சுமேரு, குமேரு, பாமேரு, மேரு

sumeru_parvat9742

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1400; தேதி 9 நவம்பர், 2014.

சுமேரியா/ சுமேரு என்னும் நாகரீகம் தழைத்த இடம் இராக்
பாமீர்/ பாமேரு என்னும் பீடபூமி இருப்பது தாஜ்கிஸ்தான், கிர்கிஸ்தான் பகுதி
குமேரு என்பது தென் துருவம்; குமரி என்பது தென் கோடி மலை, க்மேர் என்பவர் கம்போடியர்
மேரு என்பது இந்துக்களின் புனித மலை.

இவை எல்லாவற்றிலும் மேரு இருப்பதன் மர்மம் என்ன?

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 12-10-1932ல் சென்னையில் நடத்திய சொற்பொழிவில் சொல்கிறார்:
“ வடக்கே உள்ளதற்கு ஸுமேரு என்று பெயர். தெற்கே உள்ளதற்கு குமேரு என்று பெயர். ஸூமேருவிலிருந்து குமேரு வரை ஏழு ஸமுத்ரங்களும் த்வீபங்களும் இருக்கின்றன என்று காணப்படுகிறது. இப்பொழுது உள்ளாற்றைப் பார்த்தால் அது பொய் என்று தோற்றுகிறது. ஏழு த்வீபங்களைக் காணோம், ஏழு ஸமுத்ரங்களும் இல்லை. இதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கலாம்.”
இப்படிச் சொல்லிவிட்டு பின்னர் பூமியின் அச்சு ஒரு காலத்தில் துருவ நட்சத்திரத்துக்கு நேராக இருந்ததும் பின்னர் அது சிறிது சிறிதாக நகர்ந்து இப்போழுது தள்ளி இருக்கிறது என்றும் அது நேராக இருந்த காலத்து இருந்த நிலையையே புராணங்கள் கூறுவதகாவும் விளக்குகிறார். ஆடிவிட்டு நிற்கப் போகும் பம்பரம் போல பூமி தலை சாய்ந்து சுற்றுவதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவ நட்சத்திரம் மாறுவதும் விஞ்ஞான உண்மை. நிற்க.

((காண்க: —ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற்பாகம், பக்கம்75, ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம், சென்னை, 1957, வில ரூ3.))

sumermap2 in modern Iraq

நாம் காண வந்த விஷயம் குமேரு. அதற்காகத்தான் காஞ்சிப் பெரியவரின் உரையை மேற்கோள் காட்டினேன். இதைத்தான் நாம் குமரிக் கோடு என்கிறாம். அதாவது ஒரு காலத்தில் குமரி மலை (கோடு) என்று ஒன்று இருந்ததும் அது சுனாமி தாக்குதலில் கடலுக்குள் சென்றதும் தமிழ் இலக்கியம் வாயிலாக நாம் அறிகிறோம். குமரி என்பது குமேருவில் இருந்து வந்திருக்கலாம். அல்லது தென் துருவம் குமேரு என்றும் அது போல உள்ள மலை குமரிக்கோடு என்றும் வந்திருக்கலாம்.

கலைக் களஞ்சியங்களைப் படிப்போருக்கு ஒரு விஷயம் தெரியும் — க்மேர் எனப்படும் கம்போடிய இனம், சுமேரிய இனம் ஆகியவற்றின் மூலமும் இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இதற்கு விளக்கமே கிடைக்கவில்லை. காஞ்சிப் பெரியவர் சொல்வதன் அடிப்படையில் நான் சொல்வது குமரி என்பதும் க்மேர் என்பதும் குமேருவில் பிறந்த சொற்கள் என்பதே!

mount-meru
Meru in Kenya, East Africa

க்மேர் என்னும் இனம் கம்போடியாவில் ஆட்சி புரிந்தது — இன்றும் இருக்கிறது. அவர்கள் காம்போஜர்கள். அதை இப்பொழுது கம்போடியா என்போம். இந்த இனம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு காலத்தில் இருந்ததை வடமொழி புராண, இதிஹாசங்கள் மூலம் அறிகிறோம். அவர்கள் 1500 ஆண்டுகளுக்கு தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்துப் பண்பாட்டைப் பின்பற்றினர். அவர்கள் குமரி வழியாகப் போனதன் நினைவாக க்மேர் என்ற பெயர் நிலைத்திருக்கலாம் .அகத்தியர் கடல் கடந்து இவர்களைக்கொண்டு சென்றதாலோ அல்லது அவர்களுக்கு நாகரீகத்தைக் கற்பித்ததாலோ இன்றுவரை அகத்தியர் சிலைகள் அந்த நாடுகள் முழுதும் இருப்பதையும் நாம் அறிவோம்.

காம்போஜர்கள் கட்டிய உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் என்னும் இந்துக் கோவில் மேருமலை வடிவத்தில் அமைக்கப்படதையும் அதைத் தொடர்ந்து இந்தோநேசியாவில் போரொபுதூரில் மேருமலை வடிவத்தில் கோவில் கட்டப்பட்டதையும் உலக மக்கள் அறிவர். இத்தகையோர் க்மேர்– குமேர்—குமேரு – மேரு என்று பெயர் கொண்டதில் வியப்பதற்கு ஏதேனும் உண்டோ?

pameru
Pamir– Roof of the World

இனி சுமேரியாவைக் கண்போம். சு+மேரு என்பதன் பொருளும் யாருக்கும் தெரியவில்லை. அருகில் வசித்த அக்கடியர்கள் இவர்களை சுமேரம் என்று குறித்தனர். ஆனால் சுமேரியர்கள் யார்? அவர் மெசபொடோமியாவுக்கு வெளியே இருந்துவந்த வந்தேறு குடிமக்களா? என்று அறிஞர் உலகம் இன்றும் காரசாரமாக விவாதித்து வருவதாக லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட “அண்மைக் கிழக்கு நாட்டு அகராதி” கூறும். அந்த நூலைப் பன்முறை படித்த நான் கூறுவது, “ சுமேரியர்கள் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து குடியேறியவர்களே என்பதாகும். அல்லது ஒரு பிரிவு மக்கள் இந்தியக் குடியேறிகளாக இருக்கலாம்.

சுமேரியர்களுக்கு சப்த ஸ்வரங்களைக் கற்பித்தவர்கள் அக்கடியர்கள் என்பதும் மற்ற எல்லா சங்கீத விஷயங்களையும் கற்பித்தவர்கள் ஹிட்டைட்ஸ் என்பதும், அந்த ஹிட்டைட்ஸ் என்பவர்கள் சம்ஸ்கிருத மொழியுடன் தொடர்புடைய மொழி பேசியோர் என்பதும் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி தரும் தகவல் ஆகும். ஆகவே, நான் செய்த சொல் ஆராய்ச்சியில் தெரிவதும் அவர்கள் இந்தியத் தொடர்புடைய ஒரு பழங்குடி என்பதேயாகும். இன்ன பிற காரணங்களால் சுமேரியா என்பது சு+மேரு என்று கொள்வதே சாலப் பொருத்தம்.

maha-meru-yantra
Sri Chakra and Meru: Hindu Goddess Worship

இனி பாமீர் மலைத் தொடரைக் காண்போம். பாமேரு என்பதன் சிதைந்த வடிவே பா மீர் என்பதாகும். அராபிய, உருது மொழிகளில் மீர் என்னும் அடைமொழி காட்டும் பொருள்: உயர்ந்தவன், சிறந்தவன், மதிப்பு மிக்கவன். இதனால் முஸ்லீம் பெயர்களில் மீர் காசிம், மீர் முகமது முதலிய பல பெயர்களைக் காண்கிறோம். இந்த “மீர்” பெயர்களுக்குப் பின் வருவதும் உண்டு. ஆக உலகின் கூரை என்றழைக்கப்படும் மிக உயர்ந்த சிகரத்தை பா+மேரு என்று அழைத்ததில் வியப்பில்லை. பா என்னும் முன் ஒட்டுடன் பல வடமொழிச் சொற்கள் பயிலப்படுகின்றன. எ.கா. பாமதி.

ஆகவே குமேரு, சுமேரு, பாமேரு, மேரு என்பனவெல்லாம் நாம் உலகிகு வழங்கிய கொடையே. இமய மலையை பிற்காலத்தில் நாம் மேரு என்று சொன்னதும் வடதுருவச் சிறப்பால் அன்றோ! இந்து சமய தேவி உபாசனையில் ஸ்ரீசக்ரமும் அதன் மத்தியில் உயர்ந்து நிற்கும் மேருவும் போற்றப்படுவதும் இதனால் அன்றோ.

khmer new year
Khmer people celebrating New Year

“திருநெல்வேலி ஐயரின் வடதுருவ யாத்திரை” — என்ற கட்டுரையில் வடதுருவச் சிறப்பை விளக்கி இருக்கிறார். மேருவில் ஆறுமாதம் பகல், ஆறுமாதம் இரவு என்ற புராணக் குறிப்புகள் பற்றி அவர் விளக்குகிறார்.

-சுபம்–

contact swami_48@yahoo.com

இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள்

Samudra manthan
சமுத்ர மந்தனம், பாங்காக், தாய்லாந்து

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1399; தேதி 9 நவம்பர், 2014.

வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டவும் மதத்தைப் பரப்பவும் இந்தியாவுக்குள் நுழைந்தனர் —– பைபிளிலும் குரானிலும் செய்ய பயப்படும் ஆராய்ச்சிகளை, துணிந்து இந்துமத நூல்களில் மட்டும் செய்தனர் —– “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்ற பழமொழிக்கு இணங்க இந்துக்கள் என்னும் இளிச்சவாயன்களைக் கண்டனர். ரிக்வேதம் பற்றியும், சிவலிங்கம் பற்றியும் கைக்கு வந்த படியும் வாய்க்கு வந்தபடியும் எழுதித் தள்ளினர். “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி: என்ற பழமொழியும், இந்துக்கள் விஷயத்தில் உண்மை ஆயிற்று—– அவர்கள் குனியக் குனியக் குட்டு வாங்கினார்கள். “இந்தியர்கள் எல்லாம் ஓரினம் அல்ல; அவர்கள் ஆரியர்கள், திராவிடர்கள், கிராடர்கள், முண்டாக்கள் என்னும் நான்கு பிரிவினர்” — என்று சொல்லி வெள்ளைக் காரர்கள், கதைத்தனர்; நகைத்தனர்.

பட்டத்துக்காகவும் பதவிக்காகவும் நம்மூர் அறிஞர்கள் “ஆமாம்சாமி” போட்டனர். இன்னும் சிலர், பிராமணர்களின் மேலாதிக்கததையும் அடாவடித்தனத்தையும் பொறுக்கமாட்டாமல் வெள்ளைக்கரன் சொன்னது உண்மையே என்று எண்ணி கட்சி துவக்கினர். இப்போது தூசிப் புயல் அடங்கி புதிய சிந்தனை மலர்ந்து வருகிறது.

“அட, வெள்ளைக்காரன் சொன்னது இருக்கட்டும். வெள்ளைகாரன் காட்டுமிராண்டியாகத் திரிந்த நாட்களுக்கு முன்னரே நம்மூர் தமிழ் ,வடமொழி இலக்கியங்கள், நாகரீகத்துடன் எழுதப்பட்டு விட்டனவே, அவை என்ன சொல்கின்றன?” என்று பார்ப்போம் என்று பார்க்கத் துவங்கிவிட்டனர்.

அரக்கர்கள், அசுரர்கள், இயக்கர்கள், தைத்யர், தானவர் அனைவரும் வானவர் புதல்வர். எல்லோரும் ரிஷி முனிவர்கள் வழி வந்தவர்கள் என்று நம் இலக்கியங்கள் பகர்வதைக் கண்டு கண் திறந்தனர்— விழிப்புற்றனர்.

பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் பாங்குடைய வெளி நாட்டுக்கார அறிஞர்கள் சொன்னதெல்லாம் பொய் என்று நகச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
devasura

ஆரியனுக்கு கூரிய, வீரிய, நேரிய, பாரிய, சீரிய மூக்கு, திராவிடனுக்கு போண்டா மூக்கு என்று வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் இப்பொழுது குப்பைத் தொட்டியில் விழுந்து வருகின்றன. விழித் தெழுந்த தமிழன் கேட்கிறான்:–

விஷ்ணு என்பவன் கறுப்பன்
வியாசன் என்பவன் கறுப்பன்
இராமன் என்பவன் கறுப்பன்
கிருஷ்ணன் என்பவன் கறுப்பன்
அகத்தியன் என்பவன் கறுப்பன்
தீர்க்கதமஸ் என்பவன் கறுப்பன்
காளி என்பவள் கறுப்பாயீ
திரவுபதி என்பவள் கறுப்பாயீ
எல்லாம் ஒரே கறுப்பு மயம்!!

எங்கள் ஊர் திராவிடக் கழக சட்டைகளில் கூட இவ்வளவு கறுப்பு கண்டதில்லை. இந்துக்கள் என்றாலே கறுப்பண சாமி மதம் என்று சொல்லிவிடலாம் போல இருக்கிறதே என்று திருப்பித் தாக்கத் துவங்கி விட்டனர். போண்டா மூக்கு அகத்தியனுடன் படுக்க வரமட்டேன் என்று லோபாமுத்திரை போட்ட கண்டிஷன் ( நிபந்தனை ) எல்லோருக்கும் தெரியும். மஹா அசிங்கமான உடலுடைய கறுப்பு வியாசனைக் கண்ட பெண்களுக்கு பிறந்த அங்கஹீன திருதராஷ்ட்ரன், பாண்டு கதையும் நம்க்குத் தெரியும். அகத்தியனும், வியாசனும் அவ்வளவு கறுப்பு, அவ்வளவு அவலட்சணம். ஆனால் நாம் வணங்கும் கடவுளர் – மாமுனிவர்கள் அவர்களே!

18 குடி மக்களை துவாரகையில் இருந்து அழைத்து வந்து தமிழுக்கு இலக்கணம் செய்தவன் அகத்தியன் ((தொல்காப்பியம், புறம் 201 நச்சி. உரை , புறம். கடவுள் வாழ்த்து காண்க)). “ தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்” – என்று கம்பனால் புகழப்பட்டான். தென் கிழக்காசிய நாடுகள் அனைத்துக்கும் தமிழனைக் கடல் கடந்து அழைத்துச் சென்றவன் அகத்தியன். வியாசரோ உலக மகா சாதனை செய்தார். கங்கு கரை காண முடியாத வேதங்களைப் பகுத்தார். பல லட்சம் பாக்களைக் கொண்ட புராணங்களைத் தொகுத்தார். உலகிலேயே மிக நீண்ட மதப் புத்தகமான மஹாபரதத்தை எழுதிச் சலித்தார்; ஒரு சவாலும் விட்டார். இதில் இல்லாத பொருள் உலகில் இல்லை என்றார். இன்று வரை அது முற்றிலும் உண்மை.

churning3

இந்து மஹா ஜனங்களோவெனில் விழித்தெழுந்து நேற்று கூட அமெரிக்க பெண்மணி வெண்டி டோனேகர் எழுதிய அவதூறு புத்தகததை பெங்குவின் நிறுவனத்தினரை வாபஸ் வாங்க வைத்துவீட்டனர். இந்துக்கள் விழித்தெழுந்ததைக் கண்ட பெங்குவின் புத்தக நிறுவனம் இப்பொழுது நடு நடுங்குகிறது. இவர்களும் மாற்று மதத்தினர் போல பொங்கி எழுந்து நமது உடைமைகளைத் தீக்கிரையாக்கிவிடுவர் என்று அஞ்சி நடுங்குகின்றனர்.

மஹாமாயா என்பவள் மகமாயீ
காத்யாயனி என்பவள் காத்தாயீ
மூகாம்பிகை என்பவள் மூக்காயீ
ராகா தேவி என்பவள் ராக்காயீ

அடப் பாவி மகனே!! எங்களிடம் பொய் சொல்லி இவை எல்லாம் திராவிட தெய்வம்,தமிழர்களின் கிராமீய தெய்வங்கள், வெள்ளைத்தோல் ஆரியன் வணங்குவதெலாம் வேறு தெய்வம் என்று சொன்னாயே என்று “அது”களைக் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர் இந்துக்கள்.

வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி!!

மாட்சி தீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்

என்ற பாரதி வாக்குப்படி இந்துக்களும் சீறி எழத் துவங்கிவிட்டனர்.

வெள்ளைத் தோல் வெளி நாட்டினன் வந்து ஆரிய—திராவிட விஷ விதை தூவுவதற்கு முன், புற நானூற்றில் (கடவுள் வாழ்த்து மற்றும் புறம் 201), இன்ன பிற சங்க இலக்கிய நூல்கள் ஆகியவற்றிலும் ராமாயண மஹா பாரத நூல்களிலும் என்னதான் சொல்லி இருக்கிறது என்று பார்த்தால் அங்கு ஆரிய திராவிட என்னும் சொற்கள் இனத் துவேஷ பொருளில் எங்கேயுமே காணோம்.
பாரதி என்னும் தூய தமிழ்ப் புலவன் – சொற்தேரின் சாரதி —தனது பாடல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் “ஆரிய” என்ற சொல்லை எந்த நற்பொருளில் பயன் படுத்தினானோ அதே பொருளில்தான் புற நானூற்றுப் பதிற்றுபத்துப் புலவர்களும் பயன்படுத்தினர் எனக் கண்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.
நம்முடைய இதிஹாச, புராண செந்தமிழ் பைந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் செப்புவது யாதெனின், லோகவாசிகள் 18 கணத்தினர்.

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் கலைக் களஞ்சியம்) தரும் பட்டியல்:

அமரர்
சித்தர்
அசுரர்
தைத்தியர்
கருடர்
கின்னரர்
நிருதர்
கிம்புருடர்
கந்தர்வர்
இயக்கர் (யக்ஷர்)
விஞ்ஞையர் (வித்யாதரர்)
பூதர்
பைசாசர்
அந்தரர்
முனிவர்
உரகர்
ஆகாயவாசியர்
போகபூமியர் — (பிங்கலம்)

இந்த பிங்கலந்தை நிகண்டு கூறும் செய்தி பல பொருள் உடைத்து. சிலர் பூலோக வாசிகள்; சிலர் மேல் லோக வாசிகள். சிலர் காற்றில் சஞ்சரிப்போர். அவர்களை திரிகூட ராசப்ப கவிராயர், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் போன்றோர் வானில் கண்டு அழகுபட தெள்ளு தமிழில் அள்ளித் தெளித்திருக்கின்றனர்.

Assurbanipal_op_jacht
அஸீரிய மன்னன் அசுர பானிபால்

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
கமன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பார்
தேன் அருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

சித்தர்கள் ஆகாய மார்க்கமாக வந்து அருள் புரிவர். இதுபோல பல விஷயங்கள் 18 கணங்களில் உள.
18 கணங்களையும் பொதுவான குழுக்களாகவும் பிரிப்பர்:
1.அமரர், சித்தர், கிம்புருடர், கந்தர்வர், விஞ்ஞையர் (வித்யாதரர்), ஆகாயவாசியர், போகபூமியர் , முனிவர், கின்னரர்
2.இயக்கர் (யக்ஷர்), நாகர்( உரகர்), கருடர்
3.அசுரர், தைத்தியர், பூதர், பசாசர், நிருதர் (ராக்ஷசர்)
இந்தப் பட்டியல் சில மாறுதல்களுடன் ஏனைய நூல்களில் இடம்பெறும்.

எனது முந்தைய கட்டுரைகளில் மேல் விவரம் காண்க.
எனது முந்தைய கட்டுரைகள்:
அரக்கர்கள்,அசுரர்கள் யார்? (நவம்பர் 7, 2014)
அசுரர்கள், அரக்கர்கள் அகராதி (அக்டோபர் 23, 2014)
திராவிடர்கள் யார்?
அகத்தியரை நியூசிலாந்து மக்கள் வணங்குவது ஏன்?

இந்தியாவில் இருந்து அசீரீயா, பாரசீகம் (ஈரான்) முதலிய நாடுகளுக்குச் சென்ற வேத கால இந்துக்களில் ஒரு பிரிவினர் தங்களை அசுரர் என்று அழைத்துக் கொண்டனர். ரிக்வேதத்தில் இந்திரன், அக்னி, வருணன் என்போர் அசுரன் என்று போற்றப்படுகின்றனர். பிற்காலத்தில் பாரசீகம் சென்ற கோஷ்டியால் இப்பெயர் பொலிவிழந்தது. அவர்கள் வருணன் போன்ற வேத கால தெய்வங்களை அசுரன் என்று போற்றினர். சௌராஸ்ட்ரத்தில் (குஜராத்) இருந்து சென்ற சௌரஷ்ட்ரர் (ஜொராஷ்ட்ரர்) என்ற பெயரில் ஒரு மதமும் துவங்கினர். அஸீரிய மன்னர்கள் அசுர என்ற பெயரை தங்கள் பட்டங்களில் சேர்த்துக் கொண்டனர்.

–சுபம்–

SuMeru, KuMeru, PaMeru,Meru

pameru
(Pamir (Pa Meru Mountains)

Research paper written by London Swaminathan
Research article No.1398; Dated 8th November 2014.

Sumeru is Iraq; old Mesopotamia
Kumeru is South Pole, Kumari in South India and Khmer in Cambodia
Pameru is Pamir, the roof of the world in Tazkistan, Kyrgystan, Afghanistan
Meru is North Pole and Mountain Peak in Kenya; Himalayas in modern times

I am just developing a theme on the basis of Kanchi Paramacharya Swamikal’s lecture in Chennai in 1932. Kanchi Paramacharya (1894 -1994) was the Shankaracharya of Kamakoti Mutt. His Madras lectures were famous and brought out in book form in several editions. On 12th October 1932, he was talking on the topic “Our Religion”. In his scholarly exposition, he said that our Puranas explain that North pole is Su Meru and South Pole is Ku Meru and in between there are seven oceans and seven continents. But today we don’t see such a division because it was the position seen millions of years ago. Then he explained how the earth pole is tilted and how the pole star changes during thousands of years.

mount-meru
Mount Meru in Kenya, Africa

Now look at the words Sumeria, Pamir Mountains, Khmer civilization of Cambodia and Kanyakumari of South India. All these have Meru in their names which mean a Peak, a High place, a Mountain etc.
Meru becomes Medu (high land) in Tamil. I have already explained in one of my posts that R=L=D are interchangeable in most of the names we know.

Kumari in South India is the land’s Southern most point today. But thousands of years ago it was a mountain area which went into the sea.Tamil literature mentioned it in at least two places. There they referred Kumari only as a mountain ( Kumari Kodu in Tamil). It may be Ku+Meru. The people might have migrated to different places and named them after Kumari. We see Comoros islands in Indian Ocean and Khmer in Cambodia.

If you search for the origin of the words Khmer and Sumer, you will draw blank. There is no origin for Sumer, Khmer and Kumari. At least Kanchi Shakaracharya’s 1932 talk explained Kumeru. But he did not elaborate on this and he never said Kumeru is Kumari. I only guess that Tamils might have named it Kumari after the South pole Ku Meru.

sumermap2 in modern Iraq
Sumer in Iraq

In the absence of logical explanation for the Khmer race or Khmer Kingdom, I guess that is also based on Ku+Meru. There is no need to explain Khmer’s Hindu origin. Kambojas were living in the North West part of India long ago and they migrated to different places. The Sanskrit word Kamboja (Camboja=Cambodia) and Meru like Angkhor Wat and Borobudur (Java in Indonesia) temples are self explanatory.

Now look at Sumeria. Again no encyclopaedia gives the origin of the word. Sumerum was the term given by Akkadians according to the “Dictionary of the Ancient Near East” published by the British museum, London; it adds, “However it has not prevented violent scholarly debates in modern times about the possible origins outside Mesopotamia of a Sumerian race who allegedly entered the area as immigrants”.

After going through the Dictionary several times I strongly believe that the Sumerians migrated from some parts of India. If we study the music in ancient Sumer we can see the Sapta swara (seven notes) contribution of Akkadians and all other music things from the Hittiltes. Scholarly world knew that Kassites and Hittites spoke a language closer to Sanskrit family.

maha-meru-yantra
Maha Meru in Sri Chakra of the Hindus

Hindus who migrated to Mesopotamia might have named it Su+Meru. The term occurs for the first time in Taitriya Aranyaka. English people who migrated to Australia, Canada and United states 200 years ago named all the new places after their places of origin. Just to avoid confusion they added ‘NEW’ before the place names (Eg. New South Wales, New England). Tamils who migrated to Northern Sri Lanka named several places after Tamil towns in Tamil Nadu. All the Sri Lankan rivers are given Ganga as a suffix. In the same way Hindus named their new land Su+Meru.

The peak of the tallest mountain in East Africa is also called Meru (Kenya). Meroe is also a known place name in Kushite civilization. When we have a bird’s eye view from top we know that all these civilizations were helped by the Hindus

sumeru_parvat9742
Even Kailash is consiered meru in modern days

Pameru= Pa+Mir
Mir in Arabic and Urdu means high, exalted, honourable which is used as a suffix or prefix in many place names and peoples’ names. Pamir is called the roof of the world. No wonder they called it Meru (Pa+Meru). Pa is a Sanskrit prefix which is used in the book title Pamathy. The nearby mountain in China is called Tien Shan (Deva Achala). It means celestial mountains in Chinese.

So I believe that these Pamir Mountains, Khmer culture, Sumerian civilization and Tamil Kumari mountains (which went under the sea long ago according to Tamil literature) share the word Meru which means high place or a tall mountain.

In the Hindu religious literature Meru has geographical, symbolical, ritual and mythical meanings (John Woodroffe and many others have explained it).

Tamil Reference book :– Sri Jagaguruvin Upadeasangal, First Part, page 75, Kamakoti Kosasthanam, Chennai, 1957, Rs.3.

contact swami_48@yahoo.com

மணமகளே, மணமகளே வா,வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!!

Griha-Pravesh
Hindu Bride entering the house with her right foot stepping first

மணமகளே, மணமகளே வா,வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1397; தேதி 8 நவம்பர், 2014.

தமிழ்நாட்டில் திருமணப் பந்தல்களில் அடிக்கடி ஒலிக்கும் தமிழ் திரைப்படப் பாடல் “மணமகளே, மணமகளே வா வா! உன் வலது காலை எடுத்து வைத்து வா வா!!” — ஏன் வலது காலை எடுத்து வைக்க வேண்டும். இடது கால் கூடாதா?

உலகம் முழுதும் வலதுசாரிகளுக்கு கொஞ்சம் மதிப்பு அதிகம். இந்தக் கொள்கையை உலகம் முழ்ழுதும் பரப்பியோர் இந்துகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது கீழ்கண்ட விஷயங்களால் தெரிகிறது:

1.கடிகாரம் ஏன் வலமாகச் சுற்றுகிறது? இந்துக்கள் ஏன் கோவிலை வலமாகச் சுற்றுகிறார்கள்? இரண்டையும் ஒப்பிட்டால் நாமே கடிகாரத்தை வலமாகச் சுற்றவைத்தவர்கள் என்றும் தோன்றுகிறது. இந்துக்கள் எந்த சுப காரியத்தையும் வலப் பக்கமாகவே செய்வர்.

2.இடது கையை — சுத்தம் செய்யப் பயன்படுத்துவதால் மட்டும் வலது கைக்குப் பெருமை என்று எண்ணி விடக்கூடாது. சிலர் பிறப்பிலேயே இடது கையை அதிகமாகப் பயன்படுத்துவர். இப்படிப்பட்ட இடது கைக் காரர்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டனர். இடது கையரைவிட வலது கைக்காரர்கள் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்கள். சர்வே, புள்ளி விவரம் எதுவும் நடத்தாமலேயே இந்துக்களுக்கு அந்தக் காலத்திலேயே இந்த விஞ்ஞான உண்மை தெரிந்திருக்கிறது.

right foot
Hindu Griha Pravesh Ceremony

3.இந்துக்கள் வீட்டில் யாராவது இடது கைப்பழக்கத்தோடு பிறந்து விட்டால் அவர்களை அதட்டி மிரட்டி வலது கைக்காரர்களாக மாற்றி விடுவர். வலது காலை எடுத்து வைத்துதான் கல்யாணப் பெண் வீட்டுக்குள் வரவேண்டும். கிரஹப் ப்ரவேசம், பூஜைகள் எல்லாவற்றிலும் எதையும் வலது புறமகவே செய்ய வேண்டும்

4.பிராமணச் சிறுவர்கள் செய்யும் சமிதாதானம், எல்லோரும் செய்யும் சந்தியா வந்தனம் ஆகியவற்றிலும் வலது கைப்புறமாகவே முத்திரைகள், பொட்டு வைக்கத் துவங்குவர்.

5.தமிழன் கண்ட அதிசயம்
சங்க இலக்கியத்தில் அடிக்கடி ஒரு உவமை வரும். அதாவது புலியால் தாக்கப்பட்ட மிருகம் வலப் பக்கம் விழுந்தால்தான் புலி சாப்பிடுமாம். இதை பத்துப் பதினைந்து புலவர்கள் பாடி விட்டார்கள்! ஆக மணப் பெண்ணை வலது காலை வைக்கச் சொன்ன தமிழன், காடுகளில் புலியையும் கவனித்திருக்கிறான் (காண்க புறம். 190, அகம் 238, 252).

6.இந்துக்கள் கோவில்களுக்குப் போனாலும், உணவகங்களுக்குப் போனாலும் வலது கையை மட்டுமே பயன்படுத்துவர். அதே போல சாது சந்யாசிகளும், கோவில் குருக்களும் கூட வலது கை மூலம் மட்டுமே எல்லாம் செய்வர்.

7.ஒரே ஒரு இடத்தில் மட்டுமே – மயானத்தில் மட்டுமே—சடலத்தை வலம் வராமல் – இடமாக வருவர். இதே போல பிராமணர்கள் தர்ப்பணம் செய்கையில் இடது தோளின் மீதிருக்கும் பூணூலை வலது தோளில் மாற்றி (அதாவது பூணூல் இடப்பக்கமாக சரியும்படி) நீர்க்கடன் செலுத்துவர். இந்துக்கள் செய்யும் பூஜைகளில் பெண்கள் எப்போதும் வலப்பகம் நிற்க வேண்டும்.

entering-the-new-house

8. இன்னும் ஒரு இடம் இறைவனே தனது இடப்பக்கத்தை உமை அம்மைக்குக் கொடுத்ததாகும். அர்த்த நாரீஸ்வரன் கதைதான் பைபிளில் ஆதாம்—ஏவாள் கதையாக வந்தது. இடப்பக்க எலும்பை உடைத்து பெண்ணை உருவாக்கினான் இறைவன். சம்ஸ்கிருதத்தில் பெண்ணுக்கு வாமா (இடது) என்ற பெயரும் உண்டு. (காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொற்பொழிவில், வேதத்தில் உள்ள ஒரு கதைதான் இது என்பார். ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் இருந்தன. ஒரு பறவை பழம் சாப்பிடாமல் ஆனந்தமாக இருந்தது மற்றொன்று பழத்தைச் சாப்பிட்டது என்பது வேதக் கதை–. இதுவே ஆடம் எனபவர் ஆப்பிள் சாப்பிட்டகதையாக வந்தது. ஆத்மா என்பது ஆதாம் என்றும் ஈவ் என்பது ஜீவ்+ஆத்மா= ஜீவாத்மா என்றும் மாறியது.)

9.கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய ஆடிஸியில் பல இடங்களில் வலது பக்கப் பெருமையை எழுதி இருக்கிறார். ஒரு கருடன் வலப் பக்கமாகப் பறந்தவுடன் கடவுளே நல்ல சகுனம் காட்டிவிட்டார் என்று பாடுகிறார். இது போலப் பல இடங்களில் வலது என்பது அதிர்ஷ்டம் என்று எழுதுகிறார்.

left-right-handedness-dominance

வலப் பக்கம் இலை வந்தால், கணவர் நல்லவர்!

10.இங்கிலாந்தில் ஒரு குறிப்பிட்ட செடியை பூஞ்சட்டியில் வைத்துப் பெண்கள் தொங்க விடுவர் என்றும் அதன் இலைகள் வலப் பக்கம் திரும்பினால் கணவர் நல்லவர் என்றும், இலைகள் இடது பக்கம் திரும்பினால் கணவன் மற்ற பெண்களுடன் தொடர்பு கொண்டவன் என்றும் நம்பினர். இந்தச் செடிக்கு “மிட் சம்மர் மென்” என்று பெயர். ஆக ஐரோப்பவிலும் இந்த நம்பிக்கை இருந்தது தெரிகிறது.

11. வால்மீ கிராமாயண யுத்த காண்டத்தில் ராமன் சொல்கிறான்: இதோ எனது வலது கண் துடிக்கிறது. நான் யுத்தத்தில் வெற்றி பெறுவேன் என்கிறார். ஆண்களுக்கு வலது கண் துடித்தால் அதிர்ஷ்டம். பெண்களுக்கு வலது கண் துடித்தால் கெட்டது. உத்தர காண்டத்தில் சீதை புலம்புகிறாள்: என் வலது கண் துடிக்கிறது சகுனங்கள் சரியில்லை. எனக்கு தீங்கு நடக்கப்போகிறது”. அவள் சொன்னது சரிதன் — இதற்குப்பின், அவளை ராமன் காட்டிற்கு அனுப்பிவிட்டான்.

இதிலும் விஞ்ஞான உண்மை இருக்கலாம். பெண்களுக்கு வலப் பக்க மூளையும் ஆண்களுக்கு இடப்பக்க மூளையும் பலம் வாய்ந்தவை என்பது மருத்துவ அறிவியல் காட்டும் உண்மை. ஆனால் வலது மூளை உடலின் இடது பக்கத்தையும் இடது மூளை உடலின் வலது பக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பதையும் மருத்துவ நூல் கூறுகிறது. ஆகவே வால்மீகி ராமயணம் சொல்வது உண்மையே.

12.இதே போல ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும், லத்தின் மொழியிலும் வலதைப் பாராட்டியும் இடது புறத்தை இகழ்ந்தும் பல பல மரபுத் தொடர்கள் உள்ளன ( எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரங்களும் உள்ளன.)

13.இந்துக்கள் கிழக்கு நோக்கி நின்று பூஜை செய்வர். பிறகு வலது பக்கம் திரும்புவர். அது தெற்கு திசை — தட்சிண திசை. ஆகையால் இப்படி வலப்பக்கம் செல்வது ப்ர+தக்ஷிணம் எனப்படும்.

traditional_banana_leaf_meal
You have to use only right hand for eating

நீங்கள் இடதா? வலதா?

14.வாமாசாரம் என்பது இந்துக்களில் ஒரு வழிபடும் முறை. இதற்கு இடது புற முறை என்று பெயர். அவர்களுக்கு ஐந்து “ம” முக்கியம். அதாவது மது, மாது, மத்ஸ்யம் (மச்சம்=மீன்), முத்ரா (முத்திரைகள்), மைத்துனம் (செக்ஸ்) என்பன ஆகும். ஆகையால் இது கெட்ட பெயர் எடுத்தது . ஏனெனில், இந்த வழியும் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லுமானாலும், பாதியில் வழுக்கி விழும் வாய்ப்புகள் அதிகம்.

book on left

15.முடிவுரை:–

1.கிரேக்க, லத்தீன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் உள்ள சொற்றொடர்கள் உலகம் முழுதும் இந்த வழக்கம் இரூப்பதைக் காட்டினாலும் இந்து மத நூல்களில் ஏராளமான குறிப்புகள் இருப்பதாலும் இன்று வரை நாம் மட்டுமே இதைப் பயன்படுத்துவதாலும் நாமே இதைத் துவக்கியவர்கள் என்று சொல்லலாம்.
2.வலது கால், வலது கை ஆகியவற்றின் பெருமைதனைக் கூறும் சொற்றொடர்கள் ஐரோப்பிய மொழிகளில் இருப்பதும் கருடன் பற்றிய குறிப்புகள் இருப்பதும் நம்முடைய தொடர்பைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

3.வலம்புரிச் சங்கு போன்ற புனிதப் பொருட்களும் வலதின் மகிமையை உணர்த்தும்

left_verse_right_brain

contact swami_48@yahoo.com

Is your Husband a Leftist or a Rightist?

left_verse_right_brain

Research paper written by London Swaminathan
Research article No.1396; Dated 7th November 2014.

Left and right mean several things in Hinduism. Generally speaking left has a bad connotation. From “Vamachara” to twitching of eyes, it has many interpretations. But it is not all superstition. There is some science behind it. In India, people use left hand for cleaning purposes. That is one of the reasons. Latest science reports say that those who use left hand (left-handed from birth) live nine years shorter than the right handed. It is statistically proved.

But the belief about left and right does goes beyond the geographical boundaries of India. An 1898 book on English phrases by Brewer give some interesting information:

A plant known as Orpine (Sedum telephium) is called midsummer men. It is also known as Live Long and Stone crop (Orpine in French means stone crop). The reason for the name “Midsummer men” is that it was used for finding the loyalty of men. Young women used to hang the potted plant in the house. If their husbands are true the plants’ leaves will bend towards right. If they are not loyal to their wives it will turn left.
The plant is called Live Long because when it is cut and sprinkled with water it lives longer than any other plant.

journal.pone_.0040259.g001

Five “M”
Vamacharam is a sect in Hinduism who practise unconventional mode of worship. Literally translated Vamachara is left handed mode and they value Five “M”s more than anything else: Madhu (wine), Mamsa (meat), Matsya (fish), Mudra (cereal or gestures) and Maithuna (sexual intercourse). The very list will caution every one because of Madhu and Maadhu (women). There is scope for doing wrong half way through the practise.

But twitching of eye is a very interesting area where different cultures have quite opposite views. Indians believe that twitching of right eye is good for men but bad for women. Rama says in the Yuddha Kanda of Valimiki Ramayana (6-4-7) that he is definitely going to win the war because of his right eye twitching. Sita sees bad omen when her right eye twitched just before Rama sent her to forest (Uttara Kanda). Scientists also believe that men and women are wired in opposite directions in the brain (Women are right brain dominant and men are left brain dominant creatures)

In Hinduism rightists always win! The clockwise direction was invented by the Hindus. They started using the clockwise direction for all good rituals—in the wedding, in the Graha Pravesa (House warming) etc. When they go to temples they have to circle the temple in the clock wise direction. It is called Pradakshinam in Sanskrit or Valam Varuthal in Tamil. They face east when they do all auspicious ceremonies and then turn to South=Dakshina and go in a circle.

No one is allowed to give or accept anything by the left hand in Hindu houses. It is considered blasphemy. In all the religious ceremonies such as Abhishek or Puja they have to extend their right hand with a great and visible humility. They can use only right hand for eating in the house or rstaurnats. When the temple priest gives the Prasad he will also use only right hand and anyone can take it only with his or her right hand.

Only in the funeral rites and monthly rites for the departed souls they use left. They go round the funeral pyre in anti clock wise direction. The sacred thread lying on the left shoulder (going towards right direction) will be changed to right shoulder so that it goes towards left side during the rites for departed souls (Tarpan, Tithi etc)

traditional_banana_leaf_meal
You can only use right haand for eating

Tamils support Rightists!
Two thousand year old Sangam Tamil poems praise tigers which will eat only when its prey falls on its right side. If it kills a deer and it falls on the left side it wont eat! Valam = right carries more weight than Itam=left in Tamil poems.

Tamil Ref. Puram.190, Akam 238, 252 etc.

Tamil film song says Oh, Bride! Oh Bride! Step into the house with your right foot please! ( Mana Makale! Mana Makale! Va Va! Un Valathu Kaalai (right foot) etuthtu vaiththu Va Va!

Hindus put first right foot into the house on holy occasions. Saints also follow this. In the rituals they have to place anything on the right first and then come to left. When Brahmin boys do Samidhadhana, they have to put the Homa paspa (ash) on their body parts starting from right side of the body. So they do in Sandhyavandana.

There are hundreds of customs like this in Hindu scriptures.

book on left

Only place where left is honoured is the body of Shiva in Ardhanari form where his left side is occupied by the goddess. Half of his body – left side—is given to the goddess. This is the basis of Adam and Eve story in the Bible. Left bone was shaped into a woman. ((Kanchi Paramacharya gave another interpretation that Adam=Atma and Eve=Jeeve Atma quoting the Vedic story where one bird eats the fruit —Adam eating the forbidden Apple — and the suffering followed. That is life and death. Anyone can easily see the similarity in words ATMA=ADAM, EVE=JEEVE Atma. So the first story in the Genesis is taken from the Vedas).

Though left is allotted for woman, during all the religious ceremonies a person’s wife is given prominence by giving the right side. She has to stand on his right side.

left hand

Homer also followed Hindu custom!!
Greek epic poet Homer also refers to such a respect for right in his Odyssey.
He says,
They swooped away on the right through homes and city,
All were dumbstruck, watching the eagles trail from sight (2-172 and 173)

Commentator explains the above lines,

“The lucky side for omens, lucky at least for Telemachus in this case. The idea that signs on the right are lucky and on the left unlucky is common in many cultures and languages”.

Hindus believe that seeing Garuda/eagle on the right is good. Homer refers to god sending eagle on the right side and say it is a good sign in The Odyssey 15-179
The odyssey has more references to auspicious Right 15—588/598; 20—269;24—358/50
left-right-handedness-dominance

Sinister Designs

Following is found in the Encyclopaedia of “Word and Phrase origins” by Robert Hendrickson
“English word sinister comes from Latin and the meaning in Latin is “left”. In English it means that something harmful will happen.

A right hand man in English means an invaluable and trusted aide; the right side was the place of honour in political assemblies and gave its name for royal or conservative parties of the right.
Right foot foremost means putting your best foot forward. (This is Hindu belief. They will use only right foot in all the auspicious ceremonies)

Right in French is adroit which also means cleverly, skilful. Dextrous means right as well as ‘skilful with the hands, body and mind’.

On the contrary left-handed compliment is a thinly disguised insult that poses as praise. When a royalty marries a commoner all that is received by the commoner is a “morning gift” i.e. the gift suddenly got on the day of the marriage. This marriage is called “morganatic” meaning morning gift in Latin. The bridegroom gave his left hand to the bride instead of right hand in such left handed marriages. This is the origin of left handed compliment in English.”

sedum telphinium
Sedium plant

In the above Greek, Latin and English phrases we see the Hindu customs of
1.Using the right hand for all auspicious ceremonies
2.Using the right foot in all auspicious ceremonies
3.Seeing the Eagle (Garuda)on the right as a god sent good omen
4.Believing right is skilful and clever
5.Giving right an honourable place

Though we may call this as a cross cultural belief, Hindus only follow it until today. Hindu scriptures have more references to this custom than any other scripture or book.

அரக்கர்கள்,அசுரர்கள் யார்?

mask-dance,bhutan
Mask dance in the Himalayan kingdom Bhutan

Research paper written by London Swaminathan
Research article No.1395; Dated 7th November 2014

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? முடியும்!!
எங்கே? இந்துக்கள் எங்கெங்கே வசிக்கிறார்களோ அங்கே!!!!
அது என்ன கதை? என்று கேட்கிறீர்களா?

ஆரியர்கள் தேவர்களாம்; திராவிடர்கள் அரக்கர்களாம்; ராக்ஷசர்களாம். இப்படி ஒரு கட்டுக்கதையை எட்டுக்கட்டினான் வெளிநாட்டு “அறிஞன்”. அதை இந்துக்கள், அதிலும் குறிப்பாக தமிழ் இந்துக்கள் நம்பிவிட்டார்கள்

நமது வேத இதிஹாச புராணங்களில் ஆரிய என்ற வார்த்தை உள்ளது. திராவிட என்னும் சொல் வேத காலத்துக்கு மிகவும் பின்னால் காணப்படுகிறது. அந்த இரண்டு சொற்களும் இப்போது பயன்படுத்தப்படும் இனம் என்னும் பொருளில் பயனபடுத்தப் படவில்லை. பல லட்சம் பாடல்கள், துதிகள் கொண்ட இந்து மதக் கடலில் இருந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக ஸ்லோகங்களைத் தெரிவு செய்து ஆங்கிலத்தில் தவறாக எழுதியதால் பலரும் நம்பிவிட்டனர்.

masks

இதோ சில உண்மைகள்:—-

1.புராண, இதிஹாசங்களில் வரும் ராக்ஷசர்கள் –( அரக்கர்), அசுரர்கள், தானவர்கள், தைத்யர்கள் ஆகிய அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள் என்று நமது நூல்கள் தெள்ளத் தெளிவாக இயம்புகின்றன.

2.ராக்ஷச ராவணன் முதல் சிவனை ஓட ஓட விரட்டிய பஸ்மாசுரன் வரை அனைவருக்கும் வரம் கொடுத்தவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவ பெருமான் தான். இவர்கள் நம்மவர்களாக இல்லாவிடில் அவர்கள் வரம் கொடுத்ததாக ஆயிரக் கணக்கான கதைகள் தோன்றி இருக்குமா?

3. தைத்யர்கள் யார்?
அசுரர், அரக்கர், தைத்யர், தானவர் ஆகியோரின் தந்தையர் பிரஜாபதி அல்லது அவரது புதல்வரான காஷ்யபர் என்றும் தாயார் தீதி என்றுமே நம் புராணங்கள் பகரும். ராவணன் என்பான் புலஸ்த்யர் என்னும் பிராமண ரிஷியின் பேரன். அவருடைய புதல்வர் விஸ்ரவசுக்கும் ராக்ஷச குலப் பெண் நிகஷாவுக்கும் பிறந்தவர். ராவணனின் மனைவியான மண்டோதரி யை மஹா உத்தமியாக எல்லா ராமாயணங்களும் சித்தரிக்கின்றன. அவர் மயன் என்னும் அசுரனின் மகள்.

அவளையும் மற்ற அசுரர்களையும் இந்துக்கள் தினமும் காலையில் வணங்கித்தான் மற்ற காரியங்களைச் செய்வர் ( பிராதஸ்மரணம் என்னும் பிரார்த்தனையில் மண்டோதரி, தாரா, பலி, விபீஷணன் முதலியோரை இந்துக்கள் வணங்குகின்றனர். எனது பாட்டி, அம்மா ஆகியோர் குளிக்கும் போதும், சில நேரங்களில் சமைக்கும் போதும் இந்த ஸ்லோகங்களை சொல்லுவர். ஆர். எஸ்.எஸ்.காரர்கள் நடத்தும் ஷாகாக்களில் இன்றும் பல லட்சம் பேர் இதை அனுதினமும் சொல்கிறார்கள்.

இதே போல இந்திரன் ,அக்னி, வருணன் ஆகியோரை ரிக் வேதத்தின் மிகப் பழைய பகுதி அசுரன் என்றே பாராட்டி வருணிக்கிறது. குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த ஒருவர், கோபித்துக் கொண்டு வேதக் கட்சியைப் பிளந்தார். பின்னர் பாரசீக (ஈரான்) நாட்டுக்கு ஓடிப்போனார். அவரை சௌராஷ்ட்ரர் (ஜொராஷ்ட்ரர்) என்பர். நம் ஊரில் தி.க. என்னும் கட்சி—— சுக்கு நூறாக உடைந்தவுடன் ஒவ்வொரு பிரிவும் ஒரு தலைவரைப் பாராட்டுவதையும் மற்றவரை இகழ்வதையும் பார்க்கிறோம். இதே போல வேதக் கட்சியை உடைத்த சௌராஷ்ட்ரார் இந்திரனைப் பாரட்டாமல் வருணனே மிக உயர்ந்த தெய்வம் என்பார். தேவர்கள் என்பவரைத் தீயோராகவும் அசுரர்கள் என்போரை நல்லவர்களாகவும் சித்தரிப்பார். அசல் தமிழ் “பாலிடிக்ஸ்!!! எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆரை ஒரு கட்சி பாராட்டுவதையும் இன்னொரு கட்சி கிண்டல் செய்து சொற்பொழி வாற்றுவதையும் இன்றும் காணலாம். அப்படி ஓடிப்போன சௌராஷ்டிரர் சிஷ்யர்கள், ஈரானை முஸ்லீம்கள் பிடித்துக் கொடுமைப் படுத்தியவுடன் தாய்நாட்டுக்கே – அதே குஜராத்துக்கே – திரும்பி வந்தனர். இந்தியாவின் மிக உயர்ந்த அணுசக்தி விஞ்ஞானிகள், பெரும் தொழில் அதிபர்கள் இந்த வம்சத்தினரே!

அசுரர்கள் நம்மவர்கள் இல்லாவிடில் இன்றும் பல கோடி இந்துக்கள் அவர்களை வணங்குவார்களா?

Bhutan masked dancers  4

4.தானவர்கள் யார்?
தக்ஷப் பிரஜாபதியின் மகளான தனுவுக்கும் காஷ்யபருக்கும் பிறந்தவர்கள் தானவர்கள். இவர்களில் ஹயக்ரீவர், புலோமர், சம்பரன், வைஸ்வானர, விப்ராச்சி, விரூபாக்ஷ, விருஷபர்வா கதைகள் புராணங்களில் காணக் கிடக்கின்றன. இவர்கள் எல்லோர் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில்தான் உள்ளன!!!

5.த, த, த — கதை (பிப்ரவரி 19, 2014-ல் நான் எழுதிய கதையின் பகுதி)–ஐ.நா. சபையில் திருமதி எம்.எஸ். பாடுவதற்காக காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய பாடலில் வரும் “தாம்யத – தத்த – தயத்வம்” என்ற சொற்றொடர் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருவதாகும். அது குறித்த கதை:

ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் ப்ரஜாபதி (ப்ரஹ்மா) யிடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த-த-த என்ற இடியின் ஒலியாகக் கூறி அருளினார். ‘த ‘ என்பதை தேவர்கள், ‘தாம்யத’ எனப் பொருள் கொண்டனர். அப்பதத்துக்குப் ‘புலன்களைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று அர்த்தம். மானுடரோ ‘த’ என்பதை ‘தத்த’ எனப் பொருள் கொண்டனர். ‘தத்த’ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். அசுரர்கள் ‘த’ என்பதை ‘தயத்வம்’ – அதாவது, தயையுடன் இருங்கள் – எனப்பொருள் கொண்டனர். ஆதிசங்கரர் இதற்கு உரை எழுதுகையில், மானுடரிலேயே தெய்விக குணமும், அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை எனத் தெளிவு செய்துள்ளார்.

இந்தக்கதை வரும் பிருஹத் ஆரண்யக (பெரிய காடு) உபநிஷத்தை வெள்ளைக்காரர் கூட கி.மு. 800 என்று தேதி குறித்துள்ளனர். இதில் அசுரர்களும் சம உரிமையுடம் பிரஜாபதியை அணுகியதும், அவர்களுக்கு ஏற்ற உபதேசத்தை அவர் அருளியதும் சமத்துவத்தைக் காட்டுகிறது. அசுரகளும் பிரஜாபதியிடம்தான் உபதேசம் பெறச் சென்றதும் அவர்களுக்கும் பிராமணரான சுக்ராச்சாரியார்தான் குரு என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது.

ஆனால் வெளிநாட்டுக்காரன் ஆங்கிலத்தில் என்ன எழுதினான்? இவர்கள் பழங்குடிமக்கள், ஆரியர்களால் விரட்டப்பட்ட திராவிடர்கள் என்று பொய்க் கதை கட்டி, திராவிடர்களை கோழைகளாகவும், முட்டாள்களாகவும் சித்தரித்தான்.
Jaws_
Jaws Villain in James Bod film

இன்று நம்மிடையேயும் அரக்கர், அசுரர், தைத்யர், தானவர் எல்லோரும் வாழ்வதைக் காண்கிறோம். அவர்கள் கோர்ட்டுகளில் குற்றவாளிக் கூண்டுகளில் நிறுத்தப்பட்டு சிறைத் தண்டனை பெறுவதையும் பார்க்கிறோம். விடுதலையான பின்னர் பலர் அதே குற்றத்தை மீண்டும் செய்து மீண்டும் சிறை செல்வதையும், சிலர் நல்லவர்களாகத் திருந்தி பெரிய பதவிகளை அடைவதையும் காண்கிறோம். இது போலவே அந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி முறைகளை எதிர்த்தவர்கள், மீறியவர்கள், மற்றவர்கள் சுதந்திரத்தில் அல்லது உடைமைகளில் கை வைத்தவர்கள் முதலியோர் அரக்கர், அசுரர் எனப்பட்டனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் திரைப்படத்தில் கொடுமை செய்யும் வில்லன்களாக வரும் அனைவரும் அரக்கர்களைப் போன்றவர்களே!

அமரகோசம் என்னும் உலகின் முதல் அகராதி–நிகண்டு ராக்ஷசர்கள் என்பதற்கு 15 சம்ஸ்கிருத்ச் சொற்களைத் தருகிறது. இதில் எல்லாவற்றிலும், பச்சையாக மாமிசம் (சமைக்காமல்) சாப்பிடுவோர், நர மாமிசம் உண்ணுவோர், ரத்தம் குடிப்போர், இரவு நேரத்தில் சஞ்சரிப்போர், பயங்கரவாதிகள், மாயத் தோற்றம் உள்ளோர் என்றெல்லாம் வருணித்துள்ளனர்.

dracula
Bllod sucking Dracula

இதன் முழு விவரம் வேண்டுவோர் இதே தலைப்பில் வெளியான எனது ஆங்கிலக் கட்டுரையில் (எண் 1381 அக்டோபர் 31, 2014) காண்க.

வால்மீகி ராமாயணத்தில் அனுமன் கண்ட ராக்ஷசர்கள் பல்வேறு கோர உருவத்தில் இருந்ததாக எழுதப்பட்டுள்ளது. பொதுவாக குற்றம் செய்வோர் மற்றவர்களை பயமுறுத்தவும், தனது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகவும் வேறு வேஷம் போடுவதை இன்றும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். நாங்கள் வாழும் லண்டன் மாநகரத்தில் தலைக்கு ஹூட் (முட்டாக்கு) போட்டுக்கொண்டு யாரும் கடைகளுக்குள் வரக்கூடாது என்று சட்டமே போட்டுவிட்டனர். ஏனெனில் கடைகளில் திருட வருபவர்களும் வங்கிகளைக் கொள்ளையடிக்க வந்தோரும் இப்படி தனது அடையாளத்தை மறைத்து வந்தனர்.

இதேபோல திருட்டுத் தனம் செய்யும் ராக்ஷசர்கள் எப்போதும் இரவு நேரத்தில் அட்டூழியம் செய்ததால் அவர்களுக்கு “இரவில் உலவுவோர்” என்றும் வடமொழியில் ஒரு பெயர் உண்டு. ஆக இராக்கதர்கள் குதிரை போலவும், யானை போலவும் உருவம் உடையோர் என்று எழுதி இருப்பதெல்லாம் அவர்கள் முகத்தில் வரைந்த சித்திரங்கள் அல்லது போட்டு வந்த முகமூடிகளையே குறிக்கும் என்க.

Kummatti-Kali-Onam-Dance
Masks in Kerala

இலங்கையில் இன்றும் கூட முகமூடி நடனம் உண்டு. பூதஸ்தான் என்னும் நாட்டில் (இமயமலையில் உள்ள பூட்டான்) இப்போதும் திருவிழாக்களில் முகமூடி டான்ஸ் உண்டு. இது நமது திருவிழாக்களில் சிலர் அனுமன், கருடன், அரக்கன் போல வேஷம் போட்டுக்கொண்டு ஊர்வலத்தில் வருவது போன்றதாகும். இன்றும் கூட முகமூடி போட்டு ஆடும் வழக்கம் கேரளத்தில் கதகளி, கர்நாடகத்தில் யக்ஷகானம் முதலியவற்றில் உள்ளன. ஆக அரக்கர்களின் கோர உருவம் அவர்களின் உடலில் இல்லை. வேஷத்திலும் மன விஹாரங்களிலும் இருந்தது என்பதே பொருந்தும்.

மாற்றான் மனைவி மீது கை வைத்த இராவணனை சொந்தம் கொண்டாடுவோரும் அரக்க வம்சத்தினரே என்பது அவர்கள் ஆதரிக்கும் கொள்கையில் இருந்து தெற்றென விளங்கும். இதற்குப் பின்னும் விளங்கிக் கொள்ளாதவர்கள் “விளங்காதவர்களே!” என்பதை வருத்தத்துடன் சொல்லவேண்டி இருக்கிறது.
எல்லோரும் இன்புற்று இருப்பது அன்றி யாது ஒன்றும் அறியேன் பராபரமே—தாயுமானவர்.
லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து – வேத இலக்கியம்.

–சுபம்—

22 Sanskrit words for Sky !

Point Reyes Sunset1

Research paper written by London Swaminathan
Research article No.1394; Dated 6th November 2014.

Amarakosha is one of the celebrated dictionaries in the world. It is a thesaurus that gives several words with the same meaning. Several scholars date this Sanskrit work to fifth century CE. It has been commented upon by excellent scholars. Ksheeraswamin, Rayamukuta, Linga Bhatta, Bhanuji Dikshit and several others commented on the work from ninth century onwards. This is also called Nama linga anusasana. In the Sanskrit language, so far over 100 versified vocabularies and commentaries have been discovered. Sanskrit pundits always quote Amarakosha , Vaijayanti and Sasvat kosha.

Amarakosha gives 22 words for the sky and the atmosphere. One of them is a word which says about sky route for transport! 1500 years before the invention of aeroplane Amarasimha called sky is used for transport!!

alberta-sky-1

When Brahmins do Tarpana for the departed souls over ninety times a year, they pray to the departed souls to come by the sky route (Deva Yanai: or Puurvyai Pathibi: in Sanskrit). Tamils also believed that Gods and angels (Deva) reside in the sky. Famous Tamil poet Tiruvalluvar refers to the deity in the sky (heaven) in his Tirukkural (couplet 50). All the pictures, calendars, sculptures show God as descending from the heaven (Eg. Gajendra Moksha sculptures, paintings etc.from Guptas period). In short, God has to use the air route! That is what humans believed. Famous Tamil poem Kutrala Kurvanji of Trikuda Rasappa Kavi says that Siddhas use sky for their travel (Gagana Siddhar).

Following are the words for the Sky given in Amarakosha:
1.Dyau = which can’t be filled, which will never be full. Dyaus is father and Prthvi (earth) is mother. Dyau became Zeus in Greek. That gave the word Jupiter.
2.Diva =place of divinities
3.Abram = touching the sky; filled with water clouds
4.Vyoma = that which surrounds us
5.Pushkaram = that which gives water.
6.Ambaram = sky or covers earth like clothe.
7.Naba: – surrounded by the clouds
8.Antariksha = atmosphere
9Gagana = fit for transport
10.Ananta = endless
11.Suravartman = devas reside there
12.Kam = that which supports
13.Vihayasi = air; atmosphere; aerial
14.Vihayas= suspended in air; aerial
15.Tarapatha:= path of stars
16.Naka = heaven
17.Meghadva = cloud bearing
18.Akasa = Open space
19.Viyad = intermediate area between heaven and earth; part asunder
20.Vishnupadam = vishnu’s place, vishnu’s foot
21.Mahabhila = great hole
22.Dyu: = See Dyaus
sky1_mini

When Amarasimha lists the words in his Amarakosa he gives the gender of the words as well. In the olden days whoever goes to Gurukula will be asked to memorise the 2000+ lines at young age. By the time s/he becomes a youth he would have learnt 10,000 synonyms!

Deogarh2

vyomavargaḥ (Namalinganusasana)
Sky or atmosphere (26)
(1.2.167) dyodivau dve striyāmabhraṃ vyoma puṣkaramambaram
(1.2.168) nabho ‘ntarikṣaṃ gaganamanantaṃ suravartma kham
(1.2.169) viyad viṣṇupadaṃ vā tu puṃsyākāśavihāyasī
(1.2.170) vihāsayo ‘pi nāko ‘pi dyurapi syāt tadavyam
(1.2.171) tārāpatho ‘ntarikṣaṃ ca meghādhvā ca mahābilam
(1.2.172) vihāyāḥ śakune puṃsi gagane puṃnapuṃsakam

sky at sunrise

There are more words for the sky in other books. It shows the richness of the language.

contact swami_48@yahoo.com

சிந்து சமவெளி மன்னர்கள் பெயர் எப்படி இருக்கும்?

313183-mahabharat.jpg

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1393; தேதி 6 நவம்பர், 2014.

சிந்து சமவெளி எழுத்துக்களை இதுவரை யாராலும் படிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன் கப்யூட்டரில் போட்டுப் பார்த்து இது திராவிட வகை மொழியாக இருக்கலாம் என்று பின்லாந்து, சோவியத் ஆய்வாளர் கள் சொன்னார்கள். இதுவரை அது ருசுப்பிக்கப்படவில்லை. ஏற்கனவே இது பற்றிக் கருத்துச் சொன்ன அறிஞர்களும் குழம்பிப்போய் திராவிட, ஆரிய சகதியில் சிக்கி மாற்றி மாற்றி உளறிக்கொட்டி கிளறி மூடி வருகிறார்கள். எல்லோரும் சாண் ஏறினால் முழம் சறுக்கி விழும் ஆராய்ச்சி இது!! இத்தனை அதி நவீன வசதிகள் இருந்தும் ஏன் சிந்து வெளி எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை?
ஏன் என்றால் “முதல் கோணல், முற்றும் கோணல்” — என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. சின்னக் குழந்தைகளிடம் ஒரு முறை இருட்டில் காற்றில் ஆடும் தென்னை மரத்தைக் காட்டி, அது பேய், தோட்டத்துக்குள் போகாதே என்று அம்மா சொல்லிவிட்டால் அது அடி மனதில் பதிந்து வாழ்நாள் முழுதும் அக் குழந்தை — பெரியவன் ஆன பின்னரும் –— பயப்படும். இது போல வெளிநாட்டில் இருந்து மதத்தையும் ஆட்சியையும் நிலைநாட்ட வந்த சிலர் இதற்கும் ஆரிய—திராவிடப் பேய் வர்ணத்தைப் பூசிவிட்டார்கள். நம்மவர்கள் அதில் சிக்கி சாண் ஏறி முழம் சறுக்கி விழுகிறார்கள்.

நாளைய தினம் சிந்துவெளி எழுத்துக்களை யாராவது படித்துவிட்டாலும் அதில் ராமாயண, மஹாபாரத, வேத, புராண விஷயங்கள் இருக்கும். அப்போது பல அறிஞர்கள், அது எல்லாம் திராவிடர்களிடமிருந்து ரிக்வேத ரிஷி முனிவர்கள் கற்றுக் கொண்டது என்று சொல்லி, “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை”– என்பர்!

யாரவது ஒருவர் வடமொழியையும் தமிழ் மொழியையும் படிக்காமல் இந்தியா பற்றி எழுத வந்தால் அவர்களை அரைகுறை என்று அறியுங்கள். வடமொழி, தென் மொழியில் உள்ள விஷயங்களை திரித்து எழுதினால் அவர்களை குதர்க்கவாதிகள் என்றும் பி.எச்டி. ஆய்வுப்பட்டத்துக்காக பொய் சொல்லுகிறார்கள் — அல்லது உலக …………………………….. மகாநாட்டில் பொன்னாடைக்காக இப்படிச் சொல்லுகிறார்கள் என்று ஒதுக்கிவிடுங்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், லண்டன் பல்கலைக் கழகத்தில் பேச வந்த அஸ்கோ பர்போலாவிடம் Asko Parpola ஒரு சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது. உங்களுடைய Deciphering the Indus Script “டிசைபரிங் தி இண்டஸ் ஸ்கிரிப்ட்” படித்தேன். அதற்குப் பின் எழுந்த ஆய்வு பற்றி இன்றைய சொற்பொழிவில் எதுவும் புதிதாகச் சொல்ல வில்லையே என்று கேட்டேன். “அதற்குப் பின் ஒன்றும் புதிது இல்லை” — என்றார். அதாவது இந்த ஆய்வு தேக்க நிலையை அடைந்துவிட்டது. நிற்க.

சிந்து சமவெளியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு யாரோ ஆட்சி செய்துள்ளனர். அதுவும் பல நகரங்களில் பலர் ஆட்சி செய்திருக்கவேண்டும். பழைய சுமேரிய, இந்திய நாகரீக வரலாற்றைப் பார்க்கையில் இது தெரிகிறது. இந்தியாவில் 56 தேச மன்னர்கள் ஆண்டது போல சுமேரியா, கிரேக்கத்தில் பல நகர அரசுகள் இருந்தன. அப்படியானால் 20 ஆண்டுக்கு ஒரு மன்னர் வீதம் குறைந்தது 75 மன்னர்கள் சிந்து வெளியில் ஒரு நகரத்தை மட்டும் ஆண்டிருக்க வேண்டும். ஹரப்பாவுக்கும் (பாஞ்சாலம்), மொஹஞ்சதாரோவுக்கும் (சிந்து) தனித்தனி அரசர் என்றால் இன்னும் இரு மடங்கோ மும்மடங்கோ மன்னர்கள் இருந்திருப்பர். அவர்கள் பெயர் என்ன?

Krishna-Arjuna

மாற வர்மன், சடைய வர்மன்?
“மஹாபாரதம் யார்? எவர்?” (சுபாஷ் மஜூம்தார் தொகுப்பு) — என்ற ஆங்கில நூலைப் பல ஆண்டுகளுக்கு முன் படித்தபோது ஒரு ஆராய்ச்சி செய்தேன். எந்தப் பெயர் அதிகமாக பின் ஒட்டாக வருகிறது? என்று பார்த்தேன். வர்மன், கேது, சேனன், தத்தன், பதி, வதி, மதி ( பதி, வதி, மதி என்பது பற்றிய எனது ஆய்வுக் கட்டுரையையும் படிக்க வேண்டுகிறேன் ) எனப் பல பெயர்கள் வந்தாலும். இதில் மிகவும் அதிசயம்!! வேத காலம் முதல் சமீப மன்னர் காலம் வரை — அம்புலிமாமா கதைகள், வேதாளம்-விக்ரமாதித்தன் கதைகள், கதா சரித் சாகர/கதைக் கடல் கதைகள் வரை — சில பெயர்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. குறிப்பாக வர்மன் என்ற பெயர் இந்தியா மட்டுமின்றி தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகள் அனைத்திலும் காணப்படுகிறது.

ஆக என் கருத்து — சிந்து வெளி மன்னர்கள் சேனன், கேது (கொடி), வர்மன், தேவன், ரதன் என்ற பெயரிலேயே முடிந்திருக்க வேண்டும். குடும்பப்பெயர்கள் பதி, வதி, மதி என்ற பெயரிலேயே முடிந்திருக்க வேண்டும். அப்பர் வீட்டிலும், காரைக்கால் அம்மையார் விட்டிலும் திலக வதி, புனித வதி இருந்தது பற்றி எனது ஆய்வுக்கட்டுரையில் சொல்லிவிட்டேன். இது வேத கால சரஸ் வதி யில் துவங்கியது.

cheran flag

சேனன், கேது, தத்த, அயன
உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் பதி, வதி, மதி, சேன, கேது ரத ஆகியவற்றில் முடியும் பெயர்கள் நிறைய இருக்கின்றன ( காண்க: வேதிக் இண்டெக்ஸ், கீத் & மக்டொனல்)
நம்மில் யாரவது ஒருவர் இந்த பின் ஒட்டுப் பெயர்களை சிந்து சம்வெளி எழுத்துக்களில் கண்டுபிடித்துவிட்டால் புதிர் விட்டுப் போகும்.

இதோ மஹா பாரதப் பெயர் பட்டியல் ( இது முழு ஆய்வு அல்ல. ஒரு சாம்பிள் மட்டுமே):–

சேன (ன்)– என்ற பெயரில் முடிபவை; 24 எடுத்துக் காட்டு:– பீம சேன, சித்ர சேன, த்யூமட சேன
வர்ம (ன்) – என்ற பெயரில் முடிபவை;13 எடுத்துக் காட்டு:– கேது வர்மன், க்ருத வர்மன்
கேது – என்ற பெயரில் முடிபவை; 9 எடுத்துக் காட்டு:– ஸ்வேத கேது, கேது என்றால் கொடி என அர்த்தம்.
தத்த (ன்) – என்ற பெயரில் முடிபவை; 6 எடுத்துக் காட்டு:– பக தத்த, வ்யாக்ரதத்த
பதி+வதி– என்ற பெயரில் முடிபவை;13+3 எடுத்துக் காட்டு:– மாத்ரவதி, மாயாவதி,
த்யூம (ன்)– என்ற பெயரில் முடிபவை; 6 எடுத்துக் காட்டு:– த்ருஷ்டத்யும்ன
ரத (ன்)– என்ற பெயரில் முடிபவை; எடுத்துக் காட்டு:– ஜெயத்ரத, பகீரத,
ஆயுத / யுத்த (ன்) – என்ற பெயரில் முடிபவை; 3 எடுத்துக் காட்டு:–ஹலாயுத
அஸ்வ (ன்) – என்ற பெயரில் முடிபவை; 5 எடுத்துக் காட்டு:–பிருஹதஸ்வ
மானன் – என்ற பெயரில் முடிபவை; 5 எடுத்துக் காட்டு:–அன்சுமான
வான (ன்) – என்ற பெயரில் முடிபவை; 6 எடுத்துக் காட்டு:– ருமன்வான
தேவ – 8; சஹதேவ
ஜய – 6
வசு -5
இப்படி பல பெயர்களை வைத்து ஆராயலாம். ரிக் வேத கால ரிஷிகளின் பெயரில் அயன என்று முடிவோர் பெயர்களே அதிகம். பிற்காலத்தில் இது அருகிப் போய்விட்டது.

கால வாரியாக, புத்தக வாரியாக பெயர்களைத் தொகுத்து ஒப்பீட்டால் பல விடுகதைகளுக்கு விடை கிடைக்கும்.
–சுபம்–

என்னுடைய முந்தைய 30 கட்டுரைகள்: Read my other 30 posts on Indus:

சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)

‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
பதி – வதி — மதி சிந்து சமவெளியில் உண்டா? அக்டோபர் 20, 2014
ரிக்வேதத்தில் ஹரப்பா நகரம் – நம்பர் 1. 2014
சிந்துசமவெளி பாடகர்கள்: ஹாஹா ஹூஹூ — அக்டோபர் 2014
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14

TAMIL-Sindhu samaveli- piramanar thotarpu ((Post No 1033, Date 10-5-14)
Hariyupia-harappa posted 30-10-14
Indus Valley-Brahmin Connection (Post No 1034, Date 10-5-14)
Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
Ghosts in Indus Seals and Indian Literature
Flags: Indus Valley- Egypt Similarity
Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?
Indra on Elephant Vahana in Indus Valley
Indus Script Deciphered

Human sacrifice in Indus Valley and Egypt 0ct.31, 2012
Indus Valley Cities in Ramayana Dec.18, 2012
Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013
Change ‘’Indus’’ valley civilization to ‘’Ganges’’ valley civilization! Ulta! 29-3-2014
Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013
‘Sex Worship’ in Indus Valley

Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)
The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012
Fall of Brahmin Kingdoms in Pakistan and Afghanistan 23-3-14
Indus Valley Civilization- New Approach , posted on May 29, 2011

contact swami_48@yahoo.com

Mahabharat names Vs Indus Valley Names

Krishna-Arjuna
Research paper written by London Swaminathan
Research article No.1392; Dated 5th November 2014.

I was going through the names of Mahabharata characters in “Who is who in the Mahabharata?” by Subash Mazumdar. An approximate list of suffixes or surnames is as follows:

Sena — 24 names, e.g Chitrasena, Shursena, Dhumatsena, Sinsena, Bhimasena
Ketu – 9 names, E.g.Shvetaketu
Varman –13 names, E.g Ketuvarma , Kshatravarma, Kritavarma,Dhritavarma ,Satyavarma
Pati+Vati — 11+3 names, Madhravati, Mayavati, Prabhavati
Datta — 6, Vygradatta, Bhanudatta, Bhagadatta
Dyuman – 6, Dhrstadyuman
Ratha – 5 e.g.Chitraratha, Jayadratha (Indus Valley area), Bhagiratha
Mana – 5 Anshumana, Shrenimana
Ayudha/Yudhdha -3, Halaydha

Vasu – 5
Asva – 6 E.g. Brhadasva, Vyusistasva
Wana – 6 E.g. Sharadwana, Rumanvana
Ayana – Krishna Dwaipayana
Deva—Sahadeva, Vasudeva, Shrutadeva,Shakradeva

313183-mahabharat.jpg
Sena ending, Ketu ending and Pati/Vati ending names are in the Vedic literature as well. This shows that these names are being used for thousands of years. Even in the Kathasaritsagara and Vikram and Vetal we come across same suffixes like Sena and Varman and Datta. So if at all we look for some names in the Indus valley it should be Sena, Varman, Ketu, Pati, Vati, Mati ending names. If we keep it in mind and identify these suffixes in the Indus valley script, we can succeed in the deciphering it.

I have already written an articles about Pati, Mati, Vati ending names in Vedas and Epics.
We have to prepare a list of Vedic names and epic names and compare it for further research.

contact swami_48@yahoo.com

பதிற்றுப்பத்து ரகசியங்கள்!

cheran-senguttuvan
Cheran Senguttuvan in procession with Kannaki statue

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1391; தேதி 5 நவம்பர், 2014.

சங்க இலக்கியத்தில் 18 மேல் கணக்கு நூல்கள் உள்ளன. இதற்குப் பின்னர் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த திருக்குறள் உள்ளிட்ட 18 கீழ்க் கணக்கு நூல்கள் உள்ளன. இந்த 36 நூல்களைத் தவிர ஐம்பெருங் காப்பியங்கள் உள்ளன. இவற்றைப் படித்து முடிக்கவே பல ஆண்டுகள் ஆகும். இது தவிர தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், கம்பராமாயணம் என்பன கடல் போல் பெருகும்.

இவைகளை எல்லாம் படிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றால் நிங்கள் அதமர். இவைகளை எல்லாம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்தால் நீங்கள் மத்யமர். இவைகளைப் படிக்கத் துவங்கி விட்டாலோ நீங்கள் உத்தமர்.

இவைகளோடு சம்ஸ்கிருதம் என்னும் பெருங் கடல் – மஹா சமுத்திரம் – மொழியில் உள்ள நூல்களைப் படிக்கத் துவங்கி விட்டாலோ மஹா அறிவாளி— பேரறிஞர் –ஞானி ஆகிவிடுவீர்கள். நிற்க.

இவற்றில் மேல் கணக்கு நூல்களில் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்ற இரண்டு தொகுப்புகளில் உள்ள 18 நூல்களும் பழம் தமிழகத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. எட்டுத் தொகையில் ஒரு நூல்தான் பதிற்றுப்பத்து.— பதிற்றுப்பத்தில் நூறு பாடல்கள் இருக்கவேண்டும் ஆனால் நமக்கு முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்காததால் 80 பாடல்களே உள்ளன. இவை அனைத்தும் சேர மன்னர்கள் பற்றியவை.

map-sangam-1
Location of Chera Nadu in South India

இனி பதிற்றுப்பத்தில் உள்ள சில அதிசயச் செய்திகளை மட்டும் காண்போம்:

1.புறநானூற்றில் பாடல் இரண்டில், அந்தாதி இலக்கியத்துக்கான அறிகுறி தென்படுகிறது. ஆயினும் தமிழில் முதல் அந்தாதிப் பாடல் பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தில்தான் இருக்கிறது. இதைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார். பிற்காலத்தில் காரைக்கால் அம்மையார், அபிராமி பட்டர் போன்றோர் இதை நூறு பாடல் வரை மேலும் விரிவாக்கினர்.

2.பிரான்சிலும், சுவீடனிலும், பிரிட்டனிலும் பல மியூசியங்களுக்குச் சென்றபோது நவரத்னக்கற்ளுடன் ஜ்வலிக்கும் கிரீடங்களைக் கண்டு வியந்தேன். அது போல நூறு மடங்கு மதிப்புள்ள கிரீடங்கள், மணி முடிகள் நமது நாட்டில் இருந்தன. இப்போது அவைகள் எங்கே? என்ற கேள்விக்குப் பதிற்றுப்பத்தில் விடை உள்ளது. இரண்டாம் பத்தில், சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், ஏழு மன்னர்களை வென்று அவர்களுடைய மணி முடிகளை உருக்கி தங்க மாலை செய்துகொண்டார் என்று பாடுகிறார் குமட்டூர் கண்ணனார். — இதே கதைதான் வடக்கிலும். காளிதாசனும் இப்படிச் சில செய்திகளைச் சொல்கிறான்! — கடைசியாக இருந்த கிரீடங்களை முஸ்லீம் படை எடுப்பாளர்கள் எடுத்துச் சென்று விட்டனர். அதற்கும் பின்னர் எஞ்சியிருந்ததை நம்மவரே செட்டியார் கடையில் போட்டு நகை செய்துகொண்டு விட்டனர்!!

3.பதிற்றுப்பத்தில் 2-ஆம் பத்தில் முதல் எழுவள்ளல்களில் ஒருவரான அக்குரன் என்பவரை சேர மன்னனுடன் ஒப்பிட்டுப் புகழ்கின்றனர். நமக்கு கடை எழுவள்ளல்கள் தெரியும். ஆயினும் இந்த முதல் ஏழு வள்ளல்களில் அக்குரன் யார் என்று உ.வே.சா. போன்ற மாமேதைகளுக்கும் தெரியவில்லை. நாம் அறிந்த மஹாபாரத அக்குரன் திறமைசாலி, ராஜ தந்திரி, கிருஷ்ணனின் நண்பன். ஆயினும் அவர் கொடை பற்றி எந்தச் செய்தியும் மஹா பாரதத்திலோ, பாகவதத்திலோ இல்லை. ஒருவேளை இது கர்ணனாக இருக்கலாமோ என்று ஐயுறுவோரும் உண்டு.

750px-Chera_monarchs_family_tree

4.இமயவரம்பனைப் பற்றிய அதிசயச்செய்திகளில் ஒன்று அவன் 58 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகும். அவன் மேலைக் கடலில் வாலாட்டி வந்த யவனர்களைப் பிடித்து தலையை மொட்டை அடித்து, கைகளைப் பின்னே கட்டி, தலையில் எண்ணை ஊற்றினானாம்.

தமிழர்களின் காவல் மரங்கள்

5.வேறு எங்கும் காணப்படாத தமிழ் வழக்கம் —– ஒவ்வொருவரும் காவல் மரம் வைத்துக்கொண்டு அதைப் பாதுகாப்பதாகும்.— கடற் கொள்ளையர்கள் ஒரு தீவுக்கு நடுவில் காவல் மரமாக ஒரு கடம்ப மரம் வைத்திருந்த தாகவும் அதனை சேரலாதன் வெட்டி வீழ்த்தி அதில் வெற்றி முரசு செய்து கொண்டதாகவும் நூல் இயம்புகிறது. இதே போல தமிழ் முருகன், கடல் நடுவே இருந்த சூரபத்மனின் மாமரத்தை வெட்டியதையும் கந்தபுராணம் வாயிலாக அறிகிறோம். இங்கும் அதைச் சொல்லி முருகனுக்கு இணையானவன் சேரன் என்கிறார் புலவர். — நன்னன் என்பானுடைய காவல் மரம் வாகை. அதை களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் வெட்டி வீழ்த்தியதை ஒன்பதாம் பத்தில் காணலாம்—. பழையன் என்பானுடைய காவல் மரம் வேப்ப மரம். அதை சேரன் செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தியதை ஐந்தாம் பத்தில் காணலாம்.

6.ஐந்தாம் பத்தில் சரகர், சுஸ்ருதர் போன்றோர் வடமொழியில் எழுதிய மருத்துவ அறுவைச் சிகிச்சை போல ஒரு குறிப்பு வருகிறது. சேர மன்னனின் வீரர்கள் ஊசி கொண்டு தைக்கப்பட்ட மார்பை உடையவர்கள். அந்த ஊசி மீன்கொத்திப் பறவையின் கூரிய அலகு மாதிரி இருக்கும் என்று பரணர் பாடுகிறார்.

cheran flag
Chera Flag: Bow and Arrow

தமிழர் செய்த கொடிய செயல்

7.ஐந்தாம் பத்தில் சேரன் செங்குட்டுவன் செய்த ஒரு அடாத செயலையும் பரணர் போற்றிப் புகழ்கிறார். இந்தக் காலத்தில் இது நடந்திருந்தால் பத்திரிக்கை நிருபர்கள் பரணரையும், செங்குட்டுவனையும் சொற்களால் பிரட்டிப் பிரட்டி அடித்திருப்பர். அது என்ன அப்படிப்பட்ட கொடிய செயல்? செங்குட்டுவன் பல சிற்றரசர்களையும் பேரசர்களையும் வென்றான். கணவனை இழந்த பெண்மணிகளின் கரிய கூந்தலைக் களைந்தான். அம் மயிரால் திரிக்கப்பட்ட கயிற்றால் யானைகளை வண்டியில் பூட்டி, பழையன் என்பானுடைய காவல் மரத்தை தலை நகரத்துக்கு எடுத்துச் சென்றான்.

பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி
வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர்
பல்லிருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி வெந்திறல்
ஆராச் செருவின் ———————-

8.உழவர்கள் பகன்றைப் பூவை தலையில் சூடிக்கொண்டு நிலத்தை உழுததை அரிசில் கிழார் பாடிய எட்டாம் பத்தில் படிக்கலாம். அவர், பெரிய கப்பல்கள் பழுது பார்ப்பதை உவமையாகப் பயன்படுத்துவதால் அக்காலத்தில் கப்பல் பொறியியல் ( Marine Engineering) மரைன் எஞ்சினீயரிங் ) நன்கு முன்னேறி இருந்தது தெரிகிறது. புகார் நகர சதுக்க பூதங்களைச் சேரன் தனது வஞ்சிக்குக் கொண்டுவந்ததையும் அவர் பாடுகிறார்.

9.அவரே கட்டிப் புழுக்கு என்னும் ஒரு உணவுப் பண்டத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவரை முதலியவற்றின் விதையை இடித்துப் பொடியாக்கிச் சர்க்கரை கலந்து செய்வது கட்டிப் புழுக்கு ஆகும். இது கொங்கு நாட்டு உணவு.

Kodungallur_Bhagavathi_Temple
Kodungallur Bhagavathy/Kannaki Temple

10.எட்டுத்தொகையில் மிகவும் கடினமான நூல் பதிற்றுப்பத்து தான். இதைக் கண்டுபிடித்து நமக்கு அளித்தவர் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். பதிற்றுப்பத்தில் மற்ற சங்க நூல்களைவிட கூடுதலாக மாமிச உணவு, குருதி கலந்த சோற்று பலி, வேள்வி, தேவலோகம், பூதம், துணக்கை ஆடல், இமயம் – குமரி சொற்றொடர், சிவன் – திருமால் முதலியவற்றைக் காண்கிறோம்.

பதிற்றுப்பத்தில் உள்ள வடவைத் தீ ( கடலில் தோன்றும் வடமுகாக்னி) சொர்க்க பூமியான உத்தரகுரு, பலவகை முரசுகள், வடநாடு போலவே எதிரி நாட்டில் கழுதை பூட்டி ஏர் உழுதல், தங்கக் காசு பரிசுகள், பாலைக் கவுதமனார் என்ற பிராமணர் வேள்வியில் மாயமாய் மறைந்தது, சதுக்க பூதங்கள், உன்ன மரம் ஜோதிடம் போன்ற அதிசயச் செய்திகளை ஏற்கனவே தனித்தனி கட்டுரைகளில் விரிவாக எழுதிவிட்டேன்.

பதிற்றுப் பத்தைப் படித்துப் பயன் பெறுக!

–சுபம்–