பத்து உலக மஹா இலக்கிய அதிசயங்கள் (Post No.4575)

Written by London Swaminathan 

 

Date: 2 JANUARY 2018

 

Time uploaded in London- 8-21 AM

 

 

Post No. 4575

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

உலக மஹா அதிசயம் இந்தியாவில் நடந்தது. அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.  இது இந்திய நாகரீகத்தின் தனித் தன்மையைக் காட்டுகிறது. அதற்குப் பின்னர் மேலும் சில அதிசயங்கள் நடந்தன. சுருக்கமாக விளம்புகிறேன்.

 

ஒரு நாட்டின் நாகரீக முன்னேற்றத்தைக் காட்டும் அளவுகோல் எது?

அந்த நாட்டின் இலக்கியங்கள் ஆகும்.

அதிசயம் 1

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழியில் சுமார் 450 புலவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேலான கவி தைகளை எழுதினர். அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் இன்னும் 400 புலவர்கள் கவிபாடினர். அவர்கள் பாடியவை ஆயிரத்துக்கும் மேலான துதிப் பாடல்கள் ஆகும். இது முதல் அதிசயம் ஆகும். ஏனெனில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு 850 புலவர்கள் கூட்டாகக் கவி பாடியதில்லை. சங்க இலக்கியப் புலவர்கள் அத்தனை பேருடைய பெயர்களும் நம்மிடம் இருக்கின்றன இதே போல உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதம் பாடிய 400 கவிஞர்களின் பெயர்களும் நமக்குக் கிடைத்தன.

அதிசயம் 2

இரண்டாவது உலக அதிசயம் இதிலுள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை! உலகில் வேறு எங்கும் இவ்வளவு பெண்பாற் புலவர்களின் குழுவைக் காண முடியாது. தமிழில் குறைந்தது 25 பெண்பாற் புலவர்களையும் வேதத்தில் குறைந்தது 20 பெண் புலவர்களையும் காண்கிறோம்.

 

இந்த இரண்டு அதிசயங்களும் காட்டும் உண்மை என்ன?

உலகிலேயே மிகப் பழமையான நாகரீகம் இந்து அல்லது இந்திய நாகரீகமே. எந்த ஒரு நாடும் இவ்வளவு அறிஞர் பெருமக்களை அக்காலத்தில் அளிக்கவில்லை.

 

பழமையான நாகரீகம் என்பதோடு மிகவும் முனேறிய நாகரீகம் என்பதும் இதனால் அறியப்படுகிறது.

 

தமிழர்களுக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்கள் எழுதி இருந்தாலும் தமிழர்களைப் போல அவர்கள் மாபெரும் சங்கம் வைத்து மொழியை வளர்க்கவில்லை . வேதங்களோ கிரேக்க மொழிக்கு மிக மிக முந்தியவை.

அதிசயம் 3

மூன்றாவது இலக்கிய அதிசயம் வேதங்களைப் பாதுகாத்த முறையாகும்; பிரமாண்டமானதொரு இலக்கியத்தை — அதாவது 400 க்கும் மேலான புலவர் பாடியவை- ஆயிரத்துக்கும் மேலான துதிகளைக் கொண்டவை — உலகில் எங்குமே வாய் மொழியாகப் பாது காக்கப் படவில்லை இதுவும் இந்திய மக்களின் அறிவாற்றலுக்குச் சான்று பகரும்.

 

   

அதிசயம் 4

நாலாவது அதிசயம் பிரம்மாண்டமான இலக்கியக் குவியலாகும். தமிழர்களும், கிரேக்கர்களும், எபிரேயர்களும் எழுதுவதற்கு முன்னதாக பிரம்மாண்டமான துதிப்பாடல் தொகுப்பை- சமய உரை நடைத் தொகுப்பை– வேத கால இந்துக்கள் உருவாக்கிவிட்டனர். அதாவது நான்கு வேதங்களில் மட்டுமே 20,000 க்கும் மேலான மந்திரங்கள்; அதற்குப் பின்னர் பிராமண இலக்கியங்கள், ஆரண்யகங்கள் உபநிஷத்துக்கள் என்னும் உரை நடை இலக்கியங்கள் தோன்றின. இதையும் ஒப்பற்ற முன்னேற்றம் என்று சொல்லலாம்.

 

எகிப்திய நாட்டில் பபைரஸ் (Papyrus) என்ற புல்லில் பல நூல்கள் உள. சுமேரியாவில் – மத்திய கிழக்கில் — 60,000 களிமண் பலகைகள் (Clay Tablets) உள. ஆயினும் இலக்கியம் என்று சொல்லும் நயமுள்ள பகுதிகள் மிகச் சிலவே.

 

அதிசயம் 5

ஐந்தாவது அதிசயம் உபநிஷத்துக்கள் என்னும் தத்துவ நூல்களாகும். இந்தியாவில்  இந்த தத்துவ நூல்கள் உருவாகிய சில நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜொராஸ்டர், மோஸஸ், மஹாவீரர், புத்தர், கன்பூசியஸ் என்று உலகின் பல பகுதிகளில் மஹான்கள் தோன்றினர்.

 

அதிசயம் 6

ஆறாவது அதிசயம் மிக நீண்ட மன்னர் பட்டியலும், குருமார்கள் (Long List of Kings and Teachers) பட்டியலும் ஆகும். 140 தலைமுறைகளின் வரிசை அப்படியே புராணங்களில் உள்ளன. ஐம்பதுக்கும் மேலான ‘குரு’க்களின் பெயர்கள் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் உள்ளன. இப்படிப்பட்ட நீண்ட பட்டியல் உலகில் வேறெங்கும் இல்லை; வரலாற்று ஆசிரியர்களாகக் கஷ்டப்பட்டு நமக்குக் கொடுத்த பட்டியல்தான் உள்ளது– கி.மு இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பெரோரஸஸ் (Berossus) முதலியோர் கொடுத்த வரலாற்றுப் பட்டியல் பல முரண்பாடுகளுடன் இருந்ததை வரலாற்று ஆய்வாளர்கள் தட்டிக்கொட்டிச் சரிப்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் முன்னதாக கிரேக்க ஆசிரியர்கள் நம்முடைய 140 தலை முறை பற்றி வியப்போடு எழுதிவைத்துள்ளர்.

 

அதிசயம் 7

ஏழாவது இலக்கிய  அதிசயம் அசோகர் கல்வெட்டுகளாகும் . கி.மு மூன்றாம் நூற்றன்டில் திடீரென  ஆப்கனிஸ்தான் முதல் இலங்கையின் தென்கோடி வரை பிராமி லிபியில் (Brahmi script) பாலி மொழியில் கல்வெட்டுகள் தோன்றியதாகும். இதில் மிக முக்கியமான உண்மை வெளியாகியது. இந்தியர்கள் மஹா மேதாவிகள் — பட்டி தொட்டி தோறும் எழுத்தறிவு மிகுந்து இருந்தது. கர்நாடகத்தில் கூட அசோகர் கல்வெட்டுகள் கிடைத்து இருக்கின்றன. சீன யாத்ரீகர் குறிப்பிடும் காஞ்சீபுரக் கல்வெட்டுகள் மட்டும் படை எடுப்பில் அழிந்துவிட்டன. எழுத்தறிவு இருந்ததால்தான் இப்படி கல்வெட்டுகளைக் காண முடிகிறது. இது உலக அதிசயம் (Brahmi script from Afghanistan to Kandy in Sri Lanka). இப்படிப்பட்ட பெருநிலப்பரப்பில் உலகில் வேறு எங்கும் 2300 ஆண்டுகளுக்கு முன் காணக் கிடைக்காது. இந்தியர்கள் எந்த அளவுக்கு எழுத்து அறிவு பெற்று இருந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

அதிசயம் 8

எட்டாவது உலக அதிசயம் பிராமி என்னும் எழுத்தாகும். இந்த லிபி மூலம் தமிழ் உள்பட தெற்காசிய எல்லா மொழிகளுக்கும் லிபியை/ எழுத்தை அளித்த இலக்கிய அதிசயம் ஆகும். இது பீனிசிய எழுத்தில் இருந்து வந்ததாகவும் வரவில்லை என்றும் இரு வேறு கருத்தூக்கள் உண்டு– ஆயினும் இதைக் கண்டு வெளிநாட்டினர் வியக்கின்றனர். ஏனெனில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய சம்ஸ்கிருத எழுத்து முறைக்குத் தக, அகர (alphabet) வரிசைப்படி, இந்த எழுத்து முறை அமைந்துள்ளது– மற்ற மொழி எழுத்துக்கள் இப்படி அமையவில்லை என்பது அவர்கள் கூற்று.

 

 

அதிசயம் 9

ஒன்பதாவது உலக மஹா இலக்கிய அதிசயம் பாணினியின் அத்புதமான ஸம்ஸ்கிருத வியாகரணம் ஆகும் அஷ்டாத்யாயீ என்னும் இந்த இலக்கண நூலைக் கண்டு வியக்காதோர் உலகில் இல்லை. பாரதி தனது பாடல்களில் வேத முரசு உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்று சொன்னதோடு பாணினியையும் உபநிஷத்துக்களையும் தனியாகப் புகழ்ந்து பாடியுள்ளார். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் வேறு எந்த மொழிக்கும் இலக்கண நூல் என்பதே இல்லை; இலக்கணம் இருந்ததா (?!?!) என்பதும் ஐயப்பாடே.

 

அதிசயம் 10

பத்தாவது உலக மஹா இலக்கிய அதிசயமும் இந்தியாவில் நிகழ்ந்ததே! மொழி தொடர்பான விஷயங்களை உவமையாகக் காட்டுவது, எண் தொடர்பான அடையாளக் குறியீடுகளை (Number symbolism) வைத்துப் பாடுவது. மொழி இயல் கருத்துக்களை (Linguistic remarks) வேதம் போன்ற துதிப்பாடல்களில் கூடச் சேர்ப்பது வேறு எங்கும் காணாப் புதுமை ஆகும். ஒரு சமுதாயம் இலக்கியத்திலும் மொழியிலும் (Language), மொழி இயலிலும் (Linguistics)  வளர்ச்சி அடைந்தால்தான் இத்தைகய ஜாலங்களைச் செய்ய இயலும். சொல் வேட்டுவர்களையும் வில் வேட்டுவர்களையும் ஒருங்கே கண்ட நாடு இது— அரசர்களும் கவி பாடிய நாடு இது. சங்கேத மொழியில் பாடுவதே (Secret, hidden language) எங்கள்  தொழில் என்று வேத கால முனிவர்கள் ஆடிப்பாடிய நாடு இது. இப்படிப்பட்ட ரஹஸிய விஷயங்கள் இருந்ததால் வேதத்தை எழுதாக் கற்பு என்றும் மறை (Secret, hidden meaning) என்றும் மொழி பெயர்தான் தமிழன்.

 

இவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த  அ திசயங்கள். எகிப்திலும் பாபிலோனியாவிலும் கல் ஓவியம் இருக்கலாம்; சொல் ஓவியம் இல்லை. ஒரு தத்துப் பித்து ஜில்காமேஷை (Gilgamesh) வைத்துக் கொண்டு கூத்தாடலாம். ஆனால் ரிக் வேதத்தின் க டைசி துதிப்ப்பாடலுக்கு அது ஈடு இணையாகாது.

வேதத்தில் மொழி, மொழி இயல் பற்றி வரும் குறிப்புகளையும்        உலக நலன் பற்றி வரும் வேதத் துதிகளின் எண்களையும் குறிப்பிட்டு கட்டுரையை முடிப்பேன்

 

மொழி இயல் கூறும் துதிகள்

RV 1-164, 4-58, 8-59, 8-100, 10-71, 10-114, 10-125, 10-177

 

மொழி / பேச்சு பற்றிய துதிகள்

RV 1-164, 10-71, 4-3, 10-125

உலக நலன் பற்றிய துதிகள்

10-191, , YV 36, AV 19-60, AV 7-69, AV 3-30,

 

வாழ்க இந்தியா! வளர்க இலக்கியம்!!

 

–SUBHAM–

பிராணன், மனம், புத்தி, சித் ரூபம், ஆனந்த ரூபம் விளக்கம்! (Post No.4574)

 

Date: 2 JANUARY 2018

 

Time uploaded in London- 5-23 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4574

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 7

 

பிராணன், மனம், புத்தி, சித் ரூபம், ஆனந்த  ரூபம்  விளக்கம்!

.நாகராஜன்

 

 

இனி பிராணன், மனம், புத்தி பற்றித் தெரிந்து கொள்வோம்

*

 

ஐயா, பல விஷயங்கள் பற்றிய விளக்கங்களை நன்கு சொல்லி விட்டீர்கள். நன்றி,

பிராணன் என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்?

நல்ல கேள்வி!

உச் ச்வாஸம் நிச் ச்வாஸம் முதலியவற்றின் வியாபாரங்களினால் சரீரத்தைத் தரிக்கின்ற சக்தியைக் கொடுப்பதுவே பிராணன் எனப்படும்.

அது, பிராணன், அபானன், விதானன், உதானன், சமானன் என இப்படி ஐந்து வகைப்படும்.

 

மனம் என்றால் எது?

விசாரணை ஸ்வரூபமான அந்தக்கரண விருத்தி தான் மனம்.

 

புத்தி என்றால் எது?

நிச்சய ஸ்வரூபமான அந்தக்கரண விருத்தி தான் புத்தி.

 

ஆத்மா சச்சிதானந்த ஸ்வரூபன் என்று சொன்னீர்கள் அல்லவா, அதன் பொருள் என்ன?

சத் என்றால் பாதிக்கப்படாதது.

 

சித் என்றால் சுயம் பிரகாசமானது (அதாவது தானே பிரகாசிப்பது)

ஆனந்தம் என்றால் சுவானுபவமே.

 

அப்படியா, நன்றி, ஐயா. சித்திற்கும் ஜடத்திற்கும் விலக்ஷணம் எவை?

சித் என்பது சூரியன் போன்ற அன்னிய பிரகாசத்தை வேண்டாமல் தன் இயற்கை பிரகாசத்தினாலேயே தானே பிரகாசிப்பது.

அப்படி பிரகாசித்துக் கொண்டும்,தன்னிடத்தில் ஆரோபிக்கப்பட்ட ஜடத்தையும்  பிரகாசிப்பதாயும் இருப்பது எதுவோ அது தான் சித்.

ஜட லக்ஷணமாவது,  இயற்கையாக பிரகாசம் அற்றதாகவும், இதர வஸ்துக்களை பிரகாசிக்க வைக்கும் சக்தி அற்றதாகவும் இருப்பது எதுவோ அது தான் ஜடம்.

 

ஆனந்தத்திற்கும் துக்கத்திற்கும் விலக்ஷணம் என்ன?

ஆனந்தம் எது என்றால், உபாதி அற்றதாகவும், நிரதிசயமாயும், நித்தியமாகவும் இருக்கின்ற அமிர்தம் போன்ற சுகமே ஆகும்.

இதற்கு எதிர்மறையாக எது இருக்கிறதோ அதுவே துக்கம்.

ஆத்மாவுக்கு அவஸ்தா த்ரயம் லக்ஷணம் எப்படி?

ஜாக்ரதம்,

ஸ்வப்னம்,

சுஷூப்தி என இப்படி மூன்று அவஸ்தைகள் ஆத்மாவுக்கு உண்டு.

 

இந்த மூன்று அவஸ்தைகளும் ஆத்மாவிற்கு எப்படி வந்தது?

ஆத்மாவிடம் சாக்ஷி லக்ஷணம் இருப்பதால் வந்தது.

 

சாக்ஷி லக்ஷணம் என்றால் என்ன?

ஒருவன் இன்னொருவனையும், அந்த இன்னொருவனின் அவஸ்தையின் வியாபாரங்களையும்  தான் விகாரம் அடையாமல் – வேறுபாடு அடையாமல் –  நோக்கபட்டது போலாம்.

ஜீவாத்மாவும் ஸ்தூல சரீரத்தின் அபிமானியாகி,  ஜாக்ரதா அவஸ்தையில் மூன்று வித கரணங்களின் வியாபாரத்துடன் கூடி, விசுவன் என்ற பெயரையும்,

சூஷ்ம சரீரத்தின் அபிமானியாகி,  ஸ்வப்னா அவஸ்தையில் மனோமயமான மூன்று வித கரணங்களுடைய வியாபாரத்தினால் தைஜஸன் என்ற பெயரையும்,

பிறகு காரண சரீரத்தின் அபிமானியாகி, சுஷூப்தி அவஸ்தையில்  மூன்று கரணங்களை அடக்கிக் கொண்டு பிராக்ஞன் என்ற பெயரையும் பெறுகிறான்.

இப்படி ஆத்மாவானவன், கூடஸ்தனாகவும், ஆகாயம் போல ஒட்டாதவனாகவும், மூன்று அவஸ்தைகளின் பிரதியக்  சைதன்யமாக இருப்பதுவே சாக்ஷி லக்ஷணம் ஆகும்.

 

அவஸ்தையை அனுபவிப்பனிடம் தான் சாக்ஷித்துவம் காணப்படுகிறது. அப்படி இருக்கும் போது, அவஸ்தா சாக்ஷித்துவம் அந்நியனிடம் இருப்பது போல அல்லவா காணப்படுகிறது! இது எப்படி?

இந்த அவஸ்தையை உடையவன், அந்தக் கரணத்தில் பிரதிபிம்பித்த சைதன்யபாசனே!

அவன் பொய்யானவன்.

அவன் ஜீவன் என்று சொல்லப்படுகிறான்.

ஜீவனோ விகாரி. ஆத்மாவோ நிர்விகாரி.

ஆகவே ஆத்மாவுக்கே சாக்ஷித்துவம் பொருந்தும். விளங்குகிறதா?

 

ஆத்மா நிர்விகாரி என்பது எப்படித் தெரியும்?

அந்தக்கரண பிரதிபிம்பத்தினால் அறியக்கூடும்.

 

இந்த அந்தக்கரணமும் இதன் பிரதிபிம்பமான ஜீவனும் ஆத்மாவை அறியாதோ?

அறியாது. ஏனெனில் அறியப்படுவதாகவும், த்ருஷ்யம் எனப்படுவதாகவும் அதாவது பார்க்கப்படுவதாகவும் உள்ள ஆத்மா த்ருக்ரூபன். அதாவது பார்க்கின்ற சுபாவமுடையவன்.

அது எப்படி ஐயா?

சொல்கிறேன், கவனமாகக் கேளுங்கள்.

காணப்படுகின்ற கடம் காண்பவனை அறியாது.

ஆனால் காண்பவனோ ஸ்வயம்பிரகாசமுடையவன் ஆதலால் தன்னைத் தான் அறிகிறான்.

ஆகவே காணப்படுகின்ற அகங்காரமும், அதன் அவஸ்தை, மற்றும் வியாபாரங்கள் ஆத்மாவைத் தொடமாட்டா.

இப்படி ஆத்மாவை எவன் ஒருவன் அவஸ்தா த்ரய சாக்ஷியாகக் காண்கிறானோ அவனே ஜீவன் முக்தன்!

 

ஐயா,நன்றி. கோசம், ஆத்மா சித் ரூபன் என்பதற்கு பிரமாணம் என்ன என்பன போன்ற கேள்விகள் மனதிலே தோன்றுகிறது. கேட்கலாமா?

 

நன்றாகக் கேளுங்கள், பதில் சொல்கிறேன்!

xxxx

முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 –வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17

ஆறாம் கட்டுரை எண் 4546 – வெளியான தேதி : 26-12-2017

 

 

****

 

 

 

 

CHANAKYA’S WARNING ABOUT FOOD HABITS (Post No.4573)

Written by London Swaminathan 

 

Date: 1 JANUARY 2018

 

Time uploaded in London- 16-09

 

 

Post No. 4573

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

Chanakya did not write about cooking or the culinary customs of any culture. Nor did he write a book on health or medicines. But in his didactic work he makes passing remarks about the bad habits in eating. Let us look at some verses/slokas from his work Chanakyaniti.

 

You are what you eat

 

He says,

The conduct reveals the family;

the speech reveals one’s country;

the agitation the affection;

and the body reveals one’s food.

–chapter 3, sloka/verse 2

The sloka/verse in Sanskrit runs like this:

 

aachaarah ulamaakhyaati desamaakhyaati bhaashanam

sambramah snehamaakhyaati vapuraakhyaati bhojamam.

It is very true that the food shapes our body. In the olden days they used to say ‘you are what you eat’ and ‘Tell me the books you read, I will tell you what type of person you are’ and ‘tell me your friends, I will tell you who you are’; now we can tell anyone, ‘tell me your health problems, I will tell you what you eat and vice versa’.

xxxx

 

Burning without Fire!

Living in a petty village,

service to a low born person,

bad food,

irascible wife,

foolish son, and a widowed daughter,

these six singe the body even when there is no fire.

Bad food is one of the things that upset us physically and mentally.

The sloka/verse is as follows

kukgraamavaasah kulahiinasevaa kubhojanam krodhamukhi cha bharyaa

putrascha muurkho vidhavaa cha kanyaa vinaagninaa shat pradahanti kaayam

–chapter 4, verse 8

xxxx

Eating in indigestion is Poison

In another verse Chanakya says that eating in indigestion is poisonous. We live in an era where enormous food is forced on us in dinners and parties, where as there are millions of people born in poor families go without food.

Sastra without repeated study is poison

eating in indigestion is poison

an assembly for the poor is poison

a young woman for an old man is poison.

Here is the sloka/ verse giving the message,

anabyaasena visham saastram ajiirne bhoajanam visham

visham sabhaa daritrasya vrddasya tarunii visham

–chapter 4, verse 15

 

xxx

Be happy with what you have

Chanakya says, “one should be satisfied with one’s wife, meals and wealth. One should never be satisfied with study, austerities and charity.”

It is very important keep our tongue under control. The sloka/verse in Sanskrit runs like this:

 

santoshastrishu kartavyah svadaare bhojane dhane

trishu chaiva na kartavyo adhyayane tapadhaanayoh

–chapter 7, verse 5

Contentment in eating is very important. To get contentment in food, famous TV hypnotist Paul Mc Kenna says, “Never ever eat food while watching TV or reading books. Pay full attention to your eating and enjoy every bit you eat. Take little by little and enjoy it. By doing so you can avoid over eating and feel full in your stomach.

An easy advice anyone can follow without spending a penny.

–Subham–

‘அஜீர்ணே போஜனம் விஷம்’- உணவு பற்றி சாணக்கியன் எச்சரிக்கை (Post No.4572)

Written by London Swaminathan 

 

Date: 1 JANUARY 2018

 

Time uploaded in London- 6-59 AM

 

 

Post No. 4572

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

‘அஜீர்ணே போஜனம் விஷம்’- உணவு பற்றி சாணக்கியன் எச்சரிக்கை (Post No.4572)

சாணக்கியனின் நீதி சாஸ்திரம் ஒரு மருத்துவ நூலன்று; அப்படியும் கூட அவன் போகிற போக்கில் மூலிகைகள் பற்றியும் உணவு பற்றியும் பல அறிவுரைகளை வழங்குகிறான்.

 

 

ஒருவனுடைய உடலைப் பார்த்தாலேயே அவன் சாப்பிடும் உணவைக் கண்டுபிடித்து விடலாம் என்பார் சாணக்கியன்.

என்ன சரியான கணிப்பு!

 

தொந்தியும் தொப்பையுமாக இருந்தால் ஆசிய (Asian) நாட்டவர் என்று கண்டு பிடிக்கலாம். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் அரிசிச் சோறு அவர்களை இப்படி ஆக்கி விடுகிறது. இது போல ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளோ, குறிப்பாக நாம் அளவுக்கு அதிகமாக எதைச் சாப்பிடுகிறோமோ, அது நம் உடலில் எதிரொலிப்பதைப் பார்க்கலாம்.

முழு ஸ்லோகம்:-

ஒருவன் நடத்தையைப் பார், அவன் குடும்பத்தைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய பேச்சைப் பார், அவன் ஊரையும் நாட்டையும் சொல்லி விடலாம்;

ஒருவனுடைய அங்க அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பார், அவனுடைய அன்பை/ காதலைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய உடலைப் பார், அவன் சாப்பிடும் உணவைச் சொல்லி விடலாம்.

ஆசாரஹ குலமாக்யாதி தேசமாக்யாதி பாஷணம்

சம்க்ரமஹ ஸ்னேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம்

 

—–அத்தியாயம் 3, ஸ்லோகம் 2

xxx

 

தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு

அருகில் நெருப்பு இல்லாவிட்டாலும் உடலை எரிக்கக்கூடிய, தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு:

கெட்ட உணவு (வாய்க்கு ருசியான, ஆனால் உடம்புக்கு ஒவ்வாத உணவு ) சிற்றூரில் வசித்தல், கீழ்மட்டத்தில் உள்ளவனுக்கு சேவை செய்தல், எரிந்து விழக்கூடிய மனைவி, முட்டாளான மகன், விதவையான மகள்  – இந்த ஆறும் உடலை தகிக்க வைக்கும்.

குக்ராமவாஸஹ குலஹீனஸேவா குபோஜனம் க்ரோதமுகீ பார்யா

புத்ரஸ்ச மூர்க்கோ விதவா ச கன்யா வினாக்னினா ஷட் ப்ரதஹந்தி காயம்

—அத்தியாயம் 4, ஸ்லோகம் 8

 

xxxx

 

அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் !

இப்போதெல்லாம் கல்யாணத்துக்குப் போனால் சீக்கிய குருத்வாரா லங்கார் (Langar) போல 24 மணி நேரமும்  சாப்பாடு போடுகிறார்கள். அங்காவது  குறைவான அயிட்டம் (items )கள்தான்- வகைகள் தான் கிடைக்கும். கல்யாணத்திலேயோ, ஒரு குடும்பத்துடன் மற்றொரு குடும்பம் போட்டி போட்டுக்கொண்டு 30, 40 வகைகளை பரிமாறி அவர்களுடைய பணத்தையும் வீணடித்து நம்முடைய வயிற்றையும் பாழடைய வைக்கிறார்கள். நாமும் வேண்டாம் என்று சொல்வதில்லை; கிடைக்கக் கிடைக்க வயிற்றில் திணிக்கிறோம்; முன் சாப்பிட்ட உணவு இன்னும் செமிக்கவில்லை என்பதை அறிந்தும் உண்கிறோம். அவை எல்லாம் வயிற்றில் விஷமாகிப் போனது அடுத்த சில நாட்களில் நமக்குத் தெரிகிறது; புரிகிறது.

 

அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் ஆகும்;

பாராயணம் செய்யாத படிப்பு விஷம் ஆகும்;

சபையில்  நிற்பது ஒரு ஏழைக்கு விஷம் ஆகும்;

வயதான மனிதனுக்கு இளம் பெண் விஷம் ஆகும்.

 

 

விஷம் என்பதைப் பொருந்தாது, ஏற்காது என்று பொருள் கொள்ளலாம்.

அனப்யாஸே விஷம் சாஸ்த்ரம் அஜீர்ணே போஜனம் விஷம்

திவம் ஸபா தரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

xxxx

திருப்தி வேண்டும்

ஒருவன் தனக்குக் கிடைத்த உணவு, வாய்த்த மனைவி, சம்பாத்தித்த செல்வம் மூன்றிலும் திருப்தி அடைய வேண்டும். இதற்கு நேர் மாறாக எப்போதும் திருப்தி அடையக் கூடாத மூன்று விஷயங்களும் உண்டு:-படிப்பு, தானம் செய்தல், தவம்.

 

ஸந்தோஷ த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே

த்ரிஷு சைவ ந கர்தவ்யோ அத்யயனே தப தானயோஹோ

—அத்தியாயம் 7, ஸ்லோகம் 4

பிரிட்டனில் டெலிவிஷன் பார்ப்போர் எல்லோருக்கும் பால் மக்கென்னாவைத் (Paul McKenna)  தெரியும். பெரிய மனோ வஸிய நிபுணர். (Hypnotist);  நாலு பேரை மேடைக்கு அழைப்பார்; நீ மைக்கேல் ஜாக்ஸன், நீ மடொன்னா, நீ பீட்டில்ஸ்  பாடகர் என்று ஒவ்வொருவரிடமும் ஒன்றைச் சொல்லிவிட்டு கையைச் சொடுக்குவார். அவர்கள் அடுத்த நொடியில் அவர் யார் பெயரை சொன்னாரோ அது போலவே நடிப்பர்.

 

அவரே தமிழ் நாட்டில் இருந்தால் நாலு பேரில் ஒருவரை எம்.ஜி.ஆர், ஒருவரை சிவாஜி கணேசன், ஒருவரை ரஜினிகாந்த், இன்னும் ஒருவரை கமலஹாசன் என்று சொல்லிவிட்டு ஹிப்னாடிஸம் செய்த அடுத்த நொடியில் கேள்வி கேட்டால் அந்தந்த நடிகர் போலப் பேசுவார்.

அவர் உடல் இளைக்க ஒரு சில வழிமுறைகளைச் சொன்னார்; நினைவில் உள்ளதை மட்டும் தருகிறேன்:

எந்த ஒரு உணவுப் பண்டம் கிடைத்தாலும் அதை டெலிவிஷன் பார்த்துக் கொண்டோ, பாட்டுக் கேட்டுக் கொண்டோ, புஸ்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடாதீர்கள். உணவுப் பண்டத்தைப் பாராட்டி, சீராட்டி, கொஞ்சிக் குலவிப், போற்றிப் புகழ்ந்து  அணு அணுவாக ரஸித்து, ருஸித்து, அனுபவித்து உண்ணுங்கள்.

 

இறைவன் உங்களுக்கு அதைக் கொடுத்தானே என்று எண்ணி மகிழுங்கள்.

இதுவே வயிற்றின் பசியை ஆற்றிவிடும் என்று நம்பி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள்.

 

நாளடைவில் கொஞ்சமாகச் சாப்பிடுவீர்கள்; வயிறு நிறைந்த திருப்தியும் ஏற்பட்டுவிடும்.

 

நீங்களும் பின்பற்றிப் பாருங்கள்.

 

–சுபம்—

 

 

ரொபாட்டின் கடிதம்! (Post No.4571)

Date: 1 JANUARY 2018

 

Time uploaded in London- 6-22 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4571

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

பாக்யா 29-12-17 இதழில் அறிவியல் துளிகள்  தொடரில் வெளியாகியுள்ள  ஏழாம் ஆண்டு 45வது கட்டுரை

 

நலம். நலம் அறிய ஆவல்! உங்கள் நண்பன் ரொபாட்டின் கடிதம்!

 

ச.நாகராஜன்

 

“எதிர்காலம் சீக்கிரமாக வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். ரொபாட் இல்லாத எதிர்காலத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை” – நோலான் புஷ்னெல்

 

அன்புடையீர், நலம். நலம் அறிய ஆவல்.

என்னை உங்கள் சேவைக்காகத் தகுதிச் சான்றிதழ் வழங்கி லாபரட்டரியிலிருந்து சுக பிரசவம் செய்து உலகில் அடி எடுத்து வைக்க அனுமதித்து விட்டார்கள் என்னைப் பெற்றெடுத்த விஞ்ஞானிகள்.

 

இனி உங்களின் கம்ப்யூட்டர் காலம் முடிந்தது; கைபேசியின் காலமும் முடிந்தது.

 

ரொபாட்டான என் காலம் ஆரம்பிக்கிறது.

 

கவலைப்படாதீர்கள். தொழிற்சாலைகளில் மாஸ் புரடக் ஷன் என்று சொல்கிறார்களே பெருமளவிலான உற்பத்தி – அதை நான் கண நேரத்தில் முடித்து விடுவேன்.

 

சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால் அருவறுப்பாக இருக்கிறதே என்று நீங்கள் அங்கு செல்ல மறுக்கும் தொல்லை இனி இல்லை;நான் எந்த அடைப்பையும் எடுத்து விடுவேன்.

 

அது போல வெல்டிங் பணியில் கண்கள் போய்விடுமோ என்ற பயமும் இனி தொழிலாளர்களுக்குத் தேவை இல்லை; அபாயகரமான வெல்டிங் பணியையும் முடிப்பேன். ஆழ்கடலில் பல ஆயிரம் அடி ஆழம் வரை சென்று பிரமிக்க வைக்கும் பணிகளையும் இனி நானே முடித்து விடுவேன். மூச்சுத் திணறும் மலை மீதும் ஏறுவேன்.

 

என்னை உருவாக்கும் பணி ஆரம்பித்த நாள் இன்று நேற்றல்ல; 1954இல் ஜார்ஜ் சி.டெவால் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதன் முதலாக எனது முன்னோரின் பணி ஆரம்பித்தது. அப்போது உருவான முதலாம் ரொபாட்டின் கை மட்டும் 4000 பவுண்டுகள் என்ற அளவில் கனத்தது. அப்போது அதன் விலை மலைக்க வைக்கும் தொகையான 25000 டாலர்கள்!

 

யுனிவர்ஸல் ஆடோமேஷன் என்பதைச் சுருக்கி யூனிமேஷன் என்று அப்போது பெயரிட்டார்கள் ரொபாட்டுகளின் பணிக்கு. இப்போது இன்னும் சுருக்கி யூனிமேட் என்று ஆக்கி விட்டார்கள், விஞ்ஞானிகள்!

 

இப்போது பெர்க்லியில் உள்ள ஆய்வாளர்கள் என்னைப் போன்ற ரொபாட்டுகள் எப்படி படித்து முன்னேறலாம் என்பதைக் கண்டு பிடித்து விட்டார்கள்.

 

இனி என்ன, தானே ஓட்டும் காருக்கு இந்த தொழில் நுட்பம் பெரிதும் உதவப் போகிறது.

சாலையில் எதிர்ப்படும் எந்த வித தடையையும் அல்லது வாகனத்தையும் கவனித்து கார்கள் தானாகவே இயங்கும் – ஒரு வித விபத்தும் இல்லாமல்!

 

இப்போது கலிபோர்னியாவில் தானே இயங்கும் கார் எங்களால் தான் இயங்குகிறது. 10 லட்சம் மைல்கள் சோதனை ஓட்டத்தை முடித்து விட்டோம். இனி உங்கள் பயன்பாட்டுக்கு நாங்கள் வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

 

நீங்கள் இதை மனமுவந்து வரவேற்பீர்கள் அல்லவா?

இந்த தொழில்நுட்பத்தின் பெயர் விஷுவல் ஃபோர்சைட் (Visual Foresight) எனப்படும்.

 

இதனால் என் போன்ற ரொபாட்டுகள் சில செயல்களைச் செய்து இயங்கும் போது எங்கள் காமராக்களின் மூலமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை நன்கு ஊகிக்க முடியும். அடுத்த சில விநாடிகளில் என்ன நிகழப் போகிறது என்பதைக் கணித்து விட்டால் போதுமே, அதற்குத் தக எங்கள் செயல்பாட்டை நாங்கள் மாற்றிக் கொள்வோம் இல்லையா?

இங்கு எங்களுக்கு மனிதர்களின் உதவியும் தேவை இல்லை; முந்தைய அறிவும் தேவை இல்லை. ஏனெனில் இந்த விஷுவல் இமாஜினேஷனை நாங்களே அடிப்படையிலிருந்து நன்கு கற்றுக் கொண்டு விட்டோம்.

 

முதலில் ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்ட பொருள்களுடன் விளையாட ஆரம்பித்தோம். நாளடைவில் இது மேம்பாடு அடைந்து உலகத்தையே எப்படிப் பார்ப்பது என்பதை நன்கு கற்றுக் கொண்டு விட்டோம்!

 

 

2017 டிசம்பர் 5ஆம் தேதி கலிபோர்னியாவில் லாங் பீச்சில் எங்களது டெமோ இடம் பெற்றதே, பார்த்தீர்களா?

 

டி என் ஏ மாடல் என்று சொல்கிறார்களே அதன் விரிவு டைனமிக் ந்யூரல் அட்வெக்‌ஷன் என்பதாகும். இதன் மூலம்  ரொபாட்டான எங்களின் கண்ட் ரோல் அமைப்புகள் சிக்கலான பல வித வேலைகளையும் செய்யும் திறன் கொண்டவை ஆகி விட்டன.

 

உதாரணமாகச் சொல்வது என்றால் ஒரு மேஜையின் மீது உள்ள பொருள்களை அது எந்த இடத்திற்குப் போக வேண்டுமோ அந்த இடத்திற்கு எங்களால் போகச் செய்ய முடியும்.

 

மனிதர்களாகிய நீங்களும் கூடத் தான் ஒரு வித ஆசிரியரும் இன்றி பல்லாயிரக் கணக்கான இடைவினைகளை மிகச் சுலபமாகச் செய்கிறீர்கள்.

உங்களைப் போலவே நாங்களும் இப்போது கற்றுக் கொண்டோம், அவ்வளவு தான்!

 

இனி நாங்கள் பல்வேறு துறைகளில் சாகஸ செயல்களைச் செய்து உங்களை மலைக்க வைக்கப் போகிறோம்.

 

ஆடிஸம் எனப்படும் மனநலம் குன்றிய குழந்தைகளை நன்கு கவனித்து அவர்களுக்கு எப்படிக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை அறிந்து அவர்களை மேம்படுத்தப் போகிறோம்

5000 டாலர் விலையில் எங்களை இப்போது வாங்க முடியும்.

அடுத்து எனர்ஜி எனப்படும் ஆற்றலைப் பற்றி இன்று பேசாதோரே கிடையாது

 

சோலார் எனர்ஜி எனப்படும் சூரிய சக்தியை உருவாக்க குறைந்த செலவில் இனி எங்களால் தான் முடியும். அலியான் என்ற கம்பெனி உருவாக்கியுள்ள என் சகோதர ரொபாட்டின் பெயர் ரோவர்.

 

சோலார் பேனல்களை கிடுகிடுவென்று இது அடுக்கி விடும். கடும் வெயிலிலும் இது அனாயாசமாக வேலை செய்யும். மனிதர்களாகிய உங்களால் தூக்க முடியாத பொருள்களை அனாயாசமாகத் தூக்கும்;  லீவ் போடாமல் இடைவிடாது பணி செய்யும். ஆகவே உற்பத்தி பெருகும். செலவும் குறையும்.

 

அடுத்து ஆபரேஷன்களைச் செய்ய டாக்டர்களுக்கு உதவ நாங்கள் தயாராகி விட்டோம்.

 

டக் (TUG) ரொபாட் என்று இங்கு எங்களுக்குப் பெயர். மருத்துவர்களுக்கு உதவியாக அவர்களின் தேவைக்கு ஏற்றபடி நாங்கள் உதவுவோம். ஆஸ்பத்திரிகளில் நூற்றுக் கணக்கான அறைகளில் உள்ள பெட் ஷீட்களை மாற்றுவது, கழிவுகளை அகற்றுவது, அறைகளைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட பிரம்மாண்டமான பொறுப்புகளை நாங்கள் செய்வதைக் கண்டு நோயாளிகளும் மருத்துவப் பணியாளர்களும் டாக்டர்களும் பிரமிக்கின்றனர். டாக்டர் ஒருவர் எலக்ட் ரானிக் ப்ரஸ்கிரிப்ஷனை எழுதியவுடன் அது எங்கள் பார்வைக்கு வரும். ஒடோடிச் சென்று சரியான் மருந்துகளை ஒரு நொடியில் தந்து விடுகிறோம்

 

ஆக இப்படிப் பல்வேறு வாழ்க்கை அம்சங்களிலும் உங்களுக்குச் சேவை செய்ய நாங்கள் தயார். இன்னும் எங்களுக்கு உணர்ச்சிகளைப் பற்றிச் சொல்லித் தருகிறார்கள். அதுவும் முழுமை பெற்று விட்டால் உங்களுடன் கொஞ்சிக் குலவுவோம். நீங்கள் அழுதால் நாங்களும் அழுவோம். நீங்கள் சிரித்தால் நாங்களும் சிரிப்போம். மொத்தத்தில் உங்களில் ஒருவராக நாங்கள் ஆகும் நாள் அதிக தூரத்தில் இல்லை!

 

ரொபாட் யுகம் ஆரம்பித்து விட்ட இந்தத் தருணத்தில் எங்களை வாழ்த்தி வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கடித்தத்தை முடிக்கிறேன்.

உங்கள் அன்பு ரொபாட்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

திமிங்கில ஆராய்ச்சியாளரான விஞ்ஞானி ஹான்ஸ் திவிச்சென் (Hans Thewissen) அலாஸ்காவில் உள்ள உட்கியாக்விக் (Utqiagvik) என்ற இடத்திற்கு ஆராய்ச்சிக்காகச் செல்வது வழக்கம். அமெரிக்காவில் திமிங்கிலத்தை வேட்டையாடுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. உட்கியாக்விக்கில் மட்டும் தான் திமிங்கிலத்தின் மூளையின் பகுதிகள் ஆய்வுக்காகச் சட்டபூர்வமாகப் பெறலாம்.

 

இங்குள்ள பூர்வீகப் பழங்குடியினர் திமிங்கிலத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். வசந்த காலம் மற்றும் இலையுதிர்காலத்தில் இவர்கள் திமிங்கில வேட்டைகளை நடத்துவது பழைய காலத்திலிருந்து வரும் ஒரு பழக்கம்.

 

திமிங்கிலத்தைப் பற்றிய நுட்பமான விஷயங்களை இவர்களிடமிருந்து அறிய திவிச்சென் முயன்றார். ஆனால் ஆரம்பத்தில் அவரை அண்டவே விடவில்லை பழங்குடியினர். பின்னர் மெதுவாக அவர்களின் நம்பிக்கையை அவர் சம்பாதித்தார்.

 

100 டன் எடையுள்ள திமிங்கிலத்தை வேட்டையாடுவது அவர்களுக்குச் சர்வ சாதாரணம். திமிங்கிலம் இறந்து விட்டால் அதன் பெரிய பகுதி காப்டனுக்குத் தரப்படும். நூற்றுக்கணக்கான பழங்குடியினர் ஆளுக்கு ஒரு பகுதியை எடுத்துக் கொண்ட பின்னர் கடைசியாக வெளியில் காத்திருக்கும் விஞ்ஞானி திவிச்சென்னுக்கு அழைப்பு விடப்படும். ஓடி வந்து அவர் தன் ஆய்வுக்கு வேண்டிய பகுதியை எடுத்துக் கொள்வார்.

 

சமீபத்தில் திமிங்கிலத்திற்கு முகரும் சக்தி உண்டு என்று பூர்வகுடியினரின் காப்டன் சொன்ன போது அதை திவிச்சென் நம்பவில்லை.

அவரது காம்ப் கூடாரத்திலிருந்து எழும் புகையால் அதை முகரும் திமிங்கிலங்கள் அந்தப் பக்கம் மனிதர்களின் ஆபத்து இருப்பதை அறிந்து அங்கு வருவதில்லை என்று சொன்ன காப்டன் அதை நிரூபித்தும் காட்டினார் திவிச்சென் உதவியுடன்.

 

கூடாரத்திலிருந்து புகை எழுந்தால் திமிங்கிலம் வராது. புகை இல்லை என்றால் சாதாரணமாக வரும்.

இந்த அபூர்வ விஷ்யத்தை உணர்ந்து கொண்டதில் விஞ்ஞானிக்கு ஏக மகிழ்ச்சி. முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை அங்கு சென்றவர் இப்போது அங்கேயே அடிக்கடி சென்று தங்க ஆரம்பித்து விட்டார். திமிங்கிலம் பற்றிய ஆராய்ச்சியும் முன்னேறி வருகிறது!

***

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 22 (Post 4570)

Date: 1 JANUARY 2018

 

Time uploaded in London-5-58 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4570

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 22

  பாடல்கள் 135 முதல் 136

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

 நாடக விமர்சனம்

ஒரு நாள் பாரதியார் நண்ப ரோடும்

   உட்கார்ந்து நாடகம் பார்த்திருந்தார், அங்கே

ஒரு மன்னன் விஷ மருந்தி மயக்கத்தாலே

    உயிர் வாதை அடைகின்ற சமயம், அன்னோன்

இருந்த இடந் தனிலிருந்தே எழுந்து லாவி

    “என்றனுக்கோ ஒரு வித மயக்கந் தானே

வருகுதையோ எனும் பாட்டைப் பாடலானான்?

    வாய் பதைத்துப் பாரதியார் கூறுகின்றார்,

 

மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ளுவது தானே

    வசங் கெட்ட மனிதனுக்குப் பாட்டா என்றார்

தயங்கிப் பின் சிரித்தார்கள் இருந்தோ ரெல்லாம்

    சரி தானே பாரதியார் சொன்ன வார்த்தை?

மயக்கம் வரும் மதுவருந்தி நடிக்க வந்தான்,

    மயக்க விஷம் உண்டது போல் நடிப்புக் காட்டும்

முயற்சியிலும் ஈடுபட்டான், தூங்கிவிட்டால்

    முடிவும் நன்றாயிருந்திருக்கும் சிரமும் போம்!

 

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

 

*****

 

SILENCE IS GOLDEN- CHANAKYA (Post No.4569)

Written by London Swaminathan 

 

Date: 31 DECEMBER 2017 

 

Time uploaded in London- 15-29

 

 

Post No. 4569

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

It is said that ‘Speech is sliver and silence is golden’. But Chanakya goes one step further and says that one who eats in silence will have respect in heaven for ever.

 

Loot at the following sloka-9 in Chapter 11 0f Chanakya Niti:

One who has meals for a full year in silence gets respect in heaven for a thousand crore Yugas.

Yastu samvatsaram purnam nityam maunena bhunchati

yugakotisahasram tu svargaloke mahiyate.

 

A Swiss inscription says, “Sprehfien ist silbern, Schweigen ist golden’

 

These phrases are only a few centuries old. But Indian phrases are older than these.

 

There is some logic behind eating in silence and getting great benefits. Many of the times we don’t appreciate the good things in cooking done by wives or mothers. They do it well for 90 out of 100 days. But when it s not up to the mark in the ten out of 100 days we shout at them or at least we criticise them, saying this has no salt or this has too much salt, this is very spicy, this is very oily etc. If we eat in silence this would not happen. And both the cook and the person who took the food feel contented and happy.

 

In another sloka Chanakya says,

Silent Prayer

We all know the great saint of Tiruvannamalai Sri Ramana Maharishi cleared the doubts of thousands of devotees in silence. Even people like Paul Brunton (author of Search in Secret India) acknowledged that they got answers for their questions by simply in front of him, who most of the times maintained silence.

Chanakya says,

udyoge naasti darityam japato naasti patakam

maune cha kalaho naasti naasti jagarite bhayam

 

The meaning is.th exertion there is no poverty; one who offeres silent prayer incurs no sin. In silence there is no quarrel. For one who is wide awake there is no fear.

 

This advice is also very practical. If everyone maintains silence, the world will be a better place to live in. In silence there is no quarrel.

 

One who does prayer in silence, gets more benefit. In our own time we have seen Ramana Maharishi maintaining silence and helping the devotees. Many spiritual centres have meditation halls where silent prayer is encouraged.

Chinese philosopher Confucius said,

Silence is a true friend who never betrays.

Scottish philosopher Thomas Carlyle’s quotations are very popular:-   

 

“Silence is more eloquent than words.   

Speech is great, but silence is greater.   

Speech is of time, silence is of eternity”.

 

–Subham–

 

 

 

மௌனத்தின் மஹிமை: சாணக்கியன் ஆராய்ச்சி (Post No.4568)

Written by London Swaminathan 

 

Date: 31 DECEMBER 2017 

 

Time uploaded in London- 9-32 am

 

 

Post No. 4568

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

மௌனத்தின் மஹிமை: சாணக்கியன் ஆராய்ச்சி (Post No.4568)

உணவு அருந்த போது மவுனமாக இருக்க வேண்டும் யார் சொன்னார்? உலக மஹா அறிவாளி சாணக்கியன்

 

இதன் தாத்பர்யம் நமக்கும் புரியும். உப்பு போடவில்லை அல்லது உப்பைக் கூடுதலாகப் போட்டுவிட்டாய்; ஒரே புளிப்பு, ஒரே உரைப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மனைவியையோ அம்மாவையோ, ஹோட்டல் சர்வரையோ திட்டிக் கொண்டே சாப்பிடுபவர்களைக் கண்டுள்ளோம்.

 

இதில் இரண்டு ஆபத்துகள் உண்டு:

ஒன்று நம் கோபத்தால் உடலில் ஏற்படும் நாடித் தளர்ச்சி, AFRINALIN அற்றினலின் சுரப்பு ஆகியன உடல் நலத்தைப் ,,,,,,,,,,,,திக்கும்

இரண்டாவது ஆபத்து- உணவு பரிமாறுவோரின் உள்ளக் கிளர்ச்சியும் மன வருத்தமும் நம்மைக் கட்டாயம் பாதிக்கும்.

 

இதனால் சாணக்கியன் சொல்கிறான்:–

 

யஸ்து ஸம்வத்ச்ரம் பூர்ண நித்யம் மௌனேன முஞ்சதி

யுக கோடி ஸஹஸ்ரம் து ஸ்வர்கலோகே மஹீயதே

சாணக்கிய நீதி, அத்தியாயம் 11 , ஸ்லோகம் 9

 

பொருள்

எவன் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு மௌனமாக உணவு அருந்துகிறானோ, அவனுக்கு ஆயிரம் கோடி யுகங்களுக்கு ஸ்வர்க லோகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

இது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகத் தோன்றலாம். ஆனால் இதன் உட்கருத்து மௌனமாக உண்க; மதிப்பு பெறுக – என்பதே.

 

பிராமணர்கள் தினமும் உணவை நீரினால் சுற்றி மந்திரம் சொல்லிச் சாப்பிடுவர். அதில் அந்த உணவை அமிர்தம் என்று போற்றுவர். இதனால் அவர்களின் ஆரோக்கியமும் மந்திர சக்தியும் பெருகியது.  சாப்பிட்டு முடியைந்தவுடன் ‘’அன்னதாதா சுகி பவ’’ என்று ஆஸீர்வதிப்பர்; உண்டி கொடுத்தோர் நீடுழி வாழ்க என்பது இதன் பொருள்.

 

கிறிஸ்தவர்கள் உணவை உண்ணும் முன், அதை வழங்கிய ஆண்டவனுக்கு நன்றி சொல்லிச் சாப்பிடுவர்.

 

முன்னோர்களின் சடங்குக்ள் உளவியல் ரீதியில் நற்பலன்களை விளைவிக்கும்.

 

நமது காலத்தில் மவுனத்தின் மூலம் அருள் வழங்கிய ரமண மஹரிஷியை நாம் அனைவரும் அறிவோம்.

 

மௌனப் ப்ரார்த்தனையின் மஹிமை

இன்னொரு பாட்டில் மௌனப் பிராத்தனையின் மஹிமையைச் சொல்கிறார்:

உத்யோகே நாஸ்தி தாரித்யம் ஜபதோ நாஸ்தி பாதகம்

மௌனே ச கலஹோ நாஸ்தி நாஸ்தி ஜாகரிதே பயம்

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 11

 

முயற்சி திருவினை ஆக்கும்; அங்கே வறுமை தலைக் காட்டாது.  மௌனப் பிரார்த்தனை செய்பவனுக்குப் பாபம் ஒட்டாது; மவுனமாக இருக்கும் இடத்தில் சண்டை சசச்சரவுகள் தோன்றாது; விழித்திருப்பவனுக்கு அச்சம் என்பதே கிடையாது.

நல்ல ஸ்லோகம். கோபத்தில் சுடு சொற்களைப் பொழிந்துவிட்டு எவ்வளவு கஷ்டப்படுகிறோம்! எவ்வளவு வருத்தப்படுகிறோம். அதன் விளைவுகள் எவ்வளவு பயங்கரமானவை? ஆட்சிகள் கவிழ்கின்றன; குடும்பங்கள் பிரிகின்றன. இதை எல்லாம் அறிந்தும் நாம் தவறிழைக்கிறோம்!

 

பிரார்த்தனையில் சிறந்தது மௌனப் பிரார்த்தனை. அதற்கு பன் மடங்கு சக்தி அதிகம். முதலில் உரத்த குரலில் சொல்லிப் பழகிவிட்டால் பின்னர் மௌனப் பிரார்த்தனை எளிதாகும்.ஜபம் என்பதே மௌனமாகப் பிரார்த்திப்பதே!

 

 

My old articles on Silence and Prayer.

 

ஜோதி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஜோதி/

Translate this page

… மௌனம் அனுஷ்டிக்கிறார்களாம்! ஏனெனில் வாயைத் திறந்தால் சொல் குற்றம் வந்து விடுமோ என்று! யூத மதத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சொற்களை ஜாக்கிரதையாகப் பிரயோகம் செய் என்றே கூறுகிறது. அதிலும் பிரார்த்தனைபுரிவதில் சொல்லுக்குள்ளே ஜோதியைக் …

பிரார்த்தனை, செய்வது எப்படி? – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/பிரார்த்தனை-செய்…

Translate this page

எனக்குச் செல்வம் வேண்டும்; நான் புகழ் பெற வேண்டும்; எனக்கு அதிகாரம் வேண்டும்; நான் அமைச்சராக வேண்டும், எனக்கு பிள்ளை பிறக்க வேண்டும், எனக்கு நோய் நீங்க வேண்டும் என்றெல்லாம் பலரும் கோவில் உள்ளிட்டபிரார்த்தனை ஸ்தலங்களில் பிரார்த்தனை புரிவதை …

Missing: மௌனப்

நீண்ட ஆயுளுக்கு வேதப் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/நீண்ட-ஆயுளுக்கு-…

Translate this page

நீண்ட ஆயுளுக்கு வேதப் பிரார்த்தனை! (Post No.4206). Written by London Swaminathan. Date: 12 September 2017. Time uploaded in London- 17-35. Post No. 4206. Pictures are taken from various sources; thanks. வேத கால நிஷிகள் என்ன வேண்டினர் என்று ஒரு கட்டுரையில் கண்டோம். உலகின் பழமையான நூலில் மனிதனின் ஆயுள் 100 ஆண்டு …

 

 

–SUBHAM–

பிள்ளைமார் வாழ்க! (Post No.4567)

Picture of Meenakshi sundaram pillai from wikipedia

 

Date: 31  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-38 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4567

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தேசம், தெய்வம், தமிழ் போற்றிய உத்தமர்கள்

 

பிள்ளைமார் வாழ்க!

 

ச.நாகராஜன்

 

1

இந்தக் கட்டுரையின் தலைப்பில் ஒரு குறை இருக்கிறது. அதை இந்தக் கட்டுரையின் கடைசி வரியில் நிவர்த்தி செய்து விடுகிறேன்.

 

ஜாதிப் பேரைச் சொல்லலாமா என்று சிலர் ஆதங்கப்படலாம்.

அட, தமிழுக்கும், ஹிந்து மதத்திற்குகும் தேசத்திற்கும் தொண்டு இழைத்தவர்களைப் பாராட்ட ஜாதிப் பெயரைச் சொல்வதில் என்ன ஐயா, தவறு?

 

பிள்ளைமார் சமூகத்தை எடுத்துக் கொண்டால் அது ஆற்றிய பெரும் சேவையை பெருங் களஞ்சியமாக அல்லவா தொகுக்க வேண்டியிருக்கும்!

 

இருந்தாலும் ஒரு சில பெயர்களையாவது நினைத்துப் பார்க்கலாமே!

தமிழன் எப்போதும் நன்றி மறக்கமாட்டான், இல்லையா?

 

2

 

உலகில் சமீப கால வரலாற்றில் முறைப்படுத்தப்பட்ட ஆவணம் நிருபிக்கும் உத்தம அவதார புருஷர் வடலூர் வள்ளலார் என்று மிக்க பக்தியுடன் அழைக்கப்படும் வடலூர் இராமலிங்கம் பிள்ளை! (தோற்றம் 18-12-1822 ஒளி உருவமாக மறைந்த தேதி 5-12-1879) அவர்களின் அருட்பா பற்றி அறிமுகமே வேண்டாம். கொல்லாமையையும் அனைவருக்கும் அன்ன தானத்தையும் வலியுறுத்திய மகான் ஒளி உருவமாக மறைந்தார்.

அவரது பெருமையை முழுதுமாகச் சொல்ல முடியுமா, என்ன?

 

3

தமிழ் இலக்கியத்திற்கு மகத்தான சேவை செய்த ஏராளமானோரில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர்கள் உள்ளனர்.

 

சமீப காலத்தில் வாழ்ந்த மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களை மறந்தோம் என்றால் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே லாயக்கில்லை என்பது உண்மை.

இவரது பெருமையை இவரது அற்புதமான சீடர் மஹாமஹோபாத்யாய உ.வே. சாமிநாதையர் விரிவாக எழுதியிருக்கிறார். (இரண்டு தொகுதிகள் உள்ள நூல்)

ஐயர், பிள்ளை என்ற ஜாதி பேதம் அங்கு இல்லை. தமிழால் பிணைக்கப்பட்டனர் இருவரும். தனது குருவின் பெருமையை இறுதி வரை ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார் ஐயர் அவர்கள்.

 

பின்னாளில் வந்த பிசாசுகளே ஜாதி வேற்றுமையை எங்கும் கிளப்பி அது இன்று பெரிய பூதமாக மாறி நம்மை அழித்து வருகிறது.

 

மகா வித்துவான்  (தோற்றம் 6-4-1815 மறைவு 1-2-1876) சுமார் ஒரு லட்சம் பாடல்களைப் பாடியுள்ளார்.

 

ஒரு லட்சம் பாடல்கள்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தமிழ் இலக்கணத்தின் அனைத்து அம்சங்களையும் சுட்டிக் காட்டி இறை புகழ் வெளிப்படுத்தும் ஒரு லட்சம் என்ற பிரம்மாண்டமான எண்ணிக்கை கொண்ட பாடல்களை அவர் யாத்துள்ளார்.

 

95க்கும் மேற்பட்ட புராணங்கள், இதர இலக்கியங்கள்!!

தமிழுக்குப் பெருமை! தமிழருக்குப் பெருமை!! பொதுவான இலக்கிய உலகிற்கே உலகளாவிய அளவில் பெருமை.

 

பிள்ளைமார்களுக்கும் பெருமை (ஆனால் சரியான விதத்தில் அவரைக் கொண்டாடாமல் விட்டு விட்டார்களோ!)

கவிச் சக்கரவர்த்தி கம்பன் பத்தாயிரம் பாடல்களைப் புனைந்து கவி சிகரத்தில் ஏறினான்.

 

ஆனால் மகா வித்துவானோ ஒரு லட்சம் பாடல்களைப் புனைந்துள்ளதால் அவரை “பத்துக் கம்பன்” என்று அழைக்கிறார்கள்.

இவரை என்ன சொல்லிப் புகழ? என்ன பட்டம் தந்தாலும் அது சற்று சிறிதாகத் தானே இருக்கும்!

 

4

அடுத்து இசையும் தெய்வமும் தமிழருக்கு ஒன்றே!

இசை உலகில் மிக பிரம்மாண்டமான அரிய சாதனை புரிந்த ஒரு சக்கரவர்த்தி இருக்கிறார்.

 

அவர் தான் நாதசுர சக்கரவர்த்தி!

திருவாவடு துறை ராஜரத்தினம் பிள்ளை!

டி. என். ராஜரத்தினம் பிள்ளை ( தோற்றம் 27-8-1898 மறைவு 12-12-1956) அவர்களின் பெருமையை முற்றிலும் எழுத்தில் வடிக்க முடியுமா?

 

என் தந்தையார் (தினமணி வெ.சந்தானம் அவர்கள்) அவரைப் பற்றிக் கூறுகையில், “அவர் ஒரு இடத்தில் வாசிக்க வரப் போகிறார் என்றால் முன் கூட்டியே (தஞ்சை ஜில்லாவில்) அனைத்து கிராம மக்களுக்கும் தெரிந்து விடும். நடந்தும், வண்டி கட்டிக் கொண்டும் அலை அலையாக மக்கள் வருவர். பல மைல்களுக்கு அப்பால் வரும் போதே நாதசுரத்தின் சுநாதம் அனைவரையும் மயக்கும். மயங்கி நிற்போம்” என்று கூறினார்.

(இந்த சந்தர்ப்பத்தில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களும் அவரது மாப்பிள்ளை மௌனகுருசாமி அவர்களும் என் தந்தையார் மீது வைத்திருந்த மதிப்பையும் மரியாதையையும். பற்றையும், பாசத்தையும் இங்கு நன்றியுடன் நினைவு கூர்கிறேன்)

பெரிய புத்தகமாக எழுத வேண்டிய நாதசுர சக்ரவர்த்தியின் வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதியை இங்கு சுட்டிக் காட்ட விழைகிறேன்.

 

இதை எழுதியவர் நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன்.

கலைமகள் 1994ஆம் ஆண்டு தீபாவளி மலரில், “சுத்த மத்யமம் உத்தம மத்யமம் ஆனது எப்படி?” என்ற கட்டுரையில் வரும் ஒரு பகுதியே இது:

இன்றைய நிலையில் இந்த நாகசுர வாத்தியத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் அவர் என்று சொல்லலாம்!

 

முன்பெல்லாம் – அதாவது திருவாவடுதுறையார் ஒழுங்கு பண்ணுவதற்கு முன்பாக, நாகசுரத்தில் சுத்த மத்யமம் பேசாது. வாசிப்பில் அது சுத்த மத்யமாகவும் இல்லாமல், பிரதி மத்யமாகவும் இல்லாமல், இரண்டிலும் சேராத – இரண்டுக்கும் இடைப்பட்டதாக – இரண்டும் கெட்டானாக, ஒன்று ஒலிக்கும்.

அதை எப்படி அழைப்பது? வித்வான் அதைச் செல்லமாக, செல்ல மத்யமம் என்று அழைத்தார்கள்!

 

ஆனால் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையவர்கள் நாகசுரத்தில் சுத்த மத்யம் சுகமாகப் பேசும். அது எப்படி? அது தான் பிள்ளையவர்கள் வாசிப்பில் மட்டுமல்லாது – வாத்தியத்திலும் செய்த புதுமை!

 

பிள்ளையவர்கள் என்ன செய்தார் தெரியுமா? நாகசுரம் தயார் செய்யும் ஆச்சாரியார் ஒருவரைத் தம்முடன் வைத்துக் கொண்டார். தம் கையில் ஒரு நாகசுரத்தை எடுத்துக் கொண்டார்.

 

துளைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிப் போட்டுக் கொண்டே வந்தார். அவ்வப்போது அதில் வாசித்துப் பார்த்தார். ஒரு சின்னக் குழாய் மாதிரி செய்து நாகசுரத்தோடு பிட் அப் செய்து கொண்டார். வாசித்தார்; பல மாதங்கள், பல நாகசுரங்களை இப்படித் துளையிட்டு வாசித்து அசுர சாதனை செய்தார். முயற்சி வீண் போகவில்லை.

 

ஒரு நாள் சோதனையில் சுத்த மத்யமம். உண்மையிலேயே சுத்தமயமாக, உத்தமமாக வாசித்தது. பிள்ளையவர்களுக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. அந்த நாகசுரத்தையே வாசிப்புக்கு ஏற்ற நாகசுரமாக்கினார். வாசித்தார். வாழ்நாள் முழுதும் – இசையை உபாசித்தார்; நாதோபாசனை புரிந்தார்.

இன்று நாகசுர வித்வான்களுக்கு எல்லாம் அருமையான நாகசுரம் கிடைத்திருக்கிறது, அற்புதமாக வாசிக்கிறார்கள் என்றால், அது திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் கருணைக் கொடை என்று தான் சொல்ல வேண்டும்.

 

*

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எப்படிப்பட்ட இசை மேதையின் கடின உழைப்பையும் நாத உபாசனையையும் சுட்டிக் காட்டி விட்டார்!

 

 

5

கட்டுரை நீண்டு கொண்டே போகிறது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தில் மிகச் சிறிய அளவே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே, கட்டுரையின் அடுத்த பகுதியையும் எழுத வேண்டியது தான்!

 

அது சரி, கட்டுரை தலைப்பில் உள்ள தவறை நிவர்த்தி செய்கிறேன் என்றீர்களே, அதை செய்வீர்களா என்று கேட்கிறீர்களா.

 

‘இந்தக் கட்டுரையின் கடைசி வரி’ என்று எழுதி விட்டேன், அல்லவா, அதைச் செய்து தான் ஆகவேண்டும்.

காலக்ஸி போன்ற பிள்ளைமார்கள் நிரம்பி இருக்க அவர் தம் பெருமையை ஒரு கட்டுரையில் அடக்க முடியவில்லை.

தலைப்பில் பிள்ளைமார் வாழ்க என்று எழுதியதில் ஒரு வாழ்க

தான் இருக்கிறது. ஒரு வாழ்க எங்காவது போதுமா?

வாழ்க, வாழ்க, வாழ்க…. என்று அல்லவா எழுதி இருக்க வேண்டும்! இப்போது நிவர்த்தி செய்து விட்டேன், தவறை! பிள்ளைமார் வாழ்க, வாழ்க, வாழ்க…!!!

 

***         (அடுத்த கட்டுரை தொடரும்)

 

பாரதி போற்றி ஆயிரம் – 21(POST NO.4566)

Date: 31  DECEMBER 2017

 

Time uploaded in London-6-25 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4566

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 21

  பாடல்கள் 132 முதல் 134

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்

பாடல்கள் 132,133

பாரதி ஜயந்தி மலர்

 

ஆரியத்தில் செந்தமிழில் ஆங்கி லத்தில்

              அரியபல நூல்கள் ஆய்ந்து கற்ற

பேரறிஞர் எழுதுமெழுத் தோவி யங்கள்

       பெற்றபெரும் செல்வமெனப் பேணுமிந்தப்

 

           பாரதி ஜயந்தி மலரின் வாசம்

              பாரெங்கும் பரவிநிதம் பரிம ளிக்கச்

சீருயரும் காளிகட்டப் பதியில் வாழும்

              தேவிபரா சத்திபதம் சேவிப் போமே

(கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் 1949)

 

பாடல் 134

பாரதி மண்டபம்

 

இராகம் – வஸந்தா        தாளம் – ஆதி

 

பல்லவி

மண்டபம் வாழ்கவே! – பாரதி

               மண்டபம் வாழ்கவே!           (மண்டபம்)

 

அநுபல்லவி

             தண்டமிழ் போல அவன்

                 தந்த கவிகள் போல

             எண்டிசையும் போற்றும்

                 இமைய மலையே போல    (மண்டபம்)

 

சரணம்

             பாரத சக்தி வளர் – பீடமாய்

                 பைந்தமிழ்க் காலயமாய்

             வீரசுதந்தி ரத்தின்

                 வெற்றி நிலைக் களமாய்

             சூரிய சந்திரர் இந்தத்

                 தொல்லுல குள்ளளவும்      (மண்டபம்)

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****