Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 September 2018
Time uploaded in London – 7-38 am (British Summer Time)
Post No. 5474
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கண்ண பிரான் பற்றிய அபூர்வ கதை!(Post No.5474)
கிருஷ்ணனைப் பற்றிய ஒரு அபூர்வ கதையை ஆழ்வார்கள் பாடியுள்ளனர். இந்தக் கதை வட இந்தியாவில் இல்லை, ஸம்ஸ்க்ருத நூல்களில் இல்லை என்று மு.இராகவையங்கார் கூறுகிறார். இது சுவையான கதை மட்டுமல்ல.
ஜடப் பொருட்களுக்கும் முக்தி உண்டு என்று தெரிகிறது. அல்லது ஒருவனின் எல்லையற்ற பக்தி எந்த அளவுக்குச் செல்லும் என்று காட்டுவதாகவும் கொள்ளலாம்.
தமிழில் புறநானூற்றில் உள்ள ராமாயணச் செய்திகள் கம்பனிலோ வால்மீகியிலோ இல்லை. ஆழ்வார்கள் பாடிய பல ராமாயண சம்பவங்கள் வேறு எந்த ராமாயணத்திலும் இல்லை. ஒரு வேளை கம்பன் சொல்லும் மூன்று ராமாயணங்களும் அவர்கள் பாடிய காலத்தில் கிடைத்திருக்கலாம்.
இதே போல பாகவதத்தில் இல்லாத கதைகளும் ஆழ்வார் பாடல்களில் இருப்பது ஆராய்ச்சிக்குரியது.
தமிழ் மொழி -தெய்வத் தமிழ், தமிழ்நாடு தெய்வ பூமி என்பதற்கு இவை எல்லாம் எடுத்துக்காட்டுகளாக நிற்கின்றன.
இதோ இணப்பிலுள்ள ததிபாண்டன் கதையைப் படியுங்கள்; வழங்கியவர் மு. ராகவ அய்யங்கார் என்னும் மிகப்பெரிய தமிழ் அறிஞர். காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள், தமிழ் தாத்தா உ.வே.சா., பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரம் பிள்ளை ஆகியோரால் பாராட்டப்பட்ட பெரியார் வழங்கிய கதை:-