31 நாலடியார் பொன் மொழிகள் (Post No.4785)

 

31 நாலடியார் பொன் மொழிகள் (Post No.4785)

Written by London Swaminathan 

 

Date: 25 FEBRUARY 2018

 

Time uploaded in London – 17-40

 

Post No. 4785

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மார்ச் 2018  ‘நற்சிந்தனை’ காலண்டர்

(ஹேவிளம்பி- மாசி/ பங்குனி மாதம்)

இந்த மாத காலண்டரில் நாலடியார் நானூறு என்னும் நீதி நூலில் இருந்து 31 பொன்மொழிகளைத் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

 

முக்கிய விழாக்கள் – மார்ச் 1 ஹோலி, மாசி மகம் ;  14-காரடையான் நோன்பு; 18- யுகாதி/ தெலுங்கு வருஷப் பிறப்பு, வஸந்த பஞ்சமி ஆரம்பம்; 22- வஸந்த பஞ்சமி; 25- வஸந்த பஞ்சமி முடிவு, ஸ்ரீ இராமநவமி, ஷீர்டி சாய் பாபா பிறந்த தினம்; 29- மஹாவீர் ஜயந்தி’;  30- புனிதவெள்ளி, பங்குனி உத்திரம்.

பௌர்ணமி– 1, 31; அமாவாசை– 17  ; ஏகாதஸி விரதம்-13, 27;

சுப முகூர்த்த தினங்கள்:- 4, 5, 26, 30

 

 

 

மார்ச் 1 வியாழக்கிழமை

 

பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க,அகடுற யார் மாட்டு நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும் (காளை உழுது பெற்ற உண்வை பகுத்து உண்க; செல்வமானது, நடு நிலையுடன், வண்டிச் சக்கரம் போல மாறி மாறி வரும்)

மார்ச் 2 வெள்ளிக்கிழமை

 

நின்றன நின்றன நில்லாவென உணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செயிற் செய்க (நிலையாக இருக்கும் என்று எண்ணப்பட்டவை நிற்காது; ஆகையால் உங்களுக்குப் பொருந்திய அறப்பணிகளை உடனே செய்க)

 

மார்ச் 3 சனிக்கிழமை

அறம் செய்து அருளுடையீர் ஆகுமின், யாரும் பிறந்தும் பிறவாதாரில் (தர்மம் செய்து கருணை உடையவராக இருங்கள்; அப்படி செய்யாவிடில் பிறந்தும் பிறவாதவரே)

மார்ச் 4 ஞாயிற்றுக்கிழமை

ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த

பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் (ஒரு நன்மை செய்தாலும் கூட அதற்காக சான்றோர் 100 பிழைகளையும் பொறுப்பர்)

 

மார்ச் 5 திங்கள் கிழமை

வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணு நுணுக்கமொன் றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி யரிது (குற்றமில்லாத நூல்களைக் கற்றும், அதன் உட்கருத்தை அறியமாட்டார் புத்தி இல்லாதவர்)

மார்ச் 6 செவ்வாய்க் கிழமை

மைதீர் பசும்பொன்மேன் மாண்ட மணியழுத்திச்

செய்ததெனினுஞ் செருப்பும்தன் காற்கேயா

மெய்திய செல்வத்த ராயினுங் கீழ்களைச்

செய்தொழிலாற் காணப்படும் (தங்க, ரத்ன செருப்பானாலும் காலில்தான் பயன்படும். கீழ்களுக்குச் செல்வம் இருந்தாலும் அவர்களின் செயல்களே அவர்களைக் காட்டிவிடும்)

 

மார்ச் 7  புதன் கிழமை

 

தினையனைத்தே யாயினுஞ் செய்தநன் றுண்டால்

பனையனைத்தா வுள்ளுவர் சான்றோர் (கொஞ்சம் உதவி செய்தாலும் உயர்ந்தோர் அதைப் பெரிதாகப் பாராட்டுவர்)

 

மார்ச் 8 வியாழக்கிழமை

 

முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை

யிந்திரனா வெண்ணி விடும் ( முந்திரி என்னும் சிறு தொகைக்கும் சற்று மாகாணி செல்வம் அதிகரித்தவுடன் கீழ்மட்ட மக்கள் தங்களை இந்திரன் என்று எண்ணுவர்)

 

மார்ச் 9 வெள்ளிக்கிழமை

நுண்ணர்வினாரொடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகே யொக்கும் ( நுட்பமான அறிவு உடையோருடன் அமர்ந்து புசிப்பது தேவ லோகம் போல இன்பம் தரும்)

 

மார்ச் 10 சனிக்கிழமை

காம நெறி படரும் கண்ணினாற்கு இல்லையே

ஏம நெறி படருமாறு (வயதான காலத்திலும் காமம் உடையோருக்கு

நிலையான இன்பம்/ பாதுகாப்பு இல்லை)

 

மார்ச் 11 ஞாயிற்றுக்கிழமை

 

பாய்திரைசூழ் வையம் பயப்பினு மின்னாதே

ஆய்நல மில்லாதார் பாட்டு (உலகமே கிடைப்பதானாலும் நல்ல குணம் இல்லாதார் நட்பினை விரும்பமாட்டார்கள் சான்றோர்)

 

மார்ச் 12 திங்கள் கிழமை

கொடாஅ ரெனினு முடையாரைப் பற்றி

விடாஅ ருலகத் தவர் ( செல்வம் உடையோர் ஒரு காசு தராதபோதிலும், மக்கள் அவரைச் சுற்றி வட்டம் இடுவர்)

 

மார்ச் 13  செவ்வாய்க் கிழமை

 

அருளினற முரைக்கு மன்புடையார் வாய்ச்சொற்

பொருளாகக் கொள்வர் புலவர் (பெரியோர் சொல்லும் புத்திமதியை நல்லோர் பெரும்பேறாக கொள்வர்)

மார்ச் 14  புதன் கிழமை

நாப்பாடஞ்சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்த்

தீப்புலவர் சேரார் செறிவுடையார் (வாய்க்கு வந்தபடி பாடம் சொல்லும் நேர்மையற்ற புலவருடன் அடக்கமுடைய நற்புலவர் சேர மாட்டார்கள்.)

 

மார்ச் 15 வியாழக்கிழமை

 

தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமுந்

தெருண்ட வறிவினவர் (தானே பெரியவன் என்று கருதும் செல்வரிடத்து, தெளிந்த அறிவுடையார் செல்ல மாட்டார்கள்)

 

மார்ச் 16 வெள்ளிக்கிழமை

 

வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர்

மான மழுங்க வரின் (சுவர்க்கமே கிடைப்பதாயினும் , மானம் கெட்டுப்போக நேரிட்டால் , மானமுள்ள பெரியோர் அதை நாட மாட்டார்கள்)

 

மார்ச் 17 சனிக்கிழமை

கடையெலாங் காய்பசி யஞ்சுமற்றேனை

இடயெலா மின்னாமை யஞ்சும்….தலையெல்லாம் சொற்பழி யஞ்சிவிடும் (பயத்தின் வகை: கடைத்தரத்தில் உள்ளோர் பசிக்கு பயப்படுவர்; இடைத் தரத்தில் உள்ளோர் துன்பத்துக்கு பயப்படுவர் ; முதல் தரத்தில் உள்ளோர் சொல்லால் வரும் பழிக்கு பயப்படுவர் )

 

மார்ச் 18 ஞாயிற்றுக்கிழமை

 

புறங்கடை வைத்தீவர் சோறு மதனால்

மறந்திடுக செல்வர் தொடர்பு (செல்வந்தர் நம் வீட்டுக்கு வந்தால் மனைவியை அறிமுகம் செய்து, சோறு படைப்போம்; நாம் அவர்கள் வீட்டுக்குப் போனால் மனைவியின் கற்பழிந்துவிடுவது போல நம்மை வாசலில் வைத்தே சோறு போடுவர்; அவர்களை மறப்பதே நலம்)

 

மார்ச் 19 திங்கள் கிழமை

 

உள்ளூர்

இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்

விருந்தினனா நாதலே நன்று (ஒருவர்க்கு சோறு போட முடியாவிட்டால், உள்ளூரில் இருந்து காலத்தைக் கழிக்காமல் நாமே பிச்சை எடுத்தல் நன்று)

 

மார்ச் 20  செவ்வாய்க் கிழமை

வாழாதார்க்கில்லை தமர் ( பொருள் இல்லாமல் வாழ்வோருக்கு சுற்றத்தார் இல்லை)

 

மார்ச் 21 புதன் கிழமை

கலா அற் கிளிகடியுங் கானக நாட

இலாஅ அர்க் கில்லைத் தமர் ( கல் கொண்டு கிளி ஓட்டும் காடுகளைக் கொண்ட மன்னவா! செல்வம் இல்லாதவர்களுக்கு உறவினர் இல்லை)

மார்ச் 22 வியாழக்கிழமை

 

இரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்

புகற்கரிய பூழை நுழைந்து (பிச்சை எடுக்கும் துன்பம் உள்ளவன், புகை போக முடியாத இடத்திலும் புகுந்துவிடுவான்)

மார்ச் 23 வெள்ளிக்கிழமை

 

இரவலர் கன்றாக வீவார வாக

விரகிற் சுரப்பதாம் வண்மை (பிச்சை எடுப்போர் கன்று; பிச்சை இடுவோர் பசு; இப்படி, தானே அன்புடன் சுரப்பதே கொடுக்கும் குணம்)

 

 

மார்ச் 24 சனிக்கிழமை

அட்டதடைத்  திருந்துண்டொழுகு  மாவதின் மாக்கட்

கடைக்குமா மாண்டைக் கதவு (சமைத்ததைத் தாமே சாப்பிடும் குணமில்லாத மனிதருக்கு மேலுலகத்தின் கதவானது மூடப்படும்)

 

 

மார்ச் 25 ஞாயிற்றுக்கிழமை

ஓதியுமோதா ருணர்விலா ரோதாதும்

ஓதியனையா ருணர்வுடையார் (பகுத்தறிவு இல்லாதவர்கள் படித்தும் படியாதவர்களே; பகுத்தறிவு உடையோர், ஓதாமலும் படித்தவர்களுக்குச் சமமானவர்கள் ஆவர்;பகுத்தறிவு = விவேகம்)

 

மார்ச் 26 திங்கள் கிழமை

வலவைகளல்லாதார் காலாறு சென்று

கலவைகளுண்டு கழிப்பர் (பேய்த்தனம் இல்லாத நல்லோர் தூர இடங்களுக்குச் சென்று பல விதமான உணவு வகைகளை உண்டு மகிழ்வர்; வலவை= இடாகினி, காளி ஆகியோருக்கு ஊழியம் செய்யும் பேய்கள்)

 

மார்ச் 27 செவ்வாய்க் கிழமை

செல்வம் பெரிதுடையாராயினுங் கீழ்களை

நள்ளா ரறிவுடையார் ( மிகுந்த செல்வம் படைத்திருந்தாலும் கீழ் மக்களாக இருந்தால், அவர்களை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்; கீழ்கள்= குணத்தினால் கீழானவர்கள்)

மார்ச் 28 புதன் கிழமை

 

கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா

நோலா வுடம்பிற் கறிவு ( கோல் கொண்டு அடித்துச் சொன்னாலும்  புண்ணியம் செய்யாத உடம்புக்கு ஞானம் புக மாட்டாது/ வராது)

மார்ச் 29 வியாழக்கிழமை

 

கடாஅயினுஞ் சான்றவர் சொல்லார் பொருண்மேற்

படாஅ விடுபாகறிந்து (கேட்டால் கூட, எங்கு தன் சொல் எடுபடாதோ, அங்கே அறிஞர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்; மூடர்கள் சபையில் பேசார்)

 

மார்ச் 30 வெள்ளிக்கிழமை

 

நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே

பூவின் கிழத்தி புலந்து (சரஸ்வதி தேவி உறைவதால், அவ்விடத்தில் பிணங்கி, லெட்சுமி தேவி சேர மாட்டாள்; பணமுள்ள இடத்தில் அறிவு இராது)

மார்ச் 31 சனிக்கிழமை

 

உணர வுணரு முணர்வுடை யாரைப்

புணரப் புணருமா மின்பம்

(நம்மை நன்கு அறிந்த, நம் குணத்தைப் பாராட்டும் விவேகம் உள்ளவர்களை சந்தித்து அளாவும்போது இன்பம் ஏற்படும்)

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

–SUBHAM–

 

ஜோதிடர் மோசடியும் 114 மோசடி முறைகளும் (Post No.4784)

Date: 25 FEBRUARY 2018

Time uploaded in London- 8-16 am

Written by London swaminathan

Post No. 4784

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

பிரிட்டிஷ் லைப்ரரி (இலண்டன்) யில் ஒரு பழைய நூலைக் கண்டேன். 1907-ஆம் ஆண்டில் தூசி. இராஜகோபால பூபதி என்பவர், 115 விதமான மோசடிகளைப் பற்றி எழுதியுள்ளார். எல்லாமே சுவையான விஷயங்களே. இது சென்னையிலிருந்து வெளியான நூல். இதில் முதல் மோசடி ஜோதிட மோசடி ஆகும்; ஜோதிடர்கள் எப்படி, வாடிக்கையாளரிடம் இருந்தே விஷயத்தைக் கறந்து ஏமாற்றுகிறார்கள் என்பதை இதில் காணலாம்.

 

புஸ்தகத்தின் பெயர் மதிமோச விளக்கம்

இந்த நூல் தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவும்;  ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஒவ்வொரு தொழில் செய்வோரும் பயன்படுத்திய சொற்களும், அவர்கள் பேசும் முறையும் அப்படியே உள்ளது. இப்பொழுது தமிழ் கற்போருக்கு அது எவ்வளவு புரியும் என்பது கேள்விக்குறியே. இதோ ஜோதிடர்கள் ஏமாற்றும் முறை:

 

 

 

 

 

 

 

 

 

 

–SUBHAM–

வேலைக்காரர் படும் பாடு! (Post No.4783)

Date: 25 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 7-19 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4783

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வேலைக்காரர் படும் பாடு!

 

ச.நாகராஜன்

 

உலகியல் வாழ்க்கையில் அனைவரது நிலையையும் மிகச் சரியாகக் கணித்து அனுதாபப்படுபவர் கவிஞர் பர்த்ருஹரியைப் போல இன்னொருவரைப் பார்ப்பது துர்லபம்.

வேலைக்காரர்களின் மனோபாவத்தையும் அவர்கள் படும் பாட்டையும் நீதி சதகத்தில் விளக்குகிறார். (பாடல் 47)

 

பாடலைப் பார்ப்போம்:

 

மௌநாத் முக:ப்ரவசந

படு வாசகோ ஜல்பகோவா

த்ருஷ்ட: பார்ச்வே பவதி ச

வஸந் தூரதோப்ய ப்ர கல்ப: |

க்ஷாந்த்யா பீருர்யதி

ந ஸஹ்தே ப்ராயசோ

நாபி ஜாத: ஸேவாதர்ம:

பரம கஹந; யோகிநாமப்ய கம்ய: ||

 

வேலக்காரன் (மௌநாத்) சற்றுத் தள்ளி ப்வ்யமாக இருந்தால் ஊமை எனப்படுகிறான்,

நன்றாகப் பேசினாலோ (ப்ரவசன ப்டு) அதிக ப்ரசங்கி எனப்படுகிறான்.

யஜமானன் பக்கத்தில் நின்றாலோ (பார்ச்வே பவதி) துணிச்சல்காரன் எனப்படுகிறான்.

தூரத்தில் (தூரத:) இருந்தாலோ தைரியமற்றவனாக நினைக்கப்படுகிறான்.

வசவு, திட்டுகளைப் பொறுத்தால் (க்ஷாந்த்யா) பயந்தாங்கொள்ளி எனப்படுகிறான்.

வார்த்தைகளைப் பொறுக்காவிட்டாலோ (யதி ந ஸஹதே) நல்ல குலத்தில் பிறந்தவன் இல்லை என்கிறார்கள்.

பிறரிடம்  ஊழியம் செய்யும் காரியமானது (ஸேவா தர்மம்) பெரும்பாலும் மிகவும் கடினமானது. (பரம கஹன)

மூன்று காலமறிந்த யோகிகளுக்கும் கூட புலப்படாதது. ( யோகிநாமபி அகம்ய)

 

ஒரு நல்ல வேலைக்காரன் எப்படி ஊழியம் செய்தாலும் விமரிசிக்கப்படுகிறான்.

 

அவனால் என்ன தான் செய்ய முடியும்?

 

ஆகவே தான் வாழ்நாள் முழுவதும் ஊழி யம் செய்வதில் மாட்டிக் கொண்ட ஒருவன் இருந்தும் இறந்தவனே என்று பெரியோர் சொல்கின்றனர்.

 

(இருந்தும் இறந்தவர் யார் யார் கட்டுரையைப் பார்க்கவும்)

 

நன்றி: எஸ்.கல்யாணசுந்தரம் 11-2-1949, கும்பகோணம்

பிரசுரகர்த்தா & மானேஜர்

ஸ்ரீ ஜனார்த்தனா பிரிண்டிங் பிரஸ்

***

POETS’ CLOSE OBSERVATION ON BEES! (Post No.4782)

Time uploaded in London- 19-48

Written by London swaminathan

Post No. 4782

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Tamil and Sanskrit poets are keen observers of nature. We have already seen how Dattatreya and others observed the nature and learnt from them. Crows and snakes are used by the poets and saints to teach us lot of things. Two poets warn us not to accumulate money so that we would not lose like the bees. William Wordsworth said, ‘Let Nature be your Teacher’; Hindu poets have been following it for over two thousand years. Here are two verses about the bees:

Chanakya says,

The pious people should always give food and money in charity, never should they accumulate them. The glory of the illustrious Karna, Bali and Vikramditya persists unabated even now. Look, the honey bees rub their hands and feet because of the despondency of losing honey that they had gathered for long.

–Chanakya Niti 11-18

 

deyam bhojyadhanam sadaa sukruthirbinaa sanchitavyam sadaa

sriikarnasya nhaleerasca vikramateradhyaapi kiirtihi sthithaa

 

asmaakammadhu daanabogarahitam nashtam chiraat sanchitam

wirvaanaaditi paanipaathayugale garshantyaho makshikaahaa

xxx

A Tamil poet in Naladiyar says………………

Naladiyaar is a Tamil didactic book composed by Jain saints in Tamil. The poet Padumanaar, who compiled 400 verses, says,

“Those who vexing their own bodies by stinting in food and clothing, perform not acts of charity that ever remain undestroyed, but avariciously hoard up a great wealth, will lose it all. O Lord of the mountains, which touch the sky, the bees that are driven away from the honey they have collected bear testimony to this.

 

—-Subham–

 

 

 

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

 

Date: 24 FEBRUARY 2018

Time uploaded in London- 18-09

Written by London swaminathan

Post No. 4781

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

செல்வத்தைச் சேர்த்து வைத்து, தானும் அனுபவிக்காமல், பிறர்க்கும் கொடுக்காமல் இருப்பவர்களை தேனீக்களுக்கு ஒப்பிடுவது புலவர்கள் கையாளும் உவமை. நாலடியார் நூலைத் தொகுத்த பதுமனார் நவில்வதும், நீதி சாஸ்திரம் பாடிய சாணக்கியன் உரைப்பதும் இஃதே.

 

ஆனால் சாணக்கியன், எல்லோருக்கும் ஒரு படி மேலே சென்று தேனீ க்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்ததால், இன்னும் அழகாகச் சொல்கிறான்:

தேயம்  போஜ்யதனம் ஸதா ஸுக்ருதிர்பினா ஸஞ்சிதவ்யம் ஸதா

ஸ்ரீகர்ணஸ்ய பலேஸ்ச விக்ரமபதேரத்யாபி கீர்த்திஹி ஸ்திதா

அஸ்மாகம் மது தான போக ரஹிதம் நஷ்டம் சிராத் ஸஞ்சிதம்

நிர்வாணாதிதி பாணிபாதயுகலே கர்ஷந்த்யஹோ மக்ஷிகாஹா

-சாணக்கிய நீதி 11-18

 

பொருள்

தெய்வபக்தி உள்ள மனிதர்கள் உணவையும் பணத்தையும் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்; அவைகளைச் சேர்த்து வைக்கக் கூடாது; கர்ணன், பலி, விக்ரமாதித்தன் ஆகியோரின் புகழ் இன்றும் நீடித்து நிற்கிறது; தேனீக்களைப் பாருங்கள்; எப்போது பார்த்தாலும் கைகளையும் கால்களையும் உரசிக் கொண்டும் உதறிக்கொண்டும் கதறுகின்றன. ஏன் தெரியமா? அவை சேகரித்த தேனை மற்றவர்கள் கொண்டு போவதால்தான்!

தேனீக்களை உற்று நோக்கினால் அவை எப்போதும் கால், கைகளை தேய்த்துக் கொண்டு இருப்பதைக் காணலாம்; இயற்கையில் இதற்கு வேறு காரணம் உண்டு; ஆனால் புலவர்கள் தன் கருத்தைப் புகுத்த இப்படிச் செய்வதைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.

நல்ல உவமை!

 

 

நாலடியார் பாடிய பதுமனார்

உடாஅது முண்ணாதுந்தம் முடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமுஞ் செய்யார் – கொடாஅது

வத்தீட்டி நாரிழப்பர் வான்றோய் மலைநாட

உய்த்தீட்டுந் தேனீக்கரி

 

பொருள்:

தேனீயானது பல பூக்களில் இருந்து கொண்டு வந்து தேனைச் சேகரித்து வைக்க, அதை வேறு யாரோ எடுத்துக் கொண்டு போவது போல, தனக்கும் பிறர்க்கும் பயன்படாமல் சேர்த்து வைப்போரின் செல்வத்தை கள்ளர் முதலானோர் கொண்டு செல்லுவர்.

 

 

வான் தோய் மலை நாட= ஆகாயத்தை அளாவும் உயர்ந்த மலைகளை உடைய நாட்டு மன்னவனே!

உடாஅதும்= தான் உடுக்காமலும்

உண்ணாது = தான் சாப்பிடாமலும்

தம் உடம்பு செற்றும்= தமது உடலை வாட வைத்தும்

கெடாத நல்லறமும் செய்யார் = அழியாத நல்ல தருமங்களையும்  செய்யாராகி

கொடாது = வறியவர்களுக்குக் கொடுக்காமல்

ஈட்டினார்= சேர்த்து வைத்தவர்கள்

இழப்பர் =அந்த செல்வத்தை இழந்து விடுவர்

உய்த்து= பல மலர்களில் இருந்து கொண்டு வந்து

ஈட்டும் = சேர்த்து வைக்கிற

தேன் ஈ = தேனீயானது

கரி = இதற்குச் சான்று.

 


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

–Subham —

Rare Letters of Netaji, நேதாஜியின் அரிய கடிதங்கள்- Post No.4780

நேதாஜியின் அரிய கடிதங்கள் ( IN ENGLISH AND TAMIL)- Post No.4780

 

Date: 24 FEBRUARY 2018

Time uploaded in London- 7-38 am

Compiled by London swaminathan

Post No. 4780

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் (1897- 1945??) அரிய கடிதங்கள் எட்டும், அவர் கைப்பட எழுதிய நாட்குறிப்புகளும் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் பிரம்மச்சாரி கைலாசம் என்பவரால் வெளியிடப்பட்டது. இந்தக் கடிதங்களை பிரம்மச்சாரி கைலாசத்துக்கு நேதாஜி எழுதினார். அடித்தல், திருத்தல் இல்லாத அவரது எழுத்துகளும், போர் முனையில் கூடத் தெளிவான அவரது சிந்தனையும் கடிதங்களின் மதிப்பை உயர்த்துகின்றன. ஒவ்வொரு முறையும் சுவாமிஜிக்கு அவர் பணிவான வணக்கங்களைத் தெரிவிப்பது அவரது பணிவைக் காட்டுகிறது. மணிப்பூரில் மழை காரணமாக தோல்வி ஏற்பட்டபோதும் அவரது வெற்றி வேட்கையும் நம்பிக்கையும் கொஞ்சமும் குறையவில்லை என்பதை இந்தப் புத்தகத்தில் உள்ள எட்டுக் கடிதங்களும் காட்டுகின்றன. பிரிட்டிஷ் லைப்ரரியில் (லண்டன்) இந்த அரிய, சிறிய நூல் உள்ளது. காப்பிரைட் விதிகள் காரணமாக முழுப் புத்தகத்தையும் வெளியிடவில்லை.

 

 

 

 

 

 

 

Jai Hind

 

–Subahm–

 

பாரதி போற்றி ஆயிரம் – 58 (Post No.4779)

Date: 24 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-35 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4779

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 58

  பாடல்கள் 403 முதல் 411

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

37 முதல் 45 வரை உள்ள பாடல்கள்

செந்தமிழ் நாடெனும் போதினிலே – எனும்

சந்தம்நி றைந்தஉன் பாவினிலே

முந்தை சிறப்புகள் யாவையுமே – இங்குத்

தந்துவிட் டாயந்த நாளிலினிலே

 ஆயிர மாயிரம் பாடல்களில் – தரும்

ஆயிரம் கால வரலாற்றை

நேயமு டனொரு பாடலிலே – எந்த

நாளிலும் எங்குமே பாடவைத்தாய்

வள்ளுவ னின்குரல் உலகினுக்கே – எனும்

வாக்குஇந் நாளினில் பலித்ததுவே

தெள்ளிய மொழிகள் அத்தனையும் – அதைத்

தேர்ந்தெடுத் தேதம தாக்கினவே

கம்பனை எத்தனைக் கோணங்களில் – நீயும்

கண்டுகண் டுக்கவி பாடிவைத்தாய்

தம்முன்ன வர்நலம் போற்றுவதே – நல்ல

தமிழ்கவி பண்பென உணரவைத்தாய்

 

தமிழ்மொழி யின்வளம் கம்பனிடம் – உயர்

தமிழ்நாட் டின்வளம் இளங்கோவில்

தமிழ்ப்பண் பாடெனல் வள்ளுவமே – என

தான்தொகுத் தேயவரைப் பாடிவைத்தாய்

 

எண்ணற்ற புலவர்கள் வந்தாலும் – இனி

எவ்விதம் பாடல்கள் தந்தாலும்

திண்ணமு டன்இந்த ஒருபாடலே – எந்தன்

திறமுரைக்க என்றும் போதுமப்பா

 

பிறநாட்டு நல்லறிஞர் நூல்கள் – பாரதி

   பேணியுன் விருப்பம்போல் பெயர்த்திங்கு தந்தார்

திறமான நம்புலமை தன்னை – பிறர்

   தேடிவந்தே போற்றி ஏற்றிடச் செய்தார்

இருதலைக் கொள்ளிநிலை மாற்றி – நீ

    இயம்பிய வண்ணமே நயமுடன் இணைத்தார்

பெருகிடும் விஞ்ஞான வளர்ச்சி – காண

   மறுகணம் கலைச்சொற்கள் படைத்ததைக் கொணர்ந்தார்

 

மெல்லத் தமிழினி சாகும் – என்று

   மனம்நொந்த மைந்தா பாரதி கேளாய்

வெல்லற் கரியதிந்தத் தமிழே – என

   வேற்றுமொழி யார்புறம் போயினர் இந்நாள்

சொல்லில் அடங்காமுன் னேற்றம் – நீ

   சொல்லிய படியிங்கு தோன்றியது காண்பாய்

நல்லதோர் நிலையிங்கு பெற்றேன் – இந்த

   நானிலம் உள்ளவரை நானிங்கு வாழ்வேன்

 

வாழிய பாரதி வாழிய பாரதி

வாழிய வாழியவே!

ஆழியி னும்மிக  ஆழம்மி குந்தவுன்

அருங்கவி வாழியவே!

ஏழிசை யின்சுவை  ஈடிலை இதற்கென

இசைபெற வாழியவே!

ஊழித னில்புவி மூழ்கிய போதிலும்

உன்புகழ் வாழியவே!

 

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி என்ற முதல் அத்தியாயம் முற்றும்

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.

சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.

பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

31 Quotations from the Rig Veda (Post No.4778)

Date: 23 FEBRUARY 2018

Time uploaded in London- 10-12 am

Written by London swaminathan

Post No. 4778

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

March 2018 Good Thoughts Calendar

 

Written by London Swaminathan 

 

Date: 23 February 2018

 

Time uploaded in London –  10-09 am

 

Post No. 4778

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

TEMPLE PICTURES IN THIS ARTICLE ARE TAKEN FROM LALGUDI VEDA’S POSTS.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

FESTVAL DAYS:  March 1-Holi and Masi Makam; 14- Karadaiyan Nonbu; 18-Ugadi/ New Year, also Vasantha Navaratri begins;22- Vasantha Panchami;  25- Sri Rama Navami and Shirdi Sai Baba Birth Day, Vasantha Navaratri finishes; 29- Mahavir Jayanthi; 30- Panguni Uththiram, Good Friday

 

EKADASI/ HINDU FASTING DAYS- 13 and 27

 

AMAVASYAI/ NEW MOON- 17

 

FULL MOON DAY/ PURNIMA- 1 and 31
Auspicious Days in MARCH:- 4, 5, 26, 30

 

31 beautiful quotations from the Rig Veda are in this month’s calendar. In the past three years, hundreds of quotations are given in both Tamil and English monthly calendars in my blog. Please use them

 

March 1 Thursday

Old Time Seers

Gone are the mortals who in the former ages

Beheld the flushing of the early morning

We living men now look upon her shining

Those will be born who shall hereafter see her.

RV 1-113-11

xxxx

 

March 2 Friday

Order

Firm seated are the foundations of Rita

In its lovely form are many splendid beauties

RV 4-23-9

xxx

 

March 3 Saturday

Speech

Speech hath been measured out in four divisions, the brahmans who have understanding know them.

Three kept in close concealment cause no motion; of speech, men speak only the fourth division

1-164- 45

xxx

 

March 4 Sunday

One God with Different Names

They call him Indra, Mitra, Varuna and Agni and he is heavenly noble winged Garutman,

To what is One, sages give many a title; they call it Agni, Yama, Matarisvan

1-164-46

xxx

 

March 5 Monday

Let us Unite

One and the same be your resolve, and be your minds of one accord.

United be the thoughts of all that all may happily agree

10-190-4

xxx

 

March 6 Tuesday

Achievement

The hare has swallowed the opposing razor, I have shattered with the clod the far- off mountain. The mighty ‘will’ I shall bend before the little, the calf shall grow in strength and consume the bullock.-RV 10-28(9) (power to alter the course of nature)

xxx

March 7 Wednesday

Alertness

You cherish your might like pools of water deep and full; like milch cows going well protected to the meadow, and like water brooks which reach the lake. RV 3-46(4)

xxxx

March 8 Thursday

Variation

The hands are both alike, their labour differs. The yield of sister milch- kine is unequal; Twins even differ in their strength and vigour and two, even kinsmen, differ in their bounty -10-117-9

 

xxx

 

March 9 Friday

Attraction

The horse will draw an easy car, gay hosts lure laughter and jest, the male longs for his mate’s approach and the frog is eager for the flood. RV9-113(4)

xxx

March 10 Saturday

Benevolence

He clothes all which is nude, attends to all the sick, through Him the sightless behold and cripples move about.-RV 8-79 (2)

xxx

 

 

March 11 Sunday

Company

One who eats with no partner (namely, alone) is all guilty-

RV 10-117

xxx

March 12 Monday

Comparison

Their unfathomed splendour is like the glory of the sun and their unknown greatness is like the sea. RV 7-33 (8)

xxx

March 13 Tuesday

Dice

Play not with dice, cultivate your corn land, enjoy the grain and deem that wealth sufficient. RV10-34 (13)

Others caress the wife of one whose riches the dice has coveted– RV 10-28 (4)

xxx

March 14 Wednesday

Divinity

O beauteous one, we have established our perpetual brotherhood with harmony in mother’s womb- RV 8-13 (8)

xxx

March 15 Thursday

Sorrow

As drivers of chariots avoid bad roads, let sorrows pass us by-

8-47-5

xxx

March 16 Friday

Guidance

Like two winds aging not, confluent rivers, come quick vision, like two eyes before us.  Come like two hands most helpful to the limbs, and guide us, like two feet to what is precious.- RV 2-39

xxx

March 17 Saturday

Holiness

He who is being called by us in prayer is resplendent in holiness- RV 8-44(21)

xxx

March 18 Sunday

Inaction

Surely there will come future times when brothers and sisters will perform acts unworthy of kinsfolk. -RV 10-10

xxx

March 19 Monday

Love

As wood-pine clings round a tree, another will cling to you, girt with a blessed alliance.-RV 10-13

xxxx

March 20 Tuesday

Offering

The milk is blended with the honey of the bee; come quickly hither and drink- RV 8-8 (4)

Be pleased, Song Lover, with this song; it flows abundant like the sea- RV 3-12 (5)

xxx

 

March 21 Wednesday

One

One who is all is lord of what is fixed and moving, that walk, that flies, that multi form creation – RV 3-54 (8)

xxx

March 22 Thursday

Plenty

With plenty for his true ally, the active man will gain the spoil – RV 7-42 (20)

xxx

 

March 23 Friday

Possibility

What the teeth have encompassed ,  the tongue eats –

RV 10-68 (6)

xxx

March 24 Saturday

Prayer

Show thy mercy on us once, O Gracious Lord, be like father to us- RV 10-33 (3)

xxx

March 25 Sunday

Let not the wicked rule over us – RV 10-25 (7)

xxxx

 

March 26 Monday

May we not offend against thine holy statutes, as a kind friend, O God, best of all be gracious- RV 8-113

xxx

March 27 Tuesday

God, place me in the ever-lasting, undecaying sphere wherein heaven’s  light is set and  eternal light shines- RV 9

xxxx

 

March 28 Wednesday

Relief

Raiment (clothing) is the body, food is life and healing ointment gives life.-R V 8-24

xxx

March 29 Thursday

Request

Make me immortal in that realm, where happiness transports, where joys and facilities combine and longing wishes are fulfilled.-9-113-10

xxx

March 30 Friday

Search

The Brahman seeks the worshipper, the wright (builder) seeks the cracked and the leech the maimed.

9-cxii-112

xxxx

 

March 31 Saturday

Trousseau (Bride’s clothes)

Thought was the pillow of her couch, sight, the unguent for her eyes and earth and heaven, her treasury -RV 10-85-7

 

—SUBHAM—-

 

நல்ல பிராஹ்மணன் யார்? சாணக்கியன் இலக்கணம் (Post No.4777)

Date: 23 FEBRUARY 2018

Time uploaded in London- 7-59 am

Written by London swaminathan

Post No. 4777

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பிராஹ்மணர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியன் என்னும் மாமேதை செப்பிவிட்டான். அவன் பிராஹ்மணர்களுக்கு வகுக்கும் இலக்கணத்தைப் பார்க்கையில் இன்று வெகு சிலரே அந்த இலக்கண வரையறைக்குள் வருவார்கள். அவன் மௌரியப் பேர் அரசை ஸ்தாபித்த பின்னரும் குடிசையில் வாழ்ந்ததால் அவன் இவ்வளவு துணிச்சலாகப் பேச முடிந்தது; குணம் என்னும் குன்றேறி நின்றவன் அவன். அந்தணர் என்போர் அறவோர் என்ற சொற்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தவன். அவனுடைய ஸ்லோகங்களின் வாயிலாக நாம் மிலேச்சன், சண்டாளன் போன்ற சொற்களின் சரியான கணபரிமாணத்தை அறிய முடிகிறது. வெளி நாட்டினர் இந்தச் சொற்களுக்கு எல்லாம் விஷ(ம) அர்த்தம் கற்பித்து இருந்தனர்.

xxxx

ஒரே வேளை  மட்டுமே உணவு!

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் சாப்பிட்டுத் திருப்தி அடைபவனும், ஆறு தொழில்களை மட்டும் செய்பவனும், மனைவியைக் குழந்தை பெறுவதற்காக மட்டும் அனுபவிப்பனும் ஆகிய பிராஹ்மணன் ‘த்விஜன்’ எனப்படுவான்.

 

த்விஜன்= இரு பிறப்பாளன்

அறுதொழிலோர்= வேட்டல், வேட்பித்தல், கற்றல் , கற்பித்தல், அறக்கொடை வழங்கல், அறக்கொடை பெறுதல் (திருக்குறள் 560)

 

காளிதாசன் ரகு வம்சத்தில் சொல்கிறான்: சூரிய குலத்து அரசர்கள், வம்சம் தழைக்க மட்டுமே மனைவியுடன் இருப்பார்களாம். அதாவது அவர்களை ‘செக்ஸ்’ sex பொருட்களாகப் பயன்படுத்த மாட்டார்களாம்; அதையே இங்கே சாணக்கியனும் மொழிவது குறிப்பிடத் தக்கது.

 

ஏக ஆஹாரேண ஸந்துஷ்டஹ ஷட் கர்ம நிரதஹ ஸதா

ருது காலாபிகாமி ச ஸ விப்ரோ த்விஜ உச்யதே

சாணக்கிய நீதி 11-12

xxxx

 

ரிஷி, முனிவர் யார்?

 

எந்த பிராஹ்மணன் காட்டில் வசித்துக்கொண்டு, தினமும், நிலத்தை உழாமல்- சாகுபடி செய்யாமல் —  வளரும் பழங்களையும், கிழங்குகளையும் உபயோகித்து சிரார்தம் செய்கிறானோ அவன் ரிஷி என அழைக்கப்படுவான்.

அக்ருஷ்ட பல மூலேன  வனவாசரதஹ ஸதா

குருதே அஹரஹஹ ஸ்ராத்தம்ருஷிர் விப்ரஹ ஸ உச்யதே

சாணக்கிய நீதி 11-11

 

இங்கே சிராத்த என்பது ஐந்து வேள்விகளைக் குறிக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

ஐம்புலத்தார் ஓம்பல் தலை (குறள் 43)

 

என்று வள்ளுவன் சொல்லுவதும் இதையேதான்.

 

xxx

நாய், பூனை வளர்ப்போன், விற்போன்

 

உலக விஷயங்களில் ஈடுபடுவோனும், நாய்,பூனை முதலிய மிருகங்களை வளர்ப்போனும், வியாபாரத்திலும், வேளாண்மையிலும் ஈடுபடுவோனும் ஆகிய பிராஹ்மணன், வைஸ்யன் எனப்படுவான். அதாவது பிராஹ்மண ரூபத்தில் உலவும் வைஸ்யன்.

 

லௌகிகே கர்மணி ரதஹ பசூனாம் பரிபாலகஹ

வாணிஜ்ய க்ருஷி கர்தா யஹ ஸ விப்ரோ வைஸ்ய உச்யதே

சாணக்கிய நீதி 11-13

 

xxxx

கள், மாமிஸம் விற்போர்

 

அரக்கு, எண்ணை, சாயப் பொருட்கள் (அவுரி), குங்குமப் பூ, தேன், கள், மாமிஸம் விற்போர் சூத்திரர்கள் என்று கருதப்படுவர்

லாக்ஷாதி தைல நீலானாம் குசும்ப மது ஸர்பிஷாம்

விக்ரேதா மத்ய மாம்ஸானாம் ஸ விப்ர சூத்ர உச்யதே

சாணக்கிய நீதி 11-14

xxx

 

  

ருத்ராக்ஷப் பூனை

மற்றவர்களின் வேலைகளில் இடையூறு உண்டாக்கும் , சுய நலமும், அகந்தையும் பொறாமையும், கொடூரமும் உள்ள பிராஹ்மணன் — பூனை எனப்படுவான்

(இது பஞ்ச தந்திரக் கதையிலும் மாமல்லபுர சிற்பத்திலும் வரும் ருத்ராக்ஷப் பூனை கதையாகும்; ருத்ராக்ஷப் பூனை பற்றிய எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

பரகார்ய விஹந்தா ச தாம்பிகஹ ஸ்வார்தசாதகஹ

ச்சலீ த்வேஷீ ம்ருதுஹு க்ரூரோ விப்ரோ மார்ஜார உச்யதே

 

சாணக்கிய நீதி 11-15

xxx

 

மிலேச்சன்

நீர்த்தேக்கத்தையும், குளத்தையும், கண்மாய்களையும், தோட்டங்களையும், கோவில்களையும் அழிக்கும் பிராஹ்மணன் மிலேச்சன் (காட்டுமிராண்டி, பர தேஸி, வெளி நாட்டுக்காரன்) எனக் கருதப்படுவான்.

 

மிலேச்சர்கள் என்ற சொல் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் பயிலப்படுகிறது (முல்லைப் பாட்டு, வரி 66); பாரதியாரும், இந்து மத விரோத முஸ்லீம்களை மிலேச்சர் என்று அழைக்கிறார்; சிலப்பதிகாரத்திலும் இத்தாலி நாட்டவர்கள் (ரோம் நகர ஆட்சி) யவனர்கள்– மிலேச்சர் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இந்தியாவைப் பிரித்தாள வந்த வெளிநாட்டினர், இது திராவிடர்களைக் குறிக்கும் என்று எழுதி வைத்தனர்; அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதாவது இந்து தர்ம விரோதிகளும், கொள்ளையர்களும் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்டனர். சாணக்கியனும் அணைகளை உடைப்பவர்களையும் புறச்சூழலெதிரிகளையும் கோவில்களை உடைப்போரையும் மிலேச்சர்கள் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் நிலங்களை, கோவில் நந்த வனங்களை அபகரித்தோரையும், சுயநலத்துக்காக அழித்தோரையும் சாணக்கியன் இந்தக் கடுமையான சொல்லைப் பிரயோகித்து சாடுகிறான்.

 

வாபீ கூப தடாகானாம் ஆராமஸுரவேஷ்மனாம்

உச்சேதனே நிராசங்கஹ ஸ விப்ரோ ம்லேச்ச உச்யதே

சாணக்கிய நீதி 11-16

 

xxxx

சண்டாளன்

கோவிலுக்கும் குருவுக்கும் கொடுக்கப்பட்ட பணத்தைத் திருடும், மற்றவர்களின் மனைவியரை அனுபவிக்கும், இது போன்ற அடிமட்ட மக்களுடன் கொஞ்சிக் குலாவும் பிராஹ்மணர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்படுவர்.

 

ராவணன் 50 சதவிகித பிராஹ்மணன்; அவன் மாற்றான் மனைவியைத் தொட்டதால் அழிந்தான். வெளி நாட்டினர் நான்கு ஜாதிகளுக்கு வெளியே இருந்தாரும் திராவிடர்களும் சண்டாளர்கள் என்று சொல்லி மதப் பிரசாரம் செய்தனர். ஆனால் நான்கு ஜாதிகளுக்குப் புறம்பானவர்கள் சண்டாளர்கள் அல்ல; திருடர்களும், பெண் பித்தர்களும், கீழ் மட்டத்தில் பன்றிகள் போல உழலுவோரும் மட்டுமே– பிராஹ்மணர்களாக இருந்தாலும்– அவர்கள் சண்டாளர்கள் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னரே பகர்ந்தான் சாணக்கியன்.

 

இது வெளிநாட்டுக்கரகளின் சதியை அம்பலப்படுத்துகிறது

 

தேவ த்ரவ்யம் குரு த்ரவ்யம் பர தாராபிமர்ஷணம்

நிர்வாஹக ஸர்வபூதேஷு விப்ர சாண்டால/ள உச்யதே

 

சாணக்கிய நீதி 11-17


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

xxx SUBHAMxxxx

 

 

 

 

 

விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள் (Post No.4776)

Date: 23 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5- 44am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4776

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

23-2-2018 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு கடைசிக்) கட்டுரை

2018 விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள்!

Robots in 2018 Winter Olympics

.நாகராஜன்

“மற்ற எல்லா போட்டிகளும் தனிப்பட்ட நபர்களின் சாதனை. ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுக்களோவெனில் அனைவருக்கும் உரியவை”. – ஸ்காட் ஹாமில்டன்

2018 விண்டர் ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவில் பிப்ரவரி 8ஆம் தேதி ஆரம்பித்து 25ஆம் தேதி முடிவடைகிறது. இந்தப் போட்டிகள் தென் கொரியாவின் தலைநகரான சியோலுக்குக் கிழக்கே 80 மைல் தொலைவில் உள்ள பியாங்சாங் என்னும் இடத்தில் நடைபெறுகிறது. 35000 பேர்கள் வசதியாகப் பார்க்கக் கூடிய ஸ்டேடியம் இங்கு உள்ளது. அத்துடன் எந்தப் போட்டி நடக்கும் இடமும் 30 நிமிடத்தில் டிரைவ் செய்து போகும் அளவுள்ள தூரத்திலேயே உள்ளது. 3894 விளையாட்டு வீரர்கள் தங்கும் வீடுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 2900  பேர் தங்க வசதியாக அருகிலேயே இன்னொரு தங்குமிடமும் உருவாக்கப்பட்டுள்ளது. 1924ஆம் ஆண்டு பிரான்ஸில் தான் முதல் விண்டர் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டி வருகின்றன.இந்த இடைவிடா போட்டியில் இப்போது விண்டர் ஒலிம்பிக் நடத்துவதில் வெற்றி பெற்றுள்ளது!

தென்கொரியாவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் 1988இல் நடந்தது. இப்போது இரண்டாவது முறையாக ஒலிம்பிக் இங்கு நடைபெறுகிறது! 15 வகை விளையாட்டுகளில் 102 நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தப் போட்டிகளுக்காக 259 செட் மெடல்கள் விசேஷமாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்த மெடல்கள் தாம் கனமானவை. தங்க மெடல் 1.29 பவுண்ட்; வெள்ளி மெடல் 1.28 பவுண்ட்; வெங்கல மெடல் 1.09 பவுண்ட்.

மெடலின்  முன் பக்கம் ஒலிம்பிக்கின் வளையங்கள் கொண்ட சின்னம் இருக்கும். பின் பக்கம் குறிப்பிட்ட விளையாட்டு, ஒவ்வொரு நிகழ்வின் பெயர் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும்!

சென்ற பத்தாண்டுகளில் நடந்த ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிக்கும் ஆகும் செலவு 890 கோடி டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. அதிகமாக ஆன செலவு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தான்! 1500 கோடி டாலர்கள் செலவாயிற்று! தென்கொரியாவில் நடக்கும் இப்போதைய ஒலிம்க் போட்டிகளுக்கு ஆகும் உத்தேச செலவு 1000 கோடி டாலர்கள்!

ஆனால் வருமானமும் உண்டு. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமைகள் உள்ளிட்டவை வருமானத்திற்கான வழிகள்!

தென்கொரியாவில் நடைபெறும் விண்டர் ஒலிம்பிக்கின் முக்கிய கதாநாயகன் ரொபாட் தான்!

 

ஏற்கனவே தென்கொரியாவில் விமானநிலையத்தைச் சுத்தம் செய்யும் பணியை ரொபாட்டுகள் தான் மேற்கொண்டுள்ளன! பல இடங்களில் அவைகளே ஆங்கிலத்தைப் பயிற்றுவிக்கின்றன. 2016இல் தென் கொரியாவில் இருந்த ரொபாட்டுகளின் எண்ணிக்கை 41000! இப்போதோ இன்னும் அதிகம்!

ஒலிம்பிக் விளையாட்டில் 85 ரொபாட்டுகள் தம் திறமைகளைக் காண்பிக்கும். ஒலிம்பிக் தொப்பிகளை அணிந்து  47 அங்குல ரொபாட்டான ஹ்யூபோ டிசம்பரில் ஒரு காரை ஓட்டிச் சென்று காண்பித்தது.  ஒலிம்பிக் டார்ச்சைக் கொண்டு சென்று ஒரு சுவரை ஒரு குத்து குத்தித் தனது வலிமையை அது காண்பித்தது! இதை உருவாக்கியவர் பேராசிரியர் ஓ ஜுன் ஹோ. அவரிடம் இந்த டார்ச்சை ரொபாட் கொடுத்தது. இது இரும்பு மனிதன் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட அழிக்க முடியாத ரொபாட் என்பது குறிப்பிடத்தகுந்தது!

ஸ்கீயிங் போட்டியில் ரொபாட்டுகளும் கலந்து கொள்ளும் என்பது சுவையான் ஒரு செய்தி.

ரொபாட்டுகள் கொரிய மொழியில் பேசுவதோடு மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடும் திறன் உடையவை. கொரிய மொழி, சீனம், ஆங்கிலம், ஜப்பானிய மொழி ஆகியவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யக் கூடியவை!

சூஹோரங் என்ற வெள்ளைப்புலியையே தென்கொரியா இந்த ஒலிம்பிக்கில் தனது அடையாளச் சின்னமாக அமைத்துள்ளது. சூஹோ என்றால் காப்பாற்றுதல் என்று பொருள்.ரங் என்றால் வெள்ளைப்புலி.

வெள்ளைப்புலி தான் தென்கொரியர்களுக்குப் பிடித்தமான பாதுகாக்கும் மிருகம்!.  ரொபாட்டுகள் வெள்ளைப்புலி முகவணியைக் கொண்டு ஆடும், பேசும்.

சுத்தப்படுத்துதல் என்பது ரொபாட்டுகளுக்குக் கைவந்த கலை. பிரஷை கையில் எடுத்துக் கொண்டால் எந்த இடமும் சுத்தம் தான்! ஒரு  மணி நேரத்தில் 900 சதுரமீட்டர் பரப்பைச் சுத்தம் செய்ய வல்லவை இவை! குப்பைகளை எடுக்கும்; குப்பைத் தொட்டியில் போடும் – யார் மீதும் மோதாமல்!

பெயிண்டிங் ரொபாட்டுகள் கலைவண்ணம் காணும் ரொபாட்டுகள். தேவையான டிசைனைச் சொன்னால் வரைந்து விடும். ஆயிரம் வண்ணங்களின் கலவை இவற்றிற்குத் தெரியும் என்பதோடு இவை 20 மீட்டர் உயரம் அளவு பணி செய்யும் திறமை படைத்தவை.6 of

இத்துடன் ரோபோ பிஷ் என்று ஒரு வகை ரொபாட்டுகள் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் நீருக்கு அடியில் நீந்தும். ஐந்து மீட்டர் ஆழம் வரை டைவ் அடிக்கும் இவை ஒரு அக்வேரியத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது வீரர்கள் கவலைப்படுவது  மனிதனுக்கு மனிதன் போட்டி போடும் நிலையிலிருந்து மனிதன் – ரொபாட் என்ற ரீதியில் போட்டி போட வேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்பட்டு விடுமோ என்பது தான்!

அப்படிப்பட்ட ஒரு காலத்தில் வின்னர் யார்? நீங்களே எளிதில் ஊகிக்கலாம்.

வந்து விட்டது ரொபாட்டுகளின் காலம்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஸ்டீபன் மக்னிக்கும் (Stephen Macknik) சூஸனா மார்டினெஸ் காண்ட் (Susana Martinez – Conde) ஆகிய இருவரும் நியூரோ ஸயின்ஸில் பெரிய விஞ்ஞானிகள். 1997ஆம் ஆண்டு ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலில் இருவரும் சந்தித்தனர். விஷுவல் கார்டெக்ஸ் (Visual Cortex) எனப்படும் கட்புலப் புறணியின் (perception) அகப்பார்வை பற்றி இருவரும் ஆராய்ந்து வந்தனர்.இருவரின் ஆராய்ச்சியும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இருவரையும் லண்டனில் உள்ள யுனிவர்ஸிடி காலேஜ் அழைத்தது.

இருவரும் நெருக்கமாகப் பழகினர். ஒருவேளை நாம் டேடிங் செய்கிறோமா என்றார் ஸ்டீபன். ‘டேடிங்கா! சந்தேகமாக இருக்கிறது; அப்படி ஒன்றும் இருக்காது’ என்றார் சூஸனா. ஆனால் தொடர்ந்த பழக்கத்தால் இருவரும் மணம் புரிய நிச்சயித்தனர்.

 

 

கண் இயக்கம் பற்றியும் மூளை எப்படி ஒளியின் பிரகாசத்தை உணர்கிறது என்பதைப் பற்றியும் அவர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வுகள் கண் பார்வை பற்றிய பல உண்மைகளை விளக்கியதால் அவர்கள் உலகப் புகழ் பெற்றுள்ளனர்.

 

 

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவரின் அறிவியல் பார்வையிலும் அறிவிலும் அதிக ஆர்வமும் விருப்பமும் கொண்டுள்ளோம்.அநத உறவு எங்கள் இதய ஆழத்திலிருந்து எழுகின்ற ஒன்று.”என்கிறார் சூஸனா.

 

காதலுக்குக் கண்ணில்லை என்ற முதுமொழி ஒரு புறம் இருக்க கண் பார்வை ஆராய்ச்சியே காதலை உறுதி செய்து இருவரை இணைய வைத்த அதிசய சம்பவம் அறிவியலிலும் இப்படி உண்டு!

xxxx

 

 

4-3-2011 இதழில் தொடங்கிய அறிவியல் துளிகள் தொடர் இந்த இதழுடன் ஏழு ஆண்டுகளை முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தருணம் இது.

பாக்யா ஆசிரியரும் தமிழர்களின் இதயம் கவர்ந்த டைரக்டருமான திரு கே.பாக்யராஜ் அவர்களின் ஆக்க பூர்வமான சிந்தனையும் ஊக்கமுமே இதைச் சாத்தியமாக்கியுள்ளது. தொடர்ந்து தங்கள் ஆதரவை நல்கி வரும் வாசகர்களே அறிவியல் துளிகளின் பலம். அழகுற நாளுக்கு நாள்  நிறைந்த உள்ளடக்கத்துடனும் கூடுதல் வடிவமைப்புப் பொலிவுடன் மிளிரும் பாக்யா நிச்சயமாக தமிழ் பத்திரிகைகளில் கமர்ஷியல் சிந்தனையின்றி அறிவு பூர்வமாகத் திகழும் வித்தியாசமான பத்திரிகை என்பதை அனைவரும் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தத் தருணத்தில் பாக்யா ஆசிரியருக்கும், பாக்யா இதழ் தயாரிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றும் பாக்யா குழுவினருக்கும், தொடர்ந்து உற்சாக ஆதரவை நல்கி வரும் வாசகப் பெருமக்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எட்டாம் ஆண்டில் இன்னும் பல சுவையான அறிவியல் செய்திகளைப் பார்ப்போம். நன்றி.வணக்கம்.

*****