மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி!–1 (Post No.4959)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 29 April 2018

 

Time uploaded in London –  8-54 AM  (British Summer Time)

 

Post No. 4959

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாக்யா 27-4-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு எட்டாம் கட்டுரை

மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி!– 1

.நாகராஜன்

 

 

 

உலகையே அச்சுறுத்திய சீனாவின் டியாங்காங் – 1 (Tiangong-1) ஸ்பேஸ் லேப் ஒருவழியாக தென்பசிபிக் கடலில் 2-4-2018 திங்கள்கிழமையன்று காலையில் வெடித்துச் சிதறி விழுந்தது. விண்வெளியிலேயே அதன் பெரும்பாலான பாகங்கள் உருகி விட்டதென்றும் அது விழுந்ததால் யாருக்கும் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் சீனப் பிரதிநிதி கூறி விட்டார்.

விண்வெளி டிராமா முடிவடைந்தது! சுபம்!!

 

 

இப்படி விண்ணில் கூட மனிதனால் ஆபத்திற்கான வித்து இடப்படுவதானது அச்சமூட்டும் விஷயம்.

இந்த நேரத்தில் மண்ணில் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிப்பதை எதிர்த்துப் பாடுபட்ட ஒரு அருமையான பெண்மணி பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த அவரது பெயர் ராக்கேல் கார்ஸன்.

(Rachel Carson)

 

 

பென்சில்வேனியாவில் 27-5-1907இல் அவர் பிறந்தார். அவரது தந்தை ஒரு டிராவலிங் சேல்ஸ்மென். ஆகவே பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார்.

 

தாயோ ஒரு இசைப் பாடகி. மகளின் புத்தி கூர்மையைக் கண்டு வியந்த தாய், தனது பெண்ணை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பணம் பெரிய பிரச்சினையாக இருந்தது. தங்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்தை விற்றார். படிப்புக்கு வழி வகுத்தார்.

 

 

தாயிடமிருந்து மகளுக்கு வந்த அரிய குணம் – இயற்கையை நேசிப்பது. இயற்கைக்கு ஊறு விளைவிப்போரை அவரால் சிறுவயதிலிருந்தே பொறுக்க முடியாது. பொங்கி எழுவார்.

இது பின்னால் உலக மக்களுக்குப் பெரிய நன்மையைச் செய்தது!

 

 

எட்டாம் வயதிலேயே ராக்கேல் சின்னச் சின்னக் கதைகளை எழுத ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் நமது அம்புலிமாமா போல செயிண்ட் நிக்கலஸ் என்ற மாதப் பத்திரிகை ஒன்று குழந்தைகளுக்காக அமெரிக்காவில் வெளி வந்து கொண்டிருந்தது. அதை குடும்பத்தினர் படிப்பது வழக்கம்.

 

 

1918, மே மாதம் தனது 11ஆம் வயதில் ராக்கேல் ஒரு கதையை எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். அது நான்கு மாதங்கள் கழித்து பத்திரிகையில் வெளியானதோடு சன்மானமாக பத்து டாலரும் கிடைத்தது.

 

 

இரண்டே வருடங்களில் அவரது கதைகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுக் கதைகளாக அமைந்தன.இதனால் மகிழ்ந்த பத்திரிகை நிர்வாகம் அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு செண்ட் அளிக்க முன் வந்தது.

 

27ஆம் வயதில் கல்லூரிப் படிப்பை ராக்கேல் முடித்த போது அவரது தந்தை 71ஆம் வயதில் இறந்தார்.

 

 

ரொமான்ஸ் அண்டர் தி வாட்டர் (Romance Under the Water) என்று மீன்களைப் பற்றி அவர் எழுதிய வானொலி உரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது

அரசு வேலை ஒன்றும் அவருக்குக் கிடைத்தது. ஆகவே பணக் கவலை ஒழிந்தது. திருமணத்தைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. தனியாகவே இறுதி வரை வாழ்ந்தார்.

 

1941இல் அவர் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் அப்போது ஜப்பான் அமெரிக்க துறைமுகமான பேர்ல் ஹார்பரில் தாக்குதலை நடத்தி அமெரிக்காவை உலகப் போரில் தீவிரமாக ஈடுபட வைத்தது. ஆகவே மக்களின் கவனம் முழுவதும் போரில் ஈடுபடவே யாரும் ராக்கேலின் புத்தகத்தைக் கவனிக்கவில்லை.

 

 

அடுத்து 1950இல் “சீ அரவுண்ட் அஸ்” (Sea Around Us)  என்ற அவரது புத்தகம் உலகளாவிய விதத்தில் கவனத்தை ஈர்த்தது. ஆறே மாதங்களில் இரண்டரை லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.அத்துடன் பல விருதுகளும் மெடல்களும் அவரைத் தேடி வந்தன.

 

 

 

பேர்ல் ஹார்பர் தாக்குதலினால் மங்கி இருந்த அவரது முதல் புத்தகம் இப்போது வெளிச்சத்திற்கு வந்தது. மக்கள் அதையும் வாங்கிப் படித்தனர்.

ஆயிரக்கணக்கான மக்களை ராக்கேல் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களாக மாற்றினார்.

 

 

இயற்கையை உற்றுக் கவனித்து வந்த ராக்கேல் அதற்கு நாசம் விளைவிப்போரை எளிதில் இனம் கண்டார்.

மனிதர்கள் இயறிகையை அழிக்கலாமா, கூடாது என்று முடிவெடுத்த அவர் சைலண்ட் ஸ்பிரிங் – மௌன நீரூற்று – (Silent Spring) ழஎன்ற நூலை எழுதி செப்டம்பர் 1962இல் வெளியிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி நூலைப் படித்து வியந்தார். உலக மக்களின் அனைவரின் பார்வையையும் இது திருப்பியது. பெருத்த சர்ச்சையையும் தோற்றுவித்தது.

தமிழ்நாட்டில் ராஜாஜி கூட சுற்றுப் புறச் சூழல் கேட்டை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்ட ஆரம்பித்தார்.

 

விஷயம் இது தான்:

டிடிடி (DDT) என்ற உரம் வயலில் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது. இதைப் பற்றிக் கவலை அடைந்த ராக்கேல் அதை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் இறங்கினார்.

 

1939இல் பால் முல்லர் (Paul Muller) என்பவர் DDT என்ற இரசாயனத்தை வயலில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தலாம் என்றார். இதை ஏற்ற அமெரிக்க ராணுவம் 1943இல் நேப்பிள்ஸ் நகரில் இதைத் தெளித்தது. அதனால் அந்த நகரில் பத்து லட்சம் பேர் தொற்று வியாதியினால் பீடிக்கப்பட்டனர்.

 

DDT -ஐ கடவுள் தந்த வரபிரசாதம் என்று அரசும், அதைக் கண்டுபிடித்த முல்லரும் சொல்ல, இல்லை என்று எதிர்த்தார் ராக்கேல்.

 

1948 இல் DDT-ஐக் கண்டு பிடித்த முல்லருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொசுக்களை ஒழிக்க DDT அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தெளிக்கப்பட்டது.

1959இல் 40000 டன்கள் DDT அமெரிக்கா முழுவதும் தெளிக்கப்பட அமெரிக்காவே கெமிக்கலினால் பாதிக்கப்பட ஆரம்பித்தது.

கொதித்து எழுந்தார் ராக்கேல்.

 

சைலண்ட் ஸ்பிரிங் நூலில் அமெரிக்காவின் நடுவில் இருப்பதாக ஒரு கற்பனை நகரத்தைப் படைத்தார். நகரமே நாசமானது – கெமிக்கலினால். ஆடு மாடுகள் அழிந்தன. மக்கள் மடிந்தனர். பறவைகள் ஒழிந்தன. தேனிக்கள் முற்றிலுமாகக் காணாமல் போனது. வயல்கள் வாடின. ஏரி, குளம், ஆறுகள் வறண்டன. மீன்கள் அழிந்தன. கறிகாய்களையே காணோம். மருத்துவர்கள் காரணம் தெரியாமல் விழித்தனர். மொத்தத்தில் சர்வ நாசம்.

இதற்குக் காரணம் மக்களே. கெமிக்கல்களை அவர்கள் ஆதரித்ததே இதற்குக் காரணம்.

 

 

அவர்களுக்கு ராக்கேல் ஒரு வேண்டுகோளை விடுத்தார். DDT பற்றி ஏதாவது செய்யுங்கள் என்றார். நூலைப் படித்த மக்கள் உத்வேகம் பெற்று எழுந்தனர். இது பற்றிய பலத்த விழிப்புணர்வு எழவே உலக மக்கள் உலகம் சுடுகாடாக ஆகக் கூடாது என்ற முடிவுக்கு வந்தனர்.

 

 

புத்தகத்தின் தாக்கத்தை உணர்ந்த அமெரிக்க அரசும் விழித்தெழுந்தது.

 

ஜனாதிபதி கென்னடியின் தலைமையிலான ஒரு விசேஷ குழு இதை ஆராய ஆரம்பித்தது. விளைவு என்ன? அடுத்து காண்போம்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

கி.மு.580இல் கிரேக்கத்தில் வாழ்ந்த பிதகோரஸ் உண்மையான சுத்தமான கணித மேதை என்று அழைக்கப்படுகிறார். நியூமராலஜி எனப்படும் எண் ஜோதிடத்தை முதலில் கண்டுபிடித்தவர் அவரே என்று எண் ஜோதிடர்கள் பெருமையாகக் கூறுவர். எண்ணே அனைத்துப் பொருள்களிலும் உள்ளது; கடவுள் எண்களை வைத்தே பிரபஞ்சத்தைப் படைத்துள்ளார்; எண்களே வடிவங்களையும் கருத்துக்களையும் கடவுளரையும் ராட்சஸர்களையும் ஆள்கிறது; எல்லாமே எண்கள் தான்!

இவையெல்லாம் அவர் கூறியவையே.

 

 

ஒன்று முதல் ஒன்பது முடிய உள்ள எண்களை வைத்தே அனைத்தையும் விளக்கி விடலாம் என்ற அவரது அபூர்வமான சித்தாந்தத்தை அவர் நிரூபித்துக் காட்டினார். பிதகோரஸ் தியரத்தைக் கண்டுபிடித்தார்.

 

 

பத்து என்ற எண்ணே சக்தி வாய்ந்தது என்று கூறிய அவர் அதன் சக்தி 4 என்ற எண்ணில் உள்ளது என்றார். அதன் காரணத்தையும் இப்படி விளக்கினார்: ஒன்று முதல் அடுத்தடுத்துள்ள எண்களைக் கூட்டினால் வருவது 10; அதாவது 1+2+3+4 = 10. நான்கை ஒருவர் மீறினால் பத்தையும் அவர் மீற நேர்கிறது. ஆகவே பத்தின் சக்தி நான்கில் உள்ளது என்றார் அவர். இப்படி முக்கோணம், சதுரம் உள்ளிட்ட வடிவங்களைப் பற்றிய அவரது விளக்கம்

அபூர்வமானவை. எண்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் எல்லாமே பிதகோரஸ் தான்!

***

 

MEN ARE SCOUNDRELS- ANECDOTES! (Post No.4958)

Compiled by London Swaminathan 

 

Date: 28 APRIL 2018

 

Time uploaded in London – 16-36 (British Summer Time)

 

Post No. 4958

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

BEHAVIOUR AND EATING ANECDOTES

GEORGE CHEYNE, A SCOTCH PHYSICIAN, WHEN A PERSON WAS TALKING ABOUT THE EXCELLENCE OF HUMAN NATURE, EXCLAIMED:

“HOOT, HOOT, MAN!

HUMAN NATURE IS A ROGUE AND A SCOUNDREL, OR WHY SHOULD IT PERPETUALLY STAND IN NEED OF LAWS AND OF RELIGION”

 

XXX

 

EATING

At a certain dinner party Daniel Webster found himself preyed upon by hat type of hostess who endlessly and mercilessly worries her guests with the insistence that they are not eating enough, that possibly they do not like this or that, will they not have more, is there anything else they would prefer, and so forth.

 

“You are hardly eating a thing, Mr Webster”, she protested for the umpteenth time.

“Madam”, said Webster solemnly, “permit me to assure you that I sometimes eat more than at other times but never less”.

 

xxx

 

Time to eat!

Bishop Davidson of Winchester was once one of a party of ecclesiastics who went into dinner after a religious conference. One of the others observed in a tone of pompous self-righteousness, “This is the time to put a bridle on our appetites”.

No, returned the bishop, “this is the time to put a bit in our mouths”.

 

xxx

Why did I come to Africa?

 

“Why did I come to Africa?” Cecil Rhodes once remarked to a friend, “Well they will tell you that I came on account of my health or from love of adventure – and to some extent that may be true, but the real fact is that I could no longer stand their eternal cold mutton”.

 

xxx

Strawberries and Prunes!

In his early boarding-house days, in Kansas city, Eugene Field was invited to dine at a hospitable house where the best of everything was to be found. Some delicious strawberries were passed. Filed gazed at them longingly but shook his head.

“Why, Mr Field”, said his host in surprise, “ don’t you like strawberries?”

I dote on them.

Then why don’t you take some?

“I am afraid”, said the poet sadly, “that if I did, they would spoil my appetite for prunes”.

xxx

Charles Lamb

Thomas Hood, tempting Charles Lamb to dine with his said, “We have a hare”.

“Ad how many friends”, anxiously inquired Lamb.

 

xxx

Alfred Hitchcock

Alfred Hitchcock is a man notably fond of food. He is said to have once been a guest at a rather sparsely furnished dinner table, which had yielded him no more than a small portion of one thing or another amounting to a totally unsatisfactory sum. As the coffee was being brought in, his host said, “I do hope that you will soon dine here again”.

“By all means”, said Hitchcock. “Let us start now”

–Subham–

ராமன் பற்றி ராவணன் கிண்டல்/பரிஹாசம் (Post No.4957)

Written by London Swaminathan 

 

Date: 28 APRIL 2018

 

Time uploaded in London – 14-37 (British Summer Time)

 

Post No. 4957

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ராமன் பற்றி ராவணன் கிண்டல்/பரிஹாசம் (Post No.4957)

இராம பிரானின் வீரத்தையும் புகழையும் சொல்லி, அவன் திருமாலின் அவதாரம், ஆகையால் சீதையை ஒப்படைப்பதே நன்மை பயக்கும் என்று விபீஷணன் புத்திமதி சொல்கிறான் இராவணனுக்கு.

அதற்கு இராவணன் வெடிச் சிரிப்பு சிரித்துவிட்டு,  சில பாடல்களில் இராம பிரானைக் கிண்டல் செய்கிறான்; சுவையான பாடல்கள்.

 

இவை யுத்த காண்டத்தில் இராவணன் மந்திரப் படலத்தில் உள்ள பாடல்கள்.

இந்திரன் தனை இருஞ்சிறையிட்ட நாள் இமையோர்

தந்தி கோடு இறத் தகர்த்த நாள் தன்னை யான் முன்னம்

வந்த போர் தொறும் துரந்த நாள் வானவர் உலகை

சிந்தவென்ற நாள் சிறியன் கொல் நீ சொன்ன தேவன்

 

பொருள்:

ஏ விபீஷணா! நீ சொன்னாயே ஒரு தேவன், அவன் நான் இந்திரனைச் சிறையில் வைத்தபோது வரவில்லை; தேவரின் யானையான ஐராவதத்தின் கொம்புகளை (தந்தம்) முறித்த போதும் வரவில்லை; அது போகட்டும்; திருமாலையே நான் புறமுதுகு காட்டி ஓட வைத்தேனே அப்போதும் வரவில்லை; தேவர்கள் உலகத்தை நான் வென்றபோது அவர்கள் பயந்து ஓடினர். அப்போதும் வரவில்லை. ஒருவேளை நீ சொன்ன தேவன் பச்சைக் குழந்தையாக இருந்தானோ!!

 

 

இன்னொரு பாட்டில் “அட, உன் திருமால், ஆயிரம் தோள்– ஆயிரம் கைகளை எடுத்தவனாயிற்றே! ஓரடிக்குள் பூமியை அளந்தானே.  அதெல்லாம் சிறுமையுடையது என்று கருதி இப்பொழுது நாம் உணவாக உண்ணும் மனித வடிவத்தை எடுத்தானோ!” என்று பரிஹாசம் செய்கிறான்.

ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் உள்ள புகழ் மிகு புருஷசூக்தம்

என்னும் துதியில் “ஸஹஸ்சீர்ஷா புருஷஹ, ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்”- என்று விஷ்ணு புகழப்படுகிறான் (ஆயிரம் தலை, ஆயிரம் கண், ஆயிரம் கால்). இன்னொரு துதியில் மூன்று அடி எடுத்த த்ரிவிக்ரம அவதாரம் பற்றி வருகிறது. இவை எல்லாம் கம்பனுக்கு அத்துபடி.

பகவத் கீதையில் கண்ணன் எடுத்த விஸ்வரூபத்திலும் இப்படிப்பட்ட வருணனை உண்டு.

ஆயிரம் பெருதோள்களும் அத்துணைத் தலையும்

மாயிரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்

தீய சாலவும் சிறிது என நினைத்து நாம்தின்னும்

ஓயும் மானுட உருவுகொண்டனன் கொலாம் உரவோம்

இதே காண்டத்தில் ஓம், உபநிஷதம் ஆகியவற்றின் பெருமையையும் விளக்குகிறான்.

 

 

இதில் இன்னொரு விசயத்தையும் இந்த காண்டத்தில் கம்பன் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறான். வேதம் படித்தாலும், வீணை வாசித்தாலும், தங்கக் கோட்டையில் வசித்தாலும் அரக்கர் இனம் மனிதர்களைத் தின்னும் (CVANNIBALS) இனம் என்பதாகும்

 

இக்கால வெள்ளையர்களை இராவணனுக்கு ஒப்பிடலாம்; எவ்வளவுதான் ராக்கெட் விட்டாலும் அணுகுண்டு வெடித்தாலும், பொருளாதாரத்தில் முன்னிலையில் இருந்தாலும் மேலை நாடுகள் பெட்ரோலியம் கொடுக்காத நாடுகள் மீது பொய்க் குற்றம் சாட்டி குண்டு மழை பொழிவதையும்,பெட்ரோலியம் கொடுக்கும் துலுக்க நாடுகளில் அடிப்படை உரிமையே இல்லாத போதும் அவைகளைக் கண்டுகொள்ளாமல் அவைகளுக்கு ஆயுதம் விற்பதையும் இராவண ஆட்சியுடன் ஒப்பிடலாம்.

அதுமட்டுமல்ல; சென்றவிடமெல்லாம் பழங்குடி மக்களை பறவைகளைச் சுடுவது போலச் சுட்டுத் தள்ளினர்; சிலர் அந்த நர மாமிசத்தை தின்னவும் செய்தனர்!

கடைசியாக ராவணன்  கூறுவது இன்னும் பகடி செய்கிறது:

பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என்பெயர்கேட்டு

எய்த்த சிந்தையர் ஏகுழி ஏகுழி எல்லாம்

கைத்த ஏற்றினும் கடவிய புள்ளினும் முதுகில்

தைத்த வாளிகள் நின்றுள குன்றின் வீழ் தடித்தின்

 

 

பொருள்:

என் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் பைத்தியக்காரனான சிவனும் திருமாலும் காளையிலும், கருடனிலும் ஏறி ஓடிப்போயினர். அப்போது நான் விட்ட அம்புகள், மலையில் இடி விழுந்த தடம் போலத் தழும்பேறிக் கிடக்கின்றன.

 

இவ்வாறு இராவணன் கிண்டல் செய்தவுடன், விபீஷணன் பதில் தருகிறான். அண்ணா! உன்னைவிட வலிமை படைத்ட் இரணியன் கதை கேள் என்று இரணியன் வதைப் படலத்தைச் சொல்கிறான். அது மிகவும் சுவையான பாடல்கள் கொண்ட பகுதி; தனிக் கட்டுரையில் தருகிறேன்.

–சுபம்–

கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள் (POST No.4956)

கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள் (POST No.4956)

 

மே 2018 நற்சிந்தனை காலண்டர்

 

 

COMPILED by London Swaminathan 

 

Date: 28 APRIL 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 4956

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

மே 2018 காலண்டர்

(2018 சித்திரைவைகாசி மாத நற்சிந்தனை காலண்டர்;

விளம்பி காலண்டர்)

 

முக்கிய விழாக்கள் – 28-  வைகாசி விசாகம்; அக்னி நட்சத்திரம் ஆரம்பம் -4 முடிவு– 28; 10-ஹனுமான் ஜயந்தி (தெலுங்கு தேசம்); பாங்கு விடுமுறை திங்கள்-7 AND 28. 

பௌர்ணமி– – 29; அமாவாசை– –  15; ஏகாதஸி விரதம்—11, 15

சுப முகூர்த்த தினங்கள்:- 2, 4, 6, 7, 13, 20, 25, 27

 

 

 

 

மே 1 செவ்வாய்க்கிழமை

 

ஒன்றெ என்னின் ஒன்றேயாம்

பல என்று உரைக்கின் பலவேயாம்

அன்றே என்னின் அன்றேயாம்

ஆமே என்னின் ஆமேயாம் (கடவுள் பற்றி கம்பன்)

 

மே 2 புதன்கிழமை

கங்குல் பொழுதும் துயிலாத

கண்ணன் கடலைக் கண்ணுற்றான் ( இரவிலும் கூட தூங்காத ராமன் கடலைக் கண்டான்.)

 

மே 3 வியாழக்கிழமை

முழுப்பெருந்தனி முதல் உலகின் முந்தையோன் (படைப்புக் கடவுளான பிரம்மா பற்றி கம்பன்)

 

மே 4 வெள்ளிக்கிழமை

பண்டிதர் பழையவர் கிழவர் பண்பினர்

தண்டலில் மந்திரத் தலைவர் சார்க (அறிஞர், நீண்ட நாள் பழகியவர், சுற்றத்தார், பண்புடையோர், நல்ல ஆலோசனை கூறும் அமைச்சர்கள் வருக என ராவணன் ஆணையிட்டான்)

 

 

மே 5 சனிக்கிழமை

உலங்கும் நம்மேல் வரின் ஒழிக்கற்பாலதோ (எதிரிகளை ஒழிக்காவிட்டால் கொசு வந்தால் கூட நம்மால் அதை விரட்ட முடியாது)

 

மே 6 ஞாயிற்றுக் கிழமை

வெள்ளியம் கிரியினை விடையின் பாகனோடு (சிவன் பற்றிக் கம்பன்; வெள்ளிமலை- கயிலை, விடை-ரிஷப வாஹனம்)

 

மே 7 திங்கட்கிழமை

மண்ணியல் மனிசரும் குரங்கும் மற்றவும்

உண்ணிய மைந்தன உணவுக்கு (மனிதர்கள், குரங்கு, ஏனைய விலங்குகள் எல்லாம் நாம் சாப்பிட அல்லவா படைக்கப்பட்டுள்ளது; அரக்கர் சொல்லுவது)

 

மே 8 செவ்வாய்க்கிழமை

 

நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்

ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்தறிவு அமைந்தாய்

(ராவணா! நீ பிராமணன்; பிரம்மன் முதல் தோன்றிய நம் குலத்தில் நீ ஒப்பற்றவன்; ஆயிரம் கிளைகள் (ஷாகா) கொண்ட சாம வேதத்தை அறிந்தவன்)

 

மே 9 புதன்கிழமை

ஆசில் பரதாரம் அவை அம் சிறை அடைப்பேம்

மாசில்புகழ் காதலுறுவேம் வளமை கூரப்

பேசுவது மானம் இடை பேணுவதும் காமம்

கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்

(மாற்றான் மனைவியை சிறை வைப்போம்; புகழை விரும்புவோம்;வீ ரம் பேசுவோம்; காமத்துடன் உலவுவோம்; ஆனால் வலிமை அற்ற மனிதரைக் கண்டு பயப்படுகிறோம்!நன்றாக இருக்கிறதப்பா!)

 

மே 10 வியாழக்கிழமை

யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும்

தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ

கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்

ஆனவரும் மானுடர் நம் ஆண்மை இனிது அன்றோ

 

யானை, தேர், குதிரைப்படையோ, ஆயுதங்களோ இல்லாமல் கூன்முது கொண்ட குரங்கின் மேல் ஏறி வரும் மனிதர்கள் நமக்கு உணவாக வேண்டியவர் ஆவர். இவர்கள் ஜெயிப்பார் என்று சொல்வது நல்ல அழகப்பா!!)

 

மே 11 வெள்ளிக்கிழமை

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்

சானகி எனும் பெயர் உலகின் தம்மனை

ஆனவள் கற்பினால் வெந்தது (ராவணா, குரங்கு சுட்டதால் இலங்கை தீப்பற்றியது என்று எண்ணாதே; சீதையின் கற்புதான் எரித்தது – வீடணன் கூற்று)

 

மே 11 வெள்ளிக்கிழமை

உயர்வு மீட்சியும்

பெண்பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின்

மண்பொருட்டு அன்றியும் ,வரவும் வல்லவோ (பெண்ணினால் வீழ்ச்சி வராவிடில் மண்ணினால்  அழிவு வரும்; வேறு காரணம் உண்டா? வீடணன் கேள்வி))

 

மே 12 சனிக்கிழமை

 

நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்

கூல வான்குரங்கினால் குறுகும் கோள் அது

வாலிபால் கண்டனம் (நந்தி இட்ட சாபத்தால் குரங்கினால் உனக்கு அழிவு வரும் என்பதை வாலி யிட்ட சண்டையால்தால் அறிந்தாம்)

 

மே 13 ஞாயிற்றுக் கிழமை

தீயிடைக்குளித்தவத் தெய்வக் கற்பினாள்

வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ (தீக்குளித்த வேதவதி இட்ட சாபத்தை தடுக்கும் வல்லமை நமக்கு உண்டா? வீடணன் கேள்வி))

 

 

மே 14 திங்கட்கிழமை

அடல்படைத்து அவனியை பெருவளம்தருக என்றருளினானும்

கடல்படைத்தவரொடும் கங்கை

தந்தவன் வழிக்கடவுள் மன்னன் ( பூமியை வென்று வளம் கொடு என்று கட்டளையிட்ட பிருதுவும், கடலை உண்டாக்கிய சகரரும், கங்கையைக் கொடுணர்ந்த பகீரதனும் உதித்த சூரிய குலத்தில் வந்தவன் தசரதன்)

 

 

மே 15 செவ்வாய்க்கிழமை

ஈசனின் பெறு படைக்கலம்

இமைப்பு அளவில் எவ்வுலகில் யாவும்

நாசம் உற்றிட நடப்பன

கொடுத்தன பிடித்துடையர் நம்ப ( நொடிப் பொழுதில் எல்லாவற்றையும் அழிக்கும் ஆயுதங்களைக் கோசிகன் சிவனிடம் இருந்து பெற்று அவர்களுக்கு  அளித்தான்.)

 

மே 16 புதன்கிழமை

தெறு சினத்தவர்கள் முப்புரம்

நெருப்புற உருத்து எய்த அம்பும்

குறுமுனிப்பெயரினான் நிறைதவர்க்கு

இறைதரக் கொண்டு நின்றார் (ராமன் கையில் உள்ள ஆயுதங்கள் சிவன் கொடுத்த அம்பு, திருமாலின் வில்;அகத்தியவர் கொடுத்தவை)

 

மே 17 வியாழக்கிழமை

குலத்த கால் வயநெடுங் குதிரையும்

அதிர் குரல் குன்றும் இன்று

வலத்த கால் முந்துறத் தந்து நம்

மனையிடைப் புகுவ மன்னோ (குதிரைகளும் யானைகளும் வலது காலை வைத்து வீட்டிற்குள் வருகின்றன; தீய சகுனம்; அதாவது வீரர்கள் கைவிட்ட மிருகங்கள் மட்டும் திரும்பி வருகின்றன)

 

மே 18 வெள்ளிக்கிழமை

அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி இதன் மேல்

விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான் (மாறாத கற்புடைய தெய்வப் பெண்ணாகிய சீதையை ராமனிடம் திருப்பி அனுப்பு; அதுவே வெற்றிதரும்– வீடணன் புத்திமதி)

 

மே 19 சனிக்கிழமை

 

வந்த போர்தொறும் துரந்த நாள் வானவர் உலகை

சிந்தவென்ற நாள் சிறியன் கொல் நீ சொன்ன தேவன் (ராமன் பற்றி ராவணன் கிண்டல்: இந்திரன், விஷ்ணு, தேவர்கள் ஆகியோரை ஒவ்வொரு போரிலும் ஓட ஓட விரட்டினேன்; அப்போதெல்லாம் நீ புகழும் ராமன் சின்னப் பயலாக இருந்தானோ?)

 

மே 20 ஞாயிற்றுக் கிழமை

 

ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா

மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் (இரணியன் பெயர் இந்த அண்டத்தில் மட்டும் இன்றி பிற அண்டங்களிலும் பரவியது;தமிழர்களின் வானியல் அறிவினைக் காட்டும் பாடல்)

 

 

மே 21 திங்கட்கிழமை

வேதத்தின் உச்சியின் மெய்ப்பொருட் பெயரினை விரித்தான் (வேதத்தின் உச்சியான உபநிடதத்தில் கூறப்படும் உண்மைக் கடவுளின் பெயரினை (பிரகலாதன்) கூறினான்

 

 

மே 22 செவ்வாய்க்கிழமை

என்னை உய்வித்தேன் எந்தையை யுய்வித்தேன் இனைய

உன்னை உய்வித்து இவ்வுலகையும் உய்விப்பான் அமைந்து

முன்னை வேதத்தின் முதற் பெயர் மொழிவது மொழிந்தேன்

என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் (ஆசிரியரிடம் பிரகலாதன் சொன்னது: என்னையும், என் தந்தையையும், உங்களையும் ,உலகில் உள்ள எல்லோரையும் ஈடேறச் செய்யும், ஓம் எனும் வேதத்தின் முதல் எழுத்து உணர்த்தும் ஒருவன் பெயரைத்தானே- ஓம் நமோ நாராயணாய- நான் சொன்னேன்; இது ஒரு குற்றமா? சொல்லுங்கள்)

 

மே 23 புதன்கிழமை

 

காடு பற்றியும் கனவரை பற்றியும் கலைத்தோல்

மூடி பற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால்

வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்றுரைக்கும்

மாடு பெற்றெனென் மற்று இனி என் பெற வருந்தி (முனிவர் தோற்றம்: காடு,மலையில் வாழ்வர்-மான் தோல் அணிவர்-முடியை மழிப்பர், வளர்ப்பர்- மோட்சத்தை அடைவர்- அதைவிடப் பெரிய செல்வம் எனக்குக் கிடைத்தது-பிரகலாதன் செப்பியது)

 

மே 24 வியாழக்கிழமை

காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்

சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த

ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய (கேட்டதை எல்லாம் கொடுப்பான்; அது அலுத்துப் போய் மோட்சம் வேண்டின் அதையும் தருவான்; யார் அவன்? சுவர்க்கம் போக ஹோமம் செய்யும்போது சொல்லும் பெயர் இருக்கிறதே! அதுதான்– நமோ நாராயணாய)

 

மே 25 வெள்ளிக்கிழமை

அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு

விரவு நன்மை என் துன்மதி விளம்பு என வெகுண்டான்( பிரகலாதனிடம் இரணியன் விளம்பியது: பாம்பின் பெயரை எலி இடைவிடாது ஓதினால் அதற்கு என்ன நன்மை கிடைக்கும்? சொல்)

 

 

மே 26 சனிக்கிழமை

வித்து இன்றி விளைவது ஒன்றில்லை வேந்த நின்

பித்து இன்றி உணர்தியேல் அளவைப் பெய்குவேன் (பிரகலாதன் மொழிவது: அரசனே, விதை இல்லாமல் மரம் முளைக்காது; நீ பைத்தியம் தெளிந்து கேட்பாயின் தத்துவப் பொருளை அறியும் வழியைச் சொல்வேன்)

 

மே 27 ஞாயிற்றுக் கிழமை

உபநிடதங்கள் ஓதுவ

கிளவிஆர் பொருள்களான் கிளக்குறாதவன்

களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார் ( உபநிடதச் சொற்களால் விளக்கமுடியாதவன்; அவன் தன்மையை யார் அறிவார்? யாரும் கண்டதில்லை)

மே 28 திங்கட்கிழமை

 

முந்தை ஓரெழுத்து என வந்து மும்முறைச்

சந்தியும் பதமுமாய்த் தழைத்த தன்மையான் (ஓம் அவன்; அ, உ, ம சந்தி அவன்)

மே 29 செவ்வாய்க்கிழமை

ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் தன்மையான் -(ஆலமரத்தையும் அதைத் தன் சிறிய விதைக்குள் அடக்கியது போல பிரபஞ்சத்தை அன்னுள் கொண்டவன்)

 

மே 30 புதன்கிழமை

ஓம் எனும் எழுத்து அதனின் உள் உயிர்

ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் (ஓம் எனும் எழுத்தும், அதிலுள்ள அ,உ, ம, வில், அகார உயிராக உள்ளான்)

 

மே 31 வியாழக்கிழமை

கன்று புல்லிய கோள் அரிக்குழு எனக்

கனக்கின்ற தறுகண்ணார் ( குட்டி யானையை சிங்கக் கூட்டம் சூழ்ந்துகொண்டது போல, அரக்கர்கள் பிரகலாதனைச் சுற்றி வளைத்தனர்)

 

–SUBHAM–

பாரதி போற்றி ஆயிரம் – 83 (Post No.4955)

Compiled by S NAGARAJAN

 

Date: 28 April 2018

 

Time uploaded in London –  8-02 AM  (British Summer Time)

 

Post No. 4955

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 83

  பாடல்கள் 742 முதல் 778

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய       பாரதியின் “பா”ரதம்

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு மதுரையில் மாகவி என்ற அத்தியாயத்தில் உள்ள 18 பாடல்களையும் சுதேசமித்திரனில் துணையாசிரியர் என்ற அத்தியாயத்தில் 19 பாடல்களையும் படித்து மகிழலாம். நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

மதுரையில் மாகவி – 18 பாடல்கள்

சுதேசமித்திரனில் துணையாசிரியர் – 19 பாடல்கள்

 

 

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி

***

 

 

ஞானிகள், முனிவர்கள், மஹான்கள் எங்கே பிறப்பார்கள்? (Post No.4954)

ஞானிகள், முனிவர்கள், மஹான்கள் எங்கே பிறப்பார்கள்? (Post No.4954)

Research Article Written by London Swaminathan 

 

Date: 27 April 2018

 

Time uploaded in London – 15-33

 

 

Post No. 4954

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

உலகப் புகழ்பெற்ற காஷ்மீரப் புலவன் கல்ஹணனன் செப்புகிறான்

 

“The reputation of the great does not by any means conform to their birth place”. Rajatarangini 4-41

 

ஒருவர் பிறந்த இடத்தினால் பெரியோரின் புகழ் குறையாது; மங்காது.:

 

இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் சாது சந்யாசிகளும் மஹான்களும் பிறக்கும் இடத்தைப் பட்டியலிட்டுப் பார்த்தால் விளங்கிவிடும்.

 

அவர்கள் எந்த இனத்திலும் எந்த நாட்டிலும், எந்த   இ டத்திலும், எவருக்கும் பிறப்பார்கள். உலகப் புகழ்பெற்ற இந்திய ஞானிகளில் பெரும்பாலோர் எவருக்கும் தெரியாத தொலைதூர கிராமங்களில் பிறக்கிறார்கள். கீழேயுள்ள சுவையான  பட்டியலைப் பாருங்கள்; நேரம், காலம், இடம் என்று தேர்ந்தெடுக்காமல் பிறப்பது தெரியும். அவர்களை யாரும் தனிச் சொத்தாகக்  கருதுவதில்லை

 

அவர்கள் உலகிற்கே சொந்தம்; கல்ஹணர் சொல்லுவது சரியே

 

கீழேயுள்ள பட்டியல் விரிவானது அல்ல. ஊருக்கு ஒரு ஞானி இருப்பதால் சேர்த்துக் கொண்டே போகலாம் இதோ ஒரு சின்னப்பட்டியல்:-

 

A

அருணகிரிநாதர்- திருவண்ணாமலை

ஆதிசங்கரர்- காலடி, கேரளம்

அன்னமாசார்யா- தல்லபாக, ஆந்திரம்

அரவிந்தர்- கல்கத்தா

ஆனந்தமயீ மா- கியோரா, வங்கதேசம்

ஆழ்வார்கள் 12

ஆண்டாள் – திருவில்லிப்புத்தூர்

பெரியாழ்வார்-திருவில்லிப்புத்தூர்

நம்மாழ்வார்- திருக்குருகூர்

பொய்கை ஆழ்வார்- திருவெஃகா

பேயாழ்வார்- மயிலை

பூதத்தாழ்வார்- மஹாபலிபுரம்

திருமழிசை ஆழ்வார்- திருமழிசை

தொண்டரடிப்பொடி ஆழ்வார்- மண்டன்குடி

மதுரகவி- திருக்கோளூர்

திருப்பாணாழ்வார்- உறையூர்

குலசேகராழ்வார்- திரு வஞ்சிக்களம்

திருமங் கை ஆழ்வார்- குறையலூர்

B

பாஸ்கராச்சார்யா- பீஜப்பூர்

பக்தி வேதந்த ப்ரபுபாத (ISKCON)- டாலிகஞ்ச்

புத்தர்- கபிலவஸ்து

 

E

ஏகநாத்- பைதான்,மஹாராஷ்டிரம்

 

G

குருநானக்- நான்கானா சாஹிப் (பாகிஸ்தான்)

கேசவ பலிராம் ஹெட்கேவார் (RSS)- நாகபுரி

 

J

ஞானதேவ்- அபேகான்  , மஹாராஷ்டிரம்

 

K

காஞ்சி மஹா ஸ்வாமிகள்- விழுப்புரம்

கபீர்தாஸ்- காசி

குழந்தையானந்த சுவாமிகள்- சமயபுரம், மதுரை

கனகதாசர்- பாட கிராமம், கர்நாடகம்

கம்பன் – தேரழுந்தூர்

 

M

மஹா வீரர்- குண்டக்ராம- பீஹார்

 

மாதவ ஸதாசிவ கோல்வல்கர்  (RSS)- ராம்டெக்

மஹாத்மா காந்தி- போர்பந்தர்- குஜராத்

மத்வர்- பாஜக ,உடுப்பி

முத்து ஸ்வாமி தீக்ஷிதர்- திருவாரூர்

மாணிக்கவாசகர்- திருவாதவூர்

 

மீராபாய்- சௌகரி, ராஜஸ்தான்

முக்தாபாய்- அபேகாவ்ன்

 

N

நாராயணகுரு – செம்பழந்தை, கேரளம்

 

நரசிம்ம மேதா- டாலஜ , குஜராத்

நாயன்மார் 63- பெரும்பாலோர் தமிழ்நாட்டு கிராமங்கள்

நிவ்ருத்தி- அபேகாவ்ன்

நாம்தேவ்- தண்ணீரில் மிதந்துவந்தார்

 

P

புரந்தரதாஸர்- தீர்த்தஹல்லி,கர்நாடகம்

பரமஹம்ச யோகானந்தர்- கோரக்பூர், உ.பி

R

ராமகிருஷ்ண பரமஹம்சர்- கமார்புகூர், மேற்கு வங்கம்

ரமண மஹரிஷி – திருச்சுழி

ராமனுஜர்- ஸ்ரீ பெரும்புதூர்

ராகவேந்திரர்- புவனகிரி, தமிழ்நாடு

சமர்த்த ராமதாஸர்- ஜாம்ப்

பத்ராஜலம் ராமதாஸர்- நலகொண்டபள்ளி

ராமதீர்த்தர்- முரளிவாலா, பஞ்சாப்

வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகள் – மருதூர்

 

ராம்தாஸ் சுவாமி- காஞ்சன்காடு, கேரளம்

ரவிதாஸர்- கோவத்தன்பூர், உ.பி.

S

சாரதாதேவி- ஜய்ராம்பாடி, மேற்கு வங்கம்

சத்ய சாய்பாபா- புட்டபர்த்தி, ஆந்திரம்

ஷீர்டி சாய்பாபா- சீர்டிக்கு அருகில்

சேஷாத்ரி ஸ்மாமிகள் – திருவண்ணாமலை, ஊஞ்சலூர் தொடர்பு

ஷியாமா சாஸ்திரி- திருவாரூர்

 

சோபான-  அபேகாவ்ன்

சுப்ரமண்ய பாரதி- எட்டயபுரம்

சுவாமி சிவானந்தர்- பத்தமடை, தமிழ்நாடு

 

சுந்தரர்- திருநாவலூர்

ஸ்வாமிநாராயண்- சாபைய- உ.பி

சூர்தாஸ்- சிரி, டில்லிக்கு அருகில்

 

சித்தர் 18 – சமாதிகள் மட்டுமே பிரஸித்தம்

 

திருஞான சம்பந்தர்- சீர்காழி

திருமூலர்- காஷ்மீர்

திருவள்ளுவர்- மயிலை-சென்னை

துளசிதாசர்-சூகர் க்ஷேத்ர சோரன்

திருநாவுக்கரசர்–திருவாமூர்

தியாகராஜர்- திருவாரூர்

துக்காராம்- டேஹு

 

வல்லபாசார்யா- வாரணாசி/காசி

ஸ்ரீவல்லப- பீதாபுரம், ஆந்திரம்

ஸ்வாமி விவேகாநந்தர்- கல்கத்தா

வியாசர்- கங்கை நதித் தீவு

வால்மீகி- காட்டின் நடுவில்

இந்தப் பட்டியல் முழுப் பட்டியல் அல்ல- நேரம் கிடைக்கும்போது இரண்டாம் பட்டியலும் வரும்; மூன்றாம் பட்டியலும் வரலாம்!

 

–சுபம்–

SWAMI RAMA TIRTHA’S QUESTIONS AND ANSWERS (Post No.4953)

Compiled by S NAGARAJAN

 

Date: 27 April 2018

 

Time uploaded in London –  13-10  (British Summer Time)

 

Post No. 4953

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Swami Rama Tirtha’s Answers

 

7

 

QUESTIONS ANSWERED

Question 1 : What is the greatest riddle?

Answer : Life, for we all have to give it up.

 

Q 2 : Safest Banks, fast stock – most profitable share?

A    : The farmer’s earth banks, live stock and ploughshares.

 

Q 3 : How can you always have what you please?

A    : If you will be pleased with what you have.

 

Q 4 : What is matter?

A    : Never Mind

What is Mind?

No matter.

 

Q 5 : What man is born with three hands?

A    :  The man who gets a right hand, a left hand and a little behind hand.

 

Q 6 : I tremble at each breadth of air and yet can heaviest burden bear?

A    :  Water

 

Q 7 : What does the worthy man think is more blessed to give than to receive?

A    : Kicks, pills and advice

 

Q 8 : What common thing is very uncommon?

A    : Common sense

 

Q 9 : Why are people very generous when they hear a sermon?

A    :  They give it all away.

 

Q 10 : Which is the largest room in the world?

A      : Room for improvement

Q 11 : What is that a king can do and God cannot?

A      :  A king can banish or deport man of his subjects from his kingdom, God cannot.

 

Q 12 : What does a man see everyday and God never see?

A      : His equal

 

Q 13 : What is better than an idea?

A      : You dear!

 

Q 14 : Why does a preacher have an easier time than a Doctor or Lawyer?

A      : Easier to preach than practice.

 

Q 15 : What low-born ill-bred fellow had noble blood in him?

A      : A flea when it bites lords and ladies.

 

Q 16 : An Englishman to Abraham Lincoln : What was your family coat of arms?

A      : Shirt sleeves.

 

Q 17 : This side of the river is “the other side”?

A      : That is one side, therefore this is the other side.

 

Q 18 : When is the new birth reliable?

A      : When the second birth precedes the first one.

 

Q  19 : What did Adam first plant in the garden of Eden?

A       : His foot.

 

Q 20 : Why are potatoes and corn like the Pharisees ?

A      :  They have eyes and see not, and ears and hear not.

Q 21 : Zeno said, “Motions is impossible.”  A body cannot move in the place where it is, for the place is no larger than the body, and it cannot move in another place, because it is not there.

A      : But it can move out of one place into another.

 

Q 22 : A cat has nine tails?

A      : One cat  (1)   one tail

No cat  (8)   eight tails

————-    ————-

therefore one cat      nine tails

——————–        ———–

 

Q 23 : Palindromes ?

A      : According to Sidney Smith, How did Adam introduce himself to Eve.

Madam I’m Adam

Napoleon speaks of himself :

“Able was I ere saw Elba”

Q 24 : Squraing the circle?

A      :

C I R C L E

I C A R U S

R A R E S T

C R E A T E

L U S T R E

E S T E E M

 

( To Be Continued)

 

 

Treat this article as second part of the Tamil/English article -Part 1 posted day before yesterday

 

 

ஸ்வாமி ராமதீர்த்தரின் குறிப்பேடுகள் சிலவற்றின் தொகுப்பு – 2

 

–SUBHAM–

 

WHERE WERE THE HINDU SEERS AND SAINTS BORN? (Post No.4952)

Research Article Written by London Swaminathan 

 

Date: 27 April 2018

 

Time uploaded in London – 7-45 am

 

Post No. 4952

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Kalhana, the greatest poet of Kashmir who wrote Rajatarangini, makes a thought provoking statement:

“The reputation of the great does not by any means conform to their birth place”. Rajatarangini 4-41

If we go deeper into his statement we ourselves wonder seers and saints strange places, particularly unknown and remote villages. Some villages where they were born have become big towns now. Here is a list I have compiled:

Annamacharya- Tallapaka in Andhra Pradesh

Aravindar (Aurobindo)- Kalighat (Kolkatta)

Anandamayee Ma-  Kheora (Bangladesh)

Adi Shankara- Kaladi in Kerala

Andal- Srivilliputtur in Tamil Nadu

Arunagirinathar- Thiruvannamalai

Alvars (12 Tamil Vaishnavite saints)

–Poykai Alvar- Tiruvegga (part of Kancheepuram now)

–Bhutatalvar- Mahabalipuram

–Peyalvar- Mylai (Part of Chennai)

–Tirumazisai alvar- Tirumazisai

–Madurakavi Alvar- Tirukkolur

–Kulasekara alvar- Tiru Vanchi

–Periyalvar- Sri Villiputtur

–Andal- Sri Villiputtur

–Tondardippodi alvar- Mandankudi

–Tiruppanalvar- Uraiyur

–Tirumangai alvar- Kuraiyalur

 

Bhaskara (Mathematician)- Bijapur

Bhakti Vedanta Prabhupada-  Tollygunje (Suburb of Calcutta)

Buddha- Kapilavastu

 

Ekanath- Paithan

 

Gurunanak- Nankhana Sahib (Pakistan)

K B Hedgewar (RSS Founder)- Nagpur

 

Jnanadev (Dyaneshwar) – Apegaon

Kabirdas- Varanasi

Kanakadasa- Baada Village in Karnataka

Kamban – Therazunthur in Tamil Nadu

Kulandaiyanandar- Samayapuram near Madurai

 

Mahaveera (Mahavira)- Kundagrama in Bihar

Madhava Sadasiva Golwalkar (Guruji)- Ramtek

Madhva- Paajaka near Udupi

Mahatma Gandhi – Porbandar

Manikkavasagar – Tiruvathavur

Meera/ Mirabhai – Chaukari village in Rajasthan

Muthuswamy Dikshitar (Composer)- Tiruvarur

Muktabhai- Apegaon near Paithan

Narasinh (Narasimha) Mehta- Talaja in Gujarat

Nammazvar- Tirukkurukur (Alwar Tirunagari)

Nivrutti- Apegaon in Maharshtra

Nayanmars- Most of the 63 Nayanmars, the Tamil Saivite saints were born in villages)

Namdev- Floating in a river

 

Paramahamsa Yogananda – Gorakpur in Uttarpradesh

Purandaradasar- Tirthahalli in Karnataka

 

Ramakrishna Paramahamsa- Kamarpukur in West Bengal

Ramana Maharishi- Thiruchuzi

Ramanuja- Sriperumbudur near Chennai

Ragavendra- Bhuvanagiri in Tamil Nadu

Ramadas (Samartha)- Jamb Village

Ramadas (Bhadrachalam)- Nelakondapalli in Andhra

Ramdas (swami)- Kanhangad in Kerala

Ramathirtha- Muraliwala in Punjab

Ravidas- Seer Goverdhanpur near Varanasi

Sarada Devi- Jayrambhati in West Bengal

Sathya Sai Baba- Puttaparthi in Andhra Pradesh

Seshadri Swamikal- Associated with Thiruvannamalai and Unjalur

Shirdi Sai Baba- near Shirdi

Shyama Sastri – Tiruvarur

Sivananda- Pathamadai in Tamil Nadu

Sopana- Apegaon

Subrahmanya Bharati- Ettayapuram in Tamil Nadu

Sundarar- Tirunavalur

Surdas- Siri near Delhi

Swaminarayan- Chapaiya in Uttarpradesh

 

Siddhas 18- Only Samadhis (places where they died) are popular. See Tirumular

 

Thirujnana Sambandar – Sirkazi

Tirumular (Tamil Siddha)- Kashmir

Tiruvalluvar- Mylapore (now part of Chennai)

Tulsidas-Sukar Kshetra Soro in Uttar Pradesh

 

Thirunavukkarasar (Appar)

Thygarajar (Composer)- Tiruvarur

Tukaram- Dehu near Pune

Vallabacharaya- Varanasi

Sri Vallabh- Pithapuram

Vyasa – Island in River Ganges

Valmiki- in a forest

Vivekananda Swami- Calcutta

 

You can keep on adding more saints; it is not a comprehensive list. It is just to draw your attention to this fact and remind you that next Avatar or reincarnation of Lord Vishnu as Kalki may be in a remote village! who knows!

 

–SUBHAM–

 

தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே! (Post No.4951)

தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே! (Post No.4951)

 

Written by London Swaminathan 

 

Date: 26 April 2018

 

Time uploaded in London – 15-19

 

Post No. 4951

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Tamil Poets and Kalhana

காஷ்மீரின் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருத கவிஞர் கல்ஹணர்; இவரை வெள்ளைக்கார்கள் மெத்தப் புகழ்வர். புராணங்களில் 140 தலைமுறை மன்னர்களின் பெயர்கள் இருந்தாலும் வருஷம் குறிப்பிடவில்லை. கல்ஹணர்தான் முதல் முதலில் வருஷத்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதினார் என வெளி நாட்டினர் விளம்புவர். ஆனால்  கல்ஹணரின் கலியுகக் கணக்கு இந்துக்கள் பஞ்சாங்கத்தில் உள்ளது போல கி.மு 3102 துவங்குவது அல்ல, இவர் கி.மு 2600 வாக்கில் என்று செப்புவார். கல்ஹணர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர். ஆயினும் அவைகளை      ஆராய்ச்சியளருக்கு விட்டு விட்டு, நாம் ஒப்பீட்டு இலக்கியத்தை மட்டும் நாம் காண்போம்.

 

GREAT MEN THINK ALIKE பெரியோர்கள் ஒரே மாதிரி சிந்திப்பர் என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். கல்ஹணர் சொன்னதை தமிழ்ப் புலவர் பாடல்களுடன் ஒப்பிட்டால் அது உண்மையே என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

“தன் உடல் வருத்தத்தையும் மனக் களைப்பையும் பற்றிக் கவலை ப்படாதவர் அடைய முடியாததும் உண்டோ? அத்தகையோர் துணிகரச் செயல்களில் இறங்குவர் (வெற்றி அடைவர்) என்று கல்ஹணர் நுவல்வார்.

 

Achievement
What cannot be accomplished by anyone who disregard s his own limbs and mind?
Such a person is capable of bold enterprise. Rajatarangini 7-1328

 

கருமமே கண்ணாயினார்

உத்தமர் யார் என்று நீதிவெண்பா கூறுகிறது:-

ஒரு வேலையைச் செய்யும்போது, உடலுக்கு வரும் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார். பசியைப்பற்றி கவலைப்படமாட்டார். வேலை முடியும் வரை தூங்க மாட்டார். யார் இடையூறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தார். காலம் வீணாகுமோ என்று கவலைப்படமாட்டார். யார் இகழ்வதையும் பொருட்படுத்தமாட்டார்.

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங்கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

 

XXX

“ஆற்றின் கரையில் உள்ள ஒரு பெரிய மரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதைத் தொற்றிக்கொண்டு வளரும் பூங்கொடியும் அழியும் என்பதை சொல்லவும் வேண்டுமோ”- என்று மொழிகிறார் கல்ஹணர்.

இதைத் தமிழில் சேருவார் சேர்க்கையினால்– சஹவாச தோஷத்தால்– ஒருவன் கெட்டான் என் போம்.

Certainty
If a tree which protects a river bank collapses in a flood, the creeper which lives on it, will surely follow suit.8-3250

‘சேராத இடந்தனிலே சேர வேண்டாம்’- என்று உலக நீதி உரைக்கிறது.

 

நீதி வெண்பா (எழுதியவர் யார் என்பது கிடைக்கவில்லை) சொல்கிறது:

புற்றுக்குப் பக்கத்தில் வைக்கோற் புரி கிடந்தாலும் அதைப் பாம்பு என்றே கருதுவர்; தீயோருடன் சேர்ந்த நல்லோரையும்   தீயவர்கள் என்று எண்ணி ஒதுங்குவர் என்று:

நல்லொழுக்க மிலா ரிடஞ்சேர்ந்த நல்லோர்க்கும்

நல்லொழுக்கமில்லாச் சொல் நண்ணுமே – கொல்லும்

பாம்பெனவுன் னாரோ பழுதையே யானாலுந்

தூம்பமரும் புற்றடுத்தாற் சொல்

நல்லோருடன் சேராதோர் இப்படி அழிவர் என்று மற்றொரு பாடல் கூறும்.

 

சந்தனமரத்துக்குப் பக்கத்தில் நிற்கும் மற்ற செடி கொடிகளும் அந்த மரத்தின் மணத்தைப் பெறும். ஆனால் மூங்கில் மரத்துக்கு அருகில் நிற்கும் மரங்களோ அது உராய்ந்து உண்டாகும் தீயில் தான் அழிவதோடு பக்கத்தில் உள்ள மரங்களையும் அழித்துவிடும்.

 

சந்தனத்தைச் சார்தருவுந்  தக்க மணங்கமழும்

சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற — அந்தவனந்

தானுமச் சந்தனமும் தன்னினமு மாய்வதன்றித்

தானுங் கெடச்சுடுமே தான்  (நீதி வெண்பா)

வேய்= மூங்கில்; தரு=மரம்

 

XXX

 

Defeat
Every great person finally meets with humiliating defeat just if he was a common man. Who then could proudly think I am great 8-335

 

“எல்லாப் பெரிய மனிதர்களும் இறுதியில் அவமானப்பட்டு தோல்வி அடைகின்றனர் ; சாதாரண மனிதனைப் போல ஆகின்றனர். இப்படி இருக்கையில் யார் நான்தான் பெரியவன் என்று நினைக்கமுடியும்?” என்று கல்ஹணர் கேட்கிறார்.
முடி சார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவிலொரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்த
படி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னம்பலவர்
அடி சார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இலையே

பட்டினத்தாரோ முடி மன்னர்களும் இறுதியில் பிடி சாம்பராய் சுடு காட்டில் சாதாரண மனிதன் எரிக்கப்பட்ட இடத்தில் எரிக்கப்படுவதைக் காட்டுகிறார். (இந்து மதத்தில் மன்னர்களுக்கும் பிச்சைக்காரகளுக்கும் ஒரே சுடுகாடுதான்)

xxx

 

Equanimity
The ocean is not warmed by the submarine fire nor does it cold by the snow s of the Himalayas when they enter it. Men of unruffled mind display equanimity either in dejection or exultation 8-2666
கடலுக்கு அடியிலுள்ள தீயினால் (வடமுகாக்னி= கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகள்) கடல் சூடாவதும் இல்லை; இமயமலையில் இருந்து வரும் பனிக்கட்டி  ஆறுகள் கடலில் பாய்வதால் அது குளிர்வதும் இல்லை. அது ஒரே மாதிரிதான் இருக்கும்; அது போல பெரியோர்கள் போற்றினும் தூற்றினும் சம நிலை தவற மாட்டார்கள் –கல்ஹணர்

 

இதையே தமிழ்ப் புலவர்கள் பால், தங்கம், சந்தனம் அகில், சங்கு கடல் மூலம் மிக அழகாகச் சொல்லுகின்றனர்.

அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

 

அதிவீர ராம பாண்டியனுக்கு முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்

வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்: 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்  – வாக்குண்டாம்

–சுபம்–

 

பாரதி போற்றி ஆயிரம் – 82 (Post No.4950)

Compiled by S NAGARAJAN

 

Date: 26 April 2018

 

Time uploaded in London –  8-15  AM  (British Summer Time)

 

Post No. 4950

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 82

  பாடல்கள் 728 முதல் 741

 

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய       பாரதியின் “பா”ரதம்

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு அரண்மனையில் அருட்கவி என்ற அத்தியாயத்தில் உள்ள 14 பாடல்களைப் படித்து மகிழலாம்.

அத்துடன் நூலை அப்படியே புகைப்படங்களாக எடுத்து அளிக்கும் உத்தி கையாளப்படுகிறது.

ஆகவே நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

அரண்மனையில் அருட்கவி – 14 பாடல்கள்

 

 

 

 

 

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி

***