சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!

om tamil

Compiled  by S NAGARAJAN

Post No.2256

Date: 19 October 2015

Time uploaded in London: 8-07 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

ரகசியத் தெளிவு

சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!

 

.நாகராஜன்

 OM red filter

சொல்லில் இருக்குது அனைத்துமே

 

இரகசியங்களைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் ஒரே மாதிரியான அறிவுரைகளையே சொல்கின்றன. யூதம், ஹிந்து என்றெல்லாம் இதில் வேறுபாடு கிடையாது. ஏனெனில் அடிப்படை உண்மைகள் சாஸ்வதமானவை!

தேவி பாகவதத்தில் அம்பிகையின் முன்னர் ஆகப் பெரும் மஹரிஷிகள் வாயைப் பொத்தி மௌனம் அனுஷ்டிக்கிறார்களாம்! ஏனெனில் வாயைத் திறந்தால் சொல் குற்றம் வந்து விடுமோ என்று!

 

யூத மதத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சொற்களை ஜாக்கிரதையாகப் பிரயோகம் செய் என்றே கூறுகிறது. அதிலும் பிரார்த்தனை புரிவதில் சொல்லுக்குள்ளே ஜோதியைக் காணுங்கள் என்கிறது!

லிக்விடிம் எக்வாரிம் (தேர்ந்தெடுக்கப்பட்ட ஞான முத்துக்கள்) தொகுப்பில் முக்கியமான ரகசியம் சொல்லப்படுகிறது இப்படி:-

 

EACH MORNING A NEW CREATION

Take special care to guard your tongue                                            

 Before the morning prayer.

Even greeting your fellowman, we are told.                                    

Can be harmful at that hour.
A person who wakes up in the morning is                                     

Like a new creation

Begin your day with unkind words,                                                  

Or even trivial matters –

Even though you may later turn to prayer,                                      

You have not been true to your Creation

All of your words each day                                                         

Are related to one another

All of them are rooted                                                           

 In the first words that you speak                     

                                                LIQQUTIM YEQARIM

MAHALAKSHMI LAMPS

உனது நாவைக் காப்பதில் விசேஷ கவனம் எடு                               

காலை பிரார்த்தனைக்கு முன்னர்

உங்கள் சக மனிதருக்கு வணக்கம் செலுத்துவது கூட,                            

அந்த நேரத்தில் தீமை பயக்கக்கூடும் என்று எங்களுக்குச் சொல்லப்படுகிறது

காலையில் கண் விழிக்கும் ஒரு மனிதன்                                           

ஒரு புதிய படைப்பு போல

 

அன்பில்லாத வார்த்தைகளுடன் உங்கள் நாளை ஆரம்பியுங்கள்,                      

அல்லது அல்ப விஷயங்களுடன் துவங்குங்கள்

பின்னால் நீங்கள் பிரார்த்தனை புரியத் தொடங்கினாலும் கூட,                          

உங்கள் படைப்புக்கு நீங்கள் உண்மையானவராக இல்லை

ஒவ்வொரு நாளும் உங்களின் எல்லாச் சொற்களும்                               

ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டிருக்கின்றன

 

அந்த அனைத்துமே நீங்கள் பேசும் முதல் வார்த்தைகளை                          

வேராகக் கொண்டிருக்கின்றன

                                                             லிக்விடிம் எக்வாரிம்

 

 

பிரம்மாண்டமான ஒரு ரகசியம் மிக எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஹிந்து தத்துவத்தில் காலை எழுந்தவுடன்

 

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கர மத்யே சரஸ்வதி                                            

கர மூலேது கோவிந்த: ப்ரபாதே கர தர்ஸனம்

 

என்று நல்ல சொற்கள் மூலம் திருமகள், கலைமகள், கோவிந்தன் ஆகியோரை நமஸ்கரித்து நாளை நல்ல நாளாக்கி நமது நாளாக்குகிறோம்.

ஒரு நாளைக்கு 100 ஆசீர் வசனம் ஓதுங்கள்

 

கடவுள் நம்மிடம் எதை விரும்புகிறார் என்பதை யூத மதத்து ராபி மெய்ர் (Rabbi Meir) அருமையாக விளக்கிக் கூறுகிறார். மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இறையாளர் இவர்.

 

தால்முட்இல் வரும் செய்யுளுக்கு இவர் அற்புத விளக்கம் ஒன்றைத் தருகிறார். அது Mah என்ற வார்த்தையைக் கூறுகிறது. இதன் பொருள் என்னஎன்பதாகும். ஆனால் மெய்ரோ அந்த உச்சரிப்பை அதே போன்று உள்ள Meah என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இதன் பொருள் 100 என்பதாகும். அதாவது கடவுள் நம்மை தினமும் 100 Blessings (100 ஆசீர் வசனங்கள்ஓத வேண்டும் என்று விரும்புகிறார் என்றார்.

 

தினமும் நூறு நல்ல வார்த்தைகளைப் பேசும் ஒருவனுக்கு என்றைக்கேனும் கெடுதி விளையுமா? நிச்சயம் ஒரு கெடுதியும் வராது. ரகசியங்களை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறது.

அனைத்தும் பொருள் பொதிந்தவை.

 IMG_4438

சொல் ஒன்று வேண்டும்

 

மஹாகவி பாரதியார் பாடிய சொல் என்ற பாடல் அற்புதமான பாடல்.

சொல் ஒன்று வேண்டும் தேவசக்திகளை நம்முள்ளே                             

நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்

மின்னல் அனைய திறல் ஓங்குமேஉயிர்                                             

வெள்ளம் கடை அடங்கிப் பாயுமே                                                     

தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு                                    

செய்கை  அதனில் வெற்றி ஏறுமே

 

என்று சொல்லின் பெருமை கூறும் அவரது பாடலை முழுவதுமாகப் படிக்கும் போது யூதர்களின் வேதம் கூறும் சொல்லுக்குள் ஜோதி காணும் அனுபவம் கை கூடும், இல்லையா!

பேசுகின்ற வார்த்தைகள் பலவற்றை நம்மிடம் அன்றாடம் சேர்க்கின்றன. இவற்றில் நாளைத் துவக்கும் போது பேசுபவை அன்றைய போக்கை உருவாக்குகின்றன. ஆகவே பேசுவதைச் சரியாகப் பேசு; சரியான சொற்களைத் தேர்ந்தெடு என்பதே அறநூல்களின் அறிவுரை.

 

இதை ஒரு சோதனையாகக் கூடச் செய்து பார்க்கலாம்; விளைவுகள் பிரம்மாண்டமான அளவில் நலம் பயப்பதைக் கண்டு நாமே பிரமித்து விடுவோம்!

 

*****************

 

The tail is out!

rat

Compiled  by London swaminathan

Post No.2255

Date: 18 October 2015

Time uploaded in London: 18-33

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

220px-Stamp_of_Kyrgyzstan_chychkan

Once a Guru was teaching his disciples about the highest truth, but one of his disciples was not prepared to listen to or understand him. The guru was seated leaning against a wall and the disciple was facing him. In the wall there was a rat hole. When the teaching was going on, the rat was slowly proceeding towards the hole and all the attention was of the disciple was fixed on the rat. He was watching keenly what the rat was doing. It has almost entered the hole and its tail only was seen outside.

The guru coming to know that the disciple was not attending to him, asked,

“Do you listen to what I say?

Has what I told you entered your head?”

Suddenly the answer came from the disciple

“Yes, only the tail is out.”

Many disciples are of this type. So preparedness to imbibe spiritual teachings is necessary and that can only be through purification of the mind.

Story told by swami Ramdas of Anandashram

—Subham—

யார் மனைவி? எவன் மகன்?

IMG_4485

Compiled  by London swaminathan

Post No.2254

Date: 18 October 2015

Time uploaded in London: 14-59

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

1.ரத்னாகரோ ஜலநிதிரித்யசேவி தனாசயா

தனம் தூரே அஸ்து வதனமபூரி க்ஷாரவாரிபி:

பண ஆசையால் கடலில் இறங்கினால், பணம் தூரப் போய்விட்டது; வாய் எல்லாம் உப்பு ஆனதுதான் மிச்சம்!

ஹிந்தி: சௌப்பே கயே சப்பே பனனே துப்பே ஹீ ரஹ் கயே.

Xxx

2.சர்வம் ஸ்ரத்தயா தத்தம் ஸ்ராத்தம் – ப்ரதிமா

சிரத்தையாகச் செய்யப்படுவது சிராத்தம்

Xxx

3.சர்வஜன மனோபிராமம் கலு சௌபாக்யம் நாம –ஸ்வப்னவாசவதத்தம்

எல்லோர் மனதையும் கவரக்கூடிய விஷயமே சௌபாக்கியம் எனப்படும்.

Xxx

IMG_4496 (2)

யார் மனைவி? எவன் மகன்?

4.சா பார்யா யா ப்ரியம் ப்ரூதே

ச புத்ரோ யத்ர நிவ்ருத்தி:

தன்மித்ரம் யத்ர விஸ்வாச:

ச தேஸோ யத்ர ஜீவ்யதே – (மஹாபாரதம்)

யார் அன்பாகப் பேசுகிறாளோ அவளே மனைவி,

யார் சுகமான வாழ்வு தருகிறானோ அவனே மகன்,

எங்கே விஸ்வாசம் (நம்பக்கூடிய தன்மை) இருக்கிறதோ அவனே நண்பன்,

எங்கு நல்ல வாழ்க்கை நடத்தமுடிகிறதோ அதுவே நாடு.

ஹிந்தியில்

பார்யா வஹீ ஹை, ஜோ ப்ரிய போலே,

புத்ர வஹீ ஹை, ஜிஸ்ஸே சுக மிலே,

மித்ர வஹீ ஹை ஜிஸ்மேம் விஸ்வாஸ் ஹோ,

தேஷ் வஹீ ஹை, ஜஹாம் ஜீவிகா ஹோ.

doctor3

யார் டாக்டர்? யார் போலி மருத்துவர்?

ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுசோ த்ருஷ்டகர்மதா

தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம்

–சரக (சூத்ரம்) 9-6

நல்ல மருதுவரின் 4 லட்சணம்:

ஸ்ருதே பர்யவதாதத்வம் = மருத்துவ அறிவு

பஹுசோ த்ருஷ்டகர்மதா= நல்ல அனுபவம்

தாக்ஷ்யம் = திறமை

சௌசமிதி= தூய்மை (சுத்தம்)

நோயாளிகளை எப்படி கவனிப்பது?

மைத்ரீ காருண்யமார்தேஷு சக்யே ப்ரீதிரூபேக்ஷணம்

ப்ரக்ருதிஸ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திஸ்சதுர்விதா

–சரக (சூத்ரம்) 9-26

மைத்ரீ = நட்புடன் அணுக வேண்டும்

காருண்யம்= கருணை இருக்க வேண்டும்

ப்ரீதி = உற்சாகமாக சிகிச்சைதர வேண்டும்

உபேக்ஷணம்= நோயாளியிடத்தில் அனுதாபம் இருக்க வேண்டும்

போலி வைத்யர்கள் எப்படி இருப்பர்?

குசேல: கர்கச: ஸ்தப்தோ க்ராமணீ ஸ்வயமாகத:

பஞ்ச வைத்யா ந பூஜ்யந்தே தன்வந்த்ரிசமா அபி

–சம்ஸ்கிருத பொன்மொழி

மருத்துவப் பிதாமஹான் தன்வந்த்ரிக்குச் சமமானவராக இருந்தாலும் கீழ்க்கண்ட ஐந்து போலி மருத்துவருக்கு மதிப்பளிக்க வேண்டாம்:–

குசேல: = மோசமான ஆடை அணிந்தவர்

கர்கச: =முரட்டுப் பேர்வழி

ஸ்தப்தோ = பிடிவாதக்காரன்

க்ராமணீ =குதர்க்கமான (நேர்மையற்ற) பார்வையுடையோன்

ஸ்வயமாகத: = தானாக (அழையாமலே) சிகிச்சைதர வருபவன்

திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் சொன்ன விஷயங்களி இவற்றுடன் ஒப்பிட்டு மகிழ்க!!!

–சுபம்–

வெல்லும் சிவ சக்தி!

SIVA ON TIGER SKIN

Written by S NAGARAJAN

Post No.2253

Date: 18 October 2015

Time uploaded in London: 9-38 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 

தேவார சுகம்

வெகுண்டெழுந்த அப்பர் விரட்டுவது எவற்றை?

.நாகராஜன்

 

சாது மிரண்டால்!

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி.

அருளாளரான அப்பரே விரட்டுகிறார் என்றால், அதில் இருக்கும் விஷயம் பொருள் பொதிந்த ரகசிய விஷயமாகத் தானே இருக்க வேண்டும்!

கெடுவீர்காள் (நீங்கள் கெட்டு அழிந்தொழிவீர்கள்) எனக் கடுமையாக எச்சரிக்கிறார்!

தருக்கேன்மின்னே, நீர் நடமின்களே (கர்வப் படாதீர்கள், விட்டுப் போய்த் தொலையுங்கள்) என்று விரட்டுகிறார்!

ஈங்கு அலையேன்மின் (இங்கு கிடந்து அலையாதீர்கள் எனத் திருப்பித் திருப்பிச் சொல்கிறார்?

என்ன விஷயம்? உலகைப் படாத படுத்தும் மாய சக்திகளைப் பட்டியலிடுகிறார் அவர், அது தான் ரகசியம். அவற்றை அழைத்து, என்னிடம் வராதீர்கள்; வந்தால் அழிந்து ஒழிவீர்கள்; நான் சிவனின் பக்தன் என்று கூறி அவற்றை விரட்டுகிறார்!

அதன் மூலம் மாய சக்திகளை நமக்கு இனம் காட்டி நம்மை ஜாக்கிரதையாக இருக்குமாறு ரகசிய அறிவுரை தருகிறார்!

nata from siva

ஓடுங்கள், மாய சக்திகளே!

புண்ணியங்களே! தீவினைகளே! திருவே! இம்மாயக் கடலை அரித்துத் தின்னும் உங்களுக்கு என்னிடம் இடம் கிடையாது. நல் ஆரூர் தடங்கடலை, சிவபிரானின் திருவடியைப் பற்றித் தொடர்கின்றேன், எனக்கு இடர் தந்தால் கெட்டு ஒழிவீர்கள்! (ஜாக்கிரதை!)

ஐம்பெரும் மா பூதங்களே! இந்த பூமி எல்லாம் உம் வசமாக்க வல்ல திறனை உடையவர்கள் நீங்கள்! ஆனால் நீங்கள் என்னை நுகர்ந்து போகம் அனுபவிக்க விட மாட்டேன். நான் ஆரூர் அமிர்த வள்ளலின் அடியவன். உங்கள் தருக்கை விட்டு விடுங்கள்! (என்னிடம் அது செல்லாது)

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனப்படும் ஐந்து புலன்களே! ஐயோ! உங்களுக்கு இந்த வையகமே போதாதே! ஆரூர் சிவக் கொழுந்து என் சிந்தையில் உள்ளான். ஆகவே உங்கள் கர்வம் என்னிடம் செல்லாது!

வெற்றியுடன் சோர்வு படுத்தும் சூழ்ச்சியே! உங்களிடம் உலகம் எல்லாம் உழறும். ஆனால் என்னிடமோ உங்கள் ஆட்டம் பலிக்காது. எம்பெருமானை அடைந்தவன் நான்! இங்கு வந்து வீணே அலையாதீர்கள்!

பொங்கு மதமே, மானமே! ஆர்வமே! செற்றமே! குரோதமே! லோபமே! பொறையே!

துன்பமே! பாவமே ஆசையே வெறுப்பே! வறுமையே! செல்வமே! பொல்லா வெருட்சியே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள் இந்த பூமியையே அரித்துத் தின்று விடுவீர்கள்! ஆனால் நீங்கள் நுகரும் போகம் நான் அல்ல! என்னிடம் உங்கள் வேலை பலிக்காது! நான் கற்பகத்தை, தற்பரத்தை, ஆரூர் பரஞ்சோதியை நாடி வந்து விட்டேன். ஓடிப் போங்கள்!

சுருக்கமே! பெருக்கமே! காலநிலையே! செல்வமே! வறுமையே! இந்த உலகைச் சுற்றி உங்கள் ஆட்சியைச் செலுத்துவது போதாதா? எம்பிரான் பாதம் பற்றிய என்னிடம் வந்தால் கெட்டு அழிவீர்கள்!

இப்படி வெகுண்டு சக்தி வாய்ந்த சொற்களால் அப்பர் விரட்டுகிறார் என்றால் அந்த உலக மாயைகள் எப்படிப் பட்ட வல்லமை படைத்தவையாக இருக்க வேண்டும்.

கண்ணெதிரே தான் காண்கிறோமே, தினசரி அன்றாட வாழ்க்கையில்.

இவை ஒவ்வொன்றும் படுத்தும் பாடு, அடடா என்ன பாடு படுகிறது இந்த உலகம்! – 750 கோடி உலக மக்களை – எண்ணற்ற கோடி விதங்களில் என்ன பாடு படுத்துகிறது.

rishikesh siva

வெல்லும் சிவ சக்தி

இவை அனைத்தையும் எதிர்கொண்டு விரட்டவும் வெல்லவும் ஒரே சக்தி, சிவ சக்தி தான்!

அது இருக்கும் போது எதுவும் நம்மிடம் பலிக்காது.

திருஆரூர்ப் பூங்கோயிலில் அப்பர் அருளிய “பொய் மாயப் பெருங்கடலில்” எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடுவோர்க்கு மேலே சொன்ன மாயைகளின் ஜால வேலைகள் பலிக்கவே பலிக்காது. அவரே, “கெடுவீர்காள்! இடறேன்மின்னே” என்று எச்சரித்து விட்ட போது நமக்கு என்ன பயம்!

பத்துப் பாடல்களில் அப்பர் வரிசையாக இனம் காட்டும் மாயைகள்:

புண்ணியம், பாவம், ஐம்பெரும் பூதங்கள், ஐம்புலன்கள், சோர்வு படு சூட்சியம் (வஞ்சனைகள்), செருக்கு, மானம், காமம், பகை, கோபம், கஞ்சத்தனம், பொறை, துன்பங்கள், தீவினை, வேட்கை, வெறுப்பு, வறுமை, செல்வம், கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு, ஐம்பொறிகளாகிய காக்கைகள், சுருக்கம், பெருக்கம், காலநிலை, செல்வம், வறுமை ஆகியவை (அவர் சொன்ன வரிசைப்படி!)

 

ஆறாம் திருமுறைதிருவாரூர்ப் பதிகம்

 

பாடல்களில் சிலவற்றைப் பார்ப்போம் (மீதியையும் தேடிப் படிக்கும் ஆர்வம் நிச்சயம் எழும்!):-

பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
    புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க்
    கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
    தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன்
    இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே

ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
    றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே யாக்க வல்லீர்க்
    கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
உம்பருமா யூழியுமா யுலகே ழாகி
    ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன் 
    தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே

 

உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
    துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ
    வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
    புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத்
    தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே

 

துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
    சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பனையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
    உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யென்றன்
வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
    மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்
    ஆட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே

 

பொங்குமத மானமே ஆர்வச் செற்றக்
    குரோதமே யுலோபமே பொறையே நீங்கள்
உங்கள்பெரு மாநிலத்தி னெல்லை யெல்லாம்
    உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்
அங்கமலத் தயனொடுமா லாகி மற்று
    மதற்கப்பா லொன்றாகி யறிய வொண்ணாச்
செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை யாரூர்ச்
    செல்வனைச்சேர் வேன்நும்மாற் செலுத்து ணேனே

 

இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
    வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்
குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்
    குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
    அமரர்கள்தம் பெருமானை யரனை ஆரூர்
உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா
    லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே


siva is pillar
விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
    வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரைந்தோடி மாநிலத்தை யரித்துத் தின்பீர்க்
    கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
கரைந்தோட வருநஞ்சை யமுது செய்த
    கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரில்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்நும் பண்பிற்
    பரிந்தோடி யோட்டந்து பகட்டன் மின்னே

 

சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித்
    துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்
செருக்கிமிகை செலுத்தியும செய்கை வைகல்
    செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க
தருக்கிமிக வரையெடுத்த அரக்கன் ஆகந்
    தளரவடி யெடுத்தவன்றன் பாடல் கேட்டு
இரக்கமெழுந் தருளியஎம் பெருமான் பாதத்
    திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே

 

செல்வம், வறுமை, காம, க்ரோதம், மத, லோபம், புண்ணியம், பாவம், சுருக்கம், பெருக்கம், காலநிலை உள்ளிட்ட ஏராளமான மாய சக்திகள் தம் தம் வேலையை இதை ஓதுபவரிடம் காட்ட முன் வருமா, என்ன? வரவே வராது!

 

பாடலை நிறுத்தி மனதில் சுவைத்து பக்தியுடன் பாராயணம் செய்வோம்; பரமனின் அருளைப் பெறுவோம்.

**************

Qualities of a Doctor and a Quack!

doctor3

Compiled  by London swaminathan

Post No.2252

Date: 17 October 2015

Time uploaded in London: 15-35

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

1.Vaidya Gunah – Qualities of a Physician

Srute paryavadaatatvam Bahuso drstakarmataa

Daakshyam Saucam iti jneya vaidye Guna chatustayam

–Charaka (sutra) 9-6

Srute paryavadaatatvam =Excellence in Medical Knowledge

Bahuso drstakarmataa = Extensive Practical Experience

Daakshyam = Skill

Saucam = Cleanliness

doctor1

2.Physician’s Approach to Patients

Vaidya Vrtti

Maitri kaarunyamaarteshu sakye pritirupekshanam

Prakrutistheshu butesu vaidyavrttischaturvidhaa

–Charaka (sutra) 9-26

Maitri = Friendship

Kaarunya = compassion

Priti = Pleasure

Upekshanam = Sympathy

doctor4

3.Fake Doctors (not to be honoured)

Apuujya Vaidyaah

Kucela: karkasa: stabhdho graamani svayamaagata:

Pancha vaidyaa na puujyante Dhanvantrisamaa api

Even if he is equal to Dhnavantri, the God of Medicine, don’t honour the following five physicians:

Kucela =Untidily dressed

Karkasa = Rough

Stabdha = Stubborn

Graamani = Pervert

Svayamaagata = One who visits on his own (uninvited)

doctor5

Tamil Wisdom on Doctors and Medicines

Great Tamil poet Tiruvalluvar in his Tirukkural (Chapter 95) says

A).Let a skilful Doctor who knows medicine,

study the patient,

the nature of the disease,

the season,

then treat him

B).Medical treatment implies fourfold elements:

Patient, Doctor, Medicine and the Nurse

C).Let disease be diagnosed and its cause and let remedy be applied comfortably

D).He will be afflicted with diseases who eats immoderately.

doctor2

E).No medicine is needed for him who eats after knowing that what he has already eaten has been digested

F).If a man eats that which will not disagree with him, there will be no suffering for him.

G).As pleasure attends him who eats with studied moderation, so disease attends the glutton who eats ravenously.

-subham-

“நீல வர்ண ஸ்ருகால:” நீல நிற நரி!!

blue jackal

சம்ஸ்கிருத பொன்மொழிகள்

Written by London swaminathan

Post No.2251

Date: 17 October 2015

Time uploaded in London: 13-26

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

“நீல வர்ண ஸ்ருகால:”

ஆத்மபக்ஷம் பரித்யஜ்ய பரபக்ஷேசு யோ ரத:

ச பரைர் ஹன்யதே மூடோ நீலவர்ண ஸ்ருகாலவத் (ஹிதோபதேச)

தன்னுடைய சொந்த இனத்தை விட்டு யார் ஒருவர் வேறுபக்கம் செல்கிறாரோ, அவர்களை அந்த வேறுபக்க ஆட்கள் கொன்றுவிடுவார்கள்- நீல வர்ண நரிக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்பது சம்ஸ்கிருதப் பாடலின் பொருள்.

ஹிதோபதேசம் கதை

ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது. ஒரு நாள் பக்கத்திலுள்ள நகரத்தில் நுழைந்தது. அதைப் பார்த்து நாய்கள் குரைக்கவே அது, துணிகளுக்கு சாயமேற்றும் ஒரு சாயப் பட்டறையில் நுழைந்தது. அங்கே இருட்டாக இருந்தது. அந்த நரி தவறிப்போய், ஒரு சாயம் வைத்திருந்த ‘டிரம்’மில் விழுந்தது. உடலெல்லாம் நீலச் சாயம் ஏறியது. காலையில் காட்டுக்குள் வந்தவுடன் எல்லா மிருகங்களும் அதை விநோதப் பிராணியாகப் பார்த்தன. உடனே நரி, தான் தேவலோகத்திலிருந்து வந்திருப்பதாகவும் தானே அரசன் என்றும் பறைசாற்றியது. தன்னுடைய சொந்த இன நரிகளை அலட்சியம் செய்தது. சிங்கம் உள்பட, எல்லா மிருகங்களும் அடங்கி ஒடுங்கி , அதற்கு அடிமையாக இருந்தன. ஒரு நாள் எங்கோ நரிகள் கூட்டம் ஊளையிடுவதைக் கேட்டவுடன் நீலவர்ண நரிக்கும் பிறவிக்குணம் தலைக்கேறியது. மிகப் பெரிய சத்தத்தோடு ஊளையிட்டது. இதைப் பார்த்த் சிங்கம் முதலிய கொடிய விலங்குகள், அது வெறும் நரி, இவ்வளவு காலம் நம்மை ஏமாற்றியிருக்கிறது  என்று அறிந்து அதன் மீது பாய்ந்து அதைக் குதறிக் கொன்றன.

blue fox

xxx

பெண்ணுக்கு ‘அழகு’ குறி, அம்மாவுக்குப் ‘பணம்’ குறி!

ரூபம் வரயதே கன்யா, மாதா வித்தம், பிதா ஸ்ருதம்

பாந்தவா: கலுமிச்சந்தி மிஷ்டான்னமிதரே ஜனா: – பஞ்ச தந்திரம்

கல்யாணம் என்று வந்து விட்டால் பெண்ணுக்கு மாப்பிள்ளையின் அழகும், அம்மாவுக்கு மாப்பிள்ளையின் பணவசதியும், அப்பாவுக்கு மாப்பிள்ளையின் அறிவும், சொந்தக் காரர்களுக்கு அவனது குலமும், ஏனையோருக்கு கல்யாண விருந்தும் குறியாக (முக்கியம்) இருக்கும்!!!

Xxx

விக்ரீயந்தே ந கண்டாபிர்காவ: க்ஷீரவிவர்ஜிதா: — சார்ங்கதர பத்ததி:

பால் இல்லாத பசுக்களின் கழுத்தில் மணி கட்டினாலும் அதிக விலைக்கு விற்கமுடியாது.

Xxx

விஹ்வலா ஹி ராஜப்ரக்ருதி: — காதம்பரி

ராஜாவின் போக்கு சந்தேகத்துக்குரியது (அரசனிடம் கவனமாக இருக்க வேண்டும்)

ஒப்பிடுக:

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் – குறள் 691

பொருள்: –மன்னன் அருகில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். தீ மூட்டி குளிர்காயும்போது எப்படி தீக்கு மிக அருகிலும் அல்லது தீயிலிருந்து மிகத் தொலைவிலும் செல்வதில்லையோ அப்படி அகலாது, அணுகாது பழக வேண்டும்

 

“பாம்பு என்று தாண்டுவதா, பழுது என்று மிதிப்பதா?”

“பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல் – திரிகடுகம்”

Xxx

 

வ்ருத்தா நாரீ தபஸ்வினீ – சாணக்ய நீதி தர்பணம்

வயது முதிர்ந்துவிட்டால் பெண்கள் எல்லாம் தவசிகள் (அவ்வையார்) ஆகிவிடுவர்.

ஒப்பிடுக:

சௌ சூஹே காகர் பில்லீ ஹஜ் கோ சலீ

Xxx

நாஸ்தி கங்கா சமம் தீர்த்தம் நாஸ்தி மாத்ரு சமோ குரு:

கங்கையின் புனிதத்துக்குச் சமமான ஜலம் இல்லை’

அம்மாவுக்குச் சமமான குருவும் இல்லை.

ராமகிருஷ்ண பரம ஹம்சரும் மூன்று “க” முக்கியம் என்பார். கங்கை, கோவிந்தன், காயத்ரி.

ஆதிசங்கரர் பஜகோவிந்தத்திலும்  கங்கா ஜலம், கோவிந்தன் (முராரி), பகவத் கீதை ஆகிய மூன்று ‘க’ முக்கியம் என்பார்.

—சுபம்–

தலாய் லாமாவிடம் ஒரு திடுக்கிடும் கேள்வி கேட்ட விஞ்ஞானி!

File photo dated 18/04/13 of the Dalai Lama, as Glastonbury has announced he is going to make a guest appearance at the famous festival. PRESS ASSOCIATION Photo. Issue date: Thursday June 25, 2015. The exiled Tibetan spiritual leader will visit the event on Sunday as part of a UK visit which will also take in Aldershot. See PA story SHOWBIZ Glastonbury. Photo credit should read: Paul Faith/PA Wire

Written by ச.நாகராஜன்

Post No.2250

Date: 17 October 2015

Time uploaded in London: 8-49 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

பாக்யா வார இதழில் வெளியாகும் அறிவியல் துளிகள் தொடரில் 243வது அத்தியாயமாக 16-10-2015 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

தலாய் லாமாவிடம் ஒரு திடுக்கிடும் கேள்வி கேட்ட விஞ்ஞானி!

.நாகராஜன்

நான் ஹிந்து இல்லை. ஆனால் அவர்களின் கொள்கையான மறுபிறப்பை நான் ஆதரிக்கிறேன். அது ஈடு இணையற்றது. பகுத்தறிவுக்கு ஒத்தது. சமயப் பற்றுள்ளது. மனிதர்களைத் தீய காரியம் செய்ய விடாமல் தடுப்பது.

                                          –  வில்லியம் ஜோன்ஸ்

dalai1

உலகிலுள்ள கோடிக்கணக்கான புத்த மதத்தினரின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா. இன்று உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரான இவரது ஒரு பெரும் சிறப்பு, விஞ்ஞானிகளுடன் இவர் அடிக்கடி அளவளாவுவது தான்! விஞ்ஞானிகளுக்கு இவரைக் கண்டால் மிகவும் பிடிக்கும்.

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தயங்காமல் பதில் சொல்வதுடன் அவர்களைக் கேள்விகள் கேட்டு திகைக்கவும் வைப்பார். 1999ஆம் ஆண்டில் இந்தியாவில் இவர் தங்கி இருக்கும் தர்மஸ்தலாவில் 30க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை அழைத்து ஆன்மீகத்தையும் அறிவியலையும் ஒருங்கிணைப்பதற்கான கலந்துரையாடல் கூடிய ஒரு கருத்தரங்கத்தை இவர் ஏற்பாடு செய்தார்.

ஒரு விஞ்ஞானி இவரது தாராளமான அணுகுமுறையைப் பயன்படுத்த நினைத்தாரோ என்னவோ, திடீரென்று வெடிகுண்டு போல ஒரு கேள்வியை அவர் மீது தூக்கிப் போட்டார்.

தலாய் லாமா அவர்களே! புத்தமதத்தை நீங்களே விட்டு விடும் வகையில் ஏதேனும் அறிவியல் கொள்கை இருக்கிறதா? அப்படி ஒன்று ஏற்படுமா?”

அனைவரும் திகைத்து விட்டனர். உலகின் புத்தமதத்தினரின் குருவைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி! கேட்கலாமா? கேட்பது முறை தானா?

தலாய் லாமா கோபப்படவில்லை.

dalai2

மெல்லிய குரலில் இனிமையாகப் பதில் கூறினார்:-“இதுவரை அப்படி ஒரு கொள்கையும் இல்லை. ஒருவேளை விஞ்ஞானிகள் மறுபிறப்பு என்பதே இல்லை என்று நிரூபித்தால் நான் புத்த மதத்தைத் துறப்பது பற்றி மறு சிந்தனை செய்யக் கூடும்!”

எப்படிப்பட்ட அருமையான பதில்! விஞ்ஞானிகள் வாயடைத்துத் திகைத்து நின்றனர்.

இன்றைய விஞ்ஞானத்தால் பதில் கூற முடியாத ஆயிரக் கணக்கான கேள்விகள் உள்ளன? பல கோடி அண்ட பிரபஞ்சங்கள் உள்ள படைப்பின் நோக்கம் என்ன? படைத்தவர் யார்? உயிர் எப்படி கருவை எந்த சமயத்தில் அடைகிறது? எப்படி மனிதனை விட்டு உயிர் பிரிகிறது? உணர்வு எப்படி உருவாகிறது? மனத்தின் மாண்புகள் என்னென்ன? மனிதன் இறந்த பின் மீண்டும் பிறக்கிறானா? மூளையின் சிக்கலான அமைப்பையும் மனத்தையும் பகுத்தறிவையும் கொண்ட ஒரு ரொபாட்டை அமைக்க முடியுமா? இப்படி ஆயிரக் கணக்கான கேள்விகள் உள்ளன.

ஆனால் தலாய் லாமா சிக்கலான பெரிய விஷயங்களில் விஞ்ஞானிகளைத் ஒரு தட்டு தட்டுவது போல மறு பிறப்பு பற்றி மட்டும் சுட்டிக் காட்டினார். அதற்கு அவ்வளவு முக்கியத்துவத்தைத் தந்தார்.

இன்றைய விஞ்ஞான உலகில் மறு பிறப்பு பற்றிய ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன. கிடைக்கும் தகவல்கள் விஞ்ஞானிகளையே பிரமிக்க வைக்கின்றன.

லிடியா ஜான்ஸன் என்ற அமெரிக்கப் பெண்மணியின் கேஸ் வியப்பூட்டும் ஒன்று. பிலடெல்பியாவில் வாழ்ந்து வந்த முப்பத்தேழே வயதான அந்தப் பெண்மணிக்கு ஜென்ஸன் ஜாகோபி என்ற மனிதனைப் பற்றிய அனைத்து நினைவுகளும் வந்தன. இதில் திகைப்பூட்டும் ஒரு விஷயம் ஜாகோபி என்பவர் ஸ்வீடனில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நபர். அந்தக் கால ஸ்வீடிஷ் பாஷையில் அந்தப் பெயரை யென்ஸன் எக்கோபி என்று அவர் உச்சரித்தார். அவரைப் பற்றி கேள்விகள் கேட்ட போது பழைய கால ஸ்வீடிஷ் மொழியில் சரளமாகப் பேசலானார்.

அமெரிக்கப் பெண்மணிக்கு 17ஆம் நூற்றாண்டு ஸ்வீடன் மொழி எப்படித் தெரியும்? சரளமாக அதில் ஒரு நொடி நேரத்திற்குள் எப்படி உரையாட ஆரம்பிக்க முடியும்? 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல ஸ்வீடன் தேசத்துப் பொருள்களை மட்டும் தனியே அவரால் பிரித்தெடுக்க முடிந்தது.

மகாத்மா காந்திஜியின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்த சாந்தி தேவி பற்றிய சம்பவம் உலகில் மறுபிறப்பு ஆய்வில் முக்கிய பங்கை வகிக்கிறது. 1926ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் பிறந்த சாந்தி தேவி திடீரென்று தன் முந்தைய பிறப்பைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள். தனது ஊரான மதுராவைப் பற்றி விவரித்த அவள் தனது (முந்தைய ஜென்ம) கணவரான  கேதார் நாத் சௌபே பற்றி விவரிக்கலானாள். ஆர்வம் தாளாத ஒரு தலைமை ஆசிரியர் அந்த கிராமத்தில் சாந்தி தேவி குறிப்பிட்ட முகவரிக்கு கேதார் நாத் பெயரில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். பதில் வந்ததுகேதார்நாத்திடமிருந்தே!

 ஒன்பது வயதுச் சிறுமி தன்னைத் தனது கிராமத்திற்கே அழைத்துச் செல்ல வற்புறுத்தினாள். அங்கு அவள் அழைத்துச் செல்லப்பட்ட போது தனது முன் ஜென்ம உறவினர்களை மறக்காமல் அடையாளம் கண்டு அளவளாவினாள். தனது முந்தைய வீட்டிற்குச் சென்ற அவள் க்ளைமாக்ஸான ஒரு காரியத்தை அனைவரும் வியக்கும்படி செய்தாள்.

dalai time

தான் ஒரு டின் பெட்டியில் காசை வைத்து ஒரு மூலையில் புதைத்து வைத்திருப்பதாகவும் அதை எடுக்க வேண்டும் என்றும் அவள் கூறிய போது அனைவரும் வியந்தனர். அவள் சொன்ன மூலையைத் தோண்டிய போது டின் பெட்டியில் பணம் இருந்தது.

உலகளாவிய விதத்தில் பரபரப்பூட்டிய சிறுமி சாந்தி தேவி மறு ஜென்ம ஆய்வாளர்களுக்கு ஒரு முக்கிய கேஸ் ஆனாள். மகாத்மாவோ ஒரு குழுவை அனுப்பி அனைத்து விவரங்களையும் சரி பார்க்கச் செய்து திருப்தி அடைந்தார்.

காந்திஜி மறுபிறப்பு கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். டால்ஸ்டாயின் ஒரு நூலின் பகுதியை வெளியிட அவர் அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை அவருக்கு எழுதிய காந்திஜி அதில் மறுஜென்மம் இல்லை என்று டால்ஸ்டாய் கூறி இருக்கும் பகுதியை மட்டும் தான் எடுத்து விட விரும்புவதாகவும் இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே தனது நாட்டு மக்களை எழுப்பி உத்வேகம் ஊட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார். டால்ஸ்டாயும் காந்திஜியின் விருப்பப்படியே அப்பகுதியை நீக்க ஒப்புதலும் அளித்தார்!

இனி மறு பிறப்பைத் தீவிரமாக ஆராய்ந்த ஒரு விஞ்ஞானியைப் பார்ப்போம்!

Percy Shelley bio docstoc.com

அறிவியல் அறிஞர் வாழ்வில்

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான ஷெல்லிக்கு இரசாயன பாடத்தின் மீது அளவற்ற ஆவல். அவர் முதலில் படித்த பள்ளியான ஸயான் ஹவுஸில் (Sion House) இருந்த ஒரு ஆசிரியர் அவரிடம் இந்த ஆர்வத்தைத் தூண்டி விட்டார். ஆனால் அவர் ஈட்டனில் உள்ள பள்ளியில் படிக்க வந்த போது இரசாயனம் படிக்கக் கூடாதென்று அவருக்கு தடை போடப்பட்டது. இதனால் எல்லா சோதனைகளையும் தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் செய்து மகிழ்ந்தார்.

ஒரு நாள் அவருக்குப் பாடம் கற்பிக்க வரும் ஆசிரியரான பெத்தல் (Mr Bethel) ஷெல்லியின் அறையிலிருந்து விசித்திரமான ஒலிகள் வருவதைக் கேட்டுத் திகைத்தார்.

என்ன செய்கிறாய், ஷெல்லி?” என்று கேட்டவாறே அவர் ஷெல்லியின் அறைக்குள் நுழைந்தார். அங்கு அவர் பார்த்த காட்சி அவரைத் திகைக்க வைத்தது. நீல நிற ஜுவாலை எரிய புகை நடுவே ஷெல்லி இருந்தார்.

என்ன செய்கிறாய், நீஎன்று அலறினார் ஆசிரியர்.

நான் பிசாசை எழுப்பிக் கொண்டிருக்கிறேன்என்றார் ஷெல்லி.

ஷெல்லியின் முன்னால் ஒரு கண்ணாடி ஜாடி இருந்தது. அதன் பெயர் லெய்டன் ஜார் (Leyden Jar) இரண்டு எலக்ட்ரோடுகளை வைத்து எளிய வழி மூலம் மின்சாரம் செய்வதற்கான ஜாடி அது.

அது என்ன என்று பார்க்க ஜாடியின் மீது கை வைத்தார் ஆசிரியர் பெத்தல். ஜாடியைத் தொட்டதால் ஷாக் அடிக்கவே ஐயோ என்று கத்தியவாறே அங்கிருந்து வெளியில் ஓடினார் அவர்.

சோதனை ஜாடியின் மூலம் மின்சக்தியை வெளிப்படுத்திய கவிஞர் ஷெல்லி, பின்னால் கவிதை மூலமாகவும் துடிக்க வைக்கும் மின் ஆற்றலை வெளிப்படுத்தியது பொருத்தம் தானே!

*******************

EFFECT OF NEEM LEAVES!

Compiled by london swaminathan

Post No.2249

Date: 16 October 2015

Time uploaded in London: 17-13

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

A lesson learnt!

In a village there lived a couple. The husband was often given to quarrelling with his wife. Whenever they quarrelled the husband would hold out a threat to his wife that he would renounce his home and become a Sadhu. The wife led a miserable life owing to her husband’s behaviour.

On the outskirts of the village a sadhu lived in his hut engaged in meditation and in imparting in spiritual advice to aspirants who went to him in the evenings. Among them, this young man was one.

One day when the husband was away to a neighbouring village on some business, his wife paid a visit to the sadhu and complained to him about how her husband threatened her that he would run away from home , and become a sadhu. The sadhu advised her that when her husband next held out the threat, she should tell him to go away and do what he liked.

neem leaves

After some days the husband again had sharp differences with his wife and as was his vogue said that he would become a Sadhu and run away from home. The wife retorted that he might do as he pleased. The husband, in a huff, left home and went straight to the sadhu in the hut. The man told the sadhu that he had cut off all relationships with his home and the world and spend rest of his life in the service of the sadhu. The sadhu welcomed him and asked him to be seated.

Lunch time was approaching. The sadhu instructed one of his disciples to bring a good quantity of neem leaves. These leaves are very bitter. He was asked to grind them and make Laddus out of them. The disciple did not take much time to get the Laddus ready. The man who had quarrelled with his wife was closely watching the situation.

Neem-Tree (1)

Meanwhile the sadhu held a discourse on the efficacy of Neem (Margosa) leaves. He said for improving health and observing Brahmacharya (chastity) , neem leaves are most efficacious and added that he had decided to have for food on that day and the next day the diet of Laddus made of neem leaves. At the suggestion of the Guru, Laddus were at once served to the devotees who were present in the hut at that time. A big Laddu fell to the share of the irascible visitor. The visitor had no other go than to eat the Laddu with a wry face. The same food was served also in the evening, and the next morning. Before noon next day the visitor strangely disappeared and found himself at his home, as quiet and tame as one could be under the circumstances. From that time he neither quarrelled with his wife nor threatened her as he did before.
Story told by Swami Ramdas of Anandashram

வேப்ப மர மகிமை!!!

neem leaves

எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல;

ஆன்மீகக் கட்டுரை!!!

Compiled by london swaminathan

Post No.2248

 

Date: 16 October 2015

Time uploaded in London: 13-26

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

Neem-Tree

ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் கணவன் மனைவி வசித்து வந்தனர். பொழுது விடிந்தால் சண்டைதான். மனைவி ஏதாவது பேசத் துவங்கினால் கணவன் சொல்லுவான்: “வாயை மூடு, இன்னும் ஒரு வார்த்தை பேசினால் நான் வீட்டைவிட்டு வெளியேறி சன்னியாசம் வாங்கிவிடுவேன்.” இதைக் கேட்டவுடன் அவளும் பயந்து வாயை மூடி விடுவாள்! பாவம் அந்தப் பதிவிரதை! ஒன்றும் செய்ய இயலாமல் விழித்தாள், முழித்தாள், தன்னையே பழித்தாள், நாட்களைக் கழித்தாள்!

ஒரு நாள் அவளுடைய கணவன் வெளியூர் வேலையாகப் போனார். அந்தப் பெண்மணியின் புத்தி வேலை செய்யத் துவங்கியது. தன்னுடைய கணவர் அடிக்கடி போய் தரிசித்துவரும் ஒரு துறவி கிராமத்துக்கு வெளியே ஒரு எளிமையான குடிலில் வசிப்பது அவளுக்குத் தெரியும். ஓடினாள், ஓடினாள், ஊரின் எல்லைக்கே ஓடினாள்!

குடிலில் வசிக்கும் குருநாதர் காலில் விழுந்தாள். சுவாமி! காப்பாற்றுங்கள். உங்களை வந்து தரிசித்துப் போகும் என் கணவர் காரணமே இல்லாமல் தினமும் கோபிக்கிறார். நியாயம் சொன்னால் சந்யாசம் வாங்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். நீங்கள்தான் வழி காட்டவேண்டும்” – என்றாள்.

குருநாதர் சொன்னார், “தாயே! அஞ்சற்க. அடுத்த முறை சந்நியாசி ஆவேன் என்று சொன்னால், “அன்பரே , போய்வாருங்கள். எனக்கு ஒன்றும் கவலை இல்லை” என்று சொல்லி கதவையும் திறந்து வெளியே அனுப்பிவிடுங்கள். என்னிடம் வரட்டும். அருள் மழை பொழிகிறேன் – என்றார்.

Neem-Tree (1)

மறு நாளும் வந்தது. சூரியன் உதிக்கத் தவறினாலும் தவறுவான். கணவன் சண்டைபோடத் தவறுவதில்லை! வழக்கமான பல்லவியை ஆரம்பித்தான். நீ ஏதேனும் சொன்னால் நான் வீட்டைவிட்டு வெளியேறுவேன். சந்யாசம் வாங்குவேன் – என்று மிரட்டினான்.

அவள் சொன்னாள், “ அன்பரே! போய் வாரும். உமக்கும் நல்லது, எமக்கும் நல்லது; எனக்கு இகலோக சௌக்கியம் கிட்டட்டும் உமக்கு பரலோக சாம்ராஜ்யம் கிடைக்கட்டும்” – என்று ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’– என்னும் பாணியில் சொல்லிவிட்டு வாசல் கதவையும் திறந்து வைத்தாள்.

அவன் ஆண் மகனல்லவா! வீராப்போடு வெளியேறினான். துறவியின் குடிலுக்கு வந்தான். “ஸ்வாமி! ஒரு நற்செய்தி. இன்று முதல் பந்த பாசங்களை வேரறுத்து விட்டேன். இனி எமக்கு எவ்வித உறவுமில்லை. வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம்; இனி உங்கள் பணியிலேயே வாழ்நாளைக் கழிக்கப் போகிறேன். குருவருள் இருந்தால் திருவருள் கிட்டுமன்றோ என்றான்.

குரு சொன்னார், “ வா மகனே! வா! உனக்காக இவ்வளவு நாளாகக் காத்திருந்தேன். என் காலடியில் அமர்க—என்றார்.

சற்று நேரத்தில், “சிஷ்யர்களே ஓடிவாருங்கள் ஞான திருஷ்டியில் கண்டுபிடித்த அற்புத உண்மையை நவில்வேன்! செவி மடுங்கள்!! என்றார். எல்லா சிஷ்யர்களும் வந்தனர். ஒரு சீடனை அழைத்து, சீடனே! வேப்பமரத்திலுள்ள எல்லா இலைகளையும் பறித்து வா. உதவிக்கு இன்னும் பலரை அழைத்துக் கொள் என்றார். அவனும் சிறிது நேரத்தில் வேப்ப மரத்தையே ஒடித்து வந்து நின்றான். அனைவரும் இந்த இலையை அரைத்து லட்டு போல உருட்டுங்கள் என்றார். எல்லோரும் வேப்பிலை லட்டு செய்தனர். இன்று முதல் நமது பிரதான உணவு இதுதான். இதனால் ஆரோக்கியம் பெருகும்; பிரம்மசர்ய சக்தி வளரும் என்றார். உடனே சிஷ்யர்கள், ஆளுக்கு பத்து, இருபது என்று வேப்பிலைக் கட்டிகளை – லட்டுகளை—பார்சல் கட்டிக் கொண்டனர். மனைவியை விட்டுப் புதிதாக வந்த சீடனும் அவ்வாறே செய்தான்.

காலை உணவு , மதிய உணவு, இரவு உணவு, மறு நாள் உணவு – என்று அல்லும் பகலும் அனவரதமும் வேப்பிலைக் கட்டி உணவுதான். திடீரென புது சிஷ்யன் மறைந்து விட்டார்! குருநாதர் ரகசியமாக ஒரு சீடனை உளவு பார்க்க அனுப்பினார். மனைவியை விட்டு ஆஸ்ரமத்துக்கு வந்த அந்த ஆசாமி, மீண்டும் வீட்டுக்கே திரும்பிப் போய்விட்டார் என்றும் வீட்டில் நல்ல சமையல் விருந்து மணம் வீசுகிறது என்றும் உளவாளி கண்டுபிடித்து வந்து குருநாதரிடம் சொன்னார்.

neem

திரும்பிவந்த கணவனுக்கு விருந்துச் சாப்பாடு. அவனும் வாய் திறக்கவில்லை. அந்த வீட்டில் அப்புறம் சண்டை சத்தமே இல்லை. வேப்பிலை ரகசியம் அந்த மனைவிக்கும் குருநாதருக்கும் மட்டுமே தெரியும்!

–சுபம்–

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 2

cuba-5

Compiled by S NAGARAJAN

Post No.2247

 

Date: 16 October 2015

Time uploaded in London: 7-48 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

அறிவியல் துளிகள்

பாக்யா 9-10-2015 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 242ஆம் அத்தியாயமாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 2

First Part of this article was published yesterday in this blog.

.நாகராஜன்

, வருணரே! எங்களைப் பேரிடரிலிருந்து காப்பீராக!

                                          –  அதர்வண வேத பிரார்த்தனை

 

napoleon

நெப்போலியனின் ரஷியப் படையெடுப்பு

1812ஆம் ஆண்டு. நெப்போலியனின்  படை ஆறு லட்சம் போர் வீரர்களைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப் பெரும் படையாக உருவாகி இருந்தது. எதற்கும் அஞ்சாத போர் வீரர்கள்! ரஷியாவிற்குள் அஞ்சாமல் சென்றான் நெப்போலியன். குளிர்காலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் நெப்போலியனுக்குக் அது ஒரு கவலைப் படக் கூடிய விஷயமா, என்ன! அவனது தளரா நம்பிக்கைக்கு முன்னர் எதுவும் துச்சம் தான்! மாஸ்கோவைப் பிடிக்கும் ஆவலில் படை முன்னேறியது. நகர் சூறையாடப்பட்டது. போர்வீரர்கள் தம் மனைவிமாருக்குக் கொடுப்பதற்காக ஏராளமான நகைகளைக் கொள்ளை அடித்திருந்தனர். ஆனால் நெப்போலியன் அறியாத ஒரு சின்ன உண்மை, ரஷியாவின் குளிர் பயங்கரமான ஒன்று என்பது தான்! ரஷியாவிலிருந்து வெற்றிக் களிப்புடன் படை வெளியேறிய போது குளிர் மைனஸ் நாற்பது டிகிரி செல்ஸியஸ் என்ற உறைகுளிர் நிலையை அடைந்து விட்டது.மைனஸ் நாற்பது என்பது ஒரு அபூர்வமான உஷ்ணநிலை. மைனஸ் நாற்பது செல்ஸியஸும் மைனஸ் நாற்பது ஃபாரன்ஹீட்டும் ஒரே அளவு என்ற விசித்திர நிலை மைனஸ் நாற்பது டிகிரியில் ஏற்படுகிறது. வீரர்கள் பொத் பொத்தென்று விழுந்தனர்; இறந்தனர். ஒரு நாளில் மட்டும் 50000 வீரர்கள் இறந்தனர். ரஷியாவை நோக்கிச் சென்ற ஆறு லட்சம் படைவீரரில் மீண்டு வந்தவர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தான்! மகத்தான இழப்பு!! வந்தவர்களும் நொண்டி நொண்டி வந்தனர். மாபெரும் தளகர்த்தனான நெப்போலியனின் வீழ்ச்சி ரஷியப் படையெடுப்பில் ஆரம்பித்தது. ரஷிய நாடானது அப்பொழுதிலிருந்து ஐரோப்பாவின் சக்தி மிகுந்த நாடாக வளர ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் காரணம் குளிர் தான்!

 

 Greek-Persian_duel

கிரேக்கர்பெர்ஸியர் போர்

பெர்ஸியா வலிமை வாய்ந்த நாடாக இருந்த சமயம். கிரீஸின் மீது அது தன் பார்வையைப் பதித்ததுஆனால் கிரேக்க படை தளகர்த்தனான தெமிஸ்டோக்ளஸ் ஒரு அபூர்வமான கால நிலை வல்லுநன். அவனுக்குக் கடல் காற்றின் வலிமை, அது எந்த திசையில் எப்படி அடிக்கும் என்பதெல்லாம் அத்துபடிகி.மு 480இல் போர் ஆரம்பித்தது. சலாமிஸ் என்ற இடத்தில் நடந்த கடும் போரில் காற்றைப் பற்றிய தன் அறிவால் அவன் வென்றான். கிரேக்க கலாசாரம் பிழைத்தது!

 

ஜப்பானை நோக்கிய குப்ளாய்கான்

13ஆம் நூற்றாண்டு. மங்கோலிய அரசனான குப்ளாய்கானின் பார்வை ஜப்பானின் மீது திரும்பியது. ஜப்பானின் மீது படையெடுத்துச் சென்ற அவன் தோல்வியுற்றான். காரணம் ஜப்பானில் அப்போது வீசிய புயல் காற்றோடு கூடிய பருவ மழையால்! இன்னொரு முறை படையெடுத்தான். அப்போதும் தோல்வி. அப்போதும் காரணம் புயல் காற்றுடன் வந்த பருவ மழை தான்ஜப்பானிய ஷிண்டோ குருமார்களுக்கோ ஒரே சந்தோஷம். அவர்களின் தீவிரமான பிரார்த்தனைக்கு வருணன் செவி சாய்த்து வெற்றி அருளி விட்டான் என்று. அந்தப் புயல் மழையை அவர்கள் காமிகேஸ் என்று அழைத்துக் கொண்டாடினர். காமிகேஸ் என்றால் தெய்வீகக் காற்று என்று பொருள்!

 kublai good

அடிமைகளின் புரட்சி தோல்வியில் முடிந்தது

1800ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி. ரிச்மாண்ட் என்ற இடத்தில் இருந்த ஆயிரக்கணக்கான அடிமைகள் தங்கள் எஜமானர்களை எதிர்த்து தீவிரமான புரட்சி ஒன்று நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அது மட்டும் நடந்திருந்தால் ஏராளமானோர் பலியாகி, வரலாறே மாறி இருக்கும். ஆனால் அடிமைகளின் துரதிர்ஷ்டம்அன்று ஒரு பெரும் மழையுடன் கூடிய புயல் வந்தது. புரட்சி தோல்வியுற்றது!

 

 

ஹிட்லரின் ரஷியயெடுப்பு

அசராத அசுரனான ஹிட்லரின் மின்னல் வேகப் படையெடுப்புக்கு சடசடவென நாடுகள் சுருண்டு வீழ்ந்தன. ராட்சஸனின் கண்கள் ரஷியா மீது பதிந்தன. 1941ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரஷிய படையெடுப்புக்கு நாள் குறித்தான் அவன். அந்தப் படையெடுப்பின் பெயர் ஆபரேஷன் டைபூன். ரஷியாவை அவன் படைகள் தாக்கின. படையெடுப்பில் வெற்றியோ நிச்சயம். ஆகவே ஜெர்மானிய வீரர்கள் ரஷிய ரெட் ஸ்குயரில் வெற்றி அணிவகுப்பின் போது அணிய வேண்டிய வெற்றி யூனிஃபார்மையும் எடுத்துச் சென்றனர். அவ்வளவு நம்பிக்கை. ஆனால் அது ரஷியாவின் கடுங் குளிர் காலம்வெற்றி சீருடையை மறக்காமல் எடுத்துச் சென்ற ஜெர்மனி வீரர்கள் மறந்தது குளிர்காலத்தில் போட வேண்டிய ஆடைகளைத் தான்! விளைவுமாஸ்கோவின் வெளிப்புறத்திலும் ஸ்டாலின்கிராடிலும் வீரர்கள் சுருண்டு செத்தனர். படையெடுப்பு பெரும் தோல்வியைத் தழுவியது. ஸ்டாலினும் ரஷிய மக்களும் மகிழ்ந்தனர். ரஷியாவின் குளிர் வரலாற்றைப் பல முறை மாற்றிய தெய்வீகக் குளிர்!

 hitler

மாயன் நாகரிக அழிவின் மர்மம்

மாயன் நாகரீகம் எப்படித் திடீரென மறைந்தது என்பது பற்றி வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரே திகைப்பு. ஆனால் அதை ஆராய்ந்த கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லாமண்ட் டோஹெர்டி ஆப்ஸர்வேடரி அண்ட் தி நாஸா காடண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் ஸ்டடீஸில், உலக காலநிலை மாதிரிகளை அமைத்து ஆராயும் பேராசிரியர் பெஞ்சமின் குக் என்பவர் மாயன் நாகரிகம் அழிவதற்குக் காரணம் அவர்களே எனத் திட்ட வட்டமாகத் தெரிவிக்கிறார்.

திடீரென ஏற்பட்ட பஞ்சத்தால் லட்சக்கணக்கில் மக்கள் அழிந்து பட்டனர். ஆனால் இந்த திடீர் பஞ்சம் இயற்கையினால் ஏற்பட்ட சாபம் அல்ல; அவர்கள் காடுகளை அபரிமிதமாக அழித்ததினாலேயே பஞ்சம் ஏற்பட்டது என்கிறார்.

ஆக காலநிலை மாறுதல்களால் உலகின் வரலாறும் வரைபடமும் மாறிக் கொண்டே இருக்கிறது. போர்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வீரமும் புத்திசாலித்தனமும் மட்டுமல்ல. காலநிலையும் கூட என்பதை வரலாறு தெரிவிக்கிறது.

இயற்கையான காலநிலை மாறுபாடுடன் மனிதன் இன்றைய உலகில் எல்லா நாடுகளிலும் காடுகளை வெகு வேகமாக அழித்து வருகிறான்.

மக்களுக்கு காடுகளின் முக்கியத்துவம் தெரியவே இல்லை என்பது விஞ்ஞானிகளின் புலம்பலாக மாறி விட்டது.

தன்னைத் தன்னைத் தானே அழித்துக் கொள்ளலாமா என விஞ்ஞானிகளில் பலர் வெளிப்படையாக மனித குல அழிவு பற்றி வேதனை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

காலநிலை மாறுதல்கள் பற்றிய செய்திகளை அறிந்தால் இயற்கையை இன்னும் அருமையாகப் பாதுகாக்க மனம் வரும், இல்லையா!

 Mayan-Calendar

 

 அறிவியல் அறிஞர் வாழ்வில்

பிரபல விஞ்ஞானி. தாமஸ் ஆல்வா எடிஸன் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு.

நான் இரண்டு முறை வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் என்று ஒருமுறை அவர் கூறினார்.

விவரத்தையும் அவரே கூறினார் இப்படி: முதலில் ஒரு ஆபீஸில் நான் டெலிபோன் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த மெஷினிடம் எனக்கு மிகவும் ஈடுபாடு வந்து விடவே அதையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அதனால், வந்த செய்திகளை அனுப்புவதற்கு மறந்து விட்டேன். அவ்வளவு தான், என்னை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.

எடிஸன் சிரித்தவாறே தொடர்ந்தார்:—“இன்னொரு ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்தேன். பழைய கால கட்டிடம் அது. எங்கு பார்த்தாலும் எலிகள். அவற்றின் அட்டகாசம் என்னால் பொறுக்க முடியாத அளவிற்குப் போனது. ஈக்களை அடித்துக் கொல்வது போல எலிகளைக் கொல்ல ஒரு சாதனத்தைக் கண்டு பிடித்தேன்.

edison

அவ்வளவு தான், அறை முழுவதும் கொலையுண்ட எலிகளின் துண்டுகள் சிதறிக் கிடந்தன. அறையைப் பார்த்தவர்கள் உடனே என்னை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

எப்போதும், எதனாலும் மனம் தளராதவர் எடிஸன்!

***************