சிரிப்பு, நகைப்பு பற்றி வள்ளுவரும் காளிதாசரும்! (Post No.3945)

Written by London Swaminathan

 

Date: 27 May 2017

 

Time uploaded in London: 8-16 am

 

Post No. 3945

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

சிரிப்பு, புன்சிரிப்பு — ஆகிய இரண்டும் நல்ல பொருளிலும் ‘நகைப்பு’ என்பது கெட்ட பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இடத்தைப் பொறுத்தே வேறு பாடு வருகிறது.

 

ஒரு பெண் காதல் தொனியில் ‘அவர் என்னைப் பார்த்து சிரித்தார்’ என்று தன் தோழியிடம் சொன்னால் அது பாராட்டுரை.

 

அதே பெண், போலிசிடமோ தனது சகோதரனிடமோ வேறு ‘ஒரு ஆண் தன்னைப் பார்த்துச் சிரித்தான்’ என்றால்– புகார் தோரணையில் சொன்னால் — அது குற்றச்சாட்டு!.

 

‘உன்னைப் பார்த்து ஊரே சிரிக்கும்’ என்றால் அது குறைகூறுதல். ஆனால் ‘சிரிப்பு உடம்புக்கு நல்லது’ என்று டாக்டர் சொன்னால் அது பாராட்டுரை.

 

ஆக நகைப்பும் சிரிப்பும் கூட இடத்துக்கு தக பொருளை மாற்றும் வல்லமை வாய்ந்தது.

 

ஆனால் புன்சிரிப்பு, குறைகளுக்கு அப்பாற்பட்டது. எப்போதும் நற்பொருளைப் பெற்றது.

கிளுகிளு சிரிப்பு, நமட்டுச் சிரிப்பு என்பதன் பொருளோ வேறு. நிற்க.

இடுக்கண் வருங்கால் நகுக!

 

வள்ளுவன் சொல்லுவதைக் கடைப்பிடிப்பது கொஞ்சம் கடினமே. கஷ்டம் வரும்போது சிரியுங்கள் என்கிறார் வள்ளுவர்.

 

யாருக்கு கஷ்டம் வரும்போது? — என்று கேட்கத் தோன்றுகிறது. எனக்கோ என் குடும்பத்தினருக்கோ கஷ்டம் வந்தால் நான் சிரிக்க முடியுமா?

எனது எதிரிக்கு கஷ்டம் வந்தால் வேண்டுமானால் சிரிக்கத்தோன்றும்

 

வீட்டிலோ, வெளியிலோ யாராவது வாழைப்பழத் தோலியில் சறுக்கி விழுந்தால் சிரிப்பு வரும்.

 

பொது மேடையில் யாருக்கேனும் ஆடை நழுவி விழுந்தால் சிரிப்பு வரும். இதே கஷ்டம் நமக்கு வந்தாலும் சிரியுங்கள் என்று வள்ளுவர் செப்புவார். அது அவரைப் போன்ற ரிஷிபுங்கவர், முனி புங்கவருக்குதான் சாத்தியம்

 

சிரிப்பு பற்றி வள்ளுவன் கூறும் குறள்கள் நிறையவே உள்ளன:

 

நக -187, 685, 829, 1173, 999, 824, 621, 784, 774, , 1094, 1095, 817

 

நகப்படுவர் (இகழப்படுவர்) -927, 1140, 271, 1040

 

இவ்வாறு குறைந்தது 16 குறள்களில் சிரிப்பு, நகைப்பு பற்றிப் பாடி இருப்பதால் தமிழர் வாழ்வில் சிரிப்பு எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி இருந்தது என்பது தெரியும்.

 

சம்ஸ்கிருத நாடகங்கள் எல்லாவற்றிலும் (விதூஷகன்) நகைச் சுவை நடிகர் உண்டு. முதல் காட்சியே சூத்ரதாரர் மற்றும் நகைச் சுவை நடிகருடந்தான் தோன்றும்

நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழில் நிறைய நாடகங்கள் வெளியாயின. அவற்றிலும் கூட முதல் காட்சி விதூஷகனுடனேயே துவங்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நாடகம் எழுதிய பாஷா, காளிதாசன், சூத்ரகன் ஆகியோர் எந்த அளவுக்கு நகைச் சுவைக்கு மதிப்பு கொடுத்தனர் என்பதைக் காணும் போது வள்ளுவன் ஏன் இப்படிப் பல குறள்களில் குரல் கொடுத்தான் என்பது தெள்ளிதின் விளங்கும்.

இதோ ஓரிரு உதாரணங்கள்:

 

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்பது இல் (குறள் 621)

 

ஒரு செயலைச் செய்கையில் தடங்கல் ஏற்பட்டால் அதை மனமகிழ்ச்சியுடன் ஏற்க வேண்டும். அந்த மகிழ்ச்சியை விட துன்பத்தை ஒழிக்க  வேறு வழி அல்லது சாதனம் ஏதுமில்லை.

 

இன்னொரு குறளில்,

வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும் (குறள் 271)

 

ஒருவன் ஒழுக்கம் உடையவன் போல பொய்யாக நடித்தால், அவனுள்ளே உறையும் பஞ்ச பூதங்களும் தமக்குள் நகும் (சிரிக்கும்)

 

காளிதாசனில் சிரிப்பும் புன்சிரிப்பும்

 

இனி உலகப் புகழ்பெற்ற காளிதாசன் காவியங்களில் சிரிப்பு பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் காண்போம். அவன் நாடகங்களில் நகைச் சுவை நடிகன் (விதூஷகன்) உண்டு. ஆயினும் சில உவமைகளை மட்டும் காண்போம்:

 

சிரிப்பின் வர்ணம் வெள்ளை; முத்துப் போன்ற பற்களைக் காட்டுவதால் இப்படி வர்ணத்தையும் சிரிப்பையும் தொடர்புபடுத்தி இருக்கலாம். தமிழிலும்கூட வெண்ணகை என்று சொல்லுவதுண்டு.

 

ருது சம்ஹாரம் என்ற காவியத்தில் வரும் பாடலில், வெள்ளை மல்லிகை மலர் நிறைந்த பூந்தோட்டத்தில், அந்த மல்லிகைப் பூக்கள் மலர்ந்து, பூத்துக் குலுங்கியது  பெண்களின் விளையாட்டுச் சிரிப்பு போல இருந்ததாம் (6-23)

 

 

அஜன் என்ற மன்னன் புன் சிரிப்பை நெளியவிட்டபோது, அதன் அழகை அவன் வாய்க்குள் இருந்த பற்கள் அதிகரித்ததாம். இது சிவப்பு நிற இளம் துளிர்கள் மீது பனித்துளிகள் விழுந்தது போல இருந்ததாம். (ரகு வம்சம் 5-70).

 

பனித்துளிகள் = முத்துக்கள் = சிரிப்பு = வெள்ளை நிறம்

ஆனந்தக் கண்ணீர்!

ஒருவருக்கு மகிழ்ச்சி வந்தால் சிரிப்பு அல்லது புன் சிரிப்பு மூலம்தான் வெளியிட வேண்டும் என்பது அவசியமல்ல. ஆனந்தக் கண்ணீர் மூலமும் அதை வெளிப்படுத்தலாம். காளிதாசன் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் பற்றி குறைந்தது இரண்டு இடங்களிலாவது குறிப்பிடுகிறான்

 

சூரியன் உத்தராயண காலமான ஆறு மாதங்களில் வடக்கில் சஞ்சரிப்பதால் பூமியின் வட பகுதியில் கோடை காலம் ஆகும். அப்போது இமய மலையின் பனி உருகி ஆறுகள் பெருக்கு எடுத்தோடும். இது ஒரு இயற்கை நிகழ்வு. தென் திசை அகத்தியனுக்கு உரியது. தென் திசையில் உள்ள அகத்திய நட்சத்திரம் மிகவும் புகழ் பெற்றது. சம்ஸ்கிருத கவிஞர்கள் தென் திசையைக் குறிக்க அகஸ்த்ய நட்சத்திரத்தைப் பயன்படுத்துவர். இதை வைத்து காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் (14-44) சொல்கிறான்:–

“அகஸ்திய திசையிலிருந்து சூரியன் வடதிசை வந்தவுடன் இமயமலை பனித்துளி என்னும் ஆனந்தக் கண்ணீரை வெளிவிடத் துவங்கியது. பிரிந்து சென்ற காதலன் திரும்பி வந்தவுடன், எப்படி அவனது அன்புக்காதலி ஆனந்தக் கண்ணீர் விடுவாளோ அது போல இது இருந்தது.”

 

சாகுந்தலம் என்னும் புகழ் பெற்ற நாடகத்திலும் நாலாவது காட்சியில் சகுந்தலைக்கு பிரியாவிடை கொடுக்கும் கண்வ முனிவர் ஆனந்தக் கண்ணீர்  சொரிவதாக காளிதாசன் இயம்புவான்.

 

ஆக, புன் சிரிப்பு, நகைப்பு, சிரிப்பு,ஆனந்தக் கண்ணீர் என்ற பல வகைகளில் இந்திய இலக்கியம் மகிழ்ச்சியை வெளிக்காட்டுகின்றன.

 

–சுபம்–

 

 

பெங் சுயி உண்மையா, பொய்யா? (Post No.3944)

Written by S NAGARAJAN

 

Date: 27 May 2017

 

Time uploaded in London:-  5-16 am

 

 

Post No.3944

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

பெங் சுயி உண்மையா, பொய்யா? உண்மை என்றால் நிரூபணம் என்ன?

 

ச.நாகராஜன்

 

பெங் சுயி என்பது சீன வாஸ்து சாஸ்திரம். பெங் என்றால் காற்று; சுயி என்றால் நீர். பெங் சுயி சாஸ்திரம் குறைந்த பட்சம் 5000 ஆண்டுகள் பழமையானது.

ஆற்றலை எப்படி வழிப்படுத்தி பாயச் செய்து நமக்கு நல்லனவற்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதைச் சொல்வதே பெங் சுயி!

சரி, இது உண்மையா, பொய்யார்? உண்மை என்றால் அதற்கு ஏதாவ்து நிரூபணம் இருக்கிறதா?

ஒரு உண்மை சம்பவத்தைப் பார்க்கலாம்.

மேலை நாடுகளில் கடந்த 16 வருடங்களாக பெங் சுயி மீது அபார மோகம் ஏற்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் பெங் சுயி.

 

     ஹான்ஸ் ஸ்னூக் என்பவர் பிரபல் ஆரஞ்சு நிறுவனத்தின் உரிமையாளர். இங்கிலாந்தில் பிறந்தவர். படிப்பை முடிக்க முடியாமல் பல்கலைக் கழகத்திலிருந்து பாதியில் வெளியேறியவர்.

     கனடா சென்று அங்கு ஹோட்டலில் பணியாற்ற ஆரம்பித்தார். பின்னர் ஹாங்காங் சென்று அங்கு டெலிகாம் கம்பெனி ஒன்றில் பணியாற்றி தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டார். 1994இல் இங்கிலாந்திற்குத் திரும்பிய அவர் ஒரு மொபைல் கம்பெனியை ஆரம்பித்தார்.

    அந்த வியாபாரத்திலோ கடும் போட்டி நிலவியது. வணிகத்தில் வெற்றி பெற பெங் சுயி நிபுணர் ஒருவரை நாடினார்.

 

அபார வெற்றி!

     அவருக்கு பெங் சுயியின்  மீது நம்பிக்கை இல்லை. ஆனால் முடிவுகள் அவர் நம்பிக்கையைப் பொய்யாக்கும் வண்ணம் இருந்தன.

    பெங் சுயி மாஸ்டர் சொன்னதை எல்லாம் செய்தார். 12 மாதங்களில் உங்கள் கம்பெனி அமோகமாக வளரும் என்று அவர் சொன்னது அப்படியே பலித்தது. ஏராளமான பணம் சேர்ந்தது. தனது கம்பெனியை பல மில்லியன் பவுண்டுக்கு விற்றார்.

இதே போல உலகெங்கும் உள்ள வணிகர்கள் பெங் சுயி வழிப்படி வெற்றி பெறுகின்றனர்.

   உதாரணமாக சென்னை உள்ளிட்ட உலகப் பெரும் நகரங்களில் பெரும் நிறுவனங்கள் மற்றும் மால்களுக்கு முன்னால் நீரூற்று, அரவானா மீன் உள்ள தொட்டிகள், சிறிய நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட பல பெங் சுயி வழிமுறைகளைக் காணலாம்.

    மைஹோட்டல் கம்பெனி என்ற ஒரு பெரும் தொடர் ஹோட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்ட்ரூ த்ராஸிவோலூ. அவர் ஒரு பெரிய கட்டிடக் கலை நிபுணர்.

லண்டனில் தனது பெரிய ஹோட்டல் பெங் சுயி முறைப்படி இல்லை என்பதால் அதை பெங் சுயி படி மாற்றி அமைத்தார்.       

 

    76 அறைகள் கொண்ட ஹோட்டலில் வாயிலுக்கு முன்னால் இருந்த மாடிப்படியை இடித்து வேறு இடத்தில் ஆற்றலின் போக்கு பாஸிடிவாக அமையும் படி அமைத்தார். கூர்மையான கைப்பிடிகளின் முனைகள் மாற்றப்பட்டு உருண்டையாக மாற்றப்பட்ட்ன. காஷ் ரெஜிஸ்டரின் முன்னால் அதிர்ஷ்டத்தை அழைக்கும் ஒரு மீன் தொட்டி வைக்கப்பட்டது.

இப்படியாக பணத்தைக் கொட்டி அனைத்து மாறுதல்களையும் செய்தார். விளைவு, அவரது வணிகம் அமோகமாக வளர்ந்து வெற்றியைத் தந்தது. இப்படி ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.

      இப்போது ஒரு கட்டிடக்கலை நிபுணருடன் ஒரு பெங் சுயி நிபுணரையும் சேர்த்து வேலைக்கு அமர்த்துவது பெரிய நிறுவனங்களின் பேஷனாக ஆகி விட்டது. எதற்காக கட்டிடத்தை இடிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே பெங் சுயி படி அமைத்து விடலாமே, அதற்காகத் தான்!

     ஹிந்து சாஸ்திரங்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படியே அனைத்து கட்டிடங்களும் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. மயன் அமைத்த சாஸ்திரமே நமது வழி.

இத்துடன் பெங் சுயியையும் சேர்த்து இரட்டை வெற்றியை அனைவரும் அடையத் தொடங்கி விட்டனர்.

     ஸ்விட்சை போட்டால் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் மின்சக்தி பாய்ந்து பல்ப் எரிகிறது. அது போலவே நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெங் சுயியின் ஆற்றல் பாய்ச்சல் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும், வெற்றியையும் தருகிறது.

     பெங் சுயி மற்றும் வாஸ்து வழி முறைகள் சுலபமானவை; அவ்வளவாக செலவில்லாதவை!

     முயன்று பார்த்து கடைப்பிடித்தால் முன்னேறலாமே!

****

30 Beautiful Quotations from the Yajur Veda! (Post No.3943)

30 Beautiful Quotations from the Yajur Veda! (Post No.3943)

 

Compiled by London Swaminathan

 

Date: 26 May 2017

 

Time uploaded in London: 8-44 am

 

Post No. 3943

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

June 2017 ‘Good Thoughts’ Calendar

 

Festival/ Holidays: June 7-Vaikasi Visakam in Skanda Temples in Tamil Nadu, 9- Saint Kabir Jayanti, 25- Puri Rath Yatra,  26-Ramadan, 30- Ani Thirumanjanam (Uththiram) in Nataraja temples in Tamil Nadu

Auspicious days: June 1, 4, 14, 16, 19, 26, 28, 30.

Full Moon day -June 9, New Moon Day- 23, Ekadasi days -4, 20

TS= TAITTIRIYA SAMHITA

 

June 1 Thursday

Verily the priests are angels – TS 1-7-3-2

 

June 2 Friday

Like a cucumber from its stem, may I be loosened from death, not from immortality -TS 1-8-6-9

 

June 3 Saturday

May I go along an unbroken web of life  TS 1-2-3-12

 

June 4 Sunday

People should not Enquire about the caste of a truly learned man – Kathaka Samhita/YV 30-1

It is also in Manu Niti and Purananuru of Tamil sanagam

 

June 5 Monday

This is your king, O Bharatas! Soma is the king of us, Brahmins – Yajur Veda/TS 1-8-10-2

 

June 6 Tuesday

The wife is half of a person’s self (husband) – TS 6-1-8-5

 

June 7 Wednesday

The gods said of these two (the Asvins), impure are they wandering among men, and physicians . Therfore a Brahmin should not practise medicine, for the physician is impure, unfit for sacrifice TS-6-4-9-1/2

 

June 8 Thursday

One should not give to one who sings- TS 6-1-7-2

 

June 9 Friday

 

A prince who has a Brahmin is superior to another prince- TS 6-1-10-3

It is also in Tiruk Kural: Minister is a must for a king; in those days only Brahmins were ministers

 

June 10 Saturday

Man is of a hundred years of age and of a hundred fold of strength; verily they find support in age and strength TS 7-9-5-2

 

June 11 Sunday

The minds of some creatures are set on energy, those of others are on rest; therefore, the active lords it over him who takes his ease -TS 6-2-1-7

 

June 12 Monday

He that has a cart and he that has a chariot are of guests the most honoured – 7-4-4-2

 

 

June 13 Tuesday

Gruel is the food of the Kshnatriya nobility, curd of the Vaisya and milk of the Brahmin. Manu was in the habit of taking a drink three times a day, the Asuras twice, the gods once -TS 6-2-5-3

 

June 14 Wednesday

Homage (Namah) to the gods. Svadha to the ancestors (pitrs) -TS 6-3-10-5

 

June 15 Thursday

At birth a Brahmin has three debts- that to the seers he pays back by being a pupil (i.e. by studying the Vedas), to the gods by offering sacrifices and to the fathers /ancestors by raising a family – 6-3-10-5

It is also in Purananuru and Tirukkural of Tamil Literature

 

June 16 Friday

Not by bread alone:

Viraaj dividing itself stayed among the Gods with the holy power (brahman) among the Asuras with food- TS 6-8-2-3

 

June 17 Saturday

Men do not give up even one worthy of death because the gods once gave shelter to Adityas, they were not betrayed to Rudra who was chasing them – TS 5-6-2-3 (mere pursuit of food was regarded unworthy)

 

June 18 Sunday

As I have created you by penance so seek ye offspring through penance TS. 7-1-5-2

 

June 19 Monday

He (the priest) muttering the yaajyaas is like one who has found rich treasure and hides it TS 1-5-2-3

 

June 20 Tuesday

What the gods could not win by sacrifice, that they won by the para grahas ( a particular serving of libation is called para graha)- TS 3-3-6-1

 

June 21 Wednesday

Taking the strength of the metres I shall bestow it upon you – TS 3-6-3-7/1

 

June 22 Thursday

With thy tusks the burglars

With thy teeth the robbers

With thy jaws the thieves, o blessed one (Agni)

Do thou chew the well-chewed TS 4-1-10-6

 

June 23 Friday

 

Let the God Savitr purify you with a whole sieve and with the sun’s rays win thee, O Lord of the path. As a chariot to win the prize we have yoked thee for the our prayer, O Pusan – TS 1-1-14-5

 

June 24 Saturday

This body which is mine is in you

That body which is yours is in me (oft repeated formula in Yajur Veda)

 

June 25 Sunday

Protect me when in want

Protect me when afflicted – TS 4-1-3-13

 

June 26 Monday

Agni with one syllable won speech;

The Asvins with two  syllables won expiration and inspiration

Vishnu with three….. Three worlds

Soma with for………….. the four footed cattle

Pusan with five……….. Pankti;

Prajapati with seventeen….. the seventeen-fold stoma TS

 

June 27 Tuesday

The Asuras drove the gods to the south,

the gods repelled them by the Upasaya post

All the other posts have victims

The Upasaya has none, its victim is the sacrifice … TS 6-6-4-3/4

 

June 28 Wednesday

Seven, O Agni, are your faggots

Seven tongues, seven sages, seven dear stations, seven hotr priests offer to you in seven different ways – TS15-3-8

 

June 29 Thursday

The swan seated in purity, the bright one seated in the atmosphere, the hotr seated in the firmament. Born of the waters, of the cows, of holy order, of the mountain, the great holy order- TS 1-8-15-12

 

June 30 Friday

The hotr mounts a swing; verily they mount back of the firmament, the adhvaryu mounts two mats, verily they reach the surface of the ruddy one. They raise loud noise…play on the lute….run a race…. beat the erath…..Two strive on a dry hide, one rivals, the other extols, girls dance aroud the Marjalya fire with water pots on their heads singing. This is honey (TS 7-5-8-5/9)-(Games and Sports during Vedic Era)

   

–Subham–

 

 

 

 

ஸ்ரீ அரவிந்த தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி – 2 (Post No.3942)

Written by S NAGARAJAN

 

Date: 26 May 2017

 

Time uploaded in London:-  5-58 am

 

 

Post No.3942

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

பாரதி இயல் 

பாரதி அன்பர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய நூல்!

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 31 -2

 

ஸ்ரீ அரவிந்த தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி – 2

 

அமுதனாரின் வார்த்தைகளில் அவரது நினைவு அஞ்சலி தொடர்கிறது .. ..

 

  பாரதியார் வீட்டிலோ அல்லது மடுக்கரை ஏரி முதலிய இடங்களிலோ பந்தி போஜனம் நடக்கும் போது எவ்வித வித்தியாசமும் இல்லாது பறையன், பள்ளி, பார்ப்பனன் என்று சொல்லப்படும் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். இது இன்று சகஜமாகத் தோன்றலாம். அன்றோ எங்களில் பலர் இப்படி நடந்ததை வீட்டில் சொல்லவே மாட்டோம்.

***

 சில சில வேளைகளில் பாரதியார் சக்தி உபாஸனை பற்றி ஸ்ரீ அரவிந்தரிடம் கேட்டதாகச் சொல்லுவார்.

***

‘ஆர்யா’ பத்திரிகை வெளி வரப் போவதைப் பற்றி புதுவையில் அப்போதிருந்து வந்த தமிழ்க்கவி பாரதியார், அவர் நண்பர்கள் முதலியோரிடையே கனத்த  பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஒரு நவயுகம் உதயமாகப் போவதாகவும், அதுவும், முக்கியமாக மனித வர்க்கத்துக்கே அந்த நவயுகம் எனவும், அதற்கு ரிஷி ஸ்ரீ அரவிந்தர் என்றும் வதந்தி அந்நாளில் உலவியது. அவ்வதந்திக்கு மூல புருஷர் பாரதியார் தான்.

*** 

சுப்பிரமணிய பாரதியார் மகாத்மா காந்தியைத் தான் பார்க்கப் போவதாகவும் என்னைத் தன்னுடன் வரும்படியும் அழைத்தார். அந்த சமயம் வ.ரா.,ஸ்ரீ இராஜகோபலாச்சாரியார் இல்லத்தில் வாஸம். 1919ஆம் ஆண்டு . மாதம், தேதி நினைவில்லை….

மகாத்மா காந்தியைப் பார்க்க மக்கள் திரள் திரளாய் வந்து  கொண்டிருந்தார்கள். பாரதியாருடன் நானும் அங்கு வந்து சேர்ந்தேன். வேலியால் சூழப்பட்ட ஒரு பெரிய தோட்டத்தின் நடுவில் அழகான பங்களாவில் பிரவேசித்த் போது வெளியில் ஒருவர் பாதரட்சைக்கு மெருகு கொடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர அணுகி பாரதியார் வ்ந்திருக்கும் கருத்தைத் தெரிவித்தேன்.

அவர் தலை நிமிர்ந்து என்னைக் கண்டதும் உள்ளம் பூரித்து கையிலிருந்த செருப்பு முதலியவற்றைப் போட்டு விட்டு என்னை வாரி அணைத்துக் கொண்டார். அது சமயம் சிறிது தொலைவில் வாசலுக்கருகில் பின்புறத்தில் பாரதியார் நின்று கொண்டு நான் கொண்டு வரும் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.என்னை உபயகுசலங்கள் விசாரித்து விட்டு, ‘என்னை தர்மசங்கடத்தில் கொண்டு சேர்த்து விட்டாய். காந்திஜியைப் பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல. முதலில் ராஜாஜியிடம் தெரிவிக்க வேண்டும்.பிறகு அவர் காந்திஜியைக் கேட்டு நாள் குறிப்பிடுவார். இது நடக்கக் கூடிய காரியமல்ல’ எனச் சொல்லி முடித்தார்.

இந்த பதிலை பாரதியாரிடம் தெரிவிக்க தைரியம் இல்லாததினால், “நீங்களே வந்து பாரதியாரிடம் விஷயத்தைத் தெரிவித்து விடலாமே” என்று சொன்னேன். வாசலுக்கருகில் பின்புறத்தில் நின்று கொண்டிருக்கும் பாரதியரை வணங்கி விட்டு, வ.ரா. சொல்லுகிறார் : ”உள்ளே வந்து அமருங்கள். இராஜகோபாலாச்சாரியார் இது வேளை ஸ்நாநதிகளை முடித்திருப்பார். நீங்களே அவரிடம் வந்து காரியத்தை நேரில் தெரிவிக்கலாம்” என்றார்.

பாரதியார், “நான் தெய்வ ஆக்ஞை பெற்று காந்திஜியைக் காண வந்திருக்கிறேன். அவரை உட்னே பார்க்க வேண்டும்” என்று கூறவே கூடத்தில் அமர்ந்திருந்த பாரதியார் சொன்னதைக் கேட்ட இராஜகோபாலாச்சாரி கேட்டு பிரமித்து ஒரு சிறிது தயங்கி, பிறகு, “இதோ  பதில் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே காந்திஜியைக் காணச் சென்றார்.

பாரதியார் காந்திஜியைப் பார்த்துத் திரும்பியது இரண்டு நிமிடம் கூட இருக்காது. பங்களாவில் அரைக் கணம் கூடத் தங்காது வ.ரா.விடம் விடையும் பெறாது என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே பங்களாவை விட்டு வெளீயே பறந்து விட்டார் பாரதியார், வில்லை விட்டுக் கிளம்பிய அம்பைப் போல.

காந்திஜியுடன் என்ன நடந்தது என்று எனக்குச் சொல்ல யாருமே இல்லை. என்னென்னவோ வதந்தியெல்லாம் கிளம்பியது. அவ்வளவு தான்.

**

அமுதனின் இந்த வரலாற்றுக் குறிப்பில் மகாத்மா காந்திஜியை பாரதியார் சந்தித்த போது என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள  முடியாவிட்டாலும் வ.ரா. அவர்கள் எழுதிய பாரதியார் சரித்திரத்தில் அதைக் காண முடிகிறது.

இந்தத் தொடரில் வ.ரா.வின் நூலைப் பற்றிய கட்டுரை முன்பே வெளி வந்துள்ளது அதில் இதைக் காணலாம்.

அடுத்து அமுதனாரின் குடுமி பற்றிய விஷயம்.

அவர் அரவிந்த ஆசிரமத்தில் தங்கி இருந்த போது ஒரு நாள் இரவு அவரது குடுமி பற்றிப் பேச்சு வந்தது.

மறு நாள் எழுந்து பார்த்த போது அமுதனின் குடுமியைக் காணோம்.

அதைப் பற்றி அவரது வார்த்தைகளில் கூறி இருப்பதைக் காண்போம்  :-

“தற்போடைய நிலைக்கு அநுதாபம் காட்டக் கூடியவர் பாரதியார் ஒருவர் தான் என்று எண்ணி அவரிடம் சென்றேன். விஷயத்தையெல்லாம் கேட்டு விட்டு,”வெளியே வர உனக்குத் தைரியமுண்டா? உண்டானால் இப்போதிருந்தே என்னோடிருந்து விடு” என் கலங்கிக் குழம்பிய நெஞ்சுக்கு அமைதி தராது அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார். …..

ஸ்ரீ அரவிந்தர் தான் என் சிகையை எடுத்து விட ஆக்ஞாபித்ததாக பிறகு கேள்விப்பட்டேன்.

                       *

நூலின் இறுதி அத்தியாயத்தில் அமுதன் அவர்கள் புதுவை வானொலி நிலையத்தில் 11-12-1966 அன்று பாரதியார் பற்றி ஆற்றிய உரை இடம் பெற்றுள்ளது.

இந்த உரையை முன்பே இந்தத் தொடரில் விவரித்திருக்கிறோம்.

**                                                                                                                                                       

123 பக்கங்கள் கொண்ட இந்த நூலை பாரதி அன்பர்கள் அனைவரும் வாங்கிப் படிக்கலாம்.

அரவிந்த ஆசிரமத்தில் உள்ளவர்கள் இன்றும் கூட அமுதனாரின் வழியில் அற்புதமாகத் தொண்டாற்றி வருவதை என் அனுபவத்தில் நான் கண்டுள்ளேன்.

சில மாதங்களுக்கு முன்னர் பாரதியார் பற்றிய ஒரு குறிப்புக்காக ஆசிரமத்தை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டேன். மறு நாள் ஆச்சரியப்ப்டும் விதத்தில் பங்களூருவில் இருக்கும் எனக்கு புதுவை ஆசிரமத்திலிருந்து போன் வந்தது. அதில் விவரமாக பதிலைச் சொன்ன ஆசிரம அன்பர் அது சம்பந்தமான ஆவணம் எங்கிருக்கிறது என்பதையும் விளக்கினார்.

இது போன்ற தொடர்களை ஆதாரத்துடன் எழுத இப்படிப்பட்ட அன்பர்கள் குழு இல்லையேல் எதுவும் சாத்தியமில்லை.

அந்த அன்பருக்கு இங்கு இந்தக் கட்டுரை மூலம் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                     -தொடரும்

 

 

 

 

நண்பர்கள் பற்றி காளிதாசனும் வள்ளுவனும் (Post No.3941)

Written by London Swaminathan

 

Date: 25 May 2017

 

Time uploaded in London: 18-06

 

Post No. 3941

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

நட்புறவு பற்றிப் பேசுவது வள்ளுவனுக்கு மிகவும் பிடித்த விஷயம்.  சுமார் 70, 80 குறள்களில் நல்லவர் தொடர்பு, பெரியோர் நட்பு, தீயோர் நட்பு என்று பல தலைப்புகளில் பொழிந்து தள்ளிவிட்டார். இதற்கு இணையான அளவுக்கு நட்புறவு பற்றி பஞ்ச தந்திரக் கதைகளில் சம்ஸ்கிருதத்தில் ஸ்லோகங்கள் உள்ளன. காளிதாசன் ஒரு சில உவமைகளை நட்புறவுக்கு ஒதுக்கினாலும் அவை எல்லாம் அருமையான உவமைக ளாக உள்ளன. வள்ளுவனையும் காளிதாசனையும் ஒப்பிடுவது சாலப் பொருந்தும்.

 

காளிதாசனுடைய புகழ்பெற்ற ஏழு நூல்களில் ஒன்று ருது சம்ஹாரம். இதில் ஆறு பருவங்களில் என்ன என்ன நிகழ்கிறது என்று வருணிக்கிறான். வேதத்தில் ஆறு பருவங்கள்

இருப்பதையும் அதை சங்கத் தமிழ் நூல்கள் அப்படியே கூறுவதையும் முன்னொரு ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்துள்ளேன். கோடைப் பருவத்தில் என்ன நடக்கிறது என்பதை ருது சம்ஹாரம் நூலில் வருணிக்கும் காளிதாசன் பின்வருமாறு சொல்லுவான்:

 

உடலைத் தகிக்க வைக்கும் கடும் கோடைச் சூட்டில், காட்டு  யானைகளும்,  காட்டு எருமைகளும், சிங்கங்களும், அவற்றின் இயற்கையான பகைமையை விட்டுவிட்டு தீப்பற்றி எரியும் புல்வெளிகளில் இருந்து வெளியே ஓடிவந்து நண்பர்கள் போல ஒரு கூட்டமாக நிற்கின்றனவாம்.

 

எங்கே? சலசலத்து ஓடும் ஆற்றின் கரைகளில்! (ருது சம்ஹாரம் 1-27)

 

முனிவர்கள் வசிக்கும் இடங்களிலும் நியாயமான அரசு நடத்தும் மன்னர்களின் நாட்டிலும் “புலிப்போத்தும் புல்வாயும் (மான்) ஒருதுறையில் நீருண்ணும்” என்பதை நாம் கம்பன், காளிதாசனில் படித்தோம். இங்கோ காட்டூத்தீ, கோடை வெப்பம் என்னும் பகைவனுக்கு எதிராக காட்டு விலங்குகள் கூட்டணி அமைத்த காட்சியைக் காண்கிறோம்.

இது உண்மையும் கூட! டெலிவிஷன்களில் வரும் இயற்கை பற்றிய டாகுமெண்டரிகளைப் பார்த்தவர்களுக்கு இது இன்னும் நன்றாக விளங்கும். காட்டுத் தீ, பெரிய வெள்ளம், வறண்ட கோடை ஆகிய காலங்களில் காட்டு விலங்குகள் ஒன்றை ஒன்று தாக்குவதை நிறுத்திவிட்டு அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதையே பாராட்டுகின்றன.

 

தீய நண்பனை உதறிவிட்டு எப்படி ஓட வேண்டும் என்று காளிதாசன் சொல்கிறான்:

பாம்பு கடித்த விரலை — விஷம் பாய்ந்த விரலை — எப்படி வெட்டித் தூக்கிப் போடுகிறோமோ அப்படி தீய நண்பர்களைத் தூக்கி எறியுங்கள் .ஆனால் ஒரு நல்லவன், நமக்கு நண்பனாக இல்லாவிடிலும் அவனை மருந்து போல ஏற்கவேண்டும். எப்படிக் கசப்பான மருந்து ஒரு நோயாளிக்குப் பிடிக்காவிடிலும் கொடுக்கிறோமோ அப்படி நல்லவன் ஒருவன் நம்மைப் பாராமுகமாக இருந்தாலும் அவனை வலிய ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது காளிதாசனின் புத்திமதி (ரகு வம்சம் 1-28)

 

இதை வள்ளுவன் சொல்லுவதோடு ஒப்பிடுவோம்:-

தீயவனாக இருந்தால், நண்பனை பாம்பு கடித்த விஷ விரலை வெட்டி எறிவது போல எறி என்றான் காளிதாசன். நல்ல நண்பனாக இருந்தால் எல்லோருக்கும் முன்னிலையில் ஆடை நழுவி விழுந்தால் கண் இமைக்கும் நேரத்தில் நம் கைகள் எப்படி ஆடையைப் பிடித்து நிறுத்தி நம் மானத்தைக் காப்பாற்றுகிறதோ அப்படி காப்பாற்றுபவனே – ஆபத்து வரும் நேரத்தில் – அப்படிக் காப்பற்றுபவனே நண்பன் என்பான் வள்ளுவன்.

 

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே

இடுக்கண்  களைவதாம் நட்பு (குறள் 788)

 

இரண்டு உவமைகளிலும் உள்ள விரைவு – வேகம்– நம்மை வியக்க வைக்கிறது. விரலை வெட்டி எறிவதையும் விஷம் பரவும் முன்னே செய்ய வேண்டும். நழுவிய ஆடையை மானம் போவதற்குள் பிடிக்க வேண்டும்!

 

இன்னொரு குறளில் தீய நன்பர்களைத் திருடர்களுக்கும் விலைமாதர்களுக்கும் ஒப்பிடுவான் வள்ளுவன்:-

உறுவது சீர்தூக்கும் நட்பும்  பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர் (குறள் 813)

 

தமக்கு என்ன கிடைக்கும் என்று நட்பினை அளந்து பார்ப்பவனும், பொருட்பெண்டிரும் (விலைமாதர்), திருடர்களும் சமம்!

 

இரண்டு கவிஞர்களும் தரும் உவமைகளில் உள்ள வேகமும் அழுத்தமும் நன்கு ரசித்து, ருசித்து, அசைபோட்டுப் படிக்க வேண்டிய விஷயம்!

–subham–

Society anecdotes (Post No.3940)

 

Lord Balfour (former Prime Minister of United Kingdom)

Compiled by London Swaminathan

 

Date: 25 May 2017

 

Time uploaded in London: 6-18 am

 

Post No. 3940

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

Disappointing Lord!

 

Lord Balfour was visiting friends in Scotland. One evening, while attending a dinner given in his honour, he noticed that the little daughter of his host was eyeing him covertly. He smiled to her and she, plucking up courage asked him,

“Are you really and truly an English Lord?”

“Yes, he answered gravely, really, truly”.

“I have often thought I should like to see an English Lord”

She went on and….and

“And now you aware satisfied”, he asked her.

“N……. no she answered slowly, I am not satisfied.I am a good deal disappointed”.

 

Xxxx

 

Young Bible, but not Lettered!

At a fashionable salon in London appeared , a young gentleman, the son of His Majesty’s printer who had the patent to print the Bibles. He was dressed in green and gold. Being a new face and extremely elegant, he attracted the attention of the whole company. A general murmur prevailed in the room, to learn who he was.

 

Colley Ciber, the outrageous wit, who was present, instantly made reply, loud enough to be heard by everybody:

“Oh don’t you know him?

It is young Bible, bound in calf and gilt, but not lettered”.

xxx

More Introduction Anecdotes

W Wilson (former President of America)

Woodrow Wilson’s Rejoinder!

When Woodrow Wilson was president of Princeton he was called upon to be the chief speaker at an educators banquet in New York . Dr Nicholas Murray Butler of Columbia was toast master. When the time came to introduce the principal speaker, Dr butler presented him as “A sleepy man from a sleepy little college in a sleepy little town”.

Wilson rose and opened his remarks by saying,

“The charge of sleepiness could never be brought against Dr Butler for is it not said in the scriptures,

Lo, he that keepeth Israel shall neither slumber nor sleep.”

 

Xxx

 

Unbroken Blemish!

At a banquet in Dublin a toast master was delivering a eulogy of Sir Henry Irving

“Sir Henry”, he said, “is not only the artist of the first rank, the first of his profession to be honoured with a knighthood, but is also a man of utmost integrity and highest honour. It would not be too much to say that his has been a life of unbroken blemish”.

 

–SUBHAM–

 

 

சில முக்கிய குறிப்புகள் – விதி விளக்கம் – 6 (Post No.3939)

Written by S NAGARAJAN

 

Date: 25 May 2017

 

Time uploaded in London:-  5-38 am

 

 

Post No.3939

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

ஜோதிடமே துணையாகும்

மிட்டா முனிசாமி செட்டி (1897)யின் விதி விளக்கம் நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டு தரப்படுகிறது. நூலின் பகுதிகள் படிப்பதற்கு ஏதுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

 

முதல் 5 அத்தியாயங்களைப் படித்து விட்டு இதைத் தொடரவும் 

1934ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டுள்ள் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

 

 

சில முக்கிய குறிப்புகள் – விதி விளக்கம் – 6

ச.நாகராஜன்

 

  1. சில முக்கிய குறிப்புகள்

 

      விதி விளக்கம் என்ற நீண்ட நூலில் சில  முக்கியமான சுவையான பகுதிகளை மட்டும் பார்த்தோம். ஜோதிட சாஸ்திரத்தில் நிபுணத்துவம் இல்லாதவர்கள் கூடப் புரிந்து கொள்ளக் கூடிய அடிப்படையான விஷயங்கள் இவை.

 ஜோதிடத்தில் புலமை பெற்றவர்களுக்காக திரு முனிசாமி செட்டி நிறைய குறிப்புகளை நூல் முழுவதும் தருகிறார்.

 

 

     அவற்றை இந்தத் தொடரில் தருவது நமது நோக்கமல்ல.

ஜோதிடத்தில் மிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்தப் புத்தகத்தை – இலவசமாக- பெற விரும்பினால் திரு சுவாமிநாதன், www.tamilandvedas.com  அவர்களை அணுகவும். மின்னணு முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட நூலான இது மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். (நூலின் பக்கங்கள் 112)

 

 

    பொதுவான சில முக்கிய குறிப்புகளைத் தந்து இந்தத் தொடரை இத்துடன் முடிக்கிறோம்.

  • நம் முன்னோர்கள் சாஸ்திரங்களில் வள்ர்பிறைச் சந்திரன் யோகத்தை வளர்ப்பிக்கிறான் என்றும் தேய்பிறைச் சந்திரன் யோகத்தை வர வர மட்டுப்படுத்துகிறான் என்றும் போதிக்கின்றார்கள். ஆனால் அனுபவரீதியில் பார்க்கும் போது தேய்பிறையில் கூட அரசன் ஜனிக்கிறான், வியாபாரிகளும், பணக்காரர்களும், ம்ஹா பண்டிதர்களும் கூட தேய்பிறையில் பிறந்து நல்ல சுக போக பாக்கியத்தை அனுபவிக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.ம்ஹாத்மா காந்தியும் கூட தேய்பிறையில் பிற்ந்திருப்பதாகத்தான் தெரிகின்றது. ஆகவே கெட்டபலனைக் கொடுக்க தேய்பிறை ஜனனம், சனீஸ்வரர் என்று பொதுவாகக் கூறுவது தவறு. நல்ல பலனைக்கொடுக்க குரு மற்றும் சுக்கிர பகவான் என்பதும் வளர் பிறை ஜனனம் என்று பொதுவாகக் கூறுவதும் தவ்று.

 

  • நம் வாழ்க்கையில் நமக்கு இய்ற்கையாக அமைந்துள்ள கெட்ட பலனிலிருந்து அதை நீக்க சில அனுஷ்டானங்களைச் செய்து நமது இஷ்டம் பூர்த்தி பெறச் செய்யலாம்.
  • சிருஷ்டியின் அற்புதம் இது தான் :- ஸ்தூலமாக இது கெட்டதென்றும், இது தான் ஸ்தூலமாக நல்லதென்றும் கிடையவே கிடையாது. நாம், நம் புத்திக்கும் வீரியத்திற்கும், நம் நிலைமைக்கும், நமக்குள்ள துணைக்கருவி முதலிய உப பலன்களால், ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற மட்டும் முயற்சி செய்து அபீஷ்ட பிராப்தி (நினைத்ததை அடைதல்) அடைய மார்க்கமுண்டு. இதுவே சிருஷ்டியின் உண்மையான தத்துவம். இதுவே விதி விளக்கத்தின் கருத்து.

 

  • யோகத்தை எடுத்துக் கொண்டால், வராஹமிஹிரர் பிருஹத்ஜாதகத்தில் யோகத்தினால் ரோக நிவாரணம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் எந்த யோகத்தில் பிறந்தவனுக்கு எந்த யோக அனுஷ்டானத்தினால் இவ்வித பலன் கிடைக்கும் என்று சொல்லவில்லை.
  • கரணத்தை எடுத்துக் கொள்வோம். கரணத்தினால் காரிய சித்தி உண்டாகுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் விவரமாக இந்த ஜாதகன் இந்த வித கரணத்தில் இந்த விதமாக அனுஷ்டானத்தில் ஈடுபடவேண்டுமென்றும் அப்படிப்பட்ட அனுஷ்டானத்தினால் காரிய சித்தி உண்டாகும் என்றும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. இது ஆய்வுக்குரிய விஷயம்.

 

  • 27 நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் ஜனன காலத்திலிருந்தே மிகக் கொடிய பலனைத் தரும். அப்படிப்பட்ட நட்சத்திரத்தில் யோகவான் பிறந்தாலும் ஆயுளின் பிற்பாகத்தில் கஷ்டப்பட்டே தீர வேண்டும். அவை கீழ்வருமாறு. இது பொதுவான விதி:
  • அசுவதி 2) மகம் 3) மூலம் 4) கேட்டை – இந்த நான்கு நட்சத்திரங்களுடன் சந்திரனுக்கு க்ஷீண கதியும் உண்டானால் பலன் எல்லா விதத்திலும் கெடுதல்.
  • தென்னிந்தியாவில், அநேகமாக, புராதன கல் சிலைகளில், ஸ்தம்பங்களில், செப்பேடு புராதன செப்புத்தகடு சாஸனங்களில், அநேகமாய் திதி, யோகம், நட்சத்திரங்கள் இவைகளைக் குறிப்பாகக் காட்டி இருக்கின்றன. தவிர தேதியும் கிழமையும், அநேகமாக கி.பி. நானூறு ஆண்டுகளுக்கு முன் வழக்கத்தில் கிடையாது என்பது காலஞ்சென்ற D. ந சுவாமிக்கண்ணு பிள்ளை என்னும் வான சாஸ்திர நிபுணரின் கருத்து. முற்காலத்தில் ஆண்டு, திதி, யோகம் இவற்றைக் குறிப்பிட்டே ஒரு விசேஷ வர்த்தமானங்களை எக்காலத்தும் பிரபலமாகும் படி செய்வது வழக்கம். மதுரை தேவஸ்தானத்திலும், ராமேஸ்வர தேவஸ்தானத்திலும் இன்னும் வடக்கே அநேக இடங்களிலும் உள்ள சிலாசாசனங்களளக் கவனித்தால் இது விஷயம் தெளிவாகும். ஆகவே நம் முன்னோர்களுக்கு திதியும், யோகமும் முக்கியமானவையே ஒழிய தேதி, வாரம் அவ்வளவு முக்கியமானவை அல்ல.

 

இந்தச் சிறிய நூல் ஒரு ஜாதகத்தை எப்படி அணுக வேண்டும் என்பதில் சில முக்கியமான வித்தியாசமான கருத்துக்களை முன் வைக்கிறது.

இதை அனுபவத்தில் பரீசிலித்துப் பார்த்து உண்மையைக் கண்டறியுங்கள் என்றும் சொல்கிறது.

ஜோதிட ஆர்வலர்கள் இதைத் தங்கள் அனுபவம் மூலமாகச் சோதித்து உண்மையைத் தெளிந்து அறியலாம்.

 

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் படைக்கப்பட்ட இந்த நூல் கால வெள்ளத்தில அழிந்து படாமல் இருக்கவே இந்தச் சிறிய தொடர் வாசகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி. வணக்கம்

****                                                                      தொடர் முற்றும்

 

குற்றம் கண்டுபிடிக்காதே: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 6 (Post No.3938)

 

 

குற்றம் கண்டுபிடிக்காதே: புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 6 (Post No.3938)

 

 

Research article written by London Swaminathan

 

Date: 24 May 2017

 

Time uploaded in London: 21-15

 

Post No. 3938

 

Pictures are taken from various sources such as Face book, google and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

வள்ளுவர் சொன்னார்,

 

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின்

என்குற்றமாகும் இறைக்கு (திருக்குறள் 436)

முதலில் தன் குற்றம் என்ன என்பதை உணர்ந்து, பின்னர் பிறர் குற்றத்தை ஆராய்ந்து காணக்கூடியவனாக ஒருவன் இருந்தால் அவருக்கு என்ன குற்றம் வரும்?

புத்தர் சொன்னார்

மற்றவர்களுடைய குறைகளை எண்ணிப் பார்க்காதே; அவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்று சிந்திக்காதே;  உன்னுடைய பாவச் செயல்களை எண்ணிப் பார்.  நீ என்ன செய்தாய், என்ன செய்யவில்லை என்பதை சிந்தித்துப்பார் (தம்மபதம் 50)

 

xxx

 

வாசம் இல்லா மலர்

வள்ளுவர் சொன்னார்,

 

இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது

உணர விரித்துரையாதார் (திருக்குறள் 650)

 

தான் கற்ற கல்வியின் நறுமணத்தைப் பிறர் அறியாவண்ணம்

எடுத்துரைக்கும் ஆற்றல் இல்லாதவர்கள்,  மலர்ந்து இருந்தும் வாசனை இல்லாத பூங்கொத்து போன்றவர்களே

புத்தர் சொன்னார்

ஒரு அழகான மலர் வாசனை இல்லாமலிருப்பது போலத்தான் ஒருவான் நெய்போலப் பேசிவிட்டு அதைப் பின்பற்றாமல் இருப்பதும் (தம்மபதம் 52)

 

xxx

வெறுப்பு (இகல்)

வள்ளுவர் சொன்னார்,

 

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய் (குறள் 851)

 

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு ((குறள் 859)

 

பொருள்-

வெறுப்பு என்பது, எல்லா உயிர்களையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்க அனுமதிக்காது. அவைகளை வேறுபடுத்தும் கொடிய நோய் ஆகும்.

 

ஒருவனுக்கு வெறுப்பு இல்லாத போது செல்வம் இருக்கும்; அந்த செல்வம் போவதற்கு அவன் வெறுப்பை மேற்கொள்வான் (விநாச காலே விபரீத புத்தி)

புத்தர் சொன்னார்

 

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்; இது அழியாத உண்மை (தம்மபதம் 5)

 

xxx

உண்ணா நோன்பும் பொறுமையும்

வள்ளுவர் சொன்னார்,

 

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்

இன்னச்சொல் நோற்பாரின் பின் (திருக்குறள் 160)

 

உணவு உண்ணாமலேயே நோன்பு இருப்பவர்கள் பெரியவர்களே. ஆனால் ஒருவன் சொல்லும் கடும் சொல்லையும் பொறுத்துக் கொள்பவன் அந்த நோன்புடைய பெரியோருக்கும் மேலானவன்

புத்தர் சொன்னார்,

 

தர்ப்பைப் புல்லின் நுனியினால் உணவு எடுத்துக்கொண்டு மாதக் கணக்கில் உண்ணா நோன்பு இருக்கும் முட்டாள், சத்தியதர்மத்தைப் பின்பற்றும் ஒரு மனிதனின் 16-ல் ஒரு பகுதிக்கும் சமம் ஆகான் தம்மபதம்-70

XXX

நாத்திகவாதிகள் பேய்கள்!

 

வள்ளுவர் சொன்னார்,

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

 

உலக மக்கள் உண்டு என்று ஒப்புக்கொள்வதை இல்லை என்று மறுத்துக்கூறும் அறிவற்றவர்கள் மனித வடிவில் வந்த பேய் என்று இகழப்படத் தக்கவர்கள்

புத்தர் சொன்னார்

உண்மையற்ற பொருளை இருக்கிறது என்று எண்ணுவோனும், உண்மையான பொருளை இல்லை என்பானும் என்றும் சத்தியத்தைக் காணவே மாட்டார்கள். அவர்கள் தவறான பாதையில் சென்று வை தப்பிப்போனவர்களாவர் (தம்மபதம் 11)

 

xxx

ஒன்றே செய்க, நன்றே செய்க, இன்றே செய்க

வள்ளுவர் சொன்னார்,

 

அன்றறிவாம் என்னாது அறஞ் செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை (குறள் 36)

 

நாளை செய்வோம், நாளை செய்வோம் என்று ஒத்திப்போடாது, அறஞ்செய்தலைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் உயிருக்குத் துணையாக வரும்

 

புத்தர் சொன்னார்

காலம் தாழ்த்தாது உடனே நல்லது செய்யுங்கள்; கெட்டதிலிருந்து உங்கள் மனது தள்ளியே இருக்கட்டும். ஒரு மனிதன் நல்லது செய்வதை தாமதித்தால் அவன் மனது கெட்டது செய்வதில் இறங்கி ஆனந்தமாக்ச் செயல்படும் (தம்மம் 116.)

 

வள்ளுவர் சொன்னார்,

 

 

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடி உரைந்தற்று (குறள் 208)

ஒருவன் தீங்கு செய்தால் அவன் அதனால் கெட்டுப்போவது நிச்சயம். எப்படி ஒருவனுடைய நிழல் அவன் கூடவே வந்து அவனடியில் தங்குமோ, அது போஅலத் தீமையும் அவனை நிழல்போலத் தொடரும்

புத்தர் சொன்னார்

நல்லவனூகுத் தீங்கு செய்யும் முட்டாள், தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொண்டவன் ஆவான். பாவமற்ற தூய்மையான ஒருவனுக்குத் தீங்கு செய்தால் அந்தத் தீங்கு காறில் வீசி எறிந்த தூசி ஒருவன் முகத்திலேயே வந்து விக்ழுவது போல தீங்கு செய்தவனையே வந்து சேரும் (தம்மபதம் 125)

 

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-5 (3928) 21 May 2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-4 (3914) 16th May 2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-3 (3901) 12-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (3899) 11-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-1(3896) 10th May 2017

 

 

–to be continued

 

Introduction Anecdotes (Post No.3937)

Compiled by London Swaminathan

 

Date: 24 May 2017

 

Time uploaded in London: 19-15

 

Post No. 3937

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

Hot Potato and Fools

During one of his campaigns, William Jennings Bryan spoke in a city in one of the North-Western states (USA). The chairman in presenting the speaker, made an embarrassing fulsome and eulogistic introduction of Bryan, in such bad taste that many wondered how Bryan would succeed in overcoming the unfortunate effect of it. Bryan however wasn’t easily dismayed.

“The very kind observations of the chairman”, he said, “bring to my mind the case of the man at a formal banquet table, who impulsively put into his mouth a large fork full of steaming, hot baked potato, which he instantly spat out upon his plate. Looking about at his disconcerted fellow guests and at his hostess, he remarked blandly, “Some damn fools would have swallowed that”.

 

Xxx

Shortest German Introduction

Long introductions, when a man has a speech to make are a bore, said former senator John C Spooner, one of the great senate leaders.

“I have had all kinds, but the most satisfactory one in my career was that of a German Mayor of a small town in my state, Wisconsin”.

I” was to make a political address and the opera house was crowded. When it came time to begin the mayor got up.

“Mine friends, said he, I hafe asked been to introduce Senator Spooner who is to make a speech, ja. Vell, I hafe did so und he will now do so”.

 

Xxx

Introduction of a Big Man

 

“I had expected to find Mr Lloyd George a big man in every sense”, playfully remarked the chairman, when introducing the statesman to a meeting.

“But you see for yourselves he is quite small in stature”.

Lloyd George was no whit abashed.

“In North Wales”, he remarked, “we measure a man from his chin up. You evidently measure from his chin down.”

xxxx

Most Notorious Woman

The lady from Arkansas, senator Hatie Caraway , was about to address a gathering of her constituents . The chairman introduced her with a prolonged and lavish eulogy, culminating thunderously with the words,

“Ladies and gentlemen, I now present to you the most notorious woman in Arkansas.”

 

Xxxx

ப்ரூஸ் லீயின் மரணம் : தவறான பெங் சுயி காரணமா? (Post No.3936)

Written by S NAGARAJAN

 

Date: 24 May 2017

 

Time uploaded in London:-  6-09 am

 

 

Post No.3936

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பெங் சுயி மர்மம்

ப்ரூஸ் லீயின் மரணம் : தவறான    பெங் சுயி காரணமா?

ச.நாகராஜன்

 

உலகில் நிகழ்ந்த மர்மமான அகால மரணங்களுள் ப்ரூஸ் லீயின் மரணமும் ஒன்று. அது வேதனை தருவதும் கூட!

சான்பிரான்ஸிஸ்கோவில் சைனாடவுனில் 27-11-1940 அன்று ப்ரூஸ் லீ பிறந்தார். 20-7-1973இல் புக்ழேணியில் உச்சத்தில் இருந்த போது முப்பத்தி மூன்றே வயதில் அகாலமாக மரணமடைந்தார்.

உலக மக்களின் துக்கம் சொல்லவொண்ணாததாக இருந்தது.

அவரது மரணம் பற்றி ஏராளமான வதந்திகள் இன்று வரை உலவி வருகின்றன. இந்த வதந்திகளின் அடிப்படையில் ஏராளமான கட்டுரைகளும் அவ்வப்பொழுது வருவது வழக்கம்.

லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் இதழ் தனது 1997, ஜூலை 20 ஆம் தேதியிட்ட இதழில் ,”Dragon: The Bruce Lee”  என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

 

அதில் கூறப்பட்டிருந்த வதந்தியின் அடிப்படையிலான தகவல்களால் பெரிதும் மன வருத்தமுற்றார் அவரது மனைவி லிண்டா லீ.

தனது பதிலை அனுப்பினார். அது கீழே ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது:

The Truth Behind Life and Death of Bruce Lee

August 17, 1998|

 

LINDA LEE CADWELL

 

I was personally offended by Alison Dakota Gee’s article about my late husband, Bruce Lee (“Dragon Days,” Calendar, July 20). Purporting to commemorate the flourishing of his legacy 25 years after his death, The Times’ story sank to the depths of tabloid journalism in sensationalizing the life and death of an extraordinarily gifted human being.

Having been married to Bruce for nine years and being the mother of our two children, I am more than qualified to give a correct recital of the facts. Let me pick one glaring falsehood in the story to illustrate my point: Your reporter writes that Bruce died because of taking “too much aspirin.” Besides being false, the tone of the statement smacks of sarcasm and disbelief.

 

Without going into every detail, let me rebut for those who wish to know the truth: Bruce died from cerebral edema caused by hypersensitivity to an ingredient in a prescription medication called Equagesic. This determination was made after an exhaustive, nine-day coroner’s inquest during which the testimony of forensic pathologists from all over the world, who had studied every tissue in Bruce’s body, was heard.

*

The question of what caused Bruce’s death is the one I am most frequently asked, and yet the powerful investigative arm of the Los Angeles Times cannot uncover the true facts. You did me and my family no favors.

In addition, a renowned pathologist testifying at the inquest stated that the small amount of cannabis found in Bruce’s stomach had no more effect on the cause of death than if he had “taken a cup of tea” shortly before he died. Yet, The Times’ reporter makes the giant leap to state falsely that Bruce had a “serious addiction to cannabis.”

Your reporter then jumps to the hasty conclusion that because Bruce lay down with a headache at the home of an actress, and subsequently died from the prescription medication she gave him, he was therefore having an extramarital affair. These types of statements, reported as fact, are purely speculative hearsay, the product of a 25-year rumor mill kept alive by the gossip of people who were never there, including your reporter and others quoted in the article.

I have seen and heard every juicy bit of malicious rumor about the life and death of Bruce Lee over the years. But I could not stand by and let this newspaper that used to have standards of integrity and decency stoop to the level of journalistic trash talk.

I am not purporting that Bruce was a perfect human being, only one that did more good than harm in his short time on this Earth. He faced many obstacles in his life–overcoming racist attitudes, surviving dire economic circumstances, surmounting physical injuries–and in so doing distinguished himself as someone to be rightfully admired and emulated.

Throughout these 25 years I have received tens of thousands of testimonials from people who have been positively influenced by Bruce’s example, his teachings, his philosophy and his films. There is so much to say of redeeming social value about Bruce Lee that I am at a loss to understand your motive in choosing to ignore details and facts in favor of a tabloid presentation of unsubstantiated allegations and flat-out falsehoods.

*

I am shocked and disappointed that a major national newspaper in the city where Bruce lived and worked, where I raised our children and where our daughter still lives, has deliberately abdicated its moral responsibility to society by demeaning the character of a decent and honorable man, husband, father, friend and teacher.

Within only a few miles of the Los Angeles Times building there is a group of friends and students of Bruce Lee, incorporated as a nonprofit organization called Jun Fan Jeet Kune Do, who are actively involved in preserving and perpetuating his art and philosophy in order to benefit as many people in the future as it has for the last 25 years.

A newspaper that truly wants to do justice to the lifework of a man who made a difference in the lives of so many people all over the world would seek out the true story of this universally admired figure.

It saddens me to see how your standards of professionalism have disintegrated. I suppose it was “easier” for your writer to report gossip than to produce what could have been an accurate and truly inspirational piece. You should be ashamed to call yourself a reputable newspaper. Your actions have diminished my respect for your publication.

Linda Lee Cadwell resides in Boise, Idaho.

 

ப்ரூஸ் லீயின் மரணத்திற்கான வதந்திகளுக்கு இப்படியாக முற்றுப் புள்ளி வைத்தார் லிண்டா.

 

என்றாலும் கூட ஹாங்காங் நகரவாசிகள் ப்ரூஸ் லீயின் மரணம் தவறான பெங்சுயி-யினால் தான் என்று இன்றும் நம்புகின்றனர்.

அவர் தனது பெயரை Little Dragon எனப்படும் Hsiao Loong  என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதால் கௌலூனின் ஒன்பது டிராகன்கள் (Nine Dragons of Kowloon) அவர் மீது கோபம் கொண்டன என்று அவர்கள் நம்புகின்றனர்.

 

ஆகவே ஒன்பது டிராகன்கள் லிட்டில் டிராகனுக்கு சமயம் பார்த்துப் பாடம் கற்பிக்கக் கங்கணம் பூண்டனவாம்.

 

பெருத்த சூறாவளி ஒன்றின் போது ப்ரூஸ் லீ பாதுகாத்து வந்த பா குவா கண்ணாடி கீழே விழுந்து உடைந்த போது அந்தத் தருணம் வந்தது.

 

தன்னைப் பாதுகாத்த பாகுவா மிர்ரர் உடைந்ததால் பாதுகாப்பை இழந்தார் ப்ரூஸ் லீ. அவரை சுலபமாக ஒன்பது டிராகன்கள் அகாலமாக மரணமடைய வைத்தன.

மிகப் பெரும் குங் ஃபூ வீரராகத் திகழ்ந்த ப்ரூஸ் லீக்கும் பெங் சுயிக்கும் இப்படி ஒரு விசித்திரமான தொடர்பு இருக்கிற்து.

***