CHANAKYA ON WOMEN’S MIGHTY POWER!!! (Post No.4680)

WRITTEN by London Swaminathan

Date: 30 JANUARY 2018

Time uploaded in London – 7-27 am

Post No. 4680

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Chanakya, the great genius, who lived 2300 years ago in India had given his views on various topics and issues in addition to his monumental work Athashastra—the first Economics book in the world. Following are his comments on wife and women found in his didactic work Chanakyaniti.

 

One should accept nectar even from poison, gold even from filth, knowledge even from a lowly person and a jewel of a woman even from a lowly family

Chankaya niti, chapter 1, sloka/verse17

Vishaadapyamrutam graahyamedhyaadapi kaancanam

Niicaadapyuttamaam vidhyaam striiratnam dushkulaadapi

 

A Tamil poet in Purananuru says that the king would call for service one from the lowest of the four Varnas if he is more educated. Manu says that a person can learn from the lowest caste and treat him like Guru. He also says women can be married from any caste if they are good. Vasistha’s wife Arundhati is shown as an example.

 

 

Xxxx

Woman’s Sex Drive

 

The diet of a woman is twice, the intellect four times, the boldness/ courage six times, and sex drive eight times that of man

Chankaya niti, chapter 1, sloka/verse18

Aahaaro dwigunah striinaam buddhistaasaam chaturgunaa

Shatgunoadhyavasaayasca kaamascaashtagunah smrutah

 

Xxxx

 

Beauty of a Woman

The beauty of cuckoos is in their sweet cooing, that of women in their faithfulness and loyalty to their husbands, that of ugly ones in their knowledge and that of ascetics is in their forgiveness.

 

Chapter 3, sloka 6

Kokilaanaam swaro ruupam striinaam ruupam pativratam

Vidhyaa ruupam kuruupom kshamaa ruupam tapasvinaam

 

Ascetic’s anger wont last even for a moment because their nature is to forgive, says Tamil poet Tiru Valluvar.

Xxxx

 

Bell metal is cleansed with ashes, brass with acid, a woman with menstruation, and  a river with speed.

Chapter 6, sloka 3

 

Basmanaa sudhyate kaamsyam taamramamleena sudhyati

Rajasaa sudhyate narii nadhii vegena sudhyati

 

Xxxx

 

Woman on the move is wrong!

 

A king on the move gains respect, so do a Brahmin and a Yogi/saint, but a woman doing so comes to nought.

Chapter 6, sloka 4

Braman sampuujyaterajaa braman sampuujyate dwijah

Braman sampuujyate yogi strii bramantii vinasyati

Xxx

Wife’s sin goes to Husband!

 

The sin committed by the country goes to the king, that committed by the king goes to his priest, that committed by a woman goes to her husband and that pupil goes to his teacher.

Chapter 6, sloka 6

Raja raashtrakrutam paapam  raaknjah paapam purohitah

Bhartaa ca striikrutam  paapam sishyapaapam gurustathaa

 

Xxx

Don’t Marry!!!!

 

It is better not to have kingdom but not the kingdom of a bad king

 

It is better not to have a friend than to have a bad one

 

It is better not to have a student than to have a bad one

 

It is better not to have wife than to have a bad one.

 

Chapter 6, sloka 12

 

Varam na raajyam kuraajaraajyam varam na mitram na kumitra mitram

Varam na sihyo  na kushishyasishyo varam na daaraa  na kudaaradaaraah

 

xxxxxxxx

A Woman’s Strength!

The prowess of arms is the strength of king, that of  a Brahmin versed in the Veda is in knowledge of the Vedic lore  ,  beauty, sweetness and youth are the   unsurpassed strength of  women

 

Chapter 7, sloka 11

Baahuviiryam balam raaknjobraahmano brahmavid bhalii

Ruupayauvanamaadhuryam striinaam balamanuttamam

 

Source Book: Canakyaniti, Translated by Satya Vrat Shastri

xxx

 

காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்! (Post No.4679)

Date: 30 JANUARY 2018

 

Time uploaded in London- 6-45 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4679

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

இலக்கியத் திருட்டு

காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்!

 

ச.நாகராஜன்

 

1

கவிஞர் கண்ணதாசன் எழுதியதைத் தன் பெயரில் போடத் துடித்த கலைஞர்கள் காலத்திலிருந்து இன்று வரை காப்பி அடிக்கும் கலைவாணர்கள் பெருகியே வந்திருக்கிறார்கள்.

இதை ஒரு குற்றமாக அவர்கள் நினைப்பது இல்லை என்பது தான் மெய்; வருத்தப்பட வைக்கும் விஷயமும் இது தான்!

இதில் ஒரு அற்ப ஆசை; தானும் ஒரு படைப்பாளி தான் என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அடி மனத்து ஆசை.

புரிகிறது; ஆனால் இது பெரும் தவறல்லாவா! ஒரிஜினல் படைப்பாளிக்கும் படிப்பவர்களுக்கும் இழைக்கும் மாபெரும் துரோகமல்லவா?!

 

 

படித்ததில் பிடித்ததை நண்பர்களுக்கு அனுப்பலாம்; தளங்களில் வெளியிடலாம்- உரியவரின் அனுமதி பெற்று; அது இந்தக் கால கட்டத்தில் மிகவும் கஷ்டம் என்றால், படித்த நல்ல விஷயத்தைப் பகிர வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி இருந்தால், அதை எழுதியவர் யார், அதை வெளியிட்ட பத்திரிகை அல்லது இணையதளம் எது, அதை விரும்பக் காரணம் என்ன என்பதையும் சேர்த்து வெளியிட வேண்டும். உள்ளதை உள்ளபடி வெளியிட்டால் போதும்; என் அபிப்ராயம் எல்லாம் எதற்கு என்றால், அதுவும் சரிதான், படைப்பை அப்படியே அதை எழுதியவர், வெளியிட்ட தளம், பத்திரிகை எது என்பதுடன் வெளியிட வேண்டும்.

இது குறைந்த  பட்ச கர்டஸி.(Courtesy)

 

2

நாளுக்கு நாள் எனது படைப்புகளை உடனுக்குடன் “திருடி” என் பெயரை ‘கட்’ செய்து விட்டு, தங்கள் பெயரில் வெளியிடும் சாமர்த்தியசாலிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.

இப்படி அவர்கள் பெயரில் வெளியாகியுள்ள திருட்டுக் கட்டுரை எனது உடனடி கவனத்திற்கு சில மணி நேரங்களுக்குள்ளாகவே தெரிவிக்கப்பட்டு விடுகிறது.

 

 

சுமார் எட்டாயிரம் பேர்கள் தினசரி எனது கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும், இவர்களுள் பெரும்பாலானோர் மிகவும் நல்லவர்கள், வல்லவர்கள், அதி புத்திசாலிகள், ஸ்மார் பீபிள் என்பதும் ஒரு காரணம் – இது உடனடியாக என் கவனத்திற்குக் கொண்டுவரப்படுவதற்கு

 

3

எனது எழுத்துக்களை திருடிய சில “திருடர்கள்”, திருடிகள் பற்றி எழுத வேண்டாம் என்று தான் இத்தனை நாள் இருந்தேன். ஆனால் சமீபத்திய “காதல் எத்தனை வகை” என்ற எனது கட்டுரை திருடப்பட்டு வெளியிடப்பட்ட விதம் தான் என்னை வருத்தமுறச் செய்தது, கோபமுறச் செய்தது.

 

 

அதில் என் பெயரை வெளியிடவில்லை; பரவாயில்லை!

வெளியிட்ட www.tamilandvedas.com தளத்தின் பெயர் வெளியிடப்படவில்லை, பரவாயில்லை.

ஆனால் போஜ மஹாராஜன் எழுதிய சிருங்காரபிரகாஸம் என்ற அரிய நூலை 1908 பக்கங்களையும் கைப்பிரதியாக எழுதி அதை ஆராய்ந்து உலகிற்கு வெளியிட்டாரே பேரறிஞர் டாக்டர் வி.ராகவன், அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.

 

 

அந்தப் பகுதியை கட் செய்து விட்டார் “உத்தம வில்லன்”!

ஏன் அப்படிச் செய்தார் என்பது தான் தெரியவில்லை!

தன் பெயரில் வெளியிட்ட இந்தக் கட்டுரையை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஹெல்த்கேர் இதழ் ஆசிரியரும் என் நண்பருமான ஆர்.சி. ராஜா,” நன்றி கூட இல்லையே” என்று வருத்தப்பட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் – இதை எடுத்துப் போட்டவரின் தளத்தின் லிங்கை அனுப்பி!

என்ன சொல்லித் திட்டுவது? படிப்பவர்கள் தாம் தீர்மானித்துத் திட்ட வேண்டும்.

 

சிலர் தனக்கு வந்த மெயிலிலிருந்து அப்படியே அனுப்பி விடுகிறார்கள் – அவர்களுக்கு ‘லிஃப்ட்” ஆனது தெரியாது!

ஆகவே உடனடியாக யாரையும் திட்ட முடியாது!

 

4

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தை சென்னையில் இருந்தால் காலையில் கேட்பது வழக்கம். காரணம், சுமார் இருநூறுக்கும் (இன்னும் அதிகமாகவே) மேற்பட்ட  அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை நான் அளித்திருப்பதாலும் இன்னும் அளித்து வருவதாலும், அந்தச் சிந்தனைகள் ஒலிபரப்பப்படுவதை  கேட்பேன்.

ஒரு நாள். ஒரு ஒலிபரப்பு என்னை திடுக்கிட வைத்தது.

ஒரு டாக்டர். ஜானகி என்று பெயர். எனது நூறு அறிவியல் கட்டுரைகளைத் தொகுத்து ‘வியப்பூட்டும் விஞ்ஞானப் புதுமைகள் நூறு” (நவம்பர் 2005 வெளியீடு) என்று ஒரு நூலாக வெளியிட்டிருந்தேன்.

 

 

அதில் பத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து  மாற்றாமல் அம்மையார் அனுப்ப, அதை நமது வானொலி நிலையமும் ஏற்றுக் கொண்டிருந்தது.

உடனடியாக புரோகிராம் எக்ஸிகியூடிவிடம் (திரு செல்வகுமார் அருமையான நண்பர்; சிறந்த நிர்வாகி; நல்லனவற்றைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்) விஷயத்தைச் சொன்னேன்.

அவர் சிரித்தார். ‘என்ன செய்வது? எல்லா நூல்களையும் என்னால் படிக்க முடியாதே! இப்படி ஒரு டாக்டர் செய்யலாமா’, என்று வருந்தினார்.

பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நான் ஊகித்தேன்.

 

5

பாக்யாவில் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து சுமார் 19 வருடங்களாக வாரம் தோறும் எழுதி வருகிறேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தினத்தந்தியில் அப்படியே எனது அறிவியல் கட்டுரை காப்பியாக ஒரு  முறை வந்ததை தற்செயலாகப் பார்த்துத் திடுக்கிட்டேன். என்ன செய்வது?

 

 

6

இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை தினக்குரல். சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சுளா ரமேஷ் அவர்களின் குழுமத்திலிருந்து வெளியாகும் சினேகிதி பத்திரிகையில் மாதம் ஒரு கட்டுரை எழுதுவது எனது வழக்கம். அதில் வெளியான 64 கலைகள் பற்றிய எனது கட்டுரை அப்படியே வெளியாகி இருந்தது. ஆனால் இந்தப் பத்திரிகையில் எனது பெயரும், கட்டுரை எடிட் செய்யப்படாமலும் வந்திருந்தது. இதை எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.

திருட்டு உலகிலும் ஒரு நல்ல குரல்!

 

 

எனது சம்பந்தி சந்தேகாஸ்பதமாக இருக்கும் கட்டுரைகள் என்னுடையது தானா என்று சுலபமாகக் கண்டுபிடிக்க ஒரு வழி வைத்திருக்கிறார்.

 

 

இதை அவர் சொன்ன போது சிரித்து மகிழ்ந்தேன்.

காப்பி அடிக்கப்பட்டுள்ள கட்டுரையின் சில முக்கிய சொற்றொடர்களை அப்படியே கூகுளில் போடுவாராம். எனது ஒரிஜினல் கட்டுரை வெளியான தளம்/ அல்லது பத்திரிகை, வெளியான தேதி உள்ளிட்டவை வந்து விடுமாம். உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துவார்.

இது போல எனது நண்பர்கள் பலரும் உடனடியாக போனில் கூப்பிட்டுச் சொல்லி விடுகிறார்கள்!

 

7

ரவி என்று ஒரு ஆசாமி. அப்படியே அப்பட்டமான காப்பியாளர். எனது கட்டுரையைத் தன் போட்டோவுடன் போட்டுக் கொண்டார். இதைச் சுட்டிக் காட்டிய போது, “இதில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். அவருக்கு காப்பிரைட், திருட்டு இலக்கியம் என்றெல்லாம் பாடமா எடுக்க முடியும்? இதற்கு தண்டனை உண்டு என்றவுடன் ஆசாமி வழிந்தார்; வழிக்கு வந்தார்.

 

 

8

ஒரு நல்ல ஆன்மீக மாதப் பத்திரிகை. ‘அமிர்தமாக வர்ஷிக்கும்’ நல்ல கருத்துக்களைக் கொண்டது. இதில் ஒரு கட்டுரை வந்தது. இதைச் சுட்டிக் காட்டியவுடன் ஆசிரியர் வருத்தப்பட்டார். ஏனெனில் இப்படி ஒரு காப்பி கட்டுரையைத் தான் வெளியிட்டு விட்டோமே என்று!

 

 

சென்ற வாரம் எனது சம்பந்தி அனுப்பிய கட்டுரை ஒன்று வந்தது. மஞ்சுளா ரமேஷ் ஞான ஆலயம் குழுமம் நடத்தும் ஜோஸிய இதழான ஸ்ரீ ஜோஸியத்தில் நவம்பர் 2017 இதழில் வெளியான கட்டுரை ஒன்றை அப்படியே ஒரு பெண்மணி தன் பெயரில் இணைய தளத்தில் வெளியிட, அது “உலா” வந்தது! ஆனால் ஒரிஜினல் கட்டுரையில் நான் கொடுத்திருந்த ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகங்களை (என்னென்ன கிழமைகளில் என்னென்ன செய்யலாம்?) வெட்டி விட்டார்.

 

9

கட்டுரை நீண்டு விட்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

அனுமதியுடன் பிரசுரியுங்கள், உரிய கட்டுரையாளரின் பெயரைப் போடுங்கள், அது வெளியான பத்திரிகை அல்லது தளத்தின் பெயரைச் சுட்டிக் காட்டுங்கள் என்று தான் சொல்லலாம்; இதற்கு அதிகமாக என்னத்தைச் சொல்ல, காப்பி அடிக்கும் கலை(ஞ)-வாணர்-களுக்கு?!

1961ஆம் ஆண்டு வெளியான திருடாதே திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது :

‘திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க  முடியாது!’

 

10

ஒழிக்க முடியாவிட்டாலும் கூட கண்டிக்கலாம் இல்லையா?

இப்படி இலக்கியத் திருடு செய்யும் குருடர்களை ஒரு வார்த்தை கண்டித்து எழுதிப் போடுங்கள்.

வெட்கமடைபவர்கள், அப்புறம் அதில் ஈடுபடமாட்டார்கள், உரியவரின் பெயரை வெளியிடுவார்கள்!

அத்துடன் எனது நலம் விரும்பிகள் செய்வது போல ஒரிஜினல் படைப்பாளருக்கு இப்படிச் செய்பவர் யார் என்பதைத் தெரிவிக்கலாம்!

***

 

 

செரிங்கட்டிவிதிகள் (Post No.4678)

Date: 30 JANUARY 2018

 

Time uploaded in London- 6-20 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4678

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் இரண்டாவது உரை

 

  1. செரிங்கட்டிவிதிகள்

ச.நாகராஜன்

    இயற்கையின் உயிரியல் படைப்பு மர்மத்தை ஆராய்வதற்குத் தகுந்த ஒரு இடமாக விஞ்ஞானிகள் கருதியது ஆப்பிரிக்காவின் வட டான்ஜானியாவில் ஆரம்பித்து, தென் மேற்காக கென்யா வரை பரந்துள்ள மிக அழகிய செரிங்கட்டி வன பிராந்தியம் தான்! சுமார் 12000 சதுர மைல் பரப்பைக் கொண்டுள்ள இந்த இடத்தில் தான் செரிங்கட்டி சரணாலயம் உள்ளது.

உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பகுதி ஒரு ஆச்சரியகரமான ஆய்வுக் கூடம்.

1957ஆம் ஆண்டு டான்ஜானியா தேசீயப் பூங்காவின் அழைப்பின் பேரில் இங்கு இரு விஞ்ஞானிகள் வந்தனர். பெர்னார்ட் ஜிமெர்க் மற்றும் அவரது மகன் மைக்கேல் ஆகிய இருவரும் இந்தப் பகுதியை ஆய்வு செய்து மிகச் சரியாக மிருகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அயர்ந்து போனார்கள்; அவர்களது ஆய்வு முடிவைக் கேட்டு உலகமே அயர்ந்து போனது!

கொம்புகளை உதிர்க்காத ஒரு அரிய வகை ஆப்பிரிக்க மானினம் மட்டும் 99481. வரிக்குதிரைகள் 57199.கேஸல் வகை மானினம் 1,94,654. நீலமும் மஞ்சளும் கொண்ட புள்ளின மான்கள் 5172. அரிய வகை இம்பாலா மான்கள் 1717. எருமைகள் 1813. ஒட்டைசிவிங்கிகள் 837.யானைகள் 60. மொத்தமாக 3,66,980 பிராணிகளை அயராமல் அவர்கள் எண்ணி பட்டியலிட்டனர்.

செரிங்கட்டி என்றால் ஆப்பிரிக்க மொழியான மாசாய் மொழியில் முடிவற்ற சமவெளி என்று பொருள். ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களுள் இதுவும் ஒன்று. உலகின் பத்து இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் இது ஒன்று. இங்கு தான் அதிகமாக சிங்கங்கள் உலவுகின்றன.

 

70 அரிய வகை பிராணிகளும் 500 பறவைகளின் அரிய இனமும் செரிங்கட்டியில் உள்ளன.

செரிங்கட்டியை நன்கு ஆராய்ந்த விஞ்ஞானிகள் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

முதல் இரண்டு விதிகள் ஜனத்தொகை பற்றியது. இந்த மிருகம் எண்ணிக்கையில் குறைந்துவிட்டது, அது கூட இருக்கிறது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாதீர்கள். இயற்கைக்கு எதையும் நன்றாகவே சம அளவில் இருக்க வைக்கும் அபூர்வ சக்தி உள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.

மனிதன் தான் இந்த இயற்கையின் விதிகளினூடே விளையாடுகிறான் என்பதும் அதனாலேயே அரிய விலங்குகளும் பறவைகளும் அழிந்துபடுகின்றன என்பதும் தெரிகிறது.

‘உயிர்களிடத்து அன்பு வேணும் என்ற பாரதியின் அறிவுரையை மனதில் கொண்டால் இயற்கை அமைத்த உலகம் வளம் பெறும்; நமக்கு வளத்தையும் நல்கும்.

***


 

STORY OF MR.OMNIA IN BONUM (Post No.4677)

WRITTEN by London Swaminathan 

 

Date: 29 JANUARY 2018

 

Time uploaded in London – 8-26 am

 

Post No. 4677

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

This is a folk tale from Tamil Nadu in South India. There was a king in Tamil country who had a wise minister. Whenever something good or bad happened in the country or at palace, he used to tell the king ‘Omnia in bonum’ (Latin for good in everything). He believed that everything will be good for those who believe in God. He told the king to leave everything to god and not to worry about anything. In course of time he earned the nick name Mr Good (omnia in bonum).

 

The king was not happy with his minister but he retained him because he served his father and earned the name of a wise minister. Once the king had cut his finger while he was cutting a fruit. Immediately he called the minster to find out any bad omen in it. He told the king everything is for good (Omnia in bonum). The king got very angry and ordered his servants to put him into the prison. Then he called the natïve doctor who gave him some herbal treatment. He put a bandage around the king’s finger.

Months have passed. The villagers of the country came to the palace and complained about wild animals entering their villages and attacking the cattle. They requested the king to hunt those wild animals. The king decided to go for hunting and one day he went into the forest. Usually the minister would be next to him and this time he went alone because he put his minister into the prison.

 

After a day of hectic hunting the king wanted to take rest under the shade of a tree and so ordered his assistants to keep away from him. While he had a nap, suddenly a lion sprang up on him. But it went away after smelling him. The king was shivering and shaking and at last managed to return to the palace with the help of his assistants.

 

As soon as he returned to the palace he released his minister and asked to explain the meaning of lion’s attack and why it left him alive. The minister again began with his refrain, “Everything that happened is good. Everything is planned by God. I have been telling you this from day one of my ministership. Look! because of your injury the lion did not eat you. Normally they don’t like the injured or dead animals. So, your injury only saved you.”

The king laughed and asked what happened to you Mr Good? You have been suffering in the prison until this minute. The minister told him, “No, I did not suffer. If I had accompanied you which I always did, the lion would have killed me because my body was intact. So the prison sentence is also God’s will. It was good that you imprisoned me”. The king was happy and made him a full-fledged minister again.

 

There is another version of this story:

When the king had a nap under the tree, the tribal worshippers — Kabaliks –had caught him and took him for a human sacrifice. They wouldn’t sacrifice anyone with lost limbs or handicapped. So, they released him when they saw a bandage around his cut finger.

 

All for Good; Good for all!

 

–Subham–

‘எல்லாம் நன்மைக்கே’ கதை (Post No.4676)

WRITTEN by London Swaminathan 

 

Date: 29 JANUARY 2018

 

Time uploaded in London – 7-22 am

 

Post No. 4676

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

ஒரு ராஜாவிடம் ஒரு மந்திரி பணியாற்றினார். நாட்டில் எது நடந்தாலும் ‘எல்லாம் இறைவன் செயல்- எல்லாம் நன்மைக்கே’ என்று சொல்லி, சுருக்கமாகப் பேசி முடித்து விடுவார். ராஜாவுக்கு அவ்வளவு திருப்தி இல்லை. ஒரு முறை பழத்தை நறுக்கும்  போது    ராஜாவின் கை விரல் வெட்டுப்பட்டு விட்டது. மந்திரியிடம் காட்டி என்ன சிகிச்சை செய்யலாம்? என்று கேட்டார். அவர் “எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்- அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்று பேச்சைத் துவங்கினார்.

அரசனுக்கு வந்ததே கோபம்! யார் அங்கே? இந்த அமைச்சரைக் கொண்டு சிறையில் அடையுங்கள் என்று உத்தவிட்டான். ராஜாவின் கட்டளைப்படி மந்திரியும் சிறையில் தள்ளப்பட்டார்.

வைத்யரை அழைத்தார். அவர் வந்து மூலிகைகளைக் கசக்கி சாறு பிழிந்து ஒரு கட்டும் போட்டார்.

 

நாட்கள் உருண்டோடின. ஒரு நாள்,  நாட்டு மக்கள் மன்னரைச் சந்தித்து முறையிட்டனர்:

“மன்னர், மன்னவா! எங்கள் கிராமங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து ஆடு, மாடுகளைக் கொன்று குவிக்கின்றன. தாங்கள் அவைகளை வேட்டையாடி எங்களைக் காப்பாற்ற வேண்டும்.”

 

இதைக் கேட்ட மன்னவன் புடை சூழ, படை சூழ வேட்டைக்குப் புறப்பட்டான். காட்டு விலங்குகளை வேட்டை ஆடினான். வழக்கமாக வரும் மந்திரியோ சிறையில் போடப்பட்டதால் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை. எல்லோரையும் ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு ஒரு மரத்தடியில் போய்ப் படுத்தார். திடீரென்று ஒரு சிங்கம் அவர் மீது பாய்ந்தது. அவர் காயங்களின் மீதான கட்டுகளைக் குதறிவிட்டு, அவரைக் கொல்லாமல் போய் விட்டது. மன்னர் பயந்து நடுங்கி, தன் படை சூழ நாட்டுக்குத் திரும்பி வந்தான். சிறையில் அடைத்த அமைச்சரை அழைத்து இதற்கு என்ன விளக்கம் என்று கேட்டான்.

அவர் வழக்கமான பல்லவியை ஆரம்பித்தார்—“எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்- ஆண்டவன் அருள்- நீங்கள் காயப்பட்டு இருந்ததால் சிங்கம் உங்களைச் சாப்பிடாமல் சென்றுவிட்டது. பொதுவாக சிங்கம்  இறந்த விலங்குகளையோ காயம் அடைந்த விலங்குகளையோ உண்ணாது. ஆகையால் அது உங்களை விட்டது அதான்! நான் நீங்கள் விரல் வெட்டப்பட்ட அன்றே சொன்னேனே- எல்லாம் நன்மைக்கே என்று”.

 

உடனே அரசன் கேட்டான்: “அது சரி; நான் உங்களை சிறையில் அடைத்தேனே.அதுவும் நன்மைக்கோ!” என்று சொல்லி நகைத்தான்.

 

மந்திரி சொன்னார்

 

“ஆமாம்; அன்று நீங்கள் வேட்டைக்குப் போனபோது நான் மட்டும் அருகில் இருந்து இருந்தால் என் உடலைக் குதறி இருக்கும்; என் உடம்பில் காயம் ஏதும் இல்லாததால் என்னைச் சாப்பீட்டிருக்கும்.”

 

இந்தக் கதையை கிருபானந்த வாரியாரும் உபந்யாசங்களில் சொல்லுவார் –கொஞ்சம் மாற்றங்களுடன்.

 

அமைச்சர் சிறையில் இருந்த போது அரசன் மட்டும் வேட்டைக்குச் சென்றதாகவும், அவரை நரபலி கொடுக்கும் காபாலிகர் கடத்திச் சென்று காளிக்குப் பலிகொடுக்கும் முன், அவர் கைகளில் காயம் இருப்பதைப் பார்த்து விடுதலை செய்ததாகவும் சொல்லுவார். ஏன் எனில் காளிக்குப் பலி கொடுக்கும் உடல் சிறிதும் காயம் இன்றி இருக்க வேண்டும் என்பது காபாலிகரின் நம்பிக்கை!

 

எல்லாம் இறைவன் செயல் என்பதற்கு இது போல ஏராளமான கதைகள் உண்டு.

 

–சுபம்—

TAGS– எல்லாம் நன்மைக்கே, இறைவன் செயல், மந்திரி,

காபாலிகர், நரபலி

சைவத்தை விளக்குவது, சிம்பிளா, சிக்கலா?(Post No.4675)

Nataraja picture- posted by Karthik

Date: 29 JANUARY 2018

 

Time uploaded in London- 6-12 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4675

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

தென்னாடுடைய சிவன்!

 

சைவத்தை விளக்குவது, சிம்பிளா, சிக்கலா?!

 

ச.நாகராஜன்

 

1

சைவம் என்றால் என்ன?

அட, இது தானா கேள்வி! சிவனைக் கும்பிட்டு வழிபாடு செய்வது சைவம். சிவனைத் துதிப்போர் சைவர்கள்.

எளிய, சரியான விளக்கம் தான்! ‘சிம்பிளான’ விளக்கம்.

ஆனால் உண்மையில் சைவ சித்தாந்தத்தையும், சிவனின் பெருமையை உள்ளபடி அறியவும், சிவனை உரிய முறையில் வழிபடும் வழிபாட்டு முறைகளையும் அறிவது எளிதான ஒன்று அல்ல.

மனதைச் செலுத்தி அதில் தேர்ந்த பெரியோரை அணுகி அனைத்தையும் அறிய வேண்டும்.

சிக்கலான பல விஷயங்களை அறிவது சுலபமல்ல; ஏராளமான நூல்கள் இந்த விளக்கத்தைத் தர முனைந்துள்ளன. இவற்றிற்குள்ளும் இவற்றிற்கு அப்பாற்பட்டும் அமைவதே சிவனின் வழிபாடு!

தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லவா?

அவனைப் பற்றிய தமிழ் இலக்கிய நூல்கள் ஏராளம். அந்த நூல்களில் ஒரு சிறு நூலில் ஒரு சிறு துளியைப் பார்ப்போம்!

 

Dance before Nataraja, picture by Taitini Das

2

திருவேட்டீசுவரர் புராணம்

தொண்டை நாட்டில் திருவொற்றியூர், திருமயிலாப்பூர் ஆகிய திவ்ய தலங்கள் இரண்டிற்கும் இடையில் அமைந்துள்ளது திருவேட்டு நகர். இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார் திருவேட்டீடுவரர். அவரது புராணத்தை திருவேட்டீசுவரர் புராணம் என்று பண்டிதர் வெங்கடாசலம் பிள்ளை என்ற புலவர் பெருமான் இயற்றியுள்ளார்.

10 படலங்களில் 423 பாடல்களைக் கொண்டுள்ளது இது. கவிஞர் பிரான் சுமார் 112 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.

திருவல்லிக்கேணி பகுதியைச் சார்ந்த தலமான இதை வைப்புத் தலமாக அப்பர் பிரான் பாடி அருளியுள்ளார்.

தெண்ணீர் புனற்கெடில வீரட்டமுந் சீர்காழி வல்லந் திருவேட்டியும்

உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரண நல்லூர்

விண்ணார் விடையான் விளமா வெண்ணி மீயச்சூர் வீழி மிழிலை மிக்க

கண்ணார் நுதலாள் கரபுரமுங் கபாலியாரவர் தங்காப்புகளே

என்று இப்படி நாவுக்கரசர் காப்புத் திருத்தாண்டகத்தில் இந்தப் பதியைக் குறிப்பிட்டுள்ளார். ஆக தேவார வைப்புத் தலங்கள் 248இல் இதுவும் ஒன்றாக அமைகிறது.

 

Nataraja Idol- posted by Lalgudi Veda

3

திருவேட்டீசுவரர் புராணத்தில் திருநந்திதேவர் படலத்தில் சில பாடல்கள் சைவத்தில் நாம் அறிய வேண்டிய அருமையான விளக்கங்களைச் சுட்டிக் காட்டுகின்றன.

சைவ சமயத்தின் விபாகங்கள் பல என்பதை அறியும் போது  நாம் சைவம் பற்றி அறிந்தது ‘கை மண் அளவு’ என்பது புலப்படுகிறது. அறிய வேண்டியது உலகு அளவு!

ஊர்த்வ சைவம் என்பது சிவன் ஒருவன் உண்டெனவும் அவன் தத்வாதீனன் என்றும், சடை, விபூதி, ருத்திராட்ச தாரணத்துடன் சிவபூஜை செய்து பஞ்சாக்ஷரம் ஜெபித்து சிவவேடம் பொருளாகக் கொண்டு சிவத்தை தியானிப்பதே மூர்த்தி என்றும் சொல்லப்படும் சைவம்.

மற்ற சைவங்கள் :- அநாதி சைவம், ஆதி சைவம், மகா சைவம், பேத சைவம், அபேத சைவம், அந்தர சைவம், குண சைவம்,நிர்க்குண சைவம், அத்துவா சைவம், அவாந்தர சைவம், ஞான சைவம், அணு சைவம், கிரியா சைவம், நாலுபாத சைவம், வீர சைவம், சுத்த சைவம் என்பன.

இவற்றில் ஆதி சைவம், அனந்த சைவம், மகா சைவம், பேத சைவம், அபேத சைவம், அந்தர சைவம், எண்குணச் சைவம், நிற்குண சைவம் ஆகியவை பற்றி திருவேட்டீசுவரர் புராணம் ஆறு பாடல்களில் குறிப்பிடுகிறது.

 

ஆதி சைவம் என்றால் என்ன?

ஆதி சைவமாவது, சிவனிடத்து மோகமாய், மோக்ஷ சாதனங்களுக்கு வேண்டிய வேடங்களும், ஒழுக்கமும் பூண்டும் எல்லாம் சிவ போகமாய் அனுபவித்து விபூதி, ருத்திராக்ஷ சிவ வேடத்தின் மேல் நம்பிக்கையுடனிருந்து சிவனை அடைவதாகும்.

அனந்த சைவம் என்றால் என்ன?

அனந்த அல்லது அநாதி சைவமாவது, பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி நித்யம் எனவும், விபூதி, ருத்ராக்ஷ, சிவ வேடப் பொருளாகக் கொண்டு சிவத் தியானம் செய்து பாசம் நீங்கிச் சிவனை அடைவதே முக்தி என்பதாகும்.

மகா சைவம் என்றால் என்ன?

மகா சைவமாவது, விபூதி, ருத்ராக்ஷம், சடைமுடி தரித்துச் சிவ மூர்த்தியை சகுணமாகவும், நிர்க்குணமாகவும் தியானம் செய்து முக்தி  பெறுவதேயாகும்.

பேத சைவம் என்றால் என்ன?

பேத சைவமாவது, விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து சிவனடியார் ஆசாரியார், சிவலிங்கம் ஆகிய் இவைகளை பூஜித்து முக்திஅடைதல் என்பதாகும்.

அபேத சைவம் என்றால் என்ன?

அபேத சைவமாவது,  விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து பஞ்சாக்ஷர ஜெபம் செய்து சிவ பாவனை (சிவோஹம்) செய்து சிவம் ஆதல் என்பதாகும்.

அந்தர சைவம் என்றால் என்ன?

அந்தர சைவமாவது, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளாயிருத்தலால் சிவன் அந்தப்படியிருத்தலை ஆராய்ந்து நாடுதல் முக்தி எனக் கூறும் சைவமாகும்.

எண்குணச் சைவம் என்றால் என்ன?

இறைவன் எண்குணத்தான் எனக்கூறும் சைவம் இது.

நிற்குண சைவம் என்றால் என்ன?

விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து பஞ்சாக்ஷரம் ஜெபித்து நிர்குணனான சிவமூர்த்தியை அருவமாகத் தியானித்தல் நிற்குண சைவம் ஆகும்.

 

4

இவ்வளவு சைவமா என்று மலைக்க வேண்டாம்.

இதற்கு மேலும் ஏராளமான தத்துவங்கள் உண்டு.

ஒரு நல்ல சிவ பக்தன் அறிய வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு.

சைவம் ‘சிம்பிள்’ தான்; ஆனால் நுட்பமாக உள்ள தத்துவங்களை அறிவதில் சிக்கல் ஏற்பட்டால் உரிய பெரியவரையோ அல்லது நூலையோ நாடினால் நல்ல விளக்கம் கிடைக்கும்.

திருவேட்டீசுவரர் புராணத்தில் 203,205,207 முதல் 211முடிய உள்ள பாடல்கள் மேலே கண்டவற்றைக் குறிப்பிடுகின்றன.

‘திருவேட்டீசுவரர் புராணம் – மூலமும் உரையும்’ என்ற நூல் 1976ஆம் ஆண்டு திருவேட்டீசுவரர் தேவஸ்தான திருப்பணிக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

நூலுக்கு சிறந்த உரையை இராவ்சாஹிப் நல். முருகேச முதலியார் அளித்துள்ளார்.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

 

***

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 39 (Post No.4674)

Date: 29 JANUARY 2018

 

Time uploaded in London- 5-47 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4674

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 39

  பாடல்கள் 222 முதல் 231

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கவிஞர் தமிழழகன் பாடல்கள்

கோகிலக் கவிஞன்!

தெய்வத் தமிழினில் செய்வதே பாட்டெனச்

      சிந்தை உயர்த்திடுவான் – அதைக்

கைவரும் மாகலை காட்டி நமையும்

      கனவில் பெயர்த்திடு வான்

 

ஞாலம் வியந்திடக் காலம் கடந்தும் மெய்ஞ்

        ஞான ரதம் விடுவான்; – அதன்

மூலம்  புதுயுகச் சீலம் நமக்குற

         மோன பதம் நடுவான்!

 

நாட்டொரு மைக்கெனக் கூட்டழைப் பிட்டு

        நவயுகம் காட்டிடு வான்; – இசைப்

பாட்டும் பனுவலும் பாரதத் தாயின்

        பணிக்குமே சூட்டிடுவான்!

 

எத்தொழிலையும் இகழ்ச்சி இல் லாமல்

      இயற்றுக முன்னம் என்பான்; – தவ

உத்தமர் தாம் அவர் உண்மைத்தெய் வங்களாகி

      ஓங்குக பின்னும் என்பான்!

 

பெண்அடி மையினை எண்ணிடும் மூடர் தம்

        பேச்சினைத் தூற்றுமென்பான்; – அவர்

மண்ணடி மை யற மாதா பராசக்தி

        மாறிய தோற்ற மென்பான்!

 

சாதிகள் ஏதென்றும் சண்டை ஏ தென்றும்

       சகோதர வாதிடுவான்; – யார்க்கும்

நீதிகள் சொல்வதில் நிச்சயம் மாறாத

       நேர்மையும் ஓதிடு வான்!

 

புல்லிலும் வைரப் புதுப்படை வாங்கி முன்

       போருக் கெனத் திமிர்வான்; – நெடு

வில்லிலும் வாளிலும் வெல்படை  வாணி

       விஜய னொடும் நிமிர்வான்!

 

பழமை உரத்தின் செழுமையி லே வேர்ப்

       பலாவின் புதுமை செய்வான்; – அவை

முழுமையும் பின்னர்ப் பழமையாய் மாற

       முனையும் விதமும் சொல்வான்!

 

தனி என வாழும் மனிதனுக் கும்சமு

       தாயத்தின் பங்கை இட்டான்; – அதற்(கு)

இனி ஓர் விதி செய்வம் என்றுமுன் கூறி

       இதயமும் நன்கு தொட்டான்!

 

பாரதி இவ்வரும் பண்புறு நாட்டின்

      பரவசக் கோகிலமாம்! – அவன்

பேர் எதி லும் நிற்கப் பேணுவோர் வாழ்வெலாம்

      பின்பும் குதூகலமாம்!

 

தமிழழகன்: சந்தக்கவிமணி என்ற பட்டம் பெற்றுள்ள இவர் ஏராளமான கவிதைகளைப் புனைந்துள்ளார். பாரதிதாசன் விருது பெற்றுள்ளார்.

தொகுப்பாளர் குறிப்பு: 7-12-1975 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.

நன்றி: கவிஞர் தமிழழகன்; நன்றி: தினமணி சுடர்

 

***

STORY OF 10 BUSINESSMEN AND 3 THIEVES (Post No.4673)

WRITTEN by London Swaminathan 

 

Date: 28 JANUARY 2018

 

Time uploaded in London – 19-11

 

Post No. 4673

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

This is a folk tale from Tamil Nadu. There were ten Chettiars in a town. Chettiars belong to the caste of businessmen like Patels, Banias and other business communities. The Chettiars in a town used to buy sarees, towels and dhotis from a nearby village famous for woven goods. They knew all the days of weekly markets in the nearby towns. They used to go in a group to those markets and come back home in the group. This is the way the business guilds acted in the olden days to ensure their personal safety.

 

One day after selling their goods in a nearby city, they came back through a forest. Unfortunately, three thieves waylaid them. They threatened them with swords and seized all the money from them. The Chettiars, like Indian businessmen, tie the money, jewels and gems in their waist cloth. Knowing this the thieves forced them to undress except for the small loin cloth. They had to do it to save their lives.

 

When the Chettiars became half naked, the thieves wanted more fun and forced them to dance. First they told the thieves they didn’t know any dance. But when the thieves threatened them, one Chettiar began to dance and other nine joined them. the thieves were happy and spent their time in drinking and gambling games.

 

The business community in Tamil Nadu have their own jargon and some technical words for pricing. Just to hide the prices from the customers, they use this language when the customers are present. The customers wouldn’t know because they are mostly single words.

 

Out of the ten Chettiars one clever man found out a way to pass a secret message to his colleagues. So while he was dancing and singing he used them with the usual refrain/ rhyme.

Picture of Chettiar Dolls

 

Thom Thom Thathiginom (refrain)

Brothers ‘thiru’ persons

Younger brothers ‘puli’ persons

Thathingina Thathingina Thathinginathom

‘Savanam Savanam’ persons

‘Thiruvar Thiruvar’ round up

Thatheem Thatheem Thathinginathom

‘Savanam’ is the reminder

handcuff Savanam hadcuff

Thom Thom Thathinginathom

Stop-da, Come-da, Go-da

Thatheem Thatheem Thathinginathom.

 

The refrain ‘’thom thathinginathom’ of Chettiars attracted the thieves and then they started repeating the slogan and drank more and more.

 

The message conveyed through this song was, “Look! we are ten people; they are only three; if three of us can round up one thief each, all the three thieves would be arrested. The tenth man can run and bring the police. The above song has numbers I, 3 and 10 (Savanam, Thiru, Puli)

When the thieves were half asleep, the nine chettiars divided themselves according to the plan and then grabbed one  each. The tenth Chettiar  brought the police. The Chettiars got back their money and returned to their home town.

Even today Chettiar community use the coded words for prices for sarees and other textiles.

 

–subham–

 

வள்ளுவனும் கண்ணனும் அப்பரும் சொன்ன எட்டாம் நம்பர்! (Post No.4672)

WRITTEN by London Swaminathan 

 

Date: 28 JANUARY 2018

 

Time uploaded in London – 7-17 am

 

Post No. 4672

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

எட்டு என்ற எண், ஆன்மீக உலகில் சிறப்படைந்து காணப்படுகிறது. வள்ளுவன் முதல் பல தத்துவ ஞானிகள் இதைப் பயன்படுத்துகின்றனர். ஏன்?

 

பிறந்த தேதி எட்டாம் எண் உடையவர்கள் மிகவும் கஷ்டப் படுவார்கள் அல்லது ஆன்மீகத்தில் சிறந்து நிற்பார்கள். ஏனெனில் இது தன்னம்பிக்கை (Self Confidence), நிலைத்த (Stability) தன்மையின் சின்னம். மேலும் சனைச்சரனுக்கு (சனிக் கிரஹம்) உரிய எண்.

கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் வள்ளுவன் செப்புவான்,

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை   (9)

 

பொருள் என்ன?

 

ஒருவனுக்கு ஐந்து புலன்கள் இருந்தாலும் அவை அதனதன் வேலையைச் செய்யாவிடில் பயன் இல்லை. அது போல தலை என்னும் உறுப்பு எவ்வளவு சிறந்து இருந்தும், எட்டு வகையான குணங்களை உடைய இறைவனின் திருப்பாதங்களில் பணிந்து வணங்கவில்லை என்றால் பயன் இல்லை.

 

இதில் வள்ளுவன், இறைவனுக்கு எட்டு குணங்கள் இருப்பதாக இயம்புவான். இது சைவ திருமுறைகளில் சிவ பெருமானுக்குச் சூட்டப்படும் அடைமொழி. அப்பர், சுந்தரர்  தேவாரத்திலும் காணலாம்.

 

 

இதற்குத் திருக்குறள் உரைகளில் காணப்படும் விளக்கம் பின்வருமாறு:

 

எட்டு குணங்கள் யாவை?

தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத இன்பம் உடைமை என்று சைவாகமத்துக் கூறப்பட்டது. ஸம்ஸ்க்ருதத்தில் இவைகளை சுதந்தரத்துவம், விசுத்த தேகம், நிராமயான்மா, சர்வக்ஞத்துவம், அநாதிபேதம், அநுபதசக்தி, அநந்தசக்தி, திருப்தி என்று கூறுவர்.

 

இன்னொரு விளக்கம் அஷ்டமா சித்திகள் என்றும் கூறும்; அவை அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள். இதை கி.வா.ஜகந்நாதன் எழுதிய திருக்குறள் ஆய்வுரையில் காணலாம்.

 

பரிதியார் உரையில் கூறுவதாவது: எட்டு குணங்கள் உடைய சிவனின்

சிவந்த தாளை வணங்காத் தலை, சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராம். எட்டுக் குணமாவன: அநந்த ஞானம்,  அநந்த வீரியம், அநந்த குணம், அநந்த தரிசனம், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, அவா இன்மை, அழியா இயல்பு என்பன. சிலப்பதிகாரத்தில் (நாடு காண் காதை) சமண நாமாவளியில் எண்குணங்கள் யாவை என்று அரும்பதவுரை ஆசிரியர் கூறியது இது.

 

 

சிலப்பதிகாரத்தில், பண்ணவன் எண்குணன் (நாடு காண் காதை)

என்று இளங்கோ அடிகளும் பகர்வதை சமணர் சொல்லும் எட்டு குணங்கள் என்பர் சிலர்.

 

அப்பர் தேவாரத்தில் பல இடங்களில் சிவ பெருமானை எட்டு குணம் உடையவர் என்பார்:

எட்டு கொலாமவர் ஈறில் பெருங்குணம்

குணங்கள்தோள் எட்டு மூர்த்தி

கலை ஞானிகள் காதல் எண் குணவன்காண்

எட்டு வான்குணத் தீசனெம்மான்

 

(அப்பர் விடந்தீர்த்த.8, வன்னியூர் 7, தென்குரங்கு 4, இடைமருது 4) பாடல்களில் இவற்றைக் காணலாம்.

 

திருவள்ளுவருக்கு உருவ வழிபாடு உடம்பாடு என்பது இதனால் புலப்படும் என்றும் உரைகாரர்கள் புகல்வர்.

புத்தர் பெருமான்:–

 

புத்தர் பெருமான், இறை வழிபாடு பற்றி யாதும் செப்பாமல் எட்டு வகைக் குணங்கள் இருந்தால் போதும் என்று செப்பிச் சென்றார்.

 

அவையாவன:

நல்ல எண்ணம், நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல்,

நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சிநல்ல சிந்தனைநல்ல நோக்கம்

 

 

சீன தத்துவ ஞானி கன்பூசியஸ், ஜப்பானிய சாமுராய் வீரகள் ஆகியோரும் எட்டு குணங்கள் பற்றி விதந்தோதுகின்றனர்.

 

சீன தத்துவ ஞானி கன்பூசியஸ்:–

 

அன்புடைமை, அறம், மரியாதை, ஞானம், உறவினரிடத்தில் நம்பிக்கையைக் காப்பாற்றுதல், விசுவாசம், பெற்றோரிடத்தில் அன்பு பாராட்டல், பெரியோர்களை மதித்தல்

 

ஏற்த் தாழ இதே கொள்கைகளை சில மாறுதல்ளுடன் ஜப்பானிய சாமுராய் வீரர்களும் ஏற்றனர்.

 

கண்ணன் செப்பிய எட்டு:–

இவர்கள் எல்லோருக்கும் முன்னதாக கிருஷ்ண பரமாத்மா, பகவத் கீதையில் பகன்ற எட்டு குணம் பின்வருமாறு:–

பூமிராபோ அனலோ வாயுஹு கம் மனோ புத்திரேவ ச

அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா

 

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாக என் பிரக்ருதி பிரிவு பட்டிருக்கிறது (கீதை 7-4)

 

இது பற்றி ராமகிருஷ்ண மடம் அண்ணா எழுதிய பகவத் கீதை பேருரையில் விளக்குவார்:

அஹங்காரமே பின்னர் புத்தியாகவும் மனதாவும் பரிணமிகும். அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஆகாயம், வாயு, தேயு (அக்னி), அப்பு (ஜலம்), ப்ருத்வீ (மண்) இவற்றின் சிருஷ்டி (தைத்ரீய உபநிஷத் 2-1) எல்லாப் பிரவ்ருத்திக்கும் அஹங்காரமே மூல காரணம். இங்கு குறிப்பிட்ட மண் முதலிய பஞ்ச பூதங்கள் ஸூக்ஷ்மத் தன்மாத்திரைகளைக் குறிப்பன., ஸ்தூலமான பொருள்களையன்று.

மேலும் அண்ணா சங்கரரின் ஒரு மேற்கோளையும் எடுத்தாளுகிறார்:-

அந்தக் கரணம் என்பது என்ன?

மனது புத்தி சித்தம் அஹங்காரம் – இந்நான்கினையும் அந்தக் கரணம் என்பர். மனதின் ஸ்தானம் கழுத்து, அதன் வேலை சந்தேகித்தல்; புத்தியின் ஸ்தானம் முகம், வேலை- நிச்சயம்; அஹங்காரத்தின் ஸ்தானம் இருதயம், வேலை- அபிமானம்; சித்தம் புத்தியுடனும், அஹங்காரத்துடனும்,மனத்துடனும் சேரும் (சங்கர- ஆத்மனாத்ம விவேகம்)

 

ஆக, எட்டு என்ற எண் மஹாபாரத காலத்தில் இருந்து, அப்பர் காலம் வரை ஆன்மீகத்தில் பயன்பட்டு வந்து இருக்கிறது.

 

எண்குணத்தான் அருள் பெறுவோமாக!

TAGS:– எட்டு எண், ஆன்மீகத்தில், புத்தர், கன்பூசியஸ், சமணர், சாமுராய், கீதை, குறள்

–subham–

பாரதி போற்றி ஆயிரம் – 38 (Post No.4670)

Date: 28 JANUARY 2018

 

Time uploaded in London- 6-07 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4670

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 38

  பாடல்கள் 218 முதல் 221

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

சங்கு சுப்பிரமணியன், மதிவண்ணன், ஆர்.பி.சாரதி பாடல்கள்

இலக்கியத் தலைவன் பாரதியார்

கம்பனைப் பெற்ற நாட்டில்

  கவிமணம் ஓயு நாளில

வம்பரின் மந்தை தன்னில்

  வளர்த்திட தேச பக்தி

உம்பர் மா உலகதாக

  உயர்த்திடத் தமிழகத்தை

அம்புவி வந்த வீ ர!

  அருங்கவி பாரதியார்!

சங்கு சுப்பிரமணியன்: பாரதியைப் பெரிதும் போற்றி பாரதியின் பாடல்களைப் பரப்பியவர். தேசபக்தர். சங்கு கணேசன் நடத்தி வந்த சுதந்திரச் சங்கு பத்திரிகையில் உடன் இருந்தவர்.

தொகுப்பாளர் குறிப்பு: இந்தப் பாடல் இலக்கியத் தலைவன் பாரதியார் என்ற கட்டுரையின் முடிவில் வரும் பாடல். இது சுதந்திரச் சங்கு 9-9-1931 தேதியிட்ட இதழில் வெளியானது.

இதை குமரிமலர் பத்திரிகையில் திரு ஏ.கே.செட்டியார் பாரதியைப் பற்றிய பழைய இதழ்களில் வந்த கட்டுரைகளை வெளியிடும் போது மீண்டும் வெளியிட்டார்.

நன்றி: குமரி மலர்.

பாரதி

மதிவண்ணன்

வான்வியப்பு! தீத்தெறிப்பு! நீர்ச்சிலிர்ப்பு!                  மலர் வனப்பு! இவையனைத்தும் ஒன்றாய்ச் சேர்ந்த           தேன் படைப்பு பாரதியின் பாடல்! நாட்டின்                சிறுமை கண்டு பொங்கி வந்த அவரின் பாட்டால்   கூன்படைத்து பள்ளத்தில் வீழ்ந்தி ருந்த                குருடர்களும் எழுச்சியுற்று விழியைப் பெற்றார்!                நான் படைத்த பாட்டெல்லாம் அன்னை நாட்டின்             நலம் பாட வந்ததென்றார் பாரதியார்                       இலக்கியத்தில் இருள்படிந்த நேரம் வந்த                இளங்கதிர் தான் பாரதியார்! வெற்றுச் செய்யுள்             கலக்கி வந்த காலத்தில் அமுதைப் பாட்டில்         கலந்தளித்தார்! குயில் பாட்டும் கண்ணன் பாட்டும்  பலமுறையும் படித்தாலும் இன்பம் ஊட்டும்!           பாஞ்சாலி சபதத்துள் வீ ரம் பொங்கும்!                  நிலை வாயில் பாரதியார், பணிந்து சென்றால்           நிச்சயமாய் இலக்கியத்தின் இல்லம் காண்போம்!

மதிவண்ணன்: கவிஞரைப் பற்றிய விவரங்கள் தேவை.

தொகுப்பாளர் குறிப்பு: 7-12-1975 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.

நன்றி: கவிஞர் மதிவாணன் நன்றி: தினமணி சுடர்

 

ஒரு கவிஞனின் வணக்கம்!

மதிவண்ணன்

சொற்பதங்கள் அனைத்துக்கும் பொற்பதங்களைத் தந்தே அற்புதமாய் நடக்கவைத்த விற்பனனே! பாரதியே!       ஊமைக்கு நீயோ உயிர்நாக்கு போன்றவன் தான்          தீமைக்கு என்றாலோ தீ நாக்காய் எழுந்தவன் நீ!      வானத்தைச் சொற்களினால் வளைத்துப் பிடித்தவன் நீ! மோனத்திலும் கவிதை மோகனத்தைக் கண்டவன் நீ!      நெஞ்சப் பூக்களுக்கு நிறக் கவர்ச்சி தந்தவன் நீ!       வஞ்சத்தை மாய்க்கின்ற வாளை எடுத்தவன் நீ!          தேனில் நனைத்தெடுத்த தீயின் சொல் தொடுத்து        வானில் கால் பதித்த மண்ணில் விதைத்தவன் நீ!        சமுதாயச் செவிகட்குச் சரியான நேரத்தில்             அமுதாய கவிகளை அறிவித்த பாவலனே!            மண்ணுக்குப் பாடியவோர் மாகவிஞ! என்மேல் உன்                                   கண்பார்வை வேண்டும்! கவிஞன் வணங்குகிறேன்!

மதிவண்ணன்: கவிஞரைப் பற்றிய விவரங்கள் தேவை.

தொகுப்பாளர் குறிப்பு: 12-12-1982 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

நன்றி: கவிஞர் மதிவாணன் நன்றி: தினமணி சுடர்

பாரதிச் சுடர்

ஆர்.பி.சாரதி

தமிழெனும் சோலையில்                           தனிமலர் பூத்தது                                     தங்க மலரடியோ!

தங்கம் உருகித்                                      தேனாய்ப் பாய்ந்தது                                   தெய்வக் கற்பனையோ!

கமழுங் கற்பனை                                    கவினிதழ் விரித்தது                                கவிதை அமிழ்தடியோ

அமிழ்தில் குழைந்து                                    அனலிற் கனன்றது                                அற்புதம் பாரடியோ!

பார்மிசை யெங்கணும்                             பேரொளி பாய்ந்தது                                 பாரதிச் சுடரடியோ!

ஆர்.பி.சாரதி: கவிஞரைப் பற்றிய விவரங்கள் தேவை.

தொகுப்பாளர் குறிப்பு: 7-12-1975 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

நன்றி: ஆர்.பி.சாரதி நன்றி: தினமணி சுடர்

***