மஹாகவி பாரதியார் கண்ட அகண்ட பாரதம்! (Post No.3437)

Written S NAGARAJAN

 

Date: 11 December 2016

 

Time uploaded in London: 5-35 am

 

Post No.3437

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

டிசம்பர் 11. மஹாகவி பாரதியாரின் பிறந்த தினம். அவர் கண்ட அற்புதமான அகண்ட பாரதத்தை அமைக்க உறுதி பூணுவோம்!

 

மஹாகவி பாரதியார் கண்ட அகண்ட பாரதம்!

 

ச.நாகராஜன்

 

மஹாகவி பாரதியாரின் தெளிவான சிந்தனை

மஹாகவி பாரதியாரின் சிந்தனைகள் தெளிவானவை. சமச்சீர் தன்மை உடையவை. காலத்தால் முற்பட்டுத் தரப்பட்டவை. காலத்தை விஞ்சி நிற்கும் அறப்பண்புகளின் அடிப்படையிலானவை. ஆகவே தான் அந்த மஹாகவியை உலக மஹாகவியாக உலகம் போற்றுகிறது.

இந்தியா பற்றிய தெளிவான சிந்தனையை அவர்  தான் நடத்திய ;இந்தியா’ பத்திரிகை வாயிலாக 27-4-1907 இதழில் தெரிவிக்கிறார்.

அதை அப்படியே பார்ப்போம்:

கட்டுரையின் தலைப்பு :

“ஸ்வராஜம்” என்பதில் “ஸ்வ” என்பது யார்?

கட்டுரை :-

ஸ்வராஜ்யம் வேண்டுமென்று நாம் ஏன் கேட்கிறோம்? இங்கே “ஸ்வ” என்பது யாரைக் குறிப்பிடுகிறது? ஸ்வராஜ்யம் வரும்போது அது மகமதிய ராஜ்யமாக இருக்குமா? அல்லது ஹிந்து ராஜ்யமா? எது?

“ஸ்வ” என்றால் “தனது” என்று அர்த்தமாகிறது. யாருடையது? இந்தக் கேள்விக்கு நாம் மறுமொழி சொல்வதென்னவென்றால், பாரத தேவியுடையது.

பாரத தேவி தன்னைத் தானே பரிபாலனம் செய்து கொள்வது ஸ்வராஜ்யம் ஆகும். “ஸ்வ” என்பது பாரத தேவியைக் குறிப்புடுகிறது.

பாரத தேவி என்றால் கிறிஸ்தவர் மட்டுமன்று, மகமதியர் மட்டுமன்று, எல்லா ஜனங்களும்;; அகண்ட பாரதம், பிரிவு செய்யப்படாத பாரதம்.

 

 

பிரிவு செய்யப்படாத அகண்ட பாரதம் தன்னைத் தானே ஆள்வதென்றால் என்ன அர்த்தம்? ஒரு தனி ராஜா ஆள்வதென்று அர்த்தமில்லை. ஒரு சந்ததியார் ஆள்வதென்று அர்த்தமில்லை. பிரஜா பரிபாலனம் அல்லது ஸர்வ ஜன ராஜ்யம் என்று அர்த்தம்.

ஸர்வ ஜன ராஜரீகம் என்றால் அது அராஜரீகமாய் விட மாட்டாது. இப்பொழுது இங்கிலாந்திலே கூட. பெயர் மட்டிலே ஒரு ராஜவமிசத்தார் இருக்கிறார்களேயல்லாமல் வாஸ்தவத்திலே, பிரஜைகள் தான் ஆட்சி புரிகிறார்கள்.

 

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலே பெயர் மாத்திரத்திற்குக் கூட ராஜா இல்லாமல் பிரஜா ராஜ்யம், அதாவது குடியரசு நடந்து வருகிறது.

 

இந்தியாவிலேயும் ஜனராஜ்யம் ஏற்பட் வேண்டுமென்பதே நாட்டவர்களின் அபீஷ்டம். இது இங்கிலாந்திலிருப்பது போல ஒரு ராஜா வைத்துக் கொண்டு நடத்தப்படுமா, அல்லது அமெரிக்காவைப் போல் குடியரசாக நடக்குமா என்பது இப்போது ஊஹித்துக் கூற முடியாது. அது அந்தச் சமயத்திலுள்ளதால் தேச வர்த்தமானங்களைப் பொறுத்த விஷயமாகும்.

 

***

 

   சேதமில்லாத ஹிந்துஸ்தானம்

 

ஆக பாரதியார் கனவு கண்டது அகண்ட பார்தம்; குடியரசு. மக்களின் ஆட்சி. இதில் முதலாவதைத் தவிர மற்ற இரண்டும் நனவாகி விட்டதென்றே கூறலாம்.

பாப்பா பாட்டில் கூட பாரதி சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தையே தெய்வமென்று கும்பிட பாப்பாவிற்கு அன்புரை வழங்குகிறான்.

 

 வேதம் உடையதிந்த நாடு – நல்ல

                வீரர் பிறந்ததிந்த நாடு

            சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதைத்

                 தெய்வமென்று கும்பிடடி பாப்பா

 

எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் இந்நாட்டு மன்னர்

 

மஹாகவி கனவு கண்ட பாரத ஸமுதாயம் பற்றி அவரே மிகத் தெளிவாக தனது பாடலில் கூறி இருக்கிறார்:

 

பாரத ஸமுதாயம் வாழ்கவே – வாழ்க, வாழ்க,

பாரத ஸமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய ஜய ஜய ஜய

பாரத ஸமுதாயம் வாழ்கவே

என்று ஆரம்பிக்கும் மஹாகவி,

 

 

,முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத ஸமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை – வாழ்க!

என்று  கூறி,  அங்கு,

 

எல்லோரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்

எல்லாரும் இந்திய மக்கள்

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் –வாழ்க

பாரத ஸமுதாயம் வாழ்கவே!

என்று முடிக்கிறார்

 

இப்படி மிகத் தெளிவாக பாரத நாட்டின் குடியாட்சி பற்றியும் அகண்ட பாரதம் பற்றியும் பாரத ஜன ஸமுதாயம் பற்றியும் தான் கண்டிருக்கும் காட்சியை ம்ஹாகவி நம் முன் வைத்துள்ளார்.

இந்த அகண்ட பாரதக் காட்சியை ஒவ்வொரு இந்தியனும் தன் உளத்துள்ளே கண்டு அதை அமைக்கப் பாடுபட வேண்டும்.

அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்!

 

****

 

மனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி! ஒரு சுவையான கதை! (Post No. 3436)

Written by London swaminathan

 

Date: 10 December 2016

 

Time uploaded in London: 9-32 am

 

Post No.3436

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

This story is available in English in my blog.

 
மனம் ஒரு கடல். நம் ஒவ்வொருவரிடையேயும் மகத்தான சக்தி இருக்கிறது. அதைத் தேவை ஏற்படும் போது பிரயோகித்து அதிசயம் நிகழ்த்தலாம். இதோ பேராசிரியர் உஷர்புத் சொன்ன கதை. அவர் முதலில் அமெரிக்காவில் மின்னசோட்டா ப ல்கலைக் கழக சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியராக இருந்து பின்னர் வேதபாரதி என்ற பெயரில் சாமியார் ஆனார்.

 

“முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார். அவருடைய அண்ணன் பெரிய அறிவாளி; ஒரு நேரத்தில் அரசாட்சியைத் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு தவம் செய்யப் போய்விட்டார். தவத்தின் மூலமாக நிறைய சக்தி கிடைத்தவுடன் ஒரு ஆஸ்ரமம் அமைத்தார். ராஜாவின் அரண்மனை நதியின் ஒரு பக்கமும் மறுகரையில் அந்த ஆஸ்ரமமும் அமைந்திருந்தன.

 

காலம் உருண்டோடியது; தம்பிக்கு (ராஜவுக்கு) கல்யாணம் நடந்தது– மனைவி கர்ப்பவதி ஆனாள். கர்ப்பிணிப் பெண்கள் எப்போதும் நல்ல விஷயங்களைக் கேட்டால் குழந்தையும் அறிவாளியாகவும் ஞானியாகவும் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதை ஒட்டி மஹாராணியும் கணவனிடம் சொன்னாள்:

சுவாமி! நாதா! என் பிரிய நாயகரே; எனக்கோ விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது. உங்கள் குழந்தையும் உங்களைப் போல அறிவாளியாகவும், ஞானவானாகவும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் . ஆகையால் உங்கள் அண்ணனை — சந்யாசியைப் பார்த்துவர அனுமதி கொடுங்கள்.

 

ராஜாவுக்கு மெத்த மகிழ்ச்சி; அதற்கென்ன சென்று வா; வென்று வா! என்று செப்பினார். சாது சந்யாசிகளையும், அரசனையும் பெரியாயோர்களையும் பார்க்கச் செல்லுகையில் வெறும் கையுடன் போகக்கூடாது; ஏதேனும் அன்பாகக் கொடுப்பதற்குக் கொண்டுபோக வேண்டும் என்று இந்துமத சாத்திரங்கள் சொல்லுகின்றன. ஆகவே அவளும் உடனே நிறைய பலகாரங்களைச் சமைத்து எடுத்துக்கொண்டாள். புறப்படுவதற்கு முன் ராஜாவிடம்சென்று, அன்பரே ஆற்றைக் கடக்க படகு ஏற்பாடு செய்துவிட்டீர்களா? என்று வினவினாள்.

ராஜா சொன்னார்: கண்ணே! மணியே! கற்கண்டே! படகு எதற்கு? சத்தியம் செய்துவிட்டு அந்த சத்தியத்தின் பேரில் “நதியே வழிவிடு” என்றால் தானாக வழிவிடும். நந்த கோபன், கிருஷ்ணனை தலைமீது கூடையில் வைத்துக் கொண்டு யமுனையைக் கடக்கவில்லையா? அப்போது யமுனையே வழிவிட்டதே!

 

மனைவி/ மஹாராணி சொன்னாள்: அவர்களுக்கெல்லாம் மஹத்தான சக்தி இருந்தது. எனக்கு அப்படி ஒன்றுமில்லையே!

 

கணவர்/ ராஜா சொன்னார்:

அதனால் என்ன? என்னுடைய சக்தியை எடுத்துக் கொள். நதிக் கரைக்குப் போய் நில்; என் கணவன் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான நாள் முதல் இன்று வரை  பிரம்மச்சாரி என்பது உண்மையானால் நதியே எனக்கு வழிவிடு என்று சொல் என்றார்.

 

மனைவிக்கு ஒரு புறம் சந்தேகம்; மறுபுறம் குழப்பம்; என்னுடன் படுக்கையில் படுத்து என்னை கர்ப்பம் தரிக்கச் செய்தவர்; எப்படி பிரம்மச்சாரி என்று சொல்லுகிறார்?  சரி, போய்தான் அவர் சொன்னதைச் செய்வோமே என்று அவர் சொன்னபடியே செய்தாள். நதியும் விலகி வழிவிட்டது!

 

மகிழ்ச்சியுய்டன் மறுகரையிலுள்ள ஆஸ்ரமத்தை அடைந்தாள். ராஜாவின் அண்ணனான சாமியாருக்கு நாள் முழுதும் பணிவிடை செய்தாள்; உபதேச மொழிகளைக் கேட்டறிந்தாள். தான் கொண்டு சென்ற பலகாரங்களைப் பரிமாறி அவரை உண்ண வைத்தாள். அவரும் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லிச் சாப்பிட்டார்.

 

மாலை நேரம் நெருங்கியது; கணவனிருக்கும் அரண்மனைக்குப் போவதற்கு விடை பெற்றாள் சந்யாசியிடம்.

“தயவு செய்து, எனக்கு ஒரு படகு மட்டும் ஏற்பாடு செய்து விடுங்கள்; நான் பொழுது சாய்வதற்குள் அரண்மனைக்குப் போக வேண்டும்” என்றாள்.

சந்யாசியோ சிரித்துக் கொண்டே சொன்னார்:

“பெண்மணியே! சத்தியம் செய்துவிட்டுப் போ, நதி தானாக வழிவிடும் என்றார். என்ன சத்தியம் செய்வது?” என்று கேட்டாள்.

 

“நான் காலை முதல் மாலைவரை பணிவிடை செய்த சந்யாசி நாள் முழுதும் உண்ணா நோன்பு அனுஷ்டித்தது உண்மையானால் ஏ! நதியே! எனக்கு விலகி வழிவிடு என்று சொல்; நதியும் விலகிவிடும்” என்றார்.

அவளுக்கு மீண்டும் குழப்பம். என் கையால் சமைத்ததை நாள் முழுதும் சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருந்ததாகச் சொல்லுகிறாரே! என்று திகைத்தாள்

638d2-img_7098

ஆயினும் காலையில் வந்தபோது நிகழ்ந்த அதிசயம் மீண்டும் நடக்குமோ என்று எண்ணி, சந்யாசி சொன்னபடியே செய்தாள். நதியும் இரண்டாகப் பிரிந்து இடைவெளியில் பாதை உண்டாக்கியது. இதைக்கண்டு வியப்புற்ற அவள், கணவனிடம் இதற்கு விடை கேட்காவிடில் என் தலையே வெடித்துவிடும்; அவ்வளவு குழப்பமாக இருக்கிற து என்று எண்ணிச் சென் றாள்.

 

 

கணவன் அவளை இன்முகத்துடன் வரவேற்றவுடன் கேட்ட முதல்

கேள்வி:

நீங்கள் பிரம்மசாரியுமில்லை; உங்கள் அண்ணன் உண்ணாவிரதியும் இல்லை; நீங்கள் என் வயிற்றிலுள்ள குழந்தைக்குத் தந்தை; அவரோ நாள் முழுதும் நான் கொண்டு சென்ற உணவுவகைகளை ருசித்துச் சாப்பிட்டார்.

 

சுவாமீ! நாதா!! இதற்கு என்ன விளக்கமோ?

 

அவர் சொன்னார்:-

“அன்பே! ஆருயிரே! மனத்தின் விசாலம் பலருக்கும் தெரிவதில்லை. அது சமுத்திரம் போலப் பரந்தது; உண்மையாகவுள்ள சமுத்திரத்தைவிட ஆழமானது, பெரியது. அதில் நாம் துளிக்கூடப் பயன்படுத்தவில்லை. நான் உன்னுடன் படுக்கையில் படுத்து இன்பம் துய்த்தது உண்மையே; எனது அண்ணன்/ சந்யாசி நீ கொண்டுசென்ற உணவைப் புசித்ததும் உண்மையே. ஆயினும் எப்படி கடலின் ஒரு ஓரத்தில் அழுக்குப் படிந்தாலும், அந்தக் கடல் முழுதும் அழுக்குக் கடல் ஆகாதோ, அப்படியே மனத்தின் ஒரு ஓரத்தில் பதிந்திருக்கும் இக்காரியங்கள் — செயல்கள் — எங்களைப் பாதிக்காது.

 

என் கருத்து:–

மனத்தின் சக்தி மஹத்தானது; ஆதிசங்கரர்,ஜனக மஹராஜா போன்ற ஞானிகள் அதைப் பயன்படுத்தி பல அற்புதங்களைச் செய்துள்ளனர். மேற்கூறிய கதையைப் பின்னனியில் வைத்து மகான்களின் புரியாத செயல்களை ஆராய்ந்தோமானால் பொருள் விளங்கும்!

 

–subham–

 

Eaten but Fasting! Had Sex but Celibate Story! (Post No 3445)

Compiled by London swaminathan

 

Date: 10 December 2016

 

Time uploaded in London: 6-18 am

 

Post No.3435

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

This story is available in Tamil in my blog.

 

 

“Once upon a time there was a king. The king had a bother. The brother had left the king long ago to go and become an ascetic. Having received blessings and powers through his tapasya(penance) he returned and lived on the other side of the river from the royal palace. He lived in a mud hut as an ascetic, as a sadhu.

 

The king’s wife became pregnant. Now, in India there is a tradition that a pregnant woman should spend her time in spiritual pursuit, so that a spiritually awakened child is born. As there are certain practises, certain things the woman does during pregnancy, which the family helps to make it possible. The king’s wife had the strong desire to sit at the feet of her husband’s brother the saint. She expressed this desire to her husband. “Oh yes”, he said, “go tomorrow and spend the day with my brother on the other side of the river.”

 

The tradition is that you never go to a holy man, empty handed, you always bring him some gift, some fruit, some such offering. So in the morning before leaving, the King’s wife prepared some food and was ready to go.

 

As she had to cross the river, she said to her husband, “Have you arranged a boat for me?”. He said, “What do you need the boat for?” She said, “to cross the river”. He said, “no you don’t need a boat. Jus go and standby the river and do a sacha kiriya, an act of truth. She said, “What act of truth? I don’t have any powers”. He said, “Take mine. Go, standby the river, close your eyes and say in your mind, since my husband the king was initiated by his Master three years ago, if my husband has never broken in celibacy, by the power of that truth. may the river part and let me go across dry.”

 

The king’s wife was very puzzled because she was carrying his child,but she went and stood by the river and made the act of truth. And right in front of her eyes the river parted and made way for her to cross. She could not understand it.

 

She went to the sadhu, served him, received his teachings, fed him the food she had prepared and in the evening it was time for her to return to the palace. But again she had no way to cross the river. The sadhu said, “Do a saccha kiriya, an act of truth. Stand by the river, close your eyes, and say in your mind, ‘if the sadhu, the Master whom I have served this day, has never since his initiation by his Master broken his fast, may the river part and let me go across.’

 

The king’s wife was again puzzled because she had been feeding him the whole day. But she went to the river and did the act of truth, for the second time, the river parted and she went across. . Now, really confused, she went to her husband and asked, “What is going on? I am carrying your child and you make me  swear by your three year celibacy. I fed the sadhu, your brother, the whole day and he makes me swear by his fast”.

Then the king, who was also a wise man, explained, “Lady mind is a vast force. If in one little corner of the ocean there is some small amount of dirt, the rest of the ocean is still clean and pure. Mind is even vaster and deeper than the entire ocean. Others live by only that little part of the mind, which is active. They see only that part of the ocean, the tiny corner where there is some dirt. So to them the mind has no fasting and the mind contains no celibacy because they have been breaking the vows. For them, that little portion of the sea dirty, the whole sea is dirty. Those who are on the part of enlightenment know the rest, the vast expanse, of the mind. And with that awareness the little indulgence in marital duties or the little eating in the day does not break their celibacy and does not break their fast. Myself and my brother, I as a king and he as an ascetic, have understood this and in the major portion of our minds we are always celibate, always fasting, always silent”.

What is sacha kiriya?

 

“There is a word in in Hindi, kiriya. It is used when someone swears by something. it is short for saccha kiriya, that is an “act of truth”. An act of truth is performed by using the accumulated power of  some form of secret you have kept for a long time. There are many stories about “acts of truth”.

 

Source: Five Pillars of Sadhana by Swami Veda Bharati (Formerly he was Prof.Ushar Budh, Head of the Department of Sanskrit, University of Minnesota,USA)

 

–Subahm–

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 15 (Post No.3434)

Written by S NAGARAJAN

 

Date: 10 December 2016

 

Time uploaded in London: 5-10 am

 

Post No.3434

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 15

விஜயா பாரதியின்

‘பாரதியாரின் Annotated Biography  (With a National Historical Background)’

 

by ச.நாகராஜன்

 

 

விஜயா பாரதி

 

பாரதியாரின் மூத்த புதல்வி தங்கம்மா பாரதி. இவரது மகள் விஜயா பாரதி. இப்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். தாத்தாவின் அனைத்து படைப்புகளையும் ஆழமாக ஆராய்ந்து தேறியவர். அது மட்டுமின்றி பல்வேறு பதிப்புகள் பாரதியாரின் படைப்புகளைச் சரியாக வெளியிடவில்லை என்பதைக் கண்ட இவர் தானே நான்கு பாகங்களில் பாரதியின் படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

 

இவர் 13 பக்கங்களில் ஆங்கிலத்தில் Annotated Biography  (With a National Historical Background)  என்ற சிறு வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புக் குறிப்பை வெளியிட்டுள்ளார். http://subramaniabharati.com/annotated-biography-3/

என்ற தளத்திலிருந்து இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

 

 

பாரதி வரலாற்றுக் குறிப்பு

 

1882இல் ஆரம்பித்து 1921 முடிய வ்ருட வாரியாக பாரதியார் பற்றிய நிகழ்ச்சிக் குறிப்புகள் சுருக்கமாக இதில் தரப்பட்டுள்ளது.

பாரதியார் பற்றி முழுமையாகத் தெரிந்து  கொள்ளவும்  உடனடியாக தேதி பற்றித் தெரிந்து  கொள்வதற்கான விவரங்களைத் தரும் குறிப்பேடு ஆகவும் இது பயன்படும்.

இதில் உள்ள சில பகுதிகள் மட்டும் கீழே தரப்பட்டுள்ளது:. முழு விவரத்திற்கு இந்த வரலாற்றுத் தொகுப்புக் குறிப்பைத் தரவிறக்கம் செய்து கொண்டு படிக்கலாம்.

 

Ettayapuram

 

1882 Dec.11: Born in Ettayapuram, Tirunelveli Dist.

Mother: Lakshmi Ammal Father: Chinnasamy Iyer

 

1887 Loss of Mother.

 

1893 At the age of eleven, the title “Bharati” was conferred upon him at the Court of the Maharajah of Ettayapuram.

 

1894-97 Educated at the Hindu College High School in Tirunelveli, from Form III to Form V (Standard 8 to 10).

 

1897 Jun Married to Chellamma from the village of Kadayam, Tirunelveli Dist. Bharati was 14 and Chellamma was 7.

 

1898 Loss of Father.

 

1898-1902 Lived with aunt Kuppammal in Benares (Varanasi); educated in the Hindu College, Benares.

 

1902-1904 Jul When the Maharajah of Ettayapuram visited Benares, on his way back from the Delhi Durbar (conducted by Lord Curzon) he invited Bharati to come back to Ettayapuram and work for him in his Samastana. Bharati agreed and came to his birth place to work for the Maharajah. His job was to read newspapers, magazines, and poetry and to spend time with the Maharajah.

 

1904 Aug.1 Tamil (pundit) teacher at the Sethupati High School, for 3 months in Madurai.

 

Nov.10-1904 First daughter Thangammal was born.

 

 

Chennai

1904 Nov. – Life in Chennai.

 

1906 Aug, Bharati joined Swadesamitran, as its sub-editor. G. Subramania Iyer, a staunch member of the Indian national Congress, published Swadesamitran from Chennai. He was a founder of “The Hindu,” the English newspaper in Chennai originally.

 

1905 Aug. –  1906 Aug.  Editor Chakravartini  Tamil Monthly, Chennai Proprietor: P. Vaidyanatha Iyer

 

 

*1905 Dec. Bharati attended Congress at Benares.

 

1906 Aug. Bharati quit both Swadesamitran and Chakravartini in order to join India as its Editor.

 

1906 Sep.- Editor (unnamed) “India”

 

1906 Nov.- ? Editor: The Bala Bharat English weekly

 

*1906 Dec. Attended Calcutta Congress; met Nivedita Devi.

 

1907 Bharati’s 3 national poems were first published by V. Krishnasamy Iyer, the leader of the Moderate Party in the province of Madras..

 

*1907 Dec. Surat Congress. Bharati and his friends arranged for delegates and visitors of the Extremist Party from the province of Madras to travel and attend the Surat Congress.

 

1908 Bharati published a collection of his National songs, Swadesa Githangal.

 

*1908 March 9 The day that Bibin Chandra Pal was freed from prison was pronounced as Swarajya Day, by Bharati and friends.

 

1908 Sep. 5 The India magazine in Chennai was stopped by the British Government and the legal editor M. Srinivasan was arrested

 

Pondicherry (1908 – 1918)

 

1908 Sep. Bharati moved to Pondicherry.

 

1908 Oct. 10 India magazine was started again from Pondicherry.

 

1908 When Bharati was in Pondicherry, his second daughter Shakuntala was born.

 

1909 Janma Boomi (Swadesa Githangal – 2nd part) was published.

 

1908 Oct.10 – Bharati became the editor (unnamed) of India

 

1910 Mar 12 magazine (Tamil weekly) again, in Pondicherry. Administrator: Mandayam Srinivasachariar

 

1909 Sep. 7- Also, he became the editor for the daily newspaper

 

1910 Apr.7 Vijaya, in Pondicherry. Propreitor: Mandayam Srinivasachar

 

1910 Jan.-? Editor for Karma Yogi, a Tamil monthly. This was Bharati’s own journal.

 

1910 Mar. Proscription in British India for India and Vijaya.

 

1910 Mar. – Apr. Both India and Vijaya stopped publication from Pondicherry.

 

*1910 Apr. 4 British issued a warrant to arrest Sri Aurobindo for writing an article in his magazine Karma Yogin. Sri Aurobindo escaped to Chandranagur, stayed there for a month, and finally went to Calcutta in disguise and came to Pondicherry by the ship S. S. Duplex. Bharati and Sri Aurobindo became good friends. They read Hindu scriptures together and did an extensive research on the “more than two and half millennia-old” Vedas.

 

1910 Kanavu (Dream), Bharati’s autobiographical poem, was published. It was proscribed later in 1911, with his short story called Aril Oru Pangu.

 

*1910 Sep./Oct. V. V. S. Iyer came to Pondicherry. Iyer was a reporter for Bharati’s India magazine from London. Iyer was involved in the National Movement while he was studying in London for his law degree to become a barrister.

 

*1911 Jul. 17 Murder of Collector Ash. Vanchi Iyer, who was an Extremist, murdered Collector Ash and then killed himself.

 

1911 Warrant issued for all Nationalists who lived in Pondicherry. There was also an announcement in British India that one thousand rupees will be awarded to people who could help to capture the Nationalists in Pondicherry.

 

1912 Panchali Sabatham –Part 1, Bharati’s epic poem, was published.

 

1913 Bharati performed the “sacred thread” ceremony to a harijan boy, named Kanakalingam.

 

 

1914 Maada Manivachagam, a collection of Bharati’s poems, was published in Durban, South Africa by Saraswati Printing Press.

 

1917 Kannan Pattu 1st edition was published by Parali Su. Nellaiyappar, a friend of Bharati, Editor of Lokopakari.

 

1918 Nattuppattu 1st edition was published by Parali Su. Nellaiyappar.

 

1918 Nov. Bharati left Pondicherry, was arrested in Cuddalore, the Indian territory, and imprisoned.

 

 

1918 Dec. Bharati was released from Cuddalore jail after twenty days, with the help of his friends. He went directly to the village of Kadayam, Tirunelveli Dist., the birth place of his wife Chellamma.

 

1919 Kannan Pattu 2nd edition was published by Parali Su. Nellaiyappar.

 

1919 Mar. Bharati’s meeting with Mahatma Gandhi in Chennai.

 

1919 Apr.- May A few days in Ettayapuram to visit relatives and friends.

 

1919 Jun. Bharati’s elder daughter Thangammal was married.

 

1920 Jun 6-10 Again, he spent a few days in Chetty Nadu.

 

 

Chennai

1920 end of – Again, life in Chennai.

 

1921 Sep. 11 Sub-Editor of “Swadesamitran,”Chennai.

 

 

1921 Bharati was living in Tripplicane, at Thulasinga Perumal Koil Street, near Parthasarathy temple. One morning, as his daily routine, Bharati, went to the Parthasarathy temple. As his usual custom, he went to visit the temple elephant first. The elephant, as he had become “mad” and disoriented, was tied and kept inside the fence. Bharati jumped inside the fence, in spite of people warning and shouting at him. As Bharati approached closer to the elephant to feed him the bananas that he had brought, he pushed him down with his trunk. Bharati fell under the four legs of the elephant and became unconscious. In the mean time, Kuvalai Krishnamachari, Bharati’s disciple, jumped inside the fence, carried Bharati on his shoulders, and brought him out of the fence.

 

1921 Sep.11 Bharati was affected by a stomach ailment; he refused to take any medicine. Eventually, he became very weak and his bodily existence came to an end.

 

  • Events in the Indian National Movement

விஜயா பாரதியின் பணி

 

விஜயா பாரதியின் பணி பாராட்டுக்குரிய ஒன்று. அவரது தளத்திற்கு வருகை புரிந்து அவரது பாரதி இயல் பணிகளை அறியலாம்; பாராட்டலாம்.

 

இந்த சிறிய வரலாற்றுக் குறிப்பைப் படிக்கும் போது ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கைக் குறிப்பை முடிந்த அளவு தினவாரியாகத் தொகுத்து வெளியிடப்பட்டிருக்கும் அருமையான புத்தகம் நினைவுக்கு வருகிறது.

 

இப்போது கிடைத்திருக்கும் ஏராளமான குறிப்புகளை வைத்து அது போல பாரதியாருக்கும் ஒரு வரலாற்றுக் குறிப்புத் தயர்ரிக்கப்பட்டால் அது மிகச் சிற்நத நூலாக அமையும்!

 

********

 

 

மாமன்னன் அசோகனை அசத்திய விலை மாது! (Post No 3433)

Written by London swaminathan

 

Date: 9 December 2016

 

Time uploaded in London: 10-45 am

 

Post No.3433

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

(Posted in English as well)

நம் ஒவ்வொருவரிடையேயும் மகத்தான சக்தி இருக்கிறது. அதைத் தேவை ஏற்படும் போது பிரயோகித்து அதிசயம் நிகழ்த்தலாம். இதோ பேராசிரியர் உஷர்புத் சொன்ன கதை. அவர் முதலில் அமெரிக்காவில் மின்னசோட்டா பலகலைக் கழக சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியராக இருந்து பின்ன வேதபாரதி என்ர பெயரில் சாமியார் ஆனார்.

 

மாமன்னன் அசோகன் அவன் தலைநகரான பாடலிபுத்ரம் (பாட்னா) அருகில் கங்கை நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அமைச்சர்கள், பரிவாரம் புடைசூழ நின்றிருந்தான் அசோகன். திடீரென்று ஒரு கேள்வி கேட்டான். யாராவது இந்த கங்கை நதியைப் பின்னோக்கி ஓடச் செய்ய முடியுமா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் எல்லோரும் திகைத்து நின்றனர்.

 

மாமன்னன் ஆயிற்றே! ஆகவே ஒரு மந்திரி பயந்துகொண்டே சொன்னார்:

“மன்னர் மன்னவா! உலகில் எவ்வளவோ காரியங்களை நடத்த முடியாது என்று நினைப்பர்; ஆனால் உங்களைப் போன்ற மாவீரர்கள் நடத்திக் காட்டிவிடுவீர்கள்; ஆயினும் ஒரு நதி பின்னோக்கிச் சென்றதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. என் பதிலில் குறையிருந்தால் மன்னிக்கவும்” – என்று சொல்லி முடித்தார்.

 

அந்தப் பக்கமாக நடந்து சென்ற ஒரு விலை மாது இதைக் கேட்டுக்கொண்டே இருந்துவிட்டு அருகில் வந்தாள். “நான் செய்வது இழி தொழில் ஆகையால் இங்கு பேசலாமா என்று தெரியாது. மன்னர் அனுமதித்தால் நான் பேசுகிறேன்”.

 

மாமன்னன் அசோகன் “அதற்கென்ன? பெண்ணே, பேசு” என்றான்.

அந்தப் பெண் சொன்னாள். “இதோ பாருங்கள். இப்பொழுது நதியைப் பின்னோக்கி ஓடச் செய்கிறேன். அது தோன்றிய மலையை நோக்கி ஓட வைக்கிறேன்” என்றாள்.

 

எல்லா அமைச்சர்களும் வியப்புடன், “செய்து காட்டுங்கள்” என்று சொன்னார்கள். அவள் சொன்னவுடன் நதி மேல் நோக்கி மலையை நோக்கி ஓடத்துவங்கியது. இதனால் வரக்கூடிய இயற்கை விபத்துகளை உணர்ந்த அசோகன் “போதும் போதும் நிறுத்திவிடு; முன்னோக்கியே ஓடச் செய்துவிடு” – என்றான் அவளும் அப்படியே செய்தாள்.

 

மன்னன் கேட்பதற்கு முன்னால் அனைத்து அமைச்சர்களும், “அம்மணி! எப்படி இந்த அதிசயத்தைச் செய்தீர்கள்? என்று வினவினர்.

அவள் சொன்னாள்,

 

“வாழ்நாள் முழுதும் ஒருவர் ஏதேனும் ஒரு உறுதிமொழி அல்லது விரதத்தைக் கடைப் பிடித்து அதை யாருக்கும் சொல்லாமல் வைத்திருந்தால் மகத்தான சக்தி வரும். அந்த சக்தியை ஒரே ஒரு முறை மட்டும் இப்படி செலவிடலாம்

“நான் சொல்லுவது உண்மையானால்”, “நான் செய்தது உண்மையானால்” என்று சொல்லிவிட்டு இப்படிக் கட்டளையிடால அது நிறைவேறும் என்றாள்.

 

அம்மணி நீங்கள் என்ன உண்மையை , உறுதி மொழியை ரகசியமாகக் கடைப்பிடித்தீர்கள்? என்று கேட்டார்கள்.

நான் சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த விலை மாதர் தொழிலில் இறங்கினேன். அப்பொழுது இந்தத் தொழிலிலும் ஏதேனும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியுமா என்று வியந்தேன். அன்று என் மனதில் தோன்றியது. “மாமன்னன் வந்தாலும் சரி குஷ்ட ரோகி வந்தாலும் சரி; அவர்களுக்கு மனத்தளவிலும் உடல் அளவிலும் சமமான இன்பம் கொடுப்பேன்” என்ற திட விரதம் பூண்டேன். அந்த விரதத்தை இன்றுதான் முதல் தடவையாக உங்களிடம் சொல்லுகிறேன். ஒரு விரதத்தை ஏற்று அதை வாழ்நாள் முழுதும் கடைப் பிடித்தால் அப்பொழுது மகத்தான சக்தி சேரும். அதை ஒரே ஒரு முறை பயன்படுத்தலாம்! என்று சொல்லிவிட்டு அவள் வந்த வழியே திரும்பிச் சென்றாள்.

 

என் கருத்துகள்:-

 

இதுபோல மனத்தின் மகத்தான சக்தியைக் காட்டும் சில கதைகள் நினைவுக்கு வருகின்றன. இவைகளை முன்னரே எழுதிவிட்டதால் தலைப்பை மட்டும் தருகிறேன்:-

1.நோயுற்ற ஹுமாயுனைக் காப்பாற்ற, அவனது தந்தை (Babar) மூன்றுமுறை வலம் வந்து “அல்லாவே! என் உயிரை எடுத்துக் கொண்டு என் மகனைக் காப்பாற்று” என்ற சம்பவம்

2.துரியோதணனைக் காப்பாற்ற “நிர்வாணமாக நில்; என் பார்வை படுமிடம் எல்லாம் பலம் பெறுவாய்; உன்னை யாரும் கொல்லமுடியாது” என்று சொல்லியும் அவன் தனது மர்ம ஸ்தானங்களை மறைத்த சம்பவம்

 

3.திரிசங்கு மன்னனை விஸ்வாமித்திரன் சொர்க்கத்துக்கு அனுப்பிய சம்பவம் — இப்படி எவ்வளவோ சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.

 

–Subham–

 

 

 

EMPEROR ASHOKA AND A PROSTITUTE STORY ! (Post No.3432)

EMPEROR ASHOKA AND A PROSTITUTE STORY ! (Post No.3432)

Compiled by London swaminathan

 

Date: 9 December 2016

 

Time uploaded in London: 8-06 am

 

Post No.3432

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

“There is a word in in Hindi, kiriya. It is used when someone swears by something. it is short for saccha kiriya, that is an “act of truth”. An act of truth is performed by using the accumulated power of  some form of secret you have kept for a long time. There are many stories about “acts of truth”. Here is one of those stories:

 

It is said that emperor Ashoka, in the third century BCE, was standing by the River Ganga (Ganges) near his capital. In the history of India Ashoka is well known as the most noble king. being an emperor Ashoka could naturally follow whatever whim he wished. So he said to his ministers, “I wonder whether it is possible to for anyone to make the river flow back towards the mountains!”.

 

The ministers, not wanting to offend the emperor, very gently told him, “Sir many things are possible but perhaps this is not one of them”.

 

a courtesan was passing by. She said, “You are all wise ministers, and who am I to speak in the presence of a great emperor., but may I have permission to speak please?” So she was granted permission. She said, “Even someone as lowly as myself can make the river flow backwards”. They asked her to demonstrate. She stood there, closed her eyes and did a saccha kiriya, an act of truth. And the emperor saw that, indeed, the river was flowing backwards towards the mountains. “That is enough”, he said, “Let the river flow naturally”. And she let the river flow.

 

The king and his wise men asked her what her secret was. How could a prostitute have such power? She said, “when I was younger and circumstances led me into this kind of life, I said to myself that there is very little good I can do

in this life to raise myself, but I must do something. So I made one vow to myself, though I lead the life of a prostitute, whether a prince comes to me or a leper comes to me, in mind and body I will treat them absolutely equally. And I have kept to that secret truth in my life. I have not let it out to this day. It is by the power of this truth that I have been able to make the river flow backwards. However for this kind of power you must keep your truth a secret.”

 

Source: Five Pillars of Sadhana by Swami Veda Bharati (Formerly he was Prof.Ushar Budh, Head of the Department of Sanskrit, University of Minnesota,USA)

 

My comments:

Other stories like this:

Gandhari saw Duryodhana naked to save him from Arjuna, but he hid his private parts and lost his life

Babar going round sick Humayun 3 times and saved him by sacrificing his life

Viswamitra sending Trishanku to heaven but pushed back

–Subham–

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 14 (Post No.3431)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 9 December 2016

 

Time uploaded in London: 5-35 am

 

Post No.3431

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 14

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமியின் பல கட்டுரைத் தொகுப்புகள்

 

ச.நாகராஜன்

 

தினமணி சுடரில் வெளியான பல கட்டுரைத் தொகுப்புகள்

‘பாரதியை ஒட்டிய சில நினைவுகள்’ என்ற தலைப்பில் பெ.நா.அப்புஸ்வாமி அவர்கள் தினமணி சுடரில் ஏராளமான கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.

பாரதியும் திலகரும் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

இதர சில கட்டுரைகளின் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

 

அறிவியல் கோணத்தில் 1 (6-9-1981 சுடர் இதழில் ஆரம்பம்)

சரசுவதி தேவியின் புகழ் 1 (22-11-1981 சுடரில் ஆரம்பம்)

பாரதியும் பிற மொழிகளும் 13-12-1981, 20-12-1981 சுடர் இதழ்கள்

பாரதி பாடும் தனிப்பாணி 1,2 (7-2-1982, 14-2-1982 சுடர் இதழ்கள்)

பாரதியின் நாட்டுப் பற்று 1,2 (21-2-1982,28-2-1982 சுடர் இதழ்கள்)

பாரதி பிரசுராலயம் 1,2,3,4 (21-3-1982,28-3-1982,4-4-198211-4-1982 சுடர் இதழ்கள்)

இந்தக் கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்தாலேயே பெ.நா.அப்புஸ்வாமி பாரதியாரைப் பற்றி எத்தனை தகவல்களை அளித்திருப்பார் என்பதை எளிதில் ஊகிக்க முடியும்.

தனது நினைவிலிருந்தே இந்தத் தகவல்களை அவர் அளித்திருப்பதால், சில இடங்களில் தனக்கு நினைவு சரியாக வரவில்லை என்பதையும் வெளிப்படையாக குறிப்பிடுகிறார்.

 

அறிவியல் கோணத்தில்

 

இந்தக் கட்டுரைத் தொடரில் பெ.நா.அப்புஸ்வாமி பாரதியாரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “நேரில் பழகாத குறை தான், ஆயினும் தொடர்புகள் பல. ஆகையால் பாரதியை நேரில் காணாமலும், அவருடைய குரலை நேரில் கேட்காமலும் இருந்த போதிலும் அவரைப் பற்றி எழுத எனக்கு உரிமை உண்டு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

 

 

பின்னர் வந்தே மாதரம் கீதத்தை பாரதியார் இரு முறைகள் மொழிபெயர்த்த நயத்தைப் பாராட்டுகிறார்.

உணர்ச்சி வேகத்தில் புதுமைப் பெண் என்ற பாடல் பாரதியார் வாயிலிருந்து எப்படி எழுந்தது என்ற சம்பவத்தைப் படிக்கச் சுவையாக இருக்கும்.

 

 

சாது கணபதி பந்துலு என்னும் தேசபக்தர் திருநெல்வேலி வீரராகவபுரத்தில் வாழ்ந்தவர். அவர் வீட்டில் சில காலம் பாரதி தங்கியதுண்டு.

 

அந்த வீட்டில், ஒரு நாள் மாலை ‘அதோ பார் புதுமைப் பெண்ணை, அதோ நிற்கிறாளே தெரியவில்லையா’ என்று கூறி நிமிர்ந்த நன்னடை,நேர் கொண்ட பார்வை கொண்ட பெண்ணைப் பற்றிய பாடலை பாரதியார் பாட நண்பர்கள் அதை எழுதிக் கொண்டனராம்.

 

சரசுவதி தேவியின் புகழ்

 

இந்தத் தொடரில் பாரதி ஸரஸ்வதி தேவியின் புகழ் என்ற பாரதி பாடலை அவர் எப்பொழுது பாடினார் என்பது பற்றித் தனக்குத் தெரிந்த ஒரு தகவலை  முன் வைக்கிறார்.

 

 

பாரதியும் பிற மொழிகளும்

 

பாரதியாரின் பன்மொழிப் புலமையை விரிவாக இந்தத் தொடரில் தருகிறார் பெ.நா.அப்புஸ்வாமி

இயல்பாகவே எட்டயபுரத்தில் இருந்த சங்கீத சூழ்நிலையில் தமிழும் தெலுங்கும் பாரதியாருக்கு இயல்பான மொழிகளாக இருந்தன. இந்துக் கல்லூரியில் பயின்றதால் ஆங்கிலத்தில் வல்லமை பெற்றார்

காசியில் வடமொழியில் தேர்ந்தார். பாண்டிச்சேரியில் பிரெஞ்சு மொழியில் தேர்ந்தார்.

ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் அவர் கவிதைகள், கட்டுரைகள் புனைந்துள்ளார்.

 

பாரதி பாடும் தனிப்பாணி

 

பாரதி வாழ்ந்த காலத்தில் எட்டயபுரத்தில் வாழ்ந்த இசை மேதை சுப்பராம தீக்ஷிதர். அவர் காலமான போது பாரதியார் அவரைப் பற்றிய கவிதை ஒன்றைப் புனைந்தார்.

 

பாரதியார் திருவல்லிக்கேணி கடற்கரையில் தனிப்பாணியுடன் தன் பாடல்களை இசைப்பதையும், அதைத் தான் நேரில் கேட்கவில்லை என்றாலும் பாரதியாரின் (ஒன்று விட்ட) தம்பி விசுவநாதையர் பாடிக் கேட்டிருப்பதாகவும் பெ.நா.அப்புஸ்வாமி இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிடுகிறார்.

 

பாரதியின் நாட்டுப் பற்று

 

இந்தத் தொடரில் பாரதியாரின் நாட்டுப் பற்றைப் பற்றி விவரிக்கும் பெ.நா.அப்புஸ்வாமி மதுரையில் சேதுபதி பள்ளியில் பாரதியார் பணியாற்றியபோது அவருடன் பணியாற்றிய கோபால கிருஷ்ணய்யரைத் தான் சந்தித்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

பாரதியார் வந்தேமாதரம் கீதம் வரும் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்த ம்டத்தை மொழி பெயர்த்த மஹேசகுமார் சர்மாவைப் புகழ்ந்து எழுதியது ஒரு அருமையான செய்தி.

அரவிந்தரும் வந்தேமாதரத்தை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த கீதத்தின் முதல் அடி

Rich with thy hurrying streams, Bright with thy Orchard gleams’  என்பதாகும்.

 

பாரதி பிரசுராலயம்

 

பாரதி பிரசுராலயம் தோன்றிய விதத்தையும் விசுவநாதையர் பெரு முயற்சி எடுத்து பாரதியின் பல நூல்களைப் பதிப்பித்ததையும் இந்தத் தொடரில் பெ.நா.அப்புஸ்வாமி எடுத்துரைக்கிறார். பல்வேறு செய்திகளை அவர் பகிர்ந்து கொள்ளும் போது பல புதிய விஷயங்கள் பாரதியாரைப் பற்றி நமக்குத் தெரிய வருகிறது.

 

இந்தத் தொடர் கட்டுரைகள் பாரதி அன்பர்களுக்கு ஒரு வர பிரசாதம் தான்.

 

பல செய்திகள் நினைவிலிருந்தே எழுதப்பட்டிருப்பதால் இவற்றை  மேலும் ஆராய்ந்து பல விஷயங்களில் பாரதி ஆர்வலர்கள் தெளிவு பெற முடியும்.

தினமணியும் தினமணி சுட்ரும் பாரதி பற்றிய பல செய்திகளை ஆரம்ப காலத்தில்ருந்தே சேகரித்து வந்திருக்கிறது. பயன் தரும் விதத்தில் அவற்றைத் தமிழர்கள் பெற பிரசுரித்திருக்கிறது.  தமிழுக்குச் சேவை செய்த தினமணி பாரதியைப் பற்றிய பல புதிய விஷயங்களைத் தொகுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒரு பெரிய விஷயம்.

 

பெ.நா.அப்புஸ்வாமியின் எழுத்துக்கள் புத்தக வடிவில் முழுமையாக வந்ததாகத் தெரியவில்லை.

அவற்றைத் தமிழ் உலகம் பெறுமானால் அது ஒரு பொக்கிஷமாகவே அமையும்!

*********

Kurathi- Tamil Soothsayer and Bull Fighting Floats in Tamil Procession (Post No.3430)

Compiled by London swaminathan

 

Date: 8 December 2016

 

Time uploaded in London: 13-28

 

Post No.3430

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

Following are the floats (tableaus) in the Fifth World Tamil Conference held in Madurai in 1981
THE SOOTHSAYER OF COURTALLAM HILLS

Kuravanchi is a conventional form of Tamil poetry which blends together some of the ways of life of the elites with those of the hunters. Tirukuta  Rasappa Kavirayar, a Tamil poet from Melakaram, near Tenkasi in Thirunelveli District, has composed Kutralakkuravanchi which is considered to be the supreme example of this genre of Tamil poetry.

 

It portrays Lord Siva coming in procession accompanied by his devotees against the background of the natural tapestries of the captivating hills of Courtallam, its flora and fauna and its beautiful waterfalls. With its excellent rhythmic beauty, sensuous style, flexible and tender poetic diction it also depicts the heroine Vasantha Valli falling in love with Lord Siva. She is so captivated by the charms of the handsome Lord that she suffers from insomnia and mental agony which a girl faces due to the pangs of separation from her lover. At this juncture, a woman soothsayer from the hunter’s tribe of Courtallam arrives there singing the beauty of Courtallam and the transcendental glory of the Lord. The words of the foreteller console Vasanthavalli and give her the hope of marrying the Lord. This tableau depicts the foretelling of the soothsayer.

 

xxxxx


KURINCHI

 

The ancient Tamils have classified the landscape into five divisions namely Kurinchi (Hilly region), Mullai (Pastoral), Marutam (Plain), Neytal (Coastal region) and Palai (Wilderness). While dealing with the poetic conventions of the love poems, they have assigned the Mutarporul (i.e. time and space), Karupporul (i.e. the flora and fauna) as well the Uripporul (i.e. the human drama which forms the poetic theme) for each division of lands. This tableau depicts an event wh ich normally happens in the ancient Kurinchi poems. In the human drama of love, Kurinchi depicts love at first sight. Eventhough the damsel is anxious to embrace the hero, out of her feminine quality namely “nanam” (shyness), she feels reluctant to come near the hero. At this juncture, a ferocious tiger comes on the spot. The fear of the tiger makes her cast away her shyness. Without any second thought she takes refuge in the broad chest of the hero, who protects her and drives away the tiger by his arrow.
xxxx

BULL FIGHT

 

Bull fight is one of the heroic sports of the Tamils and has its origin in a very hoary past. In Mullaikkali of Sankam anthology we come across some instances of the hero grappling with a bull and conquering it as a test of bravery. The damsels of the ancient Tamil pastoral used to bring up wild bulls. They were given in marriage to the suitors who successfully conquered their bulls.

 

According to Mullaikkali, the girl of the pastoral land would not even think of the defeated man as her husband in anyone of her various births. This scene depicts a hero who tries to conquer the bull and a heroine who waits anxiously to garland him after his victory. This sport is in vogue in many parts of Tamilnadu, especially in some parts of Madurai as a sport under the popular name Manchu Virattu.
xxxx

 

THE HERO AND THE LANCE

Thiruvalluvar, who glorified agriculture describes a heroic battle in one of his couplets as: “At elephant heads his lance, for weapon pressed He laughs and plucks the spear from his breast be Slaying the elephant in the battle is considered to a supreme kind of heroism by the Tamils. A hero who was nurtured in this heroic tradition fought with an elephant in a battle. He threw his lance on the frenzied elephant which fought fiercely with him. The elephant fell down. When he turned with pride, the victorious hero was hit by the spear of an enemy. At the same time, an elephant also attacked him. Finding no lance ready with him to attack the elephant, he removed the spear which had pierced into his body to throw it on the enemy elephant. Removing the spear, he gloats over the fact that he has a weapon to fight the elephant. Tirukkural describes this thrilling episode and the tableau depicts it.

–Subham–

தமிழ்நாட்டின் எல்லை ‘திருப்பதி’தான்! (Post No.3429)

Research Article Written by London swaminathan

 

Date: 8 December 2016

 

Time uploaded in London: 9-03 am

 

Post No.3429

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

தொல்காப்பியர் காலம் முதல் கம்பன் காலம் வரை தமிழ்நாட்டின் வடக்கு எல்லை மாறவே இல்லை. தமிழன் இந்தியா முழுவதையும் ஆண்டான் என்பதற்கு இலக்கியச் சான்றும் இல்லை, வரலாற்றுச் சான்றும் இல்லை. ஆனால் புனிதமிக்க இமயமலை வரை சென்று அதன் மீது முத்திரை பொறிக்கும் வழக்கம் இருந்தது உண்மையே.

 

முதலில் இலக்கியச் சான்றுகளையும் பின்னர் மொழி இயல் சான்றுகளையும் காண்போம்

 

தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியத்துக்கு பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார் பாடுகிறார்:-

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ் கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு

…………………

 

பொருள்:-

வடக்கே வேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் ஆகிய இந்நிலத்திற்கு இடைப்பட்ட செந்தமிழ் பேசும் தமிழகத்தில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரு வழக்குகளில் உள்ள எழுத்து, சொற்கள், பொருள்களை நன்கு ஆராய்ந்து (தொல்காப்பியர் நூல் இயற்றினார்).

 

புராணங்களில் வரும் 56 தேசங்களில் திராவிட தேசத்துக்கும் தெற்கில்தான் பாண்டிய சோழ தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக திராவிட என்ற சொல்லையும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்த வில்லை. இது பற்றி 56 தேசங்கள் கட்டுரையில் முன்னரே எழுதிவிட்டேன். பஞ்ச திராவிடர்கள் என்பது 5 வகை பார்ப்பன மக்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டதையும் தந்து விட்டேன்.

 

காளிதாசனின் ரகு வம்ச காவியத்திலும் தென் பகுதியில் உள்ள பாண்டிய மன்னரை மட்டுமே குறிப்பிடுகிறான். சேர சோழர்கள் இல்லை!!

 

கம்பன் என்ன சொல்லுகிறான் என்று பார்ப்போம்; தொல்காப்பிய காலத்துக்கு மிகவும் பின்னால் வந்தவன் கம்பன். அவனும் வட வேங்கட மலையே (திருப்பதி-திருமலை) தமிழ் நாட்டின் எல்லை என்பான்:-

 

வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி

நான் மறையும் மற்றை நூலும்

இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்

நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு

புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த

மெய்யேபோல் பூத்துநின்ற

அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய

வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ

 

பொருள்:-

வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும்,  ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்

 

சீதையை த் தேடச் செல்லும் வானரப் படைகளுக்கு கட்டளையிட்டபோது இச்செய்யுள் கூற்று வருகிறது.

ஆக, கம்பனும் வட வேங்கட மலையையே தமிழ் மொழி பேசும் நில எல்லையாகக் காட்டுகிறான். வடக்கில் உள்ள வேங்கட மலை எல்லோரும் அறிந்ததே. ஆயினும் தெற்கிலுள்ள குமரி முனை கடலுக்குள் போய் இப்போது கன்யாகுமரியே நமது தென் எல்லையாக இருக்கிறது.

 

 

தமிழ் மொழி திருப்பதியைத் தாண்டி ஒலித்ததே இல்லை!

 

அதீத அன்பினாலும் தமிழ் ஆர்வத்தாலும் —- தமிழ் மொழி பற்றிப் பலரும், இதுதான் உலகின் பழைய மொழி என்றும் இந்தியா முழுதும் இம்மொழி பேசப்பட்டது என்றும் புகழ்வர். ஆயினும் இதற்குச் சான்றுகள் இல்லை.

 

 

தமிழன் இமயம்வரை சென்று புலி, வில், மீன் முத்திரைகளைப் பதித்திருக்கலாம். அதெல்லாம் போகும் வழியில் இருக்கும் மன்னர்களிடம் முன் கூட்டியே சொல்லி வைத்து  விடுவர். மிகவும் அபூர்வமாக ஓரிருவர் எதிர்த்து சண்டைக்கு வருவர்.

 

சதகர்ணி என்ற சக்திவாய்ந்த ஆந்திர மன்னர் உதவியுடன், சேரன் செங்குட்டுவன் இமயம் சென்றான். ஊர் பேர் தெரியாத இரண்டு சில்லுண்டி சிற்றரசர்கள் — கனகனும் விஜயனும் — சேரனை எதிர்க்கவே அவர்கள் தலையில் அவன் கல்லை ஏற்றிக் கொண்டுவந்தான் என்று நாம் சிலப்பதிகாரத்தில் படிப்போம். இப்படி இரண்டு அரசர்கள் இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை. ஆக இவர்கள் இருவரும் ஏதோ ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசர்களாக இருக்கலாம்.

வடக்கில் திராவிட மொழிகள் இல்லையா?

இப்போது ஒரு கேள்வி எழும். வடக்கிலுள்ள சில மொழிகள், தமிழுக்கு நெருக்கமானவை என்றும் அவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் வெள்ளைக்காரர்கள் எழுதிவைத்துள்ளனரே. அது எல்லாம் பொய்யா?

 

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூல மொழியிலிருந்து உருவனவை. அவைகளின் எச்ச சொச்சங்களை எல்லா இந்திய மொழிகளிலும் காணலாம். இப்படி திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லுவோர் ஒரு நூறு சொற்களைக்கூட காட்டமுடியவில்லை. குறிப்பாக வடமேற்கு இந்தியவிலுள்ள பிராஹுய் மொழியைப் பற்றி எழுதி அது, சிந்து சமவெளியில் தமிழ் இருந்ததற்குச் சான்று என்றெல்லாம் பிதற்றுவார்கள். உண்மையில் வியாபாரத்துக்காக சிந்துவெளிக்கு மிகவும் பிற்காலத்தில் சென்ற தமிழ்    மக்கள்    விட்டுச் சென்ற சில சொற்கள் உள்ளன. அவ்வளவுதான்.

 

 

இவர்கள் எதை எதையெல்லாம் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லுகின்றனரோ அங்கெல்லாம் தமிழ் இல்லாத சொற்கள் 70 முதல் 90 சதவிகிதம் வரை உள்ளன. இது பற்றிக் கேட்டால் பிற்காலத்தில் இந்த மொழி கலந்துவிட்டது என்றும் பிதற்றுவர். பூசி மெழுகுவர். துருக்கியில் கி.மு 1400 வாக்கிலேயே சம்ஸ்கிருதச் சொற்களும் கல்வெட்டுகளும் உள்ளன. இது போலக் கல்வெட்டுகள் இருந்தால் உண்மையில் அந்த மொழி அங்கு இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளலாம்.

 

மேலும் இவர்கள் கூறும் எந்த திராவிட மொழிக்கும் எழுத்தும் கிடையாது, இலக்கணமும் கிடையாது, அகராதி, நிகண்டும் கிடையாது. பொய்ப் பித்தலாட்டத்திலேயே இந்த வாதம் நிற்கிறது. ஆழமாக ஆராய்ந்தால் பிராஹுய் மொழி, திரவிட மொழி என்ற வாதமெல்லாம் அடிபட்டுப் போகும். ஆகவே பிற்காலத்தில் வந்த இந்த மொழிகள் — தமிழனுக்கும் வடக்கிற்குமுள்ள தொடர்பை நிலைநாட்டப் போதுமானவை அல்ல.

பழங்குடி மக்களின் நாகரீகத்தை — குறிப்பாக தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் வாழும் பழங்குடி மக்களின் நாகரீகத்தைப் படித்தால் ஆயிரக் கணக்கான பழக்க வேறுபாடுகள் இருப்பதை அறிய முடியும். ஆக இவர்கள் ஒரே இன மக்கள் இல்லை என்பதும் தெளிவு.

 

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! ஒளிர்க தமிழ்!!!

 

 

‘பாரதியும் திலகரும்’ (Post No.3428)

Written by S NAGARAJAN

 

Date: 8 December 2016

 

Time uploaded in London: 4-36 AM

 

Post No.3428

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 13

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமி

‘பாரதியும் திலகரும்

 

ச.நாகராஜன்

 

 

இதுவரை வந்த கட்டுரைகள் பற்றி

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்று இது வரை 12 நூல்கள், கட்டுரைகள், வானொலி உரைகள் ஆகியவை பற்றிய சுருக்கமான விவரங்களை இந்தத் தொடரில் பார்த்தோம்.

புதிதாக இந்தக் கட்டுரையைப் படிப்போருக்கும் இதைத் தொடர்ந்து படிப்போருக்கும் முந்தைய கட்டுரைகளில் சொல்லப்பட்ட நூல்/கட்டுரை/வானொலி உரை தலைப்பை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

 

 

  • என் தந்தை – பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி எழுதியுள்ள நூல்
  • பாரதி நினைவுகள் – திருமதி யதுகிரி அம்மாள் அவ்ர்களின் புதுவை வாச நினைவுக் கோவை
  • என் கணவர் – மஹாகவி பாரதியாரின் மனைவியார் செல்லமா பாரதி அவர்கள் 1951இல் திருச்சி வானொலியில் ஆற்றிய உரை
  • நான் கண்ட நால்வர் – வெ.சாமிநாத சர்மா அவர்களின் நூல்
  • பாரதி புதையல் மூன்றாம் தொகுதி – தொகுப்பாளர் ரா.அ..பத்மநாபன்
  • பாரதியார் பிறந்த நாள் – அரவிந்த ஆஸ்ரமவாசியான அமுதன் புதுவை வானொலியில் ஆற்றிய உரை
  • மஹாகவி பாரதியார் – வ.ரா. எழுதிய நூல்
  • Subrahmaniya Bharati – Partiot and Poet – Prof P.Mahadevan
  • பாரதியார் கவி நயம் – 31 அறிஞர்கள் எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு – தொகுப்பாளர் ரா.அ..பத்மநாபன்
  • கண்ணன் என் கவி – கு.ப.ரா. சிட்டி ஆகியோர் எழுதிய நூல்
  • பாரதி நான் கண்டதும், கேட்டதும் – பி.ஸ்ரீ எழுதிய நூல்
  • பாரதி பிறந்தார் – கல்கி எழுதிய நூல்

 

இது தவிர ‘மஹாகவி பாரதியாருக்குச் செய்யும் மஹத்தான துரோகம்’ என்ற எனது கட்டுரையில் பாரதியின் கட்டுரைகள், கவிதைகளை  மனம் போல மாற்றி வெளியிடும் போக்கு பற்றி எழுதப்பட்டிருந்தது.

 

 

அடுத்து ‘பாரதியார் கவசம் அணியுங்கள்’ என்ற கட்டுரையில்  இன்றைய ஊழல் நிறைந்த வாழ்க்கை முறையில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் பாரதியாரின் பாடல்களைக் குறிப்பிட்டு இந்த பாரதி கவசத்தை அணியலாம் என்ற ஆலோசனை தரப்பட்டிருந்தது.

 

இவற்றைப் படித்தால் மஹாகவி பாரதியார் என்ற பிரம்மாண்டமான கடல் எவ்வளவு பெரியது என்ற உணமை தெரியும்.

 

 

இப்போது மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் தொடரில் மேலும் சில நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றைப் பார்ப்போம்.

 

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமி – பாரதியும் திலகரும்

தினமணி சுடரில் 1980,1981,1982 ஆம் ஆண்டுகளில் பாரதியை ஒட்டிய நினைவுகள் என்ற தொடரில் பல்வேறு தலைப்புகளில் பாரதியைப் பற்றி பிரபல எழுத்தாளர் பெ.நா.அப்புஸ்வாமி எழுதி வந்தார்.

 

 

இந்தத் தொடரில் 22-6-1982, 29-6-1982, 4-7-1982 ஆகிய தேதியிட்ட இதழ்களில் ‘பாரதியும் திலகரும்’ என்று பெ.நா.அப்புஸ்வாமி எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

 

பச்சையப்பன் கல்லூரிக்கு விடுமுறை விட்ட ஆங்கிலேயர்

இதில் சென்னையில் நட்ந்த ஒரு சம்பவத்தை பெ.நா.அப்புஸ்வாமி நினைவு கூர்கிறார்.

 

அவரது சொற்களில் அப்போதிருந்த நாட்டு நிலைமை இது தான்:

 

“பாரதியின் மனம் பொதுவாக வன்மை முறைகளை ஆதரிக்காத மனமாக இருந்த போதிலும், ஓரளவு திலகருடைய வன்மைமுறைச் சார்பான கட்சியை ஆதரித்தது என்றே கருத வேண்டும். பாரதி கோகலேயையும் (கோகலே சாமியார்  பாடல்), திலகரையும் (வாழ்க திலகர் நாமம்) பற்றிப் பாடியிருக்கிறார். இப்படிப்பட்ட பின்னணி நாட்டில் நிலவிய பொழுது திலகர் காலமானார். அப்பொழுது, பாரதி அரங்கசாமி ஐயங்காரின் பாராட்டைப் பெற்று, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில், செய்தித் துறை முதலியவற்றைக் கவனித்து வரும் குழுவில் ஒருவராக இருந்து வந்தார்.”

பெ.நா.அப்புஸ்வாமி, திலகர் இறந்த நாளில் நடந்த சம்பவம் ஒன்றை அவரது நண்பர் எஸ்.ஆர்.வெங்கடராமன் சுட்டிக் காட்ட, அதை விளக்குகிறார்.

 

பால கங்காதர திலகர் இந்திய நாட்டின் மாபெரும் தலைவர். 1958ஆம் ஆண்டு ஜூலை  மாதம் 23ஆம் தேதி பிறந்த திலகர் 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று காலமானார்.

எஸ் ஆர்.  வெங்கடராமன் பச்சையப்பன் கல்லூரியில் மாணவராக இருந்தார். அந்தக் காலத்தில் பச்சையப்பன் கல்லூரி சென்னையில் ஜார்ஜ் டவுன் பகுதியில் இருந்தது.

அந்தக் கல்லூரிக்கு ரென் என்னும் ஆங்கிலேயர் தலைமை ஆசிரியராக இருந்தார்.இளைய வயதின்ரான அவர் பெரும்பானிமையான ஆங்கில மக்களைப் போன்று இந்திய சுதந்திரத்தில் விருப்பம் உடையவராக இருந்தார்.

 

திலகர் காலமான செய்தியைக் கேட்ட பின்னர் அவர் தம்முடைய கல்லூரி மாணவர்களை கல்லூரியின் உட்புறத்தில் உள்ள திற்ந்த கூடத்தில் கூடச் செய்தார். திலகருடைய நற்பண்புகளைப்ப் பற்றி ஐந்து நிமிஷம்  போல் பாராட்டிப் பேசினார். பேசிய பின், “இது உங்களுக்கு ஒரு துக்ககரமான நாள். ஆதலால் இன்று நம்முடைய கல்லூரிக்கு விடுமுறை நாளாக் அதை மதிப்பது நமது கடமை” என்று சொல்லி கல்லூரியை மூடி விட்டார்.

அந்தச் செய்தியைப் பத்திரிகைக்கு அறிவிக்கும் செய்தி எஸ்.ஆர்.வெங்கடராமனிடம் ஒப்புவிக்கப்பட்டது.

 

 

பாரதியாரின் கூற்று

 

அவர் சுதேசமித்திரன் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அரங்கஸ்வாமி ஐயங்காரைக் கண்டார்.

 

‘செய்திப் பொறுப்பு பாரதியைச் சேர்ந்தது, அவரிடம் போ’ என்று அவர் சொல்ல வெங்கடராமன் பாரதியிடம் சென்றார்.

வெங்கடராமன் தெரிவித்த செய்தியை நம்ப முடியாமல் “யார்? ஒரு வெள்ளைக்காரனா திலகரைப் புகழ்ந்து பேசினான்? அவனா உங்களுக்கு விடுமுறை விட்டான்? என்றெல்லாம் கேட்டு விட்டு பாரதியார், ‘இந்த நாட்டில் அவன் அந்தப் பத்வியில் அதிக நாள் இருக்க மாட்டான்’ என்றார்.

 

 

விடுமுறை அளிக்கப்பட்ட செய்தி சுதேசமித்திரனில் வந்தது.

நிர்வாகத்திற்கு ரென்னுக்கும் இதனால் பிரச்சினை ஏற்பட,

ரென் கல்லூரியை விட்டு விலக நேர்ந்தது.

புலமை மிக்க அவர் இலக்கண நூல்கள், கட்டுரை எழுதுவதற்கு வழிகாட்டும் நூல்களை எழுத ஆரம்பித்தார்.

 

இப்படி ஒரு அரிய செய்தியை பெ.நா.அப்புஸ்வாமி பாரதியும் திலகரும்’ கட்டுரையில் (மூன்று பகுதிகள்) தெரிவிக்கிறார்.

 

பாரதியின் கணிப்பு சரியாகப் போனது. ஒரு ஆங்கிலேயர் இந்திய சுதந்திரத்தில் அக்கறை கொண்டு தேசீய்த் தலைவர் மறைந்ததற்கு இரங்கல் தெரிவித்து கல்லூரிக்கு விடுமுறை விட்டது போன்றவற்றை சுவாரசிய்மாக விளக்கியுள்ளார் பெ.நா.அப்புஸ்வாமி.

 

பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய ஒரு கட்டுரைத் தொடர் இது.

****