வேதாந்த தேசிகர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் (Post No.2730)

sri_vedanta_desika_makers_of_indian_literature_idg228

Written by london swaminathan

Date: 16 April, 2016

 

Post No. 2730

 

Time uploaded in London :– 8-50 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

DAYA-SATAKAM_BY_VEDANTA_D

வேதாந்த தேசிகர், ஸ்ரீ இராமனுஜர் காலத்தைத் தொடர்ந்து வந்த பெரிய வைஷ்ணவ ஆச்சார்யார்; தத்துவ வித்தகர்; கவிஞர்; பல நூற்கண்ட பெருமகனார். நூற்றுக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத நூல்களை யாத்தவர். மாலிக்காபூர் தலைமையில் வந்த முஸ்லீம் வெறியர்களின் தாக்குதலுக்குப் பின்னர், ஸ்ரீரங்கப்பெருமாளை கோவிலில் மீண்டும் ஸ்தாபிக்க ஊற்றுணர்ச்சி தந்தவர். இவர் இற்றைக்கு 750 ஆண்டுகளுக்கு முன் வழ்ந்தவர். வித்யாரண்ய ஸ்வாமிகளின் சம்காலத்தவர். இவருடைய பாதுகா சஹஸ்ரம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

 

காஞ்சீபுரம் அருகிலுள்ள தூப்புலில் அவதரித்த வேங்கடநாதன் (பிற்காலப் பெயர் வேதாந்த தேசிகர்) ஆதி சங்கரர் போலவே இளம் வயதிலேயே வேத, வேதாந்த நூல்களில் கரைகண்டார். அவரைப் போலவே கீதை, உபநிஷதம் முதலியவற்றுக்கு விசிஷ்டாத்வைத பூர்வமாக உரையும் கண்டார். (ஆதி சங்கரர் அத்வைத பூவமாக உரைகண்டர்)

 

 

ஒரு நாள் சிற்பி ஒருவன் தேசிகரிடம் வந்து நீங்கள் சிற்ப நூலிலும் வல்லவராமே; என்னை வெற்றிகொள்வீரானால் உமது ‘சர்வ தந்திர சுதந்திரர் – என்னும் பட்டம் நீடிக்கும் அல்லது உமக்களிக்கப்பட்ட பட்டத்தை விட்டுவிட வேண்டும் என்றார்.

இது சிற்பியின் வேலை அல்ல, தன் மீது பொறாமை கொண்ட கும்பலின் வேலை என்பது வேதாந்த தேசிகருக்கு நன்கு தெரியும். பெருமாளின் அருளுடன் போட்டியில் வெல்லலாம் என்ற நம்பிக்கையுடன் அவரும் போட்டிக்கு இசைந்தார். ஆனால் தான் செய்யும் மூர்த்திக்குப் பீடம் அமைத்து அதை நிறுவும் பணியைச் சிற்பி செய்யவேண்டுமென்று தேசிகர் பதில் நிபந்தனை போட்டார். அதைச் சிற்பியும் ஏற்றான்.

 

என்ன விக்ரகம் செய்வதென்று எண்ணியபோது, அவருக்கு ஆவேசம் வந்தது. இடது கையில் கோசமும், வலது கையில்  ஞான முத்திரையும் உள்ள கோலத்தில் அமைக்கவும் என்று ஸ்ரீரங்கநாதரே உத்தரவிட்டார். அப்படியே தேசிகர், ஒரு விக்கிரகமும் செய்து கொடுத்தார்.

 

விக்கிரகததை வாங்கிய சிற்பி, அதில் கண்பார்வை சரியில்லை என்று சொல்லி, அதைச் சரி செய்வதாக, விக்கிரகத்தின் கன்னத்தில் ஆயுதத்தால் தட்டினான். உடனே எதிரேயிருந்த  தேசிகர் கன்னத்தில் ரத்தம் கசிந்தது. அங்குள்ளோர் உடனே விக்கிரகத்தில் பிழை இல்லை, சிற்பி செய்த பீடத்தில்தான் தப்பு என்று சொன்னார்கள்.

உடனே தேசிகரே பீடத்தை வாங்கிச் சீராக்கி, அதில் விக்கிரகத்தை எழுந்தருளச் செய்தார். பின்னர் சிற்பி, அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, வந்த வழியே திரும்பிப் போனான்.

Xxx

eleven-rahasya-granthas-of-sri-vedanta-desika

டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் தமிழ் நாட்டிற்குப் படையெடுத்து வந்து, மதுரை ஸ்ரீரங்கம் கோவில்களைச் சூறையாடினான். கோவிலை இடித்து டன் கணக்கில் தங்க நகைகளைக் கொள்ளையடித்தான். ஆனால் இதை முன்கூட்டியே அறிந்த பட்டர்கள், மூலஸ்தான விக்கிரகத்துக்கு முன்னால் ஒரு போலிச் சுவர் எழுப்பி அதுதான் கோவில் என்பது போலவும் சிலைகள் வேறிடத்துக்கு மாற்றப்பட்டன என்பன போலும் காட்டினர். உற்சவ விக்கிரகங்களை திருமலை/திருப்பதிக்கு அனுப்பினர். அதை எடுத்துச் சென்ற குழுவில் தேசிகரும் ஒருவர்.

 

அக்காலத்தில் செஞ்சி பகுதியை  கொப்பணாரியர் என்பவர் ஆண்டுவந்தார். அவருடைய ஆளுகையிலிருந்த அழகிய மணவாளம் என்ற கிராமத்திலிருந்த  சிங்கப்பிரான் என்பவன், முஸ்லீம் படைத்தலைவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, அவருடைய நம்பிக்கையைப் பெற்றான். எல்லா செல்வங்களையும் கொள்ளையடித்து அவனிடம் ஒப்படைப்பதாகவும் சொன்னான். துருக்கப்படைகள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் வந்தது.

 

செஞ்சி அரசன் கொப்பணாரியனுக்குச் சிங்கப்பிரான் ஒரு ரகசிய கடிதம் எழுதி ஒரு குறிப்பிட்ட நாளன்று ஸ்ரீரங்கம் கோட்டைக் கதவுகளைத் திறந்து வைப்பதாகவும், செஞ்சி அரசன் படைகளுடன் வந்து அதைக் கைப்பற்றலாம் என்றும் கடிதத்தில் எழுதியிருந்தான். அந்தத் திட்டப்படி செஞ்சி அரசனும் திருவரங்கத்துக்குப் படைகளுடன் வந்து சேர்ந்தான். சிங்கப்பிரான், முன் ஜாக்கிரதையாக கண்ணனூரில் தங்கியிருந்த படைகளுக்கு மதுபான விருந்து வைத்து அதில் மயங்கி மூழ்கும்படி செய்து வைத்தான். கோட்டைக்குள் புகுந்து கோவிலுக்குள் வந்த செஞ்சி அரசன், அங்கு இருந்த மிலேச்சர்களை விரட்டிவிட்டு, வைணவ ஆச்சார்யார்களை மீண்டும் அழைத்து, கோவிலைச் சுத்தம் செய்து, அலங்கரித்து மீண்டும் உற்சவ மூர்த்திகளைக் கொண்டுவந்தார். மூலத்தானத்திலுள்ள கல்திரையை அகற்றி பெருமாள் சேவையை முன்போல் மீண்டும் துவக்கினார்.

 

திருவரங்கத்தில் நடந்த இந்த விருத்தாந்தங்களையெல்லாம் கேட்டறிந்த வேதாந்த தேசிகர் தம் பரிவாரம் புடை சூழவந்து பெருமாளைத் தரிசித்து ஆனந்தப் பரவசக் கடலில் மூழ்கினார். அப்பொழுது கோவிலிலிருந்த பட்டரின் வேண்டுகோளின்படி கொப்பணாரியர் செய்த அரும்பணியை இரண்டு ஸ்லோகங்களில் பாராட்டினார்.  அவை சேனை முதலியார் பிரகாரத்தில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன.

 

அவர் பாடிய பாடலின் பொருள்:-

“நீல நிறமான சிகரங்களோடு கூடி மக்களுக்குப் ப்ரீதியை உண்டாக்குகிற அழகிய மணவாளனை, உபய நாச்சிமாருடனும், திருமலையிலிருந்து இங்கே எழுந்தருளப் பண்ணி, (அதற்கு முன்) செஞ்சி  நாட்டிலே சில நாள் ஆராதனம் செய்வித்துப் பிறகு, துருக்கரை வெற்றி கொண்டு, பெருமாளை அவரது இடத்தில் எழுந்தருளச் செய்த, ஸ்படிகம் போல மாசுமருவற்ற புகழுடைய   கொப்பணாரியர் விசேஷமான பணிகளைச் செய்து ஸ்ரீரங்கத்தில் மீண்டும் கிருதயுகத்தை உதிக்கச் செய்தார்.”

VEDANTA_DESIKA_HIS_LIFE_WORKS_PHILOSOPHY_by_Satyavrata_Singh_Chowkhamba_Sanskrit_Series_1958

இதற்குப் பின்னர், தேசிகர் நாள்தோறும், அழகிய மணவாளனுக்கு மங்களாசாசனம் செய்துகொண்டு சுகமாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்தார்.

–சுபம்–

சூரிய கிரகணமும் மன்னர்கள் மரணமும்! (Post No 2729)

A total solar eclipse – but cloud cover means Australia's best viewing area might get only a glimpse

WRITTEN BY S NAGARAJAN

Date: 16 April 2016

 

Post No. 2729

 

Time uploaded in London :–  6-34  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

பாக்யா 8-4-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியான கட்டுரை

 

சூரிய கிரகணமும்  மன்னர்கள் மரணமும்!

 

ச.நாகராஜன்

 

solar-eclipse

“சுக்கிரனின் சஞ்சாரம் என்பது பிரமாதமான ஒரு விஷயம் இல்லை. ஆனால் முழு சூரிய கிரகணம் என்பதோ அற்புதமான ஒரு விஷயம்” – நீல் டி க்ராஸ் டைஸன்

 

 

பவேரியா மன்னனான லூயி 840ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி சூரிய கிரகணம் ஒன்றைப் பார்த்தான். பின்னர் உடனே அவனது மரணம் சம்பவித்தது. அவனது மூன்று மகன்களும் அரசுரிமைக்காகச் சண்டையிட ஆரம்பித்தனர். மூன்று வருடங்கள் கழித்து இந்த உரிமைப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. பிரம்மாண்டமான சாம்ராஜ்யம் மூன்றாகப் பிரிந்தது. அந்த மூன்று நாடுகள் தான் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி!

 

 

1133 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி சூரிய கிரகணம் ஒன்று இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் பார்க்கும்படி நிகழ்ந்தது. இங்கிலாந்து மன்னர்  முதலாம் ஹென்றி இந்த கிர்கணம் முடிந்தவுடன் நார்மண்டி என்னும் இடத்தில் இறந்து விட்டார். ஜெர்மானியிலோவெனில் அகஸ்பர்க் என்ற நகரில் வாழ்ந்து வந்தோரை ட்யூக் ஃப்ரடரிக் என்ற பிரபு கொலை செய்ததால் ஜெர்மனியே துயரில் ஆழ்ந்தது.

 

 

மன்னன்  மூன்றாம் ரிச்சர்டுக்கு சூரிய கிரகணம் என்றாலே பிடிக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரிட்டனில் 531 வருடங்களுக்கு முன்னர் 1485ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. கிரகணம் முடிந்தவுடன் ரிச்சர்டின் மனைவி இறந்து விட்டார். ஐந்து மாதங்கள் கழித்து ரிச்சர்டும் போஸ்வொர்த் என்ற இடத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டார். கதை இத்துடன் முடியவில்லை. 527 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அவர் உடல் 2012இல் மறுபடியும் உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

 

 

இள்வரசி டயானா பரிதாபகரமாக ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டார்.  1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி சூரிய் கிரகணம் நிகழ்ந்ததற்கு முதல் நாள்  இந்த விபத்து நேர்ந்தது.

 

வரலாற்று ஆசிரியரான யூயார்சுகியாடி சூரிய கிரகணமும் மன்னர்கள் ம்ரணமும் என்பது பற்றி ஒரு புத்தகத்தையே எழுதி விட்டார். தாய்லாந்து வரலாறு பற்றி இவர் ஆராய்ச்சி செய்ததால் அங்கு நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றிய சுவையான தகவல்களை இவர் தந்துள்ளார்.

 

solar britain

1699ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தை நராய் என்னும் மன்னன் பார்த்தான். அவன் சூரிய ராஜா என்று புகழப்பட்ட பதினான்காம் லூயியுடன் நல்ல ராஜீய உறவுகளைக் கொண்டிருந்தான்.பொழுதுபோக்காக வானியல் நிகழ்வுகளை ஆராய்வது நராயின் வழக்கம்.. அவன் நாட்டிற்கு வந்த பிரெஞ்சு மிஷனரிகள் கூறிய பீஜிங்கில் நிறுவப்பட்ட வானியல் ஆய்வுக் கூடம் பற்றிக் கேள்விப்பட்ட் அவன் தனது நகரிலும் அது போல ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பி லாப்பூரி என்ற இடத்தில் இருந்த தன் அரண்மனையில் அமைக்கச் சொன்னான். அங்கு அமைக்கப்பட்ட வானியல் கூடத்திலிருந்து தான் அவன் இந்த கிரகணத்தைப் பார்த்தான்.அவனுடன் கூட இருந்து கிரகணத்தை அவனது அரசவை பிரபுக்களில் ஒருவனான பெட்ராச்சாவும் பார்த்தான். பெட்ராச்சாவின் ஜோதிடர்கள் வானில் வரும் பெரிய அறிகுறி அவன் மன்னனாகப் போவதற்கான அறிகுறி என்று தெரிவித்திருந்தனர்.

 

 

 

இந்த நிகழ்வைப் பார்த்த பெட்ராச்சா, :’தனக்கான அறிகுறி’ அது தான் என்று நம்பினான். எங்கே மன்னன் நராய் மிஷனரிகளின் பேச்சைக் கேட்டு கிறிஸ்தவ மதத்திற்குத் தழுவி விடுவானோ என்று பயந்த பெட்ராச்சா நராயைக் கவிழ்த்து அரசைக் கைப்பற்றினான். மிஷனரிகள் உள்ளிட்ட அயல் நாட்டார் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றினான். ஜோதிடர்கள் கூறிய படியே வானியல் நிகழ்வு ஒன்று அவன் மன்னனாக வழி வகுத்தது!

 

 

அடுத்து ஒரு சூரிய கிரகணம் 1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நிகழ்ந்தது. தாய்லாந்தில் அப்போது மன்னனாக இருந்தவன் சயாமைச் சேர்ந்த மாங்குட் என்பவன். இந்த கிரகணத்தைப் பார்க்க அவன் வா கோ என்ற கிராமத்திற்குச் சென்று அதைப் பார்த்தான். (இந்த மன்னனாக யூல் பிரின்னர் 1956ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தி கிங் அண்ட் ஐ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தார்)

 

 

மன்னனாக ஆவதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாங்குட் ஒரு பிட்சுவாக இருந்தான். ஐரோப்பிய வானவியலையும் கணிதத்தையும் அப்போது மாங்குட் நன்கு கற்றிருந்தான். தனது தேசத்திய சயாமிய வானவியலிலும் அவன் தேர்ந்திருந்தான். அது அவ்வளவு சரியாக இல்லை என்பதை உணர்ந்த அவன் அறிவியல் முறைப்படி காலண்டரையே மாற்றினான். தனது கணிதத்தின் படி சரியான நேரத்தைக் கணித்த அவன் கிரகணத்தைப் பார்க்க சிறந்த இடம் என்று வா கோ கிராமத்தையும் தேர்ந்தெடுத்து ஏராளமான அயல்நாட்டார், பிரெஞ்சு மிஷனரிகள் உள்ளிட்டோருடன் அங்கு முகாமிட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வா கோவில் மலேரியா ஜுரத்தினால் பீடிக்கப்பட்டு அவன் மரணமடைந்தான். இன்றும் தாய்லாந்து மக்கள் ம்ன்னன் மாங்குட்டை மறக்கவில்லை.

TSE99alderney1

 

 

அவன் நினைவைப் போற்றும் வண்ணம் இன்றும் கூட தாய்லாந்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி தேசீய அறிவியல் நாளாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

சூரிய கிரகண நிகழ்வுகளையும் மன்னர்களையும் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம்!

 

stamp alexis

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரான்ஸை சேர்ந்த சர்ஜனும் பிரபல உயிரியல் விஞ்ஞானியுமான அலெக்ஸி காரல் (தோற்றம் 28-6-1873 மறைவு 5-11-1944) Alexis Carrel மருத்துவத்திற்கான நோபல் பரிசை 1912ஆம் ஆண்டு பெற்றவர். பெரிய பகுத்தறிவுவாதியாக கடவுள் ந்மபிக்கையற்று இருந்த அவர் ஆத்திகவாதியாக மாறியது எப்படி? 1902ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சம்பவத்தினால் தான். அன்றைய தினம் அவர் ஒரு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அதே ரயிலில் பயணம் செய்த ஒரு மேரி பெய்லி என்னும் பெண் மரணத்தின் விளிம்பில் இருந்தாள். அவளுக்கு இருந்த் நோய் ட்யூபர்குலாஸ் பெரிடோனிஸ் என்னும் வியாதி. அவளைச் சோதித்த அலெக்ஸி காரல் அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டினார்.

book alexis2

லூர்துவிற்குக் கொண்டு செல்லப்பட்ட அவள் கோமா நிலையில் அங்குள்ள ம்ருத்துவமனையை அடைந்தாள். அவள் வயிற்றின் மீது லூர்துவின் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. என்ன ஆச்சரியம், அவள் நாடித்துடிப்பு சீராக ஆரம்பித்தது. அவள் வ்யிறில் இருந்த வீக்கம் வற்ற ஆரம்பித்தது. இதைப் பார்த்த அலெக்ஸி காரலுக்கு தன்னையே நம்ப முடியவில்லை. எந்த வித மருந்தும் இல்லாமல் ஒரு தீர்த்தம் தெளிக்கப்பட்டவுடன் அநேகமாக இறந்து விட்ட ஒரு பெண் எப்படி சாதாரண நிலைக்குத் திரும்ப முடியும்? அந்த அற்புத சம்பவம் அவரை முற்றிலுமாக மாற்றியது. பெரும் ஆத்திகராக் மாறிய் அவர் பிரார்த்தனையின் பலனைப் பற்றி அற்புதமாக ஒரு பெரிய கட்டுரையையே எழுதியுள்ளார். உலகின் தலை சிறந்த க்ட்டுரைகளில் ஒன்றாக் அது இன்று வரை போற்றப்படுகிறது!

carel

*************
 

 

 

 

உங்கள் அதிர்ஷ்டத்தை அறிய தொடுகுறி சாஸ்திரம்! –பகுதி 1 (Post No 2728)

todu spare1

Hindu Astrology – Magic Square (I will give the English Translation separately)

Compiled by london swaminathan

Date: 15 April, 2016

 

Post No. 2728

 

Time uploaded in London :– 21-02

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ஏதேனும் ஒரு காரியம் நிறைவேறுமா இல்லையா என்பதை அறிய நமது முன்னோர்கள் பல வழிகளைக் கையாண்டனர். ஜோதிடரிடம் ஜாதகத்தையோ, கைரேகையையோ காட்டி பலன் அறிவது அல்லது ரோட்டில் “சோசியம் பார்க்கல்லியோ, சோசியம்!” என்று கூவிக்கொண்டுவரும் நரிக்குறத்தி அல்லது குறிபார்க்கும் பெண்ணிடம் கேட்பது, அல்லது கோவில் மதில்சுவரை ஒட்டிக் கடை போட்டுள்ள கிளி ஜோதிடனிடம் கேட்பது என்று பல வழிகள் உண்டு. ஆனால் இதற்கு பணம் கொடுக்கவெண்டும்.

 

வீட்டிற்குள்ளேயே சுவாமி படத்துக்கு முன்னால் சீட்டு எழுதிப் போட்டு, உண்டா, இல்லையா? செய்யலாமா, செய்யக்கூடாதா? என்றும் பார்ப்பதுண்டு. நாம் படிக்கும் தேவாரம், திவ்யப் பிரபந்தம், ராமாயணம், பகவத் கீதை முதலிய புனித நூல்களில் ஒரு கயிறு அல்லது நூலை நுழைத்து அந்தப் பக்கத்திலுள்ள செய்தியின் படி சுபமா, அசுபமா என்று அறிவதுமுண்டு. இந்த நூல் பார்க்கும் முறை பற்றியும் கிளி ஜோதிடம் பற்றியும் ஏற்கனவே  கட்டுரை எழுதிவிட்டேன்.

 

 

நமது பஞ்சாங்கத்தில் சிறிதாக, சீதா-ராம சக்கரங்கள் உண்டு. பலரும் பார்த்த்திருப்பீர்கள். ஆனால் அதில் ‘கலகம்’, ‘நாசம்’ போன்ற சொற்கள் நம்மை மிரட்டுவதால் பலரும் அதைத் தொடுவதில்லை. இதன் பெரிய வடிவம்தான் இந்த தொடுகுறி சாஸ்திரம். இந்தப் புத்தகத்தை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். 16 பக்கம் என்பதால் புத்தகம் முழுதையும் ‘காப்பி’ எடுத்தேன். இது பஞ்ச பாண்டவர்களில் சோதிடத்தில் வல்லவனான சகதேவன் அருளியது என்று புத்தகத்திலுள்ள பாடல் கூறும்.

 

 

நம்பிக்கையுடையோர், குளித்துவிட்டு மடியாக/சுத்தமாக, பூஜை அறை அல்லது கோவிலில் ஒரு கட்டத்தைத் தொட்டு அதற்கான பலனை அறியலாம். சாதகமான விடை வராவிடில் கடுமையான பிரார்த்தனைக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறைதொட்டுப் பார்க்கலாம். அப்பொழுதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல சகுனம்/ பதில் கிடைக்காவிடில், “கடவுளே நீ தருவதை நான் ஏற்கிறேன், அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காமல் தடு அல்லது அதை புல்லென மதிக்கும் இரும்பு மனத்தை எனக்கருளுவாயாக” என்று மனமாறப் பிரார்த்திக்கலாம். அர்ஜுனன் மீது ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தை, கண்ண பிரான் அருளால், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் (கிரீடத்துடன்) போனது என்று தடுத்தாட்கொண்டது போல நமக்கும் கண்ணன் அருள் கிட்டும்.

மொத்தம் 64 கட்டங்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒன்றைக் கண்ணை மூடிக்கொண்டு தொடலாம் அல்லது ஒரு சிறுவனைக் கொண்டு தொடச் சொல்லலாம். அல்லது ஜோதிடம் கேட்க வருவோரை 111 அல்லது அதற்கு மேலே ஒரு எண்ணைச் சொல்லும்படி கேட்கலாம். பின்னர் ஒவ்வொரு எண்ணுக்குமுள்ள பாடலைப் படிக்கவும். சுருக்கமான பொருளும் கொடுக்கப்பட்டுளது.

-சுபம்-

இதோ தொடுகுறி சாஸ்திரம்:–

 

toduspare2

 

toduspare3

 

toduspare4

 

todu5

 

todu6

 

todu7

 

todu8

 

todu9

 

todu10

 

todu11

 

todu12

 

 

தொடரும்………………….

இரண்டாம் பகுதிக்குச் செல்க.

–சுபம்–

 

 

உங்கள் அதிர்ஷ்டத்தை அறிய தொடுகுறி சாஸ்திரம்! –பகுதி 2 (Post No 2727)

todu12

Hindu Astrology – Magic Square (I will give the English Translation separately)

Compiled by london swaminathan

Date: 15 April, 2016

 

Post No. 2727

 

Time uploaded in London :– 17-26

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ஏதேனும் ஒரு காரியம் நிறைவேறுமா இல்லையா என்பதை அறிய நமது முன்னோர்கள் பல வழிகளைக் கையாண்டனர். ஜோதிடரிடம் ஜாதகத்தையோ, கைரேகையையோ காட்டி பலன் அறிவது அல்லது ரோட்டில் “சோசியம் பார்க்கல்லியோ, சோசியம்!” என்று கூவிக்கொண்டுவரும் நரிக்குறத்தி அல்லது குறிபார்க்கும் பெண்ணிடம் கேட்பது, அல்லது கோவில் மதில்சுவரை ஒட்டிக் கடை போட்டுள்ள கிளி ஜோதிடனிடம் கேட்பது என்று பல வழிகள் உண்டு. ஆனால் இதற்கு பணம் கொடுக்கவெண்டும்.

 

வீட்டிற்குள்ளேயே சுவாமி படத்துக்கு முன்னால் சீட்டு எழுதிப் போட்டு, உண்டா, இல்லையா? செய்யலாமா, செய்யக்கூடாதா? என்றும் பார்ப்பதுண்டு. நாம் படிக்கும் தேவாரம், திவ்யப் பிரபந்தம், ராமாயணம், பகவத் கீதை முதலிய புனித நூல்களில் ஒரு கயிறு அல்லது நூலை நுழைத்து அந்தப் பக்கத்திலுள்ள செய்தியின் படி சுபமா, அசுபமா என்று அறிவதுமுண்டு. இந்த நூல் பார்க்கும் முறை பற்றியும் கிளி ஜோதிடம் பற்றியும் ஏற்கனவே  கட்டுரை எழுதிவிட்டேன்.

 

 

நமது பஞ்சாங்கத்தில் சிறிதாக, சீதா-ராம சக்கரங்கள் உண்டு. பலரும் பார்த்த்திருப்பீர்கள். ஆனால் அதில் ‘கலகம்’, ‘நாசம்’ போன்ற சொற்கள் நம்மை மிரட்டுவதால் பலரும் அதைத் தொடுவதில்லை. இதன் பெரிய வடிவம்தான் இந்த தொடுகுறி சாஸ்திரம். இந்தப் புத்தகத்தை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். 16 பக்கம் என்பதால் புத்தகம் முழுதையும் ‘காப்பி’ எடுத்தேன். இது பஞ்ச பாண்டவர்களில் சோதிடத்தில் வல்லவனான சகதேவன் அருளியது என்று புத்தகத்திலுள்ள பாடல் கூறும்.

 

 

நம்பிக்கையுடையோர், குளித்துவிட்டு மடியாக/சுத்தமாக, பூஜை அறை அல்லது கோவிலில் ஒரு கட்டத்தைத் தொட்டு அதற்கான பலனை அறியலாம். சாதகமான விடை வராவிடில் கடுமையான பிரார்த்தனைக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறைதொட்டுப் பார்க்கலாம். அப்பொழுதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல சகுனம்/ பதில் கிடைக்காவிடில், “கடவுளே நீ தருவதை நான் ஏற்கிறேன், அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காமல் தடு அல்லது அதை புல்லென மதிக்கும் இரும்பு மனத்தை எனக்கருளுவாயாக” என்று மனமாறப் பிரார்த்திக்கலாம். அர்ஜுனன் மீது ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தை, கண்ண பிரான் அருளால், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் (கிரீடத்துடன்) போனது என்று தடுத்தாட்கொண்டது போல நமக்கும் கண்ணன் அருள் கிட்டும்.

-சுபம்-

இதோ தொடுகுறி சாஸ்திரம்:–

 

todu13

 

todu14

 

todu15

 

todu16

 

todu17

 

todu18

 

todu19

 

todu20

 

todu21

 

todu22

-subam–

‘Women are vainer than Men’ – Disproved!(Post No.2726)

pen by maruthi

Compiled by london swaminathan

Date: 15 April, 2016

 

Post No. 2726

 

Time uploaded in London :– 14-57

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Anecdotes about VANITY

It is not a Sin, it is a Mistake!

A young girl came to Father Healey of Dublin and confessed that she feared she had incurred the sin of vanity.

“What makes you think that?” asked Father Healey.

“Because very morning when I look into the mirror I think how beautiful I am.”

“Never fear, my girl, was the reassuring reply.

“That is not a sin, it is only a mistake.”

 

Xxx

Headstrong!

While D’Annunzio was living in France, a letter addressed to him simply with the words

To

“Italy’s Greatest Poet”

He declined to accept it, saying that he was not Italy’s greatest poet — he was the World’s Greatest Poet!

 

Xxx

 

pen from face book

Who is vain? Man or woman?

Miss Frances Keller of the Women’s Municipal League of New York illustrated at a dinner party a point she wished to make in reply to a man who had said,

“Women are vainer than men.”

“Of course”, Miss Keller answered, “I admit that women are vain and men are not. There are a thousand proofs that this is so. Why, the necktie of the handsomest man in this room is even now up the back of his collar.”

 

There were six men present and each of them put his hand gently behind his neck!

Xxx

265px-Walsall_railway_station.p5

City life and Village life

A young man, who had come to the city from a small rural community, had toiled diligently until at last he had attained some prominence in the banking world.

Belatedly he returned for a visit to his home town, half expecting that the greater part of the community would be marshalled out to meet him at the station, and that some considerable fuss would be made over the local boy who had made good.

To his disappointment, there was not a soul around when he alighted at the station platform. He waited doubtfully as several people came and went, none of them giving him so much as a glance.

At last he was recognised by an old baggage handler who shuffled forward and looked at him with some interest, “Hello, George!”, he said at last, “going away?”

–Subham–

 

யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா (Post No.2725)

4bb116e0a41af94e-Krishnamacharya_Anjali_Mudra

WRITTEN BY S NAGARAJAN

Date: 15 April 2016

 

Post No. 2725

 

Time uploaded in London :–  9-38  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வேத வழி

 

இதற்கு முந்தைய மூன்று கட்டுரைகளைத் தொடர்ந்து, வெளியாகும் நான்காவது கட்டுரை இது!

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -4

(யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா)

 

.நாகராஜன்

 jnanayoginet_whois3

யோகம் காட்டிய நெறியில் வாழ்ந்து நூறு வயதை எட்டிய பெரியவர் யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா.

1888ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிறந்த இவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்து 1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மறைந்தார்.

 

 

யோகா முறையை அதன் அற்புத பலன்களை நிரூபித்து எங்கும் பரப்பிய இவரது வாழ்க்கை முழுவதும் அதிசயமான சுவையான சம்பவங்கள் நிறைந்த ஒன்றாகும்.

 

 

மைசூர் மஹாராஜா கிருஷ்ண ராஜ உடையார் (1884-1840) தன் தாயாரின் 60வது பிறந்த தினத்தைக் கொண்டாட காசி சென்றார். அங்கு யோகி கிருஷ்ணமாசார்யாவின் பெருமையைக் கேட்டறிந்து அவரைச் சந்தித்தார். தம்முடன் மைசூர் வருமாறு அவரை அழைத்தார். அதை ஏற்ற கிருஷ்ணமாசார்யா மைசூருக்குக் குடியேறினார். மைசூர் அரண்மனையில் யோகம் கற்பிக்க ஆரம்பித்தார்.

 

 

யோகத்தின் அபூர்வ ஆற்றல்களைப் பரப்பும் விதமாக தானே ப்ல நேர்முக செய்முறை விளக்கங்களை ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் அவர் செய்து காண்பித்தார்.

தனது நாடித்துடிப்பை அவர் நிறுத்திக் காட்டினார். உலகமே அதிசயித்தது.

 

 

வெறும் கையினால் ஓடுகின்ற காரை நிறுத்திக் காட்டினார். தனது பற்களால் கனமான பொருள்களைத் தூக்கிக் காட்டினார்.

மைசூர் மஹாராஜாவின் மறைவுக்குப் பின்னர் சென்னையில் குடியேறிய அவர் அங்கு யோகா பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தார்.

 

 

ஆயுர்வேதத்திலும் மிகுந்த பயிற்சி உடையவராதலால் பல நோய்களைக் குணப்படுத்தும் அபூர்வ ஆற்றலும் அவருக்கு இருந்தது.

 

 

யோக மகரந்தம், யோக ரகஸ்யம் உள்ளிட்ட பல் நூலகளை அவர் இயற்றியுள்ளார்.

 

 

1935ஆம் ஆண்டில் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் தெரீஸ் ப்ராஸ் என்ற கார்டியாலஜிஸ்ட்   (There Brosse) முன்னர் அவன் தனது இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டினார். தனது கருவி மூலம் அவரது இதயத்துடிப்பைக் கண்காணித்த ப்ராஸ் அது ஜீரோவைக் காட்டவே திகைத்துப் போனார். மருத்துவ ரீதியாக யோகி கிருஷ்ணமாசார்யா‘இறந்து விட்டதாகவே’கூற வேண்டும் என்றார் அவ்ர். பல வினாடிகள் இந்த நிலை நீடித்தது. பின்னர் இயல்பான நிலைக்கு அவர் வர இதயத்துடிப்பு வழக்கம் போல இயங்க ஆரம்பித்தது!

1961ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இப்படி இதயத்துடிப்பை நிறுத்துவோரை ஆராய வந்த ஒரு குழுவினர் முன்னும் அவர் தன் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார். உலகமே யோகத்தின் அற்புத ஆற்றலைக் கண்டு வியந்தது!

 

 

96ஆம் வயதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. ஆனால் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அவர் மறுத்து விட்டார். படுக்கையில் இருந்தவாறே பல பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை குணப்படுத்திக் கொண்ட அவர் நூறாண்டு நிறை வாழ்வை வாழ்ந்தார்.

 

 

அவருக்கு யோகாவில் பல சிஷ்யர்கள் உருவாயினர். அவர்கள் அவர் காட்டிய வழியில் யோக முறையைப் பரப்பும் நற்பணியை மேற்கொண்டனர்.

 

 

நவீன அறிவியல் யுகத்தில் யோகாவின் ஆற்றலையும் பெருமையையும் உலகிற்குக் காண்பித்த அவர், யோகா நெறியின் படி வாழ்ந்தால் நூறு என்ற பூரண வயதை எட்ட முடியும் என்பதை நிரூபித்தார்.

yogi

வேத வழியில் வாழ்ந்த பெரியோர்களின் பட்டியலில் யோகி கிருஷ்ணமாசார்யாவுக்குத் தனியிடம் உண்டு.

*****                                                           (அடுத்த கட்டுரையுடன் இந்தக் கட்டுரைத் தொடர் முடியும்)

 

 

 

 

The Ideal Dancer: Kalidasa (Post No.2724)

padmini

Written by london swaminathan

Date: 14 April, 2016

 

Post No. 2724

 

Time uploaded in London :– 16-15

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

_Vyjayanthimala (10)

“Her eyes are large and lustrous; her face makes the autumn pale with envy; her arms slope away gracefully from her shoulders; her toes are finely moulded and prominent; she is in short the brightest creation of a Divine Artist, in the golden hours of his imagination.

 

“her motions are free and flowing; her hands and feet keep time most accurately; her action is light, easy and natural; she expresses the unspoken  workings of her heart through her limbs that seem to have sentiments imprinted upon them, as it were. She loses herself in the character and its emotions. She represents them so skilfully as to deceive us into the conviction that she pours out her own heart and its workings. The beholders are, for the time, taken out of themselves and live and move and feel with her and follow her joys and griefs, her hopes and aspirations, her despair and darkness”.

Malavikagnimitra (2-6) by Poet Kalidasa

shiva1

 

nataraja, golden, fb

Dance of Shiva- Symbolism in Dance

“The story is given in the Koyil Purana, and is familiar to all the Saivites. Siva appeared in disguise amongst a congregation of ten thousand stages and in the course of disputation, confuted them and so angered them, thereby, that they endeavoured by  incantations to destroy Him. A fierce tiger was created in sacrificial flames and rushed upon Him, but smiling gently, He seized it with His sacred hands, and with the nail of His little finger stripped off its skin, which he wrapped about as it had been a silken cloth. Undiscouraged by failure, the sages renewed their offerings, and there was produced a monstrous serpent, which he seized and wreathed about his neck.  Then he began to dance; but there rushed upon him a last monster in the shape of a dwarf. Upon him the god pressed the tip of his foot, and broke the creature’s back, so that it writhed upon the ground; and so his last foe prostrate, Siva resumed the dance of which the gods were the witnesses.

 

One interpretation of this legend explains that he wraps about him as a garment, the tiger fury of human passion; the guile and malice of mankind.  He wears a necklace, and beneath his feet is for ever crushed the embodiment of evil

siva in poses

More characteristic is the thought of symbolism, in terms of the marvellous grace and rhythm of Indian dancing, the effortless ease with which the god in his grace supports the cosmos; it is his sport.  The five acts of creation, preservation, destruction, embodiment and gracious release are his ceaseless mystic dance.  In sacred Tillai, the ‘New Jerusalem’, the dance shall be revealed; and Tillai is the very centre of the universe, that is, his dance is within the cosmos and the soul”.

nataraj

–Ananda Coomaraswamy

அனக்ராம் – 3 (Post No.2723)

lisanagram

WRITTEN BY S NAGARAJAN

Date: 14 April 2016

 

Post No. 2723

 

Time uploaded in London :–  8-27  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Fun with English

 

அனக்ராம் – 3

 

ச.நாகராஜன்

 onager

ஆங்கிலத்தில் அனக்ராம் பைத்தியங்கள் ஏராளம் உண்டு,

Alice in Wonderland என்ற அற்புதமான நாவலை எழுதிய லூயிஸ் கரோலை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவர் ஒரு நாள் முழுவதும் கண் விழித்து ஒரு அனக்ராமை உருவாக்கினாராம்.

என்ன அனக்ராம்?

 

 

பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்த William Ewart Gladstoneக்கு ஒரு அனக்ராமை உருவாக்க அவர் விரும்பினார்.

 

கஷ்டப்பட்டு அவர் மனம் போல உருவாக்கிய அன்க்ராம் இது:

 

“WILD AGITATOR. MEANS WELL”

 

மாமியாரைப் பிடிக்காத ஒருவர் கண்ட அனக்ராம் இது:

 

Mother-in-law – woman hitler

 

கணிதம் பிடிக்காத கிண்டல் பேர்வழியின் கைவண்ணம் இது:

 

Eleven plus two – twelve plus one

 

 

ஒஸாமா பின் லேடனுக்கு என்ன அனக்ராம்? இதோ:

 

Osama Bin Laden – an Islam bad one, anal media slob, a damn alien S.O.B.

 

எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, படிக்க!

 

இறுதிச் சடங்கைக் கூட விடவில்லை அனக்ராம் பிரியர்கள்:

Funeral – real fun

 

தண்டனைக்கு என்ன அனக்ராம்?

 

Punishment – nine thumps

 

ஆபாசத்திற்கும் ஒரு அன்க்ராம் உண்டு!

Porn is good – dong is poor

chickenanagram

 

இன்னும் சில அனக்ராம்கள்:

 

Elvis Presley – Presley lives

Desperation – a rope ends it

Information superhighway – a rough wimper of insanity

California – African oil

Vanilla Pepsi – nipple saliva

Austin Powers – power us satin

John Kerry – horny jerk

Justin Timberlake – im a jerk, but listen

Los Angeles Dogers – all negro goddesses

The Simpsons – mens hot piss

Halloween – awe hell no!

Cats meow – cows mate

Prostitute – tourist pet

Enduring – nude grin

Pi r squared (the formula for finding the area of a circle) – squid raper

 

அனக்ராம் கண்டுபிடிப்பதில் மனம் ஈடுபட்டால் அவ்வளவு தான், அதிலேயே லயித்துப் போவோம்!

 

***************

 

 

நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!! (Post No. 2722)

adisesha

 

tsunami snake

 

sesha, pullaboothangudi

Written by london swaminathan

Date: 14 April, 2016

 

Post No. 2722

 

Time uploaded in London :– காலை 6-19

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நான் வாகன ஆராய்ச்சி செய்பவன். பல வாகன ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, இதே பிளாக்கில் வெளியிட்டிருக்கிறேன். அப்படி நாக வாஹன படம் ஒன்றை எனது பைலில் ‘சேவ்’ செய்துவிட்டு அடுத்த நிமிடம் ஒரு சுனாமி படத்தைப் பார்த்தவுடன் அசந்தே போய்விட்டேன். ஏனெனில் அதே நாக வாஹனம் அந்த ஆழிப் பேரலைகளில் இருந்தது. இதை கண்கள் காணும் மாயத்தோற்றம் – ஆப்டிகல் இல்லூஷன் OPTICAL ILLUSION – என்பதா அல்லது இந்து மதம் கூறும் விஞ்ஞான உண்மை என்பதா என்பதை கட்டுரையைப் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்.

 

15 நாடுகளில் 2004-ஆம் ஆண்டிலும், ஜப்பானில் 2011 ஆம் ஆண்டிலும் சுனாமி என்னும் ராட்சதப் பேரலைகள் தாக்கிப் பல லட்சம் மக்கள் உயிரிழந்தை நாம் அறிவோம். இதில் வரும் ராட்சதப் பேரலைகள் பாம்பு உருவத்தில் வருகின்றன. ஆயிரம் தலையுடைய ஆதி சேஷனின் படுக்கையில், பால் கடலில் பள்ளி கொண்ட பரமனை இந்து மத நூல்கள் துதி பாடுகின்றன. இந்த ஆதி சேஷன் ஒரு கல்பத்தின் முடிவில் விஷம் கக்கி உலகை அழிப்பான் என்று நமது புராணங்கள் சொல்லும். அது மட்டுமல்ல பாதாள உலகத்தின் அரசன் நாக தேவன் என்றும் நமது நூல்கள் செப்பும். (கல்பம் என்பது ஒரு பிரம்மாவின் ஆயுள்).

Wave

உலகில் நாகம் பற்றிக் குறிப்பிடாத மதமோ கலாசாரமோ கிடையாது. ஆஸ்திரேலிய வானவில் பாம்பு—ரெயின்போ ஸ்னேக்- பற்றி எனது ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். இந்தியாவில் அர்ஜுனனும் கிருஷ்ணனுன் காண்டவ வனத்தை (கோண்ட்வானா லாண்ட்) எரித்து வெளியேற்றிய மய தானவன் துவக்கிய கலாசாரம்தான் தென் அமெரிக்க மாயன் பண்பாடு என்றும் மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். பைபிளில் பாம்பு உள்ளது; ரிக் வேதத்தில் பாம்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள பாம்பு ராணியைத் தான் மினோவன், சிந்து சமவெளிகளில் அப்படியே படமாகக் காட்டியுள்ளனர் என்று இன்னுமொரு ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டேன்.

காண்க: (Please read my post Serpent Queen: Indus Valley to Sabarimalai – posted on 17th June 2012)

 

velli naga asana

 

wavesp57arch

 

யுக முடிவில் ஆதி சேஷன் விஷம் கக்கி உலகம் அழியும் என்பதை, சுனாமி பேரலைகள் கக்கி உலகம் அழியும் என்று பொருள் கொண்டு சுனாமிப் படங்களைப் பார்த்தால் இன்னும் நன்கு விளங்கும்.

 

ஏனெனில் உலகில் இது வரை எந்த விஞ்ஞானியும், உயிரியல் அறிஞனும் பல தலைகளைக் கொண்ட பாம்புகளைக் கண்டதில்லை. மிக மிக அதிசயமாக இரண்டுதலை ஒட்டிப் பிறந்த பாம்புகள் மட்டுமே உண்டு. அவையும் உடனே இறந்து விடும். இது மனிதர்களுக்குப் பிறக்கும் சயாமிய இரட்டைக் குழந்தை வகை Siamese Twins. பேஸ்புக், பத்திரிக்கை முதலியவற்றில் நாம் காணும் பல தலை பாம்புகள் வெறும் ரப்பர் பொம்மைகள், கம்ப்யூட்டர் ஏமாற்று வித்தைகள் என்பதை கற்றோரும் மற்றோரும் அறிவர். பின்னர் ஏன் இந்துமத நூல்கள் ஆயிரம்தலை ஆதிசேடன் பற்றிப் பகருகின்றன? என்னை (ஏனெனில்), சுனாமிப் பேரலைகளின் படங்களைக் கூர்ந்து நோக்கினால் ஆயிரம் பாம்புத் தலைகளுடன் சுனாமி அலைகள் , நிலப் பகுதிக்குள் ஆக்ரோஷத்துடன் – சீற்றத்துடன் – பிரவேசிப்பதைப் பார்க்கலாம்.

 

உலகில் நாகர் பற்றிப் பகராத பண்பாடு இல்லை என்று முன்னரே சொன்னேன். ஆயினும் ரிக் வேத காலம் முதல், சிந்து சமவெளியில் கிடைத்த பாம்புராணி முத்திரை முதல்– இன்று சபரிமலையில் உள்ள நாகராணி வரை— தொடர்ச்சியாக நாக வழிபாடு உள்ள மதம் – கலாசாரம் இந்துமதம் மட்டுமே. இமயம் முதல் குமரி வரை கோவில்களில் உள்ள நாகர்கள் சிலை பல லட்சம்! ஆயிரம் தலையுடைய வகனத்தைச் செய்ய முடியாதென்பதால் நமது கோவில் நாக வாஹனத்தில் 5, 7, 9 தலைகள்மட்டுமே சித்தரிக்கப் பட்டிருக்கும் – வடிவமைக்கப் பட்டிருக்கும்.

 

ஸ்னேக் (ஸ்+நாக), செர்பெண்ட் (ஸர்ப்ப) என்ற ஆங்கிலச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பதையும் நோக்குக. சுருக்கமாகச் சொன்னால், ரிக்வேத நாகர் வழிபாடு இன்று நாகர்கோவில், நாக்பூர், நாகாலாந்து வரை இருப்பது நம் பண்பாட்டில் மட்டுமே. மறைபொருளில்—நான் ‘மறை’ பாடிய ரிஷிகள், பாம்பு வடிவ சுனாமிப் பேரலைகளையே ஆதி சேடன் – ஆயிரம் தலையுடைய ஆதி சேடன் – என்று பாடினரோ என்று வியக்க வேண்டியுள்ளது. எக்காலத்திலும் இப்படிப்பட்ட பாம்பு இல்லாததால், நமது நூல்களை நாம் விஞ்ஞான முறையில் அனுகினால் அது சுனாமி பாம்பு அலைகள்தான் என்பது விளங்கும். அகத்தியர் கடல் நீரைக் குடித்தது, பகீரதன் கங்கையை திசை திருப்பிவிட்டது முதலிய பல ‘எஞ்சினீயரிங்’ பணிகளையும் மனதிற்கொண்டு பார்த்தால் நமது “மறை”மொழி விளங்கும்

nagadevata,tamil uma,fb

 

tsunami snake2

(எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் புராதன பாரதத்தின் எஞ்ஜினீயர்கள் – அகத்தியன், பகீரதன், பலராமன் – பற்றிப் படிக்கவும்).

–சுபம்–

 

Tsunami Miracle or Optical Illusion? (Post No 2721)

adisesha

tsunami snake

CAN YOU SEE THE SNAKE HEADED WAVES?

Written by london swaminathan

Date: 13 April, 2016

 

Post No. 2721

 

Time uploaded in London :– 20-40

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 sesha, pullaboothangudi

 

tsunami snake2

Can you see the snake head or snake mouth like waves in the picture?

 

I was looking at the pictures of Tsunami waves that struck several countries in 2004 and 2011. I was amazed to see the “snake headed waves” devouring the land. Immediately I am reminded of Hindu mythological stories of Nagas (Snake or people with snake totem) and the Snake bed of Vishnu, one of the trinities of Hinduism. Is there any connection?

 

Snake is part of all the cultures in the world, whether it is the Rainbow snake of Australian aborigines or the biblical snake, we see snake playing an important role. We have Snake Queen in the Rig Veda and the later Indus Valley Civilization as well. (Please read my post Serpent Queen: Indus Valley to Sabarimalai – posted on 17th June 2012)

 

Though there is no religion or culture without a snake in it, Hindus are the only community who worship snakes from the Vedic days until today. There are millions of snake headed statues in the temples from Kashmir to Kanyakumari which we cant find anywhere else on the earth. All the Hindu gods are linked with a snake in one way or another. All the temples in Tamil Nadu have Naga Vahana (snake mount on which gods and goddesses are taken in procession). When I was looking at one of these Naga Vahana, I found a striking similarity between the several headed snakes in the Naga Vahana and the several “snake headed” waves in the Tsunami.

(See the pictures and compare them for yourselves)

 

Wave

Here we see the snakes with open mouths.

 

Encyclopaedias describe Adi Sesha as the King of the serpent race or Nagas and of the infernal regions called Patala. A serpent with a Thousand Heads which is the couch and canopy of Lord Vishnu whilst sleeping during the intervals of Creation. Here is the similarity.

 

Biologists or scientists knew no snakes with more than one head. All the face book snakes with several heads or newspaper reports of several headed snakes are fakes or toys. Very rarely, like we Siamese twins, we see two headed snake. They are freaks in nature and they die immediately. But all the Tamil temples have several headed snake Vahanas (Mounts of Gods) and they are taken into the streets every year during the festivals. Since no one can make a 1000 headed snake, a symbolic 5 or 7 or 9 headed snake is used in the temples. But where is the 1000 headed snake described in our Puranas/mythologies. You can see them in the Tsunami waves!!

 

wavesp57arch

In Hindu mythology, the 1000 headed snake is represented as supporting the world or supporting the seven underground worlds. At the end of each Kalpa, he vomits venomous fire that destroys all the creation. This is what happened during Tsunami. Tsunami waves always create fire. I have written in another article about fire in the waves seen by the people of Andhra Pradesh during a cyclonic storm that killed tens of thousands of people in the 1960s.

 

We also know the story of churning of the ocean where the snake was used as the rope on the churning rod. English word snake itself came from the Sanskrit word S-Naka (Naga) and the word serpent also came from Sanskrit Sarpa (Uraeus also came from Uraka). All these point in one direction. When Hindus say that the 1000 headed snake is the bed on which Vishnu lies and the 1000 headed snake floats on the ocean, it actually mean Tsunami that comes in the shape of 1000 headed snake during the time of final dissolution or destruction.

 

Sesha is also called Ananta which means endless, very appropriate for the endless cycle of creation and destruction.

nagadevata,tamil uma,fb

The snake has such remarkable natural associations with life and death that it plays a significant role in most cultural traditions. The biblical serpent, the embodiment of Satan in the Garden of Eden, later becomes the serpent of brass put upon a pole by Moses.

 

In Norse mythology a huge snake is wrapped around the earth. In ancient Egypt it was the gigantic Apophis, which threatens to capsize the boat of the Sun God. Vedic, Greek, Sumerian, Mycenaean, Minoan, Mayan, Inca, aborigines around the world – all have stories about snakes. Now you can look at the pictures again and compare them with the Naga Vahanas of Hindu temples.

 

velli naga asana

 

–subham–