‘SOME ARE BORN GREAT’: CHANAKYA AND SHAKESPEARE! (Post No.4669)

WRITTEN by London Swaminathan 

 

Date: 27 JANUARY 2018

 

Time uploaded in London – 13-07

 

Post No. 4669

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Chanakya, the great Indian genius, who lived 2300 years ago composed some verses on fame and good qualities. We see good similarities between him and other poets such as Shakespeare and Tiru Valluvar.

 

Here are Chanakya’s verses in his work Chanakya Niti:

“One goes by one’s qualities and not by occupying a high seat. Does a crow by sitting on the top of a place turn into Garuda?

“It is qualities that elicit praise and not enormous riches. Does the full moon evoke as much worship as the week but spotless one the day after the new moon day?

 

“With others proclaiming his qualities, even a person with no qualities comes to possess them. With his own self proclaiming his qualities even Indra loses his stature.

 

Chnakaya Niti , Chapter 16, slokas 6, 7, 8

Now compare it with Shakespeare’s famous quote in Twelfth Night,

(Malvalio  reads a letter)

 

“If this letter falls into your hands, think carefully about what it says. By my birth I rank above you, but don’t be afraid of my greatness. Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them. Your fate awaits you. Accept it in body and spirit. To get used to the life you’ll most likely be leading soon, get rid of your low-class trappings. Show some eagerness for the new upscale lifestyle that’s waiting.”

 

Tiru Valluvar says,

In the abode of the gods, more honoured than the saints are those who have won lasting fame on earth.

Kural 234

Better to be born covered with glory on earth than never to be born at all.

Kural 236

 

Bemoan your own sloth that stands in your way to glory; why fret about the insults that others hurl at you?

Kural 237

 

Verily do the wise cry shame on those that leave no foot prints on the sands of time when there is glory to be sought and won in the world of men.

Kural 238

Alive is the soul that is free from reproach; but dead is the heart that lives without a name

Kural 240

xxx

Where and When Qualities Shine?

Chanakya adds two more verses on qualities (Guna)

“Qualities appear more charming when associated with a wise person. A jewel when united with (studded) in gold shines all the more.

“Even he who equals the omniscient one through his qualities, if alone, with none to support him, comes to grief. Even a priceless jewel needs the support of gold.

chapter 16, slokas 10 and 11

 

xxxxxxxx SUBHAM xxxxxx

 

விதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும் (Post No.4668)

WRITTEN by London Swaminathan 

 

Date: 27 JANUARY 2018

 

Time uploaded in London – 12-41

 

Post No. 4668

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

விநாச காலே விபரீத புத்தி

‘விநாச காலே விபரீத புத்தி’ என்றால் என்ன பொருள்? ஒருவருக்குக் கெட்ட காலம் வந்தபோது மனது தடுமாறி தவறான முடிவு எடுப்பார்கள். அதனால் அவருடைய அழிவை அவரே தேடிக்கொள்வர். அதாவது கனியன் பூங்குன்றன் புறநானூற்றில் செப்பியது போல ‘தீதும் நன்றும் பிறர்தரா வாரா’. அதாவது நமக்கு நாமே நன்மையும் செய்து கொள்ளலாம். தீங்கும் இழைத்துக் கொள்ளலாம்.

 

விதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும் – என்பதே ‘விநாச காலே விபரீத புத்தி’யின் மொழி பெயர்ப்பு.

 

நான் ‘தினமணி’யில் வேலை பார்த்த காலத்தில் 1975 ஜூன் 25ல் நாட்டில் எமர்ஜென்ஸி (Emergency) எனப்படும் அவசர நிலை பிரகடனமாயிற்று. எதிர்க் கட்சித் தலைவர்களைச் சிறையிலிட்டார் அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி. உடனே மக்கள் இயக்கத்தை முன்னின்று நடத்திய ஜெயப் பிரகாஷ் நாராயணன் அளித்த பேட்டியில் ‘விநாச காலே விபரீத புத்தி’ என்றார். அவர் சொன்னது எவ்வளவு சரி என்பதை அதற்குப் பின் வந்த நிகழ்ச்சிகள் விளக்கின.

 

 

அப்போது இது சாணக்கிய நீதியில் உள்ள வரிகள் என்று எனக்குத் தெரியாது. இதோ சாணக்கிய நீதியின் முழு வரிகள்:

 

ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ

ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ

ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய

விநாச காலே விபரீத புத்திஹி

-சாணக்கிய நீதி, அத்யாயம் 16, ஸ்லோகம் 5

 

பொருள்:

உலகில் தங்க நிற மான் என்பது கிடையவே கிடையாது. யாரும் முன்னால் பார்த்ததும் இல்லை; யாரும் அப்படி ஒன்று இருப்பதாகக் கேட்டது கூட இல்லை. ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது புத்தி பேதலித்து விடும்.”

(தங்க நிற மான் ஒன்றைப் பார்த்து சீதா தேவி ஆசைப்பட்டதால், ராமாயணம் எனும் கதை வளர்ந்தது பற்றிய குறிப்பு இது )

 

xxx

முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு!

 

சாணக்கியனுடைய இன்னொரு கொள்கையும் மிகவும் செயல்முறைக்கு உகந்தது. சிலருக்குப் புரியும் வகையில் பதில் தந்தால்தான் புரியும்; சில இடங்களில் ஆடுற மாட்டை ஆடிக்  கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்  கறக்கனும். ஆகவே சாணக்கியன் செப்புவது யாதெனில்,

 

“நல்லது செய்தால் நல்லது செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோருக்கு வன்முறை மூலம் பதில் தர வேண்டும். இதில் தவறேதும் இல்லை. கெட்டவர்களாக இருந்தால் அவர்களைக் கெட்டவர் போல இருந்தே மடக்க வேண்டும்.”

 

ஸம்ஸ்க்ருதத்தில் அவன் ஸ்லோகம் பின்வருமாறு,

க்ருதே ப்ரதிக்ருதம் குர்யாத் ஹிம்ஸனே ப்ரதிஹிம்ஸனம்

தத்ர தோஷோ ந பததி துஷ்டே துஷ்டம் ஸமாசரேத்

-சாணக்கிய நீதி, அத்யாயம் 17, ஸ்லோகம் 2

 

 

பாகிஸ்தான் போன்ற நாடுகள் நம்மைத் தாக்கினால், தாக்குதல் மூலம் பதிலடி தர வேண்டும். அதாவது முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும்!

 

ஆனைக்கும் பானைக்கும் சரி!

 

‘ஆனைக்கும் பானைக்கும் சரி’ என்னும் கதையை நாம் அனைவரும் சிறு வயதிலேயே கேட்டிருக்கிறோம். இந்த ஸ்லோகத்துக்கு மிகவும் பொருத்தமான கதை அது. இதுவரை நீங்கள் கேட்டது இல்லை என்றால் இதோ மிக மிக  சுருக்கமாக அந்தக் கதை:–

 

ஒரு ஊரில் ஒருவர் வீட்டில் கல்யாணம் ஏற்பாடாகி இருந்தது. கல்யாண ஊர்வலத்தில் யானையையும் ஊர்வலத்தில் விட ஆசைப்பட்டார் ஒருவர். யானை வளர்ப்பவரிடம் சென்று ஒரு யானையை ஊர்வலத்துக்கு வாடகைக்கு எடுத்தார். அவருடைய துரத்ருஷ்டம், யானை பாதி வழியிலேயே இறந்து விட்டது.

 

யானையின் சொந்தக்காரன் வந்த போது யானை இறந்த தகவலைச் சொல்லி, ‘ஐயா, யார் தவற்றினால் அது இறந்திருந்தாலும் போகட்டும். நான் அதன் மதிப்பு எவ்வளவோ அவ்வளவை உங்களுக்குத் தந்துவிடுகிறேன்’ என்று யானையைக் கடன் வாங்கியவர் சொன்னார். ஆனால் அந்த முட்டாளோ  எனக்குப் பணம் ஏதும் வேண்டாம்; அதே போன்ற ஒரு யானை வேண்டும்; அல்லது செத்துப் போன யானையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று  சொல்லிவிட்டு பிடிவாதமாக நின்றான்.

 

யானைக் கடன் பெற்றவரோ பதில் சொல்ல முடியாமல் தவித்தார். அப்போதுது அவருடைய  நண்பர் ஒருவர் அவர் காதில் ஏதோ கிகிசுத்தார்.

உடனே யானையைக் கடன்பெற்றவர் சொன்னார்: ‘’கவலைப் படாமல் வீட்டுக்குப் போங்கள நாளை மதியம் வீட்டுக்கு வாருங்கள். யானையைக் கொடுத்து விடுகிறேன்’’ என்றார். மறு நாள் காலையில் கதவின் பின்புறத்தில் புதிய பானைகளையும் பழைய பானைகளையும் அடுக்கி வைத்திருந்தார். மறுநாள் யானைக் கடன்காரன் வந்து கதவைத் தட்டியபோதும் கதவு திறக்கவில்லை. பதிலும் இல்லை. உடனே யானையக் கடன் கொடுத்தவன் அந்த வீட்டின் கதவை ‘தடால்’ என்று எத்தி உதைந்தான்; கதவும் திறந்தது. கதவுக்குப் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பானைகள் யாவும் சுக்கு நூறாய் உடைந்தன. உடனே வீட்டுக் காரன் குய்யோ முறையோ என்று கூச்சலிட்டான. ‘’இவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பானைகள்; ஆகவே எனக்கு இப்போதே அந்தப் பானைகள் வேண்டும்’’ என்றான். உடனே யானையைக் கடன் கொடுத்தவன் அதற்கான நஷ்ட ஈட்டைத் தருவதாகச் சொல்லி மன்றாடினான். ஆனால் அவனோ ‘’நீ இறந்து போன யானைதான் திரும்ப வேண்டும் என்றாய்;  நான் உடைந்து போன பானைகளைத் தானே திரும்பக் கேட்கிறேன்’’ என்றான்.

 

இருவரும் நீண்ட நேரம் வாதாடியதால் ஊர் மக்கள், அவர்களை நீதி மன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். நீதி மன்றத் தலைவர் வழக்கு முழுவதையும்  கேட்டுவிட்டுச் சொன்னார்: “இருவரும் ஈட்டுத் தொகையை அளிக்க முன்வந்தும் மற்றவர்  அதை வாங்க மறுக்கிறீர்கள்; ஆகவே ஒருவரும் ஒருவருக்கும் ஈட்டுத் தொகை கொடுக்க வேண்டிய அவசியமில்லை; யானைக்கும் பானைக்கும் சரி! கோர்ட் முடிந்தது; விசாரணை முடிந்தது. அனைவரும் கலைந்து செல்லல்லாம்”.

 

இதுதான் யானைக்கும் பானைக்கும் சரி என்ற பழமொழியின் பின்னுள்ள கதை

 

–SUBHAM–

Love Jihad cases- பெற்றோர்கள் அறிய வேண்டிய ஜிஹாதி லவ் ! (Post No.4667)

Date: 27 JANUARY 2018

 

Time uploaded in London- 7-14 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4667

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(என் வாசகர்கள் தமிழர்கள்= நல்லவர்கள்; தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

நாட்டு நடப்பு

பெண்ணைப் பெற்ற ஹிந்து பெற்றோர்கள் அறிய வேண்டிய ஜிஹாதி லவ் !

 

ச.நாகராஜன்

 

1

காலம் கலி காலம். பெண்ணைப் பெற்று விட்ட ஹிந்து பெற்றோர்கள் ஏற்கனவே ஏராளமான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதெல்லாம் அறிகிறார்களோ இல்லையோ, எக்கேடோ கெட்டுப் போகட்டும். கீழே இருப்பதை மட்டும் அவர்கள் நிச்சயம் அறிய வேண்டும். எதற்காக?

பெண்ணின் எதிர்கால நலனுக்காக!

 

2

எல்லா ஜிஹாதி லவ் கேஸ்களையும் அலசி ஆராய்ந்ததில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை உண்மைகள் உள்ளன.

  1. பெண் முதலில் மதத்தில் பற்றில்லாதவளாக இருந்தாள். மதத்தைப் பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியாது.
  2. என்றாலும் அவளுக்கு அவனை மணம் புரிய வேண்டும் என்றவுடன் மதத்தைப் பற்றிப் பெரிதும் அக்கறை வந்து விடுகிறது (அவன் மதத்திற்காக)
  3. இன்னும் கூட அந்தப் பெண்ணுக்கு அவளது பெற்றோரின் மதம் பற்றி ஒன்றும் தெரியாது! ராமன், கிருஷ்ணன் என்றால் அவளுக்குச் சிரிப்புத் தான் வரும்! பாகிஸ்தான் ஷோக்களை அவள் விரும்பிப் பார்ப்பாள். ஆனால் அதே சமயம் மஹம்மது, அல்லா என்றாலோ சிரிக்கக் கூடாது என்பது நன்கு புரிந்து விடும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவர்கள் விஷயத்தில்!
  4. அநேக கேஸ்களில், அவளுக்கு யாராவது ஒருவர் தனக்கு புத்திமதி சொல்ல வருவார் என்பது தெரியும். ஆகவே அவளிடம் ரெடிமேட் பதில்கள் ஆலோசனைக்குத் தக்கவாறு ரெடியாக இருக்கும்.

 

  • நான் வயதுக்கு வந்தவள். எனக்கு நான் என்ன செய்கிறேன் என்பது நன்றாகத் தெரியும். ஆகவே உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு நீங்க போங்க. என் விஷயத்தில் அனாவசியமாகத் தலையிடாதீர்கள்!
  • பேசாமல் போகிறாயா, இல்லை உன்னை போலீஸில் கம்ப்ளெய்ண்ட் செய்யவா?

  • இந்தியாவில் எந்தச் சட்டமும் என்னைத் தடுக்காது
  • ஹிந்துக்கள் முஸ்லீம்களை விட பலதார மணத்தைக் கொண்டவர்கள். ஆதரித்தவர்கள். அது எனக்குத் தெரியும்
  • ஹிந்துக்கள் முஸ்லீம்களை விட அதிகமாகவே தலாக் செய்பவர்கள்
  • ஹிந்து தீவிரவாதமும் இருக்கிறது!
  • ஹிந்து மதத்தில் இல்லாத மூட நம்பிக்கைகளா! அதில் ஏராளம் இருக்கின்றன

பொதுவான ஒரு அம்சம் இந்த மாதிரிப் பெண்கள் பாலிவுட் சினிமாக்களை மிக அதிகமாகப் பார்ப்பவர்கள்.

 

 

  1. அந்தப் பெண் அந்தப் பையனுடன் உடல் ரீதியான உறவைக் கொண்டிருக்கிறாள்.
  2. அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தில் உள்ள எல்லா பெண்களையும் தெரியும். அவளது சகோதரிகள், உற்றார் சுற்றம் ஏன் அவளது மாமி, சித்தி உட்பட அனைவரையும்!
  3. முஸ்லீம்களில் ஆண்கள் அனைவரும் ஹிந்துக்களை விட பெண்களை அதிகம் போற்றுவதாக அவளுக்கு நம்பிக்கை உண்டு.

 

  1. இப்போது அவள் கடவுள் ஒருவரே என நம்புகிறாள்.
  2. உருவ வழிபாடு தப்பு என்று அவள் நினைக்கிறாள். இதனால் தான் லவ் ஜிஹாதியை அனைவரும் தாக்குவதாக அவள் நம்புகிறாள்
  3. நமது சொந்த மதத்தைப் பற்றி சரியான விதத்தில் சொல்லித் தராத பெற்றோராகிய நாம் தான் உண்மையில் தவறு செய்தவர்கள். அவர்களின் பெண்கள் மற்றும் ஆண்களைப் பாருங்கள். எதிலாவது லவலேசமும் விட்டுத் தருகிறார்களா?!

  1. அவர்கள் வீட்டு ஆண்களுக்குத் தெளிவான புத்தி உண்டு. அத்துடன் ‘தீர்மானமாகத் தான்’ அவர்கள் வருகிறார்கள்.
  2. முஹம்மதை கேலி செய்ய முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
  3. ஆனால் நமது வீட்டுப் பெண்களோ பாகிஸ்தான் கொள்கைகளுக்கு அடிமை!
  4. அவர்கள் வீட்டு ஆண்களுக்கு அல்லா விட்டுக் கொடுக்க முடியாதவர் என்பது நன்றாகவே தெரியும்.

ஆனால் நம் வீட்டுப் பெண்களுக்கோ கடவுள் ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கிறார் என்பது தெரியும் அல்லது ஒருவேளை கடவுளே இல்லை என்பதும் புரியும். அதனால் என்ன பெரிய நஷ்டம் இருக்கப் போகிறது.

 

  1. அவர்கள் வீட்டு ஆண்களுக்கு காதலை விட இஸ்லாமை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது புரியும். நம் வீட்டுப் பெண்களோ தங்களை ஹிந்துக்கள் என்று சொல்வதே கிடையாது. காதல் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதே அவர்களின் மந்திரம்!
  2. அவர்கள் வீட்டு ஆண்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை செய்ய வேண்டியது அவசியம் என்பது தெரியும். நம் வீட்டுப் பெண்களுக்கோ பிரார்த்தனை போன்ற மூட நம்பிக்கைகளில் நம்பிக்கையே இல்லை. அவர்களால் காயத்ரி மந்திரத்தையோ அல்லது மஹாம்ருத்யுஞ்சய மந்திரத்தையோ கூடச் சொல்ல முடியாது.

நன்றி : Truth ஆங்கில வார இதழ்

***

Truth 8-12-17 தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ள ஆங்கில மூலத்தைக் கீழே தருகிறோம்:

 

 

In almost-all Love Jihad cases we have dealt with till date, these are the common things [30/8/2017]

 

  1. Girl was non-religious earlier. She didn’t give a damn about religions. Typical PK style.

 

  1. However, she turns religious (for his religion) as soon as she decides to marry.

 

  1. She still doesn’t give a damn about her parents’ religion. She can still laugh at Ram/Krishna watching PK in coolness. But now she knows laughing at Muhammad or Allah is not cool.

 

  1. In many cases, she already knows that someone will try to counsel her. So she is fed the automatic replies like :–

 

– I am an adult and know what I am doing. You have no business poking in.

 

– I will go to police against you.

 

– There is no law in India that stops me from doing it.

 

– Hindus are more polygamous than Muslims.

 

– Hindus give more Talaq to their wives.

 

– Hindu terror also exists.

 

– Hindu religion is also full of superstitions.

 

  1. She is a big bollywood fan.

 

  1. She is in physical relationship with him.

 

  1. He knows her female family members well, her sisters, cousins and even some Mami or Chachi.

8..She believes Muslim men respect women more than Hindus.

 

9.She now believes God is one.

 

10.She now believes idol worship is wrong. And in all this, just blaming the Love Jihad rackets is wrong. Wrong are we who did not give our children enough conviction about our own faith. Look at their men and our girls.

 

  1. Their men come with clear mind.

 

  1. Their men know Muhammad can’t be mocked. But our girls find it cool to laugh at PK.

 

  1. Their men know Oneness of Allah can’t be compromised. Our girls know God is in hearts or may be he doesn’t even exist. What is the big deal anyway?

 

  1. Their men know Islam is to be kept above love. Our girls have not even called themselves as Hindus ever in life. And Love is beyond religions, is their Mantra.

 

  1. Their men know it is important to pray 5 times a day. Our girls don’t believe in superstitions. They can’t even recite Gayatri Mantra or Mahamrityunjay Mantra.

3

லவ் ஜிஹாதி கேஸ்கள் மிக அதிகமாகிக் கொண்டே வருகின்றன; அதாவது திட்டமிட்டு அதிகமாக்கப்படுகின்றன.

இதற்கான பட்ஜெட் தனியாகத் தயாரிக்கப்படுகிறது.

ஆகவே இதை காலத்திற்கேற்றவாறு எதிர்கொள்ள ஹிந்து மதமும் பெற்றோரும் தயாராக வேண்டும்.

‘ஹி ஹி , பெரிது பண்ணுகிறார்கள்’ என்று ஏளனம் செய்யும் பெற்றோர் முதலில் தன் வீட்டுப் பெண் சரியாக இருக்கிறாளா என்று பார்க்கும் போது பகீர் என பதைபதைத்தும் போகலாம்.

ஏமாற்றப்பட்ட பெண்கள் விடுதியில் விற்கப்படுகிறார்கள், அடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள், தற்கொலைப் படையில் சேர்க்கப்பட்டு அழிக்கப்படுகிறார்கள் என்பன போன்ற பல செய்திகளை தினமும் கேட்க ஆரம்பித்து விட்டோம்.

ஆகவே, அனைவரும் விழிப்புடன் இருங்கள் என்பதே கட்டுரையின் சாரம்!

நம்மைச் சுற்றி நடப்பதை நன்கு உற்றுக் கவனிப்போம். அதற்குத் தக நமது உறவினர், நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

ராமனும், கிருஷ்ணனும், சிவனும் அம்பிகையும், விநாயகனும்,முருகனுமே நமது பாரம்பரியத் தெய்வங்கள்.

தொழுவோம்! உயர்வோம்!!

***

பாரதி போற்றி ஆயிரம் – 37 (Post No.4666)

Date: 27 JANUARY 2018

 

Time uploaded in London- 6-51 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4666

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

 

 

 

  பாடல்கள் 214 முதல் 217

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

         நா.சீ.வரதராஜன் பாடல்கள்        

பாரதியின் பராசக்தி

ஆதார சக்தியினை, அணுவில், காற்றில்,

       அனைத்திலுமே கலந்தவளை, அமுதை, ஞான

மாதாவை, பிணி தீர்க்கும் மருந்தை, வாழ்வில்

       மலர்ச்சியினை, உயிர்ச்சுடரை, உணர்வை, பண்டை

வேதாகமம் சொல்லும் பொருளை, மூன்று

        விதம்கிளைத்து வினைபுரியும் மூலத்தைத்தான்

நாதாந்த வடிவான சக்தி என்றே

        நாவினிக்கப் பாரதியார் பாடக் கண்டோம்!

 

விண்டுரைக்க அரியவளாய், கோள்கள் சுற்ற

       விரிந்திருக்கும் வான்வெளியாய், வானில் காற்று

மண்டலமாய், உயிர்ப்பு தரும் மழையாய், பின்னர்

       வாழ்வழித்துப் பாழ்விளைக்கும் வெள்ளக் காடாய்,

பண்டுமுதல் இன்றுவரை பகலைச் செய்யும்

       பரிதியெனும் ஒளியருளாய், உழைக்கும் போதில்

மண்டுகின்ற பலதொழிற்கும் ஆற்றல் கூட்டும்

       மாமாயப் பெருவலியாய் அவளைக் கண்டோம்!

 

காலமெனும் பெருவனத்தில் அண்டக்கோளக்

       கவின்மரத்தில் முரல்வண்டாய் அவளைக் காட்டும்

கோலமுறும் அவள்வடிவம் அன்பே என்னும்

       கூடுகின்ற இன்பமவள் படிமம் என்னும்.

ஞாலமிதும், விண்ணகமும், திசைகள் யாவும்,

       நல்லவற்றில், அல்லவற்றில், அவளைக் காணும்!

மூலமவள், முடிவுமவள் என்றே பாடும்!

       மூண்டுவிட்ட பக்திச்சொல் நடனம் ஆடும்!

 

ஊழிக்கூத்துப் பாடலில் அன்னை

        உருவம் பொலிவாய் அசைகிறது -கவி

        ஓசையில் நெஞ்சே கசிகிறது!

உறுமிக் கொண்டே ஞானச் சுடராய்

       உயரும் ஒளியே தெரிகிறது – பின்

       ஊர்த்துவ நடனம் புரிகிறது!

பாழும் பதறித் திசைகள் சிதறிப்

       பரவும் கூத்தும் விரிகிறது – தமிழ்ப்

       பாடல் விந்தை புரிகிறது!

பண்ணில், சொல்லில், உமையைச் சிவனைப்

       பற்றிக் கொண்டே படர்கிறது – உயர்

       பரவச நிலையை அடைகிறது!

 

கவிஞர் நா.சீ.வரதராஜன் : அமரர் நா.சீ.வரதராஜன் பெருங் கவிஞர்.பல நூல்களை இயற்றியவர். பாரதி கலைக்கழகத்தின் கவிமாமணி பட்டம் பெற்றவர். இவரது புனைப்பெயர்:பீஷ்மன்; பிறப்பு : 20-5-1930

தொகுப்பாளர் குறிப்பு : கல்கி வார இதழில் வெளியாகியுள்ள பாடல் இது. வெளியான ஆண்டு 1978.

நன்றி: கல்கி வார இதழ்; நன்றி: அமரர் நா.சீ.வரதராஜன்

***

 

TAMIL VALLUVAN AND WORLD PHILOSOPHERS on NUMBER EIGHT! (Post No.4665)

WRITTEN by London Swaminathan 

 

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London – 16-24

 

Post No. 4665

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

TAMIL VALLUVAN AND WORLD PHILOSOPHERS on NUMBER EIGHT! (Post No.4665)

Number Eight stands for Stability

Tiru Valluvar (Valuvan in short) says in his monumental didactic work TIRUKKURAL ,

 

“The head that does not bow before the Lord of Eight Attributes,

In prayer, is like a body with all its senses defunct”

–Kural 9

Lord of Eight Attributes is used both in Saivism and Jainism. Buddhists and followers of Confucius also use it for eight fundamental virtues.

 

In the commentary for this Kural 9 (couplet) Eight Miraculous powers (Ashta Ma Siddhis in Sanskrit) are also attributed to God; normally they are attributed to the devotees of gods who have attained eight miraculous powers.

1.Anima :power of becoming the size of an atom and entering into smaalest life.

2.Mahima : power of becoming mighty and co-extensive with the universe.

3.Laghima : capacity to be light, though big in size

4.Garima : capacity to be heavy though seeming small in size

5.Prapthi : capacity to enter all the worlds from Brahmaloka to Pathalam

6.Prakasyam : power of disembodying and entering into other bodies and going to heaven and enjoying whatever one wants from one place

7.Isithvam :  having the creative power of God and control over the sun, the moon and the elements

8.Vasithvam : power of control over kings and Gods.

 

Chinese Philosopher Confucius

 

According to Saivite philosophy the eight qualities are 1.Self dependence 2.Immaculate body, 3.Natural Understanding, 4.omniscience, 5.nfinite Detachment, 6.Infinite mercy, 7.Omnipotence and 8.Limitless bliss

 

According to the Jains, the eight fold qualities are 1.Infinite knowledge, 2. Infinite vision, 3. Infinite energy, 4. Infinite joy, 5.Indescribability, 6.Beginninglessness, 7.Agelessness and 8.Deathlesness

Picture:Eight qualities in Confucianism

Lord Krishna’s Eight

In the Bhagavad Gita Lord Krishna says (7-4)

“Earth, water, fire, air, ether, mind and understanding and self sense- this is the eight fold division of my nature”

 

‘There is no end to My Divine Attributes’ (10-40)

 

Dutch philosopher Spinoza described God as ‘consisting of infinite and eternal attributes’.

Spinoza’s metaphysics of God is neatly summed up in a phrase that occurs in the Latin (but not the original Dutch) edition of the Ethics: “God, or Nature”, Deus, sive Natura: “That eternal and infinite being we call God, or Nature, acts from the same necessity from which he exists” (Part IV, Preface)

 

It is interesting to see Number Eight is used in all the oriental religions. Though Buddha did not talk about God, he insisted eight qualities for human beings. They are Right view,  Right resolve,  Right speech, Right conduct, Right livelihood, Right effort, Right mindfulness, and  Right concentration.

 

The Eight Confucian virtues are 1. Benevolence, 2.Righteousness, 3.Courtesy, 4.Wisdom, 5.Fidelity, 6.Loyalty, 7.Filial Piety and 8.Service to elders.

 

The Samurai warriors of Japan has a Bushido (way of warriors) code with eight virtues:

1.Rectitude or Justice, 2. Courage, 3.Benevolence or Mercy, 4.Politeness, 5.Honesty and sincerity, 6.Honour, 7.Loyalty and 8.Character, Self-Control. These 8 virtues are influenced by Buddhism, Confucianism and Taoism.

 

xxx Subham xxx

பத்து செட்டியார்கள், மூன்று திருடர்கள் கதை (Post No 4664)

WRITTEN by London Swaminathan 

 

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London – 11-05 AM

 

Post No. 4664

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவ்ர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்

 

ஒரு ஊரில் பத்து செட்டியார்கள் துணி வியாபாரம் செய்து வந்தனர். அந்த ஊரிலுள்ள நெசவாளர்களிடம் புடவை, தாவணி, வேஷ்டி, துண்டு முதலியவைகளை வாங்கி பக்கத்து ஊர்களில் நடக்கும் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பார்கள். ஒரு முறை அவர்கள் பக்கத்திலுள்ள பட்டணத்தில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு காட்டுப் பாதை வழியே கிராமத்துக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மூன்று திருடர்கள் கத்தி கம்புகளுடன் தோன்றி அவர்களை மிரட்டி எல்லாவற்றையும் பறித்துக் கொண்டனர்.

 

செட்டியார்கள் எப்போதும் இடுப்பில் பணம் முடித்து வைத்திருப்பார்கள் ஆகையால் வேட்டி சட்டையையும் அவிழ்க்கச் சொல்லி விட்டனர். அப்போது அவர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதைப் பார்த்து நாட்டியம் ஆடுங்கள் என்று திருடர்கள் உத்தரவிட்டனர். செட்டியார்கள் தங்களுக்கு நடனம் எதுவும் தெரியாது என்று சொன்னவுடன், ஏதேனும் ஆடாவிட்டால் கத்தியால் வெட்டுவேன் என்று மிரட்டியவுடன் ஒரு செட்டியார் மெதுவாக முன் வந்தார். உடனே மற்ற 9 செட்டியார்களும் அவருடன் சேர்ந்து மெதுவாக ஆடினர்.

செட்டியார்கள் வணிக பரிபாஷையில் பேசிக்கொள்ளும் வழக்கத்தை உடையவர்கள்; வாடிக்கையாளருக்குத் தெ ரியக் கூடாது என்பதற்காக விலைகள் தொடர்பான பரிபாஷை (ரகசிய/ சங்கேத மொழி) இது. அப்போது ஒரு செட்டியாருக்கு ஒரு யோஜனை தோன்றியது உடனே அதை ரஹசிய சங்கேத மொழியில் சொன்னார்.

 

 

தோம்தோம் ததிங்கிணதோம்

அண்ணமார்கள் திருபேர்

தம்பிமார்கள் புலிபேர்

ததிங்கிண ததிங்கிண ததிங்கிண தோம்

சவணம் சவணம் பேர்களைத்

திருவர் திருவர் தழுவிக்கிட்டா

தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம்

 

சவணம் தானே மீதிடா

கைகட்டி சவணம் கையைக்கட்டி

தோம் தோம் ததிங்கிண தோம்

நில்லடா, வாங்கடா, போங்கடா

தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம்

என்று ஒருவர் பாடினார்.

 

வர்த்தகர்களின் பரிபாஷையில் இருந்த கருத்து இதுதான்:-

செட்டியார் பரிமாறிக்கொண்ட கருத்து: “நாமோ பத்துப் பேர்; அவர்களோ மூன்று பேர்தான். நாம் ஆளுக்கு முன்று பேர் என்று சுற்றி வளைத்து திருடர்களைப் பிடிப்போம்”.

 

வர்த்தகர்கள் ஒன்று, மூன்று,  பத்து என்ற எண்களை முறையே சவணம், திரு, புலி என்று குறிப்பார்கள்.

 

முதலில் இருந்த செட்டி சொன்ன கருத்தை மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள்; ஆனால் பத்து திருடர்களும் ஏதோ பாட்டு என்று நினைத்து தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம் என்ற பல்லவியை மட்டும் பாடி மகிழ்ந்தார்கள்.

 

 

திருடர்களோ தனது கடுமையை எல்லாம் விட்டுவிட்டு ஜாலியாக சீட்டுக் கட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். மூவரும்  குடித்துவிட்டு, கும்மாளம் போட்டனர். இதுதான் தருணம் என்று மூன்று மூன்று பேராகச் சேர்ந்து பாடிக்கொண்டே திருடர்களைப் பிடித்து கயிற்றால் கட்டினார்கள்; ஒருவர் ஓடிச் சென்று பட்டணத்தில் உள்ள போலீஸ்காரர்களிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து பத்து திருடர்களையும் பிடித்தனர்.

இதுதான் “யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்” என்ற பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை!

–சுபம்—

 

பாரதி போற்றி ஆயிரம் – 35 (Post No.4663)

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London- 7-21 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4663

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

 

 

((SECOND PART WAS POSTED YESTERDAY))

 

  பாடல்கள் 198 முதல் 205

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பண்டித ஜனாப் K.அப்துல் சுகூர் (1933) பாடல்கள்

பாரதியார் பா மணம்

தேனிருக்குது தினையிருக்குது தென்பழனியிலே என்ற மெட்டு

 

  1. பூ மணக்குது புகழ் மணக்குது

புண்ணியர் பாடலிலே

பா மணக்குது பயன் மணக்குது

பாரதி பாட்டுள்ளே

 

  1. இனிமை மொழி யினிசையிலங்குது

இன்பப் பாடலிலே

பனி மொழிச்சியர் கலைமணக்குது

பாரதி பாட்டுளே

 

  1. காவியக்கனி கனிந்திருக்குது

காமர்ப் பாடலிலே

பாவியலணி பரந்திருக்குது

பாரதி பாட்டுளே

 

  1. புண்ணிய நெறி பொலிந்திருக்குது

புதுமைப் பாடலிலே

பண்ணியல்களின் நடைநடக்குது

பாரதி பாட்டுளே

 

  1. தகைமைதத்துவந் தவழ்ந்திருக்குது

தண்ணார் பாடலிலே

பகைமை குன்றிய வாழ்க்கை தங்குவது

பாரதி பாட்டுளே

 

  1. தேஞ்சாரம் பசுந் தேறலிருக்குது

தேசப் பாடலிலே

பாஞ்சாலி நிறை படர்ந்திருக்குது

பாரதி பாட்டுளே

 

  1. ஜெயந்தொனிக்குது திறனொலிக்குது

திவ்யப் பாடலிலே

பயந்தொதுங்குது தீண்டாமைப் பேய்

பாரதி பாட்டுளே

 

  1. சாதிக்கொடுமைகள் தகர்ந்தழியுது

சங்குப் பாடலிலே

பாதகர் செயும் மோசமோடுது

பாரதி பாட்டுளே

(கவிதையின் இறுதிப் பகுதி அடுத்து வரும்)

 

– “பாரதி”     – மாதப் பத்திரிகை

உத்தம பாளையம்  1933 ஆகஸ்டு

 

 

கவிஞர் குறிப்பு : தெரியவில்லை

 

தொகுப்பாளர் குறிப்பு : மகாகவி பாரதியார் பற்றிய பல அரிய விஷயங்களை மிகவும் சிரமப்பட்டு சேகரித்து தனது இதழான குமரி மலர் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார் திரு ஏ.கே.செட்டியார் அவர்கள். 1974ஆம் ஆண்டு இதழ்களைப் பார்த்தால் பல சிறப்பான செய்திகளை அறியலாம். அவற்றுள் ஒன்று இந்தப் பாடல்.

நன்றி: என்றென்றும் எம் நினைவில் இருக்கும் – திரு ஏ.கே.செட்டியார்; குமரி மலர்

***

 

மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை! (4662)

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London- 6-59 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4662

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(என் வாசகர்கள் தமிழர்கள்= நல்லவர்கள்; தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

பாக்யா 26-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 49வது) கட்டுரை!

 

மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை!

 

 

ச.நாகராஜன்

 

 

 

 

“மரபணு பற்றிய விதிகள் அவற்றை நீங்கள் அறிய மறுத்தாலும் கூட உங்களுக்கும் அது பொருந்தும்!” – ஆலிஸன் ப்லோடென்

 

இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல விஞ்ஞானிகளில் பெரிதும் போற்றப்பட்டு வருபவர் மரபணு சம்பந்தமான பெரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த பெரும் விஞ்ஞானி சர் பால் நர்ஸ்! (Sir Paul Nurse).

 

முக்கியமாக கான்ஸர் வியாதி குணமாகக் கூடியதே என்பதை அவர் சொல்லும் போது உலகமே ஆறுதல் அடைகிறது. மருத்துவத்திற்கான 2001ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை அவர் மற்ற இரு விஞ்னானிகளுடன் கூடச் சேர்ந்து பெற்றுக் கொண்டார்.

பிரிட்டனைச் சேர்ந்த நர்ஸ் 1949ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி பிறந்தவர். இப்போது அவருக்கு வயது 69.

உலகிற்கே மரபணு பற்றிய ஏராளமான உண்மைகளைத் தெரிவித்த இந்த விஞ்ஞானியின் சொந்த வாழ்க்கையில் அவரது மரபணு பற்றிய விஷயம் பெரிய ரகசியமாக அமைந்தது தான் விசித்திரம்.

 

பெரிய மர்ம நாவல் போல அவரது வாழ்க்கை வரலாறு இருக்கிறது.

 

இதை அவரே ஒப்புக் கொள்கிறார். டிக்கன்ஸ் நாவலையும் தோற்கடிக்கும் அளவு அவரது வாழ்க்கை மிக்க சுவையான மர்மம் நிறைந்த ஒன்று.

 

அமெரிக்காவில் ராக்ஃபெல்லர் பல்கலைக் கழகத்திற்கு அவர் தலைவர் ஆனார். சுமார் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த அவர் அமெரிக்க குடியுரிமை பெற கிரீன் கார்டை வாங்க ஒரு விண்ண்பத்தை சமர்ப்பித்தார். ஆனால் அது அமெரிக்க ஹோம்லேண்ட் செக்யூரிடி பிரிவால் நிராகரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டது.

 

திகைத்துப் போன அவர் ஏன் என்று கேட்டார்.

அந்தப் பிரிவோ அவரது பிறப்புச் சான்றிதழில்  தந்தை பெயரும் தாயின் பெயரும் இல்லை என்று பதில் கூறியது.

இவ்வளவு தானே என்று நினைத்த நர்ஸ், ஒரு முழு பெர்த் சர்டிபிகேட்டை அனுப்புமாறு பிரிட்டன் ஜெனரல் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். பின்னர் நிம்மதியாக இரு வார விடுமுறை எடுத்துச் சென்று விட்டார்.

திரும்பி வந்தவர் தன் செயலாளரிடம், ‘இப்போது எல்லாம் சரியாக ஆகி விட்டதல்லவா’ என்று கேட்டார்.

“ஊஹூம்” என்று சொன்ன அவர் பிரிட்டனிலிருந்து வந்த பெர்த் சர்டிபிகேட்டை அவரிடம் நீட்டினார். அதில் தாயார் என்பதற்கு நேராக அவரது சகோதரியின் பெயர் இருந்தது. தகப்பனார் என்பதற்கு நேராக ஒரு கோடு -டேஷ் – மட்டும் இருந்தது.

தகப்பனார் இல்லாத ஆளா நான் என்று வியப்புற்றார் நர்ஸ்.

உலகிற்கே மரபணு பற்றி விளக்கம் அளிப்பவர் தன்  மரபணு பற்றித் தெரியாமல் திகைத்தார்.

 

அவரது மனைவி என்ன திகைப்பு என்று கேட்டு விஷயத்தைப் புரிந்து கொண்டு ஆராய ஆரம்பித்தார்.

பின்னர் கூறினார்,”நீங்கள் தந்தை தாய் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்மையில் உங்கள் தாத்தாவும் பாட்டியுமே. நீங்கள் உங்கள் சகோதரி என்று நினைத்துக் கொண்டிருபபவர் தான் நிஜத்தில் உங்கள் தாயார்!”

திகைத்துப் போன நர்ஸால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

 

அவரது தந்தையும் தாயும் உயிருடன் இல்லை.

சகோதரியும் உயிருடன் இல்லை.

அவர் வாழ்ந்த வீடு பெரிய அத்தையின் வீடு. அந்தப் பெரிய அத்தையும் உயிருடன் இல்லை.

என்ன செய்வது?

பெரிய அத்தையின் பெண் உயிருடன் வாழ்கிறார். உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டார்.

“உனது வாழ்வில் ஒரு மர்மம் இருக்கிறது” என்று கூறிய அவர் “நீ பிறந்த போது எனக்கு 11 வயது. உனது தாயார் 17 வயதிலேயே கர்ப்பமானாள். கர்ப்பமானவுடன் அவரை இங்கு கொண்டு வந்து விட்டனர். நீ பிறந்தாய். உன்னை உன் தாத்தாவும் பாட்டியும் கொண்டு சென்று வளர்க்க ஆரம்பித்தனர். உன் அம்மாவை உனது சகோதரி என்று சொல்லி விட்டனர். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று ரகசிய பிரமாணமும் செய்ய வைத்தனர்.

 

உன் தாயார் பின்னர் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இது தான் நடந்த கதை” என்றார் அவர்.

 

இப்போது உலகப் பெரும் விஞ்ஞானியின் தலை சுழன்றது.

அப்போது தனது தந்தை யார்?

உறவுகள் எல்லாம் இப்போது அவருக்கு மாறிப் போனது.

அப்பா என்று கூப்பிட்டு வந்தவர் தாத்தா ஆனார். அம்மா என்று அழைத்தவர் பாட்டி ஆனார். சகோதரி மிரியம் இப்போது அம்மா ஆகி விட்டார்.

 

சகோதரர்கள் என்று நினைத்தவர்கள் இப்போது மாமன்மார் ஆகி விட்டனர். ஒரே குளறுபடி உறவுமுறையில்!

“நான் என்ன செய்வது? நான் ஒரு மோசமான மரபணு விஞ்ஞானி இல்லை. எனது குடும்பத்தினர் தான் என் மரபணு பற்றிய விஷயத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரகசியமாக வைத்து விட்டனர்!” என்கிறார் நர்ஸ்!

 

அவரது சகோதரி மிரியம் – இப்போது ரகசியம் தெரிந்து விட்ட நிலையில் அவரது அம்மாவாகி விட்ட மிரியம் – திருமணம் செய்து கொண்ட போது அவரது கணவரை ஒரு கையிலும் குழந்தை நர்ஸை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு எடுத்துக் கொண்ட போட்டோ நர்ஸின் நினைவுக்கு வந்தது.

தன் சொந்த அம்மா பிரியப் போகிறார் என்பதைத் தாங்க முடியாமல் தானோ என்னவோ அன்று நடந்த நிகழ்வு ஒன்றைச் சொன்னார் நர்ஸ். திருமண ஸ்பெஷல் கேக் வைத்திருந்த குட்டி மேஜையின் அடியில் புகுந்த நர்ஸ் அதன் காலை வாரி விட வெடிங் கேக் கீழே விழுந்து உடைந்து போனது. இது ஒரு சகுனமோ என்னவோ என்கிறார் நர்ஸ்.

 

தனது டி என் ஏ சாம்பிளையும் குடும்ப உறுப்பினர்களின் டி என் ஏ சாம்பிள்களையும் சோதனைக்கு அனுப்பியும் நர்ஸால் ஒன்றும் புதிதாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.

 

உலகின் தலை சிறந்த விருதான நோபல் பரிசைப் பெற்றவர்; உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் தந்த அறுபதுக்கும் மேற்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள்  பெற்றவர்; ஏராளமான விருதுகளைப் பெற்றவர். – அதைத் தனியே எழுதினால் ஒரு புத்தகமாகவே ஆகி விடும்!-  அப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானிக்கு – மரபணு ஞானிக்குத் – தன் சொந்த வாழ்க்கை பற்றிய மர்மம் ஒரு விசித்திரமான விஷயமாக ஆகி விட்டதை விதியின் கொடுமை என்று சொல்வதா?

 

தன் தந்தை ஒரு சர்வீஸ்மேனாக இருக்கலாம் என்று சொல்லிக் கொள்கிறார் அவர்.

 

அவரது வாயால் வந்த உண்மைகளை உலகின் தலை சிறந்த பத்திரிகைகள் பெரிதாக வெளியிட்டன.

 

சிலரது வாழ்க்கை விசித்திரமானது மட்டுமல்ல; மர்மமானதும் கூட என்பதற்கு நல்ல ஒரு உதாரணம் சர் பால் நர்ஸ்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

விண்வெளி வீ ரர்களிலேயே மிகவும் துணிச்சல்காரர் என்ற பெயரெடுத்த ஜான் யங் தனது 87ஆம் வயதில் 5-1-2018 அன்று மரணமடைந்தார்.

 

அவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை நினைவு கூறும் விண்வெளி ஆர்வலர்கள் தங்கள் துக்கத்தை இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் பதிவு செய்து கொண்டே இருக்கின்றனர். 1972இல் ஏப்ரல் மாதம் சந்திரனில் இறங்கிய அபல்லோ 16 விண்கலத்தின் கமாண்டராக இருந்தவர் யங். சந்திரனின் ஆராயப்படாத புதிய பகுதியில் தனது ல்யூனார் ரோவரை இயக்கி சாதனை படைத்தார். சுமார் 200 பவுண்ட் எடையுள்ள சந்திரக் கற்களைக் குவித்தார்.

 

அவரைப் பற்றிய சுவையான சம்பவங்கள் பல உண்டு.

24-9-1930 இல் பிறந்த அவர் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் ‘சந்திரனுக்கு மனிதன் செல்ல வேண்டும்’ என்ற உரையைக் கேட்டு உத்வேகம் அடைந்தார். நாஸாவில் சேர்ந்தார். 42 ஆண்டுக் காலம் பணியாற்றினார். 6 முறை விண்வெளிக்கு ஏகினார்.

நாஸாவில் அவர் சேர்ந்தவுடன் உடா என்ற இடத்தில் உள்ள தியோகால் தொழிற்சாலையில் ராக்கட்டின் இயக்கத்தைச் சோதனை செய்யும் போது ராக்கட் பூஸ்டர் பயங்கர சத்தத்துடன் சீறிப் பாய்ந்து அனைவரையும் பயமுறுத்தியது. அவரது சகாவும் அவருடன் விண்வெளியில் பின்னர் கூடப் பறந்தவருமான கிப்பன் என்பவர் அவரை நோக்கி, “ என்ன யங், இந்த மாதிரி ராக்கட்டுகளில் ஒன்றில் பறக்க ஆசைப் படுகிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு உடனே யங், “ஒன்றென்ன, இரண்டில் பறக்க ஆசைப்படுகிறேன்” என்று பதிலளித்தார். அப்படியே விண்வெளியில் பறந்தும் காண்பித்தார்.

 

சந்திரனுக்கு மட்டும் மனித்ன் போனால் போதாது, இதர கிரகங்களுக்கும் சென்று கால் ஊன்ற வேண்டும் என்பதே மனித குலத்திற்கு அவர் அளித்த செய்தி. அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் நாமும் இணைவோமாக!

***

 

 

 

மாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள் (Post No.4660)

COMPILED by London Swaminathan 

 

Date: 25 JANUARY 2018

 

Time uploaded in London – 8-10 AM

 

Post No. 4660

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவ்ர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

பிப்ரவரி 2018 ‘நற் சிந்தனை’ காலண்டர்

(ஹேவிளம்பி- தை- மாசி மாதம்)

இந்த மாத காலண்டரில் மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்திலிருந்து 28 பொன்மொழிகளைத் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

 

முக்கிய விழா – பிப்ரவரி 13- மஹா சிவராத்திரி

அமாவாசை- 15  (சூரிய கிரஹணம்; இந்தியாவில் தெரியாது)

ஏகாதஸி விரதம்-11, 26

 

பிப்ரவரி மாத முகூர்த்த தினங்கள்—4, 5, 7, 11, 18, 19, 26

 

பிப்ரவரி 1 வியாழக்கிழமை

 

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க

 

பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை

 

சிவனவனென்  சிந்தையுள் நின்ற அதனால்

அவனருளாலே அவன்றாள் வணங்கி

பிப்ரவரி 3 சனிக்கிழமை

 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகி

பல்விருகமாகி பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய் கண ங்களாய்

வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றவித் தாவரச் சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை

 

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய்

பிப்ரவரி 5 திங்கட்கிழமை

 

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

பிப்ரவரி 6 செவ்வாய்க்கிழமை

சொல்லற்கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

 

 

பிப்ரவரி 7  புதன்கிழமை

தாயிற் சிறந்த தயாவாவன தத்துவனே

–சிவ புராணம் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

பிப்ரவரி 8 வியாழக்கிழமை

மன்னு மாமலை மகேந்திர மதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்

 

பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை

மதுரைப் பெருநன் மாநகரிருந்து

குதிரைச் சேவகானாகிய கொள்கையும்

 

பிப்ரவரி 10 சனிக்கிழமை

தண்ணீர்பந்தர் சயம்பெறவைத்து

நன்னீர்ச் சேவகானாகிய நன்மையும்

–கீர்த்தித் திரு அகவல் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

 

 

பிப்ரவரி 12 திங்கட்கிழமை

 

இன்னிசை வீணையில் இணைந்தோன் காண்க

 

பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை

பத்தி வலையிற் படுவோன் காண்க

 

 

பிப்ரவரி 14  புதன்கிழமை

 

ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து

வாணுதற் பெண்ணென வொளித்துஞ் சேண்வயின்

–திருவண்டப்பகுதி (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

 

பிப்ரவரி 15 வியாழக்கிழமை

 

ஆத்த மானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்

 

பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை

உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்

கலாபேதத்த கடுவிடம் எய்தி

 

பிப்ரவரி 17 சனிக்கிழமை

 

ஆடக மதுரை அரசே போற்றி

கூடலிலங்கு குருமணி போற்றி

தென்றில்லை மன்றினுளாடி போற்றி

 

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை

 

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

 

பிப்ரவரி 19 திங்கட்கிழமை

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

 

 

பிப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை

புலிமுலை புல்வாய்க்கருளினை போற்றி

 

பிப்ரவரி 21  புதன்கிழமை

மூவா நான்மறை முதல்வா போற்றி

பேராயிரமுடைப் பெம்மான் போற்றி

–போற்றித் திரு அகவல் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

 

பிப்ரவரி 22 வியாழக்கிழமை

நாடகத்தாலுன்னடியார்

போனடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப் பெரிதும் விரைகின்றேன்

 

பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை

வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி

ஊனாகி யுயிராகி உண்மையுமாயின்மையுமாய்க்

கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே

 

பிப்ரவரி 24 சனிக்கிழமை

யானே பொய்யென் நெஞ்சும்

பொய்யென் அன்பும் பொய்

யானால் வினையே னழுதா

லுன்னைப் பெறலாமே

 

பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை

யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்

 

பிப்ரவரி 26 திங்கட்கிழமை

பட்டிமண்டபமேற்றினை யேற்றினை

எட்டினோடிரண்டும் மறியேனையே

 

பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை

சடையுளே கங்கை வைத்த

சங்கரா போற்றி போற்றி

 

பிப்ரவரி 28  புதன்கிழமை

பிழைத்தவை பொறுக்கையெல்லாம்

பெரியவர் கடமை போற்றி

–திருச்சதகம் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

–subham–

 

 

 

 

மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்! (Post No.4659)

Date: 24 JANUARY 2018

 

Time uploaded in London- 6-06 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4659

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

மஹாபாரதம்

 

மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்!

 

ச.நாகராஜன்

1

உலகின் ஆகப் பெரும் இலக்கியமான மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள் மட்டும் சுமார் எட்டாயிரம் உள்ளன. ஒரு லட்சம் ஸ்லோகங்களில் 8000 என்றால் 8 % என்று ஆகிறது.

வியாஸர் மஹா கண்பதியை அணுகி தனக்கு இந்த இதிஹாஸத்தை எழுத உதவி புரிந்து அனுக்ரஹிக்குமாறு வேண்ட, அவரோ ‘எழுதுகிறேன், ஆனால் தங்கு தடையின்றி நிற்காமல் சொல்ல வேண்டும்’ என்று நிபந்தனை போடச் சற்றுத் திகைத்துப் போனார் வியாஸர். பதில் நிபந்தனையாக, ‘புரிந்து கொண்டு எழுத வேண்டும்’ என்று சொல்ல அதற்கு ஒத்துக் கொண்டார் விநாயகர். ஆகவே தான் எழுந்தன இந்த அற்புதமான புதிர் ஸ்லோகங்கள். ஆங்காங்கே முடிச்சுகளைப் போட, அதைப் புரிந்து கொள்ள விநாயகருக்குச் சற்று நேரம் ஆனது. அதற்குள் அடுத்த பல நூறு ஸ்லோகங்களை மனதிற்குள் கவனம் செய்து கொண்டார் வியாஸர்.

இந்த ஸ்லோகங்களுக்கு ‘ கூட ஸ்லோகங்கள்’ என்று பெயர்.

இவை அனைத்தையும் தொகுத்திருக்கும் புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆங்காங்கு பல காலமாக பல்வேறு விற்பன்னர்கள் நடத்திய உபந்யாசங்களில் இவை இடம் பெறும். கேட்போர்களின் மனதைக் கவரும். அவர்களையும் யோசிக்க வைக்கும்.

2

மஹாபாரத ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர் சி.வி. வைத்யா 1905ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட புத்தகம் ‘தி மஹாபாரதா – எ கிரிடிஸிஸம்’ (‘The Mahabharata: A Criticism” – C.V.Vaidya). இதில் அவர் மஹாபாரதத்தின் முதல் பர்வங்களில் நிறைய புதிர் ஸ்லோகங்களும், பின்னால் உள்ள பர்வங்களில் குறைந்த அளவு புதிர் ஸ்லோகங்களும் உள்ளன என்று கூறுகிறார்.

ஆதி பர்வத்தில் 3; சபா பர்வத்தில் 2; வன பர்வத்தில் 3; விராட பர்வத்தில் 4; உத்யோக பர்வத்தில் 3; பீஷ்ம பர்வத்தில் 1; துரோண பர்வத்தில் 5; கர்ண பர்வத்தில் 3; சாந்தி பர்வத்தில் 2;அஸ்வமேத பர்வத்தில் 1; ஆக மொத்தம் 27  புதிர் ஸ்லோகங்களை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார். ஆனால் எட்டாயிரம் ஸ்லோகங்களையும் புரிந்து கொண்டு தொகுப்பார் இல்லையோ என்னவோ!

1915ஆம் ஆண்டு  மஹாபாரதத்தைச் சிறந்த முறையில் தமிழில் மொழிபெயர்த்து அளிக்கும் மகத்தான பணியில் இறங்கிய கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய, ஸ்ரீ ம.வீ. இராமானுஜாசாரியார் பல ஸ்லோகங்களுக்கு மஹாபாரத விற்பன்னர்களாலும் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாமல் போனதென்றும் அதற்கான சரியான அர்த்தத்தைக் கண்டுபிடித்து வெளியிட முயன்றதால் சில பர்வங்களை வெளியிடுவதில் கால தாமதம் ஆனதாகவும் தெரிவிக்கிறார்.

ஆக புதிர் ஸ்லோகங்கள் அனைத்தையும் ஒரு சேரப் படிக்க முடியாமலேயே உள்ளது.

 

3

விநாயகருக்கே சவாலாக அமைந்த தனது ஸ்லோகங்களைப் பற்றி வியாஸர் கூறும் போது, “அதன் கருத்தை நான் அறிவேன்; சுகன் அறிவான்; ஸஞ்சயன் அறிவானோ! மாட்டானோ!” என்று குறிப்பிடுகிறார்.

எடுத்துக் காட்டாக ஒரு புதிர் ஸ்லோகத்தை இங்கே காண்போம்:

நதீஸ லங்கேஅ ஸவநாரி கேது: நகாஹ்வ யோநாம நகாரி |

ஸுநு: ஏஷோங்க நாவேஷதா: கிரீடி:|

ஜித்வாவய; நேஷ்ய திசாத்ய காவ: ||

இதில் உள்ள முடிச்சை அவிழ்ப்பது கஷ்டமான ஒன்று.

சரியான இடத்தில் பதத்தைப் பிரித்து அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்!

அர்ஜுனன பேடியாக மாறி உத்தரனை தேரோட்டும் சாரதியாகக் கொள்ளும் விராட பர்வத்தில் கோக்ரஹண காலத்தில் வரும் ஸ்லோகம் இது.

துரோணர், பீஷ்மர், துரியோதனன் ஒரு சேர இருக்கின்றனர்.

பக்கத்தில் உள்ள துரியோதனன் அறியாத வண்ணம் பீஷ்மருக்கு, துரோணர், “ அவன், பசுக்களை மீட்க வந்த அர்ஜுனன்” என்பதைப் பூடகமாகத் தெரிவிக்கும் ஸ்லோகம் இது.

விநாயகர் கூடச் சற்று திகைத்து விட்டு அர்த்தம் கண்டுபிடிக்கும் படியாக அமைந்த ஸ்லோகமும் இது தான்;

பொதுவாக கவனித்தால் அர்த்தமே விளங்காது!

“ நதீ ஜலம் கேசவ நாரி கேது நநாஹ்வயோ நாம நகாரி ஸுநு:”

ஆற்றின் ஜலம், கேசவன், பெண், கொடி, கொடி மரத்தின் பெயர், மலையின், சத்ரு, பிள்ளை – என்ன இது? ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சொற்கள்!

இதில் என்ன அர்த்தம் இருக்க  முடியும்?

ஆனால் பதம் பிரிக்கும் போது நதீ ஜலம் என்று பிரிக்காமல் நதீஜ என்று கொண்டால் நதீஜ – நதியின் புத்திரனான பீஷ்மன்- அதாவது கங்கைக்குப் பிறந்த பீஷ்மன் என்று அர்த்தம் வரும்.

லங்கேசவந – இலங்கையில் உள்ள அசோக வனம்.

அரி சத்ரு  – அந்த அசோகவனத்திற்கு எதிரி ஆஞ்சநேயர்.

கேது – அவரைக் கொடியாக உடையவன்

நகாஹ் வய – அர்ஜுன என்ற மரத்தின் பெயரைப் பெற்றவன்

நகாரி ஸுநு: – மலைச் சத்ருவான இந்திரனின் குமாரனான அர்ஜுனன்

என்று இப்படிப் பிரித்து ஸ்லோகத்தின் சரியான பொருளை உணர வேண்டும்!

பெண் வேஷத்துடன் கிரீடம் தரித்த அர்ஜுனன் நம்மை ஜயித்து பசுக்களை ஓட்டிச் செல்வான் என்பது இதன் பொருள்.

4

 

சபா பர்வத்தில் வரும் ஒரு சொற்றொடர் இது: “மனஸாதாளம் பேரிம்”

மனஸா என்றால் 12;

தாளம் என்றால் ஒரு சிறிய இடைவெளி.

ஆக இதன் உண்மையான அர்த்தம் 12 வெளியை விட்டமாகக் கொண்ட ஒரு பேரிகை!( A Drum with 12 spans as diameter)

5

மஹா பாரதத்தை நூற்றுக் கணக்கான கோணங்களில் அலசி ஆராய்ந்து படித்து வியக்கலாம். அதில் ஒன்று தான் கூட ஸ்லோகம் – புதிர் கவிதைகள் – கண்டு படிப்பது! புத்திக்குச் சவாலாக அமையும் இந்த புதிர் ஸ்லோகங்கள் மஹாபாரத்தைப் படிக்க ஆவலைத் தூண்டுபவை மட்டும் அல்ல; விநாயகரையே மலைக்க வைத்த வியாஸரின் புத்தி கூர்மையைக் காட்டும் ஸ்லோகங்களும் ஆகும்!

இப்படி ஒரு புதிர் செய்யுள்களைக் கொண்டுள்ள இன்னொரு இலக்கியம் உலக மொழிகளில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத் தகுந்தது!

படிப்போம்; வியப்போம்; புதிரை அவிழ்த்து மகிழ்வோம்.

***