
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7554
Date uploaded in London – 9 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
சாப்பிடக் கூடாத இலைகள் எவை?
சதகம் என்றால் 100 பாடல்களின் தொகுப்பு என்று அர்த்தம். தமிழில் நிறைய சதக நூல்கள் உள; பெரும்பாலும் இவை திருக்குறள் , நாலடியார் போல நீதிகளை உரைக்கும். ஏனைய சில பாண்டி மண்டலம் கொங்கு மண்டலம் போன்ற இடங்களின் சிறப்புகளை விதந்தோதும் . இந்துக்களுக்குப் போட்டியாக முஸ்லிம்கள் , கிறிஸ்தவர்கள் பாடிய சதகங்களும் இருக்கின்றன. நமக்கு கிடைத்த மிகப் பழைய தமிழ்ச் சதகம் மாணிக்கவாசகர் பாடிய திருச் சதகம் ஆகும். ஆயினும் அது திருவாசகத்தின் ஒரு பகுதி என்பதால் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கார்மண்டல சதகம் தான் முதலில் கிடைத்த தமிழ்ச் சதகம் என்பர். பழமொழிகள் நிரம்பிய தண்டலையார் சதகம் படிக்கச் சுவையானது. அம்பல வாணக் கவிராயர் பாடிய அறப்பளீச்சுர சதகம், சதுரகிரி மலையில் உள்ள இறைவனை வேண்டிப் பாடியது. நீதிகள் , அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாம் எல்லோரும் வாழை இலையில் சாப்பிடுகிறோம் . தாமரை இலையில் சாப்பிடலாமா ? அரச இல்லை அல்லது புரசை இலைகளைத் தைத்து செய்யப்படும் தையல் இலைகளில் சாப்பிடலாமா இதற்கெல்லாம் கவிராயர் சொல்லும் பதில்களைப் பாருங்கள் .
(இதற்கிடையில் நாக்கில் தண்ணீர் ஊறவைக்கும் சுவையான செய்தி. அந்தக் காலத்தில் சில ரயில் நிலையங்களில் பட்டணம் பக்கோடா, போண்டா , வடை முதலியவற்றை தையல் இலையில் கட்டி விற்பார்கள். நானும் என் தம்பி சூரிய நாராயணனும் மந்த்ராலயத்தில் உள்ள ரா கவேந்திர சுவாமிகள் மடத்துக்குப் போய் சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசித்தோம். முடிந்தவுடன் தையல் இலையில் சுவையான சாப்பாடு! மந்தாரை இலைகளைத் தைத்து தையல் இலை செய்வார்கள் என்று கேள்வி. நிற்க )
மா, பலா, வாழை இலைகளிலும், புன்னை, புரசு, குருக்கத்தி, பன்னிர் இலைகளிலும் சாப்பிடலாம்.
சாப்பிடக்கூடாத இலைகள் எவை?
ஆல மரம் , அத்தி, அரசு, எருக்கு, முள் எருக்கு , தாழை , தாமரை , பாதிரி , ஆமணக்கு, சகதேவ , இத்தி மர இலைகளில் சாப்பிடக்கூடாது tamilandvedas.com, swamiindology.blogspot.com
.




அத்துடன் வேறு சில அறிவுரைகளையும் சேர்த்துச் சொல்கிறார் –
அடிக்கடி சாப்பிடாதே; குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடாதே . மேற்கண்ட இலைகளில் சிற்றுண்டி கூட சாப்பிடக்கூடாது; தண்ணீரும் பருகக்கூடாது . இதோ பாடலும் பொழிப்புரையும் –
அறப்பளீச்சுர சதகம்
அம்பலவாணக் கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.


—subham—
You must be logged in to post a comment.