74 வருடங்களாக ஒரு பூச்சியின் தொல்லை தாங்க முடியாமல் அவஸ்தை பட்ட இந்தியாவை மோடிஜி காப்பாற்ற நினைத்தார்.
காப்பாற்றி விட்டார்.
முப்பது நிமிடத்தில் மூட்டையைக் கட்டு என்று சொல்லி விட்டார் அதிரடியாக!
என்ன விஷயம்?
யுனைடெட் நேஷன்ஸ் மிலிடரி அப்ஸர்வர் க்ரூப் (UNITED NATIONS MILITARY OBSERVER GROUP) என்று ஒரு குழு.
1948லிருந்து இந்தக் குழு இந்தியாவில் இயங்கி வந்தது.
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் என்ன அணுகுமுறையை மேற்கொள்கிறது என்பதைக் கண்காணிப்பதே இதன் வேலை. பூச்சி கடிப்பது போல இது இந்தியாவைக் கடித்துக் கொண்டே இருந்தது.
இந்தக் குழுவில் இருக்கும் அனைவருக்கும் சம்பளம், இருப்பிடம், அலவன்ஸ் – இவை அனைத்தும் இந்தியாவின் செலவு. இவர்கள் பொழுதுபோக்கு, சாப்பாடு, பயணம், ஆட்டம், பாட்டம் எல்லாம் இந்திய மக்களின் வரிப்பணத்தில்.
ஆனால் இதன் அறிக்கைகளோ தவறாமல் இந்தியாவிற்கு எதிராக இருக்கும்!
காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கான இரு தரப்பு பிரச்சினை இல்லை என்பது இதன் வாதம். இது முத்தரப்பு பிரச்சினையாம்!
அதாவது காஷ்மீர், பாகிஸ்தான், இந்தக் குழு ஆகிய மூன்று தரப்பினருக்குமான பிரச்சினையாம் காஷ்மீர் பிரச்சினை. இதற்கும் இந்தியாவிற்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம்?!
இதை இங்கு அமர்த்திய பெரியவர் யார் தெரியுமா?
ஜவஹர்லால் நேரு.
74 வருடங்களாக இது செய்த வந்த அட்டகாசத்தை மோடி பார்த்தார்; ஒரு வழி செய்தார்.
இன்னும் முப்பதே நிமிடங்களில் மூட்டையைக் கட்டுங்கள்; நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று அதிரடி உத்தரவு போட்டார்.
அவர்களுடைய விசா, தங்குமிடம் அனைத்தையும் ரத்து செய்தார் அவர்.
பத்து நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவையும் போட்டார்.
40 பேர்கள் இந்தக் குழு முழித்தது.
இந்த பிரிட்டிஷ் குழு ஒரு வழியாக நாட்டை விட்டு வெளியேறியவுடன் மொத்த இந்தியாவும் நிஜமாக பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றது என்று சொல்லலாம்.
இந்தச் செயலில் பெரிய பங்கு வகித்தவர் வெளியுறவு மந்திரி திரு எஸ்.ஜெய்சங்கர்.
இந்தக் குழுவின் ஆதங்கம் என்ன தெரியுமா?
“இந்தியா எங்களுக்குக் கொடுக்கும் தொகை போதாது; எங்கள் அலவன்ஸை இந்தியா அதிகரிக்க வேண்டும்” என்றது இந்தக் குழு!
வைக்கப்பட்டது ஆப்பு!
மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டிய செய்தி இது.
அனைவருக்கும் சொல்வோம்; மகிழ்வோம்!
***
முக்கிய குறிப்பு : இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்தே இந்தக் குழு வெளியேற்றப்படும் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் செப்டம்பர் 26, 2023 அன்று இந்தக் குழு மூட்டை கட்டப்பட்டு விட்டதாக இணையதள பதிவுகள் கூறுகின்றன. பெரிய அளவில் பேசப்பட வேண்டிய இந்த விஷயத்தை இந்திய பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லையா அல்லது இந்தக் குழு இன்னும் அகற்றப்படவில்லையா? பொறுத்திருந்து இன்னும் செய்தித்தாள்களைக் கவனிப்போம்.
Source : Net
Please read the original given underneath:
*New India under Modi Regime kicking out the UNMOG in another 10 days
74 years = 30 minutes
What’s UN M O G
India was suffering from a bug for the last 74 years,
Whose name is… *United Nations Military Observer Group*.
Now Modi government has abolished it.
Our Foreign Minister S Jaishankar played a very important role in this.
In just 30 minutes, this entire committee was ordered to leave India within the next ten days!
India has shown the way out of India to the UN Military Observer Group, a committee of the United Nations!
This committee was working in India since 1948 and was keeping a close watch on the attitude of India and Pakistan, especially India itself, on the Kashmir issue.
India was bearing all the expenses of working, traveling, living, eating, getting up and down!
This committee had given very strong statements against India.
It tried to declare Kashmir a trilateral issue rather than a bilateral one and also made serious allegations against India such as *”India is obstructing the work of the United Nations Military Observer Group between us, India and Pakistan so that the committee does not function properly.”*
The committee did not stop here… It further said “The amount that India gives us does not cover our expenses.
So India will have to increase our allowances and expenses and India will have to pay for it!”
It so happened that the dog we had kept was eating ours and was barking at us and had even started biting.
On this the Government of India only said to the Committee : “We have suffered a lot because of your drama. Now you leave from here immediately”. “There is no place left for you in India!”
In just 30 minutes, the Modi Govt. cancelled their visa/s and asked them to leave India and go to their country/ies immediately /
within the next 10 days!!!
For the last 74 years, India has been home to more than 40 of these people and
was bearing their expenses.
Now they have been exiled!
And you know who brought them 74 years ago…?
Brother-in-law of Congressmen *”Jawahar Lal Nehru”!*
*99% of the public would not even know that a British team was ruling India till today because of these Congressmen*.
Today Modi ji has done the work of uprooting the last pillar of the British from India.
40. An impoverished man desires a handful of grains. When he is affluent, he considers the world as equal to just a blade of grass. Hence, due to the variability of worth or triviality of things, (we can say that) it is one’s position that enhances or reduces (the value of) objects.
ஏழையாய் இருப்போனுக்கு ஒரு சில தானிய மணிகள் கிடைத்தால் மகிழ்ச்சி; ஆனால் அவனுக்கே நிறைய செல்வம் கிடைத்து கோடீஸ்வரன் ஆகிவிட்டாலோ உலகத்தையே ஒரு சிறு புல் என மதிப்பான். ஆக செல்வத்தின் தன்மை நிலையற்றது. ஒருவனுடைய சூழ்நிலையைப் பொறுத்தே அதன் முக்கியத்துவம் உள்ளது– பர்த்ருஹரி நீதி சதகம் , ஸ்லோகம் 40
பரிக்ஷீணஹ கஸ்சித் ப்ருஹயதி யவானாம் ப்ரஸ்ருதயே
ஸ பஸ்சாத் ஸம்பூர்ணஹ கலயதி தரித்ரீம் த்ருண சமம்
அதஸ்சானே காந்தா குருலகுதயார்தேஷு தனினா
மவஸ்தா வஸ்தூனி ப்ரதயதி ச ஸங்கோசயதி ச- 40
இது செல்வம் வந்துவிட்டால் ஒருவன் தலைகால் புரியாமல் திரிவான் என்பதைக் காட்டும்.
பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணு ஸர்மன் இதை இன்னும் அழகாக வருணிப்பான். முதலில் சோர்ந்து கிடந்த எலிகள், வயிறு கொழுக்கச் சாப்பிட்டவுடன் எகிரிக் குதிக்க ஆரம்பிக்கும் இதுவே செல்வம் வந்தவர்களின் நிலையும் என்பது விளங்கும்.
xxxx
SLOKA 41
राजन्दुधुक्षसि यदि क्षितिधेनुम् एतां
तेनाद्य वत्सम् इव लोकम् अमुं पुषाण
तस्मिंश्च सम्यगनिशं परिपोष्यमाणे
नानाफलैः फलति कल्पलतेव भूमिः ॥ 1.41 ॥
41. O King, if you wish to milk the cow that is this earth, nourish now the people of the world, like a calf. When the calf is well-cared, the earth yields all fruits, like the desire-granting creeper.
காசினியாங் காராம்பசுப்பால் கறப்பதெனின்
மாசிலா வேந்தனே ஆண் கன்றை — நேசமுடன்
உண்பிப்பதுபோல் உலகளிக்க கற்பகம்போல்
மண்மா துநக்களிப்பால் வாழ்வு
வரி விதிப்பது எப்படி?
ஓ அரசனே! இந்தப் பூமி என்னும் பசுவிடம் இருந்து பால் கறக்க விரும்பினால், முதலில் கன்றுகள் என்னும் மக்களுக்கு உணவளித்துப் பாதுகாக்க வேண்டும். உனது மக்களை அன்புடனும் பரிவுடனும் போற்றிப் பாதுகாத்தால், பூமியானது கற்பக மரம் போல வேண்டியதை எல்லாம் உனக்கு அளிக்கும்.–41
காளிதாசனும் கூட இதை வேறு விதமாகச் சொல்லுவான். ஆயிரம் கிரனணங்களால் கடல் நீரை சூரியன் உறிஞ்சுவது எதற்காகத் தெரியுமா? அதை மழை போல பூமியில் கொட்டதான் என்பான். ஆக அரசனுடைய வரிவிதிப்பு மக்களுக்காகவே!
வரி விதிப்பது பற்றி சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. அது உலகின் முதலாவது பொருளாதார நூல். ஆகையால் அதில் வியப்பேதும் இல்லை ஆனால் வள்ளுவன், காளிதாசன், மனு முதலானோர் பொருளாதார விடயங்களை எழுத வரவில்லை. ஆயினும் அவர்களும் இவ்விஷயத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர்.
அட்டை போல உறிஞ்சு!
மனுவின் வரிவிதிப்பு அணுகுமுறையும் சிறிது வேறுபட்டது.
ஒரு அரசனானவன், அட்டை போல, கன்றுக்குட்டி போல, தேனீ போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆண்டுக்கான வட்டியைப் பெறவேண்டும்.(7-129)
அட்டை போல (இரத்தத்தை) உறிஞ்சு என்று சொல்லுவது அவ்வளவு நன்றாக இல்லையே என்று எண்ணலாம். ஆனால் இது பணக்காரர் விஷயத்தில் பொருந்தும். நான் வாழும் லண்டனில் கூட அதிக பணம் சம்பாதிப்போரின் பணத்தில் 60 சதவிகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். இது என்னடா பகற்கொள்ளை? என்று எண்ணுவோம். ஆயினும் கம்பெனிகள் வாரி வழங்குவதால் இந்தக் கட்டுப்பாடு.
அட்டை என்னும் பூச்சி இரத்தத்தை உறிஞ்சியதாலோ, கன்றுக்குட்டி பால் குடித்ததாலோ, தேனீக்கள் தேன் எடுத்ததாலோ எந்தப் பிராணியும் எந்தப் பூவும் அழிவதில்லை.
பணக்கார்களுக்கு அட்டை போலவும், மத்திய தர வர்கத்துக்கு கன்று போலவும் ஏழைகளுக்கு தேனீ போலவும் வரி விதிப்புக் கொள்கை இருக்கட்டும் என்று மனு சொல்லாமல் சொல்லுவான்.
வள்ளுவன் சொல்லுவான்:
அதிக வரி விதிப்பது பாலைவனத்தில் கள்ளர்கள் வழிமறித்து எடுக்கும் பகற்கொள்ளைக்கு நேர் நிகர் என்று.
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு (குறள் 552)
பொருள்:- ஒரு அரசன் குடிமக்களை வருத்தி கட்டாயப்படுத்தி வரி வாங்குவது, வேல் ஏந்திய வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழி மறித்து பொருளைப் பறிப்பதற்குச் சமம்.
காளிதாசன், அவனது ரகுவம்ச காவியத்தில் சொல்லுவான்:-
ப்ரஜானாமேவ பூத்யர்த்தம்
சதாப்யோ பலிமக்ரஹீத்
சஹஸ்ர குணமுத்ஸ்ரஷ்டும்
ஆதத்தே ஹி ரசம் ரவி: (ரகு 1-18)
சூரியன் தன் ஆயிரம் கிரணங்களால் பல வகையான இடங்களிலிருந்து நீரை எடுக்கிறான். நீரை எடுக்கும் போது நீர் நிலைக்குத் தீங்கு செய்வதில்லை. எடுத்த நீரை மழையாக திருப்பித் தரும்போது பயிர்களும் உயிர்களும் செழிக்கின்றன. மழை எந்த வேறுபாடுமின்றி எல்லோருக்கும் உதவுவது போல அரசனும் உதவுவான்.
இந்துமத நுல்களில் நாடும் பூமியும் பசுவுடன் ஒப்பிடப்படுகிறது. பசு பால் தருவது போல பூமியும் வற்றாது வளம் கொழிக்கும்.
Xxxx
SLOKA 42
सत्यानृता च परुषा प्रियवादिनी च
हिंस्रा दयालुरपि चार्थपरा वदान्या ।
नित्यव्यया प्रचुरनित्यधनागमा च
वाराङ्गनेव नृपनीतिरनेकरूपा ॥ 1.42 ॥
42. Now true, now false, sometimes harsh, sometimes pleasing, hurtful and merciful at different times, greedy and generous by turns, always spending and accumulating lots of wealth – the policy of kings, like a courtesan, has many forms.
சில்லிடத்து மன்னீதி சீராருஞ் சத்தியமாய்ச்
சிலிடத்து சத்தியம் சேர்ந்ததாய்ச்- சில்லிடத்தில்
காதுக்கினியதாய் கடினமாய்ச் சில்லிடத்தில்
ஓது நிஷ் டூரமாய் ஓரிடத்தில் — தீதில்
கருணையாய் ஓரிடத்தில் காதல் பொருள்மேல்
மருவுவதாய் ஓரிடத்தில் மற்றும் – ஒருபால்
பொருட்செலவு செய்வதாய் ப் பூண்டொ ருபால் செய்வித்
திருப்பதாய் ஓரிடத்தில் செல்வம் —பெருக்குவதாய்ப்
பற்பல நாலாறா னோர் பாலாறா மாறுபோல்
நிற்பதால் என்றுணர்க நீ
xxxxx
அரசனும் விலை மாதும்
ஒரு அரசன் விலை மாதர் போன்றவன் என்று பர்த்ருஹரி சொல்லுவான். இக்கருத்து சங்க இலக்கிய நூலான புற நானூற்றிலும் (365) உள்ளது.
ஸத்யான்ருதா ச பருஷா ப்ரியவாதினீ ச
ஹிம்ஸ்ரா தயாலுஅபி சார்த்தபரா வதான்யா
நித்யவ்யயா ப்ரசுரனித்யதனாகமா ச
வாராங்கனேவ ந்ருபனீதிரனேகரூபா -42
ஒரு அரசனுடைய வாழ்வு ஒரு விபசாரியைப் போல பல உருவங்களை எடுக்கும். அவன் பொய்யும் பேசுவான்; மெய்யும் உரைப்பான். அவன் சுடு சொற்களும் பெய்வான்; இனிய சொல்லும் அருள்வான். கருணையுடன் இருப்பான்;சில நேரங்களில் கொடுங்கோலனாகக் காட்சி தருவான். அவன் கொடயாளியாகவும் இருப்பான்; கருமியாகச் செல்வத்தையும் சேர்ப்பான். சில நேரங்களில் பணத்தை விரயமும் செய்வான்- ஸ்லோகம் 42
இதை அடுத்த ஸ்லோகத்தில் என்ன சொல்கிறான் என்று பார்த்து ஒப்பிட வேண்டும். ஒருவனுடைய போக்கு எப்படியும் இருக்கலாம். அவனுடைய அப்போதைய மனநிலையே இதற்குக் காரணம் என்றும் கொள்ளலாம் அல்லது அரசனானவன் இப்படி எல்லாம் இருக்கும் நிர்பந்தம் உண்டு என்றும் கருதலாம். ஆனால் அடுத்த ஸ்லோகத்தில் ஆறு நல்ல குணங்களைப் பட்டியலிட்டு விடுகிறான். ஆகையால் பர்த்ருஹரியின் கொள்கை நமக்குத் தெளிவாகி விடுகிறது.
xxxx
SLOKA 43
आज्ञा कीर्तिः पालनं ब्राह्मणानां
दानं भोगो मित्रसंरक्षणं च
येषाम् एते षड्गुणा न प्रवृत्ताः
कोஉर्थस्तेषां पार्थिवोपाश्रयेण ॥ 1.43 ॥
ஆக்ஞா கீர்த்திஹி பாலனம் ப்ராஹ்மணானாம்
தானம் போகோ மித்ரஸம்ரக்ஷனாம் ச
யேஷாமேதே ஷட்குணா நப்ரவ்ருத்தாஹா
கோஅர்த்தச்தேஷாம் பார்த்திவோபாஸ்ரயேண- 43
பொருள்
ஒரு அரசனுக்கு கீழ்க் கண்ட ஆறு குணங்கள் இல்லாவிடில் அந்த அரசனின் கீழ் வாழ்வதில் அர்த்தமே இல்லை; அரசனுக்குத் தேவையான ஆறு குணங்கள்– ஆணை இடும் அதிகார தோரணை, புகழ், பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்கல், நண்பர்களைக் காப்பாற்றுதல், தானம், அதே நேரத்தில் இன்பமான வாழ்வு– 43
43. What is the use of seeking sanctuary with kings, to those who do not cultivate these six qualitites : power to command, fame, the nurturance of Brahmanas, charity, gratification and the protection of friends.
அருந்தண்டம் நற்கீர்த்தி அந்தணரைக் காத்தல்
பெருந்தானாம் போகம் பிரியம் –மருவுமொரு
நட்பா தர வாறு நற்குணமில்லா அரசன்
கட் சேவை செய்தென்ன காண் –43
வள்ளுவனும் இவைகளைச் சொல்லுகிறான்.
அரசனுடைய நீதி வழுவினால், பசுக்கள் பால் தராது; பிராமணர்களுக்கு வேதம் மறந்துவிடும் என்பான். இதன் பொருள்
கோ ப்ராஹ்மணேப்ய ரக்ஷதி (பசுவையும் பார்ப்பனர்களையும் போற்றுவதே நல்லாட்சியின் சின்னங்கள்)- குறள் 560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் -560
ஆக பாரதீய சிந்தனை இமயம் முதல் குமரி வரைஒன்றே!
—-subham—-
tags-வரி விதிப்பது, விலை மாது, நீதி சதகம் ,Bhartruhari, Nitisataka , in Tamil, in Hindi, Part 14, பர்த்ருஹரி ,ஸ்லோகங்கள் 40,41,42, 43
ராவணன் பிறப்பால் 50 % பிராமணன். குணத்தால் 100 % ராக்ஷஸன்; பிராமணனைக் கொன்றதால் ராமனை பிரம்மஹத்தி பாபம் பீடித்ததால் ராமபிரான் ராமேஸ்வரம் உள்பட 4 இடங்களில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதை எல்லோரும் அறிவார்கள் . ராவணனின் தாயார் ராக்ஷஸி; தந்தை பிராமணன்; இதனால் ராவணன் சிவ பூஜை, சந்தியாவந்தனம் ஆகியவற்றில் குறை வைக்கவில்லை. அவன் சிவனிடமிருந்து ஆத்ம லிங்கத்தைப் பெற்றும் அதை நினைத்த இடத்துக்குக் கொண்டுபோக இயலவில்லை; காலைக் கடன்களுக்காக வு ம் , சந்தியா வந்தனத்துக்காகவும் அவன் சிவலிங்ககத்தைக் கீழே வைத்தவுடன் அது அங்கேயே நிறுவப்பட்டது . ராவணன் , இவ்வாறு சந்தியா வந்தனம் செய்த பல குறிப்புகள் ராமாயணத்தில் உள்ளன.
ஆத்மலிங்கத்தை அவன் கொண்டுபோகக்கூடாது என்பதற்காக விஷ்ணு பகவானும் தந்திரம் செய்தார். திடீரென்று மேகங்களை உண்டாக்கி மாலைப்பொழுது போல ஆகாயத்தை மாற்றினார். மாலை சந்தியாவந்தன நேரம் வந்துவிட்டதென்று மயங்கிய ராவணன் , அங்கிருந்த இடைச் சிறுவன் ஒருவனிடம் சிவலிங்கத்தைக் கொடுத்து , டேய் பையா ! கீழே வைத்துவிடாதே ! இதோ சந்தியா வந்தனம் செய்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப்போன ராவணன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இடையனும் லிங்கத்தைக் கீழே வைத்துவிட்டுக் காத்திருந்தான் ; லிங்கத்தைக் கொடுத்த சிவ பிரான் ஒரு கண்டிஷன்/ CONDITION நிபந்தனை விதித்தித்திருந்தார் ; எங்கேயாவது கீழே வைத்தால் அதை எடுக்க முடியாதென்றார். இதை நினைத்த ராவணனுக்கு கோபம் வந்து இடைச் சிறுவனை அடித்தார்; அவன் விநாயகர் ரூபத்தில் தோன்றி, மகனே நீ இங்கேயே பூஜை செய் என்னு சொல்லிவிட்டுப் போனார். ராவணனுக்கு சிவ பெருமானின் லீலைகள் புரிந்தன.
5. குரங்கு அரசன் வாலி சந்தியா வந்தனம்
வாலி, சுக்ரீவன், அனுமன் ஆகியோர் குரங்கு அடையாளம் அணியும் பழங்குடி மக்கள்; நாம் தற்காலத்தில் உடலில் பச்சை குத்திக்கொள்வது போலவும், ஆப்பிரிக்க, தென் அமெரிக்க பழங்குடி மக்கள் உடலில் ஒரு அங்கத்தினை சிதைத்து க்கொள்வது போலவும் குரங்கினை அடையாளமாகக் கொண்ட மனிதர்கள் அவர்கள். குணமும் குரங்கு போல சட்ட திட்டம் இல்லாத வாழ்க்கையினை உடையவர்கள். இதே காலத்தில் கரடி அடையாளம் உடைய ஜாம்பவான், கழுகு அடையாளம் உடைய ஜடாயூ ஆகியோரும் வாழ்ந்தனர். ரிக் வேத ரிஷிகளின் பெயர்களும் பாரத்வாஜ (காகம்), கெளசிக (ஆந்தை) பிராணிகளின் பெயராகவே இருக்கும். இவை அவர்கள் ஒவ்வொருவரும் வைத்துக்கொண்ட அடையாளப் பெயர்கள்; ஆங்கிலத்தில் TOTEM SYMBOLS டோ ட்டம் சிம்பல் என்பர்; இதே போல மஹாபாரதத்தில் வரும் பாம்பு யக்ஞம் (பரீட்சித் சம்பவம்) , தவளை படுகொலை ஆகியன உண்மையில் பாம்போ தவளையோ அல்ல; அந்த இன மக்களுடன் நடந்த போர்கள் அவை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயண, மஹாபாரதம் நடந்ததால் உபன்யாசகர்கள் அவற்றின் சுவையைக் கூட்டுவதற்காக குரங்கு, பாம்பு என்று சொல்லிவிட்டனர் ராமாயண, மஹாபாரத நூல்களை விஞ்ஞான அணுகு முறையில் படித்துப் பார்த்ததால் அவர்கள் மனிதர்கள்தான், பிராணிகள் அல்ல என்பது நன்கு விளங்கும். அனுமனை நவ வியாகரண பண்டிதன் என்று வால்மீகி , கம்பன் ஆகியோர் போற்றுவதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.. இந்தப் பின்னணியில் வாலி என்ற மன்னனின் சந்தியா வந்தனத்தைப் படிக்க வேண்டும் .
வாலி , கிஷ்கிந்தா என்னும் நாட்டின் மன்னன்; தற்காலத்தில் கர்நாடகத்தில் இருக்கும் ஹம்பி HAMPI என்னும் இடம் கிஷ்கிந்தை என்று பலரும், திருப்பதியில் உள்ள அஞ்சனாத்ரி மலை என்று சிலரும் சொல்கிறார்கள் . அதை ஆண்டு வந்த வாலி, மூன்று சமுத்திரக் கரையில் சந்தியா வந்தனம் செய்தான் என்றும் அப்போது இராவணன் அவனைத் தாக்கவே அபார சக்தி படைத்த வாலி, அவனைப் பந்தாடினான் என்றும் படிக்கிறோம்; அது முதல் வாலியுடன் ராவணன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவனிடம் வம்பு செய்யாமல் இருந்தான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது வாலியின் சந்தியா வந்தனம். நமக்கு புராண இதிகாசங்களை விட்டுச் சென்ற முன்னோர்கள் ஆங்காங்கே இப்படி சந்தியா வந்தனம் பற்றியும் குறிப்பாகச் சொல்லுவது அதன் முக்கியத்தைக் கோடிட்டுக்காட்டவே (Underline) என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
(என்னுடைய யாதவ ஜாதி நண்பர் ஒருவர் பூணூல் அணிந்து காயத்ரீ சொல்லி வருகிறார்; சத்ய சாய் பாபாவின் பல லட்சம் பக்தர்கள், காயத்ரீ மந்திரத்தை தினமும் ஜபிக்கின்றனர் ; கீழ் ஜாதி பக்தர் ஒருவருக்கு பாரதியார் பூணூல் போட்ட கதை எல்லோருக்கும் தெரியும் சந்தியா வந்தனம் என்பதே காயத்ரீ மந்திரத்தை தினமும் சொல்லுவதற்காக உண்டாக்கப்பட்டதுதான் ; குறித்த நேரத்தில் அதை அனுஷ்டிக்க வேண்டுமென்பதற்காக சூரியனையும் அத்துடன் இணைத்துவிட்டனர்.)
7. சீதா தேவி சந்தியா வந்தனம்
இலங்கையில் சீதா தேவியைக் கண்டுபிடிக்க மூலை, முடுக்கெல்லாம் அனுமன் தேடிக்கொண்டிருந்தான் ; அசோக வனத்தை அடைந்த பொழுது சூரியோதய நேரம் வந்துவிட்டது. அசோக வனத்தின் அருகில் இன்றும் ஆறு RIVER ஓடுகிறது . ஒருவேளை சீதாதேவி இங்கிருந்தால் சந்தியா வந்தனம் செய்ய இங்கே வருவாள் என்று மரத்தின் மீது அமர்ந்து காத்திருந்தார் ஆஞ்சனேயர் (அனுமன்). அங்கு வந்தவள் சீதைதான் என்று அவரால் அடையாளம் காண முடிந்தது . ஏனெனில் சீதை கடத்தப்பட்டதை ஏற்கனவே பல வானரங்கள் பார்த்து இருந்தன ; சீதையைத் தேடப்போன அனுமனுக்கு எல்லா தகவல்களும் தெரியும் (சீதை தூக்கி எறிந்த நகைகளை குரங்குகள் எப்படிப் போட்டுக்கொண்டன என்ற நகைச்சுவை செய்தி 2000 ஆண்டு புறநானூற்றுப் பாடலில் (378) மட்டுமே உளது )!!!
8.ஆஞ்சநேய சந்தியாவந்தனம்
கிஷ்கந்தா என்னும் நாட்டின் முதலமைச்சர் பதவியில் இருந்தவர் ஆஞ்சநேயர்.. இலங்கையில் போர்க்களத்தில் லெட்சுமணன் மயக்கம் போட்டு விழுந்தான். அவனை எழுந்திருக்கச் செய்ய விசேஷ மூலிகை தேவைப்பட்டது. ஸஞ்சீவினி என்ற ஆயுர்வேத மூலிகை தேவை என்று கரடி இன அடையாளம் அணியும் ஆயுவேர்வேத ஸ்பெஷலிஸ்ட் AYURVEDA SPECIALIST ஜாம்பவான் சொல்கிறார். உடனே ஆஞ்சநேயர் சிட்டாகப் பறந்து சென்று மூலிகையை IDENTIFY /அடையாளம் பண்ண முடியாததால் ஒரு மலைத்துண்டையே (ROCK) கையில் ஏந்தி வறுகிறார். அப்போதும் சந்தியா வந்தனம் செய்ய மறக்காமல் தங்கிச் செல்கிறார். அவர் குரங்கு அல்ல . ரிக் வேத காலம் முதல் ஒவ்வொரு ரிஷியும் எப்படி தங்களை பறவை அல்லது பிராணியின் பெயரில் அழைத்துக் கொண்டார்களோ அப்படி அவர் குரங்கு இதைச் சேர்ந்தவர் . அந்த வகையில் எல்லா மனிதர்களைப் போல அவரும் சந்தியா வந்தனம் செய்ததை நமது மத நூல்களில் காண முடிகிறது .
9. ராம ராஜ்ய சந்தியா வந்தனம்
ராமாயணத்தின் முடிவிலும் சந்தியா வந்தனத்தைக் காண்கிறோம் . ராமர் மீண்டும் அரசனாக பதவி ஏற்று ராம ராஜ்யம் நடைபெற்றது அப்போதும் தினசரி ராஜ்ய பரிபாலனத்தில் நாள்தோறும் நடந்த நிகழ்ச்சிகளில்/ சடங்குகளில் சந்தியா வந்தனமும் ஒன்று.
ஆகவே கடிகாரமே இல்லாவிட்டாலும் எளிதில் காணக்கூடியது அந்திப் பொழுதுகள்; அப்படி மூன்று சந்திப்பு / சந்திப் பொழுதுகள் வருகையில் இறைவனை நினைவு கூற வேண்டும் என்பதே சந்தியா வந்தனம் ; முஸ்லீம்களில் சிலர் 5 வேளைகளில் தொழுவதைக் காண்கிறோம். அவர்கள் விமானம், ரயில், பஸ் நிலையம் என்று பாராமல் ஒரு துணியை விரித்து மண்டியிட்டுத் தொழுதைக் காண்கிறோம். இது போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா இந்துக்களும் மூன்று பொழுதுகளில் தொழுதனர் . இதில் அதிசயம் ஒன்றும் இல்லை.
(இலங்கையில் எனக்கு திருகோண மலை செல்லக் கார் ஒட்டிய முஸ் லீம் கிடைத்த இடைவேளையில் ஸார் தொழுகையை முடித்துவிட்டு ஓடி வந்து விடுகிறேன்; நீங்கள் லஞ்ச் LUNCH சாப்பிட்டுக்கொண்டிருங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார் ; கதிர்மகத்துக்குக் கார் ஓட்டி வந்த வேறு ஒரு முஸ்லீம் இளைஞர் தொழுகை பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. இவ்வளவுக்கும் அவர் GULF COUNTRIES கல்ப் கண்ட்ரீக்களில் பல்லாண்டுகள் வசித்தவர்.
ஆயினும் மூன்று வேளையும் தவறாமல் சந்தியா வந்தனம் செய்த ஒரே மனிதனையும் நான் கண்டுள்ளேன். மதுரையில் தினமணி பத்திரிகையில் என்னுடன் சீனியர் சப் எடிட்டர் ஆக வேலை பார்த்தவர் தானப்பமுதலித்தெரு எஸ். வெங்கடராமன். பாதி நியூஸ் NEWS எழுதிக்கொண்டிருந்தாலும் உச்சி வேளையிலும் மாலை வேளையிலும் குழாயடிக்குச் சென்று அதிலுள்ள தண்ணீரை சிறிதாகத் திறந்துவிட்டு சந்தியா வந்தனம் செய்துவிட்டு ஓடி வந்துவிடுவார். அங்கே சாப்பாட்டுத் தூக்குச் சட்டிகளுடன் வரும் தொழிலாளர்களும் அமைதியாக விலகி நின்று அவர் சந்தியா வந்தனத்தை முடிக்கும் வரை காத்திருப்பர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு .
(மேலே கண்ட கட்டுரையில் உள்ள விஷயங்களை ஆங்கிலத்தில் எழுதியவர் Shri Gaurang Damani ஸ்ரீ கெளரங் தாமனி . அவர் எழுதிய புஸ்தகத்தில் பெயர் “Untold Stories of Ramayana”. நமக்குத் தெரியாத ராமாயணக் கதைகள்/ விஷயங்கள். அனைவரும் வாங்கிப் படிக்கவும்)
XXXX
E MAIL RECEIVED ON 9-11-2023
திரு.சுவாமிநாதன் அவர்கட்கு,
வணக்கம்.
காரைக்குடி, நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த, சுப.அண்ணாமலை என்ற நான் (தற்போது ஜாம்பியா நாட்டில்-லுசாகா நகரில் வசிக்கும்) உங்களுக்கு தெரிவிக்க விரும்பும் ஒரு தகவல் – எங்களது சமூகத்தில் பெண்களும் சந்தியா வந்தனம் உபதேசம் கேட்டு, தினமும் செய்து வரும் பழக்கம் தொன்று தொட்டு இன்று வரை உள்ளது. எங்களில், ஆண்-பெண்களுக்கு தனித் தனியான குருவினால், பஞ்சாட்சர மந்திர உபதேசம் (காயத்திரி அல்ல) செய்யப்பட்டு, சந்தியா வந்தனம் செய்து வருகிறோம்.
இந்த தகவல் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxx
சுபாஷித செல்வம்
விதி குறி வைத்து விட்டால் விடாது!
ச.நாகராஜன்
விதி குறி வைத்து விட்டால் விடாது!
கைவர்தக கர்ஷகரக்ரஹணச்யுதோபி
ஜாலே புனர்நிபதித: ஷபரோ வராக: |
ஜாலாத் புனர்விகலிதோ கிலிதோ பகேன
வாமே விதௌ பத் க்ருதோ வ்யஸநாக்னிவ்ருத்தி: ||
மீனவன் ஒருவன் கையிலிருந்து ஒரு மீன் தப்பியது. அது விழுந்த இடம் அவனது வலை தான்! அந்த வலையிலிருந்து அந்த அப்பாவி மீன் மீண்டும் தப்பியது – ஆனால் இந்த முறை அது ஒரு நாரையின் வாயில் விழ அது மீனை முழுங்கியது. விதி ஒரு மனிதனைக் குறி வைத்து விட்டது எனில் அவனது துன்பத்திற்கு முடிவே இல்லை.
கூரிய புத்தி வெற்றி தரும்!
கேசித் தைவாத் ஸ்வபாவாத் வா காலாத் புருஷகாரத: |
சம்யோகே கேசிதிச்சந்தி பலம் குஷலபுத்தய: ||
சிலர் தனக்குத் தேவையானதை,
விதியால் பெறுகின்றனர்.
சிலரோ இயற்கையாகவே தற்செயலாகப் பெறுகின்றனர்.
சிலரோ காலத்தினால் பெறுகின்றனர்.
சிலரோ மனித முயற்சியினால் பெறுகின்றனர்.
சிலரோ இவை அனைத்தும் சேர்ந்ததினால் பெறுகின்றனர்.
சிலர் தமக்கான வெற்றியை கூரிய புத்தியால் பெறுகின்றனர்.
பலாசமரத்தில் பாம்பு!
கேதாரகாஹசமயே க்ருஷ்ணசர்போ விலோக்யதே |
சேத் பலாசத்ருமாரூட: சுபிக்ஷம் ச வதேன ததா ||
வயல்வெளிக்கு ஒருவன் சென்று அதில் நுழையும் போது, பலாச மரத்தின் மீது அவன் ஒரு கருநாகத்தைக் கண்டால் அது காட்டும் சகுனம் என்னவெனில் அந்த வருடம் அவனுக்குச் செழிப்பான அறுவடை கிடைக்கும் என்பதைத் தான்.
சோகம் போக்கும் இரண்டு எழுத்துக்கள்! (மி, த்ர)
கேனாம்ருதமிதம் ச்ருஷ்டம் மித்ரமித்யக்ஷரத்வயம் |
ஆபதாம் ச பரித்ராணம் சோகசந்தாபபேஷஜம் ||
யார் இந்த அம்ருதம் போன்ற இரண்டு எழுத்துடைய மித்ர என்பதை உருவாக்கியது?! (மி-த்ர – நண்பன் என்று பொருள்) துன்பங்களுக்கு எதிராக பாதுகாக்கும், சோகம், துக்கம் ஆகியவற்றைப் போக்கும் இதை உருவாக்கியது யார்?
செய்ய வேண்டியது என்ன?
கே யூயம் நோ வயமபி ச வ: கே பவாமோ பவாப்தௌ
கர்மோர்மோணாம் விஷமவலநை: பேனவத் புஞ்ஜிதா: ஸ்ம: |
தத் க்ஷேபோய: க்ஷயிணி நிசயே சித்தமாதாய புத்ரா:
சர்வாரம்பைர்லகத ஜகதாமந்தராத்மன்யநந்தே ||
நீ யார் எங்களுக்கு?
நாங்கள் உனக்கு யார்?
இந்த கடல் போன்ற இந்த உலக வாழ்க்கையில் நாம் யார்?
நமது செயல்கள் வடிவில் அலைகளில் அடித்துச் செல்லப்படும் நுரைகள் போன்றவர்களே நாம்!
ஆகவே அழியக்கூடிய பொருள்களிலிருந்து மனதை இழுத்து விடுவித்து அதை முடிவற்ற பிரபஞ்ச ஆன்மாவின் மீது நிலை நிறுத்தி,
ஓ, குழந்தைகளே! அனைத்து முயற்சியையும் செய்து அதன் மேலேயே பற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
WHO AM I -நான் யார் என்ற விசாரத்தைச் செய்து பிரம்மத்தையே நினைத்து அதை அடை என்பது திரண்ட பொருள்.
மைத்ரீ சா ப்ரணயாத் ஸம்ருத்ததிரனயா த்யாகப்ரமாதாத்தனம்
37. A king is ruined by evil counsel, a Sanyasi by attachment and a child by indulgence. A Brahmin is ruined by not studying (the Vedas), a family by a wicked son and good conduct by serving an evil-doer. Modesty is lost by wine, cultivated land by neglect, and affection by a sojourn abroad. Friendship is destroyed by lack of solicitude, abundance by mismanagement, and wealth by careless spending.
வள்ளுவன் சொல்லுவான்,
நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பதாகும் அறிவு – 451
நல்ல மழை நீர் எந்த நிலத்தில் விழுகிறதோ, அதன் குணத்தை அடையும்; அது போல நல்லவர்கள் யாருடன் சேருகிறார்களோ அந்த குணத்தையே அடைவர் என்பான் வள்ளுவன்
ஆக வள்ளுவனும் பர்த்ருஹரியும் உரைப்பது ஒரே உண்மையையே!
கள் குடிப்பது பற்றி இந்துக்கள் அறைவது போல வேறு எவரும் பறைந்தது இல்லை. வள்ளுவனுக்குத் தெரியும்- தமிழர்கள் குடியால் அழிவர் என்று; ஆகையால் பத்துக் குறள்களில் பிட்டுப் பிட்டு வைக்கிறான். பர்த்ருஹரி ஒரே வரியில் சொன்னான்.
கள்ளுக் குடிப்பவன் ஒளியிழப்பர் (921)- அதாவது முகத்தில் தேஜஸ் போய்விடும்; மதிப்பும் மரியாதையும் அழிந்து விடும்
‘நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’- 926; என்ன அழகான வாக்கியம்; வள்ளுவனுக்கு இணை வள்ளுவனே! அவர்கள் நடைப்பிணங்கள் என்றும் அதே குறளில் சாடுகிறார்.
xxxx
SLOKA 38
தானம் போகோ நாசஸ்திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய
யோன ததாதி ந புங்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி – 38
दानं भोगो नाशस्तिस्रो
गतयो भवन्ति वित्तस्य ।
यो न ददाति न भुङ्क्ते
तस्य तृतीया गतिर्भवति ॥ 1.38 ॥
பொருள்
“ஒருவனுடைய செல்வம் மூன்று வழிகளில் கரைகிறது; தானம் கொடுப்பதாலோ, தனக்குப் பயன்படுத்துவதாலோ, இழப்பதாலோ போய்விடும். முதல் இரண்டு வழிகளைப் பயன்படுத்தாதோருக்கு மூன்றாவது வழி திறந்தே இருக்கிறது”.-38
சாணை கடைமணியுஞ் சத்திரந் தேய்க்கை க்கழுந்து
பேணு மதி சூரனும் பீடார் மதம் பொழிந்து
மா ணு முடல் வாடகரு வாரண முங்கவி கார்த்திகையிற்
காணுமணல் மேடு திகழ் காணாரும் பூரணையில்
வானிலவும் நல்வழியிலன் வாய்ந்த தருமந்தன்னில்
நாணுதலி ல் செல்வமும் நன்று– 38
38. Charity, enjoyment, and ruin are the three ways of wealth to go spent. He who neither gives nor enjoys has the third course (left for his wealth).
பணத் தழிவுக்கோரருஞ்சற் பாத்திரதானம்
கணக்கின்றி தானுகர்தல் காணா -திணக்கமற்ற
கள்ளன் எடுத்தலென்று காசினியிற் கண்டவழி
உள்ளபடி மூவா உ ணர்ந்தெவரும் கொள்ளுவதால்
முன்னிரண்டிற் செல்லவிடான் மூன்றாம் வழிய தனில்
அன்னதிழப்பான் அயர்ந்து –38
xxx
பழமொழி 400 என்னும் தமிழ் நூல் இதை இன்னும் அழகாகச் சொல்லும்.
நாய் கையில் கிடைத்த தேங்காய் போல என்று
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி முத்து திரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம் –பழமொழி 216
பொருள்
“ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !
மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம் நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”
நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.
ரத்தினக் கல்லை அறுத்து அறுத்து பட்டை தீட்டினாலும் ஜொலிக்கத்தான் செய்கிறது;
விழுப்புண் அடைந்தாலும் வெற்றி பெற்ற வீரனின் முகம் பெருமித ஒளி வீசுகிறது;
யானையானது மத நீர் அனைத்தும் வடிந்தும் கம்பீரமாகக் காட்சி தருகிறது;
நதியானது தண்ணீர் குறைந்த காலத்திலும் அழகுடன் தோன்றுகிறது;
அமாவாசைக்கு அடுத்த இரண்டாவது நாளிலும் நிலவு அழகாகத்தான் ஒளிர்கிறது;
காதலனுடன் கட்டிப் புரண்டு காலையில், களைப்புடன் எழுந்தபோதும் மனைவியின் அழகு குன்றவில்லை;
பணக்காரன், அவனது செல்வம் முழுதையும் தர்மம் செய்தபோதும் பொலிவுடன் திகழ்கிறான்.
39. A gem polished on a grindstone, a victor of a battle injured with weapons, an elephant weakened by rutting, a river’s sandy bed shrunken in autumn, the moon with a single digit left, a young woman weary with love sports and people whose wealth is reduced by giving to seekers – all these shine due to their emaciation.
இவற்றில் ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து ரஸிக்கலாம்.
இருந்தபோதும் கவிஞன் சொல்ல வரும் விஷயம், கையில் உள்ள எல்லாவற்றையும் தானம் கொடுத்தபோதும் செல்வந்தனுக்குப் புகழும் புண்ணியமும் எஞ்சி நிற்கும் என்பதாகும்.
காளிதாசனின் ரகுவம்ஸ காவியத்திலும், சங்க இலக்கியப் புற நானூற்றிலும் தானத்தினால் ஒருவனுக்கு ஏற்பட்ட வறுமையை புலவர்கள் புகழ்கிறார்கள்.
அதே போல ஒரு வீரனுக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் அழகு தருமேயன்றி அழகைக் குறைக்காது என்பதையும் தமிழ், ஸம்ஸ்க்ருத நூல்கள் பன்முறை பகர்கின்றன.
பிராமணர்கள் எல்லோரும் பூணுல் போட்ட நாளிலிருந்து சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என்பது தற்போதுள்ள நடை முறை. இதை மூன்று வேளைகளில் செய்ய வேண்டும். அதுவும் 5 அல்லது 7 வயது முதல் சாகும் வரை செய்ய வேண்டும். அதுவும் காணாமல், கோணாமல் கண்டு கொடுக்க வேண்டும் . அதாவது சூரியனைக் காணாதபோது , உதய காலத்தில் செய்; நிழல் கோணாத நேரம், அதாவது பகல் 12 மணிக்கு செய்; சூரியன் மறையும் முன், அதாவது கண்டு , சூரியனைக் கண்டு, செய். இப்போது பிராமணர்கள் கல்யாணத்துக்கு முதல் நாள் கூட பூணுல் போட்டுக் கொள்கிறார்கள். அதற்கு முன்னர் 7 வயதில் போட்டுக்கொண்டாலும் சந்தியா வந்தனம் செய்வதில்லை. அப்படியே செய்தாலும் 3 வேளை காணாமல், கோணாமல், கண்டு சூரியனுக்கு நீர் (அர்க்யம்) கொடுப்பதில்லை. ஆனால் ராமாயண காலத்தில் பிராமணர் முதல் சூத்திரர் வரை சந்தியாவந்தனம் செய்ததாக வால்மீகி சொல்கிறார். சீதா தேவியும் சந்தியாவந்தனம் செய்தாராம். இந்த வியப்பான விஷயங்களைக் காண்போம்.
‘சந்தியா’ ‘வந்தனம்’ என்ற இரண்டு சொற்களும் தமிழிலும் உள்ளன. சந்திப்பு என்றால் இரண்டு, ஒன்றை ஒன்று பார்ப்பது; உதய காலத்தில் ஒரு சந்தி ; பின்னர் காலைப் பொழுது மதியத்தை சந்ததிக்கும் போதும், மதியப் பொழுது, மாலை நேரத்தைச் சந்ததிக்கும் போதும் மூன்று சந்திகள் ஏற்படும். தமிழிலும் கூட , அந்திப் பொழுது என்று சொல்வோம். வந்தனம் என்பது வணக்கம் என்பதுடன் தொடர்புடைய சொல். ஆக தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சிவ பெருமானின் உடுக்கை ஒலியிலிருந்து வந்தவைதான். இதை பாரதியாரும் பாணினியும் பாடி வைத்துள்ளனர் .
பாரதி பாடல் தமிழ்த்தாய்
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் — பாரதி பாடல்
உடுக்கையின் இரு புறத்திலிருந்து வரும் ஒலியை இரு தரப்பினரும் சிறிது மாற்றிக் கேட்பதும் இயல்பே. நாய் லொள் , லொள் என்று குரைத்ததாக அல்லது வள் , வள் என்று குரைத்ததாக நாம் தமிழில் சொல்லுவோம். ஆயினும் ஐரோப்பிய மொழி ஒவ்வொன்றும் வெவ்வேறு சப்தத்தை நாய் குரைப்பதாக எழுதுகிறது. இதை கூகுள் google செய்து பாருங்கள்; வியந்து போவீர்கள் ஆகவே வணக்கம் என்பதும் வந்தனம் என்பதும் ஒன்றே .
சந்தியா வந்தனத்தில் மூன்று வேளைகளிலும் மூன்று தேவியரையும் வணங்குவோம் ; காயத்திரி,சாவித்திரி சரஸ்வதி என்ற 3 தேவியரையும் இருதயத்தில் ஆவஹித்து (மனதுக்குள் வரவழைத்து) காயத்ரி ஜபத்தை சொல்லுவார்கள். முன்னும் பின்னும் நீரையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.
உலகிலேயே மிகப்பெரிய செல்வம் தண்ணீர். நீரின்றி அமையாது உலகு என்று இந்து மதப் புலவன் வள்ளுவன் இயம்புவான். இந்துக்கள் இந்த பூமியில் பிறந்ததால் தண்ணீரை வைத்தே நல்ல , கெ ட்ட சடங்குகளை செய்வார்கள். தனது வாழ்நாளில் இந்தியாவுக்கே வராத, ஒரு இந்துவின் தினசரி சடங்கினையும் பார்த்திராத, மாக்ஸ்முல்லர் கும்பல், இந்துக்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லுவது அபத்தம் என்பது தண்ணீர் சடங்குகளை பார்த்தாலே புரியும். வெள்ளைக்காரன் தண்ணீரைத் தொடக்கூட மாட்டான. அவன் வசிப்பது குளிர்ந்த பூமியில்..
1.சூத்திரன் செய்த சந்தியாவந்தனம்
தசரதன் வேட்டைக்குப் போனான். அந்தக் காட்டில் ஒரு நதி ஓடியது. சிரவணன் என்ற சூத்திரப் பையன் அவனுடைய அப்பாவுக்காக அந்த ஆற்றில், குவளையில் தண்ணீரை மொண்டு எடுத்தான். அந்த சப்தத்தை யானை என்று எண்ணி தசரதன் அம்பினை எய்ய, அது சிரவணன் உடலில் பாய்ந்த்து. கதறி விட்டான் ; ஆ என்று அலறினான். மனிதன் குரலைக் கேட்டு வியப்பும் அச்சமும் மேலிட்ட தசரதன் வந்து பார்த்தபோது தான் செய்த தவறு புரிந்தது; அவன் தந்தை தாய் இருக்குமிடத்திற்கு தசரதனே தூக்கிச் சென்றான்.
பயந்து ஓடவில்லை. மேலை நாடுகளில் யார்மீதாவது கார் மோதினால் அவர்கள் ஒடி ஒளிந்து கொள்வார்கள். சாகும் தருவாயில் உள்ளவனுக்கு உதவ மாட்டார்கள்; ; அப்படி இல்லாமல் தசரதன் அங்கே சென்று வைசிய குலத்தில் பிறந்த தந்தையையும் சூத்திர குலத்தில் பிறந்த தயையும்ம் (ஆதாரம் வால்மீகி , அயோத்யா காண்டம், அத்தியாயம் 63) புத்திர சோகத்தை தணிவிக்கிறான். ஆயினும் அவர் தசரதனுக்கும் புத்திர சோகம் ஏற்படக்கடவது என்று சபிக்கின்றார் . அதற்கு முன்னர், சிரவவணன் நாள்தோறும் சந்தியா வந்தனம் தவறாமல் செய்தான் என்று குறிப்பிடுகிறார் ( இந்தக் கதை மஹாபாரதத்திலும் , புராணங்களிலும் வெவ்வேறு விவரங்களுடன் வருகிறது ). சிரவணனை, இந்திரனே நேரில் வந்து தேரில் அழைத்துச் செல்கிறான். அவனது தந்தையும் காட்டில் துறவி போல வாழ்ந்து வந்தார் என்பதும் குறிப்பிட்டது தக்கது .
2. பிராமண / க்ஷத்ரிய விச்வாமித்திரன்
ராமனையும் லெட்சுமணனையும் காட்டிற்கு அழைத்துச் சென்றவர் விச்வாமித்திர மகரிஷி; அவர் பிராமணர் அல்ல; பிறப்பில் க்ஷத்ரியர் ; மூவரும் காட்டில் இருந்த போது சந்தியா வந்தனம் செய்ததை வால்மீகி பாடி வைத்துள்ளார். ராமர், தாடகையைக் கொன்ற பின்னர், சீதையை மணந் ததை நாம் அறிவோம். விசுவாமித்திர மகரிஷி கடும் தவம் இயற்றி பிராமண ரிஷியாகி மாறி, வசிட்டர் வாயால் பிரம் ம ரிஷி ஆனதையும் நாம் படிக்கிறோம். அவர்தான் பிராம ணர் சொல்லும் காயத்ரீ மந்திரத்தையும் தந்தவர் .
3.தேரோட்டி சுமந்திரன்
தேரோட்டி ஜாதி என்றால் க்ஷத்ரியர்களுக்கும் தாழ்வான ஜாதி என்று மஹாபாரதத்தில் படிக்கிறோம். இதனால் கர்ணனை பாண்டவர் இகழ்ந்தவுடன். அங்கிருந்த துரியோதனன், உடனே அவனை அங்க தேச மன்னனாக அறிவிக்கிறான். இப்படிப்பட்ட ஒரு தேரோட்டிதான் ராமாயணத்தில் வரும் சுமந்திரன். கைகேயியின் சொற்படி ராம லட்சுமண, சீதை ஆகியோரை தேரில் ஏற் றிச் சென்ற சுமந்திரன் காட்டிற்குச் சென்று குதிரைகளைத் தேரிலிருந்து அவிழ்த்துவிட்டு சந்தியா வந்தனம் செய்கிறான்.; மறுநாள் கங்கைக் கரையில் சிருங்கி வேரபுரத்தில் இறக்கி விடுகிறான்
பிராமணர்கள் யார் என்று வில்லியம் ஹண்டர் சொல்கிறார் ,
“உலக வரலாற்றின் ஆரம்ப கட்டத்திலேயே தங்களுக்கு சட்ட திட்டங்களை வகுத்துக்கொண்டு கட்டுக்கோப்புடன் வாழ்ந்த ஒரு பிரிவினரை பிராமணர்கள் என்று அழைக்கின்றனர் . தன்னடக்கமும், தனி பண்பாடும் அதன் முக்கிய அம்சங்கள். அவர்கள் தங்கள் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டதாலும், இளம் வயதிலேயே கல்யாணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்றதாலும் , போர் முனைகளில் இளம் வயதிலேயே இறக்காததாலும் அவர்களுடைய மிகச் சிறந்த குணங்களை, மிக மிக அதிக அளவில் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றனர்” — ஸர் வில்லியம் வில்சன் ஹண்டர் (1840-1900)
SIR Willam Wilson Hunter, known for his work The Imperial Gazetteer of India
xxx
2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்கத் தமிழ் நூல்கள் பிராமணர் பற்றி செப்புவது யாதெனின்,
“இவர்கள் வீடுகளில் முத்தீ (Three different Fire Altars) வளர்த்து வழிபட்டனர் . வேதங்களை ஓதி வேள்விகள் செய்தனர். சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களை வழிபட்டனர். விவாதங்களில் பங்கு கொண்டனர் ; அவர்களுடைய வீடுகள் தூய்மையாகவும், எளிமையாகவும் இருந்தன.. இரண்டு மன்னர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டால், பிராமண தூதர்களை மட்டுமே அனுப்பி அறிவிப்புகளை வெளியிட்டனர் . நாய்களும் கோழிகளும் நுழைய முடியாத சுத்தமான தெருக்களில் வசித்தனர். மரக்கறி உணவை உண்டனர்.”
xxx
இதே காலத்திலும் இதற்கு முன்னரும் இலங்கையில் பிராமணர்கள் வசித்ததாக மிகவும் பழைய பெளத்த மத நூல்கள் எழுதியுள்ளன .
அசோகர், 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட எல்லா கல்வெட்டுகளிலும் பிராமண, ஸ்ரமண என்றே எழுதினார். அதாவது பிராமணர்களையே முதலில் குறிப்பிட்டு விட்டு பெளத்த, சமணர்களைக் குறிப்பிடுவார்.
இலங்கையில் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் காலடி எடுத்தும் வைக்கும் முன்னரே பிராமணர்கள் வாசித்ததை இலங்கை வரலாற்று நூல்கள் காட்டுகின்றன.
பிராமணர் ஆட்சி Brahmin’s Rule in Sri Lanka
விஜயன் இறந்தவுடன் இலங்கையை ஆள தகுதியுடைய அரசர்கள் இல்லை. தமிழ் நாட்டிலிருந்து ஒரு க்ஷத்ரிய வம்ச மன்னரை அல்லது இளவரசரை கொண்டுவருவதற்கு அமைச்சர்கள் முடிவு செய்தனர். அப்போது ஓராண்டுக் காலத்துக்கு உபதிஸ்ஸ Upatissa 505- 504 BCE என்ற பிராமணர் தலைமையில் ஆட்சி நடந்தது. எப்போதுமே பிராமணர்தான் முதல் மந்திரியாக இருக்க முடியும் ..அந்தப் பிராமணர் அனுராதபுரத்துக்கு வடக்கிலுள்ள கம்பீரா நதிக்கரையில் உபதிஸ்ஸ காம என்ற கிராமத்தை உண்டாகிக்கினார் .
கிராமம்Grama என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை சிங்களத்தில் காம gama என்றும் ஆங்கிலத்தில் காம்Gham என்றும் உச்சரிப்பர் . பிரிட்டன் முழுதும் நிறைய ஊர்கள் காம் (Birmingham, Nottingham, Eastham etc) என்றே முடிவடையும்.
பாண்டுகாபயன் (437- 367 BCE) பதவி ஏற்கும் வரை அந்த கிராமமே தலைநகர் ; பின்னர் அனுராதபுரம் தலை நகர் ஆயிற்று.
நாகர் என்ற பெயரில் முடியும் 20 புலவர்கள் பழந் தமிழ் நாட்டில் வசித்தனர். அவர்களும் பிராமணர்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இலங்கையை ஆண்ட ஸ்ரீ நாகன் (189- 209 CE) பிராமண குலத்தில் பிறந்தவன் அவன் 20 ஆண்டுகள் நாட்டை ஆண்டான் அதற்கு முன்னர் அவனுடைய மைத்துனன் குஞ்ச நாக, ஒரே ஆண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தான் .ஸ்ரீ நாகன், மகன் வொஹரிக திஸ்ஸ Voharika Tissa புதிய சட்டங்களை நடை முறைக்குக் கொண்டுவந்தான். உடலில் காயங்கள் ஏற்படுத்தினால் அதுவும் தண்டனைக்குரிய குற்றமே என்று சட்டம் கொணர்ந்தான் ( இது மனு ஸ்ம்ருதியிலும் உள்ளது ).
இந்த பிராமண ஆட்சி 50 ஆண்டுகளுக்கு நீடித்தது .
இதற்குப் பின்னர் சில நூற்றாண்டுகள் உருண்டோடின. சீனாவிலிருந்து வந்த தூதனை வரவேற்க இலங்கை மன்னன் 30 கப்பல்களுடன் ஒரு பிராமணனை அனுப்பினான். இது நடந்தது கிபி CE 607ல். சுமார் 140 ஆண்டுகளுக்குப் பின்னர் CE 746-ம் ஆண்டில் ஒரு பிராமணர் சீனாவுக்கு அனுப்பப்பட்டார். அவர் புத்த மத பிரக்ஞா சூத்திரத்தையும் 40 கட்டு பருத்தித் துணியையும் எடுத்துக் கொண்டு சென்றார்.
போர்ச்சுகீசிய ஆட்சிக்காலத்திலும் மன்னர்கள் பிராமண தூதர்களையே பயன்படுத்தினர். அவர்கள் சத்தியத்தை மீறாதவர்கள், லஞ்சம் கொடுத்து அவர்களை வசப்படுத்த முடியாது ; ரகசியத்தை வேறு யாருக்கும் சொல்லாமல் செயல்படுவர் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். ஏழாவது புவனேக பாஹு தன்னுடை பேரன் தர்ம பால ஆட்சிக்கு எந்த ஊறும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பிராமணர் மூலம் லிஸ்பன் நகருக்கு பேரனின் சிலையை, அனுப்பிவைத்தார் . அங்கிருந்தவாறே போர்ச்சுகீசிய மன்னர் தனது பேரனின் பட்டாபிஷேகத்தை அங்கீகரிக்க இந்த ஏற்பாடு.
லிஸ்பன் Lisbon, Capital of Portugal , போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் .
Xxx
பிராமண ஆசீர்வாதம்
மன்னர்கள் தலை வணங்குவது இரண்டு முறைதான்; கோவிலில் இறைவனுக்கு முன், சிரம்தாழ்த்தி வணங்குவார்கள் ; பிராமணர்கள் மந்திரம் சொல்லி ஆசீர்வதிக்கும் பொழுது மன்னர்கள் , சிரம் தாழ்த்தி, கரம் குவித்து வணங்குவார்கள் ; இதை புறநானூற்றில் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாட்டை ஆண்ட முதுகுடுமிப் பெருவழுதி இரண்டு முறை மட்டுமே தலை வணங்குவான் என்று புலவர் பாடுகிறார். நமது காலத்திலேயே யாருக்கும் தலை வணங்காத முதலமைச்சர் ஜெயலலிதா, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மற்றும் அவருடைய மனைவியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதைப் பார்த்தோம்.
இவ்விஷயத்தில் முதலாவது இரண்டாவது ராஜ சிம்மர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் காண்போம் .
பிரம்ம ஶ்ரீ தண்டிபட்லா விஸ்வநாத சாஸ்திரி என்பவர் ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர். சிறந்த வேத விற்பன்னர். வியாகரணத்தில் நிபுணர்.
அவரை சில ஜெர்மானிய விஞ்ஞானிகள் 1938ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வருமாறு அழைத்தனர். எதற்காக?
சில சம்ஸ்கிருத துதிகளில் உள்ள அர்த்தத்தைச் சரியாக விளக்குமாறு அவரை ஜெர்மனிக்கு அழைத்தனர்.
யஜுர் வேதம் மற்றும் அதர்வண வேதத்தில் உள்ள மந்திரங்கள் இவை.
இரண்டாம் உலக மகாயுத்தத்தில் போரில் பயன்படுத்த ராக்கட்டுகள் மற்றும் விண்ணில் ஏவும் ஆயுதங்களை எப்படித் தயாரிப்பது என்று ஜெர்மானிய விஞ்ஞானிகள் ஹிட்லரின் உத்தரவின் பேரில் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர். அவர்களுக்கு இப்படிப்பட்ட அபூர்வ ஆயுதங்களைத் தயாரிக்கும் முறைகள் விரிவாகவும் நுட்பமாகவும் ஹிந்து வேதங்களில் இருப்பதாகத் தெரிய வந்தது.
உடனே இதில் நிபுணர் யார் என்பதை ஆராய ஆரம்பித்தனர். விஸ்வநாத சாஸ்திரியைப் பற்றி அவர்கள் அறிந்தனர். அவர் இளமையிலேயே மேதையாக விளங்கியவர். தர்க்கம், இலக்கணம், மீமாம்ஸை உள்ளிட்ட அனைத்திலும் வல்லவர். யஜுர் வேதத்தில் கர்ம காண்ட பாகத்திலும் அதர்வண வேதத்தில் ப்ரயோக பாகத்திலும் அவர் தேர்ந்தவர்.
குறிப்பிட்ட சில ரகசிய மந்திரங்களின் உள் அர்த்தத்தை விளக்கமாகச் சொல்லுமாறு அவர் கோரப்பட்டார்.
நாஜிகள் தங்களது வி-8 ராக்கட்டுகளுக்கான பல்ஸ் ஜெட் எஞ்ஜின்களை (PULSE-JET ENGINES FOR V-8 ROCKET) முதலில் உருவாக்கியவர்கள். இதை ‘பஸ் பாம்ப்’ (BUZZ BOMBS) என்பார்கள்.
இந்த வகை ராக்கெட்டுகளை உருவாக்க இந்திய மற்றும் திபெத்தைச் சேர்ந்த அறிஞர்களால் மட்டுமே முடியும் என்பதை நாஜி விஞ்ஞானிகள் உணர்ந்தனர். ஆகவே ஆயிரத்திதொள்ளாயிரத்து முப்பதுகளில் அவர்கள் சரியான அறிஞரைத் தேட ஆரம்பித்து இறுதியில் விஸ்வநாத சாஸ்திரியே உகந்த அறிஞர் என்று முடிவு செய்தனர்.
அவரை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றனர். அவர் அங்கேயே வாழ்ந்தார்.
அவரது படம் இன்னும் ஜெர்மனியில் பிராங்க்பர்ட் பல்கலைக்கழகத்தில் மாட்டப்பட்டிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு சீனர்கள் லாஸாவில் சில சுவடிகளைக் கண்டுபிடித்தனர். அதில் விண்கலம் அமைக்கும் முறை பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. அவற்றை மொழிபெயர்க்க சண்டிகர் பல்கலைக் கழகத்திற்கு அந்தச் சுவடிகளை அனுப்பினர்.
லகிமா என்ற அமைப்பின் படி ஆன்டி கிராவிடேஷனல் எனப்படும் புவி ஈர்ப்பு எதிர் விசை எல்லா ஈர்ப்பு விசைகளையும் எதிர்த்து நிற்கும் வல்லமை படைத்தது.
சித்திகள் எட்டில் இந்த லகிமாவும் ஒன்று. இதில் வல்லவர்கள் புவி ஈர்ப்பு விசையை மீறி ஆகாயத்தில் உயர எழும்பலாம்; பறக்கலாம்.
இராமாயணத்தில் ஹனுமான் ஆகாயத்தில் உயர எழும்பி மிக அதிக வேகத்தில் பறந்ததை நாம் படிக்க முடிகிறது.
இந்திய விஞ்ஞானிகள் இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. ஆனால் உலகளாவிய விதத்தில் பல நாடுகளின் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தை இந்திய சாஸ்திரங்களின் மீது செலுத்துகின்றனர்.
இப்படிப்பட்ட சம்பவங்களில் விஸ்வநாத சாஸ்திரி ஜெர்மனிக்கு அழைக்கப்பட்ட சம்பவமும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக அமைகிறது.