How Hindu Women Tackle Those who Make Advances! (Post No.4509)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 DECEMBER 2017 

 

Time uploaded in London-  19-10

 

 

Post No. 4509

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

There are one or two episodes or couplets which show how Hindu women of the old world tackled men who made advances. Those were the days when women don’t even stand in front of men, leave alone talking. They did it out of modesty, shyness and the tradition of the land.

 

If some men approach a woman amorously or sexually now, she will threaten him with words and then warn him that she would call the police or at least raise alarm. They may even scold the men as b****ds. But in those days women never speak a single word in front of unknown men.

 

Look at the couplet in Chanakya Niti where a middle- aged woman tackled a man who made overtures to her:

 

A young man asks a middle -aged woman: he addresses her in chuckle “ Oh You Young beauty!  Why are you looking down? What of yours has fallen down on the earth?”

The middle-aged woman knew his intentions. So she gave him a fitting reply:

“Oh You fool! You do not know; The pearl in the form of my youth has fallen (I am looking for it)”.

She indirectly told him that she cannot neither entertain people like him nor he would find anything interesting in her because her charm is already gone.

–from Chanaya Niti, chapter 17 last sloka

adhah pasyasi kim bale patitam tava kim bhuvi

re re muurksha na jaanaasi gatam taarunya mauktikam

 

xxx

 

Ramayana Painting on the Wall

Gata Sapta Sati in Prakrit language, has 700 couplets mostly dealing with sex, family life, Illicit intimacy and love.

There is an interesting couplet; it was composed by Salivahan (GSS 1-35)

A newly married couple set up a family; but her husband had gone out on a business trip. Brother in law stepped into her house and eyed on her; she knew he was trying to make advances. He came for romance. She is newly married and even if she tells the truth to anyone no one is going to believe her. Even her husband may criticise her for accusing his own brother.

 

Thank god, a Ramayana painting on the wall of the house came to her rescue. Lakshmana, Rama’s brother was famous for maintaining chastity and integrity in the 14 year stay in the jungle with his brother Rama and sister in law Sita. Ramayana says that he never looked at Sita’s face and he knew only her holy feet with the toe rings. This painting was on the wall.

This newly married lady, looking at the picture, started telling the story of Lakshmana to her brother in law who came with amorous thoughts. Th way she praised Lakshmana for never looking at the face his sister n law conveyed the message very strongly. She made it very clear that she was not his cup of tea.

WHERE THERE IS RAMA , THERE IS NO KAMA!

Hindu women who never talk about sex or love to men, have their own way of conveying the message!  They are born clever in such matters!

xxx

 

God came in the form of Prostitute!

I used to attend Bhajans every Saturday with my father and mother in Madurai (Tamil Nadu, India). One night a beautiful Bhajan singer (i.e. a male with a beautiful voice) narrated an incident. He neither felt shame nor any hesitation in narrating it to us. Like Mahatma Gandhi admitting his childish mistakes (smoking secretly etc) to his father, he admitted in front of 20 to 25 Bhajan singers. Despite the holy atmosphere, during the Prasad distribution, he told us this:

Once I had some sexual urge and I went to a woman’s house, who was notorious for her bad behaviour. Knowing that I went for sex. But as soon as I entered her house she brought both here hands together to give me a big Namaste, saying ‘oh , holy singer! I have listened to your beautiful Bhajans now and then; God has given you a great gift. I am not that fortunate. Please take a seat. I will bring you some water and food. I will be blessed if you eat something in this poor woman’s house. As soon as I heard her words, all my sexual urge had disappeared. Then I pretended that I was looking for some address of XYZ and by mistake came into her house. Once again she heaped all the praises on me and I slipped out of the house without anybody seeing me. On that day God came to me in the guise of a prostitute and warned me not to entertain such thoughts. This was a great lesson.”

 

If you constantly think of God, even if you want to go astray he wouldn’t allow you to go bad.

Here the woman knew that he came with bad intentions, but she did not want to spoil him and tacked him in her own way!

–Subham–

வேதங்கள் பற்றி கம்பன் தரும் வியப்பான தகவல் (Post No.4508)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 DECEMBER 2017 

 

Time uploaded in London-  15-37

 

Post No. 4508

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நால் வேதங்கள் பற்றி கம்பன் பல இடங்களில் பாடியிருக்கிறான். சில இடங்களில் வேதங்களின் உயர்வு எவ்வளவு என்பதைக் காட்ட அவைகளை உவமையாகவும் பயன்படுத்துகிறான். ஒரு பொருளை உவமையாகப் பயன்படுத்துவதானால் அது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்க வேண்டும். கம்பன் பாடல்களில் இருந்து வேதம் பற்றித் தமிழர்கள் என்ன கருதினர் என்பதை அறிய முடிகிறது. கம்பன் நமக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன்.

 

புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்

என்னும் ஈது அருமறைப் பொருளே

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி

மாதவம் அறத்தொடு வளர்த்தார்

எண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்

ஏழ் உலகு ஆள் இடம் என்றால்

ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு பாகம்

உறைவு இடம் உண்டு என உரைத்தல்

——பால காண்டம்

பொருள்

 

இப்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மறு பிறவியில் அடைவது சொர்க்கம் என்று சொல்லப்படும் இச் செய்தி அருமையான வேதங்கள்  கூறும் உண்மைப் பொருளே ஆகும். இவ்வுலகில் இராமனைத் தவிர வேறு யார் தருமத்துடன் சிறந்த தவத்தையும் வளர்த்தார்கள்? நினைப்பதற்கும் அரிய நற்குணங்களின் நாயகனான இராமன், இனிமையாக வீற்றிருந்து இந்த ஏழு உலகங்களையும் ஆளுகின்ற நகரம் அயோத்தி. இதைக் காட்டிலும் சிறந்த எல்லாப் போகங்களுக்கும் இருப்பிடமான வேறோர் உலகம் உள்ளது என்று சொல்ல முடியுமோ முடியாது.

‘புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்’ (சுவர்க்கம்)- என்பது அருமையான வாசகம்; இது வேதத்தின் சாரம் என்று கம்பன் மொழிவதும் சிறப்பு.

 

xxxxxxxxxxxxx

காலத்தால் அழியாத மறை!

தாள்படாக் கமலம் அன்ன தடங் கணான் தம்பிக்கு அம்மா

கீழ்ப்படா நின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும்

நாட்படா மறைகளாலும் நவைபடா ஞாநத்தாலும்

கோட்படாப் பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான்.

கிட்கிந்தாக் காண்டம், அனுமப் படலம்

பொருள்

காம்பை விட்டு நீங்காத செந்தாமரை மலர்களைப் போல பெரிய கண்களையுடைய இராமன்,  தம்பியான இலக்குவனுக்கு, ஐயனே! கால எல்லைக்குட்படாத, கீழ் நிலைக்குத் தாழாத, ஒளியில் குறைவில்லாத, அழியாத வேதங்களாலும், குற்றம் உண்டாக இடமில்லாத அறிவாலும் கொள்ளப்படாத தத்துவ நிலையே இந்தக் குரங்கின் வடிவத்தில் வந்துள்ளதாகும் என்று இராமன் வியந்து சொன்னான்.

 

அதாவது ‘காலத்தால் அழியாத உயர்ந்த வேதம்’ என்று வேதம் புகழப்படுகிறது.

xxxxx

வேதத்தின் உயர்வு

 

மேவ   அரும் உணர்வு முடிவு இலாமையினால்

வேதமும் ஒக்கும் விண்புகலால்

தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்

திண்பொறி அடக்கிய செயலால்

காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்

சூலத்தால் காளியை ஒக்கும்

யாவரும் தன்னை எய்துதற்கு அரிய

தன்மையால் ஈசனை ஒக்கும்

 

—–பாலகாண்டம்

 

பொருள்:

அந்த மதில், அறிவினால்  முடிவு காண முடியாதிருப்பதால் வேதங்களை ஒத்திருக்கும்;

விண்ணுலகத்தை எட்டுவதால், தேவர்களை ஒத்திருக்கும்;

போர்ப்பொறிகளை தன்னுள் மறைத்து வைத்திருப்பதால் முனிவர்களை ஒத்திருக்கும்;

காவல் தொழிலில் கலைமானை வாஹனமாக உடைய துர்கா தேவியை ஒத்திருக்கும்;

தன் சிகரத்தில் இடி தாங்கி ஆகிய சூலத்தைப் பெற்றிருப்பதால் காளியை ஒத்திருக்கும்;

 

யாரும் தன்னை அணுக முடியாத நிலையில் ஈசனை ஒத்திருக்கும்.

 

 

நல்ல கற்பனை! அயோத்தி மாநகரின் மதிலை வர்ணிக்க வந்த கம்பன் அதன் உயர்வு பற்றி ஒப்பிடுகையில் அறிவினால் முடிவே காண முடியாத வேதங்களுக்குச் சமம் என்கிறான்.

 

இந்தப் பாடலில் உள்ள விஞ்ஞான விஷயமான இடிதாங்கி பற்றியும் துர்கையின் வாஹனமான கலைமானுடன் இந்தியா முழுதும் எங்குமே துர்கை சிலை கிடைக்காதது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன். கலைமகளின் வாஹனம் மான் என்று தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் பாடிப் பரவியபோதும் ஓரிடத்திலும் இப்படிப்பட்ட சிலை கிடைக்காதது அதிசயமே. முஸ்லீம் படைகள் அடித்து உடைத்த சிலைகளில் இதுவும் அடக்கம் போலும்.

 

xxxxxxxxxxxx

வேதம் பொய்க்குமோ?

 

அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இந்

நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே

வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ

இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள்

சடாயு உயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம்

 

பொருள்:

துன்புற்ற என்னிடம் வந்து அஞ்சாதே என்று தைரியம் சொன்னவனான ஜடாயு தோல்வி அடைவதா? நரகத்துக்கு உரியவனான  இராவணன் வெற்றி அடைவதா?  தருமம் வெல்லும் என்று வேதங்கள் கூறுவது பொய்யாகுமோ? பாவம் வெற்றி பெறுமா? இந்த ஊரில் தர்மம் என்பது இல்லாமல் போய்விட்டதா? என்று சீதை புலம்பினாள்

 

இதில் நாம் கவனிக்க வேண்டியது ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற கருத்தாகும். இதைக் கம்பன் மேலும் சில இடங்களில் வலியுறுத்துகிறான். இது வேதம் சொல்லும் கருத்து என்பது இந்துக்களின் நம்பிக்கை.

xxxxx

வேத பாராயணம்

கிட்கிந்தா காண்டத்தில் கிட்கிந்தைப் படலத்தில் ஒரு காட்சி வருகிறது:

அருக்கிய முதல வான அருச்சனைக் கமைந்தயாவும்

முருக்கிதழ் மகளிர் ஏந்த முரசு இனம் முகிலின் ஆர்ப்ப

இருக்கு இனம் முனிவர் ஓத இசை திசை அளப்பயானர்த்

திருக்கிளர் செல்வம் நோக்கித் தேவரும் மருளச் சென்றான்

 

பொருள்:

கலியாண முருக்க மலரைப் போன்ற சிவந்த உதடுகளை உடைய வானர மகளிர் , அர்க்யம் முதலாக உள்ள அர்ச்சனைக்கு அமைந்த அனைத்தையும் கைகளில் ஏந்தி வரவும், பேரிகை முதலிய கருவிகள் இடி போல ஒலிக்கவும்,  முனிவர்கள் இருக்கு வேதம் முதலான நால் வேதங்களையும் பாராயணம் செய்தபடி வரவும், இசை எல்லாத் திசைகளிலும் பரவும், புதிய செல்வச் சிறப்பைக் கண்டு தேவர்களும் திகைக்குமாறு, சுக்ரீவன், இலக்குவனின் எதிரில் சென்றான்.

 

வானர சாம்ராஜ்யத்திலும் வேத பாராயணம் செய்யும் முனிவர்கள் இருந்ததும், அவர்கள் நாகரீகமிக்க சமுதாயத்தில் உள்ளதைப் போலவே மன்னன் பவனியில் வேத பாராயணம் செய்தவாறு வந்தனர் என்பதும் நல்லதொரு காட்சி.

 

எங்கள் மதுரையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருவீதி உலா வருகையில் இது போல பிராமணர்கள் வேத பாராயணம் செய்தவாறு வருவர். பின்னால் ஓதுவா மூர்த்திகள் தேவாரம், திருவாசகத்தை ஓதியவாறு வருவர்.இது கிட்கிந்தையிலும் நடந்தது!

 

 

உபநிடதம், வேதாந்தம் பற்றியும் பல பாடல்களில் பேசுகிறான் கம்பன்; அவைகளைத் தனி ஒரு கட்டுரையில் தருவேன்.

TAGS:– கம்பன், வேதம், உவமை, உயர்வு, பொய், நாட்படா மறை

 

–SUBHAM—

இதை எழுதிய மாங்காய் மடையன் யார்? அது, நான்தான்! (Post No.4507)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-35 AM

 

 

Post No. 4507

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஆஸ்திரிய நாட்டு இசை மேதையும் சாஹித்ய கர்த்தாவுமான மோசார்ட் (Mozart) திரு ஞான சம்பந்தர் போல இளம் வயதிலேயே பாடல்களை எழுதியவர்; பாடியவர். அவரிடம் ஒரு பையன் வந்தான்.

ஐயா, எப்படி ஸிம்பனி (symphony ஸ்வரத் தொகுப்பு) எழுதுவது என்று எனக்குச் சொல்லுங்கள் – என்றான்

 

“அட, நீ ரொம்பச் சின்னவன். முதலில் நாட்டுப் பாடல், கதை பாட்டு (ballads) ஆகியவற்றை எழுதிப் பழகு” – என்றார்.

 

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் மட்டும் பத்து வயதிலேயே ஸ்வரங்களை எழுதினீர்களே!”

 

 

அது உண்மைதான். ஆனால் ஸிம்பனி எப்படி எழுதுவது என்று நான் யாரிடமும் போய்க் கேட்கவில்லையே – என்றார்.

 

வான மயிலாடக் கண்டு தானும் அதுவாகப் பாவித்த வான் கோழியின் கதை போல உள்ளது அந்தப் பையன் கதை!

 

XXXX

பிரபல ஜெர்மன் தத்துவ ஞானி (Nietzsche) நீட்ஸே, வாக்னருடன் பேசிக்கொகொண்டிருந்தார்.

“நான் நினைக்கிறேன்; மோசார்ட் எழுதிய  F பிகாரொவில் (Figaro) அற்புதமான இசையைக் கண்டு பிடித்து இருக்கிறார்”.

 

வாக்னர் (Wagner) சொன்னார்: அவர் அற்புதமான இசையைக் கண்டுபிடிக்கவில்லை. நீங்கள் சொன்னதற்கு நேர்மாறாக நடந்தது. அவர் இசையில் அற்புதத்தைக் கரைத்துவிட்டார்”.

 

XXX

 

 

அற்புத நினைவு சக்தி!

 

பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த குனோட் (Gunod) ஒரு சாஹித்யகர்த்தா (composer) ; பியானோ வாத்யக்காரர். அவர் மற்றொரு மேதையான பெர்லியோஸ் (Berlioz) எழுதிய  ரோமியோவும் ஜூலியட்டும் என்ற இசை நிகழ்ச்சியின் ஒத்திகைக்குப் போயிருந்தார். மறுநாள் வீட்டுக்கு பெர்லிசோவை அழைத்தார். முதல்நாள் கேட்ட இசையை அப்படியே அ ட்சரம் பிசாகாமல் பெர்லியோஸுக்கு வாசித்துக் காண்பித்தார்.

 

அவருக்கு ஒரு பக்கம் வியப்பு; மற்றொரு பக்கம் திகைப்பு.

நன்றாக வாசித்தீர்கள் ஆனால் இதை எங்கிருந்து தெரிந்து கொண்டீர்கள்? என்று வியப்புடன் கேட்டார்.

அவருக்கு ஒரு சந்தேகம்; யாரோ தன்னுடையதைத் திருடிக் கொடுத்து இருக்க வேண்டும்; அல்லது இரண்டு பேர் ஒரே மாதிரி இசை அமைத்த உலக அதிசயம் நடந்திருக்க வேண்டும் என்று.

 

குனோட் சொன்னார்: “நான் உங்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கு வந்தேனல்லவா?அப்போது கேட்டதைத்தான் நினைவில் வைத்து எழுதினேன்!”

 

XXX

அருவருக்கத்தக்க இசை!!!

 

சீஸர் ப்ராங்க் (Caesar Frank) என்பவர் நல்ல இசை அமைப்பாளர்; மிகவும் சாது. அதிகமாக வெளியே வந்தவர் அன்று; இதனால் அவரைப் பலருக்கும் தெரியாது. அவர்  அமைத்த இசை முழங்கிய  கச்சேரியில் அவர் ரஸிகப் பெருமக்களுடன் உட்கார்ந்திருந்தார். பொதுவாக புதிய இசை அமைப்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு இருக்கும். அவருக்கும் பிற்காலத்தில்தான் அங்கீகாரம் கிடைத்தது.

 

அவர் உட்கார்ந்திருந்த வரிசைக்குப் பின்னால் செல்வச் செருக்குள்ள ஒரு சீமாட்டி உட்காந்திருந்தாள். அவள் அகந்தையின் உறைவிடம். ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டுக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளி நேரத்தில் அந்தப் பெண் உரத்த குரலில் எந்த மடையன் அருவருக்கத்தக்க இந்தப் பாட்டை எழுதினானோ! என்று நகைத்தாள்.

ஸீஸர் ப்ராங்க் மெதுவாகப் பின்னால் திரும்பி, அம்மணி, இந்தப் பாட்டை எழுதியவன் நான்தான் – என்றார்

TAGS:- இசை ,மேதைகள், நினைவு சக்தி, இளம் வயது, மோசார்ட், குனோட், மடையன்

–subham–

மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீரா! மஹாராணியின் கேள்வி! (Post No.4506)

Date: 17  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-40 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4506

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீரா, பாண்டியரே! மஹாராணியின் கேள்வி!

 

ச.நாகராஜன்

 

1

மாமன்னன் வரதுங்க பாண்டியன் மஹா சிவ பக்தன். மஹாராணியும் சிறந்த சிவ பக்தை. இருவருமே தமிழில் அருமையாகக் கவிதை புனையும் ஆற்றல் படைத்தவர்கள். சிவ மணமும் தமிழ் மணமும் கமழ பாண்டிய தேசம் சுபிட்சமாக இருந்தது.

 

நாட்கள், மாதங்கள் ஆகி, மாதங்கள் வருடங்கள் ஆகி வருடங்கள் உருண்டோடின.

 

மன்னன் வாழ்நாளின் இறுதியை அடைந்தான்.

மரணப்படுக்கையில் வரதுங்க பாண்டியர் படுத்திருக்க, மஹாராணி அருகில் அமர்ந்திருந்தாள்.

மன்னன் முகத்தில் சிந்தனை ஓங்கியிருந்தது. யாரையோ அவன் நினைத்துக் கொண்டிருந்தான் போலும்!

 

மன்னனைப் பார்த்த மஹாராணி மெதுவாகக் கேட்டாள்: “மன்னரே, மரணத்தைக் கண்டு பயமாக இருக்கிறதா?”

பாண்டியன் சிரித்தான். “எனக்கா, மரணத்தைக் கண்டா, பயமா. ஹஹ்ஹஹ்ஹா”

 

மன்னனின் சிரிப்பைத் தொடர்ந்து பாடல் ஒன்று பிறந்தது. தமிழில் சிவம் கலந்த பாடல் அது.

 

2

பாண்டியனின் பாடலையும், மஹாராணியின் பாடலையும் கால வெள்ளம் அழித்து விடவில்லை. இன்றும் அவை நம் முன்னே இருக்கின்றன.

பாடல்களைப் பார்ப்போமா?

 

அஞ்சலென்ற கரதலமுங் கணபண கங்கணமும்

அரைகிசைந்த புலியுடையு மம்புவிச் செஞ்சடையும்

கஞ்சமலர்ச் சேவடியுங் கனைகழலுஞ் சிலம்பும்

கருணைபொழி திருமுகமுங் கண்களொரு மூன்றும்

நஞ்சையுண்ட மணிமிடரு முந்நூலு மார்பும்

நலந்திகழ்வெண் ணீற்றொளியு மறியானு மழுவும்

பஞ்சடிச்சிற் றிடையுமையா ளொப்பனைபா கமுமாய்ப்

பால்வண்ண ருளத்திருக்கப் பயமுண்டோ யெனக்கே!

 

 

பால் வண்ணர் என் உள்ளத்தில் முழுக் கோலத்துடன் இருக்கையில் பயமா, எனக்கா என்றான் பாண்டியன்.

பாடலின் முழுப் பொருள் :

 

அஞ்சல் என்ற கரதலமும் – அஞ்சாதே என்று அபயம் கொடுக்கும் கையும்

கணபண கங்கணமும் – வட்டமாகிய படங்களையுடைய பாம்பாகிய கங்கணமும்

அரைக்கு இசைந்த புலி உடையும் – இடுப்பிற்கேற்ற புலித்தோலால் ஆன ஆடையும்

அம்புவி செஞ்சடையும் – சந்திரனை அணிந்த சிவந்த சடையும்

கஞ்சமலர் சேவடியும் – தாமரை மலரைப் போன்ற சிவந்த திருவடியும்

கனைகழலும் சிலம்பும் – ஒலிக்கின்ற வீரக்கழலும் சிலம்பும்

கருணைபொழி திருமுகம் – அருள் மழையைப் பொழிகின்ற திருமுகமும்

 

கண்கள்  மூன்றும் – ஒப்பற்ற மூன்று கண்களும்

நஞ்சையுண்ட மணிமிடறும் – விஷத்தை உண்ட நீலமணி போலும் கழுத்தும்

முந்நூலும் மார்பும் – மூன்று இழைகளைக் கொண்ட பூணூலும் மார்பும்

 

நலம் திகழ் வெண்ணீற்று ஒளியும் – அழகு விளங்க நிற்கும் திருவெண்ணீற்றின் ஒளியும்

மறிமானும் – மான் கன்றும்

மழுவும் – மழு ஆயுதமும்

 

பஞ்சு அடி சிற்றிடை உமையாள் – பஞ்சு போன்ற பாதத்தையும் சிற்றிடையையும் கொண்ட உமாதேவி

ஒப்பனை பாகமும் ஆய்  – ஒப்பனையம்மை பாகமும் ஆகி

பால்வண்ணன் உள்ளத்து இருக்க – பால்வண்ண நாதர் எம்முளத்தில் இருக்கும் போது

எனக்குப் பயமும் உண்டோ – எனக்குப் பயமும் உண்டோ?

நிச்சயமாக இல்லை

Picture posted by Lalgudi Veda

இதைக் கேட்டு மனம் உருகிய பாண்டிமாதேவி பாடினாள் இப்படி:

யாக்கையெனும்  புழுக்குரம்பை யணைந்தனையாப் பொருளை

அருளொளியைப் பராபரத்துக் கப்புறவா மறிவை

நீக்கமற மயிர்முனைக்கு மிடமறவெங் கெங்கும்

நிறைந்து நின்ற முழுமுதலை நினவிலெழுஞ் சுடரைப்

பாக்கியங்கள் செய்தனந்தத் தவக்குறைகண் முடிக்கும்

பழவடியார் தமக்குதவும் பசுந்துணர்க்கற் பகத்தை

வாக்குமன விகற்பாத்தா லளவுபடா வொன்றை

மாசற்ற வெறுவெளியை மனவெளியி லடைப்பாம்

 

 

இதன் பொருள் ;

ஆக்கை என்னும் புழுக்குரம்பை அணைந்து அணையா பொருளை – உடம்பென்கிற புழுக்கூட்டைச் சேர்ந்தும் சேராத பரம்பொருளை

 

அருள் ஒளியை – அருள் பிரகாசத்தை

பராபரத்துக்கு அப்புறம் ஆம் அறிவை –  பரம், அபரம் என்பவைகளுக்கு அப்பாற்பட்ட அறிவை (பரம் – ஆதி; அபரம் – அந்தம்)

நீக்கம் அற –  நீங்குதலின்றி

மயிர் முனைக்கும் இடம் அற – மயிர் முனையை ஊன்றுதற்கும் இடமில்லாமல்

 

எங்கெங்கும் நிறைந்து நின்ற முழுமுதலை –  எவ்விடத்தும் நிறைந்து நிற்கின்ற முதற்பொருளை

நினைவில் எழும் சுடரை – நினைப்பில் உண்டாகின்ற ஒளியை

பாக்கியங்கள் செய்து – அதிர்ஷ்டங்களைச் செய்து

அநந்தம் தவக்குறைகள் முடிக்கும் – அளவற்ற தவக்குறைகளை நிறையச் செய்கின்ற

பழ அடியார் தமக்கு உதவும் – பழ அடியார்க்கு வேண்டும் பொருளைக் கொடுக்கின்ற

 

பசுதுணர் கற்பகத்தை – பசுமையாகிய பூங்கொத்துகளை உடைய கற்பக விருட்சத்தை

வாக்குமன விகற்பத்தால் – வாக்கு மனங்களின் வேறுபாட்டால்

அளவுபடா ஒன்றை – அளவிடப்படாத ஒரு பொருளை

மாசு அற்ற வெறுவெளியை – களங்கமற்ற வெட்ட வெளியை

மனவெளியில் அடைப்பாம் – மனமாகிய ஆகாயத்தில் அடைத்து வைப்போம்

Picture posted by Lalgudi Veda

மஹாராணி, “பாண்டியரே! ஆம்! எங்கும் நிறைகின்ற பொருளை நம் மனதில் எப்போதும் வைத்திருப்போம்!” என்று நெஞ்சுருகச் சொன்னாள்.

 

வரதுங்க பாண்டியர் சிவபதத்தைச் சேர்ந்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?!

 

3

 

மன்னரானாலும் சரி, மஹாராணியானாலும் சரி, யோகியானாலும் சரி, சாமானிய மனிதன் என்றாலும் சரி, பண்டைய நாட்களில் தம் தம் வாழ்வை நெறியுடன் நடத்தி மனமகிழ்ச்சியுடன் அனைவரும் வாழ்ந்தனர்.

உரிய காலம் முடியும் போது சிவ சிவ என்றோ அல்லது ராம ராம என்றோ தமக்குப் பிடித்த இறைவனின் நாமத்தைக் கூறி அமைதியாக உயிரை விட்டனர்.

 

வரலாறை எடுத்துப் பார்க்கும் போது தமிழகத்தின் பெரிய மனிதர்களின் இறுதிக் கணங்களில், அவர்கள் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பின்,  திருவாசகத்தை ஓதச் செய்து கேட்பது மரபாக, பழக்கமாகவே இருந்திருக்கிறது.

அற்புதமான ஒரு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை அறியும் போது உளம் நெகிழ்கிறது, இல்லையா!

 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

****

பாரதி போற்றி ஆயிரம் – 7 (Post No.4505)

Date: 17  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-18 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4505

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 37 முதல் 42

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

பாடல்கள் 37 முதல் 42

37

தேன்கவிகள் தேவை

பொழுது விடியப் புதுவையி லோர்வீட்டில்
விழிமலர்ந்த பாரதியார் காலை வினைமுடித்து
மாடிக்குப் போவார்; கடிதங்கள் வந்திருக்கும்.
வாடிக்கை யாகவரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்.
சென்னைத் தினசரியின் சேதி சிலபார்ப்பார்.
முன்னால் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
சரியாய்ப் படித்ததுண்டா இல்லையா என்று
வரிமேல் விரல்வைத்து வாசிப்பார் ஏட்டை.

அதன்மேல் அடுக்கடுக்காய் ஆரவா ரப்பண்!
நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்பஒலி
கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளறுகின்ற
துண்டு துணுக்குரைகள்! வீரச் சுடர்க்கதைகள்!
என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
பன்னத் தகுவதுண்டோ நாங்கள்பெரும் பாக்கியத்தை?
வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம்
போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்.
தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார்
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி
அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார்.
மாடியின்மேல் ஓர்நாள் மணிஎட் டரைஇருக்கும்
கூடிக் கவிச்சுவையைக் கொள்ளையிடக் காத்திருந்தோம்.
பாரதியார் வந்த கடிதம் படித்திருந்தார்.
சீரதிகம் கொண்டதொரு சென்னைத் தினசரியின்
ஆசிரியர் போட்ட கடிதம் அதுவாகும்.
வாசித்தார் ஐயர், மலர்முகத்தில் வாட்டமுற்றார்.
“என்னை வசனமட்டும் நித்தம் எழுதென்று
சென்னைத் தினசரியின் ஆசிரியர் செப்புகின்றார்.
பாட்டெழுத வேண்டாமாம்; பார்த்தீரா அன்னவரின்
பாட்டின் பயனறியாப் பான்மையினை” என்றுரைத்தார்.

பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் `சோர்வெ’ன்னும்
காரிருளில் கால்வைத்தார்; ஊக்கத்தால் மீண்டுவிட்டார்.
“பாட்டின் பயனறிய மாட்டாரோ நம்தமிழர்?
பாட்டின் சுவையறியும் பாக்கியந்தான் என்றடைவார்?”
என்று மொழிந்தார், இரங்கினார், சிந்தித்தார்
“நன்று மிகநன்று, நான்சலிப்ப தில்லை”என்றார்.

நாட்கள் சிலசெல்ல நம்மருமை நாவலரின்
பாட்டின் சுவையறிவோர் பற்பலபே ராகிவிட்டார்.
ஆங்கிலம் வல்ல கசின்ஸ்என்னும் ஆங்கிலவர்
“நீங்கள் எழுதி நிரப்பும் சுவைக்கவியை
ஆங்கிலத்தில் ஆக்கி அகிலஅரங் கேற்றுகின்றேன்
பாங்காய் எனக்குநல்ல பாட்டெழுதித் தாருங்கள்”
என்று வரைந்த கடிதத்தை எங்களிடம்
அன்றளித்தார். எம்மை அபிப்பிரா யம்கேட்டார்.
“வேண்டும் எழுதத்தான் வேண்டும்”என்றோம். பாரதியார்,
“வேண்டும்அடி எப்போதும் விடுதலை” என்
றாரம்பஞ் செய்தார்; அரைநொடியில் பாடிவிட்டார்.
ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல்
ஆங்கிலத்தில் அந்தக் கவிதான் வெளியாகித்
தீங்கற்ற சென்னைத் தினசரியின் ஆசானின்
கண்ணைக் கவர்ந்து கருத்தில் தமிழ்விளைத்தே
எண்ணூறாண் டாய்க்கவிஞர் தோன்றவில்லை இங்கென்ற
வீ.வீ.எஸ்.ஐயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து
பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!
ஆங்கிலவர் பாரதியின் ஆர்ந்த கவித்தேனை
வாங்கியுண்ணக் கண்டபின்னர் வாயூறிச் சென்னைத்
தினசரியின் ஆசிரியர் “தேவையினித் தேவை,
இனியகவி நீங்கள் எழுதுங்கள்” என்றுரைத்தார்;
தேவையில்லை என்றுமுன் செப்பிட்ட அம்மனிதர்
தேவையுண்டு! தேவையுண்டு! தேன்கவிகள் என்றுரைத்தார்!
“தாயாம் தமிழில் தரும்கவியின் நற்பயனைச்
சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை
அயலார் சுவைகண் டறிவித்தார், பின்னர்
பயன்தெரிந்தார் நம்தமிழர்” என்றுரைத்தார் பாரதியார்.
நல்ல கவியினிமை நம்தமிழர் நாடுநாள்
வெல்ல வருந்திரு நாள்.

பாடல்கள் 38 முதல் 41

பாரதி உள்ளம்

சாதி ஒழிந்திடல் ஒன்று – நல்ல

தமிழ் வளர்த்தல்மற் றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்றப்

பாதி துலங்குவ தில்லை.
சாதி களைந்திட்ட ஏரி – நல்ல

தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே – நல்ல

தண்டமிழ் வாளினைத் தூக்கும்!

என்றுரைப் பார்என் னிடத்தில் – அந்த

இன்ப உரைகளென் காதில்
இன்றும் மறைந்திட வில்லை – நான்

இன்றும் இருப்பத னாலே!
பன்னும்நம் பாரதி யாரின் – நல்ல

பச்சைஅன் புள்ளத்தி னின்று
நன்று பிறந்தஇப் பேச்சு – நம்

நற்றமிழர்க் கெழில் மூச்சு!

மேலவர் கீழவர் இல்லை – இதை

மேலுக்குச் சொல்லிட வில்லை
நாலு தெருக்களின் கூட்டில் – மக்கள்

நாலா யிரத்தவர் காணத்
தோலினில் தாழ்ந்தவர் என்று – சொல்லும்

தோழர் சமைத்ததை உண்பார்.
மேலும்அப் பாரதி சொல்வார் – “சாதி

வேரைப் பொசுக்குங்கள் என்றே.

செந்தமிழ் நாட்டினிற் பற்றும் – அதன்

சீருக்கு நல்லதோர் தொண்டும்
நிந்தை இலாதவை அன்றோ! – எந்த

நேரமும் பாரதி நெஞ்சம்
கந்தையை எண்ணுவ தில்லை – கையிற்

காசை நினைப்பதும் இல்லை.
செந்தமிழ் வாழிய! வாழி – நல்ல

செந்தமிழ் நாடென்று வாழ்ந்தார்.

 

 

 

பாடல் 42

செந்தமிழ் நாடு

(செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாடலைப் பாரதி ஏன் பாடினார்?)

தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத் தார்உரைத்தார்
தேன்போற் கவிஒன்று செப்புகநீர் என்று
பலநண்பர் வந்து பாரதி யாரை
நலமாகக் கேட்டார்; அதற்கு நம்ஐயர்
என்கவிதான் நன்றா யிருந்திடினும் சங்கத்தார்
புன்கவிஎன் றேசொல்லிப் போட்டிடுவார்; போட்டால்தான்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும்! ஆதலினால்,
உங்கட்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்.
அந்தவிதம் ஆகட்டும்என்றார்கள் நண்பரெலாம்.
செந்தமிழ் நாடென்னும் போதினி லேயின்பத்
தேன்வந்து பாயுது காதினிலேஎன்
றழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால்
எழுதி முடித்தார்! இசையோடு பாடினார்!
காதினிக்கும் நல்ல கருத்தினிக்கும் அஃதிந்நாள்
மேதினியிற் சோதி விளக்கு!

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

****

 

Manu’s Most Beautiful 12 Couplets (Post No.4504)

WRITTEN by London Swaminathan 

 

Date: 16 DECEMBER 2017 

 

Time uploaded in London-  17-59

 

 

Post No. 4504

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

All the Hindu scriptures we have today, except Vedic literature and Bhagavd Gita, are updated versions. Hindus always update their scriptures and so there is scope for interpolations. For instance, Narendra Modi became the 14th Prime Minster of India on 26 May 2014. Pauraniks will write it in a different language:

 

“In the Kaliyuga there will come a man with the name of Indra from the land of Somnathji and he would rule India from Indraprastha for long. He is fond of a flower that grows in water. He would not be from the Brahmana or Kshatria castes. He would paint the land with saffron colour. He will be flying high in yantra Pakshis (mechanical birds)”

 

Even the events that had already happened, they would put in future tense as if it was written in 1000 CE or before. It is a style or genre.

 

In the same way lot of materials are added to Manu Smrti during the time of Brahmin rule- the Sunga Dynasty. All those were put in the mouth of Manu or Bruhu. Lot of things against shudras were added. But how can one know which is new which is old. It is very easy if one reads the whole book without any bias. Most of the anti-shudra materials are at the end of the chapters. So any one could have added them easily or amended them easily. Another touch stone is there. We can easily find out what sort of man Manu was by reading the full book.

 

Here is a proof to show that he was genuinely a man of honesty and integrity. In the second chapter, there are 12 slokas or couplets which show that he held Vedas in high esteem. After upholding the Vedas he gives free hand to every one. He says if anyone has doubts or conflicts of interest they can always follow the tradition that is followed by the elders. Then one can follow what gives one real pleasure. This means one should not act against his or her conscience.

 

All adults know what is right and wrong; all of us know which gives one permanent happiness that which never affects others. If something gives us happiness, but pricks our conscience then that is not true happiness. If one cannot do a thing in public, then it is not happiness. So he give the four marks to identify the Dharma or right things or righteousness:

Here are the first 12 Slokas of Second Chapter of Manava Dharma Shastra or Manu Smrti, the Hindu Law Book, in fact the oldest Law book in the world:

 

1. Learn that sacred law which is followed by men learned in the Veda and assented to in their hearts by the virtuous, who are ever exempt from hatred and inordinate affection (passion).

 

2. To act solely from a desire for rewards is not laudable, yet an exemption from that desire is not to be found in this world: for on that desire is grounded the study of the Veda and the performance of the actions, prescribed by the Veda.

 

3. The desire for rewards, indeed, has its root in the conception that an act can yield them, and in consequence of that conception sacrifices are performed; vows and the laws prescribing restraints are all stated to be kept through the idea that they will bear fruit.

 

4. Not a single act here below appears ever to be done by a man free from desire; for whatever man does, it is the result of the impulse of desire.

 

5. He who persists in discharging these prescribed duties in the right manner, reaches the deathless state and even in this life obtains the fulfilment of all the desires that he may have conceived.

 

6. The whole Veda is the first source of the sacred law, next the tradition and the virtuous conduct of those who know the Veda further, also the customs of holy men, and finally self-satisfaction.

 

7. Whatever law has been ordained for any person by Manu, that has been fully declared in the Veda: for that sage was omniscient.

 

8. But a learned man after fully scrutinising all this with the eye of knowledge, should, in accordance with the authority of the revealed texts, be intent on the performance of his duties.

 

9. For that man who obeys the law prescribed in the revealed texts and in the sacred tradition, gains fame in this world and after death unsurpassable bliss.

 

10. But by Sruti (revelation) is meant the Veda, and by Smriti (tradition) the Institutes of the sacred law: those two must not be called into question in any matter, since from those two the sacred law shone forth.

 

11. Every twice-born man, who, relying on the Institutes of dialectics, treats with contempt those two sources (of the law), must be cast out by the virtuous, as an atheist and a scorner of the Veda.

 

12. The Veda, the sacred tradition, the customs of virtuous men, and one’s own pleasure, they declare to be visibly the fourfold means of defining the sacred law.

 

My Views:-

Most beautiful points are

1.Four fold Mark of Religion

Vedas, Law Book, Customs of virtuous men, One’s own pleasure (Self Satisfaction)

 

2.No one acts without desire. If anyone does anything without desire, one reaches the highest stage

3.Good men are those who have neither hatred nor passion.

The rules Manu insists for the twice born are very strict. If someone follows those strict rules, the concessions he gives to learned Brahmins are justified.

Two recent things that happened in the British courts point in this direction.

(1).A girl who is an Oxford University student hit her boy friend in drunken state. But the judge spared her the prison sentence saying that since she was very studious having higher education, he did not want to send her to prison.

Here we see those who have knowledge are given concessions.

(2). The second incident was about a doctor. Because of his status the judge exempted him from coming to the witness box.

(3). In the Soviet Union, even the most dictatorial government in the world did not send Sakharov, the father of nuclear science, to concentration camps. He was given lot of concessions.

This is the reason that Buddha and Manu said even if the Brahmins kill their own father and mother, destroy a king and the kingdom no sin would touch them.(Please read my earlier articles on this topic)

 

–Subham–

 

‘ஆயிர நாமத்து ஐயா சரணம்’: கம்பன் சொன்ன சஹஸ்ரநாமம் (Post No.4503)

‘ஆயிர நாமத்து ஐயா சரணம்’: கம்பன் சொன்ன சஹஸ்ரநாமம் (Post No.4503)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 16 DECEMBER 2017 

 

Time uploaded in London-  10-04 am

 

 

Post No. 4503

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இந்துக்களிடையே மிகவும் புகழ் பெற்றது விஷ்ணு சஹஸ்ரநாமம். இது, திருமாலின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. ஆயிரம் என்றும் 1008 என்றும் ஆண்டவனின் பெயர்களை எழுதினாலும் அதற்கு ஆயிரம் என்றே சுருங்கச் சொல்லுவர்.

 

இது கம்பன் காலத்தில் , அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ் நாட்டில் நன்கு பிரபலம் அடைந்திருக்க வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாமம், மஹாபாரத்தில் உள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டில் பாராயணம் செய்யப்பட்டிருக்கும்.

சிவன் சஹஸ்ரநாமம்

 

 

ஏனெனில் கம்பருக்கும், அவருக்கு முந்தைய கொம்பருக்கும், அதவது அப்பர் என்னும் திருநாவுக்கரசருக்கும் முன்னரே சிவ சஹஸ்ரநாமமும் பிரயோகத்தில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அப்பர், சம்பந்தருக்கு முன் வாழ்ந்த மாணிக்க வாசகர்,

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை

உருநாமறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்

 

ஒரு நாமம் ஓரூருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்

திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

 

என்று திருவசகத்தில் செப்புவார்.

 

அவருக்குப் பின்னர் வந்த அப்பர் பெருமான்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்

பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்

………….. (ஆறாம் திருமுறை) என்று மாணிக்கவாசகரின் சொற்களை எதிரொலிக்கிறார்.

 

 

சமண சஹஸ்ரநாமம்.

இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில், நாடுகாண்  காதையில் சமணர்களின் சஹஸ்ரநாமம் பற்றி உரைக்கிறார்:

 

சாரணர் வாய்மொழிகேட்டு, தவமுதல்,

காவந்திகை தலைமேற்கொண்டு

ஒருமூன்று அவித்தோன் ஞானத்

திருமொழிக்கு அல்லது என் செவியகம் திறவா

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு

நாமம் அல்லது நவிலாது, என் நா

 

–என்று கவுந்தியடிகளின் வாயிலாக உரைப்பார்

 

பொருள்:

தவ முதல்வியாகிய கவுந்தியடிகளும் சாரணர் உரைத்த வாய்மையான உபதேசங்களை எல்லாம் கேட்டனர். தம் கைகளைத் தலைமேற் குவித்துக் கொண்டனர். “என் செவிகள் காமம், க்ரோதம், லோபம் என்ற மூன்றினையும் கெடுத்தோனாகிய அருக தேவன் ஓதிய ஞானத் திருமொழிக்கு அல்லது

பிறவற்றிற்குத் திறக்காது; காமனை வென்றோனின் 1008 திருநாமங்கள் அல்லது வேறு எதனையும் என் நா நவிலாது.

 

 

விஷ்ணு  சஹஸ்ரநாமம்

கம்பனின் சொற்கள், சொற்றொடர்கள் ஒவ்வொன்றையும் அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்துப் பார்த்து, படித்து ரஸிக்க வேண்டும். அவனும் சஹஸ்ரநாமத்தைத் தக்க இடத்தில் பயன்படுத்துகிறான்

 

பாய் இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும் மாலை

மாயிருங்கரத்தால் மண்மேல் அடியுறையாக வைத்து

தீயன சிறியோர் செய்தல் பொறுப்பது பெரியோர் செய்கை

ஆயிரநாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான்

 

பொருள்

பரந்த இருளை ஒழிக்க வல்ல தெய்வத் தன்மை கொண்ட கதிரவனையும் தன் ஒளியால் மட் டம்தட்டும் பிரகாசம் உடைய ஒரு மாலையை தன் கைகளால் எடுத்துவந்து தரைமீது காணிக்கைப் பொருளாக வைத்துச் “சிறியவர் தீயவை செய்தால் அவற்றைப் பொறுத்துக் கொள்வதே பெரியோர் செயலாகும்”, ஆயிரம் பெயர்களை உடைய ஐயனே! அடைக்கலம்! என்று ராமனின் அடிகளில் வீழ்ந்தான் வருணன்.

 

 

இதில் திருமாலின் சஹஸ்ரநாமத்துடன் வேறு சில சுவையான விஷயங்களும் உள.

 

ஒளிவீசும் ரத்தின மாலையுடன் வருணன் வந்த செய்தி, அக்காலத்திலேயே மாலை போடும் வழக்கத்தைக் காட்டுகிறது. சங்கராச்சார்யார் போன்ற பெரியோர்கள் கழுத்தில் மாலை போடாமல் அதை அவருடைய பாத கமலங்களில் சமர்ப்பிப்பர். அது போல இராம பிரானின் திருவடிகளில் மாலையை வைக்கிறான் வருணன். அவ்வளவு மரியாதை.

பிழை பொறுத்தல்

அடுத்ததாக சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே (வெற்றி வேற்கை) என்றும் மொழிகிறான்.

 

பிழை பொறுக்க வேண்டுதலை அவ்வையாரின் வெற்றி வேற்கை முதல் கந்தசஷ்டிக் கவசம் வரை காண்கிறோம். அதைக் கம்பனும் இப்பாடலில் புகுத்தியுள்ளான்.

 

தேவராய சுவாமிகளின் கந்தசஷ்டி கவசம்:

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்

***

பிழைத்தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை போற்றி

—மாணிக்கவாசகர் திருவாசகம்

 

பிழையுள்ள பொறுத்திருவறென்றடியேன் பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே—- அப்பர்

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

—– பட்டினத்தார்

அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை

அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே

________

பிழையே பொறுத்து இருதாளிலுற்ற

பெரு வாழ்வு பற்ற அருள்வாயே

——— அருணகிரிநாதரின் திருப்புகழ்

 

–SUBHAM–

 

MUSIC WONDERS: MOZART AND NIETZSHE (Post No. 4502)

Compiled by London Swaminathan 

 

Date: 16 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-58 am

 

 

Post No. 4502

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

WHO WAS MOZART?

Johann Chrysostom Wolfgang Amadeus Mozart  (1756-1791) was Austrian composer and performer, who showed astonishing precocity as a child and was an adult virtuoso.

 

WHO WAS NIETZSHE?

Friedrich Wilhelm Nietzsche (1844-1900) was a German Philosopher who rejected the accepted absolute moral values and the slave morality of Christianity. He argued that God is dead and therefore people were free to create their own values.

    

Mozart’s retort

A lad once asked Mozart how to write a symphony. Mozart said, “you are a very young man. Why not begin with ballads?”

The aspirant urged, “You composed symphonies when you were ten years old.”

“Yes”, replied Mozart, “but I didn’t ask ‘How?’

 

xxx

Nietzsche

When Nietzsche one day observed to Wagner that in ‘Figaro’ Mozart had invented the music of intrigue.

Wagner replied, “On the contrary! In ‘Figaro’ Mozart dissolved the intrigue in music”.

(intrigue: mysterious or fascinating quality)

xxxx

Fabulous Memory

The composer, Gounod, had a fabulous memory. When he was about 19 he had attended a rehearsal of ‘Romeo et Juliette’ which was still in manuscript and was being directed by the composer, Berlioz. The next day he called upon Berlioz, sat at the piano and proceeded to play the entire finale of the opera from memory.

The composer stared at him in terror and astonishment. Had his work been pirated? Was it some incredible coincidence?

“Where the devil did you get the music?”, he demanded.

“At your rehearsal yesterday,” replied Gunod.

 

xxx

Elegy to George Gershwin

When an American composer, George Gershwin, died, a man of sentiment combined with musical aspirations wrote an elegy in his honour. He sought out Oscar Levant. Reluctantly Levant granted him a hearing. Eagerly the man rendered the piece with his own hands and then turned expectantly toward Levant seeking approbation.

 

I think it would have been better, Levant said, if you had died and Gershwin had written the elegy.

 

Xxx

I was the abominable Creature!

At premiere performance of Caesar Frank’s symphony, the gentle, benign old composer, who had seldom ventured out of his organ loft, was seated in the audience. The stupid and blasé assemblage were hostile to this fine work which did not until later read find its proper appreciation.

One pompous and arrogant woman, who chanced to be seated directly behind the composer, remarked loudly in the interim between two of the movements,

“Who is the creature who writes this abominable music?”

The gentle Frank turned around in his seat and said courteously,

“Madam, it is I”.

 

Xxx SUBHAM xxx

 

 

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 9 (Post No.4501)

 

Date: 16  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-34 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4501

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 9

 

ச.நாகராஜன்

15

மாக்ஸ்முல்லர் காலத்தில் அவருக்குச் சாதகமாக இந்தியாவில் நடந்த  ஒரு நிகழ்ச்சி பிரம்ம சமாஜத்தின் தோற்றம்.

இதைத் தோற்றுவித்தவர் ராம் மோகன ராய் என்ற வங்காள பிராம்மணர். (தோற்றம் 22-5-1771 மறைவு 27-9-1833) பிரம்ம சமாஜத்தை அவர் 20-8-1828 அன்று தோற்றுவித்தார்.

அதனுடைய பிரதான கொள்கைகள்:

எந்த ஒரு புனித நூல் அல்லது சாஸ்திரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.

அவதாரங்களில் நம்பிக்கை இல்லை.

உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.

பல தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.

ஜாதி பேதத்தில் நம்பிக்கை இல்லை

கர்ம பலன் மற்றும் புனர் ஜென்மத்தை நம்புவோர் நம்பட்டும்; நம்பாதவர் நம்ப வேண்டாம்.

ஏறத்தாழ கிறிஸ்தவ மாதத்தை பாலிஷ் போட்டு பளபளப்பாக்கி இந்தியாவுக்கு அன்பளிப்பாகத் தருவது போல இருக்கிறதல்லவா இது!

இதைத் தான் ராம் மோகனராய் உருவாக்கினார்.

ஆனால் கால வெள்ளத்தில் அது அடிபட்டுப் போயிற்று என்பது வேறு விஷயம்!

அவர் கிறிஸ்தவ மதத்திற்குத் துணை போனது  மாக்ஸ்முல்லருக்கு மிகவும் சௌகரியமாகப் போயிற்று.

ஏற்கனவே நல்ல விதமாக மேலை நாட்டு கல்வி முறையை (கிறிஸ்தவ மத பிரச்சாரக் கல்வி என்று அர்த்தம் கொள்க) இந்தியாவில் புகுத்தினால் கிறிஸ்தவத்திற்கு ஈடான ஒன்று இந்தியாவில் பிறந்து இந்து மதம் ஒழியும் என்று மனப்பால் குடித்தார் அவர்.

அதற்காக சௌகரியமான வழியாக பிரம்ம சமாஜம் இருக்கவே அதை நாடினார்; அத்துடன் தொடர்பு கொண்டார்.

ராம் மோகன ராய் இரண்டாம் அக்பரின் அரசவையில் இடம் பெற்றார். அக்பருக்கு ஒரு பிரச்சினை. அவருக்கு பிரிட்டிஷாரின் கருணைத் தொகை (மானியம்) போதவில்லை.

ஆகவே ராம் மோகன ராயைத் தன் சார்பில் பேச்சு வார்த்தை நடத்த இங்கிலாந்து அனுப்பி வைத்தார். அவருக்கு 30000 பவுண்டு அளவில் அதை ராம் மோகனராய் பேச்சு வார்த்தை நடத்தி உயர்த்தினார்.

அவருக்கு  இரண்டாம் அக்பர் ராஜா என்ற பட்டத்தையும் அளித்தார்.

ராம் மோகன ராய் என்ற வங்காள பிராம்மணர் இப்போது ராஜா ராம் மோகன ராய் ஆனார்.

இங்கிலாந்து சென்ற அவர் ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் ‘எழுத்துச் சேவை’ பணி புரிய முன் வந்தார்.

பின்னர் வில்லியம் கேரி என்பவரிடம் பணி புரிந்தார். இவர் பணி புரிந்த இடமெல்லாம் மத பிரசாரம் (கிறிஸ்தவத்தைப் பரப்புவது; இந்து மதத்தை ஒழிப்பது) அரசியல் ( இந்தியாவை நிரந்தரமாக பிரிட்டிஷாரின் கொள்ளை அடிக்கும் சொர்க்க பூமியாக வைத்திருப்பது) ஆகியவை ஆதிக்கம் செலுத்தின.

இறுதியில் அவர் கேரியையே தாக்க ஆரம்பித்தார். கடும் மிஷனரியான கேரிக்கு கோபம் வந்தது நியாயமே.

ராஜா ராம் மோகன ராயே பின்னால் பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்துச் செல்லும் தொகை வருஷத்திற்கு 30 லட்சம் பவுண்டுகள் என்பதை கண்டுபிடித்து வெளியிட்டார்.

“அவர் சதியை ஒழித்தார்; பெண்ணுக்கு உரிமை கோரினார்.” ஆகிய இவை அவரது சாதனைகளாகச் சித்தரிக்கப்படுகின்றன.

அவரது வரலாறை ஆராய்வது இந்தத் தொடரின் நோக்கமல்ல என்பதால் அவரை இத்துடன் விட்டு விடுவோம்.

அவர் பற்றிய விக்கிபீடியா தரும் செய்தியின் ஒரு பகுதி இது: விளக்கம் வேண்டுவோர் முழுமையாக அங்கு படிக்கலாம்.

 

From 1803 till 1815, Ram Mohan served the East India Company’s “Writing Service”, commencing as private clerk “munshi” to Thomas Woodroffe, Registrar of the Appellate Court at Murshidabad[  (whose distant nephew, John Woodroffe — also a Magistrate — and later lived off the Maha Nirvana Tantra under the pseudonym Arthur Avalon). Roy resigned from Woodroffe’s service and later secured employment with John Digby, a Company collector, and Ram Mohan spent many years at Rangpur and elsewhere with Digby, where he renewed his contacts with Hariharananda. William Carey had by this time settled at Serampore and the old trio renewed their profitable association. William Carey was also aligned now with the English Company, then head-quartered at Fort William, and his religious and political ambitions were increasingly intertwined.

The East India Company was draining money from India at a rate of three million pounds a year in 1838. Ram Mohan Roy was one of the first to try to estimate how much money was being driven out of India and to where it was disappearing. He estimated that around one-half of all total revenue collected in India was sent out to England, leaving India, with a considerably larger population, to use the remaining money to maintain social well-being. Ram Mohan Roy saw this and believed that the unrestricted settlement of Europeans in India governing under free trade would help ease the economic drain crisis.

During the next two decades, Ram Mohan launched his attack against the bastions of Hinduism of Bengal, namely his own Kulin Brahmin priestly clan (then in control of the many temples of Bengal) and their priestly excesses.[The Kulin excesses targeted include sati (the co-cremation of widows), polygamy, idolatry, child marriage and dowry.

From 1819, Rammohun’s battery increasingly turned against William Carey, a Baptist Missionary settled in Serampore, and the Serampore missionaries. With Dwarkanath’s munificence he launched a series of attacks against Baptist “Trinitarian” Christianity and was now considerably assisted in his theological debates by the Unitarian faction of Christianity.”

 

 

ஆக மாக்ஸ்முல்லர் பயன்படுத்த நினைத்த பிரம்ம சமாஜம் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையான உருவ வழிபாட்டை எதிர்த்தல், பல் தெய்வ வழிபாட்டை ஒழித்தல் போன்றவற்றை ஆதரித்தாலும் மறுஜென்மக் கொள்கை பற்றிய வழவழா என்ற கொள்கையைக் கொண்டிருந்தது, ராம் மோகன் ராய் கிறிஸ்தவ மிஷனரிகளைத் தாக்கி பேச ஆரம்பித்தது ஆகியவற்றால் கலகலத்துப் போனது.

 

ராஜா ராம் மோகன ராய் பிரிஸ்டலில் இறந்தார்.

பிரம்மசமாஜத்தைப் பயன்படுத்தும் மாக்ஸ்முல்லரின் நோக்கம் வெற்றி பெற வில்லை. பிரம்ம சமாஜமே இல்லாமல் போயிற்று. 2001இல் இந்தியாவில் எடுத்த ஜனத்தொகைக் கணக்கெடுப்பில் 177 பேரே பிரம்மசமாஜத்தில் உறுப்பினராக இருப்பது தெரிகிறது.

முப்பது கோடி ஹிந்துக்களை உருத்தெரியாமல் ஆக்கவும் உருவவழிபாட்டை ஒழிக்கவும் ஆரம்பித்த ஒரு  “சீர்திருத்த” சமாஜம் 177இல் முடிந்தது. கிறிஸ்தவம் எடுத்த ஏராளமான உத்திகளில் ஒன்றான கைக்கூலியை ஆதரித்தல் என்ற உத்தி இன்னொரு முறை தோற்றது; இந்து மதம் நிலைத்தது. (இந்த பிரம்ம சமாஜ கூட்டங்களுக்கு கல்லூரியில் படிக்கும் போது விவேகானந்தர் போய் வந்தார் என்பது ஒரு சுவையான செய்தி)

 

மாக்ஸ்முல்லரின் மீது கிறிஸ்தவ மிஷனரிகளின் கோபம் இன்னும் கொஞ்சம் அதிகமானது.

 

16

இந்த நிலையில் இதன் வெளிப்பாடாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

1860ஆம் ஆண்டு போடன் சம்ஸ்கிருத பேராசிரியர் பணிக்கான தேர்தலில்  நின்ற மாக்ஸ்முல்லர் தோற்றுப் போனார். இந்தப் பணிக்கு அவர் தகுதி படைத்தவர் தான். ஆனால் அவரை விட குறைந்த தகுதி பெற்றவரான மோனியர் வில்லியம்ஸுக்கு அது தரப்பட்டது.

மிகவும் வருத்தமடைந்தார் மாக்ஸ்முல்லர். அவருக்குப் பெருத்த ஏமாற்றம் இது. தேர்தல் முடிந்தது. அவர் தோற்றார். மோனியர் வில்லியம்ஸ் வென்றார். உடனே அவர் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் , “எல்லா சிறந்த மனிதர்களும் எனக்கு வோட்டுப் போட்டனர்.புரபஸர்களில் ஏறத்தாழ அனைவருமே எனக்குத் தான்  வோட்டுப் போட்டனர். ஆனால் பொதுவில் இருந்த கூட்டம் தான் மெஜாரிட்டியை நிர்ணயம் செய்தது.”

இப்படியாக கிறிஸ்தவ பாதிரிகளுக்கு எதிரான போக்கு, அவரது ஜெர்மன் பிறப்பு உள்ளிட்ட பல காரணங்கள் அவரது தோல்விக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஒரு காரணம், அவர் இந்தியாவையே பார்த்ததில்லை என்பது. மோனியர் வில்லியம்ஸ் இந்தியாவில் இருந்திருக்கிறார்.

விக்கி பீடியா தரும் ஆங்கில மூலத்தைக் கீழே பார்க்கலாம்:

 

He was defeated in the 1860 election for the Boden Professor of Sanskrit, which was a “keen disappointment” to him.[6] Müller was far better qualified for the post than the other candidate (Monier Monier-Williams), but his broad theological views, his Lutheranism, his German birth and lack of practical first-hand knowledge of India told against him. After the election he wrote to his mother, “all the best people voted for me, the Professors almost unanimously, but the vulgus profanum made the majority”.

17

பெரும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக மாக்ஸ்முல்லருக்கு, 1868ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் ஒப்பீட்டு மொழியியல் அறிவில் பேராசிரியர் பணி தரப்பட்டது. அப்போது அவருக்கு வயது 45. (1875இல் அவர் ஓய்வு பெற்ற போதிலும் கூட, அதை அவர் இறுதி வரை (1900ஆம் ஆண்டு மாக்ஸ்முல்லர் மரணமடைந்தார்) வகித்தார்.

(விக்கிபீடியாவின் வரி இது:

Later in 1868, Müller became Oxford’s first Professor of Comparative Philology, a position founded on his behalf. He held this chair until his death, although he retired from its active duties in 1875.)

மாக்ஸ்முல்லரின் நிதானமான மனமும் அறிவும் இந்தியாவின் புகழோங்கிய வரலாறைப் பற்றிப் புகழ ஆரம்பித்தது.

ஈஸ்ட் இந்தியா கம்பெனியும், கிறிஸ்தவ மிஷனரிகளும் நொந்து போக உலகம் வியந்தது – இந்தப் புகழுரைகளால்.

அவற்றில் சிலவற்றை இனி பார்ப்போம்!

நன்றி: விக்கிபீடியா (ஆதாரபூர்வ தகவல்களுக்காக விக்கி மேற்கோள்கள் தரப்பட்டன)

-தொடரும்

****

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 6 (Post No.4500)

Date: 16  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-22 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4500

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 31 முதல் 36

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

பாடல்கள் 31 முதல் 36

31

புதுநெறி காட்டிய புலவன்

தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே!
வாயார்ந் துங்கட்கு வணக்கம் சொன்னேன்!
வண்மைசேர் திருச்சி வானொலி நிலையம்
இந்நாள் ஐந்தாம் எழிற்கவி யரங்கிற்
கென்னைத் தலைமை ஏற்கும் வண்ணம்
செய்தமைக்கு நன்றி செலுத்து கின்றேன்.

உய்வகை காட்டும் உயர்தமி ழுக்குப்
புதுநெறி காட்டிய புலவன் பாரதி
நன்னாள் விழாவினை நானிலம் பரப்பும்
வானொலி நிலையம் வாழ்கென வாழ்த்தினேன்!
இக்கவி யரங்கு மிக்கு யர்ந்ததாம்.
எக்கா ரணத்தால்? என்பீ ராயின்,
ஊர்ஒன் றாகி உணர்வொன் றாகி
நேர்ஒன்று பட்டு நெடுநாள் பழகிய
இருவரிற் சுப்பிர மணிய னென்று
சொற்பா ரதியை சோம சுந்தர
நற்பா ரதிபுகழ்ந்து சொற்பெருக் காற்றுவார்;
அன்றியும் பாரதி அன்பர் பல்லோர்
இன்றவன் கவிதை எழிலினைக் கூறுவார்.

இங்குத் தலைமை ஏற்ற நானும்
திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல்
பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில
கூறுவேன்; முடிவுரை கூறுவேன் பின்பே.
கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு
நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநம்
தாயகம் சமண்மதம் தனைப்பெற்ற தன்றோ?
முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமா னுசனை ஈன்ற தன்றோ?
இந்நாடு வடகலை ஏன்என எண்ணித்
தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ?
துருக்கர் கிருத்துவர் சூழ்இந் துக்களென்
றிருப்பவர் தமிழரே என்ப துணராது
சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு,
மெச்சவும் காட்டுவோன் வேண்டுமென் றெண்ணி
இராம லிங்கனை ஈன்ற தன்றோ?
மக்கள் தொகுதி எக்குறை யாலே
மிக்க துன்பம் மேவு கின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்!
செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க
விக்டர் யூகோ மேவினான் அன்றோ?
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்த மிழ்த்தேர்ப் பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்!இந் நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில்நீக்கப் பாடி வந்தநிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன். புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன்! என்னென்று சொல்வேன்!
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வா றென்பதை எடுத்துரைக் கின்றேன்:
கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும்
பிறபொருள் குறித்துப் பேசேல் என்றும்
கடவுளைக் குறிக்குமக் கவிதையும் பொருள்விளங்
கிடஎழு துவதும் ஏற்கா தென்றும்
பொய்ம்மதம் பிறிதெனப் புழுகுவீர் என்றும்
கொந்தும் தன்சாதிக் குண்டு சட்டிதான்
இந்த உலகமென் றெழுதுக என்றும்
பழமை அனைத்தையும் பற்றுக என்றும்
புதுமை அனைத்தையும் புதைப்பீர் என்றும்
கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல்
எள்ளத் தனைநிலை இலாத தென்றும்
எழிலுறு பெண்கள்பால் இன்புறும் போதும்
அழிவுபெண் ணால்என் றறைக என்றும்
கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும்
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும்
மாலை பார்த்தொரு மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும்
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று
விரைந்து தன்பேரை மேலே எழுதி
இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
வருவதே புலமை வழக்கா றென்றும்
இன்றைய தேவையை எழுதேல் என்றும்
முன்னால் நிலையிலே முட்டுக என்றும்
வழக்கா றொழிந்ததை வைத்தெழு தித்தான்
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்
புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும்
நந்தமிழ்ப் புலவர் நவின்றனர் நாளும்!
அந்தப் படியே அவரும் ஒழுகினர்.
தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால்
தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
இருள்நிலை யடைந்திருந் திட்டதின் பத்தமிழ்!
செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல்
செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்.
விழுந்தார் விழித்தே எழுந்தார் எனஅவன்
மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்!
“வில்லினை எடடா – கையில்
வில்லினை எடடா – அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா”
என்று கூறி, இருக்கும் பகையைப்
பகைத் தெழும்படி பகர லானான்.
“பாருக்குள்ளே நல்லநாடு – இந்தப் பாரதநாடு”
என்பது போன்ற எழிலும் உணர்வும்
இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான்!
இந்நாடு மிகவும் தொன்மை யானது
என்பதைப் பாரதி இயம்புதல் கேட்பீர்:
“தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்”
மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்கு கின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்:
“முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – அவள்
செப்பும் மொழிபதி னெட்டுடையாள் – எனிற்
சிந்தனை யொன்றுடை யாள்”
இந்நாட் டின்தெற் கெல்லை இயம்புவான்:
“நீலத்திரை கடல் ஓரத்திலே – நின்று
நித்தம் தவம்செய் குமரி யெல்லை”
கற்பனைக் கிலக்கியம் காட்டி விட்டான்!
சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடு மாறு
மக்க ளுக்கவன் வழங்குதல் கேட்பீர்:
“இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதம்திரு இரண்டுமாறிப் பழிமிகுத் திழிவுற்றாலும்
விதம்தரு கோடிஇன்னல் விளைத்தெனை யழித்திட்டாலும்
சுதந்திர தேவிநின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே.”
பாரதி பெரிய உள்ளம் பார்த்திடு வீர்கள்:
“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு”
“விடுதலை! விடுதலை! விடுதலை!”
“மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே” என்றறைந்தார் அன்றோ?
பன்னீ ராயிரம் பாடிய கம்பனும்
இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை
எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை.
செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்:
“செந்தமிழ் நாடென்னும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே” – என்றான்.
சினம்பொங்கும் ஆண்டவன் செவ்விழி தன்னை
முனம்எங்கும் இல்லாத மொழியா லுரைத்தான்:
“வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா – அங்கு
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது
வேலவா” என்று கோலம் புதுக்கினான்.
பெண்உதட் டையும் கண்ணையும் அழகுறச்
சொல்லி யுள்ளான் சொல்லு கின்றேன்:
“அமுதூற்றினை யொத்த இதழ்களும் – நில
வூறித் ததும்பும் விழிகளும்”
இந்த நாளில் இந்நாட்டு மக்கட்கு
வேண்டும் பண்பு வேண்டும் செயல்களைக்
கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான்.
“முனைமுகத்து நில்லேல்” முதியவள் சொல்இது.
“முனையிலே முகத்துநில்” – பாரதி முழக்கிது!
“மீதூண் விரும்பேல்” மாதுரைத் தாள்இது.
“ஊண்மிக விரும்பு” – என உரைத்தான் பாரதி.
மேலும் கேளீர் – “கோல்கைக் கொண்டுவாழ்”
“குன்றென நிமிர்ந்துநில்” “நன்று கருது”
“நினைப்பது முடியும்”, நெற்றி சுருக்கிடேல்”
எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப்
பாய்ச்சு கின்றான் பாரதிக் கவிஞன்!
அன்னோன் கவிதையின் அழகையும் தௌிவையும்
சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும்
இங்கு முழுதும் எடுத்துக் கூற
இயலா தென்னுரை இதனோடு நிற்கவே.

( அனைத் திந்திய வானொலித் திருச்சி நிலையத்தில் 5-வது கவியரங்கில்
தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டது. 1946 )

 

 

32, 33

பாரதியாரும் பையனும்

கொஞ்ச வயதுடையான் அவன்

கூனற் கிழவனைப் போல

அஞ்சி நடந்து சென்றான் ஐயர்

ஆரடா தமி என்றார்!

அஞ்சலி செய்து நின்றான் ஐயர்

அவனிடம் உரைப்பார்

நெஞ்சு நிமிர்ந்து நட! – உன்

நேரில் அச்சேவலைப் பார்!

 

சொன்னசொல் பையனுளம் தனில்

சுடர் கொளுத்திடவே,

முன்னைய கூனல் நடைதனை

முற்றும் அகன்றவனாய்ச்

சென்னி தனை நிமிர்த்திக் கொஞ்சம்

சிரிப்பையும் காட்டிச்

சன்னத்த வீரனைப் போல் அந்தச்

சாலை வழி நடந்தான்

 

             34,35

திருப்பள்ளியெழுச்சி

(திருப்பள்ளியெழுச்சி என்ற பாடலை பாரதி ஏன் பாடினார்?)

நற்பெரு மார்கழி மாதமோர் காலை

    நமது நற் பாரதி யாரோடு நாங்கள்

பொற்பு மிகும் மடு நீரினில் ஆடிட[

    போகும் வழியினில் நண்பர் ஒருவரைப்

பெற்ற முதுவய தன்னை யார் ஐயரே,

      பீடு தரும் திருப்பள்ளி யெழுச்சி தான்

சொற்றிறத் தோடு நீர் பாடித் தரு கெனத்

     தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே

 

நீல மணி யிருட்காலை அமைதியில்

  நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையில்

கோல நடையிற் குதிக்கும் மகிழ்ச்சியால்,

  கோரி உடன்வரும் நண்பர்கள் மத்தியில்,

காலை மலரக் கவிதை மலர்ந்தது;

   ககன முழுமையும் தேனலை பாய்ந்தது!

ஞானப் பொழுது புலர்ந்த தென்றார்ந்த

    நல்ல தமிழ்க் கவி நாமடைந்தோமே!

 

36

 

ஸ்ரீ சி. சுப்ரமண்ய பாரதியார் புகழ்
 (தில்லானா மெட்டு) இராகம் நாட்டை, தாளம் ஆதி

பல்லவி

தோயுந்தேன் கவிதரு நம்
சுப்ரமண்ய பாரதியைச் செப்புக தினம் (தோ)

அநுபல்லவி

சுவை நிலாவை நாம் எலாம் மிக வின்பத்தால்
சொந்தத் தமிழ் நாடாம் இந்தப் பெருவானில் சந்தித்தோமே
(தோ)

சரணம்

ஓய்ந்த தமிழரிடம் உணர்வினை யூட்டும்
உலக மனிதர் சமம் என நிலை நாட்டும்
தீயமறை வகற்றி அகத்தெழில் கூட்டும்
செகம் பெறும் ஒவ்வொரு பாட்டும்

தாகிடஜெம் தாகிடஜெம் தகும்தரிகிடக்க தத்தரிகிடதக
தளாங்கு தகதிக தொக ததிங்கிண த்தோம் – தளாங்கு
ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோம். (தோ)

 

****

கவிஞரைப் பற்றிய குறிப்பு

பாரதிதாசன்: (தோற்றம்: 29-4-1891 மறைவு: 21-4-1964) பாரதிதாசன் புதுவையில் பாரதியார் வசிக்கும் போது அவரை நேரில் அறிந்தவர்; அவருடன் நன்கு பழகியவர். பாரதியாரால் உத்வேகம் பெற்று புதுநடை கொண்டு பாடல்களை இயற்ற ஆரம்பித்தவர். பாரதிதாசன் என்ற பெயரே அவரைப் பாரதியின் தாசனாக அறிமுகப்படுத்துகின்ற நிலையில் வேறு ஒரு அறிமுகமே அவருக்குத் தேவையில்லை.

*****

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.