கடலுக்குள் முனிவர்கள்? கம்பன் சொல்லும் அதிசய செய்தி புரியவில்லை (Post No.4497)

கடலுக்குள் முனிவர்கள்? கம்பன் சொல்லும் அதிசய செய்தி புரியவில்லை (Post No.4497)


Written by London Swaminathan 

 

Date: 15 DECEMBER 2017 

 

Time uploaded in London-  8-52 am

 

 

Post No. 4497

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்ப ராமாயண யுத்த காண்டத்தில் வருணனிடம் கடலில் வழிவிட வேண்டும் படலத்தில் கம்பன் சொல்லும் சில விஷயங்களுக்கு பொருள் விளங்கவில்லை. அதிசய விஷயங்கள் அவை. எப்போதும் நல்ல விளக்கம் தரும் வை மு கோபால கிருஷ்ணமாசாரியரும் கூட இதற்கு விளக்கம் சொல்லாமல் பொருள் மட்டும் தந்துவிட்டுப் போய்விடுகிறார்.

 

கடல் தெய்வமான வருணன் ராமனுக்கு வழி விடாததால் ராமன் கோபத்தில் அம்புகளைத் தொடுக்கிறான்.

ராமன் விட்ட தீ அம்புகள் கடல் நீரைக் குடிக்கத் தொடங்கின. அப்பொழுது கடலுக்குள் இருந்த முனிவர்கள் வெளியேறினர் என்று கம்பன் சொல்கிறான். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்திருந்த கதைகளை நாம் புராணங்களின் வாயிலாக அறிவோம். ஆனால் கடலுக்குள் இருந்து தவம் செய்யும் முனிவர்கள் பற்றிக் கம்பன் சொல்லுவது வியப்பாக இருக்கிறது. இது வால்மீகி ராமாயணத்தில் இல்லை.

 

இதோ அந்தப் பாடல்

மங்கலம் பொருந்திய தவத்து மாதவர்

கங்குலும் பகலும் அக்கடலுள் வைகுவார்

அங்கம் வெந்திலர் அவனடிகள் எண்ணலால்

பொங்கு வெங்கனல் எனும் புனலில் போயினார்

பொருள்

மங்கலம் பொருந்திய தவத்தை உடையவர்கள் அந்த கடலுக்குள் இரவும் பகலும் தங்கி இருப்பர். அவர்கள் அந்த பரந்தாமனின் திருவடிகளை என்றும் நி னைந்து உருகும் இயல்புடையவர். இதனால் ராமனின் அம்புகளால் கருகாமல், உடல் வெந்து போகாமல், துன்பம் இல்லாது நடந்து போயினர்

 

முனிவர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாததில் அதிசயம் ஏதும் இல்லை. கடல் மீது நடந்ததில் அதிசயம் ஏதுமில்லை. இதெல்லாம் முனிவர்களுக்குக் கைவந்த கலைகள். ஆனால் கடலுக்குள் அல்லும் பகலும் தவம் செய்கின்றனர் என்பது புதிய செய்திதானே?

 

பாலைவனத் தீவு பற்றிய சுவையான செய்தி

 

வருணன் வராததால் கோபமுற்ற ராமன் பிரம்மாஸ்திரத்தை ஏவ மந்திரம் சொல்லி விடுகிறான். உடனே ஈரேழு புவனங்களும் அதிர்ந்தன. வருணன் பயந்து ஓடோடி வந்து அதை நிறுத்தச் சொல்லி வேண்டுகிறான். துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டை, ரவையை யாரும் நிறுத்தமுடியாது. இது போல இந்து மதத்திலும் சில விதிகள் உண்டு கடவுளேயானாலும் சொன்ன சாபத்தை ‘வாபஸ்’ வாங்க முடியாது. ஆனால் அதற்கு பரிகாரம், விமோசனம் சொல்லலாம். அது போல பிரமாஸ்திரத்தை மந்திரித்துவிட்டால் அதைப் பிரயோகித்தே ஆக வேண்டும்.

 

 

ராமனும் இதை வலியுறுத்தி, கடலுக்குப் பதிலாக வேறு ஒரு இலக்கு (Target) சொல். அங்கே இதை அனுப்பி விடுகிறேன் என்று சொல்கிறான். அவன் உரைத்ததைக் கேட்ட வருணன் மொழிந்தான்:

 

மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார்

அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார் அவுணர் ஆயோர்

தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார்

மன் உமிழ் கணையை வெய்யார் மேல் செல விடுதி என்றான்

 

பொருள்

மன்னவனே! மரு காந்தாரம் என்னும் ஒரு தீவில் வாழ்கின்ற அவுணர்கள் (demons) நூறு கோடி உள்ளனர். அவர்கள் தின்னத் தொடங்கினால் உலகம் அழிந்துவிடும் அவர்கள் அவ்வளவு கொடியவர்கள். எனக்கும் அவர்கள் தீமை செய்கின்றனர். ஒளிவீசும் உன் அம்பை அந்தக் கொடியவர்கள் மீது விடுவாயாக என்று வருணன் வேண்ட ராமனும் அவ்வாறே செய்தான். அதுவும் ஒரு நொடிப்பொழுதில் மருகாந்தாரம் என்னும் தீவிலுள்ள அரக்கர்களைச் சாம்பலாக் கிவிட்டு ராமனிடம் திரும்பி வந்தது.

 

முன்னொரு கட்டுரையில் ராமனின் அம்புகள், திருமாலின் சுதர்சன சக்கரம் ஆகியன ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வைத்திருக்கும் பூமராங் (boomerang) ஆயுதங்களின் முன்னோடி என்று விளக்கி இருக்கிறேன்.

 

அதுபோலவே பிரம்மாஸ்திரம் என்பது அணு ஆயுதம் (Nuclear weapon) என்றும் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை எழுதினேன். ஏனெனில் மஹாபாரதத்தில் இது கர்ப்பத்திலுள்ள கருவையும் அழிக்கவல்லது என்று எழுதி இருக்கிறது. இது அணு ஆயுத ரேடியேஷன்/ கதிரியக்கத்தால் (Nuclear Radiation) மட்டுமே நடக்கக்கூடியது.

 

கம்ப  ராமாயணத்தில் இந்த பிரம்மாஸ்திரம் அவுணர்களைச் சாம்பலாக்கியது என்று சொல்கிறார். அதில் அதிசயம் ஏதும் இல்லை. ஆனால் மரு காந்தாரம் என்னும் தீவு எங்குள்ளது? என்பதே ஆராய்ச்சிக்குரிய விஷயம். மரு என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பாலைவனம் என்று போ பொருள்; ஆனால் மரு காந்தாரம் என்னும் பாலைவனத் தீவு எங்கே உள்ளது? என்று தெரியவில்லை. வால்மீகி ராமாயணத்தை ஆங்

கிலத்தில் மொழிபெயர்த்த ஹரிப் ப்ரசாத் சாஸ்திரி இதை ராஜஸ்தானிலுள்ள பாலைவனம் என்கிறார். அது பொருத்தமாகத் தோன்றவில்லை.

 

முதலில் அந்த இடத்தின் பெயர் த்ருமகுல்யம் என்றும் பின்னரே அதற்கு மரு காந்தாரம் என்று பெயர் ஏற்பட்டு மூவுலகிலும் பிரசித்தம் அடைந்தது என்றும் வால்மீகி ராமாயணம் செப்பும்.

 

வால்மீகி மேலும் சில வியப்பான செய்திகளைச் சொல்லுகிறார். ராமனின் பிரம்மாஸ்திரம் விழுந்தவுடன் பிரம்மாண்டமான சப்தம் எழுந்தது என்றும் பூமியிலிருந்து தண்ணீர் ஊற்றுக்கள் பீறிட்டெழுந்தன என்றும் உடனே அந்த இடத்துக்கு மருகாந்தாரம் என்னும் பெயரிட்டு இங்கு வாழ்வோருக்கு நோய் நொடிகள் தோன்றா; இந்த   இ டத்தில் பாலும் தேனும் ஓடும்; காய்கனிகள் பூத்துக் குலுங்கும் என்று ராமன் ஆசிர்வதித்ததாகவும் வால்மீகி இயம்புகிறார்.

 

பூகோள ரீதியில் இது இந்து மஹா சமுத்திரத்தில் ஒரு தீவாக இருக்க வேண்டும். ஏனெனில் ராமன் விட்ட பிரம்மாஸ்திரம் கிழக்கு திசையில் சென்றது. அந்தமான் தீவுகளின் எழில்மிக்க மணற்பாங்குடைய ஒரு தீவாக இது இருக்கலாம்.

 

மருகாந்தாரம், த்ரம குல்யம் போன்ற பெயர்கள் வேறு எங்காவது வருகிறதா என்றும் ஆராய்தல் அவசியம்.

 

TAGS:- பிரம்மாஸ்திரம், அணு ஆய்தம், மரு காந்தாரம், பாலைவனம்

சுபம்—

 

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த புத்தகங்கள் (POST NO.4496)

Date: 15  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-10 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4496

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

திருநெல்வேலியிலிருந்து ஆர்.சி.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஆரோக்கிய மேம்பாட்டு மாத இதழ் ஹெல்த்கேர். அதில் டிசம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 2017ஆம் ஆண்டின் மிகச் சிறந்த புத்தகங்கள்

 

ச.நாகராஜன்

Eat well, move better and feel awesome

 

ஜான் சாப்மேன் மற்றும் லிஎஆன் புஷின்  (John Chapman & Leon Bushin) ஆகிய இந்த இருவர் எழுதியுள்ள ந்ன்றாகச் சாப்பிடுங்கள், நன்கு இயங்குங்கள், பிரமாதமாக உணருங்கள் என்ற புத்தகம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ள ஒர் புத்தகம்.இவர்கள் உடல்பயிற்சி ஆரோக்கியம் பற்றிய பயிற்சியாளர்கள்.

அவர்கள் தங்களுக்குப் பிடித்த உடல்நலம் தரும் வழிகளையும் கருவிகளையும் இதில் சுட்டிக் காட்டுகிறார்கள். யூ டியூபில் இவர்களது பதிவுகள் நிறைய உள்ள்ன. அன்பர்கள் அதைப் பார்த்துப் பயன் பெறலாம்.

நிறைய உதவிக் குறிப்புகளைத் தருவதோடு, எளிய பயிற்சிகளையும் தருகின்றனர் இவர்கள்.

THE FAT LOSS PRESCRIPTION

 

டாக்டர் ஸ்பென்சர் நடொல்ஸ்கி குடும்ப மருத்துவ மருத்துவர். பெயர் பெற்றவர். கொழுப்பைக் குறைக்கும் இன்றைய மருத்துவத்தில் நிபுணர்

‘ஃபேட் லாஸ்’ என்ற இவரது புத்தகம் உடலில் உள்ள கூடுதல் எடைக் குறைப்பைப் பற்றியது.

உடலில் அனாவசியமாகச் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் குறைக்க உங்களாலான அனைத்து முயற்சிகளையும் நீங்கள் செய்து, ஒன்றும் உதவவில்லையா என்று கேட்கிறார் அவர். நீங்கள் எடுக்கும் சில மருந்துகளே உங்கள் எடையைக் குறைப்பதைத் தடுக்கிறது என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா என்ற ஒரு கேள்வியையும் நம் முன் அவர் வைக்கிறார்.

அவர் கொடுக்கும் உடல் கொழுப்பை – கூடுதல் எடையைக் – குறைக்கும் அறிவுரையில் உணவுத் திட்டமும் உடல் பயிற்சியும் உள்ளது. அத்தோடு இந்த முயற்சியில் தடையை ஏற்படுத்தும் மருந்துகள் பற்றிய குறிப்புக்களையும் அவர் தருகிறார்

SLIM BY DESIGN

I

‘ஸ்லிம் டிசைன்’ என்ற இந்தப் புத்ஹக்த்தை எழுதியுள்ளவர் ப்ரையான் வான்சிங்க் (Brian Wanskink) என்பவர். இவர் உணவு உளவியலாளர். இவரது செல்லப் பெயர் உணவின் ஷெர்லாக்ஹோம்ஸ். உணவு பற்றி அவ்வள்வு துப்பறிந்து வைத்துள்ளார்.

மனித இயற்கைக்கு உகந்தபடி வேலை செய்தால் அது தான் சுலபமாகவும் சீக்கிரமாகவும் உடலை மெலிதாக ஆக்கும் வழி என்கிறார் இவர். இயற்கைகு எதிராக என்ன செய்தாலும் பயனில்லை என்பது இவரது முடிவு.

எப்படி குறைந்த செலவில், சுலபமாக, எளிய முறையில் வாழ்ந்தால் அது கொழுப்பற்ற இல்லங்களை உருவாக்கும் என்பதற்கு வழி கூறுகிறார் இவர்.

அன்றாடச் சூழ்நிலைக்குத் தக்கபடி பிராக்டிகலாக இருக்கும் இவரது அறிவுரைகள் நீடித்த பயனை நல்கும். இவரது நூலில் உள்ள அறிவுரைகள் சின்னச் சின்ன மாறுதல்களைக் கூறுபவை; ஆனால் பெரிய பலனை அளிக்க வல்லவை..

THE WOW BOOK: 52 WAYS TO MOTIVATE YOUR MIND, INSPIRE YOUR SOUL & CREATE WOW IN YOUR LIFE

 

‘தி வௌ புக்’ என்ற இந்த நூலை எழுதியவர் டாட் டர்கின். (Todd Durkin). எழுத்தாளர், பேச்சாளர், பயிற்சியாளர், ஊக்கமூட்டும் வாழ்க்கைக்கான பயிற்சிகளைத் தரும் பயிற்சியாளர் – இப்படிப் பன்முக பரிமாணம் இவருக்கு உண்டு.

அவரது உடல் பயிற்சிக் கூடம் விருது பெற்ற ஒன்று. சான் டியாகோ (அமெரிக்கா) வில் உள்ள அவரது உடற்பயிற்சிக் கூடம் அமெரிக்காவில் ஆண்களுக்காக உள்ள மிகச் சிறந்த பத்து உடற்பயிற்சிக் கூடங்களில் ஒன்று.

இந்த “வௌ” நூலில் 52 கதைகளை டாட் தருகிறார்.  நம்மை ஊக்குவிக்கவும், மனதைச் சரியாக்கவும் நமது நோக்கத்தைக் கண்டு பிடிக்கவும், உறுதியுடன் வாழவும் ஆகிய இவற்றை அடைவதற்கான ஒரு  மையக் கருத்தை ஒவ்வொரு கதையும் கொண்டுள்ளது.

பாட்காஸ்டில் இவரது 78 எபிசோடுகள் உள்ளன.

நல்ல புத்தகங்களை சுட்டிக் காட்டி விட்டோம்.

இனி என்ன, படித்து, மகிழ்ந்து பயன் பெற வேண்டியது தானே!

****

 

பாரதி போற்றி ஆயிரம் – 5 பாரதி பாமாலை (Post No.4495)

Date: 15  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-38 am

 

COMPILED BY S NAGARAJAN

 

Post No. 4495

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

  பாடல்கள் 25 முதல் 30

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

 

பாரதி பாமாலை

ம.க.சிவசுப்பிரமணியன்

 

பாடல் எண்: 25 முதல் 30

 

1

தெய்வம் அறிவென்றார் தாழ்வுயர்வு சாதியிலே

செய்தல் சிறியோர் செயலென்றார் – உய்வதற்கே

வீரம் துணையென்றார் வீட்டின்பம் காட்டுகவிக்

கார மணிவிப்பேன் யான்

 

2

ஒன்றே யிறையென்றார் ஒற்றுமைதான் நம்மவர்க்கே

யென்றுந் துணயென்றா ரெல்லோர்க்கும் – நன்றாகும்

கல்வி வளர்க்கும் கருத்துறுவீர்  என்றகவிச்

செல்வர் தமிழுக்குச் சேய்

 

 

3

பாட்டுத் திறத்தாலே பாருலகைப் பாலிக்கும்

நாட்டமது கொண்டோனை நானிலத்தில் – கூட்டுவித்த

எல்லாம் வலனாம் எழிலிறைக்கே வாழ்த்துக்கள்

சொல்வோம் பெறுவோம் சுகம்

 

 

4

கூற்றம் வருமென்றுக் கூவிக் கலங்காதீர்!

ஆற்றுவீர் நற்பணிகள் அஞ்சாதீர் – போற்றுவீர்

தெய்வம் உளதென்பீர்! தேறுவீர்! என நமக்கே

உய்யவழி சொன்னான் உணர்ந்து.

 

 

5

காக்கை குருவிஎங்கள் கூட்டமென வுரைத்தான்

யாக்கை புரந்திவிடுவீர் யாவருமே! – நோக்கமது

ஓங்குகவே என்றென்றும் ஒன்றிடுவீர் என்றினைய

பாங்குரைக்கும் பாரதியின் பா.

 

 

6

எத்திக்கும் முத்தமிழை ஏற்றமுறச் செய்வதுவும்

தித்திக்கும் கல்வி திகழ்வதுவும் – சித்திக்கும்

நல்லறமே நாட்டில் நிலவுதலும் வேண்டுமென்று

சொல்லியவர் செந்தமிழர் சொத்து.

 

 

தமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:

ம.க.சிவசுப்பிரமணியன்: ‘வித்துவான்’ பட்டம் பெற்றவர். சொல்வன்மை உடையவர். சேதுபதி  உயர்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுபவர்.

****

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

 

 

 

SEVEN TYPES OF HINDU BATH, SHOWER ( Post No.4494)

Written by London Swaminathan 

 

Date: 14 DECEMBER 2017 

 

Time uploaded in London-  20-56

 

 

Post No. 4494

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Hindus take at least one bath every day. Those who live in villages, particularly on the banks of rivers, take two baths every day. Orthodox Hindus don’t do anything before a shower. Hindus are supposed to wash themselves every day ad wear washed clothes. They must use only dry clothes during religious ceremonies. Wet clothes are worn for certain ceremonies when one is bereaved.

 

There are at least seven types of baths or bathing methods according to Hindu scriptures. Some people divide them into five categories. Let me the give the list of seven types:

 

1.Vaarunam

This is the normal, full shower in a tank or a river or in the bath room. That is the head to foot wash. Hindu women don’t wash their hair every day, but men do wash head to foot.

2.Paarthiva Snanam

This is mud bath, but with proper mantras. Smearing with the clean mud on the whole body. There is a mantra beginning, ‘Mrthike haname Papam’.

3.Aagneyam

This is smearing the body with the ash that comes out of the Agni Hotra Kunda (fire altar). This is like Vibhuti (holy ash) bath.

4.Vaayavyam

Dust from the cattle shed where cows are kept in clean condition. All products from the cow including the urine, cow dung, milk are used by the Hindus. Scientifically they are proved to have anti-bacterial quality. The dust from hoofs of the cow are smeared on the body with Go Savitri mantras. This is called Vayavyam bath.

5.Divya Snanam

This is a rare one. When there is sun light and rain , one bathes  oneself in the rain. Particularly when it is Uttarayana (sun’s northward journey for six months when the Northern Hemisphere is having summer).

6.Mantra Snanam

Brahmins do it when they could not take a full shower. They recite the mantra “Apohistaa Mayo Bhuvah…..’ and sprinkle water on the head, chest and feet. This mantra is known to every Brahmin because it is part of their thrice a day Sandhyavandanam ceremony. In the olden days men from three castes — Brahmin, Kshatriya and Vaisya were doing Sandhyavandan every day.

7.Maanasam

If there is no water available or if one is not in a position to take a shower, one takes a shower mentally. One imagines the Lord Vishnu or Sun God with conch and wheel in hands and think that the holy Ganges flows through the body from head to foot. One must also imagine that the dirt in the body and mind are washed away.

Apart from these seven types, another bath or snanam is known as Panchanga (five body parts) Snanam, because one washes five parts: two hands, two feet and face.

Sponge bath is also approved in Hinduism; it is called Kaapila Snanam, where one wipes the body with a wet cloth.

Another approved bath is marking the body with any religious symbols in 12 places. It may be Vaishnavite or Saivaite symbols.

 

It is very interesting to see the mud bath, sponge bath and other baths are practised in India from the olden days.

 

Another interesting fact is that Hindus bathe the gods and goddesses. It is called Abisheka. It is unique to Hindus. They bathe the gods with milk, honey, tender coconut water, rose water, sandal and Vibhuti (holy ash) and Kunkum.

 

–Subham–

 

இசை மேதையின் அபார ஞாபக சக்தி!

Written by  London Swaminathan 

 

Date: 14 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-26 am

 

 

Post No. 4493

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஆர்டுரோ டோஸ்கானினி  (ARTURO TOSCANINI) இசை இயக்குநர் ஆவார். ஆரம்ப காலத்தில் அவர் ஸெல்லோ (CELLO) வாத்தியம் வாசிப்பவராக இருந்தார். பிரபல வயலின் வித்வான்கள்; சாஹித்ய கர்த்தாக்ளுடன்க நல்ல தொடர்பு வைத்திருந்தார். வயலின் மேதைகள்  ரோமானினி, என்ரிகோ போலோ, இசை அமைப்பாலர் போல்சோனி ஆகியோர் ஒரு முறை சந்தித்தனர் அவர்கள் அப்பொழுது போல்சோனி எழுதிய அடாகியோ ஒன்றை வாசித்தனர்.

 

அடாகியோ (ADAGIO) என்பது ஆமைவேகத்தில் ஊர்ந்து செல்லும் ஒரு (ITEM) ஐட்டம். நம்மூர் தில்லானாவுக்கு எதிர்ப்பதம் என்றும் சொல்லலாம்.

 

மற்றொருத் தடவை போல்சோனி தவிர மற்ற எல்லோரும் சந்திக்கும் வாய்ப்பு கிடடைத்தது. அவர்களுக்குள் போல்ஸோனி பற்றி சம்பாஷணை எழுந்தது. அடடா! அவருக்குதான் இசை அமைப்பதில் என்ன திறமை? அவர் மட்டும் இப்பொழுது இருந்தால் அடகியோவை மீண்டும் வாசித்து இன்புறலாமே! அதை எழுதி வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று அங்கலாய்த்தனர்.

 

திடீரென்று டோஸ்கானினி  ஒரு பேப்பரும் பென்ஸிலும் கொடுங்கள் என்றார். காகிதம் கையில் கிடைத்தவுடனே, ம்ள மளவென்று அடாகியோவுக்கான நொடேஷன் எல்லாவற்றையும் ஸ்வரம் தப்பாமல் எழுதிக் கொடுத்தார். அனைவரும் அதை வாசித்து மகிழ்ந்தனர்.

அந்த அடாகியோவில் நான்கு பகுதிகள் உண்டு

நம்ம ஊரில் ஒரு சாகித்யகர்த்தா எழுதிய ஒரு பாடலை அவர் கச்சேரி முடிந்து திரும்பியவுடன் அவர் பாடிய புதிய பாடலை ஸ்வரம் தப்பாமல் எழுதிக்கொடுப்பது போலாகும் இது.

 

XXXX

ஆசை, அகந்தை, அலட்சியம்!!!

 

ப்ரூனோ வால்டர்ஸ் (BRUNO WALTERS) நல்ல இசை அமைப்பாளர். மிகவும் அமைதியானவர்; அடக்கம் உடையவர்; பழகுதற்கு இனியர்.

அவர் முதல் தடவை நியூயார்க் பிலார்மானிக் நிகழ்ச்சி நடத்தியபோது முதல் ஸெல்லோ வாத்யம் (CELLIST) வாசிப்பவற்கான நாற்காலியில் ஆல்ப்ரெட் வாலென்ஸ்டைன் (ALFRED WALLENSTEIN)  உட்கார்ந்து கொண்டார்.அத்தோடு நில்லாமல் ஒத்திகை நடந்தபோதும் சரி, இன்னிசை நிகழ்ச்சியிலும் சரி,  நடத்துநர் ப்ரூனோவைக் கண்டுகொள்ளவில்லை. வேண்டுமென்றே அலட்சியம் செய்தார். அங்குமிங்கும் ‘பராக்’ பார்த்துக் கொண்டிருந்தார். வேறு ஒரு இசை அமைப்பாளராக இருந்தால், கோபத்தில் அவரை திட்டியிருப்பார். ஆனால் ப்ரூனோ அவரிடம் சென்று, என்னைத் தனியாகச் சந்தியுங்கள் என்றார்.

 

வாலென்ஸ்டைனும் தனிச் சந்திப்புக்காக வந்தார்.

 

“வாலன்ஸ்டன், உங்களுக்கு என்னதான் வேண்டும்? ஒருமாதிரி இருக்கிறீர்களே, உங்கள் ஆசை அபிலாஷைகள்தான் என்ன? சொல்லுங்கள்”.

 

வாலன்ஸ்டைன் சொன்னார்: “நான் ஒரு சிறந்த இசை நடத்துநர் (CONDUCTOR) ஆக வேண்டும்”.

 

உடனே ப்ரூனோ, அமைதியாகச் சொன்னார்:

“அதற்கென்ன, ஆகுங்களேன் ஆனால் வாலன்ஸ்டைன் போன்றவரை முதல் வரிசையில் உட்கார வைத்துவிடாதீர்கள்!”

 

XXXX

சங்கீத அவுரங்கஸீப்புக்கு சிபாரிசுக் கடிதம்!

 

லியோபோல்ட் ஸ்டோகோவ்ஸ்கி (LEOPOLD TOKOWSKI) என்பவர் பெரிய இசை அமைப்பாளர் (MUSIC CONDUCTOR); அவருக்கு ஒரு பிரபல வயலின் வித்வான் சிபாரிசுக் கடிதத்துடன்,  வேறு ஒரு இளம் வயலின் வித்வானை அனுப்பி இருந்தார்.

 

அது நல்ல சிபாரிசு என்பதால், ‘இப்போதைக்கு பிலடெல்பியாவில் இசைக் குழுவில் இடம் இல்லை. சில நாட்கள் பிலடெல்பியாவில் தங்கினால் ஏதேனும் உதவி செய்வேன்’ என்றார் ஸ்டோகோவ்ஸ்கி.

 

வந்த ஆளின் அதிர்ஷ்டம், ஒரு முக்கியக் கச்சேரிக்கு முன், இசைக்குழு வயலின் வித்வானுக்கு உடம்பு சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

 

ஆகையால் சிபாரிசுக் கடிதத்துடன் வந்தவரிடம் டோகோவ்ஸ்கி வந்து, பீதோவனின் (BEETHOVEN SYMPHONY) பாட்டுக்கு நீங்கள் ஈடுகொடுத்து வாசிப்பீர்களா? என்றார். அவரும் தலையை அசைத்துவிட்டு, அவ்வாறே வாசித்தார்.

 

ஆனால் நேரம் ஆக ஆக அவர் முகத்தில் கொஞ்சமும் சுரத்து இல்லை; பிடிக்காத விஷயமாக இருந்தால் குழந்தைகள் எப்படி நெளியுமோ, முகத்தைச் சுழிக்குமோ அப்படி சுழித்தார்.

டோகோவ்ஸ்கி அவரிடம் சென்று என்ன விஷயம்? என்று கேட்டார்.

உடம்பெல்லாம் சரியா? ஏதேனும் உடம்பு கோளாறா? டாக்டரைக் கூப்பிடவா? என்று கேட்டார்.

அவர் இல்லை என்று சொன்னவுடன்,

மிகவும் கோபத்துடன், பின்னர் ஏன் இப்படி முகத்தை, குரங்கு மூஞ்சி போல வைத்துக்கொண்டு முழிக்கிறீர்கள் என்று விரட்டினார்.

 

அதுவா……….. அதுவா,,,,,,,,,,,,,,,,, எனக்கு சங்கீதம் பிடிக்கவே பிடிக்காது! — என்றார் கோணமூஞ்சி வயலின் வித்வான்!

 

 

Tags:-சங்கீத சம்பவங்கள், அபார ஞாபக சக்தி, வயலின் வித்துவான், அவுரங்கசீப், அகந்தை

 

–சுபம்–

அற்புதங்கள் நீடிக்கும்! (Post No.4492)

Date: 14  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-37 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4492

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பேரருள் அற்புதம்

அற்புதங்கள் நீடிக்கும்! கல்யாண்குமாரும், காதர்பாஷவும் உயிர் பிழைத்த அதிசயம்!!

 

ச.நாகராஜன்

 

 

1

ஆண்டவனின் அற்புதங்களுக்கு எண்ணிக்கை என்பதே இல்லை. கால, தேச, வர்த்தமான, மதம்,ஜாதி, அந்தஸ்து,பால்,இனம்,வயது, தேசம் கடந்த அருள் மழை அவனுடையது!

 

காயத்ரி மகிமை பற்றிய எனது கட்டுரையில் கல்யாண்குமார் என்ற ஒரு இளைஞர் தேனருவி மலைக்கு சென்றவர் தவறி ஒரு ஆழ்ந்த பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதையும், அவரைத் தேடச் சென்றவர்கள் நம்பிக்கை இழந்து அந்த முயற்சியைக் கைவிட்டதையும், யதேச்சையாக அந்தப் பக்கம் சென்ற ஒருவர் உதவி கேட்கும் அபயக் குரலைக் கேட்டதையும்,பின்னர் உடனடி முயற்சி மேற்கொண்டு அவரை உயிருடன் மீட்டதையும் குறிப்பிட்டிருக்கிறேன். காயத்ரி மந்திரத்தில் மிகவும் பக்தி உள்ள அந்த இளைஞர் ஆழ் பள்ளத்தாக்கில் காயத்ரி ஜபம் செய்ததையும்,காயத்ரியே தன்னைக் காப்பாற்றினாள் என்று அவர் கூறியதையும் அந்தக் கட்டுரையில் படிக்கலாம்.

 

அதே போல அதிசயிக்கத் தக்க இன்னொரு அதே மாதிரியான  சம்பவத்தைப் படித்தவுடன் வியப்பு தான் மேலோங்கியது.

29-11-2017 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வந்த செய்தி அது!

 

 

 

2

ககனசுக்கி நீர்வீழ்ச்சிக்குச் சுற்றுலாவாகப் புறப்பட்டார் பெங்களூருவைச் சேர்ந்த காதர் பாஷா.

300 அடி ஆழமுள்ள ஆழ் பள்ளத்தாக்கில் தவறி விழுந்தார் அவர்.

சனிக்கிழமை மதியம் பள்ளத்தில் விழுந்தவருக்கு இடது கால் முறிந்தது, ஒரு கையில் காயம்.ஒரு வழியாக இழுத்தவாறே நடந்தாலும் முடியவில்லை.

ஞாயிறு போனது. திங்கள் மதியமும் வந்தது. யதேச்சையாக அந்தப் பக்கம் வந்த ஒருவரைப் பார்த்த காதர்பாஷா கூவினார். தனது சிவப்புச் சட்டையை வீசிக் காட்டினார்.

அல்லாவின் அருள்! அவர் மீட்கப்பட்டார்.

செய்தியின் முழு விவரம் இதோ;

 

டைம்ஸ் ஆஃப் பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆங்கில மூலம் இது:

Man trapped in gorge lived on water for 48 hours

TNN | Updated: Nov 29, 2017, 08:20 IST

 

1

 

 

MANDYA: Stuck in a 300 ft gorge with a broken leg and only the roaring Gaganachukki falls for company, Khader Pasha oscillated between hope and despair for 48 hours. His last act to save himself was to wave his red shirt to a tourist who happened to see him. When his rescuers found him, Pasha had fainted from the exertion.

 
Pasha, from Kadirenahalli in Bengaluru, had come to the falls on Saturday afternoon. Not content with merely watching the falls, he followed three people who were descending a gorge to get to the bottom, police said. He made it past the spray but suddenly, he stepped on a rock and fell. When he landed deep in the water, his left leg was broken and his left arm severely injured.

He dragged himself to a few stones nearby and stretched his legs. He then screamed for help but the roar of the falling water drowned his voice. Soon enough, the sun set and it was dark all around. A chill rose and Pasha, now in agony from the fractured leg, nearly froze. There was nothing to eat but plenty to drink. Pasha drank water and slept in snatches, fearing snakes and other creatures in the undergrowth. By morning, he felt, he might be able to draw the attention of tourists.
But all of Sunday too, he failed. He began to lose hope with every passing hour. On Monday noon, Pasha noticed a tourist looking his way, took off his red shirt and waved to the tourist and screamed for help .
***

 

 

3

அதிசயமான இந்தச் சம்பவம் அப்படியே தேனருவி நிகழ்ச்சியை நினைவூட்டுகிறது.

கல்யாண்குமாரை காயத்ரி தேவி காப்பாற்றினாள்.

காதர்பாஷாவை யார் காப்பாற்றியது?

அல்லாவின் அருளே! அவரது புண்ணியம் அவர் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.

பெரும் சக்தி ஒன்று மதம், ஜாதி,இனம், தேசம் உள்ளிட்ட எல்லாத் தடைகளையும் கடந்து உலகினருக்கு அருள் பாலித்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு எடுத்துக் காட்டு!

 

 

 

4

இதைப் பற்றிச் சிந்திக்கும் போது ஹிந்து மதத்தின் அடிநாதமான ஒரே ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

ஏகம் ஏவ; அத்விதீயம் ப்ரஹ்ம!

உண்மை ஒன்றே; இரண்டு இல்லை.

ரிஷிகள் அல்லது அறிஞர்கள் அதைப் பலவாறாக அழைக்கின்றனர்.

ஏகம் ஸத்; விப்ரா: பஹுதா வதந்தி!

நாமக்கல் கவிஞர் அழகுறச் சொன்னார், சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவது எவராலே என்ற பாடலில்.

அதில் சில பகுதிகள்:

 

சூரியன் வருவது யாராலே சந்திரன் திரிவது எவராலே

காரிருள் வானில் மின்மினி போல கண்ணிற் படுவன அவை என்ன

 

அத்தனையும் தர ஒரு கருத்தன் யாரோ எங்கோ இருப்பது மெய்

அல்லா வென்பார் சில பேர்கள்;

அரன் அரி என்பார் சில பேர்கள்;

வல்லான் அவன் பர மண்டலத்தில்

வாழும் தந்தை யென்பார்கள்

சொல்லால் விளங்கா ‘நிர்வாணம்’

என்றும் சில பேர் சொல்வார்கள்;

எல்லாம் இப்படிப் பல பேசும்

ஏதோ ஒரு பொருள் இருக்கிறதே!

அந்தப் பொருளை நாம் நினைந்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்!

***

பாரதி போற்றி ஆயிரம் – 4 (Post No.4491)

Date: 14  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-29 am

 

COMPILED BY S NAGARAJAN

 

Post No. 4491

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 4

  பாடல்கள் 19 முதல் 24

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

 

தவமார் புதல்வன்!

சூ. கிரிதரன்

 

 

பாடல் எண்: 19 முதல் 24

1

தமிழ்த்தாய் ஈந்த தவமார் புதல்வன்

அமிழ்தம் நிகர்த்த ‘கவிக்கோ’ பாரதி!

அழியாப் புகழ்கொல் அருட்பெருஞ் செல்வன்

மொழியை விழியாப் பேணிய தலைவன்!

2

நிலையாய் வந்து நிழல்மர மாகி

அலையெனப் பெருக்கிக் கலைபல தந்து

மலையென நின்று புகழ்மணம் வீசி

தலைவன் ஆனான் தன்னிகர் இல்லான்!

3

சாதிகள் வெறிப்பயன் சாய்த்திடப் பாடுவான்

ஆதியும் அந்தமும் அணைந்திடா ஒருவனை

ஓதியே ஒற்றுமை எங்குமே பரவிட

தீதினை வென்றிடக் கவிதையைக் கொண்டவன்;

 

4

சேதமே இல்லா வகையினில் செந்தமிழ்

மாதரின் உரிமையைக் காத்திடப் பாடிய

மூதறி வாளன்; மொழிபுகழ்ச் சீலன்,

கோதிலாக் கவிக்குயில்; குணமலை பாரதி!

 

5

பலமொழி உணர்ந்த பைந்தமிழ்ப் புலவன்;

நலமெலாம் நற்றமிழ் மொழியினைச் சேர்ந்திட

குலவிட எழில்மிகக் கவியினில் வழிகளைப்

பலபல வழியினில் பகர்ந்தவன் பாரதி!

 

6

அடிமைக்குக் கூற்றுவன் அவன்கவி யாகும்;

மிடிமைக்கு மருந்து, மிளிர்ந்திடும் அவன்சொல்;

கொடுமையின் எதிரி; குளிர்புனல்; கவிமணி;

படித்தவர் பாமரர் புகழ்ந்திடும் பாரதி!

 

தமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:

 

சூ.கிரிதரன் : கல்லூரி மாணவர். கட்டுரையாளர். கவியுளம் கொண்டவர். பெயர் பெற்ற டாக்டர் நா.சூரிய நாராயணன் அவர்களின் புதல்வர்.

 

குறிப்பு: இப்போது (2017ஆம் ஆண்டில்) கவிஞர் சூ.கிரிதரன் லண்டனில் வசிக்கிறார்.

 

****

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

 

 

ஏழு வகை ஸ்நானம் , குளியல் முறைகள் (Post No.4490)

Written by  London Swaminathan 

 

Date: 13 DECEMBER 2017 

 

Time uploaded in London-  18-17

 

 

Post No. 4490

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

குளியல் போடுவது எப்படி? ஸ்நானம் செய்வது எப்படி? இந்து மதத்தில் ஏழு வகை ஸ்நானங்கள் சொல்லப் பட்டுள்ளன. அவையாவன:

 

ஏழு வகைகளின் விவரம்:

1.வாருண ஸ்நானம்

ஜலத்தில் அமிழ்ந்து தலை முழுகுவது. ஆற்றிலோ, குளத்திலோ, குழாயடியிலோ, கிணற்றடியிலோ தலையில் தண்ணீர் விட்டுக் கொண்டு செய்யும் குளியல் இது.

 

2.பார்த்திவ ஸ்நானம்:

‘ம்ருத்திகே ஹநமே பாபம்’ என்று தொடங்கும் மந்திரத்தால் தேஹம் முழுதும் சுத்தமான மண்ணைப் பூசிக்கொள்வது; அதாவது மண் குளியல். மேல் நாட்டிலும் கூட MUD BATH ‘மட் பாத்’ பிரசித்தம்.

 

3.ஆக்நேயம்:

அக்னிஹோத்ர பஸ்மத்தை ஈசாநம் முதலிய மந்திரங்களால் தேஹத்தில் பூசுவது (அதாவது திரு நீற்றுக் குளியல்)

 

4.வாயவ்யம்:

பசுக்களின் குளம்பு தூள்களை கோ ஸாவித்ரியால் ஜபித்து உடலில் பூசிக்கொள்வது; அதாவது பசுத் தூசி குளியல்; பசு நிற்கும் இடமும் அதன் கால் தூசும் அவ்வளவு புனிதமானது.

5.திவ்ய ஸ்நானம்

உத்தராயண மத்யத்தில் வெயிலுடன் கூட மழை பெய்யும்போது அதில் நனைவது திவ்ய ஸ்நானம் என்று அழைக்கப்படும்.

 

6.மந்த்ர ஸ்நானம்

பிராமணர்கள் தினமும் மூன்று காலங்களில் செய்யும் ஸந்தியாவந்தனத்தில் வரும் ‘ஆபோஹிஸ்டா’ என்ற மந்திரத்தைச் சொல்லி, மந்த்ரத்தின் ஒவ்வொரு பாதத்தால் கால், தலை, மார்பு, தலை, மார்பு, கால்,  மார்பு, கால், தலை என்ற வரிசையில் தீர்த்தத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும். அதாவது இந்த மந்திரங்களால் உடலின் பாகங்களில் நீரைத் தெளித்துக்  கொள்ள  வேண்டும்

 

  1. மாநஸம்

சங்கு சக்ர தாரியாய் சூர்ய மண்டல மத்தியத்தில் தங்க நிறத்தில் பகவான் எழுந்தருளி இருப்பதாகவும் அவர் திருவடி பெரு விரலில் இருந்து கங்கை நதி ப்ரவாஹம் எடுத்து, ப்ரஹ்மரந்த்ரத்தின் வழியாக நம் தேஹத்தில் விழுவதாகவும், அதனால் உள்ளும் புறமும் உள்ள மலம் (அழுக்கு) யாவும் கழிந்து விட்டதாகவும் தியானம் செய்வதே மாநஸம்.

 

இவை தவிர இரண்டு கால்களையும் கைகளையும் முகத்தையும் அலம்புவது பஞ்சாங்க ஸ்நானம் ஆகும்

ஈரத்துணியால் உடம்பு முழுவதையும் துடைத்துக் கொள்வது காபில ஸ்நானம் எனப்படும்

நெற்றிக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் விபூதி அல்லது திருமண் தரிப்பதும் ஒருவகை ஸ்நானம் ஆகும் உடலின் 12 இடங்களில் இந்த அடையாளக் குறி இடுவர்.

நெற்றிக்குத் திலகம் , பொட்டு, திருமண், திருநீறு  இல்லாமல் ஈரத் துணியுடன் செய்வது வேறு காரியங்களாகும்; அதாவது சுப காரியங்கள் அல்ல.

யாரும் ஈரத்துணியுடன் நல்ல காரியங்களைச் செய்யக் கூடாது. குளித்துவிட்டு உலர்ந்த வஸ்த்ரத்தை தரித்துக்கொண்டு (காய்ந்த ஆடையை உடுத்திக்கொண்டு) ஜப, தபங்கள் (தப= தவ) செய்யலாம்.அவரவர் ஆசாரப்படியோ சம்ப்ரதாயப்படியோ நெற்றிக்குத் திலகமிட்டுக்கொண்டு செய்ய வேண்டும்.

 

(காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொன்ன ஐந்து வகை ஸ்நானங்களையும் படிக்கவும்)

 

TAGS:– ஸ்நான வகைகள், குளியல் முறைகள், ஏழு

–Subham–

Amazing Memory of Toscanini! Conductors Anecdotes (Post No.4489)

Compiled by  London Swaminathan 

 

Date: 13 DECEMBER 2017 

 

Time uploaded in London-  11-12 am

 

 

Post No. 4489

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Conductors Anecdotes 

Amazing Memory of Toscanini!

One of the great traditions of contemporary music is the astounding and infallible memory of Arturo Toscanini. One time early in his career, when Toscanini was a cellist, he formed an acquaintance with the violinists Romanini and Enrico Polo, and with Bolzoni ,the composer.

Bolzoni once composed an Adagio which the group performed on a special occasion. More than a year later the two violinists and Toscanini again met but Bolzoni was absent.

What a pity! Someone exclaimed, that Bolzoni has the score. If he had left us a copy we might have had the quartet we liked so much.

Toscanini said, give me a pencil and paper

Whereupon he proceeded to write down all four parts of the Adagio from memory.

ADAGIO:- a piece of music that should be played slowly

Xxx

Never have a Wallenstein in front of you!

The fine conductor, Bruno Walter, is a man of gentle and sensitive temperament. The first time that he conducted the New York philharmonic the noted cellist Alfred Wallenstein, occupied the first cellist’s chair . Walter was annoyed and embarrassed by the fact that Wallenstein ignored him throughout rehearsal and concerts alike, gazing everywhere in the auditorium, except at the conductor, while playing. Where another man might have flown into rage, Walter merely asked that Wallenstein come to speak privately with him.

Tell me Mr Wallenstein, said Walter mildly, what is your ambition?

I should like some day to be a conductor

Well, said Walter gently, I only hope you never have Wallenstein in front of you.

 

Xxx

Reverence, Please

The eminent conductor. Malcolm Sargent, was conducting a Royal Choral Society rehearsal of The Messiah. He was displeased with the women’s section s rendering of For unto Us a child is born. Calling for attention, he begged, Just a little more reverence, please, and not so much astonishment.

 

Xxx

Basil Cameron

When Basil Cameron, the conductor, was starting on his musical career, he looked round for a good name and decided on Von Hindenburg. And a good name it was, up to the beginning of August 1914, when Von Hindenburg quietly disappeared like so many Germans of the period In his case, however, the public was astounded to hear that the brilliant young conductor they had admired was commanding the German army.

 

Xxx

I don’t like Music, Sir

A certain young violinist came to Leopold Stokowski with a very forceful and impressive letter of introduction from an old and respected friend of the notable conductor.

I am very sorry that there is no opening for you now in the orchestra, Stokowski  explained , but it you can stay in Philadelphia for a while, I will be very glad to place you  at the first opportunity.

The chance came little more than a week later, when the second violinist was rushed to the hospital for an appendectomy only a few hours before a concert. Stokowski called the young aspirant and said,

We are playing a Beethoven cycle. Can you manage the second violin in the Seventh and Eighth symphonies?

Eagerly the young man assured him he could. In the opening passages of the Seventh symphony that night the conductor listened sharply for the strains of the second violin and noted that the newcomer seemed to be doing well. Glancing at him, he was shocked to see an expression of great agony and anguish on the violinist’s face.

Heavens, he thought, there must be a curse on the second violin. Will he be able to last out the programme!

As the symphony progressed from movement to movement, the second violinist appeared to writhe and grimace in increasing torture. Stokowski s concern began to change to anger and irritation. At the intermission, seeking to control himself, he went to the musicians dressing room and demanded,

Are you sick?

Why, no, said the young man.

Is there anything paining you?

Not at all.

Then, shouted Stokowski angrily, you must not approve of my conducting.

Oh, sir, said the musician, it is a privilege to play under you.

Then why on earth were you making such outlandish faces?

Oh, that, said the young man,

Well, you see, sir, I just don’t like music.

 

Xxxx SUBHAM xxxx

 

 

சங்கீத சாம்ராஜ்யம்: காசு கொடுத்து ரஸிகர் கூட்டம் சேர்த்த பாகவதர்! (Post No.4488)

 

சங்கீத சாம்ராஜ்யம்: காசு கொடுத்து ரஸிகர் கூட்டம் சேர்த்த பாகவதர்! (Post No.4488)

 

 

Written by London Swaminathan 

 

Date: 13 DECEMBER 2017 

 

Time uploaded in London-  8-51 am

 

 

Post No. 4488

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

புகழ்பெற்ற வயலின் வித்வான் ப்ரிட்ஸ் க்ரைச்ட்லர் (FRITZ KREISTLER) தனது நண்பருடன்  கடைத் தெருவில் நடந்து சென்றார். அங்கே ஒரு மீன் விற்கும் கடை இருந்தது. அதில் வரிசையாக காட் வகை (CODFISH) மீன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மீனும் வாயைப் பிளந்து கொண்டு இமைக்காத கண்களுடன் பார்த்துக்கொன்டிருந்தன.

திடீரென்று க்ரைட்ஸ்லர் தனது நண்பரின் கைகளைப் பிடித்தார். அடடா! நான் கச்சேரி வாசிக்கப் போக வேண்டும் என்பது நினைவுக்கு வந்துவிட்டது! என்றார்.

 

(அவரது ரசிகர்கள் வாயைப் பிளந்து கொண்டு, கண்கொட்டாமல் இசையை ரசிப்பராம்!)

XXXXX

 

மயக்கமா? தயக்கமா?

பிரான்ஸ் லிட்ஸ் (FRANZ LITSZ) என்ற புகழ் பெற்ற பியானோ வாத்தியக் கலைஞர் காசுகொடுத்து ரஸிகர்களை ‘செட் அப்’ பண்ணுவாராம். நல்ல அழகான பெண்களைக் கூட்டிவந்து, இந்தோ பாரு  உனக்கு 25 பிராங்க் (FRANKS) பணம் தருவேன். நான் இந்தப் பாட்டு வாசிக்கும்போது நீ மயக்கம் போட்டு விழுவதாக நடிக்க வேண்டும்; நான் உன்னைக் காப்பாற்றுவதாக நடிப்பேன். ஆனால் யாருக்கும் விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது. சரியா? — என்று சொல்லி அழைத்துவருவார்.

 

அவருக்கு மிகவும் புகழ் ஈட்டித் தந்த கிருதியை வாசிக்கும்போது, பணம் வாங்கிய பெண்மணி தடாலென்ற சப்தத்துடன் மயக்கம் போட்டு விழுவாள்; உடனே மேடையில் இருக்கும்  பிரான்ஸ், திடீரென்று தனது பியானோ ஆசனத்திலிருந்து கீழே குதிப்பார். அந்தப் பெண்மணியை அலாக்காகத் தூக்கிச் சென்று மேடைக்குப்பின் சென்றுவிட்டு வருவார்.

 

உடனே ரஸிகர் அனைவரும் அடடா! என்ன வாசிப்பு! என்ன ரசனை; மயக்கமே போட்டுவிட்டாளே! என்று பேசிக்கொள்வர்.

 

ஒருமுறை இவரது கணக்கு, தப்புக் கணக்காகிவிட்டது; காசு வாங்கிய பெண் மயக்கம்போட்டு விழ மறந்து விட்டாள்! அதை எதிர்பார்த்துக் காத்திருந்த பிரான்ஸ், என்ன செய்வதென்று திகைத்து அவரே மயக்கம்போட்டு விழுந்துவிட்டார்!

XXXX

லண்டன் பெட்டிகோட் லேன் மார்க்கெட் (PETTICOAT LANE MARKET)

(இதைப் படித்தவுடன் எனக்கு எங்கள் லண்டனில் ஞாயிறு தோறும் நடக்கும் ஒரு ஏமாற்று வேலை நினைவுக்கு வருகிறது. லண்டனில் நுற்றாண்டுக் கணக்கில் நடக்கும் சாலை ஓரக் கடைகள் இன்றும் உண்டு. அவர்கள் ஞாயிறுதோறும் ரோட்டில் கடை விரிப்பர். இதில் மிகவும் புகழ்பெற்றது பெட்டிகோட் லேன் எனப்படும், லிவர்பூல் ஸ்ட்ரீட் (LIVERPOOL STREET) மர்க்கெட்டாகும். நான் வெளிநாடுகளில் இருந்து விருந்தினர் வருகையில் அவர்களை அழைத்துச் சென்று காட்டுவேன்; கூட வருபவரிடம் இந்த வேடிக்கை பற்றிச் சொல்லிவிட்டு ஒரு மூலையில் நின்று ஓரக் கண்களால் இதைப் பாருங்கள் என்பேன்.

 

அங்கே ஒருவன் திடீரென்று வந்து துண்டை விரிப்பான். நிறைய பெர்fயூம் பாட்டில்களை (PERFUME BOTTLES) வெளியே அடுக்கிவைப்பான். எல்லாம் பிரபல பிராண்ட் நேம்ஸ் (BRAND NAMES) உடைய சென்ட்கள். ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்! போனால் வாராது; பொழுது விடிஞ்சா கிடைக்காது;  மூடப்பட்ட ஒரு கடையிலிருந்து வந்த  STOCK ஸ்டாக் இவை! இதோ இதைக் கடையில் வாங்கினால் 40 பவுன்; நான் தருகிறேன் 20 பவுனுக்கு; இதைப் பாருங்கள்!! இதைப் போய் கடையில் வாங்கினால் இதன் விலை 30 பவுன்; நான் உங்களுக்கு 15 பவுனுக்கு தருகிறேன் ; இதோ இதைப் பாருங்கள். நீங்கள் AIRPORT DUTY FREE SHOP ஏர்போர்ட் ட்யூட்டி ப்ரீ ஷாப்பில் வாங்குவதில் கால் பங்கு விலைக்குத் தருகிறேன்; போய்விடாதீர்கள்; இனித்தான் முக்கிய ரஹஸியத்தைச் சொல்லப் போகிறேன்; இன்று ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் SPECIAL DISCOUNT ONLY TODAY; அத்தனைக்கும் சேர்த்து 25 பவுன் கொடுங்கள் போதும் என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அங்கு கூடியிருக்கும் பெருங்க் கூட்டத்தில் இருந்து நாலு ஐந்து இளம் வெள்ளைக்கார அழகிகள் ஓ, வாவ்! எனக்கு இரண்டு வேண்டும் என்று 50 பவுன்களை எண்ணிக் கொடுப்பர்; அதற்குள் இன்னொரு பெண்மணி எனக்கும் வேண்டும் என்று காசு கொடுப்பாள்; மூன்றாவது அழகியோ அனைவரையும் விலக்கித் தள்ளிவிட்டு பிரமாதம் எனக்கும் என் நண்பிக்கும் வேண்டும் என்று காசு கொடுப்பாள்.

 

அந்த பெட்டிகோட் லேன் மார்க்கெட்டுக்கு வருவோர் பெரும்பாலும் லண்டனில் ஒரு சில நாட்களே தங்கும் டூரிஸ்டுகள்; அவர்களும் முண்டியடித்துக் கொண்டு முன்னால் போய் ஆளுக்கு ஒன்று வாங்குவர்.

 

ஏற்கனவே வாங்கிய பெண்கள் அனைவரும் ஒரு மூலையில் சென்று ஒளிந்து கொண்டு இருந்துவிட்டு திரும்பிவந்து அவனிடம் பெர்fயூம் பாட்டில்களைத் திருப்பிக் கொடுப்பர். அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் இதே காட்சி துவங்கும்; இவர்கள் கூலிக்கு மாரடிக்கும் அழகிகள்! ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பர்!)

 

XXX

 

 

ஒரு பாகவதரின் சோகம்!

 

உலகப் புகழ்பெற்ற பியானோ கலைஞர் படெரெவ்ஸ்கி (PADEREWSKI) ஒரு நாள் கச்சேரி முடிந்தவுடன் ஸோகம்  ததும்பிய முகத்துடன், மேடைக்குப் பின்னால் போய் அமர்ந்தார். அவருடைய உதவியாளருக்கு மனக் கவலை.

ஐயன்மீர்! உடல்நலம் சரியில்லையா? ஏன் இப்படி முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று வினவினார்.

உடனே படெரெவ்ஸ்கி பதில் கொடுத்தார்?

எனது முக்கிய ரஸிகர்கள் இருவர் இன்று வரவில்லை; அதான் ஒரே கவலை.

அட, இந்த ஊரில் உங்களுக்கு நண்பர்கள் வேறு இருக்கிறார்களா? உங்களுடன் நான் அவர்களை என்றும் பார்த்ததே இல்லை யே என்றார் உதவியாளர்.

 

இது அமெரிக்காவின் தொலைதூர ஒரு ஊரில் நடந்தது.

ஆமாம் எனக்கு இங்கே ரஸிக நண்பர்கள் உண்டு; ஆனால் நானும் அவர்களைச் சந்தித்ததே இல்லையே என்றார்.

உதவியாளருக்கு ஒன்றும் விளங்கவில்லை. நீங்கள் சொல்லுவது ஒன்றும் புரியவில்லையே என்றார்.

உடனே படரெவ்ஸ்கி தொடர்ந்தார்:-

 

20 ஆண்டுக் காலமாக நான் இந்த ஊரில் வந்து வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வசிக்கும்போது இரண்டாவது வரிசையில் அமர்ந்து நரைத்த தலை முடிய ஒரு  தம்பதியினர் என் வாசிப்பை ரஸிப்பர்; அவர்கள் ரஸிக்கும் விதத்தைப் பார்த்து நான் கூட வாசிப்பேன். அவர்கள் உண்மையான ரஸிகர்கள்; இன்று வரவில்லிலையே! ஏதேனும் எசகு பிஸகாக ஆகியிருக்குமோ என்று சொல்லிவிட்டு  பேசாமடந்தையாகிவிட்டார்

 

மேலும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.

 

(ஒரு பாகவதருக்கு ரஸிகர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது இதிலிருந்து புரியும்; நான் லண்டனில் நான்கு சங்கங்கள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் பிரபல வித்துவான் டி.வி.கோபால கிருஷ்ணனின் (SRI T.V.G) இன்னிசையை ஏற்பாடு செய்திருந்தேன்; திடீரென்று ஏற்பாடு செய்ததால் ஒரு 75 பேருக்கும் குறைவாக ரஸிகர் இருந்தனர். கச்சேரி முடிந்தவுடன் எனக்கோ கவலை; கூட்டம் குறைந்ததற்கு ஏதேனும் சப்பைக்கட்டு காரணம், நொண்டிச் சாக்கு சொல்லுவோம் என்று அவரை மெதுவாக அணுகினேன்.

 

நான் பேசுவதற்கு முன் “எனக்கு இன்று ரொம்ப த்ருப்தி; இப்படிப்பட்ட ஆடியன்ஸுக்கு வாசிப்பதுதான் எனக்குப் பிடிக்கும்” என்றார். மேலும் தொடர்ந்து “இது போல அடிக்கடி ஏற்பாடு செய்யுங்கள்; எனக்கு பணம் முக்கியமில்லை; இப்படிப்பட்ட ரஸிகர்கள்தான் வேண்டும்” என்றார்.

 

எனக்கு வியப்பும் சந்தோஷமும் மேலிட்டாலும் இதன் பின்னனி நன்கு விளங்கியது.  லண்டனில் பல அரங்கேற்றங்கள், கச்சேரிகள் நடக்கும். அதில் வரும் பாதிக் கூட்டத்துக்கு சங்கீத ம் என்றால் அரைக் கிலோ என்ன விலை? என்று கேட்பர். அரங்கேற்றம் செய்யும் மாணவ மாணவியரும் மிலிட்டரி ட்றில் MILITARY DRILL போல அந்த ஆறு பாட்டை மட்டும் உருப்போட்டு வைத்திருப்பர்.

 

 

ஏனைய பாட்டுகளுக்கு பொருள் கேட்டாலோ, ‘ராகம் வராகம், தாளம் வேதாளம், க்ருதி ப்ரக்ருதி’ என்பர்; பெற்றோர்களோவெனில் 10,000 பவுண்ட் கடன் வாங்கி அரங்கேற்றம் நடத்திவிட்டு அதன் பொருள் விளங்காப் புதிராக — குதிராக – நிற்பர்.

 

ஆயினும் எனக்கு சந்தோஷமே; அந்த வீட்டுக் குழந்தைகள் காபரே, கூபரே என்று கிளப்புகளுக்கும் பாப் மியூஸிக் கச்சேரிகளுக்கும் போகாமல்,  ஏதோ இரண்டு தியாகராஜ கிருதிகளையும் புரந்தரதாஸர் கீர்த்தனைகளையும் பாடுகிறதே என்று மகிழ்வேன்.

 

‘ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை’ என்ற பழமொழி போல இங்கு யார் வேண்டுமானாலும் எந்த ஸ்கூல் வேண்டுமானாலும் நடத்தலாம். யோகா கற்பிக்கும் முக்கால் வாசிப்பேர் வெள்ளைக்காரர்கள்; ஒரு புத்தர் சிலையோ நடராஜர் சிலையோ வீட்டில் வைத்திருப்பர்!

அவர்களும் வாழ்க!

 

TAGS:- சங்கீத விநோதங்கள், ரஸிகர், காசு, படரெவ்ஸ்கி, மயக்கம் போட்ட, பாடகர் பாகவதர்

 

–SUBHAM–