கர்நாடக கவர்னர் ஜெலோட், பெங்களூருவிலுள்ள சம்ஸ்க்ருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சொற்பொழிவு ஆற்றுகையில் அமெரிக்காவிலுள்ள நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அட்மினிஸ்டரேஷன் செர்வீஸ் எனப்படும் NASA /நாஸா அமைப்பில் சம்ஸ்க்ருத ஆராய்ச்சிக்காகவே தனிப் பிரிவு இருப்பதாக கூறினார் .
கர்நாடக கவர்னர் Thaawarchand Gehlot கர்நாடக சம்ஸ்க்ருத பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் மேலும் கூறியதாவது,
“மாநில மொழியுடன் ஸம்ஸ்க்ருதத்தையும் படிப்பதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.சம்ஸ்க்ருத மொழியிலுள்ள ஓலைச்சுவடிகளை ஆராய் வதற்கென்றே அமெரிக்காவில் நாஸா விண்வெளி ஸ்தாபனத்தில் ஒரு பிரிவு துவங்கப்பட்டுள்ளது . சம்ஸ்க்ருத மொழிதான் இந்தியாவின் ஆன்மா.அதுதான் இந்தியாவின் பாரம்பர்யத்தைப் கற்பிக்கும் மொழி. ஸம்ஸ்க்ருதம் மேல் எனக்குள்ள பற்றினால் ராஜ்ய சபையிலும் லோக சபையிலும் நான் மெம்பரானபோது சம்ஸ்க்ருத மொழியிலேயே உறுதி மொழி எடுத்தேன். மேலும் முன் காலத்தில் அறிஞர்கள் அனைவரும் சம்ஸ்க்ருத மொழியிலேயே கருத்துக் பரிமாற்றம் செய்துகொண்டனர். விவாதம் நடத்தினார்கள்”.
“மேலை நாடுகள் சம்ஸ்க்ருத மொழியின் சிறப்பினை அறிந்துள்ளன . அமெரிக்காவிலுள்ள ரிக் பிரிக்ஸ் Rick Briggs என்ற விஞ்ஞானி இம்மொழியின் இலக்கணம் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். கம்பியூட்டரில் பயன்படுத்தும் கணித மொழிக்காக 60,000 சம்ஸ்க்ருத ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து வருகிறார். அமெரிக்கா, ஜெர்மனி போனற நாடுகள் இம்மொழியின் அருமை பெருமைகளை அறிந்துள்ளன ; உத்தரகண்ட் மாநிலத்தில் இது இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் மத்தூரில் இது பேச்சு மொழியாக இருக்கிறது உலகெங்கிலும் உள்ள பல்கலைக் கழகங்களும் இதைக் கற்பிக்கின்றன. சம்ஸ்க்ருத மொழி ஒரு அறிவுக் களஞ்சியம். அதில் எல்லா விஷயங்களும் உள்ளன.”
XXXX
பெங்களூருவிலுள்ள சம்ஸ்க்ருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1004 மாணவ மாணவிகள் பல்வேறு பட்டங்களைப் பெற்றனர். சம்ஸ்க்ருத பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் அஹல்யா சர்மா மற்றும் பல சம்ஸ்க்ருத அறிஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
44 மாணவர்கள் பி எச். டி . பட்டம் பெற்றனர் 90 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. ஆறு பேருக்கு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
—SUBHAM—
TAGS- NASA , நாஸா , சம்ஸ்க்ருத ஆராய்ச்சி , தனிப் பிரிவு , கர்நாடக கவர்னர், ரிக் பிரிக்ஸ், Rick Briggs, சம்ஸ்க்ருத பல்கலைக்கழகம்
Ahead of International Yoga Day, the High Commission of India in the United Kingdom organised a yoga event at Trafalgar Square which witnessed the significant participation of more than 700 enthusiastic people.
Since 2015, the International Day of Yoga is celebrated across the world annually on June 21, following its adoption by the United Nations in 2014. While speaking to ANI, the Indian High Commissioner Vikram Doraiswami said, “It was a great pleasure to be able to have well over 700 people here in this central spot in London. With the iconic statues all around it. And of course, to have multiple yoga schools come here and lead us in the practice of yoga.”
Further, he also emphasized that in London, diverse communities participated, “exemplifying the point that our Prime Minister has said, that yoga unites everybody and that yoga is for everybody.”
In response to a question, about what’s different this year, the Indian envoy Doraiswami highlighted that this year, there were more participants, additional yoga schools involved, and a greater diversity of communities present.
“But the idea wasn’t to be different, the idea was to be, to take through the continuity of yoga as a means of healing and as a means of growing,” he added.
Further, a UK citizen Inderpal Ohri Chandel also spoke with ANI and highlighted that the theme for this year is ‘women’s empowerment’ adding that she also emphasized the significance of yoga for Indians and Asians, considering it a vital part of their heritage that fosters cultural connection and importance.
“The big thing is that today the members of the Indian Cricket Deaf Team have also come here because their matches will be with Great Britain,” she added.
Hirdesh Gupta said, “We are here today at Trafalgar Square to celebrate the 10th International Day of Yoga organised by the High Commission of India. A lot of people here have joined in today to celebrate yoga. We want to thank PM Modi for recognising Yoga at the United Nations. Now, everybody is adopting yoga and making it a part of their day-to-day life.”
–SUBHAM—
TAGS- YOGA DEMO, LONDON TRAFALGAR SQUARE, YOGA DAY, 700 PEOPLE
சீதையைத் தேடி ராமரும் லக்ஷ்மணரும் ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே சென்றனர். அங்குள்ள மான்களைப் பார்த்து சீதை எங்கே என்று கேட்க அவை ஆகாயத்தைப் பார்த்து தென் திசையை நோக்கின.
இதனால் தென் திசை நோக்கி சீதை சென்றிருக்கிறாள் என்று ஊகித்த ராமர் அந்த திசை வழியே செல்லலானார்.
கோதாவரி நதியிடம் சீதை எங்கே என்று கேட்டார்; பதில் இல்லை.
ராவணனுக்கு பயந்து யாருக்கும் பதிலைச் சொல்ல தைரியம் வரவில்லை.
அங்கு உதிர்ந்து கிடந்த புஷ்பங்களைப் பார்த்த ராமர் தான் சீதைக்குக் கொடுத்த புஷ்பங்கள் போல இவை இருக்கின்றனவே என்று லக்ஷ்மணரிடம் கூறிப் புலம்புகிறார்.
பின்னர் அவர் அங்கிருந்த மலையைப் பார்த்துக் கூறலானார் இப்படி:
‘Soul of India’: NASA has department for Sanskrit manuscripts research, Karnataka Governor tells students Gehlot was delivering the convocation address at the Karnataka Sanskrit University (KSU), of which he is the Chancellor. He advised parents to a… allow their children to learn Sanskrit along with the local language.
Bengaluru: Hailing Sanskrit as “the soul of India”, Karnataka Governor Thaawarchand Gehlot on Friday said US space agency NASA had started a department dedicated for research on manuscripts in the ancient language.
Gehlot was delivering the convocation address at the Karnataka Sanskrit University (KSU), of which he is the Chancellor. He advised parents to allow their children to learn Sanskrit along with the local language.
According to Gehlot, Sanskrit is the language of knowledge in Indian tradition. He said he is “obsessed” with Sanskrit and that is why he took oath in that language at Lok Sabha and Rajya Sabha. “Sanskrit is the soul of India and a repository of vas…
of vast knowledge. Historically, Sanskrit was the language of discourse among scholars across the country and was used in all important matters,” Gehlot said.
Gehlot said even western nations realised the value of Sanskrit. “Rick Briggs, a renowned NASA scientist, highlighted the greatness of Sanskrit, particularly its grammar. NASA, recognising its potential for computer software, established a dedicated . department for researching over 60,000 Sanskrit manuscripts. Countries like the USA and Germany are conducting significant research in this field,” Gehlot said. Sanskrit, Gehlot said, is treated as the second official language in Uttarakhand.
“It is the spoken language in Mathur, Karnataka, and remains a commonly spoken language in various parts of India. Many universities worldwide teach Sanskrit, and those proficient in the language have a promising future,” he said.
At the convocation, 1,004 students received various degrees. Honorary D.Litt degrees were awarded to Basavamurthy Madara Chennaiah Swami, Sadguru Dundeshwara Swami, Prof Gauri Mahulikar of Chinmaya International Foundation, Pallathadka Ghanapati Sha… Pallathadka Ghanapati Shankara Narayana Bhat, Hithlahally Acharya Sooryanarayana Bhat and Acharya A Haridas Bhat. Higher Education minister Dr MC Sudhakar, Sanskrit scholar H V Nagaraja Rao, KSU Vice-Chancellor Dr Ahalya Sharma and others were present.(Deccan Herald Newspaper)
Add from The New Indian Express
1,100 graduate from Samskrit University
BENGALURU: The Karnataka Samskrit University held its 10th and 11th Convocation on Friday. A total of 1,100 students graduated, including 44 students who received their PhDs. Ninety students were also awarded gold medals for their exceptional performance and six honorary doctorates were given out.
Governor Thaawarchand Gehlot emphasised the value of education and knowledge. Highlighting the significance of Sanskrit, he said, “Sanskrit is the language of knowledge in Indian tradition. It is the soul of India and a repository of vast knowledge. Historically, Sanskrit was the language of discourse among scholars across the country and was used in all important matters.” He said Sanskrit has received significant scientific recognition.
“From NASA scientist Rick Briggs highlighting the greatness of Sanskrit, particularly its grammar to NASA recognising its potential for computer software and establishing a department for researching over 60,000 Sanskrit manuscripts, the language remains relevant today,” he said.
–subham—
NASA, Sanskrit, Department, 60,000 manuscripts, NASA scientist Rick Briggs
விஷ்ணு ஸஹஸ்ரநாம பராயணம் செய்வோர் ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி என்று இரண்டு முறை சொல்ல வேண்டும்.
எய்துவது எல்லாம் ஆயுதமாய்க் கொண்டவர் .(ஆயுதங்களாக நினைக்கப்படாத அவருக்கு நரசிம்மாவதாரத்தில் ஆயுதமாக மாறியதை நாம் அறிவோம்)சத்திய சங்கல்பரும் சர்வேஸ்வரரும் ஆவதை இது குறிக்கும் என்கிறார் சங்கரர். அவர் காட்டும் மேற்கோள் – ஏஷ ஸர்வேஸ்வரஹ (மாண்டூக்ய உபநிஷத் 6).
பிருஹன் நாரதீய உபநிஷத் 1-51-10 சொல்வதாவது :
ஓம்காரஸ் ச ‘தா -ஸப்தஸ் ச த்வவ் ஏதெள பிரஹ்மணஹ புரா
கண்டம் பித்வா விநிர்யாதெள தஸ்மாத் மங்களிகா உபெள
பொருள்
ஓம் என்ற சப்தமும் அதஹ என்ற சப்தமும் பிரம்மாவின் வாயிலிருந்து வந்தன ஆகையால் அவ்விரண்டும் மங்களம் வாய்ந்தவை.நமஹ என்பது வணங் குதலைக் குறிக்கும்.
ஈஸா வாஸ்ய உபநிஷத் சொல்கிறது: பூயிஸ்ட்டாம் தே நாம உக்திம் விதேம – நாங்கள் மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறோம்.
ஹரியை வணங்குவது எவ்வளவு புனிதமானது என்பதை கீக்கண்ட ஸ்லோகங்களும் விளக்கும்.
தன்யம் தத் ஏவ லக்னம் தன் நக்ஷத்ரம் ததேவ புண்யம் அஹஹ
கரணஸ்ய ச சா சித்திர் யாத்ரா ஹரிஹி ப்ராங் நமஸ் க்ரித்யே
பொருள்
எந்த லக்கினத்தில் ஹரி வணங்கப் பட்டாரோ அதுவே புனிதமானது., எந்த நட்சத்திரத்தில் ஹரி வணங்கப் பட்டாரோ அதுவே புனிதமானது., இது மனதிற்கு சந்தோசம் அளிக்கிறது
இதில் வரும் பிராக் என்பது முதல் என்ற பொருள் தரும் . ஆயினும் இறுதியிலும் வணக்கம் சொல்லப்படும்.
வணங்குவதன் மூலம் கிடைக்கும் பலன் பற்றி மஹாபாரதம் சாந்தி பர்வமும் 47-91 கூறுகிறது,
ஏகோபி க்ருஷ்ணஸ்ய க்ருத ப்ரணாமோ
தசாஸ்வமேதா வப்ருதேன துல்யஹ
தசாஸ்வமேதி புணரேதி ஜன்ம
க்ருஷ்ண ப்ரணாமி ந புனர் பவாய
பொருள்
கிருஷ்ணனுக்குப் போடும் ஒரு கும்பிடு பத்து அஸ்வமேதம் செய்து அதன் முடிவில் அவப்ருத ஸ்நானம் செய்ததற்குச் சமம். பத்து அஸ்வமேதம் செய்தவனுக்கு மறுபிறப்பு உண்டு. கிருஷ்ணனுக்கு ஒரு நமஸ்காரம் செய்தவனுக்கோ மறு பிறப்பே கிடையாது.
XX
சாந்தி பர்வம் 47-90
அதசீ புஷ்ப -ஸங்காசம் பீதவாஸஸ -மச்யுதம்
ஏ நமச்யந்தி கோவிந்தம் ந தேஷாம் வித்யதே பயம்
ஒரு குறையுமில்லாத கோவிந்தனை வணங்குவோருக்கு பயம் என்பதே இராது. அவர் உடுத்தும் உடை மஞ்சள் ; அவருடைய வண்ணமோ நீலம்.
லோக த்ரயாதிபதீம் அப்ரதிம ப்ரபாவ
மிசத் ப்ராணாம்யசிரஸா ப்ரபவிஷ்ணும் இஸம்
ஜன்மாந்தர- ப்ரளய – கல்ப- ஸஹஸ்ர ஜாத
மாஸு ப்ரசாந்திம் உபயாதி நரஸ்ய பாபம்
பொருள்
மூவுலகங்களுக்கு அதிபதியும் உலகத்தை தோற்றுவித்தவனுமான, எல்லையற்ற சக்தி உடையவனுமான இறைவனை, ஒருவன் கும்பிட்டால் அவன் எண்ணற்ற பிறப்புகளில் செய்த மற்றும் கல்ப காலங்களில் செய்த பாவங்களும் அழிந்துபோகும்
XXXX
தாமோதரஹ – நாம எண் 367
உதார குணமுள்ள மனதைப் பெற்றவன்.நல்ல மனக் கட்டுப்பாடு (தர்மம்) உடையவன் .
பிரம்மாண்ட புராணத்தில் 76-13-14 வரும் ஸ்லோகம்
ததர்ஸ சால்ப தந்தாஸ்யம் , ஸ்மித ஹாஸம் ச பாலகம்
தயோர் மத்யகதம் பத்தம் தாம்னா காதம் ததோதரே
பொருள்
கோகுலவாசிகள் சிரித்த முகமுடைய பாலனைப் பார்த்தனர்.இரண்டு மரங்களுக்கு இடையில் வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தான் உதரத்தில் தாம/கயிறு கட்டப்பட்டு இருந்ததால் அவனை தாமோதரன் என்கிறார்கள்.
வியாசர் சொல்கிறார்,
தாமானி லோக நாமானி தானி யஸ்யோதரந்தரே
தேனை தாமோதரோ தேவஹ ஸ்ரீதரஹ ஸ்ரீ ஸமாச்ரிதஹ
பொருள்
தாம என்றால் உலகங்கள் ; யார் வயிற்றில் இந்த உலகங்கள் இயங்குகின்றனவோ அந்த ஆண்டவனுக்கு தாமோதர, ஸ்ரீதர, ஸ்ரீனிவாச என்ற பெயர்களுமுண்டு .
என் கருத்து
புறநானூற்றிலும் சங்க நூல்களிலும் செய்யுள் இயற்றிய புலவர்களில் தாமோதரன், கேசவன் , விஷ்ணு முதலிய பெயர்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் சூட்டப்பட்டன. விஷ்ணு தாசன் என்பதை விண்ணன் தாயன் என்றும் காமக் கண்ணியார் என்பதை காமாட்சி என்றும் எழுதினர். கண்ணதாசன் என்பதை தாயங் கண்ணன் என்று எழுதினார்கள்
XXXX
க்ஷோபணாஹா — நாம எண் 374-
சிருஷ்டி காலத்தில் பிரக்ருதியையும் புருஷனையும் உட்புகுந்து கலக்குபவர் .விஷ்ணு புராணம்1-2-29 சொல்வதாவது:-
பிரக்ருதிம் புருஷஞ்சைவ ப்ரவிஸ்யாத் மேச்சயா ஹரிஹி
க்ஷோபயாமாஸ பகவான் சர்ககாலே வ்யாயாவ்ய யெள
பொருள்
சிருஷ்டி காலத்தில் என்றுமுள்ள ஹரியானவர், மாறக்கூடிய ப்ரக்ருதி மாறாத புருஷன் ஆகியவற்றில் நுழைந்து கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறார்
(இதை மாபெரும் வெடிப்பு- பிக் பேங் — என்று நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன்)
Xxxxx
ஹவிர் ஹரிஹி — நாம எண் 359-
யாகங்களில் ஹவிர் பாகத்தை ஏற்றுக் கொள்கிறவர் ; பகவத் கீதை 9-24:
என்னை நினைப்போரின் பாவங்களை நான் அழிக்கிறேன் ;நான் யாகத்தில் வரும் ஹவிஸ் என்னும் சோற்றையும் எடுத்துக்கொள்கிறேன் . என்னுடைய வர்ணம் மகிழ்ச்சியூட்டும் நீலம் ஆகும். ஆகையால் என்னை ஹரி என்கிறார்கள் .
பரமாத்மனுக்கு சமமானவர் எவருமிலர் அவருடைய நாமம் பெருமைமிக்கது.
****
பகவத் கீதை 11-43 சொல்வதாவது,
पितासि लोकस्य चराचरस्य
त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् ।
न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो
लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ॥११- ४३॥
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஸ்²ச கு³ருர்க³ரீயாந் |
ந த்வத்ஸமோऽஸ்த்யப்⁴யதி⁴க: குதோऽந்யோ
லோகத்ரயேऽப்யப்ரதிமப்ரபா⁴வ || 11- 43||
சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!
xxxx
க்ருஷ்ணஹ — நாம எண் 550
கிருஷ்ணர் எனப்பெயர்கொண்ட வியாசர்
க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்
குகோஹ்யன்யஹ புண்டரீகாக்ஷான் மஹாபாரதக்ருத் பவேத் — விஷ்ணு புராணம் 3-4-5
பொருள்
க்ருஷ்ண த்வைபாயனர் என்ற பெயர்கொண்ட வியாஸர் நாராயணனே ஆவார் மஹாபாரதம் போன்ற ஒரு நூலை தாமரைக்கு கண்ணன் ஆன கடவுள் தவிர வேறு யார் செய்ய முடியும்?
To be continued……
TAGS-
விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்- 6
இந்தக்கட்டுரையின் பிற் பகுதியில் என் சொந்தக் கதையும் வரும்; தேவையானால், நேரம் இருந்தால் அதைப்படியுங்கள்!
இந்துக்கள் எப்படி பசுமாடுகளை நடத்தினார்கள் ? மது பர்க்க என்றால் என்ன? எனக்கு ஏற்பட்ட கசப்பான வேகன் அனுபவங்கள் ; எனக்கு என் பேரக் குழந்தைகள் செய்யும் உதவி! ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் தருகிறேன்.
பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.– மஹா கவி பாரதியார்
xxx
மது பர்க்க என்றால் என்ன?
வேகன்Vegan என்பது இந்தியாவில் இல்லாத ஒரு கொள்கை. நம்முடைய ரிஷி முனிவர்கள் அனைவரும் பாலும் தேனும் சாப்பிட்டு வளர்ந்தார்கள். ஆனால் தேனீக்களின் உயிருக்கோ பசுமாட்டின் உயிருக்கோ ஆபத்து வராமல் அதைச் செய்தனர். புது மணத் தம்பதிகளுக்கும் , வீட்டிற்கு வந்த விருந்தாளிகளுக்கும், முனிவர்களின் ஆஸ்ரமத்தில் நுழைவோருக்கும் மதுபர்க்கம் கொடுப்பது வழக்கம். இதை புராண இதிகாசங்களில் காண்கிறோம். இது ஆரோக்கியமானது; சக்தி கொடுப்பது; விருந்தாளியை இனிமையாக வரவேற்பதை ஒத்தது . இன்று நாம் காப்பி, டீ கொடுப்பது போன்றது; மது பர்க்கம் என்பது தேனுடன் பாலோ, தயிரோ நெய்யோ கலந்தது .
More About Madhuparka from Wisdomlib.com
Madhuparka (मधुपर्क) refers to “articles of homage” (i.e., “Madhuparka is a mixture of honey, butter, sugar, curd and water offered to a guest when he first comes to the house”)
Madhuparka (मधुपर्क).—An offering of milk and honey;1 Paraśurāma was treated with it by Agastya.2
Madhuparka (मधुपर्क) refers to the “reception of the bride-groom at the bride’s house” and represents one of the various Marriage Rites (saṃskāra) according to the Āpastamba-gṛhya-sūtra
Madhuparka (मधुपर्क).—
1) ‘a mixture of honey’, a respectful offering made to a guest or to the bridegroom on his arrival at the door of the father of the bride; (its usual ingredients are five:dadhi sarpirjalaṃ kṣaudraṃ sitā caitaiśca pañcabhiḥ | procyate madhuparkaḥ); समांसो मधुपर्कः (samāṃso madhuparkaḥ) Uttararāmacarita 4; असिस्वदद्यन्मधु- पर्कमर्पितं स तद् व्यधात्तर्कमुदर्कदर्शिनाम् । यदैष पास्यन्मधु भीमजाधरं मिषेण पुण्याहविधिं तदा कृतम् (asisvadadyanmadhu- parkamarpitaṃ sa tad vyadhāttarkamudarkadarśinām | yadaiṣa pāsyanmadhu bhīmajādharaṃ miṣeṇa puṇyāhavidhiṃ tadā kṛtam) N.16.13; Manusmṛti 3.119 et seq.
2) the ceremony of receiving a guest.
A dish of curds, ghee and honey, to be offered to a respectable guest on his arrival. E. madhu honey, pṛc to sprinkle, aff. ghañ .
இந்துக்கள் எப்படி பசுமாடுகளை நடத்தினார்கள்?
வெள்ளைக்காரர்கள் போல பால் வற்றிய பசுக்களை இந்துக்கள் கொல்லவில்லை . அவைகளை கோ சாலையில் வைத்து இறுதிவரை காப்பாற்றினார்கள் .சாப்பாடு போட்ட அம்மாவை கிழவி யானவுடன் கொல்வது போல மேல் நாட்டினர் வயதான பசுக்களைக் கொல்கிறார்கள். மேல் நாட்டில் பசு மாட்டை ஒன்றரை வருடத்துக்கு ஒரு முறை கர்பமாக்குவது போல இந்துக்கள் செய்யவில்லை. செயற்கைக் கருத்தரிப்பையும் கையாளவில்லை.
வேதத்தில் அடிக்கடி வரும் உவமை வாத்சல்யம். பசுவானது அதன் கன்றிடம் காட்டும் அன்பு வாத்சல்யம். வத்ச என்றால் கன்று. இதிலிருந்துதான் வாக்ஸீன் என்ற மருந்து தொடர்பான சொல்லும் வந்தது .இந்த வாத்சல்யம் என்பதை அன்புக்கு உவமையாக பிற்கால சம்ஸ்க்ருத நூல்களும் கையாண்டன.
பசுவை தெய்வமாகப் போற்றியது இந்து கலாசாரம். இந்தியாவுக்கு வெளியே பிறந்த மதங்கள், பசுவை விலங்குகளாக கருதியதோடு அல்லாமல் அதை தெரு நாய்களுக்கும் கீழ்த்தரமாக நடத்துகின்றனர். மாடுகளையும் பன்றிகளையும் கோழிக்குஞ்சுகளையும் அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை அனிமல் ரைட்ஸ்Animal Rights காரர்கள் பள்ளிச் சிறுவர்களுக்கு டாக்குமென்டரியாகப் போட்டுக் காட்டியவுடன் வெள்ளைக்கார சிறுவர்களும் வெஜிட்டேரியங்களாக மாறி வருகிநின்றனர் .
மேலை நாடுகள் போல மிஷின்களை வைத்து, ஒட்ட ஓட்ட பால் கறப்பது போல அல்லாமல், இந்துக்கள், கன்றுக்கு பால் கொடுத்த பின்னர்தான் கறந்தனர் அல்லது கன்றுக்குத் தேவையான பாலை மிச்சம் வைத்தனர். பிறந்த கன்றினை அம்மா பார்க்கும் முன்பே பறித்துச் செல்லும் வழக்கமும் இல்லை.
இந்தியாவில் பசுக்களுக்கு வைக்கோல்/வைக்கல் அல்லது புல் அகத்திக் கீரை முதலிய வெஜிட்டேரியன்Vegetarian உணவே கொடுக்கப்படுகிறது . மேலை நாடுகளில் எலும்பு பவுடர் ( Bone Meal) போன்ற அசைவ உணவுகளும் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் ‘மேட் கவ் டிசீஸ்’Mad Cow Disease என்னும் பயங்கர நோய் பரவியவுடன் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. இந்த நோய் ஏற்பட்ட இடங்களில் பல்லாயிரம் பசுக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
உடனேயே நான் சொன்னேன்; அது தப்பு; மகாபாரதம் முதலிய கதைகளில் பிராமணர் துரோணர் போனர்வர்கள்தான் கமாண்ட ர்களாக இருந்தனர். அவர்கள் சிக்கன் சாப்பிட்டதாக சொல்லவில்லை. யானை, காண்டாமிருகம், குதிரை, காளை மாடு எல்லாம் மாமிசம் சாப்பிடுவதில்லை . ஆகையால் டின்னர் லேடி சொல்லுவதை நம்பாதே என்றேன்.
(இந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை முஸ்லீம்; ஆகையால் முஸ்லீம் டின்னர் லேடிக்களை நியமித்திருக்கிறார் போலும். டினார் லேடி என்போர் பள்ளிக்குழந்தைகள் லன்ச் சாப்பிடும் பொது பகுதி நேர வேலை செய்வோர். இது நான் வசிக்கும் லண்டனில் சென்ற ஆண்டு நடந்தது; மேலை நாடுகளில், குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இது போல நிறைய பிரச்சனைகள் வருகின்றன. கல்வி அதிகாரிகளும் முஸ்லீம் பள்ளிகளை எச்சரித்து வருகின்றனர்.
Pupils at six small Muslim private schools in East London are at risk of extremist views and radicalisation, says Ofsted’s chief inspector. Sir Michael Wilshaw said the pupils’ “physical and educational welfare is at serious risk” following a series of emergency inspections.
பேரக் குழந்தையின் உதவி
நான் பிறப்பிலேயே வெஜிட்டேரியன் எங்கள் வீட்டில் கைலி கட்டும் ஆட்கள் கிடையாது; மது பாட்டில்கள் கிடையாது . மாமிசமும் கிடையாது என் குழந்தைகளையும் , பேரக்குழந்தைகளையும் பகுதி நேரமாக கவனித்த (Part Time Babysitters, Child minders ) பேபி சீட்டர்கள் சைல்ட் மைண்டர்கள்: — இரண்டு ஐரிஷ் பெண்மணிகள், 2 பிராமணப் பெண்மணிகள், ஒரு பாகிஸ்தானிய பெண்மணி. ஒரு பிராமண பெண்மணியைத் தவிர மற்ற எல்லோரும் நாங்கள் சொன்ன வெஜிட்டேரியன் வரைமுறைகளை தாண்டியதே இல்லை. ஒரு பிராமண பெண்மணி மட்டும், குழந்தைகளுக்கு சிக்கன், முட்டை எல்லாம் கொடுக்கலாமில்லியோ? என் பையன் பெண்ணுக்கு நான் கொடுக்கிறேன் அப்பத்தான் பலம் வரும் என்றாள் ; எனக்கும் என் மனைவிக்கும் தூக்கிவாரிப் போட்டது .
அடக் கடவுளே; எங்கள் குடும்பத்தில் அந்த வழக்கம் இல்லை. தயவு செய்து கண்ணில் காட்டிவிடாதீர்கள் என்று கெஞ்சாக் குறை யாக வேண்டிக்கொண்டோம் . பின்னர் லண்டனிலேயே மூன்று சிக்கன் பிராமணக் குடும்பங்களை சந்தித்து விட்டோம்!!!. மேலை நாட்டில் இந்துப் பண்பாட்டின்படி குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினம்!
எனக்கு அசைவ உணவுகளை பார்க்கக்கூட பிடிக்காது ; இதனால் லண்டன் ரோட்டில் அந்தப்பக்கம் கண் செல்லாமல் நடந்து விடுவேன் . இரவு நேரத்தில் குக்கரி — உணவு சம்பந்தமான டாக்குமெண்டரிகளை (Cookery Documentaries) 6 வயதுப் பேரக்குழந்தையுடன் அமர்ந்து பார்ப்பேன். அப்போது ஒரு வெஜிட்டேரியன் ஐட்டம் வரும்; அடுத்ததாக நான் வெஜிட்டேரியன் டிஷ் வரும். உடனே கண்களை மூடிக்கொண்டு “ஐயோ இது போன வுடன் என்னிடம் சொல்லு” என்று என் பேரனிடம் வேண்டுவேன். அடுத்ததாக திடீரென்று ஒரு அசைவ உணவு வரும். அவன் “தாத்தா கண்ணை மூடு ,கண்ணை மூடு என்று சொல்லிச் சிரிப்பான். அவனுடன் நான் கண்ணா மூச்சி விளையாட்டு விளையாடுவதாக அவனுக்கு நினைப்பு; எனக்கோ அருவருப்பு. சின்னக் குழந்தைகளுக்கு நம்முடைய பிலாசபி புரியுமா? இருந்த போதிலும் அவன் அவ்வப்போது எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது.
என்னுடைய 3 (வேகன்VEGAN) கசப்பான அனுபவங்கள் !
நான் பிரென்ட் வட்டார (லண்டன் வெம்பிளி) சாக்ரே (Standing Advisory Council for Religious Education) அமைப்பில் இந்து மத பிரதிநிதியாக சேவை செயதேன் . ஆண்டு பொதுச் சபைக்கூட்டத்தில் வெஜிட்டேரியன் உணவு வேண்டும் என்ற பாக்ஸை டிக் செய் திருந்தேன். நீ வேகன் தானே என்று சொல்லி ஓரு லேடி ஓர் பாக்சை கொண்டுவந்து வைத்தாள் ; அதாவது விமானத்தில் டயாபடீஸ் காரர்களுக்கு முதலில் உணவு பரிமாறுவது போல ஸ்பெஷல் மரியாதை. அந்த பாக்ஸில் பழத்துண்டுகளும் இலை தழை களும் மட்டுமே இருந்தன. அந்த லேடிக்கு வெஜிட்டேரியன் –வேகன் வேறுபாடு தெரியவில்லை . நான் நைசாக அதை ஒதுக்கிவிட்டு மெயின் க்யூவில் நின்று எனக்கு வேண்டிய உணவு வகைகளை எடுத்துக்கொண்டேன்; தப்பித் தவறி விமானத்தில் வேகன் என்று சொல்லிவிடாதீர்கள்; அங்கும் இப்படித்தான் இலைதழைகளைக் கொடுப்பார்கள்.
குடும்பத்துடன் வியன்னா (ஆஸ்திரியா), மாட்ரிட் (ஸ்பெயின்) போயிருந்தோம். பெரிய பச்சை வர்ண போர்டில் வேகன் ரெஸ்டாரண்ட் என்று எழுதியிருந்தனர் .மகிழ்ச்சி பொங்க ஒரு பெரிய டேபிளைப் பிடித்து , நாக்கில் உமிழ் நீர் சுரக்க மெனு அட்டையைப் புரட்டினேன். Dad /டாட் என்று சொல்லிக்கொண்டு என் பையன் ஒரு பக்கத்தைக் காட்டினான். உலகிலுள்ள பிரபல நண்டு , மீன் , இறால் வகை உணவுகளைப் பட்டியல் போட்ட ஐட்டத்தைக் கண்டு திடுக்கிட்டோம். அவர்கள் கணக்கில் வேகன் என்றால் பால் பண்ணை உணவுகள் கூடாது; கடல் உணவுகள் ஓ.கே ஒரு வழியாக மனத்தைத் தேற்றிக்கொண்டு NO FISH, NO EGG, NO MEAT, NO CHICKEN: ONLY VEGETARIAN FOOD, PLEASE !!!நோ பிஷ், நோ எக் , நோ மீட், ஒன்லி வெஜிட்டேரியன் என்று சொல்லி வெஜிட்டேரியன் மட்டும் ஆர்டர் செய்தோம்.
இன்னொரு இடத்தில் இரவு 9 மணி ஆகிவிட்டது ; எல்லோருக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. இறுதியாக ஒரு தாய் (தாய் லாந்து) உணவு விடுதியைக் கண்டுபிடித்து வெஜிட்டேரியன் கிடைக்குமா ? என்று கேட்டோம். கிடைக்கும் என்றார்கள்; ஒரே சந்தோஷம். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட்டோம் என்று மகிழ்ந்தோம். வழக்கம் போல பல்லவி பாடினோம்- NO FISH, NO EGG, NO MEAT, NO CHICKEN: ONLY VEGETARIAN FOOD, PLEASE !!!நோ பிஷ், நோ எக், நோ மீட், நோ சிக்கன் என்ற பல்லவி பாடினோம். அந்தபெண்மணி சொன்னாள் : நாங்கள் பிஷ் ஆயில் போட்டுத்தான் சமைப்போம் என்றாள் . தேங்க் யூ; குட் நைட் என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம் . ஏகாதசி விரதம் அனுஷ்டிக்காமல் இருந்ததற்காக கடவுள் கொடுத்த தண்டனை என்று சொல்லி ரொட்டி பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டோம். பேரக் குழந்தைகள் அதற்குள்த் தூங்கிவிட்டன.
—subham—
Tags-மதுபர்க்கம், என்றால் என்ன, வேகன், VEGAN எலும்பு பவுடர், பால் சாப்பிடுவது, நல்லதா கெட்டதா, வாத்சல்யம். கசப்பான அனுபவங்கள், டின்னர் லேடிகள், என் சொந்தக் கதை , milking
சந்நியாசி வேஷம் தரித்து அழகான காவித்துணி உடுத்தியவனாய் குடை உடையவனாய் பாதுகைகளை அணிந்து தோளில் அழகிய தண்டத்தையும் கமண்டலத்தையும் வைத்துக் கொண்டு சீதா தேவியை அணுகிய ராவணன், “சுந்தரீ, ஸ்த்ரீ ரத்தினமே! நீ யார்?” என்றான்.
“நீ யாரைச் சேர்ந்தவள்? எங்கிருந்து வந்திருக்கிறாய்? என்ன காரணமாக தனியாக அரக்கர்கள் வசிக்கும் பயங்கரமான தண்டகாரண்ய பிரதேசத்தில் வசிக்கின்றாய்?” என்று இப்படி அடுக்கடுக்காய் கேள்விகளை ராவணன் தொடுக்கிறான்.
அவனை ஒரு புண்ணீயவானாகக் கருதிய சீதை அவனை வரவேற்று உபசரிக்கிறாள்.
“உட்காருங்கள்! இதோ பாத்யம்! தங்களுக்குப் பழவகை சித்தமாக இருக்கிறது” என்று வந்த சந்நியாசியைப் பார்த்து சீதை உபசரிக்கிறாள்.
ஆரண்ய காண்டம் 47-வது ஸர்க்கம் ராவணனை திரஸ்கரிப்பது என்ற ஸர்க்கமாகும்.
தனக்குள்ளேயே ஆலோசிக்கிறாள் சீதை.
ப்ராஹ்மணச்சாதிதிஸாயமனுக்தகோ ஹி சபேத் மாம் |
இதி த்யாத்வா முகூர்த்தம் து சீதா வசனமப்ரவீத் ||
– ஆரண்ய காண்டம் 47-ம் ஸர்க்கம், இரண்டாம் ஸ்லோகம்
சீதா – சீதா தேவி
அயம் – “இவர்
அதிதி – அதிதி
ச – மேலும்
ப்ராஹ்மண ச – அந்தணர்
அநுக்த: ஹி – பதில் சொல்லப்படாவிட்டால்
மாம் சபேத என்னை சபிப்பார்”
இதி – என்று
முகூர்த்தம் – கொஞ்ச நேரம்
த்யாத்வா து – ஆலோசனை செய்து விட்டு
வசனம் – பின்வரும் சொல்லை
அப்ரவீத் – அருளிச் செய்தனள்.
வந்த அதிதிக்கு பதில் சொல்லாவிடில் அவர் சபிப்பார் என்று சீதா தேவி தனக்குள் ஆலோசிப்பது வரும் சாபத்தைத் தவிர்க்கும் எண்ணமாக அமைகிறது. சாபம் இங்கு தரப்படாவிட்டாலும் சாபம் வரலாம் என்ற பயம் இங்கு தொனிக்கிறது.
ஆகவே அவர் பின்னர் தன்னை ராமரின் மனைவி சீதை என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்.
(Welcome to London : Try lifting 13 Kilo Gold Bar in London Museum (Post No.13,292) was posted here on 31 May 2024 and Tower Bridge posted on 4th June 2024; London Changing was posted here in year 2012)
London Swaminathan with The Shards in the background; September 2024
Many tourists miss two important land marks in London. You don’t need to feel guilty for missing the Tallest building The Shards in Britain if you have visited London before 2012. But you will feel guilty if you have missed the finest and oldest , seven floor toy store Hamleys.
From the day I came to London on January First,1987, I have visited this toy store umpteen times. But if you go with children you must be ready to spend some money. They won’t allow you to leave the building without you buying toys or games for them. If any friend or relative comes to London with plenty of time to spend, I take them to Hamleys. You need not be a child to visit this store. At the age of 76, I went to the store in September 2024 with my visitors, I still enjoyed the amazing toys. I used to resent why didn’t I have such toys when I was young. Every time I go there I see newer and newer toys.
Every time my mother took me and my brothers to Madurai Meenakshi Temple, we would cry to get some toys the value of which was 6 annas or 4 annas, in today’s money it is only a few pennies. Before entering the main shrines you would see hundreds of shops (Now they were cleared for security reasons)
To be honest I never entered the tallest building The Shards. But I have been to the entrance to take pictures or to attend multi faith prayers at the nearby Southwark Cathedral. I take our Bhajan group to sing there. And I introduce the singers and the Bhajan songs.
London Swaminathan with LEGO Queen Elizabeth; picture taken in September 2024.
xxxx
Now let me give the details:
Shard-Tallest Tower in West Europe
You can go up the building after buying a ticket and enjoy 360 degree views of London from the highest viewing platform.
Location: London Bridge
Nearest Underground: London Bridge
Height: 1016 feet (95 floors),covered with glass.
What is it: Tall building with space for residences and office. A restaurant for general public opened in February 2013.
Opened: in July 2012
The View from The Shard allows you to go inside The Shard building and look out over London from the viewing platforms on levels 68 and 69. You can also head up to the Skydeck on level 72 – an open-air platform offering spectacular views over London.
Before or after enjoying the views, grab a drink, snack or meal from the top bars and restaurants at The Shard, including Ting, Aqua Shard, Hutong and Oblix.
The Shard was an ambitious project dreamt up by the late Irvine Sellar. A property developer who wanted to create an architecturally striking building where a vibrant community could thrive in the heart of London.
Architect, Renzo Piano, was the person who made such a dream a reality. Inspired by the spires of London’s churches, Piano designed the vertical city so that the striking yet elegant building appears to emerge from the Thames, disappearing into the clouds above.
Today this office, retail, hotel, restaurant, apartment and public viewing space serves thousands of locals and visitors every day, becoming an iconic landmark in the London skyline.
The closest stations to The Shard are London Bridge Underground Station (Northern and Jubilee Lines) and London Bridge Railway Station (Southern and Southeastern trains).
Tickets to The View from The Shard cost £28.00 per person. Admittance is free for children aged three and under. Entry to our indoor viewing platforms on levels 68 and 69
Entry to our outdoor viewing platform on level 72 – our Skydeck
The Shard is 306m (1,016ft) tall. It is the tallest building in the United Kingdom and the seventh tallest building in Europe.
How long does View from the Shard take?
There is no time limit for the View from the Shard experience. Book your timeslot tickets and then once inside, you can enjoy the experience for as long as like, until closing time.
xxxx
Wonderful Seven Floor Toy Store! Hamleys at Regent Street, London! Bought by Ambani
Mukesh Ambani bought the world’s oldest toy store Hamleys at Rs 620 crore in an all-cash deal. Mukesh Ambani, India’s richest man and head of Reliance Industries owns Hamleys, the world’s oldest toy store. Hamleys was established in 1760 by William Hamley.
Hamleys in London’s Regent Steet is a multi-storey toy store; seven floors of demonstrations, events and elaborate displays.
William Hamleys opened its first store in Hall Bourne, London in 1760 and in 1881 his grandson opened a new toy store named Joy Emporium on Regent Street which was appreciated by the royal family of Britain.
The British monarch Queen Elizabeth described the Hamleys store as her favourite toy store in the year 1955. With time, Hamleys has grown its global presence in Europe, Asia, the Middle East, Africa, and North America.
Hamleys currently has 100 stores spread across 36 cities. It is currently the country’s largest toy retailer. Over half of the 190 locations that the Reliance-owned Hamleys currently operate worldwide are in India. Hamleys toys are famous among children and their parents across the world.
the billionaire Mukesh Ambani has boosted his retail spending internationally over the past several years and has expressed interest in purchasing new businesses as part of Reliance’s ambitious expansion strategy for its retail company.
Mukesh Ambani and Isha Ambani-led Reliance Retail is now valued at a whopping Rs 9,26,055 crore by brokerage firm Bernstein.
London Regent Street 188-196 Regent Street London W1B 5BT United Kingdom
Nearest tube stations
Oxford Circus – 2 minute walk
Picadilly Circus – 6 minute walk
Tottenham Court Rd – 10 minute walk
—subham—
Tags- The Shars, Hamleys , Toy Store, Tallest Building, London, welcome to London
யானைகள் பற்றி இந்து மத புராணங்கள் என்ன சொல்லிற்றோ பஞ்ச தந்திரக் கதைகள் என்ன சொல்லிற்றோ கஜேந்திர மோட்சக் கதை என்ன சொல்லிற்றோ அதை இப்போது விஞ்ஞானிகள் சொல்லி ஏதோ புதிதாக கண்டுபிடித்ததாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் . எல்லா பத்திரிகைகளும் இதைச் சிறப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன
சங்கத் தமிழ் நூல்களும் அதற்கு முன்னதாக சம்ஸ்க்ருத நூல்களும் பிராணிகள் கனவு காண்பதை பாடல்களில் செப்பின. வெள்ளைக்காரர்கள் அண்மைக்காலத்தில் இதை பெரிய ஆராய்ச்சியாக வெளியிட்டனர் .
விலங்குகளும் பறவைகளும் கூடு கட்டுவது முதல் உணவுப் பண்டங்களைத் தேடுவது வரை பல கருவிகளை பயன்படுத்துகின்றன என்று நாம் சொன்னதை அண்மைக்காலத்தில்தான் மேலை நாட்டு அறிவியல் சஞ்சிகைகள் வெளியிட்டன .
சந்திரனும் தாவரங்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன என்று இந்துக்கள் சொன்னதை இதுவரை அவர்கள் சொல்லவில்லை. கொஞ்ச காலம் கழித்துச் சொல்லுவார்கள்; அப்போது நாம் மார் தட்டிக்கொள்ளலாம் .
நவ கிரக ஸ்தோத்திரத்தில் நாம் என்னென்னெ கிரகங்களுக்கு என்ன உறவுமுறை என்று சொல்லியுள்ளோம். இன்னும் நாஸா NASA அதைச் சொல்லவில்லை. பாதியயை மட்டும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் .
ஆல்ப்ரெட் ஐன்ஸ்டைன் சொன்னார்- ஒளியின் வேகம்தான்; அதை பிரபஞ்சத்தில் யாரும் விஞ்ச இயலாது; அப்படிப் போனால் அந்த ராக்கெட்டில் செல்லுவோர் என்றும் 16 வயது மார்கண்டேயனாக இருப்பர் என்று. ஆனால் நாமோ மனோவேகம் அதைவிட வேகமானது அதன் மூலம் வேற்றுலகங்களுக்குச் செல்லலாம் என்று நம்மாழ்வார் , சுந்தரர் , சம்பந்தர் பாடல்கள் மூலமும் , ரேவதி நட்சத்திரக் கதை மூலமும்- அர்ஜுனன் மாதலி தேரில் விண்ணுலகம் சென்று திருப்பிய மஹாபாரத வன பர்வக் கதை மூலமும் காட்டிவிட்டோம்.
எண்ண அலைகள் மூலம் இயங்கும் அதிவேக புஷ்பக விமானத்தை ராமாயணத்தில் காட்டிவிட்டோம் .
யானைகளும் நம்மைபோல பெயர் சொல்லித்தான் உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
யானைகள் தனது சகயானைகளை பெயர்ச்சொல்லி அழைப்பதாக சபத்திரிகைகள் பெரிய செய்திகளை வெளியிட்டு ஏதோ புதிதாகக் கண்டுபிடித்ததாகப் பெருமை பேசுகின்றன.
கஜேந்திர மோட்சக்கத்தை 2000 ஆண்டுக்கு முந்தைய புராணக் கதைகளிலும் குப்தர் கால சிற்பங்களிலும் உள்ளன. அதில் கஜேந்திரன் என்ற பெயர்கொண்ட யானை விஷ்ணுவை அழைத்தவுடன் அவர் வந்து அதை முதலையிடமிருந்து காப்பாற்றினார். இதில் யானையின் பெயர் உள்ளது; யானையின் பேச்சு உள்ளது.
அஸ்வத்தாமா
அஸ்வத்தாமா செத்துப்போச்சு என்று தர்மன் சொன்ன பொய் மஹாபாரதப் போரின் போக்கையே மாற்றி, கெளவர்களைப் படுதோல்வி அடைய வைத்தது. அஸ்வத்தாமா என்ற பெயர் யானைக்கும் உண்டு; படைத்த தளபதி பிராமணன் துரோணரின் மகனுக்கும் உண்டு.. வழக்கம் போல கிருஷ்ணர் தனது ராஜ தந்திரத்தைப் பயன்படுத்தி அஸ்வத்தாமா யானையைக் கொன்று அதை உரத்த குரலில் அறிவிக்க தருமன் என்னும் யுதிட்டிரனை வேண்டினார் . ஆனால் அஸ்வத்தாமா எனும் யானை என்பதை தாழ்ந்த குரலில் சொல்லச் சொன்னார் ; இதுதான் ராஜ தந்திரம் ! நமக்கு இந்தக் கதையில் வேண்டிய விஷயம் 5200 ஆண்டுகளுக்கு முன்னரே யானைக்கு பெயர் இருந்தது என்பதாகும்.
நாம் நம் வீடுகளில் வசிக்கும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் பெயர் வைத்து அதைச் சொன்னவுடன் ஓடி வருவது போல அந்தக் காலத்தில் யானைகளுக்கும் பெயர் வைத்தனர்..
அது சரி ; மிருகங்கள் தமக்குள் பேசிக்கொண்டனவா? அதற்கு எங்கே சான்று? பஞ்சதந்திரக்கதைகளில் எல்லா மிருகங்களுக்கும் பெயர்கள் உள்ளன. அவைகளை ஒன்றுக்கொன்று பேசியதை எல்லாக் கதைகளிலும் காணலாம்.
சத்ய சாயிபாபா வளர்த்த சாயிகீதா என்ற யானையுடன் அவர் பேசிய கதை பாபா வெப்சைட்டில் உள்ளது
இது தவிர புத்தர் அடக்கிய யானையின் பெயர் நளகிரி; இந்திரனின் யானையின் பெயர் ஐராவதம் அஷ்ட திக் கஜங்கள் எனும் எட்டு திசை யானைகளுக்குப் பெயர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் சங்க இலக்கியத்தில் வரும் காரி, ஓரி என்பன அவர்கள் வளர்த்த குதிரைகளுக்கு உன்டு அலெக்ஸ்சாண்டர் கூட தனது குதிரைக்கு பூ செபலஸ் என்று பெயர் வைத்தார்.
கிருஷ்ணன் கொன்ற யானையின் பெயர் குவலயாபீடம்;
முருகன் பயணம் செய்யும் யானையின் பெயர் பிணி முகம்
குருவாயூரில் உள்ள ஒவ்வொரு யானைக்கும் பெயர் உண்டு.
Karikal Choza
உதயனின் கதையில் வரும் யானை, சந்திர காந்தா என்ற யானை கரிகால் சோழனுக்கு மாலைபோட்டு அரசனாக்கிய யானை , மூர்த்தி நாயனாருக்கு மாலை போட்டு பாண்டிய மாமன்னனாக்கிய யானை எல்லாம்– யானையின் அறிவினைக் காட்டுகின்றன. தமிழ்த் தாத்தா உ.வே.ஸா . சொன்ன உண்மைக்கதைகள் முதலியனவும் யானை அறிவினை விளக்கும்
ஆகையால் யானைக்குப் பெயர் இருந்தது, அவை பேசியது முதலிய ஒவ்வொன்றையும் நமது இலக்கியங்கள் முன்னரே செப்பிவிட்டன .
xxxx
இனி பத்திரிகைச் செய்தியைக் காண்போம்
டால்ஃபின், கிளி போன்றவை சில உயிரினங்கள், சில நேரம் குறும்புத்தனமாக சக டால்ஃபின் அல்லது கிளி எழுப்பும் ஒலியைக் கேட்டு அதேபோல் ஒலியெழுப்புவதுண்டு. அதிலும்கூட சில கிளிகள் நாம் பேசுவதை தெளிவாக திரும்பவும் நம்மிடையே பேசும். ஆனால், இவையாவும் வெறும் ஒலி மட்டுமே. அதாவது, சுயமாக அவை யோசித்து பேசுவதில்லை. மொழியாக அவற்றுக்கு தெரியாது. வெறுமனே நாம் எழுப்பும் ஒலியை, திரும்பவும் அவை நம்மிடமே எழுப்புகின்றன.
ஆனால் இவை போல இல்லாமல், மனிதர்களை போலவே யானைகள் தங்களின் சக யானைகளை தங்கள் மொழியில் பெயர் சொல்லி அழைக்கும்.
இது குறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில் “மனிதர்கள் பெயர் வைத்து அழைப்பது போலவே, ஒவ்வொரு யானையும் தனது சக யானைக்கு குறிப்பிட்ட அழைப்பு ஒலியை எழுப்புகின்றன. தங்களுக்கான அழைப்பொலியை தவிர மற்ற யானைகளுக்கான அழைப்பொலியை யானைகள் நிராகரித்து விடுகிறது என்பது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமீபத்திய ஆய்வு ஒன்று இதை கண்டறிந்துள்ளது.
கென்யாவில் உள்ள அனைத்துலக ஆய்வாளர் குழு ஒன்று இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில், அம்போஸ்லி தேசிய பூங்காவைச் சேர்ந்த இரண்டு யானை மந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தி கார்டியன் The Guardian பத்திரிகையின்படி, 36 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. யானைகளை பொறுத்தவரை பலவிதமான சப்தங்களை அவை எழுப்பக்கூடும். அதிக ஒலியை எழுப்பும் எக்காளங்கள் முதல் தாழ்வான சத்தம் வரை அவற்றில் பலவகைகள் உள்ளன. ஆனால், அனைத்து சத்தங்களும் மனிதர்களின் செவிகளுக்கு கேட்பதில்லை.
1986-2022 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், யானைகள் எழுப்பும் சிறிய அளவிலான அழைப்பொலிகளின் பதிவுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். யானைகள் எழுப்பும் பேரொலியானது பிளிறல் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆய்வில் 468 தனிப்பட்ட அழைப்பொலிகள் அடையாளம் காணப்பட்டன. அதில், 101 யானைகள் அத்தகைய அழைப்பொலிகளை எழுப்பியுள்ளன, 117 யானைகள் அந்த அழைப்பொலிக்கு பதிலளித்துள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் முடிவுகளானது, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் இளம் யானைகளை வயதில் முதிர்ந்த யானைகளே பெயர் சொல்லி அழைக்கிறார்களாம். மேலும், இதை பழக இளம் யானைகளுக்கு சிறிது காலம் எடுத்துக்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
Elephants call out to each other using individual names that they invent for their fellow pachyderms, according to a new study.
While dolphins and parrots have been observed addressing each other by mimicking the sound of others from their species, elephants are the first non-human animals known to use names that do not involve imitation, the researchers suggested.
For the new study published on Monday, a team of international researchers used an artificial intelligence algorithm to analyse the calls of two wild herds of African savanna elephants in Kenya.
The research “not only shows that elephants use specific vocalisations for each individual, but that they recognise and react to a call addressed to them while ignoring those addressed to others”, the lead study author, Michael Pardo, said.
“This indicates that elephants can determine whether a call was intended for them just by hearing the call, even when out of its original context,” the behavioural ecologist at Colorado State University said in a statement.
The researchers sifted through elephant “rumbles” recorded at Kenya’s Samburu national reserve and Amboseli national park between 1986 and 2022.
Using a machine-learning algorithm, they identified 469 distinct calls, which included 101 elephants issuing a call and 117 receiving one.
Elephants make a wide range of sounds, from loud trumpeting to rumbles so low they cannot be heard by the human ear.
—subham—
Tags-யானைகள் பெயர்கள், அழைக்கும் , புதிய கண்டுபிடிப்பு , கென்யா, சாயிகீதா
நம் எல்லோருக்கும் தெரியும் பாலில் எல்லாவித சத்துக்களும் இருப்பதால் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை பால் சாப்பிடுகிறார்கள் ; இது என்ன அசட்டுப்பிசட்டான கேள்வி ? பால் சாப்பிடுவது நல்லது என்றல்லவா கட்டுரைத் தலைப்பு இருக்கவேண்டும் என்று உடனே ஒரு சிலர் போர்க்கொடி தூக்கி விடுவார்கள் என்று எனக்குத் தெரியும். அது இந்தியாவில்தான். மேலை நாடுகளில் இல்லை. ஒரு வேளை கட்டுரையைப் படித்து முடித்தவுடன் நீங்களே பால் சாப்பிடுவதை நிறுத்தினாலும் ஆச் சரியப்படமாட்டேன் . ஒரு வேளை ரத்தக் கண்ணீர் சிந்துவீர்கள்!
மேலை நாடுகளில் பசு மாடுகளை எப்படி வளர்க்கிறார்கள் ?
கொடுமையிலும் கொடுமை !
கன்று பிறந்தால்தான் மாடு பால் சுரக்கும் . இதற்காக முதல் கன்று போட்ட மூன்றாம் மாதத்தில் அதை செயற்கை முறையில் மீண்டும் மீண்டும் கருத்தரிக்க வைக்கிறார்கள்.
கன்று போட்டவுடன் அந்தக் கன்றினை எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள்.
அது ஆண் கன்றாக இருந்தால் மாட்டு மாமிசத்துக்கு BEEF வளர்த்து பலி இடுகிறார்கள். பெண் கன்றாக இருந்தால் அதை வளர்த்து (தாயைப் பார்க்காமலேயே) மீண்டும் மீண்டும் கர்ப்பமாக்கி வதைக்கிறார்கள் .
பண்ணையின் கொள்ளளவுக்கு மேல் கன்றுகள் இருந்தால் கூசாமல் சுட்டுக் கொல் கிறார்கள்.
பசுக்களை வெளியே மேய விடாமல் கூண்டுக்குள் அடைக்கிறார்கள் .
ஒவ்வொரு நாளும் மிஷின் மூலம் ஓட்ட ஓட்ட பால் கறக் கிறார்கள் ; அப்படி கறக்கும் போது பசுவின் முடி, நிணம் எல்லாம் வந்து விடும்.
ஆண் கன்றாக இருந்தால் அதை கொழுக்க வைக்க கண்ட கண்ட உணவுகளைக் கொடுத்து மேயவிட்டு, கொன்று மாட்டு மாமிசமமாக விற்கிறார்கள்.
தாய்ப்பசு பால் கறக்காது போனால் கொன்று குவித்து குப்பைத் தொட்டியில் எறிகிறார்கள் பால் கற்கும் எந்திரம் ஒரு வட்டச் சக்கரம் போல இருக்கும். ஒவ்வொன்றாக பால் கறக்கும் இடத்திற்கு வந்தவுடன் பாலைக் கறக்கும். இதுதான் அவர்களின் சிறை வாழ்வு . இவ்வளவையும் நமது சகோதரிக்கோ அம்மாவுக்கோ வருவதாக நினைத்துப் பாருங்கள் ரத்தக் கண்ணீர் சிந்துவீர்கள். இது தொடர்பான படங்களைப் பார்த்தால் பால் சாப்பிடுவதையே நிறுத்திவிடுவீர்கள்.மாட்டைக் கொன்று தின்னும் மனிதமிருகங்களுக்கு மனிதாபிமானம் இருக்குமா ?
xxxxx
மஹாத்மா காந்தி பசும்பால் சாப்பிடுவதை ஏன் நிறுத்தினார் ?
பசும் பாலில் இருக்கும் ப்ரோட்டீன் Proteinசத்து அசைவ சத்து என்பது அவரது நம்பிக்கை. மேலும் கன்றுக்குப் பால் கொடுக்காமல் பசுவை வாட்டுவது பாவம் என்று கருதினார்.
இன்று மேலை நாட்டில் நடக்கும் கொடுமைகள் காந்திஜிக்குத் தெரிந்திருந்தால் அவர் உடனே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்திருப்பார்.
இந்தியாவில் பால் பண்ணைகளில் மாடுகள் நடத்தப்படும் முறை குறித்து காந்திஜி தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்ததை அவரது சுயசரிதையில் காண முடிகிறது . குழந்தைகளாக இருக்கும்போது சாப்பிட்ட தாயப் பாலே போதும் என்பது அவரது நம்பிக்கை. இனி பசும் பால் சாப்பிடுவதில்லை என்று 1912ம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவிலுள்ள டால்ஸ்டாய் Tolstoy farm பண்ணையில் அவரும் நண்பர் ஹெர்மன் கல்லென்பாக்கும் Hermann Kallenbach உறுதிமொழி எடுத்தனர்
பிற்காலத்தில் காந்திஜி கடும் நோய்வாய்ப்பட்டார் . அப்போது டாக்டர்கள் அவரை மாமிச சத்து அல்லது முட்டை அல்லது பசும்பால் சாப்பிடச் சொன்னார்கள்; காந்திஜி மறுத்துவிட்டார். அவரது மனைவி சொன்ன படி ஆட்டுப் பால் சாப்பிட்டார். அதிலும் அவருக்கு மன வருத்தமே ஏற்பட்டது.
xxxx
லாக்டோஸ் ரெசிஸ்டன்ஸ் Lactose Intolerance or Resistance என்றால் என்ன ? வேகன்VEGAN என்றால் என்ன?
லாக்டொஸ் என்பது பாலில் உள்ள சர்க்கரைச் சத்து ஆகும். சிலருக்கு இது எளிதில் ஜீரணம் ஆகாது அப்படிவரும் அஜீரணக் கோளாறுகள் அவர்களை வயிற்றில் பொருமலையும் வாயுவையும், வயிற்றுப் போக்கையும், எளிதில் உணவு செ மிக்காமையும் உண்டாக்கும். இது வியாதி அல்ல; ஆனால் தாங்க முடியாத அசெளகாரியத்தைத் தரும். ஏனிந்த லாக்டோஸ் ஒவ்வாமை ஏற்படுகிறது? சிலருக்கு அந்த வகை மரபணு (ஜீன்) LCT gene பிறக்கையிலேயே இருக்கிறது மற்றும் சிலர் நோய்வாய்ப்பட்ட காலத்தில் குடல் பாதிக்கப்பட்டாலும் திடீரென்று லாக்டோஸ் ஒவ்வாமை வந்துவிடும். இதனால் அவர்கள் பால் மட்டுமின்றி தயிர், மோர், சீஸ் , வெண்ணெய் என்ற பால் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும்DAIRY PRODUCTS தவிர்க்கிறார்கள் இவர்களை வேகன் என்று அழைக்கிறார்கள்
வேகன் என்ற கொள்கை பரவவே பலரும் மேலை நாடுகளில் ஓட்ஸ் மில்க்/பால் , வாதாம்பருப்பு பால் , சோயா மில்க் , கோட் மில்க் (Oats, Almond, Soya Milk, Goat’s Milk) என்ற வகை பால் பொருட்களை பயன்படுத்தத் துவங்கி விட்டனர். இதன் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் லாக்டோஸ் ஒவ்வாமை பிரச்சனை வராது .
வேகன் என்பதும் வெஜிட்டேரியன் என்பதும் வேறு. இந்துக்கள் வேகன் இல்லை. இந்து மதத்தில் வேகன் பற்றிய குறிப்புகளும் இல்லை . பாலும் தெளி தேனும் கடவுளுக்கு தினமும் படைக்கப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு புது மண தம்பதிகளுக்கும் மது பர்க்க என்னும் பாலும் தெளி தேனும் அளிக்கப்படுகிறது . இது பெரும் மரியாதை ஆகும்
இந்துக்கள் எப்படி பசுமாடுகளை நடத்தினார்கள் ? மது பர்க்க என்றால் என்ன? எனக்கு ஏற்பட்ட கசப்பான வேகன் அனுபவங்கள் ; எனக்கு என் பேரக் குழந்தைகள் செய்யும் உதவி ஆகியவற்றை கட்டுரையின் இரண்டாம் பகுதியில் தருகிறேன்.