முதல் திராவிட ராணி:கி.மு.1320

Kerala Royal Lady-Painting by Raja Ravivarma

திராவிடா என்ற ஒரு பெண்ணின் பெயர் மிக மிகப் பழைய பெயராக சம்ஸ்கிருத இலக்கியத்தில் இடம்பெறுகிறது. இவர் திராவிட நாட்டிலிருந்து சென்ற அரச குலப் பெண்ணாக இருக்க வேண்டும். இவர் த்ருணபிந்து என்பவரின் மகள். விஸ்ரவஸ் என்பவரின் தாய். இந்த வம்சங்களை ஆராய்ந்து பர்ஜிட்டர் (parjiter)  போன்ற புராண ஆராய்ச்சியாளருடன் ஒப்பிடும்  ஆர்.மார்ட்டன் ஸ்மித் (R. Morton Smith: Dates and Dynasties in Ancient India, Motilal Banarsidas)  இப்படி வரிசைப்படுத்துகிறார்.

த்ராவிடா—விஸ்ரவஸ்—விசால—ஹேமசந்திர—உசந்திர—தூம்ராஸ்வ—ஸ்ரீஞ்சய—சஹதேவ—க்ர்சாஸ்வ—சோமதத்த—ஜனமேஜய—ப்ரமாதி

ப்ரமாதி என்ற மன்னன் தசரதனின் தந்தையான அஜன் காலத்தவன். மார்ட்டன் ஸ்மித் கணக்குப்படி த்ருண பிந்துவின் காலம் கி.மு.1320. இந்த அரசர் வரிசை புராணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய கதைகளிலுள்ள மன்னர்களுக்கெல்லாம் காலம் கணித்த பின்னரும் நாம் மட்டும் புத்தர் காலம் (கி.மு ஆறாம் நூற்றாண்டு) முதல் வெள்ளைக்காரர் எழுதிய சரித்திரத்தையே இன்று வரை படித்து வருகிறோம். உண்மையில் ராமர், தசரதர் காலம் எல்லாம் இதற்கும் முன்னிருக்க வேண்டும். ஆனால் மார்ட்டன் ஸ்மித் , பர்ஜிட்டர் போன்றவர்கள் ஒவ்வொரு மன்னனுக்கும் 20 முதல் 30 ஆண்டு மட்டுமே ஒதுக்கியும் கூட அவர்கள் காலம் கி.மு.1300ஐ ஒட்டிச் செல்கிறது!

ஆனால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. விஜயன் என்ற மன்னன் இந்தியாவின் ஒரிஸ்ஸா/ வங்காளப் பகுதிலிருந்து நாடு கடத்தப் பட்டு இலங்கையை அடைந்தவுடன் அவனுக்கும் அவனுடைய மந்திரிகளுக்கும் மணம் முடிக்க பெண்கள் இல்லை. பாண்டிய நாட்டுப் பெண்கள்தான் அங்கு சென்று அவர்களைக் கல்யாணம் செய்துகொண்டனர் என்று இலங்கை வரலாற்றைக் கூறும் மஹாவம்சம் என்ற நூலில் உள்ளது. இது நடந்தது கி.மு ஐந்தாம் நூற்றாண்டு.

மன்னர்கள் பல நாட்டுப் பெண்களை மணப்பது தொன்று தொட்டு நடந்துவருகிறது. காந்தார (ஆப்கனிஸ்தான்) நாட்டுப் பெண்ணான காந்தாரியை திருதராஷ்ட்ரன் மணந்தான். கேகய (ஆப்கனிஸ்தான் /ஈரான்) நாட்டுப் பெண்ணான கைகேயியை தசரதன் மணந்தான். செல்யூகஸ் நிகடார் என்ற கிரேக்க மன்னனின் மகளை மௌர்ய சந்திர குப்தன் மணந்தான்.

மஹாபாரத வீரன் அர்ஜுனன் மணக்காத இனமே இல்லை. அர்ஜுனன் பாண்டிய குமாரியை மணந்ததாக நாட்டுபுற பாடலும் உண்டு. (அர்ஜுனனும் வந்துவிட்டார் அல்லி ராணி).

2000 ஆண்டுகளுக்கு முன் அகத்திய மகரிஷி தென்கிழக்காசிய ( நாக நாட்டு) மங்கையை மணந்து அங்கு இந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். அது முஸ்லீம்கள் வரும் வரை 1300 ஆண்டுகளுக்கு நீடித்தது. ஆனால் லோபமுத்ரா என்ற பெண்ணை மணந்த ரிக் வேத அகத்தியர் வேறு. மணி மேகலை கதையிலும் இதே போல நாகநாட்டு மங்கை பீலிவளையைச் சோழ மன்னன் கிள்ளிவளவன் மணந்த வரலாறு வருகிறது.

பாண்டியர் –குஜராத்தி தொடர்பு

“ஆவஸ்யக சூர்னி” என்ற சமண மத நூல் ஒரு அரிய தகவலைத் தருகிறது. மதுரைக்கும் சவுராஷ்ட்ர தேசத்துக்கும் (குஜராத்தின் ஒரு பகுதி) இடையே தொடர்ந்து கப்பல் போக்குவரத்து இருந்ததாகவும் பாண்டு சேனன் என்ற மதுரை மன்னன் தனது இரண்டு மகள்களுடன் சென்றபோது புயல் காற்று வீசி கப்பல் உடைந்தவுடன் முருகனையும் சிவனையும் வேண்டிக் கொண்டதாகவும் கூறுகிறது. முருகனும் சிவனும் தமிழுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதோடு அவர்கள் இருவரும் தமிழ் சங்கத்தில் தமிழ் ஆராய்ந்ததாகவும் நாம் படிக்கிறோம். ஆக, இது சங்க காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி என்றும் கருதலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னன் கடல் பயணத்தில் இறந்ததையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

மதுரை மன்னன் மலயத்வஜ பாண்டியன் சூர சேன (குஜராத்) மன்னன் மகளான காஞ்சன மாலாவை மணந்து மீனாட்சியைப் பெற்றெடுத்தான். இதிலிருந்துதான் தற்கால மதுரையின் வரலாறே துவங்குகிறது. மதுரையைச் சுற்றி கி.மு. மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இருப்பதைக் கருத்தில் கொண்டால் மலயத்வஜன் காலமும் 2000 ஆண்டுகளுக்கு முந்தியதே.

(திராவிடம் என்பதை இப்போது அரசியல்வாதிகள் பயன்படுத்தும் சொல்லுடனும், வெளிநாட்டார்,  நம் மீது திணித்த ஆரிய திராவிடவாதச் சொல்லுடனும் குழப்பிக் கொள்ளக் கூடாது. சங்க இலக்கியத்திலும் பழைய வடமொழி நூல்களிலும் ஆரியர் என்பது முனிவர்கள் வாழும் பகுதி, வட நாடு, பண்பாடுமிக்கவர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. திராவிடம் என்பது தென் பகுதியைக் குறிக்கும் சொல். இப்போது ஆங்கிலத்தில் மத்திய கிழக்கு, தூரக் கிழக்கு என்றெல்லாம் பெயரிட்டது போல இது ஒரு நிலவியல் சொல்.)

தசரதன் எழுதிய கடிதங்கள்

எகிப்து நாட்டு அரசனுக்கு இரண்டு பெண்களை மணம் முடித்த தசரதன் (Tushratta கி.மு.1354) என்ற மன்னனின் கடிதங்கள் மிகவும் புகழ் வாய்ந்த கடிதங்கள். அவை 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்திய மன்னனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இவை விக்கி பீடியா போன்ற தளங்களில் முழு விவரங்களுடன் கிடைக்கும். மிட்டன்னி மன்னனான தசரதன் தனது சகோதரி ஜிலுகிபாவையும்(Gilukhipa), மகள் ததுகிபாவையும்(Tadukhipa) எகிப்பதிய மன்னன் மூன்றாம் அமணதேவனுக்கு( Amenhotep III)  மணம் முடித்தான். இதற்குப் பின் அவன் எழுதிய 10 கடிதங்கள் மிகவும் சுவையானவை. இப்பொது கியூனிபார்ம் எழுத்தில் மியூசியத்தில் உள்ளன. நமக்குத் தெரிந்து 4, 5 தசரதன்கள் இருப்பதால் இவர் ராமாயண தசரதனுக்கு முந்தியவரா பிந்தியவரா என்பது ஆய்வுக்குரிய விஷயம். மிக மிகப் பழமையான கலப்பின கல்யாணம் இதுதான். எகிப்து நாட்டுக்கே மிஸ்ரம் (கலப்பின) நாடு என்றுதான் பெயர்.

வட மொழி தென் மொழி நூல்கள் ஒரு உண்மையை மறைக்காமல் ஒத்துக் கொள்கின்றன. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்சாவதாரம் தென்னாட்டில்தான் நடந்தது என்ற கதை வடமொழிப் புராணங்களிலேயே உள்ளது. திருஞான சம்பந்தரும் அவர் பிறந்த சீர்காழியைத் “தோணிபுரம்” (Boat City) என்றும் பிரளய காலத்தில் தோனி (Noak’s Ark) ஒதுங்கிய இடம் என்றும் பாடுகிறார். கடல் கோளும் சுனாமியும் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கையில் தென்னாட்டு / திராவிட ராணிகள் பல நாடுகளுக்குச் சென்றது உண்மையே என்று அடித்துக் கூறலாம்.

தமிழ் இலக்கியங்களில் தென்னவன் என்ற சொல் யமனையும் பாண்டியனையும் ராவணனையும் குறிக்கும். இலங்கை ராவணன் , மிதிலைப் (பீஹார்- நேபாள எல்லை ) பெண்ணான சீதையைக் குறிவைத்ததும் இதனால் அன்றோ. ராமனுக்கெல்லாம் முன்னோனான அஜன் — இந்துமதி ஸ்வயம்வரத்துக்கு பாண்டிய மன்னனும் வந்ததாக புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் பாடுகிறான். அவனும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன். ஆக இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு வழக்குதான்.

*****************************

தாவரங்களின் அறிவு!- Part 2

தாவரங்களின் அறிவு! -2

ச.நாகராஜன்

பேராசிரியர் மங்குசா தாவரங்கள் தங்களுடைய தகவல் தொடர்பை இரசாயனப் பொருள்கள் மூலம் பரிமாறிக் கொள்கின்றன என்கிறார்!  எச்சரிக்கை அறிவிப்பு,ஆரோக்கிய உணர்வு போன்றவற்றை அறிவதற்கு நம்மிடம்   அகராதிச் சொற்கள் இருப்பது போல அவைகளிடமும் உள்ளன என்பது அவரது கணிப்பு!

ஆனால் மங்குசாவிற்கு முன்னாலேயே சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே நம் நாட்டைச் சேர்ந்த சர் ஜகதீஸ் சந்திர போஸ் தாவரங்களுக்கும் உயிர் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என்பதைச் சோதனைகள் வாயிலாகச் செய்து காட்டி நிரூபித்திருக்கிறார்!

வங்காளத்தில் பிறந்த ஜகதீஸ் சந்திர போஸ் (பிறப்பு 18-11-1858 மறைவு 23-11-1937) இங்கிலாந்தில் படித்தவர். தாய்நாடு திரும்பியவுடன் கல்கத்தா பிரஸிடென்ஸி கல்லூரியில் விரிவுரையாளரானார். 1894ல் கல்லூரியில் பாத்ரூமுக்கு அருகில் இருந்த ஒரு சிறிய அறையைத் தன் சோதனைச்சாலையாக மாற்றித் தன் ஆராய்ச்சிகளைத் தொடங்கலானார். மார்க்கோனி ரேடியோ அலைகளைக் கண்டுபிடிக்கும் முன்னரே 1895ம் ஆண்டு அவர் இதைப் பொதுமக்களிடம் பகிரங்கமாக செயல்முறை வடிவில் நிரூபித்துக் காட்டினார்.

இiதற்காக அவர் ஒரு விசேஷ கருவியை உருவாக்கினார். இதற்கு ரெஸோனேட் ரிகார்டர் (Resonate Recorder) என்று பெயர். இந்தக் கருவி தாவரங்களுக்கும் நாடித்துடிப்பு உண்டு என்பதைத் துல்லியமாக நிரூபித்துக் காட்டியது! இந்தச் சோதனையை நடத்துவதற்காக மிகுந்த கவனத்துடன் அவர் ஒரு செடியை வேருடன் தோண்டி எடுத்து அதைத் தன் கருவியுடன் இணைத்தார். செடியை புரோமைட் அடங்கிய ஒரு பாத்திரத்தில் அப்படியே தண்டுடன் வைத்தார்.

கடிகாரப் பெண்டுலம் அங்கும் இங்கும் ஊசலாடுவது போல ஆடிய அந்தக் கருவியின் முள் திடீரென்று சீரற்றதாக மாறி வேகமாக அங்கும் இங்கும் ஆடியது. பிறகு வேகமாக நடுநடுங்கி ஆடத் துவங்கியது. சடக்கென ஆட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து நின்றது. அதன் உயிர் போனதை இவ்வாறு அது தெரிவித்தது! விஷத்தால் அதன் உயிர் போனது.

1900ம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒரு மகாநாட்டிலும் பிறகு இங்கிலாந்திலும் தனது சோதனைகளை அவர் நடத்திக் காட்டினார்.செடிகள் வெட்டப்பட்ட போது அவைகள் துடிதுடித்து அழுவதை அவர் காண்பித்த போது உலகமே அதிசயித்தது!

போஸ் காட்டிய வழியில் இப்போது அறிவியல் வெகுவாக வளர்ந்து விட்ட இன்றைய உலகில் பல்வேறு விதமான அதிசய சோதனைகளை இன்னொரு விஞ்ஞானிச் செய்து காட்டி வருகிறார். இவர் பெயர் க்ளீவ் பாக்ஸ்டர். (Cleve Backster)இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

லை டிடெக்டர் (Lie detector) என்ற பொய்யைக் கண்டுபிடிக்கும் கருவி பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஒரு நாள் இந்த லை டிடெக்டரை ட்ராகன் ட்ரீ (Dracaena)எனப்படும் அரக்க மரத்துடன் அவர் இணைத்துப் பார்த்தார். வேரில் தண்ணீர் ஊற்றப்படும் போது இலைகள் அதை எவ்வளவு நேரத்தில் உணர்கின்றன என்று கண்டுபிடிப்பதே அவர் ஆய்வின் நோக்கம்.

கொள்கை ரீதியாகப் பார்த்தால் ஒரு தாவரமானது நீரை உறிஞ்சியவுடன் தடையைத் (Resistance) தளர்த்திக் கடத்தலை (Conductivity) அதிகரிக்க வேண்டும். ரிகார்டரில் இதற்கான வளைவு மேல் நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால் உண்மையில் நடந்ததோ வளைவு ரிகார்டரில் கீழ் நோக்கிச் சென்றது!

அதாவது லை டிடெக்டரை ஒரு மனிதனுடைன் இணைத்துச் சோதனை செய்யும் போது அது அவனது மூட் எனப்படும் நிலைகளுக்கு ஏற்றார் போல கருவியில் வெவ்வேறு வளைவுகளைக் காண்பிக்கும்.

ட்ராகன் ட்ரீயில் ஏற்பட்ட விளைவு  மனிதனிடம் ஏற்படும் நிலை மாற்றத்தால் உருவாகும் வளைவுகளைப் போல அமைந்திருப்பதைக் கருவி உணர்த்தியது! நீரை உறிஞ்சியவுடன் அது சந்தோஷமாக இருப்பதை அது காட்டியது!

ஈ.எஸ்.பி. (ESP- Extra Sensory Perception) எனப்படும் அதீத புலன் உணர்வு கூட தாவரத்திற்கு உண்டு. இதையும்  நிரூபிக்கும் வகையில் அவர் பல சோதனைகளை நடத்திக் காட்டினார்!

ஒரு மனிதனை திடீரென பயமுறுத்தினால் அவனிடம் அது ஏற்படுத்தும் விளைவு அவனை நிலைகுலையச் செய்வதன் மூலம் காண்பிக்கும். உடனடி எதிர்விளைவைக் காண பயமுறுத்திப் பார்ப்பது ஒரு சிறந்த வழி என்பதை பாக்ஸ்டர் உணர்ந்திருந்தார்.

ஆகவே செடியினுடைய இலைகளை சூடான காப்பியில் அமுக்கிப் பார்த்தார். ஆனால் விளைவுகள் ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. சரி, இன்னும் சற்றுக் கடுமையான சோதனையைச் செய்து பார்க்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.

இலைகளை எரித்து விட்டால் என்ன என்று எண்ணி அவர் ஒரு தீப்பெட்டியை எடுத்தது தான் தாமதம், லை டிடெக்டருடன் இணைக்கப்பட்டிருந்த கிராப் பேப்பரில் ஒரு வளைவு வேகமாகத் தோன்றியது! கொளுத்தப்பட்ட தீக்குச்சியுடன் அவர் இலைகளை நெருங்கியவுடன் இன்னொரு வளைவு இன்னும் வேகமாக உருவானது!

நிச்சயமாக ஒரு மனிதன் தன்னை எரிக்கப்  போகிறான் என்ற உணர்வு செடிக்கு ஏற்பட்டு உறுதியானவுடன் அது தன் பயத்தை வேகமாகக் காட்டியது.

ஆனால் எரிப்பது போல பாவனை செய்தாலோ அல்லது சற்று தாமதப்படுத்தினாலோ அது தன் பயத்தைக் காண்பிக்கவில்லை! ஆகவே மனித மனதில் தோன்றும் உண்மையான எண்ணத்தை புலன் கடந்த அதீத புலனாற்றலால் அது உணர்கிறது என்பதை அவர் கண்டார். இந்த அதிசய அனுபவம் அவரை மேலும் பல சோதனைகளைச் செய்ய வழி வகுத்தது!

மேலும் சோதனைகள் தொடரும்!

 

தாவரங்களின் அறிவு!

ச.நாகராஜன்

 

பேராசிரியர் ஸ்டீபனோ மங்குசா இன்று உலகிலுள்ள தாவரங்களுக்கான ஒரே சோதனைச்சாலையை நடத்தி வருபவர்!

 

தாவரங்களுக்கான ‘ப்ளாண்ட் நியூரோ பயாலஜி’ எனப்படும் தாவர மூளை அறிவியல் துறையில் உள்ள இந்தப் பன்னாட்டுச் சோதனைச்சாலை இத்தாலியில் ப்ளோரென்ஸ் நகருக்கு அருகில் ஏழு மைல் தொலைவில் உள்ளது. மங்குசாவும் அவரது ஒன்பது சகாக்களும் தாவரங்களைப் பற்றிய பல மர்மங்களை விடுவிக்கும் ஆராய்ச்சியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உடலியல், தாவர மூளை உயிரியல்,சுற்றுப்புறச்சூழல் இயல் ஆகிய மூன்று துறைகளையும் கலந்து செய்யும் அபூர்வமான ஆய்வு இவர்களுடையது.

 

“பிரச்சினைகளைத் தீர்ப்பது தான் அறிவு” என்று அறிவிற்கான இலக்கணம் வரையறுக்கப்படுமானால்  தாவரங்கள் நமக்குக் கற்பிக்க ஏராளமானவற்றைத் தங்கள் வசம் கொண்டுள்ளன என்கிறார் மங்குசா!

 

“மூளை என்ற ஒரு அங்கம் இல்லாமலேயே அவை ஸ்மார்ட்டாக அற்புதமாக உணர்கின்றன! எப்படி வளர்வது, எப்படி சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வது,எப்படி முன்னேறுவது என்பதையெல்லாம் இவைகள் காண்பிப்பது அலாதி ஆச்சரியத்தை நமக்குத் தருகின்றன” என்று மேலும் அவர் கூறுகிறார்!

 

அறிவு என்பது மூளையினால் மட்டுமே அளக்கப்படும் ஒன்று இல்லை என்பது அவரது திடமான நம்பிக்கை.

 

வெறும் கறிகாய் வகைத் தாவரம் தானே என்று செடிகொடிகளை அனைவருமே அலட்சியம் செய்கின்றனர்.அவற்றிற்கு உரிய மரியாதையைத் தருவதில்லை.ஆனால் நவீன தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் ரொபாட்டுகளுக்கு இன்று எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ அந்த அளவு முக்கியத்துவம் வயல்வெளிகளில் அதேபோல தாவரங்கள் அதிசய செயல்களைப் புரிவதால் உண்டு என்பது மங்குசா தரும் புதிய விவரம்.

 

உதாரணமாக இன்று இவர்களது சோதனைச்சாலையில் நடைபெறும் ஆய்வுகளை எடுத்துக் கொள்வோம்.தாவர ஆராய்ச்சியின் விளைவாக இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ‘ப்ளாண்டாய்ட்’ தான்  செடியின் தண்டானது தகவலை அனுப்புவது போல இயந்திர வகையில் ஒன்றான பாட்ஸ் என்பவை  செவ்வாய் கிரகத்தின் தரையில் போடப்பட்டு அங்கிருந்து பூமிக்கு தகவலை அனுப்ப முடிவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வழிவகை செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

பல் டாக்டர்களின் வாசல் அறைகளை அலங்கரிக்கும் வெறும் அலங்காரப் பொருளாக செடிவகைகள் இருந்த காலம் மலையேறிப் போனது என்று கிண்டலடிக்கிறார் மங்குசா.

 

சார்லஸ் டார்வினின் தாவரங்களின் இயங்கு சக்தி என்ற போட்டோட்ராபிஸம் பற்றிய பேப்பர் 1880ல் வெளியிடப்பட்டது.ஆனால் தாவரங்களின் இந்த அறிவு பற்றிய விஷயத்தில் ஆர்வமும் விழிப்புணர்வும் மெதுவாகத்தான் உலகில் பரவலாயிற்று.

 

மனிதர்களுக்கு உள்ளது போன்ற உணர்வுகள் தாவரங்களுக்கு உள்ளதா என்பது பற்றி மங்குசா தெளிவாக விளக்குகிறார்.

 

‘தி சீக்ரட் லைப் ஆ·ப் ப்ளாண்ட்ஸ்’ என்ற திரைப்படம்  ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளியிடப்பட்ட போது உலகமே வியந்தது.தாவரங்களுக்கு உணர்ச்சிகளும் உணர்வுகளும்  உள்ளன என்பதை இந்தப் படம் சுட்டிக் காட்டிய போதிலும் அறிவியல் விஞ்ஞானிகள் ‘அறிவுள்ள தாவரங்கள்’ பற்றிப் பேசுவதைக் கூடுமான வரையில் தவிர்த்தே வந்தனர்!

சிக்னல் அனுப்புவது, அனுப்பியதை உணர்வது ஆகியவை பற்றிய விஷயங்கள் மூளைக்கு இருக்கும் திறனில் உள்ள அறிவு போல தாவரங்களுக்கும் உள்ளது என்பது பற்றிய ஏராளமான ஆராய்ச்சி முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன!

 

மங்குசா சர்ச்சைக்குரிய தாவர மூளை உயிரியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ‘ப்ளாண்ட் நியூரோபயாலஜி’ என்ற இந்த வார்த்தையை அவர் பயன்படுத்துவதற்குக் காரணம் மனித நரம்பு அமைப்பில் உள்ளது போலவே தாவரங்களுக்கும் அமைப்பு உள்ளது தான் காரணம்!

 

பத்து லட்சம் யூரோக்கள் ( ஒரு யூரோ என்பது சுமார் ஐம்பத்தைந்து ரூபாய்கள்) இதுவரை இந்த ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து லட்சம் யூரோக்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வளவு பணம் இந்த ஆராய்ச்சிக்குக் கொட்டப்படுவானேன்?

 

இயற்பியல் விஞ்ஞானியான பேராசிரியர் போலோ ப்ளாஸி,” இந்த ஆராய்ச்சி ஒரு போலி அறிவியல் ஆராய்ச்சியாக இதுவரை (சிலரால்) கருதப்பட்டு வந்த போதிலும் இனிமேல் அப்படி கருதப்பட நிச்சயமாக முடியாது” என்கிறார்.

 

செடிகளின் மீது இசையின் தாக்கம் நிரூபணமான ஒன்று!  இப்போது புவி ஈர்ப்பு விசையை உணர்வது, தொலைதூர தகவல்களை சிக்னல் மூலம் அனுப்புவது ஆகியவற்றில் தாவரங்களின் திறன் வியக்க வைக்கும் அளவில் உள்ளது நிரூபணமாகி விட்டது.

 

அடுத்த ஆண்டு ஜப்பானில் பன்னாட்டு விஞ்ஞானிகளின் குழு தாவரங்களின் அறிவு பற்றி உலகளாவிய அளவில் கூடி விவாதிக்கப் போகிறது!இந்த ஒன்றே இதன் முக்கியத்துவத்திற்குச் சரியான சான்று ஆகும்!

 

-தொடரும்

(என் சகோதரர் ச. நாகராஜன் எழுதும் கட்டுரைகளும் இங்கே தொடர்ந்து வரும்)

 

 

 

நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்

இந்தியா ஒரு அதிசிய நாடு. செல்வக் கொழிப்பும் ஆன்மீகச் சிறப்பும் கொடிகட்டிப் பறக்கும் நாடு என்று கேள்விப்பட்டவுடன் மாமன்னன் அலெக்ஸாண்டருக்கு ஒரே துடிப்பு. எப்படியாவது இந்தியாவுக்குப் போக வேண்டும். அங்குள்ள சந்யாசிகளின் காலடியில் உட்கார்ந்து ஆன்மீகப் பாடம் கற்க வேண்டும். முடிந்தால் சந்யாசிகளைக் கூடவே அழைத்து வர வேண்டும் என்று திட்டமிட்டான். வரும் வழியில் உள்ள நாடுகளை ஒவ்வொன்றாக வென்றான். வட மேற்கு இந்தியாவில் போரஸ் என்ற புருஷோத்தமனை வெல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மகதப் பேரரசின் மாபெரும் படை வளத்தை ஒற்றர்களின் மூலம் அறிந்தவுடன் செய்ய முடியாத ஒரு செயலில் இறங்கிவிட்டோமே என்று எண்ணி கிரேக்க நாட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தான்.

இந்திய சந்யாசிகளைக் கூட்டிக்கொண்டு போக அவன் பல முயற்சிகள் செய்ததை அவனுடன் வந்த , அவனுக்குப் பின் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். மிகவும் அற்புதமான, சுவையான விஷயங்கள் அவை.

அலெக்ஸாண்டர் சந்தித்த சாமியார்களை அவர்கள் அம்மண சாமியார்கள் ஜிம்னோசோபிஸ்ட்(Gymnosophists) என்று எழுதிவைத்தனர். இவர்கள் யார்?

 

இவர்கள் சமணர்களில் ஒரு பிரிவினரோ என்று நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வந்தனர். ஆனால் இவர்கள் நாகா சாது சன்யாசிகள் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. உலகிலேயே பெரிய திருவிழாவான கும்பமேளாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இமய மலைக் காட்டுக்குள் இருந்து வெளியே வரும் அபூர்வ நிர்வாண சாமியார்கள் இவர்கள். மன்னருக்கு எதிராக சபா (Sabhas)என்பவரை எழுப்பி புரட்சி செய்யச் சொன்ன இந்து சந்யாசிக்கள்.

2300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடந்த அற்புதமான உரையாடலை ப்ளூடார்ச்(Plutarch கி.பி 46-120) என்பவர் எழுதிவைத்தார். அலெக்ஸாண்டர் முதலில் கலனஸ் (Calanus) என்ற சாதுவைச் சந்தித்தார். மன்னன் கூறியதை ஏற்க மறுத்து வேத மந்திரங்களை உச்சரித்தவாறு அந்த சாது தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார். இறப்பதற்கு முன் பாபிலோனில் அலெக்ஸாண்டர் இறந்துபோவார் என்று ஆரூடமும் கூறினார். அலெக்ஸாண்டருக்கு பயம் வந்துவிட்டது. கலனஸின் குருவான டண்டாமிஸ் (Dandamis) காலடியில் விழுந்தார். கிரேக்க யாத்ரீகர்களுக்கு நம்முடைய சம்ஸ்கிருத பெயர்கள் பரிச்சயம் இல்லாததால் பெயர்கள் உரு மாறிவிட்டன. டண்டாமிஸ் என்பது தண்டி சுவாமிகள் என்று அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.

 

மன்னரின் சுவையான 10 கேள்விகள்

மஹா பாரதத்தில் ஒரு சுவையான கதை “பேயின் கேள்விகள்” எனப்படும் “யக்ஷப் ப்ரஸ்னம்” ஆகும். தர்மபுத்திரன் எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறவே பேயாக மரத்திலிருந்த யக்ஷன் ஏனைய நான்கு பாண்டவர் களையும் உயிர்ப்பிக்கிறான். இதே பாணியில் அலெக்ஸாண்டரும் பத்து கேள்விகளுக்குப் பதில் சொல்லாதவர்கள் இறக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார். இதோ ப்ளூடார்ச் (கி.பி 46-120) சொல்லுவதைப் படியுங்கள்:

“பத்து அம்மண சாமியார்களை மன்னர் பிடித்துவரச் சொன்னார். நான் இப்பொழுது கேள்விகள் கேட்பேன். யார் முதலில் தவறான விடை சொல்லுகிறீர்களோ அவர்களை முதலில் கொல்லுவேன். உங்களுக்குள் வயதில் மூத்தவரே இந்தப் போட்டிக்கு நீதிபதி.”

அலெக்ஸாண்டரின் முதல் கேள்வி : உலகில் அதிகமான எண்ணிக்கை எது. உயிர் வாழ்கின்றவர்களா? இறந்தவர்களா?

இந்து சந்யாசியின் பதில்: உயிர் வாழ்கின்றவர்களே, ஏனெனில் செத்தவர்கள்தான் இப்போது இல்லையே!

கேள்வி 2: பூமியில் பெரிய மிருகத்தை உடையது கடலா? நிலமா?

பதில்: நிலமே. ஏனெனில் பூமி என்னும் நிலப் பரப்பின் ஒரு பகுதிதானே கடல்!

கேள்வி 3: மிகவும் தந்திரமுள்ள பிராணி எது?

பதில்: இது வரை மனிதனால் கண்டுபிடிக்க முடியாதது! (அவ்வளவு தந்திரம் இருப்பதால் இதுவரை மனிதன் கையில் அகப்படவில்லை!)

கேள்வி 4: சபாவை புரட்சி செய்யும்படி ஏன் தூண்டிவிட்டீர்கள்?

பதில்: வாழ்ந்தாலும் இறந்தாலும் மானத்துடன் இருக்கவேண்டும் என்பதால்!

கேள்வி 5: முதியது எது? இரவா? பகலா?

பதில்: நாள், ஒரு நாள் !

பதில் புரியாதபடி புருவத்தை நெறித்தார் அலெக்ஸாண்டர். கடினமான கேள்விகளுக்குக் கடினமான பதில்தான் வரும் என்றார் சந்யாசி.

கேள்வி 6: ஒரு மனிதன் அதிகமாக நேசிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?

பதில்: சக்தி வாய்ந்தவனாக இருந்தும் மற்றவர்கள் மனதில் அச்சத்தை உண்டுபண்ணாதவனே நேசிக்கப்படுவான் (அலெக்ஸாண்டருக்குப் புரிந்திருக்கும்!!!)

கேள்வி 7: மனிதன் கடவுள் ஆவது எப்போது?

பதில்: மனிதனால் செய்ய முடியாத செயற்கரிய செயல்களைச் செய்யும்போது !

கேள்வி 8: எது வலியது? வாழ்வா? சாவா?

பதில்: வாழ்வே. எத்தனை நோய்களை வளர்க்கிறது !

கேள்வி 9: ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும்?

பதில்: வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணாத வரைக்கும்.

கடைசி கேள்வி: ஓ, நீதிபதி சாமியாரே, இவர்களில் யார் தவறான விடை கூறியவர்?

பதில்:ஒருவரை விட ஒருவர் மிக மோசமான பதிலைக் கொடுத்தார்கள் !

அலெக்ஸாண்டர்: அப்படியா? இப்படி ஒரு திர்ப்பை வழங்கியதால் நீர்தான் முதலில் சாகப் போகிறீர்.

சந்யாசியின் பதில்: மன்னா ! முடியாது. நீ என்ன சொன்னாய்? முதலில் தவறான பதில் சொன்னவன் தானே கொல்லப்படுவான் என்று!!

 

இதை ப்ளூடார்ச் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்தது நாம் செய்த புண்ணியமே!

 

எலிஸ் என்ற இடத்தைச் சேர்ந்த பைரோ என்பவர் அலெக்ஸாண்டருடன் வந்ததாகவும் நிர்வாண சாமியார்களிடம் பாடம் கற்று கிரேக்க நாட்டுக்குச் சென்று அவர்களைப் போல வாழ்க்கை நடத்தியதாகவும் டயோஜெனிஸ் லேர்சியஸ் (3 ஆம் நூற்றாண்டு கிரேக்க ஆசிரியர்) என்பவர் எழுதிவைத்தார். (இவர் ஆதி சங்கரர் அடிக்கடி பயன்படுத்தும் கயிறு-பாம்பு உவமையைப் பயன்படுத்தியதால் சங்கரரின் அத்வைதத்தை அறிந்திருந்தார் என்று “ஆதி சங்கரரின் காலம்: தமிழ் இலக்கியச் சான்றுகள் என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறேன்).

***************

கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு -பகுதி 2

Oicture shows Asoka’s Greek-Aramaic inscription at Kandahar,Kabul Museum

(Please read the first part of Greek-Tamil Connection before reading this)

கிரேக்க மொழியும் தமிழ், சம்ஸ்கிருத மொழிகள் போல அ-வில் துவங்கி ஒ-வில் முடிகிறது. முதல் எழுத்து ஆல்பா, கடைசி எழுத்து ஒமேகா.

 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பெரிய புலவர்களுக்கு தெய்வ என்ற அடைமொழியைக் கொடுப்பார்கள். இலக்கண மா மேதை பாணிணியை பகவான் என்ற அடைமொழி போட்டு பதஞ்சலி அழைக்கிறார். நாமும் தெய்வப் புலவன் என்று வள்ளுவனை அழைக்கிறோம். ஹோமரையும் தெய்வ ஹோமர் (Homer Theis) என்று கிரேக்கர் புகழ்வார்கள்.

 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் வலது பக்கத்தைப் புனிதமாகக் கருதுவார்கள். கடிகாரச் சுற்று முறையைக் கண்டு பிடித்தவர்களே இந்தியர்கள் என்பது எனது ஆய்வில் கண்ட முடிவு. கோவிலை வலமாகச் சுற்றவேண்டும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைய வேண்டும் ( மண மகளே மண மகளே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா என்ற சினிமா பாட்டை இப்பொழுதும் எல்லா திருமண அரங்குகளிலும் போடுகின்றனர்).

 

வலப் பக்கம் விழுந்த உணவைத்தான் புலி சாப்பிடும், இடப்பக்கம் விழுந்தால் சாப்பிடாது என்று சங்க இலக்கியத்தில் ஏராளமான இடங்களில் படிக்கிறோம். காளிதாசனும் தீ வலப் பக்கமாகச் சுழித்து எரிந்தது நல்ல சகுனம் என்று பாடுகிறான். ஹோமர் எழுதிய ஆடிசியிலும் வலது பக்கம் புனிதம் என்று (2-172) உள்ளது. லத்தீன் மொழியில் சினிஸ்டர் Sinister (இடது) என்றாலே தீயது என்று பொருள்.

 

பாண்டியோன் என்ற குழந்தையின் தலைமையில் வந்த ஒரு குழு ஏதென்ஸ் நகரில் குடி ஏறியதாக வரலாற்றின் தந்தை எனக் கருதப்படும் ஹெரொடோட்டஸ் (Herodotus) கூறுகிறார். அவர்கள் கிரீட் (Crete) என்னும் தீவிலிருந்து வந்ததாகவும் கூறுகிறார். கிரேக்க நாட்டின் பழங்குடி மக்கள் டெர்மிலை (Termilai) என்றும் அவர் கூறுவார். இது த்ரமிளர்=தமிழர் என்ற சொல்லைப் போல உள்ளது

 

பழந்தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய ஐந்து நிலங்களுக்கும் தனிதனி பண்கள் இருந்தன. இவ் வழக்கம் கிரேக்கரிடையேயும் இருந்தது. அப்பண்களை தமிழ்ப் பண்களோடு ஒப்பிட்டவர்கள் சில ஒற்றுமை இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். வாணிகத் தொடர்பினால் தமிழ்ப் பண்களைத் தழுவி அவர்கள் எட்டுக்கட்டி இருக்கலாம்.

 

இவை எல்லவற்றையும் ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு ஆங்கிலம்- தமிழ் மொழி ஒற்றுமையைப் பார்த்தால் ஆயிரக்கணக்கான சொற்கள் ஒரே மாதிரி இருப்பதை அறியலாம். ஆங்கிலமோ சம்ஸ்கிருதம் தொடர்புடைய இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த மொழி. தமிழுடன் எப்படி தொடர்பு வர முடியும்?

 

தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஒரே மூலம் இருந்தால்தான் இது நடக்க முடியும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்தால் பழைய மொழிக் கொள்கைகள் தகர்ந்துபோகும்.

(சாத்தூர் சேகரன் என்பவர் இது குறித்து ஆராய்ந்து பல புத்தகங்களில் எழுதியுள்ளார். அவரை 20 ஆண்டுகளுக்கு முன் பி.பி.சி. தமிழோசையில் பேட்டி கண்டேன். அப்போது இது பற்றி எழுப்பிய கேள்விகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விடை கிடைத்து வருகிறது.)

 

உலகில் எல்லோரும் ஒரு கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசிய மொழியின் மிச்ச சொச்சங்கள் இப்பொழுதும் ஒவ்வொரு மொழியிலும் இருக்கின்றன. இதனால் எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையே சில சொற்களாவது ஒரே மதிரியாக இருக்கும். ஆனால் எண்கள். உறவு முறைகள், நான், நீ, அவன் அவள் போன்ற சொற்கள், முக்கியமான வினைச் சொற்கள் ஆகியன ஒன்றாக இருந்தாதான் நெருக்கம் அதிகம் என்று கருத முடியும்.

 

ஹிப்பொக்ரடீஸ், பிதகோரஸ் (Hippocrates, Pythagoras)  ஆகியோர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்திய மருத்துவ கணித சாத்திரங்களை அறிந்திருந்தனர். இதற்கான நல்ல ஆதரங்கள் கிடைத்துள்ளன.

பிதகோரஸ் மறு பிறப்பிலும் ஆத்மாவிலும் நம்பிக்கை உடையவர். அவருடைய பெயர் புத குரு என்று ஈ. போகாக் என்னும் அறிஞர் கூறுவார். அவர் எழுதிய ஆங்கிலப் (India in Greece by E Pococke published in 1851) புத்தகத்தில் நிறைய ஒப்புமைகளைக் காட்டுகிறார். அவர் இந்தியாவிலுள்ள பழங்கால இடப் பெயர்களை அதிகமாக ஒப்பிடுகிறார்.

 

ஒலிம்பிக்ஸ் (Olympics) போட்டி 2750 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் துவங்கியது. ஆனால் அதற்கு முன்னரே நாம் ஜல்லிக்கட்டு நடத்தி பரிசு கொடுத்தோம். இந்திரப்பிரஸ்தம், ஹஸ்தினாபுரம் போன்ற இடங்களில் அரசர்கள் மட்டும் கலந்து கொள்ளும் போட்டிகள் நடந்தன. மகாபாரதத்தில் இது பற்றி விரிவான செய்திகள் இருக்கின்றன.

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸின் (Socrates) சீடர் பிளாட்டோ (Plato). அவருடைய சீடர் அரிஸ்டாடில்(Aristotle) . அரிஸ்டாடிலின் சீடர் அலெக்ஸாண்டர் (Alexander) . அவர் இந்தியா மீது படை எடுத்ததற்கு முக்கிய காரணங்கள் இந்தியாவின் செல்வச் செழிப்பும் தத்துவ ஞானச் சிறப்பும் தான் காரணம். இவை இரண்டிலும் அலெக்சாண்டருக்கு ஆர்வம் அதிகம். ஒரு சன்யாசியையாவது தன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தலை கீழாக நின்றார். ஆனால் முடியவில்லை.

போரஸ் என்னும் மன்னனர் புருஷோத்தமனை வெல்லுவதற்குள் அவருக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு அவன் கொடுத்த பதில் அலெக்ஸாண்டாரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. போரஸின் வேண்டுகோளின்படியே அவரை மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தினார். இந்தியாவின் மீது அவருக்கு அவ்வளவு மதிப்பு.

**************

கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு

உலகில் உள்ள பழைய மொழிகளில் கிரேக்க மொழியும் ஒன்று. தமிழை விட பழமையான நூலை உடையது. ஆனால் சம்ஸ்கிருதத்துக்கு மிகவும் இளைய தம்பி. தமிழில் கிடைக்கும் மிகவும் பழைய நூல் தொல்காப்பியம். அது கி.மு. முதல் நுற்றாண்டைச் சேர்ந்தது. கிரேக்க மொழியில் கிடைக்கும் பழமையான நூல்கள் ஹோமர் எழுதிய இலியட், ஆடிசி என்னும் இரண்டு இதிஹாசங்களாகும் அவை கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சம்ஸ்கிருதத்தில் கிடைக்கும் மிகவும் பழைய நூல் ரிக் வேதம். அதன் காலம் கி.மு. 1500.

 

கிரேக்க மொழி இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதாவது சம்ஸ்கிருத மொழியுடன் நெருங்கிய தொடர்புடைது. தமிழோ அதற்குச் சிறிதும் தொடர்பில்லாத திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. மஹா அலெக்சாண்டர் கி. மு.326-ல் இந்தியா மீது படை எடுத்த பின்னர்தான் கிரீஸ் நாட்டுக்கும் நமக்கும் தொடர்பு ஏற்பட்டதாக சிலர் எழுதிவைத்தனர். அது தவறு. அதற்கு முன்னரே தமிழ் சொற்கள் அந்த மொழியில் கலந்துவிட்டன. வட மொழிச் சொற்களும் உள்ளன. ஆனால் கிரேக்கமும் சம்ஸ்கிருதமும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவதால் சம்ஸ்கிருதத்தை யாரும் பெரிது படுத்துவதில்லை.

மொழி ஒரு புறம் இருக்க, பழக்க வழக்கங்களிலும் இதிஹாசக் கதை விஷயங்களிலும் இந்தியா கிரேக்க ஒற்றுமை பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதலில் மொழித் தொடர்புகளைக் காண்போம். இவைகள் அலெக்ஸாண்டர் படை எடுப்புக்கு முன்னரே கிரேக்க மொழியில் உள்ள்வை. பல சொற்கள் இலியட், ஆடிசி நூல்களில் காணப்படுகின்றன.

 

இதற்கு கீழ்கண்டவாறு விளக்கங்கள் கூறலாம்:

  1. நாம் வட மொழி, தென் மொழி சொற்கள் என்று கருதுவன எல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவை. அதனால்தான் கிரேக்க மொழியில் பழந்தமிழ் சொற்களும் பழைய சம்ஸ்கிருத சொற்களும் உள்ளன.
  2. அல்லது நாம் பழந்தமிழ் சொற்கள் என்று கருதுபவையும் சம்ஸ்கிருத சொற்களே. அதனால்தான் நீர் என்ற சொல் கூட ரிக் வேதத்திலும் கிரேக்க மொழியிலும் உள்ளது.
  3. அல்லது இரு வேறு மொழி பேசுவோர் வாணிபம் செய்யச் சென்றதால் அங்கே மொழிக் கலப்பு ஏற்பட்டிருக்கலாம்.

நான் முதலில் உள்ளதையே நம்புகிறேன். தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திருந்து வந்தவையே. கிரேக்க நாட்டில் பல நாட்டு மக்கள் குடி ஏறி இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

 

இந்திய-கிரேக்க உறவு, மொழியோடு மட்டும் நிற்கவில்லை என்பதை பல கோணங்களில் விளக்குவேன்.

PALEO: (Palaeo botany, Palaeontology ).இது பழைய என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

TELE: தொலை தூரம், தொலைக் காட்சி, தொலை பேசி என்பதெல்லாம் டெலி என்பதுடன் தொடர்புடையவை. டெலி என்பதை நாம் தொலை(வு) என்று சொல்கிறோம்.

NEREIDS: நெரைட்ஸ் என்பது நீர்த் தேவதைகளைக் குறிக்கும். நாராயணன் என்பவன் நீரில் மிதப்பதால் அப் பெயர் பெற்றான். விஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது கடலில் மிதப்பதாக இந்து மத புராணங்களும் வேதமும் கூறும். நீர் என்னும் சொல் ரிக் வேதத்திலும் கிரேக்கத்திலும் உள்ளது. இதை தமிழிலிருந்து சம்ஸ்கிருதம் கடன் வாங்கியதாக சிலர் எழுதிவைத்தனர். அது தவறு.

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திருந்து வந்ததால் இரு மொழிகளில் மட்டும் இன்றி கிரேக்க மொழியிலும் நீர் உள்ளது. ஒரு சொல் கிரேக்கத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இருந்தால் அது இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று மொழிநூலார் முத்திரை குத்தி விடுவார்கள். இனி இதை திருத்தி எழுத வேண்டும்.

ORYZA SATIVA: அரிசியின் (botanical term) பெயர். இது அலெக்ஸாண்டர் காலத்துக்கு முன்னமே கிரேக்கத்தில் உள்ளது.

CLEPTO: க்லெப்டோ என்பது களவு என்றாகும். ப –வும் வ- வும் உலகிலுள்ள ஏராளமான மொழிகளில் இடம் மாறும். (இது பற்றி தமிழன் காதில் பூ என்ற கட்டுரையில் மேல் விவரம் காண்க.)

ODOMETER: ஓடு என்ற தமிழ் சொல்லுடன் தொடர்புடையது. எவ்வளவு தூரம் பயணம் செய்தது என்பதைக்காட்டும் மீட்டர்.

SYRINX: சுரங்கம் என்பதுடன் தொடர்புடைய சொல்.சுருங்கிய இடம்.

DOLIA (sthali-sanskrit)=தாழி= நீண்ட என்று பொருள். நீளமான ஜாடி.

PENELOPE: நப்பின்னை,Nappinnai= பின்னல் pinnal=பின்னு செஞ்சடையாள்

AMPHORAE: ampanam, அம்பணம் padi படி, barani பரணி, amparam அம்பாரம் போன்ற கொள்கலன்

ALPHA: First letter of Greek Alphabet: AA (Cow) ஆ/ பசு (பழைய மொழிகளில்)

BETA: veedu வீடு (பழைய மொழிகளில்).

 

1954 ஆம் ஆண்டில் வெளியான ஒரு கட்டுரையிலிருந்து: I am adding a few more points from “Tamil Loan Words in Greek” by F.Legrand (Tamil Culture, Volume III, No 1, January 1954):

Oryza=oriza அரிசி (Latin) = Riz (French) = Rice (English) = Riso (Italian) = Arrez (Spanish)

PEPPER=பிப்பலி=pippali (Tamil)=Piperi (Greek)= Piper (Latin) ஆனால் இந்தச் சொல் சங்கத் தமிழில் கிடையாது. Milaku மிளகு and Kari கரி என்ற சொற்களே உண்டு.

GINGER = இஞ்சி வேர் inji+ver (Tamil)= Zinziberi (Greek)=Gingiber (Latin),

MALABATHRUM= மலபத்ரம் cinnamon leaf from Malabar is Malabathrum (Latin). (My opinion is it is a Sanskrit word Malabar/Malaya + Pathram) இது வடமொழிச் சொல்.

SANDAL = சாந்து Santalon (Greek)= Santhu சாந்து (Tamil)= Chandana (Sanskrit)

F.Legrand says that the Hebrew word Almug Trees (Old Testament, Bible) identified with Valgu வல்கு for Sandal is a Sanskrit word. எபிரேய மொழியில் அல்மக் மரம் என்பது வடமொழிச் சொல்லான வல்கு என்று லெக்ராந்த் சொல்லுகிறார்.

(He pointed out that the word Palais (Paleo) for old pazaiya in Tamil is found in Homer.

Legrand also pointed out that Nereus, God of the Sea, is found in Hesiod’s Theogony.)

TYRANNES (Powerful)=Thiran திறன்  (Tamil)

PATHOS (suffering)=படு Legrand compares it with Patu in Tamil. But I think it is a Sanskrit word similar to Vathai வதா/ வதை (vatha). But it is possible that both Tamil Patu and Sanskrit Vatha come from same source.

AROO (cultivate, plough)= அறு/ ஏரு Legrand says it is similar to Aru (cut, harvest). But I think it is closer to ERU (plough)

Legrand argues that Pagu, Paguthi, Pangu are all cognates of Pagos (greek) pagus (Latin). Probably he did not know that Pagam பாகம் is a Sanskrit word.

He argues Gynae<Gune for woman is Tamil. He points out it Pen பெண் in Tamil becomes Hennu ஹன்னு in Kannada and Gyne in European languages. But the linguists will see Kanya கன்யா / கன்னி in Sanskrit and Gynae closer.

ANTHROPOS = ANER (Greek)= aan ஆண் in Tamil (Anthropology= மானுடவியல்)

CHEIR (Gk) =kai கை in Tamil Kara கர in Sanskrit. Probably both have some common root.

PAIDI (Gk) =Boy=Page= paiyan பையன்

GALA = Gala காலா means milk. He argues that Halu ஹாலு in Kannada is similar to Pal பால் in Tamil. He says that if we understand G=H=P changes then we can trace many more words.

Megas= மஹா Great / Big. But it is Sanskrit (Maha). Tamil use Ma மா for big;May be from a common source.

 

மயிலை சீனி வேங்கடசாமியும் சில சொல் ஒற்றுமைகளை அவரது கட்டுரையில் எழுதியிருக்கிறார்:

மத்திகை= குதிரை ஓட்டும் சம்மட்டி, சுருங்கை=பாதாள சாக்கடை, கலம்=படகு, கன்னல் (கடிகாரம்)=க்ரோனோஸ், ஓரை/ஹோரை=Hour

எழினி=யவனிகா-எவினி=திரைச் சீலை

ட்ராய் (Troy) என்பது கிரேக்க இதிஹாசத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் நகரம். இது துறை என்பதன் மாற்று வடிவம்.

 

(பகுதி இரண்டில் பண்பாட்டு ஒற்றுமைகள் விளக்கப்படும்)

Animal Einsteins- Part 2

Picture of Grieving ape that lost it’s baby in Amsterdam Zoo

(This is Part-2. Please read the first part of the article under the title “Animal Einsteins in Sanskrit and Tamil Literature)

Animals are intelligent and they do think and act. They even learn new techniques according to the scientific advancements. Crows and other birds previously dropped nuts and other food items on rock from heights to break them. Now they use cars and trucks!! They simply drop the hard food items on roads and wait for the vehicles to pass. When they are broken by the vehicles, they come and eat them. How intelligent they are!!

Tool using animals

Animals using tools is a new subject for biologists (who study Evolutionary Anthropology) in western countries. But there are innumerable references in Tamil and Sanskrit literature to show we knew about it two thousand years ago. Following are among the many references in Tamil:

Narrinai 57: Pothumbil kizar presents an interesting scene where a female monkey gestures to its colleagues to keep quiet and milks a wild cow. It distributes the milk in the hands of its little ones. Though it is day light robbery, we can’t stop appreciating the robber monkey.

Animals know astrology!! Pandyan king Ukkira Peruvazuthu says that a porcupine on its new venture, after listening to the sound of a lizard, went back to its home because it was a bad omen to hear that sound from a lizard (Narrinai verse 98, also Akam 88). Tamils believed in omens based on lizards and birds.

Monkeys are playing with sticks: Ainkuru. 275-277 by Kapilar. Monkeys are breaking the water bubbles by beating with the sticks. We know children enjoy breaking air bubbles or water bubbles.

Narrinai 95: Kottampalavanar sings about an acrobat’s feats and monkeys playing on the sticks.

Monkeys are playing on the drums: Puram. 128 Mutamosiyar.

Sirupa.60-62: The salt vendors’ children play with the monkeys accompanying them. They go from town to town selling salt. The monkeys play with rattle.

Akam.8 by Perum kundrur kizar: A female elephant is helping her spouse to get out of the mud where it was trapped. The elephants use the broken tree branches to build some steps. This shows that they sympathize with the affected ones and help them as well. The Gajendra Moksha story in Hindu mythology is a typical example for animal love.

Animal love

Shakuntala, the heroine of Kalidasa’s  Shakuntalam, was very fond of plants and animals. She gave them special names. So when she departed from Kanva’s house (asram), they all were very sad and blocked her way. Kaliadasa says this through sage Kanva’s mouth:

“It is the little fawn,your adopted sun

Whom you fondly reared with handful of millet,

———————–

It is he who will not move out of your path (Shak. IV -14/16

Akam .59, 85; (also Thirukkovaiyar by Manikkavasagar): Maruthan Ilanagan (5) sings about the love between the male and female elephants. The heroine was convinced by her friend that her husband will abandon his business trip half way through as soon as he sees the male elephant caring for his spouse. Kuruntokai verse 37 also depicts the same scene. Kattur Kizar Kannan sings (85) about love and affection found in the elephant family (Also Kalidasa’s Ragu.16-16). We read about such things in Gath Sapta Sati and Pratima drama (I-5-25)

Puram. 320-Veerai veliyanar- says deers were mating when the husband who was a hunter was sleeping. His wife was so careful not to wake her husband or disturb the mating deers. So she stayed put. We can compare it to Kalidasa’s Shaknuthala . Shakunthala was very careful not to disturb the bird drinking water in the garden. She would always watch them from a distance.

Dasaratha did not kill deer because both male and female deer were together. (Ragu.9-56/57)

Kalitokai 11: Perunkatunko depicts a male dove relieving the sufferings of its mate in the scorching heat by gently fanning its soft wings over it.

Narrinai verses 383, 384: Just to satisfy the hunger of a female tiger, its mate attacks an elephant says Seziyanar. A pigeon brings food to its mate from a long distance.

Animals dream like human beings

Pathirru. 11: Kumattur Kannanar sings about the beautiful dream of deer. The deer dreamt of the grass it ate in the day time and the beautiful waterfalls where it was growing. So it must be a colourful dream.

Akam.170: Madurai Vennakanar describes a dream of a sea gull. It dreamt of eating tasty prawns.

Kurinji kali 13 describes a dream of an elephant. A tiger that stood against the attack of a tiger went to sleep. It dreamt of an attacking tiger and started attacking a Vengai tree. Vengai means both tiger and a kind of tree in Tamil. When the Vengai tree is in bloom it looks like a tiger.

Nar 87. sung by Nakkannaiyar  describes a bats’ dream:   The sharp teethed bat is imagined to dream in its sleep. The bat dreams of the sour taste of the gooseberry fruits (Nelli in Tamil).This theme of bat’s dream is repeated by other poets as well.

A beetle’s dream is portrayed in Akam. 132. It dreamt of elephants rut while sleeping in a bunch of Kantal flowers.

Pet Birds

We already saw the parrots kept as pet birds in Mandanamishra’s house and Tamil Perumpanatruppatai. Kalidasa speaks of pet birds, mostly parrots, in Megadutam.90, Vikrama Urvasiyam II-22, IV-17,Shakuntalam I-13,14,III-14. Peacocks were also raised V-13. People erected poles just for the peacocks to rest.

Akam.34,Maruthan Ilanakan sings about the stags and swans raised in the house and their love and affection. Nar. 376,Kapilar speaks of flocks of parrots coming to cultivated lands and the girl talking to them (so that her lover would hear it).

******************

 

Animal Einsteins in Sanskrit and Tamil literature

The picture above is from Sringeri Mutt. Kalidasa sang about a snake which protected a frog using its hood as umbrella. Adi Shankara also saw such an amazing thing at Sringeri in Karnataka, and then he established the first Shankara Mutt there (Please read my article Mysterious messengers who showed Ajanta, Angkorwat, Sringeri——- for more details).

Animals are very intelligent. They have feelings like us. They help each other. They are happier than human beings. They don’t worry about tomorrow. Rain or shine, snow or storm they survive. Some do amazing feats like flying for thousands of miles without a compass or a map or a GPS system. They even worship gods!! Animals do dream like us. Animals communicate among themselves and warn of impending dangers to its colleagues. They show mercy. They don’t kill a pregnant animal. They feed any little ones even if it does not belong to its own kind. We have stories of wolf fed babies. Animals do use tools. The wonder of wonders is all these are in ancient Sanskrit and Tamil literature. Only now the western biologists are publishing all these facts in article after article in New Scientist, Nature, National Geographic and Scientific American magazines.

(Please read my articles on “Bird migration in Kalidasa and Tamil literature” and “When Animals worship God why not men”?)

 

Can parrots recite Vedas?

“Yes”, say Sangam Tamil poets and Adi Shankara.

There is a very interesting story in the life of Adi Shankara. He won every argument with famous scholars, but one great scholar was left out. He was Mandana mihra living at Mahismathi on the banks of river Narmadha. When he went to the village where he lived, he saw some village women filling the water pots in the river. He asked them the way to Mandana’s house. They surprised him by two things. One they replied in Sanskrit verses. Two, they told Shankara the house where the parrots were reciting Vedas and discussing related subjects was Mandana’s. When he went in to the village, he easily identified the house because of the parrots.

Sangam Tamil poet Uruththirankannan also says that the parrots in Brahmins houses recite Vedas. They repeat it because the Brahmins do the recitation every day-Perumpanaatruppadai: lines 300/301.

When the three great Tamil kings laid a siege around King Pari’s 300 towns, Kapilar trained the parrots to bring the grains into Pari’s territory. Poets Avvaiyar and Nakkirar were all praise for Kapilar for this help (Akam303 and Akam 78).

Tamil Verse 143 of Kannakaran Korranar of Narrinai gives the information about parrots calling a girl in affectionate terms even after she left home.

New Scientist magazine has published an article about intelligent animals. Under the title of “Animal Einsteins”  it has published a s news story about parrots. Alex the parrot owned by psychologist Irene Pepperberg until his death in 2007, was a prodigy. The parrot had a vocabulary of about 150 words. He could also count to 6. But Indian parrots mentioned in the above two references did more than this!!

Rome was founded by Romulus and Remus who were raised by wolves. It happened 2750 years ago. But even before this, Shakuntala, the heroine of the most famous drama of India -Shakuntalam was fed by birds. She was the mother of the great king Bharata whose name is given to India that is Bharat. She was abandoned at birth. Birds looked after her. They encircled her protectively so that she remained unharmed until the sage Kanva finds her and names her Shakunta(bird)la.

Kalidasa sang that when queen Indumathi died the birds mourned her death (Ragu. 8-39). When Rama was looking for his wife Sita who was abducted by Ravana , the deers showed him the way (Ragu.13-25) .Valmiki who lived before Kalidasa also said the same in his Ramayana.

In his Kumarasambhavam, Kalidasa adds:

The male bee, attentive to his dear mate, drank honey from the same bowl; and the black antelope scratched with his horn his mate who had closed her eyes through the pleasant sensation. The female elephant, through great love, gave to the male the water in her mouth (III-36/37)

In Raguvamasam 16-16 ,Kalidasa describes about the paintings in the palace. One of the paintings portrays a female elephant giving lotus stalks to male elephants. This is echoed in Tamil literature as well.

 

Frog under Snake’s Hood

Kalidasa’s description of nature is at peak in his work Rtusamharam. It is full of verbal pictures. He describes how animals forget their natural enmity when there is a forest fire or scorching sun:

“Burning under the sun’s fiery wreath of rays

A frog leaps up from the muddy pond

To sit under the parasol hood”. (1-18)

(All the six seasons are portrayed in beautiful verses. For want of space I gave only one example).

In Tamil Puram .247 verse :  Monkeys help the temple (priests) by cleaning the land. They first wake up the deers that are sleeping in the temple complex.

Apes and elephants mourn when they lose their near dear ones. The zoo keepers have observed this and the news papers have published pictures of the mourning animals (See mourning ape in Metro London 5th April 2012). Famous Tamil Novel Thekkadi Raja gives the elephant mourning in great details.

A female monkey who lost its mate jumped from the mountain and commits suicide. But before sacrificing its life it entrusted its babies to other monkeys. The reason given for the suicide, it doesn’t want to live without her husband. This moving picture was given by Katunthot Karaveeranar in Kuruntokai verse 69.

Narrinai 151 sung by Ilanakanar depicts a picture of a shy monkey correcting her dishevelled hair to hide her sex act. Monkeys feel very shy after sex and look at themselves in the water / mirror, adds the poet.

Puram 323-anonymous- a deer was caught by a tiger. Its calf was orphaned. A wild cow in the forest fed it with her milk.

If the kings rule the country according to the rules, a tiger won’t attack a deer. Both will drink water from the same lake, say Kalidasa (Ragu. 6-46) and Tamil poets Ilango (Silappadikaram-Purancheri Irutha Kathai), Kamban and Manikkavasagan.

Narrinai verse 143 and Akam 318 tell us that the shepherd assembles all the sheep in one place just by a whistle. They are intelligent enough to follow the instructions. In western countries the dogs do the job.

Ainkuru nuru 391,Kuruntokai 210 by Kakaipatiniyar: Crows are attributed with the power of predicting arrival of guests. If the crows caw, it is certain guests will come to the house. (I attribute it to their strong sense of smell. When women make special dishes for the guests, the good smell spreads and attracts the crows. Even then they are intelligent enough to call their friends to share the food. Crows are used as symbols for sharing (Kural 527) in Indian literature.

Tamil poets have urged people to follow crows when it comes to sex. Crows never indulge in sexual acts in public say Tamil poets. We have read hundreds of dog stories where they saved human beings from extreme dangers.

(In part 2, I will deal with animals using tools, animals’ dreams and human kindness towards animals. Once again the similarities in Tamil and Sanskrit strengthens my point that Kalidasa lived before Sangam age, either in the first or second century BC)

*******************

 

 

 

பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள்

நமது புராணங்களோ இதிகாசங்களோ வட மொழி, தென் மொழி நூல்களோ பொய் சொல்லவில்லை என்பதற்கு அதில் எழுதப் பட்ட சில உண்மைச் சம்பவங்களே சான்று. பல நிகழ்ச்சிகளை குறிப்பாக, மரணம் பற்றிய விஷயங்களை அப்படியே எழுதி வைத்துள்ளனர்.

 

கோவலன் கொலை செய்யப்பட்டு இறந்தான். அது தவறு என்று தெரிந்த உடனே பாண்டிய மன்னனும் அவனுடைய மனைவியும் அங்கேயே இறந்தனர். ஒரு வேளை தவறே நடக்காத ஆட்சியில் தவறு நடந்ததை நிரூபித்தவுடன் அவர்கள் இருவருக்கும் மாரடைப்பு நேரிட்டிருக்கலாம் (Heart Attack). கண்ணகி புஷ்பக விமானத்தில் ஏறி மேலுலகம் போகிறாள்.

 

பாண்டிய மன்னன் மனைவி பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு தீப் பாய்ந்து (சதி என்னும் முறைப்படி,புறம். 247) இறக்கிறாள். இளம் பெரு வழுதி என்ற மன்னன் கடலில் மாய்ந்து (புறம்.182) உயிர் இழந்தார்.

பல மன்னர்களும் புலவர்களும் வடக்கிருந்து (Sitting facing North and Fasting ) உயிர் இழந்தனர் ( சேரமான் பெருஞ் சேரலாதன், கோப்பெருஞ் சோழன், சேரமான் கணைக்கால் இரும்பொறை, கபிலர், பிசிராந்தையார் ).

 

யார் யார் எங்கு எங்கு துஞ்சினர் (இறந்தனர்) என்றும் சங்க இலக்கிய கொளுவில் உள்ளது. கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி (புறம் 51, 52); சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்; வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெரு வழுதி (புறம். 58), சேரமான் கோடம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் பெருங் கோப்பெண்டு (புறம். 245); சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் புறம் 373, பெருந் திருமாவளவன் 58,60; இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங் கிள்ளி சேட்சென்னி 61). புலியால அடிக்கப்பட்டு (Tiger Attack) இறந்த மன்னன் பற்றி திருவிளையாடல் புராணம் பேசுகிறது.

மாணிக்கவாசகர், ஞான சம்பந்தர், ஆண்டாள், திருப்பணாழ்வார், நந்தனார் வள்ளலார், கோபால் நாயக் ஆகியோர் ஜோதியில் (Spontaneous Human Combustion) கலந்து ஐக்கியமானார்கள். (“The Mysterious disappearance of Hindu Saints”- கட்டுரையில் மேல் விவரம் காண்க).

 

அண்மைக் காலத்தில் ஸ்ரீ சத்திய சாய் பாபா திடிரென்று இறந்தது  பலருக்கு வியப்பாகவும் புதிராகவும் இருந்தது. இதற்கு முன் பல சாது சந்யாசிகள் புற்று நோயால் (Cancer) இறந்தனர். ஆனால் ஞானிகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. கீதையில் கண்ணன் சொன்னது போலவே (கீதை 2-22; குறள் 338, 339) நமது உடம்பெல்லாம் கிழித்த சட்டைகளுக்கு சமானம். நம் உடம்பு இறந்தாலும் ஆத்மா அழிவதில்லை. ஆகையால் இந்துக்கள் இறப்பைப் பொருட்படுத்துவது இல்லை. மரணம் என்பது ஆத்மா சட்டையை மாற்றுவது போல. வள்ளுவன் வாக்கில் கூட்டை விட்டுப் போன பறவை:

 

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு (338)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339)

 

பாரதி பாடல்

நொந்த புண்ணைக் குத்துவதில் பயனொன்றில்லை

நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் !

அந்தணனாம் சங்கராசர்யன் மாண்டான்

அதற்கடுத்த ராமனுஜனும் போனான்.

சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர். (பாரதி அறுபத்தாறு).

 

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என்.ராமசந்திரனின் ஆங்கில மொழிபெயர்ப்பு

——————-it cannot do good

To pierce a painful sore; the great Buddha

Died of illness; Sankara the Brahmin-sage

Also died; so too Ramnuja great.

The Christ died crucified; Kannan

Was by an arrow killed; Rama by many praised,

Had a watery grave; in this world “ I ”

Will thrive deathless, for sure………..

 

ஆதி சங்கரர் குகைக்குள் சென்று மறைந்தார் என்றும் சர்வாரோகண பீடம் ஏறி மறைந்தார் என்றும் கூறுவர். புத்தருக்கு ஒருவர் மாமிச உணவைக் கொடுத்தபோது அது தொண்டையில் சிக்கி மரணம் ஏற்பட்டதாகவும் மாமிசமா? என்று அதிர்ச்சியுற்று இறந்தார் என்றும் கூறுவர். இந்தப் பாடலைப் பாடிய பாரதியும் யானையால் தாக்கப் பட்டு கொஞ்ச காலத்துக்குப் பின்னர் வயிற்றுக்கடுப்பு நோயால் இறந்தார்.

2000 ஆண்டுக்கு முந்திய பஞ்சதந்திரக் கதையிலிருந்து:

A lion took the life of Panini

Grammar’s most famous name;

A tusker madly crushed sage Jaimini

Of metaphysic fame;

And Pingal, metric’s boast, was slaughtered by

A sea side crocodile;

What sense for scholarly attainments high

Have beasts besotted vile?

(Panchatantra ,translated by Arthur W Ryder)

 

இலக்கணப் புகழ் பாணிணியோ

இரையானான் சிங்கத்துக்கு;

மீமாம்சக ஜைமினியோ யானை

காலில் மிதியுண்டழிந்து போனான்;

யாப்பு புகழ் பிங்களனோ கடலோர

முதலையால் கிழிக்கப்பட்டான்;

கழுதைக்குத் தெரியுமோ

கற்பூர வாசனைதான்? ( விஷ்ணு சர்மனின் பஞ்ச தந்திரக் கதைகள்)

 

இவர்கள் எல்லோரும் இறந்தாலும் பூத உடல் மறைந்த பின்னரும் புகழ் உடம்போடு இன்றும் நம்மிடையே வாழ்ந்து நம்மை எல்லோரையும் நற்பணியில் ஊக்குவிக்கின்றனர்.இவர்கள் அனைவரும் சிரஞ்ஜீவிகள்.

******************************

மஹா வீரன் யார்?

Jain Saint Bahaubali, 60 feet tall monolith,Sravanabelagola

மஹா வீரன் யார்? இந்தியாவில் இருவருக்குத்தான் மஹாவீர் என்று பெயர். ஒருவன் அநுமன். மற்றொருவர் சமண தீர்தங்கரர் மஹாவீரர்.

 

யார் வீரன்? என்று மேலை நாட்டில் கேள்வி கேட்டால் ஏகே 47 துப்பாக்கியால் நூற்றுக் கணக்கான பெயர்களைச் சுட்டுத் தள்ளியோரின் பெயரைக் கூறுவார்கள். திரைப்படம் பார்க்கும் படிப்பறிவு இல்லாதவர்கள் தமிழ் இந்தி திரைப்பட கதாநாயகன் ,வில்லன்கள் பெயர்களைக் கூறுவார்கள். படித்திருந்து ஆங்கிலப் படம் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இண்டியானா ஜோன்ஸ் நினைவுக்கு வரலாம். பயங்கரவாதிகள் என்று ஒரு நாடு முத்திரை குத்துவோரையும் அவருடைய கொள்கையில் நம்பிக்கை கொண்டோர் மாவீரன் என்று கொண்டாடுவார்கள். ஆனால் வியப்பிலும் வியப்பான  கொள்கை– இந்தியக் கொள்கை புலன்களை வென்றவனே மஹாவீரன்.

 

ஒன்றாகக் காண்பதே காட்சி, புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்

 

என்பது ஆன்றோர் வாக்கு. வள்ளுவனும்” பிறன் மனை நோக்காத பேராண்மை” என்று பெரும் வீரத்தைப் புகழ்கிறான்.

 

எப்படி துளசிதாசரின் ஹனுமான் சாலீஸா இந்தியர்களைத் தட்டி எழுப்புகிறதோ அதே போல மஹவீரரின் சிலையும் கொள்கைகளும் சிரவணபெளஹோலாவில் உள்ள பாஹுபலியின் சிலையும் நம்மை எல்லாம் புத்துணர்ச்சி பெற வைக்கிறது.

 

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு” ஆகியவற்றை அந்தச் சிலைகளில் காண முடிகிறது. புலன்களை வென்றதாலேயே மஹாவீரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். இது பாரத நாட்டுக்கே உரிய ஒரு கொள்கை. உலகில் வேறு எங்கும் காணமுடியாதது.

 

 

 

“கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், உரும் உடன்று எரியினும், ஊறு பல தோன்றினும், பெரு நிலம் கிளறினும், திரு நல உருவின் மாயா இயற்கைப் பாவை என்று கொல்லிப் பாவையை நற்றிணைப் புலவர் பரணர் வருணித்தது மஹாவீரர், பாஹுபலி போன்ற புனிதர்களுக்கும் பொருந்தும்.

 

அனுமன் ஜயந்தியும் மஹாவீர் ஜயந்தியும் அருகருகே ஏப்ரல் மாதத்தில் வருவதால் இரண்டையும் இணைத்தேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி,

அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.