முழங்காவில், மாமாங்க ஈஸ்வர பிள்ளையார் ஆலயங்கள்-Part 18 (Post No.12,555)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,555

Date uploaded in London – –  –  5 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 18

33.முழங்காவில் பிள்ளையார் கோவில்

MULANGAVIL PILLAIYAR TEMPLE

இருப்பிடம் – கிளிநொச்சி மாவட்டம், பூ நகரி வட்டாரம்

எங்கெங்கு எல்லாம் அதிசயங்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம்  இறைவனைக் காண்பார்கள் இந்துக்கள். அல்லது இறைவன் இருக்கும் இடமெல்லாம் அதிசயங்கள் நடைபெறும் ; அப்போது பக்தி வலுப்படும்; நம் பிக்கை அதிகரிக்கும் என்றும் சொல்லலாம் .

முழங்காவில் கிராமத்தில் இப்படி ஒரு அதிசயம் நடந்தது; ஒரு பிள்ளையார் வடிவம் இல்லாத கல்லை பிள்ளையார் என்று பூஜித்து வந்தனர். அருகில் ஒரு கிணறு இருந்தது. அபிஷேகத்துக்கு போதுமான அளவு நீர் ஊறாத கிணறு அது. அர்ச்சகரும் மனம் வெதும்பி ஆண்டவனை வேண்டினார். ஒரு நாள் இடி ஓசை கேட்டது; வானத்தில் மேகமும் இல்லை; இடிக்கு முன்னர் வரும் மின்னலும் இல்லை. கிணற்றின் மீது இடி விழுந்தது. அங்கே தண்ணீர் ஊற்று பொங்கி எழுந்தது ; இந்த அதிசயம்  கல்லுப்பிள்ளையார் மீது மேலும் நம்பிக்கையை வளர்த்தது; பின்னர் முறையான விநாயகரை இந்தியாவிலிரிருந்து வடித்து எடுத்து பிரதிஷ்டை செய்தனர் .

முழங்காவில் கிராமம் , யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் இடையே, கடலோர சாலையில் பாதி தூரத்தில் உள்ளது . வில்லு என்பது பள்ளம் போன்ற பகுதி. ; சுண்ணாம்பபுக் கல்லால் ஆன குகை போன்ற பகுதிகள் இருந்து, அவை இடிந்தபோது ஊற்று வெளியே தெரிந்திருக்கலாம் என்பது விஞ்ஞான பூர்வ விளக்கம். அது இடிந்தபோது எழுந்த ஓசையே இடி போல ஒலித்திருக்கலாம் . ஆயினும் அது நிகழவும் ஒரு காரணம் வேண்டும் அல்லவா? அதுவே  இறைவனின் திருவிளையாடல் .

யாழ்ப்பாண – மன்னார் வழிப்பயணிகளுக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் இந்த வில்லு.

திருக்கீதீஸ்வரத்தின் புகழ் பரவிய காலத்தில் 1951ம் ஆண்டில் வி. கே. செல்லப்பா சுவாமி என்பவர் தற்காலிக கூரை அமைத்தார். 1964 ஜூன் 24ம் தேதி  பூமி பூஜை, அஸ்திவாரக் கல் நாட்டு விழா நடந்தது  1965-ம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பிள்ளையார் நிறுவப்பட்டார்  அப்போது அங்கு GROUP PHOTO குரூப் போட்டோவுக்கு POSE கொடுத்தோர் படத்தை ( 16 சிறுவர்கள் உள்பட) திரு ஷண்முகம் ஆறுமுகம் எழுதிய ஆங்கிலப் புஸ்தகத்தில் காணலாம்.

FOR PICTURES GO TO PAGE 46, 47 IN HUNDRED HINDU TEMPLES OF SRI LANKA, SANMUGAM ARUMUGAM, 2014

மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததால் நன்னீர் ஊற்றாக மாறி இன்றுவரை வற்றாத புனித தீர்த்தமாக இருந்து வருகின்றது. மின்னாமல் முழங்காமல் இடி விழுந்தமையாலே முழங்காவில் எனவும் அழைக்கப்பட்டது.. திருக்கேதீஸ்வரம் செல்லும் அடியவர்களின் முதல் வணக்கத்தலம் என்பதுடன் திருக்கேதீஸ்வரம் சென்று திரும்பி வரும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் ஓர் ஆலயமாகவும் விளங்குகின்றது.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பஸ் பயணிகளுக்கு உதவும் பிள்ளையார் முழங்காவில் பிள்ளையார்.

XXXX

34.ஆத்திமோட்டை காத்தான் குளம் பிள்ளையார் கோவில்

மன்னார்- பூ நகரி சாலையில் ஆத்திமோட்டை பிள்ளையார் கோவில்  அமைந்துள்ளது. ஒருகாலத்தில் நல்ல செழிப்புள்ள இடமாக இருந்த இடம் காலப்போக்கில் நீர்வளம் குறைந்ததால் மக்கள் வெளியேறிய ஊர் ஆத்திமோட்டை. அங்குள்ள பழங்கால செங்கற் கட்டிடங்களும் பாழடைந்த கிணறுகளும் இதற்குச் சான்று .

இங்குள்ள பிள்ளையார் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது பரங்கி ஆற்றை அணை போட்டுத் தடுத்துக் கட்டப்பட்ட பெருங்குளம், உடைப்பெடுத்து , பாசனத்துக்கு இருந்த குளங்களுக்குத் தண்ணீர் வராமல் தடுத்தது . 1965ம் ஆண்டில் அது செப்பனிடப்பட்டது ஊர் மக்களும் திரும்பி வந்து பிள்ளையாரை ஆராதிக்கத் தொடங்கினர்.

35.மாமாங்க ஈஸ்வர பிள்ளையார் கோவில் , மட்டக்களப்பு

இருப்பிடம் – மாமாங்க பிள்ளையார் கோவில், அமிர்தகழி, மட்டக்களப்பு மாவட்டம்.

சிவலிங்கம் முக்கிய இடம்பெற்ற இந்தக் கோவில் பிள்ளையார் பெயராலே  அழைக்கப்படுகிறது . சிவலிங்கத்தின் மீது வெள்ளிப் பிள்ளையார் உருவம் உள்ளது ; மட்டக்கிளப்பிலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது

மாமாங்க தீர்த்தம், அமிர்தகழி தீர்த்தம், ஹனுமான் தீர்த்தம், ஆகியன இங்குள்ள புகழ் பெற்ற புனித நீர்நிலைகள் ஆகும் .

ராம பிரான், அனுமன், ராவணன் ஆகியோருடன் தொடர்பு உள்ளதால் இதிஹாச காலம் முதல் சம்பந்தம்     இருக்கிறது.

ராவணன், திருக்கோணேஸ்வரம் செல்லும்போதெல்லாம் இங்குள்ள சிவ லிங்கத்தை வழிபட்டான். அனுமனோ இலங்கை நகரைத் தீயிட்டு எரித்த பின்னர் தன்னுடைய  வால் பகுதி தீயை இங்குள்ள குளத்தில் மூழ்கி அணைத்தான்

ராமபிரான்,  இலங்கைப் போரில் கொல்லப்பட்ட அனைவர்க்கும் இங்கு இறுதிக்கடன் களைச் செய்தான்.

ஒரு ரிஷி முனிவர், புனித கங்கை நீரைக் கொணர்ந்து குளங்களில் கொட்டியதால் அவை அமிர்த கழி ஆயிற்று.

இந்த தீர்த்தத்தில் மருத்துவ குணம் இருப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.

இந்தியாவில் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா மகம் தீர்த்தத் திருவிழாவன்று இங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அவர் மாமாங்கேஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.. காட்டில் கிடைத்த லிங்க வடிவக் கல்லை இங்கே பிரதிஷ்டை செய்தனர் 

இதே போல வெட்டர் இனச் சிறுவன்,  காட்டில் கண்டுபிடித்த ஒரு லிங்கமும் குமாரத்தான் கோவிலில் வழிபடப்படுகிறது இயற்கைச் சூழலில் அமைந்த இந்தக் கோவில், அனைவர்க்கும் மன நிம்மதியைத் தருகிறது. சிவபெருமான், குரு  வடிவாகி ,  ஒரு குருந்த மரத்தின் கீழ், மாணிக்க வாசகருக்கு அருள் மழை பொழிந்ததை நாம் அறிவோம். அந்தக் குருந்த மரங்கள் இங்கே செழிப்பாக வளருகின்றன .

கர்ப்பக்கிருகத்தோடு அந்தராளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம்,  கொடித்தம்பம், வசந்த மண்டபம், முன் மண்டபம் என்பவற்றோடு நவக்கிரகங்களுக்கு தனியான கோயிலுடன் கம்பீரமாக இவ்வாலயம் காட்சியளிக்கிறது.

ஆடி அமாவாசை உற்சவத்தின்  பொழுது  இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர் .

TO BE CONTINUED…………………….

TAGS- அமிர்தகழி, மாமாங்க , பிள்ளையார், முழங்காவில், ஆடி அமாவாசை

தெய்வீக மாயக் கண்ணாடி! (Post No.12554)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,554

Date uploaded in London –  5 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 தெய்வீக மாயக் கண்ணாடி!

ச.நாகராஜன் 

முன்னொரு காலத்தில் ஒரு குக்கிராமத்தில் ராமப்ரபன்னன் என்ற ஏழை அந்தணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். வெறும் காய் கனிகளே அவனுக்கு உணவாக இருந்தது. அவ்வளவு ஏழ்மை!

தினமும் இறை தியானத்திலேயே இருந்த அவன், ஒரு நாள் பகவானை நோக்கி, “இவ்வளவு கஷ்டப்படுகிறேனே, எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டக் கூடாதா?” என்று வேண்டினான்.

பகவான் அவன் முன் உடனே தோன்றினார்.

“அன்பனே! கவலைப்படாதே! இதோ இந்தக் கண்ணாடியை அணிந்து கொள்; ஒரு மனிதனைப் பார்; அவன் உனக்கு உதவி செய்வான்” என்று கூறி மறைந்தார்.

பரம சந்தோஷம் அடைந்த ராமப்ரபன்னன் அந்தக் கண்ணாடியை கண்ணில் அணிந்து கொண்டான்.

என்ன ஆச்சரியம்! எந்த மனிதனைப் பார்த்தாலும் அவன் புலியாகவோ, கரடியாகவோ, நரியாகவோ, கழுதையாகவோ அல்லது ஏதோ ஒரு மிருகமாகவோ தான் தென்பட்டான்.

மனிதனையே காணோம்!

அவன் மனிதனைத் தேடி அலைய ஆரம்பித்தான்.

ஒரு நாள் செருப்புத் தைத்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தான்.

என்ன ஆச்சரியம்! அவன் மனிதனாகவே தோன்றினான்.

மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவன் அந்த செருப்புத் தைக்கும் ஏழை தொழிலாளியை அணுகி, தன் ஏழ்மை நிலையைச் சொல்லி உதவி செய்யுமாறு வேண்டினான்.

அந்த ஏழைக்கோ ஒரே ஆச்சரியம்!

ஏராளமான பிரபுக்களும் அரசனும் நாட்டில் இருக்கும் போது தன்னிடம் உதவி கேட்க ஒரு ஆளா?

அவன் வியப்புடன் ராமப்ரபன்னனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டான்.

ராமப்ரபன்னனும் நடந்தை விவரித்து பகவான் தந்த கண்ணாடியையும் காண்பித்து தான் பார்த்ததில் அவன் ஒருவனே மனிதனாகத் தோன்றுகிறான் என்று கூறினான்.

இதை நம்பாத அந்தத் தொழிலாளி அந்தக் கண்ணாடியை வாங்கி தான் அணிந்து பார்த்தான்.

உண்மை, யாருமே மனிதர்களாகத் தோற்றமளிக்கவில்லை – ராமப்ரபன்னனைத் தவிர.

அப்போது அரசவையிலிருந்த வந்த சேவகன் ஒருவன், மன்னர் அணிய வேண்டிய செருப்பைத் தைத்தாயிற்றா என்று அந்தத் தொழிலாளியைக் கேட்டான்.

“தயாராக இருக்கிறது” என்ற பதிலைக் கேட்ட அவன் அதை வாங்கிப் புறப்படத் தயாரானான்.

ஆனால் உடனே தொழிலாளி அவனைத் தடுத்து நிறுத்தி தானே மன்னரிடம் வந்து தருவதாகக் கூறி அதை வாங்கிக் கொண்டான்.

மன்னனிடம் வந்த அவன் ராமப்ரபன்னனை மன்னரிடம் காட்டி அவனுக்கு உதவுமாறு வேண்டினான்.

மன்னனுக்கு இது விநோதமாகப் பட்டது.

ராமப்ரபன்னன் தன்னை நேரடியாக வந்து அணுகாமல் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் எதற்குச் செல்ல வேண்டும்?

இதை அவன் கேட்கவே தொழிலாளி நடந்ததைச் சொன்னான்.

வியப்புற்ற மன்னன், ராமப்ரபன்னனிடம் “அரசவையில் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டான்.

ஒரே மிருகங்களைப் பார்ப்பதாகப் பதில் அளித்தான் ராமப்ரபன்னன்.

உடனே தன்னைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது? தனது மந்திரியைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான்.

“மன்னரே! நான் சொல்லி விடுவேன் பதிலை. ஆனால் எனக்குத் தண்டனை அளிக்கக் கூடாது” என்று வேண்டினான் ராமப்ரபன்னன்.

மன்னன் தண்டனை அளிக்க மாட்டேன் என்று உறுதி கூறினான்.

உடனே ராமப்ரபன்னன், “அரசே! நீங்கள் கர்ஜிக்கும் சிங்கம் போல காணப்படுகிறீர்கள். மந்திரியோ கழுதையாகத் தோற்றமளிக்கிறார்” என்றான்.

உடனே மன்னன் அந்தக் கண்ணாடியை வாங்கித் தன் கண்ணில் அணிந்து பார்த்தான்.

அந்த அரசவையில் அவன் ராமப்ரபன்னனையும் அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியையும் மட்டுமே மனிதர்களாகக் கண்டான்.

வியப்படைந்த அவன் தன்னலமற்ற இடைவிடாது இருக்கும் பக்தியே அவர்களை மனிதர்களாகக் காட்டுகிறது என்றும் சுய நலம் நோக்கம் கொண்ட வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களை அவர்களது நிலைக்கு ஏற்ப அந்தந்த மிருகங்களாக கண்ணாடி காட்டுகிறது என்றும் தன் அறிவினால் ஆய்ந்து அறிந்தான்.

ராமப்ரபன்னனுக்கு உரிய உதவிகளைச் செய்த அவன் இறை தியானத்தில் மூழ்கி சுயநலமற்று அரசாள ஆரம்பித்தான். தனக்கு இப்படி ஒரு நல்வாய்ப்பளித்த தொழிலாளியை அவன் போற்றி கௌரவித்தான்.

இந்தச் சம்பவத்தால் நாட்டில் உள்ள மக்களும் பக்தியில் ஊன்றி இறைவனை தியானிக்க ஆரம்பித்தனர். நாடே தெய்வீக நாடாக மாறியது!

***

திக் தேவதைகள் / திக் பாலகர்  எட்டுப் பேர் யார் ? கண்டுபிடியுங்கள்(Post No.12,553)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,553

Date uploaded in London – –  –  4 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Across குறுக்கே

1.தென்கிழக்கு திசையின் தேவதை; எதையும் எரிக்க வல்லவர்.

2. செல்வத்துக்கெல்லாம் அதி தேவதை; திசை -வடக்கு

6.எருமை வாகனம்; கருமை நிறம் ; திசை-தெற்கு

Down கீழே/ மேலே

2.தொல்காப்பியம் இவரை இந்துக்களின் கடல் தெய்வம் என்கிறது; திசை- மேற்கு;

3.தென்மேற்கு திசையின் தேவதை

4. வேகமாக வீசினால் அம்மி கூடப் பறக்கும்; திசை-வடமேற்கு

6.கிழக்கு திசையின் தேவதை; தொல்காப்பியம் வேந்தன் என்று புகழும்.

7.வடகிழக்கு திசைக்கு அதிபதி

விடைகள்

Across குறுக்கே

1.அங்கி; 5.குபேரன்; 6.இயமன்

Down கீழே/ மேலே

 2.வருணன்; 3.நிருதி  ;4 வாயு; 6.இந்திரன் ;7.ஈசானன்

—subham—

Tags- திக் தேவதைகள், எட்டுப் பேர்,  திக் பாலகர்

முறிகண்டி பிள்ளையார்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 17 (Post No.12,552)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,552

Date uploaded in London – –  –  4 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 17

31.முறிகண்டி பிள்ளையார் கோவில் Murikandi Pillaiyar Temple,

எல்லோரும் வழிபட சாலையில் காத்திருக்கும் பிள்ளையார் கோவில்  முறிகண்டியில் உள்ளது . யாழ்ப்பாணம் – கண்டி சாலையில் உள்ள இந்தக் கோவிலை யாரும் பார்க்காமல், கும்பிடாமல் இருக்க முடியாது. கிளிநொச்சிக்கு அருகில் கோவில் இருக்கிறது . எல்லா வாகனங்களும்  இங்கே நிற்கும். பிள்ளையாருக்கு ஒரு கும்பிட்டு போட்டுவிட்டு நகரும்.

முறிகண்டி கிராமம் உள்ளே தள்ளி இருப்பதால், சாலையில் மரத்துக்கு அடியில் இருக்கும் இவரை  தெரு முறிகண்டி பிள்ளையார் என்றும் அழைப்பார்கள். வழித்துணை பிள்ளையார் என்றும் கொண்டாடுவர்.

பழைய முறிகண்டி சாமியார்கல்  வழிபாடு

பழைய முறிகண்டி ஆலயம்  பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது  யாழ்ப்பாணம்- கண்டி சாலை அமைக்கப்பட்ட காலத்தில் பருத்தித்துறை என்ஜினீயர் ஒருவரும் சாலை போடும் பணியில் இருந்தார். பொறியியல் வேலைகளுக்கு தண்ணீர் கிடைப்பது அரிதாக இருந்தது .சதுப்பு நிலம் ஆதலால் வண்டிகளில் தண்ணீர் கொண்டு வருவதும் சிரமம்தான். என்ஜினீயருக்கோ தூங்குவது கூட கஷ்டம் ஆகிவிட்டது. ஒரு நாள் கனவில், அருகில் இறந்து கிடக்கும் சந்நியாசிக்கு ஈமக் கிரியைகளை செய்தால் பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று கனவு சொல்லியது . அக்காலத்தில் நிறைய சாது சந்யாசிகள் மக்களுடன் மக்களாகக் கலந்து யாத்திரை போகும் வழி  இது . முறிகண்டிக்கு அடிக்கடி வரும் ஒரு சாது தனது கக்கத்தில் துணியால் சுற்றிய ஒரு கல்லையும் கொண்டுவருவது வழக்கம்.

அவர் அந்தக் கல்லை சுத்தமான இடத்தில் வைத்து அபிஷேக ஆராதனைகள் செய்வதுண்டு. அதை அவர் கணபதியாகவே உருவகித்து பூஜித்து வந்தார். முறிகண்டிக்கு வரும்போதெல்லாம், மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் இரவில் தங்கி வந்தார்.  அவர் அங்கயே இறந்துவிட்டார். சாலைப் பணிக்கு வந்த என்ஜினீயரும் தொழிலாள ர்களும் சடலத்தை அடக்கம் செய்துவிட்டு அவர் ஆராதித்து வந்த கல்லுக்கு — கடவுளுக்கு — ஒரு கொட்டகையும் எழுப்பினர்.  பின்னர் சிறிது தொலை வில்  மீண்டும் கிணறு வெட்டும் பணியில் இறங்கினர். அப்போது அதிசயம் நிகழ்ந்தது. தண்ணீரே இல்லாத பிரதேசத்தில் தண்ணீர் பீறிட்டு, பொங்கி வெளியே வந்தது.  இன்றுவரை அது வற்றாத  கிணறாக, போகும் வரும் யாத்ரீகர்களுக்குத்  தண்ணீர் வழங்குகிறது .அந்தக் கல்லும் பழைய முறிகண்டியில் தொடர்ந்து வழிபட்டு வருகிறது . பின்னர்  அவர் நினைவாக, தண்ணீர் கிணறு கண்டு பிடிக்கப்பட்டதன் நினைவாக , தெருப்பிள்ளையார் நிறுவப்பட்டார்.

இதற்கிடையில் இன்னும் ஒரு சம்பவமும் நடந்தது  பிள்ளையார் கோவிலுக்கு அருகில் டீக்கடை  வைத்திருந்த ஆறுமுகம் என்பவருக்கும் கோவில் நிர்வாகிகளுக்கும் இடையே  மனத்தாங்கல் ஏற்பட்ட து. ஆறுமுகம் கனவில் இன்னும் ஒரு பிள்ளையார் வருவார் என்று தோன்றவே  சுமார் 500 அடி தொலைவில் ஒரு மரத்தின் பட்டைகளே  யானை முகம்போலக் காட்சி தந்தது.  அவர் அங்கு பூஜைகளைத் துவங்கியவுடன் பக்தர் கூட்டம் இரண்டு பிள்ளையர்களையும் வழிபட்டு வந்தனர்  காலப்போக்கில் சாலை ஒர வழிபாட்டுத் தலங்களை  அகற்றும் திட்டத்தின் கீழ்  யானை முக மரமும் அகற்றப்பட்டது . ஆயினும் பிள்ளையார் வழிபாடு நீடிக்கவும், வற்றாத நீர்வளம் கண்டுபிடிக்கவும் பிள்ளையார் உதவியதை பக்தர்கள் நன்றிப் பெருக்கோடு நினைவு கூறுகின்ற்னர் .

XXX

இவ்வாலயத்தில் வழிபாடு செய்பவர்கள் வெறும் வாயோடு செல்ல மாட்டார்கள் பயணத்தில் சுவையாக சாப்பிட இங்க கச்சான் வாங்கி செல்வார்கள்; அது என்ன கச்சான் என்று கேட்கிறீர்களா ?

இந்த வட்டாரத்திலேயே மிகவும் சுவையான நிலக்கடலை  இங்குதான் கிடைக்கும். கச்சான் (நிலக்கடலை) க்கு பிரசித்தி பெற்ற இடம்  முறிகண்டி ஆகும்,

xxxx

பம்பாயிலும் மகாலெட்சுமி, தனக்கு கோவில் கட்ட  இதே தந்திரத்தைக் கையாண்டார்

இதோ நான் முன்னர் இதே பிளாக்கில் எழுதிய விஷயம்

மும்பை மகாலெட்சுமி கோவில்

மும்பை நகருக்குச் செல்லுவோர் சித்தி விநாயகர் கோவிலையும் மஹா லக்ஷ்மி கோவிலையும் தரிசிக்காமல் வர மாட்டார்கள். உலகின் செல்வச் செழிப்பு மிக்க நகர்களில் பம்பாயும் ஒன்று. இதற்குக் காரணம் மஹாலெட்சுமியும் மும்பா தேவியும் என்பது மக்களின் நம்பிக்கை ; இந்து சமய வணிகர் தாக்ஜி தாதாஜி  இந்தக் கோவிலை 1831ம் ஆண்டில் கட்டினார் இங்கு மூன்று தேவிகள் காட்சி தருகின்றனர். மகாலெட்சுமியானவள் கைகளில் தாமரை மலர்களை ஏந்தி நிற்கிறாள்; மஹா காளியும் மஹா ஸரஸ்வதியும் இருபுறங்களில் நிற்கிறார்கள் . மூவரும் தங்க வளையல்கள், மூக்குத்திகள், இரத்தின மாலைகளுடன் ஜொலிக்கின்றனர்  வசந்த காலத்தில் வரும் நவராத்திரியும் ஆஸ்வீன மாத பெரிய நவராத்ரியும் (தமிழக கணக்குப்படி புரட்டாசி நவராத்ரி) மிகப்பெரிய பண்டிகைகள் . கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் மின்விளக்குக்களால் அலங்கரிக்கப்படுகிறது.

இந்தக்கோவில் பற்றி செவி வழிக் கதைகளும் உலவுகின்றன. பிரிட்டிஷ் கவர்னர் ஹார்ன்பி என்பவர் வோர்லி, மலபார் என்னும் இரண்டு இடங்களை இணைக்க ஒரு கடற் பாலம் கட்டுவதற்குத் திட்டமிட்டு அந்தப் பணியை ராம்ஜி ஷிவ்ஜி பிரபு என்ற தலைமை என்ஜினீயரிடம் ஒப்படைத்தார். ஆனால் பாலம் கட்ட முடியாதபடி பல இடையூறுகள் தலையெடுத்த வண்ணமிருந்தன. ஒரு நாள் ராம்ஜியின் கனவில் மகாலெட்சுமி தோன்றி,  தான் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடப்பதைத் தெரிவித்தாள். முஸ்லீம் படை எடுப்பாளர்களால் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டிருந்த சிலைகளை ராம்ஜி மீட்டு, கோவில் கட்ட வழிவகை செய்தார் . பின்னர் பாலம் கட்டும் பணி  இனிதே நிறைவேறியது . ஒரு குன்றின் மீது அமைந்த இந்தக்கோவில்,  இன்று ஏராளமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

XXXX

32.. கிளிநொச்சி அக்கராயன்குளம் விக்ன  விநாயகர் கோவில்

வன்னி  பகுதியை ஆண்ட சிற்றரசர்கள் பல்லவராயன், கனகராயன் அக்கராயன்  ஆவர்.

அக்கராயன் என்பவர் இலங்கையின் யாழ்ப்பாண அரசின் தெற்கு பகுதியாக……………… PLEASE CONTINUE IN……………. swamiindology.blogspot.com

மா ஆனந்தமயி! – 2 (Post No.12,551)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,551

Date uploaded in London –  4 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மகான்கள் வாழ்வில் …

மா ஆனந்தமயி! – 2

ச.நாகராஜன்

இந்த ஆசிரமம் அமைந்த விதமே ஒரு அற்புதமான விஷயத்தைச் சுட்டிக் காட்டியது.

ஒரு நாள் ஒன்றரை கிலோ அளவில் பயறு தானியத்தை சுத்தம் செய்த நிர்மலா தேவி என்னும் ஆனந்தமயி மா போலாநாத்திடம், “வாருங்கள் சித்தேஸ்வரியிடம் செல்வோம்” என்றார். அங்கு சென்று அதைச் சமைத்து சித்தேஸ்வரிக்கு நிவேதனம் செய்தார் மா.

பிறகு அவர் போலாநாத்திடம், “நான் இங்கேயே இருக்கிறேன். காளி கோவிலுக்கு அருகில் இருக்கும் சிறிய அறையிலேயே தங்குவேன்” என்றார்.

அப்படியே ஆனது.

சிறுகச் சிறுக ஒரு பெரிய ஆசிரமம் உருவாக ஆரம்பித்தது.

அந்த ஆசிரமம் உருவான இடத்தில் குங்கும நிறத்தில் வெதுவெதுப்பான நீர் பீறிட்டு எழுந்தது. அனைவரும் அதிசயித்தனர்.

பல அற்புதங்கள் அங்கு நடக்க ஆரம்பித்தன.

31ஆம் வயதில் ஆனந்தமயி மா டாக்காவை விட்டுக் கிளம்பி பெரும் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்.

1928ஆம் ஆண்டு வாரணாசியில் முதல் கூட்டம் கூடியது. அங்கு பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் அளித்தார்.

நூற்றுக் கணக்கில் வர ஆரம்பித்த பக்தர்களின் எண்ணிக்கை நாளடைவில் ஆயிரக் கணக்கில் பெருகியது.

பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மனைவியான கமலா தேவி மாவின் பக்தையாக ஆனார்.

இதனால் ஜவஹர்லால் நேருவும் மாவின் தரிசனத்தைப் பெற்றார்.

பின்னர் மஹாத்மா காந்திஜியும் ஆனந்தமயி மாவினால் ஈர்க்கப்பட்டார்.

இதனுடைய தாக்கமாக பின்னால் பாரதத்தின் பிரதமராகத் திகழ்ந்த இந்திரா காந்தி அம்மையார் மாவின் தீவிர பக்தையாக ஆனார்.

மா தனது பெரிய ஆசிரமத்தை 1936ஆம் ஆண்டு டாக்காவில் கிஷன்பூரில் அமைத்தார்.

அத்துடன் இன்னும் மூன்று ஆசிரமங்களையும் டேராடூனில் அமைத்தார்.

பின்னர் இன்னும் பல ஆசிரமங்களை அல்மோரா மற்றும் ஸோலன் ஆகிய இடங்களில் அமைத்தார்.

போலாநாத்தின் உற்சாகத்தினாலும் ஊக்கத்தினாலும் இன்னொரு ஆசிரமம் உத்தரகாசியில் அமைக்கப்பட்டது.

1982ஆம் ஆண்டு தனது 86ஆம் வயதில் ஹரித்வாருக்கு அருகில் இருந்த கங்கல் என்ற இடத்திலிருந்து கிளம்பி கல்கத்தா வரை வந்து பின்னர் அவர் கங்கல் திரும்பினார்.

அதே ஆண்டு ஜூலை மாதம் சிருங்கேரி ஜகத்குரு அங்கு வருகை புரிந்தார்.

அவருக்கு உடல்நலம் சற்று குன்றியிருந்தது போல அனைவரும் உணர்ந்தனர்.

ஆனால் அவரோ, “ இந்த உடலுக்கு ஒரு நோயும் இல்லை.” என்றார்.

சில நாட்கள் கழித்து பிரதம மந்திரி இந்திரா காந்தி தனது புதல்வர் ராஜீவ் காந்தியுடனும் மருமகள் சோனியா காந்தியுடனும் பேரக் குழந்தைகளுடனும் அவரை தரிசிக்க வந்தார்.

மா சற்று நேரம் உட்கார்ந்தார். இதுவே அவர் பக்தர்களுக்கு அளிக்கும் கடைசி சந்திப்பாக அமைந்தது.

பௌர்ணமி வந்தது. அதுவே அவர் பக்தர்களுக்கு அளித்த கடைசி தரிசனமாக அமைந்தது.

அவர் கூறினார்: “இதே நாளில் தான் (1922 ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி) இந்த உடல் தீக்ஷை அளித்துக் கொண்டது” என்றார் அவர்.

ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி அவரைக் கவனித்துக் கொண்டிருந்த பணிபுரியும் பெண்கள் அவர் நாராயண ஹரி என்று முணுமுணுத்துக் கொண்டே இருப்பதைக் கவனித்தனர். இதுவே அவரது கடைசி உச்சரிப்பாக அமைந்தது.

அன்று மதியம் தனது கண்களைத் திறந்து பார்த்த மா ஒரு நிமிடம் அனைத்தையும் உற்றுப் பார்த்தார்.

1982 ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி.

இரவு 7.45 மணி அளவில் தனது கண்களைத் திறந்த அவர் மேலே பார்த்தார். சில நிமிடங்களில் அவரது சுவாசம் அடங்கியது.

அவரது பூதவுடல் ஆசிரமத்தின் வாரந்தாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

செய்தி பரவியது. மக்கள் வெள்ளம் ரயில், கார், விமானம் மூலமாக வந்து கூடியது.

கிஷன்பூர் ஆசிரமத்திலிருந்து அவரது உடல் ஒரு வாகனத்தில் வைக்கப்பட்டு கங்கல் ஆசிரமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அவர் தனது உடலை என்ன செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பையும் தரவில்லை. அவர் சந்யாச ஆஸ்ரமம் மேற்கொள்ளவில்லை என்றாலும் அனைவரின் விருப்பத்திற்கிணங்க அப்படிப்பட்ட மத சடங்குகள் செய்யப்பட்டன.  சமாதியில் அவரது உடல் வைக்கப்பட்டது.

பிரதம மந்திரி இந்திரா காந்தி முன்னிலை வகித்தார்.

*

கேள்விகளுக்கான அவரது பதில்கள் சுவாரஸ்யமானவை.

ஒருவர் கேட்டார் : தினமும் வரும் இந்த புதிய பக்தர்களின் வரவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : யாருமே புதிதல்ல. அவர்கள் அனைவருமே எனக்குத் தெரிந்தவர்கள் தான். நீயும் நானும் இரண்டு பேர்கள் தான் என்றாலும் நீயும் நானும் ஒருவரே. இரட்டை என்ற பேச்சுக்கே இடமில்லை. பற்றும் வெறுப்பும் இந்த இரட்டை (த்வைதம்) என்ற எண்ணத்தினால் உருவாவதேயாகும்.

அவரது போதனை : உனது எண்ணத்தை மிக உயரிய மட்டத்தில் வைத்துக் கொள்!

ஜெய் மாதா ஆனந்தமயி மா!

***

Foreigners attracted towards Indian spirituality

Hollywood Celebrites in India

From Deccan Chronicle Dated 3-10-2023

Hyderabad: Deccan Chronicle.| Sanjay Samuel Paul

India being an epicenter of spirituality. The number foreigners thronging to this sub continent in search of inner peace, mediation and spirituality.
Twelve years ago as Marcus walking down the streets of Seattle in USA, a flayer (pamphlet) flew and struck his face, what attracted him is about the inner peace. it was 12 years ago, Marcus, his wife Tia and 6 years old Daniel they are here at Kollam ashram each year they visit this place, Marcus said, ” the best part I enjoy the most is Bhajan’s. After know about Amma”
He added, “meditation which brought peace into my life and family’s.” He said.

Drawing foreigners towards india and its spirituality one such center is in Kollam in kerala. Around 100 kilometers from Trivandrum. Ashram of Mata Amritanandamaya. Thousands of devotees from Spain, France, Austria, Italy, Switzerland, Ireland, Germany, Slovakia, England, Portugal, Hungary, Greece, Icelan, wales, Cyprus, Sweden, coming to African countries Ghana, Cameron, Nigeria, Egypt, senegal, Algeria, Morocco, Kenya, Somalia, Burkina Faso, Libya, toward South America Brazil, Argentina, Colombia, Uruguay, Paraguay, Peru and many more .
From Asian China, Japan, Philippians, Sri Lanka. Thousand them from 193 countries were present here to take part in the 70 birthday celebration of Amma. Tuesday here at this ashram these foreigner’s took part in bhajan’s performed traditional dances, in Indian attire they look amazing. Most of them are communicating with the signs. This ashram is filled with the foreigners throughout the year . They cook here in the kitchen, cutting vegetables and tying the flowers and making garlands. This campus can be a tagline as ‘Bringing world to India.”

Adwaith from France, in his early 20’s “I am here into spirituality because of my father, he was attracted to spirituality two decades ago, through him is was able to know the true purpose .”

A groups of Japanese with a help of translators explained this Newspaper, there is so much peace in this when you embrace Amma and most beautiful about this place is giving and giving to the humanity.”
Cilea, a French lady in her mid 20’ explained, “my life and my mind was chaotic. After know Amma and about spirituality and meditation which changed my life. I have focused life now.”

Marta Garcia, now known as Sukriti from Spain , lives in Germany from past 15 years, in 2007 I came across Amma, where I learnt and embraced spirituality. I learnt about detachment from this worldly pleasure. I was working for a Multinational cosmetic country. I gave up my career now myself and partner take care of German ashram.” She said

Sugandhi Brindlali, a Spanish lady, while narrating she broke out in tears “I was going thorough life’s tough times, there were families issues. I embraced amma and that changed my live, I come each year to India and take part in Bhajans and meditation.” She said

—subham—

Tags–Foreigners, attraction, Indian spirituality, Hindu

மருதடி பிள்ளையார்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 16 (Post.12,550)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,550

Date uploaded in London – –  –  3 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 16

29.மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவில்

MARUTHADY PILLAIYAR TEMPLE, MANIPAY, JAFFNA

மருத மரங்கள் நிறைந்த மானிப்பாயில் இருக்கும் பிள்ளையாரை  யாழ்ப்பாண பக்தர்கள் மருதடி பிள்ளையார் என்று வழிபடுகின்றனர் . இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் கிழக்கிலும், மேற்கிலும் வாசல்கள் இருப்பதாகும் . சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உலகை நிர்வகிக்கும் கடவுள்.

மூலஸ்தானம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

பல கோவில்களைப் போலவே தோற்றம் பற்றிய வரலாறு கிடைக்கவில்லை. ஆயினும் போர்ச்சிகீசிய கிறிஸ்தவ அரக்கர்கள் தரை மட்டம் ஆக்கிய 500 க்கும் மேற்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று என்பதை 1925ம் ஆண்டில் வெளியான ஆலய மான்மியம் குறிப்பிடுறது . இந்தியாவிலிருந்து வந்த ஒரு மஹான் இங்கு தங்கிய பின்னர் இது புகழ்பெற்றது. இது வாய்மொழி வரலாற்றில் கிடைத்த செய்தி.

நவாலி பைரவர் கோவிலில் மிருகங்கள் பலியிடப்படுவதை வெறுத்த தியாகராஜ சைவ குருக்கள், அங்கிருந்த விநாயகரை இங்கே கொண்டுவந்தார்.  திருக்குளத்தின் கரையில் மருத மரத் தோப்பில் விநாயகர் அமர்ந்தவுடன், பக்தர்கள் மருத  மரத்துக்கு அடியில் அமர்ந்து தியானம் செய்யத்துவங்கினர். பின்னர் நிலையான கட்டிடம் தேவை என்பதை உணர்ந்த மானிப்பாய் கிராம மக்கள், 1856–ம் ஆண்டில் அரசாங்கத்திடமிருந்து நிலத்தை வாங்கினர் . சுவாமிநாத முதலியார் இப்பணியில் முன்னணியில் நின்றார். எதிர்ப்புறம் கிறிஸ்தவ சர்ச் இருந்ததால் பிள்ளையார் அந்தப் புரம் நோக்காமல் அமர்த்தப்பட்டார்.. அப்போது முதல் இன்று வரை பக்தர்கள்  கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக புத்தாண்டு தினத்தன்று நடைபெறும் தேர்த் திருவிழாவிற்கு பெரும் கூட்டம் சேரும்.

விக்கிபீடியா தரும் தகவல் இதோ :-

பறங்கியர் சைவசமய மணம் கொஞ்சமுமில்லாது, பிராமணரையும் தம்முடைய மதத்தைத் தழுவும்படி செய்துவந்த நாட்களில், அவர்கள் தண்டத்திற்கஞ்சி அகத்தே சைவராகவும் புறத்தே கிறிஸ்தவர்களாகவும் நடித்த பலர் மருதமரத்தின்கீழ் இராக்காலங்களிலும் பறங்கியர் கண்களுக்கு புலப்படாத நேரங்களிலும் பொங்கலிட்டுக் கற்புரமெரித்து விநாயகரை வழிபட்டு வந்தார்கள். இப்பொழுதும் மூலஸ்தானத்திற்கு அருகாமையிலுள்ள மருதமரத்திலும் வெளிவீதிகளில் நிற்கின்ற மருதமரங்களின் கீழும் சனங்கள் உற்சவகாலங்களிலே கற்புரமெரித்து மருதத்  த ளிரைப்பறித்துக் கண்ணில்ஒற்றிக் காதில் அல்லது தலையில் அணிந்துகொள்வதை காணலாம்.

யாழ்ப்பாணத்தில் எந்தப்பாகங்களில் இருப்பவர்களும் முதலில் எடுக்கும் நெற் தானியத்தை ”மருதடிப்பிள்ளையாருக்கு” என்று சொல்லி எடுத்து வைப்பது வழக்கம்

XXXX

30. காசதுறை பிள்ளையார் கோவில்

காங்கேசன்துறையில் பெட்ரோல் ஸ்டேஷன் எதிர்ப்புறம் அமைந்திருக்கும்  ஆனந்த பிள்ளையார் கோவில் பல நூற்றாண்டுகள் பழமை உடையது . அந்தக் காலத்தில் இந்த ஊருக்கு கயா துறை என்ற பெயர் இருந்தது இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் உள்ள  கயா நகருக்குச் செல்லும் பக்தர்கள் இந்தத் துறைமுகம் வழியே சென்றதால் இப்பெயர் . கந்தனின் மறு பெயர் காங்கேயன். முருகன் சிலை இவ்வழியாக வந்ததால் காங்கேசன் துறை ஆயிற்று.

இந்த ஊரில் பவானந்த முனிவர் ஒரு சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . கப்பலில் யாத்திரை செய்வது , உயிருக்கு ஆபத்தாக இருந்த காலம் அது. விக்கினங்களை நீக்கும் விநாயகரை வழிபட்டால் வினைகள் நீங்கும் என்று பிள்ளையாரை நிறுவி வழிபடத்துவங்கினர். . கடற்பயணத்தை இனிதே நிறைவேற்றியதால் யாத்திரைப் பிள்ளையார் என்று அழைக்கப்பட்டார்.

ஆனந்த கணபதி என்ற தமிழ் நூலில் இந்தச் செய்தி உள்ளது .

XXX

31.பறாளை விநாயகர் ஆலயம், சுழிபுரம் , யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தின் வட மேற்கு வட்டாரத்தில் தொல் புரம் , சுழி புரம் என்று இரண்டு ஊர்கள் உள . தொல் புரம்  என்றால் தொன்மையான இடம்; சுழி புரம்  என்றால் சோழர்கள் தங்கிய இடம்.

தொல் புரத்துக்கு பெருமை சேர்ப்பது பொன்னாலயம்  விஷ்ணு கோவில்; சுழி புரத்துக்குப் பெருமை கொணர்வது பறாளை விநாயகர் ஆலயம்.

பறாளை பிள்ளையையாருக்கு கண்ணைக் கொத்தி காத்த பிள்ளையார் என்ற பெயரும் உண்டு. இது பற்றிய கர்ண பரம்பரைக்கு கதை என்னவென்றால், போர்ச்சுகீசிய இந்து விரோத அரக்கர் படை, கோவிலைத் தரை மட்டம் ஆக்க வந்தபோது, ஒரு பெரிய காக்கைப் பட்டாளம் அவர்கள் கண்களைக் கொத்தி விரட்டியதாம்.

பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இந்து மறுமலர்ச்சி ஏற்பட்டபோது, நன்னித்தம்பி முருகேசு என்பவர் இந்த ஆலயத்தை சீரமைத்தார்.  இன்று பெரிய மண்டபங்களையும் தூண்களையும் காணமுடிகிறது. இப்போது முறையான பூஜைகளும் திரு விழாக்களும் நடத்தப்படுகின்றன.

இவ்வாலயத்தில் இந்தியாவிலிருந்து வந்த வேதாரணிய சைவக்குருமார்களால் வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. தற்பொழுதும் சைவக்குருமார்களின் பரம்பரையினராலேயே நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றன.

அருகில் உள்ள கடலில் புனித நீராடுதல், அஸ்தி  கரைத்தல் முதலியன நடைபெறுகின்றன . மஹா விஷ்ணுவின் பாதம் பட்ட திரு அடி தீர்த்தமும் அருகிலேயே உள.

இந்தத் தீர்த்தம் கடல் வரைக்கும், பூமிக்கு அடியில் செல்லுவதை புவிகர்ப்ப வியல் GEOLOGISTS அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பார்வதி அம்பாளின் சிலை கரை ஒதுங்கிய மாதா கல் என்னும் இடமும் அருகில் உள்ளது .

நல்லூர் சின்னத் தம்பி புலவர் , டச்சுக்காரர் ஆட்சிக்கு காலத்தில் வாழ்ந்தவர். அவர் எழுதிய பறாளை விநாயகர் பள்ளு இந்தக் கோவிலின் புகழ் பாடுகிறது 1889-ம் ஆண்ட்டில் சிவப்பிரகாச பண்டிதர் அதை முதலில் வெளியிட்டார்.

—-SUBHAM—-

TAGS – பறாளை விநாயகர், சுழிபுரம், காசதுறை,  பிள்ளையார், மானிப்பாய்,  மருதடி

 மா ஆனந்தமயி! – 1 (Post No.12,549)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,549

Date uploaded in London –  3 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மகான்கள் வாழ்வில் …

மா ஆனந்தமயி! – 1

ச.நாகராஜன் 

மிகவும் புகழ்பெற்ற மா ஆனந்தமயி சரிதம் அற்புதமான ஒன்று.

இன்று பங்களாதேஷில் இருக்கும் வங்காள மாநிலத்தில் திரிபுரா மாவட்டத்தில் கேரா என்ற குக்கிராமத்தில் அந்தண குலத்தில் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் 1896ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி அவதரித்தார் ஆனந்தமயி மா!

குழந்தைக்கு நிர்மலா சுந்தரி தேவி என்று பெயர் சூட்டப்பட்டது.

நிர்மல சுந்தரியின் தந்தை பிபின் பிஹாரி பட்டாசாரியா ஒரு வைணவ பக்தர். இசையில் வல்லவர். குழந்தைக்குப் பல தெய்வீகப் பாடல்களைச் சொல்லிக் கொடுத்தார்.

நிர்மலாவின் தாயாரான மோக்ஷதா சுந்தரி தேவி ஒரு சிறந்த பக்தை; பின்னால் சந்யாசம் மேற்கொண்டு ஸ்வாமி முக்தானந்த கிரி என்ற சந்யாச ஆஸ்ரம பெயரை மேற்கொண்டு தனது மகளுடன் பயணம் செய்தார்.

நிர்மலா சுந்தரி பிறந்தவுடன் அவரை காலை நேரத்தில் ஒரு துளஸி செடியின் கீழ் வைத்தார் தாயார். இந்தப் பழக்கம் 18 மாதங்கள் தொடர்ந்து நீடித்தது.

1909ம் ஆண்டு நிர்மலாவின் 13ஆம் வயதில் அந்தக் கால வழக்கப்படி அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ரமணி மோஹன் சக்ரவர்த்தி என்பவரை மணந்தார் அவர். போலீஸ் பிரிவில் வேலை பார்த்து வந்தார் ரமணி மோஹன்.

17ஆம் வயதில் ரமணி மோஹனுடன் சேர்ந்து தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பித்தார் நிர்மலா. இந்தச் சமயத்தில் தான் அவருக்கு அண்டை வீட்டுக்காரரான ஹரகுமார் அவரை ‘மா’ என்று அழைக்க ஆரம்பித்தார்.

அதுவே பின்னால் நிலைத்து விட்டது.

“அம்மா, நான் உன்னை மா என்று அழைக்கிறேன். ஆனால் உலகமே உன்னை மா என்று அழைக்கப் போகிறது பார்” என்றார். அது பலித்தே விட்டது.

ரமணிமோஹனை அனைவரும் போலாநாத் என்றே அழைத்தனர்.

நிர்மலாதேவிக்கு தாம்பத்யத்தில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாததைக் கண்டார் போலாநாத். அவரது வீட்டாருக்கோ இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. போலாநாத்தை இன்னொரு திருமணம் செய்து கொள்ளத் தூண்டினர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

1918 முதல் 1924 முடிய பஜித்பூர் என்ற நகரில் தம்பதி வாழ்ந்து வந்தனர்.

அப்போது நிர்மல சுந்தரிக்கு ஏராளமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன.

1922 ஆகஸ்ட் மாதம் பௌர்ணமி நாள். நிர்மல சுந்தரி நள்ளிரவில் தனக்குத் தானே தீக்ஷை அளித்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 26 தான். அடுத்த ஐந்து மாதங்கள் ஓம் மந்திரத்தை உச்சரித்தவாறே அவர் சாதனை தீவிரமடைந்தது.

செய்தி அனைவருக்கும் பரவ அவரது மாமா வந்தார். போலாநாத்தைப் பார்த்து, “இங்கு என்ன நடக்கிறது?” என்று கேட்டார்.

அவரைப் பார்த்த நிர்மலா தீவிரமாக, “இப்படிக் கேட்பதற்கு என்ன அர்த்தம்?” என்றார்.

“நீ யார், சொல்” என்றார் மாமா.

நிர்மலாவின் வாயிலிருந்து வார்த்தைகள் வெடித்தன:

“பூர்ண ப்ரஹ்ம நாராயணீ”.

ஒரு நாள் போலோநாத் அலுவலகம் சென்றிருந்த போது அவரை உடனே வரச் சொன்னார் நிர்மலா.

அவர் வந்தவுடன் அவரைக் குளிக்கச் சொல்லி தன் எதிரில் அமரச் சொன்னார்.

பின்னர் மந்திரங்களைச் சொல்லி அவருக்கு ஆன்மீக உபதேசத்தைச் செய்தார்.

இப்படியாக அவரது கணவரே அவரது முதல் சிஷ்யராக ஆனார்.

1922 நவம்பரிலிருந்து மூன்று வருடங்கள் நிர்மலா மௌனவிரதம் அனுஷ்டித்தார். பல நாட்கள் குடிதண்ணீர் கூட இல்லாமல் வாழ்ந்தார்.

1926லிருந்து அவரால் மற்றவர் போல உணவை உண்ண முடியவில்லை.

வாயில் உணவை வைத்தாலும் அது விழுந்தது. ஆகவே தினமும் பகலில் ஒரு முறையும் இரவில் ஒரு முறையும் அவரது இரண்டு விரல்கள் ஏற்கும் வகையில் அவருக்கு உணவு அளிக்கப்பட்டது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சிறிது நீரும் அவர் அருந்த ஆரம்பித்தார்.

1924ஆம் ஆண்டு போலாநாத்திற்கு டாக்காவில் மானேஜராக ஒரு வேலை கிடைத்தது.  அங்கு ஒரு பழைய காளி கோவில் இருந்தது.

அங்கு இருந்த ஒரு அரச மரத்தின் அருகில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் வசிக்க ஆரம்பித்தனர்.

அந்த சித்தேஸ்வரி கோவில் சக்தி சாதனைக்கான இடம்.  இந்த இடம் ஆதி சங்கரருடன் தொடர்பு கொண்ட இடம். போலாநாத்தும் சென்ற ஜென்மத்தில் இங்கு தவம் புரிந்திருந்தாராம்.

நிர்மலா தேவி தனது முதலாவது ஆசிரமத்தை இங்கு ஆரம்பித்தார்.                           ***                   தொடரும்

Tagged with Anandamayee Ma

Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › anandamayee-ma

1 Jun 2017 — “Shri Anandamayee Ma is one of the most outstanding (1896-1982) religious figures of modern times and was the last great representative of the …

Anandamayee ma- part2 | Tamil and …

Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › anandamayee-ma-pa…

2 Jun 2017 — BENGALI MYSTIC SHRI ANANDAMAYEE MA- PART 2 (Post No. 3965) · Written by London Swaminathan · Date: 2 June 2017 · Time uploaded in London- 14-59.

Find Out Yama’s 14 Names in the Square (Post No.12,548)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,548

Date uploaded in London – –  –  2 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Yama is God of Death in Hinduism; in other cultures, people may be even scared of talking about death. But millions of Hindu Brahmins worship him three times every day. They say a Mantra facing south in the dawn, mid day and evening before sunset.  Greatest Tamil Poet Tiru Valluvar also says South is the Direction of dead people. Only three long words are split here.

DHARMARAJA
CGSARVAKVR
HU DTCBSRA
IP HYHHHKE
TT AUIUAON
RAMD TTYDI
AA N RAAHT
YKPARAMESH
VAIVASVATA
 LANTAKA  
 ANEELAYA 
OUDHUMBARA

ANSWERS……………. please go to swamiindology.blogspot.com

QUIZ பிரம்மா பத்து QUIZ  (Post No.12,547)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,547

Date uploaded in London – –  –  2 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Serial No.77

1.பிரம்மாவுக்கு உள்ள முக்கியக் கோவில் எதுஅது எங்குள்ளது?

xxx

2.பிரம்மாவுக்கு ஆதிகாலத்தில் எத்தனை தலைகள் ?

xxx

3.பிரம்மாவுக்கு 29 பெயர்களை அமர கோஷம் என்னும் நிகண்டு தருகிறது. அதில் 2 பெயர்கள்பிரம்மாவை முட்டையிலிருந்து வந்ததாகச் சொல்லும் . என்ன பெயர்கள் ?

xxx

4.பிரம்மாவை  தாதா  என்றும் விதாதா என்றும் அழைப்பது ஏன்?

xxx

5.பிரம்மாவின் வாஹனம் எதுஅதைக்குறிக்கும் பெயர் என்ன?

xxx

6.தாமரைக்கும் பிரம்மாவுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் பெயர்கள் யாவை ?

xxx

7. பிரம்மாயாரிடம் ஏன் குட்டுப் பட்டார் ?

xxx

8.பிரம்மாவை  நான்முகன்  என்று  தமிழில்  சொல்கிறோம் சம்ஸ்க்ருதத்தில் என்ன பெயர்?

Xxxx

9.மும் மூர்த்திகளில் பிரம்மாவின் தொழில் படைத்தல் அவரைத்  திருவள்ளுவர் எப்படித் திட்டுகிறார்?

Xxx

10. பிரம்மா, தாமாகவே தோன்றியவர் என்று பொருள்படும் இரண்டு சொற்கள் அமரகோஷத்தில் இருக்கின்றன. அவை யாவை ?

xxx

விடைகள் please go to swamiindology.blogspot.com