Gateway to Hell and Gateway to Heaven (Post No.5638)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –14-27

Post No. 5638

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

There are beautiful slokas/couplets in Sanskrit language giving details about gateways to hell and heaven. We find it in Pali scriptures and Tamil scriptures as well. Bhagavad Gita, Dhammapada, the Buddhist Veda and Tamil Veda Tirukkural have got similar couplets.

Let us look at Sanskrit slokas first:-

Hitopadesa (sloka) says,

Doors to Death (Mrtyoh dvarani):-

1.Beginning of an unworthy act

2.Enmity with one’s own kin

3.Competition with a stronger person

4.Faith in young women

Anicita karyarambah svajana virodho baliyasa spardha

Pramadajanavisvaso mrtyoh dvarani catvari

–Hitopadesa 3-149

 

Gateway to Moksha/Liberartion

Yoga Vasistah says

1.Control of mind

2.Inquiry

3.Contentment

4.Association with saints

are the four gateways to Moksha.

mokshadvare dvarapalascatvah parikirtitah

samo vicharah santosascaturtah sadhusangamah

Gateways of Hell

kama krodha lobha dambha

kamo lobhastatha  krodho dhambascatvara ithyami

xxx

 

Bhagavad Gita (16-21) says,

The Triple Gate of Hell

trividham narakasyaedam

dvaram nasanam atmanah

kamah krodhas tatha lobhas

tasmad etat trayam tyajet

The gateway of this hell leading to the ruin of the soul is threefold, lust, anger and greed. Therefore, these three, one should abandon (BG 16-21)

Tiruvalluvar, author of Tamil Veda Tirukkural says,

Once the triple evils of lust, anger and delusion are eliminated

All sorrow will come to an end —(Kural 360)

Buddha in The Dhammapada says

He in whom these (envy, greed and wickedness) are destroyed, removed by the very root, he who is free from guilt, and is wise, is said to be handsome (263)

Lord, saints and poets repeated the same advise in different words.

Tags- Gateway, Hell, Heaven, Moksha, Greed, Lust, delusion, envy, anger.

–Subham–

இன்றைய உலகின் மெமரி மன்னன் யார்? (Post No.5637)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 8 November 2018

Time uploaded in London – 7-26 AM (GMT)

Post No. 5637

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 9-11-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஆறாம்) கட்டுரை  

அறிவியல் துளிகள் ! அத்தியாயம் 400

ன்றைய உலகின் மெமரி மன்னன் யார்?

ச.நாகராஜன்

டாக்டர் அகிரா ஹராகுச்சி (Dr Akira Harguhi) என்ற ஜப்பானியர் தான் இன்றைய உலகின் நினைவாற்றல் மன்னன். அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் கூட தனது சாதனையை பொது இடத்தில் நிகழ்த்தி இவர் மனித குலத்தில் இன்று நினைவாற்றலில் முதலிடம் பெற்றுத் திகழ்கிறார்.

‘பை என்ற கணிதக் குறியீடு கணிதக் கலையின் அபூர்வமான விசித்திரம். (இந்தத் தொடரில் முன்பே இது பற்றி விளக்கப்பட்டுள்ளது)

 3.142 என்ற எண்ணால் ‘பை-யை சாதாரணமாகக் குறிப்பிட்டாலும் இது முடிவே இல்லாத தொடர் எண். 22ஐ ஏழால் வகுத்துப் பார்த்தால் வருகிறது இந்தத் தொடர் எண்.

இந்தத் தொடர் எண்ணில் ஒரு லட்சம் இலக்கங்களை எதையும் பார்க்காமல் தன் நினைவிலிருந்தே சொல்கிறார் டாக்டர் அகுரா.

2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி காலை 9 மணிக்குத் தனது நினைவாற்றல் திறனை உலகிற்குக் காட்டுவதற்காக பை தொடர் எண்ணைச் சொல்ல ஆரம்பித்த இவர் அன்று நள்ளிரவில் 83,431 இலக்கங்களைச் சொல்லி முடித்தார். ஒரு லட்சமாவது இலக்கத்தை இரவு 1.28க்கு அடைந்த அவர் (அதாவது அக்டோபர் நான்காம் தேதி அதிகாலை) குழுமியிருந்தோரை வியக்க வைத்தார்.

நிகழ்வு முழுவதும் படம் பிடிக்கப்பட்டது. டோக்கியோவில் கிஸாரஜு (Kisarazu) என்ற பொது அரங்கில் மக்கள் முன் நடைபெற்றது.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு அவர் ஐந்து நிமிடம் இடைவெளி ஓய்வு எடுத்துக் கொண்டார்.

அந்த இடைவெளியில் ஓனிகிரி என்று ஜப்பானிய மொழியில் அழைக்கப்படும் புழுங்கலரிசியால் செய்யப்பட்ட அரிசி உருண்டைகளை தனது உடல் சக்திக்காகச் சாப்பிட்டார்.

இயற்கை உபாதை கழிக்க அவர் டாய்லெட்டுக்குச் சென்றாலும் கூட அதுவும் கூடப் படம் பிடிக்கப்பட்டது. ஏனெனில் இந்த நிகழ்வில் எந்த வித ஏமாற்று வேலையையும் அவர் செய்யவில்லை என்பதை நிரூபிக்கத் தான் இப்படிப்பட்ட கடுமையான விதிகள் அனுசரிக்கப்பட்டன.

டாக்டர் அகிரா தனது உலக ரிகார்டைத் தானே இந்த நிகழ்வில் முறியடித்துப் புதிய சாதனையைப் படைத்தார். 2005ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி அவர் நடத்திய நிகழ்வில் அவர் 83431 இலக்கங்களை நினைவிலிருந்து சொன்னார்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 14ஆம் தேதி ‘பை தினமாக உலகில் கொண்டாடப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு பை தினத்தில் 1,11,701 இலக்கங்களைத் தன்னால் நினைவாற்றல் திறன் மூலமாகச் சொல்ல முடியும் என்றார்.

கின்னஸ் ரிகார்டின் விதி முறைகள் சற்றுக் கடுமையானவை. கின்னஸ் ரிகார்டில் இவர் இவ்வளவு எண்ணிக்கையில் இலக்கங்கள் சொன்னது பதிவு செய்யப்படவில்லை. என்றாலும் இன்று இவரே உலகின் மெமரி மன்னர்!

இப்படி நினைவாற்றல் திறனைக் கூட்ட வல்ல நிமோனிக் சிஸ்டத்தை அவரே அமைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறியீடு அவர் மனதில் பளிச்சிடும்.

அவ்வளவு தான், எண்களைக் கூறிக் கொண்டே போவார்.

ஒரு நாளைக்கு 15000 எண்களை நினைவிலிருந்து கூறிப் பயிற்சி செய்யும் டாக்டர் அகிரா, புத்த மத மந்திரத்தை உச்சரிப்பது போல பயபக்தியுடன் இதைச் சொல்லி வருவதாகக் குறிப்பிடுகிறார். இதற்கு தினமும் ஒரு மணி நேரம் ஆகிறது.

ஒரு நாளைக்கு 25000 எண்களைச் சொல்லத் தான் முயல்வதாக அவர் தனது குறிக்கோள் பற்றிச் சொல்கிறார். இதற்கு மூன்று மணி நேரம் ஆகும்.

புத்த மதத்தின் ஜென் பிரிவின் படி உலகில் படைக்கப்பட்டு இருக்கும் மலைகள், ஆறுகள், உயிர் வாழ் இனங்கள் ஆகிய அனைத்துமே புத்தரை உள்ளடக்கியுள்ளன என்பதாகும்.

ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கணிக்கவோ அல்லது அதன் பரப்பைக் கணிக்கவோ ‘பை இன்றியமையாதது.

உலகத்தைச் சுற்றி வரும் அனைத்திலும் கூட புத்தர் இருக்கிறார் என்பதும் அதில் ‘பை ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதும் அகிராவின் கொள்கை.

நினைவாற்றல் திறனை எப்படிக் கூட்டுவது என்பது பற்றி உலகெங்கும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வரும் அகிராவுக்கு கின்னஸ் இன்னும் அங்கீகாரம் தரவில்லை. அது பற்றி அவர் கவலைப்படவும் இல்லை. கின்னஸுக்கென ஒரு கொள்கையும் நடைமுறையும் இருக்கிறது. அதற்கு நான் என்ன செய்வ்து என்கிறார் அவர்.

ஒவ்வொரு இலக்கத்திற்கும் அகிரா ஒரு ஒலியை நினைவு வைத்துக் கொள்கிறார். இந்த ஒலி மொழியினால் அவர் பல கதைகளை உருவாக்கி இருக்கிறார். கதையை நினைவு படுத்திக் கொண்டால் இலக்கங்கள் தானாக மடமடவென்று வந்து விழும். 

இப்படி 800 கதைகளை அவர் உருவாக்கி இருக்கிறார். கதைகளின் கதாநாயகர்கள் மிருகங்களும் தாவரங்களும் தான்!

‘பையின் முதல் நூறு இலக்கங்களுக்கு மட்டும் உள்ள கதையில் மனிதருக்கு இடமுண்டு!

பைக்கான அவரின் முதல் ஐம்பது இலக்கங்களுக்கான கதை இது தான்:

 “Well, I, that fragile being who left my hometown to find a peace of mind, is going to die in the dark corners; it’s easy to die, but I stay positive.”

அவரது மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் அவரது இந்த ஹாபியை வெகுவாக ரசிக்கின்றனர்.

 கின்னஸ் ரிகார்டின் படி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘பைக்கான மெமரி மன்னன் சீனாவைச் சேர்ந்த லு சாவோ என்பவர். 2005ஆம் ஆண்டு

 நவம்பர் 19ஆம் தேதி 24 மணி நான்கு நிமிடத்தில் 67890 இலக்கங்களை கின்னஸ் விதிமுறைகளுக்கிணங்க சரியாகச் சொல்லி கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்றார்.

நினைவாற்றல் திறனை பயிற்சி மூலம் ஒருவர் கூட்டிக் கொள்ளலாம் என்பது அறிவியல் தரும் செய்தி.

நேரமும் மனமும் திறனும் இருந்தால் இந்த ரிகார்டையும் ஒருவர் வெல்வார்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

சர் ஆர்தர் இவான்ஸ் (Sir Arthur Evans – பிறப்பு 8-7-1851 மறைவு 11-7-1941) பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெரிய புதைபொருள் ஆராய்ச்சியாளர். க்ரீட் தீவில் இருந்த க்னாஸாஸ் (Palace of Knossos in the island of Crete) என்ற அரண்மனையை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடித்து அவர் பெரும்புகழ் பெற்றார். தனது தொண்ணூறாவது பிறந்த நாளன்று அதை நண்பர்களுடன் வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது வந்திருந்த விருந்தினர்களுள் ஒருவர் ஜெர்மானியர்கள் க்னாஸாஸ் அரண்மனையை அழித்து விட்டதாகக் கூறினார். இந்த செய்தியைக் கேட்டு மிகவும் மனம் வருந்திய இவான்ஸ் மனச்சோர்வுக்கு ஆளாகி மூன்றே மூன்று நாட்கள் தான் உயிர் வாழ்ந்தார். ஆனால் உண்மை என்னவெனில் அந்த விருந்தாளிக்குக் கிடைத்த செய்தி தவறான செய்தி. க்னாஸாஸ் அரண்மனை உண்மையில் அழிக்கப்படவே இல்லை. ஜெர்மானியர்கள் அந்த புராதனமான அரண்மனை அழிக்கப்படக்கூடாது என்பதற்காக ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். அரண்மனை பத்திரமாக பாதுகாக்கப்பட்டது. தவறான செய்தியால் மனம் வருந்தி ஒரு அறிஞரின் உயிர் போனது தான் மிச்சம்!

 

TAGS- சர் ஆர்தர் இவான்ஸ்,நினைவாற்றல், மெமரி மன்னன்

***

இந்து மத இடி தாங்கி அர்ஜுனன்! (Post No.5636)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7 November 2018

GMT Time uploaded in London –15-59

Post No. 5636

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில் அர்ஜுனனின் குறைந்தது 16 பெயர்கள் உள்ளன. கண்டு பிடித்து இடி , மின்னல் பயம் அகற்றுங்கள். விடை கீழே உளது.

அர்ஜுனனின் பத்து பெயர்கள் ‘அர்ஜுனப்பத்து’ என்று சொல்லப்படும். இடி இடிக்கும்போது குழந்தைகளைத் தாய்மார்கள் ‘அர்ஜுனப்பத்து’ என்று சொல்லச் செய்வர். அர்ஜுனன், இந்திரனின் மகன்; அதாவது இந்திரனின் அம்சத்தை உடையவன். இந்திரன்   இடி,மின்னலுக்கு அதிபதி. ஆகையால் இடி மின்னலால் பயம் ஏற்பட்கூடாதென்பதற்காக அர்ஜுனனின் பத்து பெயர்களையும் சொல்ல வேண்டும். அப்படி பத்து பேரும் நினைவு இல்லாவிடில் அர்ஜுனப் பத்து என்று சொன்னாலே போதும்.

கட்டிடங்கள், இடியினால் பாதிக்கப்படாமல் இருக்க, இடி தாங்கி அவசியம்.

இளம் சிறார்கள் இடி,மின்னலைக் கண்டு அஞ்சாமலிருக்க அர்ஜுனப்பத்து அவசியம்.

நூறு சதவிகித நம்பிக்கை உடையவர்களுக்கு இடி மின்னலில் இருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.

அர்ஜுனனின் பத்துப் பெயர்கள்

அர்ஜுனன், பல்குனன் (பங்குனி நக்ஷத்திரத்தில் பிறந்தவன்), பார்த்தன்,கிரீடி, ஸ்வேதவாஹனன் (வெள்ளைக் குதிரைகள் கட்டிய தேரை உடையவன்), பீபத்சு (எதிரிகளை வெறுப்படையச் செய்பவன்) , கிருட்டினன் (அஞ்ஞானத்தை அகற்றுவோன்), சவ்யசாசி, தனஞ்சயன், விஜயன் (வெற்றி வீரன்)

xxx

விடை

சவ்யசாசி

அர்ஜுன

பீபத்சு

தனஞ்சய

பல்குண

ஸ்வேதவாஹன

பார்த்த

கிரீடி

கிருஷ்ண

விஜய

பாரத

பரந்தப

குருநந்தன

குடாகேச (ன்)

கபித்வஜ

அனகன்

பாண்டவ

xxxx

 

அர்ஜுனனுக்கு கீதையில் அமைந்துள்ள 13 பெயர்கள்:

அர்ஜுனன் = தூய இயல்பு உடையவன், வெள்ளை நிறம் கொண்டவன்
பாண்டவன் = பாண்டுவுக்கு மைந்தன்; பாண்டவர்களில் தலை சிறந்த வீரன்; வில்லுக்கு விஜயன்.
தனஞ்ஜயன் =  யுதிஷ்டிரரின் ராஜசூய யக்ஞத்தின் போது உத்தரகுரு வரை சென்று செல்வத்தைக் கொணர்ந்தவன் , அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைச் சேகரிப்பவன்
கபித்வஜன் =அர்ஜுனன் கொடியில் அனுமன் இருப்பதால் வெற்றி உறுதி செய்யப்பட்டது,  குரங்குக் கொடியுடையவன்
குடாகேசன் = தூக்கத்தை வென்றவன்
பார்த்தன் = பிரிதாவின் மைந்தன்; ப்ருதா என்பது குந்தியின் மற்றொரு பெயர்
அனகன் = பாபமற்றவன்
பரந்தபன் = எதிரிகளை வாட்டுபவன்
கௌந்தேயன் = குந்தியின் மைந்தன்
பாரதன் = பரத குலத்தில் உதித்தவன்
கிரீடி =  இந்திரனால் கிரீடம் சூட்டப்பட்டவன்;  கிரீடம் தரித்தவன்
குருநந்தனன் = குருகுலத்தின் தோன்றல்
ஸவ்யஸாசின் = எல்லோரும் வலதுகையால் அம்புவிடுவர். அர்ஜுனன், இடது கையாலும் எய்ய வல்லவன். இடது கையால் அம்பு எய்பவன்.

 

TAGS–தனஞ்ஜயன், அர்ஜுனன், பத்துப் பெயர்கள்

–சுபம்-

HINDU LIGHTNING CONDUCTOR-ARJUNA! (Post No.5635)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7 November 2018

GMT Time uploaded in London – 7-08 am

Post No. 5635

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

1

D

H A 2 N A N J Y A S 3
K 4 I R I T I P A
U J 5 I S H N U A V
R N U G 6 L A F 7 S T Y
U N U T A 14 T N A
N P 8 A D A A N A A S
A A A Y R A H R A
N R K A A K B A C
D T E J H A I P 9 H
A H S I B 10 N B 11 I
N A H A V 12 A T E V S 13

FIND THE NAMES OF ARJUNA IN THE WORD SEARCH OR CROSSWORD

THIS CAN BE PALYED AS WORDSEARCH OR CROSSWORD.

LEVEL ONE – WORD SEARCH

LEVEL TWO- CROSSWORD

IF YOU ARE RAMILIAR WITH ARJUNA’S NAMES GO TO CROSSWORD.

I HAVE GIVEN THE FIRST LETTER OF EACH NAME

ARJUNA WORD SEARCH

1

D

H A 2 N A N J Y A S 3
K 4 I R I T I P A
U J 5 I S H N U A V
R N U G 6 L A F 7 S T Y
U N U T A 14 T N A
N P 8 A D A A N A A S
A A A Y R A H R A
N R K A A K B A C
D T E J H A I P 9 H
A H S I B 10 N B 11 I
N A H A V 12 A T E V S 13

ARJUNA  CROSS WORD

1

D

A 2 S 3
K 4
J 5
G 6 F 7
A 14
P 8
P 9
I B 10 B 11
V 12 S 13

ACROSS

1.DHANANJAYA; 4.KIRITI ; 5.JISHNU; 7.FALGUNA; 13. SVETAVAHANA

DOWN

2.ARJUNA, 3.SAVYASACHI, 4.KURUNANDAN, 6.GUDAKESA, 14.ANAKAN

  1. PARTHA, 9.PARANTAPA, 10. BHARATA, 11.BIBHATSU, 12.VIJAYA

HINDU LIGHTNING CONDUCTOR!

MEANING OF ARJUNA’S NAMES

Children in India are taught to recited Arjuna’s TEN NAMES when there are thunderstorms. Since God Indra was the deity of Thunder and lightning, and Arjuna was the son of Indra, people recite to get rid of the fear about thunder and lightning.

Buildings have lightning conductors to safeguard it from the thunder strikes. In the same way children have TEN NAMES of ARJUNA to protect them from the fear of Thunder. This boosts children’s confidence.

The names are called Arjuna Ten.

The Ten Names included in the ‘Arjuna Ten’ are

1.Arjuna =Pure , white

2.Bibhatsu- one who makes his enemies scared or hated
3.Dhananjaya = Winner of wealth; went upto Uttarakuru and brought home huge treasure

4.Flaguna- one who was born under the Panguni Uttara star

5.Gudakesa = who has conquered sleep

6.Krishna- one who gets rid of nescience, ignorance
7.Kritee = crowned by Indra
8.Savyachacin = He can use even his Left hand to fire arrows
9.Svetavahana – one who has a chariot with white horses

10.Vijayan- ever victorious (ALSO JISHNU)

In Bhagavad Gita and other scriptures the following names are used. In the Gita 13 different names are used for Arjuna.

Arjuna =Pure , white
Bharata = Descendent of Bharata
Dhanamjaya = Winner of wealth;went upto Uttarakuru and brought home huge treasure
Gudakesa = who has conquered sleep
Kapi dwaja = Having Flag of Monkey ; Hanuman is in the flag of Arjun
Partha = Son of Prtha; (Prtha is another name of Kunti)
Paramtapa = Oppressor of the enemies
Pandava = Pandu’s son
Savyachacin = He can use even his Left hand to fire arrows
Anakan =sinless
Kauntheyan = Son of Kunti
Kritee = crowned by Indra
Kurunandana = Born in Kuru clan

–subham–

தெய்வம் பலப்பல சொல்லி பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்! (Post No.5634)

WRITTEN BY S NAGARAJAN

Date: 7 November 2018

Time uploaded in London – 5-42 AM (GMT)

Post No. 5634

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ச.நாகராஜன்

1

ஒரு குளம்.பல் வேறு படித்துறைகள். அதில் ஒன்றில் இறங்கியவர் குளத்தில் இருக்கும் நீரைப் பார்த்து தண்ணீர் என்கிறார். இன்னொரு படித்துறையில் இறங்கியவர் ஜலம் என்கிறார். இன்னொருவர் water என்கிறார். இன்னொருவரோ பானி என்கிறார்.

அனைவரும் குறிப்பிடுவது ஒரே நீரையே. அவரவர் உணர்ந்த படி சொல்கிறார்.

அதே போலவே இறைவன் ஒருவனே. அவரவர் உணர்ந்தபடி அவனைப் போற்றி வணங்குகின்றனர்.

ஹிந்து மதம் கூறுவது இதுவே. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் எளிமையாக இப்படி உதாரணத்துடன் கூறி விளக்கினார்.

2

ஆகாஸாத் பதிதம் தோயம்

யதா கச்சதி ஸாகரம்

சர்வ தேவ நமஸ்கார:

கேசவம் ப்ரதி கச்சதி

ஆகாயத்திலிருந்து விழுகின்ற மழைத் துளிகள் எப்படி சமுத்திரத்தைச் சென்று அடைகிறதோ அது போலவே எல்லா கடவுள்களுக்கும் செய்யும் இறைவணக்கம் கேசவனைச் சென்று அடைகிறது.

இப்படி ஹிந்து மத வேதம் கூறுகிறது.

இதையே தான் ஸ்வாமி விவேகானந்தர் பார்லிமெண்ட் ஆஃப் ரெலிஜன்ஸில் – சர்வ மத மாநாட்டில் – சிகாகோவில் முழங்கினார். ஹிந்து மதப் பெருமையை நிலை நாட்டினார்.

 

அவரது உரையில் முக்கியமான இந்தப் பகுதி இது:

I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings:

As the different streams having there sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to thee.

3

ஏகம் ஸத். விப்ரா: பஹுதா வதந்தி |

உண்மை ஒன்றே. அறிஞர்கள் அதைப் பலவாறாகச் சொல்கின்றனர்.

இது தான் வேதம் கூறும் உண்மை.

மஹாகவி பாரதியார் இதை இப்படிக் கூறுகிறார்:

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று

நான்மறை கூறிடுமே-ஆங்கோர்

நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்

நான்மறை கண்டிலதே.

4

தீயினைக் கும்பிடும் பார்ப்பார், – நித்தம்

திக்கை வணங்கும் துருக்கர்,

கோவிற் சிலுவையின் முன்னே – நின்று

கும்பிடும் யேசு மதத்தார்.

யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்

யாவினும் நின்றிடும் தெய்வம்,

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; – இதில்

பற்பல சண்டைகள் வேண்டாம்

என்றும்,

பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!

புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,

நாமமுயர் சீனத்துத் ‘தாவு”மர்க்கம்,

நல்ல ”கண் பூசி”மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.

என்றும் மகாகவி பாரதியார் மிகத் தெளிவாக பல மதங்கள் உரைக்கும் தெய்வம் ஒன்றே என்று உண்மையை விளக்குகிறார்.

5

தாயுமானவ ஸ்வாமிகள் என் தெய்வம் உன் தெய்வம் என்று கூறி சண்டையிடுவோரை நோக்கி உங்கள் விவரத்திணத்திற்கும் அப்பாற்பட்ட ‘பொருள்’ ஒன்றே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார் இப்படி:

அங்குஇங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்

ஆனந்த பூர்த்தியாகி,

அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குள்ளே

அகிலாண்ட கோடியெல்லாம்

தங்கும்படிக்கு இச்சைவைத்து, உயிர்க்குயிராய்

தழைத்தது எது? மனவாக்கினில்

தட்டாமல் நின்றது எது? சமயகோடிகள் எலாம்

தம்தெய்வம் எம்தெய்வம் என்று

எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கு இடவும் நின்றதுஎது?

எங்கணும் பெருவழக்காய்,

யாதினும் வல்ல ஒரு சித்து ஆகி, இன்பமாய்

என்றைக்கும் உள்ளது எது? மேல்

கங்குல்பகல் அறநின்ற எல்லைஉளது எது? அது

கருத்திற்கு இசைந்தது அதுவே;

கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்

கருதி அஞ்சலி செய்குவாம்

சமயகோடிகள் மன வாக்கினில் எட்டாமல் நின்ற ஒன்றை என் தெய்வம் உன் தெய்வம் என்று எதிர் வழக்கு செய்ய, அதற்கும் அப்பாற்பட்டதாய் உள்ள ஒரு வஸ்துவை வணங்கி அஞ்சலி செய்வோம் என்பது அவர் வாக்கு.

6

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் திருமூலர்.

7

ஒரே பரம்பொருளை விளக்கிக் கூறும் பாரதியாரின் பாடல்கள் பல:

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி

ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,

கொள்ளற் கரிய பிரமமென் றேமறை

கூவுதல் கேளீரோ?

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்

உணர்வெனும் வேதமெலாம்-என்றும்

ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்

உணர்வெனக் கொள்வாயே.

”பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்

பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:

சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;

தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்;

பூமியிலே நீகடவு ளில்லை யென்று

புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;

சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்

சதாகாலம் ‘சிவோஹ’மென்று சாதிப் பாயே!”

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்

சுருதிகள் கேளீரோ?

சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்;

சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;

உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

அறிவே தெய்வம்; அன்பே தெய்வம்; உண்மையே தெய்வம்!

8

முத்தாய்ப்பாக பாரதியார் தெளிவாக பல்வேறு மதங்களைச் சொல்லி பகைத் தீயை மூட்டுபவரைச் சுட்டிக் காட்டுகிறார் இப்படி:

தெய்வம் பலப்பல சொல்லி-பகைத்

தீயை வளர்ப்பவர் மூடர்

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று

இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து

வெறுங் கதைகள் சேர்த்துப்-பல

கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை

காட்டவும் வல்லீரோ

9

இதில் முக்கிய விஷயம் அனைத்து மதங்களையும்,தேவர்களையும் அவரவர் வழி வழி நின்ற தன்மையை உரைப்பது ஹிந்து  மதம் ஒன்று  மட்டுமே.

மதம் மாற்றுவது கிடையாது;

மற்ற தெய்வங்களைப் பழிப்பது கிடையாது!

இந்த ஒன்றின் அடிப்படையிலேயே இது எதிர்காலத்தில் அனைவருக்குமான வாழ்க்கை முறையாக ஆகும். ஆர்னால்ட் டாய்ன்பி உலக சரித்திரத்தைப் பல தொகுதிகளாக எழுதியவர். அவர் ஹிந்துத்வத்தைப் பார்த்து வியந்து எதிர்கால வழி இது ஒன்றே தான் என்று வியந்து கூறுகிறார்.

புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

நலம் தரும் சொல்லை கண்டு கொண்டேன் – நாராயணா என்னும் நாமம்!

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

நமச்சிவாயவே நான் அறி வித்தை!

மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா என்னும் நாமம்

விண்ணும் மண்ணும் தனி ஆளும்

வீரை சக்தி நினதருளே!

****

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி- கடவுள் (Post No.5633)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 6 November 2018

GMT Time uploaded in London – 8-55 am

Post No. 5633

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கீழேயுள்ள கட்டத்தில் குறைந்தது 27 சொற்கள் உள. கண்டுபிடித்து தமிழறிவினைப் பெருக்குங்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள்!!

குறுக்கே

1.பயம், ஸர்ப்ரைஸ்

4.திருடன்

7.கோபுரம் கட்ட பயன்படும்

9.முத்தம் பெறும் இடம்

10.பிரம்மா,விஷ்ணு, சிவன்

11.குடித்தால் போதை

12.நாய் மீது எறியலாம்

13.வருக, வருக

14.மாட்டுக்குத் தீவனம்

18.அழகு

19.பொழுதுபோக்கு, தமாஷ்

20.சிவனுடன் இணந்தது

21.பவுடர் போடலாம், க்ரீம் போடலாம்

கீழே

2.வயதான நிலை

3.நெல் விளையும் இடம்

4.இறைவன்

5.காலையில் சோறு போடலாம்

6.பனை மரத்து நன்கொடை

8.இனிப்பு தருவது

  1. திறக்கப்படுவது

15.- தேவலோக அழகி

14.- வதந்தி

16.- கண்ணே, மணியே, வா, வா

17.ஜனங்கள்

18.பல்லாங்குழி ஆடலாம்

19.ஆளைப் பாரு, மூஞ்சியைப் பாரு

21. மயிலின் மகிமை

 

 

விடை

1.திகில்- பயம், ஸர்ப்ரைஸ்

4.கயவன் – திருடன்

7.கருங்கல்- கோபுரம் கட்ட பயன்படும்

9.கன்னம் – முத்தம் பெறும் இடம்

10.குரு- பிரம்மா,விஷ்ணு, சிவன்

11.கள்- குடித்தால் போதை

12.கல்- நாய் மீது எறியலாம்

13.நல்வரவு- வருக, வருக

14.புல்-மாட்டுக்குத் தீவனம்

18.சோபை- அழகு

19.கேளிக்கை- பொழுதுபோக்கு, தமாஷ்

20.லிங்கம்- சிவனுடன் இணந்தது

21.தோல்- பவுடர் போடலாம், க்ரீம் போடலாம்

கீழே

2.கிழவன் – வயதான நிலை

3.வயல்- நெல் விளையும் இடம்

4.கடவுள்- இறைவன்

5.காகம்- காலையில் சோறு போடலாம்

6.நுங்கு- பனை மரத்து நன்கொடை

8.கரும்பு- இனிப்பு தருவது

  1. திறக்கப்படுவது

15.ரம்பை- தேவலோக அழகி

14.புரளி- வதந்தி

16.செல்லம்- கண்ணே, மணியே, வா, வா

17.மக்கள்- ஜனங்கள்

18.சோழி- பல்லாங்குழி ஆடலாம்

19.கேலி- ஆளைப் பாரு, மூஞ்சியைப் பாரு

21.தோகை- மயிலின் மகிமை

–SUBHAM–

வேலைக்காரியை கட்டி அணைத்த அகராதி ‘பிடித்த’ வெப்ஸ்டர்! (Post No.5632)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 6 November 2018

GMT Time uploaded in London – 7-22 am

Post No. 5632

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

வேலைக்காரியை கட்டி அணைத்த  அகராதி ‘பிடித்த’ வெப்ஸ்டர்! (Post No.5632)

வெப்ஸ்டர் அகராதியை அறியாதோர் அறியாதோரே (அறிவற்றவர்களே) ஏனென்றால் இன்று அமெரிக்கர்கள் பின்பற்றும்  எளிமையாக்கப்பட்ட ஆங்கில ஸ்பெல்லிங்- குகளை அறிமுகப்படுத்தியவர் அவரே. எழுத்து சீர்திருத்தத்தின் சிற்பி.

அவர் அகராதி ‘படித்தவர்’, அகராதி ‘பிடித்தவர்’, அகராதி ‘செய்தவர்’ என்பது இரு சுவையான சம்பவங்கள்  மூலம் வெளிப்படும்.

அமெரிக்காவின் எழுத்தாளர், அகராதி உருவாக்கியவர், அமெரிக்க அறிவுத் தந்தை, பத்திரிக்கை ஆசிரியர், பெடரெலிஸ்ட் கட்சியின் பிரமுகர் என்று பெயர் எடுத்த நோவா வெப்ஸ்டர் (NOAH WEBSTER) 1758ல் பிறந்தார்; 1843ல் இறந்தார். யேல் பல்கலைக் கழகத்தில் கற்றவர்.

தமிழில் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுவோரை அகராதி பிடித்த ஆள் என்று பறைவர். உண்மையில் அவர்கள் செப்ப விழைவது- அகராதி ‘படித்த’ ஆள் என்பதே. அந்தக் காலத்தில் ஸம்ஸ்க்ருதம் கற்றவர்கள், தநது புலமையினை வெளிக்காட்ட நிறைய பொன்மொழிகளை– சுபாஷிதங்களை- உதிர்ப்பர். விதண்டா வாதம், குதர்க்க வாதம், வாக்குவாதம் முதலியவற்றில் ஈடுபட்டு சொற்களுக்கு புது வியாக்கியானம் தருவர். இதன் அடிப்படையில் பிறந்ததே அகராதி ‘பிடித்த’ பயல்.

நோவா வெப்ஸ்டர் ஒரு முறை சமையல் அறையில்  வேலைக்  காரியை கட்டி அணைத்து முத்தம் தந்தபோது அவரது மனைவி திடீரென்று உள்ளே வந்துவிட்டார்.

ஆங்கில பாணியில், “மிஸ்டர் வெப்ஸ்டர், உமது செயலைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன்” என்றார்

மற்ற யாராவது இப்படி செய்திருந்தால் கை, கால் நடுங்கி, உளறிக்கொட்டி, கிளறி மூடி இருப்பர்.

ஆனால் (அகராதி பிடித்த) வெப்ஸ்டர் சொன்னார்:

“அடி, என் செல்லக்கிளியே!

“நீ திடுக்கிடவில்லை! நீ ஆச்சர்யப்பட்டுப் (amazed) போனாய்!

நாங்கள் இருவர்தான் திடுக்கிட்டுப் (surprised) போனோம்”.

படித்தவர்கள் தவறு செய்தபோதும் நயமிக்கச் சொற்களைப் பிரயோகித்து தம் அறிவை பிரகாஸம் போட்டுக் காட்டுவர்.

XXXX

 

இன்னொரு முறை எழுத்து அறிவு இல்லாத ஒரு ஜீவனுக்கு கடிதம் எழுத வெப்ஸ்டர் உதவினார். அவன் கொச்சை ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல, இவர் அதை சரியான மொழியில் எழுதிக்கொண்டு இருந்தார்.

இறுதியாக கடிதத்தை முடிக்கும் தருவாயில், வெப்ஸ்டர் கேட்டார்,

“ஐயா, வேறு ஏதேனும் சொல்ல விழைகிறீர்களா?” என்று.

அந்த ‘ஜந்து’ சொன்னது,

ஆமாம், மறக்காமல் இந்த வரியையும் சேர்த்து விடுங்கள்.

“இப்படி கொச்சையாக எழுதியதை மறந்துவிட்டு, கடித்தின் அர்த்ததி மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!” (என்று எழுதிவிடுங்கள்)

அவனுக்காக அருமையான ஆங்கிலத்தில் கடிதம் எழுதிக் கொண்டிருந்த வெப்ஸ்டருக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

‘நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு’, ‘குலத்து அளவே யாகுமாம் கல்வி’ என்று ஆன்றோர்கள் செப்பியது பொய்யாமோ?

Tags-வெப்ஸ்டர், வேலைக்காரி

–சுபம்–

WEBSTER WAS ‘SURPRISED’ WHEN HE HUGGED A CHAMBERMAID! (Post No.5631)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 6 November 2018

GMT Time uploaded in London – 6-12 am

Post No. 5631

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

NOAH WEBSTER

AMERICAN LEXICOGRAPHER

ENGLISH SPELLING REFORMER

FATHER OF AMERICAN SCHOLARSHIP

WRITER

BORN ON- 16 OCTOBER 1758

DIED ON – 28 MAY 1843

He published the famous Webster Dictionary in 1806. He was the one who changed the spelling of English words to make it simpler and more meaningful (Eg.Colour= color). Americans follow only his spelling for English words ignoring Oxford dictionary etc.

XXX

SURPRISED OR AMAZED?
It is related of Noah Webster that his wife, coming suddenly into the pantry one day, caught him in the act of embracing the chamber maid.
“Mr Webster, she said, I am surprised”.
The great lexicographer gazed upon her in mild reproof.

“No, my pet”, he replied,
“You are amazed. It is we who are surprised”.

Xxx

POOR SCHOLARSHIP!

Noah Webster once undertook to write out a letter for an illiterate servant. Before concluding, he asked,
“Is there anything else you would like to add?”
His serving man replied,

“Well, you might just ask him to excuse the poor scholarship and want of sense the letter shows.”
XXX SUBHAM XXX

நெஞ்சில் கண்ணன் வருவான்! (Post No.5630)

WRITTEN BY S NAGARAJAN

Date: 6 November 2018

Time uploaded in London – 4-56 AM (GMT)

Post No. 5630

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

நெஞ்சில் கண்ணன் வருவான்!

ச.நாகராஜன்

1

அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

இனிய தீபாவளியை குடும்பத்துடன், உறவினர்களுடன், நண்பர்களுடன் கொண்டாடுவோமாக!

அமெரிக்காவிலும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும் இப்பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவதே உலக அங்கீகாரம் பெற்ற பண்டிகையாக இது இருப்பதைக் காட்டுகிறது.

ஹிந்து மதத்தின் முக்கிய கொள்கையான அறம் வெல்லும்; மறம் மடியும் என்பதைச் சொல்லும் பண்டிகை இது.

நரகாசுரனை மாய்த்து அறம் காத்த கண்ணனை நினைவு கூரும் பண்டிகை இது.

அறம் செழிக்கட்டும்; மறம் அழியட்டும்!

இந்த நேரத்தில் இவாஞ்சலிஸ்ட் தொலைக்காட்சி சேனல்கள் தீபாவளி கொண்டாடப்பட வேண்டுமா என்பன போன்ற தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தியதையும் நாம் நினைவில் வைத்துக் கொண்டு இவர்களை இனம் காண வேண்டும்.

இது போல கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட வேண்டியது அவசியம் தானா, மொஹரம், பக்ரீத் தேவையா என்று ஒரு நிகழ்ச்சியை நடத்த இவர்களுக்கு துணிச்சல் இருக்கிறதா?

சிந்திப்போம்!

2

நெஞ்சில் கண்ணன் வருவான்!

நெஞ்சம் நிறைந்திட சஞ்சலங் குறைந்திட

    நெஞ்சில் கண்ணன் வருவான் – களி

    மிஞ்சக் கொஞ்சிக் குழைவான்

வண்ணம் கண்டிட வார்த்தை மறந்திட

    எண்ணமும் எங்கோ ஓடும் – கனி

    கண்ணனைப் பின்னும் நாடும்

கன்னம் குழைந்திட வன்மை இசைந்திட

     மோகனக் குழலை இசைப்பான் – பல   

     வாவன ராக மழை தான்!

குறிப்பு :29-10-1967 இல் இயற்றிய பாடல்!

****

கற்றோரைக் கற்றோரே காமுறுவர் (Post No.5629)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 5 November 2018

GMT Time uploaded in London – 18-11

Post No. 5629

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

டான்டே (DANTE) என்பவர் உலகப்புகழ் பெற்ற கவிஞர் வரிசையில் இருப்பவர். இதாலிய மொழியில் தி டிவைன்  காமெடி (THE DIVINE COMEDY) என்ற காதல் காவியத்தை யாத்தவர். சிறு வயதிலேயே ரோமானிய கவிஞரான வர்ஜில் (VIRGIL) மூலம் ஊற்றுணர்ச்சி பெற்றவர்.

பிறந்த வருடம் 1265

இறந்த ஆண்டு 1321

இறந்தபோது வயது 56

இதாலியில் உள்ள ப்ளாரன்ஸ்  (FLORENCE) நகரில் பிறந்தார். அவருக்கு 12 வயதானபோதே அவருடைய மணப்பெண் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இவரோ வேறு ஒரு பெண் மீது காதல் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு பீட்ரைஸ் என்று நாமகரணம் செய்தார். அந்தப் பெண்ணுடன் கூடி வாழும் பாக்கியமே இல்லாவிடினும் டிவைன் காமெடி என்னும் கவிதை உதயமாக அந்தப் பெண் காரணமானாள்.

இதாலியில் நகரங்கள் இடையே போர்கள் மூளுவது வாடிக்கை. அதில் டான்டே அலிகியரியும் பங்கேற்றார். இவருடைய மானஸீக காதலி, வேறு ஒருவரை மணந்து 24 வயதிலேயே சொர்க்கத்துக்குச் சென்றாள். அவளது நினைவால் பிறந்த ‘கவிதைத் தாஜ்மஹல்’— டிவைன் காமெடி.

ப்ளாரென்ஸ் நகர், இவர் எதிரிகள் வசமானவுடன் இவர் அந்த நகரை விட்டு நீங்கினார். இதற்குப் பிறகே கவிதை உலகில் நுழைந்தார். அவர் அரசியல் அகதியாகி நகர் நகராக அலைந்தார்.

டிவைன் காமெடியில் இவர் நரகம், இடைப்பட்ட பரிகார உலகம், சொர்கம் என்ற மூன்று இடங்களுக்குப் பயணம் செய்து இறுதியில் சொர்க்கத்தில் மானசீகக் காதலி பீட்ரைஸுடன் இணைகிறார்.

மத்தியகால  ஐரோப்பிய நம்பிக்கைகளைக் காட்டும் காலக் கண்ணாடி இந்த காதல் காவியம். எண்ணற்ற கவிஞர்களையும், கலைஞர்களையும் 800 ஆண்டுகளாக ஊக்குவித்து வரும் ஊற்று இது.

XXX

கற்றோரே கற்றோரைக் காமுறுவர்!

டான்டே ஒரு முறை இதாலியின் வெரோனா நகர அரசரைச் சந்தித்தார். அவர் பெயர் டெல்லா ஸ்கேலா (SIGNOR DELLA SCALA). அவர் சொன்னார்:-

ஐயா, திருவாளர் டான்டே அவர்களே! உம்மைக் கண்டால் என் அரசவை ஆட்கள் எல்லோரும் காறித் துப்புகிறார்களே. இவ்வளவு கல்வி கற்றும் உமக்கு ஏன் இந்த நிலை?

டான்டே சொன்னார்:-

மன்னர் அவர்களே! உமக்குத் தெரியாதா? நம்மைப் போல யார் இருக்கிறார்களோ அவர்களைத் தானே நமக்குப் பிடிக்கும். இது உலக இயல்பு என்பதை அறியீரோ?

(கற்றோரே கற்றோர் காமுறுவர் (முட்டாள்களுக்கு முட்டாள்களைத்தான் பிடிக்கும்).

XXX

 

அவ்வையார் அந்தக் காலத்திலேயே சொன்னார்:

நல்தாமரைக் கயத்தில்நல் அன்னம் சேர்ந்தால் போல்

கற்றாரை கற்றாரே காமுறுவர்; – கற்பு இல்லா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்; முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்– மூதுரை, அவ்வையார்

தாமரைக் குளம் அழகானது; அங்கேதான் அன்னங்கள் போகின்றன. அது போல கற்று அறிந்த அறிஞர்களுடன்தான்  கற்றோர் சேருவர். மூர்க்கர் என்போர் அறிவற்றவர்கள். அவர்கள் முட்டாள்களையே நாடுவர். சுடுகாட்டில் காக்கைகள் இருப்பது போல.

டான்டே சொல்லுவதற்கு முன் அவ்வையார் செப்பிவிட்டார்.

–SUBHAM–