சாப்பிடக் கூடாத இலைகள் எவை? (Post No.7554)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7554

Date uploaded in London – 9 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சாப்பிடக் கூடாத இலைகள் எவை?

சதகம்  என்றால் 100 பாடல்களின் தொகுப்பு என்று அர்த்தம். தமிழில் நிறைய சதக நூல்கள் உள; பெரும்பாலும் இவை திருக்குறள் , நாலடியார் போல நீதிகளை உரைக்கும். ஏனைய சில பாண்டி மண்டலம் கொங்கு மண்டலம் போன்ற இடங்களின் சிறப்புகளை விதந்தோதும் . இந்துக்களுக்குப் போட்டியாக முஸ்லிம்கள் , கிறிஸ்தவர்கள் பாடிய சதகங்களும் இருக்கின்றன. நமக்கு கிடைத்த மிகப்  பழைய தமிழ்ச் சதகம் மாணிக்கவாசகர் பாடிய திருச் சதகம் ஆகும். ஆயினும் அது திருவாசகத்தின் ஒரு பகுதி என்பதால் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கார்மண்டல சதகம் தான் முதலில் கிடைத்த தமிழ்ச் சதகம் என்பர். பழமொழிகள் நிரம்பிய தண்டலையார் சதகம் படிக்கச் சுவையானது. அம்பல வாணக் கவிராயர் பாடிய அறப்பளீச்சுர  சதகம்சதுரகிரி மலையில் உள்ள இறைவனை வேண்டிப் பாடியது. நீதிகள் , அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாம் எல்லோரும் வாழை இலையில் சாப்பிடுகிறோம் . தாமரை இலையில் சாப்பிடலாமா ? அரச இல்லை அல்லது புரசை இலைகளைத் தைத்து  செய்யப்படும் தையல் இலைகளில் சாப்பிடலாமா இதற்கெல்லாம் கவிராயர் சொல்லும் பதில்களைப்  பாருங்கள் .

(இதற்கிடையில் நாக்கில் தண்ணீர் ஊறவைக்கும் சுவையான செய்தி. அந்தக் காலத்தில் சில ரயில் நிலையங்களில் பட்டணம் பக்கோடா, போண்டா , வடை முதலியவற்றை தையல் இலையில் கட்டி விற்பார்கள். நானும் என் தம்பி சூரிய நாராயணனும் ந்த்ராலயத்தில் உள்ள ரா கவேந்திர சுவாமிகள்  மடத்துக்குப் போய் சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசித்தோம். முடிந்தவுடன் தையல் இலையில் சுவையான சாப்பாடு! மந்தாரை இலைகளைத் தைத்து தையல் இலை செய்வார்கள் என்று கேள்வி. நிற்க )

மா, பலா, வாழை இலைகளிலும், புன்னை, புரசு, குருக்கத்தி, பன்னிர்  இலைகளிலும் சாப்பிடலாம்.

சாப்பிடக்கூடாத இலைகள் எவை?

ஆல மரம் , அத்தி, அரசு, எருக்கு, முள் எருக்கு , தாழை , தாமரை , பாதிரி , ஆமணக்கு, சகதேவ , இத்தி மர இலைகளில் சாப்பிடக்கூடாது tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

அத்துடன் வேறு சில அறிவுரைகளையும் சேர்த்துச் சொல்கிறார் –

அடிக்கடி சாப்பிடாதே; குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடாதே . மேற்கண்ட இலைகளில் சிற்றுண்டி கூட  சாப்பிடக்கூடாது; தண்ணீரும் பருகக்கூடாது . இதோ பாடலும் பொழிப்புரையும் –

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.

Singapermal Kovil Temple

—subham—

வாழைப்பழம் வாழ்க !

banana(1)green

வாழையின் மருத்துவ குணங்கள் என்ன?
கட்டுரை எண் 932 தேதி மார்ச் 26, ஆண்டு 2014.

எப்போதோ ‘மூலிகை மணி’ என்ற பத்திரிகையில் இருந்து எடுத்துவைத்த பேப்பர் கட்டிங்-ஐ மீண்டும் படித்தேன். பழுப்பு நிறக் காகிதம் கிழிந்துவிடும் போல இருந்தது. தூக்கிப் போட மனசில்லை. வாசகர்களுடன் பகிர்ந்தால் எழுதிய ஆசிரியரும் மனம் குளிர்வார் அல்லவா?

வாழ வைக்கும் வாழை
எழுதியவர்: மருத்துவப் புலவர் டாக்டர் ச. ஆறுமுகநாதன்

இலையின் குணம்
வாழை மரம் பார்த்திருப்பாய் தம்பி – அது
வழங்கும் நலம் சொல்லுகிறேன் கேள் தம்பி!
வாழை இலை போட்டு உண்ணு தம்பி — அது
வாதபித்தம் போக்குமடா தம்பி

banana_leaf

பூவின் குணம்
வாழைப் பூ இரத்த மூலம் போக்கும் – மேக
வெட்டை கைகால் எரிச்சல்களை நீக்கும்
கோழையோடு வயிற்றுக் கடுப்போட்டும்
மற்றும் குணபேதம் நீக்கி தாது ஊக்கும்

vazaipu

பிஞ்சின் குணம்
வாழைப் பிஞ்சு இரத்தக் கடுப்போட்டும்
வந்த மூலம் நீரிழிவை மாற்றும்
பாழாகா வயிற்றுப் புண்ணை யாற்றும் மூத்திரம்
பக்குவமாய் மிகப்படாமல் போக்கும்

banana benefits

காயின் குணம்
வாழைக்காயால் பித்த வாந்தி போகும், பைத்தியம்
வயிற்றளைச்சல் இருமல் சூடு நீங்கும்
சூழும் இரத்தம் அதிகரிக்கும் வாயில் – சும்மா
சுரந்திடும் நீர் நிற்கும் பசி தூண்டும்

பழத்தின் குணம்
வாழைப்பழம் பித்தப் பிணி ஓட்டும் – உடல்
வரட்சியாலே வெளுப்பதினை மாற்றும்
தாழச் செய்யும் கொழுப்பு மூர்ச்சை போக்கும், மேனி
தளராத வடிவத்தினைச் சேர்க்கும்
OLYMPUS DIGITAL CAMERA

கிழங்கு நீர் குணம்
வாழைக் கிழங்கில் ஊறும் நீரு — தட்பம்
வாய்ந்ததிது குளிர்ச்சி தரும் தம்பி
கோழையுடன் எலும்புருக்கி பாண்டு – மற்றும்
கொடிய வெப்ப நோயகற்றும் தம்பி

தண்டின் குணம்
வாழைத் தண்டு குடலில் சேர்ந்த கல்லை – வெளி
வரவழைக்கும் வேலை செய்யும் தம்பி
வாழைத் தண்டு சாற்றினாலே தம்பி – சிறுநீர்
வாதையெல்லாம் போகுமடா தம்பி
stem

கூட்டுப் பொரியல்
வாழைப் பூ, பிஞ்சு காய்கள் தண்டு – தினம்
வருவல் கூட்டுச் செய்து உண்ணு தம்பி
வாழவைக்கும், நோய்கள் பல நீக்கும் – இந்த
வகை தெரியார் உணரச் சொல்லு தம்பி

14 வகைகள்
வாழை வகை பதினான்கு உண்டும் – அதில்
வரும் செவ்வை, இரசுத்தாளி, வெள்ளை மொந்தை
வாழ்வளிக்கும் வகைகள்; கரு வாழை மேன்மை
வாய்ந்ததென்று சொல்லிடுவார் தம்பி

red-banana

உணவுக்குப் பின் பழம்
உணவுக்குப் பின் வாழைப்பழம் உண்ணுட மலம்
உடந்திளகிப் போகச் செய்யும் கண்ணு
குணத்தை நல்கி பலமளிக்கும் என்று, முன்னோர்
கூறியதை யானும் சொன்னேன் கண்ணு

red-banana-500x500

நன்றி: ஆறுமுக நாதனுக்கு !!

என்னுடைய முந்தைய மருத்துவக் கட்டுரைகள்:–

தென்னையின் பெருமை, தக்காளி ரசத்தின் மகிமை, நோய் நீக்கும் தாமிரம்
இளநீர் மகிமை, இந்திய அதிசயம் ஆலமரம், சிந்துவெளியில் அரச மரம்
வாழை மரம், ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே, உடம்பைக் கடம்பால் அடி, மரத் தமிழர் வாழ்க!, யானைக் காப்பி, ஒருவேளை உண்பான் யோகி, மருத்துவப் பழமொழிகள், பொற்கை பாண்டியன் கை சர்ஜரி, ஆமையைப் போல 300 ஆண்டு வாழமுடியுமா?, இசை தரும் நோயற்ற வாழ்வு, நோய் நீக்க ராகங்கள், அருகம்புல் ரகசியங்கள், மருத்துவப் பழமொழிகள், கண்ணப்பர்-விஷ்ணு–சிபி கண் தானம்/ சர்ஜரி, தமிழர்களின் அபார மருத்துவ அறிவு —- முதலிய இருபதுக்கும் மேலான தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் இந்த பிளாக்—கில் உள்ளன. படித்து மகிழ்க!

contact swami_48@yahoo.com