I have been searching for the etymological derivation of the Tamizh word (maal) for Bhagvaan Vishnu since 2021. Yesterday while studying Śrī Vishnu Sahasranāma, I came across the name (vyaalah in Samskritam) for Vishnu. Hence the root word is (vyaala) for Vishnu.
Now we know that regional Prākrits cannot write joint letters in 90 to 95% cases. The same rule applies for Tamizh too. So this (vyaala) of Samskritam will become (vaal) in Prākrits. We also know that (pa,pha,ba,bha,ma,va) interchangeability rule holds in case of all languages but not always.
Taking this into account, this (vaal) of Prākrits can easily become (maal) of Tamizh. Hence we have the Tamizh name for Bhagvaan Vishnu as (maal). This word (maal) is a pure Tamizh word for Bhagvaan Vishnu. But it is derived from (vyaala) of Veda Bhāshā (Samskritam) which also is a name of Bhagvaan Vishnu. There is no verbal root in Tamizh from which this word (maal) can be derived. I may be thoroughly wrong but I will stick my neck out on this derivation. Please tell if this derivation is correct or false.
Xxxx
Picture of Yali (from Wikipedia)
My Reply
I don’t agree with you for the following reasons.
Wisdom library website gave 25 definitions for Vyaala.
Of these Adi Shankara has taken the meaning SNAKE in his Vishnu Sahasranama commentary
Shankara says Vishnu is Vyalah; being unseparable like a serpent.
Sanskrit dictionary describes Shiva as VYAALA HAARA= one who wears SNAKE as garland.
In SHILPA SHASTRA it refers to YAALI seen in all the NAYAK temples all over Tamil Nadu.
Wisdom Library definitions are given at the end. The summary is a fierce animal. We also see Elephant+Lion Combination in all Nayak architecture.
Earlier I reported in this blog that the English word Lion, Leo etc came from Yali. If you reverse YALI you get LIYA (leo,lion); It is called mirror image in linguistics
Tamil word THER (Ratha) is not Tamil. If you reverse RATHA , you get THER. All the South Indian and Sri Lankan temples do Ratha Utsava like Puri Jagannath.
Back to Vyala now
You are right in saying V=M
I have given the following in my research articles earlier:
koManam= koVanam (Kaubeenam in Skt)
Vandodari (Tam) = Mandodari Skt
Virugam (Tam) = Mirugam Skt
sVapna= soMna(mbulism) in Latin
puVi in Tamil= bhuMi in Skt.
So we see this change not only in Sanskrit and Tamil but also in Latin
Xxxx
But in Vyala, we see only Fierce animal, a composite animal like YAALI or just a snake as we see in Vishnu Sahasranama and Adi Shankara’s commentary on it.
2) A beast of prey; वसन्त्यस्मिन् महारण्ये व्यालाश्च रुधिराशनाः (vasantyasmin mahāraṇye vyālāśca rudhirāśanāḥ) Rām.2.119. 19; वनं व्यालनिषेवितम् (vanaṃ vyālaniṣevitam) Rām.
3) A snake; H.3.29.
4) A tiger; Mālatīmādhava (Bombay) 3.
5) A leopard.
6) A king.
7) A cheat, rogue.
8) Name of Viṣṇu.
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary
Vyāla (व्याल).—mfn.
(-laḥ-lā-laṃ) 1. Wicked, villainous, bad. 2. Cruel, fierce. m.
(-laḥ) 1. A snake. 2. A beast of prey. 3. A rogue, a cheat. 4. A vicious elephant. 5. A king. 6. A species of the Dandaka metre. E. vi and āṅ before al to adorn, aff. ac; or aḍ to make effort, aff. ghañ and ḍa changed to la; hence also vyāḍa .
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Benfey Sanskrit-English Dictionary
Vyāla (व्याल).—I. adj. 1. Wicked, [Kirātārjunīya] 17, 25. 2. Cruel. Ii. m. 1. A snake, [Hitopadeśa] iii. [distich] 30. 2. A beast of prey, [Pañcatantra] i. [distich] 420. 3. A vicious elephant, [Bhartṛhari, (ed. Bohlen.)] 2, 6. 4. A rogue. 5. A king. Iii. f. lī, A female snake, Chr. 22, 22.
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary
Vyāla (व्याल).—[adjective] mischievous, malicious. [masculine] a malicious elephant, beast of prey, snake ([feminine] vyālī).
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary
ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட “தா” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 35
69.போர தீவு சித்திர வேலாயுத சுவாமி கோவில்
சித்திர வேலாயுத என்ற அடைமொழியுடன் உள்ள நாலாவது முருகன் கோவில் போர தீவில் இருக்கிறது. மட்டக்களப்பிலிருந்து 15 மைல் தொலைவில் போர தீவு இருக்கிறது. அருகிலுள்ள எருவில் மூன்றாம் நூற்றாண்டிலேயே புகழ்பெற்றிருந்தது அப்போது இங்குள்ள இந்தக் கோவில் இடிக்கப்பட்டதை மஹாவம்சம் குறிப்பிடுகிறது (மஹாவம்சம்- 37- 40, 41)
புராதன சப்த ஸ்தலங்கள் என்ற நூலில் எஸ். கணபதி பிள்ளை சில தகவல்களைத் தந்துள்ளார்.
மண்டு நாகன் என்பவன் , நாகன் சோலையிலிருந்து இந்த இடத்தை ஆண்டு வந்தான் அவனிடம் நாகர் தளபதிகளும் யக்ஷர் அமைச்சர்களும் இருந்தனர் . காலசேனன் என்பவன் அயோத்தியிலிருந்து இங்கு வந்து பல கோவில்களை இடித்துவிட்டு கோட்டைக் கல்லாற்றில் மாளிகை கட்டி காளி தேசம் என்று பெயர் சூட்டி ஆண்டுவந்தான்.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் மதி சுதன் என்பவன் காளி தேசத்தில் வாழ்ந்து வந்தான்.அவன் செய்த முக்கியப்பணிகளில் ஒன்று அங்கு முருகன் கோவிலை மீண்டும் கட்டியதாகும் . போர தீவில் அவன் சித்திர வேலாயுத சுவாமி கோவிலை புனர் நிர்மாணித்தான் தொண்டைநாட்டிலிருந்து சிற்பிகளை வரவழைத்து சித்திர மயூர சங்கார வேல் ஸ்தாபித்து 5 நிலைக் கோபுரத்தைக் கட்டினான். அவன் மண்டூரில் கந்தசாமி ஆலயத்தையும் கட்டினான்
காலம் செல்லச் செல்ல கோவில் சிதிலம் அடைந்தது அண்மைக் காலத்தில் , களுவாஞ்சிக்குடியிலிருந்து 2 மைல் தொலைவில்
போரத் தீவில் நாகப்ப செட்டியார், சித்திர வேலாயுத சுவாமி கோவிலை மீண்டும் கட்டினார் வேலாயுத சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு. கோவிலில் பூஜைகள் நடத்தப்படுகின்றன ஆகட்ஸ்ட் மாதம், வருடாந்திர விழாக்கள் நடைபெறுகிறது மாக மன்னன், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலங்களை கோவிலுக்கு விட்டுள்ளான்.
‘திருப்படைக் கோவில்கள்‘
வெருகல் சித்திரவேலாயுதர் கோவில் , போரதீவு ஸ்ரீ சித்திரவேலாயுதர் கோவில் , சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோவில், மண்டூர் ஸ்ரீ முருகன் கோவில்,கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் என்பன மட்டக்களப்பு தேசத்திற்குரிய திருப்படைக் கோவில்களாகும்.
கிழக்கிலங்கையில் உள்ள பழமை வாய்ந்த முருகனாலயங்கள் ‘திருப்படைக் கோவில்கள்’ என அழைக்கப்படுகின்றன. இவை வடக்கே, வெருகல் முதல் தெற்கே குமண வரையான பிரதேசத்திலுள்ள ஐந்து தலங்களாகும்.
XXXX
70. சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம்
சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம் , மட்டக்களப்பு திருப்படைக் கோவில்களில் ஒன்றாகும்
மட்டக்களப்பிலிருந்து 12 மைல் தொலைவில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவில் போல பெருமை உடையது
கிழக்கு இலங்கையில் உள்ள பெரும்பாலான ஆலயங்கள் வெட்டா VEDDA என்னும் வேடர் பழங்குடி மக்கள் வழிபட்ட இடங்களாலும். சிறு குடி ல்களில் வேடர்கள் வழிபட்ட வேல், பிற்காலத்தில் பெரும் கோவில்களாக மாறின
ஒரு காலத்தில்,எல்லோரும் கதிர்காம பாதயாத்திரை செய்வது போல ஆண்டி என்னும் பக்தர் செய்தார். காடுகளைக் கடந்து சென்றால்தான் கதிர்காம முருகனைத் தரிசிக்க முடியும் என்று இருந்த காலம் அது. காட்டில் ஒரு கொம்பன் யானை திடீரென்று தோன்றி ஆண்டியை துரத்தியது. ஏது செய்வதென்று அறியாது திகைத்த ஆண்டிக்கு முருகனே துணை என்று தோன்றியது திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது ஆன்றோர் வாக்கு ; அது பொய்க்காது. ஒரு வெற்றிலையை எடுத்து அதை வேல் என்று மனதில் தியானித்து சடாக்ஷர (ஓம் சரவணபவ ) மந்திரத்தைச் சொன்னார் . வெற்றிலையை வேல் என்று கருதி மிரண்ட யானை பின்னோக்கி ஓடியது. ஆண்டியும் கதிர்காமம் சென்று திரும்பி ததார் .
யானை மிரண்டோடிய இடத்தில் குடிலை அமைத்து வேலினை வலபிடேட்டர். வேடர் குடிகளும் அங்கே தோன்றின. அப்போது முதல் அங்கு முருகனின் அற்புதங்கள் நிகழத்துவங்கின . இவை எல்லாம் ஆண்டியின் சித்து வேலைகள் என்று மக்கள் போற்றினர். அவர் பெயர் சித்தாண்டி ஆனது ஊர்ப்பெயரும் அதுவே ஆனது.
XXXXXX
மேலும் தகவல் பெற ,
சித்தாண்டி திருஸ்தல புராணம் – ஏ என் அழகேச முதலியார்,
ஊஞ்சல் பாட்டுக்கள், எஸ். கதிரை,மலை, 1954
200 பாடல்கள் கொண்ட கோவில் புராணம்
மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும், நடராசா, 1980
—subham—
TAGS- ‘திருப்படைக் கோவில்கள்’, போர தீவு , கோவில், சித்தாண்டி, சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம், இலங்கை ,Part 35
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 34
68.திருக்கோவில் சித்திர வேலாயுத கந்தசாமி கோவில்
சித்திர வேலாயுத என்ற அடைமொழியுடன் உள்ள மூன்றாவது கோவில் இது. கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பு வட்டாரத்தில் உளது .மட்டக்களப்புக்கு தெற்கில் கடலோரமாக 50 மைல் தொலைவு சென்றால் திருக்கோவிலை அடையலாம்; இது பாண்டியர் கால 13 ஆம் நூற்றாண்டுக் கோவில். இந்த ஆலயத்தின் விமானம், எஞ்சி நிற்கும் தூண்களைக் கொண்டு ஆலயத்தின் வயதை தொல் பொருட் துறையினர் கண்டு பிடித்தனர் .
மாயூரம் அருகில் வைத்தீஸ்வரன் கோவில் என்ற ஆலயம் பெயரே ஊர்ப்பெயர் ஆனது போல, இங்கும் திருக்கோவில் என்ற ஆலயமே ஊருக்கும் பெயரைக் கொடுத்துவிட்டது
ராவணன், திருகோண மலையில் உள்ள கோணேஸ்வர லிங்கத்தைக் கும்பிடப்போகும்போது, இங்கு தங்கிச் சென்றான் என்பது கர்ண பரம்பரைக் கதை. அவன் சென்ற வழியில் எல்லாம் சிவன் கோவில்கள் தோன்றின..
வெட்டா Vedda என்னும் வேடர்கள் வசித்த இடம் இது. அவர்கள் ஈட்டியையும் வில் அம்பினையும் வைத்து மிருகங்களை வேட்டையாடி வந்தனர். ஆகவே ஈட்டி போன்ற வேல் என்பதையும் அவர்கள் வணங்கத் துவங்கினர். அந்த இடங்கள் எல்லாம் பிற்காலத்தில் கோவில்கள் ஆயின.
உகந்த மலை, வெருகல், மண்டூர் முதலிய ஆலயங்கள் இதற்குச் சான்று பகரும்.
இந்த ஆலயங்கள் குறித்து மட்டக்களப்பு மான்மியம் ஒரு செய்தியைத் தருகிறது அசுரர்களை முருகப்பெருமான் அழித்த போது உண்டான ஒளிக்கதிர்கள் உகந்த மலை, மண்டூர் , திருக்கோவில் ஆகிய 3 இடங்களில் தங்கின. அவை நாவல், தில்லை மரங்களிலும் தங்கின. வேடர்கள் அங்கெல்லாம் வழிபாட்டினைத் துவக்கினார்கள். முன்காலத்தில் இந்த இடம் நாகர் முனை என்னும் துறைமுகமாக விளங்கியது.
மட்டக்களப்பு மான்மியம், திருக்கோவில் தோன்றிய கதையை விரிவாகவே விளம்புகிறது .
பிரசன்ன சித்து என்பவர் இந்தப் பகுதியை ஆண்டபோது, கலிங்க நாட்டிலிருந்து புவனேக கஜபாகு என்ற இளவரசர் வந்தார். அவர் இலங்கையிலுள்ள சிவத் தலங்களைத் தரிசிக்க மனைவியுடன் வந்தார். அவருக்கு ராஜ உபசாரம் கிடைத்தது. அவருடன் வந்த இளவரசி சோழ நாட்டைச் சேர்ந்தவள். திருக்கோவிலில் ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க ஆசை கொண்டாள் அது நிறைவேறியது. சோழ நாட்டுச் சிற்பிகள் வந்து கோவிலை எழுப்பினர். இளவரசியின் பெயர் தம்பதி நல்லாள். அவள் பெயரில் இன்றும் தம்பிலு வில்லு என்ற இடமுள்ளது .அவர்கள் இங்கேயே குடியேறினர் இது நடந்தது கி.பி அல்லது பொது ஆண்டு 28 ஆகும். அவர்களுடய மகன் மனு நேய கஜபாகு, பெற்றோரின் பணியினைத் தொடர்ந்தான். கோவில் ஏழு நிலைக்கு கோபுரமாக உயர்ந்தது. அவன் பல பாசனைக் குளங்களையும் வெட்டினான்.
பின்னர் பாண்டிய மன்னர்கள் வந்து கோவிலைப் புதுக்கினர்.
கோவிலில் கண்ட கல்வெட்டு பற்றி HUGH NEVILLE ஹுயூக் நெவில் தகவல் தருகிறார். அது தேவதானக் கல்வெட்டு; அதாவது தேவாலயத்துக்கு விடப்படும் தானம் பற்றியது. விஜய பாகு தேவர் , 50 ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு அளித்தார் இந்த தானத்துக்கு ஊறு செய்வோர் கங்கை நதிக்கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்ற வழக்கமான சாபத்துடன் கல்வெட்டு முடிகிறது. கல்வெட்டு குறிப்பிடும் மன்னர் மூன்றாம் விஜயபாகு 1240-1267 அல்லது ஆறாம் விஜயபாகு 1398- 1410 மன்னராக இருக்கலாம்.
1967ம் ஆண்டில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது; இது 16 ஆம் நூற்றாடுக் கல்வெட்டு.
பிற்காலத்தில் போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்கள் கோவில் குருக் களைக் கொன்று கோவிலையும் இடித்தார்கள் என்றும் ஊரே காலியாகி அந்த இடம் வெறிச்சோடிப்போனது என்றும் பால் ஈ பியரிஸ் தனது நூலில் எழுதியுள்ளார்.
மத வெறியர்கள் அழித்தபோது கோவிலுக்கு 3 கோபுரங்கள் இருந்த செய்தியை போர்ச்சுகீசிய கிறிஸ்தவப் பாதிரி ரெவரெண்ட் கிராஸ் எழுதிவைத்துள்ளார்..
டச்சுக்கார, பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த வணிகர்குல மக்கள் கோவிலை மீண்டும் கட்டினார்கள். முன்னர் இந்தக் கோவிலின் பெயர்- சிவ ஞான சங்கரர் கோவில் .
இப்போது பூஜைகளுடன் ஜூலை ஆகஸ்ட் அமாவாசையில் நிறைவு பெர்ம் பத்து நாள் உற்சவம் நடக்கிறது.
கதிர்காமக் கந்தனை தரிசிக்க பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திருக்கோவில் பல வசதிகளை அளிக்கிறது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆலயத்தை மக்கள், தேசத்துக் கோவில் என்று உரிமை கொண்டாடுவார்கள் ; பெருமை கொள்வர்.
ஏழாம் விஜயபாகுவால் (1513–1521) அவனது பத்தாம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட சிதைந்த கல்வெட்டொன்று, இக்கோவிலில் உள்ளது. இதே மன்னனால் நீர்ப்பாசனத்துக்கு “வோவில்” எனும் ஏரி வழங்கப்பட்டதைக் குறிப்பிடும் தம்பிலுவில் கல்வெட்டும், இதே ஆலயத்தில் வைத்துப் பேணப்படுகின்றது.
ஆடி அமாவாசையன்று கோவில் விழா பூர்த்தியாகிறது . ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்துவது மிகவும் முக்கியம் என்பதால் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.
ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட “கே ” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காஷ்மீர் ஃபைல்ஸ்!
ச.நாகராஜன்
காஷ்மீர் ஃபைல்ஸில் சொல்ல வேண்டியது ஏராளம் இருக்கிறது.
கொடுங்கோலன் சிக்கந்தர் செய்த மஹா பாதகச் செயலைப் பார்ப்போம்.
ஆண்டு கி.பி. 1394.
சுல்தான் சிக்கந்தர் அரியணை ஏறினான்.
இந்து மதம் என்றாலே அவனுக்கு வெறுப்பு; உடல் எல்லாம் எரியும்.
எல்லா இந்துக்களையும் ஒழிக்க வேண்டும் என்பது அவனது எண்ணம்.
சனாதன ஒழிப்பு – திராவிட மாடல் போல!
ஹிந்துக் கோவில்களை அழித்தொழிக்க தனி ஒரு பிரிவையே அவன் ஏற்படுத்தினான். ஒரு ஆண்டு முழுவதும் அது தீவிரமாகச் செயல்பட்டது.
பிரம்மாண்டமான ‘மார்த்தாண்ட’ கோவில்களை அழிக்க அவன் திட்டமிட்டான்.
ஆனால் அந்த அற்புதமான வலிமையான கோவில்களோ அவனை எள்ளி நகையாடியது தனது திறத்தால்.
சில கோவில்களில் கல்வெட்டாக ஒரு செய்தி பொறிக்கப்பட்டிருந்தது.
அதில் சிக்கந்தர் என்பவன் இந்தக் கோவிலை அழிக்க முயல்வான் என்று பொறிக்கப்பட்டிருந்தது.
அவனுக்கு மட்டும் இந்தக் கல்வெட்டுச் செய்தி தெரிந்திருந்தால் இந்தக் கோவிலை அவன் அழிக்காமல் விட்டிருப்பான். ஹிந்துக்கள் பொய் சொல்பவர்கள் என்று நிரூபிக்க எதையும் செய்யத் தயங்காதவன் அவன். ஆனால் கோவிலை அழித்தான். ஹிந்துக்களின் அறிவார்ந்த முன்னோரின் கணிப்பை நிஜமாக்கினான்.
கோவிலில் அவன் பெயர்த்தெடுத்த வலிமையான பெரிய பாறைகள் ஜும்மா மஜ்ஜித் கட்ட உதவின. பல கற்களை ஆங்காங்கே வைத்து நகரை அழகு படுத்தினான்.
கோவிலை இப்படி சிதிலப்படுத்திய அவன் ஹிந்துக்களின் மீது பார்வையைச் செலுத்தினான்.
அனைத்து ஹிந்துக்களுக்கும் அவன் மூன்றே மூன்று வழிகளைச் சொன்னான்.
1) உடனடியாக இஸ்லாமுக்கு மாறுவது
2) இல்லையேல் காஷ்மீரை விட்டு ஓடிப்போவது
3) அவன் கைகளால் கொல்லப்பட்டு சாவது
ஏராளமானோர் இரண்டாம் வழியைத் தேர்ந்தெடுத்தனர். இந்தக் கயவன் வாழும் ஊரில் இருப்பதே பாவம் என்று குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர்.
வேறு வழியே இல்லாதவர்கள் மதம் மாறினர்.
அஞ்சாத நெஞ்சம் படைத்தவர்களோ காஷ்மீரை விட்டுப் போகமாட்டோம்; வழிபாடுகளையும் நிறுத்த மாட்டோம் என்று உறுதியாக நின்றனர். அவர்கள் கொல்லப்பட்டனர்.
ஏழு மணங்கு பூணூல் குவியலை குவியலாகச் செய்து அவன் எரித்தானாம்.
அவ்வளவு பிராமணர்களை அவன் கொலை செய்திருக்கிறான்.
ஹிந்து சாஸ்திரங்களையும் அறநெறி கூறும் புத்தகங்களையும் திரட்டி டால் ஏரியில் அவன் எறிந்தான்.
இந்து மதத்தை ஒழித்து விட்டேன் என்று அகம்பாவத்துடன் அவன் சிரித்தான்.
ஆனால் அந்தப் பாவியால் சனாதனத்தை ஒழிக்க முடிந்ததா?
வரலாறு உண்மையைச் சொல்கிறது. அவன் தான் ஒழிந்து போனான்.
ஆனால் என்றுமுள்ள ஹிந்துமதம் – சனாதனம் – இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது. உலகெங்கும் பரவி வருகிறது.
காஷ்மீர் ஃபைல்ஸின் ஒரு துளி இது!
ஃபைல்ஸின் பல பக்கங்களைப் புரட்டினால் ஹிந்துக்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் அறியலாம்!