பாரதி போற்றி ஆயிரம் – 65 ( Post No.4854 )

Date: MARCH 27, 2018

 

 

Time uploaded in London- 5-56 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4854

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 476 முதல் 484

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

22 முதல் 30 வரை உள்ள பாடல்கள்

 

 

சக்தி எனுமோர் அரியநற் பாட்டில்

   சக்தி எவையென பட்டிய லிட்டாய்

எக்க ணத்திலும் உரியநற் பண்பாய்

   எண்ணத் திருந்திடும் எரியதே சக்தி

தக்க ததுவென  தெளிவுறச் சொன்னாய்

   தழல துவேசிவ சக்தியா மென்றாய்

இக்க ணத்தினில் அதையுணர் வோர்கள்

   என்றும் வாழ்வினில் வெற்றியே காண்பார்

 

சக்தி விளக்கமென் றருளிய பாட்டில்

   சாற்றும் மூர்த்திகள் மூவரென் றாலும்

தக்க தோர்மூலப் பெருவெளி யொன்றில்

   தானே அவைகிளை விட்டன யென்றாய்

மிக்க அவ்வொளியே சக்தியென் றிட்டாய்

   மேன்மை பெற்றிடப் போற்றிடச் சொன்னாய்

எக்க ணத்திலும் எதனிலும் என்னை

   என்றும் நினைந்தவனை வாழ்த்தினேன் நின்னை

 

மகாசக்தி வெண்பா மனத்திற்கு யெந்தன்

மகாசக்தி யைக்கூறும் மாண்பால் – தகாதவற்றை

நீக்கி எனதருள் நீங்கா வகைகாட்டி

காக்கும் கவசமது காண்

 

போற்றி அகவலில் படைப்பு முதல்நாள்

ஆற்றும் செயல்கள் ஐந்தையும் உரைத்தாய்

உலகம் நானாய் ஒவ்வொரு பொருளிலும்

கலந்து நிறைந்ததும் கனிவுடன் பகர்ந்தாய்

ஆனால் இதுவரை ஆய்ந்த ஞானிகளும்

காணாக் குறிப்பினைக் காட்டலால் மகிழ்ந்தேன்

உயிரில் உயிரென உரைத்தாய் இயல்பே

உயிரது இறப்பினும் உளதென் றனையே

யோகியர் ஞானம் யாதென உன்போல்

யூகித்தோர் வரியில் உரைத்தவர் யாருளர்?

சைவசித் தாந்த சார மென்பாரே

நைவதின் றியுன்போல் நயம்பட உரைத்ததார்?

யானெனும் அகங்காரம் எனதெனும் மகங்காரம்

ஏனென விடுத்தவன் ஏற்புறு யோகியென்றாய்

நோக்கு மிடமெல்லாம் நின்னருள் ஞானம்

நீக்க மின்றி நிறைந்ததே வாழ்கநீ!

 

நாவுக்க ரசரின் அரங்க மாலை – என்றும்

   நம்மங் கம்யாவும்  இறைவ னுக்கே

மேவும்ப டியமைந் ததென்றே உரைக்கும் -அந்த

    மேன்மைபோல்நீ வரைந்தாய் எனக்கும்

சக்திக்கு ஆத்ம சமர்ப்பணமாக – நீ

   சாற்றியதோர் புதிய அங்க மாலை

எக்காலத் தையுமிங்கு வென்று வாழும் – அதுபோல்

    எவர்வா ழினுமென் னருளும் மேவும்

 

கருணையின் வடிவமாய் சக்தியின் சொரூபமாய்

   காண்பதில் நிறைவுகொள் ளாமல்

உருத்திர ஆங்காரக் காளியாய் எந்தனின்

   ஊழிக்கூத் தினைப்பாட லுற்றாய்

ஒருமுறை அதையெவர் பாடினும் அங்குநான்

   ஓங்காரக் காளியாய் வந்தே

பெருகிய வெறியுடன் நடம்புரி வேனதில்

   பேரண்டம் குலுங்கிடும் அன்றோ?

 

காலவ னத்தினிலே – நானோர்

களிவண் டாமெனவே

சீலமு டன்சொன்ன – உவமையில்

சிந்தை குளிர்ந்ததடா

 

மாரியெ னைப்பணிந்தும் – மாந்தர்

மனம்வெளுக் காநிலையைக்

கூறிவ ருந்தினையே – அதிலுன்

குமுறலைக் கண்டேனடா

 

காணிநி லந்தனையே – தனக்குக்

கருத்துடன் கேட்டாலும்

பேணிஇவ் வையத்தைப் – பாட்டால்

பாலிக்க நினைத்தாயடா

 

பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

A FRIEND IN NEED IS A FRIEND INDEED-MANU AND VALLUVAR ON FRIENDSHIP (Post No.4852)

A FRIEND IN NEED IS A FRIEND INDEED-MANU AND VALLUVAR ON FRIENDSHIP (Post No.4852)


Written by London Swaminathan 

 

 

Date: 26 MARCH 2018

 

 

British Summer Time uploaded in London – 17-07

 

Post No. 4852

Pictures shown here are taken from various sources; thanks.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

He is a true friend who stands by one in disease, in adversity, in famine, in danger from enemies, at the royal gate and at the cremation ground.

Chanakya Niti 1-12

aature vyasane praapte durbikshe satrusankate

raajadwaare smasaane ca yasthishtati  sa bhaandhavah

 

xxx

They are the real sons who are devoted to their father, father is one who brings the offspring, a friend is one who can be trusted, a wife is one who gives happiness.

2-4

 

One should keep away from a friend who harms the mission in one’s absence, but talks sweetly when face to face. He is a jar of poison with milk in its upper portion.

2-5

 

One should not trust a bad friend, nor should repose too much of trust even in good friend lest the friend in a fit of rage were to lay bare all the secrets.

2-6

xxx

Compare these with the following couplets from Tamil Veda ‘Tirukkural’

 

Like the hand , that goes to the rescue when a garment slips, stepping into help

when a friend faces adversity, is true friendship – Kural 788

 

Friendship is not for pleasant laughter alone, but for harsh and ethical advice too

promptly given, when one swerves from the right path- Kural 784

 

A surface smile on the face is not friendship, genuine affection,

springs from the heart and lights up the face- Kural 786

 

The true friend keeps one away from the wrong path, and helps him follow the right path,

and also stands by him, if misfortune falls nevertheless – Kural 787

 

The throne of genuine friendship is found, without doubt, where two allied hearts beat,

under all circumstances, in unison and mutual support- Kural 789

 

It is wise to acquire and hold on to faultless friendships, and equally good,

to dispense with undependable friendships, even at a price- Kural 800

 

–subham–

 

 

 

 

 

 

ஐந்தே நாட்களில் ஐந்து சிவாலய தரிசனம் (Post No.4853)

Written by London Swaminathan 

 

 

Date: 26 MARCH 2018

 

 

British Summer Time uploaded in London – 8-04 am

 

Post No. 4853

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவில் இருந்தேன். ஐந்தே நாட்களில் ஐந்து புகழ்பெற்ற சிவன் கோவில்களுக்குச் சென்றேன்:

சிதம்பரம் நடராஜர் கோவில்

வைதீஸ்வரன் கோவில்

திருவக்கரை சிவன் கோவில்

திருமுதுகுன்றம் சிவன் கோவில்

சென்னை கபாலீஸ்வரர் கோவில்

 

முன்னர் பார்க்காது இருந்து, இப்பொழுது புதிதாகத் தரிசித்த, இரு கோவில்களின் முக்கிய விஷயங்களை மட்டும் மொழிவேன். ஏனைய கோவில்கள் பற்றி விளம்பியோர் பலர் இருக்க, கூறியது கூறல் குற்றம் என்பதால் விடுக்கிறேன்.

 

திருவக்கரை கோவில்!

சுவாமி பெயர்- சந்திரமௌலீஸ்வரர்

அம்மன் பெயர்- அமிர்தாம்பிகை/ வடிவாம்பிகை

ஸ்தல விருக்ஷம்- வில்வ மரம்

பழமை-2000 ஆண்டு

பாடியவர்- திரு ஞான சம்பந்தர்

 

சிறப்பு– காளி கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில் சேர்ந்து அமைந்தமை

மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது!

 

இங்கு மூன்று முகம் கொண்ட சிவ பெருமான் வீற்றிருப்பது கோவிலின் தனித் தன்மைக்கு சான்று

 

வக்ர காளி அம்மன் என்ற காளி கோவிலும் வரத ராஜப் பெருமாள் என்ற விஷ்ணுவின் மூர்த்தமும் ஒருங்கே ஒரே இடத்தில் இருக்கின்றன. அக்காலத்தில் சிவ- விஷ்ணு பேதம் இன்றி மக்கள் வழிபட்டமைக்கு சிதம்பரம் கோவில், திருவக்கரை கோவில் முதலியன அத்தாட்சி.

 

 

ஒவ்வொரு கோவில், ஒவ்வொரு சந்நிதி, ஒவ்வொரு சிலை பற்றியும் பல கதைகள் உண்டு.

 

இருப்பிடம்- திண்டிவனம், விழுப்புரம் அருகில்

 

சிறப்பு- அருகிலேயே கல் மரப் பூங்காவில் பல கோடி ஆண்டுகளில் மரங்கள் கற்களாக மாறிய அதிசய இடம் ( இது பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர், நிறைய படங்களுடன்  தனிக் கட்டுரை வரைந்துளேன்; கண்டு மகிழ்க)

 

திருவக்கரையில் உள்ள மூன்று தலைகள் கொண்ட முகலிங்கம் பற்றிக் கூறப்படுவதாவது:-

 

தத்புருஷம், அகோரம், வாமதேவம் ஆகிய மூன்று முகங்களுக்கு மூன்று வேளைகளில் மூன்று வித அலங்காரம் செய்யப்படுகிறது.

குண்டலினி முனிவர் சமாதி

 

ஒவ்வொரு கோவிலும் ஜன ஆகர்ஷணம், தன ஆகர்ஷணம் உடைத்தாய் இருப்பதற்குக் அங்கு சமாதி அடைந்த முனிவர்களும் சாது சந்யாசிகளுமே காரணம். திருவக்கரையில் குண்டலினி முனிவர் சமாதி உளது. சைவப் பெரியார்கள் இறந்தால் அங்கே சிவலிங்கமும், வைணவப் பெரியார்கள் இறந்தால், அவர்களைப் புதைத்த இடத்தில் துளசி மாடமும் அமைப்பது மரபு. திருவக்கரையில்சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஜீவன் முக்தர்களின் சமாதிகளில் என்றும் அந்த முனிவர்களின் அருள் இருப்பதால் இப்போது தரிசித்தாலும் முனிவரின் அருள் கிட்டும்.

இந்தக் கோவிலில், 100 கால் மண்டபத்தை அழகிய கலை வேலைப் பாடுகளுடன் காண்கிறோம்.

 

 

திருவக்கரை இறைவனைப் பாடிய ஞான சம்பந்தரின் மூன்றாம் திருமுறையில் (தேவாரம்) சில பாடல்கள் மட்டும் தந்துள்ளேன்

 

3438 கறையணி மாமிடற்றான் கரி காடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினா னொரு பாகமும்பெண்ணமர்ந்தான்
மறையவன் றன்றலையிற் பலி கொள்பவன்வக்கரையில்
உறைபவ னெங்கள்பிரா னொலி யார்கழலுள்குதுமே
3.060.1

 

3439 பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர்பாகமதா
ஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்கடொழுதிறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன்வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடிசெப்புதுமே
3.060.2

 

3440 சந்திர சேகரனே யரு ளாயென்றுதண்விசும்பில்
இந்திர னும்முதலா விமை யோர்கடொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் மன லாய்விழவோரம்பினால்
மந்தர மேருவில்லா வளைத் தானிடம்வக்கரையே
3.060.3

 

 

 

விருத்தாசலம்/ திருமுதுகுன்றம் சிவன் கோவில்

 

சுவாமியின் பெயர்- பழமலை நாதர்

அம்மன் பெயர்-  விருத்தாம்பிகை, பாலாம்பிகை

ஸ்தல மரம் – வன்னி

 

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய (தேவாரம்) தலம்.

சிறப்பு–மிகவும் பழமையான கோவில் என்பது பழமலை, விருத்த+ அசலம் என்பதில் இருந்தே புலப்படும்

 

ஸ்வயம்பு லிங்கம் இங்குளது- அதாவது தானே தோன்றியது.

 

மலைகளுக்கும் கற்களுக்கும் வயது பல கோடி ஆண்டுகள். இஙே லிங்க வடிவில் கல் இருந்தவுடன் இதைப் புனிதமான இடம் என்று கருதி கோவில் எழுப்பி இருப்பர். ஆகையால் கோவிலின் வயது பல கோடி ஆண்டுகள் என்று சொன்னாலும் அறிவியல் முறைப்படி சரிதான்.

 

திருவண்ணாமலை போல இங்கும் பவுர்ணமியில் கிரிப் ப்ரதக்ஷிணம் ( மலை வலம்) நடைபெறுகிறது.

 

 

 

இங்கு பாதாள அறையில் கணபதி (விநாயகர்) சந்நிதி உளது.

இந்த வட்டாரக் கோவில்கள் சோழ, ஹோய்சாள, நாயக்க மன்னர்களின் திருப்பணிகளை மேற்கொண்டதால் ஒரே மாதிரியான சிலகள் கட்டிட மைப்புகளைக் காணலாம்.

 

16 கால் மண்டபத்தை அழகிய கலை வேலைப் பாடுகளுடன் காண்கிறோம்.

 

ஸ்ரீ முஷ்ணம் கோவில் வாசலில் உள்ள சிற்பங்கள் போலவே இங்கும் இருப்பதால், ஒரே சிற்பியின் கைவண்ணத்தைக் காணலாம்.

பிரம்மாண்டமான வாசல் அருகில் சுவர் முழுதும் கட்டம் கட்டமாக சிற்பங்கள். அதுபோல தோரண வாயில் நங்கைகள் முதலியன.

சுந்தரர்  பாடிய ஏழாம் திருமுறைப் பதிகத்தில் இருந்து சில பாடல்கள் மட்டும்

 

பொன்செய்த மேனியினீர் புலித் 

தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் மெரித் 

தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பர

வையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடி

யேன்இட் டளங்கெடவே.

7.025.1

 

250 உம்பரும் வானவரும் முட

னேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திக

ழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள் பர

வையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மான்அருளீர் அடி

யேன்இட் டளங்கெடவே.

7.025.2

 

251 பத்தா பத்தர்களுக் கருள்

செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முது

குன்ற மமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண் பர

வையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடி

யேன்இட் டளங்கெடவே.

 

திருவக்கரை, திருமுதுகுன்றம் ஆகியவற்றை சம்பந்தர் பாடியிருப்பதால் இவைகள் அவருடைய காலத்துக்கு முன்னமே சிறப்பு பெற்றிருக்க வேண்டும்; ஆகவே 2000 ஆண்டுப் பழமை உடையவை என்று செப்பினாலும் அது மிகையாகாது.

 

இரண்டு தலங்களிலும் கோவில் திருவிழாக் காலங்களில் மக்கள் லட்சக் கணக்கில் கூடுகிறார்கள்.

 

 

 

 

—-சுபம்—

 

விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 3 (Post No.4851)

Date: MARCH 26, 2018

 

 

Time uploaded in London- 6-26 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4851

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பாக்யா 16-3-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு மூன்றாம் கட்டுரை

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள்ஒரு அரிய தொகுப்பு! – 3

by .நாகராஜன்

 

முதல் விண்வெளி நடைகள்

முதன் முதலில் விண்வெளியில் நடந்தவர் அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov). 1965, மார்ச், 18 அன்று வோஷ்காட் 2 இல் 12 நிமிடம் நடந்தார். அவர் விண்கலத்திற்குள் திரும்பிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதாகப் பின்னர் தெரிவித்தார்.ஆனால் பத்திரமாகப் பூமிக்கு வந்து சேர்ந்தார்.

1965, ஜூன் 3ஆம் தேதி அமெரிக்கரான எட் வொயிட் முதன் முதல் விண்வெளியில் நடந்த அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் பின்னர் 20 வருடங்கள் எந்தப் பெண்மணியும் விண்வெளியில் நடக்கவில்லை. ஸ்வெட்லானா சவிசட்ஸ்கயா 1984, ஜூல 25ஆம் தேதி விண்வெளியில் நடந்தார். சல்யுட் 7 ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் அவர் நடந்தார். விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண்மணி காதரின் சல்லிவன்.ஸ்பேஸ் ஷட்டில் சாலஞ்சரில் 1984, அக்டோபர் 11ஆம் தேதி அவர் விண்வெளி சென்றார்.

கயிறு கட்டப்படாமல் ப்ரூஸ் மக் காண்ட்லெஸ் 1984 பிப்ரவரி 7ஆம் தேதி நடந்து அரிய சாதனை நிகழ்த்தினார்.

 

அதிக விண்வெளிநடைகள்

ரஷிய விண்வெளி வீரரான அனடோலி சொலொவியவ் 1980 முதல் 1990 முடிய 5 தடவைகளில் 16 முறை விண்வெளி நடைகளை மேற்கொண்டார். இதில் 82 மணி நேரம் அவர் விண்கலத்திலிருந்து வெளியில் இருந்திருக்கிறார். இது ஒரு சாதனையாகும்.

அமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ் -அல்ஜீரியா 10 முறை விண்வெளியில் நடந்தார். மொத்த நேரம் 67 மணிகள் 40 நிமிடங்கள். இவரைத் தொடர்ந்து அமெரிக்க வீராங்கனையான பெக்கி விட்ஸன் 10 விண்வெளி நடைகளை மேற்கொண்டார். மொத்த நேரம் 60 மணிகள் 21 நிமிடங்கள்!

நீண்டநேரம் நடந்த ஒரே விண்வெளிநடை

2001,மார்ச் 11ஆம் தேதி நாஸா விண்வெளி வீரர்களான ஜிம் வோஸ் மற்றும் சூசன் ஹெல்ம்ஸ் டிஸ்கவரி கலத்தின் வெளியே மற்றும் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் வெளியே STS 102 மிஷனின் போது 8 மணி நேரம் 56 நிமிடங்கள் கழித்தனர். சில பராமரிப்பு வேலைகளையும் இவர்கள் செய்தனர்! இதையே நீண்ட நேர விண்வெளி நடையாக வரலாறு பதிவு செய்கிறது.

அதிக மனிதர்கள் விண்வெளியில்..

நாசாவின் STS 127 மிஷனில் 13 வீரர்கள் 2009இல் எண்டவர் கலத்தில் இருந்தனர்! 2009 ஜூலையில் எண்டவர் கலம் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுடன் பொருத்தப்பட்டது. அதில் உள்ள 7 பேர்கள் லேபுக்குள் சென்றனர். அங்கு ஏற்கனவே 6 பேர்கள் இருந்தனர். ஒரே சமயத்தில் 13 பேர்கள் இருந்தது ஒரு பெரிய ரிகார்டாகும்!

அதிக பெண்கள் ஒரே சமயத்தில் விண்வெளியில்!

நான்கு பெண்கள் விண்வெளியில் இருந்தது ஒரு சாதனையாகும். 2010 ஏப்ரலில் நாஸாவின் ட்ரேசி களாட்வெல் டைஸன் ரஷிய சோயுஸ் கலத்தில் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். அங்கு அவருடன் நாஸாவின் ஸ்டெப்னி வில்ஸன். டோராதி மெட்கால்ப் – லிண்டர்பெர்கர், ஜப்பானின் நயோகோ யமஸாகி ஆகியோர் இணைந்தனர். STS 131  மிஷனில் டிஸ்கவர் கலத்தில் இவர்கள் சென்றனர்!

அதிக செலவான விண்கலம்

இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒரு புட் பால் கிரவுண்ட் அளவு பெரியது. ஐந்து பெட் ரூம் வீடு போன்றது.இது 1998இல் நிலை. 2012இல் அது கட்டி முடிக்கப்பட்டபோது இன்னும் விரிவாக்கப்பட்டது.

இதற்கான செலவு 2011இல் 100 பில்லியன் டாலர்! இது இன்னும் கூடுதல் செலவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பெரிய விண்கலம்

இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் தான் பெரிய விண்கலம்! 15 நாடுகளின் பிரதிநிதித்வம் கொண்ட இது ஐந்து ஸ்பேஸ் ஏஜன்ஸிகளின் பொறுப்பில் உள்ளது. இதன் நீளம் 357.5 அடி.  சூரிய தகடுகள் இதில் உள்ளன. அதன் இறக்கை அகலம் 239.4 அடி!

இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனை பூமியிலிருந்து டெலஸ்கோப்பின் துணையின்றி வெறும் கண்களினாலேயே பார்க்கலாம்! இப்போது இதில் ஆறு வீரர்கள் உள்ளனர். உள்ளே உள்ள அறைகள் போயிங் 747 ஜம்போ ஜெட் அளவு பெரியது!

 

விண்வெளி வீரர்களின் சாதனைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. கலங்களின் பெருமைகளும் கூடிக் கொண்டே போகின்றன.

இனி வரும் காலம் விண்வெளிக் காலம் தான்!

(50 ஆண்டுக் கால சாதனைகளின் பட்டியல் முற்றும்)

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

உலகம் இதுவரை கண்டிராத ஜீனியஸ் லியனார்டோ டா வின்சி தான்!கலைஞர், விஞ்ஞானி, ஓவியர் என்று இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். பல அறிவியல் ஆய்வாளர்களும் இவரது வெற்றிக்குக் காரணம் என்ன என்பதை அறிய இவரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சியைச் செய்து கொண்டே இருக்கின்றனர் –  சில காரணங்கள் இதோ:-

 

டா வின்சி எதையும் கூர்மையாகக் கவனிப்பவர். உடனடியாக எதையும் நோட்ஸ் எடுத்துக் கொள்ளும் இயல்பினர்.ஒரு நாள் கலை, மறு நாள் ஸயின்ஸ் – இப்படித் தன் வாழ்க்கையை அவர் வகுத்துக் கொண்டார். இரண்டும் அவருக்கு ஒன்று தான். இன்னும் 7200 பக்கங்கள் கொண்ட இவரது நோட் புக்குகள் அதிசயிக்க்கத் தக்கவை. இதைப் போல மூன்று மடங்கு அவர் குறிப்பெடுத்து வைத்திருந்தார்! எனக்குத் தெரியாதவற்றைக் கேள்விகளாக்கி அவற்றுக்கு விடை கண்டுபிடிப்பதை வாழ்நாள் பணியாகக் கொண்டிருக்கிறேன் என்கிறார் அவர்!

ஓவியம் என்று எடுத்துக் கொண்டால் அது பெஸ்ட் என்று கூறும்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்படியே வைத்து விடுவார்! சிலவற்றைப் பல வருடங்கள் கழித்தே அவர் முடித்தார். மோனாலிஸாவை முடிக்க மட்டும் அவர் 10 முதல் 14 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். உலகின் மாஸ்டர்பீஸ் நம்பர் ஒன்றாக அது ஆகிவிட்டது!

கேள்விகள், பதில்கள், கூர்ந்து கவனித்தல், க்யூரியாஸிடி, பெர்ஃபெக் ஷன் _ இது தான் லியனார்டோ டா வின்சி என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சரி தானே!

****

 

VISIT TO FIVE FAMOUS SHIVA TEMPLES IN FIVE DAYS! (Post No.4850)

Written by London Swaminathan 

 

 

Date: 25 MARCH 2018

 

 

British Summer Time uploaded in London – 21-39

 

Post No. 4850

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

I was in India between 5th March and 12th March, 2018. I visited five famous Shiva temples in Tamil Nadu in five days. First day and last day of my stay was spent on shopping and visiting friends and relatives.

 

I visited Siva temples in Mypalore/Chennai, Tiruvakkarai, Virudhachalm, Vaitheeswaran koil and Chidambaram.

Of the five the Shiva temples at Tiruvakkarai and Tirumudukundram (Virudhachalam) are not as famous as Chennai Kapleeswarar or Chidambaram Nataraja temple or Vaitheeswaran Koil and falls under the category of not much visited temples. So I would like to give some information about the two  temples in bullet points.

 

Both the temples are very ancient and at least 1400 years old because they were sung by the Saivite saints.

Tiruvakkarai Temple

 

Tiruvakkarai Shiva temple is unique in many ways.

God’s name- Chandra Mouleeswar

Goddess’ name – Amirteswari

Sthala Vrksha- Temple Tree Vilva/ Bilva

Sung by Tamil saint Tiru Gnana Sambandar, who lived 1400 years ago.

Easily accessible from Pondichery or Viluppuram

 

The unique feature of the temple is that we have shrines for Goddess Vakra Kali and Vishnu.

Another unique thing about the main idol is that this is a beautiful Shiva with three faces.

 

The Dwajasthamaba, Nadhi and the main shrines are not in one straight line. In other temples we can see perfect alignment.

As usual the Sthala Purana (local mythology) has lot of stories. Like other temples, here there is a saint’s Samadhi. Kundalini Muni died (attained Siddhi) here and as usual a Sivalinga was erected on the place of his burial.

 

There is a 100 pillar hall (mandap) with decorted Chariot and horses.

The linga is called Mukhalinga. It has got Siva’s three faces. This is a very unique idol. The three faces known as Agoram,Tat purusham and Vamadevam get different Alankaram (decoration) with three different ingredients at three different times of the day.

xxx

Virudhachalam Temple

 

God’s name- Pazamalainaathar

Goddess’ name – Virudhambikai

It is located near Viluppuram

Sung by three Tamil saints.

Vanni Tree is the Sthala Vruksham (Temple tree)

 

Virudha Giri Eswarar’s temple is at least 1400 years old and it was praised by the three great Saivite saints.

 

The hill is considered holy and it is circumambulated by the people on Full Moon days. The tree here is said to be very ancient.

Vinayaka/ Ganesh shrine in underground is unique.

Virudha means very old or ancient; it is believed that the temple did not get affected even during the deluge.

 

When I went around the temples wall paintings were half stripped or spoiled. A huge temple with lot of sculptures. The sculptures at the entrance are similar to Sri Mushnam temple. So the same architects or sculptors must have worked here. Almost all the temples in the region were renovated by the Chozas, Vijayanagara Empire kings or the Hoysala Kings. So we can see similar structures.

 

Here also we have a Mandap (hall) designed like a chariot pulled by the horses.

 

The chains of the Temple car were donated by Charles Hyde during the British rule.

 

 

Last but not the least, the meaning of the words Pazamalainathar, Virudhdha Giri, Mudu Kundram in Tamil all indicate this hill and temple are very ancient.

In most of the Shiva temples the idol is considered Swayambhu—that means it was a spontaneous appearance. We can look at it from another angle. Siva Linga is worshipped because it indicates formless God. So when the ancient Hindus such spontaneous outbursts or projection on the hill or rocks, they would have worshipped is as the formless God. Such rocks naturally millions of years old. As  the years rolled each kingdom would have added something new. So it is scientifically right to say such rocks or Siva Lingas are millions of years old.

 

 

–subham–

 

 

 

 

 

 

 

 

நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்? (Post No.4849)

Written by London Swaminathan 

 

 

Date: 25 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-11 am

 

Post No. 4849

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

வடலூர் வள்ளலாரின் சத்ய ஞான சபைக்கு விஜயம்

 

சமீபத்தில் மார்ச் முதல் வாரத்தில் (2018) திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனத்துக்குச் சென்றபோது அங்கு வாங்கிய மலரில் ஒரு சுவையான சம்பவத்தைப் படித்தேன்.

 

சுவாமி ஞானானந்தா சுமார் 150 ஆண்டு வயது வரை வாழ்ந்ததவர். ஆனால் அவர் தனது வயதையோ சுய சரிதையையோ பெருமையாகச் சொல்வதில்லை. அவ்வப்போது அவர் சொல்லும் விஷயங்களில் இருந்தே பழைய வரலாற்றை ஊகிப்பர்.

 

தானும் வடலூர் ராமலிங்க சுவாமிகளும் உடனிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை அவர் சொன்னார்:

“நான் ராமலிங்க சுவாமிகளுடன் இருந்த போது, ராமலிங்கம் கட்டிடத்தின் வெளியே ஒரு பந்தல் அமைக்கச் சொன்னார். பந்தல், பல தோரணங்களுடன் அமைக்கப்பட்டது. மீண்டும் அந்த இடத்துக்கு ராமலிங்க சுவாமிகள் வந்தபோது, அட! பந்தல் நன்றாக இருக்கிறதே! யார் அமைத்தார்கள்? என்று வினவினார்.

அங்கிருந்த தொண்டர்கள் திருவாளர்………………….. அமைத்தார் என்று பந்தல் போடப் பண உதவி செய்தவர் பெயரைச் சொன்னார்கள்.

 

அவரா ? திரு……………… வா அமைத்தார்??????

என்றார்.

வள்ளார் இப்படிக்கூறிய  அடுத்த நொடியில் அந்தப் பந்தல் எரிந்து சாம்ப லாகியது.

ஏனெனில் அந்தப் பந்தல் அமைக்கப் பணம் கொடுத்தவர்– மாமிச உணவு சாப்பிடுபவர். வள்ளளாரோ அதி தீவிர சைவர். புலால் உண்ணுவோரை கடுஞ் சொற்களால் விமர்சிப்பவர்.

 

வடலூர் சிதம்பரத்துக்கு அருகில் இருக்கிறது.

வள்ளலார் வாழ்ந்த காலம்-  1823- 1874

 

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சமரச சுத்த சன்மார்கத்தைப் பரப்பினார். வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஏழு திரை கொண்ட ஒரு அறை இருக்கிறது வடலூர் வள்ளலார், தைப்பூசத் திருநாளில் ஜோதி வடிவில் மறைந்ததால் தைப்பூச விழாவின்போது மக்கள் லட்சக் கணக்கில் வருவர். வள்ளலாரின் பாடல்கள் திருவருட்பா என்னும் நூலாக மிளிர்கிறது.

 

எல்லாக் கடவுளர் மீதும் அமைந்த இந்த தெய்வீகத் துதிகள் எளிய தமிழில் எதுகை மோனையுடன் அமைந்துள்ளன.

 

ராமலிங்க சுவாமிகளின் முக்கியப் பாடல்கள், அவரது அற்புதச் செயல்கள், அவருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே நடந்த வழக்கு விவகாரம், வள்ளலார் போலவே ஜோதி வடிவில் மறைந்த தமிழ் சாது சந்யாசிகள் ஆகியன பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். வடலூர் ஆஸ்ரமம் பற்றி மட்டும் இப்பொழுது சொல்லுவேன்.

 

 

சத்திய ஞான சபையின் சிறப்புகள்:

 

சுமார் 150 ஆண்டுகளாக இங்கு அணையா அடுப்பு உளது; அதாவது எல்லோருக்கும் எப்போதும் உணவு படைக்கப்படும்.

வள்ளாலாரின் சீடரான கல்பட்டு சுவாமிகளின் சமாதியும் இங்கே இருக்கிறது. அங்கே வள்ளலாரின்  வாழ்க்கை வரலாற்றை வருணிக்கும் பெரிய ஓவியங்கள் உள்ளன.

 

வள்ளலாருக்கு இயற்கை வைத்தியத்தில் அதிக நம்பிக்கை இருந்ததால் மூலிகை மருந்துகளையும், மூலிகை உணவுகளையும் பரப்பினார். இன்றும் நூற்றுக் கணக்கான மருந்துகளையும் மூலிகை உணவுகளையும் வடலூரில் விலைக்கு வாங்கலாம்

நானும் என் தம்பியும் மாலைக் கதிரவன் மலை வாயிலில் விழுமுன் வடலூர் அடைந்தோம்.

எதேச்சையாக ஒருவர் வந்து தன்னை ‘நம சுதாமா’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். நெற்றியில் விபூதிக் கீற்று. வள்ளலார் பிராமணர் அல்ல; வந்தவரும் பிராமணர் போலத் தோன்றவில்லை. ஆகையால் ‘’நம சுதாமா’’ என்ற பெயர் விநோதமாக இருக்கிறதே என்று வினவினோம்.

அவர் சொன்னார்- என் பெயர் சுதாமா; எனக்கு நமசிவாய என்பது பிடிக்கும் என்பதால் நம சுதாமா என்று வைத்துக் கொண்டேன் என்றார்.

முதலில் அவர் பணமோ டொனேஷனோ Donation எதிர்பார்த்து எம்மைச்  சூழ்ந்தாரோ என்று எண்ணினோம். ஆனால் நேரம் ஆக ஆக  அவர் ஒரு உண்மை ஊழியர் என்று தெரிந்தது.

 

எங்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். சமையல் அறைக்கு அழைத்துச் சென்று அணையா அடுப்பையும், விளக்கையும் காட்டினார். அருகில் இருந்த பானையில் இருந்து சுக்கு மல்லிக் காப்பி கொடுத்தார்; எவ்வளவு பணம் தரவேண்டும்? என்று கேட்டபோது- இது எல்லோருக்கும் பயன்படுத்துவதற்காக தினமும் இந்த இடத்தில் வைக்கப்படுகிறது என்றார்.

 

நீங்கள் இந்த இடத்தில் வேலை பார்க்கிறீர்களா? என்று கேட்டபோது, தான் அருகாமை கிராமத்தில் வசிப்பதாகவும் முடிந்த போதெல்லாம் சைக்கிளில் வந்து உதவி செய்வதாவும் சொன்னார்.

என்னுடைய திருவருட்பா புஸ்தகத்தை ஒருவருக்குக் கொடுத்துவிட்டதால் புத்தகக் கடை எங்கே? என்று கேட்டேன். அங்கு சென்றவுடன் ஒரு திருவருட்பா புஸ்தகம் வாங்கினேன்.

 

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமருடன்……. என்ற, பாடலைப் புகழ்ந்து பேசினேன். “சார் ஒரு கேள்வி– யார் உத்தமர்? யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என்றார். வாயடைத்துப் போனேன். துணிச்சலாக இவர் ஒரு உத்தமர் என்று எவர் பெயரையும் சொல்லும் துணிவில்லை. அந்தக் காலத்தில் ரமணர், ராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர், அண்மையில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) போன்ற உத்தமர்கள் இருந்தனர். அவர்கள் வாழ்வு, குடிசையில், எல்லோரும் பார்க்கும் வாழ்வாக இருந்தது ஆனால் மற்ற சாமியார்கள் எல்லோரும் மூடிய கட்டிடங்களில் மறைவான வாழ்க்கை வாழ்வதால் சொல்லும் துணிவில்லை என்றேன். அவர் கேட்ட கேள்வி என் சிந்தனையைத் தூண்டியது.

 

யார் உத்தமர் இல்லை? என்று மட்டும் அவர் கேட்டிருந்தால் அன்று இரவு முழுதும் நீண்ட பட்டியலைக் கொடுத்திருப்பேன்.

 

எனது தம்பிக்கு மூலிகை மருந்துகளில் ஆர்வம் இருந்ததால், இங்குள்ள கடைகளில் தைரியமாக வாங்கலாமா? என்று கேட்டேன்.

அவர் சொன்னார்:

இந்த ஸத்திய ஞான சபை எல்லைக்குள் எல்லோரும் ஸத்தியமே பேசுவர் என்றார். ஆனால் இங்கு இலவச உணவு அருந்த வருவோர் எல்லோரையும் ஆன்மிக    நாட்டம் உடையோர் என்று சொல்வதற்கில்லை என்றும் சொன்னார்.

நான் உடனே காஞ்சி பரமாசார்ய  சுவாமிகள் அன்ன தானப் பெருமை பற்றி ஆற்றிய சொற்பொழிவினை சுட்டிக் காட்டினேன். நல்லவர் ஒருவர் உணவு உண்டால் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.

 

அவரிடம் பிரியாவிடை பெற்று மூலிகைக் கடைக்கு வந்தோம்.

நான் ஏன் வடலூர் சென்றேன்?

 

நான் இங்கிலாந்தில் சிறைச் சாலையில் உள்ள இந்துக் கைதிகளை வாரம் தோறும் சந்தித்து பிரார்த்தனை செய்வேன். ஒரு கைதி அதிசயமாக திருவருட்பா வேண்டும் என்றார். என்னிடம் லண்டனில் வைத்திருந்த புஸ்தகத்தை அவரிடம் கொடுத்து விட்டேன். ஆக வடலூர் சென்று புஸ்தகம் வாங்கத் தீர்மானித்தேன். இது கடந்த ஓராண்டுக்குள் நடந்தது. ஆனால் நானோ 40 ஆண்டுக்கும் மேலாக வடலூர் செல்ல ஏங்கினேன். காரணம்:-

  1. சிறு வயதில், ஐந்து வயதில், மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள யாதவர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன். முதல் நாள் முதல் ஐந்து வருடத்திற்கு தினமும் பாடிய பாடல் வள்ளலாரின்- ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே’ – என்ற பாடல்தான்.

2.என் தந்தை ‘ம்ருத்யுஞ்சய மந்திரம்’ முதலியன சொல்லிக் கொடுத்ததோடு வள்ளலாரின் கணபதி துதியான ‘முன்னவனே யானை முகத்தவனே’– துதியையும் சொல்லிக் கொடுத்ததால், சிறு வயது முதல் அதுவும் பரிச்சயம்.

 

பஜனையில் ‘அம்பலத்தரசே அருமருந்தே’ பாடலையும் அவர் பாடுவார். நாங்களும் உடன் பாடுவோம்.

 

  1. மதுரை சம்பந்த மூர்த்தித் தெருவில் மஹாதேவன் என்பவர் நாடகங்களில் நடிப்பார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ‘அருட் ஜோதி தெய்வம்– எனை ஆண்டு கொண்ட தெய்வம்’ என்ற பாடலை உருக்கமாகப் பாடுவார். பிற்காலத்தில் நாங்கள் சங்கீத மேதை டாக்டர் எஸ். ராமநாதன் வசித்த கட்டிடத்தில் குடியிருந்தோம். அவரும் அவரது புதல்விகளும் இந்தப் பாடலை பாடுவர்.

 

4.எஸ் எஸ் எல் சி —-படிப்பில் மனப்பாடப் பகுதியில் ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம்’—என்ற பாடல் வந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வள்ளலார் பற்றிப் பல கட்டுரைகள் எழுதினேன்.

 

இவை அனைத்தும் சேர்ந்து என்னை வடலூருக்கு உந்தித் தள்ளியது.

ஒவ்வொரு முறை லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து வைதீஸ்வரன் கோவிலுக்குச் செல்லுகையில் வடலூரைத் தாண்டி ‘கார்’ பறக்கும். அப்போதும் வடலூர் மீது ஆர்வம் எழும்.

 

இந்த முறை வைதீஸ்வரன் கோவிலுக்குச் செல்லும் இரண்டு நாட்களுக்கு முன்னரே,  வடலூருக்குத் தனியாகச் சென்று வந்தேன்.

 

அமைதி தவழும் வடலூர் ஆஸ்ரமத்துக்கு நீங்களும் சென்று வாருங்கள்.

வாழ்க ராமலிங்க சுவாமிகள்! வளர்க  வடலூர் வள்ளலாரின் புகழ்!!

–சுபம், சுபம்—

 

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 2 (Post No.4848)

Date: MARCH 25, 2018

 

 

Time uploaded in London- 6-32 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4848

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

நகைச்சுவை நடைச்சித்திரம்

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 2

 

ச.நாகராஜன்

 

 

T.Q.C.!  T.Q.C.!!

அப்படி என்றால்?

TOATAL QUALITY CONTROL!!!

ஜப்பானின் முன்னேற்றத்திற்குக் காரணம் தரம்!

தரம், தரம்,தரம்.

நிரந்தரம் வேண்டும் தரம்!

ஆஹா, கடைக்கு ஓடினேன்.

அள்ளினேன், அனைத்து டி.க்யூ.சி. புத்தகங்களையும்!

எல்லா ஜப்பானிய வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு அவ்வப்பொழுது அதை விடுவேன்.

அனைவரும் அசந்து விட்டனர்.

சற்று பயபக்தியுடன் பார்த்தனர்.

ஏதாவது சந்தேகம் என்றால் கூட என்னை வந்து பார்க்க ஆரம்பித்தனர்.

நிர்வாகம் சிந்தித்தது.

அப்போது தான் வந்தது க்யூ.சி.

அதாவது க்வாலிடி சர்க்கிள்.

தர வட்டம்.

தரத்தைக் கொண்டு வர தொழிலாளர்களின் சிறு குழுக்களை அமைத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது தர வட்டத்தின் நோக்கம்.

 

அனைத்து மானேஜர்களுக்கும் தர வட்டம் அமைக்க உத்தரவானது.

எனது தொழிலகத்தில் சுமார் ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.

அதிகமான தர வட்டம் யாருக்குக் கிடைத்தது?

ஊகிக்கவே வேண்டாம், எனக்குத் தான்!

 

மாலை 4 மணி முதல் இரண்டு ஷிப்டு தொழிலாளர்களையும் சந்தித்து இரவு 8 மணி வரை க்ளாஸ் எடுத்து அதற்கு மேல் அலுவலக பெண்டிங் வேலையைக் கவனித்து…

சுமார் 800 மனித மணிகள் (மேன் ஹவர்ஸ்) க்ளாஸ் எடுத்தேன்.

பாரடோ சார்ட் என்பது முக்கியம்.

சார், பரோடா கிடைக்குமா சார்!

 

பரோடா இல்லை, பாரடோ சார்ட்.

அதன் மூலம் உடனடியாக ஒரு பிரச்சினையை இனம் கண்டு தீர்த்து விடலாம்.

 

சார், அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஃபிஷ் போன் டயாகிராம் வரைய வேண்டும்.

சார், ஃபிஷ் என்ன ஃபிஷ் சார்? தருவார்களா, சார்!

அதில்லை, அப்படி ஒரு படம்.

வைடல் ஃபியூ, ட் ரிவியல் மெனி. (VITAL FEW TRIVIAL MANY)

அதாவது முக்கியமான காரணம் சில தான். குட்டி குட்டி வேண்டாத காரணங்கள் பல.

 

சார், புரியவில்லை.

உங்கள் வீட்டில் உள்ள ஒரு பிரச்சினையைச் சொல்லுங்கள்.

சார், பையன் படிக்கவே மாட்டேன் என்கிறான்.

சரி, அதற்கான காரணத்தை படத்தில் வரைவோம்.

ஏராளமான காரணங்களை படத்தில் ஏற்றினோம்.

வைடல் காரணம்,பணம் இல்லை!

அதை எப்படி சார் கொண்டு வருவது?

அவசரம் அவசரமாக க்ளாஸை முடித்தேன்.

தர வட்ட மாஸ்டர் ஆனதால் எல்லோரும் என்னை மதிப்புடன் பார்த்தனர். தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டனர்.

 

அதற்குள் நிர்வாகம் அதிரடியாக உத்தரவைப் போட்டது.

ஜஸ்ட் இன் டைம்! JUST IN TIME – JIT

ஜே ஐ டி வந்து விட்டதால் அந்தந்த சாமானை அன்றன்று வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டாக் என்ற பேச்சே இருக்கக் கூடாது.

ஜப்பானில் அப்படியே மூலப் பொருள்கள் லாரி லாரியாக வருகிறதாம். அது லைன் அசெம்பிளிக்கு நேராகப் போய் வண்டியாக – மோட்டார் சைக்கிளாக, காராக மாறுகிறதாம்!

சரி, ஜே ஐ டி வாழ்க.

 

 

ஆனால், துரதிர்ஷ்டம் ஆங்காங்கே வண்டிகள் முடியாமல் அலங்கோலமாக அரைகுறையாக நின்றன.

பல ஆண்டு வாடிக்கையாளர்கள் திகைத்தனர். என்ன சார், இது?

நிர்வாகம் அலறியது.

உடனடி மீட்டிங்!

 

 

லாரி ஸ்டிரைக், ஆகவே பல பொருள்கள் வரவில்லை.

வந்ததில் ஒரு ஷீட் உடைந்து விட்டது.

கூடவும் வாங்கக் கூடாது, அன்றன்று வந்து சேர்வது போல ஆர்டர் செய்ய வேண்டும்!

சப்ளை மானேஜர் அழுதார்.

வேண்டாம், ஜஸ்ட் இன் டைம்.

 

 

இனி அட்வான்ஸ்ட் ப்ளானிங் செய்யுங்கள்.

அப்பாடா, மள மளவென்று வண்டிகள் முடிந்தன.

அடுத்தாற் போல வந்தது – ஃப்ளெக்ஸிபிள் மானுபாக்சரிங் சிஸ்டம்! FLEXIBLE MANUFACTURING SYSTEM!

அதாவது எல்லா அசெம்பிளி பார்ட்டுகளும் நெகிழ்வாக இணைய வேண்டும்.

 

ஓடு, ஒரு கோர்ஸுக்கு.

ஓடினோம்.

என்ன செய்யலாம்?

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கஸ்டம் பில்ட் வண்டி நம்முடையது. அதில் இது ஒத்து வருமா?

 

முட்டி மோதி, வாடிக்கையாளர்களிடம் கேட்டது ஒண்ணு, தர்றது ஒண்ணு என்று வசவு வாங்கி, முழித்துக் கொண்டோம்.

அப்போது தான் எனக்கு வந்தது அபாயம்!

தேர்ந்தெடுத்த டாப் மானேஜர்கள் சுமார் நூறு பேரைக் கொண்ட ஒரு கூட்டம் மாதாமாதம் எங்கள் குழுமத்தில் நடக்கும்.

அதில் நான் புது டெக்னிக்கைப் பற்றிப் பேச வேண்டும்.

எனக்கு வந்தது – ரீ எஞ்சினியரிங்.

 

 

அதாவது இருக்கும் ஆதார வளத்தைக் கொண்டு போட்டியாளர்களை முந்திச் செல்வதோடு அவர்கள் நம்மை எளிதில் அணுகாதவாறு ஒரு தடையையும் ஏற்படுத்த வேண்டும்.

நூறு பேர்களும் புத்திசாலிகள். கேள்வி நேரத்தில் கொத்திக் கொத்தி குலை உயிரும் குற்றுயிருமாக ஆக்கி விடுவார்கள்.

தைரியமாக எனது பேப்பரை தயார் செய்தேன்.

கேள்விகளை குதர்க்கமாக நானே தயார் செய்து அதற்கு நகைச்சுவையுடன் கூடிய பதில்களைத் தயாரித்து முன்னதாகவே வைத்துக் கொண்டேன்.

 

வெற்றி, மாபெரும் வெற்றி.

இதற்கு நடுவில் ஐ ஆம் ஓகே, யூ ஆர் ஓகே வேறு.

I AM OK, YOU ARE OK!!!

 

பார்ப்பவர்கள் எல்லாம் ஐ ஆம் ஓகே, ஆர் யூ ஓகே என்று கேட்டுத் திரிந்தோம்.

 

அடுத்து வந்தது ஆடோ கேட்! கம்ப்யூட்டர் மானுபாக்சரிங்!

ஓடுங்கள், கம்ப்யூட்டர் கோர்ஸுக்கு. படியுங்கள் ஆட்டொ கேட்!

ஆக, இப்படியாக பல்லாண்டுகள் ஓடி விட்டன.

அடுத்தடுத்து ஒரு அலை!

 

கடைசியாக ஒரு முடிவுக்கு வர முடிந்தது.

புத்தியை உபயோகித்து, நிர்வாகத் தலைமையை அனுசரித்து, வாடிக்கையாளர்களின் தேவையை ப்ளான் செய்து அதைப் பூர்த்தி செய்வதே நமது இந்திய சூழ்நிலைக்கு உகந்தது.

ஆஹா, அருமையான ஞானோதயம் சார்!

 

 

ஆனால் அதற்குள் ரிடையர்மெண்ட் வந்து விட்டது.

இருந்தாலும் சொல்கிறேன். ஓடுகின்ற உலகத்தோடு ஓடுங்கள்.நீங்கள் நின்றால் தேக்கம். ஓடினால் சர்வைவல். அதிக ஸ்பீடுடன் ஓடினால் களைப்பீர்கள் அல்லது மற்றவரிடம் திட்டு வாங்குவீர்கள்!

 

 

ஓடுங்கள், சார், ஓடுங்கள்! உலகத்தோடு ஓடுங்கள்!!!

எனது ரிடையர்மெண்ட் காலத்தில் உங்களை வேடிக்கை பார்க்கிறேன்!

****

முற்றும்

MY VISIT TO VADALUR VALLALAR ASHRAM (Post No.4847)

Written by London Swaminathan 

 

 

Date: 24 MARCH 2018

 

 

Time uploaded in London – 15-00

 

Post No. 4847

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

Recently I read one interesting anecdote in the Tirukkovilur Tapovanam (year 1999)  magazine about Vallalar Ramalinga Swamigal, who established Sathya Gnana Sabhai in Vadalur.  Swami Gnanananda of Tapovanam was said to have lived for 150 years. He never boasted about his age or  his personal matters. Casually he remarked to his Bhaktas/ devotees the following incident:

 

“ When I  was with Ramalinga Swamikal, he asked his devotees to erect a Pandal (thatched shed) in front of the building. It was erected beautifully well with lot of decorations, more than what he expected. So when Vallalar came to that spot again, he asked who erected it. Someone mentioned the name of the gentleman.

Vallalar was surprised and asked did Mr…………… erect it?

The next minute the thatched shed was burnt to ashes.

The reason being the man who erected the shed was a non-vegetarian. Sri Ramalinga Swamikal, who is known as Vallalar was a strict vegetarian and he advocated Vegetarianism more than the Jains.

Who is Ramalinga Swamikal?

He was born in 1823 in Chidambaram and attained immortality in 1874. He went into a room and dis appeared as a flame (Jyoti). I have explained the phenomena called spontaneous combustion of Hindu saints in another article written some years ago in this blog. Many famous Tamil saints have become fire and merged with God.

 

Vallalar established his Ashram called Sathyagnana sabhai in Vadalur in Cuddalore district of Tamil Nadu. It is not far from Chidambaram. He was attributed with various miracles, which I have already dealt with in my articles. His book of hymns known as Thiru Arutpa is in very simple Tamil and beautiful rhythmic language. He has sung about all the Hindu gods. He was an epitome of his teachings.

 

He was a great believer in herbal medicines and herbal food. He taught his disciple that one could live a longer life with such herbs. Hundreds of different herbal preparations are sold in Vadalur.

In the temple or Ashram, every day prayer is held in front of the seven curtains. During Thai Pusam day (the full moon day in January) lakhs of people visit Vadalur to have the Jyoti darsan. Vallalar disappeared on a Thai Pusam day.

 

Free Food 24 Hours!

The Sikh Gurudwaras have Langar where one can have food at any time of the day. There is no bar on caste or creed. In the same way Vallalar Centre at Vadalur serve food to anyone all through the day. The ovens in the kitchen have been burning for about 150 years and they have never been put off. Whether one believes in his miracles or not, this can be seen with our own eyes.

I met an interesting Man

 

When I and my brother entered the Ashram, one person with Vibhuti  on his forehead came to us voluntarily and started talking about the greatness of Vallalar. We thought he was going to ask for money or donation. But he was very nice and  introduced himself as Nama Sudhama. Vallalar was not a Brahmin and this gentleman was also not a Brahmin. I was wondering about his name. He explained his name that was  in pure Sanskrit. Sudhama was his name and had added the prefix ‘Nama’ later  because he liked Nama Sivaya very much. He took us around the centre, the kitchen and the ever- burning oven. He gave us herbal coffee (sukku Malli Coffee) which is placed in a public place and anyone can drink it. He told us a fact that not all the people taking food there are after Vallalar’s teaching, but some came there just for the food.

 

My brother who was interested in herbal products asked the gentleman whether he can buy herbal products from any shop. Nama Sudhama explained beautifully well that there satya (truth) rules and so no one tells a lie. When we asked him whether he was working in the centre he said he used to cycle all his way to the centre from a nearby village to serve the people coming to the Ashram. We thanked him and asked  to  take us to the book shop. I bought a Thiru Arutpa book (see the details below) and said good bye to him.

When we were discussing Vallalar’s hymn where the word ‘Uttamar’ (good people) occurs, he asked us to name one Uttamar. We were dumbfounded and could not answer his question. We told him that Ramana Maharishi, Rama Krishna , Swami Vivekananda and Kanchi Paramacharya (1894-1994) belonged to that category. But we dare not name anyone now because they live in closed buildings unlike the great old Rishis.

 

We went around the centre and the nearby Samadhi of Vallalar’s devotee (Kalpattu swami). We tasted some sample of food. The atmosphere there was serene and lot of elderly people were waiting for food. We can see many boards explaining the merits of the herbal medicine and there are many shops selling them.

 

About the Seven Curtains (from Wikipedia)

Around 1872 he established the Sathya Gnana Sabai, hall of True Wisdom Forum and ensuring it was entirely secular . This place is not a temple; fruits, flowers are not offered, and no blessings were given. It was open to people of all castes except those who ate meat, who were only allowed to worship from the outside. He wrote in detail about the pooja to be performed in Gnāna sabai. Those who are below 12 years or those who are above 72 years alone were expected to enter Gnāna sabai and do poojas. The oil lamp lit by him is kept perpetually burning. He said that our soul is blinded by seven veils.[11]

There are seven cotton fabric screens, representing the seven factors that prevent a soul from realizing its true nature. The entire complex is bound by a chain with 21,600 links, said to represent 21,600 inhalations[12] by a normal human being. He said intelligence we possess is Maya intelligence which is not true and final intelligence. Path of final intelligence is “Jeeva Karunyam”. He advocated a casteless society. Vallalār was opposed to superstitions and rituals. He forbade killing animals for the sake of food. He advocated feeding the poor as the highest form of worship. He condemned inequality based on birth. Today there are spiritual groups spread out all over the world who practice the teachings of Swāmi Rāmalingam and follow the path of Arul Perum Jothi.

 

Why did I go to Vadallur?

I went to Vadalur Vallalar Ramalinga Swamigal centre in the first week of March, 2018.  I have been waiting to visit Vadalur for several decades. The reason being the very first prayer I learnt at the age of five in the primary school was a poem from Vallalar Arutprakasa Ramalinga Swamikal. The second reason is my father taught me along with several Sanskrit slokams, Vallalar’s Tamil poem on Lord Ganesh (munnavane, yaanai mukaththavane). The third reason is one Mr Mahadevan in Sambadhamurthy Street of Madurai, who was a drama actor used to come to our house now and then and used to sing ‘Arut Jothi Deivam enai andukonda Deivam’ in beautiful Raga. The same was repeated by Musicologist and Musician Dr S Ramanathan and his daughters when we lived in the same building in Goodshed Street of Madurai. Last but not the least was my SSLC examination text book had his poem ‘Orumaiyutan Ninathu……………

 

Recently, when I visited the Hindu prisoners in one of the prisons in England, one prisoner, to my surprise, asked for the Tiru Arutpa hymn book of Vallalar. So my copy in London was given to him as a gift. Now the prisoner is released. I wanted to get one more copy.

 

The poem I was taught at the age of five in Yadavar School, North Masi Street, Madurai was Kallaarkkum Katravarkkum Kalipparulum Kalippe……………… Whatever you learn at that tender age remains ever green in your mind; still I can repeat it. But the Vishnu Sahasranama and Rudram (Yajur Veda), Pursha Suktam (Rig Veda) etc have not entered into my mind; I could not have recite them without book.

 

Long Live Vallalar’s Name and Fame!!!

–Subham—

 

 

பின்னு செஞ்சடையாள், பேரழகி சிலை உடைய திருமுட்டம் (Post No.4846)

Written by London Swaminathan 

 

 

Date: 24 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-15 am

 

Post No. 4846

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

திருமுட்டம் என்றும், ஸ்ரீமுஷ்ணம் என்றும் அழைக்கப்படும் தலம் வைணவக் கோவிலும் சிவன் கோவிலும் இடம்பெற்ற தலம் ஆகும். இங்குள்ள வராஹ அவதாரக் கோலம் கொண்ட பூவராக- அம்புஜவல்லி தாயார் கோவில் மிகவும் பிரபமானது. இதே கோவிலில் குழந்தை அம்மன் சந்நிதி என்று ஒன்றும் இருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை ஆகும்.

 

மார்ச் மாத (2018) முதல் வாரத்தில் இக்கோவிலுக்குச் சென்றேன். சில முக்கிய விஷயங்களை மட்டும் காண்போம்:-

கண்டவர் வியக்கும் அற்புதமான அழகிகளின் சிலைகள் உடைய கோவில் இது. ஒரு பெண்ணின் ‘பின்னல்’ தத்ரூபமாகக் காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் வேறு எங்கும் இது போலச் சிலை ஒன்றைக் கண்டதில்லை.

இன்னும் ஒரு புதுமை– அரச மரம், நித்ய புஷ்கரணி என்னும் குளம், பூவராஹ சுவாமி ஆகிய மூன்றும் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுவதாகும்.

வராஹ அவதாரம், விஷ்ணுவின் பத்து முக்கிய அவதாரங்களில் ஒன்று. இங்கே இரண்டு கைகளையுமிடுப்பில் வைத்துக் காட்சி தருகிறார்.

 

திரு என்ற அடைமொழி இருந்தும் ஆழ்வார்களால் பாடப்பெறாத தலம் இது.

 

 

பெரிய சாது சந்யாசிகளுடன் தொடர்புடையது இத்தலம். காஞ்சி காமகோடி பீடத்தின் 25-ஆவது சங்கராசார்யார் இந்த ஊரில் அவதரித்தார்; அஹோபில மடத்தின் மூன்றாவது பட்டத்து அழகிய சிங்கர் இவ்வூரில் சமாதி அடைந்தார்

 

மத்வாசார்யார் தண்ட தீர்த்தத்தை இவ்வூரில் தோற்றுவித்தார். இங்கு நடக்கும் விழாவுக்கு கர்நாடகத்தில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

 

திருமுட்டத்திலும் விருத்தாசலம் சிவன் கோவிலிலும்  வாசல் அருகில் உள்ள சிறிய நாட்டிய சிலைகள் சிதம்பரம் 108 நடன கரணங்களை நினைவு படுத்துவதோடு இரண்டும் ஒரே சிற்பி கட்டியவை என்பதையும் காட்டி நிற்கிறது.

 

நாயக்கர், ஹோய்சாள (புலிகடிமால்) மன்னர்களின் பேராதரவு பெற்ற இக்கோயில் அவர்களுடைய கால கட்டிடக் கலையை காட்டுகின்றன.

 

எல்லா நாயக்கர் கோவில்களிலும் உள்ளதைப் போலவே ஆயிரம் கால் மண்டபம் 16 கால் மண்டபம் ஆகியனவும் உண்டு.

 

வேப்பமரத்தடியில் அமர்ந்திருக்கும் சப்த மாதர் சந்நிதியும், அரச மரமும் குழந்தைப் பேறு இல்லாதோருக்கு வரமளிக்கும் இடமாகக் காட்சி தருகிறது.

 

வானளாவிய கோபுரத்தின் ஏழு நிலை மாடங்களும் ஒன்பது கலசங்களும் வண்ணச் சிலைகளும் வருவோரை ‘வா வா’ என்று அழைப்பது போல உள்ளது.

 

புருஷசூக்த மண்டபம் எனப்படும் 16 கால் மண்டபத்தில் உள்ள குதிரை வீரர்களும் யாளியும் மெருகூட்டுகின்றன.

 

இங்கு செல்லுவோர் ஆற அமர இருந்து சிலைகளைச் சுற்றிச் சுற்றிப் பார்க்க வேண்டும். வாசலில் சதுரம் சதுரமான கட்டங்களில் உள்ள நடன மாதர் கோலங்களை கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க வேண்டும்.

 

இங்குள்ள மூலவரின் சிறப்பு– அது சாளக்கிராமத்தினால் ஆன ஸ்வயம்பு என்பதாகும்

ஸ்வயம்பூ என்றால் – மனிதனால் செதுக்கப்படாத- ‘தான் தோன்றி’ என்று பொருள்.

சாளக்கிராமம் என்பது கடல் வாழ் உயிரினங்களின் வடிவம் பதிந்த கல் படிமங்கள் (fossils) ஆகும். இவை பல கோடி ஆண்டுகள் பழமை உடைத்து என்பதும் இதனால் பூமியின் வரலாறு துலங்கும் என்பதும் விஞ்ஞானம் படித்தோருக்கு விளங்கும்

கடல் வாழ் உயிரினங்களான சங்கு நத்தை முதலியவற்றின் சின்னங்களைத் திருமாலின் சங்கு சக்கரத்துடன் பக்தர்கள் ஒப்பிடுவர். இயற்கையிலும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் இறைமையைக் காண்பது இந்து மதத்தின் ஒப்பற்ற ஈடு இணையற்ற மஹத்தான தத்துவம்.

 

கோரைக் கிழங்கால் செய்யப்பட்ட லட்டு இந்தக் கோவிலின் சிறப்புப் பிரசாதம்- ஒவ்வொரு கோவிலிலும் ஒரு விநோதமான, சிறப்பான பிரசாதம்-  இருப்பது இந்து மதக் கோவில்களின் சிறப்பு அம்சம்.

 

விருத்தாசலம் அருகில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில் விழாக் காலத்தில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்திழுக்கிறது. ஆண்டு தோறும் திருவிழாக் காலத்தில் சுவாமி எழுந்தருளி ஒரு மசூதியின் முன் நிற்கும்போது அவர்களும் மரியாதை செய்யும் சிறப்புடைத்து; இது ஆற்காட்டு நவாப் காலத்தில் துவங்கியது.

ஆண்டாள் சந்நிதி, உடையவர் சந்நிதி ஆகியன வைஷ்ணவர்கள் கொண்டாடும் சிறப்பு பெற்றவை.

இந்த ஊரில் ராமர், சிவன் கோவில்களும் உஅள.

 

திருமுட்டம் / ஸ்ரீமுஷ்ணம் என்றால் என்ன?

 

கேரளத்தில் ஒரு திருமுட்டம் கோவில் உளது; சபரிமலையில் திருமுட்டம் என்ற சொல் உளது. ஆனால் சம்ஸ்க்ருதத்தில் முஷ்ணம் இல்லை; ஆகவே முற்றம்= முட்டம்= என்பதே முஷ்ணம் ஆயிற்றோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

 

சபரி மலையில் புனித முற்றம் (open, sacred court yard) உள்ள பகுதியை திரு முட்டம் என்பர்.

 

முற்றம்:– ஒரு கட்டிடம் அல்லது வீட்டுக்குள் இருக்கும் திறந்த வெளிப்பகுதி முற்றம் எனப்படும்.

 

 

–Subham–

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! (Post No.4845)

Date: MARCH 24, 2018

 

 

Time uploaded in London- 6-16 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4845

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நகைச்சுவை நடைச்சித்திரம்

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 1

 

ச.நாகராஜன்

 

நிர்வாகம் என்ன எதிர் பார்க்கிறது என்பதை எல்லா மேனேஜர்களும் அறிவது அவசியம் என்பதன் அடிப்படையில் எங்கள் அனைவருக்கும் புரிய வந்தது  தாரக மந்திரமான ஒரே வார்த்தை என்பது தான்!

 

எஃபிஸியன்ஸி – EFFICIENCY

ஆம், அது தான் வேண்டும்!

 

உடனடியாக ஒரு நண்பரைப் பார்க்கப் போனேன்.

அவர் நான் போனவுடன் ஒரு புத்தகத்தை ஓரமாக ஒளித்து வைத்துக் கொண்டார்.

 

எட்டிப் பார்த்தேன். ஊஹூம், ஒன்றும் தெரியவில்லை.

என்ன புத்தகம் என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று மழுப்பி விட்டார். மண்டை குடைந்தது! என்ன புத்தகம்?!

 

எஃபிஸியன்ஸி பற்றிப் பேசி விட்டுக் கிளம்பினேன்.

எங்கும் இதே தான் பேச்சு என்றார்.

அடுத்த நாளும் அவர் ரூமுக்குச் சென்றேன் – தேவையில்லாவிட்டாலும் கூட!

அவர் ஒரு நிமிடம் என்று பாத்ரூமுக்குச் சென்ற போது புத்தகங்களைக் குடைந்தேன்.ஆஹா, கிடைத்தது அவர் படித்த புத்தகம்.

 

ஒன்று டேல் கார்னீகி எழுதிய ‘ஹௌ டு வின் ஃப்ரண்ட்ஸ் அண்ட் இன்ஃப்ளூயன்ஸ் பீபிள்’ இன்னொன்று நெப்போலியன் ஹில் எழுதியது – தி சக்ஸஸ்.

 

ஆஹா, வந்த காரியம் முடிந்தது.

குட்டி அரட்டையுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

டேல் கார்னீகி புத்தகத்தை முதலில் வாங்கினேன்.

அட்டை டு அட்டை படித்தேன். அற்புதம்.குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.

 

என்ன கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்று நண்பர்களே கேட்டு விட்டனர்.

 

எஃபிஸியன்ஸி.

ஆனால் இது ரொம்ப நாள் ஓடவில்லை.

இன்னும் அதிக எஃபிஸியன்ஸி தேவையாம்.

ஓடினேன் கடைக்கு. நெப்போலியன் ஹில்லின் புத்தகத்தை வாங்கினேன். அடடா,சக்ஸஸ் ஃபார்முலா, எப்படித் தருகிறார்!

ஆழ்மனதை உபயோகியுங்கள்.

 

சரி, உபயோகிக்கிறேன்.

 

எல்லா டெக்னிக்கையும் அத்துபடி செய்து கொண்டு அலுவலகத்தில் ஆழ்மன எக்ஸ்பர்ட் போல நடந்தேன்.

சற்று விசித்திரமாக என்னப் பார்த்தார்கள்!

எல்லாம் ஆழ் மனம் பார்த்துக் கொள்ளும்!

இல்லை என்றது நிர்வாகம்.

சோம்பி இருக்கிறீர்களே!

 

வாருங்கள், தெரிந்து கொள்ளுங்கள் எம்.பி.ஓ -ஐ என்றது!

M.B.O.?!

 

MANAGEMENT BY OBJECTIVE!

ஆஹா, குறிக்கோளின்றிக் கெட்டேனே என்று அப்பர் பிரான் சும்மாவா பாடினார்?

 

இலக்கு என்ன?

எழுதி எழுதி நிர்வாகத்தின் குறிக்கோளை நோக்கி நடை பயில ஆரம்பித்தோம்.

 

அடடா, அதற்கு வந்தது அல்பாயுசு!

ஒரு நிமிடத்தில் ஒரு மேனேஜர் எல்லாவற்றையும் முடிக்க வேண்டுமாம்.

 

எப்படி ஐயா சாத்தியம் அது?!

ஒரு மேனேஜர் இருக்கிறார், அவர் டேபிளில் பேப்பரே கிடையாது. க்ளீன்! அவர் மாதிரி ஆகு!

யார் ஐயா அவர்? வியப்புடன் கேட்டேன்.

ஒன் மினட் மேனேஜர்!

ONE MINUTE MANAGER!

ஓடினேன் கடைக்கு!

சார், ஒன் மினட் மேனேஜர் புக் கொடுங்கள்.

சார், ஒரு சீரிஸே இருக்கிறது.

எல்லாவற்றையும் கொடுங்கள்.

 

இரவு முழுவதும் ஒன் மினட் மேனேஜர் ஆக ஐந்து மணி நேரம் – 300 நிமிடங்கள் செலவழித்தேன்.

டேபிளை க்ளினாக வைத்ததன் பலன், “அவருக்கு வேலையே இல்லை போல இருக்கிறது.இன்னும் கொஞ்சம் லோடை ஏற்றுங்கள்” என்று நிர்வாகம் கூற நான் முழி பிதுங்கி ‘ஙே’ என்று ஆனேன்.

 

ஒன் மினட்டைக் கழட்டி விட்டேன்.

மானேஜர்களுக்கு ஆரோக்கியம் தான் முக்கியம். ஓடுங்கள் ஒரு கோர்ஸுக்கு என்று துரத்தவே ஆரோக்கிய கோர்ஸுக்கு ஓடினேன்.

 

ஒரு நாள் முழுவதும் கேள்விகளால் துளைத்தனர்.

கடைசியில் கோர்ஸ் முடிய இன்னும் முப்பது நிமிடமே இருக்கும் சமயம் அரிய ஆரோக்கிய ரகசியத்தை அருளினர்.

இரு கைகளையும் விரல்களால் நன்கு மூடித் திறக்க வேண்டும்.

இதனால் ரத்தம் சீராக உடலில் பாயும்.

சீராக ரத்தம் பாய்ந்தால் ஆரோக்கியம் மேம்படும்.மன நலம் உயரும்!

 

அடடா, ஆரோக்கிய ரகசியத்தைக் கேட்டு அனைவரும் அலுவலகம் திரும்பினோம்.

வந்தது பாருங்கள், ஒரு ஜப்பானிய அலை!

அதில் மூழ்கியவன் பல ஆண்டுகளுக்கு அம்பேல் ஆகிப் போனேன்.

 

அது என்ன ஜப்பானிய அலை என்கிறீர்களா?

உலகின் டாப் நிறுவனங்களான டொயோடோ, சுஸுகி ஆகியவை மற்ற மேலை நாடுகளை விட அதிகம் உற்பத்தித் திறன் கொண்டுள்ளது.

 

அதன் டெக்னிக்குகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

நிர்வாகத்தின் உத்தரவால் எல்லோரும் ஜப்பான் வாழ்க என்று கோஷம் போட்டோம்!

 

டசாடா இஷ்கு, குமுட்டி பஷ்கோ,கஸ்வாகி ..

என்ன, குழம்புகிறீர்களா?

 

பழைய ஜப்பானிய வார்த்தைகள் மனதில் நிழலாட ஒரு நிமிடம் குழப்பமாகி விட்டது.

 

வாருங்கள், ஜப்பானிய அலையில் மிதப்போம்.

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஒடுங்கள் – வெற்றி பெற என்பதல்லவா நமது தாரக மந்திரம்!

 

அடுத்த கட்டுரையுடன் முடியும்

***