WRITTEN BY S NAGARAJAN Post No. 10,560 Date uploaded in London – – 14 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
அனைவருக்கும் எமது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
சூரிய தேவனே, உன்னைத் தொழுது போற்றுகின்றோம்! ச. நாகராஜன்
மகர சங்கராந்தி! சூரியன் தன் பாதையை மாற்றுகின்ற காலம்! உத்தராயணம் பிறக்கிறது. உலகத்தில் உள்ள நாகரிகங்கள் அனைத்தும் போற்றும் உயிர் காக்கும் அற்புத மஹரிஷி சூரியன்! இந்தப் பாதைக்காகத் தான் காத்திருந்தார் பீஷ்ம பிதாமகர், தன் இருப்பிடம் ஏக! சிவ பிரான் சூர்யாஷ்டகத்தில் ‘மகாபாபஹரம் தேவம்’ என்று பலமுறை போற்றும் அற்புத பகவான் சூரியன்.
தேவி பாகவதம் சிறப்புக்களைக் கூறி வியக்கும் தேவன் சூரியன். பாரதியார் ஞாயிறு வணக்கம் என்று கூறி கவிதைப் பாமாலை சூடி மகிழும் அற்புத கிரகம் சூரியன். மயூர கவி சூரிய சதகம் பாடி தொழுது தன் நோயைப் போற்றிக் கொண்ட வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று. நவ கிரக நாயகன் சூரியன். ஜோதிடம் வியக்கும் அற்புத காரகன் சூரியன். சூரியனார் கோவிலில் குடி கொண்டு அருள் பாலிப்பவன். கஹுராஹோ கோவிலில் வியக்க வைக்கும் சிற்பங்களுடன் தன் புகழ் பரப்புபவன்.
நூற்றுக் கணக்கான கோவில்களில் தன் ஒளிக்கதிர் கொண்டு சிவபிரானைத் தொழுபவன். ஆகவே அக்கோவில்களுக்கு சூரிய பூஜைக் கோவில்கள் என்ற சிறப்பைத் தருபவன். மாமல்லபுரத்தின் குகைச் சிற்பங்களில் சூரியன் சித்தரிக்கப்படுகிறான். சோழ மன்னர்கள் தங்களைச் சூரிய குலத்தவர் என்று எழுதி வைத்துள்ளனர்.
சூரிய சந்திரர் என்று வால்மீகி ராமாயணத்தில் பல முறை பல எடுத்துக்காட்டுகளுக்கு ஆதாரமாகத் திகழ்பவன். சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் வைத்துத் தன் கவிதா சக்தியினால் பல அபூர்வ உண்மைகளைத் தருபவன் கம்பன்.
அவனொத்த மஹா கவிஞர்கள் தங்கள் தங்கள் கவிதைகள் மூலம் அவனை ஏற்றிப் புகழ் அடைகின்றனர். 108 நாமங்களால் சூரிய அஷ்டோத்திரம் சொல்பவர்களுக்கு அருளை வாரி வழங்குபவன்.
வெல்ல முடியா ராவணனை வெல்ல அகஸ்தியர் ஆதித்ய ஹ்ருத்ய ஸ்தோத்திரத்தை ராமருக்கு அருள அதைத் துதித்து முக்கோடி வாழ்நாளைக் கொண்ட ராவணனின் வாழ்நாளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார் இராம பிரான். ‘சுட்டும் விழிச் சுடர் தான் சூரிய சந்திரரோ’ என்று பாரதி பெண்ணின் கண்ணுக்கு உவமை கூறும் பெருமை படைத்தவன் சூரியன்.
ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி TO SOPHIA என்ற கவிதையில் ‘THY DEEP EYES, A DOUBLE PLANET’ என்று கூறி அவன் புகழ் பாடிப் பெருமைப் பட வைத்தவன். பொழுது புலர்ந்தது என்று திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாட்டுக்களை அருளிய மூல காரணத்துக்குரியவன்.
உலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் ஜீவனைத் தருபவன்; பரிபாலிப்பவன்.
தாவரங்களுக்கு உயிர் ஆற்றலைத் தருபவன். ஒரு நொடியில் அவன் தரும் சக்தியைப் பெற பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலையும் வியக்க வைப்பவன். தன் ஒளியால் பல கிரகங்களையும் பரிபாலிப்பவன். சௌரம் என்ற ஆண்டுக் கணக்கைத் துவக்கி வைப்பவன். பல புராணங்களில் பல்லாயிரம் ஸ்லோகங்களால் துதிக்கப்படுபவான்.
ஏழு குதிரைகள் கொண்டவன். ஏழு வண்ணத்தான். எழுத ஒண்ணா வண்ணத்தான். ஒற்றைச் சக்கரத் தேரைக் கொண்டவன்.
மயூர கவியின் சூரிய சதகத்தில் ஒரு ஸ்லோகத்தை இங்கு பார்த்துப் பரவசமடைவோம்:
தாமரை மலர் மஹாலக்ஷ்மியின் இருப்பிடம். அவள் மலரப் போகும் தாமரை மலரின் ‘மொக்கு’ என்ற குடிலில் ஒளிந்து கொண்டிருப்பவள். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு லக்ஷ்மியின் கடைக் கண் பார்வையும் அதனால் செல்வம் உண்டாக வேண்டும் என்ற நோக்கத்தால், கிரணங்கள் என்ற தனது கைகளால் தாமரை மொட்டுக்களைச் சூரியன் திறந்து விடுகிறான். உடனே உள்ளே இருக்கும் லக்ஷ்மி தென்படுகிறாள். அவளது பார்வை பக்தர்களின் மீது விழுகிறது. பக்தர்கள் உடனே செல்வந்தர்கள் ஆகின்றனர். இதற்காகவே தான் சூரியன் தாமரை மலரை மலரச் செய்கின்றானோ!
இருள் கருமை நிறம். யமனைப் போன்றது. யமனோ மக்களின் உயிரை வாங்கி விடுகிறான். மக்களின் உணர்வை இருள் வீழ்த்தி விடுகிறது.
சூரியன் தன் பல்லாயிரக்கணக்கான கிரணங்களால் யமனைப் போன்ற இருளை வீழ்த்தி ஒழித்து மக்களின் சங்கடங்களைப் போக்கி அவரவர் செயல்களில் ஈடுபடச் செய்கிறான். இப்படி மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் சூரிய பகவானின் மாந்துளிர் போலச் சிவந்த இளம் கதிர்கள் உங்களைக் காக்கட்டும்.
இப்படி அற்புதமான கருத்துக்கள் உடைய நூறு ஸ்லோகங்களால் சூரியனைத் துதித்து மகிழ்கிறார் மயூர கவி! நம்மையும் மகிழ வைக்கிறார்.
பொங்கல் நன்னாளில் சூரிய பூஜை செய்வோம்! சிறப்போம்!
அனைவருக்கும் எமது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
tags- பொங்கல் ,வாழ்த்துக்கள், மகர சங்கராந்தி, சூரியன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நேற்று “தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் பற்றி புதிய தகவல் ? TIME TRAVEL காலப் பயணம் செய்யலாம்! ” என்ற தலைப்பில் வெளியேயான கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.
அதர்வண வேத (அ .வே ) 19ஆவது காண்ட 53, 54 ஆவது மந்திரங்கள் அளிக்கும் மேலும் வியப்பான அறிவியல் செய்திகள் இதோ:-
ஏழு என்ற எண்ணை பல்வேறு பொருள்களில் புலவர் பயன்படுத்துகிறார்.; 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயனர் திணறுவது போலவே வெள்ளைக்கார வியாக்கி யானக்காரர்களும் மூச்சு முட்டித் திணறுகிறார்கள்.
நான் கண்ட விஞ்ஞானக் கருத்துக்களை மட்டும் சொல்கிறேன்.
வான சாஸ்திரம் (ASTRONOMY AND PHYSICS) படித்தவர்களுக்கும் பெளதீக சாஸ்திரம் படித்தவர்களுக்கும் ஒரு வியப்பான செய்தி தெரியும். உலகில் எல்லாப் பொருட்களும் செயல்பட்டுக்கொண்டே இருக்கும். நகர்ந்து கொண்டே இருக்கும் இதை பாரதியார், மாணிக்க வாசகர் முதலியோர் அழகாக பாடியுள்ளனர் . நம் பூமி தன்னைச் சுற்றுவதோடு, சூரியனைச் சுற்றுவதோடு சூரியனுடன் ஓடிக்கொண்டே இருக்கிறது. சூரியனோவெனில் எல்லாக் கிரகங்களையும் இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது . அதாவது பிரபஞ்சம பலூன் போல ஊ
திக் கொண்டே இருக்கிறது. இதை உணர்ந்த இந்துக்கள் பூமிக்கும் பிரபஞ்சசத்துக்கும் அண்டம் = EGG SHAPED,GLOBULAR பிரம்மாண்டம் BIG EGG என்றெல்லாம் பெயர் சூட்டி வெள்ளைக்காரர்களை முந்திச் சென்றனர். உலகிலுள்ள எல்லாப் பொருட்களுக்கும் ஈர்ப்பு விசை GRAVITY உண்டு; வானிலுள்ள பிரமாண்டப் பொருட்களுக்கு அதைவிட அதிகம் ஈர்ப்பு விசை உண்டு என்று அவைகளுக்கு கிரஹம் GRAHA என்று அறிவியல் பெயர் சூட்டினார்கள். கிரக என்றால் பிடித்தல், பற்றுதல், ஈர்த்தல் ; ஆங்கிலத்தில் உள்ள கிராவிடி, கிரிப், கிராப் GRAVITY, GRIP, GRAB= GRAHA எல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்களே.
முதல் மந்திரத்தில் முனிவர்கள் சூரியனுடன் பயணம் செய்வதை, முதல் கட்டுரையில் சொன்னேன். சூரியனை வருணிக்கும் புலவன், ” எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் என்கிறான். ஆக அவர்களுக்கு வட்ட வடிவ (WHEEL LIKE) கிரகங்களும் தெரியும். அது பால்வெளி MILKY WAY மண்டலத்தில் ஒடிக் கொண்டு இருப்பதும் தெரியும் . அவைகள் தன்னைத் தானே சுற்றுவதும் தெரியும். இதனால் சுற்றும் சக்கரத்தை உவமையாயாக்கினார்கள் !!!!
அவை எல்லாம் எங்கே செல்கின்றன? இதற்கும் மந்திரம் பதில் சொல்கிறது ” இந்த புவனங்களை எல்லாம் ஒன்று சேர்த்து முதற் தேவனுக்குச் செல்கிறான் ; இந்த வரிகள் சூரியன், பிரம்ம லோகத்தையோ, சத்திய லோகத்ததையோ நோக்கி ஒடிக்கொண்டு இருக்கிறான் என்று பொருள்படும் .
உலகில் இந்துக்கள் சொல்லும் கால அளவு மட்டுமே விஞ்ஞான கருத்துக்களுடன் பொருந்தி நிற்கினறன ; நாம் மட்டுமே பிரம்மாவுக்கு கோடிக்கணக்காண ஆண்டுகளை ஆயுளாகக் கற்பித்துள்ளோம். பிரம்மாவும் கல்பம் தோறும் மாறுவார் என்கிறோம். இவை எல்லாம் ஊன்றி ஆராயப்படவேண்டிய விஷயங்கள்.
மூன்றாவது மந்திரத்தில் ஒரு அற்புதமான வரி வருகிறது பூரண கும்பம் என்பதை வெள்ளைக்காரர்கள் பீக்கர் என்று மொழி பெயர்த்துள்ளனர். இது பொங்கி வழிவதாக மந்திரம் பேசுகிறது. இதைக் காலம் பொங்கி வழிகிறது என்று கொண்டால் , பல விதமாகக் கருத்து சொல்லலாம். சூரியன் என்று கொண்டால் , மிகவும் பொருத்தமாக இருக்கும். சூரியனில் ஒவ்வொரு நொடியிலும் பல கோடி ஹைட்ரஜன் குண்டுகள் வெடித்தவண்ணம் இருக்கின்றன. ஹைட்ராஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்னும் மூலகமமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. அப்போது வீசும் சுவாலைகளின் உயரமே பல மில்லியன் மைல்கள் . இதை பொங்கி வழியும் பூரண கும்பம் என்று புலவர் வருணிக்கிறார் போலும்.
1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு BIG BANG ஏற்பட்டது. இது நிறைய இடங்களில் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் வருகிறது . என்ன முடிவு என்பதும் அறிவியல் அறிஞர்கள் ஊகத்தில் மட்டுமே உளது. இந்துக்கள் இதை ஸ்வயம்பூ (தானாகவே உருவான) தெய்வீக சக்தி என்கின்றனர். இது ஒன்பதாவது பத்தாவது மந்திரத்தில் வருகிறது ; வேத கால இந்துக்களுக்கு எவ்வளவு விஞ்ஞான சிந்தனை, அணுகுமுறை இருந்தது என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது.
காஸ்மாலஜி COSMOLOGY எனப்படும் அண்டப் பிறப்பியல் தொடர்பான ரி.வே.(RV, அ .வே. (AV) துதிகள் அனைத்தும் கேள்வி வடிவத்தில் இருக்கும். இது ஒரு பாணி, ஸ்டைல் STYLE, GENRE என்பதை அறியாத வெள்ளைக்காரர் கள், ‘பார்த்தீர்களா, ரிஷிகளுக்கு அந்தக் காலத்திலேயே சந்தேகம் எவ்வளவு இருந்தது! என்று எழுதி உளறித் தள்ளிவிட்டார்கள் . சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் கவிதை பாடிய தாயுமானவ சுவாமிகள் கூட
அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா
யானந்த பூர்த்தியாகி
யருளொடு நிறைந்ததெது? தன்னருள் வெளிக்குளே
யகிலாண்ட கோடி யெல்லாந்
தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது? மனவாக்கினிற்
றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்
தந்தெய்வ மெந்தெய்வ மென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது?
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா
யென்றைக்கு முள்ள தெது? மேற்
கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெது?வது
கருத்திற்கிசைந்த ததுவே
கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்
என்று எது ? , எது ? என்று கேள்வி கேட்டு நம்மை சிந்திக்க வைத்து, இறைவனே அது என்பார்; க (யார்) என்று பல்லவி உடைய ஒரு ரி.வே.(RV) பாடல் உளது. அது கூட மாக்ஸ் முல்லருக்குப் புரியவில்லை! ரிஷிகள் ‘சந்தேகப் பேர்வழிகள்’ என்று விமர்சித்துள்ளார்.
ஆங்கிலத்தில் விரிவான கட்டுரை உளது. இரண்டாவது துதியில் (AV .LIV .BOOK 19) உள்ள அறிவியல் விஷயங்கள் இதோ:-
மாபெரும் பிரபஞ்ச வெடிப்பில் BIG BANG 1400 கோடி ஆண்டு சித்திரத்தில் – வரை படத்தில் – எதற்குப் பின்னர் எது தோன்றியது? என்று கால அட்டவணை கொடுத்து இருக்கிறார்கள் அறிஞர்கள். அதே போல இந்த துதியானது , டைம் டேபிள் கொடுக்கிறது.
“Sages inspired with holy knowledge mount him” (SAGES CAN DO TIME TRAVEL)
“Kāla created yonder heaven, and Kāla made these realms of earth. (BILLIONS OF EARTHS)
By Kāla, stirred to motion, both what is and what shall be expand.” (EXPANDING UNIVERSE)
“He made, he stirred this universe to motion” (BIG BANG )
“In Kāla erst the text produced what is and what is yet to be.”
“On Time is laid an overflowing beaker” (Boiling Sun?)
நிலம், நீர், நெருப்பு , வளி , அண்ட வெளி, பல உலகங்கள் , பிரம்மம் என்று அடுக்கிக்கொண்டே போகிறார் புலவர் . ஆங்கில மொழி பெயர்ப்பாளர்களும் கூட தெய்வீக சக்தி என்று எழுதியுள்ளனர் இது எல்லாம் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி பெயர்ப்பு. அப்போது வான சாஸ்திரம், அண்டத்தின் தோற்றம், கருந்துளைகள் பற்றி அதிகம் தெரியாது.வேதங்களுக்குப் பின்னர் வந்த பகவத் கீதை முதலியவற்றில் உள்ள காலம் TIME, கருந்துளைகள் BLACK HOLES ஆகியவற்றையும் பின்னணியாகக் கொண்டு பார்க்கையில் நமக்கு முழு சித்திரம் கிடைக்கிறது!
–SUBAHAM—
சூரியன், வாலகில்யர் , சுடர்கொடு, திரிதரும், முனிவர்
THUMB SIZED MEN IN GULLIVER’S TRAVELS OF JONATHAN SWIFT
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,528
Date uploaded in London – – 5 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புறநானூற்றில் புலவர் நரசிம்மன் !
ஜெயலலிதாவுக்கு ஏன் பரிதாபச் சாவு ?
பிரேமதாசாவின் உடல் சிதறுவது பாபாவுக்குத் தெரியும்!
வாலகில்யர்கள் என்னும் கட்டைவிரல் அளவேயுள்ள முனிவர்கள் 60,000 பேர் சூரியனுடம் வலம் வருவது பற்றி புறநானுறு , சிலப்பதிகாரம், திருப்புகழ் ஆகியன என்ன சொல்கிறது என்பதை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் “சூரியனுடன் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் யார் ? “ என்ற தலைப்பில் எழுதினேன் (2011 ம் ஆண்டு கட்டுரை இணைப்பு கீழே உள்ளது )
இப்பொழுது அதர்வண வேதத்தைப் படித்தபொழுது புதிய தகவல் கிடைத்திருக்கிறது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது தமிழர்களுக்கும் தெரியும் என்பது சங்க இலக்கியக் குறிப்புகளால் தெளிவாத் தெரிகிறது. அதர்வண வேதத்தின் ( அ. வே) கடைசி காண்டங்கள் – அதாவது பத்தொன்பதாவது, இருபதாவது காண்டங்கள் — ரிக் வேத செய்யுட்களை மீண்டும் கூறுகின்றன. அதாவது உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தின் மறு பதிப்பு !
அதில் உள்ள முக்கிய வரிகளைக் குறிப்பிட்ட பின்னர் எனது வியாக்கியானத்தைத் தருகிறேன்:–
இரண்டும் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாள் நமக்குக் கழிந்தால், யமனுடைய வீட்டுக்குப் போக தயார் ஆகிறோம் என்று பொருள்.
அதர்வண வேதத்தில் ( அ. வே) சூரியனுடன் சவாரி செய்யும் முனிவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது . வியாக்கியனக்காரர்கள் அங்கு வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புறநானூற்று வரி அப்படியே உள்ளது.
“சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும்” என்பது புறநானூற்று வரி . (பாடல் 43) இதை எழுதியவர் பெயர் நரசிம்மன். அதாவது தாமப்பல் கண்ணன்
ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் — என்பது நரசிம்ம காயத்ரி மந்திரம்
இதில் தீக்ஷ்ண தம்ஷ்ட்ர என்பதன் தமிழ் ஆக்கமே “தாமப்பல் “. கண்ணன் என்பது அவர் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்றும் கொள்ளலாம் .
அ .வே. முதல் துதி சூரியனை போற்றுகிறது. இதில் சூரிய ஒளியில் காணப்படும் 7 வண்ணங்கள் 7 குதிரைகளாக வருணிக்கப்படுகின்றன. இதை நாம் வானவில் ஏற்படுகையில் காண்கிறோம். சூரிய ஒளியை PRISM பிரிஸம் என்னும் முப்பட்டைக் கண்ணாடி வழியே பாய்ச்சினாலும் தெரியும் .
“முதல் துதியின் முதல் மந்திரத்தில் அறிஞர்களான கவிகள் அவனில் ஏறுகிறார்கள் ; எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் “– என்ற வரிகள் வருகின்றன. ஏனைய ஒன்பது மந்திரங்களில் இன்னும் பல அறிவியல் தகவல்கள் உள்ளன..
அ .வே. மந்திரங்களை இந்திய விஞ்ஞானிகள் உட்கார்ந்து ஆராய்ந்தால் அமெரிக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் சொல்லுவதற்கு முன்னரே நாம் பல உண்மைகளை சொல்ல முடியும்
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய வாலகில்யர் கட்டுரையில் அவர்கள் அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுத்து நிறுத்தும் ஓசோன் வளி மண்டலம (OZONE LAYER, Ultra Violet Rays) போன்றவர்களாக இருக்கலாம் என்று எழுதி இருந்தேன். இப்பொழுது அவர்கள் “காலத்தில் பயணம் செய்யும் முனிவர்கள்” என்ற பொருளும் தொனிப்பதை TIME TRAVELLERS உணர்கிறேன் .
கால யந்திரம் – டைம் மிஷின் TIME MACHINE NOVEL BY H G WELLS — என்ற கதையை சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினார். அது முதற்கொண்டு மனிதன், பழைய காலத்துக்குப் பயணம் செய்ய முடியுமா? வருங்காலத்துக்குப் பயணம் செய்து எதிர்காலத்தைப் பார்க்க முடியுமா ?என்றெல்லாம் விவாதித்து வருகிறான். இதில் இந்துக்களுக்குத் தெளிவான கருத்து உள்ளது.
கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பார்க்க முடியும் ; குறிப்பாக நம் உடலுக்குள் நம் PREVIOUS BIRTH STORIES முன்பிறவிக் கதைகள் ஒரு பிலிம் சுருள் FILM ROLL போல சுருட்டி வைக்கப்பட்டுள்ள்ளது என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம் புராணக் கதைகளும் இதையே புகலும் . சிலப்பதிகாரத்தில் கூட சாமி வந்து ஆடும் பெண்மணி, கண்ணகி, கோவலன் ஆகியோரின் முற்பிறப்பு வரலாறுகளைக் கூறுவதைக் காண்கிறோம்.
சுந்தரரும் அப்பரும் “காலத்தில் பயணம்” TIME TRAVEL செய்து இறந்த பையனையும் பெண்ணையும் மீட்டு வந்ததையும் எழுதியுள்ளேன். அவர்கள் இப்போது என்ன வயதுடன் இருப்பார்களோ அப்படி வளர்ந்த நிலையில் திரும்பி வந்தார்கள் என்று சேக்கிழார் பாடுகிறார்; 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடியது. ஆக இந்துக்கள் சொல்லுவது காலம் என்பது வட்டவடிவமானது CYCLICAL. அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை. ஆனால் ஐன்ஸ்டைன் EINSTEIN போன்ற விஞ்ஞானிகள் காலம் என்பது நேர்கோட்டில் பயணம் செய்கிறது என்கிறார்கள். நாம் சொல்லுவதே சரி என்பதை அவர்கள் விரைவில் ஒப்புக் கொள்ளுவர். மேலும் தேவர்கள் ஒளி வடிவில் (DEVA= LIGHT) இருப்பதால் ஒளியின் வேகத்தில் செல்வதோடு மனோ வேகத்திலும் (Speed of Thought) செல்ல முடியும் என்பது இந்துக்களின் கண்டு பிடிப்பு.
ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணம் செய்தால் அவர்களுக்கு என்றும் 16 வயது; அதாவது நித்திய மார்க்கண்டேயன் என்று ஐன்ஸ்டைன் சொல்கிறார். ஆனால் அந்த வேகத்தில் பயணம் செய்ய முடியாது என்பதும் அதை மிஞ்சவே முடியாதென்பதும் அவர்தம் துணிபு. ஆனால் நாம், அதை மிஞ்ச முடியும் எதிர்காலத்தைச் சென்று பார்ப்பதோடு அதில் தலையிடவும் முடியும் என்கிறோம்.
பகவத் கீதையின் விஸ்வரூப தரிசனக் காட்சியைப் படித்தவர்களுக்கு இது தெள்ளிதின் விளங்கும். அர்ஜுனன், தனது எதிரிகளைக் கொல்லுவதற்கு முன்னமே, அவர்கள் கொல்லப்பட்டு கிருஷ்ணனின் வாயில் புகுவதைக் கிருஷ்ணன் காட்டுகிறார். ஆக எதிர்காலத்தில் நடக்கப்போவதைக் காணலாம்.
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், அரியலூரில் காவிரி வெள்ளத்தில் முழு ரயிலும் அடித்துச் செல்லப்பபோவதை அறிந்து, எம் எஸ் சுப்புலட்சுமி அந்த ரயிலில் போகவேண்டாம் என்று தடுத்ததை உலகமே அறியும் . மைக்கேல் ஜாக்சன் தற்கொலை, பிரேமதாச குண்டு வெடியிப்பில் உடல் சிதறி அழிதல் — இவற்றை முன்னரே அறிந்த சத்ய சாய்பாபா — அவர்களை பார்க்க மறுத்ததையும் பத்திரிக்கைகளில் நாம் படிக்கிறோம்.
இந்திரா காந்தியின் துர் மரணத்தை அறிந்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், அவரைப் பார்க்க மறுத்தார். ஆனால் சுவாமிகளின் பரம சீடரான இந்திய ராஷ்ட்ரபதி ஆர். வெங்கடராமன் வேண்டியதன் பொருட்டு சந்தித்தார். அப்போதும் அவர் போக்கு சரியில்லை என்றே சுவாமிகள் எச்சரித்தார் ; காஞ்சி மடத்துக்கு கொடுமை இழைத்த ஜெயலலிதாவின் பயங்கர, பரிதாபச் சாவினை முன்னரே அறிந்த சங்கராச்சார்யார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் , ஜெயலலிதாவுக்கு எதிரான ஆபிசார யக்ஞத்தை (தீயில் மிளகாய் போட்டு மந்திரம் சொல்லி எதிரியை ஒழிக்கும் வேள்வி) தடுத்து நிறுத்தினார்.
அவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப்போவது தெரியும். ஆனால் பெரும்பாலும் அதைத் தடுத்து நிறுத்த மாட்டார்கள் . ஏசுவுக்கு தான் அகால மரணம் அடையப்போவது தெரிந்து 13-ஆவது ஆள் காட்டிக் கொடுப்பான் என்கிறார். ஆயினும் “ஏ தேவனே, ஏ தேவனே என்னை ஏன் கைவிட்டீர் (ஏலி, ஏலி லாமா சபக்தானி ) என்று சாதாரண மனிதன் போல சிலுவையில் கதறினார்.
இந்த பிளாக்கில் வெளியான பல நூறு அற்புதங்கள் சாது, சந்யாசிகள் காலப் பயணம் TIME TRAVEL செய்ய முடியும் என்பதையும் மிகவும் அரிதாகவே சாதுக்கள் அதில் தலை இடுவர் என்பதையும் காட்டுகின்றன.
நாரத மகரிஷி பற்றிய குறிப்புகள் தமிழில் முதல் தடவையாக சிலப்பதிகாரத்திலும், சம்ஸ்க்ருதத்தில் அதர்வண வேதத்திலும் வருகிறது. த்ரி லோக சஞ்சாரியான அவர் மனோ வேகத்தில் பல உலகங்களுக்குச் சென்று வந்ததை இந்துக்கள் எல்லோரும் அறிவர் .
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் , இந்த இரண்டு அ.வே . துதிகளில் உள்ள வேறு சில அறிவியல் கருத்துக்களையும் எடுத்துக் காட்டுகிறேன்.
WRITTEN BY LONDON SWAMINATHAN Post No. 10,424 Date uploaded in London – – 8 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதர்வண வேதத்தின் ஏழாவது காண்டத்தில் அடுத்தடுத்து மூன்று பாடல்கள் சூரியன், சந்திரன் மற்றும் அமாவாசை , பெளர்ணமி பற்றிய பாடல்களாகும்
1000 moon seeing festival at PuttapaarthiGrand Yagna at Puttaparthi
சூக்தம் 394 அமாவாசை ‘அம்’ என்ற சொல்லுக்கு ஒன்றாகக் கூடியிருத்தல் என்று பொருள் . ‘வச’ என்றால் வசித்தல். இந்த ரிக் வேத கால ஸம்ஸ்க்ருத்ச் சொல்லை நாம் எல்லோரும் இன்றும் எல்லா இந்திய மொழிகளிலும் பயன்படுத்துகிறோம். தமிழில் ‘வசிக்கிறேன்’ என்றால் எல்லோருக்கும் புரியும். அதுமட்டுமல்ல ஸ்ரீனிவாஸ், சீனிவாசன் என்றால் லெட்சுமிக்கு மார்பில் நிரந்தர வசிப்பிடம் கொடுத்த பெருமாளைக் குறிக்கும். பல கட்டிடங்களிலும் ஹோட்டல்களிலும் ‘நிவாஸ்’ என்ற சொல்லையும் காணலாம் .
இன்னொரு முக்கிய விஷயம் இந்த துதி தேவி மீதான துதியாகும். இந்துக்கள் பெளர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் தேவியரைத் துதித்து யாக யக்ஞங்கள் செய்வர் ; பிற்காலத்தில் இது நின்றுபோய், வெறும் பூஜையாக மாறிவிட்டது இன்றும் முழுநிலவு நாளன்று தேவி பூஜை, அல்லது விளக்கு பூஜை நடக்கும். XXX அனுமதி என்றால் என்ன?
தமிழர்களும் மற்ற மொழியினரும் அனுமதி (ADMISSION, PERMISSION) என்ற சொல்லை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றனர். சம்மதம், பெர்மிஷன், அட்மிஷன் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். இது உண்மையில் நமக்கு எல்லாம் நன்மை செய்யும் தேவதையின் பெயர் ஆகும்; நமக்கு வேண்டியதை எல்லாம் அனுமதிப்பதால் அந்த தேவதையை நாம் அனுமதி என்கிறோம்.
பவுர்ணமி தேவதையை ‘அனுமதி’ என்றும் அமாவசை தேவதையை ‘குஹு’ என்றும் அழைப்பர். இது தவிர சுபகா, ராகா முதலிய தேவதைகளும் நமக்கு வேண்டியனவற்றைத் தரும் தேவதைகள் ஆவர்.
உலகில் இந்துக்கள் மட்டுமே எல்லா பவுர்ணமிகளிலும் விழாக் கொண்டாடுகின்றனர். எல்லா அமாவா களையும் நீத்தார் நினைவுக்காக ஒதுக்கிவிட்டனர்.
அவர்கள் ஆதி காலம் முதல் கிரங்களையும் சூரிய சந்திரனையும் வணங்கினர் ; கிரகணங்களை முன் அறிவித்தனர் ஆடி, தை அமாவாசைகளில் எல்லா ஜாதியினரும் நீத்தார் கடன் செலுத்தினர். கும்ப மேளா போன்ற விழாக்கள் வியாழன் கிரஹத்தின் சஞ்சாரத்தை ஒட்டி செய்யப்பட்டது. தீபாவளி போன்ற பண்டிகைகள் அமாவாசையை ஒட்டி அமைந்துள்ளன. XXX
சூக்தம் 395 பவுர்ணமி பற்றியது. இதில் சந்திரனை நீண்ட ஆயுளுடன் தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். இந்துக்கள் மட்டுமே சந்திரனை தாவர வளர்ச்சியுடனும் தொடர்பு படுத்துகின்றனர். எதிர்காலத்தில் இதை விஞ்ஞானிகளும் உறுதி செய்கையில் இந்தியர்கள் பெருமை கொள்ளலாம். சத்ய சாய் பாபா போன்றோர் சஹஸ்ர சந்திர தரிசன நிகழ்ச்சியை உலகம் வியக்கும் வண்ணம் நடத்திக்காட்டியதால் ஆயிரம் பிறை காணுதல் எவ்வளவு முக்கியமானது என்று தெரிகிறது. இது சந்திர தரிசனத்தின் பெருமையை உலகிற்கு அறிவிக்கத்தான் என்றால் மிகையாகாது.
இந்த துதியில் சந்திரனை ‘போர்த் தெய்வம்’ (GOD OF WAR) என்று சொன்னதற்கும் ‘பலம் வாய்ந்த காளை’ (MIGHTY BULL) என்று வருணித்ததற்கும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. சந்திரன் மனதைப் பாதிப்பவன் என்ற ஒரு குறிப்பு ரிக்வேதத்தில் (10-90) உளது
மனு போன்றோரும் ஏனையோரும் அம்மாவாசை, முழுநிலவு நாட்களில் செய்யும் யக்ஞங்கள் ‘நினைத்தை எல்லாம் வாரி வழங்கும்’ என்று கூறுகின்றனர். அதனால்தான் முழு நிலவு தேவதைக்கே ‘அனுமதி’ என்று பெயர் கொடுத்துவிட்டனர். சூக்தம் 396 ‘சூரியனும் சந்திரனும்’ என்ற தலைப்பில் உளது . உலகில் நாமும் சூரியன் மறைவது உதிப்பது, நிலவு உதிப்பது மறைவது ஆகியவற்றைக் காண்கிறோம். ஆனால் இந்த வேத. காலப் புலவர் மட்டும் கற்பனைச் சிறகை தட்டிவிட்டார். சூரியனும் சந்திரனும் இரண்டு இளைஞர்கள் போல கடலில் ஒருவரை ஒருவர் விரட்டி விளையாடுகின்றனர் என்கிறார். அற்புதமான கற்பனை! கண்ணாமூச்சி விளையாடாத சிறுவர் இருக்கமுடியாது அந்த விளையாட்டை இருவரும் விளையாடுவது என்பது இயற்கையிலேயே நடைபெறும் உதயமும் அஸ்தமனமும் ஆகும்.
நிலவை தாவர வளர்ச்சசியுடனும் ஆயுளுடனும் தொடர்பு படுத்தும் இந்த துதிகளுக்கு இதுவரை வெளிநாட்டு விஞ்ஞானிகள் ஆதரவு தரவில்லை. எதிர்காலக் கண்டுபிடிப்புகள் இந்துக்கள் சொன்னதை ருசுப்பிக்கும் என்பதில் ஐயமில்லை அதனால்தான் நாம் சஹஸ்ர சந்திர தரிசனத்த்தை ஒரு மைல் கல்லாக வைத்துக் கொண்டாடுகிறோம்.
நிலவை ஒரு தினத்தின் கொடி (Flag of the Day) என்றும் இந்த துதி வருணிக்கிறது. உலகில் கொடிகளைக் கண்டுபிடித்தவர்களும் நாம்தான்! ராமாயண, மஹாபாரதத்தில் ஒவ்வொருவருக்கும் கொடிகள் உள்ளன. சிந்து சமவெளியிலும் ஊர்வலத்தில் கொடி போன்ற ஒன்றை ஏந்திச் செல்லுகின்றனர். இன்றும்கூட தமிழ் நாட்டு கோவில் வீதி உலாக்களில் சுவாமிக்கு முன்னர் கொடிகள் , பாவட்டாக்கள் , சின்னங்களைத் தூக்கிச் செல்வதைக் காண்கிறோம்
அதர்வண வேதத்தில் உள்ள இந்த மூன்று துதிகளும் நமக்கு ஏராளமான விஷயங்களைத் தருகின்றன. ‘சாத்யர்கள்’ என்னும் வானுறை தெய்வங்களையும் ரிஷி குறிப்பிடுகிறார்.
கடலில் அலைகளை அதிகரிக்கும் பவுர்ணமி அமாவாசை தினங்களில் வேதம் கற்பிக்கும் பள்ளிகள் இன்றும் அடைக்கப்படுகின்றன. அதே போல அஷ்டமி நவமி அன்றும் வேதம் கற்பிக்கப்படுவதில்லை. இவை எல்லாம் சந்திரனின் நடமாட்டத்தை நன்கு அறிந்த ரிஷி முனிவர்கள் செய்த ஏற்பாடு.
KANCHI SHANKARACHARYA ATTENDED SAHSRA CHANDRA DARSANA FESTIVAL IN 2008 (AT PUTTAPARTHI)
(இது தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளில் விரிவான விளக்கம் கொடுத்துள்ளேன் –subham– TAGS –அனுமதி குஹு , ராகா , பெளர்ணமி, அமாவாசை , கண்ணாமூச்சி , சூரியன், சந்திரன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸுக்கு(Socrates) இந்து மத உபநிஷத்துக்கள் அத்துப்படி என்று பல ஆங்கில நூல்கள் வந்துவிட்டன. சாக்ரடீஸ் நேரடியாக நமக்கு எதையும் எழுதி வைக்க வில்லையாயினும் அவருடைய பிரதம சீடன் பிளாட்டோ(Plato) எழுதிய விஷயங்கள் மூலமாக நாம் முழு சித்திரத்தைப் பெறுகிறோம்.
சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர் அவருக்கு முந்தைய பித்தகோரஸ் (Pythagoras) முதலியோர் மூலம் இந்து மத நூல்களை அறிந்ததை நாம் ஊகிக்க முடிகிறது. பித்தகோரஸ் தியரம் (Pythagoras Theorem தேற்றம்) என்பது இந்துக்கள் முன்னரே வேத காலத்தில் சொன்னது என்பதை இப்பொழுது உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்ளுகின்றனர்.(கணித வரலாறு பற்றிய நூல்களைக் காண்க)
ஆக, பித்தகோரஸ், அவருக்குப் பின்னர் சாக்ரடீஸ், அவரது சிஷ்யன் பிளாட்டோ, அவரது சிஷ்யன் அரிஸ்டாட்டில் (Aristotle) , அவரது சிஷ்யன் மாமன்னன் (Alexander)அலக்ஸ்சாண்டர் என்று வரிசையாக இந்து மத ஆதரவாளர்களைக் காணமுடிகிறது. கிரேக்க அறிஞர்களே இவர்களுடைய இந்து மத தொடர்பு, சைவ உணவு ஆதரவு பற்றி எழுதிவிட்டனர்.
நான் செய்த ஆராய்ச்சியில் வள்ளுவருக்கு சாக்ரடீஸ் தெரியும் என்று கண்டுபிடித்தேன். 1990-களில் லண்டனிலிருந்து டாக்டர் இந்திரகுமார் வெளியிட்ட மேகம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இதை எழுதி அது 2015ல் விநாயகா பதிப்பக புஸ்தத்த்திலும் வந்துவிட்டது. (காண்க – தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்)
குறள் 580-ல் நண்பர்களே விஷம் கொடுத்தாலும் அதை நண்பர்கள் மனம் வருந்தாமல் இருக்க குடிப்பது நாகரீகம் என்று வள்ளுவர் பாடுவது சிவபெருமானை அல்ல; சாக்ரடீஸையே என்று நான் எழுதியுள்ளேன்.
சாக்ரடீஸ் போதித்த ‘உன்னையே நீ அறிவாய்’ (Know thyself) என்ற ஆத்ம விசாரம், உபநிஷத் வாக்கியம் என்பதை உலகமே அறியும். மேலும் சாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், நண்பன் கிரிட்டோ(Creto) வை அழைத்து “ஏய் , ஆத்தாளுக்கு கோழியை பலி கொடுக்க மறந்துவிடாதே ; நான் ஆத்தாளுக்கு நேர்த்திக் கடன் செய்ய வேண்டியுள்ளேன்” என்று சொன்னதும் அவர் ஒரு பக்கா ஹிந்து என்பதைக் காட்டுகிறது.
இப்பொழுது அதர்வண வேதத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறேன். அதில் சூரியனுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றிய பாடலில் வெள்ளைக்காரன் Ralph T H Griffith கிரிப்பித் கூட சாக்ரடீசும் இதைச் சொல்லியுள்ளார் என்று அடிக்குறிப்பில் சொல்கிறார்.
இதோ அதர்வண வேத மந்திரமும் Griffith கிரிப்பித் விமர்சனமும்
காண்டம் 5; துதி 9 (சூக்தம் எண் 151)
மந்திரம் 7
“சூரியன் என் கண் ; காற்று என் பிராணன்; வானம் என் ஆத்மா; பூமி என் உடம்பு; எனக்கு வெல்லப்படாதவன் என்ற பெயர் உண்டு ; அப்படிப்பட்ட நான் என் ஆத்மாவை பாதுகாப்பதற்காக பூமிக்கும் வானத்துக்கும் அளிக்கிறேன்”.
நம்முடைய ஆராய்ச்சிக்கு தேவையான வரி “சூரியன் என் கண்”; இது பல இடங்களில் வேதங்களில் வருகிறது ; ரிக் வேத மந்திரங்களில் மிகவும் பிரசித்தமானது புருஷ சூக்தம் (10-90) இதை கோவிலில் அபிஷேக காலத்தில் சொல்லுவதால் எல்லோருக்கும் தெரிந்த மந்திரம். அதில் கடவுளின் கண்களில் இருந்து சூரியன் பிறந்ததாக வருகிறது. மேலும் இறுதிச் சடங்கு மந்திரம் (10-16-3) ஒன்றிலும் கண்களை சூரியன் எடுத்துக்கொள்ளட்டும் என்றும் வருகிறது . இது தவிர ஏனைய வேதங்களில் ‘’சூரியன்- கண்’ தொடர்பு காணக்கிடக்கிறது
கிரிப்பித் Griffith Footnote அடிக்குறிப்பு
சாக்ரடீஸ் கூறுகிறார்:எல்லா புலன்களுக்கும் கண்களையே நான் சூரிய ன் போல ஒளி உள்ளதாகக் கருதுவேன் :
இது அக்காலத்திலேயே பிளாட்டோ எழுதிய Republic ரிபப்ளிக் என்ற நூலில் உளது
அக்காலத்திலேயே, வேதங்கள் பல இடங்களில் கூறும் விஷயத்தை சாக்ரடீசும் குறிப்பிடுவது அவருக்கு இந்துமத கருத்துக்களைப் பரப்புவதில் இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.
1 day ago — 13 Jun 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. Tiru Valluvar , author of Tamil Veda Tirukkural, says that man becomes god in two …
18 Sept 2011 — Lord Shiva is one of the Hindu Trinity, a great god worshipped by millions of Hindus. Socrates was a great Greek philosopher who lived …
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சூரியனைப் பற்றி 6 கண்டு பிடிப்புகள் வேதத்தில் உள்ளது. (Already posted in English)
6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் சூரியனைப் பற்றிய 6 கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகளை அண்மைக் காலத்தில் நடந்த விண்வெளி ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.
1.சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English)
11 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப்புள்ளிகள் அதிகரிக்கின்றன. இவை பற்றி 100, 200 ஆண்டுகளாகத்தான் விஞானிகளுக்குத் தெரியும். சீனாக்காரர்கள் இதை 2800 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதாக என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் செப்பும். அந்த அரை வேக்காடுகளுக்கு, ரிக் வேதத்தில் SUN SPOTS ‘சன் ஸ்பாட்ஸ்’ எனப்படும் குறிப்புகள் 6000 ஆண்டுக்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பது தெரியாது!
காண்க மந்திரம் – Sun spots in Sun—RV 10-189
சூரியனின் கருப்புப் புள்ளிகள் 10-189-1
“புள்ளிகள் உடைய காளை கிழக்கே வந்துவிட்டான்.அம்மாவுக்கு முன் அமர்ந்து இருக்கிறான்.தந்தை போலுள்ள வானத்தில் முன்னேறுகிறான் . (வானத்தை தந்தையாகவும் பூமியைத் தாயாகவும் வருணிப்பது வேதம் முழுதும் உள்ளது.)
இது பாம்புராணி (ஸர்ப்ப ராக்ஞி) என்னும் பெண் புலவர் சூரியனை நோக்கிச் சொல்லும் துதி என்று வேதத்தைத் தொகுத்தோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைப்பும் போட்டுவிட்டனர்
உரைகாரர் விளக்கம் புள்ளிக் காளை = சூரியன்; அம்மா= உஷத் காலம் உதயத்துக்கு முன்னர் தோன்றும் ஒளி. உரைகாரர்களே இங்கே குறிப்பிடப்படுவது சூரியன் (SPOTTED BULL= SUN) என்று தெளிவாக எழுதியுள்ளனர் .
கருப்புப் புள்ளிகள் என்பது காந்த மண்டல கொந்தளிப்பினால் (MAGNETIC FLUX) ஏற்படுகின்றன. அங்கு மற்ற இடத்தை வீட வெப்பம் 2000 டிகிரி குறைவு. அதன் நீள அகலத்துக்குள் பூமியை நுழைத்து விடலாம். நம்மைப் போல சூரியனும் தனக்குத் தானே தட்டாமாலை சுற்றுவதால் அவை நகர்வது போலத் தோன்றும். இவை தோன்றும் பொழுது பூமியில் தகவல் தொடர்பு பாதிக்கும்; தோல் புற்று நோய் அதிகரிக்கும் .
XXX
2.சூரியனும் விட்டமின் ‘டி ‘ யும் SUN AND VITAMIN D
இப்போது மேலை நாடுகளில் விட்டமின்/ வைட்டமின் டி VITAMIN D பற்றி பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கிடைப்பதை விட மேலை நாடுகளில் குறைவாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. இதை அறிந்த இந்து விஞ்ஞானிகள் ஜோதிடத்திலும் சூரியனே ‘ஆரோக்கியகாரகன்’ என்று சொல்லி அவனை வழிபட விதி இயற்றினார்கள். இதை அதிகாலை சூரிய நமஸ்காரம் மூலமும் பிராமணர்களின் த்ரி கால / மூன்று வேளை/ சந்தியாவந்தனம் மூலமும் கற்பித்தனர்.
XXX
3.சூரிய ஒளி சிகிச்சை PHOTO THERAPY AV 2-67; RV1-191-8/9
எங்கள் லண்டனில் குழந்தைகள் கொஞ்சம் மஞ்சள் நிறைத்த தோலுடன் பிறந்தாலும் அதை வீட்டுக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிலேயே விளக்கின் கீழ் வைத்து சிகிச்சை தருவார்கள். தோல் நோய் உடைய பெரியவர்களையும் கூட விளக்குத் தொட்டியில் நிற்கவைத்து சிகிச்சை தருவார்கள். சூரிய ஒளியின் இந்த அபார மருத்துவ குணங்களை ஏராளமான ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன.
இது ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இரண்டு மஞ்சள் காமாலை மந்திரங்களில் வரும் செய்தி. AV 2-67; RV1-191-8/9
சூரியனை 7 குதிரைகள்/ VIBGYOR ஏந்து கின்றன;4-13 -3
சூரிய ஒளியை முப்பட்டக (PRISM) கண்ணாடி வழியே செலுத்தினால் வான வில்லின் 7 கலர்களையும் (VIBGYOR) காணலாம். இதையும் கூட புலவர்கள் பாடத் தவறவில்லை .
சூரியனைக் கும்பிடுபவனுக்கு ஒரு குறையும் வராது என்கிறது அகஸ்தியரின் ‘ஆதித்ய ஹ்ருதய’ தோத்திரம் அவர் ரிக் வேத கால ரிஷி. சூரியனைப்பற்றிய ரிக் வேத துதிகளில் இந்தக் கருத்தைக் காணலாம். AV 2-67; RV1-191-8/9
XXX
4. சூரியனே கண்ணுக்கு ஒளி தருபவன் SUN AND EYE; RV 10-90
இறைவனின் கண்களில் இருந்து சூரியனும் மனத்திலிருந்து சந்திரனும் உதித்ததாக ரிக் வேத்தத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் (10-90) சொல்லும். சூரியனை உலகத்தின் கண் என்று வருணிக்கும் துதிகளும் உள .Sun’s link with Eye- RV.10-90
சூரியனே எங்கள் கண்களுக்குக் காட்சியை அளிக்கவும் 10-158. இதைப் பாடிய புலவர் பெயர் கண். அவர் சூரியனின் புதல்வர்
XXX
5.சூரியன் ஒரு நக்ஷத்திரம் SUN IS A STAR
சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்றும் அது மஞ்சள் நிற YELLOW STAR வகையைச் சேர்ந்தது என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். இதைவிட கடுமையான வெப்பம் உடையது நீல, சிவப்பு நிற நக்ஷத்திரங்கள் என்பதை தற்கால வானியல் புஸ்தகங்கள் செப்பும். பல்லாயிரம் கோடி நக்ஷத்திரங்கள் உண்டு என்பதை மாணிக்கவாசகர், பாரதி முதிலியோர் பாடியுள்ளனர். இந்து மதத்தில் உள்ள சின்னக் குழந்தை கூட விநாயகரைப் புகழும் ‘வக்ரதுண்ட மஹா காய’ துதியில் பிள்ளையாரை
‘கோடி சூர்ய பிரகாசம்’ உடையவன் என்று புகழும். . பகவத் கீதையில் விசுவ ரூப தரிசன ஸ்லோகத்தை, முதல் முதலில் அணு குண்டு வெடித்ததைக் கண்ட அமெரிக்க விஞ்ஞானி, அப்படியே நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளேன். அதில் அர்ஜுனன் ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய’ என்று கண்ணனை வருணிக்கிறான் ; கிருஷ்ணா! ஆயிரம் சூரியன் ஒரு சேர உதித்தாற் போல உன்னைக் காண்கிறேன் என்கிறான். ஆக சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அது போல என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் குழந்தைகளுக்கும் தெரியும். 100 ஆண்டுக்கு முன்னர் ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிப்பித் முதலியோர் அப்படியே சொல்லியும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.
காண்க ரிக் வேதம் Sun is a Star — RV 10- 156
“அக்கினியே , ஜன ங்களுக்கு ஒளியை அளித்துக் கொண்டு வானிலே அழியாத நட்சத்திரமான சூரியனை உயர்த்தினாய் “– 1-156
இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன
பிக் பாங்க் BIG BANG என்னும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு பற்றியும், கருந்துளைகள் BLACK HOLES பற்றியும் எழுதியுள்ளேன்
XXX
6.சூரியகிரஹணம்
அத்ரி மகரிஷியுடைய அற்புதங்களை விவரிக்கும் எல்லா மந்திரங்களும் அவர் சூரிய கிரஹணத்தைக் கணக்கிட்டு, சீடர்கள் மத்தியில் அற்புதம் செய்த நிகழ்வும் ரிக்வேதத்தில் உள்ளது. (இது பற்றி எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க ). இதே உத்தியை ஜயத்ரதனை வதம் செய்ய மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பயன்படுத்தியதையும் எழுதியுள்ளேன்
Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature
8 Dec 2017 — Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam adade’ …
Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature
4 Jan 2020 — TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS– Part 1(Post No.7418) · Research article Written by London Swaminathan · Uploaded in London on – 4 JANUARY …
TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) – Tamil …
5 Jan 2020 — Acupressure in Rig Veda HYDROTHERAPY, ACUPRESSURE, MONSOON IN THE RIG VEDA; TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) Research article …
7 Oct 2021 — Far seeing mother of the eyes”. Greek drama is full of allusions to the link between the eye and the sun. Aeschylus in Prometheus Bound refers …
–subham—
tags- சூரியன், 6 கண்டுபிடிப்புகள், ஒளிச் சிகிச்சை, வைட்டமின் டி , கறுப்புப் புள்ளிகள் , நட்சத்திரம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாமூலனார் என்ற சங்கப் புலவர் காலத்தினால் மிகவும் முந்தியவர் என்று கருதுவோரும் உண்டு. காரணம் என்னவெனில் இவர் தமிழ் நாட்டின் மீது மௌரியர் படையெடுத்து வந்ததைக் குறிப்பிடுகிறார். ஆயினும் இந்தக் கட்டுரையில் நாம் காணப்போவது வேறு விஷயம் ஆகும். அகநானூற்றுப் பாடலில் இவர் ஒரு அபூர்வ விஷயத்தை உவமையாகக் கையாள்கிறார் . இதை எகிப்திலும் ரிக் வேதத்திலும் காண முடிகிறது. இவர் பழங்காலப் புலவர் என்பதற்கு இதுவும் சான்றாக அமையலாம்.
அகநானூறு பாடல் 101
1. களிற்றியானை நிரை
பாடல்: 101 (அம்மவாழி)
அம்ம வாழி, தோழி! ‘இம்மை
நன்றுசெய் மருங்கில் தீதுஇல்’ என்னும்
தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-
தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த
சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர் 5
வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,
நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,
அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,
கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், 10
இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,
பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்
புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர், 15
தண்கார் ஆலியின், தாவன உதிரும்,
பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,
முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே! 18
xxxxx
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல
பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று
என்பதன் பொருளை மட்டும் எடுத்துக் கொள்வோம்
4 முதல் 11 வரிகளில் மழவர்கள், இருமல் வராமல் இருப்பதற்காக, வாயில் புற்று மண்ணை அடக்கிக்கொண்டு , தீ அம்புகளுடன் சென்று பசுமாடுகளைக் கவர்ந்து கொண்டுவந்து பங்கிட்டுக் கொள்ளுவர் என்ற பொருள் வருகிறது
இதையும் ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம்; மறைத்து வைக்கப்பட்ட ஆநிரைகளை மீட்க இந்திரன் உதவியதாகப் பல பாடல்களில் காண்கிறோம்
11 முதல் 15 வரிகளில்
அகன்ற வானமாகிய கடலில் இயங்கும் தோணி போல் பகற்போதில் நின்ற பல கதிர்களையுடைய கதிரவனுடைய வெப்பம் விளங்கிப் பரவச் சுழன்று வரும் மேல் காற்றால் முருங்கை மலர்ப் பூக்கள் உதிரும். அது கார் கால ஆலங்கட்டி மழை போல இருக்கும் . இந்த சூழ்நிலையில் பல மலைகளையும் தாண்டிச் சென்ற தலைவருக்கு நான் வெறுக்கத்தக்க செயல் எதையும் செய்யவில்லையே!
சூரியனை வானத்தில் செல்லும் படகு என்று வருணிப்பதை ரிக் வேதத்திலும் எகிப்திலும் மட்டுமே காணலாம். தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்களில் ‘ஓராழித் தேருடையோன் , 7 குதிரைகள் பூட்டிய ஒரு சக்கர தேர் உடையவன்’ என்றே பெரும்பாலும் வருணிப்பர். இவ்வாறு ஆகாயத்தில் செல்லும் படகு என்பது, மாமூலனார் வேதம் கற்ற பார்ப்பான் என்பதைக் காட்டுகிறது.
xxxx
எகிப்தில்
எகிப்தில் சூரிய தேவனை ‘ரா’ (Ra, Re) என்ற பெயரில் வணங்குகின்றனர். இந்துக்களைப் போலவே மூன்று வடிவில் வணங்குகின்றனர். ரிக் வேதம் முழுதும் அக்கினியையும், சூரியனையும் மூன்று எண்ணுடன் தொடர்பு படுத்துகின்றனர். 1.மின்னல், 2.அக்கினி, 3.சூரியன் என்பது ஒரு விளக்கம் . எகிப்தில் காலையில் குழந்தை அல்லது கேப்ரி என்றும் பகலில் ரா ஹரக்தி என்றும் மாலையில் ரா ஆதம் என்றும் சூரிய தேவனை வழிபடுகின்றனர். பிராமணர்களும் இதே போல மூன்று வேளைகளில் சூரியனை தினமும் இன்றும் வழிபடுகின்றனர்.
‘ரா’ என்ற பெயரே சம்ஸ்க்ருத வேர்ச் சொல் – ‘ஒளி’- என்பதிலிருந்து வந்ததே .
இரவு நேரத்தில் அது ஒரு படகில் பயணம் செய்து இறந்தோர் வாழும் உலகத்தைக் கடப்பதாகவும் அப்போது தீய ஆவிகளிடமிருந்து சூரியனை நல்ல ஆவிகளும் சேத் (Seth) என்னும் தெய்வமும் காப்பதாகவும் எகிப்திய புராணம் கூறும் .
xxxx
ரிக் வேதத்தில்
ரிக் வேதத்தில் பல கடவுளரைப் புகழும் போது வானத்தைக் கடலாகவும் அந்த தேவதையை படகு அல்லது கப்பலாலாவும் வருணிக்கின்றனர். வேதம் படித்த ,மாமூலனார் இந்த ‘ஐடியா’வை ரிக் வேதத்தில் இருந்து எடுத்து சூர்ய தேவனுக்குச் சூட்டினார் போலும் .
இதோ ரிக்வேதப் பாடல்:-
RV.1-46-7
“துதிகளான கடலின் மீது எங்களைக் கடத்திச் செல்ல கப்பலைப் போல வாருங்கள்” .
இது அஸ்வினி தேவர்களை நோக்கி ரிஷி பிரஸ் கண்வ காண்வன் பாடியது
திருவள்ளுவர் கடலை நீந்திக் கடப்பது பற்றிப் பாடுகிறார்.(பிறவிப் பெருங்கடல்………..). வேதம் முழுதும் கப்பல் அல்லது படகில் கடப்பது பற்றியே வருகிறது. அதிலும் வானத்தை- ஆகாயத்தை — கடலாக வருணிப்பது வேதத்தில் பல இடங்களில் வருகிறது.
xxx
My old articles –
Tagged with எகிப்திய அதிசயங்கள் -14 – Tamil and Vedas
AKBAR WORSHIPPING SUNEGYPTIAN KING WORSHIPPING SUN
சூரியனே போற்றி! – 2 (Post No.9220)
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9220
Date uploaded in London – – 3 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
சூரியனே போற்றி! – 2
ச.சீனிவாசன்
IF YOU WANT TO LISTEN TO HIS SPEECH, PLEASE GO TO Facebook.com/gnanamayam
லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-2—2021 அன்று ஆற்றிய உரை.
சூரியனைப் பற்றிய மற்ற விவரங்கள் சூரியனின் தாயார்/ தகப்பனார் – அதிதி(தட்சன் மகள்),காஸ்யபர் முதல் மனைவி -சஞ்சிகை( துவஷ்டாவின் @விஸ்வகர்மாவின் மகள்) பிறந்த குழந்தைகள் -யமன், யமி என்ற யமுனை,பத்திரை,சாவரணி மனு,அஸ்வினி தேவர்கள், சுக்ரீவன் இரண்டாவது மனைவி- சாயா -க்ருத வர்ஷா, க்ருத ஷர்மா என்ற சனிஸ்வரன், பத்ரை,தபதி, வைவஸ்வத மனு, காலன் மூன்றாவது மனைவி -நீளா தேவி@வானவில் – சித்திர குப்தன் நான்காவது மனைவி – குந்தி – கர்ணன்
SUN TEMPLE AT KONARK
ஜாதி. ஷத்திரியன் உத்யோகம் ராஜா காரகன். பிதுர் காரகன், ஆத்ம காரகன் லிங்கம். ஆண் வஸ்திரம். செம்பட்டு குணம். குரூரர் தன்மை. பாப கிரகம் திசாதிபதி. கிழக்கு வடிவம். சமன் அவஸ்தை. விருத்தர் பாஷை. சமஸ்கிருதம் & தெலுங்கு தாது. எலும்பு நிறம். சிவப்பு ரத்தினம். மாணிக்கம் தான்யம். கோதுமை புஷ்பம். செந்தாமரை சமித்து. எருக்கு வாகனம். மயில், தேர் மிருகம். பெண் ஆடு நாடி. பித்த நாடி சுவை. காரம் உலோகம். தாமிரம் ஸ்வரம். ஸ அதி தேவதை. சிவன்/அக்னி ப்ரத்யதிதேவதை ருத்ரன் இஷ்ட காலம் பகல் வஸ்திரம் சிவப்பு ஆசனம். வட்டம் தசா காலம். 6 வருடங்கள் நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் சொந்த வீடு. சிம்மம் உச்ச வீடு. மேஷம் நீச வீடு துலாம் நட்பு. சந்திரன், செவ்வாய், புதன், குரு பகை. சனி, ராகு, கேது,சுக்கிரன் பகைவீடுகள். ரிஷபம்,மகரம், கும்பம் பார்வை. 7 ம் பார்வை சூரிய காயத்ரி ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹப் பிரசோதயாத்
இந்த கோவிலைப் பற்றிய முழு விரங்களை திருமதி பிரகன் நாயகி சத்ய நாராயணன் மிகச் சிறப்பாக விக்கியுள்ளர் tamilandvedas no Dated கண்டு மகிழ்க.
மார்த்தாண்ட சூரியனார் கோவில். காஷ்மீர்
அரசவல்லி சூரியன் கோவில். ஆந்திரா
நவ திருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்டம்
நவ கைலாசங்களில் ஒன்றான பாப நாசம்( அம்பாசமுத்திரம் அருகில்) நீங்களனைவரும் சூரியனை வணங்கி கண்ணொளியும், அறிவொளியும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனை பிரார்த்தித்து விடை பெறுகிறேன்
நன்றி, வணக்கம்!
tags – சூரியன், கோவில்கள், ஸ்தோத்திரங்கள், வழிபாடு ,
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-2—2021 அன்று ஆற்றிய உரை.
IF YOU WANT TO LISTEN TO HIS SPEECH, PLEASE GO TO Facebook.com/gnanamayam சூரியனே போற்றி! – 1 ச.சீனிவாசன்
S SRINIVASAN SPEAKING
ஆயிரம் கரங்கள் நீட்டி அருளும் சூரியனே போற்றி !!! அனைவருக்கும் அன்பான மாலை வணக்கம். இராமலிங்க ஸ்வாமிகள் பாடலுடன் இதை ஆரம்பிக்கிறேன். கல்லார்க்கும், கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு அவன், காணார்க்கும்,கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண் அவன், மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதி அவன், நல்லார்க்கும், பொல்லார்க்கும் நடு நிற்பவன் அவன், நரர்களுக்கும், சுர ர்களுக்கும நலம் கொடுக்கும் நலமே அவன், எல்லார்க்கும் பொதுவில் நடு நின்ற சிவனென்னும் சூரியனே, என்னரசே யான்புகலும் இசையும் அணிந்தருளே!!!
உலகதிலுள்ள உயிர்களுக்கு ம் அசையும் அசையாப் பொருள்களக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நமஸ்காரம் செய்து சூரியனைப் பற்றிய ஆச்சரியமான, உண்மையான சில தகவல்களை உங்களுடன் பரிமாறக்கொள்ள வந்திருக்கிறேன். குகை வாழ் மனிதர் முதல் புகை வாழ்அந்தணர் முடிய ஆஸ்திகர் முதல் நாஸ்திகர் வரை வணங்கும் அனைவருக்கும் கண் முன் தெரியும் ஒரே தெய்வம் சூரியனே!!! பூமியில் விளையும் எல்லா தாவர இனங்களும் ஒளிச்சேர்க்கையினால் உயிர் வாழ்ந்து உலகத்தில் உள்ள மக்களுக்கு ஆக்ஸிஜனையும் மழையையும் வருவிக்கின்றன.
WHEEL OF CHARIOT; SUN TEMPLE AT KONARK
சூரிய மண்டலத்தின் சிவன் உறைந்திருப்பதாக சிவ ஆகமங்கள் கூறுகின்றன. அஷ்ட மூர்த்தங்களில் ஒன்றாகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். “சிவ சூரியன்” என்றும் போற்றப்படுகிறார். ராவண ஹதத்திற்கு முக்கியமாக பாது காப்பு கவசமாக இருந்தது அகஸ்திய முனிவர் உபதேசம் செய்த ஆதித்ய ஹ்ருதயமே !!! ஸ்ரீ மகா விஷ்ணு போல சூரியனுக்கும் சங்கு சக்கரம் உண்டு. ஆகவே “சூரிய நாராயணன்” என போற்றப் படுகிறார் என வைணவ ஆகமங்கள் கூறுகின்றன. சூரிய பகவான் தினமும் ஒருசக்கர வாகனத்தில் 7குதிரைகள் பூட்டிய வாகனத்தில் பவனி வருகிறார். அந்த குதிரைகளின் பெயர்களாவன – காயத்ரி, ப்ருகதி, உஷ்ணிக்,ஜகதி,திரஷ்டுப்,அனுஷ்டுப், பங்கதி எனப்படும். அதை ஓட்டுபவர் பெயர் அருணன்.அவருக்கு கால்கள் கிடையாது. இதையே விஞ்ஞான வல்லுனர்கள் நிற மாலை என்றும் வயலட், இண்டிகோ, புளு,கிரீன், எல்லோ,ஆரஞ்சு, ரெட் என 7 நிறங்களாக இருக்கன்றன, எனநிரூபித்திருக்கிறார்கள். இதை ஏழு நாட்கள் என்றும் கூறுவர்.
உயிர் கொடுக்கும் சூரியனை தினமும் எல்லோரும் மூன்று முறை வணங்க வேண்டும். இதற்கு“ ஸந்தியா வந்தனம்” எனப்பெயர்.. அனைத்து ஜாதி மக்களுக்கும்இது உண்டு. காலக் கொடுமையினால் ஒரு சிலரைத்தவிர யாரும் இதை செய்வதில்லை.இதில் சூரியனை துதிக்கும் மிக முக்கிய “காயத்ரி” மந்திரமான இது உலகத்திலுள்ள எல்லா மந்திரங்களில் உயர்ந்தது.காலையில் காயத்ரியாகவும், மதியத்தில் சாவித்ரியாகவும் , மாலையில் சரஸ்வதியாகவும் வணங்கப்படுகிறாள். காயத்ரி மந்திரத்தின் தமிழாக்கம் பாரதி புனைந்தது.
“செங்கதிர் தேவன் சிறந்த ஓளியினை தேர்கின்றோம், அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”
இந்த காயத்ரி மந்திரத்தை பற்றி கூற வேண்டுமானால் பல்லாயிரம் பக்கங்கள் தேவை. காயத்ரி மந்திரங்களையும், அதன் அருமை மிகு சக்தியையும் பற்றி திரு சுவாமிநாதன், திரு நாகராஜன் எழுதிய பல கட்டுரைகள் இதே tamilandvedas ல் பல முறை வந்துள்ளன.தயவு செய்து படித்து பின்பற்றுங்கள்.
சூரிய வழிபாடு உலகெங்கும் ஜாதி மதம், இனம், மொழி, நாடு எல்லாம் கடந்து. வழி படக்கூடிய ஓரே தெய்வம் சூரியனே!!!! சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன் யூப்ரெடஸ்,டைகிரீஸ், ந்தி வெளியில் உள்ள சுமேரியா, பாபிலோனியா,அக்கேடியா அஸ்ஸீரியா முதலியநாடுகள் சூரிய வழிபாட்டையே முக்கியமாக கொண்டிருந்தன.அவர்கள் சூரியனுக்கு வைத்த பெயர் “ஷமாஷ்”. அது போல வட எகிப்தில் “ரா”எனவும்,தெற்கே “அமன்”எனவும் அழைக்கப் பட்டான் சூரியன்.இதென்கெல்லாம் மேலாக சூரியனின் பெயரை “அடோன்” மாற்றி தன் பெயரையும் “அக்ன அடோன்” என்று மாற்றிக் கொண்டான் ஒரு எகிப்திய அரசன்!!!
தெற்கு இங்கிலாந்தில் ஸ்டோன் ஹென்ஞ் என்ற கல் அடுக்கினை சூரியனின் கோவில். என்றே கருதுகிறார்கள். பாரசீகத்தில் அவஸ்தா என்னும் மத நூலில் சூரியன் “மித்ரன்”என போற்றப்படுகிறான்.
கிரேக்க தேசத்தில் சூரியன், முதலில்,”ஹெலியோஸ்”என்றும் பின்னர் “அப்பல்லோ”என்றும் அழைத்தனர்.இவர்கள் சூரியனுக்கு 105 அடி உயரமுள்ள ஒரு பிருமாண்டமான சிலையை எழுப்பி வழிபட்டனர் உலக அதிசயத்தில் ஒன்றான இது காலப் போக்கில் அழிந்துவிட்டது. சைனாவிலும் ஜப்பானிலும் சூரிய வழிபாடே முக்கியம். சூரியனே எங்களிடமிருந்து நாளை ஆரம்பிக்கிறான். ஆகவே சூரியனையே எங்கள் கொடியில் வைத்திருக்கிறோம்.ஆனால் சூரியன் ஒரு பெண் தெய்வம்!!! என்கின்றனர் அவர்கள். மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் மாயா நாகரீகத்தில் சூரியன்தான் எல்லாம்!!! சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் வழிபடுவதற்கு பிரும்மாண்டஉயர கோபுரங்கள் கட்டி சிறப்பாக வழிபட்டனர்
S SRINIVASAN SPEAKING IN GNANAMAYAM BROADCAST
தை பொங்கல்
சூரியனை வழிபடும் முறைக்கு”சௌரம்”எனப்படும். சூரியன் ஒவ்வொரு ராசிக்கும் இடப்பெயற்சி செய்வதையே மாதப்பிறப்பு எனகிறோம். தை மாதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார் .அந்தக்காலத்தை உத்தராயணம் என்கிறோம். ஆடி மாதம் முதல் தெற்கு பயணிக்கும் காலத்திற்கு தட்சிணாயணம் என்கிறோம்.
நமது நாட்டில் சூரிய பகவான் வழிபாடு மிக சிறப்பு மிக்கது்.மகர ராசியில் சூரியன் நுழையும் முதல் நாளை மகர சங்கராந்தி என்றும், தை பொங்கல் என்றும்,சூரியனுக்கு நன்றி சொல்லும் நாளாக மிக விமரிசையாக கொண்டாகிறோம்.உழவுக்கு உதவி செய்த மாட்டிற்கும் நன்றி சொல்லும் வகையில் மாட்டுப் பொங்கலும் கொண்டாடுகிறோம். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் இதே பொங்கலை வெவ்வேறு பெயரிட்டு சூரியனை வணங்குகிறார்கள்
ரத சப்தமி
தை அமாவாசைப்பிறகு வரும் நாளே ரத சப்தமி….. இன்று தான் சூரியனின் பிறந்த நாள்!!! சூரியன தனது தேரை வடகிழக்காக திருப்பும்நாள். அன்று ஆண்கள் தலையிலும் பெண்கள் தோளிலும் எருக்க இலையையும், சிறிது அரிசியையும் வைத்துக் குளிப்பார்கள் தங்கள் பாவங்களை போக்கிக்கொள்ள……
ஆடி பெருக்கு சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கும் அதாவது தட்சிணாயண புண்ய காலம் ஆரம்பம் . ஆடி 18 ம் நாள், மழை பெய்து வெள்ளம் பெருக்கோடும் நாள். பல வித உணவு வகைகளை மக்கள் நதிக் கரையோரம் உண்டு மகிழ்வார்கள். “ஆடிப்பட்டம் தேடி விதை” எந்பதற்கேற்ப விவசாயிகள் விதைக்க ஆரம்பிப்பார்கள். இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமாக கருதப்படும்.
சூரிய நமஸ்காரம் மற்ற கடவுள்களைப் போல சூரியன் பூ , பழம் எதையுமே விரும்பவதில்லை. நமஸ்காரம் ஒன்றை மட்டுமே செய்பவர்களுக்கு கண்ணொளியும் அளவற்ற ஆரோக்யத்தையும் தருகிறார். இதன் விதி முறைகளை குரு மூலமாக அறியவும்.
சூரியனின் பெயர்கள் நிகண்டு பிரகாரம் 192 பெயர்கள் உள்ளன. இன்றைக்கு வரும் காலை தினசரிகளின் பெயர்களும் அதில் அடக்கம்.மிக மிக முக்கியமான 12 பெயர்களை மட்டும் இங்கு கூறுகிறேன்.
தட்சன் மகளான அதிதிக்கும், காஸ்யபர் என்ற் முனிவருக்கும் பிறந்தவரே சூரிய பகவான். இவர் துவஷ்டா அல்லது விஸ்வ கர்மா என்பவரின் மகளான சஞ்சிகையை மணந்தார். சிலகுழந்தைகளையும் பெற்றார். சூரியனின் வெப்பம் தாங்காமல் சஞ்சிகை தன்னைப் போலவே ஒருத்தியை சிருஷ்டித்து சூரியனிடம் அனுப்பி தவம்செய்ய கிளம்பி மறைந்தாள்.சாயா என்ற அவள் சில குந்தைகளை பெற்றவுடன் தன் குழந்தைகளையயும், சஞ்சிகை குழந்தைகளையும் தனியாக கவனிக்கவும் ஆரம்பித்தாள். இந்த விஷயத்தை குழந்தைகள் மூலமாக அறிந்த சூரியன் மீண்டும் சஞ்சிகையை அழைத்து வந்து வாழ்ந்தான்.
சூரியனைப் பற்றிய விஞ்ஞான விவரங்கள்
சூரியனிடமிருந்து பூமி உள்ள தூரம் 149.6 மில்லியன்கி.மீ இந்த தூரமே ஒரு வானியல் தூர அலகு எனப்படுகிறது(astronomical unit) தன்னைத்தானே சுற்றிக்கொள்ள. மேலாக. 24/25 நாடகள் மத்தியில். 345/37 நாட்கள்
சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுக்கும் நேரம் : 8 நிமிடம் 19 நொடிகள் சூரியனிடமிருந்து வரும் குறுகிய ஒளிஅலையின் பெயர். INFRARED WAVES (அகச்சிவப்பு கதிர்கள்) இது நுண்ணுயிர் கொல்லி மருந்தாகவும், விட்டமின் D சத்தாக உபயோகப்படுகிறது.தசை பிடிப்புக்கு , கள்ள நோட்டு, கள்ள கையெழுத்து கண்டு பிடிக்க, இரவில் இருட்டில் பார்க்க, சென்சார் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு உபயோகப்படுகிறது. (மாலை நேரம் ஆரஞ்சு/ சிவப்பு நிறமாக வானம்
காணப் படிவதற்கு இதுவே காரணம்)
சூரியனிடமிருந்து வரும் அதிக ஒளி அலையின்
பெயர். ULTRA VIOLET RAYS
தோலின் நிறத்திற்கு காரணமாகிறது. வைட்டமின் “D” நிறைந்தது.
ஆனால் ஆபத்து நிறைந்தது – சரியாக உபயோகப்படுத்தாவிட்டால்.
சூரியன் மஞ்சளாக தெரிவது ஏன்??? உண்மையாகப்பார்த்தால் அண்ட வெளி கருமை நிறம். சூரியனானது விண்மீன் வகைப்பட்டியலில் G 2 V வகையைச் சார்ந்தது. G 2 வகை விண்மீன்களின் பேற்பரப்பு 5500 டிகிரி வெப்பம் கொண்டதாகவும் வெண்மை நிற ஒளி உடையதாகவும் உள்ளது.அந்த ஒளியில் உள்ள ஊதா, நீலக்கதிர்களின் ஒளி அலை நீளம் அதிகமாக இருப்பதால் “ஒளிச் சிதறல்” விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சளாக தெரிகின்றது.
இந்த ஒளிச்சிதறல் மூலமாகவே வானமும் கடலும் நீல நிறமாக தெரிகின்றது.இதையே சர்.சிவி. ராமன் கண்டு பிடித்து நோபல் பரிசு பெற்றார். • தொடரும் Tags- சூரியன், நவ கிரகங்கள், சூரிய நமஸ்காரம்
தமிழ் வாழ்க! தமிழ் மக்கள் வாழ்க!! தமிழ்நாட்டின் புகழ் ஓங்குக!
பாரதம் பாருக்குள்ளே சிறந்த நாடாகச் சிறந்து விளங்குக!!
2
சூரியனைத் தொன்று தொட்டு இருந்த அனைத்து நாகரிகங்களும் தொழுது போற்றியுள்ளன.
வேத நாகரிகம் சூரியனுக்குத் தனி ஒரு இடத்தைத் தந்து சிறப்பிக்கிறது.
இதை ராமாயண மஹாபாரத இதிஹாஸங்கள் மூலமாகவும் 18 புராணங்கள், 18 உப புராணங்கள் மற்றும் இதர தர்ம சாஸ்திரங்கள், ஆகமங்கள் மூலமாகவும் அறிய முடிகிறது.
நமது கோவில்களில் சூரியனுக்கு உரிய வழிபாடு சிறப்பாக உண்டு.
நமது அனைத்து மொழி இலக்கியங்களிலும் சூரியனைப் போற்றாத இலக்கியமே இல்லை.
3
மஹாகவி பாரதியார் ஞாயிறு – ஸூர்ய ஸ்துதி என்றும் ஞானபானு – ஸூர்ய ஸ்தோமம் என்றும் இரு கவிதைகள் புனைந்துள்ளார்.
“என்றன் உள்ளம் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன் அகத்து ஒவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்ததுவாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா
ஞாயிற்றின் கண் ஒளி தரும் தேவா”
என்று இப்படி ஞாயிறு – ஸூர்ய ஸ்துதியில் வேண்டுகிறார்.
ஞானபானு பத்திரிகையை வாழ்த்தி அவர் புனைந்த செய்யுள் ஞானபானு – ஸூர்ய ஸ்தோமம் என்னும் கவிதையாகும்.
“அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் தெய்வம்
மனத்திலே சக்தி ஆக வளர்வது நெருப்புத் தெய்வம்
தினத்தொளி ஞானம் கண்டீர்; இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதர் என்று உரைக்கும் வேதம்”
என்று இப்படிக் கூறி வேத பிரமாணத்தைத் தன் கவிதையிலே சுட்டிக் காட்டுகிறார்.
அவரது வசன கவிதையிலே அவர் போற்றும் ‘ஞாயிறு’ போற்றிப் படிக்க வேண்டிய ஒரு அற்புதமான பகுதி!
4
மயூர கவி இயற்றிய சூர்ய சதகம் நூறு பாடல்களைக் கொண்டது. சூர்ய வழிபாடு அவரது தொழு நோயைத் தீர்த்தது. அது மந்த்ர பூர்வமானது. அனைவரும் படிக்க வேண்டியதாகும்.
5
சூர்ய அஷ்டோத்திரம் மஹாபாரதத்தில் இடம் பெறும் அற்புதமான 108 சூரிய ஸ்துதி ஆகும். பாண்டவர்கள் வன வாசம் செய்த போது அவர்களின் குருவான தௌம்யர், யுதிஷ்டிரருக்கு உபதேசம் செய்த ஸ்தோத்திரம் இது.
இதைத் துதித்ததன் பயனாக என்றும் உணவுக்கு குறை இல்லாமல் உணவை வழங்கும் அக்ஷயபாத்திரத்தை அவர் பெற்றார். அதன் பயனாக அவர்களும் உணவைப் பெற்றனர்; வந்த அதிதிகளையும் உபசரித்தனர்.
6
சூர்யோபநிஷத்து சூர்ய மந்திரங்களைத் தருகிறது; பீஜ அக்ஷரங்கள் கொண்டது.
‘ஆதித்யாய வித்மஹே சஹஸ்ர தீரணாய தீ மஹி; தந்ந: ஸூர்ய ப்ரசோதயாத்’ என்பது சூர்ய காயத்ரி ஆகும்.
7
சூர்யாஷ்டகம் சிவபிரான் கூறி அருளிய எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது.
தம் ஸூர்யம் ஜகதாம் நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம் |
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம் ||
என்பது எட்டாவது ஸ்லோகம்.
உலகின் தலைவரும் அறிவையும் அறிவின் சுய அனுபவத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பவரும் எல்லாப் பாவங்களையும் போக்குபவருமான சூரிய பகவானை நமஸ்கரிக்கிறேன் என்பது இதன் பொருள்.
8
ரிக் வேதம் சூரியனை ஸாவித்ரி, ஸவிதா என பலவாறாக அழைத்துப் போற்றுகிறது.
ஓ! ஜோதியே
சூரியனை, அழிவிலா அந்த நட்சத்திரத்தை
வானம் ஏற வைத்து மனித குலத்துக்கு
வெளிச்சத்தை அருளினாய்!
ஓ! தேவனே!!
மனித இனத்தின் ஒளிச் சின்னமே!!!
பூமியின் அன்பே, எழுந்திரு,
இந்தப் பாடலைப் பாடுகிறவனுக்குப் பலன் அளிப்பாய்!
என அருமையாக இப்படி வேதம் துதிக்கிறது.
9
சூரிய நமஸ்காரம் உடல் பயிற்சிகளில் எல்லாம் சிறந்த உடல் பயிற்சி.
மந்திர பூர்வமாக இதைச் சொல்லி இதில் உள்ள 12 ஆசனங்களைச் செய்யும் ஒருவன் ஆரோக்கியத்துடன் பூரண ஆயுள் வாழ்வதை இது உறுதிப் படுத்துகிறது.
10
சூரியனுக்கான தனிக் கோவில்கள் பல பாரத தேசத்தில் உண்டு.
தமிழகத்தில் உள்ள சூரியனார் கோவில் சூரியனுக்கான தனித் தலம் ஆகும்.உஷா தேவி, ப்ரத்யுஷா தேவியுடன் கூடிய சூரியன் இருக்க நின்ற கோலத்தில் குரு பகவான் எதிரில் இருக்கப் பெற்ற அற்புத ஆலயம் சூரியனார் கோவில்.
ஒரிஸாவில் கொனார்க்கில் உள்ள சூரியனின் கோவில் வரலாற்றுப் புகழ் பெற்றது.
குஜராத் மாநிலத்தில் உள்ள மொதேராவில் உள்ள சூரியனின் கோவில் சூரியனின் அஸ்தமன காலத்தைக் குறிக்கும் தலமாக அமைந்துள்ளது.
11
ராவணனை வதம் செய்ய ராமருக்கு அகஸ்திய மா முனிவர் அருளியது ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம்.
வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறுவது இது.
இதைச் சொல்வோர் அனைத்து நலங்களையும் பெறுவது உறுதி.
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம் |
ஜயாவஹம் ஜபேந் நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் ||
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசனம் |
சிந்தா சோகப்ரசமநம் ஆயுர்வர்த்தநமுத்தமம் ||
என்பதால் இதைச் சொல்வதால் புண்ணியம் சேரும்; அனைத்து எதிரிகளும் அழிந்து போவர்; எப்போதும் எதிலும் வெற்றியைப் பெறுவர்; தினமும் இதைச் சொல்லுதல் வேண்டும்; அழியாதது; பரம மங்களத்தைத் தருவது; சிந்தையில் ஏற்படும் சோகத்தைத் போக்குவது; ஆயுளைத் தருவது; சிறந்தது என்பது பெறப்படுகிறது.
12
எல்லையற்ற ஆதித்தனின் புகழ் சொற்களுக்கு அப்பாற்பட்டது.
மற்ற தெய்வங்களை பிரத்யக்ஷமாகக் காண்பது அரிது;
ஆனால் பிரத்யக்ஷமாக ஒவ்வொருவரும் காணக் கூடிய தெய்வம் ஸூர்யன்.