மாப்பிள்ளை நாயக்கர் தட்டை அறுத்தது போல – ஒரு பழமொழிக் கதை (Post No.3447)

26628-field2band2bcloud

Written by London swaminathan

 

Date: 14 December 2016

 

Time uploaded in London:- 9-20 am

 

Post No.3447

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

This story is posted  already in English

தமிழில் பல பழமொழிகள், ஒரு சம்பவத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் அனுபவத்தையோ வைத்துத் தோன்றியவை.

கம்மவார் நாயுடு என்பது நல்ல பணவசதியும் நில புலன்களும் சொத்து சுகங்களும் நிறைந்த ஒரு சமூகம் இருக்கிறது. அவர்கள் நல்ல உழைப்பாளிகள்; விடாமுயற்சியுடையவர்கள்— சில கிராமங்கள் முழுவதும் இச் சமூகம் நிறைந்திருக்கும். இந்த சமூகத்தில் மாப்பிள்ளைமார்கள் ராஜா போல நடத்தப்படுவர்.

ஒரு பணக்கார குடும்பத்தில் பெண் எடுத்த மாப்பிள்ளை அந்தக் கிராமத்திற்குச் சென்று மாமனார் வீட்டில் விருந்தாளியாக அமர்ந்தார். ராஜ போகம்தான். மாப்பிள்ளைக்கு தின்னு தின்னு தினவெடுத்துப் போயிற்று. மாமனாருக்கு 400 ஏக்கர் நிலம். அவர் தனது நிலத்திலுள்ள பயிர்களை அறுவடை செய்யும் காலம் வந்தது. அது பற்றி வேலையாட்களுடன் விவாதிக்கையில் @நுணலும் தன் வாயால் கெடும்@ என்பது போல மாப்பிள்ளையும் வாய் திறந்தார்.

 

“மாமா, நான் சும்மாத்தானே இருக்கேன். நானும் கொஞ்சம் அறுவடை செய்யறேன். உங்களுக்கும் கூலி மிச்சமாகும். நானும் உதவி செய்ததுபோல இருக்கும்”.

 

மாமனார் சொன்னார்: “அதற்கென்ன? நீங்களும் என் கூட வரலாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் நிலத்துக்குத்தான் போறேன். வேலை என்ன என்று காட்டிக் கொடுக்கிறேன்”.

 

மாமனாரும் மாப்பிள்ளையும் காலை எட்டு மணிக்கு வயலுக்குச் சென்றார்கள். மாமனார் மேடான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று தனது நிலத்தின் நான்கு எல்லைகளையும் சுட்டிக்காட்டினார்.

மாப்பிள்ளை

“பூ, இவ்வளவுதானா! இதில் கால் பகுதியை எனக்கு ஒதுக்கிவிடுங்கள்; மிச்சம் முக்கால் பகுதியை கூலியாட்கள் செய்யட்டும்” – என்றார்.

மாமனாருக்கு ரொம்ப சந்தோஷம்.

அப்போது கடும் கோடை காலம்; சித்திரை மாத வெய்யில் உடலைத் தகித்தது. மாப்பிள்ளைக்கு பத்து கஜ தூரம் கூட அறுவடை செய்ய முடியவில்லை. பயிர்களை அறுக்க முடியவில்லை. மெதுவாக வீட்டுக்கு நடையைக் கட்டினார்.

 

காலலை 11 மணி இருக்கும்; மாப்பிள்ளை வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அப்பொழுதுதான், மாப்பிள்ளையின் பெருமையையும் அவர் தானாக முன்வந்து அறுவடைப் பணியில் உதவி செய்ய முன்வந்ததையும் சொல்லி பெருமைப் பட்டுக்கொண்டிருந்தார் மாமனார்.

 

மாப்பிள்ளையைக் கண்டு திடுக்கிட்ட அவர், எப்படி இருந்தது வேலை? எவ்வளவு முடித்தீர்கள்? என்று கேட்டார்.

மாப்பிள்ளை சொன்னார்:

எனக்கு நில வேலை செய்து ரொம்ப நாளாய் விட்டதால் வேகமாகச் செய்யமுடியவில்லை. ஆகையால் நூறு ஏக்கர் வேண்டம் ; 50 ஏக்கரில் பயிர்களை வெட்டி விடுகிறேன்.

 

மாமனாரும் அதற்கு ஒப்புக் கொண்டார். மறு நாளும் இதே கதைதான். வயிறு புடைக்கச் சாப்பிடும் பழக்கமுள்ள மாப்பிள்ளைக்கு உடம்பு வணங்கவில்லை; மூச்சு முட்டியது; வியர்வை வியர்த்தது. காலை எட்டு மணிக்கு நிலத்துக்குப் போனவர் 11 மணிக்கு வீடு திரும்பிவிட்டார்.

f108f-er2buzavan2bfield252c2bclose

மாமனாரும் வழக்கம் போல குசலம் விசாரித்தார்.

மாப்பிள்ளை சொன்னார்:

உடம்பு முன்னைப்போல இல்லை. ஆகையால் 50 ஏக்கரில் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை. 25 ஏக்கரை மட்டும் எனக்கு ஒதுக்குங்கள் மற்றதை கூலியாட்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.

 

மாமனாரும், அதற்கென்ன? ஒரு கவலையும் வேண்டாம். நீங்கள் முடிந்த தைச் செய்யுங்கள் என்றார்.

நாட்கள் ஓடின. மாப்பிள்ளையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மறு நாள் மாமனாருடன் நிலத்துக்குச் சென்றா. இருவரும் அறுவடை நடக்கும் நிலத்தின் நடுவே நின்றனர்.

 

மாமா, ஒன்று செய்கிறேன். உங்கள் கழுத்தைத் திருப்பிப் பாருங்கள். இந்த கழுத்துக்குக் கீழே எவ்வளவு பயிர் உள்ளதோ அதை அட்டும் நான் அறுப்பேன், மிச்ச எல்லாவற்றையும் கூலியாட்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல மாப்பிள்ளை வேலை செய்ய வேண்டிய இடமும் சுருங்கிப் போனது. இதுதான் மாப்பிள்ளை நாயக்கர் தட்டை (ப்பயிர்) அறுத்தது போல என்ற பழமொழியின் வித்து ஆகும்.

 

–சுபம்–

தமிழுக்காகத் தாலியைத் ஈந்த தமிழன்! (Post No.3446)

Written by S NAGARAJAN

 

Date: 14 December 2016

 

Time uploaded in London:- 5-44 am

 

Post No.3446

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

கொங்கு மண்டலச் சிறப்பு

தமிழுக்காகத் தாலியைத் ஈந்த கொங்கு நாட்டுத் தமிழன்!

 

by ச.நாகராஜன்

 

கொங்கு நாட்டுத் தமிழர், தமிழ் வளர்ச்சிக்காக எத்தனையோ அரிய செயல்களைச் செய்துள்ளனர். அவற்றில் ஒரு உண்மையான சம்பவம் இது!

 

மதுரையை திருமலை நாயக்க மன்னன் (கி.பி 1623 முதல் 1699 முடிய) அரசாண்ட காலம் அது.

 

அவரது அரசில் தளவாயாக இருந்தவர் ராமசுப்பய்யர் என்பவர். கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர். மிகுந்த பலசாலி. புத்தி கூரமையுள்ளவர்.

 

அரசாங்கத்துக்கு வரியைச் செலுத்தத் தவறிய பாளையகாரர்களின் காணியாளர்களை அவர் சிறைப் பிடித்து சங்ககிரி துர்க்கக் கோட்டையில் அடைத்தார்.

 

ஆணூருக்குச் சென்ற தமிழ்ப் புலவர் ஒருவர் சம்பந்தச் சர்க்கரை மன்றாடியைப் பார்க்க விழைந்தார். ஆனால் அவர் சங்ககிரி துர்க்கத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பதைக் கேட்டு அங்கு சென்றார்.

 

 

வாயில் காவலரிடம் நயமாகப் பேசித் தான் புலவர் என்பதைத் தெரிவித்து சிறைக்குள் சென்றார். அங்கோ உயர்ந்த பதவியில் இருந்த பலரும் இருந்தனர்.

கவிபாடி வந்த புலவரைப் பார்த்த சம்பந்த சர்க்கரை மன்றாடியார் புன்முறுவலுடன் அவரை வரவேற்றார்.

“ஐயா, புலவரே! பாடல் பாடிப் பரிசு பெறுகின்ற இடமா, இது:” என்று கூறிச் சிரித்தார்.

உடனே புலவர்,

 

எவரை என்று நாம் அறிவோம்; இரப்பவனோ இடம் அறியான்   

        இரவில் வானம்

 

கவரு மதி ஒருபுறத்தே நிலவெரிக்கும் பான்மைதனைக் 

        கண்டிலீரோ

 

அவரை பதமாகு முனம் கடுகு பொடியாகி விடும் அதனை ஓர்ந்து

 

 துவரை  முதற் கரதலனாஞ் சம்பந்தச் சர்க்கரையார் சொல்லுவீரே!”

 

 

என்று பாடினார்.

இதைக் கேட்டு  மகிழ்ந்த சர்க்கரை மன்றாடியார் புலவரை இறுகத் தழுவினார்.

 

“இந்தச் சிறைக்கூடத்தில் என்னைச் சந்திக்க மிகவும் சிரமப்பட்டிருப்பீர்களே” என்று கூறிக் கண்ணீர் விடுத்தார்.

சிறைச்சாலையில் கவிஞருக்குப் பரிசாகக் கொடுக்கக் கையில் பணமில்லையே என்று வருந்தினார்.

 

பின்னர் கோட்டைக்கு வெளியே வந்து காவலாளி ஒருவனைத் தன மனைவியிடம் அனுப்பி புலவர் வந்திருக்கும் விவரத்தைச் சொல்லச் சொன்னார்.

விவரமறிந்த சிறந்த மதியூகியான அவரது மனைவி தம்மிடம் வேறு பொருளில்லாததை நினைத்துத் தன் திருமங்கலியத்தைக் கழட்டிக் கொடுத்தனுப்பினார்.

 

 

மனைவியார் அனுப்பிய தாலியைக் கண்ணீருட்ன கண்ணில் ஒற்றிக் கொண்ட சர்க்கரை மன்றாடியார் அதை மகிழ்ச்சியுடன் புலவரிட்ம் கொடுத்து, “என்னால் இப்போது கொடுக்க முடிவது இவ்வளவு தான். இதைப் பெரிய பரிசாக நினைத்துக் கொள்க” என்று உருக்கமாகக் கூறினார்.

 

 

அதை  மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட கவிஞர் அதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு நேராக ராமசுப்பய்யரிடம் சென்று அதைக் காண்பித்தவாறே நடந்ததைக் கூறினார்.

அதைக் கேட்டு வியந்த ராமசுப்பையர் உடனே சர்க்கரை மன்றாடியாரைத் தம்மிடம் அழைத்து வருமாறு ஆணையிட்டார்.

அவரும் வந்தார்.

 

 

அவரைத் தழுவிக் கொண்ட ராமசுப்பய்யர், தமிழ் மீதுள்ள உமது தணியாக் காதலையும் உமது கொடைத் திறமையையும் கண்டு வியக்கிறேன். நல்ல சுபிட்ச காலம் வந்தவுடன் கொடுக்க வேண்டிய வரியைக் கொடுத்தால் போதும்; இப்போது நீங்கள் செல்லலாம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

 

 

உடனே சர்க்கரையார், “என்னைப் போலவே சிறையிலிருக்கும் மற்றவரை விட்டு விட்டு நான் மட்டும் எப்படி வெளியே போக முடியும்” என்று கூறினார்.

 

உடனே தள்வாய், “அனைவரையும் விடுவிக்கிறேன்” என்று கூறி அப்படியே அதற்கான ஆணையை இட்டார்.

அனைவரும் விடுதலையாகி மகிழ்ச்சியுடன் தம் இருப்பிடம் மீண்டனர்.

 

உடனே இன்னொரு பாடல் பிறந்தது.

 

 

“வாணன் உரைத்திட மால் ராமப்பையன் மனம்  மகிழ்ந்து

வேணது கேள் எனச் சம்பந்தச் சர்க்கரை வேளினுமிவ்

வீணரைக் காவல் விடீரென்று கூறிட விட்டிடலுந்

தாணுவென்று இம்முடிக் காணிக்கை சாசனம் தந்தனரே”

 

 

தமிழுக்காக தாலியைப் பரிசாக அளித்த சம்பந்த சர்க்கரை மன்றாடியாரின் புகழும் அந்தச் செயலை உவந்து போற்றிய ராமப்பையரின் புகழும் கொங்கு நாடு முழுவதும் பரவலாயிற்று,

இந்த அரிய சம்பவத்தை கொங்கு மண்டல சதகத்தில் 46ஆம் பாடலாக அமைத்தார் சதகத்தைப் பாடிய பாவலர் ஜினேந்திரன் என்ற கவிஞர். தொட்ர்ந்து பாமழை பொழிந்ததனால் இவரை கார்மேகக் கவிஞர் என்றே உலகம் அறியும். இவர் ஜைன பிராமணரான பத்மநாப ஐயரின் புதல்வர். இவர் படிக்காசுத் தம்பிரான், தள்வாய் ராமப்பய்யர் காலமான 1699ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என்று  கொள்ளலாம்.

 

 

கொங்கு மண்டலத்தின் சிறப்புக்குரிய சுவையான நூறு நிகழ்ச்சிகளை இவரது சதகம் அற்புதமாக விவரிக்கிறது.

அதில் தமிழுக்காகத் தாலி ஈந்த தமிழன் சர்க்கரை மன்றாடியாரின் கொடையும் ஒன்றாக அமைகிறது!

 

*****

 

 

 

காளிதாசன் கவிஞனா? விஞ்ஞானியா? (Post No.3445)

b6570-magnet

Research Article Written by London swaminathan

 

Date: 13 December 2016

 

Time uploaded in London:-16-54

 

Post No.3445

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகப் புகழ்பெற்ற கவிஞன் அவனுடைய ஏழு சம்ஸ்கிருதப் படைப்புகளில் கொடுத்த 1200+ அற்புதமான உவமைகளை உலகமே அறியும். உலகத்திலேயே அதிகமான, பொருத்தமான உவமைகளைப் பயன்படுத்தியதால் “உவமைக்கு காளிதாசன் என்ற  பொன்மொழி உண்டாயிற்று. அவனுடைய 1200க்கும் மேற்பட்ட உவமை, உருவக, உத்திகளில் 200 ஐ சங்க காலத் தமிழ்ப் புலவர்கள் பின்பற்றியதால் காளிதாசன் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்று என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நிறுவியுள்ளேன்.

 

இப்பொழுது அவன் தந்த வியத்தகு அறிவியல் உண்மைகளை அலசுவோம்:

 

காளிதாசன் பேசாத பொருளே இல்லை. அவனைப் போல இலக்கிய நயமும், என்சைக்ளோபீடியா போன்ற அறிவு வீச்சும் காண்பதற்கரிது.

 

இரண்டு விஷயங்களை காளிதாசன் எப்படிச் சொன்னான் என்பது இன்று வரை எவருக்கும் புரியவில்லை.

 

குமரசம்பவம் என்னும் காவியத்தில் முதல் பத்துப் பாடல்களில் இமய மலையின் அற்புத அழகை வருணிக்கும் போது அதை உலகத்தின் அளவுகோல் (ஸ்கேல்/ ரூலர்) என்கிறான். இன்று நவீன வசதிகள் இருப்பதால் அதை 1500 மைல் நீளம் உடையது என்பதை நாம் அறிவோம். அது விண்வெளியிலிருந்து தெரியும் விஷயங்களில் ஒன்று என்று விண்வெளிக் கப்பல் விட்டதால் அறிகிறோம். காளிதாசன் கி.மு முதல் நூற்றாண்டில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன் வசித்தவன். எப்படி இது இவ்வளவு நீளமானது? உலகின் அளவுகோல் என்று தெரிந்தது? என்பது வியப்பான விஷயமே. தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டீஸ் மலை சுமார் 4000 மைல் நீளமிருந்தாலும் அதெல்லாம் உலகின் பழைய நாகரீகம் இல்லாத இடங்களில் இருக்கிறது.

ஆனால் இமயமலையோ உலகின் முக்கிய நாகரீகங்களுக்கு இடையில் இருக்கிறது. வேறு யாரும் சொல்லாத விஷயத்தை அவன் போகிற போக்கில் சொல்லிச் செல்லுகிறான்.

 

இவனுடைய பூகோள அறிவுக்கு இது மட்டும் சான்றல்ல. ஈரான் நாட்டில் தேன் அடை போல தாடி வைத்திருக்கும் பாரசீகர் முதல், இந்தோநேஷியத் தீவுகளில் கிடைக்கும் வாசனைத் திரவியங்கள் வரை இவன் காவியத்தில் உள்ளன. தமிழ்நாடு-கர்நாடகத்திலுள்ள சந்தனமரப் பாம்பு முதல் பாண்டியன் – அகஸ்தியன் உறவு வரை பேசுகிறான். சங்கத் தமிழ் இலக்கியத்தில் கூட அகத்திய-பாண்டியன் உறவு பேசப்படவில்லை!

 

 

இவன் சொன்ன இரண்டாவது விஷயம் இமய மலை விஷயத்தைவிட வியப்பானது. விமானம் ஓட்டப் பயிற்சி செய்யும் பைலட் PILOTடுகள் முதல்தடவை பறக்கும்போதும் தரை இறங்கும் போதும் பயந்து விடுவார்கள். பூமியில் விமானம் வேகமாகத் தரை இறங்கும்போது நம் மீது வெகு வேகமாக மோத வருவது போல பூமி நம்மை நோக்கி விரைந்துவரும். இந்தக் காட்சியை காளிதாசன் வருணிக்கிறான். அவனுக்கு எப்படி இந்த அனுபவம் கிடைத்தது? மேலும் இது பற்றியும் மனதினால் இயங்கக் கூடிய விமானம் பற்றியும் பேசுவதால் அவனுடைய காலத்தில் இதுபற்றி நிறையபேருக்கு நல்லறிவு இருந்திருக்கவேண்டும்.

 

ae12d-gems

ஒளிவிடும் மரங்கள், பறவைகள் குடியேற்றம், இரும்பை இழுத்துக் கவரும் காந்தம், சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு உண்டாக்கும் சூரியகாந்தக் கல் (உருப்பெருக்காடி), பலூனில் பறத்தல் ஆகியவற்றைப் பற்றியும் பாடுகிறான்.

 

உலகில் இன்று ஏதாவது ஒரு நாட்டிற்குப் போக வேண்டும் என்றால் அந்த நாடு அல்லது நகரம் பற்றிய TOURIST GUIDE டூரிஸ்ட் கைட்-ஐ விலைக்கு  வாங்குவோம். இதை வெளியிட பிரபல கம்பெனிகள் இருக்கின்றன. உலகின் முதல் டூரிஸ்ட் கைட் TOURIST GUIDE  காளி தாசனின் மேக தூதம்தான். நூற்றுக்கும் மேலான பாடல்களில் “மேகமே நீ இதைப் பார் அதைப்பார்” என்று வருணிக்கிறான். அதே போல இலங்கையிலிருந்து சீதையை விமானத்தில் அழைத்துவரும்போது ராமன் வாயிலாக திமிங்கிலம் முதலியவற்றை வருணிக்கிறான். சைபீரியாவிலிருந்து வரும் பறவைகள் இமயமலை மீது பறக்க முடியாது. ஏனெனில் 20000 அடிக்கு மேல் உயரமுடையது. அவை எல்லாம் நீதி பாஸ் என்னும் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழையும். இதையெலாம் பாடுகிறான் நம் கவிஞன்! இவனுடைய இலக்கிய நயத்தையும் சாகுந்தல நாடகத்தின் இனிமையையும் உலகம் அறியும். ஆனால் இவனுக்கு எல்லா துறைகளிலும் அறிவு இருந்தது; அவன் சகல கலா வல்லவன் என்பது பலருக்கும் தெரியாது.

 

திருமணமாகி புதுவீட்டுக்குச் செல்லும் பெண்ணுக்கு அவன் சொல்லும் அறிவுரை சாகுந்தலத்தில் உள்ளது . இவனுக்கு சைகாலஜியும் (Psychology)  தெரியும் என்பதற்கு அதுவே சான்று.

 

இரத்தினக் கற்கள், நகைகள், தங்கம், வெள்ளி, முத்து, பவளம் பற்றியும் இவன் பாடுகிறான்.(இவை பற்றியெல்லாம் தனித் தனி கட்டுரைகளை இதே பிளாக்கில் ஐந்து ஆண்டுகளாக வெளியிட்டதால் இங்கு குறிப்புகளை மட்டும் கொடுக்கிறேன்). காளிதாசனைப் படிக்காத ஒருவனுக்கு இந்திய இலக்கியம் பற்றியோ பண்பாடு பற்றியோ பேச 100 சதவிகித அருகதை கிடையாது. 50 முதல் 60 சதவிகித அருகதையே. இதையே நான் வட இந்தியர்களுக்கும் சொல்லுவேன். நீங்கள் காளிதாசனையும் வால்மீகியையும் வியாசனையும் படித்தாலும் சங்கத் தமிழ் இலக்கியத்தையும் அதற்குப்பின் வந்த திருக்குறள்- சிலப்பதிகாரம் ஆகிய இரண்டையும் படிக்காதவரை உங்கள் அறிவு 50 முதல் 60 சதவிகிதமே என்று சொல்லுவேன்.

a7747-best2bbird2bmigration

 

கீழேயுள்ள குறிப்புகளைக் கொண்டு நீங்களே நான் சொன்ன விஷயங்களை ஆராயலாம்:–

 

ரகுவம்சம்- Rv

குமார சம்பவம்- KS

மேகதூதம் -Mega

விக்ரம ஊர்வசீயம்- VU

மாளவிகா அக்னிமித்ரம் – MA

அபிஞான சாகுந்தலம் – AS

ருது சம்ஹாரம் – RS

 

விமான இயல்

Sakuntalam Act 1—9 (Read my article: Did Kalidasa fly in a space shuttle? Posted on 12 Sept.2014)

Sakuntalam Act 7—7/10; Ks2-45;Rv 13-68;13-76;13-79;14-20

 

 

பறக்கும் பலூன்

Rv 16-68

 

வானத்திலுள்ள மூவழிப்பாதை

 

Flight path Rv 13-18, 13-19

xxx

Picture saved with settings embedded.

விண்வெளி இயல்

பால்வெளி மண்டலம் (Milky way) Rv 13-2; 1-78; KS 4-37;1-28; Rv 12-85

 

Chitra constellation Rv 1-46, 13-76, 17-35 pole star 18-34;

Comet KS 2-32; AS 4; Mars vu 5-3

Pusya star Rv 18-32;

Venus KS 3-43;

Stars KS 2-19; RV 7-2;

Meteor Rv 16-83; 14-53;

Algol/Arundhati in Ursa Major Constellation: Rv 1-56

Rohini and Moon:AS 7-22; 3-12; VU 3-4; RV 14-40

 

xxx

பறவைகள் குடியேற்றம்

Kalidasa’s references of swan, cranes and Himalayan geese: Mega. 11,23, 59, 70,81.

Vikra. IV 2,3,4,6,20;31,32,33,3441,54

BIRD MIGRATION :Vikra IV 14 to 17

Kumara. 1-30 (Hamsa mala)

Ragu. IV 19,VIII 59, XIII-33, XVI 33, 56, XVII-75

Malavika.II-2

Rv 1-41

 

xxxx

நிலவியல் Geography and Geology

 

KS 1-10 (Description of the beautiful Himalayas)

Sub marine Fire (Vadamukagni/Badava:- AS 3-3; Rv 9-82; 11-75; 13-4;13-7.

Lot of references about rivers, especially Ganga and Yamuna

 

a99ba-iaf2bplane

xxxx

இரத்தினக் கற்கள்

 

Cat’s eye RS 2-15; Coral  RS 6-16; Conch shell RS 3-4; Crystal Purva Megam 54; Emeralds/Rubies-Rv 13-53; Gems-PM 15, KS 1-38, KS 5-43, KS 5-45, Rv 1-4, Rv 3-18, Rv 10-30, Rv 11-59, Rv 11-68, RV 17-63, VU 2-99, MA 5-18, AS 2-7, AS 2-10, AS 6-6, Sapphire Rv 18-42; Pearl Rv 6-7, UM 46, KS 1-44, KS 3-53, KS 6-6KS 7-89, Rv 6-28, Rv 9-44,Rv 13-54, Rv 16-18; Rubies KS 3-53; Sun stone Rv 11-21; Moon stone VU 5-11; Ivory PM 62

 

லென்ஸ் Magnifying Glass (Lens)

Sun stone Rv 11-21; AS 2-7

 

நாகரத்தினம் (Cobra Jewel)

KS 2-38, 5-43; RV 13-12, 6-49, 11-59, 11-68, 17-63, 10-7, 13-12, 17-63

RS 1-20,

xxxx

 
காந்தம் Magnet –

Rv-18-63; KS 2-59;

xxx

 

சுற்றுப்புற சூநிலையியல் Environmental concern

Don’t Cut even a poisonous tree

KS 2-55

xxxx

 

 

ஒளிவிடும் தாவரம் Bio Luminescent Plants-

KS 1-10; Rv 9-70

 

 

உள்ளவியல்/ மனவியல் Human psychology

Advice to newlyweds: AS 4-20; 4-21;4-22

xxx

 

—Subham—

Story behind Kammavar Naicker Proverb! (Post No.3444)

Written by London swaminathan

 

Date: 13 December 2016

 

Time uploaded in London:-14-46

 

Post No.3444

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

Most hard working, persevering farming community known as Kammavar Naickers live in South India. These people have several village settlements of their own in Tamil Nadu.  There is a proverb about them and there is a story behind it.

 

The bridegrooms of the community are treated like royals by the fathers in law and one of these bridegrooms, while he was staying with at his rich father in laws house (he was a man with about 400 acres of land), at the time of the harvest, saw his father in law busily engaged with his men in cutting the stalks. On a certain day, while they were having a meal, the bridegroom asked his father in law,

“How many acres of land of stalks to be cut?”

“Several acres”, said the father in law.

“Well then, I shall be glad to be engaged in cutting the stalks from a hundred acres of land” , said the b

The following morning the b was taken by his father in law, and went to the field . Standing on an elevated ground, he pointed out with his finger the four boundaries of the acres of land in which the b consented to work. The father in law left the young man in the field and went home.  There is unbearable heat in the months of April and May in India and unfortunately the task was taken in the month of April.

 

 

No doubt there was a great deal of good intention in him.  He commenced to cut the stalks for fifteen minutes, but the heat was so severe that it melted his fat. His whole body began to perspire.  The poor fellow felt altogether exhausted. He was like a dog inhaling and exhaling air through his mouth, his breath became short, but he kept up his courage for awhile. At about 10 am he returned home, having found himself quite unable to cut the stalks, even in a circumference of five yards!

 

In the house, his father in law was giving out that his son in law had undertaken the cutting of stalks from a large part of his lands. As soon as he saw him return, he was anxious to know how he had got on the field. The young man with shame replied that he was unable to cut the stalks to five yards, as the heat was so great and the day was burning hot.  So, he politely asked his father in law to set apart only ten acres of land for him, and to leave the rest for the farm labourers to cut.

On the following day, the young man went at about 8 O’clock in the morning, to the field and remained there till nine, but found himself utterly useless even to cut the stalks for two yards. When he returned home at 10 O’clock, he informed his father in law, with great reluctance, that the distance of ten acres of land was too great, and so he would like to have it reduced to four. The other parts of the lands must be given to other labourers. The father in law readily consented to the request of the young man, who went to the field in the forenoon, and was cutting the stalks when his father in law came to him.

 

The bridegroom took a stick, drew a line, and asked his father in law to permit him to cut that part of the land only, and leave the rest to the farm labourers. Late in the evening his father in law came to see him. By this time the young man was quite exhausted, and lying prostrated under a thorn tree. He got up when he saw his father in law, and told him that he was unable to cut even the few yards which he had marked out, and so he begged his father in law to allow him to cut the distance of land which was marked out by turning his head around, practically a few stalks which stood under his foot. Hence arose the saying in this country – Mappillai Naicker thattai aruththathu pola, i.e. “As the bridegroom of the Naicker caste attempted to cut down the stalks’.

 

Source:Indian Village Folk by T B Pandian, Year 1897,London

–Subham–

 

கடைசியில் என்ன சொன்னார்கள்?! (Post No.3443)

Written by S NAGARAJAN

 

Date: 13 December 2016

 

Time uploaded in London:- 6-48 am

 

Post No.3443

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 கடைசியில் என்ன சொன்னார்கள்?!

by ச.நாகராஜன்

 

“எல்லோரும் ஓர் நாள் இறக்கத்தான் வேண்டும். ஆனால் அப்படிச் சொல்லி ஞாபகப்படுத்துவதைக் கேட்க சிலரே விருப்பப்படுகிறார்கள்”. – லெமனி ஸ்னிக்கெட்

 

 

 

  பிரபல விஞ்ஞானிகள், யோகிகள், மேதைகள், மகான்கள், சீர்திருத்தவாதிகள் தங்களின் கடைசி நிமிடத்தில் என்ன சொன்னார்கள்?

 

 

பிரபல பத்திரிகையாளரான எம்.வி.காமத் பத்ம பூஷண் விருது பெற்றவர். இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா என்ற பிரபல வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் 55 மேதைகளின் இறுதி நேரத்தை ஆராய்ந்து பிலாஸபி ஆஃப் லைஃப் அண்ட் டெத் (Philosophy of Life and Death) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

 

 

மரணத்தை பிரபல மேதைகள் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதை ஆராய்ந்த அவர் வாழ்க்கையை நன்கு ஒருங்கிணைந்து வாழ்ந்தவர்கள் தைரியத்துடனும் அமைதியுடனும் இறக்கிறார்கள். என்று தன் ஆய்வு முடிவை அறிவிக்கிறார்.

 

 

வில்லிய்ம் பி.ப்ராம்ஸ் (William B,Brahms)  என்ற அமெரிக்கர் நூலகப் பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அதற்கென நியூ ஜெர்ஸியில் நூலகத்தில் பல்லாண்டுகளாகப் பணியாற்றி வருபவர். அவர் தகவல் தொகுப்பாளரும் கூட.

 

 

1992ஆம் ஆண்டு அவர் ஒரு நாள் நூலகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். முதன் முதலில் யார் எதைக் கண்டு பிடித்தார்கள் என்பதைப் பற்றி பல நூல்கள் இருக்கும் போது பிரபலமானவர்கள் இறக்கும் போது என்ன சொன்னார்கள் என்பதைப் பற்றி ஒரு தகவலும் சரியான முறையில் இல்லையே என்று நினைத்தார். உடனே அதைத் தானே ஆராயப் புகுந்தார். ஆயிரக்கணக்க்கான நூல்கள், பத்திரிகைக் கட்டுரைகளைச் சேகரித்துப் படித்தார்.

 

 

தன் ஆராய்ச்சியின் முடிவாக 3500 பேர்கள் தாங்கள் இறக்கும் போது என்ன சொன்னார்கள் என்பதைத் தொகுத்து ‘லாஸ்ட் வோர்ட்ஸ் ஆஃப் நோடபிள் பீப்பிள்’ (Last words of Notable People)  என்ற நூலை அவர் எழுதியுள்ளார். அதிகாரபூர்வமான தகவல்களை சரி பார்த்து ஆய்வு செய்த நூலாக இது அமைகிறது.

 

மஹாத்மா காந்திஜி இறக்கும் தருணத்தில் ஹே! ராம் என்று கூறியவாறே உயிர் துறந்தார் என்பதையும் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இறக்கும் கடைசி நிமிடத்தில் தனது தாய் மொழியான ஜெர்மானிய மொழியில் ஏதோ கூற அதை ஜெர்மானிய மொழி அறியாத நர்ஸினால் புரிந்து  கொள்ள முடியவில்லை என்பதையும் அனைவரும் அறிவர்.

 

 

   இன்னும் பல பிரபலங்கள் தங்கள் கடைசி நிமிடத்தில் என்ன சொன்னார்கள்?

 

சில தகவல்களைப் பார்ப்போம்.

 

பிரபல விஞ்ஞானியான சர் ஐஸக் நியூட்டன் கூறியது:

 

 “என்னை உலகம் எப்படிப் பார்க்குமோ எனக்குத் தெரியாது.ஆனால் எனக்கு என்னை கடற்கரையில் விளையாடும் ஒரு பையனைப் போலவே எண்ணத் தோன்றுகிறது. உண்மை என்னும் பெருங்கடல் என் முன்னே கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் போது, சாதாரணமாகக் கிடைப்பதை விட ஒரு அருமையான கூழாங்கல் அல்லது கிளிஞ்சலைக் கண்டு பிடிப்பதில் என்னை ஈடுபடுத்தியவன் போலத் தோன்றுகிறது

 

என்று இவ்வாறு எளிமையுடன் கூறி அவர் இறந்தார்.

 

சார்லஸ் டார்வின், “நான் இறப்பதற்குப் பயப்படவில்லை” என்று கூறி விட்டு மரணமடைந்தார்.

 

 

1988இல் லாஸ் ஏஞ்சல்ஸில் மரணமடைந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ரிச்சர்ட் ஃபெய்ன்மேன், “இந்த மரணம் எனக்கு போரடிக்கும் ஒன்றாக இருக்கிறது” என்றார்.

பிரபல விஞ்ஞானியும் அமெரிக்க ராஜ தந்திரியுமான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் தனது 84ஆம் வயதில் இறந்தார். மரணத் தறுவாயில் அவர் அருகில் இருந்த மகள் அவரை படுக்கையில் சற்று ஒருக்களித்துப் படுக்குமாறு கூறினார். அதற்கு அவர்,  “இறக்கும் ஒரு மனிதனுக்கு எதையும் சுலபமாகச் செய்ய முடியாது” என்று பதில் கூறினார். அதைச் சொல்லும் போதே அவர் உயிர் பிரிந்தது.

தாமஸ் ஃபேனட் டெ லாக்னி என்பவர் ஒரு பிரபலமான கணித மேதை. அவர் இறக்கும் போது அவரிடம் 12ன் ஸ்குயர் (12ஐ 12ஆல் பெருக்கு வரும் எண்) என்ன என்று கேட்கப்பட்டது. 144 என்று பதில் கூறியவாறே அவர் மரணமடைந்தார்.

 

 

பாப் மார்லி என்ற இசைக் கலைஞர், “பணம் வாழ்க்கையை வாங்க முடியாது” என்று கூறி விட்டு இறந்தார்.

மேரி ஆண்டாய்னெட் என்பவர் பிரான்ஸின் மஹாராணி. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவரை கில்லடீனுக்குக் கொண்டு சென்ற போது கில்லடீனை இயக்குபவரின் காலைத் தவறுதலாக அவர் மிதித்து விட்டார். உடனே அவர், “என்னை மன்னிக்கவும். வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை” என்று கூறியவாறே கில்லடீன் வைக்கப்பட்ட மேடை மீது ஏறி அதில் தன் தலையை வைத்தார்.

 

 

ஷெர்லாக் ஹோம்ஸைப் படைத்த எழுத்தாளரான சர் ஆர்தர் கானன் டாயில் 71ஆம் வயதில் தனது தோட்டத்தில் மரணம்டைந்தார். அருகில் இருந்த தன் மனைவியைப் பார்த்து “யூ ஆர் வொண்டர்புல்” என்று கூறியவர் தனது மார்பைப் பிடித்துக் கொண்டார். இறந்தார்.

 

 

பிரபல கவிஞரான டி.எஸ். எலியட் இறக்கும் போது ஒரே ஒரு வார்த்தையைத் தான் முணுமுணுத்தார் – வாலெரி என்று.

வாலெரி என்பது அவர் மனைவியின் பெயர்

எல்லோரையும் தியேட்டர்களில் நாற்காலியின் விளிம்பில் அமர வைத்த சஸ்பென்ஸ் மன்னன் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், “எவருக்கும் எப்போது முடிவு வரும் என்பது தெரிவதில்லை. கத்தோலிக்கர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றாலும் கூட, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதை அறிய செத்துத் தான் பார்க்க வேண்டும்”என்று கூறி விட்டு இறந்தார்.

 

 

  ஜோ டி மக்கியோ என்ற பேஸ் பால் விளையாட்டு வீரர் இறக்கும் போது, “கடைசி கடைசியாக நான் மர்லின் மன்ரோவைப் பார்க்கப் போகிறேன்” என்று கூறி விட்டு இறந்தார்.

 

3500க்கும் மேற்பட்ட பிரப்லங்களின் இறுதி வார்த்தைகளைப் படிப்பது வாழ்க்கையைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் சிறப்பாக அறிந்து கொள்ள முடிகிறது என்று படித்தவர்கள் கூறும் போது அவற்றைத் தெரிந்து கொள்ள ஆவல் கொள்வது இயல்பு தானே!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

பிரபல விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிஸனுக்கு பல விசித்திரமான நம்பிக்கைகள் உண்டு. யார் என்ன சொன்னாலும் தான் நம்பியதை அவர் கடைசி வரை விடவே இல்லை.

 

இப்படிப்பட்ட நம்பிக்கைகளில் ஒன்று ஆவிகளைப் பற்றியது.

ஆவிகளுடன் நிச்சயமாக மனிதர்கள் பேச முடியும் என்று அவர் நம்பினார்.

 

1920ஆம் ஆண்டு அமெரிககன் மாகஸைன் என்ற பத்திரிகையைச் சேர்ந்த ஒரு நிருபருக்கு அவர் பேட்டி அளித்த போது  தான் ஒரு ‘ஆவி போனை’க் கண்டு பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். அதாவது அந்த போனின்  மூலமாக இறந்த எந்த ஒருவருக்கும் டய்ல் செய்து யார் வேண்டுமானாலும் பேசலாம்.

இதைக் கேட்ட நிருபர் அசந்து போனார்.

 

ஆனால் அந்த போனைக் காட்டுமாறு பலரும் தொடர்ந்து அவரை நச்சரித்தவண்ணம் இருந்தனர். இது பல ஆண்டுகள் தொடர்ந்தது. பின்னர் ஒரு நாள் அப்படிப்பட்ட போனைக் காண்பிக்க முடியாத நிலையில் எடிஸ்ன் தான் அப்படி சொன்னது ஒரு ஜோக் தான் என்று சொல்லிச் சமாளித்தார்.

இறந்தவருக்கு டயல் செய்து பேசும் போனை அவரைத் தவிர வேறு யாரும் கற்பனையும் செய்ததில்லை; உருவாக்க முயன்றதுமில்லை!

 

*******

 

Tamil’s Cruel Cock Fight! ( Post No.3442)

Written by London swaminathan

 

Date: 12 December 2016

 

Time uploaded in London:-19-59

 

Post No.3442

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Tamils have been organising Ram fight, buffalo fight and cock fight for the past 2000 years ago. A poet by name garbage cock (Kuppaik koziyaar) had used a simile of fighting cocks in the garbage. The commentators described the cock fight organised for the public and the useless fight among cocks in the garbage. The heroine of the poem compares her condition to a cock which fights in the garbage Kuruntokai Verse No.305 by Kuppaik Koziyaar.

Kamban who wrote Ramayana in Tamil gives a list of recreational activities in the Kingdom of Kosala and one of them is cock fight. Actually, he attributed everything that was common in the Chola country to the Kingdom of Kosala. Kamban describes the cocks fitted with knifes fighting with one another in detail (Balakandam, Kamba Ramayan).

How the cocks are trained:

Probably there is not a people on the face of the earth, whether rich or poor, cultured or uncultured, white or black that does not find time for recreation or amusement. Tamils have several amusements and recreational activities and one of them is the barbarous and cruel cock fighting.  This is a common thing in almost all the villages. The fighting cocks are of two types – the country breed and the Moghul breed. the Moghul breeds are fine, strong and well-made birds. They are kept in separate places, and not allowed to see each other. if a villager is a well to do man, he keeps five or six of these cocks. if he is a big landlord, he keeps about a dozen, and he engages a special man to look after them. His duty is to feed them both morning and evening, and to give them water at noon. Besides this he must spend ten or fifteen minutes with each cock in the evening in wetting their necks well with cold water, and specially in pressing with both his hands the neck of each cock. He takes each cock to the tank, and dis the whole body well into water, and lets it swim for a while. This kind of preparation goes on for some time before the owner ventures to take them to the fighting ground. The country breeds are also prepared in the same manner, except for rubbing of the necks.

 

The spot for fighting will be fixed according to the convenience of the villagers. The parties always chose a place where there is plenty of water and shade, and as far as possible away from a village. To this fighting amusement the fair sex and the Brahmins do not go, but the men of all ages are exceedingly fond of it. Some of them travel miles in order to see the cock fight.

 

The fight commences at 10 O’clock in the morning. A pair of cocks is set up Each of these belongs to a different party, and generally they do not care to fix matches between cocks of the same village. One of these fights is known as Vetrukaal por; the other is called Kathi por. In the former the cocks are engaged in without having any double edged, small knife attached to their right legs; but in the latter kind they have the knives, and this makes it a most cruel and terrible scene.  Soon after these cocks are set up, they severely wound each other, and one of them dies or runs away, the fight is ended. The defeated cock is always presented to the owner of the conqueror.

In the case of the cocks fighting without a knife, one of the cocks either must die or run away. The owner of the cock which conquers its opponent is entitled to the defeated cock or to a certain sum of money.

 

If a man in a village has a champion cock, it rouses the envy of the people of other villages, who spends a lot of money in purchasing a proper match to it. There is a great deal of skill shown by the men who catch the cocks with knives, even while they are flying against each other. Sometimes, the men are severely wounded while thus attempting catch the cocks. This must be regarded as a most cruel and degrading way of getting amusement.

Source: Kamba Ramayanam, Sangam Literature, Indian Village Folk by T B Pandian, year 1897.

–Subham–

 

 

பாரதி பாட்டில் மாணிக்கவாசகர்! (Post No.3441)

Research Article Written by London swaminathan

 

Date: 12 December 2016

 

Time uploaded in London:-11-26 am

 

Post No.3441

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு உருகார், வேறு ஒரு வாசகத்துக்கும் உருகார்.

 

பாரதியின் பாட்டில் மகிழார், வேறு ஒரு பாட்டிலும் மகிழார்.

தெவிட்டாத இன்பம்தரும் பாரதி பாடல்!

 

பாரதி பாடல்களில் தேவார மூவரையோ, திருவாசகம் தந்த மாணிக்கவாசகரையோ நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆயினும் சைவத் திருமுறைகளில் திருவாசகமே அவரது உள்ளத்தைக் கொள்ளைகொண்டது என்பதற்குப் பல சான்றுகள் உள.

 

மாணிக்கவாசகர் என்னென்ன செய்தாரோ அதை இவரும் செய்துள்ளார்.

 

ஓம்காரம்

 

திருவாசகத்தின் முதல் பாடலிலும் (சிவபுராணம்), கடைசி பாடலிலும் ஓம்காரம் ஒலிக்கும்

 

இதே போல பாரதியின் பாஞ்சாலி சபதமும் ஓம் காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்

 

1.உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே (சிவபுராணம்)

 

2.உய்யுநெறிகாட்டுவித்திட்

டோங்காரதுட்பொருளை (அச்சோபதிகம்)

 

இனி பாரதியார், பாஞ்சாலி சபதம் நூலைத் துவக்கி முடிக்கும் முறையினைக் காண்போம்:

 

1.ஓமெனப் பெரியோர்கள்- என்றும்

ஓதுவதாய் வினை மோதுவதாய்

தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்

தேய்ப்பதுவாய், நலம் வாய்ப்பதுவாய்

–பாஞ்சாலி சபதத்தின் துவக்கப்பாடல்

 

2.ஓமென்றுரைத்தனர் தேவர்- ஓம்

ஓமென்று சொல்லி உறுமிற்றுவானம்

–பாஞ்சாலி சபதத்தின் முடிவுப்பாடல்

xxxx

 

மாணிக்க வாசகர் குயில்பத்து பாடினார்

பாரதியார்  குயில்பாட்டு பாடினார்.

xxxx

 

மாணிக்கவாசகர் அச்சோபதிகத்தில்

சாதல், காதல் என்று பாடுவது போலவே, பாரதியும் குயில்பாட்டில்

காதல் காதல் , காதல்

காதல் போயின் சாதல் என்று பாடுகிறார்.

 

ஆண்டவன் மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் மாணிக்கவாசகர்.

 

பாரதமாதா மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் பாரதியார்.

 

 

xxx

திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் — எண்ணற்ற பலகோடி நட்சத்திர மண்டலங்களிருப்பது பற்றி பாடி வியக்கிறார்:

 

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொருகோடியின் மேற்பட விரிந்தன

திருவாசகம்

 

பாரதியும் ,

 

நக்கபிரானருளால் இங்கு

நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்

தொக்கன அணடங்கள் வளர்

தொகைபல கோடிபல் கோடிகளாம்

இக்கணக்கு எவர் அறிவார் – புவி

எத்தனை உளதென்பது யார் அறிவார்

என்று பாடி வியக்கிறார்.

 

xxxx

 

திருத்தசாங்கம் பாடினார் மாணிக்கவாசகர்.

 

பாரதியும் திருத்தசாங்கம் பாடினார்

 

 

இருவரும் கிளியிடம் பேசுவதாகப் பாடியிருப்பதால் சொற்களிலும் அதிக ஒற்றுமை கானப்படுகிறது

xxxx

 

மாணிக்கவாசகர்  போற்றித் திரு அகவல் பாடினார்.

 

பாரதியும் “போற்றி அகவல், கபிலர் அகவல்” முதலியன பாடினார்.

 

இவையெல்லாம் மேம்போக்கான ஒற்றுமைகள். இன்னும் சொல்லாராய்ச்சியில் இறங்கினால் எந்த அளவுக்கு மாணிக்கவாசகரும் அவர்தம் திருவாசகமும் பாரதி மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அறியலாம்.

 

–Subham–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 21(Post No.3440)

Article Written by S NAGARAJAN

 

Date: 12 December 2016

 

Time uploaded in London:- 10-47 am

 

Post No.3440

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 21

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 80.

 

வசந்த காலத்தில் போதிமண்டலம் என்னும் ஒரு விசேஷ ச்டங்கு இறந்தவர்கள் நற்கதி அடைவதற்காகவும் அடுத்த பிற்வியில் நல்ல பிறவி பெறுவதற்காகவும் செய்யப்பட்டது.

 

கொள்ளைக்காரர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதோடு மிருகங்களை பலியிடுவதும் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டது.

கவர்னர் டாங் வூவுடனும் அவ்ர் சகாவுடனும் பேச்சு வார்த்தை நடத்த அரசு அதிகாரிகளை அனுப்பினார். அவர்கள் இருவரும் ராணுவ கமாண்டர்களாக நியமிக்கப்பட்டனர்.

 

ஒரு குறிப்பிடத்தகுந்த அதிசய விஷயம் என்னவென்றால் இறுதிச் சடங்கு நடத்தப்பட்ட போது பல இடங்களிலும் ஆரமபத்தில் பல மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. அந்த மெழுகுவர்த்திகளின் ஜ்வாலைகள் எல்லாம் வெவ்வேறு விதமான மலர்களின் வ்டிவைக் கொண்டிருந்தன!

 

 

சில ஜ்வாலைகள் தாமரை வடிவிலும் வேறு சில வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் தோன்றின!

ஆலயத்தில் வழிபாடு செய்ய வந்த பக்தர்கள் அனைவரும் இந்த அதிசய வண்ண வடிவங்களைப் பார்த்து பிரமித்தனர். பரவசமாயினர்.

49ஆம் நாள் சடங்கு முடியும் போது வானத்தில் மேகங்கள் பெரிய பந்தல் வடிவிலும்  ரத்தின தோரணங்கள் போன்றும் தோன்றின!

சடங்குகள் முடிந்த பின்னா கவர்னர் டாங் ஸு யுன்னை அவரது இல்லத்திற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்தார். அங்கு இறந்து போன டாங்கின் உறவினர்களுக்கு  சூத்ரங்கள் இசைக்கப்பட்டன.

 

 

இதனால் அவருக்கு தர்மத்தில் அதிக நம்பிக்கையும் பற்றும் ஏற்பட்டது.

அவருடன் சேர்ந்திருந்த அனைவரும் புத்த தர்மத்திற்கு மாறி விட்டனர்.

குளிர்காலம் வந்தது, ஸு யுன் குன்மிங்கிலேயே தங்கினார்.

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 81

 

கவர்னர் டாங் ஸு யுன்னிடம் இன்னொரு போதி மண்டலம் நடத்துமாறு வேண்டிக் கொண்டார்.

ஹூவா டிங் மடாலயம் குன்மிங்கின் மேற்குப் பக்கம் உள்ள மலையில் இருந்தது, அருமையான அந்த ஆலயத்தை அங்குள்ள துறவிகள் சரியாகப் பராமரிக்கவில்லை. ஆகவே அது சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அதை அவர்கள் ஐரோப்பியர்களுக்கு விற்கத் தீர்மானித்திருந்தனர்.

 

ஐரோப்பியர்களோ அங்கு ஒரு க்ளப்-ஹவுஸ் கட்ட முடிவு செய்திருந்தனர். இதற்கு உரிய அனுமதியையும் அரசு அதிகாரிகளிடமிருந்து அவர்கள் பெற்று விட்டனர்.

இதையெல்லாம் அறிந்த ஸு யுன் மிகவும் வருத்தமுற்றார்.

கவ்ர்னர் டாங்கைச் சந்தித்து அந்தப் புனிதத் தலத்தை அப்படியே நன்கு பராமரிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

 

ஸு யுன் சொன்னதை உன்னிப்புடன் கேட்ட டாங் உள்ளூர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அந்த அதிகாரிகளுள் ஒருவரான ஜாங் ஸு ஸியான் என்பவர் ஸு யுன்னை ஒரு சைவு உணவு விருந்திற்கு அழைத்தார்.

அங்கு அவரிடம் ஒரு சிவப்புத் தாளில் ஒரு அழைப்பிதழ் தரப்பட்டது.

 

ஹூவா டிங் மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதை புனருத்தாரணம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.

மூன்று முறை இதை அவர்கள் வாய்மொழியாகவும் சொன்ன பின்னர் ஸு யுன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

 

உபாசகர் ஜாங் இரண்டு வாத்துகளை வாங்கி ம்டாலயத்தில் விட்டார். அவற்றிற்கு முன்னர் ஸு யுன் அகதிகள் சூத்திரத்தை இசைத்தார். அதை அவை மௌனமாகக் கேட்டன.

 

அன்றிலிருந்து துறவிகளுடன அவையும் பிரதான ஹாலில் சூத்திரங்கள் இசைக்கப்படும் போது அதைக் கேட்க வந்து விடும்.

மூன்று வருடங்கள் இது தவறாமல் நடந்து வந்தது,

துறவிகளுடன அவையும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டு  புத்தரின் சிலைகளை பிரதக்ஷிணம் செய்யும்.

ஆலயத்தில் இருந்த ஒவ்வொருவரும் அவற்றை அன்புடன் நடத்தினர்.

 

ஒரு நாள் பெண் வாத்து  பிரதான ஹாலின் வாயிலில் வந்து நின்று பார்த்தது. பின்னர் மூன்று முறை பிரதக்ஷிணம் செய்தது. தனது தலையை உயர்த்தி புத்த சிலையைப் பார்த்து உயிரை விட்டது. அதன் இறக்கைகள் ஒளியுடன் இருந்தன. அது ஒரு பேழையில் வைத்து புதைக்கப்பட்டது.

 

அதன் இணையான் ஆண் வாத்து தன் துணையின் பிரிவைத் தாங்க முடியாமல் சில நாட்கள் கழித்து  பிரதான ஹாலுக்கு வந்து நின்று சிலைகளைப் பார்த்தத்து. இறகுகளை விரித்துப் பின்னர் இறந்தது.

அது ஒரு பேழையில் வைக்கப்பட்டு பெண் வாத்துக்கு அருகில் புதைக்கப்பட்டது

 

(அரசியல் நிலைமையோ வேறு விதமானது.இலையுதிர்காலத்தில் கவர்னர் டாங்கை வீழ்த்த ஒரு சதி நடந்தது. அவர் ஸு யுன்னின் ஆலோசனையைக் கேட்டார்.

 

மக்கள் மனதில் நீங்கள் இருந்தாலும், பலம் பொருந்திய ராணுவப் படையை உங்களால் எதிர்கொள்ள முடியாது. ஆகவே இப்போது  இங்கிருந்து சென்று விடுங்கள். காலம் கனியும் போது திரும்பலாம் என்றார் ஸு யுன். அதைக் கேட்டு அவர் நகரிலிருந்து வெளியேறினார்.

 

இந்த விவரம் பத்து வருடங்களுக்குப் பின்னர் ஸு யுன் தனது சிஷ்யரிடம் கூறினார்.)

 

*****

 

Was Kalidasa a Poet cum Scientist? (Post No.3439)

Research Article Written by London swaminathan

 

Date: 11 December 2016

 

Time uploaded in London:- 20-15

 

Post No.3439

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Kalidasa is the most famous poet in Indian literature. He is given this status for his literary merits. He has used about 1200 similes and imageries in his seven Sanskrit works. His drama Sakuntalam is one of the best dramas in world literature. He is known as Kavikula Guru. He lived in the first century BCE and I have also confirmed this date through Sangam Tamil Literature where his 200 plus similes were used by the  Sangam Tamil poets (please see my earlier posts for the dating). But there is another side of Kalidasa which is not realised and recognised by many. Kalidasa was an all-rounder. He had amazing knowledge in various subjects from Astronomy to Zoology. He had encyclopaedic knowledge.

 

The most amazing thing is that he talks about aeroplanes flying by thought power and he describes a pilot’s experience and he talks about three different flight paths. The next amazing thing is that he knows cartography and geography which is seen in his description of the 1500 mile long Himalaya as the “measuring rod of earth”.

How did he know it unless he has flown over it or seen it from a space vehicle?

How did he explain a pilot’s landing experience which is experienced only by trainee pilots?

How did he know that there are different flight paths up above us?

Here is a list of the subjects he dwelt with in his seven works:–

AS – Abinjana Sakuntalam

Meg- Megadutam (PM- Purva mega, UM -Uttara mega)

Rv – Raghuvamsam

VU- Vikramaorvasiyam

MA- malavikagnimitram

RS – Rtusamharam

KS- Kumarasambhavam

 

Aeroplane Technology

Sakuntalam Act 1—9 (Read my article: Did Kalidasa fly in a space shuttle? Posted on 12 Sept.2014)

Sakuntalam Act 7—7/10; Ks2-45;Rv 13-68;13-76;13-79;14-20

Flying Balloons

Rv 16-68

Air Ways (3 levels of flight paths)

Flight path Rv 13-18, 13-19

xxx

Architecture

Rv 18-3; AS 2-15; Rv 1-30; Rv 17-64

xxx

Animal Intelligence

AS 4-20; 6-4; 6-24; 6-32 Rv 6-46; 8-39; 1-51; 5-7; 9-57;13-25

Swan separates water and milk: AS 6-28;KS 1-30

xxx

 

Astronomy

Milky way: Rv 13-2; 1-78; KS 4-37;1-28; Rv 12-85

Chitra constellation Rv 1-46, 13-76, 17-35 pole star 18-34;

Comet KS 2-32; AS 4; Mars vu 5-3

Pusya star Rv 18-32;

Venus KS 3-43;

Stars KS 2-19; RV 7-2;

Meteor Rv 16-83; 14-53;

Algol/Arundhati in Ursa Major Constellation: Rv 1-56

Rohini and Moon:AS 7-22; 3-12; VU 3-4; RV 14-40

Bird migration –

Kalidasa’s references of swan, cranes and Himalayan geese: Mega. 11,23, 59, 70,81.

Vikra. IV 2,3,4,6,20;31,32,33,3441,54

BIRD MIGRATION :Vikra IV 14 to 17

Kumara. 1-30 (Hamsa mala)

Ragu. IV 19,VIII 59, XIII-33, XVI 33, 56, XVII-75

Malavika.II-2

Rv 1-41

xxx

Dreams

Meg 2-39; Meg.111;  Rv 8-92; 10-60/64;12-76; 19-22.

Eastern concept of dreams is different from Freudian and Jungian theories

xxxx

Foreigners’ appearance-

Yavanas Rv.9-63; 4-61; MA 5, VU 5-3,4

xxx

 

Geography and Geology

KS 1-10 (Description of the beautiful Himalayas)

Sub marine Fire (Vadamukagni/Badava:- AS 3-3; Rv 9-82; 11-75; 13-4;13-7.

Lot of references about rivers, especially Ganga and Yamuna

 

Iran to Indonesia: Kalidasa had a good knowledge of  the countries between Iran and Indonesia. He is very descriptive of the people, its cultures and the geography of the land. We can read about the honeycomb like beards of Persian soldiers and the spices of Indonesian islands.

 

xxxx

Gemmology

Cat’s eye RS 2-15; Coral  RS 6-16; Conch shell RS 3-4; Crystal Purva Megam 54; Emeralds/Rubies-Rv 13-53; Gems-PM 15, KS 1-38, KS 5-43, KS 5-45, Rv 1-4, Rv 3-18, Rv 10-30, Rv 11-59, Rv 11-68, RV 17-63, VU 2-99, MA 5-18, AS 2-7, AS 2-10, AS 6-6, Sapphire Rv 18-42; Pearl Rv 6-7, UM 46, KS 1-44, KS 3-53, KS 6-6KS 7-89, Rv 6-28, Rv 9-44,Rv 13-54, Rv 16-18; Rubies KS 3-53; Sun stone Rv 11-21; Moon stone VU 5-11; Ivory PM 62

Magnifying Glass (Lens)

Sun stone Rv 11-21; AS 2-7

Nagaratna (Cobra Jewel)

KS 2-38, 5-43; RV 13-12, 6-49, 11-59, 11-68, 17-63, 10-7, 13-12, 17-63

RS 1-20,

xxxx

Rainbow

UM 15; Rv 7-4;

xxx

 

Magnet –

Rv-18-63; KS 2-59;

xxx

Marine Trade

Rv 1-5, 30; 3-28; 9-14;16-4; AS 6-24; Meg.8;

Import of cloves 6-57

Metallurgy –

Iron

Rv 14-33;

Gold

RS 1-26, PM -40, KS 3-53, KS 6-55, Rv 6-79, Rv 9-54, Rv 17-46, MA 2-9.

Silver

RS 3-4

Mirror

Rv 7-68

xxxx

Flora and Fauna

whales Rv 13-10

Innumerable references

Bio Luminescent Plants-

KS 1-10; Rv 9-70

Environmental concern

Don’t Cut even a poisonous tree

KS 2-55

xxxx

Human psychology

Advice to newlyweds: AS 4-20; 4-21;4-22

xxx

 

Tourist Guide

Kalidasa is the first Tourist Guide in the world. His Meghaduta descrbes a vast landscape methodically from Central India to the Himalayas.

 

Tourist Guide Book

Meghaduta is the first Tourist guide in the world. In Raghuvamsa also Kalidasa gives a description of the landscape in the flight path from Si Lanka to Ayodhya.

 

–Subham–

 

பாரதியும் கம்பனும்: சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பார்கள் (Post No.3438)

 

Written by London swaminathan

 

Date: 11 December 2016

 

Time uploaded in London: 7-06 am

 

Post No.3438

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பெண்களின் குரலைக் குயில் போல இருக்கிறது என்றும் சொல்லைக் கிளி போல இருக்கிறது என்றும் போற்றுவது கவிகளின் மரபு.

 

தமிழ் மொழியைத் தேனினும் இனிய மொழி என்று பாராட்டுவதை அறிவோம். ஆனால் ஒரு சொல்லை எடுத்து அதைத் தேனிலும் அமிர்தத்திலும் குழைத்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்?

இது கம்பனும் அவரைப் பின்தொடர்ந்து பாரதியாரும் செய்த ஆராய்ச்சி. அந்த ஆராய்ச்சியின் முடிவுதான் இந்த இரண்டு பாடல்களும்!

 

 

 

அளவு இல கார் எனும் அப்பெரும்பருவம் வந்தணைந்தால்

தளர்வர் என்பது தவம் புரிவோர் கட்கும் தகுமால்

கிளவி தேனினும் அமிழ்தினும் குழைத்தவள் கிளைத்தோள்

 

வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ

—–கம்பன் பாடல், கிட்கிந்தாக் காண்டம்,கார்காலப் படலம்

 

பொருள்:–

ஓர் அளவில்லாத சிறப்புடைய கார்காலம் வந்து விட்டால், முற்றும் துறந்த முனிவர்களும் மனம் தளர்ந்து போவார்கள். ஆகவே தேன், அமிழ்தம் ஆகிய இரண்டிலும் தோய்த்து எடுத்தது போன்ற இனிமையான சொற்களைப் பேசும் சீதையின் தோள்களைத் தழுவிய இராமனுக்கு, கார்காலம் துன்பம் தந்தது என்றால் அது துன்பம் என்று கொள்ளத் தக்கதோ?

 

பாரதி என்ன கம்பனுக்கு சளைத்தவனா?

இதோ பாருங்கள்! பாரதி பாட்டை!

 

“வில்லினை யொத்த புருவம் வளைத்தனை

வேலவா! — அங்கொர்

வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடி

யானது வேலவா!

சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பாள் சிறு

வள்ளியைக் — கண்டு

சொக்கி மரமென நின்றனை தென்மலைக்

காட்டிலே

கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட

பாதகன் – சிங்கன்

கண்ணிரண்டாயிரங் காக்கைக்கிரையிட்ட

வேலவா!

பல்லினை காட்டி வெண்முத்தைப் பழித்திடும்

வள்ளியை –  ஒரு

பார்ப்பனக் கோலந்தரித்துக் கரம்தொட்ட

வேலவா!

–சுப்பிரமணிய பாரதியார்

ஆக இரு கவிஞர்களும் நமக்கும் அவர்களுடைய கவிதைகளைத் தேனில் குழைத்துத் தந்துவிட்டார்கள்!

 

தேன் தமிழ்

 

தமிழுக்குள்ள ஏராளமான சிறப்பு அடை மொழிகளின் பட்டியலை ஏற்கனவே ஒரு கட்டுரையில் கொடுத்துவிட்டேன். தமிழ் என்றாலேயே இனிமை என்பது புலவர்தம் கருத்து. ஆனால் கம்பன் மேலும் ஒரு படி சென்று தமிழ் என்றால் தேன் என்பான்:-

 

அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்

தமிழ் நிகர் நறவமும் தனித் தண் தேறலும்

இமிழ்கனிப் பிறக்கமும் பிறவும் இன்னன

கமழ்வுறத் துவன்றிய கணக்கில் கொட்பது

–கிட்கிந்தா காண்டம், பிலம்புக்கு நீங்கு படலம்

 

பொருள்:-

மேலும் அந்த நகரம் அமிழ்தத்தைப் போன்ற சோறு முதலிய உணவுப் பொருள்களும், தமிழ் மொழியைப் போன்ற தேனும் குளிர்ந்த மதுவும், இனைய பழங்களின் தொகுதியும் — இவை போன்ற மற்ற உணவுப் பொருட்களும் நறுமணம் வீசுமாறு நிறைந்துள்ள எல்லையற்ற பெருமை உடையது — கிட்கிந்தா காண்டம்

 

தேன் தமிழை நாமும் மாந்தி, தமிழ் போதையில் திளைப்போம்.

 

–subham–