தமிழ்ச் சுவடி மர்மம்! மாயச் சதுரச் சுவடி- PART 1 ( Post No.4166)

Written by S.NAGARAJAN

 

Date: 27 August 2017

 

Time uploaded in London- 4-48 am

 

Post No. 4166

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

தமிழ்ச் சுவடி மர்மம்!

மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி தஞ்சாவூர் சத்தியபாமா! – 1

 

ச.நாகராஜன்

 

தமிழின் பெயரைச் சொல்லிச் சொல்லியே தங்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் தரங்கெட்டவர்கள் செழித்து வளர்கின்றனர்.

 

ஆனால் உண்மையாகத் தமிழை ஆராய்ந்து தமிழில் உள்ள சுவடிகளின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் தமிழர்களைத் தமிழர்கள் கவனிப்பதே இல்லை; கவனித்தால் அல்லவா பாராட்ட முடியும்.

 

தமிழை வளர்க்கும் அரிய பெண்மணியாக விளங்குகிறார் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முனைவரான முனைவர் திருமதி கா.சத்தியபாமா.

இவர் செய்த அரும்பணி மாயச் சதுரங்களைப் பற்றிய பழைய தமிழ்ச் சுவடிகளைப் படித்து ஆராய்ந்து புரிந்து கொண்டு அதை உலகிற்கு வெளிப்படுத்தியதே ஆகும்.

 

தமிழின் அருமை சில சொற்களால் அமைந்த பாடல்களால் பெரிய கணித வித்தைகளை விளக்குவதாகும். இதே போன்ற சூத்திரப் பாடல்களால் சோதிடமும் விளக்கப்படுவது தமிழின் தனிச் சிறப்பு.

 

எனது பழைய கட்டுரை ஒன்றில் எப்படி சதுரங்க பந்தப் பாடல் ஒன்றின் புதிரை அவிழ்க்க பல காலம் நான் முயன்று திடீரென்று (கடவுள் அருளால்) வெற்றி பெற்றதை விளக்கியுள்ளேன்.

திருமதி சத்தியபாமாவோ அனாயாசமாக பல சிக்கலான பாடல்களை விளக்குகிறார்.

 

இவரை உரிய முறையில் தமிழ் உலகம் கௌரவிக்கவில்லையே என வருந்துகிறேன். இப்படிப்பட்ட திறமைசாலியான தமிழ்ச் செல்விகளையும் தமிழ்ச் செல்வர்களையும் தமிழ் உலகம் உணர்ந்து போற்றும் நாள் எந்த நாளோ அந்த நாளே தமிழுக்கான நன்னாள் ஆகும்.

 

விஷயத்திற்கு வருவோம்.

 

சுவடிகளை ஆராய்ந்த சத்தியபாமா 2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழில் இப்படி சிக்கலான புதிர்களை அவிழ்க்கும் வழிகள் பாடல்களில் உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார்.

மாயச சதுரங்களை அமைப்பதில் மூன்று வழிமுறைகள் உள்ளன.

 

 

  • வரிசையாக எண்களை எழுதி மாயச் சதுரங்களை அமைத்தல்
  • பரிபாஷையாகக் கூறப்பட்டுள்ள எண்களை வரிசையாக எழுதி மாயச் சதுரங்களை அமைத்தல்
  • கொடுக்கப்பட்டுள்ள கூட்டுத் தொகை எண்களுக்கான மாயச் சதுரம் அமைத்தல்

மேலே கூறப்பட்டுள்ள அனைத்தையும் சுவடிப் பாடல்கள் தருகின்றன!

 

என்ன ஒரு பிரம்மாண்டமான அறிவு! தமிழரின் பண்டைய நூல்களில் இது போல ஆயிரக்கணக்கான அற்புதங்கள் உள்ளன!!

 

முதல் வகையில் உள்ள ஒரு பாடலை விளக்குகிறார் மாயச் சதுரப் பெண்மணி:-

 

சீர்பெறும் ஈரே ழொன்று சியபணி ரெண்டும் ஏழு

ஏர்பெறும் பதினொன் றெட்டு இயல்பதி மூன்று ரெண்டு

பேர்பெறும் ஐந்தீர் ஐந்து பெருகுமூன்று பின்னீ ரெட்டு

கூர்பெறும் நால்மு வைந்தாற் குறிப்புடன் ஒன்ப தாமே

            (சுவடி எண் 1475)

 

இப்பாடலில் வரிசையாகக் கூறப்பட்டுள்ள எண்களை கட்டங்களில் இப்படி அமைக்க வேண்டும்.

 

14 1 12 7
11 8 13 2
5 10 3 16
4 15 6 9

 

மேலே உள்ள மாயச் சதுரத்தில் எந்த வரிசையையும் இடமிருந்து வலமாகக் கூட்டினாலும் மேலிருந்து கீழாகக் கூட்டினாலும் மூலை விட்டங்கள் வழியே கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகை 34!

 

சிறிய ஒரு பாட்டு சிக்கலான அமைப்பை விளக்கி விட்டது.

 

அடுத் பரிபாஷை வகைப் பாடலுக்கு உதாரணத்தைத் தருகிறார் தமிழ் முனைவர்:

 

மேசமே இலக்க தாக விளங்கிய சோதி பத்தாம்

பூசமாம் சுப்பிர தீபம் பதினான்கு புந்தி பொன்னன்

மாசில்லா கும்பம் காரி மணிசித்ர பானு இந்து

ஆசில்லா மீனம் வெள்ளி ஆறரை அத்த மாமே

          (சுவடி எண் 1475)

 

இந்தப் பாடலைப் பார்த்தால் சோதிடப் பாடல் போல இருக்கிறது.

 

ஆனால் பரிபாஷை மர்மத்தை விண்டு பார்த்தால் வருவது அழகிய மாயச் சதுரம்!

 

மேஷம் – இராசிகளில் முதலாவதாக் அமைவது. ஆகவே இங்கு சுட்டிக் காட்டப்படும் எண் 1

ஸ்வாதி – நட்சத்திரங்களில் பதினைந்தாவது. ஆகவே வரும் எண் 15

 

பூசம் : நட்சத்திரங்களில் எட்டாவது. ஆகவே எண் 8

புந்தி : புதனின் மற்றொரு பெயர் புந்தி. வாரத்தின் நான்காவது நாள். ஆகவே வரும் எண் 4

பொன்னன்: வியாழனின் இன்னொரு பெயர் பொன்னன். வாரத்தின் ஐந்தாவது நாள். ஆகவே எண் 5

கும்பம் : இராசிகளில் பதினொன்றாம் இராசி. ஆகவே எண் 11

 

காரி – சனியின் மற்றொரு பெயர் காரி. வாரத்தின் ஏழாவது நாள். ஆகவே வரும் எண் 7

மணி : நவமணிகள் ஒன்பது. ஆகவே 9

சித்ரபானு : தமிழ் வருடங்களில் பதினாறாவது. ஆகவே 16

இந்து:  சந்திரனின் மற்றொரு பெயர் இந்து. வாரத்தின் இரண்டாவது நாள். ஆகவே எண் 2

மீனம் : இராசிகளில் பனிரெண்டாவது இராசி. ஆகவே எண் 12

 

வெள்ளி : வாரத்தின் ஆறாவது நாள். ஆகவே 6

ஆறரை : ஆறு அரை = 3; (6 x ½)  = 3  ஆகவே 3

அத்தம் : ஹஸ்தம் தமிழில் அத்தம் என வழங்கப்பெறும். இது 27 நட்சத்திர வரிசையில் பதின்மூன்றாவது நட்சத்திரம்.

ஆகவே எண் 13

பத்து என்ற எண்ணும், 14 என்ற எண்ணும் பாடலில் நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளது.

இனி சுலபம் தான் – மாயச் சதுரத்தை அமைப்பது!

 

 

1 15 10 8
14 4 5 11
7 9 16 2
12 6 3 13

 

இந்த மாயச் சதுரத்தில் எந்த வரிசையையும் இடமிருந்து வலமாகக் கூட்டினாலும் மேலிருந்து கீழாகக் கூட்டினாலும் மூலை விட்டங்கள் வழியே கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகை 34!

 

அதே சமயம் முந்தைய மாயச் சதுரமும் இந்த மாயச் சதுரமும் கூட்டுத்தொகையான் முப்பத்திநான்கால் ஒன்று பட்டிருப்பினும் அமைப்பால் வேறு பட்டுள்ளது.

என்ன ஒரு தமிழ்ச் சாமர்த்தியம்.

அழகிய சிறு பாடலில் ஒரு பெரிய கணிதப் புதிரின் விளக்கம்.

 

சுலபமாக நினைவில் கொள்ளவே பாடல் வடிவில் புதிரும் விளக்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

 

தமிழில் இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. இது எவ்வளவு பழமையானது என்பதும் தெரியவில்லை.

இந்தப் புலவரைப் பாராட்டுவோம்; அத்துடன் இதைத் தமிழுக்கு மீட்டுத் தந்து விளக்கமும் அளித்த முனைவர் சத்தியபாமாவை மனமுவந்து பாராட்டுவோம்!

இந்தப் பாடல்க்ள் பற்றிய கட்டுரையின் தலைப்பு :

பழந்தமிழ்ப் பாடல்களில் மாயச் சதுரங்கள்.

நூலின் பெயர்:  வளரும் தமிழ் (பல கட்டுரைகள் அடங்கியுள்ள இந்த நூலின் பக்கங்கள் 279. விலை ரூ60; வெளியான ஆண்டு 2003. அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூ வெளியிட்டுள்ள நூல் இது)

 

தமிழ்க் கழகத்தின் அரிய பணி! சீரிய பணி! வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில் மூன்றாவது வகைப் பாடலைப் பார்ப்போம்.

****

100 Wonders of Karnataka- Part 3 (Post No.4165)

Compiled by London Swaminathan

 

Date: 26 August 2017

 

Time uploaded in London- 13-27

 

Post No. 4165

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

 

Haveri District

41.HAVERI

Known for Cardamom Export; important centre for Kalamukha sect.

42.RANIBENNUR

Places of attractions: Siddheswar Temple and Tomb of Hazrat Jama Shah.

43.SAVANUR

Nawab’s palace, relics of a fort and annual fair of Sathyabodaswami mutt are very popular.

 

Kodagu (Coorg) District

44.MADIKERI

Hill station at 4000 ft. Famous for coffee plantations, orange groves. The sunset view from the Rajah’s seat is beautiful.

  1. FORT

Built in 182; houses a museum and a temple

45.OMKARESWARA TEMPLE

Built in 1820 and as Vishnu and Shiva. It is a unique blend of Hindu and Muslim styles of architecture.

 

46.ABBEY FALLS

Beautiful picnic site with a waterfall across the Madikere stream.

 

47.BHAGAMANDALA

It is on the confluence of three rivers Kaveri, Kanike and the Suiyothi. Triveni bathing and Bhandeswara attract the tourists.

48.NAGARHOLE

Heballa elephant camp is attractive. It is a wildlife sanctuary with tigers, elephants, panthers and deer.

49.TALAKAVERI

Source of the sacred river Kaveri. it originates from the Brahmagiri Hills. Important Hindu pilgrim centre.

Kolar District

50.KOLAR

Kuvalala is the original name and was the capital of Gannas, Cholas, Vijayanagar kings, British and Tipu Sultan ruled this area.

51.KOLARAMMA TEMPLE

Built by Rajendra Chola. It has Chola inscriptions and ornately carved door.

52.KOLAR BETTA

The hill of Kolar is also called Shata Shata Shringa Parvat ( the hundred peaked mountain).

53.KOLAR GOLD MINES

One of the deepest mines in the world and it is 9959 ft deep. It is called Champion Reef Gold Mine.

54.NANDI HILLS

Health centre and a pilgrim centre. Height 1478 metres. Tipu Sultan and the British stayed there during summer.

Mandya District

55.MANDYA

Annual chariot festival of Janardhanaswamy temple attracts a large number of devotees in April-May. Mandya district is known for its natural beauty.

56.BRINDAVAN GARDENS

 

Brindavan gardens is 19 km from Mysuru. The terraced ornamental garden is built at the foot of the Krishnarajasagar dam. Twinkling lights, musical water fountains, well-lit gardens make it a fairy land in the evenings.

57.K R SAGAR DAM

It is at the confluence of Kaveri, Hemavathi and Lakshmanatirtha Rivers. It was constructed by the famous engineer Vishveswarayya in 1932. The dam is 2621 metres long and 39 metres high; covers an area of 130 sq.kms.

58.KOKREBALLUR SANCTUARY

This bird sanctuary attracts migratory birds. They come from Europe, Africa and Australia.

59.MADDUR

Narasimha temple, built at Hoysala’s time and Varadaraja Temple built before the Chola occupation are famous.

 

60.MELUKOTE

It means High Fort. Cheluwaraya Swami temple has a rich collection of Royal jewellery. The Vairamudi Festival (Diamond crown) is held in March-April. Associated with Sri Ramanuja.

61.RANGANATHA THITTU BIRD SACTUARY

It has three rocky islets with full of trees. It is a paradise for bird watchers.

 

  1. SRIRANGA PATNA

Island capital of Tipu Sultan. Within the ramparts of the fort beautiful palaces are located. Ranganathaswamy temple, Daria Daulatbagh, Tipu’s summr palace are worth visiting.

63.SIVASAMUDRAM

Picturesque waterfalls across the river Kaveri. Asia’s first Hydroelectric power station was constructed here.

to be continued……………………

 

–Subham–

உலகிலேயே மிகப்பெரிய வீணையைக் கண்டேன்! (Post No. 4164)

Veena is seen behind Aum and under Adi shankara

Written by London Swaminathan

 

Date: 26 August 2017

 

Time uploaded in London- 7-49 am

 

Post No. 4164

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

கர்நாடக மாநிலம் ஏராளமான அதிசயங்களைக் கொண்ட மாநிலம். அது பற்றி பெரிய புத்தகமே எழுதலாம். சிருங்கேரிக்குச் சென்று சாரதாம்பாள் கோவிலைலயும் சங்கராச்சார்ய சுவாமிகளையும் காண நீண்ட காலமாக ஆசை. இரண்டும் ஆகஸ்ட் (2017) மாதம் நடந்தேறியது. அத்தோடு ஒரு போனஸும் கிடைத்தது. சிருங்கேரி சங்கராசார்ய மடத்தில் உலகிலேயே பெரிய வீணை உள்ளது. அது இருக்கும் கண்ணாடிப் பெட்டியை உரசிக் கொண்டு நின்ற போதும் மேடையில் சங்கராசார்ய சுவாமிகள் அருளாசி வழங்கும் நேரத்தில் அதை நெருங்கிப் புகைப்படம் எடுக்க மனது உடன்படவில்லை. தொலைவில் இருந்து ஒரு படம் எடுத்தேன்.

 

இந்த வீணை பற்றிய தகவல்கள்:

இது சார்வபௌம வீணை என்று அழைக்கப்ப்டும். தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு 2003ல் மடத்திற்கு வழங்கப்பட்டது.

சாதாரண வீணை 132 சென்டிமீட்டர் நீளமே இருக்கும். ஆனால் அங்குள்ள சார்வ பௌம வீணை 305 செ.மீ. நீளம் உடையது அதாவது சுமார் பத்து அடி நீளம் கொண்டது. அதன் அகலம் 76 சென்டிமீட்டர் உயரம் 74 சென்டிமீட்டர்.

எடை 70 கிலோ! சாதாரண வீணையோ 10 கிலோதான். அருகில் நின்று பார்த்தால் நாம் தூக்க முடியுமா என்று திகைத்து நிற்போம். இதை 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாரதா பீடத்தில் கொண்டு வைத்தனர்.

 

இந்த வீணை தாமரை வடிவ ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ளது, அதாவது நிற்கும்படி செய்யப்பட்டுள்ளது. ஒன்றின் மேல் சுவாமி விவேகாநந்தர் உருவமும் மற்றொன்றின் மீது ஒரு பொன்மொழியும் பொறிக்கப்பட்டுள்ளது.

“நாம் ஒன்று சேருவது துவக்கம்

நான் ஒன்றாக நீடிப்பது முன்னேற்றம்

நாம் ஒன்றாக வேலை செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்”

என்ற பொன்மொழி செதுக்கப்பட்டுள்ளது.

 

இந்த மஹா சார்வ பௌம வீணை ஒரே மரக்கட்டையைக் குடைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட வீணை வேறு கிடையாது!

இந்த வீணையின் குடம் முதலிய பகுதிகளில் சங்கீத மும்மூர்த்திகளின் படங்கள், பிள்ளையார், சரஸ்வதி, லெட்சுமி படங்கள், எந்தரோ மஹானுபாவுலு பாடலின் முதல் வ ரி ஆகியன செத்க்கபட்டு இருக்கிறது.

கனகதாசர், புரந் தரதாசர், ராகவேந்திரர் ஆகியோர் படங்களுடன் இதை உருவாக்கிய சிவா மியூசிகல்ஸின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.

சப்த ஸ்வரங்கள், அவற்றைக் குறிக்கும் ஏழு கடவுள்கள், 7 ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்தும் பிராணிகள் ஆகியனவும் வரையப்பட்டுள்ளன. வெறும் இசைக் கருவியாக நில்லாமல் ஒரு சங்கீத என்சைக்ளோபீடியாவாக இது திகழ்கிறது.

 

வீணையின் கழுத்துப் பகுதியில் இதை உருவாக்கிய கர்நாடக கலாஸ்ரீ சின்னப்ப நடராஜர் பெயர், காந்திஜி, அசோகச் சக்கர உருவம் ஆகியனவும் உள்ளன. கண்ட பேரண்டம் எனப்படும் இருதலைப் பறவையும் இதை அலங்கரிக்கிறது.

 

முனைப் பகுதியில் யாளியின் பட உருவமும் காணப்படுகிறது.கர்நாடக மாநில அசெம்பிளி, வீரர் கம்பகவுட, பொறியியல் வல்லுநர் விஸ்வேரையா ஆகியோர் திரு உருவங்களும் வீணையில் இடம் பெறுகின்றன.

SARVABHOWMA VEENA 
Length – 305cm
Width (Kodam) – 76cm
Height (Kodam) – 74cm
Dimension (Kodam) – 225cm
Length of Dandi – 128cm
Frets – 12mm
Weight – 70Kg
Left Stand (Burude)
Height – 46cm
Dimension – 144cm

CONVENTIONAL VEENA

Length – 132cm
Width (Kodam) – 36cm
Height (Kodam) – 33cm
Dimension (Kodam) -115cm
Length of Dandi – 62cm
Frets – 6mm
Weight – 10Kg
Left Stand (Burude)
Height – 23cm
Dimension – 82cm 
Veena Details are  taken from Shiva Musicals site.

நல்லதோர் வீணை செய்து அதை நாடு புகழும் மண்டபத்தில் வைத்தது சிறப்பான செயல்; அதைத் தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது!!

கர்நாடக மாநிலத்தில் இன்னும் பல அதிசயங்கள் இருக்கின்றன. அவைகளையும் எழுத்தில் செதுக்குவேன்!

 

TAGS: பெரிய வீணை, உலகிலேயே, சார்வபௌம, சிருங்கேரி

 

–subahm–

 

டாக்டர் இரா.நாகசாமியுடன் சந்திப்பு (Post No. 4162)

S Nagarajan, Dr Nagaswamy and london swaminathan

 

Written by London Swaminathan

 

Date: 25 August 2017

 

Time uploaded in London- 20-27

 

Post No. 4162

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

நான் எம்.ஏ. வரலாற்று (M. A. History) மாணவன். மதுரை தினமணியில் உதவி ஆசிரியராக ( Senior Sub Editor, Dinamani, Madurai) வேலை பார்த்தபோது  — 1977 ஆம் ஆண்டு என்று ஞாபகம்– டாக்டர் இரா.நாகசாமி தொல்பொருட்  துறை இயக்குநராக (Director of Archaeology)  இருந்தார். அதற்கு முன்னர் அந்த இலாகாவை எல்லோரும் “புதை” பொருள் ஆராய்ச்சி இலாகா என்று எழுதி வந்தோம். என்ன நிதர்சனமான உண்மை!! அது அப்படித்தான் “புதை பொருள்” ஆராய்ச்சி இலாகாவாக இருந்தது! எவருக்கும் அப்படி ஒரு இலாகா இருப்பதே தெரியாது! டாக்டர் இரா. நாகசாமி பொறுப்பேற்றவுடன் அது தொல்பொருட் துறை என பெயர் பெற்றது. நாள் தோறும் நாங்கள் தினமணியில் ஏதாவது ஒரு கல்வெட்டு கண்டுபிடிப்புச் செய்தியைப் போடுவோம்.

 

டாக்டர் நாகசாமி சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆனால் சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றின் கரை கண்டவர். அது மட்டுமல்ல. அதை ஆங்கிலத்தில் அழகாக தொகுத்து வழங்க வல்லவர். தமிழனுக்கு ஒரு பெரிய வீக்னெஸ் (Weakenss) உண்டு. தமிழைத் தவிர வேறு மொழி இலக்கியம் தெரியாது. ஆகையால் கிணற்றுத் தவளையாக ஏதாவது உளறிக் கொண்டிருப்பான். அப்படி இல்லாமல் நாகசாமி அவர்கள் மும்மொழி பாண்டித்தியம் பெற்றதால் அவருக்கு உலகம் முழுதும் புகழ். இங்கு லண்டனுக்கு வரும்போதெல்லாம் வீட்டிற்கு அழைப்பேன்.

Dr Nagaswamy with his awards

1977ம் ஆண்டில் அவர் பேசிய ஒரு கூட்டத்தில் பத்திரிக்கை நிருபர் போல நானும் அமர்ந்தேன். அதில் 40+ தமிழ் ஆசிரியர்களுக்குக் கல்வெட்டுப் பயிற்சி தருவதாகவும் சிதம்பரம் முதல் திருவனந்தபுரம் வரை சுமார் 1000 மைல் இலவச தொல்பொருட் துறை சுற்றுப் பயணம் அதில் அடக்கம் என்றும் பத்திரிக்கை நிருபர் கூட்டத்தில் அறிவித்தார். உடனே அவரிடம் நான் சென்று ‘நானும் ஒரு ஆசிரியர்’ (பத்திரிக்கை உதவி ஆசிரியர்) என்றும் ‘இடமிருந்தால் நானும் வரலாமா?’ என்றும் கேட்டேன். ‘தாராளமாக வாருங்கள்’ என்றார். உடனே அலுவலகத்துக்குச் சென்று அவர் வழங்கிய பேட்டியின் சாராம்சத்தை எழுதிவிட்டு என் பாஸ் (boss)ஸிடம் லீவு கேட்டேன். லீவும் கிடைத்தது. எங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பரும் சேதுபதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியருமான வி.ஜி. சீனிவாசனும் அந்தப் பயணத்தில் வந்ததால் ஆயிரம் மைல் பயணமும் இனிதே முடிந்தது.

 

அது பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.

 

இவ்வளவு காலம் — நீண்ட நெடுங்காலம்– தொடர்பு இருந்ததால் இந்தியாவுக்குச் செல்லும்போதெல்லாம அவரை சந்திப்பது வழக்கம். அவர் லண்டனுக்கு பல நாடகக் குழுக்களை  அழைத்து வந்த போதெல்லாம் அவருடனே சென்று கூட்டங்களில் பங்கு கொள்வேன். பி.பி.சி. BBC தமிழ்ழோசையில் வேலை பார்த்தபோது அவரைச் சில முறை பேட்டி கண்டு அதை பி.பி.ஸி.யில் ஒலிபரப்பினேன். நேயர்களின் பெருத்த ஆதரவு கிடைத்தது. அவர் வரும் போது அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிமேகலை, ராஜேந்திர சோழன் முதலிய நாடகங்களை லண்டனில் உள்ள கோவில்கள் சார்பாகவும், சவுத் இண்டியன் சொஸைட்டி South Indian Society சார்பாகவும், பிரிட்டிஷ் மியூசியம், விக்டோரியா ஆல்பெர்ட் மியூசியம் சார்பாகவும்  மேடை எற்றினோம். லண்டன் வாழ் தமிழர்களுக்கு அது பெரிய விருந்து. வெள்ளைக்கார இடங்களுக்குச் சென்றபோது ஆங்கில மொழி பெயர்ப்பும் உண்டு.

 

Dr Nagaswamy, Dr N Kala, S Swaminathan and S Nagarajan

சென்னையில் சந்திப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் கல்யாணத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னைக்குப் புறப்பட இருந்த தருணத்தில் எல்லா விமானங்களும் ரத்தானதால் டாக்டர் நாகசாமி அவர்களைப் பார்க்காமலேயே லண்டனுக்குத் திரும்பினேன். இந்த முறை ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னைக்கு வந்து சேர்ந்தவுடன் ஜெட் களைப்பு Jet lag பற்றிப் பாராமல் ஒரு ஆட்டோவில் நானும் என் அண்ணனும் அவரைப் பார்க்க பெஸண்ட் நகருக்கு விரைந்தோம்.

 

இன்முகத்துடன் வரவேற்றார்; இது மரியாதையின் (Courtesy Call) பொருட்டு நடைபெறும் சந்திப்புதான் என்றும் அதிகம் அவரைத் தொந்தரவு செய்யப் போவதில்லை என்றும் பீடிகை போட்டுப் பேச்சைத் தொடங்கினேன். அவரது மகள் டாக்டர் என். கலா எங்களுக்கு இனிப்பும் தேநீரும் வழங்க, டாக்டர் ரமாதேவி என்ற மாணவி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள உதவ, ஒரு மணி நேரம் ஓடிப் போயிற்று!

 

என்ன பேசினோம்?

 

நான் அவருடைய லேடஸ்ட் (Latest Research) ஆராய்ச்சி பற்றிக் கேட்டு பேச்சைத் துவக்கினேன். திருக்குறளின் அறத்துப் பாலும், பொருட்பாலும் அப்படியே சம்ஸ்கிருத நூல்களில் இருப்பதாகவும் அது பற்றி எழுதப் போவதாகவும் சொன்னார். ஜி.யூ. போப் எப்படி திருக்குறளை கிறிஸ்தவ நூல் போலத் திரிக்க முயன்றார் என்பதையும் எடுத்துரைத்தார்.

 

பின்னர் நான் அவரிடம் இரண்டு வேண்டு கோள்களை முன்வைத்தேன்:

  1. அவருக்கும் காஞ்சி பரமாசார்ய சுவாமிக ளுக்கும் நடந்த உரையாடல்களை எழுத வேண்டும்
  2. சத்திரங்கள் (Choultries) என்பது இந்தியாவின் ஒப்பற்ற பண்பாட்டின் தடயம்; வேறு உலகில் எங்கும் காணாத புதுமை; ஆகையால் இது பற்றி கிடைக்கும் தகவல்களை அவர் எழுத வேண்டும்–

என்று கேட்டுக் கொண்டேன்.

Dr R Nagaswamy and his student Dr Ramadevi

உடனே அவர் சத்திரம் பற்றியும், பிராமணர் குடியேற்றத்துக்கு சோழ மன்னர்கள் எடுத்த முயற்சிகளையும் புள்ளி விவரம் வாரியாகச் சொன்னார்.

இந்த வயதிலும் அவர் எல்லா எண்கள், புள்ளி விவரங்களைப் புத்தகத் துணை இல்லாமல் வாரி வழங்கியது எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

எனது அண்னன் நாகராஜன், உடனே அவர் யூ You Tube ட்யூபில் நாள் தோறும் இது போல ஏ தாவது சொன்னால் பலனுடையதாக இருக்கும் என்றான். அருகில் நின்ற டாக்டர் ரமாதேவியிடம், அவரைப் போன்ற இளம் வயதினர் உதவி செய்தால், டாக்டர் நாகசாமி எளிதில் செய்யலாம் என்றான் . அந்தப் பெண்மணியும் ஆவன செய்வதாகக் கூறினார்.

 

டாக்டர் நாகசாமி கடைசியாக வெளியிட்ட நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவருடைய மகள் டாக்டர் கலா சென்னைப் பல்கலைக்கழக சைபர் க்ரைம் இயல் (Department of Cyber Crime) தலைவி என்றும் அவரும் சிறுவர்களுக்காக ஒரு நூல் எழுதி இருப்பதாகவும் சொல்லி ஒரு நூலை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 

அடுத்த முறை அவருடைய லண்டன் பயணம் எப்போது? என்று ஆவலுடன் கேட்டேன். வயதாகிவிட்டதால் அவர் ‘பார்க்கலாம்’ என்று கமிட் commit செய்யாமல் பதில் கொடுத்தார். ஏனென்றால் அவரை பிரிட்டிஷ் மியூசியம் அழைத்தது. அதாவது லண்டனிலேயே தங்கி அவர்கள் கருவூலத்தில் உள்ள இந்திய சிலைகளை ( Bronzes and Statues) அடையாளம் காண உதவி கேட்டனர். அவர்களே, இரண்டு மாதம் தங்க வசதி செய்வதாகவும் சொன்னார்கள். ஆனால் அப்படிப்பட்ட கமிட்மெண்டை Commitment – பணியை— ஏற்க முடியாத சுறுசுறுப்பான வாழ்வை உடையவர் டாக்டர் நாகசாமி. அவரை விட்டால் தெளிவாக, கன கச்சிதமாக சிலைகளை, செப்புத் திருமேனிகளை அடையாளம் காணுமறிவுடையோர் இல்லை என்றே சொல்லலாம்.

கற்றோருக்குச் சென்றவிடம் எல்லாம் சிறப்பு என்பதற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் டாக்டர் நாகசாமி. அவர் பேசும் பேச்சில் (Waste) வீண் என்று எதுவும் இராது. ஒவ்வொரு சொல்லும் அக்ஷர லக்ஷம் பெறும்.

 

ஒரு அறிஞர் இருக்கும் போதே — உயிர் வாழும்போதே— அவரை மதித்துப் போற்றி வாழ்த்தி வணங்குவதே சாலச் சிறந்தது. அவரைச் சந்தித்ததில் நானும் என் கடமையில் ஏதோ ஒரு பகுதியை நிறைவு செய்தது போல ஒரு உணர்வு.

 

வாழ்க நாகசாமி அவர்கள்! வளர்க அவர்தம் புகழ்!

–Subham–

100 Wonders of Karnataka- Part 1(Post No.4160)

Temple in Badami

Compiled by London Swaminathan

 

Date: 25 August 2017

 

Time uploaded in London- 6-12 am

 

Post No. 4160

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

Karnataka state in South India has several natural, architectural, historical and religious wonders. It was once called Mysore state. It has got huge monoliths, gateways, Nandhis (bulls) and Palaces. Everything is massive in Karnataka. The Hindu kings aimed high and achieved the best in architecture.

I will list them district wise.

Bengaluru (Bangalore is the capital of the state.

1.BASAVANGUDI OR BULL TEMPLE

It was built by Kempe Gowda around 1500 CE. The temple has a huge Nandhi (bull). It is a monolith sculpture measuring 4-57 metres in height and 6-10 metres in length.

There are other wonders like Lalbagh Botanical Gardens Tippu Sultan’s palace, Planetarium and several museums.

Dodda Ganapathi temple has a huge monolithic statue.

Badami Caves

2.CHANNAPATNA

Its wooden toys, wooden beads, bangles, boxes and light furniture are very popular.

 

3.KUDALA SANGHAMA

This is the confluence of Krishna and Malaprabha rivers. It is famous for the Sanghameswara temple. It is built in Chalukyan style.

Bagalkot district

 

4.AIVALLI (AIHOLE)

It was capital of Chalukyas for 400 years between 4th and 7th centuries. 140 temples with exquisitely carved sculptures are in the Vishnu and Shiva temples. It is a holy place for the Hindus, Jains and Buddhists

 

5.BADAMI

It was the capital of Early Chalukyas from 540 to 760 CE. The cave temples and museum are very popular tourist attractions. Buddhist rock cut caves, Hindu and Jain sculptures attract the tourists.

6.MUDHOL

It has got famous places of worship belonging to different religions. It is on the bank of Ghataprabha river. Shiva temple, Kamaleswara temple, Mahavir Basadi, Brahmagaddi Veerashiva mutt and Syed Beer dargah are located here.

It is very rare to get so many different religious spots in one place.

Hampi Stone Ratha

7.PATTADAKAL

It is on the banks of River Malaprabha and famous for 10 temples. It is declared as a UNESCO WORLD HERITAGE centre. The Virpakshesvara Temple has a beautiful huge gateway adorned with inscriptions. It has a huge Nandhi (bull) which is 2-6 metres tall.

 

Belagaavi (Belgaum) District

  1. BELAGAAVI

It is very near Maharashtra border. It was the capital of Ratta Kings during 13th century. Several temples are in the town Kittur Rani Chennamma is associated with the place. She was one of the first freedom fighters.

 

9.GOKAK FALLS

Gokak falls is over the Ghataprabha river. It is 170 feet high. Because of its horse shoe shape it looks like a Mini Niagara falls. It is a natural wonder. Relics of ancient temples are in this place.

 

10.SAUNDATTI

It was the original capital of the Ratta Kings. There is also a fort built in 1734 Two famous temples are here.

 

Bellari District

 

11.HAMPI

It was once the capital of the mighty Vijayanagara Empire which destroyed the Muslim invaders. It is on the banks of the River Tungabadra. Harihara and Bukka founded the city in 1336 CE. It has got the relics of old temples destroyed by the Muslim invaders. Vittala Temple has the famous Kalyana Mandapa and Stone Chariot. The musical pillars in the temple are architectural wonders.

Virupaksha Temple 50 metre high gateway and pillared halls. It is famous for Vijayanagara period paintings. Lotus Maha was built for women. Ugra Narasimha temple has a huge Narasimha statue under the seven headed snake. It is 6-7 metre high. A huge Linga is also located in running water. Mahaswami Dibba buit by Krishna Deva Raya is here. Queen’s bath here is 15 metre square with a lotus headed fountain. Even in dilapidated condition Hampi stands as a symbol of Vijayanagara samrajya. In its glorious days it excelled all the capital cities in the world.

 

Bidar District

BIDAR

  1. Bidar was the capital of Bahamani Sultans and Barid shah. Ahmed Shah rebuilt the old Hindu fort and changed it into a Muslim (style wise) Fort. It has got lot of tombs and buildings and famous for its Muslim architecture.

 

13.BIDAR FORT

It was built around 1426 CE. There are five big Gateways, Royal residence Rangin Mahal. This Mahal has ornately carved wooden pillars with  Persian couplets engraved on it. Royal Kitchens, Royal baths, Ladies Apartments and 16 pillared prayer hall are popular attractions.

  1. 71 FEET HIGH WATCH TOWER

The 71 feet high watch tower ‘Chaubara’ stands in the middle of the town. A bird’s eye view of the town is available from the top of the tower.

 

15 & 16 NANAK JHEERA AND NARASIMHA JHEERA

Nanak Jheera is associated with Guru Nanak. When the town was undergoing a severe famine, his visit made the water to gush out as a spring (jheera). The sacred site is marked with a huge Gurudwara.

Narasimha Jheera (spring) is the only subterranean stream in Karnata.The subterranean cave has a water spring and Narasimha statue. Papanash, a Shiva temple is also located here.

Both the springs are natural wonders.

—to be continued

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 3 (Post No.4159)

Written by S.NAGARAJAN

 

Date: 25 August 2017

 

Time uploaded in London- 4-53 am

 

Post No. 4159

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

      

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 18-8-2017 தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 26வது) கட்டுரை

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 3

 ச.நாகராஜன்

 

“ரஸவாதக் கல்லை எப்படிச் செய்வது என்பதைச் சத்தியமாகக் கூறி விடுகிறேன். எனக்கு வார்த்தை ஜாலம் தெரியாது. சில எளிய, நேரடியான வார்த்தைகளிலேயே இதைச் சொல்லி விடுகிறேன்.– பேஸிலியஸ் வாலெண்டினஸ் (Basilius Valentinus)

    

       கெபரின் எண்ணம் கந்தகத்தை எடுத்து விட்டு பாதரஸத்தைச் சேர்த்தால் தங்கமாக மாற்றி விடலாம் என்பது தான். அவர் மனித ரத்தம் மூலம் தங்கத்தை உருவாக்கலாம் என்ற கருத்தை எள்ளி நகையாடினார்.

 

     பூமிக்கு அடியில் இயற்கை உருவாக்கிய உலோகங்களில் மனித ரத்தம் கலந்திருக்கிறதா என்ன என்று அவர் தர்க்கரீதியான கேள்வியை எழுப்பினார். இதை அனைவரும் ஆதரித்தனர்.

 

     இடைக்காலத்தில் வாழ்ந்த ரஸவாத நிபுணர்கள் பாதரஸத்தை வடிகட்டி பல்வேறு உலோகங்களைச் சேர்த்து ரஸவாதக் கல்லை உருவாக்க முயன்றனர்.

 

    15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் பாதரஸத்தை வடிகட்டுவதில் மட்டும் ஈடுபடவில்லை. மேட்டர் எனப்படும் மூலப் பொருள் பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தனர்.

 

       மத்திய ஐரோப்பாவில் வெள்ளியையும் தாமிரத்தையும் வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் தாதுப் பொருள்கள் மரம் போல வளர்வதாகவும் அதைத் தாங்கள் நேரடியாகப் பார்த்ததாகவும் கூறவே இந்தப் பரபரப்புச் செய்தி எங்கும் பரவியது.

 

    சில மரங்களுக்கும் தாதுப் பொருள்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் ஆராய்ச்சியாளர்களைக் கவர்ந்தது.

இந்த தாதுப் பொருள்களை நீண்ட காலம் பூமியிலேயே இருக்க விட்டால் அவை “வளர்ந்து: தங்கமாக ஆகி விடும் என்று சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

 

 

     எப்படி ஒரு செடியிலிருந்து மலரை எடுத்தவுடன் அது வளராமல் “இறந்து விடுகிறதோ அது போல தாதுப் பொருள்களை எடுத்து விட்டால் அவை தங்கமாக மாறாமல் “இறந்து விடுவதாக சில ரஸவாத நிபுணர்கள் கூறலாயினர்.

 

     ஆகவே சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டவற்றை திரும்பி தங்கமாக மாற்றுவது சுலபம் தான் என்ற கருத்து பரவவே கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

     நன்கு பயிற்சி பெற்ற ரஸவாத நிபுணர்கள் பெரும் செல்வந்தர்களுக்கு ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி என்பதைச் சொல்லித் தர முன்வந்தனர். இதனால் எங்கும் தங்கம் என்பதே பேச்சு என்ற நிலை உருவானது.

    சாமானியர்களும் இந்த ‘கலிபோர்னியா கோல்ட் ரஷ் எனப்படும் தங்க வேட்டையில் ஈடுபடவே இப்போது நமது நாட்டில் டீக்கடைகள் இருப்பது போல ஆங்காங்கே சிறு சிறு சமையலறை போன்ற லாபரட்டரிகள்  உருவாகின. ஈயத்தைத் தங்கமாக்க அனைத்து குட்டி லாபரட்டரிகளும் முயன்றன!

     இந்தக் காலகட்டத்தில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்ஃ மர்மமான ஒரு யோகியும் ரஸவாத நிபுணருமான இரேனஸ் பிலாலெதெஸ் (Eirenaeus Philalethes) என்பவரின் நூல் ஐரோப்பா முழுவதும் பரவியது. அனைவரும் அதை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தனர்.

 

 

         இன்னொரு குறிப்பிடத்தகுந்த ரஸவாத நிபுணர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்டார்கி (George Starkey) என்பவர்.  தான் ஒருவர் மட்டுமே நிஜமாக பிலாலதெஸைப் பார்த்ததாகக் அவர் கூறினார், அத்துடன் அவர் விஞ்ஞானியான ராபர்ட் பாயிலை நேரில் சென்று சந்தித்தார்; ரஸவாதக் கல்லை எப்படிச் செய்வது என்ற ரகசியத்தை தன்னிடம் மட்டுமே பிலாலதெஸ் கூறியிருப்பதாகச் சொன்னார்.

1651ஆம் ஆண்டில் ஸ்டார்கியிடம் தனக்கு ரசாயன ரகசியங்களைக் கற்பிக்குமாறு பாயில் வேண்டினார்.

உண்மையில் நவீன அறிவியல் ரசாயத்துறையின் தந்தை என்று கருதப்படும் ராபர்ட் பாயிலுக்கு ரசாயனம் பற்றி எதுவுமே தெரியாது என்றும் அவர் ஸ்டார்கியிடம் தான் ரசாயனம் பற்றிச் சிறிது தெரிந்து கொண்டார் என்றும் அறிஞர்கள் வட்டாரத்தில் இன்றளவும் பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது.

 

 

      பாயில் தனது நோட்டுப்புத்தகத்தில் தான் நாடோடியாக அலையும் ரஸவாதி ஒருவரைச்  சந்தித்ததாகவும அவர் தன் கண் முன்னேயே ஈயத்தைத் தங்கமாக ஆக்கிக் காட்டியதாகவும் எழுதி வைத்துள்ளார். அந்த தங்கத்தின் எடை அரை அவுன்ஸ் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நேரடி நிரூபணத்தால் அவர் ஈயத்தைத் தங்கமாக மாற்றுவது சாத்தியமே என்று உறுதியாக நம்பினார்.

 விஞ்ஞானி நியூமென்னின் நண்பரான பிரின்ஸிப் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதே அவருக்கு ஈயத்தைத் தங்கமாக்கும் அபூர்வ கலை மீது கவனம் திரும்பியது. அவருக்கு இப்படி ஒரு ஆர்வம் உருவாகக் காரணம் அவர் படித்த ஒரு புத்தகம் தான். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தி ட்வெல்வ் கீஸ் (The Twelve Keys) என்பதாகும். இது ஒரு மர்மமான நூல். சங்கேத பாஷையில் எழுதப்பட்ட நூலும் கூட. 15ஆம் நூற்றாண்டில் இந்த நூல் எழுதப்பட்டது. இதை எழுதியவர் பேஸிலியஸ் வாலெண்டினஸ். இவர் கத்தோலிக்க பிரிவில் ஒன்றான பெனிடிக்டின் பிரிவைச் சேர்ந்த ஒரு துறவி.

இவர் எழுதிய நூலை வாசக அன்பர்கள் இணையதளத்தில் படிக்க்லாம். 24 பக்கங்களே கொண்ட இந்த நூல் தங்க ரகசியத்தைத் தரும் நூல்!

                         (தங்கமான ரகசியம் தொடரும்)

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் நடந்த சம்பவம் இது  கம்ப்யூட்டர் முழுவதுமாக உருவாகாத காலம். பிரம்மாண்டமான அறையில் வயர்களும் டியூப்களும் தொங்க ஏராளமான தகடுகள் அவற்றை மூட கருவியானது ஒரே களேபரமாக இருக்கும்.

 

 

ஜான் வான் நியூமேன் (John Von Neumann) என்ற பிரபல விஞ்ஞானி தனது இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடி தான் இவ்வளவு பெரிய அமைப்பை உருவாக்க ஏதுவாக இருக்கும் என்று நினைத்தார்.

பலரிடம் விசாரித்ததில் இப்படிப்பட்ட தகடு வேலை செய்வதில் பெரிய நிபுணர் ஜூலியன் பிஜ்ளோ (Julian Bigelow) என்பவர் தான் என்பதை அறிந்து கொண்டார். அவரைத் தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார்.

 

 

பிஜ்ளோவும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டார்.

குறித்த நேரத்தில் அறைக் கதவு தட்டப்படும் சந்தத்தைக் கேட்டவுடன் ஆர்வத்துடன் நியூமேன் வந்து கதவைத் திறந்தார்.

உள்ளே பிரம்மாண்டமான ஒரு நாய் மிக்க அன்புடன் வாலைக் குழைத்தவாறே உள்ளே நுழைந்தது. நாயைத் தொடர்ந்து பிஜ்ளோவும் உள்ளே வந்தார்.

 

 

ஒரு மணி நேரம் எப்படி தங்களது அமைப்பை உருவாக்குவது என்று தீவிரமாக இருவரும் விவாதித்தனர்.

நியூமேன் காலடியில் அமர்ந்து  கொண்டிருந்த நாய் இடைவிடாமல் ஒரு மணி நேரமும் குலைத்துக் கொண்டே இருந்தது.

 

 

தொந்தரவைச் சகித்தவாறு ஒருவாறு நிபுணர்களின் விவாதம் முடிவுக்கு வந்தது.

 

 

பிஜ்ளோ விடைபெற்று எழுந்தார். தனது காரை நோக்கி நடக்கலானார்.

 

ஒரு நிமிஷம் என்ற நியூமேன், “உங்கள் நாயை அழைத்துச் செல்லவில்லையே!” என்றார், அவர் மறந்து விட்டார் என்று எண்ணி!

என் நாயா!? அது உங்களுடைய நாய் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றாரே பார்க்கலாம் பிஜ்ளோ!

 

நியூமேன் திடுக்கிட்டார்.

யாருடைய நாயோ ஜாலியாக வந்து அறிஞர்களின்டிஸ்கஷனில் கலந்து கொண்டது!

****

 

 

 

 

பாஹுபலி வாழ்க! கோமடேஸ்வர் வெல்க! (Post No.4158)

Written by London Swaminathan

Date: 24 August 2017

Time uploaded in London- 17-16

Post No. 4158

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

சமண மதம் அஹிம்சையை போதிக்கும் மதம். ஆனால் இலங்கையில்  புத்த துறவிகள் (பிட்சுக்கள்) எப்படி அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித் தார்களோ அப்படி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண துறவிகள் தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித்தனர்.

இதை விளக்க ஒரு சிறிய சம்பவம் போதும்; பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க அருள் புரியுங்கள் என்று வளவர்கோன் பாவை மங்கையற்கரசியும் முதல் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த வேண்டுகோளின் பேரில் மதுரைக்கு எழுந்தருளினான் ஒரு சிறிய பிராமணப் பையன். அவன் பெயர் சம்பந்தன். அவன் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைக்க சமணர்கள் முயன்றனர். உடனே அந்த தீயைப் “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே” என்று அவர் கட்டளையிட அக்கினிதேவன் பாண்டிய மன்னன் வயிற்றில் புகுந்து சூலை நோயை உண்டாகினான். அதைத் தீர்த் வைக்க திரு ஞான சம்பந்தர் முயன்று,  அனல்வாதம், புனல் வாதம் போட்டிகளில் வென்று உலகப் புகழ் பெற்றார். அழிவு நிலையில் இருந்த சைவ சமயத்தை தழைத்தோங்க வைத்தார். சுப்பிரமணியரின் மறு அவதாரம் சமபந்தப் பெருமான் என்பதை உலகம் உணர்ந்தது. அஹிம்சையைப் பின்பற்ற வேண்டிய சமணர்கள் ஹிம்சை செய்ததால் பாண்டிய மன்னர் அவர்களைக் கழுவில் ஏற்றினான்.

மத மாற்றம் செய்ய முயல்பவர்கள் உலகெங்கும் என்ன அட்டூழியங்களை செய்தார்களோ அதையே புத்த, சமண அரசியல்வாதிகள் செய்தனர்.

இவ்வளவு தெரிந்தும் சமணர்கள் மீது எனக்கு அபார அன்பு உண்டு. அவர்கள் இலக்கணப் புலிகள்;    மொழியியல் வல்லுநர்கள்! தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அரிய பெரிய நிகண்டுகளையும், இலக்கண நூல்களை யும் யாத்த பெருமை அவர்க ளையே சாரும்.

லண்டனிலிருந்து நான் என் குடும்பத்துடன் சென்னைக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். எங்கள் அருகில் இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். எங்களுக்கு விமானப் பணிப்பெண்கள் உணவு தந்த போது இவ்விரு இளைஞர்களும் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர்கள் கொண்டுவந்த உணவுப் பொட்டலங்களை அவிழ்த்துச் சாப்பிட்டனர். பின்னர் நான் மெதுவாகப் பேச் கொடுத்து காரணம் என்ன என்று கேட்ட போதுதான் தெரிந்தது அவர்கள் சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கிழங்கு, வெங்காயம், பூண்டு, மாமிச வகையறாக்களை அறவே வெறுப்பவர்கள் என்றும், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிட மாட்டார்கள் என்றும் அறிந்தேன். பின்னர் கொடுக்கப்பட்ட உணவுகளையும் மறுத்து பட்டினியுடன் இந்தியாவரை பயணம் செய்தனர் அந்த இளைஞர்கள். என்னுடன் வேலை பார்த்த ஒரு சமணரும் இப்படித்தான். மேலும் லண்டன் வாழ் ஜைனர்கள், இந்துக்களின் கோவில்களுக்கும் வருவர். தீபாவளியைக் கொண்டாடுவர். ஏனெனில் கர்ம வினைக் கொள்கைகளில் அவர்கள் நம்முடைய கொள்கை ஏற்கின்றனர்.

இன்ன பிற காரணங்களால் சமண மத சின்னங்கள் உள்ள இடங்களுக்குத் தவறாமல் போய் வருவேன். மதுரையைச் சுற்றி நாகமலை யானை மலை, திருப்பறங்குன்ற மலைகளில் உள்ள சமன குகைகளுக்கு விஜயம் செய்ததை இங்கு படங்களுடன் வெளியிட்டும் உள்ளேன்.

இந்த முறை எனது  இந்திய விஜயத்தில் மிகக் குறுகிய காலம் இருந்த போதும், கர்நாடகத்தில் உள்ள சிரவண பெலகோலா செல்ல வாய்ப்பு கிடைத்ததை நழுவவிட விரும்பவில்லை. மழைத் தூறலுக்கு இடையே 2300 ஆண்டுப் பெருமை வாய்ந்த விந்திய கிரி- சந்திர கிரி குன்றின் அடிவாரத்தை அடைந்தோம். இங்குதான் மௌரியப் பேரரசன் — அலெக்ஸாண்டரை நடுநடுங்க வைத்த பிரம்மாண்ட இந்தியப் படை கொண்ட— சந்திர குப்த மௌரியன்  துறவி போல வாழ்ந்து உயிர்நீத்தான் என்பது ஐதீகம்- செவிவழிச் செய்தி.

அந்த மலையின் மீது பிரமாண்டமான ஒற்றைக் கல் சிலையாக நிற்கும் பாஹுபலி — கோமடேஸ்வர் — ஆயிரம் ஆண்டுப் பழமையுடையவர். உலக அதிசயங்களில் ஒன்று. இது பற்றி 12 ஆண்டுக்கு ஒரு முறை அவருக்கு நடக்கும் மஸ்தகாபிஷேகம் பற்றி தினமணியில் விரிவாக எழுதியுள்ளேன். மேலும் அவரது தபால் தலை வெளியான போது ஒரு ஷீட் (sheet) வாங்கி வைத்துக் கொண்டேன் .  நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்த போது புளகாங்கிதம் ஏற்பட்டது.

57 அடி உயரம் உடைய கோமடேஸ்வர் (பாஹுபலி) நிற்கும் மலை 2000 அடி உயரம். அதுவும் செங்குத்தான படிகளில் ஏற வேண்டும். எல்லோரும் மூச்சு இளைக்க மெதுவாக ஓய்வு எடுத்துதான் ஏற முடியும்.

மேலே ஏறுவதற்கு 45 நிமிடம்! இறங்குவதற்கும் 45 நிமிடம்! மேலே சென்றவுடன் செலவழிக்கும் நேரம் நம் இஷ்டத்தைப் பொறுத்தது. ஆனால் செருப்பு போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. இது சமணர்களின் கோவில். அங்கே ஒரு அர்ச்சகர் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்கிறார். ஆகவே இரண்டு மணி நேரத்துக்கு பாத அணிகள் இல்லாமல் சென்று தரிசனத்தை முடித்தோம்.

சிரவண பெலகோலா , கர்நாடக மாநிலத்தில், பெங்களூரில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை கி.பி.980-ஐ ஒட்டி, கங்க வம்ச மன்னர் ராஜமல்லனின் தளபதி சவுண்டராயன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

கோமடேஸ்வர் என்பவர் முதல் தீர்த்தங்கர ரிஷபதேவரின் புதல்வர். ஒரு சமண துறவி. ஒரு யோகி, புலன்களை வென்ற நிலையில், தவம் செய்யும் காட்சி இது. அவர் மீது, செடி கொடிகள் வளரும்; பாம்புப் புற்றுகள் தோன்றும். வால்மீகி முனிவரைப் போல!! அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார்கள் சிற்பிகள்  இங்கே. மாபெரும் சிலை மீது செடிகொடிகள் படருவது போல சிற்பம். கீழே பாம்புகள்; அதில் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்து வால் மற்றும் தெரியும் காட்சி. அதைச் சுற்றிலும் சமண தீர்த்தங்கரர், சமண துறவிகளின் அற்புதமான சிலைகள். யோகம் என்றல் என்ன என்பதை விளக்கும் சிலைகள். இது போல, ஆனால் தலையில்லாத நெடிய சிலைகள் சிந்து-சரஸ்வதி நாகரீக இடங்களில் இருந்தும் கிடைத்துள்ளன.

பெல  கோலா என்பது தூய தமிழ்ச் சொற்கள் – சமண முனிவரின் ‘வெள்ளைக் குளம்’ என்பது சிரவண ‘பெல குலா’ என்று திரிந்து விட்டது!

இங்கு 800-க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. கோமடேஸ்வர்– பாஹு பலியின் காலடியில் பிராக்ருத, தேவநாகரி லிபி கல்வெட்டு உள்ளது. கி.பி. 600 முதலான கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் மௌரியத் தொடர்பைக் காட்டும் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. செவிவழிச் செய்தி, இலக்கியம் மூலம் மௌரியர் தொடர்பு பற்றி அறிகிறோம். சமண தீர்த்தங்கர சிலைகள் இருட்டு அறைகளில் உள்ளதால் அதன் முழு அழகையும் காண இயலவில்லை. சிலை அருகில் அன்ன தானத்துக்கு பணம் செலுத்தலாம். நன்கொடைக்கு ரசீதும் கொடுக்கிறார்கள்.

 

கர்நாடகத்தில் ஒரு அதிசயம்!

நாங்கள் சென்ற பேலூர், ஹலபேடு, சிரவணபெலகோலா — எங்குமே நுழைவுக் கட்டணம் கிடையாது; காலணிகளைப் பாதுகாக்க மட்டுமே கட்டணம் கொடுத்தோம்; அதற்கும் தொல்பொருட் துறைக்கும் தொடர்பு இல்லை.

இந்தச் சிலைகளைக் காணும் போது அச்சமும் பயபக்தியும் ஏற்படுகிறது. அங்கங்கள் அனைத்தும் பரிபூரண அழகில், கன கச்சித அளவுகளில் அளவில் செதுக்கப்பட்டுள்ளன.

(2017 ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிரவண பெலகோலா சென்ற பின்னர் எழுதிய கட்டுரை.)

சுபம்–

பாரதியார் நூல்கள் – 37 நாமக்கல் கவிஞர் கவிதைகள்! (Post. 4157)

Written by S.NAGARAJAN

 

Date: 24 August 2017

 

Time uploaded in London- 4-59 am

 

Post No. 4157

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 37

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை கவிதைகள்!

 

ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் என்று நாடறியும் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

திராவிட மாயையில் வீழாது தனது சமச்சீர் தன்மையைக் கொண்டிருக்கும் அபூர்வ தமிழர்களில் நாமக்கல் கவிஞரும் ஒருவர்.

அவர் காந்தியைப் பாடினார்; உலகம் வேண்டும் சாந்தியைப் பாடினார். இவரது பாடல்களுள் பெரும்பாலானவை காந்தியைப் போற்றிப் பாடியதே என்று கூறலாம்.

ஆரிய-திராவிட வாதம் என்பதெல்லாம் பொய் என்று உரக்கக் கூவியவர் என்பதாலும் அதைப் பற்றி அருமையான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியதாலும் இவர் தமிழருள் தலை சிறந்து நிற்கிறார்.

தேசமும் தெய்வமும் ஒன்று என்ற கொள்கையை உடைய இவர் ஒரு சிறந்த பாரதி பக்தர்.

பாரதியாரைப் போற்றி இவர் பாடிய ஏழு சிறந்த பாடல்கள் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்ற தொகுப்பில் அடங்கி உள்ளன.

மூன்று பாகங்களைக்கொண்ட இந்தத் தொகுப்பு நூலில் மொத்தம் 251 கவிதைகள் உள்ளன.

முதல் பாகத்தில் பாரதி பாட்டு மற்றும் உலகம் வாழ்க ஆகிய இரு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

இரண்டாம் பாகத்தில் பாரதி ஓர் ஆசான், பாரதிக்கு வெற்றி மாலை, பாரதி நினைவு, பாரதி எனும் பெயர் ஆகிய நான்கு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

மூன்றாம் பாகத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி என்ற ஒரு கவிதை இடம் பெற்றுள்ளது.

எளிய சொற்களால் அரிய பெரிய கருத்துக்களைச் சொல்லும் வன்மை படைத்தவர் நாமக்கல் கவிஞர்.

பாரதியின் பாட்டு என்ற கவிதையில் பாரதியாரின் சொல் வன்மையைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

அச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்

அடங்கியிருந் தறம்மறந்த தமிழர் நாட்டைப்
பச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்

பாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று,
நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை

நீக்காமல் விடுவதில்லை!’ எனமுன் வந்து
துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத்

தூண்டியது பாரதியின் சொல்லே யாகும்.

படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்

பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித்

துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி,
எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை

இப்பொழுதே இக்கணமே!’ என்றென் றார்த்திங்(கு)
அடித்துரைத்தே ஆவேசம் கொள்வா னென்றால்

அப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்!

புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப்

புத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச்
சக்தியளி மிகவிளங்கும் சொற்க ளாலே

தாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி
எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி

இறந்தேனும் ஈன்றவளை மீட்போம்!’ என்று
பக்தியோடும் அறப்போரில் முனைந்து நிற்கப்

    பண்ணினது பாரதியின் பாட்டே யாகும்.

 

காந்தியடிகளின் சிறந்த பக்தரான நாமக்கல் கவிஞர் அவரைப் பற்றி உரிய விதத்தில் கவி பாட கம்பனோ, காளிதாஸனோ தியாகராஜரோ அல்லது பாரதியோ இல்லை என்று அங்கலாய்க்கிறார் இப்படி:
கவிபாடிப் பெருமைசெய்யக் கம்ப னில்லை

கற்பனைக்கிங் கிலையந்தக் காளி தாசன்
செவிநாடும் கீர்த்தனைக்குத் த்யாக ரில்லை

     தேசீய பாரதியின் திறமும் இல்லை

“இமயம் முதல் குமரி முனை” வரை உள்ள இந்திய நாட்டின் ஒற்றுமையை பாரதியார் வலியுறுத்தினார். அதை நாமக்கல் கவிஞர் தன் பாட்டில் சுட்டிக் காட்டுகிறார் இப்படி:

தமிழரென்ற தனிப்பெயரைத் தாங்கி னாலும்

தனிமுறையில் அரசாளத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்

இந்தியத்தாய் சொந்தத்தில் இடைய றாமல்
அமைதிதரும் ஒற்றுமையை அழுத்திச் சொல்லி

அன்புமுறை தவறாத அறிவை ஊட்டி
அமிழ்தமொழி தமிழினத்தின் ஆக்கம் காக்கும்

     ஆற்றல்தரும் பாரதிஓர் ஆசான் என்றும்.

                               (பாரதி ஓர் ஆசான் என்ற பாடல்)

தேர்ந்தெடுத்த சொற்களால் பாரதியின் புகழை நாமக்கல் கவிஞர் பாடும்போது அந்தப் பாட்டில் நம் உள்ளம் குளிர்கிறது:

சுத்தவீர தீரவாழ்வு சொல்லித்தந்த நாவலன்

சூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்
சக்திநாடிப் புத்திசெல்லச் சாலைகண்ட சாரதி

சத்தியத்தில் பற்றுக்கொண்ட சுப்ரமண்ய பாரதி.

ஆடுமாடு போலவாழ்வு அடிமைவாழ்வு என்பதை

அரிவரிக்கு வழியிலாத அனைவருக்கும் தென்படப்
பாடிநாடு வீடுதோறும் வீறுகொள்ளப் பண்ணினான்

பாரதிக்கு வேறொருத்தர் நேருரைக்க ஒண்ணுமோ?

அஞ்சிஅஞ்சி உடல்வளர்க்கும் அடிமைப்புத்தி நீக்கினான்

அன்புமிஞ்சும் ஆண்மைவாழ்வில் ஆசைகொள்ள ஊக்கினான்
கெஞ்சிக்கெஞ்சி உரிமைகேட்கும் கீழ்மைஎண்ணம் மாற்றினான்

     கேடிலாது மோடிசெய்யும் காந்திமார்க்கம் போற்றினான்.
(பாரதிக்கு வெற்றி மாலை என்ற பாடல்)

பாரதி நினைவு என்ற பாடலில் பாரதி என்று நினைத்தவுடன் என்ன நடக்கும் என்பதைக் கவிஞர் கூறுகிறார்:

சுப்ரமண்ய பாரதியை நினைத்திட் டாலும்

சுதந்தரத்தின் ஆவேசம் சுருக்கென் றேறும் ;
இப்ரபஞ்சம் முழுதும்நமக் கினமாய் எண்ணும் ;

இந்தியன்நான்என்றிடும்நல் லிறுமாப் புண்டாம் ;
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும் ;

எல்லையற்ற உற்சாகம் எழுந்து பொங்கும்
ஒப்பரியதமிழன்எனும் உவகை ஊறும் ;

     உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்க முண்டாம்.

தமிழர்களுக்கு நாமக்கல் கவிஞரின் அறிவுரை இது தான்:

சுப்ரமண்ய பாரதியின் பாட்டுபாடிச்

    சோம்பல், மனச் சோர்வுகளை ஓட்டு.

                     (பாரதி எனும் பெயர் என்னும் பாடல்)

சுப்பிரமணிய பாரதியின் நாமம் பற்றிச் சொல்ல வரும் கவிஞர் அது கவலையை நீக்கும் சூத்திரம் என்கிறார்:

அனுபல்லவி

நிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம்
நிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம்

சரணங்கள்

அச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து
ஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து
கொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு
கொடுமையை எதிர்த்திடக் கூரிய மறுப்பு!
         (ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி என்னும் பாடல்)

பாரதியைப் போற்றும் அன்பர்களுக்கு நாமக்கல் கவிஞரின் பாடல்கள் தேன் வந்து பாயுது காதினிலே என்ற ரகத்தைச் சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களாகும்.

நாமக்கல் கவிஞரின் பாடல்கள் கீழ்க்கண்ட இணைய தளத் தொடுப்பிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.72,73,85 ஆகிய தொடர் எண்களில் நாமக்கல் கவிஞரின் கவிதைகள் உள்ளன.

 

இதே தளத்தில் பாரதியாரின் அனைத்துக் கவிதைகளும் இருப்பது குறிப்பிடத் தகுந்தது.

www.projectmadurai.org

ப்ராஜக்ட் மதுரைக்கு தமிழர்களின் நன்றி என்றும் உரித்தாகுக.

 

Officer Anecdotes: Donkeys and Officers are Same! (Post No.4156)

 

Compiled by London Swaminathan

 

Date: 23 August 2017

 

Time uploaded in London- 16-09

 

Post No. 4156

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

General Grant once expressed his contempt for a certain officer. Another General protested that the man in question had been through ten campaigns .

General,said Grant,

So has that mule yonder, but he is still a jackass.

 

Xxx

Abraham Lincoln and Barnum

Once during the War, Barnum brought his show to Washington and invited president Lincoln to come and see its wonders.

The president noted all the exhibitions with appropriate remarks and, when shown the midgets, General Tom Thumb and Admiral Nutt, remarked to Barnum,

“You have some pretty small generals, but I think I can beat you.”

 

Xxxx

Gorge V

 

When George V was Prince of Wales , he held the rank of Lieutenant in the Marines. One day on the afterdeck of a battle ship, he was conducting drill under the supervision of a senior officer. The deck had been cleared even of its quad rails . The prince was not well versed in drills and his superior was clearly put out his awkwardness and slowness of command. At last the squad was marching full on for the stern and the unguarded edge and it seemed as though the Prince had forgotten the command to stop, or face about, or else failed to realise the situation.

Sputtering with wrath, the officer snapped, as the men neared the edge, “God Almighty, Sir, can’t you at least say Goodbye to your men!”

Xxx

No questions,please!

Stonewall Jackson sent the following telegram to the War Department at Richmond

“Send me more men and fewer questions.”

 

 

Xxxx

Only one small Complaint!

A French field marshal who had attained that rank by court favour, not by valour, going one evening to an opera, forcibly took possession of the box of a respectable Abbé, who for this outrage brought a suit.

The Abbé thus addressed the court,

I do not come here to complain of Admiral Suffrein  who took so many ships in the EastIndies ;

I do not come here to complain of Count de Grace  who fought so nobly in the West

I do not come here to complain of the Duke de Crebillon who took Minorca.

But I come to complain of Marshal B —- who took my box at the Opera, and never took anything else.

 

Xxx SUBHAM XXX

 

Marches and Regulations Anecdotes (Post No.4154)

Compiled by London Swaminathan

 

Date: 13 August 2017

 

Time uploaded in London- 7-05 am

 

Post No. 4154

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

 

A green young lieutenant was assigned a new detachment. He was a very small and helpless looking individual and when he first appeared before his company, there were many audible comments made about his apparent ineptness. From the rear of the ranks a voice boomed,

And a little child shall lead them

There was a roar of laughter.

Seemingly undisturbed finished the business of the day. Next morning there appeared a notice on the bulletin board

Company A will take a 25 mile hike today with full packs. And a little child shall lead them……….. on a damned big horse.

 

Xxxx

TASTY SOUP

The late Smedley D Butler, always an impulsive man, was generally careful of the welfare of his men. One time in France he encountered two soldiers emerging from the kitchen with a large soup kettle.

Let me taste that, he ordered.

Bu, Gen…………….

No buts! Give me a spoon.

Taking a taste, he sputtered,

You don’t call that soup, do you?

No sir, replied the soldier

I was trying to tell you ,sir, it is dishwater

 

Xxxx

Regulations Anecdotes : Extremely Confidential!!!!!!!!!!!!!

Strange things happen in military circles. An army officer was given the task of preparing a factual report on heavy ordnance. Partly because he was pressed for time and partly because the facts were there, arranged in their best way, he copied pretty much verbatim the article on the subject in the Encyclopaedia Brittanica , and turned it over to his superior s. Not long after, he received along with all his brother officers, a mimeographed copy of his report from the war department in an envelope heavily sealed and labelled, “Extremely Confidential”.

 

Xxxx