சதுரங்க பந்தம் – 9

தமிழ் என்னும் விந்தை!
சதுரங்க பந்தம் – 9

Research paper written By ச.நாகராஜன்
Research article No.1445; Dated 29th November 2014.

சுவடிகளாக அச்சேறாமல் உள்ள தமிழ் நூல்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன தஞ்சை சரஸ்வதி மஹாலில் ஆரம்பித்து உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளின் பல்கலைக் கழகங்களிலும் தனியார் தொகுப்புகளிலும் உள்ள சுவடிகள் என்று அரங்கேறப் போகின்றன என்பது யாருக்கும் தெரியாது. பழைய காலத்தில் சில சுவடிகளை புத்தகங்களாக அச்சிட்டுள்ளனர். ஆனால் அந்தப் புத்தகங்களும் இன்று கிடைக்காமல் போய் விட்டன. வாய்வழியாக ஆசான் – மாணாக்கன் என்ற குருகுல அமைப்பு மூலம் வழி வழியாக வந்த பல ரகசியங்கள் அந்த குரு குல முறை கெட்டு அழிந்தவுடன் ரகசியங்களாகவே மாறி விட்டன.

புத்தகங்களில் அச்சிடப்பட்டு உள்ள பல விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. உதாரணத்திற்கு சதுரங்க பந்த விஷயமாக ஒரு எடுத்துக் காட்டை இங்கே காண்போம்.
நினைவில் வாழும் தமிழறிஞர் ச.பவானந்தம் பிள்ளை பதிப்பித்த யாப்பருங்கல விருத்தியுரையில் சித்திரக் கவிமாலை என்ற தலைப்பில் 29 வரிகளில் உள்ள பாடலில் ( மாலை மாற்றே சக்கரஞ் சுழிகுள என்று ஆரம்பித்து அந்தமில் கேள்வி யாசிரியன்னே என முடிகிறது. இடமின்மை கருதி இங்கு முழுப் பாடலையும் தர முடியவில்லை)

இதில் 19வது வரியாக ‘பாடுதுன் மரபுந் தாரணைப் பகுதியும்’ என வருகிறது.
தாரணை என்பதற்கு விளக்கவுரையாகத் தரப்படுவதைக் கீழே காண்போம்:
“தாரணைப் பகுதியும்’ என்பது:- தாரணை விகற்பங்களும் என்றவாறு. தாரணை விகற்பங்களாவன : நாமதாரணையும், அக்கரதாரணையும், செய்யுடாரணையும், சதுரங்கத்தாரணையும், சித்திரத்தாரணையும், வயிரத்தாரணையும், வாயுத்தாரணையும், நிறைவு குறைவாகிய வெண்பொருட்டாரணையும், வச்சிரத்தாரணையும் முதலாயினவற்றை உருவக்கரசங்கேதங்களால் இடம்படவறிந்து தரித்து, அனுலோமமாகவும், பிரதிலோமமாகவும், பிறவாறாகவுஞ் சொல்லுவது. அவையெல்லாம் தாரணை நூலுட் கண்டு கொள்க.

இந்த விளக்கத்தில் தாரணை நூல் என்று ஒரு நூல் இருப்பதை அறிய முடிகிறது. அதில் சதுரங்க பந்தம் உள்ளிட்ட பலவற்றைப் பற்றி ஏராளமான விளக்கங்கள் இருப்பதையும் அறிய முடிகிறது. தாரணை நூலை தமிழில் யாரேனும் அச்சிட்டிருக்கிறார்களா? தெரியவில்லை.

சதுரங்க பந்தம் பற்றிய இலக்கணமும் தொடர்ந்து இப்படித் தரப்படுகிறது:-
“சதுரங்க அறையில் உருவுகளை உருவக்கர சங்கேதங்களால் திரித்துக் குதிரையடியாகவும், குதிரையும் யானையுமாகப் பாய்ந்து வருவதற்கு இலக்கணம் வருமாறு:-

“கடிகம ழிலைமலர் சீரிதழ்த் தாமரைப்
பனிமலர் வாட்டிய மீமிசை நிகரி
னூபுரமிக வூன்றலின் மேலொளி நெருங்கிய
சேண்விளங் கெழிலடி குறுகுதுத் தூநிறப்
பெருமலர் வேங்கையு மூங்கிலு நுடங்கிப்
பிணியவிழ் வீத்த மாத்த ணறவமும்
சாந்தமு மகிலுங் கிளர்ந்து திங்களிச்
சூரலு முகிரலுங் கெழுமித் தேறிய
நூலவர் பேணும் வெட்சியு முறித்தை
விரைமலர் மகிழு நாகமும் பீடுடைத்
திருவுஞ் சகமலி யாதி கீர்த்தி
யூனமில் கேள்வியிற் றெளிந்து சுரும்பிவர்
நீடிணர்ப் பாசிலை வடுமா மிசைமிக
வுருகெழு மென்கனி நேரே பூசணித்
துகளறு செங்கா யெங்கெனக் கூறி
யீண்டிய காதலிற் றடவிய சிறுநுதற்
பெருமதர் மழைக்கட் செவ்வாய்ப்
புரிகுழ லியக்கியர் பொதிபெறற் பொருட்டே”

இந்த நேரிசை ஆசிரியப் பாடலில் கடிகமழ் என்பதில் ஆரம்பித்து சிறுநுதல் என்ற வார்த்தை முடிய மொத்தம் 64 வார்த்தைகள் உள்ளன.

“வேண்டியதோ ரறை முதலாகவாயினும், வேண்டியதோர் அறை ஈறாகவாயினும் பாய்த்துவது, சிறு நுதல் வரைப் பாய்த்த அறுபத்து நாலு வெங்குதிரை வரும்” என்கிறது விளக்கவுரை.
எந்த அறையில் குதிரையின் பாய்ச்சலை ஆரம்பிப்பது, எப்படி குதிரை வரும் என்பதை நம்மால் அறிய முடியவில்லை. ஏனெனில் விளக்குவதற்கு குருவும் இல்லை; விளக்கம் முழுவதும் அடங்கிய தாரணை நூலும் இல்லை.

இது தான் தமிழின் இன்றைய நிலை! தமிழின் மீது அக்கறை உள்ள நம் போன்றோர் முயன்று இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பாடல் இங்கு தரப்படுகிறது. தமிழ் என்னும் விந்தையின் ஒவ்வொரு துளியையும் அறிந்து சுவைத்து அதை உலகிற்குத் தருவோரே உண்மையான தமிழ்த் தொண்டு புரிபவராவர். தமிழ் நூல்களில் புதைந்து கிடக்கும் கோடானு கோடி ரகசியங்களை கண்டுபிடித்து வெளியிடுவதே தமிழர்கள் முன் இன்று இருக்கும் ஒரே கடமை!
ஆங்கிலத்தில் சதுரங்க அறைகளில் ஆங்கில கவிதைகளின் வார்த்தைகளையோ அல்லது எழுத்துக்களையோ அமைத்துப் புதிர்களை விடுவிப்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து வந்த ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு. இல்லஸ்ட்ரேட்ட் லண்டன் நியூஸ் பத்திரிக்கையில் ஹோவர்ட் ஸ்டாண்டன் என்பவர் 1870 முதல் 1874 முடிய வெளியிட்ட சதுரங்க கவிதை புதிர்களில் ஷேக்ஸ்பியர் மற்றும் சர் வால்டர் ஸ்காட் கவிதைகளை அமைத்து புதிர்களை வெளியிட்டார். அவற்றில் ஒன்றே ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

*************** (தொடரும்)

பாரதி பாடல்களிலிருந்து 31 முக்கிய மேற்கோள்கள்

Maha Kavi

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 டிசம்பர் மாத காலண்டர்

முக்கிய நாட்கள்: — டிசம்பர் 2 கீதா ஜயந்தி, 5 திருக் கார்த்திகை, 6 சர்வாலய தீபம், 11 பாரதியார் பிறந்த நாள், 21 ஹனுமத் ஜயந்தி, 25 கிறிஸ்துமஸ்; அமாவாசை:22, சுபமுஹூர்த்த நாள்:– 1, பௌர்ணமி – 6, ஏகாதசி- 2, 18

பாரதி பாடல்களிலிருந்து 31 முக்கிய மேற்கோள்கள்

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1444; தேதி 29 நவம்பர், 2014.

டிசம்பர் 1 திங்கட் கிழமை
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா !

டிசம்பர் 2 செவ்வாய்க் கிழமை
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.
சேமமுற வேண்டும் எனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்

டிசம்பர் 3 புதன் கிழமை
அன்பென்று கொட்டு முரசே – மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால்

டிசம்பர் 4 வியாழக் கிழமை
தங்க மதலைகள் ஈன்றமுது ஊட்டித்
தழுவியது இந்நாடே – மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே

டிசம்பர் 5 வெள்ளிக் கிழமை
யாகத்திலே தவ வேகத்திலே – தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு

bharati2

டிசம்பர் 6 சனிக் கிழமை
சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம்

டிசம்பர் 7 ஞாயிற்றுக் கிழமை
பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார்மிசை ஏதொரு நூல் இது போலே

டிசம்பர் 8 திங்கட் கிழமை
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி என்றே – மிக
நன்று பல்வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக்கை

டிசம்பர் 9 செவ்வாய்க் கிழமை
அன்பு சிவம் உலகத் துயர் யாவையும்
அன்பினில் போகும் என்றே – இங்கு
முன்பு மொழிந்து உலகாண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி

டிசம்பர் 10 புதன் கிழமை
நாவினில் வேதம் உடையவள் கையில்
நலம் திகழ் வாளுடையாள் – தனை
மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்

bharati3

டிசம்பர் 11 வியாழக் கிழமை
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள் எங்கள் தாய் – அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்

டிசம்பர் 12 வெள்ளிக் கிழமை
பேரிய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடு என்றே அறி

டிசம்பர் 13 சனிக் கிழமை
பேசுகவோ சத்தியமே, செய்க தர்மமே என்று ஒலி செய்
முத்தி தரும் வேத முரசு

டிசம்பர் 14 ஞாயிற்றுக் கிழமை
இனி ஒரு விதி செய்வோம் — அதை
எந்த நாளும் காப்போம்;
தனி ஒருவனுக்கு உண்விலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்

டிசம்பர் 15 திங்கட் கிழமை
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்;
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நநட்டு மன்னர்

bharati4

டிசம்பர் 16 செவ்வாய்க் கிழமை
வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர் வீரம்
செறிந்த தமிழ்நாடு

டிசம்பர் 17 புதன் கிழமை
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்

டிசம்பர் 18 வியாழக் கிழமை
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திரு நாடு

டிசம்பர் 19 வெள்ளிக் கிழமை
ஆண்களோடு பெண்களும்
சரி நிகர் சமானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே

டிசம்பர் 20 சனிக் கிழமை
வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

bharati5

டிசம்பர் 21 ஞாயிற்றுக் கிழமை
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீர் அதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்

டிசம்பர் 22 திங்கட் கிழமை
ஆதி மறை தோன்றிய நல் ஆரிய நாடு எந்நாளும்
நீதி மறைவின்றி நிலைத்த திரு நாடு

டிசம்பர் 23 செவ்வாய்க் கிழமை
பெண் என்று சொல்லிடிலோ – ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! நினது
எண்ணம் இரங்காதோ?

டிசம்பர் 24 புதன் கிழமை
காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசை எல்லாம் நாம் அன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்

டிசம்பர் 25 வியாழக் கிழமை
பயம் எனும் பேய்தனை அடித்தோம் – பொய்மைப்
பாம்பைப் பிளந்து உயிர் குடித்தோம்;
வியன் உலகனைத்தையும் அமுதென நுகரும்
வேதவாழ்வினைக் கைப் பிடித்தோம்

bharati stamp

டிசம்பர் 26 வெள்ளிக் கிழமை
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று – அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை – எந்த
நேரமும் போற்று சக்தி என்று

டிசம்பர் 27 சனிக் கிழமை
தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்

டிசம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்

டிசம்பர் 29 திங்கட் கிழமை
சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே;
தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்

30 செவ்வாய்க் கிழமை
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா

31 புதன் கிழமை
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

Sri Ramanuja’s Favourite Tamil Hymn!

ramanuja

Article written by London Swaminathan
Article No.1443; Dated 28th November 2014.

Who is Ramanuja?
Sri Ramanuja was a Hindu philosopher born in a Tamil Brahmin family in1017. Considered a great teacher who spread Vishtadvaita, was born in a Vadama family to Kesava Perumal Somayaji Dikshitar and Kanthimathi Ammal at Sri Perumpudur near Chennai. He lived a long life of 120 years and died in 1137. He was a great social reformer and converted a lot of people from lower castes as Vaishnavite Brahmins.

What is Tiruppavai?
Thirty verses sung by Tamil poetess Andal of seventh century CE in praise of Lord Krishna is known as Tiruppavai.

Sri Ramanuja is called by many names and epithets such as Udayavar, Emperumanar, Yathirajar and Bhasyakarar. But Ramanuja himself preferred another name Tiruppavai Jeeyar. He liked the verse No.18 more than any other verse from the thirty verses of Andal’s Tiruppavai. There is a story behind this. Vaishnavites sing this verse twice in all the reciting events because it was liked by Sri Ramanujacharya.

Ramanuja used to go to the houses of the devotees every day for food collection, singing the glories of Lord. One day he was singing the verse no 18 of Tiruppavai (Tamil, “Undhu Matha Kalitran….) and went round the streets. When he approached the house of his teacher Perianambi, he finished the verse by singing the last line

“Come along, throw open delighted
To clang thy bangles bright
In pinky lotus hand a sight
Listen and consider our damsel”.

Suddenly the door opened and he saw his teacher’s daughter Athulai standing there with the alms. Ramanuja saw her as Nappinnai and prostrated before her. People of divine origin see god everywhere. We have heard such episodes in the lives of several Alvars and Nayanmars. And thus this verse gained added significance. When the Vaishnavites sing this verse they remember their great Acharya Ramanuja and Lord Krishna with his consort Nappinnai.

05FR-SMITHA__29950e
Dancer Smitha Madhav as Andal (Photo from The Hindu)

Full Verse 18 of Tiruppavai goes like this:–
Oh! Daughter in law of Nandagopala
Who hath a shoulder mighty, never a fleer
A valiant Tusker emitting vigour; atop jasmine arcade
Again and again flock of larks had cooed;
Nappinnai! Thy hair perfume fragrant, door thou open!
Cock come around, have crowed with rigour
Though art asleep, ball agrip, as we sing thy groom;
Come along, throw open delighted
To clang thy bangles bright
In pinkly lotus hand a sight
Listen and consider our damsel – verse 18

Meaning : Andal and her friends request Nappinnai, Krishna’s wife, to open the door. She praises Krishna with a mighty shoulder like an elephant. Beautiful morning time is also described. Nappinnai with her fragrant hair had a ball in her hand which was used for playing with Krishna the previous day.

Source book: Concept’s of Sri Andal’s Tiruppavai by Dr Chenni Padmanabhan

‘இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்!’ ஆண்டாள் அறைகூவல்!

05FR-SMITHA__29950e
Dancer Smitha Madhav as ஆண்டாள் ( photo from The Hindu)

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1442; தேதி 28 நவம்பர், 2014.

கட்டுரையின் முதற்பகுதி “தோன்றிற் புகழொடு தோன்றுக” — என்ற தலைப்பில் நேற்று வெளியாகியது அதைப் படித்துவிட்டு இதைப் படிக்க வேண்டுகிறேன்.

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, எழுந்திரு (உத்திஷ்ட) என்று நான்கு முறை கூறியதையும் அதையே வள்ளுவரும் கூறியிருப்பதையும் கட்டுரையின் முதற் பகுதியில் கண்டோம்.

ஆண்டாளும் தன்னுடைய தோழிகளை இப்படி தட்டி எழுப்புவதைப் பார்க்கிறோம். குறைந்தது மூன்று இடங்களில் தோழிகளையும் ஏனைய இடங்களில் கடவுளையும் சுப்ரபாதம்/ பள்ளி எழுச்சி பாடி எழுப்புவதைப் படிக்கிறோம். மேம்போக்காகப் பார்த்தால் இது எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை பள்ளிக் கட்டிலில் இருந்து எழுப்புவது போலத் தோன்றும். உண்மையில் அவள் சொல்லும் உறக்கம் பேர் உறக்கமாகும்.

இவ்வுலகில் மனிதனாகத் தோன்றியவர்க்கெல்லாம் ஒரே குறிக்கோள்—பிராமணன் ஆவதுதான். அதாவது பிரம்மத்தை நாடுவதே ஆகும்.

இவ்வுலகில் மனிதனாகத் தோன்றியவர்க்கெல்லாம் ஒரே குறிக்கோள்—அந்தணன் ஆவதுதான். அதாவது அந்தத்தை அணவுவதே ஆகும்.

இவ்வுலகில் மனிதனாகத் தோன்றியவர்க்கெல்லாம் ஒரே குறிக்கோள்—பார்ப்பான் ஆவதுதான். அதாவது மனதை உட்புறமாகத் திருப்பி உள்ளே உறையும் இறைவனைப் பார்ப்பதே ஆகும்.

இப்படி மனித குலம் முழுவதையும் ஐயர்களாக (ஹையர் அண்ட் ஹையர் Higer and Higer= Iyer உயர உயர) உயர்த்துவதற்கு பிரம்ம முஹூர்த்தமாகிய காலை நாலு மணிக்கு தியானத்திலோ வழிபாட்டிலோ ஈடுபட வேண்டும். இதற்காகத்தான் பாவை (மார்கழி) நோன்பு என்பதைக் குளிர் காலத்தில் வைத்தார்கள். அப்பொழுதுதான் போர்வையைத் தூக்கி எறிந்து விட்டு படுக்கையை விட்டு எழுந்திருப்பார்கள்.
andal

முதலில் உடல் விழித்துக் கொண்டால் பின்னர் உள்ளமும் விழித்துக் கொள்ளும். அதாவது அறியாமை என்னும் பேர் உறக்கத்தில் இருந்து ஆன்மா விழித்துக் கொள்ளும்.
இதைத்தான் ஆண்டாள் திருப்பாவையில்

இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம் (பாவை 12) – என்றாள். இது போல திருப்பாவையில் குறைந்தது மூன்று எழுந்திராய் (பாடல்கள் 8, 12, 14) வருகிறது.

இதற்கும் முன்னர், கடோபநிஷத்தில் (1-3-14) உத்திஷ்ட, ஜாக்ரத, ப்ராயவரான் நிபோதத! — (எழுந்திரு! விழிப்படை! குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்!!) — என்ற வீரிய வாசகம் வருகிறது. இதைத்தான் எல்லோரும் பல வகையில் சொல்லுவர். விவேகாநந்தர் அடிக்கடி சொன்ன மேற்கோள் இது.

வால்மீகி சொன்ன உத்திஷ்ட!
தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் பிரபலமான வெங்கடேச சுப்ரபாதத்தில் வரும் உத்திஷ்ட மிகவும் தெரிந்த ஒன்று. சு+ ப்ரபாத என்றால் நல்ல+காலை எனப் பொருள். ஆங்கிலத்தில் ‘’குட் மார்னிங்’’ என்று சொல்லுவோம். இதை பள்ளி எழுச்சி என்று மாணிக்கவாசகரும், பாரதியாரும் பாடி வைத்துள்ளனர்.

இதன் முக்கிய நோக்கம் இறைவனைக் காலையில் எழுப்புவது அல்ல. அந்தச் சாக்கில் நம் எல்லோரையும் அதி காலை பிரம்ம முகூர்த்தத்தில் – காலை 4 மணிக்கு — எழுந்திருக்க வைத்து உறங்கிக் கிடக்கும் ஆன்மாவை விழிப்புற வைப்பதாகும்

ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தை இயற்றிய பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராசார்யார், முதல் பாடலாகத் தெரிந்தெடுத்தது வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் வரும் ஸ்லோகம் ஆகும்:–

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்ததே
உத்திஷ்ட நரசார்தூல கர்தவ்யம் தைவ மாஹ்னிகம்
……………….
உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த! உத்திஷ்ட கருடத்வஜ

பொருள்: கௌசல்யாவின் மகனாகப் பிறந்த உத்தமோத்தமனே! ராமா! கீழ் திசையில் காலைப் பொழுது மலர்ந்துவிட்டது! ஆண்களில் புலி போன்ற வீரனே! தினமும் செய்ய வேண்டிய வேலைகள் காத்துக் கிடக்கின்றன. கருடக் கொடியை உடைய கோவிந்தா! எழுந்திரு!

bharatmata (1)

இந்தக் காலை வணக்கம் இறைவனுக்கு என்பதை விட அதைச் சொல்ல நம்மை எழுந்திருக்கத் தூண்டும் வணக்கமாகவே கொள்ளல் வேண்டும்.

பாரதியார் பாடிய பாரத மாதா திருப்பள்ளி எழுச்சியைப் பார்க்கையில் இது சட்டென விளங்கும். அதவது தூங்கிக் கொண்டிருக்கும் பாரத அன்னையை எழுப்புதல் என்பது சுதந்திர யுத்தத்தில் சேராமல் சோம்பித் திரிந்த பாரத மக்களைத் தட்டி எழுப்பிய சுப்ரபாதம் அது. இதோ பாடலின் முதல் பத்தியைப் படித்தாலேயே சுப்ரபாதம்/பள்ளி எழுச்சி யாருக்கு என்பது தெற்றென விளங்கும்:–

பொழுது புலர்ந்தது; யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழிதுயில்கின்றனை இன்னும் என் தாயே
வியப்பிது காண் பள்ளி எழுந்தருளாயே!

——பாரதியாரின் பாரத மாத திருப்பள்ளி எழுச்சி

Uttishta/Arise: A Powerful Command

bhagavad-gita

Research paper written by London Swaminathan
Research article No.1441; Dated 27th November 2014.

How many times did Krishna say UTTISTHA (Arise) to Arjuna and Why?

I can count at least four UTTISTHAs in the Bhagavad Gita.

This is Swami Vivekananda’s favourite slogan as well. Arise! Awake and Stop not till the goal is reached! It is taken from the Katha Upanishad.

uttisthata jagrata prapya varan nibodhata (Katha 1.3.14) is the actual line used by Swami Vivekananda. It is a powerful command having meaning at two levels. One can follow it in the mundane world and succeed in life or in the spiritual world and attain Mukti/final release.

Of the four uttisthatas in the Bhagavad Gita, the most famous one is

uttistha! Yaso Labha! i.e. Arise and Attain Fame!! (11-33)

malaysia_stamp_vivekananda

This will serve as a good motto for any youth. But Krishna said it to Arjuna who refused to fight. Arjuna was ready to derelict from his duty but Krishna convinced him that he would not incur any sin by killing his own near and dear in the battle field.

If a judge suddenly refuses to pass death sentence on all hard core murderers or a soldier in the front line refuses to handle gun or rifle saying that it a sin to kill people, then it is dereliction of duties. Not only dereliction of duty, but also helping the anti socials to thrive.

In the second chapter Krishna urged Arjuna to shed unmanliness. He said to Arjuna, “Cast off this faintheartedness and Arise!” (2-3).
This is the best sloka of Bhagavad Gita according to Swami Vivekananda.

In the same chapter (2-37), Krishna said, “Either slain thou shalt go to heaven; or victorious thou shalt enjoy the earth; therefore Arise, resolved on battle”.

And in 4-42, the word gets its spiritual meaning:

There having cut asunder with the Sword of Wisdom this doubt in thy heart, that is born of ignorance, resort to Yoga and Arise!

(Dr S Radhakrishnan’s Translation)

AriseAwake_p

Valmiki said ‘Uttistha’!

The word uttistha is famous in other contexts as well. The most popular Suprabatham hymn in South India is Venkateswara Suprabatham sung in praise of Lord Balaji Venkateswara of Tirupati in Andhra Pradesh.

Suprabatham is the hymn sung to wake up God in the morning. But in reality it is wake up call to humanity. Only when one wants to wake up the god at 4 AM in the morning, one will get ready from 3 AM. It is considered Brahma Muhurtha in Hindu scriptures, most auspicious time to worship god or to do meditation. That is the purpose of Su+ Prabatha (Good + Morning).

Here in this Venkateswara hymn the first verse is taken from Valmiki Ramayana by the composer of the hymn Prativadhi Bhayangaram Annagracharya.

The verse goes like this

Kausalya Supraja Rama purva Sandhya Pravarthathe
Uttistha Narasardula Karthavyam Daiva Ahnikam

Uttistha Uttistha Govinda Uttistha Garuda Dwaja

O Rama! The noble son of Kausalya. The dawn in the East commences. O Tiger among men! Arise! The daily tasks are waiting to be performed.
Arise! Govinda! Holder of the Eagle Flag! Arise.

Uttistha is used by the Tamil poetess Andal In a spiritual context about 1400 years ago in her Tiruppavai. She wakes her girl friends in the morning to worship the Lord, “Arise! Get Up! Why is this long sleep?” in at least three verses (8,12, 14). She was not talking about the normal sleep and waking up, but was singing about the spiritual awakening from the slumber of ignorance.

bharati stamp

Tamil poet Bharati used the same genre to wake up Bharat Mata in his patriotic song. There also he called the sleeping Indians to wake up and join the war of Independence. He addressed Mother India,

“ The day hath dawned;
Our austerities have fructified;
The vile forces of darkness have melted into thin air;
The golden beams of the morning sun illumine all over,
The sun of wisdom shines in all its splendour,
Thousands on thousands are we, your votaries
Gathered to praise you and pay you homage.
Amazing that it is still you are still asleep
Arise ,Awake,,Mother dear!

–Translation by Prof.SRK

contact swami_48@yahoo.com

தோன்றிற் புகழொடு தோன்றுக! உத்திஷ்ட! யசோ லப !!

Srimad_Bhagavad__4c53e78e9a0a5

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1440; தேதி 27 நவம்பர், 2014.

பகவத் கீதையில் கண்ண பிரான் உலக மக்களுக்கு ஒரு கட்டளை இடுகிறான்:
உத்திஷ்ட ! யசோ லப !!
எழுந்திரு ! புகழ் அடை!! (பகவத் கீதை 11-33)

இதையே வள்ளுவனும் அழகாகச் சொல்கிறான்:

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று – குறள் 236

பொருள்:- ஒருவன் பிறந்தால் புகழ் அடையவேண்டும் என்ற அவாவோடு – அதற்குரிய குண நலன்களுடன் பிறக்க வேண்டும். அக்குணம் இல்லாதார் பிறக்காமல் இருத்தலே நல்லது.

கண்ணனும் இதே கருத்தையே வலியுறுத்துவான். அர்ஜுனன் ஏதேதோ சாக்குப் போக்கு சொல்லி யுத்தம் செய்யாமல் தப்பிக்கலாம் என்று பார்க்கிறான். கண்ணன் விடவில்லை. பலவிதமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லி வழிப்படுத்தப் பார்க்கிறான்.

பகவத் கீதையில் உத்திஷ்ட! (எழுந்திரு) என்று கண்ண பிரான் குறைந்தது நாலு முறையாவது கட்டளை இடுகிறான். அதாவது, நமது ஊரில் சண்டித்தனம் செய்யும் மாட்டை மாட்டு வண்டிக்காரன் விரட்டுவது போல எழுந்திரு என்று மாற்றி மாற்றிக் குரல் கொடுக்கிறான்.
Srimad_Bhagavad__4bfd17abd98d4

இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்குச் சண்டை போட நம் ஊர் உசிலம்பட்டி இளைஞரை அனுப்புகிறோம். அவர் முதல் நாள் இரவு மஹாத்மா காந்தி புத்தகத்தையும் புத்த பகவான் சரித்திரத்தையும் படித்துவிட்டு அடாடா! நாளைக்கு நாம் துப்பாக்கியே எடுக்கக்கூடாது என்று சண்டித்தனம் செய்தால் அவருடைய பாட்டாளத்தின் மேஜர் அவருக்குத் தக்க தண்டணை கொடுப்பார். அவர் அஹிம்சைக்காக ராணுவத்தில் சேரவில்லை. துஷ்டர்களுக்கு ஹிம்சை தருவதே அவர்தம் கடமை.

“சுடச் சுடரும் பொன் போல ஒளிவிடும்” — என்ற உவமையை வள்ளுவன் ஞானிகளுக்குப் பயன்படுத்துவான்.
உசிலம்பட்டி இளைஞருக்கும் அதே வரிகள் வேறு பொருள் தரும். அவர் ஆட்களைச் சுடச் சுட— (சுட்டுத் தள்ளத் தள்ள) — பொன்= தங்கப் பதக்கம் ஒளிரும். அதாவது நிறைய பேரைக் கொன்றால் அவருக்கு தங்கப் பதக்கம் மட்டுமா, ‘’பரமவீர சக்ரம்’’ கூடக் கிடைக்கும்.

AriseAwake_p
ராஜீவ் காந்தியையும் இந்திரா கந்தியையும் கொன்ற கொலைகாரர்களுக்கு தண்டனை அளிக்க ஒரு நீதிபதி கருணையின் காரணமாகத் தவறினால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார். ராணுவ வீரனானாலும் நீதிபதி யானாலும் அவரவர் சட்ட திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். போர் வீரன் க்ஷத்ரிய தர்மத்தையும் நீதிபதி ஒரு சட்ட தர்ம (ஸ்மிருதி) நூலையும் பின்பற்ற வேண்டும்.

ஒருவனை ஒருவன் கொன்றால் அவனுக்கு மரண தண்டனை கிடைக்கும். அவனே போரில் பல ஆட்களைக் கொன்றால் அவனுக்கு மிகப்பெரிய ராணுவ விருது கிடைக்கும். அது க்ஷத்ரிய தர்மம். உலகம் முழுதுமுள்ள நடை முறை. அதே போல நாம் ஒருவரைக் கொன்றால் ஒரு புறம் சட்டம் நம்மை விரட்டும், மறுபுறம் பாவம் நம்மை விரட்டும். ஆனால் ஒரு நீதிபதி அவரது பதவிக் காலத்தில் நூறு பேருக்கு மரண தண்டனை விதித்தாலும் அவரைப் பாவம் ஒட்டாது. கடமையைச் செய்ததற்குப் புண்ணியமே கிடைக்கும். தூக்கு மேடைப் பொறுப்பாளன் எத்தனை பேர் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டினாலும் அவனை பாவம் ஒட்டாது. அவன் விருப்பு வெறுப்பின்றி தன் கடமையைச் செய்கிறான்.

இவ்வளவு சின்ன விஷயத்தை அர்ஜுனனுக்குப் புரிய வைக்க, பாவம்! கிருஷ்ண பரமாத்மா படாதபாடு பட்டார். அர்ஜுனனைச் சமாதானப் படுத்த அவர் 1400 வரிகள் பேச வேண்டியதாயிற்று. அதுவும் நல்லதாகப் போயிற்று. இல்லாவிடில் இந்து மத தத்துவங்களை ஒட்டு மொத்தமாக ‘’ஜூஸ்’’ பிழிந்து, அதில் சர்க்கரையையும் தேனையும் சேர்த்து, வாசனைக்கு ரோஸ் எசன்ஸையும் விட்டது போன்ற பகவத் கீதை நமக்குக் கிடைத்திருக்குமா?

malaysia_stamp_vivekananda
கீதையில் இதற்கு முன் சொன்ன உத்திஷ்ட பகுதிகளும் சுவையானதே.
இரண்டாம் அத்தியாயத்தில் (2-3)

க்லைப்யம் மாஸ்மகமஹ = சீ ! சீ ! பேடித்தனத்தை விட்டு எழுந்திரு – என்று கொஞ்சம் அதட்டல் மிரட்டலாகவே பேசி விடுகிறார் கண்ணன்.

இன்னும் ஒரு இடத்தில் இதோ பார்! இந்த அத்தைப் பாட்டி கதைகளை எல்லாம் என்னிடம் சொல்லாதே. “போரில் இறந்தால் வீர சுவர்க்கம்- வெற்றி பெற்றாலோ மாபெரும் சாம்ராஜ்யம்! எழுந்திரு! நண்பா! (2-37) என்கிறார்.

4-41-ல் வரும் உத்திஷ்ட அஞ்ஞானத்தை ஞானம் என்னும் வாளால் வெட்டிவிட்டு என்று குறள் கொடுக்கும் ஆன்மீக உத்திஷ்ட ஆகும்.

பகவத் கீதை ஒரு அதிசயமான நூல். எல்லா இடங்களிலும் அர்ஜுனனுக்கு சுதத்திரம் தருகிறார் கண்ணன் —- கொஞ்சம் அதட்டுகிறார், மிரட்டுகிறார், உருட்டுகிறார் —- ஆயினும் இறுதியில் நண்பனே! உனக்கு எது நல்லதோ அதைச் சொல்லிவிட்டேன். ஆயினும் உன் இஷ்டம்!! என்று அவனையே முடிவு எடுக்க அனுமதிக்கிறார். அதாவது நம் வீட்டில் அப்பா அம்மா நமக்கு எப்படி அதட்டியும் உருட்டியும் மிரட்டியும் அன்பாகவும் பண்பாகவும் சொல்லுகிறார்களோ அதே ‘’டெக்னிக்’’கைத் தான் – உத்தியைத் தான் – கண்ணனும் பின்பற்றுகிறான்.

bhagavad-gita

எப்படி திருக்குறளை திரும்பத் திரும்பப் படிக்கும் போது புதுப்புது பொருள் கிடைக்குமோ அப்படி — தொட்டனைத்தும் மணற்கேணி என — பகவத் கீதையை அதிகாலையில் படிக்கையில் புதுப்புது பொருள் தோன்றும். ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் எழுதிய பகவத் கீதை பேருரை அல்லது சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அண்ணா எழுதிய உரை இருந்தால் போதும். ஆங்கிலத்தில் சின்மயானந்தா உரை போதும்.

புத்தகம் இருந்தாலே நீங்களும் ஞானம் என்னும் ஏணியில் முதல் படியில் கால் எடுத்து வைத்ததாகக் கருதலாம்.
–சுபம்—

31 Good Quotations on Wife!

tamil-penkal

Good Thoughts Calendar — December 2014
Post No. 1439; Date: 26 November 2014.
Compiled by London Swaminathan ©

31 quotations from Sanskrit & Tamil texts are given in this calendar.
Important Dates: December 2 Gita Jayanti; 5 Tiru Karthikai, 6 Sarvalaya Deepam; 21 Hanumath Jayanthi; 25 Christmas, 26 boxing day.
Auspicious Days: December 1, Full Moon day- 6, New Moon (Amavasya)-22, Ekadasi –2,18

Quotes are taken from Suktisudha, Chinmya International Foundation and Tamil book Tirukkural.

December 1 Monday
Wife is dearer than life — Kata sarit sagara
Bharyaa praanébhyó pyadhikapriyaa

December 2 Tuesday
Just as you protect your wife, the wives of others are too deserve protection Valmiki Ramayana 5-21-8
Yathaa tava tathaanyésaam daaraa rakshyaa

December 3 Wednesday
The minds of noble women are as soft as flowers — Uttara Rama Carita 4s2
Purandhriinaam cittam kusuma sukumaaram hi bhavati

December 4 Thursday
A wife of excellent virtues who is capable of managing the household within the means of her husband is a real household help in home life -Tirukkural 51

December 5 Friday
Other’s wives are not to be minutely observed – Kalidasa in Shakuntala, Act 5
Anirvarnaniiyam parakalatram

பெண்கள் ஓவியம்

December 6 Saturday
If a wife does not possess the virtues for household life, that home will have no happiness, however splendid it may be in other respects -Tirukkural 52

December 7 Sunday
Talking about another’s wife is un gentlemanly – Kalidasa in Shakuntala, Act 7
Anaaryah Pradhara vyavahaarah

December 8 Monday
She who gains the affection of her husband by her faithful devotion to him is honoured among the Gods-Tirukkural 58

December 9 Tuesday
The householder’s home is bare without his wife – Katha sarit sagara
Abhaarya hi suunyam grhapatérgrham

December 10 Wednesday
He who does not possess an ideal wife, who values the reputation of chastity, cannot hold his head up among his friends-Tirukkural 59

pavadai sattai malayalam

December 11 Thursday
The wife is one half of man
Ardham bhaarayaa manusyasya

December 12 Friday
A virtuous wife is a blessing and good children are its adornment -Tirukkural 60

December 13 Saturday
It is impossible to stop a woman on her way to meet her beloved Mrchakatika 5- 31
Na sakyaa hi striyó róddhum prasthitaa dyitam prati

December 14 Sunday
Of what avail is watch and ward? A woman’s will is the best safeguard-Tirukkural 57

December 15 Monday
Wives of the gallant do not lament — Valmiki Ramayana 4-24-43
Na suurapatnyah paridévayanti

rajasthani-women-ER62_l

December 16 Tuesday
What greater treasure can there be than a woman, who has the abiding strength of chastity? -Tirukkural 54

December 17 Wednesday
Good wives are at the root of all righteous deeds — Kumara sambhavam of Kalidasa 6-13
Kriyaanaam khalu dharmyaanaam satpatnyó muulakaaranam

December 18 Thursday
A wife who may not worship god but wakes up with worshipful devotion to her husband has to make the rain fall at her bidding -Tirukkural 55

December 19 Friday
A disobedient wife is an enemy – Canakyaniti 9-12
Aviniitaa ripurbhaaryaa

December 20 Saturday
The wife is a fetter not made of metal – Canakyanitisastra
Alóhamayam nigadam kalatram

women are illusions

December 21 Sunday
She, who guards her virtue, tenderly cares for her husband and maintains the reputation of both, is a good wife-Tirukkural 56

December 22 Monday
Women spurn her relatives due to the love of their husbands – Bharatamanjari 1- 17- 774
Trnam bhaandhavapakso hi bhartrusnéhéna yósitaam

December 23 Tuesday
A house is not said to be a home, it is the housewife that makes that makes it one. Pachatantra 6-85
Na grham grham iti ityaahuh grhinii grham ucyaté

December 24 Wednesday
A human woman cannot be a demon’s wife – Valmiki Ramayana 5-24-28
Na maanusii raaksasasya bhaaryaa bhavitumarhati

December 25 Thursday
It is un ethical to ogle at another’s wife — Mrchakatika 1-158
Na yuktam paralkalatra darsanam

cartoonist murugu, fb

December 26 Friday
It is very hard for a wife to live without her husband Valmiki Ramayana 2-29-7
Patihiinaa tu yaa naarii na saa saksyati jiivitum

December 27 Saturday
Who will forsake his wife even in utter failure – Bharatamanjari 2-11-396
Paraabhavépi daaraanaamupéksam ksamaté ne kah

December 28 Sunday
For a woman the death of her husband is but the first catastrophe Valmiki Ramayana 6-32-9
Prathamam maranam naaryaa bharturvaigunyamucyaté

December 29 Monday
Householders look through the eyes of their wives in matters relating to their daughters –Kumara sambhavam of Kalidasa 6-85
Praayéna grhinii nétraah kanyaarthésu kutumbinah

December 30 Tuesday
A husband blinded by love sees not the wickedness of his wife – Kata sarit sagara
Praayéna bhaaryaadausilyam snéhaandhó néksaté janah

December 31 Wednesday
A beautiful wife is a foe — Cankyaniti 9-12
Bharyaa ruupavatii satruh
B_Id_404534_sonakshi-sinha-ramp

contact swami_48@yahoo.com

புலிப்பல், யானை முடி, பசு மூத்திரம், மான் தோல்: விநோத இந்து நம்பிக்கைகள்!!

gomutra

புலிப்பல், யானை முடி, பசு மூத்திரம், மான் தோல்: விநோத இந்து நம்பிக்கைகள்!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1438; தேதி 26 நவம்பர், 2014.

1.மதுரையில் எனது தந்தை வெங்கட்ராமன் சந்தானம், கொஞ்ச காலம் புலித்தோலில் உடகார்ந்து கொண்டு வீட்டில் தியானப் பயிற்சிகளைச் செய்து வந்தார். பின்னர் மான் தோலில் உட்கார்ந்து தியானம் செய்து வந்தார். பெரிய ரிஷி முனிவர்களின் படத்தைப் பார்த்தால் கீழே மான் தோல் அல்லது புலித்தோல் இருப்பதைக் காணலாம். ஏன்? ஏன்?

2.எனது தாயார் ராஜலெட்சுமி சந்தானமும் எங்கள் வீட்டு சமையல்கார மாமி சுப்புலெட்சுமியும் தினமும் இரவில் நாங்கள் எல்லோரும் சாப்பீட்டு முடித்த பின்னர் பசுஞ் சாணத்தை வைத்து அடுப்பை மெழுகுவர். ஏன்? ஏன்?

3. எனது தங்கை தினமும் காலையில் வாசலைத் தெளிக்கும் போது பசுஞ் சாணத்தைக் கலந்து தெளித்துவிட்டு ஜியோமெட்ரி பாக்ஸ், ரூலர், அடிஸ்கேல் என்றும் எதுவும் இல்லாமல் கன கச்சிதமாக சதுரங்கள், கோணங்கள் வட்டங்களுடன் மாக் கோலம் போடுவாள். ஏன்? ஏன்?

4.நாங்கள் மதுரை வடக்குமாசி வீதி யாதவர் தெருவில் வசித்தோம். எல்லோரும் மாட்டுச் சாணியையும், எரு வரட்டியையும் வாங்கிச் செல்வர். எங்காவது பசு மாடு மூத்திரம் பெய்தால் ஓடி வந்து கையில் ஏந்தி தலையில் ப்ரோக்ஷித்து / தெளித்துக் கொள்வர். ஏன்? ஏன்?

cow urinating

5. எங்கள் தெரு வழியாக வாரத்துக்கு ஒரு முறையாவது யானைப் பாகன் மீனாட்சி கோவில் யானை, அல்லது பெருமாள் கோவில் யானையை அழைத்து வருவான். நாங்கள் எல்லோரும் வீட்டு வாசலில் அரிசி, வெல்லம் வைத்துக் கொண்டு காத்திருப்போம். அதை வாங்கிக் கொண்டு நாங்கள் காசு கொடுத்தால் எங்களை மேலே ஏற்றிக் கொண்டு கொஞ்ச தூரம் போய் வருவான். கூடவே காசு கொடுத்தால் ஒரு சொம்பில் அல்லது வாளியில் வைத்திருக்கும் தண்ணீரைத் துதிக்கையால் உறிஞ்சி எங்கள் மீது —கஜ லெட்சுமிக்கு யானை அபிஷேகம் செய்வது போல — எங்கள் எல்லோரையும் “குளிப்பாட்டி” விடுவான். ஏன்? ஏன்?

6. தெருவில் போகும் யானை அங்கேயே காலைக் கடன்களை முடித்தால் அனைத்து சிறுவர்களும் ஓடிச் சென்று அந்த யானை ‘லத்தி’ மீது கால்களை வைத்து மிதித்து ஆனந்திப்பார்கள். காலில் சேற்றுப் புண் உடைய பெண்களும் வந்து மிதிப்பார்கள். ஏன்? ஏன்?

elephant-poo-11

7.எனக்குப் பூணூல் போட்ட போது, வீட்டு புரோகிதர் (சாஸ்திரிகள்/ வாத்தியார்) வந்து பூணூலில் ஒரு மான் தோலை முடித்து வைத்தார். சின்னப் பையானாக இருந்தால் கோவணத்தைக் கட்டி கையில் அரசங் குச்சியையும் கையில் கொடுத்து, இடுப்பில் அரைஞான் கயிறு கட்டும் இடத்தில் முஞ்சிப் புல்லால் கட்டியும் விடுவார். (எனக்கோ இரண்டு எருமை மாடு வயதானபோதுதான் பூணுல் கல்யாணம் நடந்தது!!!)

8. நான் லண்டனில் 28 ஆண்டுகளாக வசிக்கிறேன். எங்கள் ஹாரோ பகுதியிலும் சரி, கிழக்கு லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியிலும் சரி, நரிகள் அதிகம். அது காலலையில் தோட்டத்தில் வந்து ஊளையிட்டால் என் மனைவி ஓடிப் போய் அதன் மூஞ்சியில் விழிப்பாள்/ முழிப்பாள். நானும் அவள் சொன்னதற்காக நரி முகத்தில் முழிப்பேன். ஏன்? ஏன்?

9. எனது சக மாணவர்களில் ஒருவன் சேதுபதி உயர் நிலைப் பள்ளிக்கு வரும்போது கழுத்தில் தங்கச் சங்கிலியில் புலிப்பல் அணிந்திருப்பான். இன்னும் சில பெரியவர்கள் புலி நகத்தை அணிந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஏன்? ஏன்?

cow urine cola

10. எங்கள் வீட்டில் (அகத்தில் = ஆத்தில்) என்ன பூஜை புனஸ்காரம் நடந்தாலும் வீட்டு வாத்தியார் — (அதாவது ஐயர், அதாவது புரோகிதர், அதாவது சாஸ்திரிகள்) — வந்து கையில் பவித்ரம் என்று ஒரு தர்ப்பைப் புல் மோதிரத்தை அணியச் சொல்லுவார். தர்ர்பைப் புல் இல்லாமல் நல்லதோ கெட்டதோ எந்தக் காரியமும் செய்ய மாட்டார்கள். ஏன்? ஏன்?

11.என் மனைவி கர்ப்பமாக இருந்த போது வளைகாப்பு / சீமந்தத்துக்கு வந்த புரோகிதர் அவளுடைய தலையில் – நடு வகுட்டில் — ஒரு முள்ளம் பன்றி முள்ளால் கோடு போடச் சொன்னார் (அக்யூப்ரெஸ்ஸர்?)– ஏன்? ஏன்?

12.குருவாயூருக்குப் போனபோது 70, 80 யானைகள் வசிக்கும் யானைகள் காப்பகத்திற்கு வேடிக்கை பார்க்கச் சென்றோம். யானை பாகர்கள், ரகசியமாக, இடது கையில் காசு வாங்கிக் கொண்டு வலது கை வழியாக யானை வாலின் முடியைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். திருஷ்டி வராது- நோய் வராது என்றெல்லாம் சொல்லி எல்லோரும் வாங்கினர். எனக்கோ யானையின் மீது பரிதாபம் அதிகரித்தது. இப்படி ஆளுக்கு ஒரு முடி வாங்கினால் யானைக்கு வாலே இருக்காதே! யானை முடிக்கு அப்படி என்ன கிராக்கி! ஏன்? ஏன்?

Cow-Urine

13.முக்கியப் பண்டிகைகளில் பிராமணர்கள் ‘’பஞ்ச கவ்யம்’’ சாப்பிட வேண்டும். இதில் பால், வெண்ணை, தயிர், பசுஞ் சாணம், பசு மூத்திரம் – ஆகிய ஐந்தும் மிகச் சிறு அளவில் கலந்திருப்பர். உடல்-பொருள்-ஆவியைச் சுத்திகரிக்கும் அதிசய மருந்து என்பர். நானும் கஷ்டப்பட்டுதான் சாப்பிட்டேன். இது ஏன்? ஏன்?

14.பழைய கால ரிஷி, முனிவர்கள் எல்லோரும் கமண்டலம் என்னும் சிறிய கலசத்தில் தண்ணீர் கொண்டு செல்லுவர். இது தாகத்தைத் தணிக்கவா? அல்லது வேண்டியோருக்கு அபூர்வ வரங்களைக் கொடுத்து வேண்டாதவர்களைச் சபிக்கவா? தண்ணீருக்கு அதிசய சக்தி உளதோ! ஏன்? ஏன்?

இப்படி நூற்றுக் கணக்கான பழக்க, வழக்கங்களை, சம்பிராதாயங்களைச் சேர்த்துக் கொண்டு போனால் பட்டியல் நீண்டு விடும்.

எல்லா “ஏன்”?—களுக்கும் சுருக்கமான விடை:– இந்துக்கள் வாழ்வு இயற்கையோடு இணைந்தது — இயைந்தது. இதில் குறிப்பிட்ட எல்லாப் பொருட்களும் “ரீசைக்கிள்” ஆகி மீண்டும் நம் உபயோகத்துக்கே வரும். .புற ச்சூழலை பாதிக்காது.
coffee elephant poo

பசுஞ் சாணம், பசு மூத்திரம் ஆகியவற்றுக்கு உள்ள “பாக்டீரியா எதிர்ப்பு சக்தி” பற்றி நமக்குத் தெரியும். இருந்த போதிலும் முறையாக அறிவியல் சோதனைக் கூடங்களில் ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டால் வேற்று மதத்தினரும், கலாசாரத்தினரும் பயன்படுத்துவர்.

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ……….. ………….. இந்து விஞ்ஞான சங்கம் வைத்து எல்லாவற்றையும் ஆராய — நெடு நாளைய ஆசை எனக்கு.

தர்ப்பைப் புல் பற்றியும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்த – குறிப்பாக கிரகண கால – ஆய்வுகள் பற்றிப் படித்தேன். முறையான – சோதனைச் சாலை ஆய்வுகள் நடத்த வேண்டும், முடிவுகளை உலகமே ஏற்க வேண்டும்!

selous-game-reservesmoking elphant poo

மான் தோல் சத்வ குணத்தை உண்டாக்கும் என்றும், புலித்தோல் ஒருமுக மனக் குவியத்தையும், குறிக்கோளை அடைவதில் முனைப்பையும் உண்டாகும் என்றும் சொல்லுவர்.

புலிப்பல் தாலி முதலியன குறித்து சிலப்பதிகாரம், பெரிய புராணம் முதலிய நூல்கள் பேசும். வீரம், மன உறுதி, லட்சியத்தை அடையும் முனைப்பு, வேகம் ஆகியவற்றை அளிக்க வல்லது புலி நகம், புலிப்பல் தாயத்து என்பர்.

பசு மூத்திரம் இப்பொழுது பாட்டில்களில் கூட விலைக்கு வந்துவிட்டது. யானை லத்தி பற்றி ஆராயாவிட்டாலும் யானை லத்தியுடன் வரும் காப்பிக் கொட்டைக்கு மதிப்பு அதிகம். யானை லத்தி காப்பி ஒரு கோப்பை ரூ.300! (இது பற்றிய எனது பழைய கட்டுரையைப் படிக்கவும்). யானை லத்தியை புகையிலை போல சிகரெட் செய்து புகைப்பர் ஆப்பிரிக்க மலைஜாதி மக்கள். அது மட்டுமல்ல ஆப்பிரிக்க பபூன் குரங்குகள், யானை லத்தியைச் சாப்பிடுகின்றன. நமக்கும் முன்பாக மிருகங்களும் பழங்குடி மக்களும் இது போல பல ரகசியங்களைக் கண்டுபிடித்து வைத்திருக் கின்றனர். உலகிலேயே இரண்டு பிராணிகளின் மலம் தான் நாற்றம் எடுக்காமல் பாக்டீரியாக்களைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை எனத் தெரிகிறது.

OLYMPUS DIGITAL CAMERA

தண்ணிரின் சக்தி பற்றி இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது. வரம் கொடுக்கவும், சபிக்கவும் ஏன் தண்ணீரை பயன் படுத்தினர்? பிராமணர்கள் தினமும் முக்கால சந்த்யா வந்தனத்தில் தண்ணிரை மட்டுமே அளித்து காயத்ரியைத் த்ருப்திப் படுத்துவது ஏன்? இறந்து போன முன்னோர்களுக்கும் எள்ளும் நீரும் மட்டும் இரைத்து அவர்களை த்ருப்திப் படுத்துவது எப்படி? இவைகளுக்கு நம்பிக்கை அடிப்படையில் பதில் தரலாம். விஞ்ஞான் அடிப்படையில் பதில்தர ஆய்வு நடத்த வேண்டும் “இந்து விஞ்ஞான சங்கம்” அமைத்து ஆராய்வதே இதற்கு விடைதரும்.

அண்மையில் குதிரைகள் தோன்றியதும் இந்தியாவில்தான் என்று அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சொல்வதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் உலகம் முழுதும் நாகரீகத்தைப் பரப்பிய பெருமை இந்தியர்களுக்குதான் என்பது உறுதியாகிறது. இரும்பின் பயனைக் கண்டுபிடித்து அதை உலகம் முழுதும் பரப்பியதற்கு டில்லியில் நிற்கும் குப்தர் கால இரும்புத் தூண் சான்று பகரும்.
Nara_Narayana_Deogarh (1)
Gupta Period Statues of Nara-Narayana at Deogarh. Look at the deer on the chest of one of the figures.

மனுவும் கூட கறுப்பு நிற மான் (கிருஷ்ணசாரம்) எங்கு இருக்கிறதோ அதுதான் புண்ய பூமி. மற்றதெலாம் மிலேச்ச பூமி என்பார். சங்க இலக்கியமும் அராபியர்கள், யவனர்கள், ரோமானியர்களை கடுஞ்சொல் யவனர் என்று ஏசுகின்றன. அந்த கறுப்பு நிற மான் தோலை கிருஷ்ணாஜினம் என்பர். அதையே பிராமணச் சிறுவர் பூணூலில் அணிவர்.

வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்று வாழ்க என்று கொட்டு முரசே – பாரதியார்.
–சுபம்–

Hindus’ Strange Medicines! Cow’s Urine, Tiger Teeth, Elephant’s Hair, Deer Skin….

gomutra

Hindus’ Strange Medicines! Cow’s Urine, Tiger Teeth, Elephant’s Hair, Deer Skin, Tiger Skin, Dharba Grass, Fox Face, Water Pot, Elephant poo, Cows’ poo!

Research paper written by London Swaminathan
Research article No.1437; Dated 25th November 2014.

1.My father used to do meditation sitting on a deer skin. First he started with a tiger skin. Then he changed to deer skin. People told him that tiger skin is not fit for family men. It will make one angry. Why?

2. My mother used to wash our oven and kitchen area with cow’s poo (cow dung) every night. Why?

Cow-Urine

3. My sister used to sprinkle cow’s poo mixed with water on the ground in front of the floor every morning and then decorate the floor with some geometrical designs without any instrument. It is called Kolam in Tamil and Rangoli, Alpna in other languages. Why?

All this happened in Madurai,my home town in Tamil Nadu.

4.When I was asked to wear the sacred thread, for being born as a Brahmin, they tied a deer skin in my sacred thread. They tied some grass around my waist. Why?

5.When my friend was a little boy they hung a tooth of a tiger in his chain around his neck. Why?

OLYMPUS DIGITAL CAMERA
Baboon eats elephant poo in Africa

6.When my wife was pregnant the priest brought the thorn of a porcupine and drew a line on her head. Why?

7.When I was a boy, the temple elephant used to come once a week through our streets and when it excreted on the road we children used to run to the road and stamp on the elephant poo. Even old ladies with chilblain used to join us. Why?

8.When I went to Guruvayur, the most famous shrine of Krishna in Kerala, the mahouts of the elephant sanctuary were selling secretly the hair from the tail of the elephants. People were exchanging money with them for the hair. Why?

selous-game-reservesmoking elphant poo
(In Tanzania (Africa) they smoke elephant dung

9.When I wore the sacred thread, the priest asked me to eat in very small quantity Panchagavya (five products from a cow including cow’s urine, cow’s poo, milk, curd/yogurt and butter). At that time I thought it was disgusting. Not anymore. Why?

10. I lived in the street of Yadava community in Madurai. People used to sprinkle cow’s urine on their heads and drink a small quantity whenever the cows urinated. Why?

11.We are asked to wear Dharba grass on our ring finger every time we do some ritual. Why?

12. In London, where I have been living for the past 28 years, a lot of foxes visit our garden. All Tamil Hindus are very happy to see it in the morning like we see Garuda (eagle with white neck) in the morning in India. Hindus think it is lucky to wake up in front of a fox. Why?
coffee elephant poo
Elephant poo coffee is very expensive

13. All the ancient sages and seers always carry a water pot in their hand. They believed in the magical qualities of water. They can give a boon or a curse with water.Why?

I can add hundred more customs like this. For all the ‘Why’s, I will give a one word answer: Hindus are children of nature. They knew the value of natural products. If someone says that something is a medicine they don’t bother until one falls sick. But if someone says it is mandatory in your religion, if you don’t do it you will incur sin, then you do it without questioning. Most of the products mentioned above have got some medicinal properties or may be placebo effect.

Nara_Narayana_Deogarh (1)
Deogarh Gupta staues of Nara Narayana with deer image on chest

Animal skins: deer skin will give one satva guna (good virtues without anger, Tiger skin will give you focus and concentration. Whatever you target you will ‘’kill’’, i.e. you achieve.

Poos of elephant and cow: They have medicinal properties. The greatest discovery of Hindus is cow. This is their gift to humanity. They use all their excretions: Urine, Poo, Milk and other dairy products. More than the protein and other essential nutrients in the milk, the urine and poo have got anti bacterial properties. Seers and sages simply survived with cow’s products. That is why Hindus worship cow as mother until today.

Dharba, grass, Tiger’s tooth or Tiger nail: No scientific study was done other that the effect of Dharba (kusa Grass) during eclipse. It is good some university does study it and reveal the secrets. I have read one or two things about theg ood qualities of the Dharba grass. But we need scientific proof with the date and the people who did the research and the name of the university. Whatever I have read so far was without proof.

cow urine cola

The poos of all animals are stinking and found with worms and germs. But the poo of an elephant or a cow never stink. Hindus have been using it for thousands of years without any bad side effect. African people use it. They smoke cigarettes and baboons eat them. Recently they have invented elephant poo coffee beans. Please read my earlier article on most expensive coffee.

Using porcupine thorn on the head of a pregnant lady will give her a healthy male child is the belief of Hindus. But we have to study it in the labs.

Village folk in Tamil Nadu strongly believe that the parts of tiger such as tooth, nail will instil courage, fearlessness, fortitude and steadiness. Tamil epic Silappadikaram and Tamil Saivite Purana Periapuranam describe the custom of wearing tiger tooth. But I don’t know any scientific proof for the medicinal qualities of elephant’s hair from the tail. Kerala people strongly believe that it wards off evil.

elephant-poo-11
For certain reason Hindu Law giver Manu also gave over importance for a certain type of deer. He says that where the black antelope ranges by nature, that should be known as the country fit for sacrifices ( Yagas and Yajnas); and beyond it is the country of Mlecchas (Manu 2-23).

Mlecha is used in Tamil literature for foreigners like Arabs, Romans and Yavanas. Brahmins wear the skin of that particular (Krishnasaram) deer in their sacred thread and it is called Krishnajinam.
These beliefs may look strange for westerners. But for people living in natural surroundings, many of these are not new. As long as you respect nature, nature cures your maladies! Give and take is Nature’s policy!
cow urinating
Cow’s urine is used by all Hindus.The most purifying thing like Ganges water.

contact swami_48@yahoo.com

மாமன்னன் அலெக்ஸாண்டரின் குதிரையும் நாயும்!

Stamp_Greece_1968

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1436; தேதி 25 நவம்பர், 2014.

மாமன்னன் அலெக்ஸாண்டர் எவ்வளவு புகழ்பெற்றவரோ அவ்வளவு புகழ்பெற்றவை அவருடைய நாயும் குதிரையும்!

அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் பூசெபலஸ்
அலெக்ஸாண்டரின் நாயின் பெயர் பெரிடாஸ்.

கிரேக்க நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்த அலெக்ஸாண்டரை அந்த பூசெபலஸ்தான் சுமந்து வந்தது. ஆனால் கி.மு.326 ஆம் ஆண்டில் நடந்த ஹைடஸ்பஸ் யுத்தத்துக்குப் பின் போரில் பெற்ற விழுப் புண்களால் அது இறந்துவிட்டது. அப்போது அந்தக் குதிரைக்கு வயது 20. அதன் வாழ்நாள் முழுதும் தனக்கு உழைத்த காரணத்தால் அதற்கு நன்றி செலுத்தும் முகத்தான் மாமன்னன் அலெக்ஸாண்டர் அந்தக் குதிரைக்கு ஒரு சமாதி கட்டி அந்த நகருக்கு அலெக்ஸாண்டரியா பூசெபலஸ் என்று நாமகரணம் செய்தார்.

இப்பொழுது அந்த நகர் எது என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் முட்டி மோதிக் கொள்கின்றனர். இரண்டு மூன்று நகரங்கள் இந்தக் குதிரையின் புகழ் பாட போட்டியிடுகின்றன. ஆயினும் ஜீலம் நதிக்கரையில் பாகிஸ்தானில் அந்த நகரம் இருக்கிறது எனப்தில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. அலெக்ஸாண்டர் தான் வென்ற இடமெல்லாம் தனது பெயரில் அலெக்ஸாண்ட்ரியா என்று 20 நகரங்களுக்கு மேல் ஸ்தாபித்தார். பூசெபலஸ் என்றால் ‘’காளைத் தலையன்’’ என்று பெயர். அதாவது காளை போன்று வீரம் உடைத்து என்பது அதன் பொருள்.

Seleucos_I_Bucephalos_coin

அவருடைய நாய் பெரிடாஸ் பற்றியும் இந்தக் குதிரை பூசெபலஸ் பற்றியும் பிளினி, ப்ளூடார்ச், பெரிப்ளூஸ் என்று பல பழங்கால எழுத்தாளர்கள் சுவை மிகு கதைகளை எழுதி வைத்தனர். பெரிடாஸ் என்ற நாய்க்கும் அவர் ஒரு நகரம் உருவாக்கினார். அந்த நாய் ஒரு சிங்கத்தையும் யானையையும் கொன்றதால் வீரமிகு நாயை அவர் தத்து எடுத்தார் என்றும் அது ஒரு இந்திய அரசனால் கொடுக்கப்பட்டது என்றும் அவர்கள் எழுதி வைத்தனர். நிற்க.

அது சரி , உங்கள் ‘’இந்தியவியல்– இந்து கலாசார’’ பிளாக்கில் பூசெபலஸ், பெரிடாஸ் புகழை எதற்கு பாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்களில் சிலர் எண்ணலாம். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இந்த நாய், குதிரை, யானை இவைகளுக்கு எல்லாம் பெயர் வைத்து அவைகளை அன்பாகப் போற்றி வளர்க்கும் கலையையும் பண்பையும் உலகிற்கு கற்பித்தவர்களே நாம்தாம்!!

alexander dog

ரிக் வேதத்தில் நாய் வளர்ப்பு
இதற்கு என்ன ஆதாரம்?

1. இந்த நாய் வளர்க்கும் வழக்கமும், அதற்குப் பெயர் வைக்கும் வழக்கமும் ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. இப்பொழுது அமெரிக்கர்கள் ரிக் வேதத்துக்குக் கொடுக்கும் கி.மு.1700 என்று கொண்டாலும் இற்றைக்கு 3700 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திரன் வளர்த்த சரமா என்ற பெண் நாய் மற்றும் அதன் இரண்டு குட்டிகள் சரமேயஸ் பற்றி ரிக் வேதப்பாடல்கள் மூலம் அறிகிறோம் (R. V. 7-55-2 and 10-108). இதை வழக்கம் போல கிரேக்கர்கள் ‘’திருடி’’ பெயரை ஹரமஸ் என்று மாற்றி கதை எழுதிவிட்டனர். அவர்கள் மூலம் வேறு பல கலாசாரங்களிலும் இது நுழைந்துவிட்டது. கிரேக்கர்களுக்கு ‘’எஸ்’’ வராது என்பதால் சிந்து என்பதை ஹிந்து என்பது போல சரமாவும் ஹரமஸ்—ஹெர்மஸ் ஆகிவிட்டது. ஆக முதலில் நாய் வளர்த்தவர்களும் நாமே. அதற்குப் பெயர் சூட்டு விழா நடத்தியதும் நாமே!

2.தர்மபுத்திரன் தனது ஆட்சியை முடித்துக் கொண்டு, சகோதரர்களுடன் வடதிசைப் பயணத்தை மேற்கொண்டான். அதாவது சாகும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழ் மன்னர்களும் இதைச் செய்ததை கோப்பெருஞ்சோழன் — -பிசிராந்தையார் – பொத்தியார் கதைகளில் விரிவாகச் சொல்லிவிட்டேன். ஒவ்வொரு சகோதரராக ‘’தொப்பு தொப்பு’’ என்று கீழே விழுந்து இறந்தனர். ஆனால் தர்மபுத்திரன் மட்டும் வடதிசையை நோக்கி தொடர்ந்து நடந்தார். அவருடன் ஒரு நாய் மட்டும் தொடர்ந்து சென்றது. சொர்க்கத்தின் வாசலுக்குச் சென்ற போது, ‘’வெரி ஸாரி, சொர்க்கத்தில் நாய்களுக்கு அனுமதி கிடையாது. அதை வெளியில் அம்போ என்று விட்டுவிட்டு உள்ளே வாருங்கள்’’ — என்றனர் வாயிற் காப்போர். தருமனோ அதற்கு மறுத்து விட்டான். பின்னர் யம தர்மராஜனே இவ்வாறு தர்மன் இறுதிவரை தர்மத்துடன் இருக்கிறானா என்பதைக் காணவந்ததாக மஹாபாரதம் கதையை முடிக்கிறது.
ரிக் வேத நாயும், மஹாபாரத நாயும் யமனுடன் தொடர்புடைய கதைகள்.

macedonia

தமிழ் கல்வெட்டில் நாய்
3.மஹேந்திர பல்லவன் கால எடுத்தனூர் நடுகல்லில் கோவிவன் என்ற நாயின் பெயர் வருகிறது. தமிழர்களும் 1400 ஆண்டுகளுக்கு முன் நாய்களை வளர்த்து அவைகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதும் அதை யுத்த களம் வரை அழைத்துச் சென்றதும் இதனால் தெரிகிறது. யுத்த வீரனுடன் அந்த நாயும் இறக்கவே அது கல்வெட்டில் அழியா இடம் பெற்று அமரத்துவம் பெற்று விட்டது. ஆக பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் இருந்தமைக்கு நாயும் சான்று பகரும்!

4.பசுமாடுகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதால் காமதேனு சுரபி போன்ற பெயர்களை நாம் அறிகிறோம். பாற்கடலைக் கடைந்த போது வெளியே வந்த குதிரை உச்சைஸ்ரஸ், யானை ஐராவதம் ஆகியவற்றின் கதைகளை நாம் அறிவோம். பகவத்கீதையில் உச்சைஸ்ரவஸ் பெயர் வருவதால் அதுவும் அழியா இடம் பெற்றுவிட்டது.

Greece 1956 1000 Greek Paper Money Banknote

தமிழ் குதிரை காரி!
5. கடை எழு வள்ளல்களில் ஒருவர் காரி. அவர் வளர்த்த குதிரை பெயரும் காரி. அலெக்சாண்டர் மட்டும்தான் குதிரை வளர்த்தாரா? நாமும் வளர்த்தோம்; அதற்கு நாமகரணமும் செய்தோம்!

6. இது எல்லாவற்றையும் விட யானைதான் அதிகமான பெயர்களுடன் நம் இலக்கியங்களில் அடிபடுகிறது:
முருகனின் யானையின் பெயர் பிணிமுகம்
இந்திரன் யானையின் பெயர் ஐராவதம்
மஹாபாரத கால யானையின் பெயர் அஸ்வத்தாமா. அஸ்வததாமா அதோஹத: — என்று தர்மன் (பொய்) சொன்னது போரின் போக்கையே மாற்றிவிட்டது.
கிருஷ்ணன் அடக்கிய யானையின் பெயர் குவலயாபீடம்.
புத்தர் அடக்கிய யானையின் பெயர் தனபால.
உதயணன் அடக்கிய யானையின் பெயர் நளகிரி
சம்ஸ்கிருத நாடகத்தில் வரும் யானையின் பெயர் சந்திரலேகா.
நமது காலத்தில் உயிர்நீத்த குருவாயூர் யானையின் பெயர் கேசவன்.
அஷ்ட திக் கஜங்கள் என்று எண் திசைகளுக்குக் காவலாக இருக்கும் யானைகளுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு.

ரிக்வேத காலம் முதல் இன்று வரை வழங்கும் பெயர் சூட்டும் இவ்வழக்கம் நம்மால் உலகம் முழுதும் பரப்பபட்டது என்பதில் இனியும் ஐயம் உண்டோ?

கொடிகள், சின்னங்கள், தேசிய கீதங்கள் என்று எல்லவாற்றையும் சொல்லிக் கொடுத்து மனித குலத்தை நாகரீகப்படுத்தியதற்கு ரிக் வேதம் முதல் இன்று வரை தொடர்ச்சியாக சான்றுகள் கிடைக்கையில் இதை மறுப்பதற்கு எவருக்குத் துணிவு வரும்?

பாரத சமுதாயம் வாழ்கவே! வாழ்க, வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! – ஜய ஜய ஜய…………. (பாரதியார்)

–சுபம்–