ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே !

Lava-Kusa-The-Warrior-Twins-2010

Post No 1662; Dated 20th February 2015

by S Nagarajan

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 5

by ச.நாகராஜன்

ஒன்பது பாடல்கள்; நான்கு பாடகர்கள்!

 

சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் ராமனுக்குப் பாடலே இல்லை; ஆனால் ராவணனுக்கோ மூன்று பாடல்கள்! மொத்தம் 9 பாடல்கள் இடம் பெற்றன. டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன் ஆகியோர் தங்கள் குரல் வளத்தால் பாடல்களுக்கு மெருகேற்றினர்.

லவகுசா

அடுத்து 1963ஆம் ஆண்டு லவகுசா திரைப்படம் தெலுங்கிலும் தமிழிலுமாக இரு மொழிகளில் வந்து ஆந்திராவையும் தமிழ்நாட்டையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வழக்கம் போல என்.டி.ராமாராவ் தான் ராமர்! சீதையாக அஞ்சலி தேவி நடித்துப் புகழ் பெற்றார். இசை கே.வி.மஹாதேவன். பாடல்கள் தமிழ் படத்திற்கு ராமன் புகழ் ஏ.மருதகாசி! படத்தை இயக்கியவர்: புல்லையா.

இதில் தெலுங்குப் படத்தில் 37 பாடல்கள் பாடப்பட்டு அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தின. தமிழிலோ ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே என்ற பாடல் சிரஞ்சீவி வரம் பெற்று இன்றும் கூட எல்லா இல்லங்களிலும் மகிழ்ச்சியுடன் கேட்கப்படுகிறது.

மருதகாசியின் அற்புதமான சொற்கள் உள்ள பாடலுக்கு ஜீவனுள்ள இசையை கே.வி.மஹாதேவன் தர அதை அப்படியே உயிரோடு குரலில் காட்டி விட்டனர் பி.சுசீலாவும். பி.லீலாவும்!

முழுப்பாடலும் திரைப்படத்தில் பாடப்பட்டபடியே இங்கு தரப்படுகிறது :-


best lavakusa

ஜகம் புகழும் புண்ய கதை

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே

இந்தக் கதை கேட்கும் எல்லோருமே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே

இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்

அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை

கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்

கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்

 

ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

 

best lava 2

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை

ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே

காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே

கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே

தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே

தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே

பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்

பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்

சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்

சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்

காதலினால் இருவர் கண்களும் கலந்தன

காதலினால் இருவர் கண்களும் கலந்தன

கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்

ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்

அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்

அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்

அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

 

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

 

lava-kusa-05

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு

மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே

மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே

மகர தோரணத்தால் அலங்கரித்தாரே

மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி

மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்

வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும்

மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்

மரண மூர்ச்சை அடைந்த பின்னர்

ராமனையும் அழைக்கச் செய்தாள்

தந்தையுனை வனம் போகச் சொல்லி

தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார்என்றாள்
 சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்

சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்

விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த

தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே

மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே

மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

ramayana in one picture

(ஒரே படத்தில் ராமாயணம்!! ஒரே பாட்டில் ராமாயணம்!!)

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்

அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே

அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே

ஐயனும் கானகத்தை நாடிச் சென்றானே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்

அன்பால் ராமபிரான் நண்பனாகினான்

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்

அன்பால் ராமபிரான் நண்பனாகினான்

பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்

பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்

அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை

ராமபிரான் மீது மையல் கொண்டாள்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை

ராமபிரான் மீது மையல் கொண்டாள்

கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை

மானபங்கம் செய்து விரட்டி விட்டான்

தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்

ஜானகி தேவியை சிறையெடுத்தான்

தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்

ஜானகி தேவியை சிறையெடுத்தான்

நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி

தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்

ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்

வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்

ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்

அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ

setu bridge

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்

கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்

கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்

வானர சேனையுடன் சென்றான்

விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்

வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்

கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்

அரசுரிமை கொண்டான்

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

telegu lava

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகுகுலான்மயரக்ஷமீயம்

ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்ச்ம்

ராமம் நிசாசர விநாசகரம் நமாமி

இப்படி அழகுற சம்ஸ்கிருத ஸ்லோகத்துடன் பாடல் முடிகிறது.

ஒரு கோடி வசூல்; விருதுகள் பல

 

26 தியேட்டர்களில் இது வெளியிடப்பட்டு 16 தியேட்டர்களில் 175 நாட்களும் மற்ற தியேட்டர்களில் 100 நாளும் ஓடி திரைப்படச் சரித்திரத்தில் ஒரு சாதனையை ஏற்படுத்தியது. அந்தக் காலத்தில் டிக்கட்டின் விலை சராசரியாக இருபத்தி ஐந்து பைசா என்று வைத்துக் கொண்டால் படம் வசூலித்த மொத்த தொகையான ஒரு கோடி ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை என்பதையும் எத்தனை பேர்கள் படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர் என்பதையும் நினைத்து பிரமிக்கத் தான் முடியும்.

lavakusa-telugu

ஏராளமான விருதுகளை படம் அள்ளிச் சென்றது.

ராம, சீதாவிற்கும், லவகுசர்களுக்கும் மானஸீக நமஸ்காரம் செய்து திரைப்படத்தில் ராமருடனான நமது பயணத்தைத் தொடர்வோம்!

ramapriya ramanuja dasi

***********

Beware of Wagtail Birds: Prediction by Varahamihira!

Whit browed WagtailBP1

Written by London swaminathan

Article No.1661; Dated 19th February 2015.

Varahamihira, the author of Sanskrit encyclopaedia Brhat Samhita deals with lot of scientific things; but yet he has devoted several chapters to omens and beasts, omens and birds. It is nothing but the reflection of his age. Tamil literature and the modern Panchang (ephemeris) also contain bird and lizard predictions. Several communities including the Etruscans believed in such things. It is easy to spot a street astrologer with a caged parrot in Indian streets.

Varahamihira did not ‘write’ this. He just compiled people’s beliefs and the books available at his time, i.e 1500 years ago.

White Wagtail 2-757101.jpgassam

He begins the chapter by saying

“I shall now expound the effects, enunciated by ancient sages, of the first sighting of the bird called wagtail.

A variety of wagtail named Bhadra, which has a stout body and a black raised neck, is auspicious.

One which is black from the face to the neck is called Sampurna and fulfils one’s ambition.

The one with the dark spots on the neck and white cheeks is named Rikta (empty) and causes disappointment

The one called Gopila which is yellow in colour produces troubles when sighted.

If a wagtail is sighted in the following places it will bring prosperity: Flowering trees, fruit trees, holy lakes and rivers, on the back of elephants, horses, cows and serpents; on temples, gardens, mansions, cow pens, places of sacrifices, assembly of virtuous men.

yellow wagtail

To get your dream girl

When the wagtail is seen perched on

Silt- one will enjoy sweet food

Cow dung – one will enjoy milk and milk products

Green grass – clothes

On a cart- devastation to country

Roof of the house – loss of wealth

On a piece of hide – imprisonment

On the backs of goats and sheep – immediate union with one’s beloved

perched on a brach

Negative effect

If the wagtail is seen sitting on a buffalo, camel, donkey, bones, burial ground, clod of earth, turret, heap of ashes, compound wall – the result would be disastrous.

If it is seen flapping its wings – inauspicious

Seen drinking water – auspicious

Sighting in the morning – beneficial

Sighting in the evening – harmful

drinking water

Do you want to find Treasure?

There will be a treasure underneath the place where the wagtail copulates; mica, where it vomits and charcoal, where it voids its excrements.

Every rule has an exception; for every sin there is some atonement. Even if a king sees a wagtail in an inauspicious place, he can avoid the negative consequences, by worshiping  Brahmins, Gurus, and pious men and avoid non vegetarian meal for a week.

on buffalo

Al like any bird prediction, Varahamihira also gives predictions for the people who wanted to leave early.

Source book: Brhat Samhita translated by Prof. M.Ramakrishna Bhat.

பாரதியை வியக்கச் செய்த சிவபக்தன் – உலக மஹா அறிஞன் பாணினி!

maheswara-sutrani

Research Paper written by London swaminathan

Research Article No.1660; Dated 19th February 2015.

“வாக்யகாரம் வரருசிம் பாஷ்யகாரம் பதஞ்சலீம்

பாணினீம் சூத்ரகாரம் ச ப்ரணதோஸ்மி முனித்ரயம்”

வரருசி, பதஞ்சலி, பாணினி ஆகிய மூன்று முனிவர்களையும் வணங்குகிறேன் என்று சொல்லி எல்லோரும் சம்ஸ்கிருதம் கற்பர்.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உலக மகா இலக்கண வித்தகன் பாணினியை எண்ணி எண்ணி இன்று வரை உலகம் வியந்து கொண்டே இருக்கிறது. உலக இலக்கண தந்தை என்று பலரும் போற்றும் பாணினி சுமார் 4000 சூத்திரங்களுடன் செய்த அஷ்டாத்யாயி (அஷ்ட அத்தியாயங்கள் = 8 பிரிவுகள்) என்ற நூலை விட விஞ்ஞான முறைப்படி இன்று வரை நூல் எழுதியவர் எவருமிலர்.

“சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்ற சொற்றொடருக்கு எல்லாம் இலக்கணமாகத் திகழ்ந்தவன் வான் புகழ் வள்ளுவன். அந்த வள்ளுவனையும் விழுங்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்கு ரத்தினச் சுருக்கமாக எழுதியவன் பாணினி. இதை உலகிலுள்ள யாருமே நம்பமுடியாது என்னும் அளவுக்கு எழுதினார் என்று பாணினியின் புகழ் பாடுகிறார் சொற்தேரின் சாரதியாம் சுப்பிரமணிய பாரதி!

“நம்பருந்திறலோடொரு பாணினி ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்……………………..”

-என்று பாரதி தனது சுயசரிதை என்னும் கவிதையில் பாராட்டுகிறார்.

இந்தியவியல் நிபுணர் கோல்ட்ஸ்டக்கர், பண்டார்கர், டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ, பாடக் ஆகியோர் பாணினி வாழ்ந்த காலம் கி.மு ஏழாம் நூற்றாண்டு என்றும், சரித்திரப் பேரறிஞர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு முன் என்றும் உறுதிபட நிறுவியுள்ளனர்.

ஆரியதரங்கிணி ஆசிரியர் கள்யாணராமன் சொல்கிறார்:

“ஒவ்வொரு மொழியும் வளர சில காலம் பிடிக்கும். இலக்கியம் தோன்றிய பின்னர் இலக்கணம் தோன்றும் — அதற்கு உரை என்பது இலக்கண் நூலுக்குச் பல காலம் தள்ளியே தோன்றும். வரருசி ,பதஞ்சலி ஆகியோரின் காலத்தைப் பார்க்கையில் பாணினி ஏழாம் நூற்றாண்டு என்பது சரியே!”

என் கருத்து: கி.மு.முதல் நூற்றாண்டில் தோன்றியதாகப் பலராலும் எண்ணப்படும் தொல்காப்பியத்துக்கு 1200 ஆண்டுகளுக்குப் பின்னரே உரை எழுந்தது. அதைப் பார்க்கையில் பாணினி இன்னும் முன்னதாக அதாவது கி.மு.800 முதல் 1000 வரையான காலத்தில் இருந்திருக்க வேண்டும்.

nataraja (1)

சிவபெருமான் தந்த இலக்கணம்

வர்ஷ என்ற ஒரு ஆசிரியரிடம் பாணினி கல்வி கற்றார். அவருடைய ஊர் சாலதூர்ய. அது இப்பொழுது பாகிஸ்தானில் இருக்கிறது. அவருக்கு படிப்பு வரவில்லை. குருவின் மனைவி சொன்னார், “பிள்ளாய்! வெளி உலகில் சென்று கொஞ்சம் பொது அறிவு பெற்று வாராய்!” – என்று. பாணினி புறப்பட்டார் இமயமலைக்கு. கடும் தவம் இயற்றினார். சிவனுக்கு மகிழ்ச்சி! உன் தவம் கண்டு மகிழ்ந்தோம், மகனே, என்ன வரம் வேண்டும், என்று கேட்டார். வகுப்பில் மக்குப் பிள்ளை என்று என்னை ஏசி விட்டார்கள். பொன் வேண்டாம், பொருள் வேண்டாம், பெண் வேண்டாம், மண்ணாளும் அரச பதவியும் வேண்டாம். யாம் வேண்டுவது மொழி அறிவு மட்டுமே என்றார்.

சிவனுக்கு ஒரே குஷி! அட இப்படி ஒரு ஒரு பிள்ளையா? என்று வியந்து எடுத்தார் உடுக்கையை! ஆடினார், ஆடினார். உடுக்கையை அடித்த அடியில் இமய மலை குகைகள் எல்லாம் எதிரொலித்தன. பாணினிக்கோ 14 ஒலிகள் மட்டுமே காதில் விழுந்தன. அதிலிருந்து பிறந்தது உலக மகா சம்ஸ்கிருத இலக்கணம்.

அந்த 14 ஒலிகளை வைத்துக் கொண்டே சம்ஸ்கிருத இலக்கணத்தை வரைந்தார். அத்தனையும் அறிவியல் முறைப்படி அமைத்தார்.

14 மஹேஸ்வர சூத்திரங்கள்

அ இ உண்

ருலுக்

ஏ ஓங்

ஐ ஔச்

ஹயவரட்

லண்

ஞம ஙணநம்

ஜ்ஜபஞ்

கடத ஷ்

ஜபகடதச்

க ப ச ட த

சடதவ்

கபய்

சஷஸர்

ஹல்

–இதி மாஹேச்வராணி சூத்ராணி

இதில் சம்ஸ்கிருத எழுத்துக்கள் எல்லாம் இருக்கின்றன. இதைப் பயன்படுத்தி எப்படி சம்ஸ்கிருத சந்தி விதிகள் முதலியவற்றைக் கற்கலாம் என்பதை இன்னும் ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இதை வைத்து 281 ‘காம்பினேஷன்’ போடலாம்!

பாணினிக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருத மொழி இருந்தது. அவரே தனக்கு முந்தைய இலக்கண கர்த்தாக்களுக்கு கும்பிடும் போடுகிறார். அவர்கள் பெயர்களை மட்டுமே நாம் அறிவோம். நூல்கள் கிடைத்தில.

இன்றும் பிராமணர்கள் ஆண்டுதோறும் பூணூல் மாற்றும் விழாவில் (உபாகர்மா), வேதத்தை மீண்டும் துவக்கும் நாளில் இந்த 14 சூத்திரங்களைச் சொல்லிவிட்டுத்தான் “அக்னி மீளே புரோகிதம்: என்று வேத பாடம் துவங்குவர்.

பாணினிக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மஹா பாஷ்யம் என்ற பெயரில் மாபெரும் உரை எழுதிய பதஞ்சலி,  — பகவான் என்று போற்றுகிறார் பாணினியை.

இலக்கியம் எழுதிய தாக்ஷீ புத்திரனை உலகமே மகரிஷி என்று போற்றியது. பாணினியின் தாய் பெயர் தாக்ஷீ என்று பதஞ்சலி சொல்லுவார். கையில் தர்ப்பையை வைத்துக் கொண்டு கிழக்கு முகம் நோக்கி அமர்ந்து வடமொழி இலக்கணத்தை எழுதினார்.

ஒரு புள்ளி, கால் புள்ளி, கமா இடத்தைக் கூட வீண் அடிக்காமல் ரத்தினச் சுருக்கமாக, முத்து முத்தாக சூத்திரங்களை எழுதினார். காலப்போக்கில் மக்களுக்கு விளங்காமல் போய் விடுமே என்று வரருசியும், பதஞ்சலியும் உரை எழுதினர்.

இவருடைய இலக்கணம், வேத கால சம்ஸ்கிருதத்தை ஒட்டி உள்ளது என்று ஆன்றோரும் சான்றோரும் பகர்வர். புத்தர் மஹாவீரர் ஆகியோர் காலத்துக்கு முன் வாழ்ந்ததால் அவர்தம் பெயர்கள் பாணிணீயத்தில் இல்லை. 500 ஊர்கள் பெயர்களைச் சொல்லுவதால் இவருடைய பூகோள அறிவும் பாரத்வாஜரின் 51ஆவது தலை முறை போன்ற சொற்றொடர்களை எடுத்துக் காட்டாக விளம்புவதால் அவர்க்கு முன் பாரத நாடு பல்லாயிரம் ஆண்டுகள் இருந்ததும் வெள்ளிடை மலை என விளங்கும்.

nataraja

ஆயிரம் பொற்காசு

காஷ்மீரில் ஒரு மன்னன், எல்லோரும் பாணினி புத்தகத்தைப் பயில வேண்டும் என்று கட்டளையிட்டு அதில் தேறியவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்தான்.

சீன யாத்ரீகர் யுவாங் சுவாங், 1400 ஆண்டுகளுக்கு முன் பாணினியின் சிலையைக் கண்டதாக எழுதி வைத்துள்ளார். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு எழுத்தாளனுக்கு சிலை. மன்னனுக்கு அல்ல, நடிகனுக்கு அல்ல! இலக்கண வித்தகனுக்கு!!! எண்ணிஎண்ணி இறும்பூது எய்யலாம்!!

உலகில் பெரும்பகுதியினர் கோவண ஆண்டிகளாகவும், சுமேரியா, எகிப்து முதலிய நாடுகளில் உப்பு-புளி-கணக்கு, இறந்தோர் புத்தகம், ஜில்காமேஷ் என்று அரிச்சுவடி விஷயங்களை எழுதிக் கொண்டிருக்கையில் பாரத மக்கள் உபநிஷத தத்துவங்களையும், வியத்தகு இலக்கணம் அகராதிகள்,மொழி இயல், சொற் பிறப்பியல் முதலியன கண்டதும் ஒப்பிடற்பாலது

Hindus’ Respect for Trees and Forests

ooty_0

Forests in Tamil Nadu

Research Paper written by London swaminathan

Research Article No.1659; Dated 18th February 2015.

Hindus do Sankalpam (Intention or Purpose of a Ritual) before every ceremony. If it is a big ceremony they do Maha Sankalpam (extensive ) in which they recite the names of Seven Holy Forests, Seven Holy Cities and All the major Holy Rivers in India and all the Major Temples in the country. They give a lot of respect to the trees and forests.

In the Vedas, Lord Shiva is called the Lord of the Forests (Vanaspathi), Lord of the Trees (Vrkshanaam pathi) and Lord of the Animals (Pasupathi) in several hymns. The most important hymn in the Yajur Veda is Rudram and Chamakam which is recited in all the Hindu temples every day when they do Abhishek to Lord Shiva. The Rudram and Chamakam Hymn (Mantra) refers to Shiva as God of Trees and God of the Forests in five or six places. Shiva is described as a big forest and his hair as green! That is, the trees and leaves are his hair.

deer-in-india-forest

Indian Deer in the forests

Certain trees belonging to the Ficus group (Family Moraceae) are considered the holiest of the holy trees. They are Banyan Tree, Peepal Tree and Fig Tree (Nyagrodha, Asvatta and Udumbara). Even Vishnu is called by these names in the most famous Visnu Stotra : Vishnu Sahasranama (1000 names of Vishnu).

Yajur Veda References in Rudram and Chamakam:

1.Vrkshebhyo Harikesebhya: Pasunam Pathaye

2.Namo Vrkshebhyo Harikesebhyo

3.Nama Parnyaya Parnasathyaya

4.Namo Vanyaya cha Kakshyaya cha

5.Vrkshanam Pathaye Nama:

6.Aushadeenam Pathaye Nama:

7.Vananam Pathaye Nama:

In addition to these mantras, there are many more places where he is referred to as leaves, herbs, shrubs and trees.

Hindus worship Tulsi (holy basil), Vilva (Bilva), Peepal, Banyan and Vanni (Sami) trees almost every day in the temples.

forest-elephants

Varahamihira in Brhat Samhita:

Varahamihira in his Sanskrit Encyclopaedia – Brhat Samhita deals with the Forests in Chapter 59 — Entering Forests. He recommends certain trees for making images of gods.

There are some interesting couplets / slokas:

1.One should go to the desired/selected tree and offer worship to it with food and flowers.

2.The Deodar/ Deva Taru/Divine Tree (Cedrus deodara), Sami (Prosopis spicigera), Sandalwood (santalum album)  and Madhuca (cynometra ramilflora) are good for images installed by Brahmanas;

Arista (Xantium strumarium), Asvatta (Ficus religiosa), Khadira (Acacia catechu) and Bilva (Aegle marmelos) bestow prosperity to Kshatrias;

Jivaka, Khadira, Sindhuka and Syandana are auspicious for Vaisyas; and

Tindulka, Kesara, Sarja, Arjuna (Marutha maram in Tamil), Mango and Sal are good for Sudras.

This verse shows that all the four castes were installing images of God in Varahamihira’s time and before that as well.

Gaur_UllasKaran

Indian Bison (Gaur) in the jungle

In another sloka he says, “ after worshipping the tree at night with milk, porridge, sweet, rice, curds, semi ground sesame seeds, eatables of various kinds, wine, flowers, incenses and perfumes, Gods, Manes, Demons, Goblins, Serpents, Asuras, Siva’s hosts/ Siva Ganas, Ganesa and others should be worshipped. There after touching the tree, one should recite the following hymn:

 “Oh, Tree! You have been selected for the worship (through an image) of the particular deity. Salutation to you! This worship is offered by me in accordance with the scriptural rules may kindly accepted by you. May all those beings that dwell in the tree accept the offerings made according to rules, and then depart to another tree for residing. May they pardon us now! We bow to them!

In the morning the tree should be watered, and then cut on the north eastern side with an axe whose blade has been smeared with honey and ghee. The remaining parts should be cut in a clock wise manner.

 

Achartha samukasya tvam devasya parikalpita:

Namste vrksha pujeyam vidhivat sampragruhyatam

 

Yaaniha bhutaani vasanti taani balim grhitvaa vidhivat prayuktam

Anyatra vaasam parikalpayantu kshamantu taanyadya namostu tebhya:

 forest4

These slokas show their attitude towards nature. Great poet Kalidasa projects Shakuntala as a Friend of the Birds and Deer, Flowers and Trees. The very name Shakuntala means Bird Girl!

Hindus, by paying respect to nature, always remembered its value. They never destroyed their environment. Orthodox Hindus even today begs for pardon, before putting their feet on the ground when they wake up in the morning.

They recite the sloka “Samudra vasane devi ……… Padas sparsam kshmasvame.

Wild_Elephants_at_Jaldapara

Let us learn to pay respect to nature. Let us preserve ancient Hindu Wisdom.

இன்று போய் நாளை வாராய்!

01cp_sampoorna_ram_1129781f

Research Paper written by ச.நாகராஜன்

Research Article No.1658; Dated 18th February 2015.

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 4

ச.நாகராஜன்

ராமனை தோள் வலி கூறுவதன் பயன்!

காலம் காலமாக பாரத மக்களிடம் இருந்து வரும் நம்பிக்கையை அப்படியே சுருக்கமாக மஹாகவி கம்பன் இப்படிக் கூறுகிறான்:

“நாடிய பொருள் கை கூடும்ஞானமும் புகழும் உண்டாம்

 

வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்

 

நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய

 

ராமன் தோள் வலி கூறுவோர்க்கே!”

ராமன் தோள்வலியைக் கூறி மக்களிடம் உத்வேகம் ஊட்ட ஜனரஞ்சக ஊடகமான

 

திரைப்படம் முன் வந்தது.

பக்திப் படங்களில் ஒரு திருப்பம்!   

 

1958-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று தமிழகத்தில் ஏராளமான தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டன. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் அரங்கங்களில் வெளியிடப்பட மனத்தைக் கொள்ளை கொண்ட இதிஹாஸத்தின் திரை வடிவைப் பார்க்க ரசிகர்கள் அலை மோதினர்.

எம்.ஏ. வேணு தயாரிக்க கே.சோமு இயக்க திரைப்படக் கதை, வசனத்தை ஏ.பி.நாகராஜன் உருவாக்க ராமராக என்.டி.ராமாராவும், பரதனாக நடிகர்திலகம் சிவாஜிகணேசனும், சீதையாக பத்மினியும், ராவணனாக டி.கே.பகவதியும் மண்டோதரியாக சந்தியாவும் தோன்ற படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

திரைப்படத்தை எள்ளி நகையாடியவர்கள் கூட அது அரும் பங்கை ஆற்றவல்லது என்று ஒத்துக் கொள்ளுமளவு படம் அனைவரின் மனதிலும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.


ravana

மஹாதேவனின் இசை; மருதகாசியின் பாடல்கள்!

ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்த நடிப்பால் படம் களை கட்டிய போது இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. இசை அமைத்தவர் கே.வி.மஹாதேவன்.

பாடலை எழுதியவரோ கவிஞர் ஏ.மருதகாசி. ராமன் பாடல்களுக்கும் இவருக்கும் நிறையப் பொருத்தம் இருப்பதாகத் திரையுலகே முத்திரை குத்தி விட்ட ஒரு பெரும் கவிஞர் மருதகாசி.

படத்தின் வில்லனாக இருக்கும் ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியே அமர்க்களமாகப் படமாக்கப்பட்டிருந்தது. ராவணனுடைய சபையில் வீணை இசைத்துப் பாடி பரிசு பெற விழையும் வெளிநாட்டுப் பாடகன் ஒருவனை ராவணன் வரவேற்றுப் பாட வைக்கும் காட்சி அது.

வீணைக் கொடியுடைய வேந்தனே

வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே

 

உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே

ஆனந்தகான அமுத மழையே

 

பொழிந்து மனம் தனை உருக வழி செய்த

வீணைக் கொடியுடைய வேந்தனே (பாடல் – ஏ.மருதகாசி)

மோஹன ராகத்தில் அற்புதமான பாடல், திருச்சி லோகநாதனின் குரலில், மலர இதைத் தொடர்ந்து

ராவணன் சபையினரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து ஒவ்வொரு ராகமாக விவரிக்கும் காட்சி இடம் பெறுகிறது.

காலையில் பாடும் ராகம் பூபாளம்

உச்சியில் பாடும் ராகம் சாரங்கா

மாலையில் பாடும் ராகம் வசந்தா

இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி

மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி

யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை

வெண்பா பாட சங்கராபரணம்

அகவல் இசைக்க தோடி

 

தாழிசைக்கு கல்யாணி

 

என ராவணன் முடிக்க கயிலை நாதனைக் கானத்தால் கவர்ந்த ராகம் எது என மண்டோதரி (சந்தியா) வினவ காம்போதியை வீணையில் ராவணன் இசைக்கிறான்.

 

அற்புதமாக இப்படி ராவணனின் ஏற்றத்தைச் சித்தரிக்கக் காரணம் அப்படிப்பட்ட ஏற்றமுடையவன் தவறாக, அயலான் மனைவியை அபகரித்த பெரும் பாவத்தைச் செய்து அழிந்தான் என்பதை வலியுறுத்தவே தான்!


Sampoorna-Ramayanam

கம்பனின் ராவணன்

 

கம்பன் ராவணனை மிக அழகாகச் சித்தரிப்பான்.அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதைத் தன் காவியத்தின் லட்சிய வாசகமாக வைத்து எப்படிப்பட்ட பெரும் ராவணேஸ்வரன் தன் செய்கையால் இப்படி வீழ்ந்து பட்டான் என்பதைத் திறம்பட எடுத்துரைப்பான்.

 

தாரணி மௌலி பத்து.

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நா

சங்கரன் கொடுத்த வாள்.

முக்கோடி வாழ் நாளும் முயன்றுடைய பெரும் தவமும் கொண்டவன்! – இது தான் ராவணன்.

ஆனால் தேவியைக் அபகரித்து வந்ததைப் பாவம் என்று சொல்லி அவளை விடுவிக்க அனைவரும் ஆலோசனை கூறுகையில்,

 

“ஆவியை விடுவேன் அல்லால் தேவியை விடுவேன் அல்லேன்” என்று அகங்காரத்துடன் மொழிந்தவன் ராவணன்.’என்னையே நோக்கி நான் இந்த நெடும் பகையைத் தேடிக் கொண்டேன்’ என்கிறான்! தன் வீரத்தின் மீது அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை!


rama fb

போர், பெரும் போர்!

 

போர் எனில் இது போர். புண்ணியத் திருப்போர். அறத்திற்கும் மறத்திற்கும் இடையே நடந்த கடும் போர்! அது எப்படி இருந்தது?

 

விண் போர்த்தன திசை போர்த்தன மலை போர்த்தன விசை ஓர்

கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர்

எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே

திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான்!

 

(யுத்த காண்டம் – கம்ப ராமாயணம்)

ஆனால் அண்ணலின் கடும் அஸ்திரங்கள் அவனை வீழ்த்த, ஆயுதமின்றி இருக்கும் ராவணனை நோக்கி,

 

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை;

 

இன்று போய் போர்க்கு நாளை வா”

 

(யுத்த காண்டம் – கம்ப ராமாயணம்)

 

என்று  ராமன் கூறுகிறான். ‘பெரும் காற்றில் பறந்த பூளைப் பூக்களைப் போல உன் துணைப் படைகள் பறந்தே போயின; இன்று போய் (இன்னும் போர் புரியும் எண்ணம் இருக்குமானால்) நாளை வா; (இல்லையேல் சரணாகதி எனில் உடனே சரண் அடை”)’ என்கிறான் ராமன்!

ramarama

சிவனிடம் முறையீடு!

 

போர்க்களக் காட்சியை அடுத்து ராவணன் மனம் சோர்ந்து அரண்மனை திரும்புகிறான்.

 

சிவனுக்கு சாம கானம் இசைத்தவன்; சிவ பக்தனான ராவணன் சிவனிடம் முறையிடும் காட்சி அடுத்து இடம் பெறுகிறது.

 

டி.கே.பகவதி வீணை இசைக்கும் காட்சியில் இன்று போய் நாளை வாராய் என்ற அற்புதமான பாடல் மலர்கிறது. பாடலைப் பாடியவர்  சிதம்பரம் ஜெயராமன்.

 

கே.வி,மஹாதேவன் இசை அமைத்த திலங் ராகப் பாடல் இன்றளவும் ஜீவன் உள்ளதாய் அனைவராலும் விரும்பிக் கேட்கப்படுகிறது.

“இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ!

மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்?

 

எண்டிசை வென்றேனே! அன்று இன்னிசை பொழிந்துனைக் கண்டேனே” (பாடல்- ஏ.மருதகாசி)

அற்புதமான பாடல்; அற்புத இசை; அற்புத நடிப்பு.

அனைவரின் மனமும் தவறு செய்த பேரரசனுக்காக ஒரு கணம் உருகவே செய்கிறது, காட்சி அமைப்பால்!

 

மக்களை மனம் கவர்ந்த ராமர் என் டி ராமாராவ் என்றால் சீதை பத்மினி தான்; பரதன் சிவாஜி கணேசன் தான். இராவணன் டி.கே பகவதி தான். தசரதன் நாகையா தான்!

அனைவராலும் பார்க்கப்பட்ட நல்ல படமாக அமைந்த சம்பூர்ண ராமாயணம் திரைப்பட வரலாற்றில் பக்திப் படங்களில் ஒரு மைல் கல்!

-தொடரும்

குறிப்பு: படம் வெளியிடப்பட்ட ஆண்டாக 1956 என சில தளங்களும் பத்திரிகைகளும் குறிப்பிட்டாலும் கூட, 1958 என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது சிவாஜிகணேசனின் அதிகாரபூர்வமான இணையதளமும் அதைச் சுட்டிக்காட்டும் விக்கிபீடியா தரும் விவரத்தின் அடிப்படையிலும் தான்!

 

-தொடரும்

Lord Shiva and Panini, the Greatest Grammarian!

maheswara-sutrani

Lord Nataraja Shiva with 14 Sutras

Research Paper written by London swaminathan

Research Article No.1657; Dated 17th February 2015.

Vakyakaram Vararuchim, Bhashyakaram Patanjalim

Paninim Sutrakaram cha pranatosmi Munitrayam

Let us bow to the great three seers Vararuchi, Patanjali and Panini.

Two thousand seven hundred years ago, there lived a man in India who is considered the father of grammar in the world. His name was Panini. He lived before Buddha and other great philosophers of sixth century BCE. Though he mentioned several great grammarians before his time, we don’t know anything about them. We could not get their books. Panini’s grammar book Ashtadyayi was the first in the world.

Here is a story of a person who gained the greatest knowledge in the world of languages by the grace of Lord Shiva! Tamil Hindus in South India and their counter parts in North India consider Lord Shiva was the one who gave them the language and the grammar.

nataraja (1)

The world is not celebrating Panini’s work Ashtadyayi or Paniniyam just because it was the first grammar book known in any language, but because of its amazing structure. He constructed a grammar for Sanskrit which shows the greatest height to which human thought can raise. This marvellous thing happened 2700 years ago!

Homer’s Iliad was just 100 years old by that time. Other languages except Sanskrit did not have any literature at all! Moses could repeat only Ten Commands of the God! Of course we have Gilgamesh in the Middle East and some other writings in Hieroglyphs (Book of Dead) in Egypt. But they are all museum materials and that too primitive thinking without any higher thoughts. They are not literature. But Sanskrit had huge volume of literature by then. The world’s greatest literary wonder Rig Veda was reverberating in the nook and corner of Asia. Turkey had Rig Vedic Gods in Cuneiform letters. And Rig Veda is still preserved in its pristine form without a change of single syllable. All this is done by word of mouth!! That is another world wonder. Nowhere in the world a literature of that size is preserved without writing till today!

cola1

Lord Shiva’s Grace!

Panini was a student of Guru (teacher) Varsha. He was the dullest student in the group. Guru (teacher) was not happy. Guru’s wife also told him to go out into the world and learn the basics. He went to the Himalayas and did penance. Lord Shiva appeared before him and told him that he was fully satisfied with his prayer and was ready to give him whatever he wanted. Panini was very intelligent. He did not ask for gold coins or beautiful women or a kingdom. He asked Lord Shiva to bestow him knowledge in the language. Shiva was very happy started to dance. His kettle drum boomed and the Himalayan Mountains echoed it.

Paninni was so focussed he could get only 14 beats from the drum called ‘Damaruka’ in Sanskrit. Based on the fourteen sounds he wrote the most famous grammar book in the world called Eight Chapters (In Sanskrit Ashta+Adhyayi). It contains 3959 Sutras. Sutra means formulas. He wouldn’t waste a single space. Even if he could avoid a full stop or a comma he would feel as if he had saved one million dollars. But his grammar was complete, no gap, no incoherency.

  1. a i u ṇ
    2. Ṛḷ k
    3. e o ṅ
    4. ai au c
    5. ha ya va ra ṭ
    6. la ṇ
    7. ña ma ṅa ṇa na m
    8. jha bha ñ
    9. gha ḍha dha ṣ
    10. ja ba ga ḍa da ś
    11. kha pha cha ṭha tha ca ṭa ta v
    12. ka pa y
    13. śa ṣa sa r
    14. ha l

This contain all the letters of Sanskrit language.

 cola2

He mentioned 500 towns in his work. This shows his vast geographical knowledge. He talks about 51st generation of Bharadwaja etc. This shows his knowledge in the ancient history of India. People erected a statue for him in his birth place, now in Pakistan. Chinese traveller Huan Taang saw the statue 1400 years ago. Patanjali who wrote a commentary praised him as Bhagavan Panini. Like Divine Homer and Divine Tiruvalluvar he was called Divine Panini. He was considered a seer – a Maharishi.

Patanjali says that holding the holy grass Dharba in his hand, facing East, he wrote the marvellous grammar in the world. I will explain the 14 sounds he heard in another article. They are called Maheswarani Sutrani. Brahmins repeat the 14 sutras every year on the day they change their sacred thread and start the Vedic studies again. Great Sanskrit scholars say that his grammar is closer to Vedic language than classical Sanskrit. He never mentioned Buddha or Mahavira. He lived well before their time.

Panini mentioned the grammarians before his time: Upavarsha, Parasarya, Karmanda, Sakatayana, Apitali and Sakalya. When he was going into a jungle with his students, there came a tiger! All the students ran away. But Panini stared at the tiger and analysed the word Vyagra, Sanskrit word for tiger.

Western linguists wonder how a person can write a grammar in such a scientific way at that period. Most of the world was uncivilised at that time. But India had produced wealthy literature, quantitatively and qualitatively very high.

In Kashmir a king passed an order that everyone must learn Ashtadyayi and those who passed in it were awarded 1000 gold coins each!

nata2

Panini died on a Trayodasi day (13th day either after the full moon or new moon). Even today traditional learners of Sanskrit in North India declare holiday for the studies on 13th day. Unlucky number 13!! Author of Panchatantra Vishnusarman said that Panini was killed by a lion. We know that his town was Salaturya in Pakistan and his mother was Dakshi. All other details and stories about him are just hearsay!

The name Panini is synonymous with the words WONDER, MARVELLOUS and AMAZING. Those who study his grammar will understand it.

Panini of Seventh Century

Indologist Goldstucker placed him in the seventh century BCE and Max Muller in the sixth century BCE. Dr Radha Kumud Mukerjee, Bhandarkar and Pathak thought that Goldstucker was correct. VS Agrawala, the author of a monumental work “India as Panini knew it” —dated him to fifth century.

A.Kalyanaraman in his book Aryatarangini rightly points out, “A language takes a long time to develop. European languages took several hundreds of years in this process. Modern grammar in English began only under the Stuarts. The earliest grammatical treatises in Sanskrit were written around 1000 BCE.  Had Panini lived in fourth century BCE, then there would not be any commentaries by Vararuchi and Patanjali within a short period. Patanjali was placed in 150 BCE or before. Other languages in the world show a big gap between the original work and the commentaries. In Tamil the commentaries came 1300 years after the original grammar book Tolkappiam. In other languages also there is a 500 to 1000 year gap. So we can boldly say that Panini existed at least 500 years before the commentators.

tanjur1

Let us sing the glory of Lord Shiva and his disciple Panini on this Shivaratri day (17 February 2015).

Pictures were taken from Sangatham.com and other sites;thanks.

பாலைவனத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பது எப்படி?

ja,mbu fruits

Research Paper written by London swaminathan

Research Article No.1656; Dated 17th February 2015.

வராகமிகிரர் என்னும் மாமேதை 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சம்ஸ்கிருத என்சைக்ளோபீடியா – பிருஹத் சம்ஹிதையில் – கூறிய அரிய பெரிய அபூர்வ விஷயங்களைக் கண்டோம். இன்று மேலும் சில விஷயங்களைத் தொட்டுக் காட்டுவேன்.

வறண்ட பூமிகளிலும் பாலைவனப் பிரதேசங்களிலும் வளரும் சில மரங்கள் முதலியவற்றைக் கொண்டு தண்ணீர் கண்டு பிடிக்கும் உத்தி / டெக்னிக் இது. வராஹமிகிரர் ஒரு விஞ்ஞானி. ஆகையால் மாய மந்திரம் – அண்டாகா கசும் அபூர்வ கா குசும் – என்று மம்போ ஜம்போ –வுக்குப் போகாமல் அறிவியல்பூர்வ முறையில் இதை அணுகியுள்ளார்.

சிலவகை மரங்கள் அதிக இலைகளுடன் காணப்படும். அவற்றின் செழுமை, மற்றும் பாம்புப் புற்றுகள், தவளை இவைகளைப் பார்த்து நிலத்துக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதா, எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதைச் சொல்கிறார்.

எப்படி எண் திசைக்கும் காவல் தெய்வங்கள் இருக்கிறதோ அதே போல எட்டு திசைகளில் பூமிக்கடியில் உள்ள தண்ணீருக்கு அந்தக் காலத்தில் பெயர்கள் இருந்தன என்பதையும் இவர்தம் நூல் செப்புகிறது.

Bassia latifolia_clip_image002

இலுப்பை வகைத் தாவரம்

உடம்பிற்குள் எப்படி ரத்த நாளங்கள் ஓடுகின்றனவோ அப்படி வானத்திலும் நிலத்துக்கு அடியிலும் நீரோட்டம் உண்டு என்றும் இவர் சொல்கிறார்.

எறும்பும், பாம்புப் புற்றுகளை உண்டாக்கும் கறையான் களும் காற்று மண்டலத்தில் உள்ள ஈரப் பதத்தின் மூலம் தண்ணீர் பெறும் என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை. அவைகள் ஈரப்பதம் இருக்கும் இடத்தில் புற்று உண்டாக்கும். ஈரப்பசை இல்லாவிடில் புற்று உதிர்ந்து விடும். இதை எல்லாம் அறிந்து மனு, சாரஸ்வதர் என்ற இரு அறிஞர்கள் நூல்களை எழுதியதாகவும் அதையே தான் பின்பற்றுவதாகவும் சொல்லுவார். அந்த நூல்கள் இன்று கிடைக்காவிடினும் உரைகாரர்கள் பல விஷயங் களை நமக்கு எடுத்துரைக்கின்றனர்.

1500 ஆண்டுகளுக்கு முன் இதை வராகமிகிரரும், அவருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள் என்றால் அதற்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அவர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்திருந்தால்தான் இப்படி நூல் எழுத முடியும். மேலும் வேறு எந்த மொழியிலும் இது போல நூல்கள் இருந்ததாக யாம் அறியோம்.

2_vilvam_tree

வில்வ மரம் பற்றியும் வராகமிகிரர் சொல்கிறார்

சுமார் 125 ஸ்லோகங்களில் இவர் தரும் தகவல்களை தாவரவியல் துறையினரும், நீரியல் துறையினரும் ஆராய்ந்து கிராம மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தால் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்காலாம். மேலும் இதில் செலவு என்பது கிணறு வெட்ட மட்டுமே ஆகும். பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க பணமோ கருவிகளோ தேவை இல்லை.

125 பாடல்கள், அதற்கான உரைகள் முழுதையும் எழுதினால் அது புத்தக உருப் பெறும் என்பதால் ஒரு சில எடுத்துக் காட்டுகளைக் காட்டுவேன்.

தண்ணீர் இல்லாத இடத்தில் ஒரு நாவல் (ஜம்பூ) மரத்தைக் கண்டால் சுமார் 15 அடி ஆழத்தில், கிழக்கு திசையில் ஐந்து அடி தூரத்தில் தண்ணீர் இருக்கும். அதன் அருகில் எறும்புப் புற்று (பாம்புப் புற்று) இருந்தால் தென் திசையில் 15 அடி ஆழ்ழத்தில் இனிய சுவை உடைய நீர் இருக்கும்.

இவ்வாறு நிறைய மரங்கள் பெயர்களைச் சொல்லி அவர் நீர் இருக்கும் திசை,ஆழம் எல்லாம் சொல்லுகிறார்.

மரத்தின் பழங்கள், இலைகள் முதலியன அசாதரண வடிவத்தில் இருந்தாலும் நிலத்தடி நீர் இருக்கும் என்கிறார்.

kadamba

கடம்ப மரம்

ஒலி மூலம் நிலத்தடி நீர் கண்டுபிடித்தல்!

சப்தம் மூலம் பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க வும் வழி சொல்லுகிறார்!! பூமியைக் காலால் தட்டும்போது நல்ல, உரத்த ஒலி வருமானால் சுமார் 27 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும். கண்டங்கத்தரிச் செடி முள் இல்லாமல் வளர்ந்தால் அதுவும் நிலத்தடி நீரின் அறிகுறி என்றும் பகருவார் வராகமிகிரர்.

அவர் நிறைய மரங்கள், புல், செடி, கொடி வகைகளைச் சொல்லுவதாலும், பழைய கால நீட்டல் அளவை சொற்களைப் பிரயோகிப்பதாலும் செயல் முறையில் பரிசோதித்து நிறை குறைகளை அறிய வேண்டும்.

இது பயனுள்ள ஒரு துறை என்பதால், ஆர்வத்துடன் ஆராய வேண்டிய அத்தியாயம் இது. வெளிநாடுகளில் இன்ன தாவரங்கள் இருந்தால் பூமிக்கடியில் இன்ன இன்ன உலோகங்கள் கிடைக்கும் என்னும் தாவர இயல் துறை நன்கு வளர்ந்திருக்கிறது. பழங்கால நூல்களில் உள்ள ரகசியங்களை நாம் கற்றோமானால் செலவு இல்லாமல் கனிமச் சுரங்கங்களைக் கண்டு பிடிக்கலாம்.

kantankattari

கண்டங்கத்தரி

நம்முடைய முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து அதன் ரகசியங்களை எழுதிவைத்துள்ளனர். சூரியன் சந்திரன் ஆகியவற்றின் போக்கைக் கண்டுபிடித்து கிரஹணம் முதலியவற்றைச் சொன்னவர்கள் எறும்பையும் தவளையையும் கண்டு பல சாத்திரங்களைச் செய்துள் ளனர்! இதை எண்ணி எண்ணி வியப்பதைவிட செயல் முறையில் பயன்படுத்த வேண்டும்.

எனது ஆங்கிலக்கட்டுரையில் கூடுதல் தாவரங்களின் பெயர்களைக் கொடுத்து இருக்கிறேன். முழு விவரம் வேண்டுவோர் பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 54-ஐக் காண்க.

சிவராத்திரி சபதம்!

Linga-in-Brihadisvara-big

One of the Biggest Lingas, Thanjavur Brhadeeswar Temple, Tamil Nadu

மஹா சிவராத்திரி அன்று சிறப்பான சில சிந்தனைகள்!

சிவராத்திரி சபதம்!

Post No.1655;    Dated 16th February 2015

by ச.நாகராஜன்

எளியவரின் கேள்விகள்

கடவுள் இருக்கிறாரா?

இருக்கிறார் எனில் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்?

அவரை என்னால் ஏன் காணமுடியவில்லை? எப்படிக் காண முடியும்?

யாருடன் நான் சேர்வது? யாரை நான் உதறுவது? சுருக்கமாகச் சொல்லப் போனால் யாருக்கு நான் ஓட்டுப் போடுவது?

இப்படி எல்லாம் கேள்வி எழுவது உலகியல் வாழ்க்கையில் இயல்பான ஒன்று தான்!

இதற்கான பதில்களை அற்புதமாக அருளாளர்கள் தங்கள் அழியாப் பாடல்களில் தந்துள்ளனர்.

thirukkaravasal maragatha linga

Thirukkaravasal Maragatha (Emerald )Linga

அப்பரின் அற்புத பதில்கள்!

இவற்றிற்கெல்லாம் பதில் கொடுத்துள்ள அழியாத் தவநெறிச் செல்வர் அப்பரின் அருளுரைகளை சிவராத்திரி தினத்தன்று பார்த்துத் தெளிவோம்!

“விறகில் தீயினன்,  பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன்” என்கிறார் அப்பர். விறகிலே தீ போல பாலிலே நெய் போல மறைந்து நின்று இருக்கிறான் எம் சிவ பிரான் என்பதே கடவுள் இருக்கிறாரா, எங்கே இருக்கிறார் என்று கேட்பவருக்கான பதில்!

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்                                         

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே                                    

ஈசன் எந்தை இணையடி நீழலே

எப்படி இருக்கிறார் எனில் மாசு இல்லாத வீணை போல, மாலை  மதியம் போல, வீசுகின்ற தென்றல் போல, வீங்கு வசந்தம் போல மூசு வண்டறை தடாகம் போல அவனது நீழல் உள்ளது என்பதே எப்படி இருக்கிறார் என்பதற்கு அவர் தரும் பதில்!

Amarnath-Linga

One of the Natural wonders of the World-Ice Linga of Amarnath Caves, Kashmir, India

நியூட்டனின் பதில்!

 

பிரபல விஞ்ஞானி நியூட்டன் ஒரு பெரும் ஆத்திகவாதி. அவரது நண்பர் ஒருவரோ பெரிய நாத்திகர். நியூட்டனின் கடவுள் பக்தியை அவர் ஏற்கவில்லை. ஒரு நாள் நியூட்டன் சூரிய மண்டலத்தின் மாதிரி ஒன்றை ஸ்கேல் மாடலில் அதாவது சிறிய் அளவில் சூரிய மண்டலம் இருப்பது போலவே சுற்றி வரும் கிரகங்களின் தூரம். ஓடு பாதை. அளவு ஆகியவற்றை எல்லாம் நிர்ணயித்து சுழலும்படியான ஒரு அமைப்பில் செய்து வைத்திருந்தார். அற்புதமான அந்தச் சாதனத்தில் ஒரு சிறிய கைப்பிடியைச் சுற்றினால் கிரகங்கள் தனது இயல்பில் சுழல அதனதன் ஓடு பாதையில் அது அது தனது வேகத்தில் சென்று சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும்.

நியூட்டனின் நண்பர் ஒரு நாள் உள்ளே வந்தார். இந்த அபாரமான அமைப்பைப் பார்த்து பிரமித்து நின்று விட்டார். அப்போது அந்த அறையின் ஓரத்தில் தன் மேஜையின் அருகே நாற்காலில் அமர்ந்து நியூட்டன் தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். வந்த நண்பர் வியப்புடன் கூவினார்:” ஆஹா! பிரமாதம்! நியூட்டன்! இதை யார் செய்தது?” அவரது ஓங்கிய குரலுக்கு நியூட்டனிடமிருந்து சுவாரசியமின்றி சாந்தமான குரலில்,”ஒருவரும் இல்லை!” என்று பதில் வந்தது. தனது கேள்வியை நியூட்டன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணிய நண்பர் சற்று உரக்க,”இதை யாரேனும் செய்திருக்க வேண்டுமே! யார் செய்தது என்று நான் கேட்கிறேன்!” என்றார்.

spatika2

Crystal/ Spatika Linga

இன்னும் அமைதியான தாழ்ந்த குரலில் நியூட்டன், “அது தான் ஒருவரும் செய்யவில்லை என்கிறேனே” என்றார்.

இப்போது நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. தன் நண்பர் இடக்காகப் பதில் சொல்கிறார் என்று நினைத்த அவர் நியூட்டனிடம் சென்று அவரின் தோளைக் குலுக்கி, “ யாரும் செய்யாமல் இது எப்படி உருவானது? தானே தோன்றியதா?” என்று ஆவேசமாகக் கேட்டார்.

அவரைப் பற்றி இழுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார் நியூட்டன். வானத்தைச் சுட்டிக் காட்டினார், பிறகு சொன்னார்:” இதோ மேலே பாருங்கள். லட்சக்கணக்கான நட்சத்திரங்கள், கிரகங்கள், அதன் சுழற்சிகள்! இவை எல்லாம் தானே சுற்றுகையில் இந்த வெறும் சாதனம் தன்னைத் தானே தோற்றுவித்திருக்கக் கூடாதா, என்ன!”


nataraja

One of the most beautiful Natarajas; smiling Nataraja of Gangai Konda Choza Puram, Tamil Nadu

நியூட்டனின் பதிலால் விக்கித்து நின்று விட்டார் அவர். கோடானு கோடி நட்சத்திரங்களையும் கிரகங்களையும் இன்ன பிறவற்றையும் தோற்றுவித்தவன் யார்? அவருக்கு உறைத்தது. அன்று முதல் அவர் சிறந்த ஆத்திகரானார்.

விஞ்ஞானி நியூட்டன் சொன்ன பதிலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே “இயற்கையைப் பார்; அதைப் படைத்தவனை அறி” என்று மூசு வண்டறைப் பொய்கையைக் காட்டிக் கூறிய அருளாளர் அப்பர்,

“விறகில் தீ ஆகவும், பாலில் நெய்யாகவும் மறைய நின்றிருப்பவன் ஜோதி ஸ்வரூபமானவன் என்று கூறி அவனைப் பார்க்க – அடைய –  உறவு என்னும் கோலை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால் அவன் நம் முன் வந்து நிற்பான்”

என்கிறார்.

hh-shiva-pooja

Sringeri Acharya’s Abhisheka to Spatika Linga

இதை விட அற்புதமாக எளிமையாக இறைவனை அடையும் வழியை யாரேனும் சொல்லி இருக்கிறார்களா?!

“விறகில் தீயினின் பாலில் படு நெய் போல்

மறைய நின்றுளன் மாமணி ஜோதியான்

உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே”

தென்னாடுடைய சிவன் அவன்! எந்நாட்டவர்க்கும் இறைவன் அவன்!

வாழ்த்த வாயும் நினைக்க மனநெஞ்சும்                                    

தாழ்த்த சென்னியும் தநத தலைவனைச்                                     

 

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே                                            

first_abhishekam1

ganapathy Sachidananda Swamiji’s Abhishek to Lord Shiva

வீழ்த்த வாவினையே நெடுங்காலமே என்று பலகாலம் சிவனை எண்ணாமல் காலம் கழித்த தன் வினையை எண்ணி நோகிறார் அப்பர். இப்படி அவர் சொல்வதற்கான காரணம் நம்மை நல் நெறிப் படுத்தவே!

“தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்” என்று நம்மை அறை கூவி அழைக்கும் அப்பர் இறைவனை காண முடியாமல் நாம் இருப்பது நம் பண்டை வினைப் பயனாலே என்பதைச் சொல்லி, “ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே” என்கிறார்.


2011-01jan-03-nithyananda-photo-1 1008 linga

1008 Lingas at Tiruvannamalai, Tamil Nadu

யாருடன் சேர்வது!

இப்படி அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் அப்பர் யாருடன் சேருவது, யாரை உதறுவது, இன்னும் கேட்டால் யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதைத் தானா சொல்ல மாட்டார்!

 

“சங்க நிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லர் ஆகில் அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்

 

கங்கை வார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!”

என்ற அவரது வாக்கு அள்ள அள்ளக் குறையாத சங்க நிதி, பத்ம நிதி இரண்டையும் கொடுத்து பூலோகம் இந்திர லோகம் இரண்டையும் ஆளும் உரிமையையும் தந்தாலும் அவர் சிவனுக்கு அன்பர் இல்லை எனில் அவர் செல்வத்தை உதறி எறிந்து அவரையும் உதறுவோம். மாறாக கொல்லக் கூடாத பசுவைக் கொன்று தின்னும் புலையன் என்றாலும் அவன் சிவனின் அன்பன் எனில் அவனை கடவுளாக வணங்கி அவன் தாள் பணிவோம்” என்கிறார்!


PERUVUDAYAR+THAYIR

Curd/ Yogurt Abhishek

ஆழ்ந்த கருத்து உடைய இந்தப் பாடல் சிவ அன்பர்கள் அனைவரும் வாழ்நாள்  முழுவதும் பேணிக் காப்பதற்கான லட்சியப் பாடல்!

சிவனை வணங்காதார் முகம் பார்க்காதே என்று அவர் சொல்லும் போதே பணத்தையும் சலுகைகளையும் தந்து ஓட்டுக் கேட்கும் நாத்திகர் பக்கம் சேராதே, மாறாக எளியவராக இருந்தாலும் சிவன் கோவிலையும் சிவ பக்தியையும் போற்றும் நல்லோரை நாடு, வணங்கு என்று அவர் கூறுவதில் இக உலக இயலுக்கான உபதேசமும் அதில் அடங்கி இருக்கிறதல்லவா!


nithya1

சிவராத்திரி சபதம்

மஹா சிவராத்திரி அன்று அப்பரின் அருளை வேண்டி மாபெரும் சபதம் ஏற்போம்!

சிவனை வணங்காத நாத்திகரை ஒரு நாளூம் சேரோம்; எம் நண்பர்களையும் சேர விடோம்; சிவ பக்திச் செல்வர்களுடன் இணங்குவோம்; அவர்களை வணங்குவோம் என்ற சபதம் ஏற்று முன்னேறுவோம்.

சிவ பிரானின் தமர் (தமர் – உறவினர்) நாம் , ஆகவே அவர் வாக்குப் படி

“அஞ்சுவது    யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!”

தென்னாடு உடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

abhisheka-bilva

Bilva/ Vilva Archana to Lord Siva

************

contact swami_48@yahoo.com

How to find Water in the Desert?

arid land

Research Paper written by London swaminathan

Research Article No.1654; Dated 16th February 2015.

Varahamihira on Water Divination

Varahamihira in his Brhat Jataka has devoted one full chapter for exploration of water springs. He deals with the subject in a very scientific way. There is no mumbo-jumbo. He links water springs with certain trees and anthills.  We all know that both the trees and ants need water. Ants get water from moisture in the atmosphere. Naturally ants build ant hills where there is humidity. Ant hills need moisture for its existence. Certain trees with lot of leaves need more water. So they grow only under certain conditions. In some slokas (couplets) he refers to frogs as well. He even tells us how to find water by tapping the ground and listening to the sound!

Ancient Hindus were keen observers of Nature. They observed the huge heavenly bodies as well as the tiny ants. To develop a branch of study like this, they must have observed them for centuries!

Varahamihira was not the first one to write on this subject. He and his commentators refer to various authors who lived before Varahamihira. He wrote it in the fifth century. He says that Baladeva, Garga, Kasyapa and Devala wrote about rain water and Saraswata and Manu wrote books on underground water. Unfortunately we lost the books written by Manu and Saraswata. But commentator Bhattotpala gives us lot of information.

Varahamihira says, “ Just as there are veins in the human body so do they exist higher up, others lower down, in the earth. Rain water has no colour or taste; but ground water assumes colour taste from its surroundings”.

The Gods who preside over eight directions are Indra, Agni, Yama, Nirrti, Varuna, Vayu, Chandra and Siva. The water veins in different directions are named after their presiding deities.

What is interesting is that his observation of the trees, the soil underneath, the ants and frogs living in the vicinity and the direction of water veins. I have given only the bare facts, not all the details. One must remember that he gives this for the waterless arid lands and deserts. If it is a river bed, we don’t need a Varahamihira to tell us where to dig a well!

calamus rotang

Calamus rotang

Now Varahamihira gives the names of trees and the source of water at the depth of …. Cubits in waterless places:–

1)Rotang Tree – Depth of seven and half cubits

(A cubit is approximately 18 inches)

Calamus rotang: Rattan palms (Pirampu in Tamil)

If a pale white frog found – water is at two and half feet depth.

2)Jambu tree  — water is at the depth of 10 cubits.

Jambu: Syzygium  jambolanum (Family: Myrtaceae)- Naval in Tamil.

Ant hill near Jambu tree – inexhaustible water at 10 cubits

ja,mbu fruits

Fruits from Jambu tree

3)Fig tree – 12 and half cubits

Ant hill near Arjuna tree – 17 and half cubits.

4)Arjuna : Terminalia arjuna (Family: Combretaceae);

Marutha maram in Tamil

2_vilvam_tree

Bilva/ Vilva Tree

5)Bilva and Fig tree joined together – 15 cubits

Bilva = Aegle marmalos (Family: Rutaceae)

Ant hill near opposite leaved fig tree (Phalgu) – 16 cubits

Fig Tree is Aththi in Tamil; Bilva is Vilvam in Tamil

6)Kampillaka tree – 16 cubits

Mallotus philippinensio

Kamla or Red Kamala or Kumkum Tree

7)Ant hill near Myrobalan tree – 7 and half cubits

Amla (nellikkay in Tamil), Haritaki (Kadukkay in Tamil) all belong to this group.

8)Ant hill near mountain ebony tree – inexhaustible water at the depth of 22 and half cubits

Bauhinia species

9)Echites tree with ant hill – 25 cubits

If a frog is found under any tree – 22 and half cubits

Echites scholaris or Alstonia scholaris (Devil tree)

nickernuts

Grey banduc (Nickernuts tree)

10)Ant hill near Grey Bonduc tree – 17 and half cubits

Nickernuts=Caesalpinia bonduc

11)Ant hill near Bassia tree – 37 and half cubits

Bassia latifolia = Madhuca indica (Family Sapotaceae)

Jatropa or Mahwa; Iluppai in Tamil

Bassia latifolia_clip_image002

Bassia latifolia

12)Ant hill + Durva grass + Tilaka tree – 25 cubits

Durva grass: Cynodon dactylon

13)n Tilaka tree:Clerodendrum phlomoides (Agnimantha, Vaijayanthi in Sanskrit)

14)Ant hill near Kadamba tree – 28 cubits

Kadamba: Anthocephalus cadamba (Rubiaceae)

(Katampa maram in Tamil)

kadamba

15)Ant hills +Palm or Coconut tree – 25 cubits

Coconut: Cocos nucifera (Arecaceae)(Tennai in Tamil)

16)Palm tree: Borassus flabellifer (Palmae) (Panai in Tamil)

17)Ant hill + Daru haldi tree – 28 and half feet

Berberis aristata

daruhaldi

Daruhaldi

18)Ant hill +Asmantaka tree – 17 and half feet

Asmantaka tree : Bauhinia tomentosa (Pilo asondaro in Gujarati)

19)If there are creepers Navamalika, Lakshmanaa – 15 cubits

Navamallika: Jasminium arborescens

Then Varahamihira describes glossy leaves of the trees and its link to underground water sources.

He says that if one branch lowers towards earth that indicates underground water.

kantankattari

Kantakari/ Solanum xanthocarpum

Sound and Water

If the earth being struck by feet emits a loud and pleasant sound, a northerly water vein will be found at the depth of 17 and half cubits.

If the fruits or leaves look unnatural that is also an indication of underground water according to Varahamihira.

20)If Kantakari (Prickly Nightshade) is seen without thorns that shows water is at the depth of 17 and half cubits.

Kantakari :Solanum xanthocarpum (Kandankattari in Tamil)

If steam or smoke arises from the ground that shows water is at the depth of 10 cubits.

Then he explains water sources found in desert regions. This is a lengthy chapter with 125 couplets. If villagers living in arid regions study this they will be benefitted. Alternately botany departments of local colleges can help our people. There is no equipment or money required to identify the sources. Only when it comes to digging a well, money and man power are required. This must be studied seriously and utilised for the benefit of the people.

Pictures are taken from various sites; thanks.

சிந்து சமவெளியில் மக் டொனால்ட்!

indus4

Research Paper written by London swaminathan

Research Article No.1653; Dated 16th February 2015.

சிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் 25  கட்டுரைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். நான் வலியுறுத்துவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆரிய-திராவிடம் என்னும் பிரிவினைக் கண்ணோட்டத்தில் பார்க்காது புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். அப்போதாவது அந்த சிந்து வெளி எழுத்தின் மர்மத்தைத் துலக்க முடியுமா, புதிரை விடுவிக்க முடியுமா என்று பார்ப்போம் என்பதே.

50 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் –பின்னிஷ் ஆராய்ச்சியா ளர்கள், அதற்கு முன்னால் அதைத் தோண்டி எடுத்தவர்கள் என்ன சொன்னார்களோ அதையே சொல்லி ஆராய்ச்சி உலகத்தையே திசை திருப்பிவிட்டார்கள். இதனால் இன்று வரை அந்த எழுத்துக்களைப் படிக்க இயலவில்லை–  சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.

இந்தக் கட்டுரையின் நோக்கம் அந்த முத்திரையில் இருப்பது — தனி நபர்களின் பெயர்களாக இருந்தால்  — அதை எப்படிப் படிப்பது என்ற ஒரு யோஜனைதான்.

InscriptH506

மக் டொனால்ட் (Mac Donald) என்ற பெயர் எல்லோருக்கும் தெரியும். இதற்கு ஐரிஷ் மொழியில், டொனால்ட் மகன் என்று பொருள். இதே போல ஓ’ஷானஸ்ஸி (o’ Shaughnessy) என்ற பெயரும் அயர்லாந்தில் அதிகம் காணப்படும். ‘ஓ’ என்பது பேரன் என்ற பொருளில் வரும். அதாவது ஷானஸ்ஸியின் பேரன். இதை சிந்து சமவெளியிலும் பார்க்க முடியுமா? முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சிந்து சமவெளியில் பல முத்திரைகள் ஒரு வட்ட வடிவ எழுத்துடன் துவங்கும். அதற்கு அடுத்தாற் போல், ஆங்கிலத்தில் ‘அபாஸ்ட்ரோபி’ (apostrophe) குறி போடுவது போல இரண்டு கோடுகள் வரும். படத்தில் காண்க. இதுவும் அயர்லாந்தில் உள்ளது போல இன்னாரது மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்கும் குறி ஈடாக இருக்கலாம்.

சிந்துவெளி முத்திரைகளில் உள்ள விஷயம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. சிலர் அது, உப்பு, புளி, மிளகு கணக்கு என்று எண்ணுகின்றனர். அதாவது இன்ன அளவு இன்ன பொருள்களை ஏற்றி அனுப்புகிறோம் என்ற (ஏற்றுமதி) விஷயம் என்பர். மற்றும் சிலரோ, இது தனி நபர்களின் பெயர்கள் பொறித்த டோக்கன் (Token) வில்லைகள், ஜப்பானில் இப்படி குடும்பத்திற்குக் குடும்பம் உண்டு என்பர். அது உண்மையானால், நான் எண்ணுவது போல மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்க கோடுகள் பயன்பட்டிருக்கலாம். அல்லது என்ன ஊர் என்பதைச் சொல்லும் குறியாக இருக்கலாம்.

Indus_script.jpg3

இதை உறுதிப் படுத்த சில எடுத்துக் காட்டுகளைத் தருவேன். புறநானூற்றில் “மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்” என்று அப்பா பெயருடன் மகன் பெயர் வரும்.

இப்படிப் பல தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லும் வழக்கம் இந்தியாவில்தான் முதலில் இருந்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் புகழ் பெற்ற துதியில் ஐந்து தலை முறைகளின் பெயர்கள், ஒரே ஸ்லோகத்தில் வந்து விடுகிறது!

வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம்

பரசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்

இதில் வசிஷ்டர், அவருடைய மகன் சக்தி, அவருடைய மகன் பராசரர், அவருடைய மகன் வியாசர், அவருடைய மகன் சுகர் ஆகிய ஐந்து தலைமுறைகளைச் சொல்லி வணங்குகின்றனர்.

இதே போல பிராமணர்கள் மாதப் பிறப்பிலும் அமாவாசையிலும் செய்யும் தர்ப்பணத்தில் தந்தை, தாத்தா (தந்தைக்கு தந்தை), கொள்ளுத் தாத்தா (பிதா, பிதாமஹான், ப்ரபிதா மஹான்)  என்ற மூன்று தலை முறைக்கு நீர்க்கடன் செலுத்துவர்.

ammonite-king.jpgthree generations

இந்த வழக்கம் உலகம் முழுவதும் இருந்தது. அஸ்ஸீரீயாவில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதத்தில் “பாலாவின் மகனான ஆடா”வின் அம்பு (Arrow of Ada, Son of Bala) என்று எழுதப்பட்டுள்ளது. இது கி.மு.1100 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. எட்டாம் நூற்றாண்டு மன்னர் ஒருவர் உருவத்தில் அந்த மன்னர், அவருடைய தந்தை மற்றும் தாத்தா பெயர் எழுதப் பட்டுள்ளது.

பெயர் வைக்கும் முறை உலகம் முழுதும் இந்திய முறையை ஒட்டியே இருந்தது. சம்ஸ்கிருதத்தில் ‘சு’மதி, ‘சு’கந்தி, ‘சு’கர்ணன் என்றெல்லாம் பெயர்கள் இருக்கும் இந்த “சு” என்பது நல்ல என்று பொருள்படும். இதையே தமிழ்ப் புலவர்களும் ‘நக்’கீரன், ‘நன்’னாகன், ‘நச்’செள்ளை, ‘நப்’பின்னை என்று வைத்துக் கொண்டனர். அதாவது முன் ஒட்டு Pre fix (நல்/ நற்) மூலம் பெயர் பெற்றனர். இதே போல வர்மன், சேன என்பதற்கு இணையாக மாறன், சேரன் என்று பின் ஒட்டுகளையும் (Suffix) பயன்படுத்தினர். வட மொழியில் சு= தமிழில் நல்.

kassite weapon 1275 BCE

அயர்லாந்தில் பெண்கள் “மக்”, “ஓ” என்ற எழுத்துக்களுக்குப் பதிலாக “நி” அல்லது “நிக்”  (Ni or Nic) எனப் பயன்படுத்தினர். சுமேரியாவிலும் “என்” என்ற முன் ஒட்டு ஆண்களுக்கும் “நின்”  (En and Nin) என்ற முன்னொட்டு பெண்ளுக்கும் பெயர்களில் வரும்.

அயர்லாந்தில் “மோர்” என்றால் பெரிய, “ஓக்” என்றால் (Mor and Og) இளைய (ஜூனியர்) என்பது பெயர்களில் ஒட்டிக் கொண்டுவரும். இதுவும் சம்ஸ்கிருத வழக்கே. தமிழில் இதை “முது”கண்ணன், “முது”கூத்தன் என்றும் “இள”நாகன், “இள”ங்கீரன் என்றும் பயன்படுதுவதைக் காணலாம். சம்ஸ்கிருதத்தில் மஹா மூலன், மஹா சாஸ்தா என்பர். இது சங்க இலக்கியத்தில் தமிழில் “மா”மூலன், “மா”சாத்தன் என (புறநானூற்றில்) வரும். சுருங்கச் சொல்லின் சம்ஸ்கிருதப் பெயர்களில் உள்ள முன் ஒட்டுகளை (Prefix) சுமேரியா, அயர்லாந்து, சங்கத் தமிழில் காணாலாம். உலகில் மிகப் பழைய இலக்கியமான வேதங்களில் இப்படிப் பெயர்கள் காண ப்படுவதால் நாமே உலகிற்கு இதைக் கற்றுத தந்தோம் என்றால் அது மிகையாகாது.

indus1

உலக மொழிகள் எல்லாம் தமிழில் இருந்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்தும் சென்றனவே என்றும், அவ்விரு மொழிகளும் பாரத மண்ணில், பாரத சிந்தனையில் பிறந்தவை என்றும் நான் இதே பிளாக்-கில் ஆய்வுக் கட்டுரை எழுதிவிட்டேன். நான் சொல்லும் மறுக்க முடியாத ஆதாரம் “சந்தி (புணர்ச்சி)” விதிகள் ஆகும். உலகில் இரண்டே மொழிகளில்தான் அது நடை முறையில் உள்ளது- இலக்கண விதிகளில் உள்ளது. சம்ஸ்கிருதமும் தமிழும் ஒரே மூலத்தில் உதித்தவை என்ற நம் முன்னோர் கருத்து மேல் நாட்டாரின் மொழிக் கொள்கைகளைத் தகர்த்து எறியும். இதற்கு சந்தி விதிகள் ஒன்றே போதும். உலகில் வேறு எங்காவது கொஞ்சம் மிச்சம் சொச்சம் சந்தி விதிகள் இருக்கிறதென்றால் அவைகள் எல்லாம் சம்ஸ்கிருத மொழியில் இருந்து தோன்றிய மொழிகளாக இருக்கும் (பிரெஞ்ச், லத்தீன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் கொஞ்சம் உண்டு. அவை எல்லாம் சம்ஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளே என்பதை எல்லோரும் ஏற்பர்).

inscription

ஆகவே இந்த மொழிக் கொள்கைகளின் பின்னணியில் சிந்து வெளி முத்திரைகளை அணுகினால், ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) இல்லாமலேயே சிந்துவெளி முத்திரைகளைப் படித்து விடலாம்.

லண்டனுக்கு வரும் சொந்தக் காரர்களையும் நண்பர்களையும் பிரிட்டிஷ் மியூசியத்துக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம் நான் ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) பக்கத்தில் போய் ஒருமுறை பெருமூச்சுவிட்டு வருவேன். “இறைவா! எகிப்திய ஹைரோகிளிபிக்ஸைப் படிக்க இப்படி ஒரு மும்மொழிக் கல்வெட்டைக் கொடுத்தாயே! எங்கள் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க ஒரு இருமொழிக் கல்வெட்டையாவது கொடுக்கக்கூடாதா! அதையும் என் கைகளில் கொடுத்தால் இலக்கிய நோபல் பரிசையே வாங்கிவிடுவேனே! என்று ஏங்குவேன்.

rosettastone-detail

Rosetta Stone in Ancient Greek, Demotic and Hieroglyphs, displayed in British Museum,London.

முடிவுரை: சிந்துவெளி முத்திரைகளில் Personal Name பெர்ஸனல் நேம்- கள் இருந்தால் ஐரிஷ் மொழி Formula பார்மூலாவை apply ளை செய்யுங்கள். உலகின் பழைய மொழிகள் எல்லாம்,ஆண்-பெண் பெயர்களில் முன் ஒட்டைப் பயன்படுத்டுவது சம்ஸ்கிருதத்தில் உள்ளது போலவே உள்ளது. சங்கத் தமிழ் புலவர் பெயர்களும் அப்படியே உள்ளன. ஆகவே சிந்துவெளி முத்திரைகளில் மனிதர்கள் பெயர்கள் என்று ஒன்று இருக்குமானால் அதற்கும் இதே பார்முலாவை Formula பயன்படுத்துங்கள்.

வாழ்க தமிழ் (வலக் கண்)! வளர்க சம்ஸ்கிருதம் (இடக் கண்)!!

swami_48@yahoo.com