கங்கை  மீது அணை – சரியா? (Post No.13,141)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.141

Date uploaded in London – — 15 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கங்கை  மீது அணை – சரியா? 

ச.நாகராஜன்

 சுற்றுப்புறச் சூழலுக்கு மனிதன் செய்யும் கேடுகள் என்ற எனது முந்தைய கட்டுரையில் டாக்டர் கிருஷ்ண நாராயண் சென் (Dr krishna Narayan Sen) அவர்கள் குறிப்பிட்ட சில கருத்துக்களைத் தந்துள்ளேன்.

அவர் கங்கை மீது அணை கட்டுவது சரியா என்பதைக் குறித்த தனது கருத்தை அழகுற வெளிப்படுத்தியுள்ளார்.

அதை இங்கு கீழே தருகிறேன்.

ஒரு முறை ஜோஷி மடம் ஜகத்குரு சங்கராசாரியர் இப்படிக் குறிப்பிட்டார் : “எந்தப் பணியை நாம் செய்தாலும் அதில் நமக்கு பண லாபம் எவ்வளவு கிடைக்கிறது, ஆத்ம லாபம் எவ்வளவு கிடைக்கிறது என்று பார்த்தே செய்கிறோம். ஆனால் கங்கையின் மீது அணைகளைக் கட்டுவதால் இந்த இரண்டையுமே நாம் இழந்து விட்டோம்.”

ஒடி வரும் நீரைத் தடுத்துத் தேக்கி ஒரு அணையை உருவாக்குகிறோம். அது வெள்ளத்தைத் தடுக்கிறது, வயல்களுக்கு நீரைப் பாய்ச்ச வகை செய்கிறது, தொழிலகங்களுக்கு உதவுகிறது, மனிதனுக்கு நீரைத் தந்து உதவுகிறது, ஹைட்ரோ எலெக்ட்ரிக் ஆற்றலை உருவாக்கப் பயன்படுகிறது.

இவை எல்லாம் பேப்பரில் எழுதச் சரியானவை தான். ஆனால் நடைமுறையில் ஏராளமான பிரச்சினைகள் எழுகின்றன.  சுற்றுப்புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. பல்லுயிர் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.  செடி, கொடி, மலர்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன.

உலகின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட அணைகளால் 3,50,000 தாவரம் மற்றும் உயிரினங்களும் 110 லட்சம் மிருக இனங்களும் அழிந்து விட்டன என்று உத்தேசமாக மதிப்பிடப்படுகிறது.

மரங்கள், மிருகங்கள், நீர் வாழ் உயிரினங்கள் க்ரீன்ஹவுஸ் வாயு எனும் நச்சுப் புகையினால் உருமாறி அழிகின்றன. உயிர் பிழைத்திருக்கும் நீர் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பிற்காக வேறு இடத்தை நோக்கிச் செல்கின்றன.

இயல்பாகச் செல்லும் நீரோட்டம் பாதிக்கப்படுவதால் தாவர வகைகளும் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.

ஒரே இடத்தில் ஏராளமான நீர் தேக்கப்படுவதால் பூமியில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக பூகம்பம் ஏற்படுகிறது. அணையின் அடிப்பகுதியில் உள்ள பூமிப் பரப்பில் வெடிப்புகள் ஏற்படுகின்றன.

அஹ்மத் ஜொக்லஃப் என்னும் பல்லுயிர் இனப் பெருக்கம் பற்றிய ஐ நா அறிஞர் (AHMED DJOGHLAF, HEAD OF UN BIOLOGICAL DIVERSITY), ஒவ்வொரு மணி நேரமும் மூன்று உயிரினங்கள் அழிகின்றன – அதாவது ஒரு நாளுக்கு 72 உயிரினங்கள் அழிகின்றன- என்கிறார். அத்தோடு ஒவ்வொரு வருடமும் பல்லுயிர் இனப்பெருக்க அழிவால் 17000 ஹெக்டேர் காட்டு நிலங்கள் அழிக்கப்படுகின்றன. நீரை மாசுபடுத்துவதால் ஒவ்வொரு வருடமும் 4 கோடி குழந்தைகள் இறக்கின்றன. 10 கோடி நீர் வாழ் உயிரினங்கள் கடல் நீர் மாசுபடுவதால் ஒவ்வொரு வருடமும் அழிகின்றன. இது கடலில் சேரும் தொழிலகக் கழிவுகளால் ஏற்படும் அசுத்தத்தாலேயே பெரும்பாலும் ஏற்படுகிறது.

மூன்று பெரும் விஞ்ஞானிகள் கடவுள் மீதான நம்பிக்கை அறிவியல் முன்னேற்றத்துடன் இணைந்தே இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்க அரசைச் சேர்ந்த மரபியல் விஞ்ஞானியான டாக்டர் பிரான்ஸில் எஸ் காலின்ஸ் (Dr Francis S Collins, renowned geneticist of American Government), ஹார்வர்ட் வானியல் பேராசிரியரான டாக்டர் ஓவன் ஜிஞ்ஜெரிச் (Dr Owen Gingerich, emeritus professor of Astronomy in Harvard) மற்றும் ஸ்டான்ஃபோர்ட் உயிரியல் வல்லுநரான டாக்டர் ஜான் ரப்கார்டன் (Dr John Roughgarden, Evolutionary biologist at Stanford) ஆகிய மூவரே இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

உலகின் படைப்பானது தகுந்த மரியாதை செலுத்தப்பட வேண்டிய ஒன்று. அதன் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகுந்த அவசியம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார் : “கடவுள் உலகத்தை எப்படிப் படைத்தார் என அறிய நான் விரும்புகிறேன். இந்த அல்லது அந்த நிகழ்வில் எனக்கு ஆர்வம் இல்லை. அவனது எண்ணங்களை அறிய விரும்புகிறேன். மற்றவை எல்லாம் வெறும் விவரங்களே”

(I want to know, how God created the world. I am not interested in this or that phenomenon. I want to know His thoughts, the rest are details.)

ஆக, பெரும் அறிஞர்களே கவலைப்படும் அளவு மனிதனின் சுயநலம் மிக்க செயல்பாடுகள் உள்ளன, அவை படைப்பின் அருமையை சிதைக்கின்றன என்பது தெளிவாகிறது.

ஒவ்வொருவரும் சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டில் கவனம் செலுத்தி அதைக் காத்தால் இயற்கை நம்மை வாழ வைக்கும்!

***

ஆல்பர்ட் ஐன்டைனுக்கு தெரியாதது இந்துக்களுக்குத் தெரியும் ! (Post.13,140)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,140

Date uploaded in London – –   14 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நான் இரசாயனவியல், பெளதீக இயல், தாவர இயல், பிராணியியல் படித்து பி.எஸ் சி பட்டமும் பின்னர் இரண்டு சப்ஜெக்டுகளில் எம்.ஏ. பட்டங்களும் பெற்றவன். ஆகையால் தத்துப் பித்து என்று உளறமாட்டேன் . உலக மஹா மேதை ஆல்பர்ட் ஐன்டைனுக்குத் தெரியாத விஷயங்கள் இந்துக்களுக்குத் தெரிந்திருந்தது ; ஆயினும் கிரேக்கர், சகரர், ஹூனர், மங்கோலியர், முஸ்லீம், கிறிஸ்தவர் படை யெடுப்புகளால்  நமது அறிவியல் பொக்கிஷங்கள் அழிந்து விட்டன . அவை முன்னர் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் மட்டுமே இப்போது உள்ளன . ஒரு காலத்தில் நாஸா (The National Aeronautics and Space Administration = NASA ) போன்ற அமைப்புகள் இதைக் கண்டுபிடிக்கையில் நாங்கள் அன்றே இதைச் சொன்னோம் என்று பெருமை பேசலாம்.

one stone= Einstein

Apart from being a famous last name, einstein in German literally means ‘one stone’. The word is composed of ein which means one and stein which means stone or rock. The word is pronounced /aynshtayn/ .

ஐன்ஸ்டைன் (ஜெர்மன் மொழியில் இவர் பெயர் ஒரு கல் ; ஐந் = 1, ஸ்டைன் = கல்/ ஸ்டோன் ) என்ன சொன்னார்? ஒளியின் வேகம்தான் இந்த பிரபஞ்சத்தில் அதிக வேகம் உடையது ; ஒளி ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் செல்லும் Light from a stationary source travels at 300,000 km/sec (186,000 miles/sec). ஆனால் இந்த வேகத்தை மனிதர்கள் நெருங்கவே முடியாது ; ஏனெனில்  அதற்கு பிரம்மாண்டமான சக்தி தேவை; அப்படிப்பட்ட சக்தியை உண்டாக்க பிரம்மாண்டமான சக்திக் கேந்திரம் தேவை ; அதை நம்மால் உருவாக்க முடியாது

ஆனால் மஹாபாரதம் , ரேவதி நட்சத்திரக் கதை , நம்மாழ்வார் பாடல் முதலியன இந்துக்களின் வெளி உலக யாத்திரை பற்றித் தெளிவாக உரைக்கின்றன ஒரே நாளில் கிருஷ்ணனும் அர்ஜுனனும் சொர்க்கலோகம் சென்று, இறந்து போன 10 பிராமணக்  குழந்தைகைகளை மீட்டு  வந்ததை நம்மாழ்வார் பாசுரம் எடுத்துரைக்கிறது . இறந்து போன குழந்தைகளை சுந்தரரும் சம்பந்தரும் மீட்டு  வந்ததை தேவாரம் பாடுகிறது (இது பற்றி தனித்தனிக் கட்டுரைகளை முன்னரே எழுதிவிட்டதால் மீண்டும் சொல்லப் போவதில்லை )

வால்மீகி ராமாயணத்தில் THOUGHT POWERED SPACE SHUTTLE எண்ணத்தால் இயக்கும் ஸ்பேஸ் ஷட்டில் பற்றிக் காண்கிறோம் ; ஒரே நாளில் இலங்கையிலிருந்து ராமன் அயோத்தி செல்கிறார். மேலும் அந்த விண்கலம் எத்தனை பேர் ஏறினாலும் அதற்குத்தக்க விரிவடைகிறது . அதே போல அனுமனும் ஒரே நாளில் இலங்கையிலிருந்து இமயமலைக்குச் சென்று சஞ்சீவி மூலிகையைக் கொணர்ந்ததையும்  காண்கிறோம்.

இவ்வாறு விரைவில் செல்ல, சில குளிகைகளை உலகம் புகழும் மந்திரவாதி நாகார்ஜுனா 2000 ஆண்டுகளுக்கு முன்னர் யோக ரத்ன  மாலா  நூலில் செப்பிய விஷயங்களைக் காண்போம் .

xxxx

இடுப்பில் கரிசலாங்கண்ணி  (Bhringaraja (Eclipta alba) Karisilankanni ) மூலிகை, பொன் வண்டு, காக்க ஜங்கா சரபுங்கா , ஏல பலூக்கா மூலிகையைச் சுற்றிக்கொண்டு  ஒரு மனிதன் காற்றினும் கடுகிச் செல்லலாம் .

xxxx

மதன பலா, சரபுங்கா , பூர்ஜ பத்ராவின் பட்டை  ஒரே கலர்  உடைய பசுவின் பாலில் பொடித்து  காலில் பூசிக் கொள்ளவும; அ ப்படிச் செய்யும் மனிதன் களைப்பே தெரியாமல் ஒரே நாளில் நூற்றுக் கணக்கான மைல்கள் பயணம் செய்ய முடியும் .

XXXX

கிர்கலச , நக்தமாலை எலும்புகளை எடுத்து தம்பலப்பூச்சி, மயில் ரத்தத்தில்  கலந்து ஒரு மாத்திரை செய்யவும்; அதை ஒரு சிறிய தங்கத்தினால் ஆன சின்னப் பெட்டியில் வைக்கவும்;  அதை வாயில் அடக்கிக்கொண்டால்  ஒரு மனிதன் ஒரே  நாளில் 350 யோஜனை தூரம் செல்லலாம்.

ஒரு யோஜனை= எட்டு மைல்கள்

கிர்கலச = பச்சோந்தி; நக்தமாலா =  Pongamia glabra தாவரம்

XXXX

வனலோசன, கரிசிலாங்கண்ணி வேர் ஆகியவற்றை ஆட்டு வெண்ணெயில் பொடித்து, காலில் பூசிக்கொண்டால்  அந்த மனிதன் நினைத்த தூரம் செல்லலாம்.

அனுமன் இலங்கைக்குச் சென்றதும், சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர இமய மலை சென்றதும் இப்படித்தான் போலும்!

 குபேரனுடைய புஷ்பக விமானத்தை ராவணன் பறித்தான்.அதை ராவணன் மரணத்துக்குப் பின்னர் ராமன் பெற்றார்.அது நினைத்த மாத்திரத்தில் ஒரே நாளில் 4000 மைல் பயணம் செய்து ராமர் அணியை நந்திக் கிராமத்தில் இறக்கியது.  

இவைகளை எல்லாம் படிக்கையில் அக்காலத்தில் விண்வெளிப் பயணம் சகஜம் என்றே தோன்றுகிறது.

XXXX

ஒரு துளை அல்லது உள்ளீடுள்ள குழாயில், உயிருள்ள தேனீக்களை அடைக்கவும்; அதை வானில் தூக்கி எறிந்தால் அது கீழே

விழாமல் பறந்து கொண்டே இருக்கும் !

இது போல மேலும் பல அதிசயங்களையும் தீ உண்டாக்கும் அதிசயங்களையும் நாகார்ஜுனா பகர்கிறார்

–சுபம் —

TAGS–வானில் பறக்க, ஐன்ஸ்டைன் , தொ லை தூரம் செல்ல

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—22 (Post No.13,139)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,139

Date uploaded in London – –   14 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 218  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 22

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—21

கி

219.அந்திமாலைக்கு

கிருஷ்ண துளசி இலையைக் கசக்கி சாறு பிழிந்து நேத்திரத்தில் இரண்டு துளி விடவும். இப்படி காலையில் ஒரே வேளையாக மூன்று நாள் விடவும்; சாந்தியாகும்

XXXX

 வாந்தி விக்கலுக்கு

கிராம்பு, சீரகம், ஏலம்  வெதுப்பி மயிலிறகு சுட்ட சாம்பல் சமன் சேர்த்து பொடித்து தேனில் குழைத்து கொடுத்து வரத் தீரும் .

XXXX

காது எழுர்ச்சிக்கு

கிளு கிளுப்பை வேரை அரைத்து நல்லெண்ணெய் வீட்டுக் காய்ச்சி காதில் விட்டு பஞ்சடைக்கவும்; இரண்டு மூன்று வேளையில் தீரும்.

XXXX

உதிரக்  கிராணிக்கு

கிராம்பை பாலில் அரைத்துக் கலக்கி யுட்கொண்டு வந்தால் பித்த கோபம் அதிசாரம் உதிரக் கிராணி ஆசன கடுப்பு இவை தீரும்

XXXX

தலை வலிக்கு

கிச்சிலிக் கிழங்கைப் பொடித்து நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி  தலை முழுகி வந்தால் தலை வலி சீதளம்  இவை பிரியும். திரேகம் வாசனை வீசும் .

XXXX

மேக சாந்தி

கிட்டிக் கிழங்கை வெவித்தாவது  பச்சையாகவே உலர்த்தி சூரணித்து அரைப்பங்கு  சக்கரை கூட்டியாவது விடாமல் 40 நாள் இருவேளையும் தின்று வந்தால்  உடம்பு இறுகும் ; மேகம் சாந்தியாகும் கபத்தை அறுக்கும் தீபனம் உண்டாக்கும் .

XXXX

கரப்பான் கிரந்திக்கு

கிரந்தி நாயகமெனும் மூலிகையை பாலில் அரைத்து  காலை ஒரு வேளையாக உண்டு வந்தாலும், எண்ணெய் பாகங்களுடன் மேற்படி சாற்றைச் சேர்த்து காய்ச்சி யுண்டாலும் கருங்கிரந்தி, செங்கிரந்தி, கரப்பான், உஷ்ணம் சீதம் இவைகள்  தீரும்

XXXX

சுர சாந்தி

கிளியூரல் பட்டையை ஒன்றிரண்டாயிடித்து எட்டுக்கொரு பங்காய் ஆக்கி வடித்து உண்டால் சுரம் சாந்தியாகும் .

XXXX

பொது

கிளுவை வேரையும் சமூலத்தையும்  அநேக வியாதிகளுக்கெல்லாம் வைத்தியர் உபயோகிப்பதுண்டு

XXXX

கீ

சோகைக்கு

கீழாநெல்லி சமூலத்தை பாலில் அரைத்து பாலில் கலக்கியுண்டுவந்தால்  சோகை காமாலை பாண்டு உடல்வெளுப்பு வாத பித்த கிறிச்சினம் இவை தீரும் . இரத்தம் உபரியாகும் ; கண் குளிரும் .

XXXX

சாம்பல் தின்கிற குழந்தைகட்கு

கீழாநெல்லி வேர் விராகநிடை 1 கடுக்காய் தோல் விராகநிடை 2  மிளகு விராகநிடை 3 புளித்த மோரில் அரைத்துக் கலக்கி  மூன்று நாள் வார்க்க சாம்பல் மண் இவை தின்னாது .

XXXX

புறவீச்சு தீர

கீழாநெல்லிச் சாறு கிலு கிலுப்பைச்  சாறு தேன் முலைப்பால் வகைக்கு பலம் அரை வெள்ளுள்ளி காந்தம் சுக்கு வகைக்கு விராகநிடை  இவைகளை அரைத்து யாவும் ஒன்றா ய்க்  கலந்து கொடுக்க நிவர்த்தியாகும் .

XXXX

இரத்தம் போல் நீர் இறங்குவதற்கு

கீழா நெல்லி சமூலம் ஒரு பிடி சீரகம் ஒரு விராகநிடை இவை அரைத்து எருமைத் தயிரில் கலக்கிக் கொடுக்கவும் .இப்படி மூன்று நாள் கொடுக்கத்  தீரும்.

XXXX

பித்த சோகை வீக்கத்திற்கு

கீழா நெல்லி மூன்று பங்கும் ஈருள்ளி  ஒரு பங்கும் சீர்த்திடித்து சாறு பிழிந்து கால் படி வீதம் மூன்று நாள் கொடுக்க நிவர்த்தியாகும்

XXXX

–subham—

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 22, மேக சாந்தி , தலை வலி, அந்திமாலை,

சுற்றுப்புறச் சூழலுக்கு மனிதன் செய்யும் கேடுகள்! (Post 13,138)

Thor Hyerdhal

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.138

Date uploaded in London – — 14 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுற்றுப்புறச் சூழலுக்கு மனிதன் செய்யும் கேடுகள்!

ச. நாகராஜன்

இயற்கை மனிதனுக்குச் செய்யும் நன்மைகள் ஏராளம்; அதற்கு நன்றி சொல்லி அதைப் பாதுகாப்பது மனிதனின் கடமை.

ஆனால் நடப்பதோ?!

நார்வேஜியின் சாகஸவீரர் கண்ட காட்சி

நார்வேயைச் சேர்ந்த சாகஸவீரர் தோர் ஹையர்தால் (Thor Heyerdahl) என்பவர் ஒரு சமயம் பெருவிலிருந்து ஓஸியானாவிற்குக் கடலில் சென்று கொண்டிருந்தார்.

அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. கடலிலும், கடற்கரை பக்கத்திலும் சரி மனிதர்களில் செயல்பாடுகள் அவரை திகிலுறச் செய்தன. ஒவ்வொரு நாளும் அவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களையும், தொழிலக கழிவுகளையும் கடலில் மிதக்க விட்டுக் கொண்டே இருந்தனர்.

கடல் நீரில் இருந்த அசுத்தமோ அசுத்தம்; அதில் ஒரு டூத் பிரஷைக் கூட அலசி சுத்தப் படுத்த முடியாது. அவ்வளவு அசுத்தம்; அசிங்கம்!

இப்படி கடல் நீரை அசுத்தப் படுத்துவதால் உலகெங்குமுள்ள நீர் வாழ் பிராணிகளில் நூறு கோடி என்ற அளவில் ஆண்டு தோறும் அழிந்து வருகிறது.

சற்று எண்ணிப் பார்ப்போம்; விழிப்புணர்வு பெறுவோம். அனைவருக்கும் இதைச் சொல்லி விழிப்புணர்வு பெறச் செய்வோம்.

மாஸேதுங்கின் மடமை

உலகின் ஆகப் பெரும் முட்டாள்களில் தலையாய இடத்தைப் பிடிக்க முனைபவர்களில் சர்வாதிகாரியான மாஸேதுங் ஒருவர்.

ஹிட்லரை விட கொடிய மாபாதகன் ஸ்டாலின் என்றால் அதை விட கொடிய மாபாதகன் மாஸேதுங் என்று சொல்லலாம்.

அவர் செய்த முட்டாள்தனமாநன காரியங்கள் ஏராளம், ஏராளம்.

எடுத்துக்காட்டிற்கு ஒன்றே ஒன்று:

1958-ம் ஆண்டு. நிலத்தையும் பயிர்களையும் காக்க ஒரு நல்ல ஐடியா உதித்தது மாஸேதுங் மூளையில்!

பீகிங்கில் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை அளித்தார் அவர்.

எதற்காக?

பயிர்களைக் காக்க!

சிட்டுக்குருவிகள் நிலத்தைப் பாழ் செய்கிறதாம்.

அதற்காக பள்ளிச் சிறுவர்களுக்கு விடுமுறை அளித்த மாஸேதுங் அவர்களை வயல்களுக்குச் சென்று இடை விடாமல் கை தட்டச் சொன்னார்.

ஒரு புல்லட் இல்லை. ஒரு பொறி இல்லை.

வெறும் கைதட்டல் தான்.

இடைவிடாமல் ஷிப்ட் முறையில் சிறுவர்கள் கை தட்டவே அந்த இடைவிடாத ஒலியால்  அனைத்துச் சிட்டுக் குருவிகளும் மயங்கி விழுந்தன; இறந்தன!

இறந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 30 லட்சம்!

எவ்வளவு பெரிய சாதனை!

தனது சாதனையை மக்களிடம் சொல்லி பெருமை அடித்துக் கொண்டார் மாஸேதுங்!

ஆனால் அடுத்த வருடமே மக்கள் வருத்தப்பட ஆரம்பித்தனர். பூச்சிகள் பெருகின. சிட்டுக்குருவிகள் உணவாகத் தின்றதை விட அதிகமாக அவை தானியத்தை நாசம் செய்தன.

விளைவு?

1958-ல் கடும் பஞ்சம் ஏற்பட்டது. 1962-ம் ஆண்டு வரை அந்தப் பஞ்சம் நீடித்தது.

360 லட்சம் பேர்கள் மாண்டனர்.

இப்படிப்பட்ட முட்டாளை உலகம் இனி தான் காண வேண்டும்!!

நேருவின் தவளை சாகஸம்

பாரத பிரதம மந்திரி பண்டிட் ஜவஹர்லால் நேரு அன்னிய செலாவணியைப் பெருமளவு பெருக்க எண்ணி, தவளைகளை பிரான்ஸுக்கும் இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆணை பிறப்பித்தார்.

ஆனால் மஹராஷ்டிரத்தைச் சேர்ந்த விவசாயிகளோ உடனே இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ஏனெனில், “பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பெருகி விட்டன. தவளைகள் இருந்தால் இப்படிப்பட்ட பூச்சிகள் இருக்காது” என்று அவர்கள் எடுத்துக் காட்டினர்.

தவளைகளை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது!

இப்படி உதாரணங்கள் ஏராளம் உள்ளது.

இயற்கையின் வழிகள் அபாரமானவை!

அதில் “மாஸேதுங் மூளை” புகுந்து தன் திறமையைக் காட்டக் கூடாது!

அதைக் காப்பதில் தான் மனிதன் கவனம் செலுத்த வேண்டும்.

***

How to Fly in the Sky : Nagarjuna’s Instructions to  beat Albert Einstein! (Post No.13,137)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,137

Date uploaded in London – –   13 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Rapid Journey to other Places

On keeping tied in the waist while Bhringaraja (Eclipta alba) Karisilankanni (கரிசிலாங்கண்ணி) , Kokila ( a big round green bee)white Kakajangha (Peristroph Bicaly onlata), white Sarapunkha (Trphrosia purpurea),  and seeds of Elabaluka, a man can travel quickly just like the air!

xxxx

Take Madanaphala (Randic dematorum) ), white Sarapunkha (Trphrosia purpurea), and bark of Bhurjapatra (Batul utilis)and get these powdered with the milk of one coloured cow. On applying this paste to the feet, a man can travel hundreds of miles in a day without feeling exhausted.

xxxx

Take the bones of Krkalasa and Naktamala and mix them in the blood of Indragopa (தம்பலப்பூச்சி )  and peacock and then prepare apill. Put the pill in a capsule made up of gold.On putting such a capsule in the mouth, a man can travel easily  three hundred and fifty yojana in a day.

krkalasa, a lizard, or a chameleon. —

naktamala — Naktamala [नक्तमाल] in the Sanskrit language is the name of a plant identified with Pongamia pinnata (L.) Pierre from the Fabaceae (pea) family having the following synonyms: Millettia pinnataPongamia glabraDerris indicaCytisus pinnatus. For the possible medicinal usage of naktamala, you can check this page for potential sources and references, although be aware that any some or none of the side-effects may not be mentioned here, wether they be harmful or beneficial to health.

Xxxx

Hindus beat Einstein!

Collect Vanalochana and the root of white Bhringaraja (Eclipta alba) Karisilankanni (கரிசிலாங்கண்ணி) in Pushya star day and get these powdered in goat’s butter. On application of this to feet a man can travel as much distance as he desires.

(It is confirmed by Valmiki Ramayana. Anjaneya went to Himalayas to bring the Sanjeevi herb. Rama used Thought Powered Airplane/Spaceship to reach Ayodhya from Sri Lanka in 24 hours)

xxxx

If you throw a hollow rod full of living bees, in the sky, it does not fall. It creates a surprise among spectators.

xxxx

Prepare a rod out of a tree out of a tree which was burnt by the lightning and apply lepa of Sunthi (Zingiber officinalis/ Inji in Tamil), pippali, and marich and fresh blood from the womb of a bitch that gave birth to a bitch and then throw it in the sky. The rod  stands in the sky and does not fall.

Lepa (लेप).—m.

(-pa) 1. Plastering, smearing

xxxx

Prepare a ring out of the womb of a bitch and put it on your fingers. If you throw a lotus flower in the sky after touching the same with the ring, the flower stands in the sky without any support and does not fall.

Xxxx

In a moon lit night, put fire inside a room, under a canopy and sacrifice the fruits of Sravanika then you will see various figures of Rudra, carrying spears in their hands.

—subham—

Tags- high speed travel, thought powered, Einstein, Flying in Sky, herbs

நீர் மேல் நடக்கலாம்; நெருப்பு மீதும் நடக்கலாம்- நாகார்ஜுனா மாஜிக் (Post.13,136)

Oroxylum Indicum

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,136

Date uploaded in London – –   13 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Parmelia Perforata

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நாகார்ஜுனா , ஒரு புத்த மத தத்துவ வித்தகர், ரசவாத நிபுணர், மாயாஜால மன்னன் , ரசாயனவியல் அறிஞர், மருத்துவம் முதல் மாயாஜாலம் வரை பல புத்தகங்களை எழுதிய ஆசிரியர் ஆவார்.

அவர் எழுதிய யோக ரத்னமாலாவில் 140 சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இருக்கின்றன . அதிலிருந்து மேலும் பல அற்புதங்களைக் காண்போம் .

துந்துபா (இரட்டை வாய் பாம்பு) பாம்பின் ரத்தத்தை ஒரு சிறிய கொள்கலத்தில் (Capsule) விடவும் ;அதை மூடிவிட்டு, வாய்க்குள் வைத்துக்கொள்ளவும் ; பின்னர் தண்ணீரில் இறங்கினால் வீட்டிற்குள் இருப்பது போல எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம்.

xxxx

ஸ்யோனக்  விதைகளால் ஆன இரண்டு செருப்புகளை செய்யுங்கள் ; அவைகளை அணிந்து கொண்டால் வீட்டில் தரையில் நடப்பது போல, தண்ணீரிலும் நடக்கலாம்.

ஸ்யோனக் =ஓரோக்ஸைலம் இன்டிகம் OROXYLUM INDICUM செடி).

XXXX

வெண்ணெய், சுவர்ணகைரிகா (ரெட் ஆக்ர்  என்னும் இரும்பு தாதுள்ள மண் ),  துர்கந்தா, மீன் எண்ணெய் ஆகியவற்றால் எண்ணெய் தயாரிக்கவும். அதை உடம்பு முழுதும் பூசிக்கொண்டு தண்ணீரில் இறங்கினால் முதலையைப் போல எளிதாகத் தண்ணீரில் வலம் வரலாம். 

சுவர்ணகைரிகா /(ரெட் ஆக்ர்)  RED OCHRE=is a natural clay earth pigment, a mixture of ferric oxide and varying amounts of clay and sand.  In Ancient Egypt, red ochre was used in celebrations as a symbol of life and victory and was used as an early form of cosmetics by women.

துர்கந்தா /Durgandha in India is the name of a plant defined with Allium cepa in various botanical sources. This page contains potential references in Ayurveda, modern medicine, and other folk traditions or local practices It has the synonym Allium ascalonicum auct. (among others).

XXXX

தீ மிதி விழா / பூக்குழி இறங்கல் / நெருப்பு மீது நடத்தல்

Fire Walking in Greece

அட்டைப் பூச்சி, சசிஜா (பிரமாலியா பெர்போரேட்டா  தாவரம்), தவளை, பாடலம் (பாதிரி) ஆகியவற்றைக் கொண்டு எண்ணெய் தயாரிக்கவும். அதைப் பாதங்களில் பூசிக்கொண்டு நடந்தால் நெருப்பு உங்களைச் சுடாது ; எளிதாக அனல் மீது நடக்கலாம்

XXXX

முண்டி(Sphaeranthus indicus Linn) , அட்டைப் பூச்சி, ஷைபல் PARMELIA PERFORATA/ பர்மேலியா பெர்போரேட்டா) ஆகியவற்றுடன் தவளைக் கொழுப்பைக் கலந்து பசை அல்லது களிம்பு செய்யுங்கள்; கைகளிலும் கால்களிலும் பூசிக்கொண்டு தீ மீது நடந்தால் அனல் குளிர்ச்சியாக இருக்கும்; உடலுக்கு ஒரு தீங்கும் வராது

XXXX

தண்ணீரில் விழுந்த யோகி

பக்தர்கள் தீ மீது நடப்பதும், தண்ணீர் மீது நடப்பதும் ரசாயனப் பூச்சுகளால் அல்ல ; அவை நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பது ; மனதை ஒருமுகப்படுத்தி சில அற்புதங்களை செய்யலாம் . தவம் செய்து அஷ்டமா சித்திகளையும் பெறலாம். இதன் மூலம் எட்டு வகை அற்புதங்களை நிகழ்த்தலாம் ; ஹட யோகம் போன்ற யோகப் பயிற்சிகளாலும் இப்படிச் செய்யலாம்.

ஆதி சங்கரரின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவர் பத்ம பாதர் (தாமரைக் காலன்); குரு அழைத்தவுடன், நதி குறுக்கே இருப்பதையும் மறந்து, தண்ணீர் மீது ஓடிவந்தார். அவர் கால் வைத்த இடம் எல்லாம் தாமரை மலர்ந்து அவரது பாதங்களைத் தாங்கின ; இதனால் அவருக்கு பத்ம பாதர் / தாமரைக் காலன் என்று பெயர்.

XXXX

சத்ய சாய் பாபாவுக்கு ஹட யோகி சவால்

சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஹட யோகி சத்ய சாய் பாபாவுக்கு சவால் விட்டார்; என்னைப் போல  தண்ணீரில் நடக்க முடியுமா என்று சொல்லிவிட்டு பெரும் கூட்டத்தைக் கூட்டி, பத்திரிகையாளர்களையும் அழைத்துவிட்டு, பெரிய நீர்த்  தொட்டிக்குள் காலை வைத்தார். தொபுக்  என்று தண்ணீரில் விழுந்தார். எல்லோரும் நகைத்தனர் ; அஹங்காரம் , மம காரம் (யான் எனது என்னும் செருக்கு- திருக்குறள் ) இருந்தால் யோகம் பலிக்காது .

2016ம் ஆண்டிலும், 2018ம் ஆண்டிலும் எஸ் ஆர் ராவ் என்ற சர்ச்சைக்குரிய யோகி, தனது ‘ஷோ’ வுக்கு டிக்கெட் வைத்து 600 பேர் முன்னிலையில் முயன்றார் ;பெரிய நீர்த் தொட்டிக்குள் காலை வைத்தார். தொபுக்  என்று தண்ணீரில் விழுந்தார். எல்லோரும் நகைத்தனர்; டிக்கெட் பணத்தைத் திருப்பிக்கொடு என்று கலாட்டா செய்தனர் ; மீண்டும் நடக்கும்போது வரலாம் என்று சொல்லி சமாளித்தார்; ஆயினும் அவரால் எந்தக் காலத்திலும் அப்படி தண்ணீர் மீது நடக்க முடியவில்லை .

XXXX

அற்புதங்களின் பட்டியலைத் தரும் தாயுமானவர் மனதை அடக்குவது, அதை விடக் கடினம் என்கிறார்.

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;

கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின்  இரதம் வைத்தைந்து லோகத்தையும்

வேதித்து விற்றுன்ண்ணலாம்;

வேறொருவர் கானாமல் உலத்துலாவரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடிருக்கலாம்

மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;

சலமேல் நடக்கலாம்கனல் மேலிருக்கலாம்

தன்னிகரில் சித்தி பெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது!

XXXXX

 ஹேம சந்திரர் எழுதிய த்ரிசதிசலாகா புருஷ சரிதத்தில் வரும் விஷயம் பின்வருமாறு: 

“ஊசியின் காதில் நுழையும் அளவுக்கு உருவத்தைக் குறுக்கலாம்.

மேரு மலையை முழங்கால் அளவாகக் காட்டும் வரை உயரலாம்

காற்றை விட லேஸாகலாம்.

இந்திரனின் வஜ்ராயுதத்தை விட வலிமை பெறலாம். 

பூமியில் இருந்தவாறே கிரஹங்களைத் தொடலாம் 

நீரின் மீது நடக்காலாம். பூமிக்குள் புகுந்து எழலாம்

பொந்துக்குள் நுழைவது போல மலைகளுக்குள் எளிதில் நுழையலாம்.

உருவமே தெரியாமல் மறையலாம்; வானம் முழுதும் வியாபித்தும் நிற்கலாம்.” 

அஷ்டமா சித்திகள் — அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள்.

—SUBHAM—

Tags- சத்ய சாய் பாபா, ஹட யோகி சவால், தீ மிதி விழா, பூக்குழி இறங்கல், நெருப்பு மீது நடத்தல்,  நீர் மேல் நடக்கலாம். 

கீதை தீர்க்கும் நோய்கள்! (Post No.13,135)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.135

Date uploaded in London – — 13 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஏப்ரல் 2024 ஹெல்த்கேர் தமிழ் மாத இதழில் பிரசுரமாகியிருக்கும் கட்டுரை

கீதை தீர்க்கும் நோய்கள்!

ச. நாகராஜன்

காலம் காலமாக அனைவருக்கும் ஆன்மீக ஊற்றாகத் திகழ்ந்து வரும் கீதையைப் போற்றாதவர் இல்லை.

சமீப காலமாக நவீன தொழில் நுட்பம் வளர்ந்து வர வளர்ந்து வர அதைப் பல்வேறு கண்ணோட்டங்களில் பார்த்து அறிஞர்கள் வியக்கின்றனர்.

மானேஜ்மெண்ட் டெக்னிக்ஸ் எனப்படும் மேலாண்மை உத்திகளை எப்படி கீதை விவரிக்கிறது என்று பலரும் புகழ்ந்து பேசுகின்றனர்; நூல்களை எழுதுகின்றனர்.

அதே போலவே கீதை எப்படி எல்லா நோய்களைத் தீர்க்கும் வழிகளைக் கூறுகிறது என்று பலரும் பேசி வருகின்றனர்; நூல்களைப் படைக்கின்றனர்.

இவற்றில் ஒரு நூல், ஒரு உரை ஆகியவற்றை இங்கு பார்ப்போம்.

நோய்களைத் தீர்க்கும் கீதை – ஒரு நூல்

The Curative Powers of the Holy Gita – என்ற நூலைDr T.R.Sesahadri என்பவர் எழுதியுள்ளார். 1997ல் வெளியான நூல் இது.

இந்த நூலில் 30 கீதை ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஸ்லோகமும் எந்த எந்த வியாதிகளைத் தீர்க்கும் என்ற பட்டியலும் உள்ளது.

அத்தியாயம்       ஸ்லோக ஆரம்பம்     

ஸ்லோக எண்

2 –2               குதஸ்த்வா              

2-3                க்லைப்யம்        

2-11               அசோச்யான்

2-14               மாத்ரா

2-22               வாசாம்ஸி

2-56               துக்கேஸ்வ

2-61               தானி

2-63               க்ரோதாத்

2-64               ராக

2-67               இந்த்ரியாணாம்

3-21               யத்யாத்

4-10               வீத ராக

5-26               காம க்ரோத

6-30               யோ மாம் பச்யதி

6-35               அசம்சயம்

7-11               பலம் பலவதாம்

8-8                அப்யாச யோக

9-16               அஹம் க்ரதுர்

9-18               கதிர் பர்த்தா

9-22               அனன்யாஸ் சிந்தயந்தோமாம்

10-20               அஹமாத்மா

10-32               சர்காணாம்

10-34               ம்ருத்யு: சர்வ

10-39               யச்சாபி

11-36               ஸ்தானே

12-15               யஸ்மான்

15-9                ஸ்ரோத்ரம்

15-14               அஹம் வைஸ்வானரோ

17-8                ஆயு: சத்வ

18-66               ஸர்வ தர்மான்

,

தீர்க்கும் வியாதிகள்

 smallest Bhagavad Gita

இரத்த அழுத்தம், மூளைக் கோளாறுகள், மனச் சோர்வு, மன அழுத்தம்,

வலிப்பு, இதயக் கோளாறு, போதைப் பொருள்களுக்கு அடிமை,

ஆண்மைக் குறைவு, ஜூரம், பக்கவாதம், மூட்டு வலி, காச நோய்,

டயாபடீஸ், எய்ட்ஸ், பாலியல் நோய்கள், உளவியல் கோளாறுகள்,

கான்ஸர், தீர்க்க முடியாத வியாதிகள், ரத்தப்

புற்றுநோய், வியாதியிலிருந்து உடல் நலம் தேறல், குடல் கோளாறுகள்,

திக்குவாய், டான்ஸில், மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பம், கர்ப்பக் கோளாறுகள், ஆஸ்த்மா, பல் வியாதிகள், கண் சம்பந்தமான வியாதிகள், தொழுநோய், பல் வலி, தோல் வியாதிகள், அடி வயிற்றுக் கோளாறுகள்,வயிற்றுப்போக்கு, கல்லீரல் சம்பந்தமான வியாதிகள், அஜீரணம், சிறுநீரகக் கோளாறுகள், மலச்சிக்கள் மஞ்சள் காமாலை, தூக்கமின்மை உள்ளிட்ட வியாதிகள் அனைத்தும் நீங்க மேலே கூறிய ஸ்லோகங்களை முறைப்படி உச்சரித்தல் உதவும்.

ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அடியில் எந்த வியாதிகளைத் தீர்க்கும் என்பதை நூல் கூறுகிறது. எப்படி சொல்ல வேண்டும் என்ற குறிப்பும் நூலில் இருக்கிறது.

இந்த நோய்கள் எல்லாம் நூலில் குறிப்பிட்ட ஸ்லோகங்களால் நீங்கி விடும் என்பதற்கான ஆதாரத்தை அறிய நேயர்கள் விரும்பலாம்.

அதற்கு ஆசிரியர் முன்னுரையில் தரும் பதில் இது தான்:

These are believed to have a curative effect on many diseases and ailments.

In this book, I have laid emphasis on faith and faith alone.

இவை பல வியாதிகளையும், சிறு நோய்களையும் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது,

இந்த நூலில் நான் நம்பிக்கையை, நம்பிக்கையை மட்டுமே அழுத்திக் கூறுகிறேன்.

இதுவே அவரது பதில்!

நோய் தீர்க்கும் கீதை : ஒரு உரை

யூ டியூபில் நாளுக்கு நாள் எல்லோரும் அறிஞர்கள் ஆகி

வருவதைக் காண்கிறோம். எதைக் கடைப்பிடிப்பது,

எதை விடுவது என்று யாருக்கும்  புரியவில்லை.

என்றாலும், சுமார் முந்நூறு கோடி யூ டியூப் உரைகள்

இருப்பதாக ஒரு கணக்கு கூறுகிறது.

அவற்றில் சில தர்க்கரீதியாக நம்மை யோசிக்க வைத்து முடிவைப்

பெற உதவி செய்யும். சமீபத்தில் கேட்ட ஒரு உரையில்

கீதையின் அபூர்வ ஆற்றல் விளக்கப்படுகிறது. (இதை எனக்கு

அனுப்பியவர் ஹெல்த்கேர் ஆசிரியர் திரு ஆர்.சி. ராஜா

அவர்களே தான்)

ஆறாவது அத்தியாயத்தில் உள்ள 17 வது ஸ்லோகம் இது :

युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु।


युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखहा॥१७॥

யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு|
யுக்தஸ்வப்நாவபோ³த⁴ஸ்ய யோகோ³ ப⁴வதி து³ :க²ஹா ||6-17||

யுக்த ஆஹார விஹாரஸ்ய= ஒழுங்குக்கு உட்பட்ட உணவு உண்டு நடமாடுகிற ஒருவனுக்கு


கர்மஸு யுக்தசேஷ்டஸ்ய = வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட முயற்சி செய்கிறவனுக்கு


ஸ்வப்ந அவபோ³த⁴ஸ்ய யுக்த = உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டவனாக இருப்பவனுக்கு


து³ :க²ஹா யோக³: ப⁴வதி = துயரை அழிக்கும் யோகம் கை கூடுகிறது

ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

இங்கு ஶ்ரீ கிருஷ்ணர் ஐந்து விஷயங்களை வலியுறுத்துகிறார் – ஆரோக்கியமான துக்கமற்ற சுகமான வாழ்விற்கு.

அவையாவன

Moderate Diet – மிதமான உணவு

Moderate pleasure – மிதமான விளையாட்டு அல்லது பொழுதுபொக்கு இன்பம்

Moderate exertion – மிதமாக உளம் மற்றும் உடலை பயன்படுத்தல்

Moderate Sleep – மிதமான தூக்கம்

Moderate Wakefulness – மிதமான விழிப்பு

இப்படி உணவு, விளையாட்டு, உளத்தையும்உடலையும்பயன்படுத்தும் விதம், தூக்கம், விழிப்பு ஆகிய ஐந்திலும் எவன்  ஒருவன் மிதமான போக்கைக் கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு துக்கத்தை நீக்கும் யோகம் கை கூடுகிறது.

அதாவது யோக சித்தி பெற்ற இவனுக்கு எந்த வித வியாதியும் வராது.

இந்த ஸ்லோகத்திற்கு பாரதியாரின் உரை இது:

 ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

இந்த ஸ்லோகத்தை ஊன்றிக் கவனித்தால் வியாதி வராமல் இருக்க

சிறந்த வழி இதுவே என்பதை உணர முடிகிறது.

கீதையைக் கற்போம்; அதன் வழியில் நிற்போம்; நோயற்ற வாழ்வைப்

பெறுவோம்.!

***

Magic of Walking on Water and Walking on Fire! (Post No.13,134)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,134

Date uploaded in London – –   12 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Nagarjuna, the alchemist, magician and philosopher who lived 2000 years ago gives details of doing magic in front of others. He gives details of incredible and amazing things in 140 Sanskrit couplets in his book Yogaratnamala.

Here are some slokas:

1.Prepare an oil out of Sasija (Pramalia perforata), jalauka (water leech) frog and patala (Steriospermum sauraresbus) and apply this oil to your feet. You can easily cross the burning charcoals without feeling any harm caused by it.

2.Prepare an ointment mixing together Mundi (Saphaerenthes indicus ), leech, and shaibal (Parmelia perforata) with the fat of a frog and apply it  to your hands and feet, then cross on the fire. The fire becomes cold and does not cause any harm.

xxxx

Walking on Water

1.Pour the blood of Dundubha ( a snake having two mouths) in a capsule and put this capsule into your mouth and enter water. You can stay under water as easily as in your house as long as you desire.

2.Prepare two shoes out of the seeds of Syonak (Grokylum indicum) well powdered and enter into water wearing the shoes. You can walk on the water as easily as you walk on the ground.

3.Prepare an oil out of butter, Suvarna gairika (Pure Red Achre Haematika), Durgandha and fish oil,  and apply it to your whole body. Then you can move intothe water freely like a crocodile.

(From the above slokas we can surmise that the animal and plant products help one to walk on fire or water. Tamil poems also enumerate a long list of magical or miraculous deeds. But saints can do such miracles even without the above aids. Adi Shankara’s disciple Padmapathar walked on water without any aid. But one Hata yogi challenged  Sathya Sai Baba and told that he would walk on water. But he fell into water in front of a big gathering of general public and journalists!)

xxxx

Another episode

When Yogi Rao walked on water (June 2016)

Lakshmanasandra Srikanta Rao was an Indian yogi who claimed to have such total control over his body that he could eat glass, swallow poison, eat live vipers, walk on fire, and even survive an atomic bomb. But basically he was just a stage magician who knew a few tricks and put on a good act.

He made headlines in the 1950s when he moved to America and gained heiress Doris Duke as a follower, but he returned to India after only a few months, apparently recognizing that he had gotten in over his head and promised his followers more than he could deliver.

He laid low until 1966 when he returned to headlines with his claim that he was going to publicly walk on water. Over 600 paid to see him do this, including some of the most famous people in India. But Rao took one step and plunged right to the bottom of the pool he was supposed to walk across.

What had he been thinking? Had he somehow convinced himself that he really could walk on water? Maybe. He was later quoted as expressing regret at his failure, saying, “I am so angry that I feel like drowning myself even if I have to tie a stone round my neck to do so.”

Two years later he offered to try again, to prove he was for real, but the performance never happened.

—subham—

 Tags- Magic , Walking on Water,  Walking on Fire, Yogaratnamala, Nagarjuna

London Swaminathan’s Article Index for March 2024 (Post No.13,133)

London Swaminathan in front of Tiruvananthapuram Temple; 5-4-2024

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,133

Date uploaded in London – –   12 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Index No.136

Bee in Hinduism –Part 3 (Post No.13,057) 2/3

London Swaminathan’s Article Index for February 2024 (Post No.13,060) 3/3

Eagle in Hinduism: Patanjali’s Great Discovery -1(Post No.13,065) 5/3

Eagle in Hinduism 2; New Explanation to Garuda Purana Reading (Post No.13,068) 6/3

Double Headed Bird in Hinduism (Post No.13,071) 7/3

Tulsi Plant in Hinduism (Post No.13,087) 12/3

Sankha Conch in Hinduism – Part 2 (Post No.13,081) 10/3

Shankha/ Conch in Hinduism – Part 1 (Post No.13,077) 9/3

Bell in Hinduism (Post No.13,084) 11/3

London Swaminathan’s New TAMIL Book on Sri Lankan Temples ; 11/3

London Swaminathan’s Tamil Book on 108 Sri Lankan Temples (Second Part) 12/3

London Swaminathan’s 118th Book Released; Tamil Book on 108 Kerala Temples; 13/3

Bilva / Vilva Tree in Hinduism (Post No.13,090) 13/3

Deep rooted Mahabharata Story in Tamil Nadu Villages (Post No.13,119) 23/3

DO YOU REMEMBER THIS STORY?

Don’t buy Diamonds without Testing ; Bad Diamonds kill Your Family (Post No.13,111) 20/3

Ayodhya Drum and Frog Wedding in Assam 19/3

More Quotations from Garuda Purana; April 2024 Calendar (Post No.13,122) 24/3

Sandal Wood in Hinduism- 1 (Post No.13,093)14/3

Sandal Wood in Hinduism- Part 2 (Post No.13,095) 15/3

Sandal Wood in Hinduism -Part 3 ; Murthy Nayanar story (Post No.13,098) 16/3

Westerners who have embraced & speak up for Hindu Dharma 21/3

Two Wonder Lemons Auctioned in Tamil Nadu and Britain तमिलनाडु में एक नींबू ₹35 हजार में नीलाम10/3

xxxx

London Swaminathan in front of Tiruvananthapuram Anantha Padmanabha Swami Temple; 5-4-2024

Tamil Articles

தேனீக்கள் தேவி பிரமராம்பா – 1 (Post  No.13,052) 29/2

தேனீக்கள் தேவி பிரமராம்பா- Part 3 (Post No.13,059)

தேனீக்கள் தேவி பிரமராம்பா -2 (Post No.13,054) 1/3

பதஞ்சலி முனிவர் கண்ட கழுகு அதிசயம் (Post No.13,063) 4/3

பதஞ்சலி முனிவர் கண்ட கழுகு அதிசயம்- Part 2 (Post No.13,069) 6/3

மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் (Post.13,124) 25/3

QUIZ மணி பத்து QUIZ (Post No.13,083) 10/3

QUIZ சங்குப் பத்து QUIZ (Post No.13,076)11/3

QUIZ துளசி பத்து QUIZ (Post No.13,089) 13/3

QUIZ வில்வம் பத்து QUIZ (Post No.13,092) 14/3

QUIZ சந்தனம் பத்து QUIZ (Post No.13,096)15/3

இந்து மதத்தில் இருதலைப் பறவை (Post No.13,074)8/3

சங்க இலக்கியத்தில் தேனீக்கள்;  தேனீக்கள் தேவி பிரமராம்பா- 4 (Post No.13,062) 4/3

சந்தன மரப் பாம்பு பற்றி சங்கப் புலவர்களும் காளிதாசனும் செப்பியது என்ன ?-1 (Post No.13,101) 17/3

சந்தன மரப் பாம்பு பற்றி சங்கப் புலவர்களும் காளிதாசனும் செப்பியது என்ன?-2 (Post.13,104) 18/3

காக்கா ஜோஸ்யம்: 1500 ஆண்டுகளுக்கு முன் வராஹமிஹிரர் சொன்னது (Post.13,110) 20/3

குறையுள்ள வைரங்களை வாங்காதீர்கள்; ஆபத்து ! (Post No.13,113) 21/3

தமிழ் மக்கள் வாழ்வில் கலந்த மஹாபாரதம்; கிராமம் தோறும் நாடகம் ! (Post.13,118)23/3

தேசபக்தர்களுக்கு வேண்டுகோள்

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—13 (Post No.13,056) 2/3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் 14 (Post No.13,066)5/3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் — 15 (Post No.13,072) 7/3 

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் -16 (Post No.13,079) 10/3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்– 17 (Post No.13,085)12/3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்– 18 (Post No.13,099) 16/3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—19 (Post No.13,107) 19/3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—20 (Post No.13,115) 22/3

மேலும் 30 கருட புராண பொன் மொழிகள்; ஏப்ரல் 2024 காலண்டர் (Post.13,121)24/3

–subham–

 tags- London Swaminathan, Article Index , March 2024 ,Index No.136

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—21 (Post No.13,132)


Kaattu Aamanakku

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,132

Date uploaded in London – –   12 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 206  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 21

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—21

207. வெள்ளைக்கு

காக்கட்டான் என்னும் வெள்ளைக் காக்கட்டான் வேர் கொண்டு வந்து தயிர் விட்டரைத்து, புன்னைக் காயளவு எடுத்து, கால் படி பசும் மோர் விளாவி வைத்துக் கொண்டிருந்து , ஒரு தகுதி பேதியானவுடன்  அந்த மோரில் கொஞ்சம் குடிக்கச் சொல்ல வேண்டியது.. இப்படி 6 அல்லது 8 விசை பேதியாகும். மோரைக் கொடுத்தால்தான் பேதியாகும். பகலில் தயிர் சாதமும் இரவில் பால் சாதமும் சாப்பிட வேண்டியது. அந்த ஒரே தினத்தில் வெள்ளை நிவர்த்தியாகும்

xxxx

208. நாபி பேதி

காக்கட்டான் இலையைக் கசக்கி சாறு பிழிந்து வெள்ளைக் குண்டுமணியும் வாளமும் சரியாயெடுத்து மேற்படி சாறறால் அரைத்து  தொப்புளைச்  சுற்றி கனமாகத் தடவினால் 1-2 விசை பேதியாகும் .

xxxx

209. தீராத வாந்திக்கு

காட்டு ஏலத்தைக் கொண்டுவந்து இளம் வறுப்பாய் வறுத்து நெல்லி வற்றல் தானிக்காய் கடுக்காய் கொஞ்சம்  கூட்டி கிஷாயமிட்டுக்கொடுக்கத்  தீராத வாந்தி, பித்தம், அரோசகம் இவை தீரும்.

xxxx

210. இரைப்புக்கு

காட்டுத்துளசியைக் கொண்டுவந்து பால் விட்டரைத்து பாலில் கலக்கிக் கொடுத்துவந்தால் இரைப்பு வியாதி சாந்தியாகும் .

xxxx

211. மேக வெள்ளைக்கு

காட்டாமணக்கின் கொழுந்தை பால் விட்டரைத்து பாலில் கலக்கிக் கொடுக்க வெள்ளை தீரும்; உடம்பில் அடிக்கடி ஜெனிக்கிற விரணங்கள் சிரங்கு கட்டிகள் இவை யாவும் தீரும் .

xxxx

212. பல் நோய்க்கு

காட்டுப்பிராயன் பால்  பல்லு  நோய்களுக்கு

மேற்படி பாலை நோயுள்ள பல்லின் மீது ஈறுகள் மீது விட்டு வந்தால்  நிவர்த்தியாகும்.

xxxx

213. உடல் பூரிக்க

காட்டு வள்ளியை பாலில் அரைத்து கலக்கியுட்கொண்டுவந்தால் குளுமை நீக்கும், உடல் பூரிக்கும் நல்ல பலன் உண்டாகும் .

xxxx

214. விஷ ஜன்னிக்கு

காட்டு முருங்கை சமூலத்தைப் பச்சையாகக் கொண்டுவந்து  பாலில் கலக்கி யுண்டுவந்தால் புரவீச்சு உஷ்ணம் இவை தீரும். கண் குளிர்ச்சியுண்டாம்  ஜன்னி கிஷயங்களுடன் மேற்படி சமூலம் சேர்த்து பாகப்படுத்திக் கொடுத்தால்  விஷ ஜன்னி தீரும்

xxxx

215. நாவறட்சி தீர

காட்டு மல்லிகை சமூலத்தைக் கொண்டுவந்து சீந்தல் மதுரம் சமமாக சேர்த்து கிஷியாமிட்டுக்  கொடுக்க நாவறட்சி  தாகம் சுரம் தீரும்.

xxxx

216. இரத்த மூலம் தீர

காரக்  கருணையை வடகம் செய்தாவது,  இடித்து சூரணித்து சமன் சக்கரை கலந்தாவது, இரு வேளையும்  தின்றுவந்தால் இரத்த மூலம் கபம் கனல் மந்தம் முளை மூலம் வாத ரோகங்கள் தீரும்; பசி தீபனமுண்டாகும் .

xxxx

217. மாந்தங்களுக்கு

காவட்டம் புல்லு மாந்த வியாதியைக் கண்டிப்பதற்கு  முதன்மையான அவுசதமாயிருக்கிறது .  ஊது  மாந்தம் , உட்பு மாந்தம் முக்கு மாந்தம்  இவைகளுக்குமே  உவஸ்து கொண்டுவந்து எட்டுக்கொன்றாய் கிஷாயம் வைத்து கஸ்தூரி கோரோசனம்  இழைத்து வார்த்தால் குழந்தைகள்  வியாதி யாவும் கண்டிக்கும். .

xxxx

218. நீர் எரிவு தீர சர்பத்து

காசினியிலையை இடித்த சாறு பலம் 13- வெள்ளை சக்கரை 20 பலம் இவையிரண்டும் கலக்கிக் காய்ச்சி பாகு பதமாய் இறக்கி  புட்டியில் வைத்துக் கொள்ளவும் . வேளைக்கு  இரண்டு தோலாயெடுத்து  கொஞ்சம் நல்ல ஜலத்தில் கலந்து  சாப்பிட்டு வந்தால் நீர் எரிவு , நீர்க்கட்டு  உட்காய்ச்சல் இவை தீரும். . பலம் உண்டாகும்

–subham—

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 21, மாந்தம், வெள்ளை விழுதல், நாவறட்சி , நீர் எரிவு , மூலிகைகள்