Why does Rahu devour Sun and Moon? (Post No.5648)

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 10 November 2018

GMT Time uploaded in London –13-16
Post No. 5648

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

We continue with Niti Sataka of Bhartruhari. Let us look at slokas/couplets 28,29,30

Bhartruhari stresses in thse three slokas that one must do commendable things.  The animals and humans are in different groupings because of their difference in actions. If a man goes higher and obtain fame , that will differentiate him from ordinary people and animals.

These slokas are about Fame

परिवर्तिनि संसारे
मृतः को वा न जायते ।
स जातो येन जातेन
याति वंशः समुन्नतिम् ॥ 1.29 ॥

What man is not born again while he passes from one birth to another? But that man is only truly born by whose birth his family attains to dignity.

Bhartruhari says one attains fame by improving the prosperity and dignity of the family.

Tamil poet Thiruvalluvar, author of Tamil Veda Tirukkural, says,

If one takes birth in this world one should come with qualities which bring fame; if it is not it is better not to appear al all- Kural 236

He adds,

The gods will honour those who have earned everlasting fame rather than the sages who have attained the abode of the gods – Kural 234

xxx

 

कुसुमस्तवकस्येव
द्वयी वृत्तिर्मनस्विनः ।
मूर्ध्नि वा सर्वलोकस्य
शीर्यते वन एव वा ॥ 1.30 ॥

There are two uses both for a flower bunch (inflorescence) and also for a wise man; they may be exalted on the head or wither in the forest.

Lord Krishna in Bhagavad Gita says

Uththishta , Yaso labha!

Arise! Attain Fame

— Bhagavad Gita 11-33

In Tamil and Sanskrit there are sayigs about men

‘Like a lamp inside a pot’ (may be compared to forest flower)

‘Like a lamp at the top of a hill’ (may be compared to flower on the head of a beautiful woman)

Some wither like beautiful flowers in the forest, without anyone knowing about it.

Others are praised like the flower bunch on the head of a beauty.

xxx

Rahu devouring Moon

‘Although there are plantes like Brihaspati who is the head of the devas, yet Rahu with great mighty power never attack Brihaspati and others. He devours Sun (Lord of the Day) and Moon (Ruler  of the Night) during the periods of eclipse’.

सन्त्यन्ये‌உपि बृहस्पतिप्रभृतयः सम्भाविताः पञ्चषास्

तान्प्रत्येष विशेषविक्रमरुची राहुर्न वैरायते ।
द्वावेव ग्रसते दिवाकरनिशाप्राणेश्वरौ भास्करौ
भ्रातः पर्वणि पश्य दानवपतिः शीर्षावशेषाकृतिः ॥ 1.31 ॥

Here Bhartruhari insists one must do great things; difficult it may be but that which brings glory. That is why Rahu, the snake, goes to Sun and Moon leaving other bright objects in the sky such as Jupiter (Brihaspati) or Venus (Sukra).

No use of fighting with a weakling; no use of beating a dead snake; if one needs fame one must take big tasks.

Hindus who calculated the exact time of eclipses thousands of years ago, used to explain the eclipses to lay men as snakes devouring the sun and the moon.  During the eclipse the sun or moon looks like a round ball devored by someone and released back slowly. Rahu’s head was cut off by Lord Vishnu when he tried to steal the Elixir Amruta according to Hindu Mythology.

–subham–

சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குவது ஏன்? (Post No.5647)

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 10 November 2018

GMT Time uploaded in London –11-57 AM
Post No. 5647

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பர்த்ருஹரியின் நீதி சதகம் ஸ்லோகங்கள் 28,29,30

நீதி சதகத்தில் நூறு பாடல்கள் இருப்பதை அறிவோம். இதுவரை 27 பாடல்களை குறள் கீதை முதலிய நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். நமது அறிவு வேட்டையைத் தொடர்வோம்.

பாடல் 28

பரிவர்தினி ஸம்ஸாரம் ம்ருதஹ கோ வா ந ஜாயதே

ஸ ஜாதோ யேன ஜாதேன யாதி வம்சஹ ஸமுன்னதிம் -28

நிலையற்ற இந்த உலகத்தில் யார் பிறப்பு- இறப்புச் சுழலில் விழவில்லை? ஒருவனுடைய குடும்பத்தின் செல்வ வளத்தையும் பெருமையையும் அதிகரிக்கும் பிறப்பே சிறந்தது.

பிராணிகளும், தாவரங்களும் இறக்கின்றன, பிறக்கின்றன. ஆனால் மனிதனுக்கும் அவைகளுக்கும் வேறுபாடு இல்லாவிடில் மனிதர்களும் அவைகளுடன் எண்ணப்படும். ஆகையால் வளத்தையும் நல்ல பெயரையும் சம்பாதிக்கும் வாழ்வே வாழ்வு ஏனையவை மிருக வாழ்வு.

ஒருவனுடைய மகன் செய்யும் செயற்கரிய செயல்களைக் கண்டு, இவன் தந்தை என்ன தவம் செய்து இந்தப் பிள்ளையைப் பெற்றானோ என்று வியக்க வேண்டும் என்று வள்ளுவனும் சொல்வான்.

புகழோடு வாழும் வாழ்க்கையே வாழ்க்கை; அல்லது பிறக்காமல் இருப்பதே மேல் என்றும் வள்ளுவன் மொழிவான்.

அவன் செப்பிய  குறள்கள் இதோ

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான்கொல் எனுஞ்சொல் –குறள் 70

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று- 236

உத்திஷ்ட! யஸோ லப!! எழுந்திரு! புகழ் அடை!!

–என்று அர்ஜுனனுக்கு கிருஷ்ணனும் பகவத் கீதையில் கட்டளை இடுகிறான் (11-33)

இவை மேற்கூறிய பர்த்ருஹரியின் கருத்தை எதிரொலிக்கும்.

xxx

 

குஸுமஸ்தபகஸ்யேவ த்வயீ வ்ருத்திர் மனஸ்வினஹ

மூர்த்னிவா ஸர்வலோகஸ்ய சீர்யதே வன ஏவ வா –29

பூங்கொத்து இருக்கிறது; அது காட்டிலும் இருக்கலாம்; அல்லது பெண்களின் தலையிலும் இருக்கலாம் இதே போலத்தான் ஒவ்வொருவருக்கும் இரண்டு நிலைகள் இருக்கின்றன.

பூங்கொத்து, பெண்களின் தலையை அலங்கரிக்கையில் சிறப்பு பெறும்; அதே பூங்கொத்து காட்டில் மலர்ந்து, யாரும் பார்க்காமல் உதிர்ந்தும் போவதுண்டு. ஆக புகழ் பெறுவதும் புகழ் இல்லாமல் வாழ்வதும் நம் கையில் இருக்கிறது.

வள்ளுவன் இந்த உவமையை வேறு ஒரு இடத்தில் பயன்படுத்துகிறான்.

வாசனை இல்லாத கல்யாண முருங்கைப் பூ

வள்ளுவன் சொன்னான்:-

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

தான் படித்த விஷயத்தை அழகாக விளக்கத் தெரியாதவர்கள், மலர்ந்தும் மணம் வீசாத மலர்களுக்கு ஒப்பாவர்

தமிழில்  இதை விளக்கும் அழகான பழமொழிகளும் உள

குடத்திலிட்ட விளக்கு போல (காட்டுப் பூ)

குன்றிலிட்ட விளக்கு போல (பெண்களின் சிகை அலங்காரப் பூ)

இஃதே போல சம்ஸ்கிருத்தத்திலும் ஒரு பாடல் உண்டு

 

நல்ல குலத்தில் பிறந்து அழகாக, இளமையுடன் தோன்றினாலும், படிக்கா விட்டால், வாசனை இல்லாத கிம்சுக (கல்யாண முருங்கைப் பூ போலத்தான்) மலர் போலவே இருப்பர்.

ரூப யௌவன சம்பன்னா விசால குல சம்பவா:

வித்யாஹீனா ந சோபந்தே நிர்கந்தா இவ கிம்சுகா:

xxxx

சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குவது ஏன்?

செயற்கரிய  செயல் செய்தால்தான் பெருமை; இதை பர்த்ருஹரி அழகாக விளக்குகிறார்

ஸந்த்யன்யேஅபி ப்ருஹஸ்பதி ப்ரப்ருதயஹ ஸம்பாவிதாஹா பஞ்சஷா

ஸ்தான்ப்ரத்யேஷ விஷேஷ விக்ரமருசீ ராஹுர்ந வைராயதே

த்வாவேவ க்ரஸதே திவாகர நிசா ப்ராணேஸ்வரௌ பாஷ்யவரௌ

ப்ராதஹ பர்வணி பஸ்ய தானவபதிஹி சீர்ஷாவசேஷா க்ருதிஹி-30

வானத்தில் குரு போன்ற கிரஹங்கள் பிரகாசிக்கின்றன. ஆனால் ராஹு அவைக   ளை விழுங்குவதில்லை. கிரஹண காலத்தில் சூரியனையும் சந்திரனையும் அல்லவா ராஹு விழுங்குகிறான். இவ்வளவுக்கும் அவன் தலை மட்டும்தான் இருந்தது!

இந்துக்களுக்கு ராஹு கேது ஆகிய இரண்டும் சாயா (shadows) கிரஹங்கள் (நிழல்கள்) என்பது தெரிந்தும், பாமர மக்களுக்குப் புரியவைப்பதற்காகவும், கிரஹண காலத்தில் சில செயல்களைச் செய்யக்கூடாது என்று எச்சரிக்கவும் சூரியனையோ, சந்திரனையோ ராஹு அல்லது கேது விழுங்குவதாகச் சொல்லுவர். உண்மையில் கிரஹண காலத்தில் , சூரியனோ சந்திரனோ பாம்பின் வாயில் போய்விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவது போலவே தோன்றும். மேலும் அமிர்தத்தைத் திருட முயன்ற ராஹு என்னும் பாம்பை விஷ்ணு வெட்டியதால் தலை மட்டுமே எஞ்சியதாகப் புராணக் கதைகள் புகலும். இதில் பர்த்ருஹரி உவமையாகக் காட்டி சொல்ல விழைவது என்ன வென்றால்,

பெரிய செயல்களைச் செய்தால்தான் புகழ். நோஞ்சானை அடித்துப் போட்டுவிட்டு பயில்வான் என்று பெயர் வாங்குவதில் பொருள் இல்லை.

செத்த பாம்பை அடித்துவிட்டு வீரன் என்று சொல்வதிலும் பொருள் இல்லை. ஆக செயற்கரிய செயலைச் செய்க.

இதை வள்ளுவனும் ஒரு குறளில் விளம்புவான்:-

நிலவரைநீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு –குறள் 234

ஒருவன் பூவுலகத்தில் புகழ் மணக்கும் செயல்களைச் செய்வானாகில், தேவலோகத்தில்  அவனுக்குத் தான் வரவேற்பு கிடைக்கும்; தேவர்களைப் போற்றமாட்டார்கள்.

परिवर्तिनि संसारे
मृतः को वा न जायते ।
स जातो येन जातेन
याति वंशः समुन्नतिम् ॥ 1.32 ॥

कुसुमस्तवकस्येव
द्वयी वृत्तिर्मनस्विनः ।
मूर्ध्नि वा सर्वलोकस्य
शीर्यते वन एव वा ॥ 1.33 ॥

सन्त्यन्ये‌உपि बृहस्पतिप्रभृतयः सम्भाविताः पञ्चषास्
तान्प्रत्येष विशेषविक्रमरुची राहुर्न वैरायते ।
द्वावेव ग्रसते दिवाकरनिशाप्राणेश्वरौ भास्करौ
भ्रातः पर्वणि पश्य दानवपतिः शीर्षावशेषाकृतिः ॥ 1.34 ॥

–subham–

பெங் சுயி- லோ ஷு சதுரம் (Post No.5646)

WRITTEN BY S NAGARAJAN

Date: 10 November 2018

Time uploaded in London – 8-52 AM (GMT)

Post No. 5646

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பெங் சுயி– லோ ஷு சதுரம்

ச.நாகராஜன்

கிறிஸ்து பிறப்பதற்கு முன் 2200 ஆண்டுகளுக்கு முன் சீனாவை ஆண்ட மன்னன் யூ, ஒரு நாள் மஞ்சள் நதிக்கரை ஓரம் உலாவப் போனான்.  அப்போது அங்கு ஒரு ஆமையைப் பார்த்தான். அதன் ஓட்டில் ஒரு சில புள்ளிகள் காணப்பட்டதையும் அவை சதுர வடிவத்தில் உள்ள கட்டங்களில் இருப்பது போலவும் அமைந்திருப்பதையும் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

அந்தப் புள்ளிகளின் கூட்டுத்தொகை ஒரே மாதிரியாக வரவே அவன் ஆச்சரியப்பட்டு தன் அரண்மனைக்கு அதைக் கொண்டு வந்தான்.  அந்த ஆமைக்கு அன்றிலிருந்து ராஜ உபசாரம் தான்!

 ஆமை ஓட்டின் முதுகில் இருந்த மாயச் சதுரம் போலவே தானும் அமைக்க ஆரம்பித்தான். அன்றிலிருந்து மாயச் சதுரத்தின் மகிமை உலகில் பரவ ஆரம்பித்தது.

அந்த மாயச் சதுரத்தின் ரகசியத்தை உணர்ந்தவர்கள் பெங் சுயி என்ற சீன வாஸ்து சாஸ்திரத்தைக் கண்டனர்.

ஆமையின் முதுகில் இருந்த மாயச் சதுரம் இது தான்:

 

தெற்கு   

    

 4    9     2

 3    5     7

 8    1     6

  வடக்கு   

இது வியக்க வைக்கும் பல விந்தைகளைக் கொண்டது.

இது லோ ஷு சதுரம் (LO SHU SQUARE) என்று அழைக்கப்படுகிறது.

இதை வைத்தே பெங் சுயி சூத்திரமான The Eight Mansions Formula அமைக்கப்பட்டுள்ளது.

குவா நம்பர் என்ற ஒரு எண் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க குவா சூத்திரம் உள்ளது. இதை ஒவ்வொருவரும் கண்டு பிடித்துக் கொண்டு அதற்குத் தக தன் உத்தியோகத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

பெங் சுயியின் வெற்றிக்கு நிதர்சனமாக நாம் காணும் ஒரு நகரம் ஹாங் காங். மேலை நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் மல்டி நேஷனல் நிறுவனங்கள் இப்போது பெங் சுயி படி தங்கள் வணிகத்தை மேம்படுத்தி வருகின்றன.

வீடு கட்டுவதற்கு விரும்பும் ஒருவர் இந்த பெங் சுயி உத்திகளின் படி வீட்டை அமைத்துக் கொள்ளலாம்; ஏற்கனவே வீட்டைக் கட்டியுள்ளவரும் தங்கள் வீட்டின் பகுதிகளை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.

பெங் சுயி சாஸ்திரத்தில் பிரபலமான லில்லியன் டூ இது பற்றித் தனது புத்தகமான ‘Feng Shui – The complete Guide to the art and practice of Feng Shui’-இல் விளக்கியுள்ளார்.

 

பெங் சுயி என்றால் காற்றும் நீரும் என்று பொருள். இதை நமது வாழ்க்கையின் வளத்திற்காகப் பயன்படுத்துவதற்கு இதன் அடிப்படை விதிகளை அறிந்து கொள்ள வேண்டும்.

அனைத்தையும் செய்வது ‘ச்சீ’ (Chi) எனப்படும் ஆற்றல் தான்! இந்த ஆற்றலை நமக்கேற்றவாறு முறைப்படுத்துவதற்கு பெங் சுயி உத்திகள் தேவை.

செல்வ வளம், உடல் நலம், மன நிம்மதி என அனைத்தையும் பெங் சுயி மூலம் அடைய முடியும்.

போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்ற லில்லியன் டூ பல வருட காலம் பெங் சுயி பற்றி ஆராய்ந்தார். தான் கற்றவற்றைப் பிறருக்குச் சொல்லித் தர விளைவுகள் அபாரமாக நல்ல விதத்தில் இருந்தன.

அந்த அனைத்து உத்திகளையும் படங்களுடன் விளக்கி 360 பக்கங்கள் கொண்ட இந்த நூலை உருவாக்கி இருக்கிறார்.

ஏழு பகுதிகள் கொண்ட இந்த நூலில் முதல் பாகம் பெங் சுயி உருவான வரலாறை விளக்குகிறது. இரண்டாம் பகுதி பெங் சுயி அடிப்படைகளை விளக்குகிறது.மூன்றாம் பகுதி நமது வீட்டில் இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்குகிறது. நான்காம் பகுதி தனி நபர் மேம்பாட்டுக்கானது. ஐந்தாம் பகுதி நமது தோட்டத்தில் பெங் சுயியைமுதல் எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றி விளக்குகிறது. வணிக வெற்றிக்கு பெங் சுயி எப்படி உதவும் என்பதை ஆறாம் பகுதியும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பெங் சுயியின் உதவியை எப்படி மேற்கொள்ளலாம் என்பதை ஏழாம் பகுதியும் விளக்குகிறது.

யின் மற்றும் யாங் (Yin and Yang) ஆற்றலை எட்டு திசைகளிலும் சமச்சீராக்கி நமது குடும்பத்தையும், நம்மையும்  மேம்படுத்தும் இந்த பெங் சுயி ஒரு அற்புதக் கலை.

இதை முறையாக விளக்கும் லில்லியன் டூ புத்தகம் பெங் சுயி ஆர்வலர்களுக்கு ஒரு வரபிரசாதம்.

****

குறிப்பு : இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய மாயச் சதுரமும் கணிதப் புதிர்களும் என்ற நூலில் முதல் அத்தியாயத்தில் உள்ள முதல் மூன்று பாராக்கள் இந்தக் கட்டுரையின் முற்பகுதியாக அமைகிறது.

Tags- யின், யாங்மாயச் சதுரம்லோ ஷு சதுரம்

மறைந்திருக்கும் குறள் எவை? (Post No.5645)

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9 November 2018

GMT Time uploaded in London –19-27
Post No. 5645

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கீழேயுள்ள கட்டத்தில் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தின் கீழ் உள்ள இரண்டு திருக்குறள்கள் இருக்கின்றன. கண்டு பிடியுங்கள். சொற்கள் முழுதாக இருக்கும். பிரிக்கப்படவில்லை. உலகு என்று ஒரு சொல் இருக்குமானால் அது உலகு என்றே வரிசைப்பட இருக்கும்.

 

ANSWER:–

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு (1)

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழார் எனின் (2)

–SUBHAM–

பிளாட்டோவும் என்னைப் போலவே அறிஞர்! (Post No.5644)

 

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9 November 2018

GMT Time uploaded in London –13-29
Post No. 5644

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பிரிட்டனில் பிரபுக்கள் சபை உறுப்பினருடன் ஒரு தத்துவ அறிஞரும் உணவு உண்ண அமர்ந்தார். அவர் ஒவ்வொரு தின்பண்டத்தையும் உற்று நோக்கி ருசித்து எடுத்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட ஒரு பிரபுவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. வாயைத் திறந்தார்; சொற்களை உதிர்த்தார்:-

“என்ன இது விநோதமாக இருக்கிறதே! உங்களைப் போன்ற தத்துவ அறிஞர் கூட இப்படி விருப்பப்பட்ட உணவைத் தேடி எடுத்து உண்பீர்களா?

உடனே அந்த தத்துவ அறிஞர் சொன்னார்:

அட, ருசியான பண்டங்களை எல்லாம், கடவுள் முட்டாள்பய ல்களுக்கு மட்டும் படைத்தாரோ?

xxxx

 

கழுதையும் குதிரையும் ஒன்றாகுமா?

பிரிட்டிஷ் பிரதமர் தாமஸ் பெலாம் ஹோல்ஸ் (நியூகாஸ்ல் பிரபு DUKE OF NECASTLE) பிரதமராக இருந்த போது லாரன்ஸ் ஸ்டேர்ன் (LAWRENCE STERN) என்ற பிரபல கதாசிரியருடன் பேசிக் கொண்டிருந்தார்.

பிரதமர் சொன்னார்,

உங்களைப் போன்ற அறிஞர்கள் எல்லாம் வேலைக்கு லாயக்கு அற்றவர்கள். உங்களுக்கு எழுதத் தெரியுமே தவிர வேலை செய்யத் தெரியாது.

உடனே எழுத்தாளர் ஸ்டேர்ன் சொன்னார்,

ஐயா, பிரதமர் அவர்களே. குதிரையும் சேனத்தை சுமக்கும்.

கழுதை அதைவிட பெரிய பாரத்தை சுமக்கும்.

கழுதையும் குதிரையும் ஒன்றாமோ!!

xxxx


பிளாட்டோவும் நானும் ஒன்றே!

ரால்ப் வால்டோ எமர்சன் (R W EMERSON) என்பவர் அமெரிக்காவின் புகழ்மிகு கவிஞர், தத்துவ அறிஞர், கட்டுரையாளர்.

அவர் ஒரு முறை கிரேக்க அறிஞர் பிளாட்டோவின் நூல் ஒன்றை பக்கத்து வீட்டு கிராமத்தானுக்குப் படிக்கக் கொடுத்தார். அந்த கிராமத்து ஆசாமி கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் அதைத் திருப்பிக் கொடுத்தார்.

எமர்ஸன் கேட்டார்:

புஸ்தகத்தைப் படித்தீர்களா? எப்படி இருந்தது? உங்கள் அபிப்ராயம் என்ன?

அந்தப் பட்டிக்காட்டான் சொன்னான்,

படித்தேனே! பிளாட்டோ என்னைப் போலவே கொள்கை உடையவர். என்னுடைய அச்சுதான் அவர்!

xxxx

நல்ல மூக்கொடை

ஜான் மேனார்ட் (JOHN MAYNARD) என்பவர் பிரிட்டனின் பெரிய சட்ட நிபுணர்.

அவருக்கு மிகவும் வயதானபோது, ஒருவர் அவரை வசை பாடினார்.

ஓய், கிழவரே! உமக்கு வயதாகிவிட்டது. சட்டம் எல்லாம் மறந்து போச்சு.

அந்த வயதிலும் அறிவு மழுங்காத அந்த மேதை உடனே பதிலடி கொடுத்தார்:-

அன்பரே! உண்மைதான்! நீர் படிக்காத அளவை விட  அதிக அளவு சட்டம் மறந்து போச்சு!

(அவர் எந்த அளவுக்கு நூல் அறிவற்றவரோ அந்த அளவைவிட….. என்று சொன்னதன் மூலம் அவர் பெரிய முட்டாள் என்பதை இடித்துக் காட்டி மூக்கை உடைத்தார்).

Tags:– மூக்கொடை, பிளாட்டோ, எமர்சன்

XXXX SUBHAM XXX

MEN OF WIT ARE NOT FIT FOR JOBS (Post No.5643)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9 November 2018

GMT Time uploaded in London –7-27 am
Post No. 5643

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Learned Men Anecdotes

Someone once rudely taunted John Maynard, Lord Commissioner of the Great Seal of England, with having grown so old as to forget his law.
“True Sir”, he replied,
“I have forgotten more law than you ever learned” .

Xxxx

PHILOSOPHERS ALSO NEED FOOD

A noble man observing a person eminent for his philosophical talents, intent on choosing delicacies at table said to him,
What! Do you philosophers love dainties?
Why not — do you think my Lord, that the good things of the world were only made for blockheads?

Xxx

 

MEN OF WIT ARE NOT FIT FOR JOBS
The Duke of Newcastle, when prime minister, once told the author of Tristan Shandy, that men of wit were not fit to be employed, being incapable of business.

“They are not incapable of business, my Lord, but above it, replied Sterne. A sprightly generous horse is able to carry a pack saddle as well as an ass, but he is too good to be put to the drudgery”.

Xxxx

 

WORDS WORTH AND COLERIDGE COULD NOT DO IT

Cottle, the Bath bookseller, recorded,

I removed the harness…..but…… could not get off the collar. In despair I called for assistance. Mr Wordsworth first brought his ingenuity into exercise, but, after several unsuccessful efforts, he relinquished the achievement as altogether impracticable. Mr Coleridge now tried his hand, but….after twisting the poor horse’s neck, almost to strangulation, and the great danger of his eyes, he gave up the useless task, pronouncing that the horse head must have grown (gout or dropsy) since the collar was put on! for it was a downright impossibility for such a huge os frontis to pass through narrow a collar! At about this juncture the servant girl appeared, turned the collar upside down, and removed it.

Xxx


PLATO HAS MY IDEAS!
One of Emerson’s rural neighbor s at Concord borrowed from him a copy of Plato
Did you enjoy the book?, asked Emerson, when it was returned.
I did that, replied his neighbour.
This Plato has a lot of my ideas

Xxx

QUEEN CHRISTINA
Queen Christina of Sweden complimented the celebrated Vossius by saying that he was so well learned as not only to know whence all the words came but whither they were going.

Tags: Plato, Men of wit, Coleridge, law, philosophers

XXX  SUBHAM XXX

இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை, மகனே!(Post No.5642)

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 November 2018

Time uploaded in London – 6-56 AM (GMT)

Post No. 5642

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ச.நாகராஜன்

தடை இல்லாமல் வாழ்க்கை சீராகச் செல்ல?

விநாயகரை வணங்கு.

அனைத்திலும் வெற்றி பெற?

முருகா, துணை

படைப்பாற்றலுக்கு?

பிரம்மா

காத்து வளர்ச்சியுறச் செய்ய?

விஷ்ணு

நலம் தந்து வளம் பெறச் செய்து தீமைகளை ஒழித்து அருள் பாலிக்க

சிவமே துணை

அஷ்ட ஐஸ்வர்யமும் அஷ்ட சித்தியையும் பெற?

மஹாலக்ஷ்மியே சரணம்

வாக்குக்கும், அறிவிற்கும், ஞானத்திற்கும்?

சரஸ்வதி துதி

மொழிக்குத் துணை?

முருகா என்னும் நாமம்!

நெஞ்சத்தின் பயன்?

அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சம்

 

Navagraha picture posted by Lalgudi Veda

ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் ?

ஆதித்யன். சூரியன்

Picture posted by Lalgudi Veda

மனத்திற்கு?

சந்திரன்

வணிக வெற்றிக்கு?

புதன்

ஆசிரியத் தலைமைக்கு?

குரு

ஆயுளுக்கு?

காப்பதற்கும் வளர்ப்பதற்கும் சனி

வீரத்திற்கு?

செவ்வாய்

பகை கெட?

ராகு

முக்திக்கு

கேது

பொறுமைக்கும் நிலை பெறவும் பெறவும்?

பூமி

மூச்சிற்கு?

வாயு

நீடித்து வாழ?

அக்னி

எங்கும் பரந்த நிலை பெற?

ஆகாயம்

உயிர் வாழ?

நீர்

புற இருள் போக?

அக இருள், புற இருள் போக கண்

ஜீவனைத் தங்க வைக்க?

நாசி

உயிரை வளர்க்க?

உடம்பை வளர்த்தால் உயிர் வளரும்

செல்வத்துள் தலையாய செல்வம் பெற?

செவிச் செல்வம் செல்வத்துள் செல்வம்

சுவை பட வாழ்வதற்கு?

நாக்கு

 

வெளிச்சம் தருவது?

இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது

நமசிவாய என்னும் நாமம்

அதைத் தருவது?

பன்னிரு திருமுறைகள்

நலம் தரும் ஒரு சொல்.

நாராயணா என்னும் சொல்.

அதைத் தருவது?

நாலாயிர திவ்ய பிரபந்தம்

வாழ்க்கை தத்துவம் அறிய?

பகவத் கீதை

அரக்க சக்தியை வெற்றி பெற?

ஆதித்ய ஹ்ருதயம்

என்றும் மாறாதது?

வேதங்கள்

மாறுவது?

ஸ்மிருதிகள்

வலிமையுள்ளது?

காலம்

அனைத்தையும் அழிப்பது?

காலம்

அனைத்தையும் காப்பது?

காலம்

நினைக்க வேண்டிய ஒன்று?

எப்போதும் நினைக்க வேண்டியது மேலே சொன்ன அனைத்திற்கும் காரணமான ஆதி சக்தி!

இவை அனைத்தையும் தருவது எது?

ஹிந்துத்வம். இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை மகனே!

Tags–இல்லாதது ,இல்லை

***

தங்கம் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5641)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –18-30
Post No. 5641

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கீழேயுள்ள கட்டத்தில் குறைந்தது 22 தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. கண்டு மகிழ்க; தமிழ் வாழ்க

விடை கீழே உளது.

குறுக்கே

1.இது சரியாக இல்லாவிடில் வேலை கிடைக்காது

4.விலையுயர்ந்த பொருள்; பெண்களுகு உயிர்

7.தண்ணீர் இப்படி இருந்தால் தெளிய வேண்டும்

8.கட்டிடம் கட்டத் தேவை

10.கொடி பறக்கத் தேவை

11.சின்ன

  1. N0.9 ஒன்பதைப் பாருங்கள்

14.தவறு

15.சிவப்புக் குட்டி

16.பறவை

20.நுழை

21.நாயை விரட்ட உதவும்

22.வினவு

கீழே

2.சந்யாசிகள் வரவேற்பில் வழங்கப்படுவது

3.மீனாட்சியின் கண்

4.கால் காசுக்குப் பிரயோஜனம் இல்லை என்பர்

5.தோடி, பூபாளம், இந்தோளம்

6.கெடுதி

8.வெள்ளையுடன் பேசப்படுவது

9.பந்தைப்………… கட்டிப்…………………………….

10.தேங்காய் நாரின் மறு வடிவம்

13.இதற்கு மயங்காதோர் யார்?

16.கடலில் இருந்து வரும்; மழையைத் தரும்

17.காற்றினில் மிதந்து வரும் இனிமை

18.தாழ்ப்பாளின் நண்பன்

19.குடியைக் கெடுக்கும்

  1. கடவுள் கொடுத்த ஐந்து

21.தேள் கொடுக்கும்

 

 

விடை

1.தகுதி

2.கும்பம்

3.கயல்

4.தங்கம்

4.தம்பிடி

5.ராகம்

6.தீங்கு

7.கலங்கல்

8.கறுப்பு

8.கல்

9.பிடி

10.கயிறு

10.கம்பம்

11.குறு

12.பிடி

13.சங்கீதம்

15.செங்கன்று

14.பிழை

16.புள்

16.புயல்

17.கீதம்

18.கைப்பிடி

19.குடி

20.புலன்

20.புகு

21.கல்லடி

21.கடி

22.கேள்

TAGS–தங்கம், குறுக்கெழுத்துப் போட்டி

–subham–

தாமரைக்கு தமிழில் எத்தனை பெயர்கள்? (Post No.5640)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –16-26
Post No. 5640

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் நிகண்டுகளில் தாமரைக்கான பெயர்களைத் தருகையில் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையும் சேர்த்தே தருவர். ஏனெனில் சங்க காலம் முதல் இன்று வரை எல்லா அகராதிகளிலும் நிகண்டுகளிலும் ‘தமிழ்’ என்ற பெயர் இருந்தாலும் பாதி ஸம்ஸ்க்ருத்ப் பெயர்களே!!! அதை நினைவில் வைத்துக்கொண்டு கட்டத்தில் உள்ள 19 தாமரை மலரின் பெயர்களைக் கண்டு பிடியுங்கள். மலர் என்று மட்டும் பார்த்தால், இந்துப் பெண்களின் பெயர்களில் அதிகம் இடம் பெறுவதும் தாமரை மலரின் பெயர்களே.

 

கீழ்கண்ட பெயர்கள் உள்ளன:-

தாமரை, மலர், வாரிஜம், அம்புஜம், ஜலஜம்

அம்போருகம், கமலம், அரவிந்தம், இண்டை,

புண்டரீகம், முளரி, பங்கஜம், சதபத்ரி, பதுமம்

சரோஜம், நளினம், அரும்பு, முண்டகம், ராஜீவ.

சரோஜா, நளினி, பத்மா, அம்புஜம், ஜலஜா, கமலா முதலிய பெயர்கள் தாமரையின் பெயர்கள் என்று பலருக்குத் தெரியாது.

மலர் என்றால் தாமரை; இந்தியாவின் தேசீய மலரும் தாமரை.

Tags– தாமரை,  பெயர்கள்

தாமரை வாழ்க; தாமரை வெல்க

நரகத்தின் வாயிலும் சொர்க்கத்தின் வாசலும் (Post No.5639)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –15-24
Post No. 5639

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ், ஸம்ஸ்க்ருதம், பாலி மொழிகளில் பகவான் க்ருஷ்ணர், புத்தர், திருவள்ளுவர் ஆகியோர் ஒரே கருத்தை மொழிவது கண்டு இன்புறத்தக்கது. திருக்குறள் ,பகவத் கீதை, தம்மபதம், ஹிதோபதேசம், யோக வாசிஷ்டம் ஆகியவற்றில் ஒரே கருத்தைக் காண்பது மகிழ்ச்சி தரும்; அவற்றைப் படித்து ஞானம் பெறுவோம்.

காமம், வெகுளி, மயக்கமிவை மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய் (குறள் 360)

பொருள்

விருப்பு, வெறுப்பு, அஞ்ஞானம் (காமம், க்ரோதம்,லோபம்) இவை மூன்றும் ஒருவன் மனதில் கூட வராத நிலயில் மெய்யுணர்வு தோன்றும்; வினை கெடும்; பிறவிப் பிணி என்னும் நோய் அகலும்—

என்று மெய்யுணர்வு அதிகாரத்தில் வள்ளுவர் பகர்வார்.

இதை முன்னரே பகவத் கீதையில் கண்ணனும் செப்பினான்:

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனம் ஆத்மனஹ

காமஹ க்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாத் ஏதத் த்ரயம் (16-21)

பொருள்

ஆத்மாவிற்கு நாசம் விளைவிக்கும் இந்த நரக வாயில் மூவகைத்து– காமம், கோபம், லோபம் என்பன; ஆகையால் இம்முன்றையும் தள்ள வேண்டும்.

இதை புத்தர் ‘தம்மபத’த்தில் இவ்வாறு புகல்வார்:

யஸ்சசேதம் சமுச்சின்னம் மூலகச்சம் சமூஹதம்

ச வந்ததோஷோ மேதாவி சாதுரூபோ தி உச்சதி (தம்மபதம் , 263)

பொருள்

யார் ஒருவனிடத்தில் பொறாமை, பேராசை,கெட்ட குணம் ஆகியன களையப்படுகிறதோ, வேருடன் அகற்றப்படுகிறதோ, அவனே மேதாவி/ அறிஞன்; அழகன்.

xxx

 

ஸம்ஸ்க்ருதப் பொன் மொழி

காமோலோபஸ்ததா க்ரோதோ டம்பஸ் சத்வார இத்யமீ

பொருள்

ஆசை, கோபம், பேராசை/கருமித்தனம், டாம்பீகம்/தற்பெருமை ஆகிய நான்கும் நரகத்தின் வாசல்கள்

ஹிதோபதேசம் மொழிவது என்னவென்றால்,

மரணத்தின்  வாசல்கள் 4

அனுசித கார்யாரம்பஹ ஸ்வஜன விரோதோ பலீயஸா ஸ்பர்தா

ப்ரமதாஜன விஸ்வாசோ ம்ருத்யோர் த்வாராணி சத்வாரி

பொருள்

பயனற்ற வேலை செய்தல்,சொந்தபந்தங்களைப் பகைத்தல், தன்னைவிட வலியவனுடன் மோதல், இளம்பெண்களிடம் நம்பிக்கை வைத்தல் ஆகிய நான்கும் மரணப் பாதையின் வாசல்கள்.

 

மோக்ஷத்துக்கான 4 வாசல்கள்

மோக்ஷத்வாரே த்வாரபாலாஸ் சத்வாரஹ பரிகீர்த்திதாஹா

சாமோ விசாரஹ ஸந்தோஷஸ் சதுர்த்தஹ ஸத்ஸங்கமஹ

–யோக வாசிஷ்டம் 2-11-59

மோட்சத்தின் (வாசலில் நிற்கும்) காவல்காரர்கள் நால்வர்:

மனக் கட்டுப்பாடு, ஆத்ம விசரணை, திருப்தி (போதும் என்ற மனம்), சாதுக்களின் சஹவாசம் (தொண்டருடன் கூட்டு)

ஆக நல்ல வழி, கெட்ட வழி என்பதை எவரும் நினைவிற்கொள்ள வசதியாக ஆன்றோர்கள் கூறிவிட்டனர். பின்பற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.

Tags– நரக வாசல், சொர்க்க வாசல்,மோக்ஷ வாசல்

–சுபம்–