20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள்; திருப்புகழில் சொல் அழகும் பொருள் அழகும்! -27 (Post No.15,442)

Written by London Swaminathan

Post No. 15,442

Date uploaded in Sydney, Australia –  21 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 27

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 27

மூன்று சிவபக்த அசுரர்கள் கதை!

உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும்

முடி தமனிய தநு உடன் … உருவம் கரியவனாகிய திருமாலை ஒப்பற்ற

அம்பாகவும், பாம்பு அரசனான வாசுகியை (வில்லின் முனைகளில்)

முடியப்படும் கயிறாகவும், பொன்னுருவ மேரு மலையை வில்லாகவும் கொண்டு,

உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும்

உறுதிபடு சுர ரதமிசை அடி இட … சக்கரங்கள் சூரிய சந்திரர்

எனப்படும் சுடர்களாகவும், தேர்ப்பாகன் பிரமன் ஆகவும், வேதங்களாகின

குதிரைகள் பூட்டப்பட்ட திண்ணிய தேவர்களே தேர் ஆகவும்

வைத்துக்கொண்டு, (சிவபெருமான்) தேரில் அடி எடுத்து வைத்தவுடனே,

நெறு நெறு என முறிதலு(ம்) நிலை பெறு தவம் உடைய

ஒருவரும் இருவரும் அருள்பெற … நெறு நெறு என்று அந்தத் தேர் முறி படவும், அசைவு உறாத தவ நிலையைக் கொண்ட திரிபுரத்தில் இருந்த மூன்று சிவபக்தர்கள்* (தீயில் மாளாது உய்ந்து) அருள் பெறவும்,

ஒரு கோடி தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என

வெடி படுவன புகைவன திகு திகு என எரிவன அனல்

நகையொடு முனிவார் தம் சிறுவ … (திரிபுரத்திலிருந்த) ஒரு கோடிக்

கணக்கான வீதிகளும் ஊர்களும் அசுரர்கள் தலையுடன் சட சட என

வெடி பட்டும், புகை விட்டும், திகுதிகு என்று எரியவிட்டும் தீ எழுப்பிய சிரிப்பைக் கொண்டு கோபித்தவரான சிவபெருமானது குழந்தையே,

வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணையில் எழு

நிலை திகழ்வன சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய

பெருமாளே. … வேடர்கள் மகளைக் கண்டு உருக்கம் கொண்ட

பெருமை வாய்ந்தவனே, திருவண்ணாமலையில் ஏழு** நிலைகள்

விளங்கும் மலை உச்சியில் ஒப்பற்ற மயிலின் மேல் அமர்ந்து உலவி விளக்கம் தரும் பெருமாளே.

திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாது என உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கர் ஆகவும் போந்து, அசுரர்களை மயக்கிச் சிவபூஜையை கைவிடச் செய்தனர். ஆனால்

மூன்று அசுரர்கள் மட்டும் சிவ நெறியிலேயே இருந்து ஒழுகி இறக்காமல் தப்பினர்.

** ஏழு நிலைகள் (குண்டலினி) – மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம்.

The seven fundamental chakras are known as muladhara, which is located at the perineum, the space between the anal outlet and the genital organ; swadhisthana, which is just above the genital organ; manipuraka, which is just below the navel; anahata, which is just beneath where the rib cage meets; vishuddhi, which is at the pit of the throat; ajna, which is between the eyebrows; and sahasrara, also known as brahmarandra, which is at the top of the head.

***

வேதங்கள் முரசு கொட்டி சொல்வது என்ன?

கலை கொடு கருத அரியதை … கலை நூல்களால் கருதவும்

அரிதான மெய்ப் பொருளை,

விழி புனல் வர மொழி குழறா … கண்களில் நீர் வர, பேச்சுக் குழறி,

அன்பு உருகி உனது அருள் பரவு வகை வரில் … அன்புடன்

மனம் உருகி உன் திருவருளைப் போற்றும் மன நிலை வந்தால்,

விரகு ஒழியில் உலக இயல் பிணை விடில் … தந்திர புத்தி

ஒழிந்தால், உலக சம்பந்தமான கட்டுக்கள் விட்டால்,

உரை செயல் உணர்வு கெடில் … மனம், வாக்கு, காயம் இம் மூன்றின்

தொழிலும் அழிந்தால்,

உயிர் புணர் இருவினை அளறு அது போக உதறில் … உயிரைச்

சார்ந்து ஆட்டுவிக்கும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி

உதறி விலக்கினால்,

எனது எனும் மலம் அறில் … எனது என்னும் ஆசையாகிய குற்றம்

அற்றுப் போனால்,

அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது …

அறிவில் எளிதாகப் பெறுதல் முடியும் என்று வேதங்கள் பறையறைந்து சொல்லுவதான அதனை,

ஒரு உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு

நாளே … ஒப்பற்ற, தோற்றமும் முடிவும் இல்லாத பொருளை

அடியேனுக்கு நீ அருள் செய்யும் ஒரு நாள் கிட்டுமா?

***

முருகனும் மடல் எழுதினான்!

வனசரர் கதி பெற முனி பெறு புன மானின் தரள முகபட(ம்)

நெறி பட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தன கிரி தழுவ

மயல் கொடு தனி மடல் எழுதிய பெருமாளே. … வேடர்கள் நற்

கதி அடைய, சிவ முனிவர் பெற்ற, தினைப் புனம் காத்த மான் போன்ற

வள்ளி நாயகியின் முத்தாலாகிய மேலாடை வளைவுபட நிமிர்ந்து

எழுவனவும், இளமை வாய்ந்தனவும், புளகாங்கிதம் கொண்டனவும்,

கஸ்தூரி அணிந்துள்ளனவுமான மார்பகங்களாகிய மலைகளைத் தழுவ மோகம் கொண்டு ஒப்பற்ற மடல்* எழுதிய பெருமாளே.

மடல் எழுதுதல்:

தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில்

மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.

***

முருகனின் யானையின் பெயர்

முகர(ம்) முக படம் கவள(ம்) தவள கர அசல(ம்) மிசை வரும்

அபிநவ … பிளிறுவதும், முகத்தில் தொங்கும் அலங்காரத் துணி

கொண்டதும், உணவு கவளங்களை உட்கொள்வதும், வெண்ணிறம்கொண்டதும், துதிக்கை உடையதுமான மலை போன்ற யானையின்* மீது எழுந்தருளும் புதுமை வாய்ந்தவனே,

முருகன் மயில் வாகனன் ஆகினும், அடியார்களை ஆட்கொள்வதற்கும், அருள் செய்வதற்கும், போர் புரிவதற்குப் புறப்படும்போதும் ‘பிணிமுகம்’ என்ற யானை வாகனத்தில் செல்வான் என்பர்.

பல தலங்களில் முருகனுக்கு பிணிமுக யானை வாகனமாக உள்ளது.

***

அஷ்ட புஷ்பங்கள்/  எட்டு ஞான மலர்கள்

சோதி முருகா நித்தா பழய ஞானச் சோணகிரி வீதிக் கந்த

வேளே … ஜோதி வடிவமான முருகனே, என்றும் அழியாமல்

இருப்பவனே, ஞான பூமியாகிய திருவண்ணாமலையின் தெருவில் வீற்றிருக்கும் கந்த வேளே,

பாலக கலாபக் கோமள மயூரப் பாக உமை பாகத்தன்

குமாரா … குழந்தையே, தோகை நிறைந்த அழகிய மயிலை

நடத்துபவனே, உமை பங்கனான சிவ குமாரனே,

பாத மலர் மீதில் போத மலர் தூவிப் பாடுமவர் தோழத்

தம்பிரானே. … பாதத் தாமரையில் ஞான மலரை* இட்டுப் பாடும்

அடியார்களின் தோழனே, தம்பிரானே.

ஞான பூஜை செய்வார்க்கு உரிய எட்டு புஷ்பங்கள்:

மனத்தூய்மை, கொல்லாமை, ஐம்புலன் அடக்கம், பொறை, அருள், வாய்மை, தவம், அன்பு.

***

20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள் சொல் அழகும் பொருள் அழகும்!

குமரி காளி வராகி மகேசுரி … குமரி, காளி, வராகி, மகேஸ்வரி,

கவுரி மோடி சுராரி நிராபரி … கெளரி, மோடி, முதலிய பெயர்களை

உடையவள், தேவர்களுக்குக் கண் போன்றவள், பொய்யிலி,

கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி … உக்ரமான சூலத்தை

ஏந்தியவள், ஒளி மயத்தவள், சியாமளப் பச்சை நிறம் உடையவள், மகமாயி,

குறளு ரூப முராரி சகோதரி … வாமன உருவம் கொண்ட

திருமாலின் சகோதரி,

உலக தாரி உதாரி பராபரி … உலகத்தைத் தரித்துப் புரப்பவள்,

தயாள குணம் உடையவள், முதன்மை பூண்டவள்,

குருபராரி விகாரி நமோகரி அபிராமி … குருவாகிய சிவனுக்குக்

கண் போன்றவள், வேறுபாடுகளைப் பூண்டவள், வணங்கப்படுபவள்,

அழகுள்ளவள்,

சமர நீலி புராரி தன் நாயகி … போர் வல்ல துர்க்கை, திரிபுரம்

எரித்த சிவபெருமானின் பத்தினி,

மலை குமாரி கபாலி நல் நாரணி … இமயவன் புதல்வி, கபாலம்

ஏந்தியவள், நல்ல குணம் வாய்ந்த நாராயணி,

சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி … நீர் பொழியும்

மேகம் போன்றவள், சிவ சம்பந்தப்பட்டு விரும்பத்தக்கவள்,

பரா சக்தி, யோகி,

சவுரி வீரி முநீர் விட போஜனி … வலிமை உள்ளவள், வீரம்

உள்ளவள், பாற்கடலில் எழுந்த ஆலஹால விஷத்தை உண்டவள்,

திகிரி மேவு கையாளி செயாள் … சக்கரம் ஏந்திய திருக்கரத்தை

உடையவள், இலக்குமி,

ஒரு சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா …

ஒப்பற்ற எல்லா வேதமுமாய் நிறைந்த தாய் உமா தேவி (ஆகிய பார்வதி) ஈன்றருளிய பாலனே,

திமிதம் ஆடு சுராரி நிசாசரர் … பேரொலி செய்து போராடிய

தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களுடைய

முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு … தலைகளில் எல்லாம்

ஆயுதங்கள் படும்படி செலுத்தி வைத்து,

ஏய் ஒரு சில பசாசு குணாலி நிணாம் உண விடும் வேலா …

அங்கு கூடிய சில பேய்கள் குணலை என்ற ஆரவாரத்துடன் கூத்தாடி மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தியவனே,

திரு உலாவு சொணேசர அ(ண்)ணாமலை … லக்ஷ்மீகரம்

நிறைந்த சோணாசலேஸ்வரது திருவண்ணாமலையில்

முகில் உலாவு விமான நவோ நிலை … மேகம் உலவும்

கோபுரத்தின் ஒன்பது நிலைகளைக் கடந்து 

சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே. … கோபுர உச்சியில்

விளக்கமுற்று உலாவிய பெருமாளே.

—subham—

Tags- 20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள், திருப்புகழில், சொல் அழகு, பொருள் அழகு! -27 ,  அருணகிரிநாதர் , அரிய செய்திகள் ,மூன்று சிவபக்த அசுரர்கள் கதை!

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு – 4 (Post No.15,441)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,441

Date uploaded in London –  20 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு  – 4 

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

சிறப்பான குணாதிசயங்கள் மற்றும் திறன்கள்: 

இதுவே அவர்களை மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் முழுமையாக வேறுபடுத்துகிறது. அவர்கள் அதிமனித (superhuman) சக்திகள் கொண்டிருந்தனர்: 

மாபெரும் பலம்: 

வாலி ஒரு முழு இராட்சசனை ஒரே கையால் தூக்கி எறியும் அளவுக்கு பலம் வாய்ந்தவன். ஹனுமன் ஒரு மலையைத் தூக்கிச் செல்லும் சக்தி படைத்தவன். 

வடிவம் மாற்றும் திறன் 

ஹனுமனால் தனது உருவத்தை மிகச் சிறியதாகவோ அல்லது மலை போல் பெரியதாகவோ மாற்றிக்கொள்ள முடிந்தது. 

பறக்கும் திறன்: 

அவர்கள் “வானரம்” என்ற பெயருக்கேற்ப, வானத்தில் பறந்து செல்லும் திறன் பெற்றிருந்தனர். இது நவீன குரங்குகளுக்கு இல்லாத ஒரு திறன். 

அறிவாற்றல் மற்றும் தந்திரோபாயம்: 

ஜாம்பவான் போன்றவர்கள் முதுமைக் காலத்தின் ஞானத்தையும், போர் தந்திரங்களையும் அறிந்தவர்கள். ஹனுமன் ஒரு சிறந்த தூதர், பேச்சாளர் மற்றும் சூழ்ச்சித் திட்டமிடுபவன். 

ஆக, கிஷ்கிந்தா மக்கள் என்பவர்கள் குரங்கு மற்றும் கரடி இனங்களின் மிகுந்த வலிமை, துடிப்பான தன்மை, காட்டு வாழ்க்கை நடத்தை போன்ற சிறப்புக் குணங்களைக் கொண்டிருந்தனர் மனிதர்களைப் போல அரசியல், மொழி, கலை, அறிவு, நெறிமுறை ஆகியவற்றையும் கொண்ட ஒரு புராணப்பூர்வமான, அதிமனித இனம் ஆவர். 

அவர்களை “குரங்குகள்” என்று அழைப்பது, அவர்களின் உண்மையான தன்மையை மிகைப்படுத்திக் கூறுவதற்குப் பதிலாக, அவர்களின் வெளித்தோற்றம் மற்றும் சில இயல்புகளின் அடிப்படையில் வைத்த ஒரு பெயராகும். இது ஒரு சிம்பல் (Symbol) அல்லது ஒரு புனைவு இனத்தை வரையறுக்கும் ஒரு வழி. இதனால்தான் ஹனுமன் போன்றவர்களை நாம் தெய்வீகமாக வணங்குகிறோம், ஒரு விலங்காக அல்ல. 

மேலும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. கிஷ்கிந்தா வாசிகள் அனைவரும் வானரங்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தேவர்கள். இராவணன் தலைமயில் அனைத்து அரக்கர்களையும் ஒழிப்பதில் இராமனுக்கு உதவுவதற்காக பிறவி எடுத்துள்ள தேவர்கள். இதை பாலகாண்டத்தில் உள்ள  கீழ்கண்ட தோஹாக்கள் மூலம் துளசிதாசர் தெரிவிக்கிறார். 

. हरिहउँ सकल भूमि गरुआई। निर्भय होहु देव समुदाई॥

गगन ब्रह्मबानी सुनि काना। तुरत फिरे सुर हृदय जुड़ाना॥4

तब ब्रह्माँ धरनिहि समुझावा। अभय भई भरोस जियँ आवा॥5॥

निज लोकहि बिरंचि गे देवन्ह इहइ सिखाइ।

बानर तनु धरि धरि महि हरि पद सेवहु जाइ॥187॥

गए देव सब निज निज धामा। भूमि सहित मन कहुँ बिश्रामा॥

जो कछु आयसु ब्रह्माँ दीन्हा। हरषे देव बिलंब न कीन्हा॥1॥

बनचर देह धरी छिति माहीं। अतुलित बल प्रताप तिन्ह पाहीं॥

गिरि तरु नख आयुध सब बीरा। हरि मारग चितवहिं मतिधीरा॥2॥

* गिरि कानन जहँ तहँ भरि पूरी। रहे निज निज अनीक रचि रूरी॥

यह सब रुचिर चरित मैं भाषा। अब सो सुनहु जो बीचहिं राखा॥3॥ 

இதையே ஆத்யாதம இராமாயணத்தில் இரண்டாவது சர்கத்தில் சொல்லப்பட்டுள்ளது 

ब्रह्म वाच

र्वष्णुमािनुषरूपेण भर्वष्यर्त रघ ः कु ले ॥ २९॥

यूयों सृजध्वों सवेऽर्प वानरेष्वोंशसम्भवान् ।

र्वष्ण ः स ायों कु रत यावर्त्स्न्थास्यर्त भूतले ॥ ३०॥ 

ஆக தேவர்களே வானர அவதாரம் எடுத்து வந்ததால் அவர்கள் மற்ற வானரங்களைவிட எல்லா வகையிலும் சிறந்து விளங்கினர். 

          **                           தொடரும்

ராமாயணத்தில் வரங்கள் (40) இந்திரஜித் சிவபிரானிடமிருந்து வரம் பெற்றது! (Post.15,440)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,440

Date uploaded in London – 20 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (40)   

ராமாயணத்தில் வரங்கள் (40) இந்திரஜித் சிவபிரானிடமிருந்து வரம் பெற்றது!

ச. நாகராஜன்

யுத்தகாண்டத்தில் ‘ராக்ஷஸர்களது வசனம்’ என்ற ஏழாவது அத்தியாயத்தில் ராவணனது மந்திராலோசனை பற்றி குறிப்பிடப்படுகிறது.

அதில் அனைவரும் அவனது வீரத்தைப் புகழ்ந்து அவனது சாதனைகளைப் பட்டியலிடுகிறார்கள்.

அப்போது அவர்கள், “மகாராஜரே! தேவரீர் இங்கேயே இருக்கலாம். ,மகாபாகுவாகிய இந்த இந்திரஜித்து ஒருவனே வானரர்களை நாசம் செய்து விடுவான். தேவரீருக்கு மனக்கவலை ஏன்?” என்று கூறுகின்றனர்.

அனேன ஹி மஹாராஜ் மாஹேஸ்வரமனுத்தமம் |

இஷ்டா யக்ஞம் வரோ லப்த்வா லோகே பரமதுர்லப: ||

 யுத்த காண்டம் ஏழாம் அத்தியாயம் ஸ்லோக எண் 19

மஹாராஜ் – மகாராஜா

அனேன ஹி – இவனாலோ

அனுத்தமம் – மிகச் சிறந்ததும்

மாஹேஸ்வரம் – சிவபெருமானுக்கு ப்ரீதியை விளைவிப்பதுமான

யக்ஞம் – யாகத்தை

இஷ்டா – புரிந்து

லோகே – உலகில்

பரமதுர்லப: – மிகவும் கிடைத்தற்கு அரிதாகிய

வர: – வரமானது

லப்த: – அடையப்பட்டிருக்கிறது.

இப்படி இந்திரஜித்தின் பராக்ரமத்தை ராக்ஷஸர்கள் புகழ்கின்றனர். இந்திரஜித்தால் தேவேந்திரன் சிறைப்படுத்தப்பட்டான் என்று மேலும் கூறுகின்றனர்.

இவர்களது கூற்றிலிருந்து இந்திரஜித் சிவபெருமானுக்கு ப்ரீதியை விளைவிக்கும் யாகம் நடத்தப்பட்டதை அறிகிறோம். அதனால் இந்திரஜித் சிவபிரானின் அனுக்ரஹத்தை[ பெற்றிருக்கிறான் என்பதையும் அறிய முடிகிறது. இது வரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட வால்மீகி முனிவர் இதை இங்கு வரம் என்றே குறிப்பிடுகிறார்.

இந்திரஜித்தின் யாகம் பற்றி உத்த்ரகாண்டத்தில் 25ம் அத்தியாயத்தில் அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமனுக்கு விளக்கமாகக் கூறுகிறார். அதை இந்தத் தொடரில் பின்னால் காண்போம்.

                           **                தொடரும்

Tamil Barter Trade, Puppets, Similes; Purananuru Wonders 13; Ancient Tamil Encyclopaedia – Part 53 (Post No.15,439)

Written by London Swaminathan

Post No. 15,439

Date uploaded in Sydney, Australia –  20 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Ancient Tamil Encyclopaedia -Part 53; One Thousand Interesting Facts -Part 53 

Item 377 Dharma Artha Kama

In the previous part, I wrote that Tiru Valluvar named his book Dharma Artha Kama in Tamil as Muppaal and divided his book into three parts as Aram Porul Inbam, translating Sanskrit words Dharma Artha Kama. Here Kovur Kizaar in Puram verse 31 also used it.

We also saw that Tolkappiam, the oldest book in Tamil, also used Dharma Artha Kama in at least two sutras.

***

Item 378 White Umbrella

White Umbrella like moon is found in Kalidasa and other Sanskrit works. This shows that Hindus from Himalayas to Kanyakumari has same culture.

This is repeated by umpteen poets in Sanskrit and Tamil

***

Item 379 Male Anklet and Acupuncture

In Puram verse 31, the line Your warriors wearing anklets—give us some information about the male anklet ‘Kazal’. They wore it before going to war. All Hindu jewels have some deeper meaning. Piercing the ear of both boys and girls is based on acupuncture. May be this male anklet ‘Kazal’ and female anklet ‘Silambu’ have some acupuncture background. We must do more research.

***

Item 380 Two Seas

Choza king’s rule was all over South Indian Peninsular touching Bay of Bengal and Arabic Ocean. This is in Kalidasa’s Raghuvamsam as well.

स वेलावप्रवलयां परिखीकृतसागराम्।

अनन्यशासनामुर्वीं शशासैकपुरीमिव॥ १-३०

sa velāvapravalayāṁ parikhīkṛtasāgarām |

ananyaśāsanāmurvīṁ śaśāsaikapurīmiva || 1-30

That DilIpa monarchized entire earth, hitherto un-umbrellaed under a single umbrella by any one king, as if she is his single capital bulwarked with seashores and moated with oceans  [Raghuvamsam 1-30]

கடல் வரை பரந்த ஆட்சி” (ஆசமுத்ர க்ஷிதீசானாம் – Aasamudra Kshitishaanaamஎன்பது சமுத்திர குப்தன் போன்ற மன்னர்களின் பரந்த சாம்ராஜ்யத்தைக் குறிக்க பயன்படுத்தப்படும் தொடர் ஆகும். சமுத்திர குப்தன் கடல் நீர் சூழ்ந்த பூமி முழுவதையும் ஆட்சி செய்ததாக சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன

***

Item 381 Tamil Threat

Though Tamil kings were fighting with each other continuously for 1500 years they were united when Northern kings attacked them. For instance, Kharavela, King of Kalinga/Orissa says that he broke the Tamil Front (Dramlila Sanghatan).

All the three Tamil Kings Chera Choza, Pandya went up to the Himalayas to carve their emblems. Tamil epic Silappadikaram says Cheran Senguttuvan went to River Ganga twice. Naturally northern kings were scared.

Asoka, earlier also, mentioned Tamil kings together. That shows they were considered a united lot.  Mauryan invasion is mentioned y Sangam poet Mamular. 

***

Here is the full verse from Vaidehi Herberts site.

Puranānūru 31, Poet Kōvūr Kizhār sang to Chozhan Nalankilli

1

Like the great tradition where wealth and pleasure
follow righteousness,

2

your tall umbrella shines alone,
bright like the moon
, followed by two umbrellas.

Craving for great fame, you will not rest anywhere
but in your camps, where battle victories are won.

Your elephants attack enemy fort walls, their
tusk tips get blunted, and they are out of control.

3
Your warriors wearing anklets, who desire battles,
enter countries with forests and very distant places,
without complaining.

4

You linger in your enemy country celebrating
loud festivals, and leave the eastern ocean behind
you as the white-topped waves of the western
ocean laps the hooves of your horses.

5

Afraid of you circling the earth, the kings of the
northern countries are distressed
, their hearts
trembling, and their eyes unable to sleep!

***

புறநானூறு 31, பாடியவர்: கோவூர் கிழார், பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி

1
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம்
 தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை,
உருகெழு மதியின் நிவந்து சேண் விளங்க,

2
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் 5
பாசறையல்லது நீ ஒல்லாயே,
நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே,

3
போர் எனில் புகலும் புனை கழல் மறவர்,
“காடிடைக் கிடந்த நாடு நனி சேஎய  10
செல்வேம் அல்லேம்” என்னார், கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்துக்

4
குணகடல் பின்னதாகக், குடகடல்
வெண்தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப,

வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து  15
5

நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,
துஞ்சாக் கண்ண வட புலத்து அரசே.

****

Item 382 Two other Capital Cities under Chozas

Here in Puram verse 32, Choza king Nalankilli is praised by Kovur Kizar that he has Chera capital Vanji and Pandya capital Madurai under his sway. He would even donate them to the bards. He is very generous.

***

Item 383 Potter simile

The king is capable of shaping / making/doing anything like a son of a potter using the ball of clay.

Like a fresh ball of clay placed on a potter’s wheel by very
skilled children of potters, it is his to do what he likes in
this cool fertile land.

*** 

Puranānūru 32, Poet Kōvūr Kizhār sang for Chozhan Nalankilli 

1

People who seek gifts!  Come!  Let’s all sing his praises!
For cooking pots of your clan to be full, he will give Vanji city, the one with the name of the vanji vine,
and gift Madurai with storied mansions for the price of
flowers to bright-browed viralis with bamboo-like
curved arms that are painted.

It would be good if we think about his ancient land rights.

2
Like a fresh ball of clay placed on a potter’s wheel by very
skilled children of potters, it is his to do what he likes in
this cool fertile land!

****

புறநானூறு 32, பாடியவர்: கோவூர் கிழார், பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி, 

1

கடும்பின் அடு கலம் நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ,
“வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூ விலை பெறுக” என,
மாட மதுரையும் தருகுவன், எல்லாம்  5
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!

2
தொன்னிலக் கிழமை சுட்டின் நன் மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசு மண் குரூஉத்திரள் போல, அவன்
கொண்ட குடுமித்தும் இத் தண் பணை நாடே.   10

***

Item 384 Tiger Emblem on Pandyan Fort

In Puram verse 33, Kovur Kilzar gives us the name of the place near Siva Ganga in Pandya country where King Nalankilli carved the tiger emblem of Choza.

This shows the importance of royal emblems of the three Tamil Kingdoms.

Nowhere in the world literature we see such importance given to Royal Emblems.

***

Item 385 Barter Trade

There was no common currency in the Sangam age. Only barter trade was prevalent. Here the poet sings who exchanged what in food items.

***

Item 385 Non Vegetarians

Tamils were predominantly Non Vegetarians. Here we come across venison, meat etc with rice and curd. If one goes to Tamil Nadu one can see flower vendors in front of temples and in Bazars who has jasmine flower buds strings rolled into balls. The pure white rice balls are compared to them by the poet.

***

Item 386 Puppet Show

Lovers are compared to Alli Dolls. It may be the dolls used in the puppet show.

***

Here is the full verse.

Puranānūru 33, Poet Kōvūr Kizhār sang to Chozhan Nalankilli, Thinai: Vākai, Thurai: Arasa Vākai

1
You assaulted gates in seven forts, captured them
and inscribed your symbol of a tiger with gaping
mouth, in the fine mountain country of the Pandiyan

2
king where wives of farmers who live in huge houses fill
white rice paddy harvested in fields near ponds, in the
baskets in which a hunter with fierce dogs presents venison,
and in the pots in which a cowherd woman bring curds!

3

Musicians sing praising your invasions, and camp streets
with cow dung dust are splendid with your warriors.  The
families of bards are well nourished with balls of rice mixed
with meat, looking like flower garlands on which flower
buds and fresh green leaves are strung together.
Your battle camp is lovelier than the festival you celebrated,
sacrificing rams in every mansion near the entrance with
flowers and thick sand on which it is sweet to walk, where there
are groves with cool flowers where no one walks alone at night,

4
other than pairs of lovers, who are like dancing alli puppets,
painted beautifully, created by a skilled expert.

***

புறநானூறு 33, பாடியவர்: கோவூர் கிழார், பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி

1

பண்டமாற்று வணிகம்

கான் உறை வாழ்க்கைக் கத நாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய் மகள்
தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய,
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர்
குளக் கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்  5
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளும்,

2

Tiger Emblem
ஏழெயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை,

3

மாமிச உணவும் மல்லிகைப் பந்தும்


பாடுநர் வஞ்சி பாடப், படையோர்  10
தாது எரு மறுகின் பாசறை பொலியப்,
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்து கண்டன்ன
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்
செம்மற்று அம்ம, நின் வெம்முனை இருக்கை,  15

4

பொம்மலாட்டம்


வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற
அல்லிப்பாவை ஆடு வனப்பு ஏய்ப்பக்,
காம இருவர் அல்லது யாமத்துத்
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின்,
ஒதுக்கு இன் திணி மணல் புதுப் பூம் பள்ளி  20
வாயின் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே.

***

ஏழெயில் (8) – பாண்டிய நாட்டில் உள்ள ஒரு கோட்டை.  சிவகங்கை அருகில் உள்ளது.  

அல்லிப்பாவை (17) – உ. வே. சாமிநாதையர் உரை – ஆண் கோலமும் பெண் கோலமுமாய அவ்விருவரும் ஆடுங்கூத்து

.  

–subham—

Tags- Item 386, Tamil puppets, similes, emblems, barter trade, Purananuru Wonders 13 ; Ancient Tamil Encyclopaedia – Part 53 

திருமாலை முருகன் அடக்கிய கதை! வேதத்தின் ஆறங்கம்! மதுரையின் பெருமை- Part 26(Post.15,438)

Written by London Swaminathan

Post No. 15,438

Date uploaded in Sydney, Australia –  20 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 26

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 26

திருமாலை முருகன் அடக்கிய கதை !

சீறல் ஏனபதி* தனை கோலக்காலமாக அமர் செய்த

வடிவேலா … சீறிப் பெருங் கோபத்துடன் வந்த ஆதிவராகத்தை*

கூச்சலிட்டு அடங்க போர் செய்த கூரிய வேலனே,

ஆவிச் சேல்கள் பூகம் மடல் இள பாளைத் தாறு கூறுபட …

குளத்தில் உள்ள சேல் மீன்கள் கமுக மரத்தின் ஏடுகளாகிய இளம்

பாளைகளின் குலைகள் பிளவுபடும்படி,

உயர் ஆலைச் சோலை மேலை வயலியில் உறைவோனே …

உயர்ந்து பாயும் கரும்புகள் நிறைந்த சோலையைக் கொண்ட, மேலை

வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே,

ஆசைத் தோகைமார்கள் இசை உடன் ஆடிப் பாடி நாடி வரு …

ஆசை நிரம்பிய பெண்கள் இசைபாடிக் கொண்டு விரும்பி வந்து

வணங்குகின்ற

திரு ஆனைக் காவில் மேவி அருளிய பெருமாளே. …

திருவானைக்கா என்னும் ஊரில் விருப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே.

ஏனபதி = ஆதிவராகம். இரணியாக்ஷன் என்பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலின் கீழ் ஒளித்தான். பூமி தேவி முறையிட, திருமால் வராக ரூபம் எடுத்து, இரணியாக்ஷனைக் கொன்று பூமியை நிலை நிறுத்தினார். அரக்கன் ரத்தத்தைக் குடித்த வராகம் மதம் கொள்ள, சிவபெருமான் முருகனை அனுப்பினார்.  போரில் வராகத்தை முருகன் அடக்கி அதன் கொம்பைப் பிடுங்கிச் சிவனிடம் சேர்ப்பித்தார்.

***

வேதத்தின் ஆறங்கம் – ஷட் அங்கம்

கருதிய ஆறங்க வேள்வி யந்தணர் … ஆய்ந்து அறிந்த வேதத்தின்

ஆறு அங்கங்களிலும்*** வல்ல, வேள்வி செய்யும் வேதியர்கள்

அரிகரி கோவிந்த கேச வென்று … ஹரி ஹரி, கோவிந்தா, கேசவாஎன்று துதிசெய்து,

இருகழல்தொழு சீரங்க ராசன் நண்புறு மருகோனே … இரு

திருவடிகளையும் வணங்கப்பெற்ற ஸ்ரீரங்கநாதரின் அன்புமிக்க மருமகனே,

வேதத்தின் ஆறு அங்கங்கள் பின்வருமாறு:

நிருத்தம், ஜோதிடம், சிக்ஷை, வியாகரணம், கற்பம், சந்தஸ்.

***

மதுரையின் பெருமை


மாடக் கூடற் பதி … நான்மாடற்கூடல் என்ற மதுரையம்பதியில் உள்ள

ஞான வாழ்வைச் சேர … (துவாதசாந்த நிலையில்* கூடும்)

ஞானவாழ்வை அடையும்படி

தருவாயே … அருள் புரிவாயாக.

பாடற் காதற் புரிவோனே … தமிழிசையில் பாடினால் ஆசையோடு

கேட்பவனே,

பாலைத் தேனொத்து அருள்வோனே … பாலையும் தேனையும்

போல் இனிமையாக அருள்பவனே,

ஆடற் றோகைக்கு இனியோனே … நடனமாடும் மயிலுக்கு இன்பம் அளிப்பவனே,

ஆனைக் காவிற் பெருமாளே. … திருவானைக்கா தலத்தின்

பெருமாளே.

மதுரை ஜீவன்முக்தி தலம் மட்டுமின்றி துவாதசாந்தத் தலமுமாய் உள்ளது. துவாதசாந்தம் என்பது சிரசின் உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கும் யோக ஸ்தானம். இந்த ஞானம் மதுரையில் கிடைத்தற்கு உரியது.

திருவால வாய்க்கு இணையா ஒருதலமும் தெய்வ                                    மணம் செய்ய பூத்த

மருவார் பொன் கமல நிகர் தீர்த்தமும் அத்

                           தீர்த்தத்தின் மருங்கின் ஞான

உருவாகி உறை சோம சுந்தரன் போல் இகபரம்

                                 தந்து உலவா வீடு

தருவானும் முப்புவனத் தினும் இல்லை உண்மை

                                    இது சாற்றின் மன்னோ.

253.     அத்திருமா நகரின் பேர் சிவ நகரம் கடம்ப வனம்

                                             அமர்ந்தோர் சீவன்

முத்தி புரம் கன்னிபுரம் திருவால வாய் மதுரை முடியா

                                                  ஞானம்

புத்தி தரும் பூவுலகில் சிவலோகம் சமட்டி விச்சாபுரம்

                                                 தென் கூடல்

பத்திதரு துவாத சாந்தத் தலம் என்று ஏது வினால்

                                             பகர்வர் நல்லோர்.

—–திரு விளையாடல் புராணம்

மதுரைக்கு சிவ நகரம், கடம்பவனம், ஜீவன் முக்திபுரம், கன்னிபுரம், திருவாலவாய், பூலோக சிவலோகம் , சமஷ்டி விச்சாபுரம் கூடல், துவாதசாந்தத்தலம் / எண் 12 பெயர்கள் என்று பரஞ்சோதி முனிவர் திரு விளையாடல் புராணத்தில் சொல்லிக்கிறார் . இதில் சமஷ்டி விச்சாபுரம் , துவாதசாந்தத்தலம் / எண் 12 என்ற இரண்டு பெயர்கள் விநோதமானவை ; யாரும் சரியாக விளக்கவில்லை .

கன்னி புரம்– மீனாட்சி அம்மன் ஆண்டதால் ஏற்பட்ட  பெயர்.

ஜீவன் முக்திபுரம்– மதுரையில் வாழும் எல்லோரும் மீனாட்சி சுந்தரேச்வரரை வணங்கினால்  இப்பிறப்பிலேயே வீடுபேற்றினை அடைவர் ;

பூலோக சிவலோகம்– வரகுண பாண்டியனுக்கு மதுரையிலேயே சிவலோகத்தைக் காட்டியதால் ஏற்பட்ட பெயர்.

கடம்பவனம் – தனபதியென்ற செட்டியார் கடம்பவன காட்டில் நடந்த அதிசய நிகழ்ச்சியை குல சேகரனுக்கு அறிவித்த பின்னர் கடம்ப வன  காட்டில் எழுந்த நகரம் என்பதால் ஏற்பட்ட பெயர்.

ஆலவாய் – ஒரு பாம்பு மதுரையின் எல்லையைக் காட்ட வட்டமாக நின்றதால் ஏற்பட்ட பெயர்.

நான்மாடக்கூடல் – நான்கு மேகங்களை அழைத்து சிவபெருமான் மதுரைக்குப் பாதுகாப்பு கொடுத்ததால் ஏற்பட்ட பெயர்.

கூடல்– வைகை நதியும் கிருதமலா என்ற நதியும் கூடும் இடத்தில் அமைந்ததால் ஏற்பட்ட பெயர்.

மதுரை — மதுரை நகரை அமைக்கும்போது சிவன் மதுரமான அமுதத்துளிகளைச் சிந்தியதால் மதுரை ; மதுரமான சொல் உடைய இடம் அல்லது மருத நிலம் சூழ்ந்த நகரம் அல்லது கிருஷ்ணனின் மதுராபுரியுடன் தொடர்புடைய இடம்.

இப்போது சரியாக விளக்கப்படாத இரண்டு பெயர்களைக் காண்போம்

சமஷ்டி விச்சாபுரம் ,

சிவா ஞானம் முதலிய எல்லா ஞானங்களையும் தருவதால் சமட்டி விச்சாபுரம் என்பதற்கு முழுமையான சிவஞான பட்டணம் என்று பொருள். ஆன்மாக்களுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம்  என்னும் நான்கினையும் அருளுவதால் இப்பெயர் ஏற்பட்டது

லிங்க அமைப்பில் வியஷ்டி லிங்கம், சமஷ்டி லிங்கம்  என்ற இருவகை உண்டு. இவற்றுள் சொக்கநாதர் சமஷ்டி லிங்கமாக இருப்பதால் இத்தலம் சமஷ்டி விச்சா புரம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இங்கு தரிசித்தால் ஏனைய எல்லா வியஷ்டி லிங்கத் தலங்களையும்  தரிசித்த புண்ணியம் கிட்டும்!

துவாதசாந்தத்தலம் / எண் 12 

விராட் புருஷனுக்கு உச்சிமேல் 12 அங்குல முடியிலுள்ள இடமாக இருப்பதால் ஏற்பட்ட பெயர்.

த்வாதசாந்தம் என்றால் பன்னிரெண்டின் முடிவு அல்லது பன்னிரெண்டுக்கு அப்பாற்பட்டது என்று பொருள்; ஆறு ஆதாரம், மூன்று மண்டலம், மூன்று கிரந்தி  ஆகிய 12-க்கும் அப்பால் இருப்பது சஹஸ்ரார கமலம்; இங்கு இருக்கும் சக்திக்கு மனோன்மணி என்று பெயர். இவள் சிவத்தோடு அபின்னையாய் இருப்பவள் ;இவளுக்கு இரண்டே கைகள். இது மதுரை மீனாட்சியின் உருவம் ஆதலால் எண் 12 வந்தது  ; சுப்ரபேதாகமம், உத்தரகாம்ய ஆகமம் முதலிய நூல்களில் மேலும் வருணனைகள் உள்ளன;  காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி ஆகிய உருவங்களிலிருந்து, மதுரை மீனாட்சி வேறுபட்டது என்பதை தரிசிப்போர் எளிதில் அறியலாம். கைகள் தொங்கவிட்ட நிலையில் இருக்கும்.

****

இராமாயண சம்பவங்கள்

மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது

ஏது சொல் மனம் களித்திடல் ஆமோ துரோகித(ம்) … (தான்

சொன்ன சொல்லை) மறந்த சுக்ரீவன் என்னும் பெரிய இழிந்த

குரங்கரசன் வாசலில் நின்று, “உலுத்தனே நீ தெளிவு அடையாததற்கும் உணர்ச்சி பெறாததற்கும் என்ன காரணம்? மனம் களிப்புறுதல் நியாயமா? உன் செய்கை துரோகமாகும்.

முன்பு வாலி வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த

அதிச் சரம் ஓகோ கெடாது இனி வரும்படிக்கு உரையாய் பார்

பல ஆகவம் என்று பேசி … முன்பு வாலியை வதம் செய்த வீரம்

உள்ள ஸ்ரீராமன் நான் என்பதை உலகம் எல்லாம் அறியும். இந்த

அம்பை கெட்டுப் போக விடவேண்டாம். இனியேனும் தாமதிக்காதுவரும்படிப் போய்ச் சொல்லிப் பல பேர்களின் விளைவைப் பார்ப்பாயாக” என்று (இலக்குமணர் மூலமாகச் சுக்ரீவனுக்குச்) சொல்லி அனுப்ப,

அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து

அதின் மேல் ஏறி ராவணன் அரண் குலைத்து எதிர் போராடு

நாரணன் மைந்தனான அநங்கன் மைத்துன வேளே … தரும

நெறி விளங்கும் அனுமானுடன் பெரிய கடலில் அணையைக் கட்டி அந்த அணையின் மீது போய் ராவணனுடைய கோட்டைகளை அழித்து எதிர்த்துப் போராடிய (ராமனாகிய) திருமாலின் மைந்தன் மன்மதனுக்கு மைத்துனனான* தலைவனே,

கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் நலம்

கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … மயில் மீது

விளங்கும், வயலூர் வேலாயுதப் பெருமாளே, சிறப்பும் நலமும் கொண்ட திருஆனைக்கா என்னும் பதியில் வாழ்வு கொண்டவனே, தேவர்கள்தம்பிரானே.

* திருமாலின் மகள் வள்ளி. மகன் மன்மதன். எனவே, வள்ளியின் கணவன் முருகனுக்கு மன்மதன் மைத்துனன்.

***

திருவானைக்கா மதில் கதை

ஆழித் தேர் மறுகில் பயில் மெய்த் திரு நீறு இட்டான்

மதிள் சுற்றிய … சக்கரங்கள் கொண்ட தேர் வீதியில் வருகின்ற,

உண்மை விளங்கும் திருநீறிட்டான் மதிள்* சுற்றிலும் உள்ள,

பொன் திரு ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு

பெருமாளே. … அழகிய திருவானைக்கா என்னும் தலத்தில்

எழுந்தருளிய சிவபெருமான் விரும்பும் பெருமாளே.

திருவானைக்காவில் ஐந்து மதில்கள் உள்ளன. நான்காவது மதில், திருநீறிட்டான் மதில், மிகப் பெரியது. இதைக் கட்டும் போது சிவபெருமான் ஒரு சித்தாளாகக் கூலிக்கு வேலை செய்தார். கூலியாக திருநீற்றையே கொடுக்க, அந்தத் திருநீறு பொற்காசு ஆயிற்று என்பது புராண வரலாறு – திரு ஆனைக்கா புராணம்.

To be continued………………

Tags – திருவானைக்கா, ஐந்து மதில்கள், துவாதசாந்தத்தலம், மதுரையின் பெருமை, திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 26, திருமாலை, முருகன் அடக்கிய கதை !

குருஜி ஶ்ரீ மாதவ் சதாசிவராவ் கோல்வால்கர்! (Post.15,437)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,437

Date uploaded in London – 19 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பிப்ரவரி 19 ஶ்ரீ கோல்வால்கர் பிறந்த தினம்: சிறப்புக் கட்டுரை! 

குருஜி ஶ்ரீ மாதவ் சதாசிவராவ் கோல்வால்கர்

ச. நாகராஜன் 

குருஜி என்று அனைவராலும் மரியாதையுடனும் அன்புடனும் அழைக்கப்படும் ஶ்ரீ மாதவ் சதாசிவராவ் கோல்வால்கர் நாக்பூர் அருகில் உள்ள ராம்டெக் நகரில் சதாசிவராவ்- லட்சுமி பாய் தம்பதியர்க்கு 1906ம் ஆண்டு, பிப்ரவரி 19ம் நாளன்று பிறந்தார்.

இளமையிலேயே மிகுந்த கூரிய அறிவுத் திறன் கொண்டவராக இவர் விளங்கினார். 1926ல் நாக்பூர் ஹிஸ்லோப் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்த பின்னர் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் அறிவியலில் பட்ட மேற்படிப்பை முடித்தார்.  அதே பல்கலைக் கழகத்தில் விலங்கியல் துறையில் மூன்று ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின் 1935ல் சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.

ஆன்மீக நாட்டம் கொண்ட அவர் முர்ஷிபாத்தில் உள்ள சரகச்சி ஆசிரமம் சென்று சுவாமி ராமகிருஷ்ண குருகுலம் சென்றார்.

அங்கு ஸ்வாமி விவேகானந்தருடன் பயின்ற ஸ்வாமி அகண்டானந்தரின் சீடரானார். சில காலம் இயமலையில் தவமும் புரிந்தார்.

ஸ்வாமி அகண்டானந்தரி அறிவுரையை மேற்கொண்ட அவர் நாக்பூர் திரும்பி சமூக சேவையை மேற்கொண்டார்.

அப்போது தான் அபூர்வ சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்  (ஆர் எஸ் எஸ் என்று அனைவராலும் அறியப்படும் சங்கம்) நிறுவிய ஶ்ரீ கேசவ் பலிராம் ஹெட்கேவாரை அவர் சந்தித்தார். வாரணாசியில் சங்கத்தின் கிளையை அமைத்தார்.

ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த குருஜி அதற்காகத் தீவிரமாகப் பாடுபட்டார்.

ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்ற சங்கல்பத்தையும். மேற்கொண்டார்.

1939ம் ஆண்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார்.

ஶ்ரீ ஹெட்கேவார் மரணமடைந்ததற்குப் பின்னர் சங்கத்தின தலைமைப் பொறுப்பை 1940ம் ஆண்டு ஏற்றார்.

நாடு முழுவதும் சங்கத்தின் ஷாகாக்கள் நிறுவப்பட்டன.

1973ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி அவர் மறையும் வரை தலைமைப் பொறுப்பில் இருந்து நாடெங்கும் இடைவிடாத சுற்றுப் பயணங்களை மேற்கொண்ட அவர் ஆயிரமாயிரம் சங்க ஸ்வயம்சேவர்களைச் சந்தித்து உரையாடி அவர்களுக்கு உத்வேகம் ஊட்டி வந்தார்.

அவரது அபூர்வமான பொருள் பொதிந்த உரைகள் ஹிந்து இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. இமயம் முதல் குமரி வரை உள்ள ஹிந்துக்கள் வீரத்துடனும் தீரத்துடனும் தாய்நாட்டுப் பற்றுடனும் இருந்து ஹிந்து விரோத சக்திகளை அழிக்க வேண்டும் என்பதை ஹிந்துக்கள் உணரத் தலைப்பட்டனர்.

ஆண்டு தோறும் சிறந்த பயிற்சி அளிக்க நாக்பூரில் விசேஷ முகாம்கள் நடத்தப்பட்டன. அத்தோடு ஆங்காங்கே முக்கிய நகர்களில் ஒரு மாத முகாம்கள் நடத்தப்பட்டு நல்ல பயிற்சிகள் ஸ்வயம் சேவகர்களின் உடல் நலத்திற்கும் மன வளத்திற்கும் நடத்தப்பட்டன.

அவரால் உத்வேகம் ஊட்டப்பட்ட ஏராளமான இளைஞர்கள் திருமணம் செய்யாமல் பிரம்மசாரிகளாகவே திகழ்ந்து நாடு முழுவதும் உள்ள நகர்களுக்கு பிரசாரகர்களாகச் சென்று அங்கெல்லாம் சங்கத்தை வளர்க்கத் தீவிரமாகப் பாடுபட்டு வெற்றி கண்டனர்.

ஆர் எஸ் எஸ் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு சமூகத் துறைகளில் பணியாற்ற விசேஷமான தகுதி கொண்ட பலரையும் அந்தந்தத் துறைக்கு அவர் அனுப்பவே ஹிந்து சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் ஹிந்து சிந்தனை வேரூன்ற ஆரம்பித்தது.

அரசியலில் ஜனசங், ஹிந்து சமுதாய மேம்பாட்டில் விஸ்வ ஹிந்து பரிஷத், தொழிலாளர் துறையில்  பாரதீய மஸ்தூர் சங், மாணவர்கள் கல்வி பயிலும் கல்வித் துறையில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

அரசியலில் சக்தி வாய்ந்த பிரிவாகத் திகழத் தொடங்கிய ஜனசங் காலப்போக்கில் மாறுதலை அடைந்து பாரதீய ஜனதா பார்டியாக ஆனது.

அது, ஶ்ரீ அடல்பிஹாரி வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசை அமைத்து வெற்றி கண்டது. தற்போது ஶ்ரீ நரேந்திர தாமோதர்தாஸ் மோடி அவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரியாக 2014 முதல் பதவி வகித்து இந்தியாவை மேம்பட்ட ஒரு வல்லரசாக மாற்றியுள்ளார்.

ஹிந்துக்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தீய சக்திகளை இனம் கண்டு எதிர்கொண்டு அவர்களின் தீய திட்டங்களை விஸ்வஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங்க அடிப்படையிலான அமைப்புகள் தரைமட்டமாக்கி வருகின்றன.

குருஜி அவர்களின் அற்புதமான உரைகள் BUNCH OF THOUGHTS என்ற நூலாக மலர்ந்துள்ளது.

ஹிந்து ராஷ்டிரம் என்ற குறிக்கோளை நோக்கி வெற்றி நடை போடும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை பலப்படுத்திய மகான் குருஜி கோல்வால்கர் பிறந்த தினத்தன்று அவரை நினவ கூர்ந்து போற்றுவோமாக!

**

முருகன் ஒரு மாலுமி! அவன் ஓட்டும் கப்பல் பற்றி அருணகிரிநாதர்!-Part 25 (Post.15,436)

Written by London Swaminathan

Post No. 15,436

Date uploaded in Sydney, Australia –  19 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

25திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 25

25திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 25

***

திருநீலகண்டர் யாழ் மீட்டியது பற்றி

செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய … செந்தமிழ்

ஞானம் உள்ள பாணர்குலப் பாவலர் (திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

திருஞான சம்பந்தர் பாடலுக்கு ஏற்ப) இசையுடன் யாழை வாசித்த*

தென் திரு வானைக்கா உறை பெருமாளே. … அழகிய

திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே.

முன்பு, திருவானைக்காவில், சைவக் குரவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் தேவார இசை பாட, திருநீலகண்டர் அதற்கேற்ப யாழை மீட்டினார் – பெரிய புராணம்.

யாழ் என்ற கருவி எண்பது இடங்களுக்கு மேலாகவும் முரசு என்ற கருவி ஐம்பது இடங்களுக்கு மேலாகவும் சங்க நூல்களில் காணக்கிடக்கிறது

விழாக்காலங்களில் மக்கள் ஆடலையும் பாடலையும் கண்டு மகிழ்ந்த செய்தி மதுரைக் காஞ்சியில் உள்ளது , 

சேரிதோறும் 

உரையும் பாட்டும் ஆட்டும் விரை இ 

வேறு வேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி  -616-618 

யாழும் குழலும் இசைத்து ஆடினார்கள், பாடினார்கள், 

ஆடல் பாடல் வரும் இடங்கள் 

அகம்-4, 61, 206, 397; புறம்-29; பதிற்று-29, 56, 65; மதுரை-327/9;

***

முருகன் ஓட்டும் கப்பல் விஷ்ணு சஹஸ்ரநாமம்

தொனித்த நாத வேய் ஊது … ஒலி தரும் இசையுடன் கூடிய

புல்லாங்குழலை ஊதுபவனும்,

சகஸ்ர நாம கோபால சுதற்கு … ஆயிரம் நாமங்கள் கொண்டவனும், நந்தகோபனின் மகனுமான திருமாலின்

நேச மாறாத மருகோனே … அன்பு மாறுபடாத மருமகனே,

சுவர்க்க லோக மீகாம … தேவர் உலகம் என்ற கப்பலைக் காப்பாற்றிய மாலுமியே,

சமஸ்த லோக பூபால … சகல லோகங்களையும் பாலித்து அருளும் அரசனே,

தொடுத்த நீப வேல்வீர வயலுரா … அப்பொழுதுதான் தொடுக்கப் பெற்ற கடப்ப மலர்மாலையனே, வேல் வீரனே, வயலூரானே,

மனித்தர் ஆதி சோணாடு தழைக்க … மனிதர்கள் முதல் சகல

ஜீவராசிகளும் உள்ள சோழநாடு தழைத்திட

மேவு காவேரி மகப்ரவாக பானீயம் அலைமோதும் … வரும்

காவேரியின் பெரும் வெள்ள நீர் அலைகள் மோதும்,

மணத்த சோலை சூழ்காவை … நறுமணம் கமழும் சோலைகள்

சூழும் திருவானைக்காவை மேவியவனே,

அனைத்து லோக மாள்வாரு மதித்த சாமியே … சகல

லோகங்களை ஆள்பவர்களும் மதித்திடும் தெய்வமே,

தேவர் பெருமாளே. … எல்லாத் தேவர்களுக்கும் பெருமாளே.

***

மீண்டும் ஏழிசை பற்றி ஒரு பாடல்

ஏழிசைத் தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று அடியில்

பயில் உத்தம ஈசன் … ஏழிசைத் தமிழில் தேவாரப் பாக்களின் பயனைக் கொண்ட, வெண் நாவல் மரத்தின் கீழ் (திருவானைக்காவில்) விளங்குகின்ற உத்தமராகிய ஈசர்,

முக் கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே. … மூன்று

கண்களை உடையவர், ஊழிக் கூத்து நடனம் ஆடுபவராகிய சிவபெருமான்  பெற்றருளிய பெருமாளே.

ஏழிசை /சப்த  ஸ்வரங்கள்

ஸ -குரல் – ஆ -DO

ரி -துத்தம் – ஈ -RE

க – கைக்கிளை – ஊ -MI

ம-உழை – ஏ -FA

ப -இளி – ஓ – SOL

த – விளரி- ஐ -LA

நி- தாரம் -ஒள- TI

***

சட்ஜம் – மயிலின் ஒலி

ரிஷபம்- மாட்டின் ஒலி

காந்தாரம் – ஆட்டின் ஒலி

மத்திமம்- கிரவுஞ்சத்தின் ஒலி

பஞ்சமம்- குயிலின் ஒலி

தைவதம் – குதிரையின் ஒலி

நிஷாதம்- யானையின் ஒலி

உரைகாரர்கள் உரை எழுதுகையில் அந்தந்தப் பிராணிகளை ஏன் அந்த இடத்தில் கவிஞர் சொன்னார் என்று எழுதுகையில் இதைத் தொடர்புபடுத்துகின்றனர்.

காளிதாசனில் வரும் இசைக் குறிப்புகள்

इक्षुच्छायनिषादिन्यस्तस्य गोप्तुर्गुणोदयम्|

आकुमारकथोद्धातं शालिगोप्यो जगुर्यशः॥ 4-20 ரகு வம்சம்

நெல் வயல்களைக் காக்கும் பெண்கள் மன்னன் ரகுவின் புகழைப் பாடினார்கள் ; அவனது இளம் வயது தொடங்கி அவனது நற்குணங்கள் வரை எல்லாவற்றையும் பாடி மகிழ்ந்தார்கள் .

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் தினைப்புனத்தைக் காக்கும் பெண்கள் பாடிய செய்திகள் வருகின்றன .

ikṣucchāyaniṣādinyastasya gopturguṇodayam|

ākumārakathoddhātaṁ śāligopyo jaguryaśaḥ || 4-20

****

பெண்கள்தான் இசையை வளர்த்தனர் ;திருமண காலங்களில் மங்கள இசைப்பாடல்களை பாடினார்கள்

ஒரு அழகான காட்சியைக் காளிதாசன் வருணிக்கிறார்; . பெண்கள் தாளத்துக்கு மயில்கள் ஆடினவாம்

tīrasthalībarhibhirutkalāpaiḥ

prasnigdhakekairabhinandyamānam |

śrotreṣu saṁmūrcchati raktamāsām

gītānugam vāri mṛdaṅgavādyam  || 16-64

तीरस्थलीबर्हिभिरुत्कलापैः प्रस्निग्धकेकैरभिनन्द्यमानम्।

श्रोत्रेषु संमूर्च्छति रक्तमासाम् गीतानुगम् वारि  मृदङ्गवाद्यम् ॥ १६-६४

பெண்கள் ஆற்றுத் தண்ணீரில் கைகளை அடித்துத் தாள ஓசையை உண்டாக்கி விளையாடினார்கள் அவர்கள் பாடிய பாட்டுக்கு அது மிருதங்க இசையாக அமைந்தது . அதைக்கேட்ட மயில்கள் மேக முழக்கம் என்று எண்ணி அகவல் ஒலி எழுப்பி ஆடத் துவங்கின

இவ்வாறு இடி ஓசைக்கு மயில்கள் ஆடுவது தமிழிலும் உண்டு; சென்ற பகுதியில் கொடுக்கப்பட்ட கபிலர் பாடலுடன் இதை ஒப்பிடலாம்.

அதுமட்டுமல்ல இந்து வணிகர்கள் பாபிலோனியாவுக்கு மயில்களைக் கொண்டு சென்று மத்தளம் முழக்கி மயில்களை ஆடச் செய்தவுடன் மன்னர்கள்  அசந்துபோன செய்தி ஜாதகக்  கதைகளிலும் உள்ளது.

ஜாதகக் கதைகள், பாலி மொழியில், சங்க காலத்துக்கு முன்னர் எழுதப்பட்டவை.

அனல்வாதம் புனல் வாதம் கதைகள்

அரைக்கு ஆடை சுற்றார் தமிழ்க் கூடலில் போய் … இடுப்பில் ஆடையைச் சுற்றாது (கோரைப்புல்லைச் சுற்றும்) சமணர்கள் வாழ்ந்த, தமிழ் வளர்ந்த மதுரைத் தலத்துக்கு (திருஞான சம்பந்தராகச்) சென்று,

அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு அறத்தாய் எனப் பேர்

படைத்தாய் … அங்கே (அவர்களை வாதில் வெல்ல) நெருப்பிலும்நீரிலும் (தேவாரங்கள்) எழுதப்பட்ட ஏட்டினை இட்டுஅறச் செல்வன் என்னும் புகழைக் கொண்டாய்.

புனல் சேல் அறப் பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே …

நீரில் சேல் மீன்கள் நிரம்பப் பாய்கின்ற வயல்களின் கீழ்ப்புறத்தில் வீற்றிருக்கும் செவ்வேளே,

திரைக் காவிரிக்கே கரைக் கானகத்தே சிவ த்யானம்

உற்றோர் சிலந்தி நூல் செய் … அலைகள் வீசும் காவிரியின் கரையில் இருந்த காட்டில் சிவத் தியானம் நிறைந்திருந்த சிலந்திப் பூச்சியின் நூலால் அமைக்கப் பெற்ற

திருக் காவணத்தே இருப்பார் அருள் கூர் … (திருவானைக்காவின்) அழகிய பந்தலின் கீழ் இருந்து வரும், அருள் மிக்க

திருச் சாலகச் சோதி தம்பிரானே. … அழகிய சிலந்தி வலைக் கீழ் விளங்குபவரான ஜோதி சொரூபமான சிவபிரானின் தலைவனே.

அரசியலில் ஈடுபட்ட சமணர்கள் பாண்டியனின் மனதை மாற்றி அவனை சமண மதத்துக்கு இழுத்தனர்; இதனால் உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் புகழ் மங்கியது சோழநாட்டிலிருந்து வந்து பாண்டியனுக்கு வாக்குப்பட்ட ராணிக்கு மிகவும் மன வருத்தம் உண்டாக்கியது

பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க அருள் புரியுங்கள் என்று பாண்டிய அரசி -வளவர்கோன் பாவை –மங்கையற்கரசியும் முதல் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த வேண்டுகோளின் பேரில் மதுரைக்கு எழுந்தருளினான் ஒரு சிறிய பிராமணப் பையன். அவன் பெயர் சம்பந்தன். அவன் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைக்க சமணர்கள் முயன்றனர். உடனே அந்த தீயைப் “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே” என்று அவர் கட்டளையிட அக்கினிதேவன் பாண்டிய மன்னன் வயிற்றில் புகுந்து சூலை நோயை உண்டாகினான். அதைத் தீர்த்து  வைக்க திரு ஞான சம்பந்தர் வந்தார். . இதனால் ஆத்திரமடைந்த சமணர்கள் சம்பந்தரை அனல் வாதம் புனல் வாதம் புரிய அழைத்தனர்.அனல்வாதம், புனல் வாதம் போட்டிகளில் வென்று உலகப் புகழ் பெற்றார் சம்பந்தர்

அனல் என்றால்= தீ; புனல் என்றால் தண்ணீர்.

சமணர்கள் தங்களது சமண ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பலானது.திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதப்பெற்ற ஏட்டினை  தீயில் இட்டார்.அந்த ஏடு  தீயில் எரியாமல் அப்படியே இருந்தது.சமணர்கள் போட்ட ஏடு தீயில் எரிந்து சாம்பலானது இதன்பின் புனல் வாதத்தின்போது சமணர்கள் அத்திநாத்தி என்ற ஏட்டை வைகையில் இட்டபோது அது ஆற்றில் அடித்துச்  சென்றது.ஆனால் சம்பந்தர் வாழ்க அந்தணர் என்ற ஏட்டை ஆற்றில் இட்டபோது அது ஆற்றின் போக்கை எதிர்த்து நீந்திச் சென்று ௧௨ மெயில் தொலைவில் உள்ள திருவேடகத்தில்  கரை ஏறியது. அந்த ஏடு கரைஏறிய இடம்தான் மதுரைக்கு அருகில்  உள்ள திருவேடகம். (திரு – ஏடு – அகம்). அழிவு நிலையில் இருந்த சைவ சமயத்தை தழைத்தோங்க வைத்தார் சம்பந்தர் . சுப்பிரமணியரின் மறு அவதாரம் சமபந்தப் பெருமான் என்பதை உலகம் உணர்ந்தது. அஹிம்சையைப் பின்பற்ற வேண்டிய சமணர்கள் ஹிம்சை செய்ததால் பாண்டிய மன்னர் அவர்களைக் கழுவில் ஏற்றினான்.

திருவானைக்காவல் சிலந்தி கதை

 இந்தத் தலத்தில் ஒரு யானையும் ஒரு சிலந்தியும் இங்குள்ள ஸ்வயம்பு லிங்கத்தை பூஜை செய்து கொண்டு வந்தன. வெயில் படாமல் இருப்பதற்காக சிலந்தி லிங்கத்தின் மேலாக  கூடு கட்டும். யானை தினமும் காவேரியில் ஸ்நானம் செய்து விட்டு  தனது துதிக்கையில் காவேரி தீர்த்தத்தை ஏந்தி வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்யும். இதனால் சிலந்தி கட்டிய கூடு கலைந்து விடும். சிலந்தி ஒரு நாள் இதைக் கவனித்துக் கடும் கோபம் கொண்டது. யானையின் துதிக்கையில் அது நுழைந்து கடிக்க ஆரம்பித்தது. யானை வலி பொறுக்காமல் புரண்டு மரணம் அடைந்தது. சிலந்தியும் மாய்ந்தது. இச்சிலந்தியே மறு ஜன்மத்தில் கோட்செங்கச் சோழனாகப் பிறந்தது. கோட்செங்கச் சோழன் யானை உள்ளே வர முடியாதபடி 70 மாடக் கோவில்களைக் கட்டுவித்தான்.

கோட்செங்கச் சோழன் 63  நாயன்மார்களில் ஒருவர்

இவர் அமைத்த மாடக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் ஆகும்  . தேவார ஆசிரியர் மூவர் பாடல்களிலும் அது காணப்படும். அது, திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தில்,

“மையகண் மலைமகள் பாகமாயிருள் கையதோர் கனலெரி கனல வாடுவார் ஐயநன் பொருபுனலம்பர்ச் செம்பியர் செய்யகணிறை செய்த கோயில் சேர்வரே” (செய்ய கணிறை-கோச்செங்கணான்) எனவும்

திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில், “சிலந்தியு மானைக்காவில் திருநிழற் பந்தர் செய்து உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக் கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கைவீ ரட்டனாரே” –

“சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை” – “சிலந்திதனக் கருள் புரிந்த தேவ தேவை” – “சிலந்திக் கருள் முன்னஞ் செய்தான் கண்டாய்” – “புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயினூலாற் புதுப்பந்த ரதுவிழைத்துச் சருகான் வேய்ந்த சித்தியினா லரசாண்டு சிறப்புச் செய்து சிவகணத்துப் புகப் பெய்தார் திறலான் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளாவன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப் பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர்மேய பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே” எனவும்

சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில், “சிலந்தி குற்றஞ் செய்யினுங் குணமெனக் கொள்ளுங் கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்” – “கருவரை போலரக்கன் கயிலைம்மலைக் கீழ்க் கதறப் பொருவிர லாலடர்த் தின்னருள் செய்த உமாபதிதான் திரைபொரு பொன்னிநன் னீர்த்துறைவன் திகழ் செம்பியர்கோன் நரபதி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே” எனவும் வரும்.

இவற்றில்  பெரும்பாலனவற்றில் நாயனாரின்  பெயரைச் சொல்லாமல்  சிலந்தி என்றே தேவார மூவர் குறிப்பிடுகின்றனர்

To be continued…………………..

Tags- கோச்செங்கட் சோழன், மாடக்கோவில்கள்,சிலந்தி,யானை , திருவானைக்கா, அனல் வாதம், புனல் வாதம், முருகன் கப்பல் மாலுமி, திருப்புகழில், அருணகிரிநாதர்,  அரிய செய்திகள் Part 25

தமிழுக்குப் புத்துயிர் தந்தவர்! (Post No.15,435)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,435

Date uploaded in London – 18 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

பிப்ரவரி 19: மஹாமஹோபாத்யாய உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் : சிறப்புக் கட்டுரை!

தமிழுக்குப் புத்துயிர் தந்தவர்!

ச. நாகராஜன் 

“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்

    காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்

    இறப்பின்றித் துலங்குவாயே!”

என்று மஹாகவி பாரதியாரால் இறப்பில்லாத அமர புகழை அடைந்தவர் என்று போற்றிப் புகழப்படும் உன்னத தமிழ் அறிஞர் – தமிழுக்குப் புத்துயிர் தந்தவர்- மஹாமஹோபாத்யாய உ.வே. சாமிநாத ஐயர் ஆவார்.

19-2-1855 அன்று கும்பகோணம் அருகில் உள்ள சூரியமூலை என்ற குக்கிராமத்தில் அந்தணர் குடும்பத்தில் பிறந்து உத்தமதானபுரத்தில் வளர்ந்து மாயவரத்தில் மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிட, தமிழ்நூல்களைப் பாடம் கேட்டுப் பயின்று தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் தமிழ் நூல்களைத் தேடிச் சென்று பெற்று, ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து திருத்தமுறப் பழம் பெரும் நூல்களைப் பதிப்பித்து தமிழுக்கெனவே வாழ்ந்து 28-4-1942 அன்று இறைவனடி சேர்ந்தவர் தமிழ்த் தாத்தா திரு உவே. சாமிநாத ஐயர்.

வேங்கடராமன் என்பது இவரது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர். 1871ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் மாயவரத்தில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்க ஆரம்பித்தார்.

அவரது தோட்டத்தில் துளிர் விடும் தளிர்களை நன்கு பார்த்து ஆராய்ந்து மகாவித்துவான் அவற்றைப் பார்க்க ஆசையுடன் தோட்டத்திற்கு வரும் போது அவற்றைக் காட்டி அவரது தனிப்பெரும் அன்பைப் பெற்றவர். வேங்கடராமனின் தணியா தமிழ் தாகத்தைப் பார்த்து வியந்த மகா வித்துவான் அவருக்கு சாமிநாதன் என்ற பெயரைச் சூட்டினார்.

எங்கெல்லாம் தமிழ் ஓலைச் சுவடிகள் உள்ளனவோ அங்கெல்லாம் அயராது அலைந்து ஓடி அவற்றைப் பெற்று ஆராய ஆரம்பித்தார் சாமிநாத ஐயர். தன் வாழ்நாளில்  90க்கும் மேற்பட்ட அரிய நூல்களைப் பதிப்பித்தார். இவரது ஆவணமாக சுமார் 3000க்கும் மேற்பட்ட அளவில் இவரது கடிதங்களும், இவர் சேகரித்த ஓலைச் சுவடிகளும் உள்ளன!.

சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, சூளாமணி, பத்துப்பாட்டு என்று எந்த ஒரு நூலை எடுத்தாலும் இன்று நாம் படிக்கிறோம் என்றால் அது இவரது அரிய முயற்சியால் தான்.

இவரது என் சரித்திரம் என்ற நூல் அந்தக் காலத்தில் தமிழ் அறிஞர்கள் பாடம் சொல்லும் முறையையும், திருவாவடுதுறை உள்ளிட்ட சைவ மடங்கள் தமிழ் அறிஞர்களை ஆதரித்த விதத்தையும் விவரிக்கிறது.

மாட்டு வண்டியில் தமிழ்ச் செய்யுள்களை மகா வித்துவான் புனைந்தது, மிக விரைவாக கவி புனைந்து ஓலை சுவடி எழுதியவரின் ஆணவத்தை அடக்கியது, காவிரி நதியில் ஊற்று பெருகப் பெருக பாடல்களையும் பெருக வைத்து வெள்ளமெனத் தந்தது போன்ற இவரது குருவின் அரிய ஆற்றலை இவர் சொல்லும் திறமே தனி தான்.

நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும்,, நல்லுரைக் கோவை,  நினைவு மஞ்சரி உள்ளிட்ட இவரது நூல்கள் படிக்கப் படிக்க தெவிட்டாதவை.

நீண்ட வரலாற்றையும், சுவையான சம்பவங்களையும் கொண்ட இவரது வாழ்க்கை பற்றிய நூல் தமிழர் ஒவ்வொருவரும் படித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும்.     

பாரதியாரை விட வேறு யாரால் தான் இவரைச் சரியாகக் கணிக்க முடியும்?!

கும்ப முனி எனத் தோன்றும் சாமிநா

   தப்புலவன் குறைவில் சீர்த்தி

பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்

   பேருவகை படிக்கின்றீரே! என்ற வார்த்தைகளால்

அகத்தியரின் மறு அவதாரம் என பாரதியார் கூறுவது பொருத்தம் தானே!

அவர் நினவைப் போற்றுவோம். தமிழை வளர்ப்போம்!

தமிழ் வாழ்க! தமிழ்த் தாத்தா வாழ்க!!

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-35; இந்துமத கலைச்சொல் அகராதி-35 (Post No.15,434)

Written by London Swaminathan

Post No. 15,434

Date uploaded in Sydney, Australia –  18 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆங்கில எழுத்து I- ல் துவங்கும் சொற்கள்

Words beginning with “I ”. English  version was posted yesterday.

Here is the Tamil Version

Human sacrifice in Indus valley

இந்திரன்

உலகின் மிகப்பழைய நூலான ரிக் வேதத்தில் இந்திரன் என்னும் கடவுளே அதிகம் போற்றப்படுகிறார் ; ஆனால் இது ஒரே கடவுளைக் குறிப்பது அல்ல; தலைவன் , எல்லோரையும் வழி நடத்துவோன் என்னும் பொருளில் வருகிறது பறவைகளில் பெரியவன் ககேந்திரன்; மிருகங்களின் தலைவன் – ம்ருகேந்திரன்/சிங்கம், யானைகளின் தலைவன் கஜேந்திரன் ; மனிதர்களில் சிறந்தவன் – நரேந்திரன் ; இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திரன் (பிரசாத்).

ரிக்வேதத்தில் 250 துதிகள் இந்திரன் மீதுள்ளன; மேலும் 50  துதிகளில் வேறு தெய்வங்களுடன் இந்திரன் பெயர் வருகிறது ரிக்வேதத்தில் உள்ள மொத்த துதிகள் 1,028 ; இவைகளில் 25  சதவிகிதத்தை இந்திரன் எடுத்துக்கொள்கிறார்.

மிகவும் பலம் உடையவன், வீரன் என்ற பொருளில் வரும் இந்திரன், விருத்திரன் முதலிய முப்பது அசுரர்களைக் கொள்கிறான். இவைகளில் பல ஆட்கள் அல்ல; இயற்கை சக்திகள் ; உதாரணமாக வான வில்லை இந்திர தனுஷ் என்பார்கள்.

தேவர்களைக் காப்பதால் தேவேந்திரன் என்றும் பெயர்; திசைகளில் கிழக்கு திசையின் அதிபதி; அவனுடைய ஆயுதம் வஜ்ராயுதம்; மனைவி- இந்திராணி/ சசி; மகன்- ஜயந்தன்

புராணக்கதை

கெளதம ரிஷியின் மனைவியான அஹல்யாவை இந்திரன் மானபங்கப்படுத்தியதால் அவரது உடலில் ஆயிரம் குறிகளை ஏற்படுத்தும்படி சாபம் இடுகிறார் ரிஷி; பின்னர் இறைவனை வேண்டி அவைகளைக் கண்களாக மாற்றியதாக சம்பந்தர் முதலியோர் தேவாரப்பாடல்களில் பாடியுள்ளனர்; தமிழிலும் கண்ணாயிரம் என்றபெயர் உண்டு.

சங்க இலக்கியத்தில் இந்திரன்

தொல்காப்பியம் என்னும் பழைய நூல் இந்திரனையும் வருணனையும் தமிழர்களின் தெய்வம் என்று கூறுகிறது; வேந்தன் என்ற பெயரில் அவரைத் தமிழர்கள் குறிப்பிடுகிறார்கள்; சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் இந்திரன் என்ற கடவுள் பல இடங்களில் வருகிறார். புத்தரும் தம்மபத்தில் இந்திரனைப் போற்றுகிறார்.

***

இந்திரா விழா

மழை பெய்வதற்காக ஆண்டு தோறும் இந்திரவிழாவைக்  கொண்டாடுவார்கள்; கடைசி நாளில் இந்திரத் த்வசம்/ கொடி உள்ள கம்பத்தைச் சாய்ப்பார்கள்; இதை ராமாயணத்தில் உவமையாகப் பயன்படுத்துகிறார் வால்மீகி. இந்திர விழாவை தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை நூல்களிலும் காணலாம்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்திர விழா இன்றும் தண்ணீர் விழா WATER FESTIVAL என்ற பெயர்களில் நடைபெறுகிறது; ஆசியா முழுதும் இந்திரனின் பெயர்களை இன்றுவரை மக்கள் ஆண் குழந்தைகளுக்குச் சூட்டுகிறார்கள்; மன்னர்களின் பெயர்களில் இந்திரன் அதிகம் வருகிறார். நேபாள நாட்டில் இப்போதும் இந்திரவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

***

ஐராவதம்

இந்திரனின் யானையின் பெயர் ; தமிழ்நாட்டில் இந்தப்பெயரை ஆண்களுக்கும் சூட்டுகிறார்கள் ;ஐராவதநல்லூர் போன்ற ஊர்ப்  பெயர்களும் இருக்கின்றன. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தெருச் சந்திப்புகளிலும், பூங்காக்களிலும் தபால் தலை களிலும் நான்கு தலைகள் அல்லது நான்கு தந்தங்களுடன் ஐராவதம் உருவம் உள்ளது.

***

இல்வலன்

வாதாபியும் அவனுடைய சகோதரன் இல்வலனும் மனித மாமிசம் உண்ணும் அரக்கர்கள்; பிராமண ரிஷிகளுக்கு வாதாபியை வெட்டி சமைத்துப் போடுவார்கள் . அவர்கள் சாப்பிட்டவுடன் வாதாபி வெளியே வா என்று இல்வலன் கூவுவான். பிராமண ரிஷிகளின் வயிறு கிழிய அவன் வெளியே வருவான். அப்படிப்பட்ட வாதாபியை அகத்தியர் தன்னுடைய வயிற்றைத் தடவி வாதாபி ஜீர்ணோ பவ என்று சொல்லி அவனை ஜீரணம் செய்தார் . இல்வலனும் அழிந்தான்.

***

ஈஸ்வர

சிவனின் பெயர்; கடவுள் என்ற பொதுப் பெயரில் ஏனைய கடவுளுக்கும் பொருந்தும். சிவ பெருமானுடைய பெயர்களில் பின்னொட்டுகளாக ஈஸ்வர வரும்; உ-ம் சுந்தரேஸ்வரர், மஹேஸ்வரன், சோமேஸ்வரன், த்ரயம்பகேஸ்வரன், ராமேஸ்வரன்.

****

இஷ்டதேவதா

ஒருவர் மிகவும் விருப்பப்பட்டு வணங்கும் தெய்வம் ; சிலருக்கு பிள்ளையாரையும் சிலருக்குப் பெருமாளையும் பிடிக்கலாம். பெரும்பாலும் எல்லோரும் குடும்பத்துக்குரிய குல தெய்வத்தை இப்படி இஷ்ட தேவதையாகக் கருதுவார்கள் .

இண்டஸ் வேலி INDUS VALLEY CIVILIZATION

என்னும் சிந்து சமவெளி நாகரீகம்

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மொஹன்சதாரோ ஹரப்பா என்னும் (பாகிஸ்தான்) நகரங்களில் பெரிய நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரை வெள்ளைக்காரர்கள்   சூட்டினார்கள்; ஆனால் இப்போது இது கங்கை- யமுனை நதிக்கரை வரையிலும் குஜராத், ராஜஸ்தான் வரையிலும் 2500  இடங்களில் காணப்படுவதால் இந்தப் பெயர் பொருந்தாது; மேலும் சிந்துவுக்கு முந்திய சரஸ்வதி நதி தீர விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள் அந்த நதியையும் இத்தோடு தொடர்பு படுத்துகிறது. மார்ட்டிமர் வீலர், மக்கே சார் ஜான் மார்ஷல் Sir John Marshall: Director-General of the Archaeological Survey of India (ASI) ,Mortimer Wheeler: Excavated Harappa and Mohenjo-daro in the 1940s, Mackay போன்ற ஆராய்ச்சியாளர்கள் அவசரப்பட்டு உளறினார்கள். இதனால் இந்த நாகரிக ஆய்வுகள் திசை மாறிப்போய் இன்று வரை எழுத்துக்களைப்    படிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஐம்பதுக்கும் மேலான ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு மொழிகளில் எழுத்துக்களைப்  படித்தும் விளக்கியும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்கள் .

ஆரியர்கள் தாக்கியதால் அழிந்தது; திராவிடர்கள் பயந்து ஓடிவிட்டார்கள் என்று உளறிய வெள்ளைத் தோல் ஆராய்ச்சியாளர்கள் ஆரியர்களின் குதிரைகளையோ, இரும்பு ஆயுதங்களையோ காட்ட முடியாமல் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள்! ; ஆண்குறி போல இருப்பது சிவலிங்கம் என்றும் மிருகங்கள் சூழ்ந்த உருவம் பசுபதி என்றும் உளறியவர்கள் நர பலி, புலி ராணி, பேய் முத்திரைகள், ஏழு பெண்கள் , நாகராணி, சுவஸ்திகா சின்னங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள் தற்கால ஆராய்ச்சியாளர்கள்,  இந்த உளறல் பேர்வழிகளுக்குத் தக்க பதிலடி கொடுத்து வாயை மூடி இருக்கிறார்கள். திராவிட அரசியல்வாதிகள் மட்டும் இது தமிழர் நாகரீகமே என்று சொல்லி நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சொல்லி எல்லோரையும் நகைக்க வைக்கிறார்கள் . கிடைத்த எலும்புக்கூடுகள் எதிலும் திராவிட GENE மரபணுவும் இல்லை; திராவிட குட்டை உருவமும், திராவிட போண்டா மூக்கும் இல்லை. இதுவரை சிந்து சமவெளி மொழியைப் படிக்க ஒரு தமிழனாலும் முடியவில்லை. ஹீராஸ் பாதிரியார் போன்றோர் சொன்ன விளக்கங்கள் எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது . அஸ்கோ பர்போலா எழுதிய மிக அருமையான புஸ்தகத்தில் நமது காலத்தில் யாரும் இந்த எழுத்தைப் படிக்க முடியாது என்றே தோன்றுகிறது என்று சொல்லி முடித்துவிட்டார் .

இதன் காலம் 2500 BCE to 1700 BCE

எத்தனை பேர் இது தமிழ் மொழி எழுத்து என்று சாதித்தார்களோ அத்தனை பேர் இது சம்ஸ்க்ருத எழுத்து என்றும் சாதித்து இருக்கிறார்கள் ; எத்தனை பேர் இது திராவிட நாகரீகம் என்று சத்தியம் செய்தார்களோ அத்தனை பேர் இது ஆரிய நாகரீகம் என்றும் சத்தியம் செய்கிறார்கள்!

புதிருக்கு இன்று வரை விடை இல்லை. சிந்து வெளி புஸ்தகங்களைப் படித்தால் மண்டை குழம்பும்; அல்லது நல்ல நல்ல ‘ஜோக்’குகள் கிடைக்கும்!!

முதலில் ஆராய்ச்சி செய்த வெள்ளை முட்டாள்கள், எது எந்த இடத்தில் PROVENANCE , எந்த மட்டத்தில் கிடைத்தது என்று எழுதாததால் அவர்களுக்கு தற்கால ஆராய்ச்சியாளர்கள் முட்டாள் பட்டம் சூட்டுகிறார்கள்.

Neither John Marshal, Director General of Archaeology nor Mackay nor Vats (later excavators) gave any information about the places, layers in their reports.

Later, on examination G.F.Dales did find that Wheeler has misread the archaeological evidence. Neither they belonged to one and the same stratigraphical context nor were there proof of any massacre of Dravidians. Most of the skeletons positively showed that the persons were actually drowned in severe and sudden flood in the river Indus.. K.M Srivatsava aptly remarks “ Indra, therefore ,stands completely exonerated”.

BB Lal says 50 major sites are on Indus river where as 177 early and 283 mature Harappan sites are on the banks of dried Saraswati river that existed before 1700 BC !

***

ஐயர் , ஐயங்கார்

தமிழ்நாட்டிலும் அருகாமை இடங்களிலும் பிராமணர்களுக்கு ஐயர் , ஐயங்கார் என்ற பின்னொட்டு surname suffix இருக்கும் .

உ-ம் பால கிருஷ்ண ஐயங்கார் , சாமிநாத அய்யர்.

ஆர்ய என்றால் கற்றவர் , பாண்பாடு உடையவர், உயர்ந்தோரென்று பொருள்; இது பிராக்ருதத்ததில் அஜ்ஜ என்று மருவி தமிழில் அய்யர் என்று மாறியது. பெரும்பாலும் விபூதி பூசும் சைவர்கள் இப்படி தங்களை அழைத்துக்கொண்டார்கள்; அவர்களிலிருந்து வேறுபடுத்திக்   காட்டுவதற்காகப் பெருமாளை வணங்கும் வைஷ்ணவ பிராமணர்கள் கார் என்ற உயர்வுப் பெயரைச் சேர்த்துக்கொண்டு அய்யங்கார் ஆனார்கள்; இப்பொழுதும் தெலுங்கில் பெரியவர்களுக்கு காரு அடைமொழி உண்டு .

சைவர்களாகிய தமிழ் நாட்டுப் பிராமணர்களில் வடமா, பிரஹத்சரணம், அஷ்டஸஹஸ்ரம் முதலிய பிரிவுகள் உண்டு.

அதேபோல வைவ்ணவர்களில் தென் கலை, வடகலை, செல்லுர் அய்யங்கார் பிரிவுகள் உண்டு.

தென்கலைப் பிரிவினர் ஆங்கில எழுத்து ஒய் Y போல நாமம் இட்டுக்கொள்வார்கள்; தமிழ் மொழிப்   பாஸுரங்களைப் பாடுவார்கள். வடகலைப் பிரிவினர் ஆங்கில எழுத்து யு U  போல நாமம் இட்டுக்கொள்வார்கள் ; சம்ஸ்க்ருத மொழி துதிகளைப் போற்றுவார்கள்.

To be continued ………………………..

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-34; இந்துமத கலைச்சொல் அகராதி-34, இந்திரன், சிந்துவெளி நாகரீகம், அய்யர் , அய்யங்கார்

அருணகிரி நாதர் சொன்ன நான்கு கதைகள்! ஐந்து கோசம்!காந்த ஊசி!– 24 (Post No.15,433)

Written by London Swaminathan

Post No. 15,433

Date uploaded in Sydney, Australia –  18 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 24

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 24

***

முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. …

முதுமையே வாராதவனே, என்றும் இளமையாய் இருப்பவனே,

என் தந்தையே, பரிசுத்தனே, பாசங்களினின்று நீங்கியவனே,

முக்தியைத் தரும் பெருமாளே.

இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு:

     595 – மெய்ச் சார்வு அற்றே,

     768 – கட்காமக்ரோத,

     1116 – உற்பாதம் பூ,

     1117 – எற்றா வற்றா,

     1118 – செட்டாகத் தேனை,

     1119 – பட்டு ஆடைக்கே,

     1120 – பத்து ஏழு எட்டு,

     1121 – பொற்கோ வைக்கே,

     1122 – பொற் பூவை,

     1123 – மெய்க்கூணைத் தேடி  … என்று தொடங்கும் பாடல்கள்.

***

ஐந்து கோசங்களும் திருப்பதி மலையில் முருகனும்

திருப்பதி மலையில் முருகன் இருப்பதாக மீண்டும் மீண்டும் கூறுகிறார் அருணகிரி .

சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி … சீச்சீ என்று வெறுக்கத்தக்க

தீய திரிபுர மலைகள் போன்ற (ஆணவம், கன்மம், மாயை என்ற)

மும்மலங்களாகிய காடு வெந்து சாம்பலாகும்படி,

நித்திரைக் கோசம் வேரற … தூக்கமும், ஆன்மாவை

முடிக்கொண்டுள்ள பஞ்ச கோசங்களும்* வேரோடு அற,

சீவன் முத்தியிற் கூடவே … ஆன்மா முக்தி நிலை அடைந்து

விடுதலை பெற,

களித்து அநுபூதி சேர … யான் மகிழ்ந்து பேரின்ப

அநுபவத்தைப் பெற,

அற்புதக் கோல மாமென … அற்புதத் தோற்றம் இது என்று

கூறும்படியாக

சூரியப்புவிக் கேறி யாடுக … சூரிய மண்டலத்தில் யான் சென்று

அங்கு நடனம் புரிய,

சீலம் வைத்தருள் தேறியேயிருக்க அறியாமல் … ஒழுக்க

வழியினில் சென்று திருவருளை உணர்ந்து நிலைபெற்றிருக்கத் தெரியாமல்,

பாசம் விட்டுவிட் டோடி போனது … பாசங்கள் என்னை

விட்டு விலகி மீண்டும் ஓடிவந்து சேரும் நிலை

போது மிப்படிக்கு ஆகிலேன் … போதும் போதும். இப்படிப்

பாசத்தில் அகப்படும் நிலை எனக்கு வேண்டாம்.

இனிப் பாழ்வழிக்கு அடைக்காமலே … இனியாகிலும்

இந்தப் பாழும் நெறியில் என்னை அடைத்து வைக்காமல்

பிடித்து அடியேனைப் பார் அடைக்கலக் கோலமாமென …

என்னைப் பற்றிக்கொண்டு உலகில் எனக்குப் புகலிடமாக

இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து,

தாபரித்து நித்த ஆரம் ஈதென … ஆதரவுடன் யான்

நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக

பாத பத்மநற் போதை யேதரித்தருள்வாயே … உன்

திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்வாயாக.

தேசில் துட்டநிட்டூர … ஞானம் இல்லாத துஷ்டனும்,

கொடுமை வாய்ந்தவனும்,

கோதுடைச் சூரை வெட்டி … குற்றங்கள் நிறைந்தவனுமான

சூரனை வெட்டி,

யெட் டாசை யேழ்புவித் தேவர் முத்தர்கட்கு … எட்டுத்

திசைகளிலும் ஏழுலகிலும் இருக்கும் தேவர்கள், ஜீவன்முக்தரான

அறிஞர்களின்

ஏத மேதவிர்த்தருள்வோனே … துயரத்தை நீக்கி அருளியவனே,

சீர்ப டைத்தழற் சூல மான்மழுப் பாணி … தன் திருக்கரங்களில்

சிறப்பு வாய்ந்த நெருப்பு, சூலம், மான், மழு ஆகியவற்றை ஏந்தியவரும்,

வித்துருப் பாதன் … பவளம் போன்ற சிவந்த பாதங்களை

உடையவருமான சிவபெருமானின்

ஓர்புறச் சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் குருநாதா …

ஒரு பாகத்தில் அமர்ந்த சிறப்புப் பொருந்திய புகழ்த் தேவி பார்வதி

பெற்றெடுத்த அழகிய குருநாதனே,

காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக் கோவ லத்தியிற் கான …

காசி, முத்தமிழ் விளங்கும் மதுரை, ஏழு மலைகளுடைய திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா,

நான்மறைக் காடு பொற்கிரிக் காழி யாருர்பொற்

புலிவேளூர் … நான்கு வேதங்களும் தங்கும் வேதாரணியம், கநகமலை, சீர்காழி, திருவாரூர், அழகிய சிதம்பரம், புள்ளிருக்கும் வேளூராகிய வைத்தீசுரன்கோயில்,

காள அத்தியப் பால்சி ராமலை … திருக்காளத்தி, அதன்பின்

திரிசிராப்பள்ளி முதலிய தலங்களிலும்

தேச முற்றுமுப் பூசை மேவி … நாடு முழுவதும் மூன்று

காலங்களிலும் வழிபாடு நடத்தப் பெற்று,

நற் காம கச்சியிற் சால மேவுபொற் பெருமாளே. … நல்ல

காமகோட்டம் என்ற கச்சியில் (காஞ்சீபுரத்தில்) மிகவும் விரும்பி

வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.

பஞ்ச கோசங்கள் (ஐந்து உறைகள்):

அன்னமய கோசம் – உணவும் உடலும் கூடியது,

பிராணமய கோசம் – வாக்கு, பாணி, பாதம், மற்றும் கர்மேந்திரியங்கள்  இவற்றுடன் உயிரும் கூடியது,

மனோமய கோசம் – மனம் மட்டும்,

விஞ்ஞானமய கோசம் – ஐம்பொறிகளும், புத்தியும் கூடியது,

ஆனந்தமய கோசம் – ஆன்மாவுக்கு மிக அருகில் போலி ஆனந்தத்தைத் தருவது.

***

கதை 1

கிரவுஞ்ச மலையின் கதை

பாவக்கார் கிரி பொடி பட்டுப் போகச் சூரர்கள் தலை இற்று

இட்டு ஆடப் போர் புரிகின்ற வேலா … (வருபவர்களை உள்ளே

மடக்கி) பாவங்களைச் செய்த (கிரவுஞ்சன்* என்னும் அசுரனாகிய)

மலை தூளாகும்படிப் போக, சூரர்களுடைய தலைகள் அறுந்து

வீழ்ந்து ஆடும்படி சண்டை செய்கின்ற வேலனே,

திகிரிப் பொன் பாணிப் பாலனை மறை கல் புத்தேள் அப்

பூம(ன்)னை சினம் உற்றுச் சேடில் சாடிய கந்த வேளே …

சக்கரம் ஏந்திய அழகிய திருக்கரத்தை உடைய திருமாலின்

பிள்ளையும், வேதங்களைக் கற்ற தேவனும், அழகிய தாமரையில்

வீற்றிருப்பவனுமாகிய பிரமன் மீது கோபம் கொண்டு அவனது

திரட்சியான தலையில் குட்டிய கந்தப் பெருமானே,

தினை உற்றுக் காவல் காரியை மணம் உற்றுத் தேவ பூவொடு

திகழ் கச்சித் தேவக் கோன் மகிழ் தம்பிரானே. … தினைப்

புனத்திலிருந்து காவல் புரிந்த வள்ளி நாயகியை திருமணம் செய்து

கொண்டு, தேவருலகில் வாழ்ந்த பூ அனைய தேவயானையுடன் சேர்ந்து,

விளங்கும் காஞ்சீபுரத்தில் வீற்றிருந்து, தேவர்கள் தலைவனான இந்திரன் மகிழும் தம்பிரானே.

தன்னிடத்தே வழி காட்டி உள்ளே வந்தவர்களை மாயையால் மடக்கி மாய்வித்த கிரவுஞ்சன் என்னும் அசுரன், அகத்திய முனிவர் அங்கு வர, அவரையும் வழி தடுமாறச் செய்தான். இதை அறிந்த முனிவர் நீ இந்த மலையாகவே இருக்கக் கடவாய். முருகன் கை வேலால் இறப்பாய் என்று சாபம் இட்டார்.

***

ஒரே நொடியில் உலகம் சுற்றிய முருகன்

பூமியை முதலில் வலம் வந்தவர் யூரி ககாரின் இல்லை !

மயில் ஏறி அன்று நொடி போதில் அண்டம் வலமாக வந்த

குமரேசா … மயிலின் மீது ஏறி முன்பு ஒரு நொடிப் பொழுதில் உலகைச் சுற்றி வந்த குமரேசனே,

மறி தாவு செங்கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த

முருகேசா … மான் தாவுகின்ற சிவந்த கையை உடைய

சிவபெருமானின் இடது பாகத்தில் குடிகொண்டுள்ள பார்வதி

தேவி பெற்ற முருகேசனே,

***

கதை 2

காஞ்சீபுர ஏகாம்பரேஸ்வரர் கதை

கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறுகைக்கு … ஏகாம்பரேஸ்வரராய்

விளங்கும் சிவபிரானின் பாம்புகள் நிலைத்துள்ள தோள்களைத் தழுவும் பொருட்டு,

கற்புத் தவறாதே … கற்பு நிலை தவறாமல்,

கம்பை யாற்றினில் அன்னை தவம்புரி … கம்பா நதிக்கரையில்

காமாக்ஷி அம்மை தவம் செய்திருந்த*

கச்சிச் சொக்கப்பெருமாளே. … கச்சி என்ற காஞ்சீபுரத்தில்

அழகாக வீற்றிருக்கும் பெருமாளே.

காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் காமாக்ஷி தேவி சிவபிரானின் இடது பாகத்தைப் பெறுவதற்காக கடுந்தவம் செய்தாள். தேவியின் திறத்தை உலகுக்குத் தெரிவிக்க எண்ணி சிவனார் கம்பா நதியில் பெரு வெள்ளத்தை ஏற்படுத்தினார். லிங்கம் வெள்ளத்தில் கரையுமே எனக்கருதி தேவி லிங்கத்தைத் தழுவ, லிங்கத்தில்  தேவியின் வளைத் தழும்பும், மார்த் தழும்பும் தோன்றின. ஈசன் தேவிக்குத் தன் இடப்பாகத்தை ஈந்தான் – கச்சி புராணம்.

***

கதை 3

காந்தமும் ஊசியும் கச்சியப்பரும் கந்த புராணமும்

காந்தக் க(ல்)லும் ஊசியுமே என ஆய்ந்துத் தமிழ் ஓதிய சீர்

பெறு(ம்) … காந்தக் கல்லும் ஊசியும் போல, ஆசிரியரும் மாணவருமாக ஒருமித்து தமிழை ஓதுகின்ற* மேன்மை பொருந்திய

காஞ்சிப் பதி மா நகர் மேவிய பெருமாளே. … காஞ்சி

என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

காஞ்சி குமரக் கோட்டத்து அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார் தாம் பாடிய கந்தப் புராணப் பகுதி ஏட்டை தினம் இரவில் முருகன் திருவடியின் கீழ் வைக்க,  மறுநாள் காலையில் அதில் திருத்தங்கள் காணப்படுமாம். இது குருவான முருகனையும் சீடரான கச்சியப்பரையும் பற்றிய குறிப்பு எனக் கருதலாம்.

***

கதை 4

குமர கோட்டத்தின் கதை

குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த … தன்

வசப்படுத்தி, உன் சிறந்த தெய்வ வடிவம் காட்டி, அவளை மணந்தவனே,

குமரகோட்டத்து அமர்ந்த பெருமாளே. … குமரக்கோட்டம்*

என்ற காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

பிரமனைச் சிறைப்பிடித்த குற்றம் நீங்க, சிவபிரானின் ஆணையால், முருகன் குமரக் கோட்டத்தில் தவக்கோலம் பூண்டு லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்- காஞ்சிப் புராணம்.

***

கற்பக விநாயகரின் மஹிமை

குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்

கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் …

யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும் பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம் இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன், பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன், வலிமை வாய்ந்தவன், கணபதி,

கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்

நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை

இளையோனே … துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும் தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான் பெற்றருளிய மலை போன்ற உருவத்தை உடையவன், ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே,

துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த சடானன துஷ்ட

நிக்ரக … அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின்

பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே,

துஷ்டர்களை அழிப்பவனே,

தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா …

(மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட) கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல், இசை, நாடகம் என்ற) முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே*,

துங்க கஜாரணியத்தில் உத்தம … உயர்வு பெற்ற

திருவானைக்காவில் வீற்றிருக்கும் உத்தமனே,

சம்பு தடாகம் அடுத்த தக்ஷிண சுந்தர மாறன் மதில் புறத்து

உறை பெருமாளே. … சம்பு தீர்த்தத்துக்கு அடுத்துத் தெற்கே உள்ள சுந்தர (உக்கர) பாண்டியன் மதிலின் வெளிப்புறத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

மதுரையில் முருகன் உக்கிர பாண்டியனாய் தோன்றி, தமிழைப் பரிபாலித்தார்.

To be continued…………………..

Tags – அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் Part 24 , பஞ்ச கோசம் , காஞ்சீபுர கதை, காந்த ஊசி, கந்த புராணம், சொல் அழகு, கிரவுஞ்ச மலை