புத்தரை சிந்திக்க வைத்த 4 நிகழ்ச்சிகள் (Post No.6385)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 14 May 2019

British Summer Time uploaded in London – 10-06 am

Post No. 6385

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாரதியார் பற்றிய நூல்கள் – 58 – (1) (Post No.6384)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 14 May 2019


British Summer Time uploaded in London – 9-46 am

Post No. 6384

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 58 – (1)

சிவ. மாதவன் : பாரதியார் கவிதைகளிள் அணிநலம்

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியார் பற்றிய அருமையான ஒரு நூலை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.

அனைத்து பாரதி ஆர்வலர்களும் இதைக் கண்டிப்பாகப் படிப்பதோடு ஒரு பிரதியை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

448 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 2002, அக்டோபரில் Elavalagan Pathippagam, New no 16, Old no 32 First Floor, Second Street, Balaji Nagar, Royapettah Chennai – 600014 – இளவளகன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. விலை ரூ 200/.

இது ஒரு ஆய்வு நூல். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து இந்த நூலை ‘முன்னேற்றமடையாத சிற்றூர்ப்புறத்திலிருந்து வந்து’, முனைவர் சிவ. மாதவன் இதைத் திறம்படச் செய்துள்ளார்; பாராட்டுக்குரியவர்!

       முன்னுரை, 1. அணிகளின் பயன்பாடும் வளர்ச்சியும், 2. பாரதியார் கவிதைகளில் மரபு உவமைகள் 3. பாரதியார் கவிதைகளில் புதிய உவமைகள் 4. பாரதியார் உவமைகள் உணர்த்தும் செய்தி, முடிவுரை, குறிப்புகள், துணை நூற்பட்டியல், இணைப்புகள் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது இந்த நூல்.

     முன்னுரையில் நூலாசிரியர், “பாரதியார் கவிதைகளில் அமைந்துள்ள அணிநலக் கூறுகளை விளக்கி அவற்றை மதிப்பிடும் முயற்சி இவ் ஆய்வில் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே, இவ் ஆய்வில் விளக்கவியல் மற்றும் மதிப்பீடு ஆய்வுமுறை (Descriptive and Evaluatory method) அணுகுமுறையாக அமைகிறது” என்று குறிப்பிடுகிறார்.

    அணிகளின் இன்றியமையாமையையும் வளர்ச்சியையும் பற்றி சிவ. மாதவன் அழகுற விளக்குகிறார்.

அணி குறித்த விளக்கமாய் நான்கு கருத்துக்களை அவர் நம் முன் வைக்கிறார் : 1)கவிதையை அழகுபடுத்துவது 2) பொருளைப் புலப்படச் செய்வது 3) இலக்கியப் புலமைக்கு வளம் சேர்ப்பது 4) அணிமைப் படுத்துவது.

உவமையின் பயன் என்ன? மதுரைக் காஞ்சியை மேற்கோளாகக் காட்டி ஆசிரியர், ‘அறிந்த பொருளைக் கொண்டு அறியாத பொருளைப் பிறர்க்கு அறிவுறுத்தல்’ என உவமையின் பயனை இவ்வாறாகக் குறிப்பிடுகிறார்.

தமிழின் அணியிலக்கணம் 1) தமிழுக்குரிய தனிமரபு 2) வடமொழியைத் தழுவியமைந்த மரபு 3) வடமொழி மரபு 4) புது மரபு என இப்படி நான்கு வகைகளாக அமைவதை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

அடுத்து தமிழில் உள்ள அணிநூல்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குகிறார் ஆசிரியர்.

வீர சோழியம் : பொருளணிகள் முப்பத்தைந்தும் சொல்லணிகள் ஏழும் இந்நூலுள் குறிப்பிடப்படுகின்றன.

தண்டியலங்காரம் : பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் ஆகிய மூன்று இயல்களைக் கொண்டது இந்த நூல்.

மாறனலங்காரம் : பொருளணியியலில் 64 அணிகளை இந்த நூல் குறிப்பிடுகிறது.

இலக்கணவிளக்கம்: 35 பொருளணிகள், 2 சொல்லணிகள் ஆகியவற்றை இது விளக்குகிறது.

தொன்னூல் விளக்கம் : 30 சொல்லணி, 30 பொருளணிகளை இது விளக்குகிறது.

முத்துவீரியம் : இதில் 58 பொருளணிகள், 14 வகை சொல்லணிகள் விளக்கப்படுகின்றன.

சுவாமிநாதம் : இதில் 31 பொருளணிகள், சொல்லணி மரபில் மடக்கணி மற்றும் 23 சித்திரக் கவிகளும் விளக்கப்படுகின்றன.

இது தவிர வடமொழி மரபை அப்படியே தந்துள்ள குவலாயனந்தம், தொனி விளக்கு உள்ளிட்ட நூல்கள் பற்றியும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

 அணிகள் பற்றி நன்கு இப்படி விளக்கிய பின்னர் இந்த வலுவான அடிப்படையில் நூலாசிரியர் நம்மிடம் பாரதியாரின் அணிநலம் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்.

பாரதியாருக்கு, ‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல், சிந்திப்பார்க்கே களி வளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல்’ (பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் வாணியை நோக்கி வேண்டுதல்) ஆகியவையே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை உண்டு.

அத்தோடு மட்டுமன்றி, ‘நாசக்கதையை நடுவே நிறுத்தி விட்டுப்

பேசும் இடைப் பொருளின் பின்னே மதி போக்கிக்

கற்பனையும் வர்ணனையும் காட்டிக் கதை வளர்க்கும்

விற்பனர் தம் செய்கை விதமும் தெரிகிலன் காண்” என்ற அவர் தம் பாடல் அடிகளால் வெற்றுக்கு கதை வளர்ப்பதில் அவரது ஆர்வமின்மையை நன்கு  தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த அடிப்படையில் பாரதியார் பாக்களில் நுழைந்தால் அடடா, எத்தனை அற்புதமான அனுபவங்கள் ‘அணி அணியாக’!

அத்தனையையும் விளக்குகிறார் சிவ. மாதவன்.

     பாரதி படைத்த பயன் உவமத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு:

“போனதற்கு வருந்திலன் – மெய்த்தவப்

     புலமை யோனது வானத் தொளிருமோர்

மீனை நாடி வனைத்திடத் தூண்டிலை

     வீசலொக்கு மெனலை மறக்கிலேன்”  

போனதற்கு வருந்துவது வானத்து நட்சத்திரத்தைத் தூண்டில் போட்டு வளைத்துப் பெற இயலாததைப் போல ஆகும்.

    பாரதியாரின் மெய்யுவமத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு :

துரியோதனனைப் பற்றிய பாரதியாரின் வர்ணனை:

“உடல் வற்றித் துரும்பொத்து இருக்கின்றான்”

வடிவம் சார்ந்த உவமம் இது.

அடுத்து, “ சுருளலை வெள்ளம் போலத்

தொகையிலாப் படைகள் கொண்டே” என அவர் கூறுவது எண்ணிக்கை சார்ந்த உவமையாகும்.

     இப்படி நூல் முழுவதும் பாரதியார் கையாண்ட அணிகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன.

இன்னும் சிலவற்றை அடுத்துக் காண்போம்.

  • தொடரும்

            ***

subham

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி13519 (Post No.6383)

Written by London  Swaminathan
swami_48@yahoo.com


Date: 13 May 2019
British Summer Time uploaded in London – 20-4
4

Post No. 6383

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.  (6 எழுத்துக்கள் ) -ஜனவரி 1-ம்தேதி கொண்டாடுவர்

4A. (2) பெண்ணின் மறு பகுதி/ இடம் செல்லவும்

5.(2)- பெருமாள் கோவிலில் இது சர்க்கரைப் பொங்கலால் நிரப்பப்படும்

7. (3)முருகனை மணந்த தமிழ்ப் பெண்

8. (4)சீற்றம் மிக்க வேங்கை

9. (4)- இடது கையின் மறு பக்கம்

10. (3)- பஞ்ச பாண்டவர்களில் பலம் மிக்கவன்

கீழே

1.நளவெண்பா பாடியவர் (5 எழுத்துக்கள் )

2.ஸ்ரீ (2)

3.பாவை  பாடியவர்(4)

4.குழந்தை உருவாகும் முதல் நிலை(2)

5.துறவற ஒழுக்கம் உடையவன்(5)

6.அந்தக் கால நாணயத்தின் கீழ்மட்ட அளவு; 192= ஒரு ரூபாய்(5)

8.(2) ரசத்துக்கும் சாம்பாருக்கும் தேவை/மேல் நோக்கிச் செல்லவும் ;

8.(2) அடுப்பிலிருந்தும் வரும்; எரிமலையில் இருந்தும் வரும்

–சுபம்–

நாலு பேர் கொடுக்கும் உணவை சாப்பிடாதே!-மருத்துவத்தில் எண்-4 -part 2 (Post No.6382)

Written by London  Swaminathan
swami_48@yahoo.com


Date: 13 May 2019


British Summer Time uploaded in London – 13-
51

Post No. 6382

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

to be continued…………………………………..

Don’t Take Food from 4 People – Number Four in Medicine -Part 2 (Post No.6381)

Written by London  Swaminathan
swami_48@yahoo.com


Date: 13 May 2019


British Summer Time uploaded in London – 13-36

Post No. 6381

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Xxx subham xxx

Ekadasi | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ekadasi/

They fast between sunrise and sunset. Hindu fasting has no strict rules. But most of them starve from dawn to dusk. Theydon’t eat any cooked food in the …

CHANAKYA’S WARNING ABOUT FOOD HABITS … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/chanakyas-warning-about-food-habits…

Translate this page

1 Jan 2018 – It is very true that the food shapes our body. In the olden days they used to say ‘you are what you eat‘ and ‘Tell me the books you read, I will tell …

eat twice | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/eat-twice/ – Translate this page

30 Oct 2017 – EAT ONLY TWICE: VEDA SAYS (Post No.4351) … The beasts (animals) can eat whatever and whenever they liked, in season or out of season.

Amazing power of human mind | Tamil and Vedas

Amazing power of human mind

5 Jun 2011 – Many of us know that we are what we eat. But only a few people knew we are what we think. Lord Krishna in Bhagavad Gita says,”Let a man lift …

Why Do Hindus Practise Homeopathy? | Tamil and Vedas

Why Do Hindus Practise Homeopathy?

19 Nov 2011 – The message is same, but they convey it in different ways. … “One fourth of what you eat keeps you alive and three fourths of what you eat …

You’ve visited this page 2 times. Last visit: 26/05/16

Knowledge of Medicine and Method of Treatment in … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/knowledge-of-medicine-and-method-…

Translate this page

11 Jan 2017 – and the Nurse/ compounder (Kural 950). Parimel azakar, the most famous commentator of Tirukkural, explains the attributes thus of the four …

Susruta | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/susruta/

Knowledge of Medicine and Method of Treatment in Tamil and Sanskrit … It shows that the doctors of ancient India had a nurse or compounder for assistance.

to be continued………………………………………….

மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே! (Post No.6380)

Written by S NAGARAJAN
swami_48@yahoo.com


Date: 13 May 2019


British Summer Time uploaded in London – 11-09 AM

Post No. 6380

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இறைவன் பற்றிய இரகசியங்கள் -கட்டுரை எண் 5626  வெளியான தேதி 5-11-2018

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே கட்டுரை எண் 6357 வெளியான தேதி : 8-5-19

இவற்றின் தொடர்ச்சியாக இதோ ஒரு கட்டுரை :-

மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே!

ச.நாகராஜன்

இறைவனை ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் வியந்து போற்றுகின்றன. என்றாலும் அவனை முழுதுமாக விரித்துரைக்க முடியவில்லை. சில பாடல்களின் தொகுப்பு இதோ:-

பரிபாடல் – முதல் பாடல்

திருமால் –

பாடியவர் பெயர் தெரியவில்லை.

ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை

தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,

மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்

சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,

வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5


எரிமலர் சினைஇய கண்ணை; பூவை

விரிமலர் புரையும் மேனியை; மேனித்

திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்

தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை

எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை– 10


சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்

ஏவல் உழந்தமை கூறும்,

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

அமர் வென்ற கணை

இணைபிரி அணி துணி பணி எரி புரை

விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15

நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு

கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி

நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்

தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்

எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20


றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு

இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்

மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி

மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை

உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25


போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்

சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்

உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.


சொல்லில் அடங்காப் பெரும் புகழ்

பொருவேம்என்றவர் மதம் தபக் கடந்து,

செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30


இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!

தெருள நின் வரவு அறிதல்

மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:

அன்ன மரபின் அனையோய்! நின்னை

இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35


அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்

பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை

மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்

திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்

துதி மொழிகள்
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;

திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்

மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;

அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்

திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45


ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்

மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;

நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்

புலமும், பூவனும், நாற்றமும், நீ;

வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50


நிலனும், நீடிய இமயமும், நீ.

அதனால்,

இன்னோர் அனையை; இனையையால்என,

அன்னோர் யாம் இவண் காணாமையின்,

பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55


மன்னுயிர் முதல்வனை ஆதலின்,

நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!

நின் ஒக்கும் புகழ் நிழலவை;

பொன் ஒக்கும் உடையவை;

புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60


எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;

மண்ணுறு மணி பாய் உருவினவை;

எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,

ஆங்கு,

காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை


யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,

ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்

வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே;

திருவாசகம் – மாணிக்கவாசகர் அருளியது

சிவபுராணம்
(திருப்பெருந்துறையில் அருளியது)

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ⁠5 

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ⁠10 

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ⁠15 
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி 

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் 
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை 
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். ⁠20 

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி 
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி 
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய், 
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் 
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் ⁠25 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠30 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் 
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற 
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் 
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ⁠35 

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா 
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி 
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே 
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ⁠40 

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் 
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் 
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் 
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே 
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே ⁠45 

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் 
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த 
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை ⁠50 

மறைந்திட மூடிய மாய இருளை 
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி 
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, 
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை 
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, ⁠55 

விலங்கு மனத்தால், விமலா உனக்கு 
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் 
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி 
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, 
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் ⁠60 

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே 
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே 
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே 
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் ⁠65 

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே 
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே 
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே ⁠70 

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் 
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே 
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் ⁠75 

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே 
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே 
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே 
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற 
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் ⁠80 

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் 
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் 
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே 
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப 
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று ⁠85 

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் 
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே 
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே 
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே 
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ⁠90 

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 
பல்லோரும் ஏத்தப் பணிந்து. ⁠95 

அப்பர்

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. 

கம்ப ராமாயணம்

கடவுள் வாழ்த்து

உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலு நீங்கலா

அலகி லாவிளை யாட்டுடையா ரவர்

தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே

சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

கடவுள் வாழ்த்து

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

கம்ப ராமாயணம் – இரணியன் வதைப் படலம்

சாணிலும் உளன்,ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட

கோணினும் உளன், மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற

தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன், இத்தன்மை

காணுதி விரைவின் என்றான்; நன்று எனக் கனகன் நக்கான்!

தாயுமானவர்

 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்


அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
        ஆனந்த பூர்த்தியாகி
அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
        அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
        தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
        தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
        எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
        என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
        கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
        கருதிஅஞ் சலிசெய்குவாம்.  

திருமழிசைப் பிரான் அருளியது :-

பூநிலாய வைந்துமாய்ப் 

புனற்கண்நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் 

சிறந்தகா லிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி 

வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணநின்னை 

யார்நினைக்க வல்லரே?  (1) 

 
ஆறுமாறு மாறுமாயொ 

ரைந்துமைந்து மைந்துமாய், 
ஏறுசீரி ரண்டுமூன்று 

மேழுமாறு மெட்டுமாய், 
வேறுவேறு ஞானமாகி 

மெய்யினொடு பொய்யுமாய், 
ஊறொடோ சை யாயவைந்து 

மாய ஆய மாயனே. (2) 


ஐந்துமைந்து மைந்துமாகி 

யல்லவற்று ளாயுமாய், 
ஐந்துமூன்று மொன்றுமாகி 

நின்றவாதி தேவனே, 
ஐந்துமைந்து மைந்துமாகி 

யந்தரத்த ணைந்துநின்று, 
ஐந்துமைந்து மாயநின்னை 

யாவர்காண வல்லரே? (3) 


மூன்றுமுப்ப தாறினோடொ 

ரைந்துமைந்து மைந்துமாய், 
மூன்றுமூர்த்தி யாகிமூன்று 

மூன்றுமூன்று மூன்றுமாய, 
தோன்றுசோதி மூன்றுமாய்த் 

துளக்கமில் விளக்கமாய், 
ஏன்றெனாவி யுள்புகுந்த 

தென்கொலோவெம் மீசனே. (4) 

 
நின்றியங்கு மொன்றலாவு 

ருக்கடோ றும் ஆவியாய், 
ஒன்றியுள்க லந்துநின்ற 

நின்னதன்மை யின்னதென்று, 
என்றும்யார்க்கு மெண்ணிறந்த 

ஆதியாய்நின் னுந்திவாய், 
அன்றுநான்மு கற்பயந்த 

வாதிதேவ னல்லையே? (5) 


நாகமேந்து மேருவெற்பை 

நாகமேந்து மண்ணினை, 
நாகமேந்து மாகமாக 

மாகமேந்து வார்புனல், 
மாகமேந்து மங்குல்தீயொர் 

வாயுவைந் தமைந்துகாத்து, 
ஏகமேந்தி நின்றநீர்மை, 

நின்கணேயி யன்றதெ. (6) 


ஒன்றிரண்டு மூர்த்தியா 

யுறக்கமோடு ணர்ச்சியாய், 
ஒன்றிரண்டு காலமாகி 

வேலைஞால மாயினாய், 
ஒன்றிரண்டு தீயுமாகி 

யாயனாய மாயனே 
ஒன்றிரண்டு கண்ணினுனு 

முன்னையேத்த வல்லனே? (7) 


ஆதியான வானவர்க்கு 

மண்டமாய வப்புறத்து, 
ஆதியான வானவர்க்கு 

மாதியான வாதிநீ, 
ஆதியான வானவாண 

ரந்தகாலம் நீயுரைத்தி, 
ஆதியான காலநின்னை 

யாவர்காண வல்லரே? (8) 


தாதுலாவு கொன்றைமாலை 

துன்னுசெஞ்ச டைச்சிவன், 
நீதியால்வ ணங்குபாத 

நின்மலா.நி லாயசீர் 
வேதவாணர் கீதவேள்வி 

நீதியான வேள்வியார், 
நீதியால் வணங்குகின்ற 

நீர்மைநின்கண் நின்றதே (9) 

 
தன்னுளேதி ரைத்தெழும் 

தரங்கவெண்த டங்கடல் 
தன்னுளேதி ரைத்தெழுந் 

தடங்குகின்ற தன்மைபோல், 
நின்னுளேபி றந்திறந்து 

நிற்பவும் திரிபவும், 
நின்னுளேய டங்குகின்ற 

நீர்மைநின்கண் நின்றதே. (10) 

அறபுதமான இந்தப் பாடல்கள் விளக்க முடியா இறைத் தன்மையைச் சற்று விளக்கிப் பார்த்து, ‘அட, இது யாரால் முடியும்’ என்று வியக்கின்ற பான்மையைப் பார்க்கலாம்.

****

–subham–

Number Four in Medicine—Part 1 (Post No.6379)

Written by London Swaminathan
swami_48@yahoo.com


Date: 12 May 2019


British Summer Time uploaded in London – 21-18

Post No. 6379

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

subha,m

SWAMI’S CROSS WORD 12519 (Post No.6378)

HOMA, HAVAN

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 12 May 2019


British Summer Time uploaded in London – 16-26

Post No. 6378

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

1. – (9 LETTERS) THIS HOMA IS DONE TWO TIMES EVERYDAY WITH MILK OFFERING BY BRAHMINS. DURING BHOPAL POISON GAS ACCIDENT ,,,,,,,,,,,,,,, PEOPLE ESCAPRD; 3000 OTHER DIED

8. – (3)DEBT; EVERDAY HINDUS ARE SUPPOSED TO CLEAR  THREE DEBTS.

9. (3)THE DIVINE NAME WHICH GANDHIJI SAID WHEN HE WAS SHOT DEAD.

10. -(9)  FULL OF WAVES IS THE MEANING IN Sanskrit; girls name.

11. – (3)SESAME SEEDS OFFERED TO DEPARTED SOULS WITH WATER

12. – (6) NOT FAR, NEAR IN SANSKRIT

13. – (3+4)PRANAVA MANTRA+  ONE SYLLABLE BHIJA MANTRA OF GODDESS

DOWN

1. –  (5 letters) WEALTH; ONE OF THE FOUR HINDU GOALS

2. – (5)WISDOM, DIVINE KNOWLEDGE

3. -(6) INTER GALACTIC HINDU SAINT WHO DEFATS EINSTEINS’ THEORY OF LIGHT; HE CHNTS NARAYANA.

4. – (5)ONE WHO STICKS TO A RELIGION BORN IN INDIA

5. -(5) HIS NAME IS NUMBER THREE; HIS BROTHERS’ NAMES ARE EKTA= NUMBER ONE AND DWITA= NUMBER TWO IN MAHABHARATA

6. –(4) QUEEN IN INDIAN LANGUAGES

7. -(6) ACID; SOUR IN SANSKRIT.

WAVES
WEALTH

கடுக்காய் சாப்பிடு; மோர் குடி–மருத்துவத்தில் எண் 4- Part 1(Post No.6377)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 12 May 2019


British Summer Time uploaded in London – 14-34

Post No. 6377

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

காலையில் நீர், பகலில் மோர் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/காலையில்-நீர்-பகல…

1.      

Translate this page

3 Jul 2015 – போஜனாந்தே பிபேத் தக்ரம் வாசராந்தரே பிபேத் பய: நிசாந்தே ச பிபேத் வாரி த்ரிபி: ரோகோ ந ஜாயதே சாப்பிட்ட பின்னர் மோர் …

இரவில் பால் சாதம், பகலில் தயிர் சாதம் …



https://tamilandvedas.com/…/இரவில்-பால்-சாதம்-…

1.      

Translate this page

5 Jun 2016 – இரவில் பால் சாதம்பகலில் தயிர் சாதம் ஆயுளை அதிகரிக்கும்! (Post No 2869) … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact …

இரவில் பால் சாதம், பகலில் தயிர் சாதம் …



https://swamiindology.blogspot.com/2016/06/post-no-2869.html

4 Jun 2016 – இரவில் பால் சாதம்பகலில் தயிர் சாதம் ஆயுளை அதிகரிக்கும்! (Post No 2869). Written by … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact .

subham

சைவ உணவு சாப்பிடுவது தப்பா? (Post No.6376)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 12 May 2019


British Summer Time uploaded in London –10-13 am

Post No. 6376

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))