Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள் அருளிச் செய்த தொல்காப்பிய சூத்திர விருத்தியை, திருவாவடுதுறை ஆதீனம் 1968-ல் வெளியிட்டது அதன் பிற்பகுதியில் ஆதீன மஹாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.
பிரத்தியயம் என்றால் என்ன ?
பிரகிருதி – இயல்பின் நிற்பது .
பிரத்தியயம் – பால், எண் , இடம், காலம், பொருள் இவற்றான் பிரக்கிருதியை
வேறுபடுத்தும் இடைச் சொற்கள்
பிராதிபதிகம் – வேற்றுமையுருபு முதலிய ஒன்றையும் ஏலாது . அவற்றை ஏற்கும் நிலையில் தனித்து நிற்கும் பெயர்ச் சொல் பொருளொடு கூடியும் வினைச் சொல்லன்றி முதலியவற்றை ஏலாது நிற்பது .
பிராதிபதிகம் என்னும் கருத்துடைய “அர்த்தவது தாது:” அப்பிரத்தியாயமாகித் திருத்தக நிற்பது பிராதிபதிகம் என்னும் பிரயோக விவேக உரைச் சூ த்திரத்தானும் அறிக
‘அர்த்தவது…..பிராதிபதிகம்’ என்பது வரையிலுள்ள பகுதி பாணினீய சூத்திரம்.
XXXX
தத்திதம் – பெயர்ச் சொல்லின் பொருள்பட வரும் விகுதி.
XXX
சுப் – என்பது வேற்றுமை உருபு
முதல் வேற்றுமை உருபாகிய ‘சு’ என்பதில் தொடங்கி ஏழாம் வேற்றுமை பன்மை உருபாகிய ‘சுப்’ என்பதன் இருபத்தொரு வேற்றுமையுருபுகளின் தொகுப்பால் உண்டாக்கிய பெயர் .
திங் – வினை முற்று விகுதி . இது ‘தி’ என்னும் ஒருமை விகுதியும் ‘அங்’ என்னும் பன்மை விகுதியும் கூட்டி அமைத்த குறியீட்டுத் தொகுப்புப் பெயர் ‘திங்’ என்பது
XXXX
ஆத்மனே பதம்
வடமொழியில் வினைச் சொற்கள், ஆத்மனே பதம் என்றும் பரஸ்மை பதம் என்றும் இருவகைப்படும் . அடித்தான் என்ற வழி , அடித்தலாகிய தொழிற்பயனையுறுவான் பிறன் ஆதலின் அது பரஸ்மை பதம் என்றும் அடித்துக்கொண்டான் .என்ற வழி , அடித்தலாகிய தொழிற்பயனையுறுவான் தான் ஆதலின் அது ஆத்மனே பதமாம் என்க.
((சுருக்கமாகச் சொன்னால் பிறர் செய்யும் செய்கை பரஸ்மை ; தமக்குத் தாமே செய்யும் செய்கை ஆத்மனே பதம் .))
பாணினி செய்த அஷ்டாத்யாயீ வியாகரண சூத்திரங்கட்குப் பதஞ்சலி முனிவர் செய்த அகலவுரை . இது ஆரிய வழக்கில் மாபாடியம் என்று அடைமொழியின்றியே வழங்கப்பெறும்.
அம் மாபாடியத்துக்கு கையட னார் , ‘பிரதீபிகா’ என்னும் பெயரால் விளக்க உரை எழுதினார். அவ்வுரையில் வேத மொழி வைதிகம் என்றும் , உலக மொழி லெளகிகம் என்றும் வழங்கப்பெற் றுள்ளது .
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
YOU ARE INVITED TO LISTEN TO OUR QUESTION AND ANSWERS ON HINDUISM (in tamil) AND WEEKLY ROUND OF HINDU EVENTS AROUND THE WORLD (in Tamil) VIA ZOOM OR FACEBOOK.COM/GNANAMAYAM
LIVE ON MONDAYS AT 14-00 HORS LONDON SUMMER TIME AND 18-30 IST. BUT YOU MAY SEE US 24 HOURS A DAY AT FACEBOOK.COM/GNANAYAMAYAM
14-9-2020 அன்று நடைபெற்ற facebook.com/gnanamayam கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ச.நாகராஜன் புனர்வசு பற்றிய கேள்விக்கு அளித்த பதில் இது. ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டன் நேரம் மதியம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. அன்பர்கள் தங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டுகிறோம்.
வணக்கம்!
சென்ற வாரம் திரு சீனிவாசன் அவர்கள் ராமனின் புனர்வசு நட்சத்திரம் பற்றிச் சொன்னார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சில நட்சத்திரங்களே கடவுளின் பெயர்களாக வருகின்றன. அதில் ஒன்று புனர்வசு. இது பற்றி உங்கள் கருத்து என்ன? புனர்வசு பற்றி புராணக் கதைகள் உண்டா?
இதோ பதில்:-
27 நட்சத்திரங்களும் அபூர்வமான வரலாறுகளைக் கொண்டவை. வானத்தில் திகழும் இவை பற்றிய ஆச்சரியகரமான உண்மைகள் புராணங்களில் கதை வடிவமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
புனர்வசு 27 நட்சத்திரங்களில் 7வது நட்சத்திரமாகத் திகழ்கிறது.
புனர்வசு தேவதையானவள் மஞ்சள் நிறமுள்ளவள். ஸ்ருக், ஸ்ருவம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றை நான்கு கரங்களில் தரித்திருப்பவள். அதிதி இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை.
ஸ்ரீராமருடைய நட்சத்திரம் என்பதால் இது விசேஷ பெருமையைப் பெறுகிறது.
புனர்வசுவின் நான்காம் பாதத்தில் ராமர் பிறந்ததால் அவர் ராசி கடக ராசியாக அமைகிறது.
புனரர்வசு என்பது புனர் மற்றும் வசு ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும்.
புனர் என்றால் மறுபடி திருப்பி வருவது. வசு என்பது ஒளி, செல்வம் உள்ளிட்ட அனைத்து நலன்களையும் குறிக்கிறது.
இந்த நட்சத்திர வடிவம் அம்புகள் அடங்கிய அம்பராவைக் கொண்டிருக்கிறது. இந்த அம்புகள் எல்லையற்ற ஆற்றல் கொண்டவை. யார் இதை உணர்ந்து ஆணயிடுகிறார்களோ அவர்களுக்கு இவை பலன் தரும்.
புராணத்திலே புனர்வசுவைப் பற்றி விளக்கமாகக் காண முடிகிறது. பிரம்மாவின் புதல்வர் மரீசி. அவரது புதல்வர் கஸ்யபர், அதாவது பிரம்மாவின் பேரர். தக்ஷ ப்ராஜாபதியின் மகளான அதிதியை கஸ்யபர் மணந்தார். அதிதி என்றால் எல்லையற்றவள் என்று பொருள். அளப்பரிய ஆற்றல் கொண்டவள் அதிதி. அதிதிக்கு ஸத்யம், தயாளம், பெருந்தன்மை, தூய்மை, அழகு, ராஜ கம்பீரம் உள்ளிட்ட பல குண நலன்கள் உண்டு. அதிதிக்கு 12 ஆதித்யர்கள் பிறந்தனர். இந்திரன், பாகன், வாயு, த்வ்ஷ்டா, வருணர், ஆர்யமான், பூஷா, மித்ரா, அக்னி, பர்ஜன்யா, விவஸ்வான், தினகர் ஆகியோர் இந்த 12 ஆதித்யர்கள்.
புனர்வசுவின் அதி தேவதையான அதிதியைப் பற்றி ஏராளமான புராணக் கதைகள் உண்டு. அதிதியின் 12 சகோதரிகள், அதிதிக்கு மஹாவிஷ்ணு வாமனனாகப் பிறந்தது, நரகாசுரன் அதிதியின் காதணிகளைத் திருடியது, புதனிடம் அதிதி சாபம் பெற்றது என இப்படி பல சம்பவங்களைப் புராணங்களிலும் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் காணலாம்.
இழந்ததைப் பெறுவது, பிரிந்த கணவன் மனைவி திருப்பி ஒன்று சேர்வது, தூர தேசங்களில் பயணம் செய்தவர் திரும்பி வருவது இவை எல்லாம் புனர்வசு நட்சத்திரம் தரும் பலன்களாகும்.
ராமரின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு முறை பார்த்தால் இந்த நட்சத்திரத்தின் பலன்கள் நன்கு தெரியவரும்.
ஒரு முறை கேட்டால் மட்டும் போதாது, மறுமுறை கேட்டால் அடைய முடியும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது புனர்வசு. எல்லையற்ற தன்மையையும் -limitless abundance – இது குறிக்கிறது.
மேலை நாட்டு வான சாஸ்திரத்தில் கேஸ்டர் மற்றும் போலக்ஸ் இந்த நட்சத்திரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.கேஸ்டர் ஒன்றை இழக்கச் செய்யும்; போலக்ஸ் அதை மீட்டுத் தரும்.
விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் 150வது நாமமாக வருவது புனர்வஸு என்ற நாமம்.
இதற்கு பாஷ்யம் அருளி இருக்கும் ஆதி சங்கரர் திருப்பித் திருப்பி உடல்களில் க்ஷேத்ரக்ஞனாக உறைபவர் விஷ்ணு என்று கூறி அருளுகிறார்.
பராசர பட்டரோ தனது பாஷ்யத்தில் மற்ற மூர்த்திகளிலும் தேவதைகளிலும் அந்தராத்மாவாக உறைபவர் விஷ்ணு என அர்த்தம் விளக்குகிறார்.
இதற்கு அடுத்து வரும் நாமம் உபேந்திரன் என்பதாகும். புனர்வஸு ராமாவதாரத்தையும் உபேந்திர என்னும் நாமம் கிருஷ்ணாவதாரத்தையும் குறிக்கிறது.
புனர்வசுவின் பெருமை எல்லையற்றது, அனைத்தையும் அளிக்க வல்லது, வேண்டியதை உடனே என்பதைக் காண்பிக்க புனர்வசு நட்சத்திரத்தில் ஜனித்த காமதேனுவைக் குறிப்பிடலாம்.
புனர்வசுவில் பிறந்த பெரும் மகான் பகவான் ரமண மஹரிஷி ஆவார். அப்பர் திருவாதிரைப் பதிகத்தைப் பாடி அருளியது போல, ரமண மஹரிஷியின் அணுக்கத் தொண்டரான முருகனார் ‘புனர்வசு வண்ணம்’ என்ற ஒரு பதிகத்தைப் பாடியுள்ளார்.
ஆயுர்வேதத்தை அருளிய புனர்வசு ஆத்ரேயா அக்னிவேசதந்த்ரா என்ற நூலை இயற்றிய அக்னிதேவரின் குரு ஆவார்.
புனர்வசு நட்சத்திரத்தை வானில் எப்படிக் கண்டு வணங்கலாம்? ஓரியன் கூட்டத்திற்கு வடகிழக்காக வட வானத்தில் உயரத்தில் இரு நட்சத்திரங்களைக் காணலாம். இவற்றில் கிழக்காக ஒளிர்வது போலக்ஸ் (Polux) என்னும் நட்சத்திரம். அதற்கு சற்று வடமேற்காக உள்ளது காஸ்டர் (Castor) நட்சத்திரம். இந்த இரட்டை நட்சத்திரங்களே புனர்வசு கூட்டமாகும். இதே ஓரியன் கூட்டத்தில் ப்ராசியன், சிரியஸ் ஆகிய நட்சத்திரங்களும் உண்டு. இவை பிரமிக்க வைக்கும் சுவையான தகவல்களைத் தருபவை; பூமியில் மனித நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை.
புனர்வசு நட்சத்திரத்திற்கு இன்னும் ஒரு பெருமை உண்டு.
இந்த நட்சத்திரம் எந்தக் கிழமை, திதியில் வந்தாலும் அதற்கு மரண யோகம் இல்லை!
இப்படி புனர்வசுவின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் வாழ்க்கையில் நம்பிக்கையைத் தரும் நட்சத்திரம் புனர் வசு. இழந்தது கிடைக்கும்; எல்லையற்ற ஆற்றல் மிக்க பாணங்களை எடுத்து அவற்றை விடுத்து வெற்றி பெறலாம். மீண்டும் மறு ஒளியைத் தரும் புனர்வசுவைப் போற்றுவோம்; வணங்குவோம்! ஒளி பெறுவோம்! உயர்வோம்!
அடுத்து இன்னும் ஒரு நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
I wrote about Sumukan Mystery six year ago. Now I have got more information which may help us to find a solution.
Manu , the first law maker, also mentioned Sumukan in the list of bad kings.
Manu says ,
“Vena was destroyed through lack of humility, and so was Nahusha , Sudas , the son of Pijavana , Sumukha , and
Nimi “– 7-41
I have given ALREADY the details I gathered from Mahabharata and Hindu Hymns (on Ganesh and Vishnu) – please see the link below.
Now I have found A reference in the book .THE INDUS SCIPT AND THE RIG VEDA. by Egbert Richter Ushanas, Delhi, 1997
The long hair and the animals surrounding him are part of the description of Enkidu in Gilgamesh epic I.ii.34-41
“Aruru washed her hands , she pinched off clay and threw it down
Enkidu she made , the hero also, born from the glory of Ninurta
The body was covered all over with hairs,
His curly hair grew heavily like that of Nisaba
He knows neither men nor country , he is clad like Sumukan
He eats with gazelles from the herbs,
With the animals he throngs in the watering place,
In their crowd his heart rejoices in the water “
It is known from fragments of epic excavated there that the Hittites were acquainted with Enkidu .
In the footnote Usanas says ,
Aruru is a name of the mother goddess,
Ninurta is the god of war,
Nisaba is the goddess of grain,
Sumukan is the lord of the beasts .
It comes in the chapter where he discusses the Pasupati seal of Indus Valley.
So the conclusion is that Pasupati, the lord surrounded by the animals in Indus seal is Sumukan.
If it is correct, then we solve two puzzles :
The Pasupati seal was only a guess by the archaeologists. Since such Lord of the Beasts figures are discovered around the world, it may not be Pasupati (Lord Siva). It may be even Sumukan.
So we solve Indus mystery and Sumukan mystery. No where in Ancient Indian history we came across a king called Sumukhan so far.
gilgamesh
Following is from my 2014 post:-
Who is Sumukan?
In Sanskrit hymns we have Sumuka as one of the names of Vishnu (See Vishnu Sahasra Nama) and one of the names of Lord Ganesh. Of the 16 names of Lord Ganesh, Sumukha is the first name. It simply means good faced, Auspicious faced etc. It is also the name of Garuda (eagle).
SUMUKHA In the Mahabarata :
The following story from Mahabharata explains clearly a clash between two groups called Nagas ( snake people) and Eagle people.
“Sumukha was a Naga. He was chosen by Matali to be the husband of his daughter Gunakeshi. His grandfather Aryaka was very pleased when informed about it by Narada .But the eagle who had previously devoured Sumukha’s father Chikura, had vowed to soon devour Sumukha also. In spite of being told of the expected short life span of Sumukha, Matali nevertheless wanted to go ahead with the marriage. He then went to Indra and requested him to give long life to Sumukha. When Indra granted this, the eagle accused Indra of giving shelter to his rightful prey and then tried to scare Indra by showing off his strength. To put the eagle in his place, Indra put his arm on the eagle’s shoulder and then asked him to lift it. The eagle found himself crushed by the weight of Indra’s arm and acknowledged his defeat. (MB:5-103/4)
This episode of early times was related to Duryodhana by Kanva Rishi in an effort to convince him that like the eagle he too would be crushed if he went ahead in his determination to fight against the Pandavas. But even these efforts made no impact on Duryodhana”. (p.281 of who is who in the Mahabharata).
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இலக்கணம் கற்போரும் பிற மொழி இலக்கணத்தை தமிழ் மொழியுடன் ஒப்பிடும் கட்டுரைகளைப் படிப்போரும் பல இலக்கண சொற்களைக் காண்பார்கள். அவற்றைத் தமிழ்- ஆங்கிலம் – சம்ஸ்க்ருதத்தில் – என்ன சொற்களால் அழைக்கிறார்கள் என்பதை அறிந்தால் இன்னும் எளிதாக, விரைவாக விளங்கிக் கொள்ள முடியும். அதற்காக பல நூல்களில் இருந்து சொற்களைத் தொகுத்து ஒரு அகராதியை வெளியிட முயற்சி செய்கிறேன். இது முழுமை பெற சில காலம் ஆகும்.
தமிழ் மொழிக்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் பொதுவான எழுத்துக்கள் இல்லாத சில ஒலிகள் , சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இந்த சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே உச்சரிப்பதா அல்லது தமிழ் முறைப்படி மாற்றி உச்சரிப்பதா என்பதற்கு இரண்டு விதிகள் உள்ளன. அதைத் தற்சமம் , தற்பவம் என்று சொல்லுவார்கள் .
தற்சமம்
இருமொழியிலும் காணப்படும் பொது எழுத்துக்கள் ஒரு சம்ஸ்கிருதத் சொல்லில் இருந்தால் அதை அப்படியே எழுதுவதோ ஒலிப்பதோ தற்சமம்.
உதாரணம்/எடுத்துக் காட்டு
கமலம், காரணம்
தற்பவம்
சம்ஸ்கிருதத்தில் மட்டுமே உள்ள சிறப்பு எழுத்துக்களைக் கொண்ட சொற்களை எழுதுகையில் அதைத் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றுவது தற்பவம் .
உதாரணம்/ எடுத்துக் காட்டு
பங்கஜம் – பங்கயம்
வருஷம் – வருடம்
ஸபா – சபை, அவை
*****
விருத்தி
உதாரணம் – தொல்காப்பிய விருத்தி உரை , நன்நூல் விருத்தி, யாப்பருங்கல விருத்தி, பெளட்கர விருத்தி
உரையின் பொது இலக்கணங்களோடு , சூத்திர பொருளை விளக்கலளவில் நில்லாது, அங்கு இன்றியமையாத கருத்துக்கள் யாவும் விளங்கத் தன்னுரையானும் ஆசிரிய வசனங்களானும் ஐயமற உண்மைப்பொருளை விரித்து உரைப்பது .
From Dandapani Desikar’s Introduction to Tolkappia Sutra Vrddhi
*****
சூத்திரம்
சூத்திரம் என்பது கண்ணாடியில் விளங்கும் நிழல்போல , ஆசிரியன் கருதிய பொருள் தெள்ளிதின் விளங்கச் சில சொற்களால் திட்பமும் நுட்பமும் பொருந்த யாக்கப்பெற்ற நூல்யாப்பு என்க .
அவற்றுட் சூத்திரந் தானே
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதலின்றி ப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே
–தொல்காப்பியம்- பொருளதிகாரம் 482
சூத்திரம் 656-ல் மேலும் விளக்கமாகச் சொல்கிறார் .
இளம்பூரணர் சொல்வதையும் காண்போம்
நுட்பம் ஒட்பம் திட்பம் சொல்லில்
சுருக்கங்கருத்து பகுதியொடு தொகை இ
வருத்தமில் பொருட்பயன் நிகழ்ச்சி சூத்திரம்
இளம்பூரணரும் இதை மேலும் விளக்குகிறார் . அவர் உரையில் காண்க.
From Dandapani Desikar’s Introduction to Tolkappia Sutra Vrddhi
ஆடி நிழலின் அறியத் தோன்றி — என்ற தொல்காப்பிய வரிக்கு ஒரு அறிஞர் நல்ல விளக்கம் கூறியுள்ளார்.
கண்ணாடியில் ஒருவர் தன முகத்தைப் பார்க்கையில் அவர் முகம் மட்டுமின்றி அவர் பின்னாலுள்ள பொருள்களும் தென்படும். யாராவது அவரைக் கொல்ல வந்தாலோ , (கிஸ்/ Kiss) முத்தம் தர வந்தாலோ அதையும் காட்டும். அதாவது வருங்கலத்தைக் காட்டும். சுற்றுமுள்ள பொருட்களைக் கொண்டு அதன் சூழ்நிலை, நிகழ் காலம், கடந்த காலத்தையும் உய்த்துணரலாம். ஆக கண்ணாடியின் பயன்கள் பல. இது போல சுருங்க உரைத்தாலும் சூத்திரம் விளக்கும் பொருட்கள் பல..
பாணினியின் சம்ஸ்கிருத சூத்திரங்களையும் அதன்மேல் எழுந்த காத்யாயனரின் வார்த்திகத்தையும் அதற்குப் பின்னார் எழுந்த பதஞ்சலி முனிவரின் மஹா பாஷ்யத்தையும் படிப்போருக்கு இது நன்கு விளங்கும்
****
அணிகள் – FIGURES OF SPEECH
ALLEGORY, FABLE, PARABLE -மற்றொறு பொருள் தோற்றும் கதை , ஒட்டுவமை
ALLITERATION – முற்றுமோனை
ALLUSIONS – மேற்கோள்கள்
ANTI CLIMAX, BATHOS, ANTI THESIS – முரண்தொடை
APHORISMS – பழமொழி/ சூத்திரம்
APOSTROPHE – விளி
ASYNDETON- உம்மைத் தொகை
CIRCUMLOCUTION, OR PHERIPHRASIS – சுற்றுச் சுழற்சி , மீமிசை
231) திரியம்பகம் 232) 108 233) சிதம்பரம் 234) திருவொற்றியூர் தலத்தில் 235) காரைக்கால் அம்மையார் 236) மாணிக்கவாசகர், திருப்பபெருந்துறையில் 237) 1.திருவாலவுடையார் 2.காரைக்காலம்மையார் 3. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4. சேரமான் பெருமாள் நாயனார் 5. நக்கீர தேவர் 6. கல்லாட தேவர் 7. கபில தேவர் 8. பரண தேவர் 9. இளம்பெருமானடிகள் 10. அதிராவடிகள் 11. பட்டினத்துப் பிள்ளையார் 12. நம்பியாண்டார் நம்பி 238) சந்திரஹாஸம் 239) சிதம்பரம் 240) இறைவன் : சுந்தரேஸ்வரர் இறைவி :மீனாக்ஷி 241) நம்பியாண்டார் நம்பி 242) கங்கைகொண்ட சோழீசுரர், கங்கை கொண்ட சோழ புரம் 243) சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. 244)ஔவையார் 245) நமசிவாய 246) ருத்திரனின் கண் என்று அர்த்தம் 247) சிவபிரானது மூன்று கண்களிலிருந்து சிந்திய மணியே ருத்ராக்ஷம் 248) மஹாபாரதத்தில் அனுசாஸனபர்வத்தில் வருகிறது. லிங்க புராணத்திலும் காணலாம். 249) மங்களகரமானவன், முழுமையானவன், தூய்மையானவன் என இப்படிப் பல அர்த்தங்கள் உண்டு. 250) ரிஷபம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
some pictures are sent by lalgudi veda; thanks.
கோவில் கோபுரம் எதற்காக ?
தமிழ் நாட்டில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 40,000 கோவில்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டைப்போல ஆந்திரம் கர்நாடகம், கேரளம், ஒரிஸ்ஸா வரை உயர்ந்த கோபுரங்கள் இருக்கின்றன. வடக்கே செல்லச் செல்ல கோபுர உயரம் குறைந்து கொண்டே வரும். இதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் படை எடுப்பாகும். அவர்கள் வேண்டுமென்றே இடித்தது பாதி; மீதிப்பாதி இந்துக்களுக்கு நேரமின்மை; வெளி நாட்டானை விரட்டுவதிலேயே முழு நேரமும் போய்விட்டது. தென்னகத்தில் இந்து மத விரோதிகளின் தாக்குதல் குறைவு. மாலிக்காபூர் என்ற வெறியன் படையெடுப்பைத் தவிர மற்ற பெரிய தாக்குதல் இல்லை. அவன் போகாத இடத்திலுள்ள பெரிய கோவில்கள் பிழைத்தன. அவன் அழித்த பல கோவில்களையும் தெலுங்கு தேச மன்னர்கள் புனரமைத்து புகழ்க்கொடி நாட்டிச் சென்றனர்.
உயர்ந்த கோபுரங்களுக்குப் பின்னால் உயர்ந்த தத்துவங்கள் உள்ளன.இதை ஆகம நூல்கள் விளக்குகின்றன. சில விளக்கங்களை இன்று காண்போம் .
கோபுரம்- ஸ்தூலலிங்கம்,
கொடிமரம் – நேர்மை,
பலிபீடம்-பாசம்,
நந்திதேவர்-பசு,
விநாயகர் – பிரணவம்,
திரைச் சீலை – மாயை,
சிவலிங்கம் – பதி,
பிரகாரங்கள் ஐந்து- பஞ்ச கோசங்கள்,
படிகள் – ஐந்தெழுத்து,
நடராஜர் – பஞ்ச்கருத்ய ஸ்வரூபி,
தக்ஷிணா மூர்த்தி- ஆனந்த ரூபி,
சோமாஸ்கந்தர் – சத், சித், ஆனந்தம்,
பார்வதி தேவி – சக்தி .
இது சிவன் கோவில் அமைப்பை நன்கு விளக்கும்.
இதைத் திருமூலரும் பாடி இருப்பதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தத்துவம் இருந்தது தெரிகிறது .
ஆய பதிதா னருட் சிவலிங்கமா
மாய பசுவுமடலே றென நிற்கு
மாய பலிபீட மாகுநற் பாசமா
மாய வரநிலை யாய்ந்துகொள்வார் கட்கே
–திருமூலரின் திருமந்திரப் பாடல்
சுவாமியும் அம்மனும் கர்ப்பக் கிருகத்தில் இருப்பர். இதற்கு மேல் விமானம் என்னும் அமைப்பு இருக்கும். நல்ல வருவாயுள்ள கோவில்களில் இந்த விமானம் தங்கக் கலசத்தால் மூடப்பட்டிருக்கும்.
இந்த விமானத்தை சிவாகமங்கள் பினருமாறு விளக்குகின்றன :-
உபபீடம் – பாதம்
அதிஷ்டானம் – முழந்தாள்
கும்பம் – நாபி
பஞ்சரம் – வயிறு
பாதவர்க்கம் – கை
பிரஸ்தரம்- தோள் மூட்டு
கண்டம் – கழுத்து
சிகரம் – முகம்
உஷ்ணிசவகை – சிகை
மஹாநாஸி மூக்கு
க்ஷுத்ர நாஸி – கண்
—-விஸ்வ கர்மீய வாஸ்து சாஸ்திரம்
****
ஸ்தபதி வை.கணபதி , மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக மலரில் எழுதிய கட்டுரையில் சொல்கிறார் –
1.நமது கோவில் அமைப்பை பிரபஞ்சத்தின் மாதிரி உருவம் ‘UNIVERSE IN MINIATURE’ என்பர்.
2.பஞ்ச பிரகாரங்களை பஞ்ச பூதங்கள் என்பர்.; அதற்குள் நுண்ணிய உருவில் இறைவன் இருக்கிறான் .
.
3.கருவறை என்று சொல்லப்படும் விமானத்தைப் பெண் வடிவம் என்றும் அதற்குள் உள்ள மூர்த்தியை உதரத்தில் உள்ள கர்ப்பம் என்றும் விசுவகர்மீயம் என்ற நூல் வருணிக்கிறது .இதனால்தான் இதை கருவறை/ கர்ப்பக் கிருகம் என்று அழைக்கிறோம்.
4. இதை கோழி முட்டை வடிவிலும் — குக்குடாண்ட — வடிவிலும் அமைக்கலாம்; காஞ்சி புரத்திலுள்ள ‘ஜ்வர ஹரேஸ்வரம்’ இப்படி அமைக்கப்பட்டது. இது ஏகாம்பரேஸ்வர் கோவிலின் தெற்கு வீதியில் இருக்கிறது.
5.சிற்ப நூல்களில் கருவறை விமானத்தை ஸ்தூல லிங்கமென்றும் கருவறைக்குள் இருக்கும் நிஷ்கள வடிவத்தை சூக்ஷ்ம லிங்கம் என்றும் கூறப்படுகிறது.
6.மானுட உடல் உறுப்புகளை அங்கம், மஹாங்கம், உபாங்கம், பிரத்யங்கம் என்று நான்காகப் பிரித்துக் கூறுவது போல விமானத்தில்
அதிஷ்டானம் என்பது மஹாங்கம்- BASEMENT
ஸ்தம்பம் அல்லது சுவர்ப்பகுதி – அங்கம் – SUPER STRUCTURE
பிரஸ்தரம் – உபாங்கம் – ENTABLATURE
சிகரம் – பிரத்யங்கம் – DOME OR ROOF ஆகும்.
7.இதையே படுத்திருக்கும் நிலையில் – சயன கோலத்தில் — பார்த்தால் ,
கர்ப்பக்கிரம – சிரஸ் / தலை
அந்தராளம் – முகம்
சுகநாசி – கழுத்து
அர்த்த மண்டபம் – புஜம்/தோள்கள்
மகாமண்டபம் – வயிறு
பிரகாரம் – கால்கள்
கோபுரம் – பாதம்
இவ்வாறு பல நூல்கள் பல விளக்கங்களைக் கூறுவதற்கு காரணம் இந்தப் பிரபஞ்சமும் , மனித உருவமும் இறைவனின் வடிவங்களே என்பதை உணர்த்துவதற்கே .
பாமர மனிதனிடம் பெரிய தத்துவங்களை சொற்பொழிவாற்றினால் விளங்காது . ஆனால் கோவிலைச் சுற்றுகையில் விளக்கினால் மனதில் பதியும். கற்றோருக்கும் கூட இக்கருத்துக்களை மனதில் பதிக்கும் MODELS / REPLICAS மாதிரிகள் இவை.
பள்ளிக்கூட, கல்லூரி சோதனைச் சாலைகளில் பல மாதிரி வடிவங்களை வைத்து இரசாயன, பெளதிக , உடற்கூறு தத்துவங்களை விளக்குவார்கள். அது போல பெரிய தத்துவங்களை விளக்கும் வடிவங்களே கோவிலின் அமைப்புகள்.
உதவிய நூல்கள் —
நால்வர் நெறி , லண்டன், 2002
கவசக் கொத்து , காரைக்குடி, 1981
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பணி மலர், 1963
*****
முந்தைய கோவில் ஆராய்ச்சிக் கட்டுரைகள்
கோவில் வகைகள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கோவ…
1 Apr 2015 – ஆயினும் மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சைப் பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோவில் கோபுரங்கள் …
9 Jun 2015 – வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும்.
உள்ளம் பெருங் கோயில் … – Tamil and Vedas
tamilandvedas.com › 2017/04/06
6 Apr 2017 – மனமே இறைவன் இருக்கும் கருவறை/கோயில். கோபுர வாசல் நம்முடைய வாய். இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள் நமக்கு அருட் …
இடிதாங்கி | Tamil and Vedas
tamilandvedas.com › tag › இடித…
30 Mar 2017 – கோபுரக் கலசம் விழுந்தாலும், கோபுரம் இடிந்து விழுதாலும் … நானே மதுரை மீனாட்சி கோவிலின் தெற்கு கோபுரத்தின் …
திரயம்பகேஸ்வரம் … – Tamil and Vedas
tamilandvedas.com › tag › திரய…
10 Dec 2015 – அங்கிருந்து திரயம்பகேஸ்வர் கோவில் சென்றோம். இது 12 … திரயம்பகேஸ்வர் கோவில் கோபுரம் தன் பழமையைக் காட்டுகிறது.
கர்நாடக அதிசயங்கள்-1 | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கர்ந…
27 Aug 2017 – மீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் …
புத்தர் கோவில் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › புத்…
6 Feb 2016 – ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்! (Post No.2514). IMG_3108 … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact. swami_48@yahoo.com).