அளவறிந்து வாழ்க! (Post No.2710)

borosilicate-glass-beaker-lf

Written by S NAGARAJAN

Date: 10 April 2016

 

Post No. 2710

 

Time uploaded in London :–  7-07  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வள்ளுவர் வழி

 

அளவறிந்து வாழ்க!

 

ச.நாகராஜன்

 

 

அளவறிந்து வாழ்க!

 weights

உலகில் யாரும் சொல்லாத சூத்திரங்களைத் தொகுத்துச் சுருக்கமாக ஆங்காங்கே குறளில் சொல்லியுள்ளார் வள்ளுவர்.

வாழ்க்கை நெறிகளைப் பற்றிச் சொல்லும் போது அளவறிந்து என்ற வார்த்தையை அவர் மூன்று இடங்களில் பயன்படுத்துகிறார்.

 

 

அளவறிந்து உண்க!

 

ஒன்றின் மூலம் பெறுதற்கரிய வாழ்க்கையைப் பெற்ற போது நீண்ட நாள் வாழ வழியைச் சொல்கிறார்.

 

அற்றால் அளவறிந்து உண்க அஃது உடம்பு                        பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு     குறள் 943

 

அளவறிந்து உண்க என்பதன் மூலம் ஆழ்ந்த பொருளை விளக்குகிறார். அதனால் உடம்பு பெற்ற பயனைக் கொண்டு நீண்ட நாள் வாழ முடியும்.

 

 

அளவறிந்து கற்க!

 

அடுத்து அளவறிந்து கற்க என்கிறார் அவர். கற்க வேண்டியதைக் கசடறக் கற்பதோடு அளவறிந்து கற்க வேண்டும் என்பது அவர் அறிவுரை.

 

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா                 மாற்றம் கொடுத்தற் பொருட்டு         குறள்  725

 

இதனால் எந்த அவையின் முன்னாலும் பேசலாம். உலகப் பெரும் தலைவர் ஆகலாம் என்பது அவரது வழிகாட்டுதல்!

ounce

 

அளவறிந்து ஈக!

 

அடுத்து பெற்ற பொருளைப் பேணிக் காக்க ஒரு வழியையும் கூறுகிறார். அளவறிந்து ஈக என்பது அவரது அறிவுரை.

 

ஆற்றின் அளவறிந்து ஈக அது பொருள்                         போற்றி வழங்கும் நெறி              குறள் 477

 

வருவாய்க்குத் தக்கபடி கொடுக்க வேண்டும் என்பது சுருக்கமான சூத்திரம் போன்ற அறிவுரை.

ஒன்றின் மூலம் நீண்ட நாள் வாழ வழி தந்து, இன்னொன்றின் மூலம் அவையஞ்சா தலைமை கொள்ள வழி காட்டி கடைசிக் குறளின் மூலம் சம்பாதித்த பொருளைப் போற்றும் நெறியைக் காட்டுகிறார்.

 

 

அளவறிந்து வாழவில்லையேல்?

 

இப்படி அளவறிந்து வாழவில்லை என்றால் என்ன ஆகும்?

அதற்கும் அவர் பதில் தருகிறார் இப்படி:

 

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல                   இல்லாகித் தோன்றாக் கெடும்                    குறள் 479

 

தன் வலிமையை அறிந்து வாழ்; தன் வரவை அறிந்து வாழ்; தன் அறிவை அறிந்து வாழ்; தன் உடம்பை அறிந்து வாழ்; அப்படி வாழவில்லையேல் அது வாழ்க்கை நன்றாக இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தைக் காட்டி உன்னைக் கெடுத்து விடும் என்கிறார் அவர்.

 

units_of_measure

அறம் நிற்கும் இடம்!

 

அளவறிந்தார் நெஞ்சத்  தறம் போல் நிற்கும்                 களவறிந்தார் நெஞ்சில் கரவு           குறள் 288

 

அறம் எங்கே நிற்கும்? உலகின் தர்ம மரபுகளை அறிந்து வாழ்க்கையை அளவோடு வாழ வேண்டும் என்று நினைப்பவரின் மனதில் அறம் நிற்கும். அது எப்படி இருக்கிறது என்றால் பாவச் செயல்களைச் செய்வதிலேயே பழக்கப்பட்டவர்களின் மனதில் வஞ்சனை நீங்காது நிலைத்துக் குடி கொள்வது போல இருக்கும்!

என்ன அழகான விளக்கம்!

 

 

அளவறிந்து என்ற சொல்லின் பொருளை அறிய வள்ளுவரின் குறளில் அளவு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்திய இதர சில குறள்களையும் படித்தால் முழுப் பொருளையும் அறியலாம்.

வாழ்க்கை முழுவதும் கற்க வேண்டிய நூல் வள்ளுவரின் குறள்!

அதைப் பயில்வது தமிழரின் பாக்கியம்!

 

********

Classification of Women according to Age (Post No 2709)

amma ponnu

Compiled by london swaminathan

Date: 9 April, 2016

 

Post No. 2709

 

Time uploaded in London :–  14-17

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

alankaram girl

1.Classification

Baalaa (age 11 to 16)- girl

Tarunii (age 17 to 30)- youth

Praudhaa (age 31 to 55) – Middle aged

Vrddhaa (age 55 and above) – Old aged

 

Yaavatsodasa sankyamabdamuditaa baalaa tatastrimsatam

Yaavatsyaattaruniiti bhaanavisikhaprakyam tu yaavatbhavet

 

Saa praudetyamidhiiyate kavivarairvrudhdhaa tadhuurdhvam smrtaa

Nindhyaa kaamakalaakalaapavidhishu tyaajyaa sadaa kaamibhih

–anangaranga 4-1

Xxx

azaki beauty old

2.Not eligible to claim women’s Property

Bhartaa – husband

Bhraatarah – brothers

Sutaah – sons

Pitaa – father

Na bhartaa naiva ca sutaa pitaa bhraataro na ca

Aadaanae vaa vasarge vaa striidhane prabhavishnavah

Xxx

 

IMG_3356

 

3.Adornment of women

Kacadhaarya – hair dress

Dehadhaarya – make up

Paridheya – attire

Vilepana – unguents

Kacadhaaryam dehadhaaryam paridheyam vilepanam

Caturdhaa bhuushanam praahuh striinaamanyacca daisikam

 

Xxx

chat ht 14

4.Women who attained realisation

Maitreyii

Sulabhaa

Saarngii

Saandilii

 

Maitreyii sulabhaa saarngii saandilii ca tapasvinii

Striitvepraaptaah paraam siddhimanyajanma samaadhitah

Xxx

 

ac17chhatfestivalmumbai05

People offering prayers to Sun God during Chhat festival at Juhu Beach Mumbai . Express Photo by Amit Chakravarty 17-11-15, Mumbai

5.Things forbidden for Women

Vapanam – tonsuring of head

Gaamanuvrajanam – following a cow

Raatrau gosthe vaasah – staying in a cow-pen at night

Vaidikii-suukta paatha – reciting Vedic mantra

Na striinaam vapanam kuryaat na ca saa gaamanuvrajet

Na ca raatrau vasegoshthe na kuryaat vaidikiim srutim

Xxx

bihar voting1

6.Women to be remembered in the morning

Ahalyaa

Draupadii

Seetaa

Taaraa

Mandodari

 

Ahalyaa, Draupadii, Seetaa, Taaraa, Mandodari tathaa

Panchakanyaah smaren nityam sarva mahaapaataka nasanam

 

Meaning:

By remembering the Five Pure Women Ahalya, Draupadi, Sita, Tara and Mandodari all the great sins are wiped out or destroyed.

 

Xxx

flower picking

7.Five Mothers

Following five women are considered equal to mothers:

Raja patnii – king’s wife

Guru patnii –  teacher’s wife

Bhraatpatnii – brother’s wife

Patniimataa –mother-in-law

Svamaataa – one’s own mother

 

Raaja patni Guroho patni bhraatru patni thadaiva cha

Patnimaathaa svamaathaa panchaitaa maatara smrutaahaa

–Chanakya Niti

Queen (King’s wife), Teacher’s wife, Brother’s wife, own mother and wife’s mother (Mother in law) are considered mother.

 

holi,ht3

Source :-

Sankhya sanketa kosa, Volume 1,The Kuppusswami Sastri Research Institute, Chennai.

–subham—

 

“உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடவா?” (Post No 2708)

fire

Compiled by london swaminathan

Date: 9 April, 2016

 

Post No. 2708

 

Time uploaded in London :–  10-19 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Modesty Anecdotes (Translated by London swaminathan)

 

அடக்கம், பணிவு பற்றி மேலும் சில துணுக்குகளைப் பார்ப்போம்:-

court

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

பிரான்சு நாட்டில் லியோனில் ஒரு வழக்கு நடந்தது. அதைப் பார்க்க நீதி மன்றத்துக்கு வழக்கத்திற்கு மாறாக, நிறைய பெண்கள் வந்திருந்தனர். அந்த வழக்கு விசாரணையில் வரும் வாதங்கள் பெண்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பது நீதிபதிக்குத் தெரியும். ஆகவே அவர் சொன்னார்: “இன்றைய வழக்கின் போக்கு, தன்மை தெரியாமல் இன்று அதிகமான பெண்கள் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே கண்ணியமிக்கப் பெண்கள் அனைவரும் கோர்ட்டின் அறையிலிருந்து வெளியேறுமாரு கேட்டுக் கொள்கிறேன்”.

இப்படிச் சொன்ன பிறகும் ஒரு பெண் கூட வெளியேறவில்லை. நீதிபதிக்கு ஒரே கோபம். மீண்டும் சொன்னார்:

“காவலரே! இங்கு வருக! கண்ணியமான பெண்கள் எல்லோரும் வெளியேறிவிட்டார்கள். இதோ இங்கே இருக்கிறதே, இதுகளை வெளியே தள்ளுக” என்றார்.

அந்தப் பெண்கள் அனைவருக்கும் ‘கல்தா’ கிடைத்தது!

‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’, ‘அடியாத மாடு படியாது’ என்பன தமிழ்ப் பழமொழிகள். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

Xxx

 

முதல் வரிசையில் எந்த ‘சீட்’?

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹ்யூஜஸ் என்பவரை நியூயார்க் நகர பத்திரிகையாளர்கள் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தனர். அதே விருந்துக்கு பல வெளிநாட்டு ராஜ தந்திரிகளும் அழைக்கப்பட்டி ருந்தனர். மந்திரியை எந்த இடத்தில் உட்கார வைப்பது என்பது அறியாது அவர்கள் திகைத்தனர். இதற்கு நல்ல தீர்வு, அவரிடமே கேட்பதுதான் என்று எண்ணி, தயங்கித் தயங்கி, அவரிடமே போய்க் கேட்டும் விட்டனர். இதற்குக் காரணம் அப்போதுதான் பத்திரிக்கைகளில், இடம் பற்றிய சர்ச்சை, வரிசை அறிந்து ஒழுகாமை என்பதெல்லாம் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.

 

சங்க காலப் புலவர்களில் பலர், மன்னர்கள் தங்களுக்கு முதல் மரியாதை செய்ய வில்லை என்று கோபித்துக்கொண்டு பாடிய பாடல்கள் புற நானூற்றில் உள்ளன. வரிசை அறிந்து ஒழுகல் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.

 

“மாண்புமிகு அமைச்சரே! உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடுகிறோம். எந்த இடத்தில், யாருக்கு அருகில் உங்களுக்கு இடம்போடுவதை நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று பத்திரிக்கையாளர்கள், மரியாதை கலந்த தொனியில், கேட்டனர்.

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்:

“நான் முதலில் இருக்க விரும்புவது ஒரே இடத்தில்தான்; தீவிபத்து ஏற்பாட்டால், முதலில் நிற்க (வெளியே ஓடுவதற்காக) விரும்புவது நான்தான். மற்ற இடங்களில் எங்கே இடமிருந்தாலும் பரவாயில்லை.” ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

எமனைக் கை தட்டி அழைக்காதே! (Post No.2707)

yama

Written by S NAGARAJAN
Date: 9 April 2016

 

Post No. 2707

 

Time uploaded in London :–  9-19  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

வள்ளுவர் வழி

 

எமனைக் கை தட்டி அழைக்காதே!

 

ச.நாகராஜன்

 

 

எமனைக் கை தட்டி அழைக்காதே!

 

 yama (1)

வள்ளுவரின் சொல் வீச்சு அபாரமானது. அதைச் சொல்லும் விதமோ அதை விட அபாரமானது.

 

எமன் என்றாலே எல்லோரும் ஓடிப் போவர். யாருக்கும் பிடிக்காத ஒரே வார்த்தை எமன் தான்.

 

அப்படிப்பட்ட எமனைக் கை தட்டி அழைக்காதே என்று வேடிக்கையாக ஆனால் மிகத் தீவிரமான ஆலோசனை ஒன்றைத் தருகிறார்ர் வள்ளுவர்.

 

“கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்”  என்று அவர் ஆரம்பிக்கிறார்.

 

எமனைக் கைதட்டி அழைப்பது போல இருக்கும் என்ற அவரது ஆரம்பமே நம்மை திடுக்கிட வைக்கிறது.

 

“ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்” (குறள் 894)  என்று அவர் முடிக்கும் போது பெரிய அறிவுரையைப் பெறுகிறோம்.

ஆற்றலுடன் கூடியவருக்கு ஆற்றலே இல்லாதார் துன்பம் செய்தால் அது எமனைக் கை தட்டி அழைப்பதை ஒக்கும் என்கிறார் அவர்.. ஆற்றல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஆற்றல் உள்ள வலியோரிடம் வாலை ஆட்டாமலாவது இருக்கக் கற்றுக் கொள் என்பது அன்புரை தானே!

 

எமன் என்று சொல்லும் போதே அவர் ஹிந்து என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். இந்திரன், மூதேவி போன்ற ஹிந்து தொன்மம் அல்லது நம்பிக்கை அல்லது கடவுளரை அவர் குறிப்பிடுவதையும் இங்கே நோக்கலாம்.

 

 

நீண்ட நாள் வாழ வழி!

 

அடுத்து நீண்ட நாள் வாழ வழியையும் அவர் கூறுகிறார். அதாவது எமனின் வருகையைத் தள்ளிப் போடச் செய்யும் வழி!

இதில் இரண்டு வகையை அவர் உபதேசிக்கிறார்.

ஒன்று உள்ளத்திற்கு; இன்னொன்று உடலுக்கு.

உடல் ரீதியாகவும் சாவைத் தள்ளிப் போட வழி; உள்ள ரீதியாகவும் மரணத்தைத் தள்ளிப் போட்டு நீடு வாழ வழி –இரண்டையும் அவர் விளக்குகிறார்.

 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3)

 

இறைவனின் அடியை ஏகினால் போதும்; அவன் நம்மை நிலமிசை நீடு வாழச் செய்வான் என்கிறார்.

உள்ள ரீதியாக இறைவனுக்கு நம்மை அர்ப்பணம் செய்தால் மீதியை அவன் பார்த்துக் கொள்வான்.

அடுத்து உடல் ரீதியாக நீடு வாழ எளிய வழியையும் அவர் கூறுகிறார்:

 

அற்றால் அளவறிந்து உண்க; அஃது உடம்பு

பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு (குறள் 943)

உடம்பைப் பெற்றவர்களே, நீண்ட நாள் வாழ ஆசையா. அப்படியானால் அளவறிந்து உண்க என்கிறார்.

 

அளவறிந்து என்பது பொருள் பொதிந்த ஆழமான வார்த்தை.

இந்த வார்த்தையை அவர் உபயோகிக்கும் இடங்கள் மிகவும் சுவாரசியமானவை.

 

எது தேவையோ எவ்வளவு தேவையோ எப்போது தேவையோ அவ்வளவு மட்டுமே உண்ணுக என்பது அவர் அறிவுரை.

ஒரு குறளை மட்டும் படித்தால் முழுப் பொருளும் விளங்காது.

பின்னிப் பிணைக்கப்பட்டுள்ள குறள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தாலேயே பொருள் விளங்கும்.

 

அப்படி ஒரு அற்புத நூல் குறள். இது போலொரு நூல் உலகில் இல்லை என்பதை அடித்துச் சொல்லலாம்.

 

*******

 

Language Matters in Sanskrit Couplets (Post No.2706)

namaste

Compiled by london swaminathan

Date: 8 April, 2016

 

Post No. 2706

 

Time uploaded in London :–  19-32

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for other 2705 articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

skt words

There are lot of Sanskrit slokas (Couplets) which beautifully describes various aspects of the languages in general. This shows how much the people of ancient India cared about the languages, particularly Sanskrit.

 

Here are some slokas:

Styles of Literary compositions

Bhaaratii – verbal

Saatvatii – Grand

Kaisikii – Graceful

Aarabhatii – Energetic

Bhaaratii saatvatii caiva kaisikyaarabhatii tathaa

Catasro vruttayo hyete naatyam pratistitam

Xxx

Word Types

Drsta – based on observation

Adrsta – unobservable

Satya – factual

Anrta – false

Sabdo naama varnasamaamnaayah

Sa caturvidhah drstaarthasca adrstaarta satyasca

Anrutasceti

Xxx

Import of the words: Sabdapravrtti nimitta

Jaatih – class

Gunah – quality

Kriyaa –action

Sambandha – relationship

Sabdapravrttau catvaari nimittaanyuucire prthak

Jaatigunah kriyaa caiva sambandhasceti saabdhikaih

–vedantasamnjavai 100

Xxx

sakuntal book

Popular four verses in Saakuntam drama of Kalidasa

Kaavyesu naatakam ramyam tatra ramyaa sakuntalaa

Tatraapica caturthonkah tatra sloka catustayam

Among the classics drama is the best; among the dramas Sakuntalam is the best; in that drama fourth act is the best act; in that four slokas/couplets are the best.

(For the four slokas, please go to my earlier post “Drama is the Best: Kavyesu Natakam Ramyam Date: 17the November 2015)

xxx

Causes for the meaning of sentence

Aakaanksaa – expectancy

Yogyataa –propriety

Aasatti – proximity

Taatparya – import

Catvaari kaaranaani syuh vaakyajanyadhiyam prati

Aakaankshyogyataaasattitaatparyaani yathaayatham

–vedantasamnjavai 118

Xxx

welcome

I have already given the four types of Vak: Paraa, Pasyanti, Madhyamaa and Vaikhari (RV 1-164-45)

Manu’s sloka (12-6) was also dealt with in another post.

Xxx

–subham–

 

 

“எனக்கு ஏன் சிலை வைக்கவில்லை?” (Post No.2705)

walker art gallery

Picture: Walker Art Gallery, Liverpool

Compiled by london swaminathan

Date: 8 April, 2016

Post No. 2705

Time uploaded in London :–  10-05 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

Modesty Anecdotes (Translated by London swaminathan)

 

0_photographers_alinari_rome

Rome Art Gallery

பணிவு, அடக்கம் பற்றி பல மேற்கோள்களும், துணுக்குச் செய்திகளும் உள்ளன. ஏற்கனவே ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை எழுதினேன். இதோ மேலும் சில சம்பவங்கள்:–

 

காடோ என்பவர் புகழ்பெற்ற ரோமானிய ராஜ தந்திரி. 2000 ஆண்டுகளுக்கு முன், இதாலியில், ரோம் நகரில் இருந்த அரசியல்வாதி.அவர் சிலை வைப்பது பற்றிச் சொன்னது மிகவும் பிரபலமான பொன்மொழியாகும்:-

 

“எனக்கு சிலை வைப்பதை நான் விரும்பவில்லை. எவன், எதற்காக, இந்த ஆளுக்குச் சிலை வைத்தான்? என்று கேட்பதைவிட, இப்பேற்பட்ட பெரியவருக்கு இன்னும் சிலை வைக்கவில்லையா? ஏன்? என்று மக்கள் கேட்பதையே நான் விரும்புகிறேன்”.

Xxx

da vinci

குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் தழும்பாது

 

லியார்னோடோ டா வின்சி என்பவர் பல கண்டுபிடிப்புகளின் தந்தை, பல ஓவியங்களை வரைந்தவர். அவர் மரணப் படுக்கையில் கிடந்தார். அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட இதாலிய அரசர் அவரைப் பார்க்க வந்தார். உடனே லியார்னாடோ மிகவும் கஷ்டப்பட்டு எழுந்திருக்க முயன்றார். தலையை எவ்வளவு தூரம் தூக்க முடியுமோ அத்தனை உயரம் தூக்கி, “நான் கலைத் துறையில் இன்னும் எவ்வளவோ செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் மனிதனையும் கடவுளையும் அவமதித்துவிட்டேன்” என்று பணிவுடன் கூறிவிட்டுத் தலையைச் சாய்த்தார்.

லியார்னாடோ செய்ததோ மகத்தான சாதனைகள். ஆனால் அவருடைய பணிவோ அதையும்விட மகத்தானது.

Xxx

பீதோவன் மியூசியத்தில் பியானோ கருவி

paderewsi_readmore

Picture of Padrewski

 

மேலை உலகத்தின் மாபெரும் இசை மேதை பீதோவன். அவர் பயன்படுத்திய இசைக் கருவிகள் ஜெர்மனியில் பான் நகரத்தில், அவரது சொந்த வீட்டில் உள்ள, ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு அமெரிக்க மாணவர் குழு அதை சுற்றிப் பார்க்கவந்தது. அதில் ஒரு பெண்மணி, அந்தப் பகுதியின் பாதுகாப்பாளரிடம் போய்,  தனது கவர்ச்சி சக்திகளையெல்லாம் பயன்படுத்தி மிகவும் கொஞ்சலாக, ‘நான் இந்தக் கருவியைக் கொஞ்சம் வாசித்துப் பார்க்கலாமா?’ என்று கேட்டார். பாதுகாப்பாளரும் (மியூசியம் க்யூரேட்டர்), ‘அதற்கென்ன ,வாசியுங்களேன்’ என்றார். அந்தப் பெண்ணும் பீதோவன் இயற்றிய புகழ்பெற்ற, ‘மூன்லைட் சொனாட்டா’வை இசைத்து முடித்துவிட்டு, பெருமிதத்துடன், “உலகப் புகழ்பெற்ற இசை மேதைகள், என்னைப் போல இந்த பியானோவை வாசித்திருப்பார்களே” என்றார்.

 

அந்தப் பகுதியின் பாதுகாப்பாளரோ மிகவும் அமைதியாகச் சொன்னார்: “மேடம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெடெரொவ்ஸ்கி இங்கே வந்திருந்தார். இதன் பக்கத்தில் வந்து, பயபக்தியுடன் இதைப் பார்த்தார். கடவுளே! இதைத் தொடும் தகுதி எனக்கு இல்லை” என்று சொல்லிவிட்டுப் போனார்.

பெடெரவ்ஸ்கி, போலந்து நாட்டைச் சேர்ந்த இசை மேதை. உலகப் புகழ்பெற்ற பியானோ கலைஞர். அவருடய பணிவையும் அடக்கத்தையும் பாருங்கள். பீதோவனின் பியானோவைத் தொடக் கூட அஞ்சினார். (நான் இதை ஏற்கனவே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்- லண்டன் சுவாமிநாதன்).

beethoven piano

–சுபம்–

 

 

 

 

கோடிக் கணக்கான டன் கழிவுப் பொருட்கள்! (Post No. 2704)

rubbish1

Written by S NAGARAJAN (வானொலி உரை)
Date: 8 April 2016

 

Post No. 2704

 

Time uploaded in London :–  8-57  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சுற்றுப்புறச் சூழல் பற்றிய சில சிந்தனைகள்

 

rubbish2

      ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் வீணாக்கும் பொருளின் அளவு எவ்வளவு என்று தெரிந்து கொண்டால் திகைத்து மலைக்க நேரிடும். ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனில் மட்டும் 28 கோடி டன்கள் கழிவுகளாக உருவாகிறது. இதை எடுத்துச் செல்ல ஏழு லட்சம் விமானயகள் வேண்டும்.

 

நம்மையும் அறியாமல் நாம் உணவு, பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள், கண்ணாடி பாட்டில்கள், கேன்கள், புத்தக அட்டைகள், பேப்பர்கள் ஆகியவற்றை அவ்வப்பொழுது தூக்கி எறிந்து கொண்டே இருக்கிறோம்.

 

இவற்றில் பல இயற்கை ஆதார வளங்களினால் உருவாக்கப்படுகிறது என்பதை நம்மில் பலர் மறந்தே விடுகிறோம். நிலக்கரி, மரங்கள், எண்ணெய்கள், அலுமினியம் போன்றவற்றால் உருவாக்கப்படுவதை நாம் சர்வ சாதாரணமாகத் தூக்கி எறிந்து விடுகிறோம்.

 

இந்த நிலை மாற மறு சுழற்சிக்குள்ளாக்குதல் என்ற புதிய உத்தியை உலகினர் அனைவரும் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர். நாம் தூக்கி எறிபவற்றில் பலவற்றை நல்ல உரமாக மாற்ற முடியும்.

 

ரீ சைக்கிள் வங்கி (Recycle Bank) என புதிய வங்கியை சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் இன்று உருவாக்கி வருகின்றனர். இதில் பிளாஸ்டிக், கார்ட் போர்டிலிருந்து அனைத்துப் பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. மறு சுழற்சிக்குள்ளாகும் பொருள்களை இவை மறு சுழற்சிக்குள்ளாக்குகின்றன.

 

மரக் கன்றுகளை நடும் இயக்கம் உலகெங்கும் இன்று பரவலாக பரவி வருகிறது. மரங்களைக் காப்போம் என்ற திட்டத்தின் மூலமாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் பேப்பர்களும் கூட மறு சுழற்சிக்குள்ளாக்கப்படுகின்றன. ஒரு பக்கம் மட்டும் எழுதப்பட்ட பேப்பர்களை வீணாக்காது குறிப்பு எழுத உதவும் சிறு நோட்டுகளாக அவை மாற்றப்படுகின்றன.

நாம் பயன்படுத்தாத ஆடைகள் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் புதிய வழி உலகெங்கும் பரவி வருகிறது. கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளை கட்டாயம் எடுத்துச் செல்வது பழக்கமாகி வருவதால் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் அருகி குறைந்து வருகிறது.

 

நண்பர்கள் மற்றும் உறவினரிடம் கலந்துரையாடும் போது சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும் புதிய உத்திகளைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பயன்களைப் பற்றியும் சொல்வதும் இன்றைய நடைமுறை வழக்கமாக ஆகி வருகிறது. இந்தத் தொண்டர் தம் திருக்கூட்டத்தில் நாமும் இணையலாமே!

xxxxx

easter island

Compiled by london swaminathan

Date: 7 April, 2016

 

Post No. 2703

 

Time uploaded in London :–  19-10

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Modesty Anecdotes

Cato, the Roman statesman (95 BCE), on observing that statues were being set up in honour of many remarked, “I would rather people ask, why is not there a statue to Cato, than why there’s”.

Xxx

Mr President!

Abraham Lincoln was free from the usual official vanity. He rather shrank from than courted the official title of Mr President, and generally referred to his office as “this place”, “since I have been in this place” or “since I came here”.

Referring at one time to the apartment reserved in the Capitol for him, he called it “the room, you know, that they call the President’s room.”

Once he pleaded with some old Illinois friends who addressed him as “Mr President”,
“Now call me Lincoln, and I will promise not to tell of the breach of etiquette”.

Xxx

book shelf

Male and Female author books on the same shelf!!!

Madame de Genlis carried her purity of Manners to such an extent, that she reprimanded the book seller who had the arrangement of her library, for having placed books written by male and female authors on the same shelf.

Xxx

Boot Polishing Lincoln!

 

A man came upon Lincoln blacking his boots in the basement of the White House. He expressed astonishment that the President of the United States should be at such a menial task.

“What! Mr. President,” he exclaimed, “are you blacking your own boots?”

“Who else’s should I be blacking?” Lincoln’s laconic reply.

 

boot polishing

Xxx

Most Immodest Lady!

When conversation in a company in which Dr Johnson was present had fallen upon rather a delicate topic, one of the ladies, with an expression of great displeasure, rose and left the room.
“That woman”, said the doctor, “is the most immodest of all the company”.

xxx

If there is Fire, I first!

fire
F.W.Wile tells how, “Once when a group of Washington newspaper men wanted Secretary of State Hughes to attend a dinner at which a number of first rank foreign statesmen were to be present I was a committee of one to ask him where he wished to be seated at table. That was long before Dollie Gann an Alice Longworth all but caused social civil war in Washington over dinner table precedence. “You need never worry about that in my case”, Hughes said, “The only place I ever want to be first is at a fire!”

Xxxx

Modesty of Principal Cairns

A characteristic story is told of the great Principal Cairns, one of the most simple- minded and humble of men. Attending a great public meeting on one occasion in Edinburgh, which was densely crowded, his appearance on the platform was received with loud cheers. Never imagining that it was for himself, he turned and saw following him a man of diminutive stature, and totally unknown.

Taking him to be the object of popular applause, he stepped aside to let him pass, and as he did so began an enthusiastically to join in the clapping. The act, so characteristic of the man, was received with uproarious delight, and fairly brought down the house.

–Subham–

“மந்திரி பதவி விலகினால் விலகட்டுமே! ரொம்ப நல்லது” (Post No.2702)

lincoln speeches

Compiled by london swaminathan

Date: 7 April, 2016

 

Post No. 2702

 

Time uploaded in London :–  10-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அடக்கம் அமரருள் உய்க்கும் – குறள் 121

அடக்கத்தின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்

ஆப்ரஹாம் லிங்கன் என்பவர் அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிகவும் புகழ்பெற்றவர்; நேர்மையானவர். சமத்துவத்துக்குப் போராடியவர். கறுப்பின மக்களையும் மதித்தவர். அவர் வாழ்நாள் முழுதும் பல சுவை மிகு சம்பவங்கள் நடந்தன. அவருடைய ஒவ்வொரு பேச்சும் மேற்கோள் காட்டக்கூடிய பொன் மொழிகள்!

லிங்கனின் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சர் பதவியை சால்மன் சேஸ் என்பவர் வகித்து வந்தார். ஒரு முக்கிய விஷயத்தில் எல்லா அமைச்சர்களுடனும் இவர் கருத்து வேறுபட்டார். உடனே பதவியை ராஜினாமாச் செய்தார்.

லிங்கனின் ஆலோசகர்கள், “ஐயன்மீர்! சேஸ் அவர்களின் பதவி விலகல் கடிதத்தை ஏற்காதீர்கள். சேஸின் சேவை நாட்டுக்குத் தேவை” – என்று அறிவுரை வழங்கினர்.

உடனே ஆப்ரஹாம் லிங்கன் சொன்னார்:

“அடடா! என்ன தப்புக் கணக்கு இது! ஆனால் உங்களைச் சொல்லிக் குற்றமில்லை; நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் எண்ணியிருந்தேன்; இது சுத்த அபத்தம்.”

 

“நாம் எல்லோரும் நாளைய தினம் பதவியை விட்டு விலகினோம் என்று வைத்துக் கொள்வோம்; ஒரு வாரத்துக்குப் பின்னர் திரும்பி வருவோம்; நம்முடைய இடத்தில் புதியவர்கள் இருப்பார்கள்; நாம் என்ன செய்தோமோ அதையே அவர்களும் திறம்பட செய்வார்கள்; பல பதவிகளில், இப்போதைய மந்திரியைவிட, மேலும் திறமையானவர்கள் கூட இருப்பார்கள்”

“இதைச் சொல்லும்போது எனக்கு ஐரிஷ்காரர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவருடைய முடிபு இதுதான்: ‘இந்த நாட்டில் ஒருவனைப் போலவே மற்றவனும் சிறந்தவன்தான். இன்னும் சொல்லப் போனால் ஒருவன் மற்றொருவனை விஞ்சுமளவுக்குத் திறமைசாலியும் கூட. இந்த அரசாங்கம், எந்த ஒரு தனி மனிதனையும் சார்ந்து நிற்கவில்லை”. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

 

Xxx

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் குறள் 121

ஒரு பிரமுகர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வந்தார். அப்போது அமெரிக்க ஜானாதிபதி ஆப்ரஹாம் லிங்கன், தனது பூட்சுக்கு கறுப்பு வண்ணம் ஏற்றி பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்.

“அடக் கடவுளே! இது என்ன கஷ்டகாலம்; ஜனாதிபதியான நீங்கள் கையெல்லாம் கறுப்புச் சாயம் ஏற, உங்களுடைய பூட்சுகளுக்குப் பாலீஷ் போடுகிறீர்கள்!” – என்று எள்ளி நகையாடினார்.

லிங்கன் அவருக்கே உரித்தான அங்கத பதில்களை அள்ளி வீசினார். “பின்ன என்ன? நான், வேறு யார் பூட்சுகளுக்குப் பாலீஸ் போட வேண்டும் என்கிறீர்கள்?”

வந்தவர் வாயடைத்துப் போனார்.

அடக்கத்தின் சின்னம் ஆப்ரகாம் லிங்கன்.

பணிவின் இலக்கணம் ஆப்ரகாம் லிங்கன். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

xxx

ஏப்ரல் 22 – பூமி தினம் (Post No. 2701)

earth day 2

Written by S NAGARAJAN

Date: 7 April 2016

Post No. 2701

Time uploaded in London :–  9-27  AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 Earth-Day (1)

சுற்றுப்புறச் சூழலைக் காக்க உலகெங்கும் உள்ள சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் பூமி தினமாக 192 நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

பிரபஞ்சத்தில் தனித்தன்மை கொண்ட கிரகமாகத் திகழும் பூமியை நேசித்துக் கொண்டாடும் நாள் இது.

 

பூமி தினம் சம்பந்தமாக ஒவ்வொருவரும் அறிந்து  கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இதோ:-

பூமி தினத்திற்கென தனியாகக் கொடி உண்டு. இதற்கு ஈகாலஜி ஃப்ளாக் (Ecology Flag) என்று பெயர். ரான் காப் (Ron Cobb) என்ற ஒரு கார்டூனிஸ்ட் தான் முதன் முதலில் இதை உருவாக்கினார். இதில் இடம் பெற்றுள்ள இரு ஆங்கில எழுத்துக்களான E மற்றும் O ஆகியவை Envirronment மற்றும் Organism ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்திலிருந்து எடுக்கப்பட்டு கிரேக்க எழுத்துப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிமூன்று பட்டைகள் பச்சை மற்றும் வெண்மை நிறங்களில் மாறி மாறி இடம் பெறுகின்றன.

 

பூமி தினத்திற்கான தனிப் பாடல் ஒன்றும் உண்டு. 1970ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இரண்டு கோடிப் பேர் இந்த முதல் பூமி தினத்தில் பங்கு கொண்டனர்.

உலகெங்கிலுமுள்ள 192 நாடுகளில் 22000க்கும் மேற்பட்டோர் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். உலகின் மிகப் பெரும் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது. இன்று நூறு கோடிப் பேர் இந்த இயக்கத்தில் இணைந்து அரிய பூமியைக் காக்க சபதம் கொண்டுள்ளனர்.

 

2012ஆம் ஆண்டு சீனாவில் ஒரு லட்சம் பேர் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப் புகை வெளியேறுவதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள்களை ஓட்டி விழிப்புணர்வு ஊட்டினர். இந்த நாளில் உலகெங்குமுள்ள தன்னார்வத் தொண்டர்கள் ஆங்காங்கே குப்பைகளை அகற்றி வாழுமிடத்தைச் சுத்தப்படுத்துவதோடு மரக்கன்றுகளையும் நடுகின்றனர்.

நம்மை உயிர் வாழ வைக்கும் பூமித் தாயை நன்றியுடன் போற்றுவதில் நாமும் இணைவோமாக!

 earth-day

சுபம்–