Good and Bad Brahmins: Chanakya’s Definition! (Post No.4775)

Date: 22 FEBRUARY 2018

 

Time uploaded in London- 15-28

 

Written by London swaminathan

 

Post No. 4775

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

Various Types of Brahmins- Chanakya Niti

 

Chanakya classifies Brahmins according to the work they do and the virtues they possess. Some are called Rishis and others are called Mlechchas (Foreigners, barbarians)

 

A Brahmin who living life in a forest all times performs Sraadhdha with fruits and roots growing in untilled land every day is called a Rishi

11-11

akrusshta pala muulena vanavaasarataha sadaa

kurute aharahaha sradhdham rushi  vipraha sa ucyate

11-11

xxxx

 

One Meal a Day!

 

A Brahmin who is satisfied with only one meal and keeps himself engaged continuously in six activities and has coition with his wife in the period favourable for conception is called Dwija.

11-12

eka ahaarena santushtaha shatkarma nirataha sadaa

rtukaalaabigaamii ca sa vipro dwija ucyate

11-12

 

(Six activities of Brahmins: Teaching, Studying, Performing sacrifice, Helping others to perform sacrifice, Giving  charity and receiving charity)

xxxx

Vaisya Brahmana

 

A Brahmin who keeps himself busy in worldly affairs, looks after animals and engages himself in trade and agriculture is called a Vaisya.

laukike karmani rataha pasuunaam paripaalakaha

vaaniijya krsi kartaa yaha saha vipro vaisya ucyate

11-13

xxx

A Brahmin who sells lac and the like, oil, indigo, saffron, honey, ghee, liquor and meat is called a Sudra.

11-14

laakshaaditaila niilaanaam kusumba madhu sarpishaam

vikrato madhya maamsaanaam sa vipraha suudra ucyate

 

xxx

Brahmin Cat

A Brahmin who puts spokes in the form of others, is hypocritical, selfish, deceitful, envious, gentle and cruel is said to be Maarjaara, a he cat

11-15

parakarya vihantaa ca daampikaha svaartha saadhakaha

chalii dveshii mruduhu kruuro vipro maarjaara uchyate

11-15

xxx

 

Mlechcha/ Foreigner Brahmin!

A Brahmin who has no compunction in destroying an oblong reservoir of water, well and tank, garden and temple is called a Mleccha.

11-16

vaapii kuupa tadaagaanaam aaraamsu ravesmanaam

uchcheedane niraasankaha sa vipro mlechcha uchyate

11-16

 

(Real meaning of Mlecha is reflected in it; Foreigners distort the meaning  and attribute it to Dravidians, aborigines etc. But Mlechas are foreigners who destroyed Hinduism and India; in short Anti Hindus are called Mlechas; it is in Sangam Tamil literature as well.)

 

xxxx

Chandala/ outcaste Brahmin

A Brahmin who steals the money given as an offering to gods as also to teachers, outrages the modesty of the wives of others, and can get along with all kinds of people is called Caandaala

11-17

devadravyam  gurudravyam paradaaraabhimashanam

nirvaahaha sarvabuteshu viprascaandaala uchyate

11-17

Foreigners always distort the meaning of Chandala and the real meaning is Anti Social elements, immoral elements and thieves.

 

xxx

 

Feed the Brahmins

That is the food which is the left over of the Brahmins, friendship is that which is cultivated for the sake of others, wisdom is that which does not commit sin (= Which does not allow one to commit sin), Dharma is that which is followed with no show.

15-8

tad bhojanam yad dwija bukta sesham

tat sauhrudam yat kriyate parasmin

saa praakjnataa yaa na karoti papam

dambam vinaa yaha kriyate sa dharmaha

15-8

Since Chanakya and Manu insist that Brahmins should not save or accumulate money and ask them to beg for ever, Chanakya asks everyone to feed them; unless Brahmins are in begging condition, they would be lazy and woudn’t  go to any distant place for performing Yagas and Yajnas. If they are in begging condition, they would happily travel from village to village for getting Dakshina (fees). They are not allowed to save money like we save today.

 

Looking at the strict conditions Chanakya places, not many people can claim Brahminship today!

 

Source Book for verses: Canakyaniti, Translated by Satya Vrat Shastri

 

xxx SUBHAM xxxx

 

 

 

 

சொர்கத்துக்குப் போவோரின் அடையாளங்கள் – சாணக்கியன் செப்பியது (Post No.4774)

Date: 22 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-19 am

 

Written by London swaminathan

 

Post No. 4774

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

சொர்கத்துக்குப் போவோரின் அடையாளங்கள் – சாணக்கியன் செப்பியது (Post No.4774)

 

சாணக்கியன் என்னும் பிராஹ்மணன் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான். அவன் பல வியப்பான செய்திகளைச் சொல்லுகிறான். அவன் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த போதும் ஒரு குடிசையில் வாழ்ந்தான் அவன் பிராமணர்கள் பற்றி விளம்பும் பாடல்கள் சிந்தனையைத் தூண்டும் பாடல்கள்–

 

இதோ சில பாடல்கள்:

 

 

மயில்களும் பிராஹ்மணர்களும்

துஷ்யந்தி போஜனே விப்ரா மயூரா கணகர்ஜிதே

சாதவஹ பரசம்பத்தௌ கலஹ பரவிபத்திஷு

 

சாணக்கிய நீதி 7-9

 

பிராமணர்கள், சாப்பாட்டில் மகிழ்ச்சி அடைகிறார்கள்;

மயில்கள், இடி முழக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஆடுகின்றன;

நல்லவர்கள், மற்றவர்களின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவர்;

கெட்டவர்களோ, ஏனையோரின் கஷ்டத்தில் கூத்தாடுவர்.

xxxx

 

 

பிராஹ்மணன் ஒரு மரம்!

பிராஹ்மணன் ஒரு மரம்; அந்த மரத்தின் வேர்கள்- காலை, மதியம், மாலையில் செய்யும் த்ரி கால சந்தியா வந்தனம் (காயத்ரீ மந்திரம்);

வேதங்கள், அந்த மரத்தின் கிளைகள்;

ஆன்மீகச் செயல்பாடுகள் (யாக யக்ஞக்கள்) அதன் இலைகள்;

ஆகையால் மரத்தின் வேர்களைப் பாதுகாருங்கள்;

வேர்கள் (சந்தியா வந்தனம்) அழிந்தால் கிளையும் இல்லை; இலையும் இல்லை!

 

விப்ரோ வ்ருக்ஷஹ தஸ்ய மூலம் ச சந்த்யா

வேதாஹா சாகா தர்ம கர்மாணி பத்ரம்

தஸ்மாத் மூலம் யத்னதோ ரக்ஷணீயம்

ச்சின்னே மூலே நைவ சாகா ந பத்ரம்

 

சாணக்கிய நீதி 10-13

 

xxxxx

 

பிராமணர்களின் பலம் அறிவு

 

Picture of Brain from Wellcome Centre, London

 

பாஹுவீர்யம் பலம் ராக்ஞோ ப்ராஹ்மணௌ ப்ரஹ்மவித் பலீ

ரூப  யௌவன மாதுர்யம் ஸ்த்ரீணாம் பலம் அனுத்தமம்

 

சாணக்கிய நீதி  7-11

 

புஜ பலம் (தோள் வலி) அரசனுக்கு பலம்;

வேதத்தில் வல்ல பிராஹ்மணனுக்கு அறிவு பலம்;

அழகு, இனிமை, இளமை ஆகியன பெண்களுக்கு ஈடு இணையற்ற பலம்

 

xxxx

 

Picture from Ratnagiri, by S Sivam

சொர்கத்துக்கு வழி

 

சொர்கத்துக்குப் போவோரின் நான்கு அடையாளங்கள் பூமியிலேயே

அவர்களின் செயல்பாட்டில் தெரிந்துவிடும் அவை யாவன:

அறப் பண்பு (தர்ம சிந்தனை), இனிய பேச்சு, கடவுள் வழிபாடு, பிராமணர்களுக்கு அன்னமிடுதல்

 

ஸ்வர்க  ஸ்திதானாம் இஹ ஜீவலோகே

சத்காரி சின்னானி வசந்தி தேஹே

தானப்ரஸங்கோ மதுரா ச வாணீ

தேவார்ச்சனம் ப்ராஹ்மணதர்பணம் ச

 

சாணக்கிய நீதி   7-16

xxx

திருப்தி வேண்டும்

 

திருப்தி அடையாத பிராஹ்மணர்கள்,

மன நிறைவு அடையாத மன்னர்கள்,

வெட்கப்படும் விபசாரிகள்,

வெட்கமே இல்லாத குடும்பப் பெண்கள்

ஆகிய நால்வரும் விளங்கமாட்டார்கள்.

 

அசந்துஷ்டா த்விஜா நஷ்டா சந்துஷ்டாஸ்ச மஹீபுஜஹ

ஸலஜ்ஜா கணிகா நஷ்டா நிர்லஜ்ஜாஸ்ச குலாங்கணாஹா

 

சாணக்கிய நீதி 8-18

 

xxx

 Picture by Lalgudi Veda

பிராஹ்மணன் அறிஞனா? இல்லையா?

 

பிராஹ்மணர்களின் அறிவுக்கு சான்றும் வேண்டுமோ!

வானத்தில் தூதர் யாரும் இல்லை;

எவரும் இதைப் பற்றிப் பேசவும் இல்லை;

முன்னரும் யாரும் சொல்லவில்லை;

எவரையும் தொடர்பு கொள்ளவுமில்லை;

வானத்தில் நிகழப்போகும் சூர்ய, சந்திர கிரஹணங்களை

முன்கூட்டியே சொல்கிற பெரிய பிராஹ்மணனை

அறிஞர் என்று சொல்லவும் வேண்டுமா?

 

தூதோ ந சஞ்சரதி கே ந சலேச்ச வார்தா

பூர்வ ந ஜல்பிதம் இதம் ந ச ஸங்கமோஸ்தி

 

வ்யோம்னி ஸ்திதம் ரவி சசி க்ரஹணம் ப்ரசஸ்தம்

ஜானாதி யோ த்விஜவரஹ ஸ கதம் ந வித்வான்

 

சாணக்கிய நீதி 9-5

 

xxx

 

 

பிராஹ்மணரைத் திட்டுவோர் குடும்பத்தோடு……

 

தன்னைத்தானே வெறுப்பவன் சாவான் (தற்கொலை);

மற்றவனை வெறுப்பவன் செல்வத்தை இழப்பான்;

மன்னனை (ஆட்சியாளரைப்) பகைப்பவன் அழிவான்;

பிராஹ்மணனை வெறுப்பவன் குடும்பத்தோடு அழிவான்.

 

சாணக்கிய நீதி 10-11

ஆத்மத்வேஷாத் பவேன் ம்ருத்யுஹு பரத்வேஷாத் தன க்ஷயஹ

ராஜத்வேஷாத் பவேன் நாசோ ப்ரஹ்மத்வேஷாத் குல க்ஷயஹ

 

(இது சாணக்கியனின் சுய அனுபவத்தில் கண்ட உண்மை; சாணக்கியன் ஒரு அவலட்சணமான முகம் உடைய ப்ராஹ்மணன்; அப்போது பிராஹ்மணர்களைக் கிண்டல் செய்யும் நந்தர்கள் ஆண்டு வந்தனர். ஒரு முறை அரண்மனை விசேஷத்தில் முதல் பந்தியில் கறுத்த நிறமுள்ள, அசிங்கமாமன முகம் உடைய பிராஹ்மணனைப் பார்த்த, நந்த வம்சத்தரசன், அவரை பாதி சாப்பிடும் போது தர தர வென்று வெளியே இழுத்துக் கொண்டு போய் தள்ளிவிட்டான். அப்போது குடுமியை அவி ழ்த்துப் போட்டு, உனது ஆட்சியை வேர் அறுக்கும் வரை இந்த குடுமியை முடிக்க மாட்டேன் என்று சாணக்கியன் வீர சபதம் செய்தான்; மயில் வளர்க்கும் மூரா என்ற பெண்மணியின் மகனான சந்திர குப் தனை அழைத்து, பயிற்சி கொடுத்து, மாபெரும் படையை உருவாக்கி நந்த வம்சத்தின் 9 மன்னர்களையும் அடியோடு அழித்தான். அலெக்ஸாண்டர் படைகள் நடுங்கக்கூடிய அளவுக்கு மகத சாம்ராஜ்யத்தின் படைபலம் இருந்ததை பிற்கால கிரேக்க எழுத்தாளர்கள் எழுதிச் சென்றனர். ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்து இருந்ததால் இதைச் சாதிக்க முடிந்தது; பின்னர் பிராமணர்கள் செல்வம் சேர்க்கக்கூடாது என்ற விதியின்படி குடிசையில் வாழ்ந்தான். சுயநலம் அற்றவரைக் கண்டு உலகமே நடுங்கும் அல்லவா? சாணக்கியன் என்றால் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம்; எவருக்கும் கட்டளை இடும் தகுதி அவனுக்கு இருந்தது.

 

Brahmins at Pillayarpatti Temple

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

xxx SUBHAM xxx

 

 

 

 

புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியின் பயன்பாடு (Post.4773)

Date: 22 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 7-53 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4773

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஒன்பதாவது உரை

 

  1. 9. உத்வேகமூட்டும் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியின் பயன்பாடு ச.நாகராஜன்

 

2016ஆம் மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்த்துக்கல் நாடு ஒரு பெரிய சாதனையைச் செய்தது. மே மாதம் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி முடிய நாடு முழுவதும் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியால் மட்டுமே இயங்கியது.

இதன் மூலம் ஒரு புதிய வரலாற்றைப் படைத்து இப்படிப்பட்ட எரிசக்தியினால் ஒரு நாடு முற்றிலுமாக இயங்கமுடியும் என்பதையும் நிரூபித்தது.

 

 

சூரிய ஒளி, காற்று ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்படும் ஆற்றல் அல்லது எரிசக்தியையே புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தி அல்லது ஆற்றல் என்று கூறுகிறோம்.

 

 

காற்றினாலும், சூரிய ஒளியாலும் ஹைட்ரோ – ஜெனரேடட் மின்சக்தியாலும் ஒரு நாடு திறம்பட இயங்க முடியும் என்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து சோலார் பவர் என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜேம்ஸ் வாட்ஸன், “இப்போது மிகவும் அதிசயக்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த நிகழ்வு எதிர்காலத்தில், மிகவும் சாதாரணமான அன்றாட நிகழ்வு ஆகி விடும்” என்கிறார்.

 

நமது நாட்டிலும் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் காற்றின் சக்தியைப் பயன்படுத்தி பல்வேறு தொழில்களைச் செய்வதைப் பார்க்க முடிகிறது.

 

 

ஆனால் இந்த விஞ்ஞான முன்னேற்றத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தினால் ஏராளமான சூரிய ஒளியை, நாடு முழுவதும் வருடத்தில் நீண்ட நாட்கள் கொண்டிருக்கும் இந்தியா, மிகச் சிறந்த புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலைப் பயன்படுத்தும் வல்லரசாக, உயரும்.

புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலால் நமக்குக் கிடைக்கும் ஆதாயங்கள் ஏராளம் உள்ளன.

 

 

  • பூமியை வெப்பமயமாக்கும் நச்சுப் புகை வெளியேற்றம் முற்றிலுமாகக் குறையும் அல்லது பெரிய அளவில் குறைந்து விடும்.
  • உலக மக்களின் ஆரோக்கியம் மிகப் பெரிய அளவில் மேம்படும். நிலக்கரி மற்றும் இயற்கை வாயு தொழிலகங்களினால் காற்றிலும் நீரிலும் ஏற்படும் மாசின் அளவு குறையும். சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாசினால் சுவாசக் கோளாறுகளும், மூளை சம்பந்தமான வியாதிகளும், மாரடைப்பும், கான்ஸரும் ஏற்படுகின்றன. இப்படி புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலின் பயன்பாடு இளவயதில் இறப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும். தொழிலகங்களில் மிக அரிதான வேலை மணி நேர இழப்பையும் தவிர்க்கும்.

இவற்றை உணர்ந்து புதுப்பிக்கப்படக் கூடிய

ஆற்றலைப் பெரிதளவு பயன்படுத்துவோம்; பூமியை வெப்பமயமாக்கும் அபாயத்திலிருந்து காப்போம்!

***

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 57 (Post No.4772)

Picture from Bharatiyar drama; Isaikkuyil Ramanan as Bharati (sent by a Facebook friend)

Date: 22 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-37 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4772

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

  பாடல்கள் 396 முதல் 402

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண் ண  ன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

30 முதல் 36 வரை உள்ள பாடல்கள்

எளியநடை எளிய பதம் எல்லார்க்கும் எளியசந்த

    என்பதுவே எனக்களிக்கும் சேவை – அதுவேம்

    என்னைவாழ வைக்கயிங்கு தேவை – எனவே

எளியவர்கள் கிராமங்களில் தெளிவுறவே பாடுகின்ற

   இளமையுள்ள பலவடிவில் பாவை – எழுதி

   அணிவித்தாய் அரியகவிக் கோவை

 

 

இருண்டதுயென் வாழ்க்கையென ஏக்கமுற்று வாடுகையில்

    ஏற்றிவைத்தாய் அரியகவித் தீபம் – அதனால்

    தீர்ந்த்துவே எம்தமிழர் தாபம் – உந்தன்

பெருமைதனை உணர்ந்தெவரும் போற்றிநின்ற போதில்கவிச்

    செருக்குற்றோர் கொண்டனரே கோபம் – மக்கள்

     வெறுத்ததினால் பதுங்கினரே பாபம்

 

 

எத்தனையோ தொழிலிருந்தும் பத்திரிகைப் பணியிருந்தும்

    எமக்குத் தொ ழில்கவிதை ஒன்றே  – கவிதை

    எழுதாநாள் பிறவாநாள் என்றே – வாழ்வில்

நித்தமிங்கு வறுமையினால் செத்துச் செத்துப்  பிழைத்தபோதும்

    நீடுமுயிர் தமிழால்தான் நன்றே – என்று

    நிலை பெற்றாய் காலத்தை வென்றே

 

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

   இனிதாவது எங்கும் காணோம் – என

பாமரனோர் மொழிசொன்னால் எம்மொழிநீ

    அறிவாயென பழித்தல் கூடும்

தேமதுரத் தமிழுடனே ஆங்கிலமா

     ரியமிந்தி திகழும் வங்கம் – மேலும்

நேமமுறப் பிரஞ்சினையும் நன்குணர்ந்து

     ஆய்ந்தன்றோ நீயும் சொன்னாய்

 

 

பாரதியார் தமிழ்மொழியின் பெருமைகள்

   விரிவாகப் பாடவில்லை – என

சாரமிலா ஓர்குறையை சற்றேனும் தயங்காமல்

    சொல்வா ருண்டு

சாரதியாய் கவித்தேரை நீசெலுத்த

   நானமர்ந்து சென்ற போதில் – இந்தப்

பாரதனில் உன்னாலே ஒலித்ததெல்லாம் தூய

   தமிழ்ப்பாடல் தானே?

 

 

பதவுரையோ தெளிவுரையோ விரிவாக

   எழுதியிங்குப்  பொருளு ரைக்க – என்றும்

பண்டிதர்கள் தேவையில்லை என்றிடவே

   பாமரரும் பாடச் செய்தாய்

விதவிதமாய் பொருத்தமிலா வருணனைகள்

    சொற்களிலே வித்தைகாட்டல் – எனும்

விவகாரம் ஏதுமின்றி கவிதைகளை

    வடித்தென்னை வாழ்வித் தாயே!

 

 

உதவாத பாறைகளை உடைத்தாங்குக்

    கவிவளர்த்த உழவன் நீயே – வாழ்வில்

நிதமிங்குச் சந்தமெனும் நிறம்பலவாய்

   உடையளித்த நெய்வோன் நீயே!

சதமெனவே மொழியதனில் பலவடிவில்

    நகைசெய்த தட்டான் நீயே – என்றும்

வதங்கலின்றிப் பொருள்தந்து இதயங்களைப்

    பெற்றிட்ட வணிகன் நீயே!

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:


கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, அவரே தொலைபேசியில் 5-2-2018 அன்று தொடர்பு கொண்டு பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

 

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

 

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.

 

சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.

 

பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

 

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

 

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

 

இவருக்கு நமது நன்றி.

 

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

CHANAKYA’S PRAISE FOR BRAHMINS! (Post No.4771)

Picture posted by V Krishna Ganapatigal

 

Date: 21 FEBRUARY 2018

 

Time uploaded in London- 16-49

 

Written by London swaminathan

 

Post No. 4771

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Chanakya, the Hindu genius, who lived 2300 years ago, praises the Brahmins; he says that the strength of the Brahmins is knowledge and the proof for their intelligence is the prediction of the solar and lunar eclipses. He also says that Brahmins are lovers of food and feeding them is great Punya (merit). He warns that  the Brahmin haters would perish with their families. But it is all about the true Brahmins who lived with character and self- less service.

Chanakya says,

“There is no emissary in the sky, neither is any talk going on, nor was it spoken about earlier, nor was there any contact. The great Brahmin who knows the eclipse of the sun and moon taking place in the sky, how come he cannot be a scholar?”

duuto na sancarati khe na caleecca vaartaa

puurvam na japitamidam na ca samsagamosti

vyomni sthitam ravi sasi grahanam prasastam

jaanaati yo dwijavaraha sa katham na vidwaan

Chanakya Niti 9-5

xxx

Brahmin Tree

“The Brahmin is the tree, its root is the morning, noon and evening prayer, the Vedas are the branches, the spiritual activities are the leaves. Hence it is the root that needs to be protected with care. With the root gone, there will be neither branch nor the leaf.”

vipro vrukshastasya muulam na sandhyaa

vedaahaa saakhaa dharmakarmaani patram

tasmaanmuulam yatnato rakshaniiyam

chinne muulee naiva saakhaa na patram

10-13

 

Picture posted by Lalgudi Veda

xxx

Four types go to Heaven

 

There are four marks on the body of the people in this world that go with those who have their abode in heaven: devotion/ commitment to charity, sweet speech, worship of gods and feeding the Brahmins to full.

Swarga sthitaanaam iha jiivaloke

catwaari cihnaani vasanti dehe

daanaprsango madhuraa ca vaanii

devaarcanam braahmana tarpanam

7-16

xxx

Brahmin Haters Perish

 

Hatred to oneself leads to death;

to another person loss of wealth;

to the king to destruction and

to a Brahmin to the destruction of the family

–Chanakya Niti, chapter 10, sloka 11

 

aatmadveshaad bhavenmrtyuh paradveshaad dhanakshyah

rajadveshaad bhavennaaso brahmadveshaat kulakshayah

 

xxx

Brahmins delight in Food

 

Brahmins get delight in meals, the peacocks in thunder of clouds, the good people in the prosperity of others and the wicked people in the adversity of others.

tushyanti bhaojane vipraa mayuuraa ghanagarjate

saadhavaha parasampattau khalaha paravipattishu

7-6

xxx

Brahmin’s Strength

The prowess of arms is the strength of the king, that of a Brahmin versed in Veda is in knowledge, beauty, sweetness and youth are the unsurpassed strength of women.

Baahuviiryam balam raaknjobraahmano brahmavid bhalii

Ruupayauvanamaadhuryam striinaam balamanuttamam

Chapter 7, sloka 11

 

xxx

 

Picture from Tindivanam Patasala

knowledge is the strength of the Brahmins, army is that of the kings

vidhyaa balam vipraanaam, raaknjaam sainyam balam tathaa

2-16

xxx

Contented Brahmins

Brahmins not having the sense of fulfilment, kings having the same, harlots feeling shy and high born women with no sense of shame come to naught.

 

asantushtaa dwijaa nashtaa santushtaasca mahiibujaha

salajjaa ganikaa washtaa nirlajjaasca kulaanganaahaa

8-18

 

Source Book: Canakyaniti, Translated by Satya Vrat Shastri

 

xxx SUBHAM xxxx

 

 

 

 

மாணவர்கள் நாடகம் (சினிமா) பார்க்கக்கூடாது! சாணக்கியன் கட்டளை (Post No.4770)

Date: 21 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-06 am

 

Written by London swaminathan

 

Post No. 4770

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சாணக்கியன் என்ற பிராஹ்மணன் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான். உலகம் வியக்கும் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தை யாத்தான்; பல நீதி மொழிகளை புகன்றான். மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து அலெக்ஸாண்டரின் படைகளை நடுநடுங்க வைத்தான். ஆனால் வியப்பான விஷயம் என்ன வென்றால் ஒரு குடிசையில் வாழ்ந்தான். விருப்பு வெறுப்பற்ற ஒரு யோகி போல வாழ்ந்ததால் யாருக்கும் கட்டளை இடும் துணிவு அந்த பிராஹ்மணனுக்கு இருந்தது.

 

அவன் செப்பாத விஷயம் இல்லை; பேசாத பொருள் இல்லை. சாணக்கிய நீதி என்னும் நீதி நூலில் அவன் மொழிவதாவது:

 

முட்டாளாக இருக்கும் மந்தமான மாணவர்களுக்குக் கற்பிக்கும் , புத்திசாலியான ஆசிரியர்களும் துன்பமே அடைவார்கள்;

கெட்ட பெண்களைக் கவனித்துக் கொள்வோர் நிலையும் அஃதே;

கெட்டவர்களுடன் நட்பு பாராட்டுவோரும் பரிதாபத்துக்கு உரியவர்களே;

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 4

 

மூர்க்க சிஷ்ய உபதேசேன  துஷ்ட ஸ்த்ரீபரணேன ச

துக்கிதைஹி ஸம்ப்ரயோகேன பண்டிதோஅப்யவஸீததி

 

xxx

 

மாணவர்கள் நாடகம் (சினிமா) பார்க்கக்கூடாது!

 

மாணவர்கள் Make-up மேக் அப் போட்டு அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது; ஆடல் பாடல், நாடக ( தற்காலத்தில் திரைப்படம்) நிகழ்ச்சிகளில் ஈடுபடக் கூடாது; காமம் க்ரோதம் (கோபம்) இருக்கக்கூடாது.

 

 

ஒரு மாணவன் கீழ்க்கண்ட எட்டு விஷயங்களைக் கைவிட வேண்டும்:

காமம் , கோபம், பேராசை, கேளிக்கை நிகழ்ச்சிகள், அலங்காரம் (மேக்- அப்), ஆடல், நாடக நிகழ்ச்சிகள், அதிக தூக்கம், மற்றவர்களைப் புகழ்ந்து வாழுதல் (காரியம் நடப்பதற்காக இச்சகம் பேசுதல்)

காமம் க்ரோதம் ததா லோபம் ஸ்வாதம் ச்ருங்காரகௌதுகே

அதி நித்ராதி ஸேவே ச வித்யார்த்தீ ஹ்யாஷ்ட வர்ஜயேத்

 

சாணக்கிய நீதி 11-10

 

xxx

வாத்தியாருக்கு நன்றிக்கடன்

 

ஆசிரியர் ஆனவர் உனக்கு ஒரு அக்ஷரம் (எழுத்து) சொல்லிக் கொடுத்தவர் ஆகட்டும்; அப்படியும் கூட அவருக்கு நன்றிக் கடன் செலுத்த உலகில் ஒரு பொருளும் இல்லை.

ஏக மேவாக்ஷரம் யஸ்து குருஹு சிஷ்யம் ப்ரபோதயேத்

ப்ருதிவ்யாம் நாஸ்தி தத் த்ரவ்யம் யத் தத்வா சான்ருணீ பவேத்

சாணக்கிய நீதி 15-1

 

((பெண்கள், பெற்றோர்கள், ஆசிரியர் ஆகியோரை இந்துமத இலக்கியங்கள் உயர்த்தி வைக்கும் அளவுக்கு உலகில் வேறு எந்த இலக்கியமும் உயர்த்தி வைக்கவில்லை; அப்படி இருந்தால் அவை எல்லாம் நமக்கு 1000, 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டவையே.

விருந்தோம்பல், தூது, அமைச்சர், அரசன், கொடி, முரசு, கோ மாதா , தானம், தவம் – முதலிய விஷயங்களும் உலகில் எந்த நாட்டுப் பழைய இலக்கியங்களிலும் கிடையாது. இவை எல்லாம் இந்தியாவே உலகின் பழைய நாடு, இந்தியாவே உலகிற்கு நாகரீகத்தைப் பரப்பிய நாடு என்பதற்குச் சான்று பகரும். ரிக் வேதத்தின் கடைசி பாடல், இன்று ஐ.நா. முதலிய அமைப்புகளின் நோக்கமாக இருக்கின்றது. இத்தகைய உயர் சிந்தனை மலர, ஒரு சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பின்னரே உதிக்கும்.

xxx

 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது

ஒரு ஆசிரியரிடம் செல்லாது, புத்தகத்தில் இருந்து மட்டும் படித்தவன், ஒரு சபையில் சோபிக்க முடியாது; ஒரு பெண் கள்ளக் காதல் கொண்டால் எப்படியோ அப்படித்தான் இதுவும்!

 

புஸ்தகேஷு ச யா அதீதம் நாதீதம் குருஸந்நிதௌ

ஸபாமத்யே ந சோபந்தே ஜாரகர்பா இவ ஸ்த்ரியஹ

சாணக்கிய நீதி 17-1

ஒரு பெண், பெரிய பெரிய ஆட்களுடன் எல்லாம் படுத்து இருக்கலாம்; இருந்த போதிலும் அதை பொது இடங்களில் பேச முடியாது பேசினால் குட்டு வெளிப்பட்டுவிடும்; அது போலவே புத்தகத்தை மட்டும் படித்துப் பொருள் அறிபவன்; பொது சபைகளில் நாலு பேர் கேள்வி கேட்டால், திரு திருவென முழிப்பான்; அவன் குட்டு வெளிப்பட்டுவிடும்; ஆசிரியர் கற்பித்து இருந்தால், அவரே தடை எழுப்பி விடைகாணக் கற்றுக் கொடுத்து இருப்பார்.

 

ஆசிரியர்- மாணவர் உறவு பற்றி 2300 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லியிருக்க முடியாது.

அலெக்ஸாண்டரின் குரு அரிஸ்டாடில் (Aristotle)- அரிஸ்டாடிலின் குரு பிளாட்டோ (Plato) — பிளாட்டோவின் குரு சாக்ரடீஸ் (Socrates)- அவர் சாணக்கியனுக்கு ஒரு நூற்றாண்டு முன்னர் வாழ்ந்தார். அவருடைய கேள்வி கேட்டுப் பதில் காணும் முறையும் (Socratic Method) அவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் உபநிடதத்தில் உள்ளது. அவரும் ஏசு கிறிஸ்துவும் உபநிடதங்களைக் கற்றது அவர்களின் உபதேசங்களில் வெள்ளிடை மலை என விளங்குகிறது.

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

விண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள் (Post No.4769)

Date: 21 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-18 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4769

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் எட்டாவது உரை

 

  1. ஒரு விண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள்

 

ச.நாகராஜன்

 

 

நெதர்லாந்திலிருந்து முதலில் விண்வெளிக்குச் சென்ற பெருமையைப்      பெற்றவர் இயற்பியல் வல்லுநரான உப்போ ஜோஹன்னஸ் ஓகெல்ஸ் (Wubbo Johannes Ochkels )   

        யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி மூலம் 1985ஆம் ஆண்டு இவர்         விண்வெளிக்குப் பயணமானார்.

 

இவர் தனது மறைவிற்கு முன்னர் நீட்டித்த ஆற்றல் தீர்வுகள் பற்றி ஒரு கடிதத்தை உலகத்தினருக்கு எழுதினார்

 

அதில்,சமாதானத்துடன் ஒரே மனதைக் கொண்டசண்டை இல்லாத மனித  குல எழுச்சிக்காக அறைகூவுகிறார் ஓகெல்ஸ்.   

  விண்வெளியிலிருந்து பூமிப் பந்தைப் பார்த்த போது அவருக்கு உயரிய      ஆன்மீக அனுபவம் ஏற்பட்டு நல்ல புதிய சிந்தனைகள் மலர்ந்தன.

அருமையான மனைவிகுழந்தைகள்பேரப் பிள்ளைகள் என நல்ல வாழ்வு வாழ்ந்த அவருக்கு 2005ஆம் ஆண்டு  மாரடைப்பு ஏற்பட்டதுஒருவழியாக மீண்டார்

 

ஆனால் 2013, மே மாதம் அவருக்கு சிறுநீரகத்தில் புற்று நோய் இருப்பது    கண்டு பிடிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு இரண்டு வருடம் என்று நாள் குறித்து” விட்டனர்.

 

2014, மே மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த அவர் இறப்பதற்கு முதல் நாள் மருத்துவ மனையில் படுத்திருந்தபடியே தொலைக்காட்சி ஒன்றிற்குத் 

தனது கடைசி பேட்டியை அளித்தார்உணர்ச்சி ததும்ப மூச்சை இழுத்து விட்டுக்  கொண்டு அனைத்து சக்தியையும் ஒருங்கிணைத்துசக்தி வாய்ந்த தனது பேச்சில் அவர் உலகினரிடம், இந்த பூமி மிகவும் மதிப்பு வாய்ந்தது என்றும் அதை எப்படியேனும் காக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டிக் கொண்டார்.

 

 

இது ஒன்றே தான் நமக்கான வசிப்பிடம். இரண்டாவது பூமி இல்லை. என்றார் அவர். 

தனக்கு வந்தது போல பூமிக்கும் கான்ஸர் வந்து விடக் கூடாது என்ற      ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர்,” நம்முடைய பூமி கான்ஸரினால் பீடிக்கப்பட்டிருக்கிறதுஎனக்கு கான்ஸர் உள்ளதுமக்களில் ஏராளமானோர்  கான்ஸரினால் இறக்கின்றனர்என்றாலும், மனித குலம் எப்போதும் நீடித்து இருக்கப் போதுமான அளவு மனிதர்கள் உள்ளனர்.

நாம் நமக்கே சொந்தமான நமது பூமியைக் காக்க வேண்டும். என்றார் அவர்.

 

 

 “உற்சாகமும் ஆர்வமும் உள்ளொளியும் அணுகுமுறையும் இருக்கும்போது  மற்றவர்கள் நேசிக்க முடியாத அளவிற்கு பூமியை நீங்கள் நேசிக்க         ஆரம்பிப்பீர்கள்ஒன்றை உளமார நேசிக் ஆரம்பித்து விட்டால் அதை விட   உங்களுக்கு மனமே வராது. என்று அவர் உருக்கமாகக் கூறினார்.

அவரது தொலைக்காட்சி பேட்டியைக் கண்டோர் நெகிழ்ந்து உருகியதில்      அதிசயமே இல்லை.

நாட்கள் 44 நிமிடங்கள் விண்வெளியில் பறந்த வீரர் மண்ணில் வாழும்    மாந்தருக்குக் கூறிய அறிவுரைகளும் புதிய சிந்தனைக் கருத்துக்களும்       வளமானவைவரவேற்கப்பட வேண்டியவை; வாழ்ந்து காட்டப்பட வேண்டியவை!

***

 

 

No Make-up, No Drama, No Song—Chanakya Strict with Students! (Post No.4768)

Date: 20 FEBRUARY 2018

 

Time uploaded in London- 16-59

 

Written by London swaminathan

 

Post No. 4768

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

CHANAKYA ON STUDENT-TEACHER RELATIONSHIP

Very few poets or law makers talk about the relationship between students and teachers. But we have lot about it in Manu Smrti and Upanishads.

 

Here are some verses from the Chanakya Niti translated by Satya Vrat Shasri (formerly Professor in Delhi University and JNU, Delhi)

A student should shun the following eight: Passion, Anger, Greed, Relish, Make-up, song and drama shows, too much sleep and flattery.

Chankya Niti, Chapter 11, verse 10

kaamam krodham tathaa svaadam srungarakautuke

atinidraatiseve ca vidhyaarthii hyaashta varjayet

 

xxx

Don’t Teach Dull Students

Even a wise man comes to grief by teaching dull students, by looking after bad women and by keeping company with the miserable.

Chanakya Niti, Chapter 1, verse 4

 

muurkhasishyopadesena dushtastriibaranena ca

dukkitaihi samprayogena panditoapyavasiidati

xxx

 

Bookish Knowledge!

Those who have read books but have not studied with teachers, create no impression in an assembly like women carrying through illicit contact.

Chanakya Niti, Chapter 17, verse 1

 

pustakesu ca yaaadhiitam naadhiitam gurusannidhau

sabhaamadhye na sobhante jaaragarbhaa iva striiyaha

 

xxx

 

Even a single syllable that a teacher teaches a pupil, there is no object in the world by offering which he can repay the debt.

Chanakya Niti, Chapter 15, verse 2

ekamevaaksharam yastu guruhu sishyam prabodayet

pruthivyaa naasti tada dravyam datvaa caanrunii bhavet

xxx

Manu on Students attending Veda Class

2-117. (A student) shall first reverentially salute that (teacher) from whom he receives (knowledge), referring to worldly affairs, to the Veda, or to the Brahman.

2-119. One must not sit down on a couch or seat which a superior occupies; and he who occupies a couch or seat shall rise to meet a (superior), and (afterwards) salute him.

2-120. For the vital airs of a young man mount upwards to leave his body when an elder approaches; but by rising to meet him and saluting he recovers them.

2-121. He who habitually salutes and constantly pays reverence to the aged obtains an increase of four (things), (viz.) length of life, knowledge, fame, (and) strength.

2-122. After the (word of) salutation, a Brahmana who greets an elder must pronounce his name, saying, ‘I am N. N.’

 

This is from second chapter of Manu Smrti.

xxxx

Following Mantra is from the Taittiriya Upanishad, recited just before the class begins:-

 सह नाववतु 
सह नौ भुनक्तु 
सह वीर्यं करवावहै 
तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै 
 शान्तिः शान्तिः शान्तिः 


Om Saha Naav[au]-Avatu |
Saha Nau Bhunaktu |
Saha Viiryam Karavaavahai |
Tejasvi Naav[au]-Adhiitam-Astu Maa Vidvissaavahai |
Om Shaantih Shaantih Shaantih ||

Meaning:
1: Om, May God Protect us Both (the Teacher and the Student) (during the journey of awakening our Knowledge),
2: May God Nourish us Both (with that spring of Knowledge which nourishes life when awakened),
3: May we Work Together with Energy and Vigour (cleansing ourselves with that flow of energy for the Knowledge to manifest),
4: May our Study be Enlightening (taking us towards the true Essence underlying everything), and not giving rise to Hostility (by constricting the understanding of the Essence in a particular manifestation only),
5: Om, Peace, Peace, Peace

 

This shows the highest stage Hindus reached around 1000 BCE. No other culture even thought about such a thing at that time.

 

xxxx SUBHAM xxx

 

பண்டம் ஓரிடத்தில் பழி ஓரிடத்தில்- பழ மொழிக் கதை (Post No.4767)

Date: 20 FEBRUARY 2018

 

Time uploaded in London- 12-27

 

Written by London swaminathan

 

Post No. 4767

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

தமிழில் ஒவ்வொரு பழமொழிக்கும் ஒரு காரணமோ, ஒரு கதையோ உண்டு. பழமொழிகளே அழிந்து வரும் காலத்தில் கதைகள் மறைந்ததில் வியப்பில்லையே! மூன்று வெள்ளைக் காரர்கள் 20,000 தமிழ்ப் பழமொழிகளை வெளியிட்டனர். அதற்கும் மேலாக உள்ள பழமொழிகளையும், அவற்றின் பின்னுள்ள கதைகளையும் வெளியிடுவதும், அவைகளை விஷயம் (Subject wise)  வாரியாக வரிசைப்படுத்துவதும், பல்வேறு மொழிகளில் உள்ள பழமொழிகளுடன் அவைகளை ஒப்பிடுவதும், எல்லாத் தமிழ்ப் பழமொழிகளையும் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதும் செய்ய வேண்டிய பணிகளாகும். இதற்கென தனித் துறையும் ஆராய்ச்சிக் களமும் தேவை. நிற்க.

மேலும் ஒரு பழமொழிக் கதையைக் காண்போம்.

 

‘எய்தவன் இருக்க அம்பு என்ன செய்யும்?’ ‘பண்டம் ஓரிடத்தில் பழி வேறு ஒரு இடத்தில்’ என்று தமிழில் பழமொழிகள் உள.

 

ஒரு ஊரில் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் கோடிக் கணக்கில் பணம் வைத்திருந்தான். காலப் போக்கில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே அரண்மனை போன்ற வீட்டைப் பராமரிப்பதே கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் பெரிய மழை பெய்தபோது ஒரு சுவர் இடிந்து விழுந்தது. உடனே வேலையாட்களைக் கொண்டு புதிய சுவர் எழுப்பினான். அது ஈரப் பசையுடன், காயாமல் இருந்த காலத்தில் ஒரு திருடன் அந்த ஊருக்குள் புகுந்தான்.

 

 

இருட்டு நேரத்தில் அந்த வீட்டில் திருட வந்தான். காயாத சுவர் என்று தெரியாமல் அதில் கன்னம் வைத்தான் (ஓட்டை போட்டான்). அது முழுதும் இடிந்து அவன் மீது விழவே அவன் அப்படியே மூச்சுத் திணறி இறந்தான்.

 

அந்த நாட்டை ஆண்ட மன்னன் மஹா மூடன் என்பதால் எல்லோரும் அவனை ஏமாற்றிப் பிழைத்தனர். திருடர் கூட்டத்தில் ஒருவன் இதை அறிந்து, அந்த மன்னர் மீது வழக்கு தொடுத்தான். உனது நாட்டில் வீடுகளைச் சரியாகக் கட்டுவதில்லை. அதை நீங்கள் சரியாக மேற்பார்வை செய்யவில்லை எனது சகா ஒருவன் இறந்ததற்கு உங்கள் மோசமான ஆட்சியே காரணம்; எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்- என்றான்.

 

முட்டாள் அரசன் சொன்னான்,

கவலைப் படாதே, இப்பொழுதே வீட்டுச் சொந்தக் காரனை அழைத்துவர ஆணை இடுகிறேன் என்றான். அந்த வணிகனை உடனே சேவகர்கள் இழுத்து வந்தனர். ஏன் வீட்டை மோசமாகக் கட்டினாய்? ஒரு திருடனின் சாவுக்கு நீயே காரணம் என்றான்.

அந்த வணிகன் சொன்னான்,

நான் என்ன செய்ய? வீட்டில் சுவர் எழுப்பிய கொத்தனாரை அல்லவா தண்டிக்க வேண்டும்?- என்றான்

உடனே கொத்தனாரை இழுத்து வந்தனர். அடே! ஈரமான சுவரை எழுப்பி ஒருவனைக் கொன்றுவிட்டாயே! உனக்கு தொழில் சுத்தம் என்பதே கிடையாதா? என்றான் மன்னன்.

 

மன்னவா! என் மீது பிழை இல்லை. மண் மிதித்துக் கொடுத்த கூலியாள் கொடுத்ததை நான் அப்படியே வைத்து சுவர் எழுப்பினேன். அவனை அல்லவா விசாரிக்க வேண்டும்?- என்று சொன்னான்.

உடனே கூலியாளை அழைத்துவர மன்னன் பணி ஆட்களை ஏவினான்.

 

கூலியாள் வந்தவுடன் அதே கேள்வி.

அவன் செப்பினான்,

மஹாராஜா! நான் இளகலாக மண் கலந்து கொடுத்தது ஏன் என்றால், நான் பயன் படுத்திய மிடாவின் வாய், வழக்கத்தைவிடப் பெரிதாக இருந்தது. அதைச் செய்த குயவனை அல்லவா விசாரிக்க வேண்டும்? என்று உரைத்தான்

 

குயவனை இங்கே இழுத்து வாருங்கள் என்று அரசன் ஆணை  இட்டான்.

 

குயவனும் வந்தான்; அதே பல்லவி!

அவன் பதில் கொடுத்தான்,

மன்னவா! உண்மைதான்; மிடாவின் வாய் பெரிதுதான். அதற்குக் காரணம், அந்தப் பக்கம் வந்த ஒரு பேரழகிதான். அவளைப் பார்த்துகொண்டே மிடா செய்ததால் அது பெரிதாகிவிட்டது என்று நுவன்றான்.

 

அந்தப் பேரழகியை இழுத்துவாருங்கள் என்று உத்தரவிட்டான் மூட அரசன்

அவளும் மினுக்கி குலுக்கி வந்தாள்; அதே  கேள்வி.

அவள் பகர்ந்தாள்,

ஒரு நகை செய்யும்படி தட்டானிடம் சொல்லி இருந்தேன்; அவன் சொன்ன நேரத்தில் என் வீட்டுக்கு வராததால் நானே அவன் வீட்டுக்குச் சென்றேன். அப்போது குயவன் வீடு வழியாகப் போனது உண்மையே. ஆனால் இதற்குக் காரணமான தட்டானை அழைத்து விசாரிப்பதே முறை என்றாள்.

தட்டான் வந்து நகை விற்கும் செட்டியார் மீது பழியைப் போட்டான். அவரையும் அழைத்து வந்தனர் சேவகர்கள்.

 

அவருக்கு நிலைமை முழுதும் விளங்கி இருந்ததால் — பூர்வ கதை தெரிந்து இருந்ததால்– இரண்டு நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார்.

 

அந்த இரண்டு நண்பர்களும் அரண்மனைக்கு வெளியே மன்னருக்குக் கேட்கும் அளவுக்குப் பெரிய சண்டை போட்டனர்.  மன்னர், செட்டியாரை விசாரிப்பதற்குப்  பதிலாக அந்த இரண்டு பேரையும் உள்ளே அழைத்து என்ன சப்தம்? என்ன சண்டை? என்று கேட்டான்.

அவர்களில் ஒருவன் மொழிந்தான்:

மன்னா! பாருங்கள்! நீங்கள் தண்டிப்பவனைக்  கழுவில் ஏற்றிக் கொல்ல கழு மரம் தயாராக இருப்பதைப் பார்த்தவுடன் நான்தான் கழுவில் ஏறுவேன் என்கிறான். ஆனால் நான்தான் முதலில் வந்தேன். ஆகவே நான்தான் கழுவேறி இறக்க வேண்டும்; இதுதான் வாக்குவாதத்தில்  முடிந்தது- என்றான்.

மன்னன் கேட்டான், நீங்கள் எதற்காகக் கழுவில் ஏற வேண்டும்?

மன்னரே, உங்களுக்குத் தெரியாத விஷயமா? இந்தக் கழுமரத்தில் இந்த நன்னாளன்று யார் முதலில்  கழுவேறி இறக்கிறார்களோ அவர்தான் இந்த நாட்டின் அடுத்த அரசன் என்று ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்களே! விரைவில் இந்த நாட்டில் ஆட்சி மாறும் என்றும் பகர்ந்தார்களே? நான் இதோ தயார் என்றான்.

 

அதைக் கேட்ட அரசன் திடீரென்று ஆசனத்தில் இருந்து குதித்தான். எல்லோரும் விலகிப் போங்கள்; இந்த நாட்டை ஆளுவதற்கு என்னைவிட வேறு யாருக்கும் தகுதி கிடையாது என்று சொல்லிவிட்டு நேராகச் சென்று கழுவில் ஏறினான்; முட்டாள் மன்னவனின் ஆயுளும் பிரிந்தது. அனைவருக்கும் பெரு  மகிழ்ச்சி!

 

 

பழி ஓரிடத்தில் பாவம் ஓரிடத்தில், பண்டம் ஓரிடத்தில் என்ற பழி ஓரிடத்திலென்ற பழமொழிகளுக்கு எல்லாம் மூலக் கதை இதுவே.


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

–சுபம்–

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 2 (Post No.4766)

Date: 20 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-16 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4766

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 2 (Post No.4766)

ச.நாகராஜன்

 

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும்.

அலுவலகத்தில் எல்லோருக்கும் சிக்கல். எனக்குக் கூடுதல் சிக்கல். ஒரு தனிப் பிரிவின் அனைத்தும் நானே!

எல்லோரும் உடனடியாகக் கிளம்புங்கள். ஆர்டர், அட்வான்ஸுடன் வாருங்கள்.

 

ஓவர்ஹெட், வேஜஸ்  இவற்றுக்குப் பணம் தேவை. இல்லையேல் பின்னால் வருத்தப்படுவீ ர்கள்!

மற்றவர்களுக்கு சேல்ஸ், புரடக் ஷன்,சப்ளை எனப் பெரிய படை உண்டு.

 

நான் தனி மரம்.

 

அன்று மாலையே கொல்லம் பஸ்ஸில் ஏறினேன்.

காலையில் குளித்து விட்டு ஒரு சின்னப் பாக்கெட் முந்திரிப்பருப்பு வாங்கினேன். விலை குறைவு. சுவையாக் இருக்கும்.

 

பஸ் ஒரு பெரிய பாலத்தின் அருகே வந்த போது நிறுத்தச் சொன்னேன்,

 

“சார், நீங்க போக வேண்டிய கம்பெனிக்கு எதிரிலேயே வண்டி நிற்கும்” என்றார் கண்டக்டர்.

 

‘பரவாயில்லை” என்றேன்,

 

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவர் வண்டியை நிறுத்தினார்.

ஆஹா! என்ன அருமையான காட்சி.

 

பெரிய பாலம்.அகலமானது. நடைபாதைகள் வேறு. லஞ்சம் வாங்காமல் கட்டப்பட்டது.

 

கீழே பளிங்கு போன்ற நீர். துள்ளிக் குதிக்கும் மீன்கள். அலையுடன் ஆட்டம் போட்டு ஓடும் மீன் குட்டிகள்.

இது போலொரு காட்சி கிடைக்குமா?

வானத்தைப் பார்த்தேன், பிரமித்தேன்.

என்ன அதிசயம்.

 

கருட பட்சிகள்.

அலை அலையாக.

 

சிறகை விரித்து அவை பறந்த அழகு!

ஓம் கருடாய நமஹ.

கும்பிட்டேன்.

பல மாதமாகப் படை எடுத்தாயிற்று. ஒரு நிமிடத்தில் அந்த செக்ரட்டரி பெண்மணி என்னை பைசல் பண்ணப் போகிறாள், கருடனையாவது நின்று நிதானித்துத் தரிசிப்போம்.

கம்பெனி வந்தது.

 

உள்ளே சென்றேன். அதே மலையாளப் பெண்மணி. இப்போது நான் ‘பழக்கமாகி விட்ட ஆள்’.

நான் எதுவும் பேசுவதற்கும் முன்னர் அவரே, “சார். எம்.டி. பிஸி.பார்க்க முடியாது” என்றார்.

நான், “உங்களிடம் எதையாவது கேட்டேனா?” அவர் சற்றுத் திகைத்தார்.

 

உள்ளே போய் கார்டைக் கொடுத்து நான் வந்ததையாவது சொல்லுங்கள். அவர் சொல்லட்டும்.

என்ன, இங்கே, இவர் யார்? பின்னால் நின்று கொண்டிருந்த எம்.டி. முதல் முதலாக என்னைப் பார்த்தார்.

சார், ஜஸ்ட் ஒன் மினிட். அவ்வளவு தான்.

சரி, வாருங்கள்

 

அவர் காபின் பிரம்மாண்டமானது. இரு புறமும் செல்லும் படி கதவுகள். ஒரு புறம் நீரோடையை நோக்கி. இன்னொரு புறம் அலுவலகம் நோக்கி.உள்ளே நுழைந்தவர் மேஜையைப் பிடித்துக் கொண்டார். எனக்கு நிற்கக் கூட இடம் இல்லை.

என்ன?

 

உங்களுக்கு ஒரு குட் நியூஸ் என்னால் சொல்ல முடியும்?

எனக்கு! குட் நியூஸ்! என்ன?

 

“உங்களது பல பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு வெளிவரப் போகிறீர்கள்.  நல்ல செய்திகள் வர ஆரம்பிக்கின்றன.

கடுமையா இருந்த அவர் இப்போது மலர்ந்து போனார், பிரமித்தார், அதிசயித்தார்,

 

முதலில் உட்காருங்கள். தானும் உட்கார்ந்தார்.

செக்ரட்டரியை அழைத்தார். சாருக்கு சாய், ஸ்நாக்ஸ் கொண்டு வா, இரண்டு பக்க டோர் வழியாகவும் யாரையும் விடாதே. போனை உள்ளே கொடுக்காதே.

 

அந்தப் பெண் ஒன் மினட் ஆசாமி எப்படி இப்படி ஒரு வி ஐ பி ஆனார் என்று வியந்து போனார்.

 

எனக்கு ஜோஸியத்தில் நம்பிக்கை கொஞ்சம் உண்டு. ஆனால் என்னைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாமல் எப்படி இதைச் சொல்கிறீர்கள்.

 

விவரித்தேன்.

சார், நீங்கள் இருக்கும் இடம் அற்புதமான கருடபட்சிகள் வாழும் ஸ்தலம்.அவைகள் உங்களை வளமாக வாழ வைக்கின்றன. இந்த இடத்தில் உங்கள் அலுவலகம் செட் அப் ஆனதிலிருந்து க்ரோத் தான்.

உண்மை தான் என்று தலையை ஆட்டினார்,

ஆனால் எக்ஸ்பான்ஷனுக்கான பெரிய லோன் சாங்க்‌ஷன் ஆகவில்லை. பல மாத ப்ரிபேரஷன் ஓவர். ஸ்டார்ட் தான் ஆகணும்.

 

சார், இன்றிலிருந்தே நல்ல காலம் ஆரம்பம். இன்னும் மாக்ஸிமம் ஒரு வாரம் தான். 48 ஹவர்ஸ், மே பி 24 ஹவர்ஸ்.

யூ கெட் மோர் தேன் யூ எக்ஸ்பெக்ட்.

 

“சரி இதெல்லாம் எப்படி சொல்கிறீர்கள்?”

 

“இந்தக் கருடப் பட்சிகள் உங்களுடன் பேசுகின்றன. அலை அலையாய் வட்டமடிக்கும் அவை உங்களுக்குச் செய்திகள் சொல்கின்றன.

 

கருட பட்சிகள் பேசுகின்றனவா, அவர் பால்கனி கதவைத் திறந்து பார்த்தார். ஏராளமான பட்சிகள். ஆரவாரம். கும்பிட்டார்.

இவைகளுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?

 

ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கு நல்ல அருமையான உணவு வகைகளைத் தாருங்கள்.

செக்ரட்டரி உள்ளே வந்து பேங்கிலிருந்து போன் என்றார்.

 

போன் பேச ஆரம்பித்தார். ஓ என்றார். தேங்க்ஸ் என்றார்.

பத்து நிமிட போன்.

அவர் முகம் பிரகாசம்.

அலுவலகம் பிரசாகம்.

ஒரே ஆனந்தம்.

 

மறுநாள் பேங்க் ஆபீஸர்கள் டாகுமெண்ட் வெரிஃபை செய்து லோன் ஆர்டர் இஷ்யூ செய்யப் போகிறார்கள்.

ஒரே கோலாகலம், அவர்களுக்கு ஏகப்பட்ட வேலை.

மெல்ல தேங்க்ஸ் சொல்லி விட்டு நகர்ந்தேன்.

ஒரு நிமிடம். உட்காருங்கள்.

 

உட்கார்ந்தேன்.

அக்கவுண்ட்ஸ் மானேஜரை வரச் சொன்னார்.

இவரது பைலைக் கொண்டு வாருங்கள்.

பைல் வந்தது.

 

இவருக்கு ஆர்டரை டைப் அடித்துத் தாருங்கள். அட்வான்ஸ் எவ்வளவு?

50%

 

அதையும் ஒரு செக்காகப் போடுங்கள். நான் கையெழுத்துப் போடுகிறேன்.

 

ஆர்டர் அமவுண்ட்

 

அவர் கொடேஷனில் கொடுத்தது தான்.

நம்பமுடியாமல் தலையை ஆட்டி விட்டுப் போன அவர் அரை மணி நேரத்தில் வந்தார்.

 

ஆர்டர், செக் – எம் டி கையெழுத்திட்டார்.

என் கையில் தர தேங்க்ஸ் சொல்லி வாங்கிக் கொண்டேன்.

இந்த சேஸிஸ் ஆறும் பல மாதமாக இங்கே தான் இருக்கின்றன.

நாளை அதை மதுரைக்கு அனுப்பி விடுகிறேன்.

 

ஆல் தி பெஸ்ட்!

கிளம்பினேன், கருடனுக்கு நமஸ்காரம்!

காலையில் வீ டு வந்து குளித்து விட்டு ஆபீஸுக்கு வந்து சேர்ந்த என்னை பரிதாபமாக ஒரு கூட்டம் பார்த்தது.

பெரிய சேல்ஸ் ஃபோர்ஸே ஒண்ணும் செய்ய முடியலை.

இவர் பாவம் என்ன செய்வாரு?

 

 

நிர்வாகத்திற்குச் செய்தி போனது.

 

பதினெட்டு லட்சம் சிங்கிள் ஆர்டர், ஒன்பது லட்சம் செக் அட்வான்ஸ்.

 

என்ன பரபரப்பு என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை,

 

சொந்த சர்வைவலுக்காக அலுவலக ஆர்டரை ஜோதிடத்தை வைத்துப் “பிடித்தது” தவறு.

 

தப்பு தப்பு தான்!

***