பாரதி போற்றி ஆயிரம்- 90 (Post No.5008)

Compiled by S NAGARAJAN

 

Date: 14 MAY 2018

 

Time uploaded in London –  5-47 AM   (British Summer Time)

 

Post No. 5008

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 90

  பாடல்கள் 977 முதல் 1000

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

6 கவிஞர்கள் இயற்றியுள்ள 24 பாடல்கள்!

பல கவிஞர்கள் பாரதியாரைப் போற்றி எழுதியுள்ளனர். அவர்களுள் 6 கவிஞர்கள் இயற்றியுள்ள 24 கவிதைகளை  இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

 

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்!

இயற்றியவர் : ஹா.கி.வாலம் அம்மையார்

 

வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்!
விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்!
கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்! ‘
கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி                                      ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்
அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல்                                         போருக்கு ரகுராமன்! புலமைக்கு வாணி!
பொற்புக்கும் நட்புக்கும் புண்ணியக் கண்ணன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்…..சுப்ரமணிய பாரதியின் பெருமையை என்னென்று சொல்வேன்…                என்று கவிதை தொடர்கிறது.

***

பாரதி கீதமே பாடுவோமே நிதமே

இயற்றியவர்: ப.ஜீவானந்தம்

 

பாரதிதாசன் நடத்தி வந்த “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்” எனும் இதழில் 1935இல் ஜீவா அவர்கள் எழுதிய “பாரதி கீதம்” எனும் தலைப்பிட்ட பாடலை இங்கு தரப்படுகிறது.

இந்தப் பாடலை ஸ்ரீ தியாகையர் சுவாமிகள் இயற்றிய “ஸ்ரீ ராம பாதமா” எனும் பாடலமைந்த ராகத்தில் பாடவேண்டும் என்ற குறிப்பையும் அவர் கொடுத்திருக்கிறார். அந்த பாடல் வருமாறு:–

 

பல்லவி

பாரதி கீதமே பாடுவோம் நிதமே

பயன் தரும் போதமே.

 

அநுபல்லவி

வீரமுங் காதலும் வீறுடன் வாழ்தலும்

வெற்றிதேச பக்தியூட்டும் முற்றிலும் விநோதமே

 

சரணங்கள்

வீழ்ந்த நற்றமிழர் வாழ்ந்திட அமிழ்தம்

விரும்பி யளிக்குமே நிதம்

சூழ்ந்த நற்பொருளே சொல்லிய தெருளே

சுத்தமெய்ச் சுதந்திரம் சமத்துவம் விதைத்திடும்

 

பாரததேச பக்த ராவேசம்

பரிவுடனே வாசம்

சேரிதத் தூண்டுகோல் சீர்கவி வேண்டுகோள்

ஜீவானந்தன் தோத்திரப்பா மேவும் ஸ்ரீசுப்ரமண்ய

 

ப.ஜீவானந்தம் நாடறிந்த நல்ல பாரதி ஆர்வலர். பல கூட்டங்களிலும் பாரதி பற்றிப் பேசி வந்தவர்.

 

***

 

என் நாவினிலே குடி கொள்வாய்!

இயற்றியவர் : தேனம்மை லட்சுமணன்

 

பாரதத்தின் விடுதலைக்காய்

பா ரதத்தில் உலா வந்தவர்.
பெண் விடுதலை மண் விடுதலை

பெண் கல்வியைப் பாடியவர்
சமத்துவமற்ற சமுதாயத்தையும்

சாதி பேதங்களையும் சாடியவர்.
இளைய சமுதாயத்தின் முன்னேற்றம் நாடியவர்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய

அந்த நெருப்புக் கவிஞன்
நாற்பதாண்டுகள் கூட வாழாமல்

நாலாயிரம் ஆண்டுகளுக்கான பாடல்கள் பாடியவன்..
மகா கவியே நின்னைச் சரணடைந்தேன்
என் நாவினிலே குடி கொள்வாய்.

 

9-11-2017 காரைக்குடி பாரதி தமிழ்க் கழகம் பாரதி விழா – கவியரங்கத்தில் தேனம்மை லட்சுமணனின் பாடல்களில் இரண்டு பாடல்கள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளது.

***

வளங்கள் பெருகவென்று பாடியவன்!

இயற்றியவர்: கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி

 

அறிவு ஓங்கி வையம் தழைக்கப் பாடியவன் – உலகில்

ஆணும் பெண்ணும் ஓர் நிகரெனப் பாடினான் – அடிமைச்

சிறுமை வாழ்வுச் சிதைவுறுமெனப் பாடினான் – நாட்டின்

திறமை மேவும் தொழில் வளங்கள் பெருகவென்று பாடினான்’’

 

நாடறிந்த திரைப்படக் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. நாடகத்துறை, திரைப்படத் துறை, படைப்பிலக்கியம் என பல்வேறு துறைகளிலும் கட்டாயத்திற்காக எழுதாமல் மனோதர்மத்தின் படி எழுதிய படைப்பாளி. அவரது ஒரு பாடல் மேலே தரப்பட்டுள்ளது.

***

நம் பாரதி மூலமே

இயற்றியவர் : மன்னை பாஸந்தி

 

எழுச்சி கண்டோம் அவர்தம் முறுக்குமீசை மூலமே

ஏற்றம் கண்டோம் அவர்தம் தலைப்பாகை மூலமே

சமநீதி கண்டோம் அவர்தம் கருப்புக்கோட்டு மூலமே

சமத்துவம் கண்டோம் சகலரும் நம் பாரதி மூலமே

 

பாரதியின் பாஞ்சாலி சபதம் காவியம் மூலமே

பாரதியின் கண்ணன் பாட்டு கவிதைகள் மூலமே

பாரதியின் தேசியப் புரட்சி பாடல்கள் மூலமே

பாரதம் முன்னேறிய பாதையும் நம் பாரதி மூலமே

 

பாரத அடிமைச்சங்கிலி தகர்ந்திடக் கண்டோமே

பாரதத்தாயின் மணிக்கொடி பறந்திடக் கண்டோமே

பாரத சுதந்திரக் கனவு பலித்திடக் கண்டோமே – நாம்

பாரத தேசப்பற்று மிகுந்தோம் நம் பாரதி மூலமே

 

பிறப்பு உதயமாவது அன்னை தந்தை மூலமே

பிறந்தபின் அறிவு உதயமாவது ஆசானின் மூலமே

இறந்தபின் பலனடைவது நம் நற்செயல் மூலமே – நாம்

பிறவிப் பயனை அடைந்ததும் நம் பாரதி மூலமே

 

எத்துணை இடர்களை வாழ்வினில் சந்தித்தாலும் – அன்று

பித்தனே என்று பலபேர் அவரை பழித்துரைத்தாலும்

நித்தமும் தன்வழிநின்று இளவயதில் மறைந்தாலும் -இது

சத்தியம் நல்வழிப்பாதை தமிழுக்கு நம் பாரதி மூலமே

***

தேசிய மகாகவி பாரதி

இயற்றியவர் மன்னை பாஸந்தி

 

பார்த்தனுக்கு சாரதி பார்த்த சாரதி

பாரினில் தமிழுக்கு சாரதி நம்பாரதி

பாரதிபோல் தேசியமகாகவி பார்தனில் எவருமுண்டோ?

ஏர்பிடிக்கும் உழவன் முதல் செல்வந்தர்கள் வரை வணங்கிடும்

 

காவியங்கள் பலவும் உதித நம் தாய்த்திருநாடு – திருக்

கோயில்கள் பலவும் அமைந்த நல் தவத்திருநாசு – பல

தலைவர்கள் பிறந்த பெருமை மிகுந்த பொன்னாடு

அன்னியரும் போற்றிடும் பலம்வாய்ந்த இந்தியநாடு

 

வீ ரதீரத்தைப் போதித்த எட்டயபுர சுப்ரமணிய மகாகவி

அபாரன்  மஹாதீரன் அதிசுந்தர ரூபன் புரட்சிக்கவி

போர்முழக்கமிட்டு வீ ரர்களைத் தட்டி எழுப்பிய எழுச்சிக்கவி

பாரத மக்களுக்கு சுதந்திரதாகம் ஊட்டிய தேசியமகாகவி

 

சிறியோர் பெரியோர் எல்லோர்க்கும் சிறந்த அபிமானி

ஒருவருக்குமே அஞ்சாத சுதந்திர வீரத்திருமேனி

வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும் அருள்ஞானி

திருவல்லிக்கேணியில் வாழ்ந்த நற்பெரும்ஞானி

 

எத்துணை சிறந்த பாடல்கள் கவிதைகள் படைத்தான்

உத்தமனாய் விளங்கியே நம் துயர்தனைத் துடைத்தான் – கவி

வித்தகனாய் நம் இந்திய மக்களுக்காகவே உயிர்நீத்தான்

பக்தியுடன் பராசக்தி அருளுடன் தேசிய மகாகவியானான்

மன்னை பாஸந்தி சென்னையைச் சேர்ந்த நிதித்துறை கம்பெனியில் வேலை பார்த்து வந்ததோடு அவ்வப்பொழுது கதை,கட்டுரை ஆகியவற்றை எழுதி வருபவர். பல் துறை சான்ற விற்பன்னர்களுக்குத் தனது டிரஸ்ட் மூலமாக விருது அளித்து வருபவரும் கூட.

***

 

பாட்டிற்கோ பாரதியே தான்

இயற்றியவர் : ச.நாகராஜன்

செய்யு(ள்) நலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்
உய்யு(ம்) நலம் காட்டியவன் ஓர் கவிஞன் – நெய்யுமொரு
கூட்டிற்கோ தேன் கூடு கொட்டு தமிழ்ச் சந்த மொழிப்
பாட்டிற்கோ பாரதியே தான்

வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தை வாழவைக்கத்

தந்துயரம் பாராத சான்றோருள்இந்தியமா

நாட்டிற்கோ காந்தியெனில் நாமெழவே கூவிட்ட

பாட்டிற்கோ பாரதியே தான்

 

வீட்டிற்கோ குலமகளிர் வீதிக்கோ நல்லோர்பள்ளி

காட்டிற்கோ உயிர்தருமொரு சஞ்ஜீவனிஇந்தியமா

நாட்டிற்கோ வேதரிஷிகள் கவிதையெனில் தமிழ்ப்

பாட்டிற்கோ பாரதியே தான்

வேறு

இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்

வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்

தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்

புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்

புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்

புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்

புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை

எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்

********

 

 

அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!

 

இயற்றியவர் : ச.நாகராஜன்

 

 

இருளகற்றும் இனிய தமிழ் பெருமையினை நிலை நாட்டினாய்

மருளகற்றும் விதமெனவே வெள்ளையரை விரட்டி ஓட்டினாய்

****

நல்லோர்கள் புகழ்தம்மை நாளும் சொல்லிக் கவி பாடினாய்

அல்லோர்கள் அரக்கர்தமை இனம் காட்டிச் சாடினாய்

**                        தெய்வ பக்தி தேசபக்தி இரு கண் என இனிய மொழி கூறினாய்

செய்வதறியா மக்களுக்கோர் வழிகாட்டிப் புகழேணியில் ஏறினாய்

***

தமிழ்க்கவியே! சொற்கள் எனும் தேர் ஓட்டும் சாரதியே!

அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!

***

கற்க கசடற!

இயற்றியவர் : ச.நாகராஜன்

 

கற்க கசடற பாரதி பாக்களை

நிற்க அதற்குத் தக

 

பல்பொருளும் பாரிதனில் பார்க்க வேண்டின்

நல்கவிஞன் பாரதியை நாடு

 

தெய்வபக்தி தேசபக்தி இவ்விரண்டும் முன்வைத்த

தெய்வகவி பாரதி யே

 

போற்றுமின் பாரதியை போற்றுமின் பொற்கவியை

போற்றுமின் பா-ரதியை பாடுமின் பாடல்களை

ஏற்றுவந்தே இனிது வாழ்க!

 

ச.நாகராஜன்இந்த பாரதி போற்றி ஆயிரம் தொடருக்கான கவிதைகளைத் தொகுத்தவர்.

3500 கட்டுரைகள் எழுதியவர். பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். http://www.tamilandvedas.comஇல் தொடர்ந்து இவரது படைப்புகள் வெளியாகி வருவதை அன்பர்கள் அறிவர். இவரது 52 புத்தகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

 

தொகுப்பாளன் முடிவுரை:

பாரதி போற்றி ஆயிரம் தொடரைத் தொடங்கும் போது பாரதியைப் போற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களில் ஒரு ஆயிரத்தைத் தொகுப்பது சுலபம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் கவிதைகளைத் தேடி எடுப்பது, கவிஞர்களைப் பற்றிய குறிப்புகளை சேகரிப்பது, பிரசுரகர்த்தாவிடமிருந்து அனுமதி பெறுவது, கவிஞர்களின் அனுமதியைப் பெறுவது, இணையதளத்தில் வெளியிட்டோரின் அனுமதியைப் பெறுவது போன்ற விஷயங்கள் அசாத்தியமான காரியம் என்பதை உணர்ந்து கொண்டேன். பலரும் பதிலே போடவில்லை. காரணங்கள் பலவாக இருக்கலாம் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

சுமார் எழுபது வருட காலத்தில் வெளியான கவிதைகளைத் தொகுப்பதும் அக்கவிதைகளுக்கான அனுமதியைப் பெறுவதும் சாதாரணமான விஷயமல்ல என்பதை எனக்கு இந்தப் பணி உணர்த்தியது.

என்றாலும் ஆரம்பித்த பணியை பாரதி ஆர்வம் என்ற ஒரே உந்துகோல் வழி நடத்திச் சென்று முடித்து வைத்தது.

இதனை வெளியிட்ட http://www.tamilandvedas.com இணையதளத்தை நடத்தி வரும் திரு ச.சுவாமிநாதனுக்கு எனது நன்றி. பல்வேறு பதிப்பகங்கள், கவிஞர்கள், இணையதளங்கள், ப்ளாக்குகள் அவற்றிற்கான உரிமையாளர்கள் மற்றும் படைப்பாளிகள், கவிஞர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைத் தொடர்ந்து படித்து ஊக்கமூட்டிய அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

பாரதி நாமம் வாழ்க!

அன்பன் ச.நாகராஜன்

பெங்களூரு

7-5-2018

இந்தத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது.

***

WIFE BEATING HUSBANDS AND POLYGAMY ANECDOTES (Post No.5007)

Compiled by London Swaminathan 

 

Date: 13 May 2018

 

Time uploaded in London – 15-47 (British Summer Time)

 

Post No. 5007

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Henry William Anglesea, a British peer and soldier who died in 1854, was angrily beating his wife. She pointed to a house maid and cried out,

“How much happier is that wench than I am?”

Her husband immediately kicked the maid downstairs and then said,

“Well, there is at least one grievance removed”.

 

xxx

Late one night a drunken husband, after spending his whole time at his cub, set out for home.

“Well”, said he to himself, “if I find my wife up I will scold her; what business she has to sit up, wasting fire and light, eh? and if I find her in bed, I will scold her; what right she has to go to bed before I get home?”

 

xxx

A Mormon acquaintance once inveigled Mark Twain into an argument on the issue of polygamy. After he had been beaten about the ears with long and tedious expositions justifying the practice, the climax was capped by the Mormon’s demand that he cite any passage of scripture expressly forbidding polygamy.

“Nothing easier”, Mark replied.

“No man can serve two masters”.

xxx

In his old age, after he quit the war path, Quanah Parker, the famous chief of the Comanches, adopted many of the Whiteman’s ways. But in one respect he clung to the custom of his fathers. He continued to be a polygamist.

He was a friend and admirer of Theodore Roosevelt and on one occasion when Roosevelt was touring Oklahoma, he drove out to Parker’s camp to see him. With pride Parker pointed out that he lived in a house like a white man, that his children went to a white man’s school, and he himself dressed like a white man.

 

Whereupon Roosevelt was moved to preach him a sermon on the subject of morality. “See here chief, why don’t you set your people a better example? A white man has only one wife, he is allowed only one at a time . Here you are living with five squaws. Why don’t you give four of them and remain faithful to the fifth?”

 

Parker stood still a moment, considering the proposition. Then he answered: You are my great white father, and I will do as you wish – on one condition.”

 

“What is the condition?” Roosevelt asked.

“You pick out the one I am to live with and then you go and kill the other four.”

–Subham–

 

 

 

லண்டனில் எதற்காக தமிழ் படிக்க வேண்டும்? (Post No.5006)

லண்டனில் எதற்காக தமிழ் படிக்க வேண்டும்? (Post No.5006)

 

Written by London Swaminathan 

 

Date: 13 May 2018

 

Time uploaded in London – 14-21 (British Summer Time)

 

Post No. 5006

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

லண்டன் க்ரோய்டன் தமிழ்க் கழக (பள்ளி) மூன்றாவது ஆண்டு விழாவில் (Croydon Tamil Kazakam) பேசுவதற்கு என்னை நேற்று (May12, 2018) அழைத்திருந்தார்கள். நானும் க்ரோய்டன் டெபுடி மேயர் மைக்கேல் செல்வநாயகமும்,  க்ரோய்டன் எம். பி. சாரா ஜோன்ஸுல் (Sara Jones, M. P.) பேசினோம். எங்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். நினைவுப் பரிசுகளும் அளித்தனர்.

Shawl to london swaminathan

நான் ஆற்றிய உரையின் சுருக்கம்

 

(முதலில் தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்களை வைத்து— அ, க,

ஆ, பை, கை, மை, வை, வா, போ, தீ, பூ– ஒரு விளையாட்டு விளையாடினேன். தமிழை சுவைபடக் கற்பிக்க   இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு. இது போல தினமும் மாணவர்களுக்கு விளையாட்டு, விடுகதை முதலியன சொல்லி சுவையுடன் வகுப்பை நடத்துங்கள்;  மாணவர்களை ஈடுபடுத்தும் இன்டெர் ஆக்டிவ் கேம்ஸ் (Inter Active Games) இருந்தால் ஆர்வத்துடன் தமிழ் படிப்பார்கள் என்றேன்.

 

பின்னர் சொற்பொழிவைத் துவக்கினேன்:-

எல்லோருக்கும் முதற்கண் வணக்கம்.

நான் ஈராண்டுகளுக்கு முன்னர் உங்கள் ஆண்டு விழாவுக்கு வந்தபொழுது 40 மாணவர்கள் இருந்தனர். இன்று அது எண்பது மாணவர்களாக உயர்ந்து விட்டது என்பதைக் கேட்டு மகிழ்ந்தேன்.

 

ஒவ்வொரு முறையும் எல்லோரும் தமிழ் கற்கச் சொல்லும் காரணங்கள்:–

தமிழ் பழைய மொழி, வளமான மொழி, தாய் மொழி, இனிமையான மொழி என்றெல்லாம் சொல்லுவர். நான் இன்று உங்களுக்கு- இங்குள்ள பெரியோர்களுக்கும்தான்.      — ஒரு புதிய காரணத்தையும் சொல்கிறேன்.

லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரி என்னும் (British Library) பழைய நூலகம் உள்ளது. 20,000 க்கும் அதிகமான நூற்றாண்டுக்கும் முந்தைய பழைய — தமிழ்ப் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். இது அதிசயமான விஷயம். இவைகளைப் படிக்க- பயன்படுத்த, கட்டணம் ஏதுமில்லை; நீங்கள் முகவரியுடன் கூடிய 2 யுடிலிட்டி பில்கள் (two utility bills) , கையெழுத்துடைய ஒரு பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசென்ஸுடன் போனால் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச பாஸ் பெறலாம். நான் மூன்றாண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி சென்று புஸ்தகங்களை விளம்பரப்படுத்தி வருகிறேன்.

 

‘300 ராமாயணங்கள்’– என்று ஒருவர் புஸ்தகம் எழுதினார். ஆனால் பழைய புஸ்தகங்களைப் பார்த்தபோது அது தவறு; 3000 ராமாயணங்கள் இருக்கும் என்று தெரியவந்தது. எவ்வளவு கவிதைகள், நூல்கள், நாடகங்கள் – ராமாயணத்தை வைத்தே! அது மட்டுமல்ல; ஏரளமான பெண்கள் 100 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நூல்களை   எழுதியுள்ளனர் . அவர்கள் பெயர்களை நாம் கேட்டதே இல்லை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மொழி பெயர்த்துள்ளனர். இது தவிர, ஏராளமான தமிழ்  நாடகங்கள் உள்ளன.

 

இவைகளை எல்லாம் யாருக்காக சேமித்து வைத்தனர்? எழுதியோரும் இவைகளை எல்லாம் யாருக்காக எழுதினர்? பல புஸ்தகங்களைக் கைகளில் எடுத்தால் அவைகள் உளுத்துப்போன நிலையில் உதிர்ந்தே போகின்றன. இவைகளைப்  படிக்கவாவது நாம் தமிழ் கற்க வேண்டும்’

 

 

 

தமிழால் இணைவோம்

சமீப காலமாக  ஒரு வாசகம் பிரபலமாகி வருகிறது – ‘தமிழால் இணைவோம்’ — அதன் பின்னாலுள்ள அரசியலை மறந்து விட்டு வாசகத்தை மட்டும் கவனியுங்கள். தமிழுக்கு அபாரமான இணக்கும் சக்தி இருக்கிறது. நான் பத்து நிமிட சொற்பொழிவுக்காகவா (மூன்று + மூன்று) ஆறு மணி நேரப் பயணத்தை இன்று செய்கிறேன்; இல்லை. தமிழ் என்று சொன்னவுடன் நாம் ஆர்வம் அடைந்து சிரமத்தைப் பார்க்காமல் வருகிறோம். ஜல்லிக்கட்டு போன்ற கிளர்ச்சிகளின் போது தமிழர்கள் ஒன்றுபட்டதைக் கண்டோம்.

 

தமிழில் இன்னும் என்ன செய்ய வேண்டும்?

 

‘தமிழ் வாழ்க’ என்று கோஷம் போடுகிறோம். தமிழில் எல்லாம் உளது என்கிறோம். ஆனால் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. பாரதியார் பாடல் போன்ற பல நூல்களுக்கு இன்டெக்ஸ் (INDEX) தேவைப்படுகிறது.

 

பாரதியார் ‘காக’த்தைப் பற்றி எங்கெல்லாம் பாடி இருக்கிறார் என்றால் அதைக் கண்டுபிடிக்க, நமக்கு நேரம் பிடிக்கிறது;

அவர் ‘காக்கைச் சிறகினிலே நந்த லாலா’, என்றும் ‘எத்தித் திருடும் அந்தக் காக்கை’ என்றும், ‘காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்றும் பல இடங்களில் பாடுகிறார். ஒரு இண்டெக்ஸ் இருக்குமானால் இது போன்ற விஷயங்களை விரைவில் கண்டு பிடிக்கலாம்.

 

இது போலத் தமிழ்ப் பழமொழிகள்  தொகுப்பு. நூறு ஆண்டுகளுக்கு முன் மதத்தைப் பரப்ப வந்த மூன்று வெள்ளையர் 20, 000 பழமொழிகளைத் தொகுத்து புஸ்தகங்களாக வெளியிட்டனர். ஆனால் இன்னும் 10, 000 பழமொழிகளாவது தொகுக்கப்படாமல் உள்ளன.

 

அவைகளை எல்லாம் ஸப்ஜெக்ட் (Subject wise) வாரியாக ‘ஆல்பபெட்’ வாரியாக (alphabetical order) வகைப்படுத்த வேண்டும்.

ஆங்கிலத்தில் நான்சென்ஸ் ரைம்ஸ் (Nonsense Rhymes ) உள்ளது போல தமிழில் நிறைய உள்ளன.

சூரியன் தங்கச்சி

சுந்தர வள்ளிச்சி

நாளைக் கல்யாணம்

மேளக் கச்சேரி

ஈக்கையாம் பிரண்டையாம்

ஈயக்காப்பு திரண்டையாம்

…………

 

இது போன்ற பல பொருளற்ற பாடல்களைத் தொகுக்க வேண்டும்.

 

இதோ பாருங்கள் சென்னையில் இருந்து வெளிவரும் கிரியா (creA) தமிழ் அகராதி. உங்கள் தமிழ் பள்ளிக்குக் கொடுப்பதாற்காக கொண்டு வந்துள்ளேன். இதில் பல புதிய தமிழ் சொற்களையும் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் வழக்குகளையும் காணலாம். இது போல ஆக்கபூர்வமான பணிகள் நிறைய உள்ளன. தமிழ் கற்கும் நாம் இவற்றைப் பிற்கால சந்ததியனருக்காக update ‘அப்டேட்’ செய்யலாம். புதிய சொற்களைச் சேர்க்க உதவலாம்.

எனக்குக் கொடுக்கப்பட்ட நேரம் பத்தே நிமிடங்கள் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

 

என்னை இங்கு அழைத்தமைக்கு அனைவருக்கும் நன்றி; வணக்கம்.

 

(( நான் எழுதிச்சென்ற குறிப்புகளில் இருந்தும், நேரம் போதாமையால் சொல்லாமல் விட்ட விஷயம்:

Member of Parliament Sarah Jones addressing the gathering

பழந்தமிழ் புத்தகங்களும் புதிய அகராதிகளும் தேவையா? எல்லாம் கூகிள் GOOGLE  செய்தால் கிடைக்குமே என்று பல நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.அது ஓரளவே உண்மை. நான் காயத்ரீ மந்திரத்தைத் தேடி ‘காயத்ரி’ என்று போட்டால் கடவுளுக்குப் பதிலாக ஒரு அரை நிர்வாணப் பெண் படம் தான் வருகிறது; அவள் பெயர் காயத்ரீயாம்! ‘மந்தரா’ என்று போட்டாலுமொரு நடிகையின் படம் வருகிறது. அவள் ஒரு நடிகையாம்! ஆக, சரியான ‘ஸ்பெல்லிங்’ போடாவிட்டால் கூகிள் google விபத்தில் முடியும். மேலும் தமிழில் 10,000 பிளாக்குகள் இருக்கின்றன. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல பேனா கிடைத்தவன் எல்லாம் எழுதத் துவங்கி விட்டான்; தமிழ் தட்டச்சு தெரிந்தவன் எல்லாம் பிளாக் BLOG கட்டுரை எழுதுகிறான். அதில் எது சரி, எது தவறு என்பதை விஷயம் அறிந்தவரே வேறுபடுத்த இயலும். நிறைய தவறுகள் — சொற் குற்றம், பொருட் குற்றம், எழுத்துப் பிழைகள்— மலிந்துள்ளன. சில காலம் அதை மட்டுமே படித்தால் நாமும் ‘தமிழ்க் கொலை’யில் பங்கு கொண்ட பாவம் வந்து சேரும்.

london swaminathan speaking; Deputy Mayor of Croydon Michael Selvanayakam standing behind.

ஆகவே, முறையாகத்  தமிழ் பயில, ஆசிரியரைக் கலந்தாலோசிக்க இத்தகைய பள்ளிகள் தேவை)

 

–சுபம்–

இந்தியாவில் உலகின் உயரமான சிலை! (Post No.5005)

Written by S NAGARAJAN

 

Date: 13 MAY 2018

 

Time uploaded in London –  9-15 AM   (British Summer Time)

 

Post No. 5005

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாக்யா 11-5-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு பத்தாம் கட்டுரை

இந்தியாவில் அமைக்கப்படும் உலகின் உயரமான சிலை!

.நாகராஜன்

 

 

இந்தியாவின் முதல் துணை பிரதம மந்திரியாக இருந்த சர்தார் வல்லபபாய் படேலுக்கு (தோற்றம் 31-10-1875 மறைவு 15-12-1950) குஜராத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில் சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

 

597 அடி உயரமுள்ள இந்தச் சிலை தான் உலகின் உயரமான சிலை. இந்தச் சிலையை அமைப்பதன் மூலம் இந்தியாவின் கௌரவம் உலக அரங்கில் உயர்கிறது.

 

 

சிலையின் அஸ்திவாரத்தையும் சேர்த்தால் மொத்த உயரம் 790 அடி ஆகும்!

இந்தச் சிலைக்கு ஏகதா சிலை அல்லது யூனிடி சிலை (Unity Statue) என்று பெயர்.

 

இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சிறந்த நிர்வாகியான சர்தார் வல்லபபாய் படேல் இந்தியாவில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஓரிழையில் பிணைத்து பலமான இந்தியா உருவாகக் காரணமாக இருந்தார்.

 

அவரது எளிய இனிய பேச்சுத் திறன் ஒரு புறமும், தேவைப்பட்டால் ராணுவத்தை இறக்கி ஏக இந்தியாவை உருவாக்குவேன் என்ற அவரது திட மனதும் அவரைச் சாதனையாளராக்கி நமது இந்திய சரித்திரத்தில் அழியா இடம் பெறச் செய்து விட்டது.

இந்தச் சிலையை அமைக்கப் பெரிதும் காரணமாக இருப்பவர் நமது பிரதமர் நரேந்திர மோடி.

 

31-10-2013இல் அவர் குஜராத் முதல் மந்திரியாக் இருந்தபோது இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

 

சர்தார் படேலின் 143வது  பிறந்த தினமான 31-12-2018 அன்று இதைத் திறக்க வேண்டும் என்ற முனைப்புடன் வேலை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மைக்கேல் க்ரேவ்ஸ் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன் என்ற நிறுவனம் இதன் வடிவமைப்பு மற்றும் நிர்மாணிப்பை மேற்பார்வையிட்டு வருகிறது.

ராம் வி.சுதார் என்பவர் இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார்.

வரலாறு காணும் மிகப் பெரிய கலைப் பொக்கிஷம் என இது இப்பொழுதே புகழப்படுகிறது.

 

குஜராத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தீல் சர்தார் சரோவர் அணை அருகே சாது பெட் என்ற பெரிய தீவில் இது அமைக்கப்பட்டு வருகிறது. இதை அமைக்கும் நிபுணர்களில் ஒருவரான ஜேம்ஸ் விஸ்னியூஸ்கி (James Wisneewski)  ‘இந்தச் சிலை முடிந்த பின்னர் இதைப் பார்க்கும அனைவரும் பிரமித்துப் போவர். இந்தச் சிலை தண்ணீரில் நடப்பது போல இருக்கும்’ என்று கூறுகிறார். இந்தத் தீவில் ஒரு மியூஸியம். ஒரு தோட்டம், ஒரு ஹோட்டல், வருவோரை வரவேற்க ஒரு வரவேற்பு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இடம் பெறும்.

 

சிலை அமைக்கப்படும் இடத்தின் பரப்பளவு சுமார் 20000 சதுர மீட்டர்.

இதைச் சுற்றி 12 கிலோமீட்டருக்கு ஒரு செயற்கை ஏரி உருவாக்கப்படும்.

இந்த அற்புதமான சிலையை அமைக்க ஆகும் உத்தேச செலவு ஆரம்பத்தில் 2083 கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குறைந்த பட்ச தொகையாக 2989 கோடி ரூபாயில் இதைக் கட்ட லார்ஸன் அண்ட் ட்யூப்ரோ அமைப்பு ஒத்துக் கொண்டு டெண்டரைப் பெற்றது.

 

இந்தப் பணத்தில் பெரும் பங்கை குஜராத் அரசே ஏற்கிறது.

சிலைக்குத் தேவையான ரெய்ன்ஃபோர்ஸ்ட் சிமெண்ட் மட்டும் 75000 கியூபிக் மீட்டர் ஆகும்.

5700 மெட்ரிக் டன் ஸ்டீல், 185000 டன் ஸ்டீல் கம்பிகள், 22500 டன் வெங்கலத் தகடுகள் சிலை அமைக்கத் தேவைப்படுகிறது.

ஸ்டீலினாலும் ரெய்ன்ஃபோர்ஸ்ட் கான்கிரீட்டினாலும் அமைக்கப்படும் சிலையின் மீது வெண்கலப் பூச்சு இருக்கும்.

 

அறிவியல் வியக்கும் ஒரு சிலையாக அமையும் இந்தச் சிலை இருக்கும் இடத்திற்கும் பிரதான நகர் பகுதிக்கும் இடையே ஒரு பாலமும் அமைக்கப்படும். சிலையை அடைய 5 கிலோ மீட்டர் படகு சவாரி செய்ய வேண்டும்.

 

சிலையில் 500 அடி உயரத்தில் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதியாக ஒரு மையம் இருக்கும். அங்கு ஒரே சமயத்தில் 200 பேர் இருந்து அழகிய காட்சிகளைக் கண்குளிரக் காணலாம்.

 

இங்கிருந்து சாத்புரா, விந்த்யாசல மலைத் தொடரைப் பார்த்து மகிழலாம்.

உலகின் உயரமான சிலை அமைக்கப்படுவதைப் பார்த்து வியக்கும் வெளிநாட்டின் பிரபல பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இது பற்றிய செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

 

ராஷ்ட்ரீய ஏகதா திவஸ் – தேசிய ஒருமைப்பாடு தினம் – என்று படேலின் பிறந்த தினத்தை இந்திய அரசு 2014ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறது. வருகின்ற 2018, அக்டோபர் 31ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய தினமாக அமையப் போகிறது!

 

கடுமையான சோதனைகளை எதிர்த்து இந்தியாவை ஓரிழையில் இணைத்துச் சாதனை புரிந்த சாதனை மனிதருக்குச் சரியான நினைவுச் சின்னமாக அமையும் இது உலகின் அதி உன்னதமான உயரமான சிலை என்ற பெருமையைப் பெறுவது சரிதானே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஃப்ராங்க் நெல்ஸன் கோல் (Frank Nelson Cole 1861-1921) அமெரிக்க கணித சங்கத்தில் நெடுங்காலம் செயலாளராக இருந்தவர். பெரிய கணித மேதை. சங்கத்தின் பத்திரிகையையும் அவரே நிர்வகித்து வந்தார். தீர்க்கவே முடியாத கணித சிக்கல்களை அவர் தீர்த்ததால் அவருக்கு கணித வரலாற்றில் தனிப் பெயர் உண்டு.

1903ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூயார்க்கில் அமெரிக்க கணித கழகத்தில் ஒரு ஆய்வுப் பேப்பரை கோல் சமர்ப்பிக்க இருந்தார். சிக்கலான பேப்பர் அது. தலைவர் கோலை தனது பேப்பரை சமர்ப்பிக்க வருமாறு அழைத்தார். கோல் அதிகம் பேசாத மனிதர். சில வார்த்தைகளே எப்போதும் பேசுவார். தனது ஆய்வுப் பேப்பரைப் படிப்பதற்கு பதிலாக நேராக போர்டுக்குச் சென்று எழுதலானார். 2 என்ற எண்ணை அதன் 67வது மடங்கிற்குக் கொண்டு சென்று அதை எழுதிய கோல் அதிலிருந்து கவனமாக ஒன்றைக் கழித்தார். பார்ப்பவர்கள் ஆர்வத்துடன் என்னதான் அவர் செய்கிறார் என்று பார்த்த வண்ணம் இருந்தனர்.

பின்னர் கோல் மீக நீண்ட எண்கள் இரண்டை எழுதி அதைப் பெருக்கலானார். எண்கள் இது தான்:  193,707,721 X 761,838,257,287

இதன் விடையும் 2இன் 67வது மடங்கில் வரும் எண்ணில் ஒன்றைக் கழித்தால் வரும் விடையும் ஒன்றாக இருந்தது.

இதைப் பார்த்த கணித அறிஞர்கள் கரகோஷம் செய்து கோலைப் பாராட்டினர். ஆய்வுப் பேப்பரைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று.

இதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்ட போது மூன்று வருடங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையாக உழைத்தேன் என்று அவர் பதில் கூறினார்.

அவரது மேதா விலாசம் வெளிப்பட்ட தருணங்களில் இது மகத்தான தருணம்!

***

TAMIL BRAHMINS IN THAILAND (Post No.5004)

Written by London Swaminathan 

 

Date: 12 May 2018

 

Time uploaded in London – 13-0 (British Summer Time)

 

Post No. 5004

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Satya Vrat Shastri of Delhi University gives very interesting details of Tamil Brahmins settled in Thailand, probably 1000 years ago. They still recite the famous Tiruppavai of Andal and Tiruvempavai of Manikka vasagar, the Tamil saints who lived 1500 years ago. Though the Brahmins  speak only Thai language now, they still do the Tamil poems. Buddhism is the main religion of Thailand now; but Hinduism and Sanskrit are at all levels of the society.

 

Now I give below some facts about the Brahmins in Thailand from Shastri’s book ‘Sanskrit and Indian culture in Thailand’:-

Thailand Rajaguru with Kanchi Shankaracharya

Rajaguru

Not everyone born in a Brahmin family is called a Brahmin. Those who are initiated i.e. those who have Diksha are called  Brahmins.

Raja guru gives the initiation and he is selected from among the Brahmins. Next to him is Huana Phram. They get a very meagre grant from the king.

 

Annual Worship

It is of two kinds. One is Triyampavaaya and another is Tripavaaya (The first is Thiruvempavai on Lord Shiva and the second Thiruppaavai is on Lord Vishnu; both are popular in Tamil Nadu)

 

Tiruvempavai is celebrated in three stages: Invoking the god, placing the idol in the swing and the third is bathing the idol. Prasad offered to the deities is distributed to the public. An annual festival is held in December. At the time those who want initiation takes a vow. They stay inside the temple, eat vegetarian food and lie on the floor.

During Tiruvempava festival, they worship Ganesh, Uma and Shiva for ten days.

 

Tamil Brahmins wear only white clothes head to foot. Some wear dhotis.

During the Swing ceremony Lord Siva is placed in between two pillars with a cup of water. There is a story behind it. Brahma who created the world asked Isvara (Shiva) to protect it. Siva thought that the earth was not strong enough to support the living beings. To test its strength, he just set one of His feet on it. He then asked the Nagas to shake the mountain at the ends of the oceans. The Nagas did shake it but nothing untoward happened. Siva was pleased. Here the two pillars stand for the two mountains and the cup of water represents the ocean.

 

Tiruppavai in praise of Lord Vishnu is also celebrated in the similar way. People wear new clothes and decorate their houses during the festival period. In Tamil Nadu it is celebrated for 30 days during the Tamil month Markazi corresponding to December/ January.

 

THE PLOUGHING RITE

The Ploughing rite is an ancient Hindu rite practised from the  Vedic days. Tamil literature also has references to this rite. Sita Devi was discovered and received by Emperor Janaka during such a rite. Brahmins play a main role in it.

Brahmins fix a date after consulting the almanac (Panchang). They do the Puja after the Buddhists start it in the Temple of Emerald Buddha (Wat Phra Keao). The king comes at the appointed time and he sends his deputy to act on his behalf. The priest worships Gauri, Ganga and Dharani (earth). Brahmins sprinkle water with the grains. Auspicious things are carried by the women. Bulls are also brought with the plough. The king’s nominee does the symbolic ploughing after worshipping the bulls. When all the ploughing finished, the bulls are sent to its place. In front of them seven things are placed: Paddy, Pulses, Corn, Sesame seeds, Water, Wine and Grass. When they show them to the bulls, naturally they run towards them ; the priests watch what they eat first.

If the bulls eat the corn or paddy or the pulses first, it is believed that the crops would be good the year round. If they eat grass or sesame seeds first, it is said that the crops (harvest) world be moderate. If, however, the bulls take to water first, the belief is that there would be floods and the crops would be damaged. If by chance, the bulls take to wine the belief is that drought conditions would prevail leading o unrest everywhere. After the announcement of the future position of the crops, the ceremony comes to an end.

Temple of Emerald Buddha

There are many more rites the Brahmins perform.

 

— SUBHAM–

தாய்லாந்தில் வேஷ்டி கட்டும் தமிழ் பிராஹ்மணர்கள்! (Post No.5003)

Written by London Swaminathan 

 

Date: 12 May 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 5003

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

தாய்லாந்தில் தமிழ் என்றே தெரியாமல், கோவிலில் ‘டிருவெம்பாவை’ (திருவெம்பாவை, மாணிக்கவாசகர்) ஓதிய கதையை தெ.பொ.மீ. போன்ற அறிஞர்கள் அந்தக் காலத்திலேயே எழுதிவிட்டனர். ஆனால் ஸத்ய வ்ரத சாஸ்திரி (1982) எழுதிய தாய்லாந்து பற்றிய ஆங்கில நூலில் மேலும் பல சுவையான செய்திகளைத் தருகிறார்.

 

தாய்லாந்து இப்பொழுது புத்தமத நாடு. ஆனாலும் இந்துமதத்தின் தாக்கத்தையும் ஸம்ஸ்க்ருதத்தின் செல்வாக்கையும் பண்பாட்டிலும் மொழியிலும் காண முடிகிறது. பல இந்துக் கோவில்களும் உள.

 

இங்கே பிராஹ்மணர்கள் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ‘’தாய்’’ (THAI LANGUAGE) மொழி மட்டுமே பேசுகின்றனர். நடை, உடை, பாவனையில், ஏனைய மக்களிடமிருந்து வேறு பட்டவர்கள். தூய வெள்ளை ஆடை மட்டுமே உடுத்துவர்; வேஷ்டி அணிகின்றனர். காலில் ஷூ, ஸாக்ஸ் அணிந்தாலும் அவையும் வெண்மையே.

 

ஆயிரக்கணக்கில் பிராமணர்கள் இருந்தும் தீக்ஷை எடுத்தவர்களை மட்டுமே பிராஹ்மணர் என்று சொல்லுவர். இப்படிப் பார்த்தால் ஐம்பது, அறுபது பேர் மட்டுமே பிராஹ்மணர். இந்த தீட்சையை வழங்குபவர் ராஜ குரு. அவர் இல்லாவிடில் ஹுவன் ப்ராம் (சுவர்ண பிராஹ்மண) இந்தப் பட்டத்தை வழங்குவார்.

 

ராஜ குரு என்பவரும் பிராஹ்மணரே; அவரை மற்றவர்களைக் கலந்தாலோசித்து மன்னர் தேர்ந்தெடுப்பார்.

மன்னர் கொடுக்கும் மான்யத்தொகை மிக மிகக் குறைவு என்பதால் ஏனைய பூஜைகள் மூலம் அவர்கள் தட்சிணை வாங்கிப் பிழைக்கிறார்கள்.21 வயத்துக்கு மேலுள்ள எந்தப் பிராஹ்மணனும் இதற்குத் தகுதி உடையவரே.

‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’

 

1982 ஆம் ஆண்டு வெளியான இந்த நூலில் சாஸ்திரி மேலும் கூறுகிறார். ராஜ குரு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’ விழா நடத்த வேண்டும். இவை தமிழில் உள்ள திருவெம்பாவை, திருப்பாவை என்பன ஆகும்.

முதலாவது விழாவில் சிவ பெருமானை மூன்று கட்டங்களில் வழிபடுவர். முதலில் இறைவனை ஆவாஹனம் செய்து, பின்னர் ஊஞ்சலில் எழுந்ததருளிச் செய்து, புனித நீரால் அபிஷேகம் செய்து, சாதம் முதலிய பிரஸாதங்களைப் படைப்பர். பின்னர் கடவுளை வழி அனுப்புவர். இது பத்து நாட்கள் நடைபெறும் விழா.

 

இதே காலத்தில் புதிய பிராஹ்மணர்களுக்கும் தீக்ஷை வழங்கப்படும். அவர்கள் ‘பூ சுத்தி’, ‘பூத சுத்தி’ செய்துவிட்டுக் கோவிலிலேயே தரையில் படுத்து உறங்குவர். மரக்கறி உணவை மட்டுமே உண்ணுவர். இந்த விரதம் டிசம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை நடக்கும். யார் யார் பிராமணர் பட்டம் பெற விரும்புகிறாரோ அவரவர்களுக்கு ராஜ குரு தீட்சை தருவார். தினமும் கணேசர், உமை, சிவன் வழிபாடு மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெறும்.

 

சிவபெருமான் இந்தப் பத்து நாட்களுக்குப் பூமிக்கு வருவதாகச் சொல்லி, திருவெம்பாவை படிப்பர். நவக்ரக வழிபாட்டுடன் பூஜைகள் துவங்கும். இரவு நேரத்தில் திருவீதி உலா நடக்கும். மக்கள் புத்தாடை அணிந்து வீடுகளை அலங்கரிப்பர்.

 

ஊஞ்சல் திருவிழாவும் உண்டு. இறைவனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவர். இரண்டு தூண்களுக்கு இடையே ஒரு குவளையில் தண்ணீர் வைப்பர். இதுதான் சமுத்திரம்/கடல்.

இதுபற்றிய கதை ஒன்றும் சொல்லுவர். சிவ பெருமான் தன்னுடைய ஒரு காலால் பூமியை அமுக்கி நிலைபெறச் செய்தார். ஆயினும் அது வலிமையுடையதா என்று ஐயப்பாடு எழுந்தது. உடனே நாக தேவதைகளை அழைத்து பூதளத்தை அசைக்கச் சொன்னார். அப்போதும் அசையவில்லை. உடனே இறைவனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. ஊஞ்சல் கட்டிய இரண்டு தூண்கள் இரண்டு மலைகள் ஆகும்; நடுவில் குவளையில் வைக்கப்பட்ட நீர் கடல் ஆகும். இவை எல்லாம் இறைவன் கருணையால் எல்லை தாண்டாமல் ஒழுங்காக இருக்கின்றன என்பதைக் காட்டுவதே இதன் தாத்பர்யம்.

 

இதே போல நாராயணணின் புகழ்பாட ‘ட் ரி ப் பாவ்ய’ (திருப்பாவை) விழா நடக்கும் சிவன் சென்றவுடன் நாராயணன் பூமிக்கு வந்ததாக ஐதீகம். இவ்வறு விழா நடத்திய பின்னர் பிராஹ்மணர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் கைகளாலேயே மொட்டை அடிப்பர் அல்லது முடி இறக்கி குடுமி வைப்பர். இப்போதெல்லாம் கொஞ்சம் முடியை மட்டும் அடையாளபூர்வமாக வெட்டுகின்றனர்.

ஏர் உழும் பணி

அந்தக் காலத்தில் ராஜகுருவானவர் வேத முழக்கம் செய்தார். இப்போது அது இல்லையாம்.

 

Thai Rajaguru with Kanchi Shankaracharya

பணி

 

அந்தக் காலத்தில் அரசர்களே முன்னின்று பயிரிடுதலைத் துவக்கினர். இப்படி ஜனக மஹாராஜா ஏர் உழுதபொழுதுதான் சீதா தேவி கண்டு எடுக்கப்பட்டாள். இந்த வேத கால வழக்கம் தமிழ் இலக்கியத்திலும் உண்டு. தாய்லாந்தில்  இது நடத்தப்படும் முறை மிகவும் சுவையானது.

ராஜகுரு பஞ்சாங்கத்தைப் பார்த்து வைகாசி மாதம் நாள் குறிப்பார். முதல் நாள் பௌத்தர்கள், மரகத புத்தர் சிலை முன்னர் ஜபம் செய்வர். மறு நாள் அதிகாலையில் பிராஹ்மணர்கள் கௌரி, தரணி (பூமி), கங்கா (கங்கை நதி) பூஜை துவங்குவர். பலவகை தானியங்களை நீருடன் கலந்து தூவுவர். குறிப்பிடப்பட்ட நேரத்தில் மன்னர் வருவார். அவர் தனது பிரநிதியை அனுப்பி காளைகளை வணங்கி ஏர் உழச் செய்வார். அந்தப் பிரதி நிதி மரகத புத்தர் கோவில் புல்வெளியில் ஏரை முன்னும் பின்னும் இழுப்பார். பின்னர் காளைகள் திரும்பிச் செல்லும்.

 

ஏருழும் பிரதிநிதிக்கு முன்னர் பிராமணர்கள் செல்லுவர். மங்கையர் மங்களப் பொருட்களை ஏந்தி வருவர்.

ஏழு பொருள் சோதனை!

ஏர்  உழுதல்  முடிந்த பின்னர் காளை மாட்டு ச் சோதனை நடக்கும். மது, புல், எள், நெல், தண்ணீர், சோளம், பயறு வகைகளை வைத்து காளை மாட்டிடம் காட்டுவர். அது எதன் மீது பாய்ந்து முதலில் தின்கிறதோ அது அந்த ஆண்டு செழித்து வளரும் என்பது நம்பிக்கை.

 

காளை மாடு நெல்லையோ பயறு வகைகளையோ சோளத்தையோ முதலில் சாப்பிட்டால் அந்த வகை தானியம் அந்த ஆண்டில் அமோக விளைச்சல் பெறும். தண்ணீரை முதலில் சாப்பிட்டால் வெள்ளம் வந்து பயிர்கள் அழியும்; புல்லையோ எள்ளையோ சாப்பிட்டால், தானிய விளைச்சல் அரை குறையாக இருக்கும். மதுவைச் சாப்பிட்டாலோ வறட்சி தாண்டவம் ஆடும். நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என்று அறிவிப்பர். அத்துடன் ஏர் உழும் விழா இனிதே நிறைவு பெறும்.

இது தவிர பிராஹ்மணர்களின் பங்கு பணி வேறு சில சடங்குகளிலும் உண்டு. அவற்றைத் தனியே காண்போம்.

–சுபம்–

 

 

என்னப் பூ? சொல்லுப்பு! QUIZ (Post No.5002)

Compiled by London Swaminathan 

 

Date: 12 May 2018

 

Time uploaded in London – 6-19 am (British Summer Time)

 

Post No. 5002

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் நிறைய உள்ளன. ஸம்ஸ்க்ருதத்தில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்துச் சொற்கள் என்று அகராதியே உள்ளது. ஏனெனில் அங்கு இது மிகவும் அதிகம். இதோ ஒரு சிறு தமிழ் ‘சாம்பிள்’. 1958 தமிழ் மலர் ஆண்டு மலரில் இருந்து எடுக்கப்பட்டது.

 

ANSWERS:–

 

–SUBHAM–

 

பாரதி போற்றி ஆயிரம் – 89 (Post No.5001)

Compiled by S NAGARAJAN

 

Date: 12 MAY 2018

 

Time uploaded in London –  5-49 AM   (British Summer Time)

 

Post No. 5001

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 89

  பாடல்கள் 949 முதல் 976

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

20 கவிஞர்கள் இயற்றியுள்ள 28 பாடல்கள்!

பல கவிஞர்கள் பாரதியாரைப் போற்றி எழுதியுள்ளனர். புதுவையில் பாரதியாரின் பிறந்த தினத்தை ஒட்டி 20 கவிஞர்கள் இயற்றியுள்ள 28 கவிதைகள் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு வழங்குகிறோம்

20 கவிஞர்களின் 28 பாடல்கள்

 

பாரதியின் பாட்டுத் திறம்

இயற்றியவர்: கலைமாமணி புலவர் நாகி,
புதுச்சேரி – 9

 

குருதியிட்ட தூவலினால் கொழுகொம் பின்றி

…..கொடிபோலத் துவன்றிட்ட மக்கள் தம்மைக்

குருதிகொட்டப் போராடும் தலைவ னொப்பக்

…..குன்றெனவே நின்றுபெரும் உண்மையான

ஒருமையுடன் வாழ்வதற்கு உணர்த்தும் பாட்டை

…..உலவவிட்ட காரணத்தால் உலகில் நாமும்

பெருமையுடன் வாழுகின்றோம் பிழை யில்லாப்

…..பாரதியின் வீரமிக்கப் பாட்டி னாலே!

***

 

பாரதிபோல்
வித்தாகி வாழ விரும்பு

இயற்றியவர்: தமிழ்மாமணி புலவர் சீனு.இராமச்சந்திரன்
புதுச்சேரி-9

 

ஊருக்கு நல்லது சொல்லி உழைத்தநம்

பாரதியைத் தேருக்குள் ஏற்றியே – பாருக்குள்

தாரணி சூட்டியே தாய்த்தமிழைப் போற்றியே

சாரதியே நீயென்று சாற்று.

 

எத்தனை நாள்வாழ்வோம் இம்மண்ணில் என்றெண்ணி

முத்தான நற்செயல்கள் செய்யாமல் – இத்தரையில்

சத்தாக சாப்பிட்டுப் பயனென்ன, பாரதிபோல்

வித்தாகி வாழ விரும்பு.

***

 

சொடுக்கி விட்ட சாரதி

இயற்றியவர்: கலைமாமணி இலந்தை இராமசாமி
கனடா

 

தொடுத்தெ டுத்த சொல்லிலே

……….சூடு போட்ட நாயகன்

கொடுக்க என்றே தோன்றினான்

……….கோயில் நெஞ்சில் ஊன்றினான்

முடுக்கி விட்ட வார்த்தைகள்

……….மூச்சு விட்டு வாழவே

சொடுக்கி விட்ட சாரதி

……….சுப்ர மண்ய பாரதி

***

சொல்லுடன் கலந்துநின்ற சுப்பிரமணிய பாரதி

இயற்றியவர்: கவியோகி வேதம்
சென்னை

 

காட்டினுள்ளே அடரிருள்போல் சொல்வ ளர்த்த

கவிஞருள்ளே, நெல்வேலிச் சீமை மண்ணைத்

தேட்டையிட்டுப் படருகின்ற பசும்வ யல்போல்

தெவிட்டாத அழகுகொஞ்சும் சொல்லே வேய்ந்த

பாட்டையிட்டுத் தமிழ்நெஞ்சில் “பாட்டைப்” போட்டான்

பாட்டனெங்கள் பாரதி!எச் சொல்லின் உள்ளும்

பாட்டனவன் மீசையில்கை வைத்த வண்ணம்

பார்த்திருப்பான்! அதனால்தான் பாரை யாண்டான்!

***

 

சிந்து வேந்தர் பாரதி

இயற்றியவர்: பாவலர் எஸ். பசுபதி,
கனடா

 

கந்தன் மொழியை வேலன் பேரில்

காக்க வந்த சொல்லயில்;

இந்தி யக்க விஞர் வானில்

என்றுங் கூவும் பூங்குயில்

சிந்து வேந்தர் பார திக்கென்

சென்னி யென்றுந் தாழுமே!

செந்த மிழ்க்க விக்கு முன்பென்

சென்னி யென்றுந் தாழுமே!

 

******

 

பாரதி நமை வளர்த்தான்

இயற்றியவர்: கலைமாமணி கல்லாடன்
புதுச்சேரி

 

பாட்டில் அருளினை அன்பினை ஊட்டியே

பாரதி நமைவளர்த்தான் – தேன்

கூட்டில் இழிதரும் நற்சுவை கூட்டியே

கொள்க எனவுரைத்தான் – நம்

நாட்டில் நிலவிய அடிமை ஒழித்திட

அல்லல் பலவேற்றான் – தன்

பாட்டுத் திறத்தினால் வையம் முழுவதும்

பாலித்திட நினைத்தான்.

 

எட்டுத் திக்கும் வெற்றி கொட்டுமுரசென

யீடில் கவிபடைத்தான் – பகை

வெட்டியே வீழ்த்திட வெற்றியே சூடிட

வீர உணர்வளித்தான் – அன்று

தட்டி எழுப்பிய விடுதலை உணர்வினால்

தாயகம் மீட்டோமே – அவன்

சுட்டிய அருளினை அன்பினைக் கைவிட்டுச்

சுயநலங் கொண்டோமே!

 

***

Picture- Ramanan as Bharati in Bharatiyar Drama, directed by Raman.

பாரதி என்றொரு புலவன்

இயற்றியவர்: பாவலர் அண்ணா. தருமலிங்கம்
புதுச்சேரி

 

பாரதியென் றொருபுலவன் பாரதிரப் பாட்டெ ழுதி

பார்ப்பவனைப் படிக்கவைத்தான் படித்தவனைப் புரிய வைத்தான்.

வீரத்தை எழுத்தாக்கி வீட்டுக்குள் அனுப்பி வைத்தான்

விடுதலையை நாட்டுக்குள் விளையாட வைத்து விட்டான்

வோரத்தில் நடந்தவனும் உரிமைக்குக் குரல்கொ டுத்தான்

ஒற்றுமைதான் வாழ்க்கைக்கு உரியவழி யெனச் சொல்லி

கூறவந்த எண்ணத்தைக் குழந்தைக்குக் கொடுத்து விட்டு

மனிதநேயம் நம்மெதிரில் மலரும்பார் எனச் சொன்னான்.

 

***

 

பாரதியை வாழ்த்துவோம்

இயற்றியவர்: புலவர் செ. இராமலிங்கன்
புதுச்சேரி

 

பாரதியின் பாட்டெல்லாம் சமுதா யத்தைப்

பண்படுத்தும் பாட்டாகும்! தமிழுங் கொஞ்சும்!

சீரதிகம் கொண்டதவன் பாக்க ளெல்லாம்

சீர்திருத்தம், விழிப்புணர்வை எடுத்துக் காட்டும்!

வேரதிர வெள்ளையரின் ஆதிக் கத்தை

வெடிவைத்துத் தகர்த்தவன் வேட்டுப் பாட்டே!

கூரதிகம் கொண்டவன் பாட்டின் சொற்கள்!

கொண்டாடி பாரதியை வாழ்த்து வோமே!

 

***

 

நந்தமிழுக்குத் தூண் பாரதி

இயற்றியவர்: புலவர் துரை. மாலிறையன்
புதுச்சேரி

 

பாட் டெடுத்துப் பாடிநம் பாஞ்சாலி சீர்மிகுத்தார்

கூட் டமிழ்தப் பாட்டால் குயில்புகழைக் – காட்டுகின்ற

வண்ணம் தமிழ்பாடி வாழ்கின்றார் பாரதியார்

கண்ணன்பாட் டாலுங் கனிந்து.

 

வோசை நயங்கொஞ்சும் உணர்வுடையப் பாப்புனைந்தே

ஆசையினால் சான்றோர் அனைவரையும் – பேசவைத்தார்

வாய்மை வழிநின்ற வண்புலவர் பாரதியின்

தூய்மைநலம் நந்தமிழுக்குத் தூண்.

 

***

தந்தையர் நாடெனும் தனிப்புகழ் சேர்த்தவர் பாரதி

இயற்றியவர்: பாவலர் சூரிய விசயகுமாரி
புதுச்சேரி

 

“செந்தமிழ் நாடு” என்று

செப்பிடும் போதே காதில்

வந்துதேன் பாயு மென்னும்

வாய்மையை யெடுத்துக் கூறி

நந்தமிழ்ப் பெருமை தன்னை

நாட்டவர் அறியச் செய்தார்

தந்தையர் நாடென் கின்ற

தனிப்புகழ் தனையும் சேர்த்தார்!

 

ஈடிலாப் புகழும் கொண்ட

பாரதி இந்த நாட்டின்

ஊடெலாம் கலந்து மக்கள்

உளத்தெலாம் கவிதைப் பாய்ச்சிப்

பீடெலாம் பெற்று வாழும்

பேறெலாம் நமக்குத் தந்தார்

ஏடெலாம் வாழ்த்து கின்ற

ஏற்றத்தின் சிறப்பி னாலே!

 

******

 

பாரதியே வணங்குகின்றேன்

இயற்றியவர்: கவிஞர் தே. சனார்த்தனன், 
புதுச்சேரி

 

ஒற்றுமைக்குப் பாடுபட்டாய்! ஒப்பி லாத

உயர்கவிகள் பாடிவிட்டாய்! உரிமை யோடு

பற்றுவைத்தாய் பாரதத்தாய் நாட்டின் மீது!

பாழ்மூடப் பழக்கத்தை வெறுக்கச் செய்தாய்!

கற்றவரும் மற்றவரும் காதல் கொள்ளும்

கருத்தோடு விடுதலையை வேண்டி நின்றாய்!

பெற்றதிரு நாட்டினது பெருமை காத்த

பெரும்புலவன் பாரதியே! வணங்கு கின்றேன்!

 

***

பாழ்நிலை நீக்க வாராய்

இயற்றியவர்: பாவலர் வே. முத்தையன்,
புதுச்சேரி

ஒன்றுபட்டால் வாழ்வுண்டாம் என்று ரைத்த

வோங்குபுகழ் பாரதியே! ஊரார் அந்நாள்

ஒன்றுபட்டே வோரணியாய் நின்ற தாலே

ஒண்டவந்த அயலவரு மோட்டம் பெற்றார்!

பெற்றுவிட்ட விடுதலையை வானு லாவப்

பேசியிங்குப் பெருமைகொள்ளும் நம்மோர் நாட்டுப்

பற்றற்றுப் போயினரே! பாழாய்ப் போகும்

பாரோரின் நிலைநீக்க வாராய் இங்கே!

 

***

 

பாரதியைப் போற்றுகின்றேன்

இயற்றியவர்: பாவலர் கி. பாரதிதாசன்,
பிரான்சு.

 

சாதிமதிச் சழக்குகளைச் சாடி, நல்ல

சமதர்மப் பாதைதனைத் தேடி, வல்ல

நீதிநெறி யோங்கிடவே யோடி, இந்த

நீள்புவியில் தமிழெடுத்துப் பாடி, மண்ணில்

மோதிவரும் அறியாமை மாய, ஏட்டில்

முற்போக்குத் தத்துவத்தை யூட்டி, இங்குக்

கோதில்சீர் பெண்ணினத்தின் பெருமை காக்கக்

குரல்கொடுத்த பாரதியே! போற்று கின்றேன்

 

***

சூழ்பகை துரத்திய பாரதி

இயற்றியவர்: கவிஞர் வ. பழனி,
புதுச்சேரி

 

பாட்டுப் பாடிப் பாரதம் காத்த

நாட்டுக் கவிஞர் நலமிகு பாரதி

அடிமை வாழ்வை அறவே வெறுத்துக்

குடிமை உயரவே குவலயம் காத்தார்.

நாட்டு நடப்பை நரம்பு புடைக்க

ஏட்டில் எழுதி ஏற்றஞ் செய்தவர்.

புவியில் சிற்ந்து புதுமை செய்தே

கவியால் உயர்ந்து கடமை புரிந்தவர்.

தாழ்ந்த மக்கள் வாழ்வில் உயர

சூழ்ந்த பகையை துரத்தினார் இவரே!

 

***

 

பாரதிச் சீரையெண்ணி சிந்தை மகிழ்வோம்.

இயற்றியவர்: கவிஞர் மு. தியாகராசன்,
புதுச்சேரி

 

கல்லார் இல்லா உலகங் காண

இல்லார் இல்லா மக்கள் காண

எல்லா இனமுஞ் சமமென எண்ணப்

பொல்லா மூடப் பொய்மைகள் மாயச்

சொல்லார் பாரதி தோன்றினன் மாதோ!

வீதிகள் தோறும் பள்ளிகள் செய்திட

சாதி பேதச் சழக்குகள் சாய்க்கக்

கொஞ்சுங் குழந்தை கூடியே ஆடிட

செஞ்சொல் குழைத்துச் செப்பினான் பாரதி!

அடிமையில் உழன்றே அல்ல லுற்றநாம்

விடுதலை காண விழைந்தான் பாரதி!

உலகில் தமிழே உயர்ந்தது கண்டான்;

இலகு செம்மொழி ஏற்றம் இந்நாள்

பாரே போற்றும் பாரதிச்

சீரை யெண்ணிச் சிந்தை மகிழ்வமே!

 

***

பாரதி பாவெல்லாம் தேன்

இயற்றியவர்: கவிஞர் இராச.தியாகராசன்
புதுச்சேரி

 

சொல்லுக்கு வேந்தனாம் சுப்ரமண்ய பாரதி

வில்லுக்கு வேந்தன் விசயனெனச் செந்தமிழில்

கொள்ளித் தழலெனவே கும்பினியர் ஆட்சியற

தெள்தமிழில் பாடியதோ தேன்!

 

தேனமுத வாரிதியாய்த் தீந்தமிழின் காவலனாய்க்

காணிநிலங் காளியிடங் கேட்டவனின் பாக்களிலே

காணும் வருங்காலக் கனவென்னுஞ் சிந்தனைதான்

தோன்று மெனதுள்ளச் சொல்!

***

செயல் வடிவம் ஆக்கல் வேண்டும்

இயற்றியவர்: புலவர் மு. இறைவிழியனார்
ஆசிரியர் *நற்றமிழ்* – புதுச்சேரி

 

பாரதிக்கு விழாவெங்கும் எடுக்கக் கண்டோம்

……….பாரதியின் பாடலெங்கும் பாடக் கேட்டோம்

தீரவில்லை சாதிமதப் பூச லிங்கே!

……….தீந்தமிழில் பெயரில்லை ஒப்ப மில்லை

ஊரெல்லாம் பெண்ணடிமை பேசல் கேளீர்

……….உரிமையுடன் உழைப்பாளர் வாழ்கின் றாரா?

பாரதியின் புகழ்பரவ அவரின் கொள்கை

……….பாருணரச் செயல் வடிவ மாக்கல் வேண்டும்!

***

 

பாரைப் புதுக்கிய பாரதி

இயற்றியவர்: பாவலர் சிவ. இளங்கோ
புதுச்சேரி

 

பாட்டினில் புரட்சி செய்தான் பாவையர் உரிமை சொன்னான்

கேட்டினை அடையா வாழ்க்கை கேள்வியிற் சிறந்தா லென்றான்

கூட்டினை திறந்து விட்டுக் குறைவிலாக் களிப்பி லின்பக்

காட்டினில் சுற்றி வந்தான் கடவுள துவென்று சொன்னான்.

 

சாத்திரம் பொய்க ளென்றான் சடங்கின்றி வாழச் சொன்னான்

ஆத்திரங் கொள்க வென்றான் அவனியை வெல்க என்றான்.

கோத்திரங் குலங்க ளெல்லாம் குறுகிய வழிக ளென்றான்

பாத்திறம் காட்டிப் பாரை பாரதி புதுக்கிட் டானே!

 

******

முண்டாசுக்காரன் உண்டாக்கிய குணம்

இயற்றியவர்: கவிஞர் முனைவர் உரு. அசோகன்
புதுச்சேரி

 

முண்டாசுக் காரன் முறுக்கு மிளமீசை

கண்டாலே கூசுமக் கண்ணன் இவந்தானே!

உண்டாக்கி விட்டான் உணர்வை அதனாலே

கொண்டேன் செருக்கு குணம்

 

தலைமேல் விடாது தவழ்கின்ற மேகத்தை

காலை எழுந்த கதிரவனை மாலையில்

காண்கின்ற வெண்ணிலவைக் காணாத காற்றையும்

நாணுவகைச் செய்வேனே நான்.

 

***

பேரினிடை வாழ்கவி பாரதி

இயற்றியவர்: கவிஞர் ந. இராமமூர்த்தி,
புதுச்சேரி

 

இன்பம் பெருக்கும் இனியபல பாவியற்றி

இன்னல் இருளகற்றி ஏந்திழையாள் சீருரைத்து

கன்னல் மொழியெனக் கற்றமிழை வாழவைத்தான்

தன்னந் தனியான கவி!

 

மிக்க புரட்சியதும் மேலான உண்மையதும்

தக்க கவியும் முறைபாடிப் – பக்குவமாய்

ஊர்நலமும் வாழ்முறையும் கூறுகின்ற பாரதியார்

பேரினிடை வாழ்கவிப் பார்!

 

தொகுப்பாளர் குறிப்பு: இருபது கவிஞர்களின் 28 பாடல்களை வெளியிட்டுள்ள இணையதளம்:

 

http://www.pudhucherry.com/pages/makavi.html

 

புதுச்சேரி மின்னிதழான இது பாரதி பற்றிய பாடல்களைத் தொகுத்து வழங்கியுள்ளது. அரிய இந்த பணியை ஆற்றிய பாரதி ஆர்வலர்கள் அனைவருக்கும் நமது நன்றி. இந்த இணையதளத்திற்கும் நமது நன்றி.

 

கவிஞர்களைப் பற்றிய விரிவான குறிப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தமிழின் சுவையும் கவிதைகளின் கருத்தாழமும் இவர்களைப் பற்றி நம்மை நன்கு உணர வைக்கிறது. கவிஞர்கள் அனைவருக்கும் நமது நன்றி.

 

***

 

 

 

தாய்லாந்தில் ஒரு அதிசயக் கோவில் (Post No.4999)

Written by London Swaminathan 

 

Date: 11 May 2018

 

Time uploaded in London – 13-40 am (British Summer Time)

 

Post No. 4999

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

முதலிலேயே ஒரு உண்மையச் சொல்லி விடுகிறேன். போகாத இடம் பற்றி நான் எழுதுவதில்லை. ‘கண்ணால் கான்பதே மெய், காதால் கேட்பதெல்லாம் பொய்’- என்ற கொள்கை உடையவன் நான். ஆயினும் இப்பொழுது தாய்லாந்து பற்றி ஸத்ய வ்ரத சாஸ்திரி எழுதிய புஸ்தகத்தைப் படிக்கையில்தான் இப்படி ஒரு இடம் இருப்பதே தெரிந்தது. ஆகையால் அதை தமிழ் கூறு நல்லுலகத்துக்கும் செப்புவோமே என்ற நல்லெண்ணத்தில் எழுதுகிறேன். ஏனெனில் இது அதிசயங்கள் நிறைந்த கோவில்.

 

எங்கே உள்ளது?

தாய்லாந்தில் பூரிராம் (ராம புரி) மாகாணத்தில் உளது.

இடத்தின் பெயர் பனம் ரங். இது க்மேர் (கம்போடிய) கட்டிட பாணியில் அமைந்த கோவில். இந்து சிலைகளும், சின்னங்களும் உள

எவ்வளவு பழமையானது?

பத்தாம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி இருக்கலாம்.

 

அது எப்படித் தெரிந்தது?

கம்போடியாவில் உள்ள அங்கோர்வட் முதலிய ஆலயங்களின் தாக்கம் இதில் இருப்பதாலும் சில கல்வெட்டுகளாலும் தெரிகிறது,

இதன் சிறப்பு ஏன் அங்கோர்வட் (கம்போடியா), போரோ புதூர் (ஜாவ, இந்தோநேஷியா போலத் தெரியவில்லை?

இப்பொழுதுதான் யுனெஸ்கோ போன்ற அமைப்புகள் இதைப் பாரம்பர்ய சின்னமாக அறிவிக்க அணுகியுள்ளனர்

தாய்லாந்து அரசும்

தபால்தலைகள் முதலியன வெளியிட்டு இதன் அருமை, பெருமைகளை உலகிற்குப் பறையறிவித்து வருகின்றது.

 

இளம் சிவப்பு மணற்கற்களைக் கொண்டு ஒரு குன்றின் மேல் கோவிலைக் கட்டி இருக்கின்றனர். இது சிவ பெருமான் குடிகொண்டுள்ள கயிலை மலையைச் சிறப்பிப்பதாகும்

அதிசயங்கள் என்ன?

1.ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 13, 14) இந்தக் கோவிலின் 15 வாயில்களையும் சூரிய ஒளி தொட்டுச் செல்லும். அன்றைய தினம் முதல் பனம் ரங் விழா துவங்கும்.

அப்பொழுது சுவாமி திரு வீதி உலா நடக்கும்; நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கும். பழந்தமிழ் நாட்டில் நடந்த இந்திர விழாக் காட்சிகளை நினைவு படுத்தும்

 

  1. கோவிலுக்குச் செல்வதற்கான பாதை 600 அடிக்கும் மேல் நீளமானது. போகும் வழியில் ஒரு மண்டபம் உண்டு; அங்குதான் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் அமர்ந்து அலங்காரம் செய்து கொள்வார். கிட்டத்தட்ட ராஜ ராஜ சோழன் ஆண்ட காலம்.

 

 

இந்த நீண்ட பாதையைக் கடந்தவுடன் இரண்டு நாகர் பாலங்கள் இருக்கும். அவைகள் மேலுலகத்துக்குச் செல்லும் வழிகளாகும். நாக லோகம் என்பது மேலுலக வழிகளைக் குறிக்கும்.

இதற்குப் பின்னரே உட்புறக் கோவில்.

 

அங்கே சிவன், விஷ்ணு சிலைகளைக் காணலாம். உயரமான அமைப்பு மேரு மலை என்றும் சொல்லுவர். சிவலிங்கமும் அங்கே உளது.

  1. இங்கு ராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும், இலங்கையிலும், தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ள ராமாயணச் சிற்பங்களைக் காண்கையில் ஆதிகாலத்தில் மஹாபாரதத்தைவிட ராமாயணமே மக்களை அதிகம் கவர்ந்தது என்று சொல்லலாம்.

 

  1. ஒரு கையிலிருந்து இரண்டு ஐந்து தலை நாகங்கள் இருப்பதால் இது க்மேர் சிலைகளின் பாணியைப் பின்பற்றுவது தெரிகிறது. ஆகை யால் இந்த அமைப்பு பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

 

4.ஒரு கோபுரத்தில் நடராஜர், புன்னகை புரியும் ரிஷி , ஜடாயு, சீதையைக் கடத்தும் காட்சி, மாரீசன் வதை, சீதா ஸ்வயம்வரக் காட்சி, வில்லை முறிக்கும் காட்சி என்பன இருக்கின்றன.

 

இன்னொரு காட்சியில் ராமர் குதிரை மீது பவனி வருகிறார்; இசைக் கலைஞர்கள் முன்னே செல்கின்றனர்.

மண்டோதரி கையில் இந்திரஜித்தின் தயைக் கொடுக்கும் காட்சி, ராவணனுடன் ராமனும் லெட்சுமணனும் சண்டை போடும் காட்சி, ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் காட்சிகளும் காணப்படும்.

 

ரிஷிகள் ஜப மாலையுடன் அமர்ந்த காட்சிகளும் தத்ரூபமானவை.

 

நரேந்திர ஆதித்யன் என்பவன் சிவன் கோவிலைக் கட்டிய செய்தியை ஒரு கல்வெட்டு கூறுகிறது.

 

5.இன்னும் ஒரு அதிசயம் என்ன என்றால் திசைத் தெய்வங்களின் உருவங்கள் தனித் தனியே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் மரத் தூண்களில் பொருத்தப்பட்டு  கால வெள்ளத்தில் மரங்கள் உளுத்து உதிர்ந்து போய் இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.

 

ஒரே தலை உடைய ஐராவதம் மீது இந்திரன் பவனி வரும் காட்சி ஒரு காலத்தில் கிழக்குப் பக்கம் இருந்திருக்க வேண்டும் (சில கோவில்களில் 4 தலைகளுடைய யானை மீது இந்திர உருவம் இருக்கும்)

 

தென் கிழக்கு திக்கிற்கு அதிபதியான அக்னி தேவன் காண்டா மிருகம் மீது பவனி வருவது அதிசயமே; இந்தியாவில் அக்னியின் வாஹனம்– ஆடு.

மேற்குத் திக்கிற்கு அதிபதியான —- வருணன் நாகத்தின் மீது காணப்படுகி             றார். இந்தியாவில் முதலை அல்லது ஹம்ச வாஹனத்தில் வருணன் பவனி வருவார்.

 

குபேரன் சிஙத்தின் மீது இருப்பதும் தென் கிழக்காசிய மக்களின் நூதனக் கற்பனையைக் காட்டுகிறது. இந்தியாவில் அவரை யக்ஷன் மீது காணலாம். அவர் வட திசை அதிபதி.

 

வட மேற்கு திசைக்கு அதி தேவதையான ஈஸானன், சிவன் போல் காளை வாஹனத்தில் த்ரி சூலத்துடன் தோன்றுகிறார்.

 

மேல் திசைக்குரிய பிரஹ்மா நான்கு தலைகளுடன் மூன்று ஹம்ஸங்களுடன் (அன்னம்) வருகிறர். வேறு சிலைகள் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு சிலையிலும் பறவைகள், குரங்குகள், பூக்கள், மூர்த்திகளின் மீதுள்ள ஆடை ஆபரணங்கள் ஆகியவை (KHMER) ‘க்மேர்’ பாணியில் இருப்பது, அங்கோர் வாட்டின்- கம்போடியாவின்— தாக்கத்தைக் காட்டும்.

கோவிலைச் சுற்றி பல குளங்கள் கட்டப்பட்டிருப்பது இமயமலை கயிலையை நினைவு படுத்தும்.

6.இது ஒரு அவிந்துபோன எரிமலைக் குன்றின் மீது அமைக்கப்பட்டிருப்பதும் அதிசயமே.

இது தாய்லாந்தின் புனரமைப்புடன் இப்பொழுது சுற்றுலாப் பயணிகளுக்கான பூங்காவாக நுழைவுக் கட்டணத்துடன் திகழ்கிறது. இவ்வளவு காலமாக வெளி உலகம் இதை அறியவில்லை. உட்புற மூர்த்திகளின் உருவங்களின் புகைப் படங்கள் இன்னும் பிரபலமாகவில்லை.

 

 

 

 

 

 

சுபம்–

வெள்ளையன் ஹாலிடே வியந்த ‘சதி’! (Post No.4998)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 11 MAY 2018

 

Time uploaded in London –  7-37 AM   (British Summer Time)

 

Post No. 4998

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

வெள்ளையன் ஹாலிடே வியந்த சதி!

 

ச.நாகராஜன்

 

ஹிந்துக்களை கேலி செய்வதும் அவர்கள் வரலாறைக் கொச்சைப் படுத்துவதும் ஹிந்து துரோகிகளுக்கு ஒரு வாடிக்கையான பழக்கம்.

 

சமீபத்தில் சித்தூர் ராணி பத்மினியை அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு படுத்து எடுக்கப்பட்ட படம் ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டது.

 

சஞ்சய் லீலா பன்சாலி எடுத்த பத்மாவதி படம் அக்ரமான வழியில் சரித்திரத்தைச் சிதைத்து மாற்றி எடுக்கப்பட்ட படம்.

மஹா தியாகியான சதி பத்மினியை கொச்சைப் படுத்தியதை எந்த ஒரு ஹிந்துவாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சதியில் உடன்கட்டை ஏறியவர்களை ஹிந்துக்கள் தெய்வமாக மதித்தனர்.

 

அனைவரும் சதியாக வேண்டும் என்று ஹிந்து மதம் ஒரு நாளும் சொல்லியதில்லை. ஆனால் ஈருடல் ஓருயிராக இருந்தோர் கணவனுடன் உடன்கட்டை ஏற விரும்பினால் அதைத் தடை செய்யவும் இல்லை.

 

இந்த சதி பற்றிய நிஜ வரலாறு கூறும் ஆச்சரியமான விஷயங்களைக் கீழே பார்ப்போம்:

 

சதி என்பது அநாகரிகமான ஒரு பழக்கம் என்று தீர்மானித்த கார்ன்வாலிஸ் அதி 1805ஆம் ஆண்டு தடை செய்தான். அப்படி சதியாக விரும்பினால் மாஜிஸ்ட் ரேட்டின் அனுமதி பெற வேண்டும் என்று அவன் சட்டம் இயற்றினான். ஆனால் 1829இல் வந்த லார்ட் பெண்டிங் அதை இன்னும் கடுமையாக ஆக்கி சதி என்பது தற்கொலை என்று சட்டம் இயற்றினான்.

 

In 1805 Marquis of Cornwallis passed a regulation by which no one could become a Sati without the permission of the Magistrate. The law was made stricter in 1829 by Lord William Bentick who enacted Sati as a suicide and all who encouraged Sati in any way were made guilty of culpable homicide.

 

Halliday’s Testimony, 1829 – Buckland in his “Bengal under the Lieutenant Governors” writes: –

 

In 1829 just before the penalizing of Sati, Sir Fredierick Halliday, the first Lieutenant Governor of Bengal was the District Magistrate of Hoogly, on the bank of Ganges, where Sati, was frequent occurrence. The last case of Sati lawfully celebrated in Bengal is thus narrated by him :- “We tried our best to dissuade her, but all to no purpose ….. Seated close to me she looked up at my face with scorn and said,

 

BRING A LAMP”. THE LAMP WAS LIGHTED AND WITH SCORN AND DEFLANCE IN HER EYES, SHE PUT HER FINGER INTO THE FLAME. THE FINGER SCORCHED, BLISTERED AND BLACKENED AND FINALLY TWISTED UP. SHE REMAINED UNMOVED, NOT A MUSCLE TWITCHED AND NOT A SOUND ESCAPED.

 

 

“Are you satisfied?” she asked.

 

“Quite,quite satisfied,” was the reply. She asked my permission and I assented.

 

Cooly and calmly she mounted the funeral pyre and laid herself down beside a part of her husband’s clothing. The husband had died far away. She was covered with light brushwood and fire was set to the funeral pyre.”

 

The following true incident is given in Tavernier’s “Travels” (published in 1677) :-

 

The Raja of Vellore was killed in a battle with the King of Visapur. Eleven of his wives resolved to become Sati. The General of the Visapur army coming to know of it, imprisoned all of them together. They told the keeper at the time, “Imprisonment is futile, we shall die in three hours.”

 

After three hours all of them lay stretched on the floor dead, and were gone with their husband, without any mark of violence on their bodies.

 

ஆக சதியாக விரும்பினோர் உடல் மனம் ஆன்மாவினால் கணவனுடன் ஒன்று பட்டவர்கள்.

 

கண்டவுடன் காதல்; காமம் முடிந்தவுடன் டைவர்ஸ் என்ற நாகரிகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது பற்றி எதுவும் புரியாது என்பது தான் உண்மை!

 

ஆதாரம் : Truth, weekly Magazine Volume 86 Issue 1 dated 20-4-2018

நன்றி : ட்ரூத் வார இதழ்

*****