சீதையின் ப்ரதிக்ஞை!– 2 (Post No.11,891)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,891

Date uploaded in London –   11 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ராமாயண வழிகாட்டி!

சீதையின் ப்ரதிக்ஞை! – 2

ச.நாகராஜன் 

மனதை நெகிழ வைக்கும் ஒரு நிகழ்ச்சியை உத்தரகாண்டம் 97வது ஸர்க்கம் விவரிக்கிறது.

தனது அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்த அன்னை சீதா தேவி பூமாதேவியிடம் திரும்புவதை வர்ணிக்கும் ஸர்க்கம் இது.

உத்தரகாண்டம் மொத்தம் 110 ஸர்க்கங்களைக் கொண்டது. இதில் மொத்தம் 3276 ஸ்லோகங்கள் உள்ளன. 97வது ஸர்க்கத்தில் உள்ள ஸ்லோகங்கள் 26.

இதில் சீதையின் பிரதிக்ஞை (சபதம்) இடம் பெறுகிறது.

பிரம்மாண்டமான அவை கூடுகிறது. தேவர்களும் நிகழப் போகும் நிகழ்ச்சியைப் பார்க்கக் கூடுகின்றனர்.

அனைத்து மக்களும், ரிஷிகளும் வந்து குழுமியுள்ள சபையில் வால்மீகி முனிவர் சீதை சுத்தமானவள் என்பதை சபதம் செய்து கூறியதோடு லவ, குசரை ராமரின் புதல்வர்களே என உறுதிப் படுத்துகிறார்.

மனம் கலங்கும் ராமர் சீதையின் பத்தினித்தன்மையை தான் முழுதும் அறிந்தவன் என்பதோடு லவ குசர் ஆகிய இருவரும் தனது புதல்வர்களே என உறுதியுடன் நம்புவதாகக் கூறுகிறார்.

என்றாலும் லோக அபவாதம் என்பதை ஒட்டியே சீதை தனித்திருக்க விடப்பட்டாள் என்பதை அவர் விளக்குகிறார்.

அப்போது காஷாயச் சேலையை தரித்துக் கொண்டு தலையைக் குனிந்தவாறு ஸபையினரை நோக்கி அஞ்சலி ஹஸ்தராகி இந்த பிரமாணத்தை சீதா தேவி கூறி அருள்கிறார்.

நான் மனச்சாட்சியுடன் ஶ்ரீ ராகவர் ஒருவரைத் தவிர வேறு எதற்கும் சிந்தையில் இடம் கொடாதிருந்தது ஸத்தியமானால், மாதவருக்கு பத்னியான பூமாதேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்.

யதாஹம் ராகவாதன்யம் மனஸாபி ந சிந்தயே |

ததா மே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி ||

–    ஸ்லோகம் 14

மனதாலும் செய்கையாலும் வாக்காலும் ஶ்ரீ ராமரையே எப்போதும் நான் பூஜித்து வந்தேன் என்பது ஸத்தியமானால் மாதவருக்கு பத்னியான பூமாதேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்.

மனஸா கர்மணா வாசா யயா ராமம் சமர்ச்சயே |

ததா மே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி ||

–    ஸ்லோகம் 15

ஶ்ரீ ராமரைக் காட்டிலும் மேலானதொன்றையும் நான் அறிந்திலேன்

என்ற இந்த எனது மொழி ஸத்தியம் என்னும் பக்ஷத்தில் மாதவரின் பத்னியான பூமாதேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்”

யதைதத்ஸத்யமுக்தம் மே வேத்தி ராமாத்பரம் ந ச |

ததா மே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி ||

–    ஸ்லோகம் 16

இப்படி சீதா தேவியார் தனது பிரதிக்ஞையைச் செய்ய, உடனே ஒரு தெய்வாதீன சம்பவம் நடைபெற்றது.

அமித ஆற்றல் கொண்டதும், திவ்ய ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும் முடிகளால் நாகங்களால்  ஜோதி மயமான காட்சியால் கண்களைக் கவரும் வண்ணம் தாங்கப் பெற்றதும் ஒப்புயர்வு இல்லாததுமான தேவதைகளுக்கே ஏற்ற ஒரு சிங்காசனம் பூமியிலிருந்து வெளிப்பட்டது.

பூமிதேவி வெளிப்பட்டு மைதிலியை தனது இரு திருக்கரங்களாலும் அணைத்தெடுத்து நன் மனத்துடன் ஆதரித்து போற்றிப் புகழ்ந்து அழைத்தாள். அந்த சிங்காசனத்தில் அமர வைத்தாள்.

சிங்காசனம் மைதிலியுடன் பூதலத்தினுள் புகுந்தது.

தேவர்கள் ஓயாது பூமாரி பொழிந்தனர். நன்று நன்று என்று தேவர்கள் கூவினர்.

முனிவர்கள் மன்னர்களும் மக்களும் யாதும் தோன்றாதவர்களாக நின்றனர்.

சிலர் ஆனந்தக் கூச்சலிட்டனர். சிலரோ பரமாத்வை தியானம் செய்ய ஆரம்பித்தனர்.

உலகமே ஒரு முகூர்த்த காலம் ஏக்கம் பிடித்துக் கிடந்தது.

(தத் ஜகத் சமம் முகூர்த்த இவ அத்யர்த சம்போஹிதம்)

அருமையான சொற்களால் வால்மீகி இதை உள்ளம் நெகிழும் வண்ணம் விவரிக்கிறார்.

சீதையின் முக்கிய பிரதிக்ஞையை விவரிக்கும் ஸர்க்கமாக இது அமைகிறது.

சீதா தேவி கி ஜய்!

***

Pancha sila of Buddha copied from Manu Smriti (Post No.11,890)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,890

Date uploaded in London – –  10 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx

Manu was the primal law giver. Moses , Jesus, Buddha and others copied Manu Smriti. Manu was older than Hammurabi and it is evident from Manu’s reference to Sarasvati River and Rig Veda. But it was updated later by caste enthusiasts. Westerners included Anti Shudra verses which is also evident from their ‘no interpolation theory’ about Manu Smriti. Westerners say even Rig Veda has interpolation, but they never said a single word about interpolation in Manu Smriti. In Tamil we call it “thief stung by a scorpion”; they cant open their mouth! (Thirudanukku TheL kottiya Kathai)!

Manu put Ahimsa (non violence as the top most virtue)

Ahimsa , Satyam, Asteyam

Shaucham, Indriya Nigrahah

Etam saamaasikam Dharmam

Chatur varnye abraviit Manuh 10-63

Meaning

Harmlessness, Truth, Honesty, Cleanliness,

Restraint of senses from all erring ways

This is the duty for Four Castes

In a nutshell Thus Manu declares 10-63

Xxx

Following is taken from Wisdom Library.org

अहिंसा सत्यमस्तेयं शौचमिन्द्रियनिग्रहः 
एतं सामासिकं धर्मं चातुर्वर्ण्येऽब्रवीन् मनुः  10-६३ 

ahiṃsā satyamasteyaṃ śaucamindriyanigrahaḥ |
etaṃ sāmāsikaṃ dharmaṃ cāturvarṇye’bravīn manuḥ || 10-63 ||

Abstention from injuring, truthfulness, abstention from unlawful appropriation, purity and control of the sense-organs,—this Manu has declared to be the sum and substance of duty for the four castes.—(63)

Xxx

What are the 5 yamas according to Yoga Sutra?

The Yoga Sutra describes five different yamas, including ashimsa (non-violence), asteya (non-stealing), satya (truthfulness), aparigraha (non-possessiveness), and brahmacharya (celibacy or fidelity

Xxx

Buddha copied it and said it in Pali language as Pancha Sila (Five Precepts)

The Five Precepts:

1. Panatipata veramani sikkhapadam samadiyami

I undertake the precept to refrain from destroying living creatures.

2. Adinnadana veramani sikkhapadam samadiyami

I undertake the precept to refrain from taking that which is not given.

3. Kamesu micchacara veramani sikkhapadam samadiyami

I undertake the precept to refrain from sexual misconduct.

4. Musavada veramani sikkhapadam samadiyami

I undertake the precept to refrain from incorrect speech.

5. Suramerayamajja pamadatthana veramani sikkhapadam samadiyami

I undertake the precept to refrain from intoxicating drinks and drugs which lead to carelessness.

Xxxx

Later Manu expanded these virtues as ten virtues in another sloka

“Dhrati Kshama Damah Asteyam Shouchamindriyanigrhah
Dhi vidya satyamakrodho dashakam dharma lakshanam”- 6-92

Fortitude , forgiveness, rule over the mind

Not taking others goods  against their will

Cleaness, control over the senses too,

Alert intelligence, learning, and truthfulness

Not giving way to anger- such the ten

Unfailing Marks of the Eterna Dharma – 6-92

Xxx

Following is taken from Wisdom Library.org

धृतिः क्षमा दमोऽस्तेयं शौचमिन्द्रियनिग्रहः ।
धीर्विद्या सत्यमक्रोधो दशकं धर्मलक्षणम् ॥ ९२ ॥

dhṛtiḥ kṣamā damo’steyaṃ śaucamindriyanigrahaḥ |
dhīrvidyā satyamakrodho daśakaṃ dharmalakṣaṇam || 6-92 ||

(1) Steadiness (2) Forgiveness, (3) Self-control, (4) Abstention from unrighteous appropriation, (5) Purity, (6) Control of the Sense-organs, (7) Discrimination, (8) Knowledge, (9) Truthfulness, and (10) Absence of anger,—these are the ten-fold forms of duty.—(92)

Xxxx

Jain Religion

Jaina sages, Samanta Bhadra and others mention ten also: Forgiveness, gentleness, straightness, truthfulness, cleanliness, self control, asceticism, renunciation , discarding of all possessions (sex) continence

Jainism gives same list as Buddhism

The five resolves are , broadly to refrain

From takin life; from speaking untrue word

From taking what is not willingly given

From all unlawful love; from ownership

Of goods beyond the limits of strict need

Madya- maamsa- madhu- tyaagaih

Saha anuvrata panchakam

Ashtau muula- gunaan aahuh

Grhinaam Shraman ottamaah

–Samanta Bhadra

Refrain from Meat, Drinks, Honey , butter

Xxx

The five ethical ( Wu-chang)commandments of Confucius are

Jen – service or doing good to others

Yi- truthfulness

Li- Proper conduct or correct behaviour

Chih – knowledge or wisdom

Hsian – trustworthiness

Xxx

 Mahabharata , Bhagavata and Purana expand the list to twenty and more.

Following is from the Bhagavad Gita:

श्रीभगवानुवाच |

अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थिति: |

दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् || 16-1||

अहिंसा सत्यमक्रोधस्त्याग: शान्तिरपैशुनम् |

दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् || 16-2||

तेज: क्षमा धृति: शौचमद्रोहोनातिमानिता |

भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत || 16-3||

śhrī-bhagavān uvācha

abhayaṁ sattva-sanśhuddhir jñāna-yoga-vyavasthitiḥ

dānaṁ damaśh cha yajñaśh cha svādhyāyas tapa ārjavam

ahinsā satyam akrodhas tyāgaḥ śhāntir apaiśhunam

dayā bhūteṣhv aloluptvaṁ mārdavaṁ hrīr achāpalam

tejaḥ kṣhamā dhṛitiḥ śhaucham adroho nāti-mānitā

bhavanti sampadaṁ daivīm abhijātasya bhārata

śhrī-bhagavān uvācha—the Supreme Divine Personality said; abhayam—fearlessness; sattva-sanśhuddhiḥ—purity of mind; jñāna—knowledge; yoga—spiritual; vyavasthitiḥ—steadfastness; dānam—charity; damaḥ—control of the senses; cha—and; yajñaḥ—sacrifice; cha—and; svādhyāyaḥ—study of sacred books; tapaḥ—austerity; ārjavam—straightforwardness; ahinsā—non-violence; satyam—truthfulness; akrodhaḥ—absence of anger; tyāgaḥ—renunciation; śhāntiḥ—peacefulness; apaiśhunam—restraint from fault-finding; dayā—compassion; bhūteṣhu—toward all living beings; aloluptvam—absence of covetousness; mārdavam—gentleness; hrīḥ—modesty; achāpalam—lack of fickleness; tejaḥ—vigor; kṣhamā—forgiveness; dhṛitiḥ—fortitude; śhaucham—cleanliness; adrohaḥ—bearing enmity toward none; na—not; ati-mānitā—absence of vanity; bhavanti—are; sampadam—qualities; daivīm—godly; abhijātasya—of those endowed with; bhārata—scion of Bharat

shri-bhagavan uvacha

Translation

BG 16.1-3: The Supreme Divine Personality said: O scion of Bharat, these are the saintly virtues of those endowed with a divine nature—fearlessness, purity of mind, steadfastness in spiritual knowledge, charity, control of the senses, sacrifice, study of the sacred books, austerity, and straightforwardness; non-violence, truthfulness, absence of anger, renunciation, peacefulness, restraint from fault-finding, compassion toward all living beings, absence of covetousness, gentleness, modesty, and lack of fickleness; vigor, forgiveness, fortitude, cleanliness, bearing enmity toward none, and absence of vanity.

—subham—

Tags-Panca sila, Buddha, Confucius, Five Precepts, Manu Smriti, Ten virtues

How did Two Japanese Cities escape from American Atom bombs? (Post No.11,889)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,889

Date uploaded in London – –  10 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

America dropped two atom bombs on two Japanese cities, Hiroshima and Nagasaki and killed lot of Buddhists in a fraction of a second. It happened on 6th and 9 th of August 1945. An uranium bomb was dropped on Hiroshima  ,but a plutonium bomb was dropped on Nagasaki that killed 70,000 people and injured 100,000 people. This bomb was named Fatman. Hiroshima atom bomb was named Little boy.

Following Nagasaki, a second plutonium bomb was to be dropped on a town called Kumagaya on 11th August, 1945. But the bomb was not quite ready and so America used 6000 tons of conventional bombs and destroyed the city.

Actually America planned to drop a plutonium bomb on a city called Kokura. Because it was obscured by clouds, the bomber went on to its backup target, Nagasaki, where there were the Mitsubishi shipyards and torpedo works. Sadly the bomb fell a few miles north of the intended target and exploded over the city’s main Christian  church , wiping out the largest Christian community in Japan.

Over the years, western countries have produced more than 1000 tons of plutonium. When the Cold war between Russia and America was over, there were 65,000 nuclear bombs. Now they are dismantled but disposing of the radio actives has become a big problem.

One gram of plutonium used in a conventional reactor has the potential to release as much energy as a tonne of oil. Scientists have been using them in space probes. Plutonium 238 is used in heart pacemakers.

Over the years there have been about 550 atmospheric nuclear explosions.

In USA, the plutonium salvaged from the unwanted atomic bombs is melted into glass logs as plutonium oxide and buried in Nevada s Yucada mountains. They believe once they are buried 4 kilometres deep down the earth it will be safe for 30 million years.

Plutonium oxide occupies 40% more volume than plutonium metal. In the past scientists did not take it in to account. Fortunately, a disaster was averted just before the bursting of the container. Had the process gone on much longer then the expanding plutonium oxide would have ruptured the ouster canister and contaminated the whole storage facility.

banned American Stamp

In spite of several restrictions placed by the international atomic energy commission, countries like Iran and North Korea are causing great concern about nuclear safety. There is every possibility that the Third World War will experience nuclear explosions.

–SUBHAM—

Tags- Atom bombs, Kokura, Kumagaya, Hiroshima, Nagasaki, Japan, Plutonium

எந்த அரிசி நல்ல அரிசி? (Post No.11,888)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,888

Date uploaded in London – –  10 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

நெல்லில் பல வகைகள் உள்ளன. அதிலிருந்து கிடைக்கும் அரிசியில் எந்த வகை அரிசி மிகவும் நல்லது?

அரசி என்னும் உணவை மக்கள் சாப்பிடுவது 10,000 ஆண்டுகளாக நடைபெறுகிறது. உலகில் இன்று மூன்றாவது நிலையில் உள்ள பயிர் அரிசி. முதலில் மக்காச்  சோளம், இரண்டாவது கரும்பு, முன்றாவது அரிசி ஆகும்.

இன்றைய கணக்கில் உலகில் அதிகமாக அரிசி பயிரிடுவது ஆசிய நாடுகள்தான் முதல் ஒன்பது நெல் பயிரிடும் நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. அது மட்டுமே 28 சதவிகிதத்தை பயிரிடுவதால், உலகில் கால் வாசிக்கும் உலக அரிசியை உற்பத்தி செய்யும் நாடு சீனா .

அரிசியில் என்ன சத்துக்கள் இருக்கின்றன?

மக்னீஷியம், பாஸ்வரம் , மாங்கனீஸ், செலீனியம், இரும்பு, போலிக் அமிலம், (Folic acid) நியாசின் (Niacin) , தைமின் (Thymin) ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. ஆயினும் புரோட்டீன் இல்லாததால் , பொதுவாக அரிசியுடன் பருப்பு, சாம்பார் முதலியவற்றைக் கலந்து சாப்பிட வேண்டும்.

வெள்ளை நிற அரிசியைவிட பழுப்பு நிற (Brown Rice) அரிசி (கைக்குத்தல் அரிசி) மிகவும் நல்லது. இயந்திரத்தில் கொடுத்து நெல்லை அறைக்கையில் அதிலுள்ள முக்கிய சத்தை இழந்துவிடுகிறோம்.தானியத்திலுள்ள முளை , தவிடு முதலியன வெள்ளை அரிசியில் இராது. இவை நமக்கு அளிக்கும் கொஞ் சம் புரோட்டீன், நார்ச் சத்து, கொழுப்புச் சத்து கிடைக்காது. ஆகவே கைக்குத்தல் அரிசி நல்லது.

பழுப்பு நிற கைக்குத்தல் அரிசியை சமைத்துச் சாப்பிடுவோருக்கு கூடுதலாக எதுவும் தேவை இல்லை. ஆனால் வெள்ளை நிற அரிசியை சமைத்துச் சாப்பிடுவோர், நார்ச் சத்துக்காக காய்கறிகளையும், புரோட்டீ னுக்காக (புரதச் சத்து) பருப்பு முதலியவற்றைக் கலந்து சாப்பிட வேண்டும். கொழுப்புச் சத்துக்காக நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சத்துணவு நிபுணர்கள்  கூறுகின்றனர்.

–subham—

Tags- பழுப்பு நிற , அரிசி, கைக்குத்தல் அரிசி

யாழ் மூரி பதிகம் பாடி அசத்திய சம்பந்தர் (Post No.11,887)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,887

Date uploaded in London – –  10 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Yaaz/Lyre at London Undergound, South Kensington Station

ஞான சம்பந்தர் வாழ்க்கை முழுதும் அற்புதங்கள் நிறைந்தது . அதில் ஒரு அற்புதம் சங்கீத அற்புதம் ஆகும். யாழில் அடங்காத ஒரு பாட்டைப்பாடி , திருநீல கண்ட யாழ்ப்பாணரையே திகைக்கவைத்தார் .

தருமபுரத்திலுள்ள சிவபெருமானைக் காண சம்பந்தர் வந்தார். அது திருநீல கண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த இடம் . சம்பந்தர் வ்ருகையை அறிந்து யாழ்ப்பாணரின் குடும்பத்தினர் அனைவரும் அங்கே வந்தனர்.

சம்பந்தரின் பாடல்களை யாழ்ப்பாணரும் யாழில் வாசிப்பதால் மேலும் அதற்கு மெருகு கூடிற்று. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சமப்ந்தன் என்று பின்னோர் புகழ்ந்ததற்கு இதுவே காரணம்  என்று யாழ்ப்பாணரின் உறவினரிடையே ஒரு தவறான எண்ணம் பரவி இருந்தது. தங்கள் குல யாழ்ப்பாணன் பாடுவதாலேயே சம்பந்தரின் பாட்டு- தேவாரம் — பிரபலமாகியது என்று எண்ணினார்கள். ஆனால் யாழ்ப்பாணரோ அகந்தை அற்றவர் . ஆகையால் தவறான கருத்தை போக்க எண்ணி பெருமானே, யாழில் இசையில் அடங்காத ஒரு பதிகத்தைப் பாடி அருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

சம்பந்தரும் மாதர் மடப்பிடி என்று துவங்கும் பதிகத்தைப் பாடினார். அதை எவ்வளவு முயன்று பார்த்தும் யாழிசையில் வடிக்கமுடியவில்லை. இதனால் மனம் உடைந்த யாழ்ப்பாணர் தன கையில் இருந்த யாழை ஓங்கி அடித்து உடைக்க முயன்றார். சம்பந்தரோ அதைத் தடுத்து நிறுத்தி யாழைக் கையில் வாங்கினார். இறைவனின் பெருமை நம் சக்திக்கெல்லாம் அப்பாற்பட்டது. அதை ஒரு யாழில் அடக்க முடியுமா? என்ற அருள்வாக்கினை அருளினார். அதனால் இப்பதிகம் யாழ் மூரி என்று அழைக்கப்பட்டது

மூரி என்றால் வலிமை என்று பொருள். யாழைக்காட்டிலும் இறைவனின் இசை வலிமை வாய்ந்தது என்பது இதன் பொருள்..

முதல் பாட்டிலேயே வேதமோடு ஏழிசை என்ற வரி வருகிறது.

ஆகையால் சம்பந்தருக்கு ஏழு இசையும் தெரியும் :

குரல் – துத்தம் – கைக்கிளை — உழை – இளி – விளரி – தாரம் என்பது 7 இசை

குரல்- சங்கத் தொனி

துத்தம் – ஆண் மீன் பிளிறு

கைக்கிளை- குதிரையின் குரல்

உழை – மானின் குரல்

இளி – மயிலின் குரல்

விளரி – கடலோசை

தாரம் – கடலோசை

என்று உரைகள் சொல்லும்..

Xxxx

இன்னொரு சப்தஸ்வர ஒப்பீடும் உள்ளது

Sanskrit list and Tamil list of sounds of Sapta Svaras

ஸ – மயிலின் குரல் (சம்ஸ்க்ருதம்)- வண்டின் ரீங்காரம் (தமிழ்)

ரி –  பசு cow/ Sanskrit list  — கிளி parrot / Tamil list

க – ஆடு goat — குதிரை  horse

ம – கொக்கு heron – யானை elephant

ப – வானம்பாடிnightingale- குயில் cuckoo

த — குதிரை horse — பசு cow

நி – யானை elephant — ஆடு goat

ஸம்க்ருதமும் , தமிழும் வெவ்வேறு மிருகங்கள் பறவைகளின் குரல்களை  ஒப்பிட்டாலும் பிராணிகளையே பயன்படுத்திய ஒற்றுமையைக் காண முடிகிறது.

ஆழ்வார் பாடல்களைப்ப பாடிய பன்னிருவரிலும் திருப்பாண் ஆழ்வார் இருக்கிறார். அவரும் யாழ்ப்பாணரே .

Xxx

தருமபுரம் ஆராய்ச்சிக் குறிப்புகள்

மல்லிகை மலர்

சம்பந்தரின் தேவார யாழ்மூரி பதிகத்தில் வேறு சில சுவையான செய்திகளும் உள .

1. தருமபுரம் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் இருந்துள்ளது.

2.பாடல் மூன்றில் எண்ணிதழ்  மெளவல் என்று மல்லிகையைக் குறிக்கிறார்.மல்லிகையின் ஒரு வகைக்கு எட்டு இதழ்கள் உண்டு. தாவரவியல் (Botanist Sambandar) வல்லுனரான சம்பந்தர் அதைக்கூடப்  பாடத்  தவறவில்லை.

3.பாடல் ஐந்தில் சிவ சஹஸ்ரநாமம் (1000 பேர்) குறிப்பிடப்படுகிறது.

4.சம்பந்தர் காலம் வரை யாழ் புழக்கத்தில் இருந்திருக்கிறது.

5.கடற்கரை முத்து பற்றிப் பாடுவதால் அக்காலத்தில் தருமபுரத்துக்குப் பின்னர் கிழக்கு திசையில் கடற்கரையே இருந்தது போலும்.

6. இந்தப் பதிகத்தில் கானல் கண்டகம் (கடற்கரை தாழை ), முண்டகம் – கடல் முள்ளி (பாடல் 7) பாடியது குறிப்பிட்டதக்கது (Mangrove Plants) .

ஒரு வேளை  தற்காலக் கோவில் இப்போதைய இடத்தில் சம்பந்தர் காலத்துக்குப் பின்னர் கட்டப்பட்டிருக்கலாம்.. இதை  மேலும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் .

xxxxx

மாதர்மடப் பிடியும் மடவன்னமு மன்னதோர்

நடையுடைம் மலைமகடுணையென மகிழ்வர்

பூதவினப் படைநின்றிசை பாடவுமாடுவ

ரவர்படர் சடைந் நெடுமுடியதொர் புனலர்

வேதமொடேழிசை பாடுவராழ் கடல் வெண்டிரை

யிரைந் நுரைகரை பொருதுவிம்மி நின்றயலே

தாதவிழ் புன்னைதயங்கு மலர்ச்சிறை வண்டறை

யெழில் பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே       

—–  (முதலாம்திருமுறை –திருத்தருமபுரம் –பாடல்எண் 1)

xxx

பாடல் 3

தண்ணிதழ் முல்லையொடெண்ணிதழ் மெளவன்மருங்கலர்

xxxx

பாடல் 7

காமரு தண் கழி நீட்டிய கானல கண்டகங்

கடல் அடை கழி இழிய முண்டகத்தயலே

xxxx

பாடல் 9

தடங்கடல் விடும் திரைத் தரும புரம் பதியே

பாடல் இரண்டிலும் சங்கு, முத்துக் குவியல் வருகிறது

–subham—

Tags- யாழ் , மூரி , பதிகம், சம்பந்தர், கடல் தாவரங்கள், தருமபுரம், மல்லிகை , ஏழிசை

சீதையின் ப்ரதிக்ஞை! (Post No.11,886) Part 1

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,886

Date uploaded in London –   10 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ராமாயண வழிகாட்டி!

சீதையின் ப்ரதிக்ஞை!

ச.நாகராஜன்

 வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான வரங்களைப் பற்றியும், சாபங்களைப் பற்றியும் காண்கிறோம்.

அது மட்டுமல்ல ஏராளமான ப்ரதிக்ஞைகளையும் காண முடிகிறது.

இவை கதையோட்டத்திற்கு உயிரையும் வலிமையையும் சுவையையும் கூட்டுகின்றன.

ஆனால் உண்மையாக நடந்த இதிஹாஸத்தில் உண்மைக்கே முதலிடம் என்பதால் இந்த உண்மைகளைக் கண்டு வியக்கிறோம், பிரமிக்கிறோம்.

சுந்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தில் முக்கியமான காண்டம்.

அதில் அனுமன் சீதையைத் தேடிச் சென்று அசோகவனத்தில் அன்னையைக் காண்கிறான்.

இராவணனைச் சந்திக்கும் அவன், சீதையை விட்டு விடு என்று அறவுரையை அறிவுரையாகக் கூறுகிறான்.

‘ஆவியை விடுவேன் அல்லால் தேவியை விடுவேன் அல்லேன்” என்ற கோட்பாட்டை உடைய ராவணன் அனுமனைக் கொல்ல உத்தரவிடுகிறான். (சமாதிஷதஸ்ய வதம் மஹாகபே – ராவணன்)

ஆனால் விபீஷணனோ தூதுவனாக வந்த ஒருவனைக் கொல்லுதல் தகாது என்கிறான்.

உடனே அதை ஒத்துக் கொண்ட ராவணன், ஒரு குரங்குக்கு முக்கியமானது வால் தான்; அதில் நெருப்பை இடுங்கள் என்கிறான்.

அதன் படியே அநுமன் வாலில் துணிகள் கட்டப்பட்டு எண்ணெய் ஊற்றப்பட்டு தீ மூட்டப்படுகிறது.

அனுமனை வீதி வீதியாக நெருப்பிட்ட வாலுடன் இழுத்துச் செல்கின்றனர்.

கூட்டம் கூட்டமாக அரக்கர்கள், அவர் தம் மனைவிமார்கள், குழந்தைகள் என அனைவரும் வீதியில் இழுத்துச் செல்லப்படும் அனுமனை வேடிக்கை பார்க்கின்றனர். ‘சாரன், சாரன்’ என்று கத்துகின்றனர்!

இந்தச் செய்தியை ஓடோடிச் சென்று அரக்கியர்கள் சீதையிடம் தெரிவிக்கின்றனர்.

“ஓ! ஸீதே! எந்த சிவந்த முகமுடைய குரங்கு உன்னுடன் பேசிக் கொண்டிருந்ததோ அதே இது. தீப்பற்றி எரிகின்ற வாலுடன் கண்டபடி இழுக்கப்படுகிறது.”

இந்த செய்தியைக் கேட்ட சீதா தேவியின் மனம் கலங்குகிறது.

இந்த விவரங்களை அருமையாக சுந்தரகாண்டம் 53ஆம் ஸர்க்கம் விவரிக்கிறது.

உயிரைப் பறித்தது போன்ற அரக்கியரின் செய்தியால் சீதை அக்னி தேவனை மனதினுள் நினைக்கிறாள்.

மஹாகபிக்கு ஆசீர்வாதம் செய்ய நினைத்த சீதை தூய்மையுடன் தாழ நின்று அக்னிதேவனை வேண்டுகிறாள்.

43 ஸ்லோகங்கள் கொண்ட 53ஆம் ஸர்க்கத்தில் நான்கு ஸ்லோகங்கள் சீதையின் ப்ரதிக்ஞையை, உறுதியை தெரிவிக்கின்றன.

 யத்யஸ்தி பதிஸுஸ்ருஷா யத்யஸ்தி சரிதம் தப:

யதி சாஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹநூமத:

யதி கஸ்சி தநுக்ரோஸஸ் தஸ்ய மய்யஸ்தி தீமத:

யதிவா பாக்யசேஷோ மே ஸீதோ பவ ஹநூமத:

யதி மாம் வ்ருத்த ஸம்பந்நாம் தத்ஸமாகம லாலஸாம்

ஸ விஜாநாதி தர்மாத்மா ஸீதோ பவ ஹநூமத:

யதி மாம் தரயே தார்ய: ஸுக்ரீவ: ஸத்யஸங்கர:

அஸ்மாத் துக்காம்பு ஸம்ரோதாச் ஸீதோ பவ ஹநூமத:

(ஸ்லோகங்கள் 26,27,28,29)

இவற்றிற்கான பொருள் “

பர்த்தாவை (கணவனை) ஏற்றபடி உபசரித்தல், என்னிடம் உண்டானால், தவத்தை விதிப்படி புரிதல் உண்டானால், பதி தானே கதி என்றடைதலும் உண்டானால் ஹனுமாருக்கு குளிர்ந்து தோன்றி அருளுதல் வேண்டும்.

அறிவிற்சிறந்த அவருக்கு என்னிடம் அன்பென்பது சிறிதேனும் உண்டேயானால், அதுவுமன்றி எனக்கு அதிர்ஷ்டலேசம் உண்டேயானால் ஹனுமாருக்கு குளிர்ந்து தோன்றி அருளுதல் வேண்டும்.

தர்மஸ்வரூபியான அவர் என்னை அவரை அடைவதொன்றையே பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் நன்னெறி தவறாதவளாய் அறிவாரானால் ஹனுமாருக்கு குளிர்ந்து தோன்றி அருளுதல் வேண்டும்.

பெருந்தோளுடையவரும் ஸத்யஸந்தரும் பூஜ்யருமான சுக்ரீவர் இந்த துயர்த்தினின்றும் என்னை விடுவிப்பார் என்றால் ஹனுமாருக்குக் குளிர்ந்து தோன்றி அருளுதல் வேண்டும்.

இந்த வேண்டுகோளைக் கேட்ட அக்னி பகவான் “மான்குட்டியினது கண்கள் போன்ற கண்களை உடையவளுக்கு ப்ரத்யக்ஷமாகத் தெரிவது போல சாந்தமாய் மங்களகரமான ஜ்வாலையுடன் எரிந்தார்.”

ஹனுமாரின் தந்தையான வாயு பகவானும் அவர் பங்கிற்கு தேவிக்கு திருப்தி செய்பவராய் குளிர்ந்த பனிக்காற்றாய் வீசலானார்.

ஹநுமார் இந்த தீடீர் நிகழ்வால் ஆச்சரியமடைந்தார்.

‘அட, இது என்ன, நன்றாய் ஜ்வலிக்கின்ற இந்த அக்னி தேவன் ஏன் என்னை முற்றிலும் எரிக்கவில்லை?

ஜ்வாலையோ மஹத்தானதாய் காணப்படுகிறது. எனக்கோ கஷ்டத்தைத் தரவில்லை. வாலின் நுனியில் குளிர்ந்த வஸ்துவின் கலவை அப்பப்பட்டது போல இருக்கிறது. ஆஹா! சந்தேகத்திற்கு இடமில்லை. நிச்சயம் தான்! ஸமுத்திரத்தைத் தாண்டும் போது ஶ்ரீ ராமரது பிரபாவத்தால் மலை ஒன்று காணப்பட்டது எப்படி ஆச்சரியமோ இதுவும் அப்படிப்பட்டதே.

ஸமுத்திரராஜனுக்கும் புத்திமானான மைநாகத்திற்குமே ஶ்ரீ ராமர் விஷயத்தில் அப்படிப்பட்ட பக்தி என்றால் அக்னி பகவான் இப்போது எப்படி உதவி செய்யாமல் இருப்பார்?” என எண்ணினார் ஹனுமார்.

“சீதையின் தண்ணளியாலும் ஶ்ரீ ராகவரின் திவ்ய சக்தியாலும் என் தந்தையின் உறவாலும் அக்னிபகவான் என்னை எரிக்கவில்லை”  என்று எண்ணினார் ஹனுமார்.

மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியத்தை ஆலோசிக்கலானார் அவர்.

இந்த அத்தியாயம் சீதையின் சௌகந்தத்தை விளக்கும் அத்தியாயமாகப் பரிமளிக்கிறது.

இறைவனை வேண்டுவோருக்கு இறைவன் பணியில் ஈடுபட்டோருக்கு கஷ்டங்கள் எதிரில் வந்தாலும் அவை அவர்களுக்கு ஒரு வித துன்பமும் தராது என்பதே இது கூறும் செய்தி.

துன்பங்களும் குளிர்ந்து போகும்; அக்னியும் குளிரைத் தருவான் என்பது எப்படி ஒரு அற்புதமான அபூர்வமான ஆனந்தமான செய்தி!

ஶ்ரீ ராம் கி ஜய்! ஸீதா மாதா கி ஜெய்!! ஹனுமான் கி ஜெய்!!!

***

Cows are of different Colours, but Milk is White!(Post No.11,885)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,885

Date uploaded in London – –  9 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx

Hindus see unity in diversity; it has been there from the Vedic days. We see Ekam Sath; vipraahaa bahuthaa Vadanthi  (Truth is One; Scholars name it differently)

And the Upanishads say,

Gavaam aneka varnaanaam

Kshiirasya asti  eka-varnataa

Kshiiravath pashyate jnaanaam

Linginas tu gavaam yathaa

Cows are many different colours, but

The milk of all is of one colour, white

So the proclaimers who proclaim the Truth

Use many varying form to put it in

But yet the Truth enclosed in all is One

Xxx

Krishna says not once but twice

Mama vartma anuvartante

Manushyaahaa, Partha, sarva saha

To but one goal are marching everywhere,

All human beings, though they may seem to walk

On paths divergent; and that goal is i

The universal self , Self consciousness

Xxx

Siva mamima stuti says

Trayii, Saankhyam, Yogah

Pashupati-matam , Vaishnavam iti

Prabhinne, prasthaane, param

Idam, adah pathyam iti cha

Richiinaam vai chitryaad

Rju-kutila naanaa patha jushaam

Nrnaam Eko gamyas- Tvam asi

Veda, and Saankhya, Yoga, Shaiva view

And Vaishnav and many others such

Men follow as they variously incline;

Some thinking this is best; some others, that;

Yet thou art One Goal of aall those ways

Some straight aand easy, others crooked, rough

As of the countless streams, the one vast  sea.

Xxx

Again Upanishad says

Yathaa nadyah, syandamaanaah, samudre

Astam gaachchanti naama roope vihaaya

Tathaa vidvaan naama roopad vimuktah

Paraat param padam upaiti divyam

As streaming rivers pass into the sea

Abandoning all separate name and form

So, he who sees the One casts of all name

And form and merges in the State Beyond

Xxx

Buddha said on one occasion,

Just as O Monks! The rivers Yamuna

And Gangaa Achiravatii, Sharabhuu

And Mahii, when they fall unto sea

Lose distinct names and forms

and are thence forward

Known as one ocean only; even so

All men of all four classes, when they come

Into the Doctrine and Discipline

Of the Tathaa-gata ‘who knows the truth’

And pass from many homes to homelessness

They lose distinctive names, clans, naama gotra

And are thence forward, known as Bikshu only

–Udaana 5-5

Xxx

Zoroaster teaches

And we worship the former religions of the world devoted to righteousness (Z.Yasna 16-3)

At toiianghen Saoshyanto dashyuunam (Gaathaa 48-12)

Even the Dasyus, tribes uncivilised

Will have Saoshyantas, apostes, sent

To give them teaching and look after them

Xxx

Confucius said

I only hand on; I cannot create new things.

xxx

Buddha and Jina speak of past and future Buddhas (enlightened ones) and Tirthankaras (makers of the fords or bridges) who reveal the same fundamental truths, again and again , for the benefit of humanity, only revivifying, confirming, enforcing them by the fire and fervour of their lives.

Source book :Essential Unity of all Religions, Bhagavan Das, Bharatiya Vidhya Bhavan, 1932)

Tamil poet Bharati also said it by using the imagery of different colour cats

வெள்ளை நிறத்தொரு பூனை

எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றதப் பூனை

அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,

கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி

பாம்பின் நிறமொரு குட்டி

வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்

அவை யாவும் ஓரே தரம் அன்றோ

இந்த நிறம் சிறிதென்றும்

இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்

அதில் மானுடர் வேற்றுமை இல்லை

எண்ணங்கள் செய்கைகள் யாவும்

இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!- Bharatiyar

–subham—

Tags, Unity, in diversity, of religions, Bhagavan das, cows, Milk

அமெரிக்கா போட்ட ப்ளூட்டோனியம் அணுகுண்டு – 2 (Post No.11,884)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,884

Date uploaded in London – –  9 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part Two of Plutonium in Tamil

தற்காலத்தில் அணு உலைகளில் (Nuclear Reactors) மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்த ப்ளூட்டோனியம் (Plutonium) உலோகம் பயன்படுகிறது. ஆனால் இது உண்டாக்கும் கதிரியக்கக் கழிவை (radio active waste) அகற்றுவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. எந்த ஒரு செயற்கை உலோகத்தையும் விட அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவது ப்ளூட்டோனியம் தான்.

காரணம் ?

இது அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணு உலைகளில்  மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. இவ்வாறு செய்கையில் இது அணுசக்திக் கழிவுகளை வெளியே தள்ளும்;. கதிரியக்கம் கொண்ட அந்த ரசாயனப் பொருளை எங்கே கொண்டு கொட்டுவது?

முதலில் அதைக் குறைந்த ஆபத்துள்ள பொருளாக மாற்றவேண்டும் பின்னர் அதைக் கதிரியக்கம் வெளிவராத குப்பிகளில் (Canisters)  அல்லது டப்பாக்களில் (Containers) அடைக்கவேண்டும் . பின்னர் அவற்றை பாலைவனப் பகுதிகளிலோ அல்லது கடலுக்கு அடியிலோ இறக்க வேண்டும். இதெல்லாம் மேலை நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது. பெரும்பாலான விஷயங்கள் ரகசியமாக செய்யப்படுகிறது.

வேண்டாத சனியனை விலைகொடுத்து வாங்குவது என்ற பழமொழிக்கு நல்ல உதாரணம் ப்ளூட்டோனியம்தான்.

அமெரிக்காவுக்கும்- ரஷ்யாவுக்கும் இடையேயான கெடுபிடிப்போர் (Cold war) முடிந்தவுடன் இரண்டு நாடுகளும் தங்களிடம் உள்ள அணுகுண்டுகளைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்தன. அப்போதுதான் இந்தப் பிரச்சனையின் முழுவடிவமும் தெரிந்தது. அணு ஆயுதங்களைப் பிரித்துப் பகுதி பகுதியாக எடுத்தால் (dismantling nuclear weapons)  கழிவு ப்ளூட்டோனியம், கழிவு யுரேனியத்தை என்ன செய்வது? இரு நாடுகளில் 65, 000 அணு ஆயுதங்கள் இருக்கின்றன.. இதுவரை காற்று மண்டலத்தில் மட்டும் 500 அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.. இதனால் காற்று மண்டலமும் அசுத்தமாக்கப்பட்டுவீட்டது. கடலிலும் , நிலத்துக்கடியிலும் நிறைய சோதனைகள் நடந்துள்ளன.(இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் பாலை வனைப் பகுதியில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டு வெடித்து சோதனை செய்தது.)

அணுசக்திக் கழிவு, தவறானவர் கைகளில் சிக்கினால், அவர்களும் அணுகுண்டுகளை செய்யமுடியும். இது வரை உலக நாடுகள் ஆயிரம் டன்களுக்கு மேலாக ப்ளூட்டோனியம், உலோகத்தை உற்பத்தி செய்துள்ளன.

ஒரு டன் பெட்ரோலிய எண்ணை அல்லது எரிவாயுவை எரித்துக் கிடைக்கும் சக்தியை ஒரு கிராம் அளவுள்ள ப்ளூட்டோனியம் மூலம் பெறலாம்!

1971ம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பிய அப்பலோ 14 விண்கலத்தில் ப்ளூட்டோனியம் -238 பயன்பட்டது. அதிலுள்ள கருவிகளுக்கு இது மின்சக்தி அளித்தது.1977 வாயேஜர் விண்கலத்திலும் பயன்பட்டது. இப்போது செயற்கை இருதய கருவிகளுக்கும் இதுவே சக்தி தருகிறது பலவித ஆராய்ச்சிகள் செய்ய,  இந்த உலோகத்தை வேறு உலோகங்களுடன் கலக்கின்றனர் .

அமெரிக்கா , தனது அணுசக்திக் கழிவுகளை நெவாடா(Nevada)  மாநிலத்திலுள்ள யுகாடா மலையில் புதைக்கிறது. 4 கிலோ மீட்டர் ஆழத்தில் புதைத்து விட்டால் மூன்று கோடி ஆண்டுகளுக்குப் பாதிப்பு ஏற்படாது. 

Xxx

Picture: Lucas Heights is in Australia

xxx

Chemical Properties

ரசாயனக் குறியீடு Pu

அணு எண்  94

உருகு நிலை-  640 டிகிரி C

கொதி  நிலை – 3330 டிகிரி C

காற்றில் வைத்தால் 135 டிகிரி C  யில் தீப்பிடித்துவிடும்

ப்ளூட்டோனியம்,என்ற உலோகம் வெள்ளி போல மினுமினுக்கும் உலோகம். இதற்கு 20 வகை ஐசடோப்புகள் (Isotopes)  இருக்கின்றன. சில ஐசடோப்புகள் 88 நாட்களில் பாதியாகக் கரைந்து விடும். இன்னும் சில ஐசடோப்புகள் எட்டு கோடி ஆண்டுகளில் பாதியாக ஆகும். இதை அதன் அரை வாழ்வு Half Life என்பர்.

அதிகமாக்க கிடைசிப்பது ப்ளூட்டோனியம்-239. அதன் அரை வாழ்வு 24000 ஆண்டுகள்.

ப்ளூட்டோனியம்-244. — அரை வாழ்வு எட்டு கோடி ஆண்டுகள்..

ப்ளூட்டோனியம்-242.– அரை வாழ்வு 376 000 ஆண்டுகள்.

ப்ளூட்டோனியம்-238. — அரை வாழ்வு 88 ஆண்டுகள்.

இந்த உலகத்துக்கு ஒரு வினோத குணம் உண்டு. இதைப்  பொதுவாக

ப்ளூட்டோனியம் ஆக்சைட் என்ற ரசாயனப் பொருளாகச் சேமித்துவைப்பர். இப்படிச் செய்கையில் இது விரிவடைந்து 40 சதவிகிதக் கூடுதல் இடத்தை எடுத்துக்கொள்ளும். 1983ம் ஆண்டில் 2-5 கிலோ சுத்தமான உலோகத்தைப் பாதுகாப்பான் பெட்டகத்தில் அடைத்துவைத்தனர். அதிலுள்ள கொஞ்சம் ஆக்சிஜன் வாயுவுடன் கிரியை செய்து  ப்ளூட்டோனியம் ஆக்சைட் ஆக மாறியது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் பார்த்தபோது அது, வெடித்து வெளியே வருவதற்குள் அதைக் கண்டுவிட்டனர் . பின்னர் பாதுகாப்பாக அதை அகற்றினர். அவர்கள் பார்த்திராவிடில் அது வெடித்து கதிரியக்கம் கசிந்து ஆபத்தை விளைவித்திருக்கும்.

Norh Korea threatens the world

இப்போதும் கூட எவ்வளவு பாதுகாப்பு செய்யப்பட்ட அணு உலைகளிலும் கூட பாதுகாப்புக் கவசம் இல்லாதபடி விஞ்ஞானிகளோ ஊழியர்களோ அணு உலைகளுக்குள் செல்லுவதில்லை . வெளியே வந்த பின்னரும் கீகர் கவுண்டர் கருவிகளைக் கொண்டு உடலில் அணுக்கதிரியக்கம் ஏறியிருக்கிறதா என்று சோதிப்பார்கள்..

ஜுராஸ்ஸிக் பார்க் (Jurassic Park) சினிமா பார்த்தவர்களுக்கு டைனோசர் மரபணு (DNA)  ஆராய்ச்சி எப்படி எதிரிடையாகப் போனது என்பது தெரியும். அது போல இந்த அணுக்கதிரியக்கப் பொருள்கள்- கழிவுகள் எப்போது டைனோசர் போல பூதாகார வடிவு எடுக்கும் என்று இப்போது தெரியாது . சர்வ தேச அணு சக்திக் கமிஷனின் கட்டுப்பாடுகள், அணு ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் முதலிய பல பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் ஈரான், வடகொரியா போன்ற நாடுகள் தன்னிச்சையாக நடக்கின்றன. இது ஒருபுறமிருக்க, அமெரிக்காவும், ரஷியாவும் பிரிட்டனும் இஸ்ரேலும்  ரகசியமாகச் செய்வதை யாரே அறிவார்?

—subham—

Tags- ப்ளூட்டோனியம், கதிரியக்கம், கழிவுப் பொருள், அணுகுண்டுகள்,

கலியுகத்தில் உங்கள் உயிர் யாரிடமெல்லாம் இருக்கிறது? (Post No.11,883)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,883

Date uploaded in London –   9 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சம்ஸ்கிருதச் செல்வம்

கலியுகத்தில் உங்கள் உயிர் யாரிடமெல்லாம் இருக்கிறது?

ச.நாகராஜன் 

எந்த காரணத்தினால் ஒருவரை கௌரவிக்க வேண்டும்?

ஒருவரை கௌரவிக்க வேண்டுமென்றால் அதற்கான தகுதி அவரிடம் இருக்க வேண்டுமல்லவா?

எந்த எந்த தகுதிகள்  பார்க்கலாமா?

1) வித்யா – கல்வியில் சிறந்து விளங்குவோரை கௌரவிக்க வேண்டும்.

2) புத்தி – புத்தியில் மேதையாக இருப்பவரை கௌரவிக்க வேண்டும்.

3) பௌருஷம் – வீரத்தில் சிறந்து விளங்குவோரை கௌரவிக்க வேண்டும்.

4) அபிஜனம் – ஒரு சிறந்த குடும்பத்தில் பிறந்தவரை மதிக்க வேண்டும்.

5) கர்மாதிசயா – பிரம்மாண்டமான பிரமாதமான செயல் புரிந்தவரை மதிக்க வேண்டும்.

இப்படி அர்த்த சாஸ்திரம் கூறுகிறது. ||| – 20-23

பூஜ்யா வித்யா புத்தி பௌருஷாபிஜன கர்மாதிஷயதஸ்ச புருஷா: |

யாரை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும்?

யாரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஐந்து பேர்களை! யார் அவர்கள்?

1) அதிதி – வீட்டிற்கு வந்த விருந்தாளையை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

2) பாலகா – குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

3) பத்னி – மனைவியை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

4) ஜனனி – பெற்ற தாயை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

5) ஜனகா – பெற்ற தந்தையை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் என்ற சுபாஷித நூலில் உள்ள ஒரு ஸ்லோகம் இந்த அறிவுரையை வழங்குகிறது.

அதிதிபாலிக: பத்னி ஜனனி ஜனகஸ்ததா |

பஞ்சைதே க்ருஹிண: போஷ்யா இதரே ச ஸ்வஷக்தித: ||

                     சுபாஷிதரத்னாகர பாண்டாகாரம்  157/206

ஒரு நல்ல எஜமானன் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு நல்ல எஜமானனுக்கு என்ன குணாதிசயங்கள் இருக்க வேண்டும்?

அவனுக்கு ஐந்து நல்ல அடிப்படை குணங்கள் தேவை.

அவையாவன:

1) பாத்ரே த்யாகி – தகுதியான (பாத்திரமுடையவர்களுக்கு) அவன் வழங்கவேண்டும்.

2) குணராகி – நல்ல குணங்கள் கூடியவராக இருத்தல் வேண்டும்.

3) போகி பரிஜனை: – உறவினர்களுடன் சந்தோஷமாக இருத்தல் வேண்டும்.

4) பாவ போதா – சாஸ்திரங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5) ரணே யுத்தா: – போர்க்களத்தில் வீரத்துடன் போர் புரியத் தெரிந்திருக்க வேண்டும்.

இதை சுபாஷிதம் ஒன்று தெரிவிக்கிறது.

பாத்ரே த்யாகீ குணே ராகீ போகீ பரிஜனை: சஹ |

பாவபோத்தா ரணே ப்ரபுள் பஞ்சகுணோ பவேத் ||

–    சுபாஷிதரத்னாகர பாண்டாகாரம்  142/12

நல்ல அறிவைப் பெற வழிகள் யாவை?

நல்ல அறிவைப் பெற்றவர் எப்படி இருப்பார்கள்?

1) சப்த ப்ரமாணம் – சப்தத்தால் ப்ரமாணத்தைத் தருபவர்கள்.

(நல்ல பேச்சுத் திறமையால் தமது கருத்தைத் தருபவர்கள்)

2) அர்தாபட்டி – (Postulation) கொள்கை அனுமானக் கோட்பாட்டைக் கொண்டு அர்த்தத்தை நல்ல முறையில் விவரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

3) அனுமானம் – ஊகம் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

4) உபமானம் – இதை இதனுடன் ஒப்பிடலாம் என்ற உபமானக் கலையில் தேர்ந்த வல்லவராக இருத்தல் வேண்டும்.

5) ப்ரத்யக்ஷம் – (Perception) எதையும் உள்ளுணர்வால் உணரும் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் அவரை உலகம் நன்கு மதிக்கும்.

இந்த ஐந்து குணங்களை ப்ரபாகர மீமாம்ஸை வலியுறுத்துகிறது.

கலியுகத்தில் உங்கள் உயிர் யாரிடமெல்லாம் இருக்கிறது?

கலியுகத்தில் உயிராக இருப்பவர்கள் ஐந்து பேர். இந்த ஐந்து பேர்களை நீங்கள் உங்கள் உயிருக்குச் சமானமாக மதிக்க வேண்டும்.

யார் அந்த ஐந்து பேர்கள்?

1) க்ருஹிணி – இல்லத்தரசியாக விளங்கும் மனைவி

2) ஸ்வசுரௌ: – மாமனார்

3) ஸ்வஸ – மாமியார்

4) பகிணி – மனைவியின் சகோதரி

5) ஷ்யால – மைத்துனர் (மச்சான்)

பிழைக்கத் தெரிந்த வழியை இந்த சுபாஷிதம் கூறி நம்மை மகிழ்விக்கிறது; கலியுகத்தில் கடைத்தேற வழியைக் காண்பிக்கிறது!!

க்ருஹிணீ பகினீ தஸ்யா: ஸ்வசுரௌ ஷ்யால இத்யபி |

ப்ராணினாம் கலிநா ஸ்ருஷ்டா: பஞ்சப்ராண பரே ||

***

அமெரிக்கா போட்ட புளூட்டோனியம் அணுகுண்டு: லட்சம் பேர் மரணம் (Post No.11,882)- Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,882

Date uploaded in London – –  8 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

அணுகுண்டு புகழ் யுரேனியம் உள்பட 47 மூலகங்களின் கதைகளை பார்த்தோம். இன்று ஜப்பானை நாசமாக்கிய அமெரிக்க PLUTONIUM புளூட்டோனியம் பற்றிக் காண்போம். 

ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்று அவ்வையார் பாடினார். அந்த மூதாட்டிதான் முதல் அணுசக்தி விஞ்ஞானி

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்புகட்டிக்

குறுகத் தரித்த குறள்  —

என்று தீர்க்க தரிசனத்துடன் பாடினார்.. அணு என்ற சொல் முதல் முதலில் வேதத்தில், உபநிஷதத்தில் வருகிறது..

புளூட்டோனியம் என்னும் தனிமம்/ மூலகம் (Radio active element)  கதிரியக்கம் உடையது. இதனால் உடலில் புற்றுநோயும், மரபணுவைப்  பாதிக்கும் நோய்களும் உண்டாகும்.

1930ம்- ஆண்டுகளில் இதைக்கண்டு பிடித்தவர்கள் யுரேனஸ் பெயரில் யுரேனியமும், நெப்ட்யூன் என்ற கிரகத்தின் பெயரில் நெப்ட்யூனியமும் உள்ளதால் இதற்கு புளூட்டோ கிரகத்தின் பெயரில் புளூட்டோனியம் என்று பெயரிடலாம் என்று தீர்மானித்தனர்.

ஒவ்வொரு தனிமத்துக்கும் ஆங்கிலத்தில் Symbol குறியீடு உண்டு. இதற்கு பி எல் Pl என்று வைக்கலாமா அல்லது பி யூ Pu என்று வைக்கலாமா என விவாதம் எழுந்தது. இது கெட்ட உலோகம். ஆகையால் அசிங்கமான ‘பூ ‘ Pu என்ற சொல்லையே சூட்டுவோம் என்று முடிவு செய்தனர் ; தமிழில் பூ என்றால் மலர். ஆங்கிலத்தில் பூ Pu என்றால் மலம்.

இயற்கையில் எல்லா இடங்களிலும் இது இல்லை. ஆனால் மேலை நாடுகள் ஏராளமான அணு சோதனைகளைச் செய்ததாலும், அணு சக்தி உலை விபத்துக்களாலும் இப்போது புறச்சூழலைப் பாதித்திருக்கிறது . நம் ஒவ்வொருவர் உடலிலும் இந்த உலோகத்தின் அணு இருக்கிறது. ஆயினும் இதைக் கையில் கூட , கையுறை போட்டுக்கொண்டு எடுத்துப்பார்க்கலாம். மிக மெல்லிய தோலுக்குள் கூட  புளூட்டோனியம் அணு ஊடுருவ முடியாது .

.

மருத்துவ உபயோகம்

உலகையே அச்சுறுத்திய இந்த உலோகம் மாந்தர் குலத்துக்கு நன்மையையும் செய்கிறது . செயற்கை இருதய கருவிகளுக்கு சக்தி (Heart pace makers) கொடுப்பது புளூட்டோனியம் – 238 ஆகும்.

1940-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பெர்க்லியில் இரண்டு விஞ்ஞானிகள் யுரேனியம்-238 மீது ட்யூட்றான் DEUTRONஎன்னும் கனரக ஹைட்ரஜன் HEAVY HYDROGEN IONS  அணுவைப் பாய்ச்சி இதை உற்பத்தி செய்தனர். 1945ம் ஆண்டுக்குள் அமெரிக்காவிடம் மூன்று அணுகுண்டு செய்வதற்குத் தேவையான ப்ளூட்டோனியம் கிடைத்துவிட்டது .

ப்ளூட்டோனியம் -239 என்ற ஐசடோப் மீது நியூட்ரான் NEUTRON அணுவைப் பாய்ச்சினால் — மோதவிட்டால் —  அது அந்த அணுவைப் பிளப்பதோடு மேலும் நிறைய நியூட்ரான்களை வெளியிடும். அவை பக்கத்திலுள்ள அணுக்களைத் தாக்கி இதே விளைவை உண்டாக்கும். இதை சங்கிலித் தொடர் விளைவு (Chain Reaction) என்பர். ஒரு குறிப்பிட்ட அளவு ப்ளூட்டோனியம் இருந்தால் இது பிரமாண்டமான வெடிப்பினை ஏற்படுத்தி ஒரு நகரத்தையே அழித்து விடும்  இந்த அளவை கிரிட்டிகல் மாஸ் CRITICAL MASS என்பர்.

1945ம் ஆண்டில் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் அமெரிக்கா நடத்திய சோதனையில் இத்தனையையும் கண்டு பிடித்து ரகசியமாக வைத்திருந்தது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 11-02 மணிக்கு ஜப்பானின் நாகசாகி நகரம் மீதுஅமெரிக்கா இரண்டாவது அணுகுண்டை வீசியது. இதற்கு குண்டு மனிதன் Fat Man என்று பெயர் சூட்டியது. இது ப்ளூட்டோனியாம் அணு குண்டு. இதற்கு முன்னர் ஹிரோஷிமா மேல் போட்ட குண்டு யுரேனியம் அணுகுண்டு.

நாகசாகியில் வீசிய குண்டினால் ஒரு சில நொடிகளில் 70,000 பேர் செத்து மடிந்தனர் முதலில் ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுக்கு சின்னப்பையன்Little Boy  என்று பெயரிட்டனர். மூன்றாவது அணுகுண்டு குமகாயா Kumagaaya என்னும் ஊர் மீது போட இருந்தது. ஆயினும் 6000 டன் சாதாரண வெடிகுண்டினால் அதை அழித்தனர் . நாலாவது அணுகுண்டினை ஆகஸ்ட் 17ம் தேதி கொக்குரா Kokura நகர் மீது வீசத் திட்டமிட்டனர். ஆனால் ஜப்பான் சரண் அடைந்ததால் இரண்டாவது உலக மஹா யுத்தம் முடிவுக்கு வந்தது. ஜப்பான் பிழைத்தது..

இப்படிப்பட்ட உலோகத்துக்கு மலம் Pu என்று பெயர் சூட்டியது பொருத்தம் தானே .

இனி பொருளாதாரப் பயன்களைக் காண்போம்.

TO BE CONTINUED……………………………….

Taags- புளூட்டோனியம், அணுகுண்டு, நாகசாகி