மலர் மருத்துவம்! FLOWER MEDICINE– 2, ரெஸ்க்யூ ரெமடி! (Post No.7488)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7488

Date uploaded in London – 24 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மலர் மருத்துவத்தில் உள்ள 38 மருந்துகள் பற்றிய முதல் கட்டுரையை அடுத்து வருகிறது ரெஸ்க்யூ ரெமடி!

மலர் மருத்துவம்! – 2 – ரெஸ்க்யூ ரெமடி!

ச.நாகராஜன்

டாக்டர் எட்வர்ட் பாச் (Dr Edward Bach, M.B. B.S., M.R.C.S., L.R.C.P., D.P.M.,  (CAMB) உலகிற்குத் தந்த   மலர் மருந்துகளில் அற்புதமான ஒன்று ரெஸ்க்யூ ரெமடி! (Rescue Remedy)

இந்த மருந்து அவசரகால உதவி மருந்து. திடீரென ஒரு விபத்து அல்லது எதிர்பாராத அதிர்ச்சி தரும் செய்தி போன்றவற்றால் ஏற்படும் மோசமான பாதிப்புக்கு உடனடி நிவாரணம் தான் இந்த ரெஸ்க்யூ ரெமடி!

38 மலர் மருந்துகளில் ஐந்தின் கலவை இது.

ஸ்டார் ஆஃப் பெத்லஹேம் (Star of Bethlahem) For Shock

ராக் ரோஸ் (Rock Rose) For terror and panic

இம்பேஷன்ஸ் (Impatiens) For mental stress and tension

செர்ரி ப்ளம் (Cherry Plum) For desperation

க்ளமேடிஸ் (Clematis) For the bemused, faraway, out-of-the body feeling which often precedes fainting or loss of consciousness)

ஆகிய ஐந்தும் கலந்து செய்யப்படுவது ரெஸ்க்யூ ரெமடி.

இதை எப்படிச் செய்வது?

மேற்கண்ட ஐந்து மருந்துகள் உள்ள பாட்டில்களிலிருந்து இரண்டு இரண்டு துளிகளை எடுத்துச் சேர்த்துக் கொண்டு அத்துடன் ஒரு அவுன்ஸ் – அதாவது 30 cc – பிராந்தி அல்லது ஆல்கஹாலைச் சேர்க்க வேண்டும். இது தான் ரெஸ்க்யூ ரெமடி.

பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடி வைத்துக் கொண்டு அவசரகாலங்களில் உபயோகப்படுத்தலாம்.

டாக்டர் பாச்  இந்த அவசரகால மருந்தை எப்போதும் கை வசம் வைத்திருப்பர். இன்று உலகில் ஏராளமானோர் இதைக் கைவசம் வைத்திருக்கின்றனர்.

ஏனெனில் விபத்து எப்போது எந்த ரூபத்தில் எங்கு வரும் என்பது யாருக்குத் தெரியும்?

அதிர்ச்சியில் உறைந்த யாருக்கேனும் இதைக் கொடுக்க வேண்டுமெனில் ஒரு டம்ளர் நீரில் மூன்று துளி ரெஸ்க்யூ ரெமடியைக் கலக்க வேண்டும். இதைப் பாதிக்கப்பட்டவர் சிறிது குடிக்க வேண்டும். அவர் கலக்கம் நீங்கி அமைதியை அடைய அடைய ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு வாய் இந்த நீரைக் குடிக்க வேண்டும், அவ்வளவு தான்.

இதை நீடித்து ஒருவருக்குக் கொடுக்க வேண்டுமெனில் ஒரு டீ ஸ்பூன் நீரில் மூன்று துளிகளை விட்டுக் கொடுக்க வேண்டும்.

ஒருவேளை தண்ணீர் அருகில் கிடைக்கவில்லை எனில், இந்த ரெமடியின் துளிகளை மட்டும் பாதிக்கப்பட்டவரின் உதடுகள், நாக்கு, பல் ஈறுகளில் தடவி விட்டால் போதும்.

இதை வெளிக் காயங்களுக்கு மருந்தாகக் கூடப் பயன்படுத்தலாம்.

காயம் பட்ட இடத்தில் ஆயின்மெண்டாக (Ointment) – பூச்சு மருந்தாகப் – பூசலாம்.

ஆறு துளிகளை 16 அவுன்ஸ் நீரில் கரைத்தால் ஆயின்மெண்ட் ரெடி!

தீராத துக்கமா, திடீரென்று வரும் துயரச் செய்தியா அதிலிருந்து மீள இதைப் பயன்படுத்தலாம்.

1930இல் முதன்முதலாக இந்த மருந்தை டாக்டர் பாச் உபயோகப்படுத்தினார்.

அப்போது  அவர் ராக் ரோஸ், க்ளமேடிஸ் மற்றும் இம்பேஷன்ஸ் ஆகிய மூன்றை மட்டுமே கலந்து இதை உருவாக்கிப் பயன்படுத்தினார். மற்ற இரண்டை அவர் அப்போது கண்டுபிடித்திருக்கவில்லை.

பின்னால் இது ஐந்து மலர் மருந்துகளின் கூட்டுச் சேர்க்கை கலவையானது.

ரெமடி பற்றிய சுவையான சம்பவம் ஒன்று இது:-

திடீர் புயலில் படகு ஒன்று சிக்கிக் கொண்டது. பல மணி நேரம் படகில் சிக்கிக் கொண்ட இருவர் ஒருவாறாக மீட்கப்பட்டனர்.  மீட்கப்பட்டவருள் ஒரு இளைஞன் நினைவிழந்திருந்தான். அவன் உடம்பு நீலம் பாய்ச்சியிருந்தது. அவனது உடைகளோவெனில் கடல் உப்பினால் விரைப்பாகி இருந்தது.

டாக்டர் பாச் வேகமாக அவர்களிடம் ஓடினார். உடனடியாக ரெஸ்க்யூ ரெமடியை அவர்கள் உதடுகளில் தடவி விட்டார். தொடர்ந்து இதை அவர் பயன்படுத்தினார்.

அந்த இளைஞனை பீச்சிலிருந்து அருகிலிருந்த ஹோட்டல் ஒன்றிற்குக் கொண்டு சென்றனர். ஹோட்டலை அடையுமுன்னரே அவனுக்கு சுயநினைவு திரும்பி விட்டது. ஹோட்டலை அடைந்த போது அவன் ஒரு சிகரட் இருக்கிறதா என்று கேட்டான்!

இது போல உலகெங்கும் ஆயிரக்கணக்கான வியப்பூட்டும் கேஸ்கள் இன்றளவும் இந்த ரெஸ்க்யூ ரெமடியினால் ஏற்பட்டுள்ளன; பிரமிக்க வைக்கும் சம்பவங்களை பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் சொல்லி வருகின்றனர்.

மலர் மருந்துகள் மிக மிக எளிமையானவை.

“ஆகவே இந்த சிகிச்சைமுறை பற்றி தவறாக அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டாம். இன்னும் ஆய்வுகள் அதிகமாக ஆக, படைப்பின் எளிமையை இன்னும் அதிகமாக நீங்கள் உணர்வீர்கள்” என்று டாக்டர் பாச் கூறி இருப்பது எவ்வளவு பொருள் பொதிந்த ஒன்று.

அவரது கூற்று இது: “Let not the simplicity of this method deter you from its use, for you will find the further your researches advance, the greater you will realize the simplicity of the Creation.”

மலர் மருத்துவம் பற்றிச் சரியாகப் புரிந்து கொண்டோமெனில் நமது வீட்டிலும் ஒரு மலர் மருந்து – கிட் (Kit)  – பெட்டி தேவையாக இருக்குமல்லவா?!

***