Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கவசங்களைப் பற்றி இதுவரை மூன்று கட்டுரைகளை எழுதினேன். இதற் கெல்லாம் மூல காரணமான புஸ்தகம் ராமசாமிப் புலவர் வெளியிட்ட பல கவசங்கள் அடங்கிய நூலாகும். இதற்குப் பின்னர் வந்த நூல்களில் பொழிப்புரை இல்லை, அர்த்தமும் இல்லை. ஆகையால் ராமசாமிப் புலவர் நூலை யாரேனும் முழுதுமாக வெளியிட வேண்டும். என்னிடமுள்ள நூல் தூள் தூளாகும் நிலையில் உள்ளது. காரணம் நாங்கள் எல்லோரும் ‘படித்துக்கிழித்தவர்கள்’ !!! அதாவது 1962 முதல் இந்த நூலை உபயோகித்து வருகிறோம்.
இதோ அவர் சொல்லும் அதிசயங்கள் ( என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயங்களை முன்னரே எழுதிவிட்டேன்) இதுவரை படிக்காதவர்கள் விநாயக கவசம் மற்றும் சகல கலா வல்லி மாலையையாவது படியுங்கள். குமர குருபரர் இயற்றிய சகல கலா வல்லி மாலையை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்.
ஒரு அன்பர் கேட்டதால் விநாயக கவசத்தையும் இன்று வெளியான இன்னொரு கட்டுரையில் கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக. ராமசாமிப் புலவருக்கு நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம். அவர் வாழ்க ; அவர் குலம் வாழ்க!!
கீழேயுள்ள இணைப்புகளைப் படிக்கவும்:-
tags – இராமசாமிப் புலவர் , கவச அற்புதங்கள், கவசங்கள் புஸ்தகம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகிலேயே திசைகளை தினமும் வணங்குபவர்கள் இந்துக்கள்தான். முஸ்லீம்கள் மெக்காவில் காபா இருக்கும் திசையை மட்டும் நோக்கி வணங்குவர். முஸ்லீம் நாடுகளின் விமான சர்வீஸில் பறந்தால் ஆசனத்துக்கு முன்னாலுள்ள COMPUTER கம்ப்யூட்டர் திரைகளில் மெக்கா இருக்கும் திசையை காட்டிக்கொண்டே வரும்.; அதை நோக்கித்தான் முஸ்லீம்கள் தொழ வேண்டும். ஆனால் இந்துக்களுக்கு அந்த கஷ்டமே இல்லை . எல்லா திசைகளிலும் கடவுள் இருக்கிறான் என்று வணங்குவார்கள் . குறிப்பாக பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தனத்தில் கிழக்கு தெற்கு, மேற்கு, வடக்கு என்று (வலம் வரும் திசை ) சம்ஸ்க்ருதத்தில் மந்திரம் சொல்லி வணங்குவர். இதை இந்துக்கள் சொல்லும் கவசங்களிலும் காணலாம். எல்லா திசைக்கும் உரிய கடவுளின் பெயரைச் சொல்லி அந்த திசையிலும் இறைவனின் பாதுகாப்பு இருக்கட்டும் என்று இறைவனை இறைஞ்சுவர்.
முன்னர் ஒரு கட்டுரையில் கந்த சஷ்டிக் கவசத்துக்கும் ரிக் வேதத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டோம். இன்று விநாயக கவசத்தையும் ரிக் வேதத்தையும் ஒப்பிடுவோம்.
ரிக் வேதம் RV.8-61 துதியை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு அளித்த ரிஷியின் பெயர் -பர்க்கப் பிரகாதன்
XXX
8-61-15
அனைத்தையும் அறியும் இந்திரனே! விருத்திராசுரனைக் கொன்றவனே !
எங்கள் முதல், கடைசி, நடு புதல்வர்களைக் காப்பாயாக. அவன் முன் புறத்திலும் பின்புறத்திலும் காப்பானாகுக .
XXX
8-61-16
மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் , கிழக்கிலிருந்தும் , ஒவ்வொரு திசையிலிருந்தும் காப்பானாகுக .வானிலிருந்து வரும் ஆபத்திலிருந்து காக்கவும்; எங்களை ஆயுதங்களில் இருந்து காப்பாற்றவும் (இங்கு ஆயுதம் என்பது அதேவி= மூதேவி)
XXX
8-61-17
இந்திரனே! நல்லோரின் தலைவனே ! தினமும் காக்க; இனி வரும் நாளை , அதற்குப் பின் வரும் நாளிலும் காக்க ;இரவும் பகலும் எல்லாத் திசைகளிலும் காக்கவும்
XXX
இதற்கு முந்தைய மந்திரங்களில் பகைவரை வெல்வோமாக; உணவைத் தருக (மந்திர எண் 4); எங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்க(5); நான் விரும்பும் எதையும் தருக (6); வள்ளலே ! பசுக்களையும் குதிரைகளையும் தருக (7); பாவம் அகல, கருமித் தனம் அகல, ஒளியின்மை /இருள் அகல நீ உதவியதாக எண்ணுகிறோம் (11); பயமின்மையை அருளுக(13) என்றும் வேண்டுகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 23-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
பாரதம் சித்தர் பூமி. இந்த புண்ணிய பூமியில் ஆங்காங்கே சித்தர்கள் இருந்து அருள் பாலித்து வந்திருக்கின்றனர்; வருகின்றனர். தமிழகத்திலும் ஏராளமான சித்தர்கள் அவதரித்துள்ளனர். சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். Perfect Being – கர்மவினை ஏதுமில்லாததோடு மாயையிலிருந்து விடுபட்டவர் என்று கூறலாம். ஏராளமான சித்தர்கள் அன்றும் இன்றும் என்றும் இருந்து அருள் பாலிப்பர் இந்த புண்ய பூமியில்!
16ஆம் நூற்றாண்டில் அவதரித்து அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் அருளாட்சி புரிந்த இரு பெரும் சித்தர்கள் குகை நமச்சிவாயர் மற்றும் குரு நமச்சிவாயர் ஆவர்.
இவர்கள் செய்த அற்புதங்கள் பல; அவை இறைவனின் கருணைத் திறத்தையும் எல்லையற்ற சித்திகள் பற்றியும் நமக்கு உணர்த்துபவை.
ஆந்திரபிரதேசத்தில் ஸ்ரீ சைலத்தில் தோன்றியவர் குகை நமச்சிவாயர்.
இவர் இறைவனது அருள்காட்டுதலின் பேரில் திருவண்ணாமலை நோக்கி விரைந்தார். அங்கேயே ஒரு குகையில் தங்கித் தவம் புரிந்தார். ஆகவே இவர் குகை நமச்சிவாயர் என்று அறியப்பட்டார். இவர் குகைக்கு வெளியே உள்ள ஆலமரத்தில் கயிறு கட்டி ஊஞ்சலாக்கி அதிலேயே தூங்குவார்.
ஒருநாள் ஆட்டிடையன் ஒருவன் இறந்து விட்ட தனது சினை ஆட்டை வருத்தத்துடன் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான். சில குறும்புக்காரர்கள் அவனை நோக்கி, ‘அங்கே ஒரு சாமியார் இருக்கிறார் பார், அவரிடம் இதைக் கொடுத்தால் அவர் பணம் கொடுப்பார் வாங்கிக் கொண்டு போ’ என்றனர். இடையனும் அதை நம்பி அங்கிருந்த குகை நமச்சிவாயரிடம் இறந்த சினை ஆட்டைக் கொடுத்து, “ஐயா, பணம் தருவீர்களாமே, தாருங்கள்” என்றான். அவனை நோக்கிச் சிரித்த குகை நமச்சிவாயர், “நாளை இங்கே வா” என்றார். மறு நாள் அந்த இடையன் அங்கே போன போது அவனது சினை ஆடு உயிர் பெற்றிருக்க, அதனருகே அது போட்ட குட்டியும் இருந்தது. அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை வணங்கி விட்டு தனது ஆடுகளை எடுத்துக் கொண்டு சென்றான். வழியில் முதல் நாள் அவனைப் பார்த்த குறும்புக்காரர்கள் அந்த ஆடுகளைப் பார்த்து திகைத்து நடந்தது என்ன என்று கேட்டனர். இடையனும் ஆடு உயிர் பெற்று குட்டி ஈந்ததை விளக்கினான். இதை அவர்கள் நம்ப மறுத்தனர்.
சாமியாரிடம் தங்கள் வேலையைக் காட்ட எண்ணிய அவர்கள் தலைமகனானப் பிறந்த தங்களில் ஒருவனை படுக்க வைத்து அவனை இறந்தவனைப் போல குகை நமச்சிவாயரிடம் கொண்டு சென்றனர். “சாமீ! இவன் இறந்து விட்டான் ஆட்டை உயிர்ப்பித்தது போல இவனது உயிரையும் மீட்டுத் தாருங்கள்” என்றனர். குகை நமச்சிவாயரோ, “இவன் இறந்தவன், இறந்தவன் தான்! இவனைத் தூக்கிக் கொண்டு போங்கள்” என்றார். உடனே அவர்கள் தங்கள் நண்பனை நோக்கி, “எழுந்திரு எழுந்திரு” என்றனர். அவன் எழுதிருக்கவில்லை, மாறாக இறந்திருந்தான். உடனே அந்த குறும்புக்காரகள் அனைவரும் சாமியார் தான் ஏதோ செய்து விட்டார் என்று கும்பலாகக் குழுமி அவரை அடிக்கச் சென்றனர்.
இதனால் வெகுண்ட குகை நமச்சிவாயர் ஊரே அழிந்து படும் என்பதைக் குறிக்க ‘அழியும்’ என்று தன் வார்த்தையைத் தொடங்கினார். உடனே அண்ணாமலை ஈசன் அசரீரியாக, “குகை நமச்சிவாய! நான் ஒருவன் இங்கு இருக்கிறேன்” என்றார். அவர் வாய் பொத்தப்பட்டது. உடனே குகை நமச்சிவாயர் அழியா அண்ணாமலை என்று தன் வார்த்தையை மாற்றிக் கூறவே ஊர் பிழைத்தது. இன்றும் கூட தெருவுக்கு ஒரு வீடு திருவண்ணாமலையில் முற்றுப் பெறாமல் இருக்கிறது!
ஒரு நாள் குகை ஒன்றிலிருந்து நமச்சிவாய நாமம் எழுந்ததைக் கேட்ட நமச்சிவாய மூர்த்தி என்பவர் அதனுள்ளே நுழைய குகை நமச்சிவாயர் நீ யார் என்று கேட்டார்.
நான் உங்கள் சிஷ்யனாக வந்துள்ளேன் என்றார் அவர். சரி, இரு என்றார் குகை நமச்சிவாயர்.
ஒரு நாள் குகை நமச்சிவாயர் படுத்துக் கொண்டிருக்க அவரது காலை அமுக்கிப் பணிவிடை செய்து கொண்டிருந்தார் சிஷ்யரான நமச்சிவாயர். திடீரென்று அவர் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டார் குகை நமச்சிவாயர். “ஸ்வாமி, திருவாரூர் தியாகராஜர் தேரில் பவனி வந்து கொண்டிருக்கிறார்.அவருக்கு முன் நடநனம் ஆடும் போது, ஒரு தேவதாசி மங்கை கால் வழுக்கி விழ, அதையே அபிநயமாக்கி ஆடினாள். அதனால் தான் சிரித்தேன்” என்றார் சிஷ்யரான நமச்சிவாயர். அப்படியா என்று கேட்டார் குகை நமச்சிவாயர். கண்களை மூடி தியானிக்கலானார். அது உண்மை என்பதைக் கண்டார்.
இன்னொரு நாள் நமச்சிவாயம் தன் உடலில் இருந்த துணியை பரபரப்பாகத் தேய்த்து பூவென்று ஊதலானார். இதைப் பார்த்த குகை நமச்சிவாயர் ஏன் இப்படி தேய்த்து ஊதுகிறாய் என்று கேட்டார்.
“ஐயனே! சிதம்பரம் நடராஜருக்கு விளக்குப் போடுபவன் விளக்கைப் போட்டான். விளக்கின் அருகில் இருந்த திரைச்சீலை நெருப்பு பட்டு பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. அதைத் தான் ஊதி அணைக்கிறேன்” என்றார் நமச்சிவாயர்.
தனது சிஷ்யனின் பெருமையை உணர்ந்து கொண்ட குகை நமச்சிவாயர் அவருக்கு குரு நமச்சிவாயர் என்ற பெயரைத் தந்து, ‘இனி நீ குரு நமச்சிவாயர் என்றே அழைக்கப்படுவாய்’ என்று கூறி அருளினார்.
ஒரு சமயம் இருவரும் சஞ்சீவி பர்வதத்திற்குச் சென்றனர். அங்கே தன் சீடரை சோறு சமைக்கச் சொல்லி விட்டு குகை நமச்சிவாயர் மூலிகைகள் சிலவற்றைத் தேடி மலைக்குள் சென்றார். சீடரும் சமைக்கத் தொடங்கினார். அப்போது சாதம் பொங்கி வர அதைக் கிளறி விடுவதற்கு கரண்டி ஒன்றும் இல்லாத நிலையில் அருகிலிருந்த மரக்குச்சி ஒன்றை எடுத்து சாதத்தைக் கிளற ஆரம்பித்தார். ஆனால் சாதமோ கறுப்பாக ஆகி விட்டது. உடனே குரு நமச்சிவாயர் சற்று பயந்தார். குருதேவர் வந்தால் தன்னைக் கோபிப்பாரோ என்று நினைத்த அவர் தானே அந்த சாதத்தைச் சாப்பிட்டு விட்டார். புதிதாக மீண்டும் சாதத்தைச் சமைக்கலானார். அப்போது மலைக்குள் சென்ற குகை நமச்சிவாயர் மீண்டும் வந்தார், தன் சிஷ்யனைக் காணாமல் திகைத்தார்.
குரு நமச்சிவாயம் இருந்த இடத்தில் அடுப்பிற்கு அருகே ஒரு அழகிய இளைஞன் இருப்பதை அவர் கண்டார். “தம்பி, இங்கே இருந்தவர் எங்கே?” என்று கேட்க, “ஐயனே, நான் தான் உங்கள் சிஷ்யன், என்னைத் தெரியவில்லையா?” என்று கேட்டார் குரு நமச்சிவாயர். நடந்தது என்ன என்பதை விளக்கினார் குரு நமச்சிவாயர். உடனே குகை நமச்சிவாயருக்கு விஷயம் என்ன என்று புரிந்து விட்டது. தான் தேடி வந்த இளமையை மீட்டுத் தரும் கருநொச்சியை சீடன் எடுத்து சாதத்தில் கிளறியதால் அவன் இளமை மீட்கப்பட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார். உடனே இருவரும் அதே குச்சி எங்குள்ளது எனத் தேடினர். ஆனால் அது கிடைக்கவில்லை. சீடனைச் சிறிது சாதத்தை உமிழச் சொல்லி அதை குகை நமச்சிவாயர் உண்ண அவரும் இளமையை மீட்டார் என்கிறது சித்தர் வரலாறு.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Dr V S Mani of Amersham (Greater London) has written more than six books including novels. He has very good experience in the field publishing books, particularly in e book formats. He has already conducted a seminar for Gnanamayam listeners a few months ago. After the seminar our listeners asked some questions and I sent them to Dr V S Mani. He has answered those queries live on 22-8-2021 via Gnanamayam Broadcast from London.
Dr Mani has obtained his doctorate in Metallurgy and was a G P Surgery manager as well. He is one of the pillars of South Indian Society in the UK.
Mrs Uma Prasad from Dubai has helped him in proof reading and she also appeared on our shows in the past.
With his permission I am publishing his written copy. Those who want to listen to him , may go to Facebook.com/gnanamayam
Xxxx
LISTENERS QUESTIONS SENTTO DR V S MANI FOR 23-8-2021 INTERVIEW ON GANAMAYAM BROADCAST
Dr Mani speaks,
“I have sent my replies to Swaminathan in the email which you all could get a copy. You may contact me through Swaminathan for further clarifications
For publishing, one must have a book ready, which is the first step to consider. Whether it comes as e-book or paperback or hard back format is next step.
Other steps are important in making the above decisions and these relate to costs and publishers.
WHAT ARE THE STEPS IN MAKING E BOOKS ?
You should have a book to publish. Is it ready for publishing?
Has it been proof-read, checked and corrected? If the answers are positive, you are ready to publish a book
WHAT ARE THE PITFALLS IN IN E BOOK PUBLISHING?
For a wide market at very low pricing, nothing to beat e-books. Royalties, normally a pittance for paperbacks, would be still very low.
Also, remember because the price is low does not mean people would buy it. It depends on marketing, which usually is outside the domain of the writers.
WHAT IS YOUR EXPEREINECE IN EBOOK PUBLISHING?
All of the above I have stated. I preferred paperback but it comes with e-book sales as well.
THEY TALK ABOUT DIFFERENT FORMATS IN E BOOK PUBLISHING.
e-Book formats
PDF (. pdf) – A very popular eBook format from Adobe which most eReaders support.
EPUB (. epub) – An open eBook standard created by the International Digital Publishing Forum (IDPF). …
Kindle (. …
MobiPocket (. …
Text (.
I used Kindle only.
Bridging the gap between the eBook reader you have and the eBook content you want to use often requires a software middleman.
Here are some of the most common free software solutions:
Adobe Digital Editions (ADE) is an eBook management system, providing a way to organise and access your eBook library. It is also a core player in the eBook ecosystem of publishers, sellers and libraries. You will need to download and install the freely available ADE software before you can download and borrow most library eBook content. (PDF and HTML file formats excluded.)
For Apple, IPad and IPhone users who don’t choose to download the IBooks app. Bluefire Reader works with DRM-equipped Adobe eBooks, in both PDF and EPUB formats.
Another freely-available eBook management system for Apple products.
CAN YOU ELABORATE ON IT? WHICH IS BETTER?
As I have used Kindle only, you are advised to read web about it and decide.
HOW LONG DOES IT TAKE TO GET IT ON E BOOK?
If the book, say, a novel is ready, then through Amazon, Kindle, usually within 2 to 3 weeks. They suggest few hours even.
DO YOU DO IT ON YOUR OWN OR LEAVE IT WITH SPECIALISED PEOPLE FOR IT?
I used various people. Amazon/Kindle first; then Indian agents; then a UK company which were not based here but in Boston and Indonesia; and finally, a Literary agent in Oxford. I will never use others. Always stick to local literary agents having contacts with publishers. I can give details of the agent I used and I do not get a penny for recommending clients. Even if they did, I would refuse to take it and plough back to the writers.
AMAZON, KINDLE AND OTHERS ARE SAID TO HAVE E BOOK FORMATS WHERE YOU CAN READILY UPLOAD. HAVE YOU TRIED THEM?
Yes. All the others, whoever you go through finally use Amazon/Kindle as they are the biggest distributors.
ARE PRINTED BOOKS SOLD MORE THAN KINDLE EDITIONS?
Not relevant as numbers mean nothing. Would 10 books in paper back compared to 20 e-book is totally of no use to the author who expects 50 to 100 times these numbers.
WHAT IS THE FUTURE OF PUBLISHING? WILL PRINTED BOOKS DISAPPEAR IN COURSE OF TIME?
I do not have a crystal ball to predict these. However, in my limited opinion, as long as people write about any subject, they would be motivated to publish it and self-publishing route would be used more.
However, contrary to popular belief, the industry is not at risk of dying – far from it. In fact, the industry has seen growth in the last few years, with book sales increasing in value by 1.4% in 2018 (according to Nielsen BookScan) – small growth, but growth nonetheless.28 Mar 2019
According to the latest ProQuest Bowker Report (October 15, 2019), nearly 1.7 million books were self-published in the U.S. in 2018, which is an incredible 264% increase in just five years.
Printed books would never disappear for several decades.
could Tamil language books are accepted in Amazon kindle.
All languages are accepted as it would be seen and read by specialists in country like Amazon.in
how to prepare Tamil language books’.
There are scripts and software available to type in standard computer ipads, mac etc. I wrote in English only. Being away from India since 1965, my Tamil writing is old version used in Tanjore style not the current Chennai version.
is there any guidle line book informing us a step by step procedure.
I did not find one and the key is to get the writing done. The publishers would help but it costs money. Advice and such help do not come cheap.
to prepare an Ebook whale all the articles are available as Word document?
I wrote mine in word document only and will not change.
The Pricing: 5.99 $ means the author will get 70 %. If it is less say even %.98 $ the author will get only 30% remaining goes to Amazon?
With Amazon, my books selling at GBP 9, I get a royalty of 69 pence only. 60% goes to distributors – Amazon, Kindle; 40% to publishers who give 5% to writers.
Your 70% seems unreal to me but stick to them and do not leave them ever, please.
5)for 5.99$ pricing how many pages should be there for a book?
Anything less than 25000 words (say, 360 words for an A4 page) is classed as Novella.
Novels above 25000 words and typically 80000 to 90000 words.
Bigger ones may go to 125000 words.
A5 is usually size used. Novella may end up as 110 pages for this size.
Regarding cover page and last page is there anybody to design?
Usually, publishers charge but they do offer some limited FREE designs. Even local literary agents offer Free designs too.
Are could we pick up from the available designs?
Yes.
Finally, I am grateful to have people sent queries and hope I had helped them to make up their minds on which way to publish. I wish you all more success than I have had with selling books and earning royalties.
My thanks to Swaminathan, his brother Nagarajan and Mrs Uma Parvati in reading your queries to me for me to answer.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
London Brahmins have been doing the Rik Yajur Upakrma (Annual Sacred Thread changing Ceremony) for over 30 years now. I have been attending it almost every year from 1987 in London. We missed it in 2020 due to the Chinse virus attack. In the beginning Mr Panchanathan was officiating for us. Then Sri Kalyanasundara Sivacharyar was officiating for us on behalf of World Hindu Mahasangam.. Since it has been organised in various areas in London, we get 40 people in Brent, London. It takes two hours to do the Homam and Vedarambham. Everybody remembers the long long Maha sankalpam and Panini’s Mahesvarani Sutras. We hire halls or temple premises to do it. For those ask for Sankalpa Mantras I used to post it. I have attached some pictures for our record and for your record.
On 22nd August 2021, we did at Kanaga Durga Temple (Kanaka Thurkai amman alayam) in Ealing, London. Si Kalyanasundara Sivacharya and Sri Balasubrahmanya Sivacharya conducted the ceremony. Over 30 people attended the event. The temple authorities honoured me and Mr Sivasanakaran and Mr Shastri. We were adorned with shawls (Ponnadai in Tamil)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புக்கர் டி வாஷிங்டன் ஒரு அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் வாழ்க்கை வரலாறு எழுதிப் புகழ் பெற்றவர் ஆவார்.
அவருடைய முழுப்பெயர் BOOKER TALIAFERRO WASHINGTON புக்கர் டாலியபெர்ரோ வாஷிங்டன் .
பிறந்த தேதி – ஏப்ரல் 5, 1856
இறந்த தேதி- நவம்பர் 14, 1915
வாழ்ந்த ஆண்டுகள் 59
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய AFRO-AMERICAN ஆப்ரோ- அமெரிக்க எழுத்தாளர். அவருடைய பூர்வீகம் ஆப்ரிக்க கண்டம். அவருக்கு 45 வயதானபோது அவர் சுயவரலாற்றை AUTOBIOGRAPHY எழுதி வெளியிட்டார். அடிமைத் தனத்திலிருந்து மீட்சி UP FROM SLAVERY என்பது அவருடைய நூலின் தலைப்பு.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் ரோனோக் என்னும் ஊரில் அடிமைக் குடும்பத்தில் அவர் பிறந்தார். அவருடைய தாயார் ஒரு சமையல்காரி. பெரிய தோட்டம் வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவருடைய தந்தையாக இருக்கலாம் என்று தெரிகிறது . அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் வாஷிங்டனும் அவருடைய அன்னையும் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் அந்தக் குடும்பம் வேறு இடத்திற்குப் போய் தங்கியது. அவருடைய அன்னை வேறு ஒருவரைக் கல்யாணம் கட்டினார். அப்போது வாஷிங்டன் ஒரு சிறுவன்தான். குடும்பத்திற்கு உதவுவதற்காக நிலக்கரிச் சுரங்கம், உப்பளம் ஆகியவற்றில் வேலை செய்தார் .
அவருக்குக் கல்வி கற்கும் ஆர்வம் பிறந்தவுடன் இரவு நேரத்தில் உள்ளூர் ஆசிரியரிடம் எழுதவும் படிக்கவும் தெரிந்து கொண்டார். 500 மைல் தொலைவில் வர்ஜீனியாவில் ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவர்களுக்காக ஒரு விஷேச பள்ளிக்கூடம் திறக்கப்பட்டவுடன் அங்கு சென்றார். 16 வயதுதான். பெரும்பாலான தூரத்தை நடந்தே கடந்தார்.
பட்டப்படிப்பில் தேறியவுடன் அலபாமா மாநிலத்தில் (TUSKEGEE IN ALABAMA) தலைமை ஆசிரியர் வேலை கிடைத்தது. பள்ளிக்கூடத்துக்கு சரியான கட்டிடம் இல்லை; கட்டிடம் கட்டுவதற்கு யாரிடமும் பண வசதியும் கிடையாது . ஒரு பந்தல் திடலில் பள்ளிக்கூடத்தை நடத்தினார். 34 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், அவருடைய உழைப்பின் மூலம், அது சிறந்த பள்ளி என்ற பெயரை ஈட்டியது . அவர் சிறந்த பேச்சாளரும் கூட. அமெரிக்க ஜனாதிபதிகளான ரூஸ் வெல்ட் , டாப்ட் ROOSVELT, TAFT ஆகியோருக்கு ஆலோசகராகவும் திகழ்ந்தார். கறுப்பின மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய பாடுபட்டார். பொருளாதார சமத்துவமே சமூக சமத்துவத்தைக் கொணரும் என்பது அவர் கொள்கை.
புக்கர் வாஷிங்டன் எழுதிய நூல்கள்:–
1899- THE FUTURE OF THE AMERICAN NEGRO
1900- THE STOTY OF MY LIFE – WITH EDGAR WEBBER
1901 – UP FROM SLAVERY- WITH MAX BENNETT THRASHER
1904- WORKING WITH HANDS
1913- THE STORY OF SLAVERY
–SUBHAM—
tags — அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர்,புக்கர் டி வாஷிங்டன், Booker T.Washington
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தள்ளாடும் தமிழகம்!
ச.நாகராஜன்
1
தமிழகமே தள்ளாடுகிறது! ஆம், ஏராளமான ‘குடி மகன்களால்’ அது தள்ளாட்டம் போடுகிறது. சிந்திக்கும் திறனின்றி குடி நிறையப் பேரை ஆட்டிப் படைப்பதனால் அது தள்ளாடுவதில் வியப்பே இல்லை. தந்தையை விஞ்சிய விதத்தில் செயல்படும் மகனைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் “சாதனைகளில்” எதை முதல் சாதனையாக் முன் நிறுத்துவது என்பதில் அறிஞர் பெருமக்களுக்குள் ஒரே குழப்பம் என்பது உண்மை தான்! அத்துணை “சாதனைகள்!”
தாய்க்குலத்தோர் தவிக்க சம்பாதித்த அனைத்தையும் இழந்து தடுமாறும் எண்ணற்ற “குடி மகன்களுக்க்காக” இறைவனை பிரார்த்திப்போமாக!
போதையிலிருந்து விடுபட்டால் பாதை தடுமாறிய இவர்கள் வேதனை நீங்கி நல்வழிக்கு வரட்டும்!
2
அடுத்த சாதனை ஒவ்வொரு தமிழனையும் “கடன்காரனாக்கிய” சாதனை இன்னும் பெரிதோ?! தந்தை இலவச டிவியை வழங்கி அதன் மூலம் அதைப் பார்ப்பதற்கான விண்வழி இணைப்புகளுக்கு காசு வாங்கித் தன் குடும்பத்தைச் செழிக்க வைத்த உத்தி “சிறப்பானது” தான்!
இன்று ஒவ்வொருவனும் கடன்காரனாகித் தவிக்கும் நிலையை டபிள் வாட்ச் காரர் வெள்ளையறிக்கை மூலம் சுட்டிக் காட்டி சாதனை படைக்க உடனே ஒரு நல்ல தமிழர், ‘அய்யா நகைக் கடன் தள்ளுபடியால் வரும் தொகை இவ்வளவு, விவசாயக் கடன் தள்ளுபடியால் வரும் தொகை இவ்வளவு, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதால் வரும் தொகை இவ்வளவு, பஸ் இலவசப் பயணத்தால் வரும் தொகை இவ்வளவு’ என்று ஒரு நீண்ட கணக்கை விரைவாகப் போட்டு வெள்ளை போர்டில் அனைத்தையும் கூட்டி “அடடே! இது கடன் தொகையை விட அதிகமாகி விட்டதே! எங்களுக்கு இவ்வளவும் வேண்டாம், நீங்களே வைத்துக் கொண்டு கடன் தீர்ந்து விட்டது என்று பத்திரம் தந்து விடுங்கள் என்று பத்திரமாகச் சொல்லி விட்டார்.
இப்படிப்பட்ட புத்திசாலிகள் வேண்டாம் என்று தானே முதலில் சொன்னது போல குடிகாரக் கடைகளைத் திறந்து வைத்தோம், இவன் ஏன் அங்கு போகவில்லை என்று அவர்(கள்) கோபப்பட்டால் அதில் நியாயமே இல்லை!
3
அடுத்து ஒன்றியக் குழப்பத்தை திமுக முன் வைக்க, மத்திய வார்த்தையில் நிலையாக இருக்கும் நண்பர் “Take your seat” என்றால் நாற்காலியைக் கையில் எடுத்துக் கொள்வது என்பது அர்த்தம் இல்லை, நண்பரே. உட்காருவது தான் என்று சொல்ல, ஆங்கிலம் தெரியாத நிலையைக் கொண்ட அனைவரையும் மக்கள் இனம் காண முடிந்தது.
4
இரு வாரங்களுக்கு ஒரு குழப்பம் வைத்தால் தங்களின் மொத்த (505) வாக்குறுதியையும் மறந்து ஐந்து ஐம்பத்திரண்டு வாரங்களையும் கடந்து விடலாம் என்ற நிலையில் அடுத்ததாக கடவுள் மேலேயே கையை வைக்கும் விதமாக அர்ச்சனைக் குழப்பம்!
இதில் அறிஞர்களும் நல்லோரும் ஆவேசமாய்ப் பல கேள்விகளை வைத்துள்ளனர்.
இறைவனோ அல்லது பக்தர்களோ இதைக் கேட்டார்களா?
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற ஈவெராவின் சிலை முன்னே அர்ச்சகர் ஆணை கிடைத்தவர்கள் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டதிலிருந்தே இவர்கள் நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்களே தவிர நாவார தேவாரம் பாடும் கோஷ்டி இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து விட்டனர்.
இவர்களுக்கு ஆகம சிலபஸை யார் தந்தது? யார் தேர்வு வைத்தது? எவர் திருத்தினர்? எப்படி சர்டிபிகேட் வழங்கப்பட்டது? கேள்விகள் கணைகளாக வருகின்றன!
பிராமண – பிராமணர் அல்லாதவருக்கு இடையே ஒரு சண்டையையும் பிளவையும் ஏற்படுத்தும் முயற்சியும் கேள்விகளால் துவண்டு விட்டது.
40000 கோவில்களில் ஐந்து சதவிகிதமோ அல்லது அதிக பட்சமாக பத்து சதவிகிதமோ தான் பிராமண அர்ச்சகர்கள்! ஆகவே இதர கோவில்களில் ஆங்காங்கு உள்ள சம்பிரதாயப்படி பிராமணர் அல்லாதாரே முறைப்படி வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க மசூதிகளில் தமிழில் வழிபாடு நடத்தக் கோராத தமிழக அரசு, சர்ச்சுகளில் (AMEN) ஆமெனைக் கூட தமிழில் சொல்ல வேண்டுமென்று சொல்ல முன் வராத தமிழக அரசு ஹிந்துக் கோவில்களை மட்டும் குறி பார்த்து வழிபாடுகளை பக்தர்களின் இஷ்டப்படி நடத்த விடாமல் செய்ய ஆரம்ப முயற்சிகளை மேற்கொள்வது ஹிந்து மதத்திற்கே ஆபத்தானது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் கடவுள் நம்பிக்கை இல்லாத அர்ச்சகர்கள் கோவிலில் நுழைவது ஏன், இதற்குப் பின்னர் உள்ள சதித்திட்டம் என்ன என்று கேட்கின்றனர்.
40000 ஏக்கர் கோவில் நிலம் பறி போயிருக்கிறது. அங்கு பல்வேறு கட்டிடங்கள் எழுந்துள்ளன.
சில ஏக்கர் நிலங்களை மீட்டு விட்டோம் என்று கூறும் தமிழக அரசு அது யார் வசம் இது வரை இருந்தது, ஏன், எப்படி இருந்தது என்று தெரிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோருகின்றனர். இதுவரை நஷ்டத்தை ஏற்படுத்திய அவர்களிடமிருந்து கோவிலுக்குச் சேர வேண்டிய தொகை வசூலிக்கப்பட்டதா என்றும் கேட்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பானதும் முதலாவதுமான ஒரு விஷயம் இருக்கிறது.
இப்படிப்பட்ட அரசு ஆணை சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிற்கு எதிரானது என்பது தான்!
இது contempt of the court ஆகுமா? அரசு ஆணை செல்லத்தக்கது அல்ல என்று சுப்ரம்ண்யம் சுவாமி போன்ற மூத்த அறிவாளிகள் கூறுகின்றனர்.
ஆக நீதிக்குப் புறம்பானது, தர்மத்திற்குப் புறம்பானது, பழக்க வழக்க சம்பிரதாயங்களுக்குப் புறம்பானது, ஜாதி கலவரங்களை ஏற்படுத்தக் கூடியது, கோவில் சொத்துக்களுக்கும் நிலங்களுக்கும் நகை, சிலைகள் உள்ளனவற்றிற்கும் ஆபத்தை விளைவிப்பது, தாங்கள் அளித்த வாக்குறுதிகளைப் பற்றி மக்கள் தங்களைப் பல கேள்விகள் கேட்காமல் திசி திருப்புவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தச் சட்டம் தவறானதாகும்! இது தனது அதர்மச் சுமையால் சுமை அழுத்தம் தாங்காது தானே விழுந்து விடும்!
It will fall on its own deadweight!
இறுதியாக திருமூலரின் எச்சரிக்கை ஒன்றையும் கூறி இந்தக் கட்டுரையை முடிக்கலாம்:-
முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னவர்க்குத் தீங்குள வாரி வளம் குன்றும்
கன்னங் களவு மிகுத்திடும் காசினி
என்னரு நந்தி எடுதுரைத் தானே (திருமந்திரம் இரண்டாம் தந்திரம் – திருக்கோயிலிழிவு அதிகாரத்தில் -பாடல் எண் 518)
***
INDEX
திமுக ஆட்சி, குடித்தல் அதிகரிப்பு, கடன் சுமையும் இலவசங்களும் அதிகரிப்பு, ஒன்றியம் உள்ளிட்ட வார்த்தைக் குழப்பம், வழிபாடு மாறுதல்கள், அறிஞர்களின் ஆதங்கமும், கேள்விகளும்,
திருமூலர் திருமந்திரத்தில் எச்சரிக்கை
LIQUOR SHOP Q
TAGS- திருமூலர் ,எச்சரிக்கை, திமுக ஆட்சி ,தள்ளாடும் ,தமிழகம்,
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 22-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திருவள்ளூர் திருத்தலம்!
திங்கள் அப்பு வான் எரிகாலாகித் திசைமுகனார்
தங்கள் அப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கடல் சூட நின்ற
எங்கள் அப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே!
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைவதும் புண்யாவர்த்த க்ஷேத்திரமாகக் கொண்டாடப்படுவதுமான தொண்டை நாட்டுத் தலமான திருவள்ளூர் என்று இப்போது அழைக்கப்படும் திருஎவ்வுளூர் திருத்தலமாகும். இந்தத் தலமானது சென்னையிலிருந்து மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பெருமாள் திருநாமம் : திரு எவ்வுள்கிடந்தான் என்கிற ஸ்ரீ வீ ரராகவப் பெருமாள்; தாயார் திருநாமம் : வஸுமதி தாயார் என்கிற கனகவல்லித் தாயார் வனம் : வீ க்ஷாரண்யம்; தீர்த்தம் : ஹ்ருத் தாப நாசினி தீர்த்தம்;
விமானம் : விஜய கோடி விமானம்
மிகவும் புராதனமான இந்தத் தலத்தின் விசேஷ மஹிமையை மார்க்கண்டேய புராணம் விரிவாகக் கூறுகிறது.
முன்னொரு காலத்தில் அசுர குலத்தில் உதித்த மது, கைடபன் ஆகிய இரு ராக்ஷஸர்களை வதம் செய்ய மஹாவிஷ்ணு அவர்களுடன் கோர யுத்தம் ஒன்றைச் செய்தார், அவர்கள் மீது தனது சுதர்ஸன சக்கரத்தை ஏவினார். அப்போது அந்த அசுரர்கள் பயந்து ஓடி வந்து இந்தத் தலத்தில் ஒளிந்தார்கள். மஹாவிஷ்ணு விமானத்திலிருந்து அவர்களை வதம் செய்தார். ஆகவே இங்கிருக்கும் விமானத்திற்கு ஸ்ரீ விஜயகோடி விமானம் என்ற பெயர் ஏற்பட்டது.
கிருத யுகத்தில் ப்ரத்யும்ன மஹாராஜன் என்னும் ஒரு அரசன் புத்திரப் பேறு வேண்டி மஹாவிஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய விஷ்ணு பகவான் அவன் முன்னே தை அமாவாசை தினத்தன்று தோன்றி அவனுக்குக் காட்சி அளித்தார். உனக்கு என்ன வேண்டும் என்று கேள் என்று விஷ்ணு அருள் பாலித்துக் கூற, அந்த அரசன் எனக்கு புத்திரப் பேறு தருமாறு வேண்டுகிறேன் என்றும் இன்று தை அமாவாசை தினம் என்பதால் இங்குள்ள தீர்த்தம் எல்லா புண்யதீர்த்தங்களை விட அதிக மஹிமை உள்ளதாக ஆக வேண்டுமென்றும் பிரார்த்தித்தான்.
அவன் கேட்ட இரு வரங்களையும் அருளினார் மஹா விஷ்ணு.
இன்னொரு வரலாறும் இந்தத் தலத்தைப் பற்றி உண்டு. முன்னொரு காலத்தில் தர்மஸேன மஹாராஜன் என்பவனுக்கும் அவள் மனைவியான கௌதமி என்பவளுக்கும் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பேரழகுடன் விளங்கிய அவள் யௌவனப் பருவத்தை அடைந்து ஒரு நாள் நந்தவனத்தில் மலர் கொய்து கொண்டிருந்தாள். அங்கு அவள் முன்னே ஸ்ரீ வீரராகவன் ஒரு அழகிய ராஜகுமாரனாகத் தோன்றினார். அவளை மணக்க விருப்பம் தெரிவித்து வீரராகவன் அவளது தந்தையை அணுக, அவரும் சம்மதித்து உமது ஊர், பெயர், வம்சம் முதலானவற்றைக் கூற வேண்டும் என்று கூறினார்.
உமது பெண்ணை எனக்கு மணம் முடித்துக் கொடுப்பீர்கள் என்றால் காலம் காலமாக நான் இங்கேயே இருப்பேன் என்று உறுதி கூறிய வீ ரராகவர், திருமணக் கோலத்தில் வஸுமதியின் கையைப் பிடித்தவாறே ஸ்ரீ வீரராகவன் சந்நிதியில் சென்று அந்தர்தியானமானார்.
தனக்குப் பெண்ணாக அவதரித்தவள் மஹாலக்ஷ்மியே என்பதையும் வந்து அருள் பாலித்தது மஹாவிஷ்ணுவே என்பதையும் புரிந்து கொண்ட மன்னனும் மற்றோரும் அவர்களை ஸேவித்து ஆனந்தம் அடைந்தனர்.
அவரது திருக்கல்யாண மஹோத்ஸவ ஞாபகமாக இன்று வரை தை பூரட்டாதிக்கு பத்து நாள் முன் தொடங்கி திருக்கல்யாண உற்சவம் இங்கு நடைபெறுகிறது.
இன்னொரு வரலாறும் உண்டு. ஆதியுகத்தில புருபுண்யர் என்னும் அந்தணர் தன் மனைவியான ஸதீ என்பவளுடன் புத்திரப் பேறு வேண்டி சாலியக்ஞம் என்னும் யாகத்தைச் செய்தார். அவரது பக்தியை மெச்சிய பகவான் அவருக்கு அருள் பாலிக்க, ஒரு புத்திரர் பிறந்தார்.
சாலியக்ஞம் செய்து பிறந்ததால் அவருக்கு சாலிஹோத்ரன் என்ற பெயர் ஏற்பட்டது. பெரும் தவத்தால் ஸ்ரீசாலிஹோத்ர மஹரிஷி என்ற பெயரைப் பெற்ற அவர் மிகுந்த தவத்தை இந்தத் தலத்தில் மேற்கொண்டார். அவரது தவத்தை மெச்சிய விஷ்ணு அவர் முன் ஒரு வயோதிக அந்தணராகத் தோன்றினார். அவர் திருப்தி உறும்படி அவருக்கு சாலிஹோத்ரர் அமுது படைத்தார்.
பூரணமாய் அமுது உண்ட அந்த அந்தணர் ‘திருப்தன் ஆனேன், நடந்து வந்த சிரமம் நீங்க படுத்துறங்க எவ்வுள்’ என்று கேட்டார்.
சாலிஹோத்ரர் தன் பர்ணசாலையைச் சுட்டிக் காட்ட அவர் தெற்கே திருமுடியை வைத்து படுக்க வானில் தேவர் அனைவரும் கூடி துந்துபி முழங்கி மலர் மாரி பொழிந்தனர்.
பகவான் அவர் முன் தோன்றி அருள் பாலித்ததோடு இன்று வரை அங்கு வரும் அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்.
சேஷ சயனத்தில் சயனித்து தனது நாபியில் தோன்றிய பிரம்மாவுக்கு ஒரு கையால் ப்ரணவத்தை உபதேசித்தும் மற்றொரு திருக்கையால் சாலிஹோத்ர மஹரிஷியின் சிரசில் அபயப்ரதானம் செய்து கொண்டும் தெற்கே சிரசும் வடக்கே திருவடி நிலைகளையும் வைத்து அருள் பாலிக்கிறார்
ஸ்ரீவீ ரராகவப் பெருமாள். அனைத்து பாவங்களையும் போக்கும் அரும் தலம் இது. அத்துடன் இங்கு வந்து வழிபடுவோரின் அனைத்து வியாதிகளும் உடனே நீங்கி விடும். ஆகவே பக்தர்கள் பரவசத்துடன் வைத்ய வீரராகவன் என்று பெருமாளை அழைக்கின்றனர்.
ஒரு சமயம் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட அருட்பிரகாச வள்ளலார் பெருமான் இங்கு வந்து வீரராகவரை திருஎவ்வுளூர் வீரராகவப் பஞ்சகம் பாடிப் போற்றினார். உடனே வயிற்று வலி நீங்கியது. இந்தத் தலத்தில் திருமங்கையாழ்வாரும் திருமழிசை ஆழ்வாரும் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீவீ ரராகவப் பெருமாளும் வஸுமதித் தாயாரும்அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./காணலாம்.
XXXX
இன்று உலக சம்ஸ்க்ருத தினம். பாரதப் பிரதமர் தனது ட்வீட்டில் அனைவருக்கும் நாள் வாத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஆவணி பவுர்ணமி தினத்தன்று உலக சம்ஸ்க்ருத தினம் கொண்டாடப்படுகிறது.
XXX
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா?; ஸ்டாலினை எச்சரிக்கிறார் சாமி!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற, சட்டத்தின் வாயிலாக 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகள், முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளன.
சுப்பிரமணியன் சாமி பேட்டி:
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் முதல்வராகி இருக்கிறார். தி.க., ஆட்களின் பிடியில் சிக்கி, தவறான செயல்பாடுகளை, அரசு அதிகாரத்தின் வாயிலாக செய்கிறார். சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார். திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்.
முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன். எனவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் ஸ்டாலின் ‘வாபஸ்’ பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார். அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால், நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனத்தால் கலாசாரம் சீரழியும்: விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை
”அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நடைமுறையால், தமிழகத்தில் கலாசாரமும், பண்பாடும் சீரழியும். அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்,” என, விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
ஆகம விதிமுறைகளை மீறி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என, தமிழக அரசு பலரையும் கோவில் பூஜை பணிகளுக்கு நியமித்து வருகிறது. இது பக்தர்கள் மத்தியில் கடும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக கோவில்களில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள், அர்ச்சனையின்போதும், அபிஷேக ஆராதனையின்போதும், பாராயணம் செய்யும் மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களின் உச்சரிப்பு மாறியுள்ளது. மந்திரங்கள் மற்றும் சைகை நடைமுறைகள் மாறியுள்ளன. இது ஆகமவிதிகளுக்கும், வேத நடைமுறைகளுக்கும் எதிரானதாக ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.
ஹிந்து மதத்துக்கான ஆகம, வேத நடைமுறைகள் 3,000 ஆண்டு பழமையானது. இதுவரை மன்னர் ஆட்சிக்காலத்தில் கூட கோவில் நடைமுறைகள் மாற்றப்படவில்லை.
ஹிந்து சமய மரபுகளை மீறி, அனைத்து தரப்பினரையும் அர்ச்சகர்களாக்க அதிகாரத்தை கொடுத்தது யார்? இதற்கென்று யாரிடமும் ஆலோசனை எதுவும் பெறாமல் நடைமுறைப்படுத்தியது தவறு. இது தெய்வக்குற்றம்.
திருமூலர் கூற்றுப்படி, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். தற்போது அதர்மம் மேலோங்கி வருகிறது. தமிழகத்தில் கலாசாரமும், பண்பாடும் சீரழிந்து வருகிறது.
ஜனநாயக நாட்டில் ஆளுக்கொரு சட்டம் இருக்கக் கூடாது. அனைத்து சமூகத்துக்கும் பொதுவான சட்டம் வேண்டும். தமிழக அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு, வேதாந்தம் கூறினார்.
XXX
‘சிவாச்சாரியார்களை அழித்து விடாதீர்கள்‘: நீதியரசர்கள் உத்தரவு
சென்னை- -”எந்தெந்த கோவில்களில், எந்தெந்த முறைப்படி பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறதோ; அதன்படியே செய்ய வேண்டும் என, நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த நீதி எங்களுக்கு வேண்டும்,” என, சுவாமிநாதன் சிவாச்சாரியார் தெரிவித்தார்.
சென்னை வாழ் சிவாச்சாரியார் சமூக நல சங்கம்சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சுவாமிநாதன் சிவாச்சாரியார் கூறியதாவது:அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என அரசு அறிவித்து, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவில்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பூஜை செய்தவர்களை நீக்கி விட்டு, புதிய நபர்களை அர்ச்சகர்களாக நியமித்துள்ளனர். இது, ஆகம விதி மீறல்.
பெரும்பாலான கோவில்களில் சிவாச்சாரியார்கள், தினக்கூலி, வாரக்கூலி, சம்பளம் இல்லாமல் தட்சணையை மட்டும் எதிர்பார்த்து பணிபுரிந்து வருகின்றனர். அது போன்றவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. அதைவிடுத்து, அதிக வருமானம் வரும், சிவாச்சாரியார்கள் பணியாற்றும் கோவில்களில் தான், பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர்கள் இல்லாத பல கோவில்களுக்கு அர்ச்சகர்களை நியமித்து, அனைத்து விதமான பூஜைகளையும் செய்ய வேண்டும்
அரசாங்க பணி என்பது வேறு; ஆன்மிகப் பணி என்பது வேறு.பிராமணர் சமுதாயத்தின் உட்பிரிவான ஆதிசைவர் எனும் சிவாச்சாரியார்கள் சிறுபான்மையினர். அவர்களை அழித்து விடாதீர்கள்.எந்தெந்த கோவில்களில், எந்தெந்த முறைப்படி பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறதோ; அதன்படியே செய்ய வேண்டும் என, நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த நீதி எங்களுக்கு வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் செய்திக்கு லண்டன் ஞான மயம் குழு நன்றி தெரிவிக்கிறது
Xxx
அர்ச்சகர்கள் நியமனம்: ஆகம விதிகளை மீறிய செயல்!
”கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசுவோர், கடவுளை எப்படி வணங்க வேண்டும்; யார் பூஜை செய்ய வேண்டும்; எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பது ஏன்,” என, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது: திருச்சி சமயபுரம் உள்ளிட்ட கோவில்களில், பல ஆண்டுகள் பணிபுரிந்த குருக்கள் பலரை நீக்கிவிட்டு, பிராமணர் அல்லாத பலரை அர்ச்சகர்களாக நியமித்துள்ளனர். இந்த அத்துமீறலை, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
XXX
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
XXXX
மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன்: நித்தியானந்தா அறிவிப்பு
மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டதாகவும், ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் பேஸ்புக்கில் சாமியார் நித்தியானந்தா பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 12-ம் தேதி காலமானார். அவரது உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் மறைவால் 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் என்று நித்தியானந்தா பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை சந்தித்த நிலையில் 2019ம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
Xxxx
மோடி கோவிலில் திடீரென சிலை அகற்றம் புனே நகரில் பரபரப்பு
புனே அவுந்த் பகுதியில் பிரதமர் மோடிக்கு அந்த பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சித் தொண்டரான 37 வயது மயூர் முண்டே என்பவர் கோவில் கட்டினார். கோவிலுக்குள் மோடியின் மார்பளவு சிலையும் வைக்கப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டிய மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் எனது சொந்த இடத்தில் அவருக்கு கோவில் கட்டியதாகவும், இதற்காக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவு செய்ததாகவும் மயூர் முண்டே கூறினார். மேலும் அவர், “மோடி பிரதமரான பிறகு நாட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்துக்குரிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியது, ராமர் கோவில் கட்டுவது, முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தியது போன்றவற்றில் வெற்றி கண்டு உள்ளார்” என்று கூறியிருந்தார்.
திடீரென்று சிலை அகற்றப்பட்டதற்கு தில்லியிலிருந்து வந்த கட்சித் தலைவர் உத்தரவே காரணம் என்று முண்டேயும் அவருடைய வழக்கறிஞரும் பத்திரிகையாளருக்கு நீண்ட பேட்டி அளித்தனர். பாரதீய கட்சித் தலைமை உத்தரவிட்டதால்தான் அகற்றப்பட்டது. ஆயினும் மோடி, நாட்டுக்கு விரிவான சேவை செய்து வருவதை நாங்கள் மதிக்கிறோம் என்று அவர்கள் விரிவாகப் பாராட்டினார்கள்.
Xxx
சீதையாக நடிக்க ரூ.12 கோடி கேட்ட கரீனா கபூருக்கு எதிர்ப்பு
ராமாயணம் படத்தில் சீதை வேடத்தில் நடிக்க கரீனா கபூர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. இதற்கு வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அதிக பொருட் செலவில் தயாராக உள்ள ராமாயணம் படத்தில் சீதை வேடத்தில் நடிக்க கரீனாகபூரை அணுகியதாகவும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கரீனா கபூர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து சீதை வேடத்துக்கு அதிக சம்பளம் கேட்டு மத நம்பிக்கையை கரீனா கொச்சைப்படுத்திவிட்டதாக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள். கரீனா கபூரிடம் சீதையாக நடிக்க ரூ.12 கோடி கேட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது அவர் தெளிவான பதில் அளிக்கவில்லை.
XXXX
நேயர்கள் அனைவருக்கும்
ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.
ஆவணி அவிட்ட வாழ்த்துக்கள்;
உலக சம்ஸ்க்ருத தின வாழ்த்துக்கள்
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN