கனி மொழி பற்றி வள்ளுவன், கம்பன் (Post No.4865)

WRITTEN by London Swaminathan 

 

Date: 30 MARCH 2018

 

Time uploaded in London –  6-33 am (British Summer Time)

 

Post No. 4865

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கனி இருப்ப பூக்கொய்யலாமோ? — கம்பன்

 

கம்பன் கனி மொழிகளை உதிர்க்கிறான் கம்ப ராமாயணத்தில்! வள்ளுவனைக் கரைத்துக் குடித்த கம்பனுக்குப் படலம் தோறும், திருக்குறள் வரிகளும், சொற்களும் தாமாக வந்து விழுகின்றன.

‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ — என்றான் வள்ளுவன்.

கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?

——-என்றான் கம்பன்

 

முனிவரும் கருணை விவைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி

இனிவரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று  இரங்க வேண்டா

துனிவரும் செறுநர் ஆன தேவரே துணைவராவர்

கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?

 

 

எங்கே, எப்போது, யார் நுவல்வது இஃது?

 

கும்பகர்ணனைக் கஷ்டப்பட்டு உசுப்பிவிட்டு ராமன் முன்னிலையில் போருக்கு நிறுத்தினார்கள். வேத நாயகனான ராமன், யாரையா இந்தப் புது முகம்? என்று விபீஷணனிடம் வினவுகிறான். அப்போது கும்பகர்ணனை அறிமுகம் செய்து வைக்கிறான். இவரையும் நமது கட்சியில் சேர்த்துக் கொண்டால் நமக்கு வெற் றி  நிச்சயம் என்று சுக்ரீவன் ஒரு யோஜனை சொல்கிறான். ராமனும், எத்தனை பேர் வந்தாலும் எனது கட்சியில் இடம் உண்டு; அழைத்து வா- என்று விபீஷணனை அனுப்புகிறான்.

அப்போது விபீஷணன், கட்சி மாறினால் வரும் சாதகங்களை உரைக்கிறான்:

“நீ ராமன் கட்சியில் சேர்ந்தால், அந்த நிலையில் முனிவர்களும் உன்னிடம் கருணை காட்டுவார்கள்; மூன்று உலகங்களிலும் உனக்குப் பகைவர்கள் இரார். உனக்கு சாவு என்பதே கிடையாது. தேவர்களும் நண்பர்கள் ஆவர். இனிக்கும் பழங்கள் தோன்றும் காலத்தில் வெறும் மலர்களைப் பறிப்பதற்கு நினைக்கலாமா? (கூடாது).”

இந்திய மக்கள்– குறிப்பாகத் தமிழர்கள், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்தியதால், இயற்கையாகவே மரம், செடி, கொடி, காய், கனி உவமைகள் வரும்.

கனி மொழி பற்றி வள்ளுவன்

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந்  தற்று- குறள் 100

 

பொருள்

இனிமையான சொற்கள் இருக்கையில் ஒருவன் சுடு சொற்களைப் பெய்வது, இனிப்பான பழங்கள் இருக்கும் போது கய்களைத் தின்றது போலாகும்.

 

சேலத்து மாம்பழமும் , மல்கோவா, பாதிரி, நீலம் அல்பான்ஸோ பழங்களும் இருக்கும்போது நாட்டுப்புறத்தில் கீழே விழுந்து கிடக்கும் புளிச்ச மாங்காயைத் தின்னும் மாங்காய் மடையனாக இராதே என்று கனி மொழி பற்றி வள்ளுவன் சொல்கிறான்.


(
பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன்பெர்னார்ட் ஷாவின் தம்பிகாந்திஜியின் தாத்தா சொன்னது)

–Subham —

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 (Post.4864)

Date: MARCH 30, 2018

 

 

Time uploaded in London- 5-49 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4864

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு :

நீங்கள் படிப்பது அயர்லாந்து சம்ஸ்கிருத ஆசிரியர் ரட்கெர் கோர்டன்ஹார்ஸ்ட் நிகழ்த்திய உரை!

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3

 

ச.நாகராஜன்

 

ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம். உங்கள் குழந்தை அதை எப்படி கற்க வேண்டி இருக்கிறது என்று பாருங்கள்!

ROUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? அதே சமயம் DOUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? WOMEN என்ற வார்த்தையில் உள்ள ‘o’  ஏன் ‘e’ போல ஒலிக்க வேண்டும்? SPECIAL என்ற வார்த்தையில் வரும் ‘ci’ ஏன் CINEMA என்ற வார்த்தையில் வரும் ‘ci’- ஐ விட மாறுபட்டு ஒலிக்க வேண்டும்?

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘அது அப்படித்தான்’! அதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்! அவர்களுக்கு தர்க்கரீதியாகக் காரணம் சொல்லத் தெரியவில்லை!

 

குழந்தைகளுக்கு அது ஒரு ‘hit and miss’ விஷயம் போல விசித்திரமாக இருக்கிறது! இது குழந்தைக்கு என்ன ஒரு நம்பிக்கையைத் தரும்?!

இப்போது விதிகள் உள்ள மொழியைப் பாருங்கள்.

 

எதையுமே ‘அது அப்படித்தான்’ என்று சொல்ல இடமில்லாமல் விதி முறை மாறாமல் இருக்கிறது.

அருமையான நேர்த்தியான தத்துவக் கருத்துக்கள் எளிய ‘அகர வரிசை’ சரியாக அமைக்கப்பட்டிருப்பதால் நன்கு உருவாகி கற்க முடிவதைப் பாருங்கள்!

சம்ஸ்கிருதத்துடனான தொடர்பினால் மற்றவர்கள் அப்படி நல்ல குணாதிசயங்களுடன் வளர்வதை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

பல வருடங்களாக சம்ஸ்கிருதத்தை ‘குறைந்த பட்ச புரிதலுடன்’ ‘அதிக பட்ச உற்சாகத்துடன்’ நாங்கள் கற்பித்து வந்துள்ளோம்.John Scttus School – இல் உள்ள குழந்தைகளுக்கும், தத்துவப் பள்ளியில் – School of Philosophy – இல் உள்ள பெரியவர்களுக்கும் நாங்கள் சம்ஸ்கிருதம் கற்பித்து வந்துள்ளோம்.

ஒருவேளை நாங்கள் ஏராளமானவர்களை சம்ஸ்கிருதம் படிக்க ஊக்குவிக்கவில்லையோ என்னவோ!

ஆகவே சம்ஸ்கிருதம் எங்கு தோன்றியதோ அங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

சம்ஸ்கிருத ஆசிரியர்கள் சம்ஸ்கிருதத்திலேயே பேசுபவர்களாக இருக்கும் இடத்தில் வாழ வேண்டும்.

 

பெங்களூர் அருகில் உள்ள ‘சம்ஸ்கிருத பாரதி’ -இல் நான் மூன்று கோடைக் காலங்களைக் கழித்தேன்.

அது என்னை இன்னும் தீவிரமாக சம்ஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தோற்றுவித்தது.

ஆகவே பாரம்பரியமான ஒரு குருகுலத்திற்கு நான் சென்றேன்.

அதாவது அங்கேயே தங்கி இருக்க வேண்டும்.

அரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

ஏராளமான பவர் கட்டுகளை – மின் தடைகளை அனுபவிக்க வேண்டும்.

நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும்.

 

ஆனால் டிசம்பர் 2009இல் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். சீனியர் ஸ்கூலில் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் வேலையை விட்டு விட்டு சம்ஸ்கிருதத்தை கற்பிப்பதிலேயே என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்னும் பல பேர்கள் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் பதவியை வகிக்க தகுதியானவ்ர்களாக இருப்பார்கள். ஆனால் சம்ஸ்கிருதத்தை அயர்லாந்தில் போதிக்க வேறு யாரால் முடியும்?

ஆகவே இதை ஒரு பதவி உயர்வாகவே – ப்ரமோஷனாகவே – நான்  கருதுகிறேன்.

வயது ஆக ஆக என் உடல் தளர்ந்தாலும் கூட சம்ஸ்கிருதத்தினால் என் மனம் முன்னேறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

சம்ஸ்கிருதம் என்பது ஒரு முழு நேர ஆசிரியருடன் ஒப்பிடப்படக் கூடியது.

24/7 என்று முழு நேரமாக அது இருக்கிறது. மற்ற மொழிகள் எல்லாம் பகுதி நேர – Part time –  மொழியாகவே இருக்கின்றன!

சம்ஸ்கிருதம் கற்பதன் விளைவு என்னவெனில் அது உண்மையான நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்துகிறது.

இரண்டாவதாக எனது வார்த்தைகளை சீர் தூக்கிப் பார்த்து துல்லியமாக சரியாகப் பேச வேண்டும் என்று அது எனக்கு உணர்த்துகிறது.

குழப்பமின்றி நான் சொல்ல வருவதைச் சொல்ல அது எனக்குக் கற்பிக்கிறது.

ஆகவே எதையும் என்னால் சுருக்கமாகப் பேச முடிகிறது.

எனது கவன சக்தி சந்தேகமின்ரி அதிகரித்துள்ளது!

கேட்பதைத் தக்க வைக்கும் சக்தியும் அதிகரித்துள்ளது!

 

எப்படி சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது?

இந்தியாவில் பல இடங்களில் முறையாக அது கற்பிக்கப்படவில்ல என்பது எனக்கு ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம்!

9 முதல் 11 வயது முடிய அது மாணவர்களுக்கு அங்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் மோசமாகக் கற்பிக்கப்படுவதால் அத்துடன் அதை விட்டு விடுகிறார்கள்.

சில விடாக்கண்டர்கள் மட்டும் அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல ஆசைப்படுகிறார்கள்.

இது ஏன்?

 

ஏனெனில் மேலை நாடுகளைக் காப்பி அடிக்க வேண்டும் என்ற ஒரு வெறி அங்கு உள்ளது.

காலனி ஆதிக்கத்தால் அவர்களின் பாரம்பரியம் திட்டமிட்டு வேருடன் அழிக்கப்பட்டுள்ளது.

கிழக்கத்திய ஞானத்தையும் இலக்கணத்தையும் அறிய பாரம்பரிய மிக்க ஒரு குருகுலத்தில் நான் சேர்ந்தேன்.

சம்ஸ்கிருதம் பேசுவதற்கோவெனில் நவீன அணுகு முறை அங்கு இல்லை என்பதை உணர்ந்தேன்.

அப்போது தான் புதுவையில் உள்ள அரவிந்த ஆஸ்ரமத்தில் இண்டர்நேஷனல் ஸ்கூலில் ஒரு ஆசிரியரைக் கண்டேன்.

அவர் பெயர் நரேந்திரா.

அவர் இலக்கணத்தைக் கற்பிக்க ஒரு புதிய எளிய வழி முறையைக் கண்டுள்ளார்.

அது இலக்கணம் படிக்கிறோம் என்ற உணர்வையே உங்களிடம் ஏற்படுத்தாது!

ஆனால் அதே சமயம் இலக்கணத்தை பயிற்சியாளர்களுக்குக் குறைத்துக் கற்பித்து விடாது. ஆகவே உங்களுக்கு இலக்கணத்தில் பகுதி அறிவு தான் ஏற்படும் என்ற நிலையும் ஏற்படாது.

சில சம்ஸ்கிருத பேச்சு வழக்கு வகுப்புகளிலும் நான் சேர்ந்தேன்.

இவை அனைத்தும் சம்ஸ்கிருதத்துடனான பரிச்சயத்தை எனக்கு அதிகப்படுத்தியது!

– தொடரும்

(அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்)

 

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 / A

 

ச.நாகராஜன்

 

Rutger Kortenhorst ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகள் ஒரு சிறிதை மட்டும் தனது உரையில் கோடி காட்டி விட்டுச் சென்று விட்டார்.

இது தொடர்பாக எனது தொகுப்பில் உள்ள ஒரு சிறு கவிதையை இங்கு தருகிறேன்.

ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டும் சுவையான நையாண்டிக் கவிதை இது:-

WHY ENGLISH IS SO HARD

 

We’ll begin with a box, and the plural boxes,

But the plural of ox becomes oxen, not oxes

One fowl is goose, but two are called geese,

Yet the plural of moose should never be meese.

You may find a lone mouse or a nest full of mice

Yet the plural of house is houses, not hice.

 

If the plural of man is always called men,

Why shouldn’t the plural of pan be called pen?

If I speak of my foot and show you my feet,

And I give you a boot, would a pair be called beet?

If one is a tooth and a whole set are teeth,

Why shouldn’t the plural of booth be called beeth?

 

Then one may be that, and three would be those,

Yet hat in the plural would never be hose,

And the plural of cat is cats, not cose,

We speak of a brother and also of brethren

But though we say mother, we never say methern,

Then the masculine pronoun are he, his and him,

But imagine the feminine she, shis and shim!

 

– ANONYMOUS

***

 

 

அன்பிற்கும் அவதி உண்டோ? – ராவணன் (Post No.4863)

WRITTEN by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  20-04 (British Summer Time)

 

Post No. 4863

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்றான் தெய்வப் புலவன் வள்ளுவன். தமிழ் வேதமான திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகரத்தில் அருமையான பத்து குறட் பாக்களைக் காண்கிறோம். கம்ப ராமாயணம் முழுதும் நூற்றுக்கணக்கான பாடல்களில் குறளின் எதிரொலியைக் கேட்க முடிகிறது. கம்பன், தெய்வப் புலவனின் திருக்குறளை மனப்பாடமாக அறிந்திருக்க வேண்டும் ஒரு நாளைக்கு 700 கவிகள் பாடிய கம்பனுக்கு முடியாததும் உண்டோ!

 

கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கும்பகர்ணன் வதைப் படலத்தில் ஒரே பாடலில் இரண்டு செய்திகளைத் தருகிறான் கம்பன்

 

1.அன்புக்கு எல்லை இல்லை

2.விநாஸ காலே விபரீத புத்தி (விதி கெட்டால் மதி கெட்டுப் போகும்)

 

ராவணன் முதல் யுத்தத்தில் தோற்றவுடன் மால்யவான், மகோதரன் ஆகிய அமைச்சர்களையும் உறவினர்களையும் கலந்தாலோசிக்கிறான். மாமனான மால்யவான், சீதையை விட்டுவிடு என்கிறான். மகோதரன் என்பவனோ , வா, சண்டக்குப் போவோம், வெற்றி நமதே என்கிறான். அப்போது ராவணன் சொல்வான்—

 

பெறுதியே எவையும் செல்வம் பேர் அறிவாள சீரிற்று

அறிதியே என்பால் வைத்த     அன்பினுக்கு அவதி உண்டோ

உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான்

இறுதியே இயைவது ஆனால் இடைஒன்றால் தடைஉண்டாமோ?

 

பொருள்

மகோதரன் சொன்னதைக் கேட்ட ராவணன் அவனை நோக்கி, “சிறந்த அறிவுடையனே! நீ செல்வம் யாவையும் பெறுதற்கு உரியவன்; சிறந்த செயல்களை நீ அறிந்துள்ளாய். நீ என்னிடம் கொண்ட அன்புக்கு அளவு உண்டா?  நீ எனக்கு உறுதி பயக்கும் செயலையே உரைத்தாய்” – என்று அவனைப் பாராட்டி, தனது சோர்வைக் கைவிட்டான். ஒருவனுக்கு அழியும் காலம் வந்துவிட்டால், இடையிலே எது வந்தாலும் அந்த அழிவுக்குத் தடை உண்டாகுமோ? உண்டாகாது.

 

அவதி= எல்லை, அளவு, துயரம்

 

ஆக, கம்பனும் வள்ளுவனும் அன்பினுக்கு எல்லையோ தாழ்ப்பாளோ இல்லை என்கின்றனர்.

மேலும் சில ஒப்பீடுகள்

யாக்கையதியல்பினுமன்பினும் கொண்டுதன்

காட்சிக்கண்ணீர் கரந்தகத் தடக்கி (பெருங்கதி 1-36; 147-8)

 

உன்னுபே ரன்புமிக்கொழுகியொத் தொண்கணீர்

பன்னுதாரைகள் தரத் தொழுதெழும் பரதனை

-கம்ப. எதிர்கோள்.26)

அன்பிற்கும் உண்டோ | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/அன்பிற்கும்-உண்ட…

2 Dec 2016 – அன்பிற்கும் அன்ன தானத்துக்கும் சக்தி உண்டு!அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கண்நீர் பூசல் தரும் (குறள் 71). பொருள்:- அன்பை, பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் கதவோ தாழ்ப்பாளோ உண்டா? கண்களிலிருந்து பெருகும் கண்ணீரே அந்த அன்பினைப் …

 

ANECDOTES ABOUT CHRISTIAN PREACHERS (Post No.4862)

COMPILED by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  14-48 (British Summer Time)

 

Post No. 4862

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Heaven and Hell Deal

A new clergyman in town sought the services of the best local physician, a man irregular in his church attendance. The medical treatment was prolonged, and the young pastor, worried over the accumulating expense, spoke to the doctor about the matter of his bill.

 

I will tell you what I will do, Pastor, said the doctor.

I hear you ae a pretty good preacher and you seem to think that I am a fair doctor. W will make a bargain. I will do all I can to keep you out of Heaven and you do all you can to keep me out of Hell, and it wont cost either of us a cent.

Sunday Amusement

Henry Ward Beecher asked Park Benjamin, the poet and humourist, why he never came to preach. Benjamin replied,

Why, Beecher, the fact is, I have conscientious scruples against going to places of amusement on Sunday.

 

People’s Voice went against Jesus!

John Wesley, in a considerable party, had been maintaining with great earnestness the doctrine of vox Populi vox Dei against his sister. At last the preacher, to put an end to the controversy, said, I tell you sister, the voce of the people is the voice of God.

Yes, replied his sister mildly, “it cried: Crucify him! crucify him”.

 

Zeal and Vigour!!!

A young minister who was temporarily filling a city pulpit made the following request in his prayers:

May the brother who ministers to this flock be filled full of fresh veal and new zigor”

Christian Life

Can I lead a good Christian life in New York City on $15 a week? a young man once asked Dr S Parkes Cadman.

My boy, was the reply, that’s all you can do

 

Illiterate preacher!

I am thankful that the Lord has opened my mouth to preach without any ‘larning’, an illiterate preacher.

A similar event took place in Balaam’s time, replied a gentleman present.

 

Religious Dispute

John Wilkes was once asked  a Roman Catholic gentleman in a warm dispute on religion:

Where was your religion before Luther?

Did you wash your face this morning? inquired the facetious alderman.

I did ,sir

Then pray where was your face before it was washed?

 

Idiot’s Vocation

Sydney Smith, the clergyman, had a combat of wit with a friend. His defeated antagonist intending to cast a slur on Smith’s vocation, fired back,

If I had a son who was an idiot I would make him a parson.

Your father was of a different opinion, was Sydney Smith’s answering thrust.

 

 

–Subham–

வீடு பற்றிய 30 பழமொழிகள் (Post No.4861)

Picture posted by Lalgudi Veda

COMPILED by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  6-58 am (British Summer Time)

 

Post No. 4861

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஏப்ரல் 2018 காலண்டர்

(2018 பங்குனி-சித்திரை மாத நற்சிந்தனை காலண்டர்;

ஹேவிளம்பி- விளம்பி காலண்டர்)

 

முக்கிய விழாக்கள் ஏப்ரல் 14-தமிழ்ப் புத்தாண்டு; 18-அக்ஷய த்ருத்யை; 20- சங்கர ஜயந்தி; 29-சித்ரா பௌர்ணமி; புத்த பௌர்ணமி; ஏப்ரல் 1- ஈஸ்டர், 2- ஈஸ்டர் திங்கள் விடுமுறை

 

 

பௌர்ணமி ஏப்ரல் 29

அமாவாசை ஏப்ரல் 15

ஏகாதஸி விரதம்—ஏப்ரல் 12, 26

சுப முகூர்த்த தினங்கள்:- 5, 20, 22, 25, 27

 

ஏப்ரல் 1 ஞாயிற்றுக் கிழமை

வீடு அசையாமல் தின்னும், யானை அசைந்து தின்னும்

ஏப்ரல் 2 திங்கட்கிழமை

வீடு கட்டுகிறது அரிது, வீடு அழிக்கிறது எளிது

ஏப்ரல் 3 செவ்வாய்க்கிழமை

 

வீடு கட்டும் முன்னம், கிணறு வெட்ட வேண்டும்

ஏப்ரல் 4 புதன்கிழமை

வீடு நிறைந்த விளக்குமாறு

ஏப்ரல் 5 வியாழக்கிழமை

வீடு பற்றிக் கொண்டு  எரியும்போது, சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம்.

 

ஏப்ரல் 6 வெள்ளிக்கிழமை

வீடு பற்றி எரியும்போதா கிணறு வெட்டுவது?

ஏப்ரல் 7 சனிக்கிழமை

வீடு போ போ என்கிறது காடு வா வா என்கிறது

 

ஏப்ரல் 8 ஞாயிற்றுக் கிழமை

வீடு வெறும் வீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்

ஏப்ரல் 9 திங்கட்கிழமை

வீட்டிலிருக்கிற பூனையை அடித்தால், மேட்டிலிருக்கிற எலியைப் பிடிக்கும்

ஏப்ரல் 10 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்

 

ஏப்ரல் 11 புதன்கிழமை

வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்

 

ஏப்ரல் 12 வியாழக்கிழமை

வீட்டைக் காத்த நாயும் காட்டைக் காத்த நரியும் வீண்போகா

ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை

வீட்டுக் கருமம் நாட்டுக்குரையேல்

ஏப்ரல் 14 சனிக்கிழமை

வீட்டுக் காரியம் பார்க்காதவன் நாட்டுக் காரியம்  பார்ப்பானா?

 

ஏப்ரல் 15 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடக்குவார்கள்

வீட்டில் அடங்கதவன் ஊரில் அடங்குவான்

ஏப்ரல் 16 திங்கட்கிழமை

வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.

வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.

வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.

வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.

ஏப்ரல் 17 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி

ஏப்ரல் 18 புதன்கிழமை

வீட்டுக்கு ஒரு மெத்தை, கேட்டுக்கொள்ளடி மாரியாத்தை

ஏப்ரல் 19 வியாழக்கிழமை

வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவு கோல்

 

ஏப்ரல் 20 வெள்ளிக்கிழமை

வீட்டுக்கு சோறில்லை சிவனறிவான், நாட்டுக்குச் செல்லப் பிள்ளை நானல்லவா?

ஏப்ரல் 21 சனிக்கிழமை

வீட்டுக்குப் புளி, காட்டுக்குப் புலி

 

ஏப்ரல் 22 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுக்கு வாய்த்தது எருமை, மோட்டுக்கு வாய்த்தது போர்

 

ஏப்ரல் 23 திங்கட்கிழமை

வீட்டைக் கட்டிக் குரங்கை குடிவைத்தது போல

 

ஏப்ரல் 24 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்

 

ஏப்ரல் 25 புதன்கிழமை

வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பாகும்.

வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் சேர்ந்து உலாவுகின்றன

 

ஏப்ரல் 26 வியாழக்கிழமை

வீட்டுக்குள் கஞ்சித் தண்ணீரைக் குடித்துவிட்டு, மீசையில் வெள்ளையைத் தடவிக்கொண்டு புறப்படுகிறது

ஏப்ரல் 27 வெள்ளிக்கிழமை

வீட்டுப் பெண்சாதி வேம்பு, நாட்டுப்     பெண்சாதி                 கரும்பு

 

ஏப்ரல் 28  சனிக்கிழமை

வீட்டுக்கு வீடு  வாசற்படி.

வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.

வீட்டுக்கு வீடு மண் வீடுதான்.

 

ஏப்ரல் 29 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை

 

ஏப்ரல் 30 திங்கட்கிழமை

வீட்டுக்குள்ளே வேட்டை நாயை உசுப்புவானேன்

 

BONUS PROVERBS ON HOUSE/HOME

வீட்டிளக்காரம் வண்ணான் அறிவான்

வீட்டைக் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறதா?

வீட்டில் அழகு வேம்படியாகும்

 

–SUBHAM–

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -2 (Post No.4860)

Date: MARCH 29, 2018

 

 

Time uploaded in London- 5-56 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4860

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -2

 

ச.நாகராஜன்

 

இந்தியா காத்து வரும் மொழி தான் சம்ஸ்கிருதம்.என்றாலும் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதையும் அது கவர்ந்து வந்திருக்கிறது!

அது தரும் ஞானம் மேற்கு நாடுகளைக் கவர்ந்துள்ளது என்பதை யோகா, ஆயுர்வேத மருந்துகள், தியான உத்திகள், நடைமுறை தத்துவங்களாகத் திகழும் ஹிந்து மதம், புத்த மதம் ஆகியவற்றின் மூலமாக உணரலாம்.

ஆங்காங்குள்ள இடங்களில் இருக்கும் பாரம்பரியங்களையும், மதங்களையும் அது எதிர்ப்பதில்லை; அவற்றுடன் முரண்படுவதில்லை! மாறாக அவற்றை ஆதரிக்கிறது. விரிவாக்குகிறது.

மேலும் அதிகப் பொலிவுடன் அவற்றைத் திகழ வைக்கிறது!

சம்ஸ்கிருதத்தின் துல்லியம் அகர வரிசையில் ஒலிகள் எப்படி அமைக்கப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கிறது என்ற இணையற்ற விவரத்திலிருந்தே உருப்பெறுகிறது.

வாய், மூக்கு,தொண்டை முதலிய இடங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒலி எழும்புவதை அது விவரிக்கிறது. அவை மாறுவதே இல்லை!

ஆகவே தான் சம்ஸ்கிருதத்தின் எழுத்துக்கள் ‘அக்ஷரங்கள்’ – அழிக்கப்பட முடியாதவை – என்று வழங்கப்படுகிறது.

ஆக வாயிலுள்ள ஐந்து இடங்கள் எல்லா அக்ஷரங்களையும் எந்த இடத்திலிருந்து உருவாக்குகிறது என்பதானது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சில மன மற்றும் உடல் முயற்சிகள் மூலம் இவை நன்கு முறைப்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

A,b,c,d,e,f,g  என்ற ஆங்கில அகர வரிசையில் இதை உச்சரித்த பின் என்ன அமைப்பு (structure) இதில் இருக்கிறது?

ஏதேனும் தெரிகிறதா பாருங்கள்?! ஒரு அமைப்பும்   இல்லை.

A -இல் ஆரம்பித்து Z  வரை போகிறது. அவ்வளவு தான்!

மாறாக சம்ஸ்கிருதத்தில் உள்ள அழகிய அமைப்பு (structure) ஆங்கிலத்தில் இல்லை.

சரி,இப்போது எழும் கேள்வி, என் குழந்தை ஏற்கனவே இருக்கும் பாடச் சுமை போதாது என்று இன்னுமொரு மொழியை ஏன் கற்க வேண்டும் என்பது தான்!

இது அவர்களுக்கு எந்த விதத்தில் பயன்படும்?

பதில் இது தான்:

சம்ஸ்கிருதத்தின் குணாதிசயங்களே உங்கள் குழந்தையின் குணாதிசயங்களாக மாறும். அதாவது உங்கள் குழந்தையின் மனமும் இதயமும் அழகியதாக ஆகி விடும்!

துல்லியமானதாக (precise) ஆகி விடும்!

நம்பகமானதாக (reliable) ஆகி விடும்! எதையும் கூர்ந்து கவனிக்கும் சக்தியை அதனுடைய துல்லியத்தினால் சம்ஸ்கிருதம் அதைக் கற்கும் உங்கள் குழந்தைக்குத் தானாகவே கற்பித்து விடும்!

துல்லியம் இருக்குமானால் உயரச் செல்லுதல் என்பது ஏற்படும் என்பது அனுபவம்!

 

அது உங்களுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. ஆரம்ப பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கூட அதன் இனிய அனுபவத்தை உணர முடியும். இசை போல அது உங்களை உயர்த்தும்.

அது வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும், பகுதிகளிலும் வாழ்நாள் முழுவதும் உதவும்.

இது மற்ற எல்லா குழந்தைகளையும் ஒப்பிடும் போது உங்கள் குழந்தைக்கு மிகுந்த பயனை நல்கும்.

சம்ஸ்கிருதத்தைக் கற்பதன் மூலமாக இதர மொழிகளைக் கற்பது சுலபமாக ஆகிறது.

சம்ஸ்கிருதத்தில் உள்ள சில இலக்கணங்களை ஐரிஷ் அல்லது கிரேக்கம்,லத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரதிபலிக்கிறது.

இந்த மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருத இலக்கணத்தின் சில பகுதிகளைக் கொண்டுள்ளது.

சம்ஸ்கிருதம் கற்பதானது முறையான ஒரு மொழியைக் கற்கிறோம் என்பதாகிறது. அதன் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் அது உங்கள் குழந்தைகளை முன்னேற்றுகிறது – வாழ்நாள் முழுவதும்!

அதை அவர்களே உங்களுக்குச் சொல்வார்கள்.

அவர்கள் நன்கு பேச ஆரம்பிப்பார்கள். யார் நன்கு பேச முடியுமோ அவர்களே உலகை வழி நடத்திச் செல்கின்றனர்.

பாரக் ஒபாமா நன்கு பேசுவதால் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

மஹாத்மா காந்தி தனது சீரான சொற்களால் பெருந்திரளான கூட்டத்தைக் கவர்ந்தார்.

தெரஸா எளிய சொற்களால் அனைவரையும் உயர்த்துகிறார்.

பெரும் ஆசான்களின் மொழியானது நமக்குப் பழமையான காலத்திலிருந்து கிடைத்துள்ள ஒன்று. ஆனால் அதுவே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

ப்ளேட்டோவின் வார்த்தைகளின் மூலம் அவரது அருமையான மனத்தின் மூலம் புக முடிகிறது.

உங்கள் மகனோ மகளோ துல்லியமான மொழி மூலம் தங்களை வெளிப்படுத்த முடியுமானால் அவர்களே எதிர்காலத் தலைமுறையின் தலைவர்களாக ஆகி விடுவார்கள்.

வேதம், கீதை ஆகியவற்றின் மூலமாக சம்ஸ்கிருதம் அனைத்தையும் உள்ளடக்கிய கருத்துக்களைக் கொண்டுள்ளது.

வில்லியம் பட்லர் ஈட்ஸ் (William Butler yeats) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உபநிடதங்கள் உலகம் முழுமைக்கும் பொதுவான மத உணர்வுகளை கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகம் முழுவதுமுள்ள மக்களுக்குத் தந்து வருகிறது!

மொழி பெயர்ப்பின் மூலம் இவற்றைப் படிப்பது மூலத்தைப் படிப்பதற்கு ஈடாகாது.

ஆகவே அவற்றை மூலத்தில் உள்ள மொழியிலேயே படிக்க வேண்டும்.

மதச் சச்சரவுகள் பெருகி வரும் இக்காலத்தில் உலக முழுமைக்கும் பொதுவான மத நோக்கத்தைத் தரும் ஞானம் நல்கும் மதத்தை நாம் பெற வேண்டும்.

பயங்கரவாதம் தவறாக மதத்தைப் புரிந்து கொள்ளும் அரைகுறை மதக் கருத்துக்களால் ஏற்படுகிறது.

உலகம் முழுவதும் போற்றும் ஆன்மீக ஞானியான ஸ்வாமி விவேகானந்தர். சிகாகோவில் 1893இல்  சர்வ மத மகாநாட்டில நிகழ்த்திய உரையில் கூறியது இது:-

You can put a mass of knowledge into the world, but that will not do it much good. There must come culture into the blood. We all know in modern times of nations which have masses of knowledge, but what of them? They are like tigers, they are like savages, because culture is not there.

Knowledge is only skin-deep, as civilisation is, and a little scratch brings out the old savage. Such things happen; this is the danger. Teach the masses in the vernaculars, give them ideas; they will get information, but something more is necessary; give them culture.

 

சம்ஸ்கிருதம் உங்கள் குழந்தைக்கு உலகம் முழுமைக்குமான, சீரான லயத்துடன் கூடிய உண்மைகளை வெளிப்படுத்த உதவுகிறது!

 

***

தொடரும்

 

 

 

 

 

 

 

 

CHANAKYA AND TAMIL POET VALLUVAR ON EDUCATION (Post No.4859)

WRITTEN by London Swaminathan 

 

Date: 28 MARCH 2018

 

Time uploaded in London –  16-47

 

Post No. 4859

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

(பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன்பெர்னார்ட் ஷாவின் தம்பிகாந்திஜியின் தாத்தா சொன்னது)

 

It gives great pleasure to see the same thoughts in two great men Chanakya (3rd century BCE) and Tiruvalluvar (Fourth or Fifth Century CE  dated linguistically, first century BCE dated politically).

 

On Education

Handsome and young , born in high families, if uneducated, would look no good like the Kimsuka trees with no fragrance.

Chankaya Niti 3-5

 

Tamil Poet Tiruvalluvar says,

Those who are unable to elucidate their learning are like a cluster of blossoms without fragrance- Kural 650

 

Letters and Numbers are the two eyes of man – Kural 392

xxxx

 

Learned Men = Citizens of the World!

A learned man wins admiration in the world, he gets honour, everything is obtained through knowledge, knowledge is revered everywhere- 8-20

 

What excessive weight is there for those possessed of strength,?

what is distant for the energetic,

what is a foreign country for the learned and

who is alien for the one with sweet tongue?

3- 13

 

Tamil Poet Tiruvalluvar says,

The learned find their home and town everywhere. Why not learn and learn till death –Kural 397

 

xxxx

Ugly ones and Educated

The beauty of cuckoos is in their sweet cooing, that of women in their faithfulness and loyalty to their husbands, that of ugly ones in their knowledge and that of ascetics in forgiveness.

3-6

Tiruvalluvar says,

A wife who may not worship God but wakes up with worshipful devotion to her husband has the power to make rain fall at her bidding- Kural 55

 

xxxx

Knowledge is Kamadhenu

Knowledge has in it the quality of the desire-yielding cow. It yields fruit even when there is no season for it. In foreign sojourn it acts like other. Knowledge is accepted as a secret treasure.4-5

Learning is the lasting joyful wealth; all other material wealth are lost in time – Kural 400

The heritage of culture acquired in one birth lasts to the seventh- Kural 399

 

xxx

 

Lower Birth and Higher Birth

What one has to do with a high family where there is no education. One born in a low family, if learned, is adored even by gods 8-19

 

Tiruvalluvar says,

Though high-born, an unlettered man is deemed lower than a leaned man of lower birth  – Kural 409

(I have already compared this to Sangam Tamil verse Purananuru 183 and Manu Smrti 10-65, 2-240, 2-234).

 

–subham-

 

 

செம்புலப்பெயல் நீரார் செப்பியதை கம்பனும், வள்ளுவனும் செப்பினர்! (Post No.4858)

\’WRITTEN by London Swaminathan 

 

Date: 28 MARCH 2018

 

Time uploaded in London –  7-51 am

 

Post No. 4858

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

(பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன், பெர்னார்ட் ஷாவின் தம்பி, காந்திஜியின் தாத்தா சொன்னது)

செம்புலப்பெயல் நீரார் செப்பியதை கம்பனும், வள்ளுவனும் செப்பினர்! (Post No.4858)

சங்க இலக்கியத்தில் புகழ்பெற்ற அகத்துறைப் பாடல் செம்புலப்பெயல் நீரார் என்னும் புலவர் யாத்தது. ரிக் வேதம் போலவே, சில தமிழ்ப் புலவர்களின் புகழ்பெற்ற வாசகத்தைக் கொண்டே அப்புலவரை அழைப்பது தமிழிலும் உண்டு. ஒரு செம்மண் தரையில் மழை நீர் விழுந்தால் அது எப்படி இரண்டறக் கலக்குமோ அது போல நாம் ஒன்றுபட்டு விட்டோம்; இனி பிரியமாட்டோம் என்று காதலியிடம் காதலன் சொல்லும் பாடல் அது.

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

 

–குறுந்தொகை 40, செம்புலப்பெயனீரார்

 

பொருள்:

காதலன் கூறுகிறான்: “என்னுடைய தாயும் நின்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்? என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தே பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அத்தன்மையை அடைவது போல நமது உள்ளங்கள் (தாமாகவே) ஒன்றுபட்டன.

 

கம்பனும் சொன்னான்

கம்பன், யுத்தகாண்டம், கும்பகர்ணன் வதைப் படலத்தில் சொல்லுகிறான்:-

 

புலத்தியன் வழிமுதல்வந்த பொய் அறு

குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமே

வலத்து இயல் அழிவதற்கு  ஏதுமை அறு

நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்

 

-கம்ப ராமாயணம்

 

பொருள்

புலத்திய முனிவரின் வழி வந்த குலத்தின் பெருமை உன்னால் அழிந்தது. உனது செயல் நமது வெற்றித் தன்மையை விழ்ச்சி அடையச் செய்யும். அறம் தவறிய உனக்கு வெற்றி கிடைக்குமா? கிடைக்காது. குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரினது இயல்பாகும் என்னும் முறைமைக்கு ஏற்றதாக உள்ளது. (இது ராவணனுக்கு கும்பகர்ணன் சொன்ன அறிவுரை)

 

நிலம் நன்றாக இருந்தால் அதில் விழும் நீரும் நன்றாக இருக்கும்.

 

வள்ளுவனும் விளம்பினான்

இதையே வள்ளுவனும் விளம்புவது, படித்து மகிழ்வதற்குரியது:-

 

நிலத்தியல்பால் நீர்திரிந்  தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப  தாகும் அறிவு – குறள் 452

 

பொருள்

தான் அடைந்த நிலத்தின் தன்மையையே நீரும் பெறும். அது போல மக்களும் எந்த இனத்தாருடன் சேருகின்றனரோ அந்த அறிவையே பெறுவர்.

 

இதை சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவன் சொல்லுவதால் சத் சங்கத்தின் மஹிமை தெள்ளிதின் விளங்கும்.

 

இன்னொரு குறளில் செம்புலப் பெயல் நீரார் செப்பியதையே வள்ளுவனும் செப்புவான்:–

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந்   தன்னா      ரகத்து – குறள் 1323

 

நிலத்தொடு நீர் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சம் உடைய காதலனும் காதலியும் ஊடலில் அடையும் இன்பத்துக்குச் சமமான இன்பம் சொர்க  லோகத்தில் உண்டோ?

தேவலோகத்தில் SEX  செக்ஸ் கூடாது என்று பார்வதி சபித்ததால் அங்கு செக்ஸ் (பாலியல்) இன்பம் கிடையாது (பிற கிரஹங்களில் உயிரினங்கள் உண்டா? என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில்

(Hindus’ Belief in Extra Terrestrial Civilizations) இது பற்றி விளக்கியுள்ளேன்.

 

 

காளிதாசனும் மொழிந்தான்!

 

காதலர்களின் மனம் ஒன்று பட்டதற்கு இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்தியது போல, சங்க காலத்துக்கு முன் வாழ்ந்த காளிதாசரும் மழை நீர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார். (காளிதாசன் காலம் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அவன் சங்க காலத்துக்கு முந்தியவன் என்பதை நிரூபித்துள்ளேன்)

 

ஒரே சுவையுடைய மழை நீர் எங்கெங்கு விழுகின்றதொ அந்தந்த நிலத்தின் சுவையைப் பெறுவதுபோல சத்வம் என்ற ஒரே குணமுடைய இறைவன், கைக்கொள்ளும் குணங்களுக்கு ஏற்ப தொழில்களையும் பெயர்களையும் ஏற்கின்றீர் (சத்வ குணம் காரணமாக விஷ்ணுவாகவும், ரஜோ குணம் காரணமாக பிரம்மனாகவும், தமோ குணம் காரணமாக ருத்திரத் தனமையையும் அடைகின்றீர். எப்படி நீர் என்பது ஒன்றுதானோ அதே போல இறைவன் ஒருவனே.

ரசாந்தராண்யேகரசம் யதா திவ்யம் பயோஸ்ச்னுதே

தேசே தேசேகுணேஷு  ஏவம் யதாத்வம்அவிக்ரியஹ

— ரகு வம்சம் 10-17

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?’ (Post No …

https://tamilandvedas.com/…/யாயும்-ஞாயும்-ய…

6 Apr 2017 – Written by London swaminathan Date: 6 APRIL 2017 Time uploaded in London:- 20-27 Post No. 3794 Pictures are taken from various sources; thanks. contact; swami_48@yahoo.com காளிதாசனும், செம்புலப்பெயநீராரும் சங்கத் தமிழ் நூல்களில் ஒன்று குறுந்தொகை. அருமையான காதல் பாடல்கள் உள்ள நூல். அதில் ஒரு அருமையான பாடல். காதலர் …

 

சுபம்–

 

 

30 Beautiful Quotations from Kalhana’s Rajatarangini( Post No.4856)

April 2018 ‘Good Thoughts’ Calendar

COMPILED by London Swaminathan 

 

Date: 27 MARCH 2018

 

Time uploaded in London –  17-30

 

Post No. 4856

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Kalhana was a minister in Kashmir King Harsha’s (1089-1101) Kingdom. He wrote his epic poem in Sanskrit, Rajatarangini (River of Kings). It gives the history of Kashmir

 

FESTVAL DAYS:  APRIL 14- TAMIL NEW YEAR DAY, 18-AKSHAYA THRUTHYAI, 29- CHITRA PURNIMA, BUDDHA PURNIMA

APRIL 1– EASTER DAY, 2-EASTER MONDAY

 

EKADASI/ HINDU FASTING DAYS- 12 and 26

 

AMAVASYAI/ NEW MOON- 15

 

FULL MOON DAY/ PURNIMA- 29
Auspicious Days in APRIL-  5, 20, 22,25, 27

 

In the past three years, hundreds of quotations are given in both Tamil and English monthly calendars in my blog. Please use them

 

April 1 Sunday

Opportunity
A lost opportunity is considered equivalent to the three worlds. RAJATARANGINI 8-2457
April 2 Monday
Opposition
By going against a stream, one cannot succeed in accomplishing a matter which takes away what comes in its wake like the current of a river 8-3010
April 3 Tuesday
Passion
In the cases of the hearts of a king, a crystal and an unchaste woman, in the absence of their constant companions, there enters a passion for another. 6-33
April 4 Wednesday
People
An enterprise if crowned with success is not equally condemned by the people for they  hardly think whether or not it was justified by its relevant conditions 7-1422

 

April 5 Thursday
Perversity
In the ways of the creator, perversity is shown indeed 8-1275


April 6 Friday
Pity
There is none, who has not a good plan but its execution is neglected. Every one may know how to use a dart but rare is one who has the aim for it. 8-1529
April 7 Saturday
Plot
Whoever devises a plot to harm others certainly ruins himself from that same plot. Fire produces smoke which blinds the eyes. After turning into a cloud, it extinguishes the very fire by its torrential rain 4-125

 

April 8 Sunday
Poet
If the poet didn’t perceive what he is to reveal to all men, what other proof would there be of his divinity 1-5

April 9 Monday
Polity
Every one is aware of polity but few know its practical application 8-1529

April 10 Tuesday
Possession
As possessions are controlled by fate, the pride of foolish people in their family greatness is vain and false 7-206


April 11 Wednesday
Promotion
No metals can break a diamond and stone dykes can withstand the waters, but against the wicked, nothing is proof 6-273
April 12 Thursday
Prosperity
Men of small merits hardly survive long in their good fortune 8-1999
April 13 Friday
Proximity
The heat of summer becomes severe when rains approach and nights darkness when the dawn is close. Likewise, when extraordinary good fortune of surpassing glory dawn s for a person, receding Ill-luck accelerates the violence of its woes. 7-795

April 14 Saturday
Prudence
What wrath recommended, prudence forbade. 8-1359
April 15 Sunday
Reality
Can a lion in a picture emulate the activities of the real one? 7-60

 


April 16 Monday
Refuge
When the dignity of honourable men is outraged by a slight which cannot be remedied, their minds are tormented. What other refuge can they have except death? 6-278
April 17 Tuesday
Refuge
What refuge other than death is possible now? To us, who have forsaken the battle, even that is not possible. 7-847
April 18 Wednesday
Regret
It is futile to regret what one has done, right or wrong. 7-502

 
April 19 Thursday
Remedy
Against sedition there is no remedy 7-913
April 20 Friday

Splendour
The splendour which clings to men who shine for a brief moment like stars, passes away like a short summer night.7-133

 

 
April 21 Saturday
Retribution
That the clouds send down on the trees rain as well as lightning is the consequence of retribution for good or evil actions of a former existence. 7-342

April 22 Sunday
Riches
The rivulets waxing powerful feed the earth at its roots from the heavens showers fall and from all sides through the mouths of the channels the water courses through, filling a tank during the rainy season. When good fortune smiles, why will not riches come in hundred ways? 7-505

 

April 23 Monday
Scruples
Those who long for the acquisition of wealth have truly no dislike for evil practices 8-1099
April 24 Tuesday
Self- respect
The renunciation of self -respect cannot be eradicated even by a sage. 7-238

April 25 Wednesday
Self -respect
Men of honour should never break the great word of keeping their self -respect. 7-329

April 26 Thursday

Spark
One who clasps a spark mistaking it for a gem only burns his fingers. 4-299

April 27 Friday
Servant
A servant not trusted at a critical moment, brings disaster on his master like a hand sword in a struggle. 7-1160
April 28 Saturday
Service
In truth the service of the kings is more dangerous than the raising of a demon, the leap over a precipice, the chewing of poison or fondling of a snake 8-2187

 

April 29 Sunday
Skill
Even a little mischief, if repeated without skill, breaks out again and again through a hundred openings just as an old piece of cloth as when stitched with a needle.
7-849
April 30 Monday
Sleep
Sleep ,like a sweet heart left me in a huff and went somewhere far away. The night, like land bestowed on an unworthy person, is not yet over. 3-181

–SUBHAM–

ஒளிவீசும் தமிழ்நாடு -ஓலா, ஊபர், Fast Track Call டாக்ஸி! (Post No.4855)

ஒளிவீசும் தமிழ்நாடு -ஓலா, ஊபர், Fast Track Call டாக்ஸி! (Post No.4855)

 


Written by London Swaminathan 

 

 

Date: 27 MARCH 2018

 

 

British Summer Time uploaded in London – 8-43 am

 

Post No. 4855

Pictures shown here are taken from various sources; thanks.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மார்ச் முதல் வாரத்தில் (2018) இந்தியாவில் இருந்தேன்; ஒவ்வொரு முறையும் கொஞ்சம் மாற்றம் காண்கிறேன். ஆகஸ்ட் 2017 இந்திய விஜயத்தில் பெங்களுர் சென்றேன். அங்கும் மாற்றம் கண்டேன். UBER ஊபரும், OLA ஓலாவும் கொடிகட்டிப் பறக்கின்றன. தமிழ்நாட்டில் ஆட்டோரிக்ஷா தலையில் பலத்த அடி! என்ன சொன்னாலும், எவ்வளவு சட்டம் வந்தாலும் நாங்கள் கேட்ட காசைக் கொடுக்க வேண்டும் என்று அடாவடித்தனம் செய்தோர் மீது இறைவன் கொடுத்த அடி ஊபர், ஓலா (Uber and Ola). ஆனால் இவைகளையும்கூட மார்கஸீய நாசகாரிகள் நாசம் செய்ய முடியும்; யூனியன் வைத்து ஸ்டிரைக் செய்து அட்டூழியம் செய்யமுடியும்; பதில்? மக்கள் கையில்தான்.

 

முதல் நாள் பழைய ஆட்டோக்கார், தெரிந்தவர் என்பதால் அதில் சென்றேன்; மறு நாள் ஒலா டாக்ஸியில் அதே இடத்துக்குச் சென்றேன்; 200  ரூபாய் மலிவு. ஆட்டாக்காரர்களின் அட்டூழியம் கொஞ்சம்  குறைந்துள்ளது. ஆயினும் எங்கள் லண்டன் போல, போஸ்ட்கோடு இல்லாத POST CODE இடங்களுக்கு எஸ்டிமேட் என்று சொல்லுகிறார்கள். அதாவது கொஞ்சம் கூடுதலாக வரும். பரவாயில்லை.

 

எப்படியாகிலும் ஆட்டோவைவிட மலிவுதான்; பல கொள்ளைக்கார ஆட்டோக்கார்களும் ஊபர், ஓலாவில் பெயரைப் பதிவு செய்துள்ளனர். ஏமாறும் வாடிக்கையாளர் இல்லாதபோது ஊபர் ஓலா சவாரிகளைப் பிடிப்பர்.

 

 

பேசிக் கொண்டே சென்றபோது சில சுவையான விஷயங்கள் கிடைத்தன–

ஒரு ஆட்டோ டிரைவர் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒருவர் அவரை எழுப்பி ஒரு விலாசம் ADDRESS கேட்டாராம். ஏனய்யா, தூங்கிய என்னை எழுப்பினாய்? என்று அவரை விரட்டி, மிரட்டி 50 ரூபாய் வசூலித்தாராம்.

இதைச் சொல்லிவிட்டு நியாம்தானே ஸார்?  நான் செய்த்தது!! என்று என்னையும் சிக்கலில் மாட்டிவைக்கப் பார்த்தார்.

நான் நைஸாக நழுவிவிட்டேன் – தூங்கிய உம்மை எழுப்பியது தவறுதான்………………………. வழா வழா, கொழ கொழா…………… நடிகர் ரஜினி காந்த் அறிக்கை போலப் பதில் கொடுத்தேன்

 

இன்னும் சில சுவையான செய்திகள்–

நீங்கள் எவ்வளவு வரும்படி உண்டாக்குகிறீர்களோ அவ்வளவுக்கு ஊக்கத் தொகை INCENTIVES  உண்டாம்; பல கட்டங்களில் டிரைவர்களைப் பிரிப்பராம்; மேலே செல்லச் செல்ல நல்ல ஊதியம்- சர்வ சாதாரணமாக மாதம் 35,000 ரூபாய் எடுப்பார்களாம். ஆனால் வாரம் ஏழு நாளும் உழைப்பார்களாம். அந்த 35000 ரூபாயில் 18,000 ரூபாய் கார்க் கடனுக்குப் (Repaying Car Loans) போய் விடுமாம்- அதாவது உங்கள் சொந்தக் காருக்கான கடனை அடைக்கிறீர்கள்

நான் சொன்னேன், “பரவாயில்லையே-  உங்களுக்கு என்று கார் இருந்துவிட்டால் நீங்கள் சுயமாகவும் ஸவாரி ஏற்றலாமே என்றேன்; ஊபரும் ஓலாவும் ஒரு வரம்பு வைத்திருப்பதால் அந்த அளவுக்கு கட்டாயம் பிஸினஸ் BUSINESS கொடுக்க வேண்டுமாம்.

 

லண்டனில் எல்லாம் கிரெடிட் கார்டு Credit Card மூலம் கொடுப்போம். ஆனால் இந்தியாவில் காசும் கையில் கொடுக்கலாம். ஆட்டோ டிரைவர்களின் அட்டூழியத்தை அடக்கி ஒடுக்கும் FAST TRACK CALL பாஸ்ட் ட்ரா க் டாக்ஸி, ஷேர் ஆடோ SHARE AUTO , ஊபர், ஓலா வாழ்க.

 

கம்யூனிஸ்டு நாசகாரக் கும்பல் புகுந்து, யூனியன் அமைத்து சீரழிக்காதவரை தமிழ்நாடு ஒளிவீசும்

 

இது போல பாங்கு ஊழியர்களின் மூஞ்சி முகரையைச் சிதைக்க, யூனியன்களை ஒழிக்க, பேட்டை தோறும், வெளிநாட்டு வங்கிக் கிளைகள் திறந்தாலும் நலமே. நான் ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்த போது ஒரு நாள் வங்கி ஊழியர் ஸ்டிரைக், ஒரு நாள் தேஸீய விடுமுறை; மற்ற     இரண்டு நாட்கள் வார விடுமுறை; அடுத்த சில நாட்களில் நான் காரில்  சுற்றுப் பயணம். நல்ல வேளை, அண்ணன் தம்பிகள் இருந்ததால் கைமாற்றுப் பெற்றுக் கொண்டேன்.

 

இதில் என்ன வேடிக்கை என்றால், கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளத்தில் ஆட்டோ டிரைவர்கள் நியாயமான காசுதான் வாங்குகிறார்கள். இங்கே அவர்கள் ஆட்சி ஏற்படும்வரை அட்டூழியத்தைக் கட்டவிழ்த்து விடுவார்களாம்; அவர்கள் ஆட்சி வந்துவிட்டால் ஸ்டிரைக் இராது, அட்டூழியம் இராதாம்!

 

நிற்க; தமிழ்நாட்டில் முன்னைவிட பிச்சைக்கார ர்கள் குறைவு; பராசக்தி திரைப்படத்தில் (கருணாநிதி கதை வசனம்?) பிச்சைக்காரர்களும் நாய்களோடு போட்டி போட்டுக்கொண்டு எச்சில் இலையை வழிக்கும் காட்சியைப் பார்க்கவே கஷ்டப்படுவேன். இப்போது அது இல்லை.

ஆனால் அதைவிடக் கொடுமையான காட்சி– ஒவ்வொரு கல்யாணத்திலும் நடக்கும் கொடுமை– காலை, மதியம், மாலை, இரவு நான்கு வேளைகளில் ஒவ்வொரு மு றையும் ஐம்பது அய்யிட்டங்கள் (Items)- இதில் பாதி குப்பைத் தொட்டியில்!

 

என்ன அநியாயம்? அங்கு ஓஸிச் சாப்பாட்டிற்கு வரும் ஒரு சில கும்பல் மட்டும் ஐம்பது அயிட்டங்களையும் வாயில் போட்டு விழுங்கிவிட்டு மாயா பஜார் கடோத்கஜன் போலக் காத்திருப்பது எனக்கு வியப்பைத் தரும்

அவர்களுக்கு  கடவுள் கொடுத்தது வயிறா? வண்ணான் தாழியா?

 

கடவுளே- தமிழர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு- மூன்று வேளைக்கு மேல் சாப்பாடு தேவை இல்லை- பத்து வகைகளுக்கு மேல் தேவை இல்லை.

 

ஸ்விட் Sweet முதலியவற்றை கையில் பாக்கெட்டில் கொடுப்பது வீணாவதைத் தடுக்கும். அல்லது பிராஹ்மணர் அல்லாதோர் செய்வது போல அரை நாளில் கல்யாணத்தை முடித்து மற்ற சடங்குகளை வீட்டோடு வைத்தாலும் நலமே.

 

 

தெருவெங்கும் பூ மணக்கும்

 

நாங்கள் பயணம் செய்த சாலை நெடுகிலும் இளநீர், பலா, கொய்யா, வெள்ளரிக்காய், முந்திரிப் பருப்பு, பூ வியாபாரம் செய்த பெண்மணிகளை கண்டோம். சங்க இலக்கியத்தில் கூட பூக்காரி, உப்பு விற்கும் பெண்மணி ஆகியோரைக் காண்கிறோம்; 2000 ஆண்டுகளாகப் பெண்களும் சம்பாதிக்கும் நாடு இந்தியா; இன்றும் அவர்கள் சுய வியாபாரம் செய்வதால் உடல் மெலிந்து ஆரோக்கியமாக இருக்கின்றனர்; ஏதோ தானும் கொஞ்சம் சம்பாதிதோம் என்ற பெருமை இருக்கிறது. நமக்கும் போகும் வழியில் சாப்பிடக் கிடைக்கிறது. முன்னர் ரயில்வே லெவல் கிராஸிங்கில் மட்டும் நடந்த வியாபாரம் இப்போது டோல் கேட் TOLL GATE முழுதும் நடக்கிறது.

 

இந்த டோல் கேட்களை TOLL GATES ஒழித்தால் என்ன?

எங்கள் பிரிட்டனிலும் சில இடங்களில் இன்றும் டோல் கேட் உண்டு. இவற்றை ஒழித்து ஒரேயடியாக ஒரு தொகை வாங்கிக்கொண்டு கார்க ளை விட்டால் என்ன?

 

இன்னும் சில வண்டிகள் பாண்டிச்சேரி பக்கம் போனால் , டூரிஸ்ட் பெர்மிட் வாங்கனுமாம்; இவைகளைப் போன்ற கட்டு திட்டங்களை எளிமைப்படுத்துவது நல்லது.

மொத்தத்தில் கரும்பையும் தென்னையையும் பயிரிடாதவர்கள் கூட கரும்புச் சாற்றையும், இளநீரையும் விற்பது தொழில் முனைப்பைக் காட்டுகிறது.

உழைக்கும் கரங்கள் வாழ்க

 

 

கிறிஸ்தவர் ஊடுருவல்

 

பேஸ்புக்கில் பல இந்து வீரர்கள் கொட்டம் அடிப்பது எனக்கு சிரிப்பைத் தருகிறது. பல ராம ரதங்களும் முருக ரதங்களும் “வெற்றிகரமாக” ஓடுவது நகைப்பத் தருகிறது. ஏனெனில் எனது ஆகஸ்ட் 2017 இந்திய விஜயத்தில் தமிழ் நாட்டின்     தென் மாவட்டங்களில் சுற்றினேன். 2018 வருகையில் வட மாவட்டங்களில் சுற்றினேன். மவுனமாக, யாருக்கும் தெரியாமல், சத்தமில்லாமல் கிறித்தவர்கள் செய்யும் வேலையைக் கண்டேன்; கிராமம் தோறும் சின்ன பஸ்களையும் வேன்களையும் அனுப்பி பிள் ளைகளுக்கு  யூனிபார்ம் கொடுத்து, டை கட்டி விட்டு பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதைப்              பார்த்தேன்; பட்டிக்காட்டுப் பெற்றோர்களுக்கு ஏக சந்தோஷம்;   தன் மகன் தாட் பூட் என்று இங்கிலிபீஷில் சில சொற்களைச் சொன்னவுடன் ஒரே மகிழ்ச்சி; அவர்கள் கழுத்தில் மாட்டிவிடப்பட்ட சிலுவையைப் பார்க்கக்கூட பெற்றோர்களுக்கு நேரம் இல்லை!

 

இப்படி சத்தம் போடாமல் அவர்கள் வேலை செய்கையில் இங்கு RSS ஆர் எஸ் எஸ் காரர்களும் VHP வி.எச்.பி காரர்களும் இந்து முன்னணிக் கட்சிக்  காரர்களும் ரதம் ஓட்டுவது நகைப்பையும் திகைப்பையும் நல்கியது.

 

முதலில் அவர்கள் இதை எல்லாம் கணக்கெடுத்து சீர் செய்ய வேண்டும். நகர்ப் புறத்தில் ரதம் விடுவதற்குப் பதிலாக கிராமப் புறத்தில் ஸ்கூல் பஸ் விட வேண்டும் நிற்க

டாக்டர் பட்டம் மூனு லட்சம் ரூபாய்தானாம்

 

காரில் போகும்போது இன்னொரு செய்தியும் காதில் விழுந்தது என் தம்பி சொன்னான்—- இப்போதெல்லாம் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால் டாக்டர் பட்டம் கிடைத்து விடுகிறதாம்.

நான் சொன்னேன்

அடப்பாவீ- மிகவும் cheap ‘சீப்’ஆக இருக்கிறதே. லண்டனில் உள்ள இலங்கைத் தமிழருக்கு இது தெரிந்தால் க்யூவில் நின்று வாங்கிக் கொள்வார்களே! சும்மா இருக்கும்போதே தன் பெயருக்கு முன்னல் டாக்டர் பட்டம் போட்டுக் கொள்கிறார்கள்- நான் கலாசேத்ராவில் படித்தவள் என்கிறார்கள்- என்னை மியூஸிக் அகாடமியும் நாரத கானசபாவும் அழைத்திருக்கிறது- எனக்கு வேறு பல நிகழ்ச்சிகள் வந்து விட்டதால் மாட்டேன் என்று விட்டேன் என்கிறார்கள்– அவர்களுக்கு எல்லாம் மூன்று லட்சம் ரூபாய் கொசு என்றேன். இதற்கெல்லாம் சாட்சியாக— ஆட வரும், பாட வரும், பேச வரும் அத்தனை தமிழ் பிரபலங்களுடன் போட்டோ எடுத்து வீட்டில் வைத்திருப்பர்; பிரபலங்கள் யார் வந்தாலும் வீட்டுக்கு அழைத்து, சோறு போட்டு நன்கு கவனிக்கவும் செய்யவர்; ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆத்தோடப் போவாரா? அல்லது சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வேறு வழிகள் தெரியும்; யாரை, எப்படிக் “கவனித்தால்” அது கிடைக்கும் என்று.

 

 

ஒரு பட்டமும் பதவியும் இல்லாத சசிகலாவின் காலில் துணைவேந்தர்களே விழும் அளவுக்குத் தமிழ் நாடு கேடுகெட்டுப் போய்விட்டது.

திராவிட ஆட்சியின் சாதனைகள்…………….. வேதனைகளில் இதுவும் ஒன்று

 

பகுத்தறிவுப் பகலவன்கள் வாழ்க, தென்னாட்டு பெர்னாட்ஷாக்கள், இங்கர் சால்கள் வெல்க!!

 

–subham—