மொழிபெயர்க்க முடியாத ஒரு அற்புதச் சொல்!

good Dharma2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1412; தேதி 15 நவம்பர், 2014.

சம்ஸ்கிருதத்தில் உள்ள தர்மம் என்ற சொல் எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கிறது. இது எந்த மொழியிலும் ஒரே சொல்லால் மொழி பெயர்க்க முடியாத ஒரு அற்புதமான சம்ஸ்கிருதச் சொல். தமிழில் அறம் என்று சொல்வோம். ஆனால் தர்மம் என்ற சொல்லின் எல்லாப் பொருளையும் அது தராது.

தர்ம என்பது இந்தியில் தரம் என்றும் தமிழில் அறம் என்றும் உரு மாறியது. அறம் என்ற சொல், சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு வந்தது என்று நான் சொல்லவில்லை. பாரதீய சிந்தனை — ஒரே சிந்தனை. ஆகையால் ஒரே மாதிரித்தான் சொற்களும் உருவாகும். சிவ பெருமானின் உடுக்கை ஒலியின் ஒரு புறத்திலிருந்து எழுந்த சப்தத்தை ஒரு குழு ‘’தர்ம’’ என்று கேட்டனர். மற்றொரு குழு ‘’அறம்’’ என்று கேட்டனர் என்பதே சாலப் பொருந்தும்.

PoweroftheDharmacover

இதை இன்னொரு எடுத்துக்காட்டாலும் உணரலாம். ‘’தர்ம, அர்த்த, காம’’ என்ற வட மொழிச் சொற்றொடர் ‘’அறம், பொருள், இன்பம்’’ என்று தமிழில் அதே வரிசையில் வருகிறது. இவை வாழ்க்கை மூல்யங்கள்- இந்தியர்களின் ஆதார சுருதி- பாரதீய வாழ்வின் அஸ்திவாரக் கற்கள்.–இதை மஹாபாரதத்திலும் காணலாம். தொல்காப்பியம் (சூத்திரம்1037, 1363), திருக்குறளிலும் (501, 754, 760, முப்பால்) காண்கிறோம். காலத்தால் முந்திய வேத உபநிஷதங்களைத் தமிழர்கள் ‘காப்பி’ அடித்தனர் என்பதைவிட, பாரதீயர்கள் ஒரே மாதிரித்தான் சிந்திக்க முடியும் என்று கொள்ளலாம்.

இதை இன்னொரு எடுத்துக்காட்டாலும் கண்டு கொள்ளலாம். தர்ம–அர்த்த காம—என்பதன் இடையில் உள்ள ‘’அர்த்த’’ என்பதற்கு தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இரண்டு அர்த்தம்–பொருள் உண்டு.
அர்த்தம் = பொருள்

இந்தச் சொல்லின் பொருள் MEANING என்ன? இந்தச் சொல்லின் அர்த்தம் என்ன என்று நாம் கேட்கிறோம்.

அர்த்தம் என்பதை செல்வம் WEALTH என்ற பொருளிலும் பயன்படுத்துகிறோம். இரண்டு மொழிகளிலும் ஒரு சொல் இப்படி ஒரே பொருளுடன் வழங்குவது தன்னிச்சையாக (Not a coincidence) நடந்ததல்ல. தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்ததையே இவை காட்டும்.

aum

பாரத மக்கள், சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் ஒன்று பட்டவர்கள் என்பதற்கு இது போல நூற்றுக் கணக்கான எடுத்துக்காத்துகளை எடுத்துச் சொல்லலாம். இன்னும் ஒரே ஒரு எடுத்துக்காட்டு:–

சூத்திரம் = நூல் BOOK (இரு மொழிகளிலும் புத்தகம் என்ற பொருளில் வரும்.
எ.கா. காம சூத்திரம், கல்கி எழுதிய நூல்கள்…………………………

சூத்திரம் = நூல்கண்டில் இருந்து நாம் ஊசியில் நுழைக்கும் நூல்THREAD.

எ.கா. தாலிக் கயிற்றை மங்கலசூத்ரம் என்பர். தமிழிலும் இந்த இரண்டு பொருள்களும் உண்டு.நிற்க.
தருமம் என்பதை ஒரே சொல்லால் விளக்கவே முடியாது.

அம்மா, கொஞ்சம் தரும் போடுங்கம்மா. ஐயா பெரிய தருமவான். அவர் இருந்தா இவ்வளவு நேரம் என்னை நிக்க வச்சிருக்க மாட்டார் என்று பிச்சைக்காரன் சொல்லும் இடத்தில் தர்மம் என்பதன் பொருள் ‘தானம்’.

சட்டசபையில் நம்து கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, இது நியாயமா, தர்மமா, முறையா, நீதீயா, நேர்மையா? முதலமைச்சரே பதில் சொல்லட்டும் என்று சொல்லும் போது அது தர்ம நூல்களில் அல்லது அம்பேத்கர் என்பவர் தலைமையில் எழுத சட்ட விதிகளைக் குறிக்கும்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இதே சொல்லை – “நாம் எல்லோரும் இந்து தர்மத்தைப் பின்பற்ற வேண்டும்” — என்று சொல்லும்போது அதன் பொருள் மிகவும் விரிவடைகிறது.

பஞ்சபாண்டவர்களில் யுதிட்டிரனுடைய பெயரை தர்மன் என்று சொல்லும்போது நெஞ்சாரப் பொய் சொல்லமாட்டான், யாருக்கும் தீங்கு செய்யமாட்டான் என்ற பொருளில் பயன்படுத்துவோம்.

ஒருவருடைய கடமையையும் தர்மம் என்போம். மருந்து எழுதிக் கொடுத்து அதற்குக் காசு வாங்குவது டாக்டர்கள் தர்மம். மக்களுக்கு இன்பம் கொடுத்து காசு வாங்குவது விலை மாதர்களின் தர்மம், போரில் எதிரிகளைக் கொல்வது படைவீரனின் தர்மம் என நமது நூல்கள் பகரும்.

Acharya-Dharma-Manifesto

(1)சட்டம், (2)கடமை, (3)நேர்மையான நடவடிக்கை, (4)சமூக தார்மீக அமைப்பு, (5)குணநலம், (6)ஒரு பொருளின் இயற்கையான நடவடிக்கை (தேளுக்கு தர்மம் கொட்டுவது — ஆகிய அத்தனையும் – தர்மம் என்னும் குடையின் கீழ் வந்து விடும்.

வடமொழியில் தர்மம் என்பதன் வேர்ச்சொல் ‘’த்ரு’’.
அதன் பொருள் ‘’தாங்குதல்’’, ஆதாராமாக இருத்தல்.
பாராதீய சிந்தனையின், செயல்பாட்டின் ஆதாரம் அது.

இதில் இன்னொரு விஷயத்தையும் சிந்திப்போம். ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தவை. மாதா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் மதர், மெடர், மெடர்னிட்டி, மெடெர்னல் என்று நூற்றுக்கணக்கான சொற்களைக் காணலாம். ஆனால் இந்த தர்ம என்ற சொல்லை ஏன் பிறமொழிகள் எடுத்துக் கொள்ளவில்லை? தமிழில் மட்டும் அதே சப்தத்துடன் (தர்ம=தரம்=அறம்) அச் சொல் வழங்கிவருகிறது என்று யோசித்தோமானால் ஒரு பெரிய ரகசியம் புரியும். உலகின் ஆதி மொழி இரண்டே இரண்டுதான். அதற்குள் உலகையே அடக்கிவிடலாம். நம்மிடமிருந்து ஐரோப்பியர்கள் மொழிகளை மட்டுமே கற்றனர். அடி வேர்களை, ஆணி வேர்களை அவர்கள் அறியவில்லை. தமிழனும் சம்ஸ்கிருதம் பேசுவோனும் மட்டுமே ஆணிவேர்கள். அதைப் புரிந்துகொண்டால் உலகையே அளந்துவிடலாம்!!
dharma

வேதம் “தர்மம் சர, சத்யம் வத” (அறம் செய்மின்; உண்மை பேசுமின்) என்று சொல்கிறது. நாமும் அதையே பின்பற்றுவோம்.

Contact swami_48@yahoo.com

தொல்காப்பிய அதிசயங்கள்

astrologer

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1410; தேதி 14 நவம்பர், 2014.

‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தமிழ் மொழியின் மிகப்பழைய நூலாகக் கருதப்படுகிறது. ஆயினும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.

1.தமிழர்களின் 4 முக்கிய தெய்வங்களில் இந்திரனையும் வருணனையும் சேர்த்த தொல்காப்பியர் ஏன் சிவபெருமானை அறவே ஒதுக்கிவிட்டார் என்பது இன்றுவரை புரியவில்லை. மாயோன் (விஷ்ணு), சேயோன் (முருகன்), வேந்தன் (இந்திரன்), வருணன் ஆகியோரை மட்டுமே நானிலத் தெய்வமாகக் குறிப்பிடுகிறார்.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)

2.தொல்காப்பியத்தில்
1610 சூத்திரங்கள் – சூத்திரங்கள் (நூற்பாக்கள்)
5630 சொல் வடிவங்கள்
மூன்று அதிகாரங்கள்
அதிகாரத்துக்கு 9 வீதம் 27 இயல்கள்
3999 வரிகள் உடையது
தொல்காப்பிய ஏட்டுச் சுவடிகளில் உள்ள பாட பேதங்கள் -2000
(13,699 தொடை வகைகள் உள்ளதாக தொல்காப்பியர் கூறுகிறார்— சூத்திரம் 1358)
தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் அறுவர் :—- இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்.

3.பனம்பாரனார் எழுதிய தொல்காப்பியப் பாயிரம் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தெளிவாகக் கூறுகிறது:
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம் — என்றும்

தொல்காப்பியனார்
வண்புகழ் மூவர்தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது — 1336.தொல் — என்றும்

இதையே பாரதியார்
நீலத் திரை கடல் ஓரத்திலே — நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு – என்றும் பாடினர்.
tolkappiyar

4.அதே பாயிரம், நான்கு வேதங்களையும் அறிந்த அதங்கோட்டு ஆச்சார்யார் என்ற பிராமணர் தலைமையில் நிலந்தரு திருவிற் பாண்டியன் சபையில் தொல்காப்பியம் அரங்கேறிய நற்செய்தியையும் நமக்குத் தரும்:–
நிலம்தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து (பாயிரம்)

5.தமிழின் தனிச் சிறப்பு உயர்திணை, அஃறிணை என்ற பிரிவுகளாகும். மக்கள், கடவுளர் எல்லோரும் உயர்திணை. அஃதில்லாதது அஃறிணை என்பார் தொல்காப்பியர்:
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையில் இசைக்குமன சொல்லே (484)

6.உயிரினங்களை ஆறு அறிவு உடைய பிரிவுகளாகத் தொல்காப்பியர் பிரித்திருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை:

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

tamil-lovers

தொல்காப்பியம் எவ்வளவுதான் சிறப்புடைத்தாலும் மேலே உள்ள சூத்திரத்தில் கூறியது கூறல் என்னும் குற்றம் ( பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) — இருப்பதைக் காண்கிறோம். இதனால் பாணினியின் வடமொழி இலக்கணத்தையும் தமிழ் இலக்கணத்தையும் ஒருங்கே கற்றோர் பாணினியை இமயமலைக்கும் தொல்காப்பியனை விந்திய மலைக்கும் ஒப்பிடுவர்.

7.கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்லும் தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து அமையாதது ஏனோ என்று வியக்கத் தோன்றுகிறது. உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ பற்றித் தொல்காப்பியத்தில் இருந்தாலும் திருக்குறளிலோ சங்க இலக்கியத்திலோ இந்த எழுத்தில் துவங்கும் சொற்களே இல்லை!!! இது மிகப் பெரிய தமிழ் அதிசயம்!!! ‘’ஔ’’ என்பது வடமொழி இறக்குமதியாக இருக்கலாம்!

8.தர்ம, அர்த்த, காம (மோட்சம்) என்ற வடமொழி நூல் வழக்கத்தை இவரும் திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்று அப்படியே பின்பற்றுகின்றனர் (காண்க சூத்திரங்கள்:-1038, 1363)

9.பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளை அழகாகப் பட்டியலிட்டுள்ளார்:–

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் (1097)

10.பறவைகள், மிருகங்கள் போல எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் ஓடி விடக் கூடாது. திருமணத்திற்கு தசப் பொருத்தம் – பத்து வித பொருத்தங்கள் பார்க்க வேண்டும் என்பார் தொல்காப்பியர்:
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவுநிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (1219)

varadaraja iyer

11.எல்லோரும் கல்யாணம் என்ற பெயரில் பல மோசடிகள் செய்து பொய், பித்தலாட்டம் செய்யத் துவங்கிய பின்னர் ஐய்யர்கள் கல்யாணம் என்ற சடங்கை உண்டாக்கினர் என்று தொல்காப்பியர் கூறுகிறார்:

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே (1090)
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (1091)

சூத்திரம் 1090 மஹாபாரதத்தில் உள்ளது. ஒரு முனிவரின் மனைவியை மற்றொருவர் அழைத்துச் சென்றதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்கள் இப்படிச் சடங்குகள் செய்த கதை மஹாபாரதத்தில் வருகிறது.
சூத்திரம் 1091: ஆர்ய (சம்ஸ்கிருதம்)= அஜ்ஜ (பிராக்ருதம்)= அய்ய (தமிழ்)=ஐயர்.; ஜ– என்பது தமிழில் ய – ஆக மாறும். எ.கா. அஜன்= அயன்; கஜமுகன்= கயமுகன்; பிற மொழிகளிலும் இப்படி உண்டு. ஜீஸஸ்=யேசு, ஜூதர்=யூதர்)

12.தொல்காப்பியர் காலம் பற்றி தமிழர் இடையே கருத்து ஒற்றுமை காண்பது அறிது. 20,000 ஆண்டு முதல் கி.மு.முதல் நூற்றாண்டு வரை அவரது காலத்தை வைப்பர். மொழியியல் அறிவு இல்லாதோரும் உலக மொழிகளின் வளர்ச்சி பற்றி அறியாதோரும் அடிக்கும் கூத்து இவைகள்!

12.உலகில் எல்லோரும் இலக்கண நூல்களில் சொல், எழுத்து, சொற்றொடர் போன்றவற்றோடு நிறுத்திக் கொண்டனர். தொல்காப்பியர் மட்டும் பொருள் அதிகாரம் என்று ஒன்றைச் சேர்த்து இலக்கண நூலில் புதுமை செய்தார்! ஆனால் இந்தப் பொருளதிகாரம் அவர் எழுதியது அல்ல – இது ஒரு பிற்கால இணைப்பு என்று வெளிநாட்டுத் தமிழறிஞர் செப்புவர். நான் செய்த ஆய்வு முடிவுகளைத் தொகாப்பியம் பற்றிய எனது கட்டுரைத் தொடர்களில் கொடுத்து இருக்கிறேன்.

arumuganavalar

13. தொல்காப்பிய மயக்கம்
“சிலபல நூற்பாக்கள் சொற்கள் எளிமையாக இருந்தும், அவற்றின் உண்மைப் பொருளை நாம் அறிய இயலவில்லை
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப -1050
முன்னைய நான்கும் முன்னதற்கென்ப – 998
பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே – 1145

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் –1021

என்றின்னவாறு பல இடங்களில் வரும் தொகைச் சொற்களும், உயர்ந்தோர், இழிந்தோர், கீழோர், மேலோர் என வரும் நிலைச் சொற்களும், கொடிநிலை, கந்தழி, வள்ளி எனவும், பால்கெழு கிளவி உயர்மொழிக் கிளவி, ஒருபாற்கிளவி எனவும் சுட்டு நகை சிறப்பு எனவும் வரும் பல்வகைச் சொற்களும் பொருள் மயக்கமாகவே உள. பொருள் மயக்கம் தொல்காப்பியச் சொற்களில் இல்லை. அக்காலத்து அவற்றின் பொருள்கள் தெளிவுடையனவே. உடன்பிறப்பு நூல்கள் இன்மையானும், தொன்மை யானும், உயர்ந்தோர், கீழோர், மேலோர் என்ற எளிய சொற்களுங் கூட நமக்குப் பொருள் காட்டவில்லை”— ( இதை மட்டும் நான் ‘’தொல்காப்பியக் கடல்’’, மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987 நூலில் இருந்து அப்படியே கொடுத்துள்ளேன்)

14.தொல்காப்பியர் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். ஏராளமான விஷயங்களை பாணீணீயம் (எழுத்து ஒலி பிறகும் இடங்கள்) மனுதர்ம சாத்திரம் (எண்வகைத் திருமணங்கள் மற்றும் உடன்கட்டை ஏறுதல்– சூத்திரம் 1025), மஹாபாரதம் முதலியவற்றில் இருந்து எடுத்தாண்டுள்ளார். சம்ஸ்கிருதச் சொற்களை தயக்கம் இன்றிக் கையாளுகிறார். எ.கா. கடைசி சூத்திரம் 1610-ல் ஞாபகம், மனம், உத்தி, முதலிய பல சொற்களைக் காணலாம்.

தொல்காப்பியம் முழுதும் படிக்கப் படிக்கச் சுவை தரும். பல வழக்கங்கள் இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரி இருந்தது பாரத ஒற்றுமைக்குச் சான்று தருவனவாக உள்ளன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி 1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி (அக்டோபர் 25, 2014)
தமிழனின் ஆறு பருவங்கள்:ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (ஜூலை 22, 2014)
ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை (ஜூன் 24, 2014)
தொல்காப்பியத்தில் துர்க்கை, அக்னி (மார்ச் 31, 2014)

No Brahmins ! No Tamil ! (posted on 12 /1 / 2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varuna In the Oldest Tamil Book
Did Tolkappiar copy from Sanskrit Books? (Sept.10, 2012)
Who was Tolkappiar? (Sept.9, 2012)

தொல்காப்பியமே என்ன என்று தெரியாதோர் முதலில் படிக்கவேண்டிய நூல்:– தொல்காப்பியக் கடல், மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987. ஒவ்வொரு கட்டுரையிலும் தொல்காப்பியருக்கு ஆசிரியர் வெவ்வேறு காலம் கற்பித்து எழுதி இருந்தாலும் தொல்காப்பியத்தின் அருமைதனை, பெருமைதனை எடுத்துரைக்கும் எளிய நடை நூல் இது. தமிழர் வீடுகளில் இருக்க வேண்டிய நூல் இது.
Contact swami_48@yahoo.com

கடவுள் தந்த இரண்டு மொழிகள்

shiva
பம் பம் பம் பம் பம் பம் பாஜே டமரு
டம் டம் டம் டம் டமருக நாதா (பஜனைப் பாடல்)

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1408; தேதி 13 நவம்பர், 2014.

இந்தியர்களாகப் பிறந்தவர்கள் உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் இரண்டு அரிய, பெரிய, பழைய மொழிகள் அவர்கள் நாட்டுக்குளேயே புழங்கி வருகின்றன வீட்டுக்குளேயே பவழங்கி வருகின்றன -. உலகிலுள்ள எல்லா மொழிகளையும் இந்த இரண்டு மொழிகளுக்குள் அடக்கிவிடலாம். இதைவிடப் பெரிய சிறப்பு இவ்விரு மொழிகளும் கடவுளால் படைக்கப்பட்டன. இவ்விரு மொழிகளையும் சிவ பெருமான் கொடுத்ததாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புலவர்கள் பாடி வருகின்றனர்.

பாரதியின் தமிழ்ப் பற்றை சந்தேகிப்பார் எவரேனும் உளரோ? அவரே ஆதி சிவன் இந்த தெய்வீகத் தமிழ் மொழியை உருவாக்கியதையும் அதற்கு அகத்தியன் என்று ஒரு பிராமணன் இலக்கணம் செய்து கொடுத்ததையும் சம்ஸ்கிருத (ஆரியம்) மொழிக்குச் சமமாக தமிழ் மொழி, வாழ்ந்ததையும் பாடுகிறார்:-

damaruka

தமிழ்த் தாய் – என்னும் பாடலில் பாரதியார் பாடுகிறார்:

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்துகொடுத்தான்

ஆன்ற மொழிகளுக்குள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் — (பாரதியார் பாடல்)

சிவபெருமான் தனது உடுக்கையை வாசிக்கும்போது அதன் ஒரு புறத்திலிருந்து தமிழும் மறு புறத்திலிருந்து சம்ஸ்கிருதமும் வந்ததாக ஆன்றோர்கள் கூறுவர். பாணினி என்னும் உலக மகா அறிஞன், உலகின் முதலாவது இலக்கண வித்தகன் சிவபெருமானுடைய ‘’டமருகம்’’ என்னும் உடுக்கை ஒலியில் இருந்து எழுந்த 14 ஒலிகளைக் கேட்டு சம்ஸ்கிருத இலக்கணம் செய்தார். இதை மஹேஸ்வர சூத்ரம் என்று கூறுவர்.

இதே போல அகத்தியர் என்பார் தமிழுக்கு இலக்கணம் செய்தார். ஆக இவ்விரு மொழிகளும் பாணினி, அகத்தியர் என்போருக்கு முன்னதாகவே வழங்கின. ஆனால் காலத்துக்கு காலம் இலக்கணம் மாறுபடும் என்பதால் அவ்வப்போது வரும் பெரியோர் இத்தகைய பணியை ஏற்பர். தமிழில் தொல்காப்பியருக்கு முன்னரும் இலக்கண வித்தகர்கள் இருந்தனர். பின்னரும் பலர் வந்து நூல்களை யாத்தனர். இது போலவே பாணினிக்கு முன்னரும் இலக்கண அறிஞர்கள் இருந்தனர்.

வட கோடு (இமய மலை) உயர்ந்து, தென் நாடு தாழவே, பூபாரத்தை சமனப் படுத்த அகத்தியனை தென் திசைக்குச் செல்லுமாறு சிவ பெருமான் கட்டளையிட்டதை முன்னரே உலகின் முதல் மக்கட்தொகைப் பெருக்கப் பிரச்சனை என்ற கட்டுரை வாயிலாகத் தந்துள்ளேன்.

shiva2

காளிதாசன் வழங்கும் முதல் சான்று
காளிதாசன் என்னும் கவிஞன் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் கவிஞன். இவனைப் போல நாடகம், காவியம், கவிதைகள் எனும் முத்துறையிலும் சிறப்புற விளங்கியவர் உலகில் மிக மிகக் குறைவு. அவனது ரகு வம்ச காவியத்தில் (6-61, 6-62) ராவணன் – பாண்டியன் – அகத்தியன் ஆகிய மூவரையும் இணைத்துப் பாடியதில் இருந்து நமக்கு அரிய செய்திகள் கிடைக்கின்றன. அவன் அகத்தியன் பற்றியும் பாண்டியன் பற்றியும் பாடியது வட இந்தியாவரை அகத்தியன் – தமிழ் உறவு தெரிந்திருந்ததைக் காட்டுகிறது. ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை பற்றி நான் முன்னரே எழுதிவிட்டேன்.

புறநானூறு முதலிய சங்க கால நூல்களில் பொதிய மலையையும் இமய மலையையும் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவர். பொதியில் குன்று என்பது அகத்தியர் ஆசிரமம் இருந்த இடம். ஆதாலால் இப்படிச் சிறப்பு எய்தியது.

மாணிக்கவாசகர் தரும் சான்று
ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் நுற்றுக் கணக்கான இடங்களில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஏத்தித் துதிபாடிவிட்டனர். ஓரிரு எடுத்துக் காட்டுகளைத் தருவன்:–

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவது சிவனையே என்பது அவருக்குப் பின்னோர் வந்த பாடலில் மேலும் உறுதிப்படுத்தப்படும்.

வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் (அப்பர்—ஆறாம் திருமுறை)

முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் (அப்பர்)
தமிழ் சொல்லும் வடசொலுந் தாணிழற்சேர (தேவாரம்)

மந்திபோல திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயன் தெரிகிலா
அந்த்தகர்க்கு எளியேன் இலேன் – சம்பந்தர் தேவாரம்
(இந்தப்பாடலில் தமிழ் சம்ஸ்கிதரும் ஆகிய இரண்டின் பெருமையையும் அறியாதோரை குரங்கு, குருடர் — என்பார் சம்பந்தர்)

trishul-damaru

தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு எது பெரிது என்றே சொல்ல முடியாது. ஏனெனில் சம்ஸ்கிருதத்தில் வேதம் இருக்கிறது. தமிழிலோ திருக்குறள் இருக்கிறது என்று பெருமைப்படுவார் வண்ணக்கன் சாத்தனார்:-

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இனிது
சீரியது ஒன்றைச் செப்பல் அரிதால் – ஆரியம்
வேதம் உடைத்து; தமிழ் திருவள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து.

shiva3
கம்பர் தரும் சான்று
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் — (கம்ப ராமாயணம்)

தமிழ் மொழியை நெற்றிக் கண் கொண்ட சுடர்க் கடவுள் சிவ பெருமான் தான் தந்தான் என்பதை கம்பன் பட்டவர்த்தனமாகப் பாடிவிட்டான்.

அகத்தியன் பற்றிக் கம்பர் கூறியவை:
‘’தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தான்’’ (சலதி = கடல்)
‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

பரஞ்சோதி முனிவர் தரும் சான்று
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

shiva on coin

சிவஞான முனிவர் கருத்து
இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வார்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பு
இருமொழியுமான்றவரே தழீஇயனா ரென்றாலி
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதோ

தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சிவனே கர்த்தா. இரண்டும் கண்ணின் இரு விழிகள். இவ்விரு மொழிகளும் சமம் என்பதில் என்ன சந்தேகம்? என்பார் காஞ்சிப் புராணம் எழுதிய சிவஞான முனிவர்.

தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்கள் எனப் பாவித்து இரு மொழி கற்போம் !!

எனது முந்தைய கட்டுரைகளையும் காண்க:
தமிழுக்கு எத்தனை பெயர்கள்? (ஜூன் 9, 2014)
புத்தர் செய்த தவறு: சுவாமி விவேகாநந்தர் ( 28 மார்ச் 2014)
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
தமிழ் ஒரு கடல்

Ravana-Pandya Peace Treaty: Kalidasa solves a Tamil Puzzle (24th June 2014)
Population Explosion: Oldest Reference is in Hindu Scriptures (posted on 2nd February 2013)

How many names for Moon?

moon big 2
Super Moon

Research paper written by London Swaminathan
Research article No.1407; Dated 12th November 2014.

Sun and moon dominate in every culture. Ancient communities had their own beliefs about sun and moon and particularly about the eclipses. One can judge a language by the number of words it has for each and every object or concept. In this respect Sanskrit is very rich. Let us look at the words for moon in Sanskrit from the first thesaurus of the world- Amarakosa of fifth century CE.

Hindus have some strange beliefs about moon from time immemorial:

1.It has influence over the growth of plants. Science has yet to approve it.

2.Moon has influence over human mind. Purusha Sukta of the Tenth Mandala of the Rig Veda links sun to eyes and moon to mind. Science has accepted it fifty- fifty. The word ‘lunatic’ for mad behaviour came from Lunar for moon. Some statistics prove strange behaviour among mentally sick patients.

3.Hindu hymns say that the Mercury (Budha) is the son of Moon (Soma). It is again a cosmological event. That is Mercury was formed because of Moon or from the Moon. Mercury is one of the smallest planets.

Amazing Moon
Amazing Moon

4.Hindus have used the word SOMA for a mysterious, rejuvenating, unknown plant and the Moon. The word confused everyone in the Vedas. It is still a mystery where they used it for moon and for the plant. Soma plant purifies a person’s mind where as narcotic drugs and alcoholic drinks spoil a person’s mind. Since Westerners have been using only the spoiling, bad drinks and drugs they couldn’t see anything good in the Soma plant. I have already explained about the Tamil Inscription’s description of a Brahmin as Mano Suddha Somayajee (More information is in my earlier post). Probably this is the reason Hindus linked moon with plant’s growth.

5. Rig Veda clearly said moon’s light is borrowed from the sun. So they knew it was the reflection of sun light like a mirror.

6.Hindus believe that moon came of milky ocean when it was churned by the Devas (angels) and the Asuras (demons). I have already explained the link between the Pacific Ocean and the Moon.

7. Vedic Hindu Schools don’t hold classes on New Moon, Full moon and Ashtami (eighth day from full or new moon) days. So do the Buddhists. Moon’s effect on sea on those days is well known. Since our body has 70% water they believed that the moon has same effect on human body.

moon big
Big Moon

Twenty Names for Moon
Amarakosa gives twenty words for the moon.
Himamsu = one who has cool rays (Hima+ Amsu)
Chandrama = Camphor coloured; another meaning is that which helps to meaure the time. Ma in Sumerian, Tamil and Sanskrit stand for measurement. Chandra+Ma.
Chandra = one who gives joy ( the word also mean gold, water, desire, camphor and cloud in Sanskrit)
Indu =Wet
Kumuda Bandhava= Friend of water lily
Vidhu: = drink of the Devas
Sudhamsu: = Rays of Amrta
Subrhamsu: = one who emits white rays
Oshadisa: = Lord of the herbs
Nisapati: =Lord of the Night
Abja: =One who came out of water
One of the 14 objects or people that came out of the ocean when Demons and Devas churned the ocean is Moon. One scientific explanation is that moon went out of the earth during a big collision on earth. The scientists proposed this theory because the diameter of moon and Pacific Ocean are approximately same. So we can fit moon into the earth jigsaw puzzle.
Jaivadruka = Rejuvenating
Soma: =Which creates Amrta (ambrosia)
Glau =One who gives sorrow (for lovers?)
Mruganga: =One who bears deer on it
Kalanidhi:= one who has 16 Kalas
Dwija raja: = Lord of Brahmins
Sasadhara = one who has hare on it
Nakshatresa: =Lord of Stars
Kshapakara: = one who decreases

A Mythological story says that Chandra was the son of Atri and Anasuya and married 27 daughters of Daksha. Since he was favourable to only one star Rohini , he was cursed to have leprosy or consumption and his body decreased day by day. Then the curse was modified at the behest of his wives and his decay was made periodical, but not permanent.
There may be some science behind this story. Since we know for sure the 27 wives stand for 27 stars, the decay and favouritism towards Rohini may also be interpreted scientifically.

supermoon
Moon, Father of Mercury!

Mercury/Budha is called the son of moon in Hindu mythology and Hindu astrology. Once again it may also an astronomical/cosmological event. During another comet collision Mercury might have born and Moon might have been one of the factors in the event. It need not be part of moon; even if it caused the birth of Mercury, then moon may be called the father of mercury. Future theories on the birth of solar system may throw more light on it.

There is another interpretation possible: Mars is called the son of earth. Again it may be due to some collision or the similarity between the terrain of both earth and Mars (Ref. In Navagraha Stotra/ hymn). In the same way both moon and Mercury may have same type of terrain and that is the reason for calling it the son of Moon in Navagraha Hymns. All these are only speculations. Future discoveries may prove that we already knew this.

Read my earlier posts
A) Hindus’ Future Predictions – Part 1 (posted on 20th May 2012)
B) Hindus’ Future Predictions – Part 2 (posted 20th May 2012)
1.Is Brahmastra a Nuclear Weapon?
2.Science behind Shamudrika Lakshan
3.Great Engineers of Ancient India
4.Time Travel by Two Tamil Saints
5.Amazing powers of Human Mind: Six Stories
6.How did Rama fly his Pushpaka Vimana/air plane?
7.Did Kalidasa fly an Air Plane?
8.Science behind Deepavali – Part 1(Posted on 3 November 2012)
9.Science behind Diwali – 175 Sweets – Part 2
10.Science behind Samudra manthan (posted 11-11-2014)
11.Science behind Swambu Lingams

contact swami_48@yahoo.com

இந்துமதமும் விஞ்ஞானமும்: கடல் கடைந்த கதையில் சில அறிவியல் உண்மைகள்!

axis2

இந்துமதமும் விஞ்ஞானமும்: கடல் கடைந்த கதையில் சில அறிவியல் உண்மைகள்!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1406; தேதி 12 நவம்பர், 2014.

தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்தனர். பதினான்கு “ரத்தினங்கள்” கடலில் இருந்து தோன்றின என்பது பாகவதம், மஹாபாரதம் முதலிய புராண, இதிஹாசக் கதைகளில் உள்ளன. கம்போடியாவில் உள்ள அங்கோர்வட் கோவிலில் கூட இதைச் சிற்பமாக வடிக்கும் அளவுக்கும், தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக் விமான நிலையத்தில் பிரம்மாண்டமான சிலை வைக்கும் அளவுக்கும் பிரபலமான கதை இது. தென்கிழக்காசியா முழுதும் இக்கதை பிரசித்தம்.

இதில் ஏதேனும் விஞான உண்மை இருக்கிறதா? இருக்கிறது.
14 ரத்தினங்களில் ஒன்று நிலவு. இதுவும் கடலில் தோன்றியது என்பது விஞ்ஞான உண்மையே. தமிழன் மிகவும் அறிவு வாய்ந்தவன். நிலத்தில் இருந்து – நாம் வாழும் பூமி என்னும் நிலத்தில் இருந்து— அது தோன்றியதால் அதற்கு நில+வு என்று பெயர் வைத்தான் என்பதை முன்னர் நான் எழுதிய நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு என்ற இரண்டு கட்டுரைகளில் எழுதினேன். இதை வடமொழி நூல்கள் கடலில் இருந்து வந்ததாக எழுதின. ஏன்?

நிலவு தோன்றிய இடம் இன்று பசிபிக் சமுத்திரமாக மாறிவிட்டதால் இப்படி எழுதினர். அது என்ன கதை?

பரிணாமக் கொள்கையை நமக்கு அளித்த சார்ல்ஸ் டார்வினின் மகன் ஜார்ஜும் ஒரு விஞ்ஞானி. பரிணாமக் கொள்கை நமது தசாவதாரத்தில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு காலத்தில் ஒரு பெரிய கிரஹமோ வால் நட்சத்திரமோ பூமியில் மோதிய போது பூமியில் இருந்த ஒரு பகுதி பிய்த்துக் கொண்டுபோனது. அந்த இடம் நீரால் நிரப்பப்பட்டு பசிபிக் பெருங்கடல் ஆகிவிட்டது. நிலவின் விட்டமும் பசிபிக் மஹா சமுத்திரத்தின் நீள, அகலமும் சரியாகப் பொருந்துகின்றன என்று ஜார்ஜ், 1800 ஆம் ஆண்டுகளில் ஒரு கொள்கை வெளியிட்டார். நிலவைத் தூக்கிவந்து அப்படியே பசிபிக் பெருங்கடலில் வைத்தால் நமக்கு முழு லட்டு கிடைத்த மாதிரி பூமி உருண்டை பூர்த்தியாகும்.

பசிபிக் பெருங்கடலைத் தோற்றுவித்த காரணத்தினால் இப்படி நம்மவர் சொன்னார்கள் என்று கொள்வதில் பசை இருக்கிறது. அது சரி, மற்ற 13 பொருள்களுக்கு விளக்கம் என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.14 ரத்தினங்கள் வந்ததையும் ஒரே நிகழ்ச்சியாகக் காணாமல், நீண்ட கால மனித குல நாகரீக வளர்ச்சியாக இதைக் காண வேண்டும்.

AB65137

முதலில் 14 ரத்தினங்கள் என்று புராண இதிஹாசம் தரும் பட்டியலில் சில வேறுபாடுகள் இருப்பதை அறிதல் நலம். ஆகையால் நான் கொடுக்கும் பட்டியலில் 14க்கு மேல் இருக்கும். இதுவரை எத்தனையோ பேர் இவைகளுக்கு பலவித விளக்கங்கள் கொடுத்தனர். ஆனால் அவை திருப்தி அளிப்பதாக இல்லை. இவை இந்துக்களின் கடல் கடந்த்த நாகரீக வளர்ச்சியைக் காட்டுகிறது அத்னையும் வெளிநாட்டில் இருந்து கப்பல் மூலம் வந்ததால் இதைக் கடலைக் கடைந்ததாகக் கூறினர் என்றார் ஒருவர்.
இன்னும் ஒருவர் இவைகளுக்கு தத்துவ விளக்கங்களைக் கொடுத்தார். எனது விளக்கம் இதோ:–

14 “ரத்தினங்கள்:
சந்திரன் (சோம, நிலவு)
வாருணி ( கள், சுரா பானத்தின் அதிபதி)
உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை
ஐராவதம் என்னும் யானை
காம தேனு என்னும் பசு/சுரபி
பாரிஜாதம் – மரம்
கற்பக விருக்ஷம் – மரம்
கௌஸ்துப மணி
குடை
காதுகளுக்கான தோடு
அப்சரஸ் – தேவலோக அழகிகள்
சங்கு
லெட்சுமி – செல்வத்தின் அதி தேவதை
ஜ்யேஷ்டா- மூதேவி; நித்திரை, சோம்பேறித்தனம் ஆகியவற்றின் கடவுள்
தன்வந்திரி – டாக்டர்
காலகூட விஷம்
அமிர்தம்

483px-Samudramanthan

மிருகங்களான யானை, குதிரை, பசுமாடு ஆகிய அனைத்தும் வனத்தில் திரிந்தன. மனிதன் அவைகளைப் பிடித்து சாதுவாக்கி பயன்படுத்தத் துவங்கியதையே – பாற்கடலில் இருந்து— வந்ததாகக் கூறுகிறோம் எனக் கொள்ளலாம்.

அது போலவே சங்கு, அப்சரஸ் பெண்கள் முதலியவற்றை இசை, நடனம் முதலிய கலைகளை மனிதன் வளர்த்த கட்டம் எனக் கொள்ளலாம்.

தோடு, கௌஸ்துப மணி என்பன மனித குலம் – பாஷன்- முதலியவற்றை ஏற்ற நிலை.
வெண்கொற்றக் குடை என்பது மனிதர்கள், தங்களுக்குள் அரசன் என்று ஒருவனை நியமித்த கால கட்டம். அதாவது முதல் மனு.

லெட்சுமி என்பவள் உழைப்பின் பலன் – வைஸ்யர்கள் தோன்றி கடல் கடந்து வணிகம் செய்த கட்டம். இதைச் செய்யாதவர்களுக்கு கிடைப்பது ஜ்யேஷ்டா (மூதேவி). இது சோம்பேறித் தனமான கட்டம்.
தன்வந்திரி என்பது ஆயுர்வேதம், சித்தா முதலிய மருத்துவ வளர்ச்சி ஏற்பட்ட கட்டம்.
அழகான பூக்கும் மரங்கள் பாரிஜாதம், கற்பக விருட்சம் ஆகியன மனிதன் மரங்களைப் பயன்படுத்தி தோட்டம், நந்தவனம் ஆகியவற்றை ஏற்பத்திய நிலை ஆகும்.
59802-Bright-Moon

இறுதியாக விஷம் — அமிர்தம் என்ற இரண்டும் உலகில் நடக்கும் எந்த ஒரு பணியிலும் நல்லதும் கெட்டதும் தோன்றும் என்பதைக் காட்டும். அத்தகைய சூழ்நிலையில் சிவ பெருமான் போல தியாக சிந்தனை உடையவரால் – விட்டுக்கொடுக்கும் போக்கு உடையவரால் – மனித குலம் தழைக்கும் என்று உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

இந்த பாற்கடல் கடைந்த வரலாறு – சமுத்ர மதனம் – மனித குலத்துக்கு தரும் செய்தி யாது?

உலகில் எப்பொழுதுமே நல்லதும் கெட்டதும் ( தேவ + அசுர) இருக்கும். இரு சக்திகளையும் ஒரு சேர அணைத்து பணிகளைச் செய்ய வேண்டும். அப்பொழுது நல்லதும் கெட்டதும் (அமிர்தம்+ விஷம்) – இரண்டும் வரும். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளினால் மனித முலம் செழிக்கும், தழைக்கும். அசுரர்கள் தேவர்களாக மாற அமிர்தம் ( நற்செயல்கள்) உதவும். ஆயினும் எப்போதுமே உலகில் பாஸிட்டிவ், நெகட்டிவ் – ஆக்கபூர்வ/ அழிவுமிக்க சக்திகள் இருக்கத்தான் செய்யும். எப்படி மின்சாரம் பாய இரண்டும் அவசியமோ அப்படி இவை இரண்டும் தவிர்க்க முடியாதவை. கடலைக் கடைவதைப் போல நல்லதைக் கடைந்தெடுப்பது நம் கடமை.

இதில் இரண்டு இரண்டாக பாசிட்டிவ் – நெகட்டிவ் ஜோடிகளைக் காணலாம்: தேவர்/அசுரர், அமிர்தம்/ விஷம், பால்/ மது, லெட்சுமி/மூதேவி, ஆகவே உலகம் இரண்டு வகையான செயல்களால் ஆனது. நம் மனமும் அப்படித்தான்!

மனம் எனும் கடலைக் கடைந்தும் அமிர்தம் எடுக்கும் வழி உண்டு. அது ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஆகியோர் திவ்யப் பிரபந்த, தேவார, திருவாசகத்தில் காட்டிய வழி!
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை நாமும் வழிபட்டு அமிர்தம் எடுப்போம்!!

samudra-mandhan

contact swami_48@yahoo.com

Science behind Samudra Manthan/ Churning of Milky Ocean!

AB65137

Research paper written by London Swaminathan
Research article No.1405; Dated 11th November 2014.

Hindus knew more cosmology than any other ancient culture. The oldest book in the world, The Rig Veda, has got more hymns about creation than any other book in the world around that period — 1500 BCE or earlier.

Scholars wonder what made the Hindus to sing so many hymns on creation and cosmology and what made them to pass it on to posterity by word of mouth for thousands of years. Thank god the Brahmins kept them intact for us. At that period of time, Europe was a place of primitive tribes. Indians helped Sumerians, Egyptians ,Chinese and Greeks to learn new science according to some Indologists.

Maxmuller said that the Greeks distorted the Hindu stories and Chinese learnt astronomy from Indians. Greeks dependence on India for maths and religion is confirmed by Swami Vivekananda and Greek writers.

Whether any one believes in Hindus spreading this branch of science or not, no one can show us any creation hymn equal to that of the following Rig Vedic hymns:

samudra-mandhan

Rig Veda (from Tenth Mandala)
10-129 Nasadiya Sukta (Big Bang Theory)
10-121 Golden Embryo
10-90 Purusa Sukta (Cosmic person)
10-190 Cosmic Heat
10-81 Architect of the world
10-72 Aditi and Birth of Gods

All these hymns show their quest for scientific answers. Purusa sukta hymn reminds us of the ‘Visvarupa darsanam’ (all pervading form) in Bhagavad Gita. It is amazing that one race in the whole wide world has reached such a height in scientific thinking. Even Bhagavad Gita Viswarupa darsanam can be interpreted as the mysterious Black hole, the latest mystery in science.

483px-Samudramanthan

Churning the Ocean
Fourteen “gems” came out of the sea when Devas (angels) and Asuras (demons) churned the Milky Ocean. This is the most popular and prominent story in the Hindu Mythology. The list of 14 gems differs from book to book. But among the common gems, moon known as Soma is one. It is true to say that moon came out of the ocean.

George, son of Charles Darwin, proposed a theory in the 1800s that a big chunk of earth was spurned off when a big collision happened. That chunk became the moon. The hole made out of it became Pacific Ocean. It might have happened millions of years ago. He said that the moon will easily fit into Pacific Ocean and that was the hole created by the giant collision. This is the most popular theory about the origin of moon.

So Hindus are right in saying that moon came from “the ocean”. But other 13 gems from the Milky Ocean may not fit into this story. So we have to interpret each and every object separately.
The objects or people are

59802-Bright-Moon

Varuni = Sura, Soma = Moon, Lakshmi = Goddess of Wealth, Horse =Uchchaisravas , Kaustuba gem, Parijata tree, Poison = Halahala
Doctor Danvantri, Amrita = ambrosia, Divine Cow = Surabhi
Elephant Airavata, Apsaras = Damsels from Heaven, Shanka = Conch
Jyeshta = Goddess of Misfortune, Umbrella, Powerful bow
Earrings, Wish fulfilling Tree Kalapakavriksha

The 14 gems are unrelated objects. One way of interpreting is that all that is useful to men came out of the “churning”, which stands for hard labour. Some people interpret the churning as maritime expedition. Others interpret it as symbolic story. I will interpret it as getting useful things for mankind like cow, horse, elephant, trees, wine and Amrita at various stages in human history. It was a long drawn struggle. The finds like cow, horse, and elephant improved the condition of man. Their discoveries or domestication were important mile stones in human history. Discovery of trees may symbolise agriculture. Discovery of heavenly damsels, conch may symbolise arts- Dance and Music. Umbrella stands for rule of royalty and ear rings stand for fashion and jewellery.

axis2

Among the 14 gems, Amrita and Poison, Wine (Sura/Varuni) and Milk (from Surabhi), Lakshmi and Jyeshta, Asuras and Devas form pairs of opposites. Probably the moral is that any action will result in good and bad. One has to help us by swallowing the bad/poison, an action of great sacrifice like lord Shiva. There will always be positive and negative forces in the world. We have to muster the strength of negative forces (asuras) to produce positive results (Amrita).

Contact swami_48@yahoo.com

Please read my earlier posts:
1.Is Brahmastra a Nuclear Weapon?
2.Science behind Shamudrika Lakshan
3.Great Engineers of Ancient India
4.Time Travel by Two Tamil Saints
5.Amazing powers of Human Mind: Six Stories
6.How did Rama fly his Pushpaka Vimana/air plane?
7.Did Kalidasa fly an Air Plane?

தமிழில் விநோத உவமைகள்: பெண்ணே! நீ லண்டன் போல அழகி!!

pen painting

தமிழில் விநோத உவமைகள்: பெண்ணே! நீ லண்டன் போல அழகி!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1404; தேதி 11 நவம்பர், 2014.

உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கவிஞன் காளிதாசனும், சங்க காலப் புலவர்கள் கபிலர், பரணர், நக்கீரர், மாமுலனார், ஓரம்போகியார், அம்மூவனார் போன்றோரும், பைபிளில் சில பகுதிகளை எழுதியவர்களும் சில விநோதமான உவமைகளைப் பயன்படுத்தினர். அழகிகளை — நகர்கள் சிற்றுர்கள், பேரூர்களின் அழகுக்கு ஒப்பிட்டுப் புகழ்ந்து பாடினர். இன்று நான் ஒரு அழகான சினிமா நடிகையின் அழகை — அவள் லண்டன் போல அழகானவள், மதுரை போல அழகானவள், ஸ்ரீரங்கம் போல அழகானவள் — என்று எழுதினால் என்னைப் பார்த்து நகைப்பர். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இதுவே ஒரு சிறப்பான உவமையாக கருதப்பட்டது.

இதோ சில உவமைகள்:
நற்றிணை 35, 253, 265, 350, 358, 367, 395
குறுந்தொகை 238, 258 ஐங்குறுநூறு 58, 175, 177 மற்றும் பல இடங்களிலும் காணப்படும் உவமைகளில், நற்றிணை என்னும் நூலில் இருந்து ஒரு சில மட்டும்:

துறைகெழு மரந்தை அன்ன இவள் நலம் (பாடல் 35, அம்மூவனார்)
(அவள் மரந்தை என்னும் ஊர் போல அழகானவள்)
பாரி பலவு உறு குன்றம் போல கவின் எய்திய ((பாடல் 253, கபிலர்)
( நீ பாரியின் பலா மரம் பழுக்கும் குன்று போல அழகி )
தேர் வண் விரா அன் இருப்பை அன்ன (பாடல் 350, பரணர்)
(கொடை வள்ளலான விராவன் உடைய இருப்பை போல அழகு)
பசும்பூண் வழுதி மருங்கை அன்ன (பாடல் 358, நக்கீரர்)
(பாண்டிய மன்னனின் மருங்கை என்னும் ஊர் போல அழகு வாய்ந்தவள்)
அம்மமூவன் என்பவர் ஒரு அழகியை, தொண்டி நகருக்கும் ஓரம் போகியார் மற்றொரு அழகியை சோழ நாட்டு ஆமூருக்கும் ஒப்பிடுவதை ஐங்குறு நூற்றில் படித்து ரசிக்கலாம்

நக்கீரர் பாடிய பாடல்களில் இந்த நகர=அழகி ஒப்புமை அதிகம் காணப்படும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் இப்படிப் பாடுகிறான்:

ரகுவம்சத்தில் (11-52) ஒரு ‘’செக்ஸி’’ உவமை வருகிறது:
தசரத மன்னனுடைய படைகள் மிதிலா நகரத்தை அடைந்தன. அங்குள்ள தோட்டங்களையும் மரங்களையும் படைவீரர்கள் படுத்திய பாடு, அன்புமிக்க கணவன் தனது மனைவியை அன்போடு அணைத்துச் செய்யும் சேஷ்டைகள் போல இருந்தது.
இங்கே மிதிலை என்னும் நகரம் ஒரு பெண்ணுக்கு ஒப்பிடப்படுகிறது.

மற்றொரு இடத்தில் (14-12), “அயோத்தி என்னும் அழகிய நகரில் கார் அகில் புகை எழுந்தது ஒரு அழகான பெண் தன் கூந்தலில் நறுமணம் ஏற்ற அகில் புகையை எழுப்பியது போல இருந்தது என்பான். இது போல காளிதாசன் காவியங்கள் முழுதும் படித்து ரசிக்கலாம்.

காளிதானின் கவிதைகளைப் படித்து ரசித்த கபிலர் என்னும் புலவர் அதன் மூலமாகவே பிரஹத் தத்தன் என்ற வடக்கத்தியானுக்கு தமிழ் கற்பித்தார். அவன் தமிழைக் கிண்டல் செய்தான். அவனுக்கு காளிதாசன் எழுதிய கவிதை போலவே இயற்கை அழகு மிக்க குறிஞ்சிப் பாட்டை எழுதிக் காண்பித்து, அவனைத் தமிழால் மயக்கி அடிமைப் படுத்தினார். தமிழுக்கு அடிமையான ஆரிய அரசன் பிரஹத் தத்தன் தமிழில் கவிதை புனையும் ஆற்றலை எய்தி அழகியதோர் கவியும் புனைந்தான். அவனுக்கு தக்க பரிசில் கொடுக்க எண்ணிய தமிழர்கள் அவன் கவிதையையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தனர். என்னே தமிழனின் மாண்பு, பண்பு!!

Seattle_Skyline_2112
That actress is as beautiful as this city!

காளிதாசனின் மேகதூதம், ருது சம்ஹாரம் காவியங்களிலும், சாகுந்தலம் என்னும் நாடகத்திலும் இயற்கை அழகு மிகுதியாகக் காணப்படும்.

குறிஞ்சிப் பாட்டைப் படித்த தமிழ் ஆர்வலர் டாக்டர் ரெவரெண்ட் ஜி.யூ.போப், உடனே இது காளிதாசனின் செல்வாக்கில் வந்தது என்று எழுதினார். நான் காளிதாசன் பற்றி இதுவரை எழுத்திய பத்துக்கும் மேலான கட்டுரைகளில் காளிதாசன் கி.மு.முதல் நூற்றாண்டில் ‘’சகரர்’’களை ஓட ஓட விரட்டிய பேரரசன் விக்ரமாத்தித்தன் காலத்தில் வாழ்ந்தவன் என்று காட்டியுள்ளேன். இதற்குக் காரணம் 200-க்கும் மேலான காளிதாசனின் உவமைகளை சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணமுடிகிறது.

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்………

இந்துக்கள் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு உவமை “எப்படி வானில் இருந்து விழும் தண்ணீர் ( நதிகள் ) கடலை அடைகிறதோ………………….. அப்படி நான் செய்யும் எல்லா வழிபாடுகளும் உன்னையே அடையட்டும்” – என்று வழிபடுவர். பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கூட இம்மந்திர உவமை உண்டு.

இதைக் காளிதாசனிலும் சங்கப் புலவர் உவமைகளிலும் காண்கிறோம். இதிலிருந்து அறிவது என்ன?

1.உலகில் வேறு எங்கும் காணாத இவ்வுவமைகளை இந்திய இலக்கியங்களில் மட்டும் ஒரு சேரக் காணமுடிகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே பண்பாடு, ஒரே அணுகு முறை உடையது இந்நாடு — ஆரிய—திராவிட வாதங்கள் என்பன எட்டுக்கட்டிய கட்டுக்கதைகள் ஆகும்.
2.காளிதாசன் போன்றோரின் இலக்கியங்களும் இப்படிப்பட்ட உவமைகளை தமிழிலும் எழுத உதவி இருக்கலாம்.
3.புவி இயல் உவமைகளைப் பயன்படுத்துவது இந்துக்களின் கடல், நதிகள் பற்றிய புவியியல் அறிவுக்குச் சான்று பகரும்.
4.கவுண்டின்யன், அகஸ்தியர், பிருகு ஆகியோர், ஆளுக்கு ஒரு திசையில் கடல் கடந்து சென்று, இந்தியப் பண்பாட்டைப் பரப்பியதை வரலாற்றுச் சான்றுகளின் வாயிலாக அறிகிறோம்.

gujarati

இதோ சில உவமைகள்:

புறநானூறு 42; மலைபடுகடாம் 51-53; பெரும் பாணாற்றுப்படை 427, புறப்பொருள் வெண்பாமாலை 11, கம்பராமாயணம்-கையடைப் படலம் முதலியவற்றில் இந்த ஆகாசாத் பதிதம் தோயம் – உவமை வருகிறது:-

மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவரெல்லாம் நின் நோக்கினரே

சோழன் கிள்ளிவளவனை இடைக்காடன் என்ற புலவர் புகழ்கிறார்:–மலையிலிருந்து இறங்கி கடலை நோக்கிச் செல்லும் பல ஆறுகள் போலப் புலவர் எல்லோரும் உன்னை நாடியே வருகின்றனர்.

உருத்திரங்கண்ணனார் (ருத்ராக்ஷன்) என்னும் புலவர் தொண்டைமான் இளந்திரையனைப் பாடுகிறார்:

கல்வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு
பல்வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செல்வரை
வெண் திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
பொன் கொழித்திழிரும் போக்கரும் கங்கைப்
பெருநீர் போகும்………………… (427—432)

மலை அருவிகளில் விழும் நீர் (ஆறுகளாகப் பெருகி) எப்படி கடலை அடைகின்றனவோ அப்படி பல்வேறு மன்னர்களும் கட்டும் கப்பம் உன்னை அடைகிறது. இதற்கு அடுத்த வரியிலேயே நீண்ட இமய மலை, கங்கை ஆறு பற்றிப் பாடுகிறார். இதிலிருந்து வடக்கத்திய செல்வாக்கைக் காணலாம்.

இன்னொரு உதாரணம், இதை இன்னும் தெளிவாகக் காட்டும். தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிராமப் பெண் பற்றிப் பாடுகையிலும் கங்கை வெள்ளம் பற்றியே உவமை வருகிறது. ஆகவே காளிதாசனின் நூல்களைப் படித்தே இவர்கள் இப்படி உவமைகளைப் பயன்படுத்தினர் என்று கொள்ளலாம். இதோ அந்த உவமை:–

நற்றிணைப் புலவர் நல்வெள்ளையார் (369) கூறுகிறார்:
ஞெமை ஓங்கு உயர்வரை இமையத்து உச்சி
வா அன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்

ஞெமை மரங்கள் வளர்ந்து ஓங்கிய இமய மலையின் உச்சியில் இருந்து அருவிகளாக விழுந்து கங்கை ஆறாகப் பெருகி கரைய உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல என் காம எண்ணம் என்னை அடித்துச் செல்கிறதே. இந்த காம வெள்ளத்தை நானெப்படிக் கடப்பேன்? – என்று தோழியிடம் சொல்லி வருத்தப்படுகிறாள் தலைவி.. இது காளிதாசன் பாடலின் எதிரொலி:

“உமை அம்மை — சிவன் என்னும் காதலனை எவ்வளவு விரும்பினாளோ அவவளவுக்கு — சிவனும் அவளைக் காதலித்தான். கங்கை நதி, எப்போதாவது கடலை விட்டு வேறு எங்காவது போகுமா? எப்போது பார்த்தாலும் தன் காதலனின் ரசத்தைச் ( சமுத்திரத்தை ) சுவைத்துக் கொண்டிருக்கிறதன்றோ!!” ( காளிதாசனின் குமார சம்பவம் 8-16)

most-beautiful-cities-101
This city is as beautiful as that woman!

இதைப் படிக்கும்போது யார் யாரைக் ‘’காப்பி’’ அடித்தனர் என்னும் குட்டு வெளிப்பட்டு விடுகிறது. காளிதாசன் பாடலைப் படிக்காமல் மதுரை ஓலைக்கடையத்து நல்வெள்ளையார் கங்கை பற்றிப் பாடி இருக்கமுடியாது. கங்கை – காம வெள்ளம் என்றெல்லாம்—ஒரு தமிழ்ப் பெண்ணின் மீது ஏற்றிப்பாடுவது தன்னிச்சையாக நடந்ததல்ல. காளிதாச னின் செல்வாக்கே!! இது போல ஒன்றல்ல, இரண்டல்ல. காளிதாசனின் 200 வகை உவமைகள் ஏறத்தாழ ஆயிரம் இடங்களுக்கு மேல் சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன!! காளிதாசனோவெனில் உலகில் உவமைகளைப் பயன்படுத்துவதில் முதல்நிலை வகிப்பவன். ‘’கழுதை விஷ்டை (விட்டை) கை நிறைய’’ — என்பதல்லாமல் தரமான 1000 உவமைகளை இடத்திற்குத் தக பொருத்திய மாமேதை அவன்.

இந்தியாவில் யாராவது காளிதாசனைப் படிக்காமல் எழுதத் துவங்கினால் அவர்கள் ஆங்கிலத்தைப் படித்து பட்டம் வாங்கி விட்டு ஷேக்ஸ்பியர் யார்? என்று கேட்பதை ஒக்கும். தமிழில் பட்டம் வாங்கிவிட்டு கம்பன் யார்? என்று கேட்பதற்குக் சமம்.

இனி ஆகாசாத் பதிதம் தோயம் – உவமையை காளிதாசன் பயன்படுத்தும் ஓரிரு இடங்களை மட்டும் காண்போம்:

மலைகளின் புதல்விகளான ஆறுகள் எப்படி கடல் எனும் காதலனை நோக்கி ( இயற்கையாகவே ) ஓடுகின்றனவோ அதே போல மகதம், கோசலம், கேகயம் ஆகிய மூன்று நாட்டுப் பெண்களும் தசரதன் எனும் வீரனை மணந்தனர். ஆறுகள், மாபெரும் கடலை நோக்கித்தானே ஓடும்? (ரகு வம்சம் 9—17)
இந்திய இலக்கியங்கள் முழுதிலும் ஆறுகள் பெண்கள் என்றும் கடல் காதலன் என்றும் சித்தரிக்கப்படும்.

13-10-08_217_CONFLUENCE_OF_INDUS_RIVER_N
Akaasaath pathitham thoyam Ythaa gachchathi saagaram…………………..

கள்ளம் கபடமற்ற — பறவைகளால் வளர்க்கப்பட்ட — இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த — சகுந்தலை என்னும் பெண்ணின் கதையான சாகுந்தலத்தில் மானுட உணர்ச்சிகள் அத்தனையையும் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுவான் காளிதாசன். இதனால் இந்த நாடகம் உலகின் தலை சிறந்த நாடகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதில் ஒரு வசனம்:

நீ உனக்குத் தகுதியான ஆளிடம்தான் உன் இதயத்தைக் கொடுத்து இருக்கிறாய்! அதிர்ஷ்டசாலிதான்!! உண்மைதான் ! பெருக்கடுத்து ஓடும் ஆறு கடலைத் தவிர வேறு எங்கு போக முடியும்? (சாகுந்தலம் 3-13)

இப்படி நூற்றுக் கணக்கான உவமைகளை ஒப்பிட்டுக் கட்டலாம். விரித்துரைப்பின் — கங்கை போலப் பெருகும் என்பதால் இத்தோடு நிறுத்துவன் யான்!

–சுபம்–

காளிதாசன் பற்றிய முந்தைய கட்டுரைகள்:

1.காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம் (13-9-2014)
2.நால்வகைப் படைகள்:மஹாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை (13-8-2014)
3.தமிழனின் ஆறு பருவங்கள்: ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (22-7-2014)
4.அரசனின் குண்நலன்கள்: கம்பனும் காளிதாசனும் (21-7-2014)
5.அன்னப் பறவை பற்றிய அதிசயச் செய்திகள் (7-7-2014)
6.ராவணந்-பாண்டியர் சமாதான உடன்படிக்கை (24-6-2014)
7.மாரி, பாரி, வாரி:காளி, கம்பன், கபிலன் (23-6-14)
8.ஆண்களே! நீங்கள் மலர் மேயும் வண்டுகளாமே! (18-6-2014)
9.கம்பனும் காளிதாசனும் சொன்ன அதிசயச் செய்திகள் (16-6-2014)
10.மூன்று புகழ்பெற்ற பிரிவுபசார உரைகள் (8-5-2014)
11.காளிதாசரின் நூதன உத்திகள்: தமிழ்லும் உண்டு
12.கடலில் மர்மத் தீ – பகுதி 2
13.சங்கத் தமிழ் இலக்கியத்தில் காளிதாசனின் உவமைகள் (29-1-2012)

My earlier posts on Kalidasa
1.Did Kalidasa fly an Airplane? 12 Sept. 2014
2.Sea in Kalidasa and Tamil Literature
3.Ganges in Kalidasa and Sangam Tamil Works
4.Gem Stones in Kalidasa and Tamil Literature
5.Bird Migration in Kalidasa and Tamil Literature
6.Kalidasa’s Age:Tamil Works confirm 1st Century BC
7.Ravana-Pandya Peace Treaty! Kalidasa solves a Tamil Puzzle (June 24, 2014)
8.Agastya in Jataka Tales and Kalidasa June 13, 2014.

contact swami_48@yahoo.com

Women and Rivers in Kalidasa and Tamil literature

gujarati

Research paper written by London Swaminathan
Research article No.1403; Dated 10th November 2014

I have listed over 200 similarities between Kalidasa’s works and Sangam Tamil literature. I have argued in my previous posts on Kalidasa that he lived in the first century BCE or before that. Most of the Indian scholars believe that he lived during the rule of Vikramaditya of first century BCE. Amazing similarities between the Tamil poems and Kalidasa’s confirm that the Sangam Tamils were very familiar with his works. This is confirmed by the Brahmin poet Kabila’s work in the Sangam period. He taught Tamil poetics to an Aryan king Bruhat Datta ( through Sanskrit) and made him write a Tamil poem which is included in the Sangam corpus. Kabila was a trend setter. He used many Sanskrit words and Sanskrit themes in Sangam verses. He copied Kalidasa in his Kurinjipattu which was noticed by an ardent Tamil lover Rev. Dr G U Pope 150 years ago.

I present below some similes where Kalidasa’s influence is noticeable.
Rivers in India are considered women and sea as their (lover) husband. Women’s beauty is compared to the beauty of cities. Though it may look strange today ancient people used this simile. If I compare a beautiful actress to the beauty of a big city today, people will laugh at me. But it is in the Bible as well.
Sangam poets Nakkirar, Paranar , Kabilar, Mamular, Orampoki and Ammuvan compared the beauty of a woman to a city/town.
Seattle_Skyline_2112
Women and city are compared in literature!

Tamil Ref. Natrinai 367, 258, 260, 340, 350, 358, 395; Ainkurunuru 56, 171
Poet Nakkirar compares the beauty of a woman to Aruman’s small and beautiful village (Natrinai 367). And in another poem (358), he compares the beauty of a woman to Pandya’s town Marungai. Poet Orampokiar compared a woman’s beauty to Choza town Amur (Aink.56). Another woman was compared to Pandya’s port city Tondi by Ammuvan (Aink.171).

20120222 Water change near Ballina

Kalidasa used this simile in Raghuvamsam :

Mithila is compared to a woman. Like a woman tolerates all that is done to her (by her husband) out of love, Mithila tolerated the army of Dasaratha -11-52,
City of Ayodhya with its smoke from sandal is compared to women with their hair drying in the fragrant smoke– 14-12

Akasath Patitam Toyam Yatha Gachchati sagaram ………

Hindus are very familiar with the rivers and the seas. Great seers Bhrgu, Agastya and Kaundinya took the Hindu culture and civilization to different parts of the world via sea route.
So they always use this comparison:
“Even as all the waters (rivers) falling from the sky invariably flow into the sea, so ………. (all prayers offered go to God)”.
This is found in Kalidasa and Tamil literature. This shows that Indians from Kashmir to Kanyakumari thought in the same way. This simile is unique to Indian literature.
Tamil references: Puram 42, Malaipatukadam 51/53; Perumpanatrupatai line 427, Purpporul Venpa 11, Kamba Ramayana Kaiyatai ppatalam 15
pen painting

Kalidasa :
“Fortunately, you have set your heart on one truly worthy of you. But then where else would a great river flow except to the ocean? (Saku 3-13)

The daughters of the Kings of Maghada, Kosala and Kekaya obtained a husband (Dasaratha) for them who is a mighty warrior, just as the rivers, daughters of mountains, obtain the mighty ocean (as their husband) (Raghu 9-17)

Just as the bride loved the bridegroom worthy of her, so too did he love her for the Ganges did not leave the ocean, and the ocean too finds the greatest delight in tasting (the nectar of) her mouth (Kumara 8-16)

most-beautiful-cities-101
Beauty of the city is compared to woman

Sangam Tamil poet Nalvellaiyar compared the amorous thoughts to the flooded Ganges River in Natrinai 369. In can’t be a rare co incidence for a Tamil poet to compare the floods in Ganges to a woman’s feelings in the southern most part of India. They are well versed in Kalidasa. Otherwise the common men would not understand or appreciate this simile!

Tamil Poet Idaikatan of Puram verse 42 compares the rivers that eagerly flow into the sea to poets that come towards the Choza king Killivalavan.

Uruthirankannan, author of Perumpanatruppatai, says that like the rivers take all the things to the sea, kings come to you with their tributes (line 427)
Raghu.12-35,13-9, 13-58, 13-62,15-60 more references

13-10-08_217_CONFLUENCE_OF_INDUS_RIVER_N
Rivers go to seas, men go to kings or gods.

My earlier posts on Kalidasa
1.Did Kalidasa fly an Airplane? 12 Sept. 2014
2.Sea in Kalidasa and Tamil Literature
3.Ganges in Kalidasa and Sangam Tamil Works
4.Gem Stones in Kalidasa and Tamil Literature
5. Bird Migration in Kalidasa and Tamil Literature
6.Kalidasa’s Age:Tamil Works confirm 1st Century BC
7.Above articles in Tamil

contact swami_48@yahoo.com

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியத்தில் சிங்கம்!

Lion seems to be symbol of Pallava Dynasty
Pallava symbol lion in Mamallapuram (Narasimha Pallavan has lion in his name)

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1402; தேதி 10 நவம்பர், 2014.

நாம் எல்லோரும் சிறுவயதில் படித்த கதைகள் பஞ்ச தந்திரக் கதைகளும் ஈசாப் கதைகளும் ஆகும். சின்னச் சின்னக் கதைகளில் பறவைகளையும் மிருகங்களையும் கதாபாத்திரமாக வைத்து நமக்கு பல நீதிகளைப் புகட்டினர். இது எல்லாம் இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் சென்றது பலருக்கும் தெரியாது. உலகின் மிகப் பழமையான நூலான ரிக் வேதத்திலேயே இந்தக் கதைகளில் சில உவமை வடிவத்தில் இருக்கின்றன.

ஈசாப் என்ற கிரேக்க அடிமை, தான் கேட்ட கதைகளை எழுதிவைத்தார். இவர் கேட்ட கதைகளில் பல இந்தியர்களிடமிருந்து கேட்டவை என்பதை மயில் முதலிய பறவைகள் மூலம் அறியலாம். ஏனெனில் உலகம் முழுதும் மயில் என்னும் அதிசயப் பறவைகளை ஏற்றுமதி செய்தவர்கள் நாம் ஒருவரே. ஈசாப் வாழ்ந்த நாட்டில் மயில் கிடையாது. நிற்க.

nahapana newwwww

சிங்கம் பற்றிய சுவைமிகு விஷயங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1.ஜூலியஸ் சீசர், ஆக்டேவியஸ் சீசர் என்று பல மன்னர் பெயர்களை ரோமானிய வரலாற்றைப் படித்தவர்கள் அறிவர். இதில் உள்ள சீசர் என்பது கேசரி என்ற சம்ஸ்கிருத பெயரில் இருந்து வந்தது. கேச+அரி = மயிர் உடைய மிருகம். ஆண் சிங்கத்தின் பிடரி மயிர் காரணமாக கேசரி என்ற பெயர் உண்டாயிற்று.

2.ஏரியல்: ஏரியல் என்ற ஹீப்ரு பெயரில் உள்ள அரி என்பது சிங்கம் என்பது ஹீப்ரூ (எபிரேய) மொழி படித்தவர்கள் அறிவர்.

3.சங்க இலக்கியத்தில் அரி: சங்க இலக்கிய நூலான ஐங்குறு நூற்றில் கபிலர் பாடிய குறிஞ்சிப் பகுதியில் (265, 268) அரி என்ற சொல்லைக் காணலாம். இது வட மொழியில் சிங்கத்துக்கு உள்ள பெயர். சிங்கத்தை ஹரி என்பர். தமிழில் “ஹ” இல்லாததால் அது “அரி” ஆய்விட்டது. இது ஹீப்ரூ வரை சென்றுவிட்டது.
தமிழில் அரி என்ற சொல் பறை, கிணை ஆகியவற்றுடனும் பல இடங்களில் வருகிறது. ஆயினும் அந்த இடத்தில் சிங்கத்தின் பொருளை எழுதவில்ல. ஆனால் அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் டமார, முழவு கர்ஜனையுடன் சிங்க கர்ஜனை ஒப்பிடப்படுவதால் அரி + ஓசை என்ற இடமெல்லாம் சிங்க கர்ஜனை எனவே பொருள் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்

4. சிம்ஹ, சிம்ம: ரிக் வேதத்தில் மட்டும் சிங்கம் என்னும் சொல் கிட்டத்தட்ட 20 இடங்களில் வருகிறது. பிற்கால பிராமணங்கள் முதலியவற்றில் மேலும் பல இடங்களில் வருகிறது. இது போலவே அதர்வண, யஜூர் வேதங்களிலும் உள்ளன. சுருங்கச் சொல்லின், வேறு எந்த வன விலங்கையும் விட சிங்கமே அதிகம் இடம்பெறுகிறது.

(இருபதுக்கும் மேலான குறிப்புகளை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க)

5.இலங்கைக்கு வங்க நாட்டில் இருந்து குடியேறிய சிம்ம பாஹூவை வைத்து சிங்கள என்ற இனம் வந்ததும் அந்நாட்டுக் கொடியில் சிங்கம் இருப்பதும் அனைவரும் அறிந்ததே. ஈரானில் கோமெய்னி புரட்சி வெடிக்கும் முன், அந்நாட்டுக் கொடியில் இலங்கை போலவே வாள் ஏந்திய சிங்கம் இருந்தது. இந்தியாவின் தேசிய சின்னத்தில் சிங்கம் இருக்கிறது.

6.சிங்கபுரம் என்பதே சிங்கப்பூர் ஆனதாகச் சொல்லுவர். இன்னும் சிலர் ஸ்ருங்கபுரம் (கொம்பு போல நீண்ட பகுதி — என்பர். இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள். மலேய தீபகற்ப வரைபடத்தைப் பார்ப்போர்க்கு இது விளங்கும்).

7.இலங்கையில் கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதலே (சிம்மபாஹு—விஜயன்) சிங்கம் பிரபலமானது. ஆனால் இந்தியாவின் தென்பகுதியிலோ, தென் கிழக்காசிய நாடுகளிலோ இது கிடையாது. ஆயினும் சிற்பங்களிலும், படங்களிலும், இலக்கியங்களிலும் உண்டு.

yali

யாளி என்ற விநோத விலங்கு

8.யாளி, வ்யால= லியோ= லியாண்டர்
வ்யால/ யாளி என்ற ஒரு மிருகம் இந்துக் கோவில் தூண்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இப்போது இல்லாத மிருகம். சிங்கத்தை விட வலியது என்பர். நிறைய கிறிஸ்தவப் பெயர்கள் லியோ, லியாண்டர், லியார்னடோ என்பனவும் ஆங்கிலச் சொற்களான லயன் (சிங்கம்) லியோ (சிம்ம ராசி) முதலியனவும் யாளி, வ்யால என்பதில் இருந்து வந்தன. யாளி என்ற சொல்லை கண்ணாடியில் பார்த்தால் லியா என வரும் இவ்வகை சொற்களை கண்ணாடி உருவச் சொற்கள் என்பர். இப்படியும் வந்திருக்கலாம். அல்லது வ்யால என்னும் மிருகம் பெயர் லயன், லியோ என்றும் நேராகவும் வந்திருக்கலாம்.

9. இந்தியாவுக்குப் பாரதம் என்ற பெயர் ஏற்படக் காரணமானவன் இந்தியாவின் முதல் சக்ரவர்த்தியான பரதன் என்பதைப் பலரும் அறிவர். இந்தப் பரதன் சிங்கத்துடன் விளையாடுவான் அதனால் அவனுக்கு சர்வ தமனன் என்ற பெயரும் உண்டு. இதைப் பாரதியாரும் பாடுகிறார்:–

சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்
தட்டி விளையாடி – நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை.

iran flag

வேதத்தில் சிங்கக் கதைகள்

10.உலகில் கதை இலக்கியத்தை உருவாக்கியவர்கள் இந்தியர்களே. வேத, உபநிஷத, பிராமண, ஆரண்யக, இதிஹாச, புராணங்களில் பிராணிகளை வைத்துச் சொல்லப்படும் ஏராளமான நீதிக்கதைகள் உள்ளன. இவைகளில் பலவற்றை புத்த, சமண மத நூல்களிலும் காணலாம். பஞ்சதந்திரக் கதைகளும் ஹிதோபதேசக் கதைகளும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவின. இன்று உலகம் முழுதும் பரவிய ஆங்கில ஹாரிபாட்டர் கதைக்கான “கரு” எல்லாம் விக்ரமாத்தித்தன் வேதாளக் கதைகளிலும், கதைக்கடல் (கதாசரித்சாகரம்) என்னும் வடமொழி நூல்களிலும் உள்ளன.

11.ரிக்வேதத்தில் (கி.மு1700க்கு முன்) எல்லா மண்டலங்களிலும் சிங்கம் பற்றிய குறிப்புகள் இருப்பதால் ஒரு காலத்தில் சரஸ்வதி நதிதீரம் முதல் கங்கைச் சமவெளி வரை சிங்கம் உலவி இருக்கவேண்டும். இப்பொழுது குஜராத் மாநிலக் காடுகளில் மட்டுமே சிங்கம் உளது. ஆண்டாள் திருப்பாவையில் சிங்கம் பற்றி தத்ரூபமாகப் பாடியிருப்பது பற்றி எனது முந்தைய கட்டுரையில் காண்க.

12..ரிக் வேதத்தில் சிங்கம் பற்றி வரும் இரண்டு உவமைகள் அக்காலத்திலேயே பஞ்சதந்திரக் கதைகள் போன்ற கதைகள் இருந்ததற்குச் சான்று பகரும் (RV 10-28-4 and 7-18-17).
சுதாசன் என்ற மன்னனுக்கு இந்திரன் வழங்கிய உதவியால் அவன் மகத்தான வெற்றி பெற்றன். பல மன்னர்கள் எதிர்த்த பத்துராஜா யுத்தத்தில் அவன் வெற்றி பெற்றது “சிங்கத்தை ஆடு தோற்கடித்தது” போல இருக்கிறது என்று ஒரு ரிஷி பாடுகிறார். வேறு ஒரு இடத்தில் “நரி சிங்கத்தைத் தோற்கடித்தால் அது அதிசயமன்றோ!” என்று இன்னொரு புலவர் வியக்கிறார். இவை எல்லாம் கதைக்கான கருக்கள்.

13.வடமேற்கு இந்தியா முழுதும் சிங்கம் சீறிப்பாய்ந்த போதும், சிந்து சமவெளியில் ஒரு சிங்க முத்திரையும் இல்லை. இதே போல குதிரைப் படமும் பசு மாட்டின் படமும் இல்லை!! காளை மாட்டை வரைந்த சிந்துவெளியான், பசுமாட்டை மறந்தது ஏனோ!— இது ஒரு பெரிய மர்மம். ஒருவேளை பசு, அஸ்வமேத யாகக் குதிரை இவைகளை முத்திரையில் பொறிப்பது அபசாரம் என்று கருதிவிட்டானோ!!!

LAKSHMI-NARASIMHA_statue_at_Hampi
Narasimha from Hampi (Picture from Wikipedia)

14.இந்துக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்தது சிங்கம். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று நர+சிம்ம அவதாரம்= பாதி மனிதன்+பாதி சிங்கம்!

15.சிம்மாசனம் என்னும் சொல் ,இந்து மத தோத்திரங்களிலும், கதைகளிலும் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றது. இந்தக் கருத்தை உலகிற்கு தந்தவனும் இந்துவே. சிங்கத்தைக் காட்டு ராஜாவாக உயர்த்தியதும் நம்மவரே என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து தெரிகிறது. விக்ரமாதித்தன் சிம்மாசனம், ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா – என்ற சம்ஸ்கிருத மரபுச் சொற்றொடர்கள் இதற்குச் சான்று.

16.பாபர், ஹைதர், ஷேர் (ஷா), சிங், சிம்ம, கேசரி – முதலிய மன்னர் பட்டங்கள் அனைத்தும் சிங்கம் எனப் பொருள்படும். முஸ்லீம் மன்னர்களும் கூட நம்மிடமிருந்து அவ் வழக்கத்தைக் கற்றனர்.

17.சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த சிம்மன் தனக்குப் பிறகு எல்லா சீக்கியர்களும் சிங் (கம்) என்ற பெயரைச் சூடவேண்டும் என்று சொன்னதால் சீக்கியர் அனைவரும் சிங் என்ற பின்னொட்டுப் பெயர் வைத்துள்ளனர். மற்ற வட இந்திய ஜாதியினரும் சிங் என்று பெயர் வைப்பர். ஆகையால் எல்லா சிங் – குகளும் சீக்கியரல்ல.

18.ரிக்வேதத்தில் அக்னி, ருத்ரன் ஆகியோரை சிங்கத்துடன் ஒப்பிட்டுப் பாடிய துதிகள் உள. சிம்ம கர்ஜனை, இடி முழக்கம் போன்ற ஒலியுடைய முரசுடன் ஒப்பிடப்படுகின்றது சிங்க வேட்டை பற்றிய வருணனைகளும் இருக்கின்றன. பெண் சிங்கத்தின் வலிமையையும் வீரத்தையும் பாராட்டும் பாடல்களும் உள.
simhasanam
Lion Throne (Simha Asanam) at Louvre Museum, France;photo by london swaminathan.

19.உலகின் முதல் அகராதி- நிகண்டு ஆன அமரகோசம் வடமொழியில் சிங்கத்துக்குரிய பத்து சொற்களைப் பட்டியலிடுகிறது:-

சிங்க, ஹரி, கேசரி, ஹர்யாக்ஷ, ம்ருகேந்த்த்ர, பஞ்சாஸ்ய, ம்ருகத்ருஷ்டி, ம்ருகரிபு, ம்ருருகச்ன, கண்டிரவோ எனப் பல பெயர்களைத் தருகின்றது.

20.இலங்கைத் தமிழர் பெயர்களில் புலிகளை விட பாலசிங்கம், விக்ரமசிங்கம் போன்ற சிங்கம் பெயர்களே அதிகம்!!

srilankan coins
–சுபம்–

contact swami_48@yahoo.com

Vedic Lion around the World!

simhasanam
Lion Throne at Louvre Museum, France.

Research paper written by London Swaminathan
Research article No.1401; Dated 9th November 2014.

The Story of Lion King is found in the Vedas (RV 10-28-4 and 7-18-17)!!.Lion maintains a prominent place in the Vedic literature. No other literature has so many references to the lion. We find the origin of Panchatantra stories in the Rig Veda. Aesop and other fable writers are indebted to Rig Veda and Panchatantra.

Sanskrit words for LION are used all over the world. Kings who ruled India had lion as suffix or surnames. Even Roman kings had this Sanskrit title. The Lion throne concept was borrowed from India.

Ceasar=Kesari
Kesari is the Sanskrit word for lion which was used by all the Roman kings with the title Caesar.

yali

Yali in Hindu temples. English word Leo is derived from Yali.

Ariel = Ari
Hari is a Sanskrit word for lion. Hebrew and Tamil use this word as Ari. In Tamil Ja, Ha, Sha, SH, S sounds don’t exist. So they are Tamilized. Ari is used in Sangam literature (Ainkuru Nuru 265, 268) and Hebrew literature as ‘Ariel’ etc.

Muslim Kings had names such as Babar, Haidar, Asad and Sher which meant lion. These are NOT cognates of Sanskrit. But the idea of having it as a title was borrowed from India.

Sing = Simha (R.V.1-64-8; 1-95-5; 3- 2-11; 3-9-4; 3-26-5; 4-16-14; 5-83-3)
Simha is the most common Sanskrit word for the lion. This occurs more times than any other animal name. All Punjabi Sikhs have it as surname after their last and Tenth Guru, Guru Govinda Sing, made it a surname.
This comes from the word Simha.

Sri Lankans had it from Sixth Century BCE from their forefather Simhabahu. Sinhalese and many more words are derived from this. Iran had it on its flag before the Islamic revolution.
iran flag
Old Flag of Iran

Lion=Leo=Yali=Vyala

Words such as leo, leander, learnando, lion etc. came for the lion like animal Vyala. In Tamil it is called ‘Yali’ and Leo may be the mirror image of the Tamil word or derivative of Vyala. (Vyala=Yali=Liya=Leo)
Concept of Lion Throne (Simha + Asana= Simhasana) also spread to various parts of the world from India. It is found in most of the Sanskrit books. Lion as the king of the forest is in Panchatantra stories, for which Aesop is indebted. Sanskrit proverbs such as Swayameva Mrigendratha and Vikramaditya Simasana also praise the lion. In all religious hymns god is said to have seated on the Lion Throne. So this is not an imported concept.

Lion seems to be symbol of Pallava Dynasty

Pallavas had lion as their emblem

Lion in the Vedas & Origin of Fables

Rig Veda, the oldest book in the world, has got more than fifteen references to the lion. It is used in beautiful similes which show that it’s a well known animal. Since almost all the Mandalas use lion, it must have lived in the Sarasvati, Sindhu, Gangetic plains of India for long. Now it is found only in Gujarat. Atharva Veda also has got many references.
The roaring of the lion and the
Thundering noise of lion are described in the Vedas.

In Tamil Sangam literature lot of references to drum sound has the word lion (Ari in Tamil) before it. But for want of evidence the commentators left it as drum sound. It must be actually roaring sound like a lion which is in the Rig Veda and Atharva Veda.

Lion hunting and the courage of lioness are also described in the Vedas.
Rudra is compared to a lion
Agni is compared to a lion

That a jackal should defeat the lion is spoken of as a marvel. Here we see the origin of fables. Fables had its origin in India.

The aid given to Sudas by Indra against the vast host of enemies is compared to the defeat of a lioness by a ram. Here we see the origin of animal fables.

Apart from the references already given under Simha, following are other references to the lions:
R.V.1-54-2; 10-160-2; 2-33-11; 3-9-4; 10-28-4; 1-174-3; 10-28-10; 5-74-4; 5-15-3; 7-18-7
Yajuveda and Brahmana literature have many more references.
It is a mystery that Indus valley had no seals with cow or horse or lion!Hundreds of seals with bull are available, but no cow!!!

srilankan coins
Sri Lankan coins with lion.

Sanskrit literature described heroes as Bull, Lion or Tiger. But among the wild animals, lion gets more references than tiger. The reason being tiger kills any animal that it sees. Lion kills only for its food when necessary. A lot of stories in ancient literature show that lions are attached to humans and become harmless. King Bharata who gave the name Bharata to India was said to have played with animals as a young boy. So he was called Sarva damanan.

Amarakosa , the oldest dictionary, dated to fifth century CE, gives the following Sanskrit words for lion:
Simha, Mrgendra (King of Animals), Panchasyo, Kesari, Hari, Haryaksha, Mrgaripu, Kandiravo, Mrgadrushti, Mrgasanah.

India and Sri Lanka have lion in its national emblem and flag. Hindus worship Nara Simha (man-lion form) avatar of Vishnu. There are famous temples in South India for Narasimha who killed the demon king Hiranyakasipu just to save the demon’s son.
nahapana newwwww
Nahapana coins.

Contact swami_48@yahoo.com