தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 4 (Post No.7258)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 25 NOVEMBER 2019

Time  in London – 5-55 AM

Post No. 7258

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019 மூன்றாம் பகுதி கட்டுரை எண் 7250 வெளியான தேதி 23-11-2019 பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 4

ச.நாகராஜன்

அன்புத் திருவுருவங்களே!

இதயத் தூய்மையை அடைய முயலுங்கள். இதுவே உங்களது முக்கியமான முயற்சியாக இருக்கட்டும். இதய சுத்தியுடன் நீங்கள் எதையும் சாதிக்க முடியும். இதய சுத்தியை அடைய நீங்கள் புனிதமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். யார் சமைக்கிறாரோ அவருக்குப் புனிதமான உணர்வுகள் இருக்க வேண்டும்.பண்டைய காலத்தில் ஆசாரமான பிராமணர்கள் தங்கள் மனைவி சமைத்த உணவைச் சாப்பிடுவதையே வலியுறுத்துவர். இதற்குக் காரணம் என்னவெனில் இல்லத்தரசிகள் தங்கள் குடும்பம் முழுவதும் நலமாக இருக்க வேண்டுமெனபதற்காகவே உணவைச் சமைப்பர். இதற்கு மாறாக நீங்கள் சமையற்காரரை நியமித்தால், கடவுளுக்குத் தான் தெரியும் என்ன உணர்வுகளுடன் உணவை அவர்கள் சமைத்தார்கள் என்று! சமைப்பவரின் புனிதமற்ற எண்ணங்கள் உணவுக்குள் புகும், அது உங்கள் மனதை விஷமாக்கும்.

அன்னம் பிரம்மா.ஆகவே அது புனிதமான உணர்வுகளுடன் தயாரிக்கப்பட வேண்டும். உடல் சுத்தம் மட்டும் போதாது. மனதும் சுத்தமாக இருக்க வேண்டும். நீங்கள் தயாரிக்கும் உணவிற்கான காய்கறிகள் தர்மமான வழியில் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். உதாரணமாக கணவன் காய்கறிகளைச் சந்தையிலிருந்து கொண்டு வருகிறான். அவன் தனது பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பணம் தராமல் அதைக் கொண்டு வந்திருக்கலாம் அல்லது விற்பனை செய்பவர்களே தவறான வழியில் அதைப் பெற்று வந்திருக்கலாம். அப்படிப்பட்ட கறிகாய்களைச் சாப்பிடும் போது உங்கள் மனம் தூய்மையை இழக்கிறது. நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உங்களது உணவு தான் காரணம் என்பதை நீங்கள் உணர்வதில்லை. புனிதமற்ற உணவு உங்களைப் புனிதமற்ற செயல்களைச் செய்ய வைக்கிறது.

அன்புத் திருவுருவங்களே!

 உங்களது உணவை இறைவனுக்குச் சமர்ப்பித்த பின்னரே அதை நீங்கள் உண்ணுங்கள். அப்போது தான் உணவு புனிதமாகிறது. உங்கள் புத்தியைப் பிரகாசிக்க வைக்கிறது. ஒருசமயம் சிவானந்த ஆசிரமத்தின் அருகில் ஒரு ஆசிரமத்தில் ஒரு சந்யாசி வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பக்தியுள்ள ஆத்மா.ஒரு நாள் வயதான ஒரு வியாபாரி அவரது இளம் மனைவி இறந்த பதினோராம் நாள், அவரிடம் ஆசிரமத்தில் உள்ளவர்களின் உணவைத் தயாரிப்பதற்காக நன்கொடை அளித்தார்.

வியாபாரி பணக்காரர் என்பதால் பெண்ணின் தந்தையை பணம் காட்டி மயக்கி பெண்ணை மணந்து கொண்டார். தனது விதியை நொந்தவாறே அந்தப் பெண் அந்த வியாபாரியின் வீட்டில் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் தான் வாழ்ந்து வரும் வாழ்க்கையின் மீது வெறுப்புற்று அவள் கங்கையில் குதித்துத் தன் உயிரை விட்டாள். வியாபாரி அவளது ஈமச் சடங்கைச் செய்வதற்காக பதினோராம் நாள் அதைச் செய்து கொண்டிருந்தார்.

ஆசிரமத்தில் சமைக்கப்பட்ட உணவை ஏற்கக்கூடாது என்ற பழக்கம் இருந்தது.ஆகவே அந்த வியாபாரி சமைப்பதற்கு ஆகும் செலவைக் கொடுத்தார்.ஆசிரமத்தின் இதர சகாக்களுடன் அந்த சந்யாசியும் உணவை உண்டார். அன்று அவருக்கு உறக்கம் சரியாக வரவில்லை. ஒரு இளம் பெண் அவரது கனவில் வந்தாள்.

அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் இப்படி: “ புலனின்பத்திற்காக நான் ஒருபோதும் ஏங்கியதில்லை, அப்படிப்பட்ட எண்ணமும் எனக்கு வந்ததில்லை. அப்படியிருக்க எனக்கு ஏன் கெட்ட கனவு வரவேண்டும்?”

அவரது தியானத்திலும் அதே காட்சியை அவர் கண்டார்.

ஆகவே சச்சிதானந்தம் என்ற பெயர் கொண்ட தன் குருவிடம் சென்று தனது பிரச்சினையைச் சொன்னார்.

“ஸ்வாமி! நான் ஏன் அப்படிப்பட்ட புனிதமற்ற காட்சிகளைக் கண்டேன்?”அவரது குரு அவரைக் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.

அவர் வியாபாரிக்குச் செய்தி அனுப்பி அவரை வரச் சொன்னார். அவரிடம் பேசினார். அவரது மனைவியின் அகால மரணத்திற்கான காரணத்தை அறிந்தார். ஈமச்சடங்கிற்காக சமைத்த உணவை அந்த சந்யாசி உண்டதாலேயே அவள் அவரது காட்சியில் தோன்றுகிறாள் என்பதை அவர் தெரிந்து கொண்டார்.

அன்றைய தினத்திலிருந்து அந்த சந்யாசி சமைத்த உணவைச் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு பழம் மற்றும் பாலை மட்டும் உண்டு வாழ ஆரம்பித்தார்.

பிக்ஷான்னம் தேஹ ரக்ஷணார்த்தம்!

( தேஹ ரக்ஷணத்திற்கு உணவு அவசியம்)

ஒரு கார் ஓடுவதற்கு பெட்ரோல் தேவை. அதே போல உடல் நன்கு இருக்க உணவு தேவை. சில சமயம் நீங்கள் கெட்ட கனவைக் காண்கிறீர்கள், தியானத்தின் போது கெட்ட காட்சியைக் காண்கிறீர்கள். இது புனிதமற்ற உணவின் விளைவு.

ஆகவே சமைப்பதற்கு முன்னர், அதற்கான சாமான்கள் நல்ல வழியில் பெறப்பட்டதா என்று விசாரிக்க வேண்டும்.

பின்னரே உணவு உண்ணத் தக்கதாக ஆகிறது.

உணவை உட்கொள்ளும் முன்னர் நீங்கள் பிரார்த்திக்க வேண்டும்.

ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவிர்

ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம்

ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம்

ப்ரஹ்ம கர்ம சமாதினா

புனிதமான உணர்வுகளுடன் நீங்கள் பிரார்த்தித்தால் உணவு தூய்மையாகிறது.

ஒரு சமயம் விக்ரமாதித்த  மஹாராஜா ஒரு பெரிய சபையைக் கூட்டினார். அவர் ஒரு கேள்வியைக் கேட்டார்: “ புத்தி பெரிதா, மேதஸ் பெரிதா?”

சபையில் பங்கு கொண்டோர் மேதஸ் தான் பெரிது என்று கூறினர்.

 ஆனால் அவர்களின் கருத்தை விக்ரமாதித்தன் ஏற்கவில்லை. அவர் கூறினார், “புத்தியே பெரிது, ஏனெனில் அது ஆத்ம ஞானத்தைக் கொண்டிருப்பதால் அதுவே பெரிது.”

புத்திக்ரஹ்யமதிந்திரியம் (புத்தி மனத்தையும் புலனையும் கடந்திருப்பதாகும்)

***

உரை தொடரும்

‘கம், கம், கம்’ தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி241119 (Post No.7257)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 24 NOVEMBER 2019

Time  in London – 20-42

Post No. 7257

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000 

கம்-னு நிரப்புங்க; எல்லாம் ஐந்தெழுத்துச் சொற்கள்; தங்கம், வங்கம், பங்கம் என்பது போல கம்-னு முடியும் சொற்கள்

1. – கிளி

2. – சட்டை

3. – விட்டில் பூச்சி

4. – வெடிமருந்தில் முக்கியப் பொருள்

5. – யானை

6.  – ரகசியமாகச் செய்யும் தீங்கு;

முதுகில் குத்துவது

7. – ஒலிம்பிக்கில் கிடைப்பது

8. – கவலைஏமாற்ற உணர்வு

Answers

1.அஞ்சுகம், 2.கஞ்சுகம், 3.பதங்கம், 4.கந்தகம், 5.மாதங்கம்,

6.வஞ்சகம்,7.பதக்கம், 8.ஆதங்கம்

xxxxxxxxxxxxxxxxxxx

ஆணுக்குப் பிறந்த குழந்தை! (Post No.7256)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 24 NOVEMBER 2019

Time  in London – 13-03

Post No. 7256

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மஹாபாரதத்தில் சோழர் குல மூதாதரையான மாமன்னன் மாந்தாதா, அவருடைய தந்தை யவனஸ்வாவின் உடலில் இருந்து பிறந்தவர். மாபாரதம் முழுதும் சிகண்டி போன்ற திருநங்கைகள், துர்யோதனாதிகள் போன்ற டெஸ்ட் ட்யூப் (சோதனைக் குழாய்) குழந்தைகள் மற்றும் அச்சுப் பதிவு பிறப்புகள் (க்ளோன்ங்), ஜராசந்தன் போன்ற ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என ஏராளமான அதிசயப் பிறவிகள் இருக்கின்றனர். நான் 27 ஆண்டுகளுக்கு முன்னர் 21-6-1992 தினமணியில் எழுதிய பிலிப்பைன்ஸ் ஆண் கர்ப்பம் பற்றிய செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன். இன்று காலை அவரைப் பற்றிய லேடஸ்ட் செய்திக்காக கூகுள் செய்த போது அவரைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் 2017ல் ஒரு ஆணுக்கு, குழந்தை பிறக்கும் போதே இறந்து பிறந்ததையும்  2019ல் அமெரிக்காவில் ஒரு ஆணுக்குக் குழந்தை பிறந்ததையும் படித்தேன்.

பொதுவாக இத்தகைய ஆண்கள் திருநங்கைகளைப் போன்றவர்கள். ஆயினும் இரு பாலரின் ஜனன உறுப்புகளும் இருக்கும்.இதில் பல ரகம் உண்டு.

ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் 54 ஆண்கள் கர்பமடைந்தனர்!

இதோ பழைய கட்டுரைகள்:–

tamilandvedas.com › tag › மஹாபாரதம்-…



மஹாபாரதம் உண்மையே | Tamil and Vedas

23 May 2017 – மஹாபாரதம் உண்மையே; ஆண்களுக்கும் குழந்தை பிறக்கும் (Post No.3934) … Twins) ஆபரேஷன், நமக்குத் தெரியாத அதிசயப் பறவைகள், அலிகளாகப் (Transgender) பிறந்தோர் ஆபரேசன் … குழந்தை பிறப்பில் பெரிய புரட்சியே நடைபெறப் போகிறது.

tamilandvedas.com › 2014/03/26 › மஹாபா…



மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான …

26 Mar 2014 – மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!- … பேட்டியின் ஒரு கேள்வியாக மஹாபாரத கால மருத்துவம் பற்றியும் …

  1.  
  2.  

tamilandvedas.com › 2014/03/26 › பகுதி-2-…



பகுதி 2: – மஹாபாரத மர்மங்கள் …

26 Mar 2014 – முதல் பகுதியில் மஹாபாரத கதா பாத்திரங்களின் ஐந்து மர்மப் … பகுதி 2: – மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்தது!

tamilandvedas.com › 2017/11/25 › மஹாபா…

  1.  
  1.  

மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!-பகுதி1


‘Male pregnancy’ figures reveal how 54 MEN gave birth in Australia in the past 12 months 

  • 54 Australian men have given birth in the past year
  • Medicare statistics show that 22 men were from WA and 16 from NSW
  • Men also accessed abortions according to the figures
  • It is likely those who gave birth were transgender men who kept their female reproductive organs after transitioning
  • Transgender Victoria said they think the number of males giving birth with increase in coming years 

By FREYA NOBLE FOR DAILY MAIL AUSTRALIA 

PUBLISHED: 03:13, 16 November 2014 

—SU BHAM—

NUMBER 10 IN BUDDHISM, JUDAISM AND MANU SMRTI (Post No.7255)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 24 NOVEMBER 2019

Time  in London – 10-25 am

Post No. 7255

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Marici, Atri, Angiras, Bhrgu, Narada, Pulaastya, Pulaha

திருத்தலங்களில் வேடுபறி நிகழ்ச்சி நடக்கக் காரணம் என்ன? (Post No.7254)

picture by Lalgudi Veda

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 24 NOVEMBER 2019

Time  in London – 7-39 am

Post No. 7254

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

ஆண்டுதோறும் பல தலங்களிலும் திருவிழாக் காலத்தில் வேடுபறி என்று ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்குக் காரணம் என்ன?

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறைப் படித்தால் அதற்கான காரணம் நன்கு விளங்கும்.

பரவையார் மீது காதல் கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். ஆகவே நிறையப் பொருள் சம்பாதிக்க விரும்பினார்.

கொடுங்கோளூருக்குச் சென்று அங்கு சேரமான் பெருமாள் நாயனார் கொடுத்த நிதிக்குவைகளைச் சுமந்து கொண்டு அடியவர்கள்  முன் நடக்க சுந்தரர் திருமுருகன்பூண்டித் தலத்திற்கு வந்தார்.

திருமுருகன்பூண்டி என்ற திருத்தலம் இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவிநாசி-திருப்பூர் சாலையில் அவிநாசியிலிருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.

இங்குள்ள ஆலயம் முருகநாதேசுவரர் ஆலயமாகும்.

சுந்தரரிடமிருந்து தமிழ்ப்பாடல் பெற விரும்பிய முருகாவுடையார்,  சிவகணங்களை வேடுவர் உருவத்தில் அனுப்பி சுந்தரரிடமிருந்து வழிப்பறி செய்து வருமாறு தூண்ட அவர்கள் அவ்வாறே செய்தனர்.

இதனை அறிந்த நாயனார் முருகன்பூண்டி ஆலயத்தை அடைந்து ஒரு திருப்பதிகம் பாடி இறைவனின் அருளை வேண்டினார்.

சிவபிரான்  பறித்த பொருளைத் திருப்பித் தருமாறு கட்டளையிட கோபுரவாயிலில் கணநாதர்கள் குழுமி பறித்த பொருளைத் திருப்பித் தந்தனர்.

ஒவ்வொரு தலத்திலும் திருவிழாக் காலத்தில் இந்த நிகழ்ச்சி தான் வேடுபறி என்ற பெயரில் இன்றளவும் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை கொங்குமண்டல சதகம் தனது பதினைந்தாம் பாடலில் போற்றிப் புகழ்கிறது.

பாடல் :

கனத்த வடிக்கொண் முலையாள் பரவைதன் காதலினாற்

சொனத்தி லடிக்கொளும் பேராசைச் சுந்தரர் சொற்றமிழ்க்கா

அனத்தி னடையுடை யாள்பாகன் றென்முரு காபுரிசூழ்

வனத்தி லடித்துப் பறித்தது வுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : பரவையாரின் மீது கொண்ட அளவற்ற காதலினால் பொருளாசை கொண்ட சுந்தர மூர்த்தி நாயனாரிடம் பதிகம் கேட்க விரும்பிய திருமுருகன்பூண்டித் திருத்தலம் உறையும் எம்பெருமான், நாயனாரின் திருவடிகூட்டத்தார்கள் சுமந்து வந்த பொன்முடிப்புகளைப் பறித்துக் கொண்டதும் கொங்கு மண்டலமே என்பதாம்.

இந்த நிகழ்ச்சியை திரு அவிநாசிப் புராணம் இப்படிக் கூறுகிறது:

மூடியசெஞ் சடைவுடையீர் முருகவனம் பதியுடையீர்

கூடிவெகு மூர்க்கருடன் கொள்ளைகொண்ட பொருளல்ல

தேடுமலை வளநாடு புரந்தருளுச் சேரலர்கோன்

பாடுபெற வளித்தபொருள் பறிகொண்டீ ரெனப் பகர்ந்தார்

சுந்தரமூர்த்தி நாயனார் இத்திருத்தலத்தில் ஒரு பதிகம் பாடினார். அதில் ஒரு பதிகத்தின் முதல் பாடல் இது:

கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமைச் சொல்லித்

திடுகு மொட்டெனக்குத்திக் கூறைகொண்டு ஆறலைக்குமிடம்

முடுகுநாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்

இடுகு நுண்ணிடை மங்கைதன்னொடும் எத்துக்கு இங்கிருந்திர் எம்பிரானீரே.

பிரசித்தி பெற்ற திருமுருகன்பூண்டித் தலத்தில் தான் துர்வாச மஹரிஷி கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டு வந்தார் என்பதும் ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம்.

***

இதாலியில் மாபியா வன்முறை (Post No.7253)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 NOVEMBER 2019

Time  in London – 18-59

Post No. 7253

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மபியா கும்பல் பற்றி இன்னும் இதாலியிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவர்களுடைய செயல்பாடு உலகம் முழுதும் பரவி இருப்பது பற்றியும் அவர்கள் வெவ்வேறு விதங்களில் செயல்படுவது பற்றியும் வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆயினும் இதாலி, அமெரிக்கா, மெக்ஸிகோ போலீசாரின் தீவிர நடவடிக்கையால் அவர்கள் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது. அவவ்வப்போது குற்றவாளிக் கும்பல் கைது பற்றித் தகவல் வருகிறது. பாதிக்கப்பட்ட பலர் அவர்களுடைய சித்திரவதை உத்திகள், அவர்கள் தோண்டி வைத்த சுரங்கங்கள் பற்றியும் தகவல் வருகிறது. இதோ நான் தினமணியில் 1992-ல் எழுதிய மபியா கும்பல் பற்றிய கட்டுரை.

NUMBER TEN IN HINDU AND OTHER CULTURES (Post No.7252)

Ten Avatars of Vishnu

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 NOVEMBER 2019

Time  in London – 9-37 AM

Post No. 7252

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

TEN BOOKS/MANDALAS OF RIG VEDA:

The Books are called Mandalas (10)

The chapetrs or sections are called Anuvakas(85)

The hymns are called Suktas (1017 –with appendix 1028)

1st Mandala- Various seers’ hymns are in this book

2nd Mandala- Sage Grtsamada

3rd mandala- Sage Visvamitra

4th Mandala- Vamadeva

5th Mandala- Atri

6th Mandala- Bharadwaja

7th Mandala- Vashista

8th Mandala- Kanva and Angiras comosed the hymns

9th Mandala- Hymns pertaining to Soma

10th Mandala- Several poets

Hymns are mainly religious-in praise of Vedic Gods

But secular poems are also there.

XXXX

TEN INCARNATIONS IN ONE STATUE

50. TEN INCARNATIONS OF VISHNU

Matsya avatar- Incarnation as Fish

Kurma Avatar- Incarnation as Tortoise

Varaha Avatar- Incarnation as boar

Narasimha avatar- Incarnation as Man-Lion

Vamana Avatar- As a short man

Parasurama Avatar- Incarnation as Rama with a dagger

Rama Avatar- Incarnation as King Rama

Krishna- Incarnation as Krishna

Balarama/Buddha- Incarnation as Balaram/Buddha

Kalki- Yet to come ;on a white horse

 Balarama is replaced by the Buddha in some of the listings

Avatar means reincarnation. God says in the Bhagavad Gita that he would come to earth whenever there is decline in righteousness to destroy the evil and protect the good people. Other than these ten there were many more avatars. One tradition maintains that there were 18 and another 24 Avatars.

XXX

BATTLE OF TEN KINGS IN RIG VEDA

The Dasarajna or the Battle of the Ten Kings, is an important historical event alluded to in various hymns of the Rig Veda.

Sudas was the king of Bharata Kingdom. He belonged to Trstu family. At first Visvamitra was their priest. He led him to victorious campaigns on the banks of Vipas and Sutudri. Later there was some misunderstanding and Vasistha was appointed as the priest and Visvamitra was sacked. Thereupon a long and bitter rivalry ensued between the two priests and, in revenge, Visvamitra led ten kings against the Bharata kingdom.

The ten kings were from the kingdoms of Puru, Yadu, Turvasa, Anu and Drhyu, Alina, Paktha, Bhalanas, Siva and Visvanin.

In the bloody and decisive battle on the banks of River Parusni, the Bharats emerged victorious, utterly routing the ten kings. The kings of Anu and Druhyu kingdoms were drowned, while Purukutsa, King of the Puru Kingdom met his death.

XXX

TEN SIKH GURUS

Ten commandments from the Bible

–SUBHAM–

பத்து சந்யாசிகள் பிரிவு (Post No.7251)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 NOVEMBER 2019

Time  in London – 8-20 AM

Post No. 7251

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தைப் (நீயே கடவுள்/ தத் த்வம் அஸி) பின்பற்றும் சந்யாசிக்கள் பத்து சிறப்புப் பெயர்களைக் கொண்டிருப்பர். சிருங்கேரி மடத்திலுள்ள சங்கராச்சார்யார்களின் பெயர்கள் ‘பாரதி’ என்றும் காஞ்சி மடத்தின்  சங்கராச்சார்யார்களின் பெயர்கள் ‘சரஸ்வதி’ என்றும்  இருக்கும். இதுபோல மொத்தம் பத்து சிறப்பு அடைமொழிகள் உண்டு. அவையாவன

பாரதி, சரஸ்வதி, புரி, தீர்த்தர், ஆஸ்ரம, வன, ஆரண்ய, கிரி, பர்வத, சாகர என்ற பின்னொட்டுகள் (suffix) மடாதிபதிகளின் பெயருடன் சேர்க்கப்படும். எடுத்துக் காட்டாக காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர இந்திர சரஸ்வதி என்றும், அவருக்கு அடுத்தவர் ஜய இந்திர சரஸ்வதி என்றும் , அடுத்து வந்தவர் விஜய இந்திர சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஏனைய மடங்களின் சிறப்பு பின்னொட்டுகள் (SUFFIX OR EPITHETS):-

துவாரகா பீடாதிபதிகள் – ஆஸ்ரம அல்லது தீர்த்த

கோவர்தன மடாதிபதிகள் – வன அல்லது ஆரண்ய

பத்ரிநாத் ஜோதிர் மடாதிபதிகள் –  கிரி, பர்வத, சாகர

பல பெயர்களிலும் இயற்கை அம்சங்கள் (காடு, மலை, நீர்நிலை, ஊர், காட்டிலுள்ள குடிசை) ஒட்டிக்கொண்டு இருப்பதை நோக்கவும். அல்லது சரஸ்வதி (பாரதி) பெயர் இருக்கும்.

xxx

சீக்கிய மதத்தின் பத்து குருமார்கள்:–

குருநானக், அங்கத, அமர்தாஸ், ராம்தாஸ், குரு அர்ஜுன் தேவ், ஹரிகோவிந்த, ஹரி ராய், ஹரி கிருஷ்ண, குரு தேஜ்பகாதூர், குரு கோவிந்த சிம்மன் (பாரதியாரால் பாடப்பட்டவர்)

xxxx

உபசாரங்கள் பத்து

இறைவனைப் பூஜிக்கையில் 32 வகை உபசாரங்கள் செய்ய வேண்டும்; அதில் பாதி 16 (ஷோடஸ); அதுவும் முடியாவிடில் குறைந்தது 10 உபசாரம் செய்வர்; அவையாவன-

அர்க்யம், பாத்யம், ஆசமனம், ஸ்நானம், வஸ்த்ரம், கந்தம், புஷ்பம், தீபம், தூபம் நைவேத்யம்.

இதுவும் முடியாதவர்கள் தினமும் பூப்போட்டு ஏதேனும் பழத்தைப் படைக்கலாம் (நைவேத்யம் செய்யலாம்).

Xxxx

தச இந்திரியம்

ஆக்கிராணம், உபத்தம், சட்சு, சிங்குளம், சுரோத்திரம், தொக்கு, பாணி, பாதம், பாயுரு, வாக்கு.

xxx

காவிய குணங்கள் பத்து–

செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி

Xxx

ரிக் வேதத்தில் பத்து ராஜாக்கள்

தச ராக்ஞ யுத்தம் எனப்படும் பத்து அரசர் போர் ரிக் வேதத்தில் பல கவிஞர்களாலும் பாடப்பட்ட போர்- இது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்ச்சி. அந்த பத்து ராஜாக்கள் யாவர்:–

அனு, த்ருஹ்யு, புரு, துர்வாசு, யது, பக்த, பலானஸ், அலின, விசானின், சிவ (சிம்யூ, வைகானஸ் என்ற பெயர்கள் அவர்களில் சிலருடைய மாற்றுப் பெயர்கள்). இவர்கள் அனைவரும் வசிஷ்டரைக் குருவாகக் கொண்ட சுதாஸைத் தாக்கினர். சுதாஸ் வெற்றி வாகை சூடினார்.

xxx

பிரம்மாவின் பத்து புத்திரர்கள்

மரீசி, அத்ரி, ப்ருகு, ஆங்கிரஸ, நாரத, புலஸ்த்ய, புலஹ, க்ரது, ப்ரசேதஸ், வசிஷ்ட

பிரம்மாவுக்கு பத்து சரீர புத்ரர்களும் பத்து மானஸ புத்ரர்களும் இருப்பதாகப் புராணங்கள் பகரும்.

—subham–

சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி (Post No.7250)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 23 NOVEMBER 2019

Time  in London – 6-48 AM

Post No. 7250

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019 பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 3

ச.நாகராஜன்

சாயி நாமம் மதுரம் மதுரம்

சாயி ரூபம் திவ்யம் திவ்யம்

சாயி மஹிமா அற்புத சரிதம்

சதா நினைப்போம் சாயி நாமம் – ச.நாகராஜன்

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில், பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரையின் தொடர்ச்சி …

பெண்களும் வெளியில் சென்று பணம் சம்பாதித்தால் பணப் பிரச்சினையை தீர்க்க முடியும் ஆனால் வீட்டை எடுத்துக் கொண்டால் அங்கு பல பிரச்சினைகள் இருக்கும். தைரியத்திற்கும் உறுதிக்கும் பெண்களே உருவகங்கள்.  மனத்திட்பத்துடன் அனைத்துக் கஷ்டங்களையும் எதிர்கொண்டு குடும்பத்தின் கௌரவத்தை அவர்கள் காக்கின்றனர். க்ரிஹிணி என்ற சொல்லின் கௌரவத்திற்கேற்ப அவர்கள் வாழ்கின்றனர்.

ஞானத்தை அடைய மனிதன் சத்தியத்தின் வழியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சத்யம் ப்ரூயாத்

ப்ரியம் ப்ரூயாத்

ந ப்ரூயாத் அஸத்யம் அப்ரியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

(உண்மையைப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள்; விரும்பத்தகாத அஸத்தியத்தைப் பேசாதீர்கள்)

இந்த மூன்றும் ஒழுக்கம், தர்மம், ஆன்மீக மதிப்புகளை முறையே குறிக்கிறது.

அனைத்துமே சத்தியத்தில் அடங்கியிருக்கிறது.

நீங்கள் கடவுளைத் தேடி கோவில்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.

ஸத்தியமே கடவுள்.

எங்கும் பரந்திருப்பது அது. அது எல்லோருக்கும் அளவில்லாத வளத்தை அளிக்கிறது. ஆகவே ஸத்தியத்தின் வழியில் நடப்பீர்களாக. தர்மத்தை கைக்கொண்டு நடப்பீர்களாக. ஞானத்தைப் பெறுங்கள்.

இந்த சாதனைக்கு சரியான உணவை எடுத்துக் கொள்வதே முதல் படியாகும்.

அன்னம் ப்ரம்மம்.

அன்னமே ப்ரம்மத்தின் வடிவம் என்பதை நினவில் கொள்ளுங்கள்.

ரஸோ விஷ்ணு.

உடலெங்கும் பரவுகின்ற அன்னத்தின் சாரமே விஷ்ணு சொரூபம்.

போக்தா தேவோ மஹேஸ்வர:

உணவை எடுத்துக் கொள்பவரே சிவன் – அதுவே சிவ தத்துவம் ஆகும்.

இந்தப் புனிதமான உணர்வுகளை மனிதன் கொள்ளும் போது அவன் சிவனாகவே ஆகிறான்.

துறவுக்கே சிவன்

சிவன் முழு தியாகத்திற்கும் துறவுக்கும் அடையாளச் சின்னமாகிறார்.

இந்த உலகில் ஒவ்வொருவரும் தேஹாபிமானம் கொண்டிருக்கிறார். ஆனால் சிவனுக்கோ தேஹாபிமானம் இல்லை. அவருக்கு ஆத்மாபிமானம் ஒன்றே இருக்கிறது (ஆத்மாபிமானம் – அனைவர் மீதும் அன்பு)

(இங்கு பாபா ஒரு தெலுங்குப் பாடலைப் பாடுகிறார்)

தெலுங்குப் பாடல் :

ஜடாமகுடத்துடன் சந்திரனை அவர் தலையில் கொண்டிருக்கிறார்.

ஜடாமகுடத்தினிடையே கங்கை பாய்ந்தோடுகிறது.

அவரது ஒளி பொருந்திய ஞானக் கண் நெற்றியின் நடுவில் இருக்கிறது.

அவரது இளஞ்சிவப்பான கழுத்து நீல வண்ணம் பொருந்திய மலராக இருக்கிறது.

அவரது உடல் முழுவதும் விபூதி பரவியிருக்கிறது.

அவரது நெற்றி ஒரு குங்குமப் பொட்டுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

அவரது சிவப்பு உதடுகள் வெற்றிலைச் சாரால் ஒளி விடுகிறது. வைரம் பதிக்கப்பட்ட தங்கத் தோடுகள் அவரது காதுகளில் அசைந்தாடுகின்றன. அவரது முழு உடலும் தெய்வீக் ஒளியுடன் பிரகாசிக்கிறது.

(தெலுங்குப் பாடல் முடிகிறது)

ஒரு முறை பார்வதி சிவபிரானை அணுகி தமக்கென ஒரு இல்லம் வேண்டுமென்ற தனது ஆசையைக் கூறினார். பார்வதி கூறினார் :” எம்பிரானே! திருவோடேந்தி வீடுதோறும் பிக்ஷைக்காக அலைகிறீர்கள்.  நமக்கென ஒரு இல்லம் வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை. இருக்க ஒரு சரியான உறைவிடம் இல்லாமல் நாம் எப்படி வாழ்வது?”

சிவபிரான் அவரை சமாதானப் படுத்தினார் இப்படி :” பாரவதி! வீட்டைக் கட்டுவதால் என்ன பிரயோஜனம்?  நாம் அதற்குள் நுழைவதற்கு முன்பேயே எலிகள் அதைத் தமது வீடாக ஆக்கிக் கொள்ளும். எலிகளைக் கட்டுப்படுத்த ஒரு பூனை தேவைப்படும்.  பூனைக்குப் பால் கொடுக்க ஒரு பசு தேவைப்படும். இப்படியாக நமது தேவைகள் பெருகிக் கொண்டே போகும். நமக்கு மன அமைதி போய்விடும். ஆகவே அப்படிப்பட்ட ஆசைகளைக் கொள்ள வேண்டாம்.”

அவர் துறவின் திருவுருவம். முழுத் துறவு ஒருவரை ஞானத்திற்கு அழைத்துச் செல்லும். இதுவே மனித குலத்திற்கு சிவன் தரும் உபதேசம்.

ஞானம் என்பது என்ன? சிந்தனை, சொல், செயல் இந்த மூன்றிலும் தூய்மையாக இருப்பதே ஞானம். உங்கள் உடல், மனம், செயல் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான், ‘மனித குலத்தைச் சரியாகப் படிக்க மனிதனைப் படிக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது.

இதன் அர்த்தம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இணைந்திருப்பதே மனிதத்வம் என்பதாகும்.

இது மிக எளிமையானது. பின்பற்றுவதற்கு சுலபமானது.

ஆனால் யாருமே இந்த வழியில் நடக்க முயற்சியை எடுப்பதில்லை.

கங்கை அருகிலே பாய்ந்து கொண்டிருந்தாலும் யாருமே அதில் குளித்து உடலைச் சுத்தம் செய்து கொள்வதில்லை.

மக்கள் தங்களுக்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.

இது முழு சோம்பேறித்தனம்; தமோ குணத்தின் அடையாளம்.

இந்த விலங்குத் தன்மையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும், மனிதத்வத்தை அபிவிருத்தி செய்து தெய்வீக அளவிற்கு உயர வேண்டும்.

  (உரை தொடர்கிறது)

***

அவன் கண்ட உண்மை! (Post 7246)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 22 NOVEMBER 2019

Time  in London – 6-37 AM

Post No. 7246

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

by ச.நாகராஜன்

அவன் ஒரு பிராமணன்.

வேதம் படித்தவன்.

உபநிஷதம் படித்தவன்.

இதிஹாஸ புராணம் படித்தவன்.

கை நிறையக் காசுள்ளவன்.

தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் கை நிறையப் புரண்டன.

ஆனால் அவன் வேதத்தை மதித்தானில்லை.

ஓம்கார நாதத்தை ஓதினானில்லை.

சங்கீதத்தை ரசித்தானில்லை.

மனைவி மீது எரிந்து விழுந்தான்.

மகன் மகளைத் திட்டினான்.

அண்டை அயலாரை விரட்டினான்.

எதிர்ப்பட்டவரிடம் சண்டை போட்டான்.

அனைவரும் அயர்ந்து போயினர்.

அவனிடம் வெறுப்பு. காழ்ப்பு.எரிச்சல்.

இந்த சூழ்நிலையில் அவன் கைப்பணம் கரைந்தது.

வெள்ளியும் தங்கமும் போன இடம் தெரியவில்லை.

சாப்பாட்டுக்கு வழியில்லை.

சண்டையிட ஆளில்லை.

மனைவி மக்கள் ஒதுங்கினர்.

பசி, தாகம்!

அந்த அந்தணன் நடந்தான்.

மலைப் பாதை ஆரம்பம்.

அதுவரை நடந்தான்.

களைப்போ களைப்பு.

அங்கிருந்த வழிகாட்டிக் கல்லைப் பார்த்தான்.

 மேலே போக வழி என்பது போல

அம்புக்குறி ஒன்று அதில் பொறித்திருந்தது.

பொறி தட்டியது அவனுக்கு.

அந்தக் கல் சுமைதாங்கிக் கல் போலத் தோன்ற

அதன் மீது அவன் அமர்ந்தான்.

இளைப்பாறினான்.

களைப்பாறினான்.

மெல்ல எழுந்தான்.

மேலே போகும் பாதை.

வனாந்தரம் தான்.

பறவைகள் கீச்சிட்டன.

அதன் ஒலி அமர கானமாக இருந்தது.

அவன் உற்றுக் கேட்டான்.

என்ன அருமையான கீத ஒலி.

அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

அடடா,என்ன அழகு!

என்ன ஒரு பசுமை!

அருகில் இருந்த வனத்தோட்டம்

அருகில் சென்றான்.

மாம்பழங்கள்.

பழுத்த வாழைப்பழங்கள்.

வா வா என்று அழைத்தன.

உண்டான், மகிழ்ந்தான்.

அட என்ன ஒரு ருசி!

அருகில் ஒரு தடாகம்.

மானச சரோவர் போலத் தோற்றம்.

பளிங்கு போன்ற நீர்.

கையால் அள்ளிக் குடித்தான்.

அமிர்தமும் தோற்றது.

மேலே நடந்தான்.

யோசித்தான்.

என்ன காரணம், இதற்கெல்லாம்?

கர்மா? ஊஹூம்!

தர்மம் ? ஊஹூம்!

அவனே தான் இவன்!

இவனே தான் அவன்!

என்ன மாற்றம்?

ஆஹா! ஞானம் உதித்தது.

உபநிடதம் கை கொடுத்தது!

மனம்! மனமாற்றம்!

ஏமாற்றம் போனது.

பார்வையில் மாற்றம்!

பழுதெலாம் போச்சு!

ஆனந்தம் உதித்தாச்சு!

பல நாட்கள் சுற்றினான்.

அங்கு புத்துணர்வு கொண்டான்.

புதிய உறவு கொண்டான்.

மலை, அணில், குயில், தோட்டம்,

துரவு, தடாகம், தாமரை .. ஆனந்தம்.

ஒரு நாள் ஊர் நோக்கி நடந்தான்.

அனைவரும் பயந்தனர்.

வந்துட்டான்…டா!!

ஆனால் அவன் சிரித்தான்.

அவனை நோக்கி எள்ளி நகையாடினர்.

அவன் அவர்களைப் பார்த்து நகைத்தான்.

அவனை ஏசினர். அவன் சிரித்தான். ரசித்தான்.

மனைவி உறுமினாள். மக்கள் பொருமினர்.

அவன் இலேசாகச் சிரித்தான்.

மனம்… மனம்.. இலேசாக இருந்தது.

மன ஏவ மனுஷ்யானாம்!

காரணம் பந்த மோக்ஷயோ:

மனமே மனிதன்! அவனது உறவுக்கும்

துறவுக்கும் அதுவே காரணம்!

உண்டென்றால் உண்டு!

இல்லையென்றால் இல்லை!

உறவென்றால் உறவு!

துறவென்றால் துறவு!

ஆனந்தம் பரமானந்தம்.

பிரம்மானந்தம்!

அனைவரும் அவனைப் பார்த்தனர்.

அதிசயம் கொண்டனர்.

அந்த அந்தணனா இவன்?

இவனா அவன்!

எப்படி இப்படி ஒரு மாற்றம்?

உங்களிடம் நல்ல ஒரு தோற்றம்!

சொல்லுங்கள்!

அவன் சிரித்தான்; மெல்லச் சொன்னான்.

மனமே எல்லாம்! மனமே மார்க்கம்!

மனமே சொர்க்கம்; மனமே நரகம்!

மனம்.. மனம்.. மனம்.

பாடியவாறே தன் வழி போனான்.

மேலே போகும் வழியை நோக்கி

அவன் ந.. ட.. ந்.. தா…ஆ..ஆ..ன்!

***