pavahari Baba At Gazipur, many Vaishnava saints at Brindavan and great Vedanta philosophers at Rishikesh where I studied monistic Vedanta Philosophy under the great scholar Dhanaraj Giri.

In 1896, Swami Vivekananda , who after his successful lectures in USA came to London . He invited me to assist him and I went to London in1896 . Swami Vivekananda entrusted me with the charge of conducting classes on Vedanta and Rajayoga.

 

Swami Vivekananda took me to meet Professor Max Muller and Professor Paul Daussen of Kiel University who had translated sixty Upanishads into German. I had conversations with them in Sanskrit. But Professor Max muller could neither speak in Sanskrit nor understand Sanskrit words when spoken, because, as he said, his ears and tongue were not trained in the sounds of Sanskrit utterances. So, I exchanged my views with him in English. He was deeply interested in the life and teachings of Sri Ramakrishna and said, Ramakrishna was an original thinker, for he was never brought up within the precincts of any university and therefore his teachings were new and original. This remark created a deep impression upon my mind. Later on, he published the ‘Life and Sayings of Ramakrishna’.

In 1897 I went to New York at the request of Swami Vivekananda. There in six months I delivered ninety public lectures before large audiences on Vedanta philosophy.

In 1898 , Professor William James held a discussion with me in his house on the problem of the ‘Unity of the Ultimate Reality’. This discussion lasted nearly for four hours. In which Professors Royce, Lanman, Shaler and Dr James from Cambridge took my side and supported my arguments in favour of ‘unity’.

I travelled all through the USA Canada and Mexico and delivered lectures. In 1921 I sailed to Hawai, Japan, China, Singapore Malaya and Philippines before returning to Calcutta. In 1922, I went to Tibet from Kashmir crossing the Himalayas on foot to study Lamaism. My destination was Demis Monastery near Leh in Ladakh. In 1923 after returning from Tibet I established  Ramakrishna Vedanta Society in Calcutta. In 1924 ,I opened a branch in Darjeeling.

 

This short sketch of my life will give the reader some idea of the different influences which have moulded my convictions.”

Published in 1936

 

–subham–

எழுதினால் மனோவியாதி போகும்! (Post No.5363)

WRITTEN BY S NAGARAJAN

Date: 26 August 2018

 

Time uploaded in London – 5-01 AM (British Summer Time)

 

Post No. 5363

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 24-8-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திஐந்தாம்) கட்டுரை

எழுதினால் மனோவியாதி போகும்!

 

ச.நாகராஜன்

 

துயரமான சம்பவங்களுக்கு ஆட்பட்டு நிம்மதி இழந்தவர்களுக்கும், அடிக்கடி துயரங்களைச் சந்தித்து தூக்கமின்றி தவிப்பவர்களுக்கும் அறிவியல் தரும் ஒரு ஆறுதலான செய்தி – எழுதுங்கள், உங்கள் மனோ வியாதி போகும் என்பது தான்!

பிரபல உளவியல் அறிஞரான டாக்டர் ஜேம்ஸ் பென்னேபேகர் (Dr James Pennebaker – பிறப்பு 2-3-1950) ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக் கழக பேராசிரியர். அவரும் அவரது மாணாக்கர்களும் உணர்ச்சிகரமான அனுபவங்களுக்கும் இயல்பான மொழிக்கும் உள்ள தொடர்பையும், இதனால் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகளையும் விரிவாக ஆராய்ந்திருக்கின்றனர்.

 

30 ஆண்டுகளுக்கு முன் அவரது ஆய்வு ஒன்றின் மூலமாக இரகசியங்களை மனதிற்குள் போட்டுப் புதைத்து வைத்துக் கொள்வதன் மூலம் ஒருவருக்கு நோய் உருவாகும் என்பதை அவர் கண்டார். இதன் தொடர்ச்சியாக தங்களது ஆழ்ந்த இரகசியங்களை ஒருவர் எழுதுவதன் மூலமாக உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நலம் பெறுவார் என்பதையும் கண்டுபிடித்தார். இந்த எழுதுதல் பணிக்கு அவர் தந்த பெயர் எக்ஸ்பிரஸிவ் ரைட்டிங் (Expressive Writing).

 

வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பிரபல உளவியலாளர் இப்போது கண்டுபிடித்திருப்பது அன்றாடம் நாம் பேசும், எழுதும் மொழியானது நம்மை வெளிப்படுத்துகிறது என்பதைத் தான்!

 

இவரது புத்தகமான ‘ஓபனிங் அப் : தி ஹீலிங் பவர் ஆஃப் எக்ஸ்பிரஸிவ் ரைட்டிங் டு ஹீல்’ (Opening up : The Healing Power of Expressing Emotion and Writing to Heal) பல்லாயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. பத்து புத்தகங்களையும் 300 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ள அவர் 1986இல் தன் ஆய்வைத் தொடங்கினார்.

 

ஆய்வுக்கென மாணவர்களை அழைத்து அவர்களிடம்  தங்களது வாழ்வில் நடந்த துயரமான சம்பவங்களை 15 நிமிடங்கள் அவர் எழுதச் சொன்னார். ஒரு துயரமான சம்பவமும் இல்லை என்றால் அவர்கள் கஷ்டமாக உணர்ந்த தருணத்தைப் பற்றி எழுதச் சொன்னார். இதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியமாக வைத்திருக்கும் விஷயத்தை அவர்கள் எழுத வேண்டும். நான்கு நாட்கள் இந்த சோதனை தொடர்ந்தது. அவர்களில் இருபது பேருக்கு ஒருவர், எழுதும் போது ஓவென்று அழுதனர். ஆனால் அவர்கள் எழுதுவதை நிறுத்தவில்லை. பின்னர் அவர் ஆறு மாதங்கள் அந்த மாணவர்கள் எப்போதெல்லாம் சிகிச்சை நிலையங்களுக்குச் சென்றனர் என்பதைக் கண்காணிக்க ஆரம்பித்தார். ஒரு நாள் அவருக்கு ஆச்சரியகரமான முடிவு தெரிந்தது. வெளியில் காரில் காத்திருந்த நண்பரிடம் வந்து ஒரு பெரிய விஷயத்தைத் தான் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தார். எந்தெந்த மாணவர்கள் தங்களது இரகசிய விஷயங்களை எழுதினார்களோ அவர்களெல்லாம் சிகிச்சை நிலையங்களுக்கு குறைந்த அளவே சென்றிருந்தனர்!

அன்று பிறந்தது சைக்கோ நியூரோ இம்யூனாலஜி! (Psychoneuroimmunology). எளிமையாக  எக்ஸ்பிரஸிவ் ரைட்டிங் என்று இது இப்போது சொல்லப்படுகிறது. ஆஸ்த்மாவிலிருந்து ஆர்திரிடிஸ் வரை மார்பகப் புற்று நோயிலிருந்து மைக்ரேன் தலைவலி வரை இப்படி எழுதுவதால் குறைந்த அளவே டாக்டர்களைப் பார்க்க வேண்டிய அவசியம் அப்படி பாதிப்புள்ளானவர்களுக்கு ஏற்பட்டது என்பதை அவர் கண்டுபிடித்தார். காயங்கள் மிகவும் சீக்கிரமாக ஆறுவதைக் கண்டபோது அவரே ஆச்சரியப்பட்டார்.

 

ஆனால் ஜோயன் ஃப்ராடாரோலி என்ற கலிபோர்னியா ஆய்வாளர் இப்படி எழுதுவதால் கான்ஸர் போன்றவை முற்றிலும் குணமாகி விடுவதில்லை என்பதைக் கண்டார். என்றாலும் கூட சிறிய அளவு முன்னேற்றம் இருப்பதால் இலவசமாக செய்யக்கூடிய இந்த எக்ஸ்பிரஸிவ் ரைட்டிங் பயனுள்ளது தான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

 

 

மென்மேலும் இத்துறையில் ஆராய்ச்சி செய்த பென்னேபேகர் வார்த்தைகளை வைத்து ஒருவர் பொய் சொல்கிறாரா இல்லையா, ஒருவர் ஆணா பெண்ணா, பணக்காரரா, ஏழையா என்பன போன்றவற்றைச் சொல்லி விட முடியும் என்பதைக் கண்டார். இதற்கென ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமைத் தயார் செய்து ஒருவர் பேசுவதை எல்லாம் அதில் பதிவு செய்தார். அதன் மூலம் வார்த்தைகள் இருவருக்கிடையே ஒத்திருக்கும் போது அவர்கள் ஒருவர்பால் இன்னொருவர் ஈர்க்கப்படுகின்றனர் என்கிறார். ‘நான்’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது என்பது அவரது அறிவுரை.

 

 

இப்போது பென்னேபேகர் ப்ராஜக்ட் 2021 என்ற ஒரு புதிய ஆய்வுக்கு செயல் இயக்குநராக இருக்கிறார். இந்தத் திட்டம் 2016, ஜனவரி 19ஆம் தேதி துவங்கப்பட்டது. ‘ஏராளமான நவீன தொழில்நுட்பங்கள் பெருகி விட்ட இந்தக் காலத்தில் பழைய கால கல்விமுறை கற்பவர்களுக்குச் சரி வராது. மற்றவர்களுடன் அவர்கள் பழகும் விதம், ஆய்வுப் பேப்பர்களை எழுதும் விதம், ஆய்வு செய்யும் விதம் ஆகியவற்றில் ஒரு புதிய செயல்முறை வேண்டும்’ என்று கருதும் பென்னேபேகர் தனது பல்லாண்டு ஆய்வை வைத்து ஒரு புதிய செயல்முறையை மாணவர்களுக்கென அறிமுகப்படுத்தவிருக்கிறார். இது செயல்படும் போது புதிய தலைமுறை உருவாகும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

 

வார்த்தைகளின் மூலம் ஒருவரை நன்கு அறிந்து கொள்ளலாம் என்று சொல்லும் போதே வார்த்தைகளை மாற்றிப் பேசுவதன் மூலம் நம் எதிர்காலத்தை நோயற்றதாக, வளமுள்ளதாக மாற்றிக் கொள்ளலாம் என்பது நல்ல செய்தி தானே! இதை அவரது பத்துப் புத்தகங்களும் விளக்குகின்றன!

விரைவில் முடியவிருக்கும் ப்ராஜெக்ட் 2021 பல புதிய தகவல்களைத் தரும் என்பது உறுதி!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ….

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானியான பால் டிராக் (Paul Dirac தோற்றம் 8-8-1902 மறைவு 20-̀10-1984) அன்றாட பிரச்சினைகளுக்கு விஞ்ஞானத் தீர்வுகளைத் தருவதில் அதிக விருப்பமுள்ளவர்.

 

ஒரு முறை கோப்பன்ஹேகனில் அவர் ஒரு புதிய கொள்கையை விவரித்தார். அதாவது ஒரு பெண்ணின் முகம் அழகாகத் தோன்ற அவளை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கையை அவர் கூட்டத்தினரின் முன் வைத்தார். அவர் இதைப் பற்றி விளக்கிப் பேசுகையில், “ஒரு பெண்ணை வெகு தூரத்திலிருந்து பார்ப்பதாக வைத்துக் கொள்வோம்; பார்ப்பவருக்கு ஒன்றுமே தெரியாது அல்லவா? அதே பெண்ணை மிக மிக அருகில் வைத்துப் பார்த்தால் வட்டமான முகம் மனிதக் கண்ணின் சிறிய அளவினால் சிதைந்து தோன்றும். சின்னச் சின்ன சுருக்கங்கள் கூட பெரிதாகத் தோற்றமளிக்கும். ஆகவே ஒரு பெண்ணின் முகத்தை அழகாகப் பார்க்க ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தான் நிற்க வேண்டும்.”

 

கூட்டத்தினர் ஆரவாரித்தனர். கூட்டத்தில் இருந்த கமாவ் (Gamow)

என்பவர், “பால், எவ்வளவு அருகிலிருந்து ஒரு பெண்ணை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

தன் இரு கைகளையும் இரண்டு அடி தூரத்தில் வைத்துக் கொண்ட பால், “இவ்வளவு அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்” என்றார்.

அனைவரும் சிரித்தனர்!

***

BUDDHA – A PUKKA HINDU, PRACTISING MYSTERIOUS HINDU YOGA! (Post No.5362)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date: 25 August 2018

 

Time uploaded in London – 14-47 (British Summer Time)

 

Post No. 5362

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

Foreign historians wrote that Buddha was against Hindu rituals and he revolted against Hinduism. But if one reads Buddhist scriptures, one would realise he accepted all the Hindu practices in abstract form. He did not do Yagas or Yajnas, but he practised meditation and Japa/prayer. If one looks at the Mudras (hand and finger gestures) one would understand that he was a serious student of Hindu Yoga Sastra. Patanjali’s Yoga Sastra (Science of Yoga) is one of the six systems of Hindu Philosophy.

 

English word Yoke is cognate with Yoga (mind and body uniting)

Dr Radhakrishnan, famous philosopher and ex President of India, quotes the words of Buddha in one of his books “ I know a lot of other things; but I am not going to tell you (I will tell you only what you need to know). The reason for Buddha saying this was that he did not want to give too many rituals to laymen which they would not understand or may even abuse. In real life Buddha did great penance like the ancient Hindu seers and he used the same word Nirvana etc from the Upanishads. He praised Brahmins sky-high in one full chapter of Dhammapada.

 

The following pictures from Borobudur, Java, Indonesia showed that he was practising Mudras etc.

 

A mudra is a hand gesture with fingers pointing different directions or postures. The reason for having different postures is to channelize the body energy. Each Mudra brings or enhances certain type of energy in us.

All Hindu Gods show Mudra mostly Abhaya or Varada.

 

Mudras are used by Hindu priests differently. There is a book called ‘Mudra Vidanam’ giving a list of over 125 Mudras. A Brahmin who does Sandhyavandana ritual three times a day use Mudras as well. The Sanskrit slokas in the beginning of the book explain the significance of those Mudras. It says Mudras make the Devas (angels and gods) happy and it drives away the sins. The Devatas in charge of each Mantra (spell) are pleased with the Mudras. It also adds one should learn the Mudras used in Archana, Japa, Dhyana (Prayer and Meditation) Kamya Karmas (desire fulfilling rituals), Snanam , Avahanam (Bathing and Invoking), Prathista, Rakshanam and Naivedyam ( Installing, preserving and offering to god). The book classified Mudras under 11 titles and illustrated all Mudras with line drawings.

 

Regarding the Mudras practised by Gautama Buddha there are some interpretations. Buddhists refer to Indra very often and these Mudras refer to Earth Goddess (found in the Atharva Veda), we come to know that Buddha believed in all those Gods and Goddesses. He advised everyone to follow eight virtues. If one has those eight virtues that will take nearer to god. Ene in higher forms of Hinduism, the Yogis don’t follow rituals like Yagas (fire ceremonies) or Pujas. People at lower level only stick to them and use them as steps to higher. Since Buddha didn’t give them any ritual, Buddhist order slowly invented new rituals and they multiplied in course of time (which we see today).

 

One example: Buddha did not like killing animals in Yaga or anywhere else. Now Sri Lankan Buddhist monks wait for others to kill animals and bring the meat to them for food. Literally they don’t ‘kill’ animals.

One may wonder if Buddhists of today meditate upon Buddha who did Buddha meditate upon? Did he do Gayatri Japa?

Abhaya Mudra:

Take refuge in me; I will protect you ( No fear gesture).

This is a blessing sign.

Bhumisparsa Mudra

Buddhists interpret it as Buddha asking Bhuma Devi (Goddess Earth) to be witness for his enlightenment. Literally translated it sounds earth touching gesture. So I think he is taking the energy from earth or taking blessing from the earth.

Dhyana Mudra

This is meditation Mudra. preserving the energy or focussing the energy towards body

Dharmachakra Mudra

Turning the Wheel Mudra is a mudra of teaching and transmitting. It will help you to explain anything well.

Varada Mudra

Gesture of Giving, generosity and Compassion.

 

Mudras are not just gestures of fingers and hands. Here acupressure is also used to stimulate the energy stored in the body. Giving pressure to different places in the hand helps in concentration.

 

In dance and other arts it is used to just convey a message or thought, for secular purpose. They are different from religious mudras.

 

 

Hindu Mudras in Egyptian and Sumerian Statues | Tamil and Vedas

tamilandvedas.com/2012/10/07/hindu-mudras-in…

Picture: Egyptian Statue What is a Mudra? Mudra is the hand gesture or the finger position. Gods or saintly persons who practise meditation or Yoga use Mudras. The …

 

 

–Subham–

மாக்ஸ்முல்லருக்கு ஸம்ஸ்க்ருதம் ‘புரியாது’ – (Post No.5361)

Direct Disciples of Sri Ramakrishna Paramahamsa. Swami Vievekananda, Swami Abhedanadda and others are in the picture.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date: 25 August 2018

 

Time uploaded in London – 8-13 AM (British Summer Time)

 

Post No. 5361

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

நான் ஏன் இந்து? அபேதாநந்தா- PART 2

மாக்ஸ்முல்லருக்கு ஸம்ஸ்க்ருதம் ‘புரியாது’ –  (Post No.5361)

 

ராமகிருஷ்ண வேதாந்த மடத்தின் ஸ்தாபகரான சுவாமி அபேதாநந்தா, எப்படி ராமக்ருஷ்ண பரமஹம்ஸரால் ஈர்க்கப்பட்டார் என்பதை நேற்று முதல் பகுதியில் கண்டோம். இதோ இரண்டாவது பகுதி:-

 

“பின்னர் நான் அக்காலத்திய பிரபலங்கள் எழுதிய வானவியல், உளவியல், இயற்பியல் புஸ்தகங்களைப் படித்தேன். சுவாமி விவேகாநந்தருடன் சேர்ந்து புத்த மத நூல்களையும் அத்வைத வேதாந்தத்தையும் கற்றேன். ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடமிருந்து த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றையும் அறிந்தேன்.

 

1886-ல் ராமகிருஷ்ணர் சமாதி அடைந்தவுடன் நான் சந்யாசம் எடுத்தேன். அப்போதுதான் அபேதாநந்தா என்ற பெயரைப் பெற்றேன். இந்து மதத்தின் ஆறு பிரிவுகள், உபநிஷத்துகள், பாணினியின் ஸம்ஸ்க்ருத இலக்கணம், வல்லபர், நிம்பகர் எழுதியவற்றையும் படிக்க நேரம் கிடைத்தது.

காலில் செருப்பு இல்லாமல் ஊர் ஊராகச் சுற்றினேன். மக்கள் இட்ட பிச்சை உணவை மட்டுமே சாப்பிட்டேன். வாழ்க்கையின் நிலையாமை, ஆத்மாவின் நிலைத்த தன்மை ஆகியன மனதில் நின்றதால் நிறைய கஷ்டங்களை வலிய ஏற்றேன். பல விரதங்களையும் நோன்புகளையும் அனுஷ்டித்தேன். கங்கை, யமுனை நதிகள் தோன்றுமிடம் வரை சென்று இமய மலைக் குகைகளில் மூன்று மாதம் வசித்தேன். கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் இருந்த அந்த இடத்தில் இருந்துகொண்டு தியானம் செய்தேன். இப்போதைய வாழ்வு ஒரு கனவு போன்றது என்று உணர்ந்து பத்து ஆண்டுகளுக்கு  பாரத நாட்டை வலம் வந்தேன்.

 

கேதார்நாத், பத்ரிநாத், த்வாரகா, புரி, ராமேஸ்வரம் முதலிய புண்ய ஸ்தலங்களுக்குச் சென்றேன். பெரிய மஹான்களான த்ரைலிங்க ஸ்வாமி, பாஸ்கராநந்தா ஆகியோரை வாரணாசியில் தரிசித்தேன். காஜிபூரில் பவஹரி பாபா தரிசனம் கிடைத்தது. பிருந்தாவனத்தில் வைஷ்ணவப் பெரியோர்களையும், ரிஷிகேஷில் வேதாந்த விற்பன்னர்களையும் பார்த்தேன். அந்தக் காலத்தில் வேதாந்த விஷயத்தில் கீர்த்திவாய்ந்த தனராஜ் கிரியிடம் ரிஷிகேஷில் வேதாந்தம் படித்தேன்.

 

1893-ல் சுவாமி விவேகாநந்தர் சிகாகோ சர்வமத பார்லிமெண்டில் பேசிய பின்னர் மூன்றாண்டுகளுக்கு மேலை நாடுகளில் புகழ்பெற்ற பிரசங்கங்களை நிகழ்த்தினார். லண்டனில் ராஜ யோகம், ஞான யோகம் பற்றி உரைகள் ஆற்றினார். 1896-ல் என்னையும் உதவிக்கு அழைத்தார். 1896-ஆகஸ்டில் கப்பலில் கலகத்தாவிலிருந்து லண்டனுக்குப் பயணமானேன். என்னுடைய முதல் லண்டன் சொற்பொழிவு கிறிஸ்தவ-பிரம்மஞான சபையில் நிகழ்ந்தது. என்னை லண்டனில் ஞான யோக, ராஜ யோக வகுப்புகளை எடுக்கச் சொல்லிவிட்டு சுவாமி விவேகாநந்தா 1897- இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

 

லண்டனில் நான் இருந்தபோது மாக்ஸ்முல்லரையும் 60 உபநிஷத்துகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்த பால் டாஸன் (MAX MULLER AND PAUL DEUSSEN) என்பவரையும் பார்க்க, விவேகாநந்தர் அழைத்துச் சென்றார். மாக்ஸ்முல்லருக்கு ஸம்ஸ்க்ருதம் பேசவும் தெரியாது; பேசினால் புரிந்து கொள்ளவும் முடியாது. ‘எனது நாக்கும் காதுகளும் ஸம்ஸ்க்ருத உச்சரிப்புகளுக்குப் பழக்கப்படவில்லை’ என்று அவரே ஒப்புக்கொண்டார். ஆகையால் அவரிடம் ஆங்கிலத்தில் பேசினேன்.  ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விஷயத்தில் அவர் மிகவும் அக்கறை காட்டினார். மாக்ஸ்முல்லர் சொன்னார், ” ராமகிருஷ்ணர் சுயமாக சிந்திப்பவர். ஏனெனில் அவர் பல்கலைக்கழகங்களில் வேதாந்தம் கற்கவில்லை; இதனால் அவரது உபதேசங்களும் புதுமையாகவும் பூர்வீக உண்மைகளாகவும் உள.” அவர் இப்படிச் சொன்னது என் மனதில் அவர் பற்றி ஒரு நல்ல எண்ணத்தை உண்டாக்கியது. இதற்குப் பின்னர் மாக்ஸ்முல்லர் ராமகிருஷ்ணரின் வாழ்வும் உபதேசங்களும்  (LIFE AND SAYINGS OF RAMAKRISHNA) என்ற ஆங்கில நூலை வெளியிட்டார்.

1897-ல், சுவாமி விவேகாநந்தர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கப்பலில் அட்லாண்டிக் கடலைக் கடந்து நியூயார்க் சென்றேன். அங்கு அவர் துவக்கி இருந்த வேதாந்தக் கழகத்தில் (VEDANTA SOCIETY) ஆறே மாதங்களில் வேதாந்தம் பற்றியும் பதஞ்சலியின் யோக சாஸ்திரம் பற்றியும் 90 சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். நல்ல கூட்டம் வந்தது. வேதாந்தக் கழகத்தின் தலைவர் என்ற அந்தஸ்தில் நாள்தோறும் கடோபநிஷத், பகவத் கீதை வகுப்புகளையும் எடுத்தேன்.

 

1898ல் பேராசிரியர் வில்லியம் ஜேம்ஸ், (PROFESSOR WILLIAM JAMES) அவரது இல்லத்தில் பரப்பிரம்ம ஐக்கியம் பற்றி (UNITY OF THE ULTIMATE REALITY) ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். நான்கு மணி நேரத்துக்கு விவாதம் நடந்தது. பேராசிரியர்கள் ராய்ஸ், லான்மேன், ஷேலர், கேம்பிரிட்க் டாக்டர் ஜேம்ஸ் (PROFESSORS ROYCE, LANMAN, SHALER AND DR JAMES OF CAMBRIDGE) ஆகியோர் எனது வாதத்தை (UNITY) ஆதரித்துப் பேசினர்.

 

அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோவில் விரிவான சுற்றுப் பயணம் செய்து,  ஜொராஸ்தர், டாவோ, ஷின்தோயிஸம், புத்தர், கிறிஸ்து, முகமதுநபி ஆகியோரின் போதனைகள் பற்றிப் பேசினேன். திபெத்தில் வழங்கும் லாமாயிஸம்  முதலிய எல்லாம் ‘உலகத்தை உய்விக்க வந்த மஹான்கள்’ (GREAT SAVIOURS OF THE WORLD LECTURES) என்ற தலைப்பில் இடம்பெற்றன.

 

1921ம் ஆண்டில் பஸிபிக் மஹா சமுத்திரத்தைக் கடந்து ஹவாய், ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மலேயா முதலிய நாடுகளில் சொற்பொழிவாற்றிவிட்டு கல்கத்தாவுக்குத் திரும்பினேன்.

1922ம் ஆண்டில் கால்நடையாக இமயமலையில் நடந்தேன்; காஷ்மீரிலிருந்து திபெத்துக்குச் சென்று லாமாயிஸம் (திபெத்திய பௌத்தம்) பற்றி அறிந்தேன். எனது இலக்கு லடக்கிலுள்ள லே என்னும் இடத்திலிருந்து 25 மைல் தொலைவில் இருந்த ஹெமிஸ் பௌத்த மடாலயம் (HEMIS MONASTERY, 25 MILES FROM LEH) ஆகும்.

 

1923ம் ஆண்டில் கல்கத்தவுக்குத் திரும்பினேன். ராமகிருஷ்ண வேதாந்த கழகத்தைத் துவங்கி இன்று வரை அதன் தலைவராக இருக்கிறேன் . டார்ஜிலிங் நகரில் வேதாந்த ஆஸ்ரமத்தைத் துவக்கினேன்.

 

என்னுடைய இந்த வாழ்க்கைச் சரிதம் எனது மதத்தில் நான் ஏன் ஆழ்ந்த பற்றுக் கொண்டேன் என்பதையும் அதற்குக் காரணமாக இருந்த   அம்சங்களையும் சக்திகளையும் விளங்கிக் கொள்ள வாசகர்களுக்கு உதவும்”.

 

1936 ஆம் ஆண்டில் வெளியான புஸ்தகத்தில் உள்ள கட்டுரை இது.

சுவாமி அபேதாநந்தா-

தோற்றம் -2-10-1866;

மறைவு- 8-9-1939

 

–சுபம்-

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 3 (Post No.5360)

Australian aborigines

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 25 August 2018

 

Time uploaded in London – 6-14 AM (British Summer Time)

 

Post No. 5360

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 3

 

ச.நாகராஜன்

 

5

எங்கு கிறிஸ்தவ மத வெறியர்கள் சென்றாலும் அங்குள்ள பூர்வ குடியினருக்கு ஆபத்துத் தான். கலவரம், கொள்ளை, கொலை இவைகளே அவர்களின் வழிமுறைகள்.

 

ஹவாயில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் 5 லட்சம் பூர்வ குடியினர் வசித்தனர். ஆனால் இன்றோ அவர்களின் ஜனத்தொகை வெறும் ஐம்பதினாயிரமாகக் குறைந்து விட்டது. அவர்களது பண்பாடு, பழக்க வழக்கம், மதம் எல்லாம் போயே போய் விட்டது. அவர்களது மொழியோ வெறும் ஐந்நூறு பேர்களால் மட்டுமே இன்று பேசப்படுகிறது. அவர்கள் தொழுத கடவுளோ வெறும் கஹுனா (Kahuna) குருமார்களால் மட்டுமே தொழப்படுகிறது.

 

 

ஸ்பெயின் நாடு வெற்றிகரமாக மதத்தைப் பரப்பிக் கொள்ளை அடித்து செல்வம் சேர்த்து வருவதைப் பார்த்த போர்த்துக்கல் நாமும் ஏன் இப்படிக் கொள்ளை அடிக்கக் கூடாது என்று எண்ணியது. தென் அமெரிக்கா முழுவதும் ஸ்பெயினால் காலியாக்கப்பட்டதை எண்ணிய போர்த்துக்கல் தமது நாட்டினரையும் கப்பலில் அனுப்பி பார்த்தவர்களை எல்லாம் கொன்று பணத்தை எடுத்து வாருங்கள் என்று அனுப்பியது.

 

இதைப் பார்த்த ஸ்பெயினுக்குக் கோபம் வரவே இது ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்குமான போராக மாறியது.

இதைப் பார்த்த வாடிகன் போப் திடுக்கிட்டார். மதமாற்றம் என்னும் முதலுக்கே மோசம் வந்து விட்டதே என்று எண்ணிய அவர் இரு நாடுகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தார்.

 

அவரது சமரச திட்டத்தின் படி கொள்ளை,கொலைக்கான எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது லத்தீன் அமெரிக்காவில் ஒரு எல்லை நிர்ணயிக்கப்பட்டு தென் பிராந்தியங்கள் எல்லாம் ஸ்பானியர்களின் கொள்ளை, கொலை பிரதேசம் என்றும் வட பிராந்தியங்கள் எல்லாம் போர்த்துக்கல்லின் கொலை, கொள்ளை பிரதேசம் என்றும் வ்ரையறுக்கப்பட்டது.

 

ஆகவே தான் ஸ்பெயினின் மாரடோனா இன்று ஸ்பானிஷ் (Maradona of Spain)  மொழி பேசுவதையும் பிரேஜிலின் பீலே (Pele of Brazil) போர்த்துக்கல் மொழி பேசுவதையும் இன்று நம்மால் பார்க்க முடிகிறது.

இப்படி மதமாற்றத்திற்கு ஊறு நேராத படி சமரசம் செய்வதில் போப்புகள் வல்லவர்கள். மதமாற்றம் அல்லாத போர்களைப் பற்றி அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள்.

 

ஆனால் கிறிஸ்தவ மத மாற்றும் முயற்சியில் ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் அவ்வளவு தான், வரிந்து கட்டிக் கொண்டு சமரச முயற்சியில் தங்களது போப் என்ற செல்வாக்கை வைத்துக் கொண்டு இறங்குவார்கள்.

 

இரண்டாவது உலக மகா யுத்தத்தை எடுத்துக் கொள்வோம்.

ஹிட்லர் கத்தோலிக்க கிறிஸ்தவர். அவர் லட்சோபலட்சம் அப்பாவி யூதர்களைக் கொன்று குவித்தார். இதைப் பார்த்த உலகமே திடுக்கிட்டு பிரமித்தது. ஆனால் போப்போ இதைக் கண்டிக்கவே இல்லை. ஏனெனில் சாவது யூதர்கள் தானே!

ஒரு முறை இப்படிப்பட்ட கோரக் கொலைகளை போப் கண்டிக்கவில்லை என்பது சோகமான ஒரு வரலாற்று உண்மை!

 

6

விஞ்ஞானத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் ஆரம்ப காலம் முதலே சண்டை தான். ஏனெனில் பல விஞ்ஞான உண்மைகள் கிறிஸ்தவம் கூறும் கொள்கைகள் தவறு என்பதை நிரூபிப்பதால் தான்.

 

கலிலியோ சூரியனைச் சுற்றியே பூமி வருகிறது என்பதை நிரூபித்தார். ஆகவே பைபிள் கூறுவது அபத்தமானது என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார். வந்தது கோபம் போப்பிற்கு.

உடனடியாக அரசாளும் மன்னருக்கு உத்தரவு போட, கலிலியோ கைது செய்யப்பட்டார்.

 

கலிலியோ தனது “கண்டுபிடிப்பை” வாபஸ் வாங்குமாறு செய்யப்பட்டார்.

முதுமைக் காலத்தில் கலிலியோ சிறையில் வாடியதும் அவர் எழுதிய கடிதங்களும் தனி ஒரு நூலுக்கான விஷயம்.

பைபிள் அபத்தம் என்று கூறும் விஞ்ஞான உண்மைகளைக் கூறும் விஞ்ஞானிகள் போப்பினால் உடனடியாகக் கண்டிக்கப்படுவது வாடிக்கையான ஒரு விஷயம்.

இதையும் மீறி அறிவியல் உலகம் இன்று முன்னேறி வருகிறது.

 

7

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயம் இது.

கிழக்கு ஐரோப்பிய பால்கன் நாடுகள் யூகோஸ்லேவியாவிடமிருந்து பிரிந்தன. செர்பியா, போஸ்னியா, க்ரோஷியா, ஹெர்சகோவினா (Serbia, Bosnia,Croatia and Herzegovina) ஆகிய நாடுகள் பிரிந்த நிலையில் பிரம்மாண்டமான ஒரு ஆதிக்கப் போட்டியும் எந்த பிரதேசம் யாருக்குச் சொந்தம் என்ற நில ஆக்கிரமிப்புப் போட்டியும் தொடங்கியது. இரத்தம் சிந்தும் அந்தப் போர் பயங்கரமாக உருவெடுத்தது.

 

இதைக் கண்ட போப் திடுக்கிட்டார். அமெரிக்க அரசை நாடிய போப் ஏதேனும் செய்ய வேண்டுமென்று ஆலோசனை கூறினார். இந்த பிரச்சினைக்கு அவர் கூறிய தீர்வு ஒரு நிபந்தனையுடன் கூடியது.

 

என்ன அந்த ஒரு நிபந்தனை?

 

முஸ்லீம் மற்றும் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் முழு ஜனத்தொகையுடன் மொத்தமாக ரோமன் கத்தோலிக்கராக  மாற வேண்டும் என்பது தான் அந்த ஒரே ஒரு நிபந்தனை!!

அட, கிறிஸ்தவத்தின் கத்தோலிக்க பிரிவு தானே இப்படிச் செய்கிறது என்று சொல்லி விட்டு விட முடியாது. இதே அளவுக்கோ அல்லது இதை விட மோசமான அளவுக்கோ கிறிஸ்தவத்தின் இதர பிரிவுகளும் தங்கள் இப்படி செய்ததைச் சுட்டிக் காட்டும் சம்பவங்கள் ஏராளம் உள்ளன.

எடுத்துக் காட்டாக …….

தொடரும்

***

 

நான் ஏன் இந்து? அபேதாநந்தா பதில் (Post No.5359)

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 24 August 2018

 

Time uploaded in London – 21-28 (British Summer Time)

 

Post No. 5359

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சுவாமி அபேதானநந்தா ராமகிருஷ்ண வேதாந்த மடத்தின் ஸ்தாபகராவார். அந்த மடத்தின் தலைமைப் பீடத்திலும் இருந்தார்.

 

இந்திய தத்துவப் பேராசிரியரும் பிற்காலத்தில் ஜனாதிபதியுமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தற்கால தத்துவ அறிஞர்களுக்கு மூன்று கேள்விகள் அனுப்பினார். அதற்கு மஹாத்மா காந்தி உள்பட பலரும் பதில் அளித்தனர். அபேதானநந்தா அளித்த பதிலின் சுவையான அம்சங்களை மட்டும் தருகிறேன்.

 

மூன்று கேள்விகள்

 

  1. உங்கள் மதம் என்ன?
  2. அதில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

சமுதாய வாழ்வில் அதன் தாக்கம் எப்படி இருந்தது?

 

 

இதற்கு அபேதாநந்தா அளித்த பதில்:–

 

நான் கல்கத்தாவில் 1866-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம்தேதி பிறந்தேன். பிறந்தபோது பெற்றோர்கள் சூட்டிய திரு நாமம் காளி பிரஸாத்.

என் அப்பா ரஸிக்லால் சந்திரா தத்துவ ஆர்வலர். ஆனால் அவர் கல்கத்தா ஓரியன்டல் செமினரியில் ஆங்கில ஆசிரியர்.

நான் முதலில் ஸம்ஸ்க்ருதப் பள்ளியிலும் பின்னர் வங்காளிப் பள்ளியிலும் பயின்றேன். 18 வயதில் படிப்பை முடித்தேன். சிறு வயதிலிருந்தே எதையும் ஏன் எப்படி என்று அறிவதில் ஆர்வம் உண்டு.

 

Standing: swami Vivekananda and others

Sitting: Swami Abedhananda and others

 

வில்ஸன் எழுதிய இந்திய சரித்திரம் என்ற புஸ்தகத்தைப் படித்தேன்; அவர் ஆதி சங்கரரின் தத்துவ அறிவைப் போற்றி எழுதி இருந்தார்; அதைப் படித்த போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்ச்சி. நானும் தத்துவ அறிஞராக மாறி அவர் எழுதியதை எல்லாம் படித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்பொழுது ஸெமினரியில் ‘வரையும் கலை’ (DRAWING AND PAINTING) யைப் பயின்று கொண்டிருந்தேன். இயற்கை ஓவியங்களை வரைவதும் வண்ணம் தீட்டுவதும் என் படிப்பு. திடீரென்று இதை விட்டுவிட்டு தத்துவ அறிஞர் ஆவோம் என்று வெளியேறி விட்டேன்.

 

முன்னரே பள்ளியில் ஸம்ஸ்க்ருதம் பயின்றதால் வீட்டில் ‘முக்தபோதம்’ என்ற இலக்கண நூலைப் பயின்று நல்ல ஸம்ஸ்க்ருத அறிவைப் பெற்றேன். இப்பொழுது ஸம்ஸ்க்ருதத்தில் கவிதைகள் எழுதும் அளவுக்கு ஆற்றல் வந்துவிட்டது.

 

அப்பாவின் நூலகத்துக்குள் நுழைந்த போது பகவத் கீதை புஸ்தகத்தைக் கண்டேன். அதைப் படிக்கத் துவங்கினேன். அதைப் பார்த்துவிட்ட என் அப்பா, புஸ்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு இது எல்லாம் பையன்களுகான விஷயம் அல்ல; இதைப் படித்தால் பைத்தியக்காரன் ஆகிவிடுவாய் என்று சொல்லிவிட்டார். அப்படிச் சொல்லியும் அதை என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை.

 

சிறு வயதிலிருந்தே சமயச் சொற்பொழிவுகளுக்குப் போவேன். இந்து மத உபந்யாஸம் மட்டும் என்றில்லாமல் ரெவரெண்ட் மக்டொனால்டு, ரெவரெண்ட் காளிசரன் பானர்ஜி ஆகியோர் ஆற்றிய கிறிஸ்தவ சொற்பொழிவுகளையும் செவி மடுத்தேன். பைபிளை எதிர்த்து நடத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டங்களுக்கும் போனேன். பிரம்ம சமாஜத்தின் பெரும் புள்ளிகளான கேசவ சந்திர சென், பிரதாப் சந்திர மசூம்தார் ஆகியோரின் பிரசங்கங்களைக் கேட்கும் பாக்கியமும் கிடைத்தது.

 

1883-ல் இந்து தத்துவ வித்தகர் பண்டிட் சேஷாதர் தர்க்க சூடாமணி இந்து தத்துவ இயலின் ஆறு பிரிவுகள் பற்றி உரையாற்றினார். வைசேஷிகம், சாங்க்யம் பற்றி உரையாற்றுகையில் கானடர், கபிலர் ஆகியோரின் கொள்கைகளை நவீன விஞ்ஞானக் கொள்கைகளுடனும் கிரேக்க ஞானிகளின் கொள்கைகளுடனும் ஒப்பிட்டார். பதஞ்சலியின் யோகம் பற்றிப் பேசுகையில் அவர் சொன்னதைக் கேட்டு இந்து உளவியலில் (HINDU PSYCHOLOGY) எனக்கு ஆர்வம் பிறந்தது.

 

இதையடுத்து கபிலரின் யோக சாஸ்திரத்தை காளிபர வேதாந்த வாகீஷிடம் கற்றேன். அவர் அதை விரிவான விளக்க உரையுடன் அ வங்காளி மொழியில் மொழிபெயர்த்த காலம் அது.

 

நானும் ஹட யோகம், ராஜ யோகம் ஆகியவற்றைப் பயிற்சி செய்து நிர்விகல்ப சமாதி அடைய முயன்றேன். சிவ சம்ஹிதையைப் படித்த போது அதிலுள்ள யோகப் பயிற்சிகளை முறையான யோகிகளின் வழிகாட்டுதலோடுதான் செய்ய வேண்டும் என்று எச்சரித்தனர். யாராவது குரு கிடைக்க மாட்டார்களா என்று தவித்தபோது என்னுடைய சக மாணவர் ஞானேஸ்வர் பட்டாசார்யா என்னை ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் செல்லும் படி சொன்னார்.

 

கல்கத்தாவிலிருந்து நாலு மைல் தொலைவில் தட்சிணேஸ்வரம் இருந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைச் சந்திக்க அங்கே சென்றேன். யோகத்தைக் கற்பிக்க முடியுமா என்று வினவியபோது அவர் உடனே ‘சரி’ என்று சொன்னார். நீ பூர்வ ஜன்மத்தில் பெரிய யோகியாக இருந்தாய். வா, வா, உனக்கு யோக முறைகளைச் சொல்லித் தருகிறேன் என்றார். எனக்கு பயிற்சி முறையை விளக்கிய பின்னர் என் நெஞ்சைத் தொட்டார். என்னுள்ளே உறைந்து கிடந்த குண்டலினி சக்தி மேலே கிளம்பி அற்புத அனுபவத்தைத் தந்தது. நான் அவருடைய பரம பக்தனாகவும் சீடனாகவும் மாறினேன். அவருக்கு இரண்டு ஆண்டுகள் பணிவிடை செய்த காலத்தில் அவருடைய மற்ற சீடர்களுடன் ,குறிப்பாக சுவாமி விவேகாநந்தருடன் தொடர்பு ஏற்பட்டது.

 

அவரோடு நல்ல பழக்கம் ஏற்பட்டதால் இந்திய ஐரோப்பிய தத்துவவியலின் பல அம்சங்கள் பற்றி விவாதிப்பேன்.

 

–தொடரும்

 

WHY I AM A HINDU?- MAHATMA GANDHI (Post No.5358)

 

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 24 August 2018

 

Time uploaded in London – 17-33 (British Summer Time)

 

Post No. 5358

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

GANDHIJI’S ANSWER TO THREE QUESTIONS

I have been asked by Sri S Radhakrishnan (later President of India) to answer the following three questions:

What is your religion?

How are you led to it?

What is its bearing on social life?

my religion is Hinduism which, for me, is Religion of humanity and includes the best of all the religions known to me.

 

I take it that the present tense in the second question has been purposely used instead of the past.. I am being let to my religion through Truth and Non Violence, i.e. love in the broadest sense. I often describe my religion as Religion of Truth. Of late, instead of saying God is Truth, I have been saying Truth is God, in order more fully to define my religion. I used, at one time , to know by heart the thousand names of God which a booklet in Hinduism gives in verse form and which perhaps tens of thousands of Hindus recite every morning. But nowadays nothing so completely describes my God as truth. Denial of God we have known . Denial of Truth we have not known. The most ignorant among mankind have some truth in them. We are all sparks of Truth. The sum total of these sparks is indescribable, as yet unknown Truth, which is God. I am being daily led nearer to it by constant prayer.

The bearing of this religion on social life is, or has to be, seen in one’s daily social contact. To be true to such religion one has to lose oneself in continuous and continuing service of all life. Realization of Truth is impossible without a complete merging of oneself in, and identification with, this limitless ocean of life. Hence, for me, there is no escape from social service, there is no happiness on earth beyond or apart from it. Social service here must be taken to include every department of life. In this scheme there is nothing high. For, all is one, though we seem to be many.

 

–M K Gandhi

Source book:-

Contemporary Indian Philosophy, Edited by S Radhakrishnan and J H Muirhead, 1936 (second revised edition 1952)

(My father V santanam bought this book on 3-9-1956 for 26 rupees 4 Annas and numbered the book as 580. Probably his book collection number. It was bought from Bharathi Puthaka Nilayam in Madurai. I see his underlining of important points  throughout the book. Total number of pages 650.  I used to go to Bharathi Puthaka Niayam with my father and the owner’s name was also Swaminathan; so I got a chocolate every time I went there!—London swaminathan)