பாரதி போற்றி ஆயிரம் – 41 (Post No.4691)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-17 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4691

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 41

  பாடல்கள் 241 முதல் 249

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கவிஞர் k. ராமமூர்த்தி பாடல்கள்

மகாகவி பாரதி வாழ்க மாதோ!

சீர்மிகுந்த செந்தமிழின் சீராளர்;

     செகம்புகழும் கவிதந்த பேராளர்;

கார்த்திகைத் தீபத்திங்கள் திருநாளில்,

     கதிரெனவே அவதரித்தார் பாரதியார்.

 

நேர்த்தியுடன் பாநெய்த தறியாளர்;

      நிலையறிந்து நூலிழைத்த குறியாளர்;

பாரதிசெவ் வாய்மலர, உருவான

     பைந்தமிழ்ச் சொல்தங்கக் கருவூலம்.

 

கல்வியினால் காழ்ப்புதன் னிடமில்லாமல்

      கவிக்குலத்து முன்னவரைப் படம்பிடித்தார்;

புல்முளைத்தே இருளடைந்த இந்நாட்டை,

       பொலிவாக்கும் திருப்பணிக்கே வந்துதித்தார்.

 

முந்தையரின் புகழலையில் பொருந்தியதால்

       முகிழ்ந்தகடற் செல்விஆழம் இருந்தவாறே,

சந்தமினிமை, முத்துப்பவளம் பாலித்தாள்;

       தங்கக்கவி, தொடுத்ததனை மாலையிட்டார்.

 

பாவானம் பார்த்தறியா விடிவெள்ளி;

       பாரதநாட்டு விடுதலையின் தீக்கொள்ளி;

மாகாளியம் மகாசக்தி, அருட்சக்தி,

       மாகவியாய் வந்ததமிழ்ப் பெரும்சக்தி.

 

வளர்கின்ற பொற்காலம் தமிழினுக்கே

       வாராதோஎன விசனிக்கின்ற பொழுதினிலே

களமிறங்கித் துறைதோறும் பாடிவைத்தார்;

       காசினியில் மனிதநேயம் நாடிநின்றார்.

 

புலர்காலைப் பொழுதுவரும் ஞாயிறுபோல்,

       புரட்சிக்கே பாட்டாயுதப் பாயிரத்தால்

தளர்வின்றிச் சமூகவானில் சிறகடித்தே,

       சமத்துவத்தைத் தாரணிகேட்க முரசடித்தார்.

 

பவித்திரம் பாரதிபாட்டு நெறிபாடும்

       பார்மீது ரவியாலே ஒளிகூடும்;

கவியரசர் பாரதிக்கு ஜதிபல்லக்கு

       காசினியில் பாரதியே கதிநமக்கு

 

செந்தமிழ்ப் பாலதினில் மொய்ம்புறவே,

       தேசபக்தி, தெய்வபக்தி நெய்யெடுத்தார்;

வந்தனைகள் புரிந்துநலம் சூழ்ந்திடவே,

        வையமெலாம் பாரதிபுகழ் வாழ்கமாதோ!

     

    

கவிஞர்  K. ராமமூர்த்தி : பாரதி காவலர் டாக்டர் K. ராமமூர்த்தி ‘மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பாரதி பற்றிய பல கவிதைகளையும் புனைந்துள்ள பாரதி ஆர்வலர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நடந்த 10வது உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்று பாரதி பற்றி உரையாற்றியவர். பாரதத்தில் பல்வேறு இடங்களில் உரையாற்றியவர். தொடர்ந்து பாரதியைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளார்.

தொகுப்பாளர் குறிப்பு: ‘மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு’ என்ற நூலில் வெளியாகியுள்ள கவிதை. நூலை வெளியிட்டோர் : கங்கை புத்தக நிலையம் 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை – 600017 முதல் பதிப்பு டிசம்பர் 2010

நன்றி: பாரதி காவலர் டாக்டர் K. ராமமூர்த்தி; நன்றி: திரு ராமநாதன், கங்கை புத்தக நிலையம்

 

***

ஆணா பெண்ணா ? யார் நல்லவர்? பழமொழிக் கதை (Post No.4690)

Date: 1 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8–11 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4690

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

‘ஆண் நல்லது, பெண் பொல்லாதது’ என்று ஒரு பழழொழி உண்டு. இதன் பின்னாலுள்ள கதையை, திராவிடப் பூர்வ கால கதைகள் என்ற புத்தகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் நடேச சாஸ்திரி என்னும் பெரியார் தொகுத்து வைத்துள்ளார்; பழைய கால, பிராஹ்மண மொழியில் உள்ளதை நான் புதுக்கி வரைகிறேன்.

 

ஒரு ஊரில் ஒரு பிராஹ்மணர் இருந்தார். மிகவும் நல்லவர். ஊருக்கு வருவோருக்கெல்லாம் அக்கால வழக்கப்படி போஜனம் (சாப்பாடு) செய்துவிட்டுத்தான் உண்பார். அவருடைய மனைவியோ பொல்லாதவள். புருஷனுக்கே சோறு போட மறுப்பவள்.

 

அவள் ஒரு தந்திரம் வைத்திருந்தாள்; முதலில் புருஷன் சாப்பிட வந்த விருந்தாளியை திண்ணையில் உட்கார வைத்து விட்டுப் பக்கத்தில் உள்ள நதியில் குளித்துவிட்டு வருவது வழக்கம். அப்படிப் புருஷன் போன பின்னர் இந்தப் பெண்மணி (பெண் சனி) ரேழியில் (வராண்டாவில்) வந்து நின்று கொண்டு, “ஊர்ப் பயல்களுக்கு எல்லாம் நான் ஏன் சமைத்துக் கொட்ட வேண்டும். அதுதான் இந்த ஊரில் இது போன்ற சோற்றால் அடித்த பிண்டங்களுக்கு என்று சத்திரம் ஒன்றைக் கட்டி வைத்து இருக்கிறார்களே அங்கே போய்ச் சப்பிடக்கூடதா? இங்கு வந்து என் கழுத்தை ஏன் அறுக்கிறார்கள்; எனக்கோ உடம்பு சரியில்லை” என்பாள்.

 

இதைத் திண்ணையில் உடகார்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களில் பாதிப் பேர் ரோஷம், மானம், வெட்கம், சூடு, சொரணை இருந்தால் சாப்பிடாமல் போய் விடுவார்கள் கணவன் வந்து கேட்டால், ‘’அவருக்கு மிகவும் பசியாம்; ஆகையால் சத்திரத்தில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று போய்விட்டார்’’ என்பாள்; சிலர் என்னதான் திட்டு வாங்கினாலும் சாப்பிட்டுத்தான் போக வேண்டும் என்று உட்கார்ந்து சாப்பிடுவர்.

 

இப்படிக் காலம் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் ஒரு தேஜஸ் உள்ள ( முகப் பொலிவு) பிராஹ்மணர் வந்தார். அவரைத் திட்ட இப்பெண்மணிக்கு (பெண் சனி) மனம் வரவில்லை. வேறு ஒரு தந்திரம் செய்தாள். தனது வீட்டிலுள்ள இரும்புப் பூண் போடப்பட்ட உலக்கையை ரேழிக்குக் கொண்டு வந்தாள். பின்னர் திண்ணையில் உட்கார்ந்து இருந்த தேஜஸ்   மிக்க பிராஹ்மணனை அழைத்தாள்.

 

“சுவாமின்னு! இங்கே வாரும்! உமக்கு ஏதாவது கடைசி நிமிட பிரார்த்தனை இருந்தால் இப்போதே அதை ஜபித்து விடும்; இன்னும் சற்று நாழியில் உம் பிராணன் (உயிர்) போய் விடும்” என்றாள். அவரோ நடுநடுங்கி , “அம்மணி! என்ன விஷயம்? இப்படி யெல்லாம் பேசுகிறீர்கள்? என்றார்.

 

“அதுவல்ல, உம்மைப் போன்ற பிராஹ்மணர் யாராவது கிடைத்தால், நீங்கள்  சாப்பிடும்போது இந்த உலக்கையால்  என் கணவர் அடித்துக் கொன்றுவிடுவார். என் கணவர் ஒரு மாதிரியானவர்” என்றாள்.

அவர் பயந்துகொண்டு வெளியே நடந்தார்.

 

இதற்குள் ஆற்றில் குளிக்கப்போன அந்தப் பிராஹ்மணர் வந்தார். சாப்பிட வந்த பிராஹ்மணர், அவரைக் கண்டதும் வேகமாக நடக்கத் தொடங்கினார்.

 

உடனே, எதனால் சாப்பிட வந்த பிராஹ்மணர் இப்படி வேகமாகப் போகிறார்? என்று மனைவியிடம் கேட்டார்.

 

“ஓ, அதுவா? நான் பொறந்தாத்துலேயிருந்து கொண்டுவந்த இந்த உலக்கை தனக்கு வேண்டும் என்றார். நான் கொடுக்க முடியாது; இது பரம்பரைச் சொத்து என்றேன். கோபித்துக் கொண்டு சாப்பிடமாட்டேன் போ என்று வேகமாகப் போய்விட்டார்” – என்றாள்.

 

“அடக் கடவுளே! இந்த உலக்கை என்ன? உனக்கு தங்கத்தால் உலக்கை வாங்கித் தருகிறேன். அவரிடம் உலக்கையைக் கொடுத்து சாப்பிட அழைத்து வருவேன்; இல்லாவிடில் மஹா பாபம் வந்து சேரும் என்று உலக்கையுடன் ஓடினார். வேகமாக நடந்த பிராஹ்மணன் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தார். இந்தப் பிராஹ்மணன்

இப்படி உலக்கையுடன் ஓடி வருவதைப் பார்த்தவுடன் ‘’அடப் பாவி கொலைகாரா, உன் மனைவி சொன்னது உண்மைதான்; என்னைக் கொல்லவா வருகிறாய்’’ என்று கூவிக்கொண்டே குதிங்கால் பிடரியில் அடிக்க ஓடிப் போனார்.

 

ஆண் நல்லது, பெண் பொல்லாது என்பதற்கு அவ்வையார் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் உண்டு. அவரும் இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதை விட சந்யாசம் மேற்கொள்வதே நல்லது என்றார். சாக்ரடீஸோ மனைவி நல்லவராக இருந்தால் கல்யாணம் செய்து கொண்டவன் அதிர்ஷ்டசாலி; கெட்டவளாக இருந்தால் கணவன், பிலாஸபராகலாம் PHILOSOPHER — தத்துவ ஞானியாகலாம் என்றார். சாணக்கியனோ பெண் கெட்டவள் என்று தெரிந்தால், கல்யாணம் செய்துகொள்ளாமலே வாழ்வது சாலச் சிறந்தது என்றார்.

கல்யாணம் கட்டாதே!

கெட்ட அரசன் ஆளும் நாட்டைவிட காடே மேல்;

கெட்ட நண்பனைவிட, நண்பனில்லாததே மேல்;

கெட்ட மாணவனை விட மாணவன் இல்லாதததே மேல்;

கெட்ட மனைவியைவிட மனைவி இல்லாததே மேல்.

 

வரம் ந ராஜ்யம் ந குராஜராஜ்யம் வரம் ந மித்ரம் ந குமித்ரமித்ரம்

வரம் ந சிஷ்யோ ந குசிஷ்யசிஷ்யோ வரம் ந தாரா குதார தாராஹா.

 

6-12

 

–சுபம்–

CHRISTIAN MIRACLE ANECDOTES (Post No.4689)

Date: 1 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-30 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4689

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

Miracles Anecdotes

Caedmon was unlettered that he had to retire for shame from the Refectory at Whitley Abbey when the harp passing from hand to hand during dinner approached him with its implication that he must recite. On one of these occasions, as narrated by Bede, it happened to be Caedmon’s to keep guard at the stable during the night and overcome with vexation, he quitted the table and retired to his post of duty, where ,laying himself down, he fell into a sound slumber.

 

In the midst of his sleep, a stranger appeared to him, and, saluting him by his name, said,

“Caedmon , sing me something”.

Caedmon answered, “I know nothing to sing; for my incapacity in this respect was the cause of my leaving the hall to come hither”.

“Nay, said the stranger, but thou hast something to sing “

“What must I sing?” Said Caedmon

“Sing the Creation, was the reply and there upon Caedmon began to sing verses which he had never heard before”.

Caedmon then awoke, and he was not only able to repeat the lines which he had made in his sleep, but he continued them in a strain of admirable versification. In the morning he hastened to the town reeve, or bailiff of Whitley, who carried him before the Abbes Hilda ; and there in the presence of some of the learned men of the place he told his story and they were all of the opinion that he had received the gift of song from Heaven.

 

Xxxx

Impossible!

On February 10,1872 Mr Wallace Wright publicly challenged Mrs Mary Baker Eddy :-

 

1st. To restore the dead to life again as she claims she can

2nd. To walk upon the water without the aid of artificial means as she claims she can

3rd. To live 24 hours without air, or 24days without nourishment of any kind without its having any effect on her.

4th. To restore sight when the optic nerve has been destroyed

5th. To set and heal a broken bone without artificial means

 

Mr Wright ended the controversy by the exulted announcement on February 17 that his opponent and her science were preictally dead and buried .

Xxx

Miracle of Eating!

A negro preacher addressed his flock with great earnest ness on the subject of miracles, as follows,

“My beloved, friends, de greatest ob all miracles was ‘bout the loaves and fishes. Dey was 5000 loaves and 2000 fishes, and de twelve apostles had to eat ‘em all. De miracle is dey didn’t burst .

Xxx

Saved from Burning House!

John Wesley, the hymnist, was nominated a special person by divine fiat. When a baby, he was miraculously saved from his father’s burning office. Just after his escape, the roof fell in. This incident contributed so strongly to his later evangelism, giving him conviction that he had been saved by god for a special mission, that he adopted a device found on some of the contemporary prints, of him, namely, a house in flames, with this motto from the prophet,

“Is he not a brand plucked from the burning?”

Xxxxxxx SUBHAM xxxxxxxxxxxx

சத்ய சாயி லீலை- சோகத்தால் அழுத நான்கு புடவைகள்! (POST. 4688)

Date: 1 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-39 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4688

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

சோகத்தால் அழுத நான்கு புடவைகள்!

 

ச.நாகராஜன்

 

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் அவதாரத்தில் ஆயிரக்கணக்கான லீலைகள் உண்டு.

 

ஒவ்வொரு லீலையும் ஆனந்தத்தைத் தருவதோடு அல்லாமல் ஒரு அற்புதமான பாடத்தையும் கூடவே தரும்.

பம்பாயில் தர்மக்ஷேத்ராவில் நடந்த நிகழ்ச்சி இது. ஆண்டு 1968.

அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த பெண்மணிகள் நூறு பேருக்கு அருளாசியுடன் புடவைகள் தர ஸ்வாமி எண்ணி, நூறு புடவைகளைக் கொண்டு வருமாறு பணித்திருந்தார்.

ஒரு கார்ட் போர்ட் பெட்டியில் நூறு சேலைகள் வந்தன.

அவற்றில் 96ஐ ஸ்வாமி தேர்ந்தெடுத்தார். நான்கு புடவைகளை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்.

 

பின்னர் நடந்தது தான் அதிசயம்.

அணுக்க பக்தரான ஹிஸ்லாப், அவர் மனைவி, இன்னும் பல பக்த்ர்கள் குழுமி இருந்த அறையில் ஹிஸ்லாப் புடவைகளை நோட்டம் விட்டார்.

 

அவற்றில் நான்கு ஈரமாக இருந்தன.

 

உடனே அவர் இதை பாபாவிடம் சுட்டிக் காட்டினார்.

இந்த அறையில் ஈரம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. நூறில் நான்கில் மட்டும் எப்படி ஈரம் வர முடியும்? பெட்டியோ டேபிளின் மீது இருந்தது! ஸ்வாமியோ ஒவ்வொன்றையும் செக் செய்து ‘அப்ரூவ்’ செய்து கொண்டிருந்தார்.

 

ஆக புடவைகள் ஈரமானது எப்படி?

ஸ்வாமி கூறினார்: ஸ்வாமி அவற்றை வேண்டாம் எனச் சொல்லி விட்டதால் அவை அழுகின்றன!

இதைக் கேட்ட ஹிஸ்லாப் திடுக்கிட்டார்.

 

ஹிஸ்லாப்: அது எப்படி? உயிரற்ற ஜடங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு, அவை கூட அழும் என்றா ஸ்வாமி சொல்கிறார்?

பாபா: உயிரற்ற ஜடங்களுக்கு கூட உணர்ச்சிகள் உண்டு. அவை கூட துக்கத்துடன் அழும்.

 

இலங்கைக்கு சேது பாலம் கட்டப்பட்ட போது குரங்குகள் பாறைகளைக் கொண்டு வந்து பாலம் கட்ட உதவின. பாலம் கட்டி முடியப் போகும் தருணத்தில் ஒரு பெரிய மலை அந்தப் பாலத்திற்கு அருகில் கொண்டு வரப்பட்டது.

ஆனால் பாலமோ முடிந்து விட்டது; இனி அந்த மலை தேவை இல்லை. கொஞ்சம் தாமதமாக அங்கு அந்த மலை வந்து விட்டது.

 

அந்தத் தருணத்தில் தன்னை வேண்டாம் என்று சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்டவுடன் துக்கம் தாளாமல் அந்த மலை அழ ஆரம்பித்தது.

 

உடனடியாக் இந்தச் செய்தியை ராமனுக்கு அறிவித்தனர்.

கருணையின் திரு உருவான ராமன் மனம் நெகிழ்ந்தார்.

உடனடியாக அந்த மலைக்கு ஒரு செய்தியை அனுப்பினார்- அந்த மலை கவலைப்பட வேண்டாம் என்று!

அந்த மலை இனி வரும் அவதாரம் ஒன்றில் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதி மொழியையும் சொல்லச் சொன்னார்.

மலை துக்கம் தீர்ந்து மகிழ்ந்தது!

கிருஷ்ணாவதாரத்தில் அது தான் கோவர்த்தன கிரியாக இருந்தது! தன் ஒரு விரலால் அந்த  மலையைத் தான் கிருஷ்ணர் தூக்கி தன் லீலையைச் செய்தார். மலையும் பரவசம் அடைந்தது!

கோகுலத்தில் இந்திரன் மழை பெய்து வருத்திய காலத்தில் இடையர்களை மழையிலிருந்து காப்பாற்றியது அந்த மலையே!

 

 

பாபாவின் இந்த அருளுரையைக் கேட்ட ஹிஸ்லாப் உள்ளிட்ட அனைத்து பக்தர்களும் ஆச்சரியத்துடன் பரவசமாயினர்.

 

ஹிஸ்லாப்: ஸ்வாமி! அந்த பெரிய நாடகம் இன்று எங்கள் கண் முன்னாலேயே திருப்பியும் இப்போது அரங்கேறி விட்டதே!

‘இங்கு வந்த புடவைகளில் நா பயன்படுத்தப்படப் போவதில்லை என்று அழுதனன்குவே. அவை ஸ்வாமியின் கருணையால் கொண்டுவரப்பட்ட காரணத்திற்காக இல்லாவிட்டாலும், ஸ்வாமியால் இன்னொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டு விட்டனவே’ என்று கூறி மகிழ்ந்தார்.

 

ஆம், அந்த நான்கு புடவைகளையும் ஹிஸ்லாப்பின் மனைவி, இன்னும் அங்கிருந்த இதர மூன்று பெண்மணிகளுக்கு அருளாசியுடன் பாபா வழங்கினார்.

 

அதைத் தான் அதிசயமாக ஹிஸ்லாப் குறிப்பிட்டார்!

ஸ்வாமி: ஆம்! நீங்கள் கூறியது சரியே! எவர் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்தாரோ அவரே தான் இப்போது இங்கு உங்கள் முன் இருக்கிறார்!

 

அவதார மஹிமையைச் சொல்லவும் வேண்டுமோ!

இதைப் படிக்கும் போதே ஆனந்தம் அடையும் போது அதை நேரில் அனுபவித்தவர்களின் ஆனந்தத்திற்கு ஒரு எல்லை உண்டோ!

லீலையின் வாயிலாக உயிரற்ற ஜடங்களுக்கும் கூட உணர்ச்சிகள் உண்டு என்ற பாடத்தையும் கூட அல்லவா அறிய முடிகிறது!!

***

ஆதாரம் : Conversations with Bhagavan Sri Sathya Sai Baba by John S. Hislop

p 31; Sri Sathya Sai Books And Publications Trust வெளியீடு

1968 ஜனவரியில் நடந்த டேப் செய்யப்பட்ட உரையாடல்கள்

நன்றி : ஹிஸ்லாப்; நன்றி : Sri Sathya Sai Books And Publications Trust

***

செரிங்கட்டி தரும் 6 விதிகள் (Post No.4687)

Date: 1 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-03 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4687

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் மூன்றாவது உரை

 

  1. செரிங்கட்டி தரும் ஆறு   விதிகள்

ச.நாகராஜன்

 

ஆப்பிரிக்காவில் செரிங்கட்டி என்ற அற்புதமான வளம் வாய்ந்த பகுதியை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் முடிவில் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர். சுற்றுப்புறச் சூழலைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ள இந்த ஆறு விதிகள் உதவும்.

முதல் விதி : எல்லா உயிரினங்களும் சம அளவில் படைக்கப்படவில்லை.

எவ்வளவு தேவையோ அந்த அளவில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் உயிரினங்களை இயற்கை படைத்துள்ளது.

இரண்டாம் விதி: சில முக்கியமான உயிரினங்கள் தொடர்கூட்ட அளவில் மற்றவற்றின் மீது மறைமுகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

அதாவது குறிப்பிட்ட சில முக்கிய உயிரினங்களை மட்டும் கண்காணித்தால் போதும். அது ஏற்படுத்தும் மறைமுக விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்.

மூன்றாவது விதி: சில உயிரினங்கள் பொதுவான ஆதார வளங்களுக்காகப் போட்டி போடுகின்றன.

 

செரிங்கட்டியின் நான்காவது விதி,  ஒரு மிருகத்தின் உடல் அளவு அந்த மிருக வகையின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான அம்சம் என்று கூறுகிறது.

ஒரு மிருக இனத்தின் எண்ணிக்கை குறையும் போது தானாகவே அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. மிக அதிகமாகும் போது அவற்றிற்கான உணவுக்கு வழி இல்லை என்பதால் தானாகவே எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது.

 

செரிங்கட்டியின் ஐந்தாவது விதி, மிருகங்களின் எண்ணிக்கையானது அதன் அடர்த்தியைப் பொறுத்து உள்ளது என்கிறது.

 

உணவுக்கு ஓரிடத்தில் வழி இல்லை என்னும் போது குறிப்பிட்ட மிருகங்களின் கூட்டம் இடம் விட்டு இடம் மாறுகிறது.

சிங்க்ளேர் என்ற விஞ்ஞானி இரண்டு லட்சம் வரிக்குதிரைகளும் நான்கு லட்சம் ‘தாம்ஸன் மான்’களும் இப்படி ‘மைக்ரேஷன்’ எனப்படும் இடம் விட்டு இடம் பெயர்தலைக் கண்டு வியந்தார்.

 

இடம் விட்டு இடம் பெயர்தலானது ஒரு மிருக வகையின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது என்று கூறுகிறது செரிங்கட்டியின் ஆறாவது விதி.

 

டாக்டர் ஆஸ்கார் பாமன் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி 1892இல் செரிங்கட்டி காடுகளை ஆராய அதனுள் புகுந்தார்.

செரிங்கட்டியில் உள்ள இயற்கைக் காட்டு வளம் தரும் சுவையான பல செய்திகளில், இயற்கையின் இயல்பான கட்டுப்பாடு முக்கிய அம்சமாக இலங்குகிறது.

இந்த இயற்கை கட்டுப்பாட்டைப் பேணிக் காக்காமல் நமது செயற்கையான வழிமுறைகள் மூலம் சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து விடக் கூடாது என்பது தான் விஞ்ஞானிகளின் ஒரே வேண்டுகொள்.

 

புவியை வெப்பமயமாக்கல், இயற்கை உயிரினங்களை பணத்திற்காக அழித்தல், கடத்துதல் போன்றவற்றை மனித இனம் விட்டு விட்டால் இன்னும் நூறாயிரம் ஆண்டுகள் இநதக் காடுகள் அழியாமல் வாழும்; மனித இனத்தையும் வாழ வைக்கும்!

XXXXXXXXXXXXXXX

ஏழு லட்சம் புத்தகங்களை முஸ்லீம் வெறியன் எரித்தது ஏன்? (Post No.4686)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 17-03

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4686

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

எகிப்திலுள்ள அலெக்ஸாண்ட் ரியா நகரில் (Alexandrian Library) இருந்த நூலகத்தை மத வெறிபிடித்த காலிபா உமர் எரித்து அழித்தது எப்படித் தெரியுமா?

 

“இங்கேயுள்ள 700,000 புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதையே, சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம். அப்போது குரான் ஒன்றே போதுமே! இந்த நூல்கள் எதற்காக?”

 

இங்கேயுள் ள   புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதற்கு எதிரான கருத்துக்களைச் சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்; அப்படியானால் உடனே தீக்கிரையாக்க வேண்டும்.

இரண்டு விதத்தில் நோக்கினாலும் தீ வைத்துக் கொளுத்துங்கள்!

 

இந்தியாவில் பீஹாரில் இருந்த நாளந்தா பல்கலைக் கழகத்துக்கும் அதன் நூலகத்துக்கும் முஸ்லீம்கள் தீ வைத்தபோதும் இதேதான் சொல்லியிருப்பார்கள்.

xxx

 

மதவெறியர்களுக்கு ஆப்ரஹாம் லிங்கன் பதிலடி

ஒரு முறை  ரெவரென்ட் திரு ஷ்ரிக்லி என்பவர் ராணுவத்தில் மருத்துவ மனைக்கான சமய குருவாக (Chaplain) நியமிக்கப்பட்டார். இது அமெரிக்க ஒய்.எம்.சி.ஏ. (Young Men’s Christian Association) நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. உடனே ஒரு கூட்டம் போட்டு, ஒரு கமிட்டியை அமைத்து, வாஷிங்டனுக்கு அனுப்பினர்.

 

ஆப்ரஹாம் லிங்கன் அறையில் நடந்த சம்பாஷனை:–

 

“ஐயா, நாங்கள் இந்த திருவாளர் ஷ்ரிக்லி நியமனம் விஷயமாகப் பார்க்க வந்திருக்கிறோம்.”

 

லிங்கன்: “ஓ, கவலையே படாதீர்கள். என்னுடைய தீவிர சிபாரிசுடன் நியமனத்தை செனட் சபைக்கு அனுப்பிவிட்டேன். வெகு விரைவில் அவர்கள் அதை உறுதிப்படுத்துவர்”.

“ஐயா, நாங்கள்……… நாங்கள்………. அந்த நியமனம் வேண்டாம், கூடாது என்று சொல்ல வந்திருக்கிறோம்”.

 

லிங்கன்:-

“அ ப்படியா சேதி! கதையே மாறுகிறதே. சரி, என்ன காரணத்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்.

“ஐயா, அவர், நம்முடைய பைபிள் கூற்றுக்கு எதிரான பிராசாரத்தை முன்வைக்கிறார்.

லிங்கன்:-

அட, அப்படி என்ன சொன்னார்?

“ஐயா நம் சுதந்திரப் போருக்கு எதிர் தரப்பில் இருந்த எதிரிகளையும் பரம பிதா மன்னிப்பார் என்கிறார். அது எப்படி சரியாகும்? இறைவன் எல்லையற்ற தண்டனை தருவார் என்பதை அவர் ஏற்கவில்லை.

இவரை ஆஸ்பத்திரி சமய குருவாக நியமித்தால் நம் மதத்துக்கே ஆபத்து”.

மற்றவர்களும் ‘’ஆமாம், ஆமாம்’’ என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

 

ஆப்ரஹாம் லிங்கன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். என்ன சொன்னீர்கள்? எதிரிகளையும் இறைவன் மன்னிப்பார் என்று அவர் கருதுகிறார் என்று சொன்னீர்களா? அப்படியானால் இவர்தான் இந்தப் பதவிக்கு மிகவும் தகுதியானவர்”

 

ஆப்ரஹாம் லிங்கனின் பதில் அந்தக் குழுவுக்கு நெத்தியடி, சுத்தியடி கொடுத்தது போல இருந்தது.

xxx

 

கிறிஸ்தவர் என்ன செய்தார்கள்?

அமெரிக்க வரலாற்றுப் பாடம் முடிந்தது.

வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்:-

மாணவர்களே! இவ்வளவு நேரம் பாடம் கேட்டீர்களே! ப்யூரிடன் (Puritan) கிறிஸ்தவர்கள் அமெரிக்காவில் என்ன செய்தார்கள்?

ஒரு மாணவன் எழுந்தான்:-

“ஐயா, அவர்கள் தங்கள் வழியில் இறைவனைக் கும்பிட்டார்கள்; அதே வழியில் மற்றவர்களையும் கும்பிட வைத்தார்கள்.”

 

(கட்டாய மதமாற்றத்தை அந்தப் பையன் அழகாக சொல்லி முடித்தான். வாத்தியார் அதை ரசிக்கவில்லை!)

 

சுபம்–

ஆண்களை விட பெண்களுக்கு சக்தி அதிகம்-சாணக்கியன் (Post No.4685)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 15-07

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4685

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

ஆண்களை விட பெண்களுக்கு எல்லா அம்சங்களிலும் அ பார சக்தி இருப்பதாக உலக மஹா ஜீனியஸ்/ மஹா புத்தி சாலி, மேதாவிப் பிராஹ்மணன் சாணக்கியன் ,2300 ஆண்டுகளுக்கு முன்னர் இயம்பியதைப் படித்தால் அதிசயமாக இருக்கும்.

 

“ஆண்களை விட ஒரு பெண் இரண்டு மடங்கு சாப்பிடுவாள்;

ஆண்களை விட பெண்களுக்கு நான்கு மடங்கு புத்தி அதிகம்;

ஆண்களை விட பெண்களுக்கு துணிச்சல் ஆறு மடங்கு அதிகம்;

ஆண்களை விட பெண்களுக்கு செக்ஸ் (Sex drive) விஷயங்களில் எட்டு மடங்கு ஆர்வம் அதிகம்”.

ஆஹாரோ த்விகுணஹ ஸ்த்ரீணாம் புத்திஸ்தாஸாம் சதுர்குணா

ஷட்குணோஅத்யவஸாயஸ்ச காமஸ்சாஷ்டகுணஹ ஸ்ம்ருதஹ

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 17

 

xxx

 

எந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு!

 

 

“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

அசிங்கமான அழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”

விஷாதப்யம்ருதம் க்ராஹ்யமமேத்யாதபி காஞ்சனம்

நீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16

 

புறநானூற்றிலும் மநு ஸ்ம்ருதியிலும் இதற்கு இணையான கருத்துக்கள் உள்ளன.

 

xxx

 

பெண்களின் அழகு எது?

“குயிலின் அழகு இனிமையாகக் கூவுதலில் இருக்கிறது;

பெண்களின் அழகு கற்பில் உள்ளது (கணவனைத் தவிர யாரிடமும் விருப்பமின்மை);

அவலட்சணமான தோற்றம் உள்ளவரிடத்தில் அழகு என்பது அவருடைய அறிவுதான்;

யோகிகளுக்கு அழகு மன்னிப்பதில் உள்ளது”.

 

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்

வித்யா ரூபம் குருபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 9

 

திருக்குறளிலும் கற்பு மற்றும் கணவனைத் தொழுவது பெரிதும் போற்றப்படுகிறது. அதே போல குணம் என்னும் குன்றேறி நின்றார் உடனே மன்னித்துவிடுவர் என்றும் வள்ளுவன் கூறுவான்.

 

 

 

xxxx

 

 

பெண்களை தூய்மையாக்குவது எது?

வெண்கலத்தை சாம்பலால் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;

பித்தளையை அமிலத்தைத் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;

பெண்களுக்கு மாதவிடாய் (விலக்கு) வந்தால் சுத்தமாகிவிடுவர்

ஒரு நதியை வேகமாக ஓடும் தண்ணீர் சுத்தமாக்கும்.

பஸ்மனா சுத்யதே காம்ஸ்யம் தாம்ரமம்லேன சுத்யதி

ரஜஸா சுத்யதே நாரீ நதீ வேகேன சுத்யதி

–6-3

 

XXXX

யார் பாபம் யாருக்கு?

நாட்டு மக்கள் செய்த பாபம் அரசனைச் சாரும்;

அரசன் செய்த பாபம் புரோஹிதனைச் சாரும்;

மனைவி செய்த பாபம் கணவனைச் சாரும்;

மாணவன் செய்த பாபம் ஆசிரியரைச் சாரும்;

 

ராஜா ராஷ்ட்ர க்ருதம் பாபம் ராக்ஞஹ பாபம் புரோஹிதம்

பர்தா ச ஸ்த்ரீக்ருதம் பாபம் சிஷய பாபம் குருஸ்ததா

6-9

 

XXX

கல்யாணம் கட்டாதே!

கெட்ட அரசன் ஆளும் நாட்டைவிட காடே மேல்;

கெட்ட நண்பனைவிட, நண்பனில்லாததே மேல்;

கெட்ட மாணவனை விட மாணவன் இல்லாதததே மேல்;

கெட்ட மனைவியைவிட மனைவி இல்லாததே மேல்.

 

வரம் ந ராஜ்யம் ந குராஜராஜ்யம் வரம் ந மித்ரம் ந குமித்ரமித்ரம்

வரம் ந சிஷ்யோ ந குசிஷ்யசிஷ்யோ வரம் ந தாரா குதார தாராஹா.

6-12

 

–Subham–

 

CHRISTIAN FANATICS DISAPPOINTED (Post No.4684)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 8-02 am

 

Compiled  by LONDON SWAMINATHAN

 

Post No. 4684

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

Bigotry Anecdotes

 

BURN THE LIBRARY!

In connection with the destruction of the 700 000 manuscript volumes of the Alexandrian library, the Caliph Omar said

Either these books conform to the Koran or they do not. If they do, they are not needed; if they do not, they are positively harmful. Therefore, let them be destroyed.

 

Xxx

WHAT DID CHRISTIANS DO?

 

What did Puritans come to this country for?

Asked a teacher in a class of American history.

 

To worship in their own way, and make other people do not same, was the reply

 

Xxxx

FANATICS DISAPPOINTED!

 

The Young Men’s Christian Association appointed a committee to go to President Lincoln to protest his appointment of the Rev Mr Shrigley as hospital chaplain in the army. When they first approached, the president mentioning Mr Shrigleys name, he misunderstood them and thought they had come to praise his choice and said,

“Oh yes, I have sent it to the Senate. His testimonials are highly satisfactory, and the appointment will no doubt be confirmed at an early date”.

Hastily the committee spokesman protested,

“But sir, we have come not to ask for the appointment, but to solicit to withdraw the nomination, on the ground that Mr Shrigley is not evangelical in his sentiments”.

“Ah! Said the president, that alters the case. On what point of doctrine is the gentleman unsound? “

“He doesn’t believe in endless punishment”, was the reply.

“Yes, added another member of the committee, he believes that even the rebels themselves will finally be saved; and it will never do to have a man with such views as hospital chaplain”.

 

The president was silent for a moment. Then, regarding the expectant faces about him, he said with emphasis,

“If that be so, gentlemen, and there be any way under heaven where by the rebels can be saved, then let the man be appointed!”

 

Xxx

TRAGIC GALILEO

 

There are few more tragic records of the struggle of the human mind and spirit against bigotry than this text of Galileo”s recantation before the Holy Inquisition

 

“But because I have been enjoined by this Holy Office altogether to abandon the false opinion which maintains that the sun is the centre and immovable, and forbidden to hold, defend or teach the said false doctrine in any manner and after it had been signified to me that the aid doctrine is repugnant with the Holy Scripture.

 

I abjure, curse and detest the sad heresies and errors…….. and I swear that I will never or assert anymore in future say or more anything verbally  or in writing , which may give rise to a  similar suspicion of me”.

–SUBHAM–

 

 

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!! (Post No.4683)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 7-17 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4683

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

ஷாக்கிங்! ஷாக்கிங்!!

 

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!!

 

ச.நாகராஜன்

 

1

நிஜமாகவே ஏமாந்து போனேன். நண்பர் வைரமுத்துவிடம் வைரம், முத்து இன்ன பிற ரத்தினங்கள் இருக்குமோ என்று ஒரு நப்பாசை இருந்தது.

ஆனால் ஷாக்கிங், ஷாக்கிங்! இவரிடம் வைரமும் இல்லை; முத்தும் இல்லை; வெறும் ஓட்டாஞ்சல்லி தான் இருக்கிறது என்று தெரிந்து விட்டது!

ஆண்டாள் தமிழை ஆண்டாள்;

தமிழ் இதயங்களை ஆண்டாள்! உண்மைத் தமிழர்களின் இதயங்களைத் தான் சொல்கிறேன்.

போலிகளை அவள் வேண்டாள். (வேண்ட மாட்டாள்!)

 

 

2

மனிதர் ‘பெய்யெனப் பெய்யும் மழை என்று எப்படி குமுதத்திற்குத் தலைப்புக் கொடுத்தாரோ தெரியவில்லை.

ராங் டைடில்!

“உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்

தன்னம்பிக்கை தளரவிடாதே

இரட்டைப் பேச்சுப் பேசும் உலகம்

மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே!

 

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு

உலகின் வாயில் இரட்டை நாக்கு

எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்

உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது!

என்று 22-5-1997 குமுதம் இதழில் ‘பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொடரில் எழுதிய போது மயங்கிப் போனேன்.

மனிதர் உண்மையத் தான் சொல்கிறாரோ என்று!

“இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்

இலக்கியம் இல்லை லேகியம் என்றது…

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்

வடுக பட்டி வழியுது என்றது

 

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்

காதில்பூ வைக்கிறான் கவனம் என்றது

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்

குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது

 

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது

இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு

உலகின் வாயைத் தைப்பது கடினம்

உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்

 

   _ 22-5-1997 குமுதம் இதழில் வெளியான 68 வரிகள் கொண்ட உலகம் என்ற கவிதையில் சில வரிகள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளது.

 

அடடா, எவ்வளவு ‘இழிமொழி எல்லாம் அனாவசியமாக வாங்கி இருக்கிறார் என்று தோன்றியது.

 

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் உலகம் அவரை ஏன் உலகம் இப்படிப் பழிக்கிறது என்று எனக்குப் புரிகிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகார்; வையத்து

அலகையா வைக்கப்படும்

 

ஆம் இவரை உலகம் அலகையா – பேயாக வைத்து விட்டது இன்று!

சூடிக் கொடுத்த நாச்சியாரை உலகம் கொண்டாட, இவர் தன் வழி தனி வழி என்றார். உலகம் செய்ய வேண்டிய மரியாதையை இன்று செய்து விட்டது!

 

 

3

இவர் ஆண்டாளைப் பற்றிச் சொன்னதற்கு பக்தி லெவலில் சென்று மறுப்புரை கொடுக்கிறார்கள்.

அந்த அளவுக்கு இவர் தகுதியானவர் தானா! இல்லை என்று அல்லவா தோன்றுகிறது!!

இலக்கிய மட்டத்தில் கூட இவருக்கு இவ்வளவு மறுப்புரை தேவை இல்லை; வரலாற்று ரீதியாக கூட இவருக்கு இவ்வளவு ஆதார உரைகள் தேவை இல்லை.

தமிழ்ப் பைத்தியம் என்று நினைத்திருந்தேன்; ஆனால் தமிழைத் தவற விட்டு விட்டார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது!

 

 

இவர் சேர்ந்த இடமே சரியில்லை.

போலித் தமிழில் கொச்சை வார்த்தை பேசுபவர்களிடம் இச்சகம் கொண்டவர் இவர்; இச் ச(ஜ)கத்தை அவர்களிடம் கண்டவர் அவர்.

 

‘இவர் யார் என்றால் மனைவி; அவர் யார் என்றால் துணைவி;

‘இவள் யார் என்றால் துணைவிக்குப் பெண்; உனக்கு யார் என்றால் துணைவிக்குப் பிறந்த பெண்.

‘போதை முடிவுக்கு வந்து விட்டதா?

 

இப்போதைக்கு முடிவு தான்! (இப்போதைக்கு – அதாவது தற்காலிகமாக இப்போதைக்கு – மதுவுக்கு முடிவு தான்!)

இப்படி கொச்சையாகப் பேசி சொந்தக் கூட்டத்திடம் கை தட்டல் வாங்குபவர்களின் சேர்க்கை இவரை என்ன செய்யுமோ அதைச் செய்து விட்டது.

வேசி; தாசி! அடடா, என்ன தமிழ் அறிவு!

வேசிக்கும் தாசிக்கும் “இன்னிசைத் தமிழை எளிமை செய்தவர் தரும் விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.

 

 

4

 

இல்லாத ஒரு ஆய்வுக் கட்டுரையைக் கேடயமாக்கி தமிழையும் தமிழ்ப் பெண்ணையும் இழிவு படுத்திய இவருக்கு மறுப்புரையே தேவை இல்லை; இவரைப் பற்றிய மதிப்புரை தான் தேவை!

 

அதுவும் கிடைத்து விட்டது!

உலகளாவிய விதத்தில் இப்படி இழிவு பட்ட ஒரு கவிஞரை இனிமேல் தான் தமிழகம் காண வேண்டும்.

காணாது.

 

 எட்டிய மட்டும் காதைக் குடைந்து தோண்டி காதை அறுப்பதற்கு வில்லிப்புத்தூரார் இன்று இல்லை.

ஆகவே இவர் கவிஞர் என்று சொல்லிக் கொள்ளலாம். வில்லிப்புத்தூரிலும் சென்று பேசலாம் – வீ ரமாக, கோரமாக!

இவர் தமிழை இன்னும் எளிமைப் படுத்தினால்! ஒரேயடியாக தமிழ் …. !!!!

 

 

5

அது சரி, தினமணி வைத்தியநாதனுக்கு என்ன ஆயிற்று!

(திரு ஏ.என்.எஸ், எனது தந்தையார் இருந்த ஸ்தானத்தில் இப்படி ஒருவரா!)

 

ஐயகோ! கலியின் கொடுமையா? காலிகளின் சேர்க்கையா!

தினமணி என்ற ஒளி கொடுக்கும் சூரியனை இருள் கவ்வச் செய்து விட்டாரே! தினமணிக்கு கிரகண காலம்!!

 

6

ஒரே ஒரு வழி தான்! இவர்களை இனம் கண்டு கொண்டாயிற்று!

இவர்களை ஒதுக்குங்கள்; உள்ள வேலையைப் பாருங்கள்!

“அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்

என்று எழுதி இருக்கிறார் அல்லவா! (உலகம் கவிதை வரிகள்)

இப்போது புரிந்து விட்டது இதில் கூறியுள்ள ஜந்து யார் என்று!

“வைரமும் தப்பு; முத்தும் தப்பு – இவர்

தரமும் தப்பு; தமிழும் தப்பு

 

 

7

குரைப்பது கடிக்காது!

தெய்வீக ஆண்டாளும் சேமமுற இருப்பாள்; தெய்வத் தமிழும் தனது தெய்வத் தன்மையுடன் சிறந்து வாழும்.

 

 

8

ஒன்றும் தெரியாதார் உச்சத்தில் ஏறினார்

    அன்றும் இராவணன் உண்டு; இரண்யன் உண்டு

நன்று செய்யாதார் நலிந்தே செத்தார்

    நாயகன் தோன்றுவான் யுகம் தோறும்!

 

இப்போதைக்கு இவர் போதையில் ஆட்டம்

     போட்டாலும் பொட்டென வீ ழ்வார்

எப்போதைக்கும் வெல்வது அறம் தான்!

      ஆண்டாள் என்றுமே ஆள்வாள்!!

***

பாரதி போற்றி ஆயிரம் – 40 (Post No.4682)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 6-50 am

 

COMPILED  by S NAGARAJAN

 

Post No. 4682

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

  பாடல்கள் 232 முதல் 240

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கவிஞர் k. ராமமூர்த்தி பாடல்கள்

பா வானம் கண்டறியா விடிவெள்ளி!

சீர்த்தி மிகு செந்தமிழின் சீராளன்

செப்புமொழிக் கவிதந்த பேராளன்

கார்த்திகை ஒளித் திங்கள் நன்னாளில்

கவிச்சுடரின் தரிசனமாய் வந்தனனே

 

நேர்த்தியுடன் துணிநெய்யத் தறிபோடும்

நிலமறிந்து பயிர்காணும் குறியாளன்

வார்த்திருக்கும் சொற்சிற்பப் பாத்திரமாம்

மாகவிஞன் மந்திரங்கள் சாத்திரமாம்

 

பாரதிசெவ்வாய் திறந் தருளுடனே

பாப்புரட்சி செய்த வீரன், சக்திதாசன்;

சீரதிகம் பெற்றதமிழ்க் குடியுயர்த்தி

செகமுணரத் தமிழ்மணக்க முரசடித்தான்

 

பண்ணொத்துப் பாட்டுவரும் போதினிலே

பசிதாகம் பறந்தேகும் விதம் போல

பொன்னொத்தக் கவியின்பச் சுவைதந்து

பொழுதுகளை இன்பமய மாக்கினனே

 

காழ்ப்புதனை மனங் கொள்ளாமல்

கவிக்குலத்து முன்னவரைக் கொலுவேற்றி

பாழ்பட்டு இருளடர்ந்து சிதைந்தநற்

பாமண்டபத் திருப்பணிக்கு அவதரித்தான்

 

எளிதாக்கித் தமிழ்ப்பாவில் நயம்தந்த

எழுச்சிக்கவி பாரதியார் சொல்யாவும்

உளிதாக்கி தெரித்தகவிச் சிதறலாகும்

ஒப்புக்கே எழுதாத உணர்ச்சிக்கவி

 

முந்தையரின் புகழ்த்தோணி விட்டங்கே

முத்தமிழும் விரிகடலாய் கிடந்தாலும்

சிந்தையதில் கடல்செல்வி ஆழம் இருந்து

தேர்ந்த கவி முத்துக்கள் பாலித்தான்

 

பாச்சொறிந்து புத்தமுதச் சுவைதந்த

பாவானம் கண்டறியா விடிவெள்ளி

மாக்கவிஞன் எங்கோமான் பாரதியார்

மங்கிடுமோ தமிழணங்கி னொளியிங்கே

 

வளர்கின்ற பொற்காலம் தமிழிற்கே

வாராதோ எனவிசனிக் கின்ற நாளில்

புலர்கின்ற பொழுதுவரும் ஞாயிற்றின்

புத்தொளியாய் பிறந்தவனே பாரதியாம்.

 

கவிஞர்  K. ராமமூர்த்தி : பாரதி காவலர் டாக்டர் K. ராமமூர்த்தி ‘மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பாரதி பற்றிய பல கவிதைகளையும் புனைந்துள்ள பாரதி ஆர்வலர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நடந்த 10வது உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்று பாரதி பற்றி உரையாற்றியவர். பாரதத்தில் பல்வேறு இடங்களில் உரையாற்றியவர். தொடர்ந்து பாரதியைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளார்.

தொகுப்பாளர் குறிப்பு: 6-12-1981 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.

நன்றி: கவிஞர் K. ராமமூர்த்தி; நன்றி: தினமணி சுடர்

 

***