வள்ளுவப் பைத்தியம் தேர்வு செய்த முறை! (Post No.5044)

Written by S NAGARAJAN

 

Date: 25 MAY 2018

 

Time uploaded in London –  12-39   (British Summer Time)

 

Post No. 5044

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நடைச்சித்திரம் : மேலாண்மை நகைச்சுவை

 

 

வள்ளுவப் பைத்தியம் ஹெச்.ஆர்.டி அதிகாரியாகி தேர்வு செய்த முறை!

 

.நாகராஜன்

 

வள்ளுவரின் குறளின் பால் தீவிர ஈடுபாடு கொண்ட ‘வள்ளுவப் பைத்தியம்’ ஒருவர் ஹ்யூமன் ரிசோர்ஸ் டெவலப்மெண்ட் – (HUMAN RESOURCE DEVELOPMENT) மனித வள மேம்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

 

குறளின் வழி செல்லும் அவர் தெரிந்து வினையாடல் அதிகாரத்தில் வரும் இரு குறள் காட்டும் வழியின் படி செயல் பட முயன்றார்.

 

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல் (குறள் 516)

செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத் தகுந்த காலத்தோடு பொருந்திச் செயலைச் செய்ய வேண்டும்.

 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்    (குறள் 517)

 

இந்தப் பணியை இப்படிப்பட்ட கருவிகளாலும் வழிமுறைகளாலும் இவன் முடிக்கக் கூடியவன் என்பதனை நன்கு ஆராய்ந்து அந்தப் பணியை அவனிடம் தருதல் வேண்டும்.

 

அவர் பணியாற்றிய பெரிய நிறுவனத்தில் பல் வேறு பிரிவுகளுக்கும் ஆட்கள் தேவை.

 

நமது அதிகாரி புதிதாக வேலைக்கு வருபவர்களைத் தேர்ந்தெடுத்த விதத்தைப் பார்ப்போம்.

 

  1. 400 செங்கல்களை ஒரு அறையில் வைத்து மூடினார்.
  2. வேலை கேட்டு வந்தவர்களை அந்த அறைக்குள் அனுப்பினார். கதவைத் தாழிட்டார்.
  3. பின்னர் ஆறு மணி நேரம் கழித்துத் திரும்பினார்.
  4. அவர்கள் செங்கற்களை எண்ணிக் கொண்டிருந்தால், அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு அவர்களை அனுப்பினார்.
  5. அவர்கள் செங்கற்களை மறு எண்ணிக்கை செய்து கொண்டிருந்தால் அவர்களை ஆடிடிங் பிரிவுக்கு அனுப்பினார்.
  6. எல்லாச் செங்கல்களையும் கன்னாபின்னாவென்று குளறுபடி செய்திருந்தால் அவர்களை எஞ்சினியரிங் பிரிவுக்கு அனுப்பினார்.

 

  1. அவர்கள் செங்கல்களை விசித்திரமான முறையில் அடுக்கிப் பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களை பிளானிங் பிரிவுக்கு அனுப்பினார்.
  2. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் செங்கல்லை வீசி எறிந்து கொண்டிருந்தால் அவர்களை ஆபரேஷன்ஸ் பிரிவுக்கு அனுப்பினார்.
  3. அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களை செக்யூரிடி பிரிவுக்கு அனுப்பினார்.
  4. அவர்கள் செங்கல்களை உடைத்துத் துண்டு துண்டாய் ஆக்கிக் கொண்டிருந்தால் அவர்களை இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரிவுக்கு அனுப்பினார்.
  5. அவர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால் அவர்களை ஹ்யூமன் ரிசோர்ஸஸ் டெவலப்மெண்ட் பிரிவுக்கு அனுப்பினார்.

  1. அவர்கள் செங்கற்களை வைத்து வெவ்வேறு விதமாக அழகு பார்த்து, இன்னும் செங்கற்கள் கிடைக்குமா என்று பார்த்தவாறு இருந்து, ஒரு செங்கல்லையும் நகர்த்தாவிடில் அவர்களை விற்பனைப் பிரிவுக்கு அனுப்பினார்.
  2. அவர்கள் ஏற்கனவே இடத்தைக் காலி செய்து அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தால் அவர்களை மானேஜ்மெண்ட் பிரிவுக்கு அனுப்பினார்.
  3. அவர்கள் அறையின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களை ‘ ஸ்ட்ராடஜிக் ப்ளானிங்’ பிரிவுக்கு அனுப்பினார்.
  4. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே இருந்து ஒரு செங்கல்லையும் தொடாமலோ நகர்த்தாமலோ இருந்தால் அவர்களை டாப் மேனேஜ்மெண்ட் பிரிவுக்கு – உயரிய மேலாளர் பதவிப் பிரிவுக்கு – அனுப்பினார்.

 

 

அவரை யார் தான் பாராட்டாமல் இருப்பார்கள்? இதனை இதனால் இவன் முடிக்கும் என்பதனை நன்கு கண்டு பிடித்தவர் அல்லவா அவர்!

குறள் வழி எப்போதுமே சிறந்த வழி தானே!

 

ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர்க்கு இதோ ஆங்கில மூலம்:

 

A suggestion from a Human Resources Manager:

HOW TO PROPERLY PLACE NEW EMPLOYEES . . .

1. Put 400 bricks in a closed room.
2. Put your new hires in the room and close the door.
3. Leave them alone and come back after 6 hours.
4. Then analyze the situation:
If they are counting the bricks, put them in the Accounting Department.
b. If they are recounting them, put them in Auditing.
c. If they have messed up the whole place with the bricks, put them in Engineering.
d. If they are arranging the bricks in some strange order, put them in Planning.
e. If they are throwing the bricks at each other, put them in Operations.
f. If they are sleeping, put them in Security.
g. If they have broken the bricks into pieces, put them in Information Technology.
h. If they are sitting idle, put them in Human Resources.
i. If they say they have tried different combinations, they are looking for more, yet not a brick has been moved, put them in Sales.
j. If they have already left for the day, put them in Management.
k. If they are staring out of the window, put them in Strategic Planning.
l. If they are talking to each other, and not a single brick has been moved, congratulate them and put them in Top Management.

****

 

Words hurt more than Swords (Post No.5043)

PROVERBS ON WORDS AND DEEDS

June 2018 “Good Thoughts” Calendar

COMPILED by London Swaminathan 

 

Date: 24 May 2018

 

Time uploaded in London –  21-47

 

Post No. 5043

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

FESTVAL DAYS:  June-20 Ani Thirumanjanam in Tamil temples; 15-Ramadan

 

EKADASI/ HINDU FASTING DAYS-  June 10, 24

 

AMAVASYAI/ NEW MOON-  June 13

 

FULL MOON DAY/ PURNIMA-  June 27
Auspicious Days in June -3, 4, 17

 

Proverbs and Golden sayings in English language are compared with Indian Wisdom; I tried to get the nearest in meaning. Some may not agree at all

June 1 Friday

No sooner said than done

A person of resolute will and efficient action achieves his objective

In the manner in which he has designed (Tirukkural 666)

 

June 2 Saturday

Actions speak louder than words

Easy to make a plan and speak about it, but a rarer achievement is

To accomplish the plan as stated and then speak (Tirukkural 664)

 

June 3 Sunday

Saying is one thing, doing is another thing

All is achieved through silence – ‘Pancatantra’

June 4 Monday

From words to deeds is a great space 

If telling the truth causes anguish, better be silent – is the saying in ‘Vishnu Purana’ 3-12-3

June 5 Tuesday

The greatest talkers are the least doers

Modes of Speech (Manu Smrti)

1.Paarushyam = harsh, 2.An rtam = untruth, 3.Paisuunyam = tale bearing

4.Asambaddha pralaapah = talking of unrelated things.

–Manu12-6

June 6 Wednesday

Fair words and foul deeds

To be unrighteous and do evil is bad, but to indulge in slander

Behind a false smile, is worse (Tirukkural 182)

June 7 Thursday

Good words and ill deeds deceive wise and fools

The learned, who explore worthy thoughts, will not utter

Anything but words of deep import – Tirukkural 198

 

June 8 Friday

It is one thing to promise and another to perform

If you must speak, speak purposefully;

Eschew all vain and profitless words (Tirukkural 200)

 

June 9 Saturday

He that promises too much means nothing

Pure speech and noble associations are the hallmark of the virtuous

Sphitaa vaacah sataam sangha laksanam  hi gunaisinaam- KALIDASA

 

June 10 Sunday

Out of the abundance of the heart the mouth speaketh

Men’s perceptions are of their own mind

Nut their nature is known by their kind – Tirukkural 453

 

June 11 Monday

First think and then speak

All meanings, ideas, intentions, desires, emotions, items of knowledge are embodied in speech, are rooted in it and branch out of it. He who misappropriates, misapplies and mismanages speech, mismanages everything –Manu

 

June 12 Tuesday

More have repented speech than silence

A burn caused by fire may heal; but a scar caused by a fiery tongue will never heal. ( Tirukkural 129)

 

June 13 Wednesday

No wisdom like silence

One who has meals for a full year in silence gets respect in heaven for a thousand crore Yugas- Chanakya

Yastu samvatsaram purnam nityam maunena bhunchati

yugakotisahasram tu svargaloke mahiyate- Chakkaya

 

June 14 Thursday

Hear much, speak little

Even if it is just a little, listen and assimilate good instruction,

It will be productive of great benefit (Tirukkural 416)

 

June 15 Friday

Speech is silvern, silence is golden

The wise should observe silence –  says ‘Subhasitaratna bhandakara’

A Swiss inscription says, “Sprehfien ist silbern, Schweigen ist golden’

 

June 16 Saturday

Silence does seldom harm

One harm resulting from one foul utterance is enough to nullify all the good done by a man (Tirukkural 128)

 

June 17 Sunday

Silence gives consent

No answer itself is the answer – says ‘Ratnasamuccaya’

 

June 18 Monday

Kind words go a long way

Using harsh words instead of kind ones, is like going in

For raw fruits, when ripe ones are available (Tirukkural 100)

 

June 19 Tuesday

The lame tongue gets nothing

When a man knows that kinds words bring joy and happiness

Why should he resort to harsh words? (99)

 

 

June 20 Wednesday

 

Better the foot slip than the tongue

Guard your tongue, whatever else you may not guard, otherwise you will come to grief through wrong utterance– Kural 127

 

June 21 Thursday

Speak fitly, or be silence wisely

The many merits of the virtuous do not get diminished by his silence.

Na maunena nyuuno  bhavanti gunabhaajaam gunagana- KALIDASA

 

June 22 Friday

Lip-honour costs little, you may bring in much

Kind words, free from meanness, confer blessings

In this world as well as the next (Tirukkural 98)

 

June 23 Saturday

An ox is taken by the horns, and a man by the tongue

 

If one answers harshly, for instance a father, or a mother, or a brother, or a sister, or a teacher, or a Brahman, people say to him:’ Shame on you’––Chandogya Upanishad

 

June 24 Sunday

The bird is known by his note, the man by his words

The world will lose no time seeking performance from the able counsellors

Who can express profound ideas in orderly and pleasing language (648)

 

June 25 Monday

Fair words fill not the belly

When food for thought is not available through instructions from the learned

The stomach too may be provided some food – Tirukkural412

 

June 26 Tuesday

A honey tongue, a heart of gall

Men of clear vision, who have overcome human follies, will not speak

Meaningless and idle words, even by lapse of memory (199)

 

June 27 Wednesday

He who says what he likes shall hear what he does not like

A vengeful harm done even on an unprovoked wrong

will bring endless evil in its trail – Tirukkural 313

 

June 28 Thursday

Words hurt more than swords

 

Darts, barbed arrow, iron-headed spears,

However deep they may penetrate the flesh,

May be extracted, but a cutting speech,

That pierces, like a javelin, to the heart

None can remove; it lies and rankles thee- Mahabharata

 

June 29 Friday

There is a time to speak, and a time to be silent

He who speaks vain and graceless words in public assembly

Will expose his want of essential goodness and moral rectitude – Tirukkural 194

 

June 30 Saturday

Fine words butter no parsnips

The purposeless and profitless meandering talk of a man before gathering

Will proclaim to the world his own worthlessness- Tirukkural 193

 

–Subham—

இரண்டே கோவில்களில் 304 ராமர் சிலைகள்! (Post no.5042)

இரண்டே கோவில்களில் 304 ராமர் சிலைகள்! (Post no.5042)


WRITTEN by London Swaminathan 

Date: 24 May 2018

Time uploaded in London – 6-26 am (British Summer Time)

Post No. 5042


PICTURES ARE FROM BHARAT  KALYAN; THANKS
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

தாய்லாந்தில் இந்துக் கடவுள்கள்- 1

 

தாய்லாந்தில்  ஏராளமான இந்துக் கடவுளரின் சிலைகளும் ஓவியங்களும் உள. பிள்ளையார், பிரம்மா முதல் குபேரன், காலா வரை உண்டு. குறிப்பாக காலத்தால் அழியாத காவிய நாயகன் ராமனுக்குப் பல சிலைகள், ஓவியங்கள்! எண்ணிலடங்கா விக்ரஹங்கள், சித்திரங்கள்!!

தாய்லாந்திய கலைச் செல்வங்களைக் கண்டு ரஸிக்க அந்த நாட்டின் ஏழு வரலாற்றுக் காலங்களை அறிதல் இன்றியமையாதது; அவையாவன:–

 

 

த்வாராவதி காலம் – 6 முதல் 11 நூற்றாண்டு வரை

 

ஸ்ரீ விஜய காலம் – 8 முதல் 13 நூற்றாண்டு வரை

 

லோப் புரி காலம் (லவ புரி) –11 முதல் 13 நூற்றாண்டு வரை

 

சுகோதையா காலம் –13 முதல் 14 நூற்றாண்டு வரை

 

அயுத்தயா காலம் (அயோத்யா)- 17 முதல் 18 நூற்றாண்டு வரை

 

தோன்புரி (தன புரி) காலம்- 1767 முதல் 1782 வரை

பாங்காக் காலம் (அண்மைச் செல்வங்கள்)- 1782 முதல் இன்று வரை.

 

ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் கலை வளர்ச்சி நடந்தது. குறிப்பாக கம்பபோடியாவிலுள்ள க்மேர் (KHMER) இந்து அரசர்களின் செல்வாக்குப் பெருகப் பெருக இந்துக் கலை வளர்ச்சி பெற்றது.

ராமாயண சிற்பங்கள் உள்ள கோவில்கள்:

 

1.ப்ரஸாத் பனம் ரங் கோவில்

2.பிமை கோவில்

3.வாட் ப்ரா கியவோ (மரகத புத்தர் கோவில்)

  1. வாட் ப்ரா ஜெதுபோன் (ஜேத வன) கோவில்
  2. வட் நங் பியாக விஹார

 

இவைகளில் கடைசி இரண்டு ( வாட் ப்ரா ஜெதுபோன் (ஜேத வன) கோவில்,

வட் நங் பியாக விஹார)  கோவில்களில் 152+ 152= 304 சிற்பங்கள் ராமாயணக் காட்சிகளைச் சித்தரிப்பதாக அங்கு இரண்டு  ஆண்டுக் காலம் தங்கி ஆராய்ந்த தில்லிப் பலகலைக் கழக ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர் ஸத்ய வ்ரத சாஸ்திரி சொல்கிறார்.

 

ஒரு கோவிலில் சலவைக் கற் சிற்பங்கள் அது தவிர மரச் சிறபங்கள். மற்றொரு கோவிலில் கற் சிலைகள். இவை அனைத்தும் கோவிலைச் சுற்றி செதுக்கப்பட்டுள்ளன அல்லது வரையப் பட்டுள்ளன.

 

பர்மா செய்த அட்டூழியம்

1767 ஆம் ஆண்டில் பர்மியர்கள் புகுந்து கிடைத்த நூலகங்கள், கோவில்கள் எல்லாவற்றையும் தீயிட்டுக் கொளுத்தினர். அதனால் பழைய செல்வங்கள் அழிந்தன. அவர்கள கைப்படாத இடங்களில் உள்ள கலைப் பொக்கிஷங்கள் தப்பிப் பிழைத்தன.

பெரும்பாலும் 300 ஆண்டுப் பழமை உடைத்து. ஏனைய பழைய சிற்பங்களை பர்மியர்கள் தீக்கிரையாக்கிவிட்டனர். அசுர சக்தியின் ஆவிர்பாகங்கள்; நாளந்தா பல்கலைக் கழகத்தைத் தீக்கிரையாக்கிய துலுக்கப் படைகள் போன்ற தீய சக்திகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் தேசீய மியூசியம் உளது. அந்த அருங் காட்சியகத்தில் இந்திரஜித், ராவணன் முதல் இராமன் வரை பல கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ‘தாய்’ மக்களின் இதய கீதம் இராமாயணம். பௌத்த மத நாடானானும் ஏதோ ராமாயணம் தமது நாட்டிலேயே நடந்ததாக நினைக்கின்றனர். வால்மீகிக்கும் கம்பனுக்கும் தெரியாத புதிய ராமாயண கதா பாத்திரங்களையும் படைத்துள்ளனர். அனுமானின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி மீன் தேவதை; அவர்களுக்குப் பிறந்த பிள்ளையும் உடல் மனித முகத்துடனும் வால் (கால் பகுதி) மீனின் துடுப்புகளாகவும் காட்டப்பட்டுள்ளன. வர்ண ஜாலம் ஜொலிக்கும் ராமர், லெட்சுமணர், அனுமார் ஓவியங்களைப் பார்க்க விநோதமாக இருக்கும்.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் வேத கால இந்திரன், யமன், குபேரன் வருணன், பிரம்மா, விஷ்ணு, சிவன் சிலைகள் பற்றிக் காண்போம்.

 

இத்துடன் இணத்துள்ள  ஆங்கிலப் பக்கங்களைப் படியுங்கள்; ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்கள் எப்படித் திரிக்கப்பட்டுள்ளன என்பது விளங்கும்

 

 

தொடரும்……….

சுபம்

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 2 (Post No.5041)

Written by S NAGARAJAN

 

Date: 24 MAY 2018

 

Time uploaded in London –  4-35 AM   (British Summer Time)

 

Post No. 5041

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 25-5-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பன்னிரண்டாம்) கட்டுரை

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 2

.நாகராஜன்

 

திருஷ்டியை அறிவியல் ரீதியில் விளக்கம் கொடுக்க முன்வந்த முதல் அறிஞர் பிரபலமான ப்ளூடார்க் தான்! மனிதனின் கண்களிலிருந்து வெளிவரும் ஆற்றல் சில சமயங்களில் மிருகங்களை அல்லது குழந்தைகளைக் கூடக்  கொல்லும் ஆற்றல் படைத்தது என்று அவரது சிம்போஸியாக்ஸில் (Symposiacs) அவர் விளக்குகிறார். அவர் மேலும் இது பற்றி விளக்குகையில், “சிலருக்கு இன்னும் அதீதமான ஆற்றல் கண் பார்வையில் இருக்கிறது. அவர்கள் பார்வையினாலேயே சாபம் இட வல்லவர்கள்’ என்கிறார்!

ஐஸிஸ் தன் கண் பார்வையினாலேயே பிப்ளாஸ் நகர மன்னனின் மகனைக் கொன்றாள் என்றும் ப்ளூடார்க் கூறுகிறார்.

இதே போல கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெலியோடோரஸ், “ அருமையான ஒன்றை பொறாமை கொண்ட கண்ணுடன் ஒருவன் பார்த்தானானால் சுற்றி இருக்கும் சூழ்நிலையையே அவன் மாற்றுகிறான்; உயிரைப்  போக்கும் அளவு மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறான், அத்துடன் தனது விஷத்தைக் கண் மூலம் தனக்கு அருகில் இருக்கும் அனைத்தின் மீதும் பாய்ச்சுகிறான்” என்கிறார்.

இஸ்தான்புல் பசெஷெய்ர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியரான யில்டிரன் என்பவர் பி.பி.சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், “இன்று சிரியா என்று அழைக்கப்படும் பழையகால மெஸபொடோமியாவில் கண்டு பிடிக்கப்பட்ட தாயத்து மிக மிகப் பழமையானது” என்கிறார். அதாவது திருஷ்டி பற்றிய எண்ணமும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதும் ஆதிகாலப் பழக்கம் என்கிறார் அவர்.

பல வித மணிகளினால் ஆன மாலை, ருத்ராட்ச மாலை போன்றவையும் தீய திருஷ்டிகளை விலக்கும் ஆற்றல் படைத்தவை என நம்பப்படுகின்றன!

துருக்கியில் வாழ்ந்த பழங்குடியினர் தங்களது சுவர்க்க தேவதையான் தெங்ரி நீல நிறத்துடன் இருப்பதால இளநீல வண்ணத்தை கொண்ட தாயத்துகளையும் கோபால்ட், தாமிரம் ஆகியவற்றையும் பயன்படுத்தினர். இன்றும் துருக்கியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கண் திருஷ்டி டோக்கன் வழங்கப்படுவது வழக்கம்!

இத்தாலியில் திருஷ்டிக்குப் பெயரான மால் ஓச்சியோ (Mal Occhio) என்பதையே தலைப்பாகக் கொண்டு  அகடா டே சாண்டிஸ் ஒரு டாகுமெண்டரி திரைப்படத்தை எடுத்தார். அதில் திருஷ்டியினால் தலைவலி, வயிற்றுவலி போன்றவை வந்து அவஸ்தைப் படுவோர் அதைப் போக்க செய்ய வேண்டிய சடங்கை விளக்குகிறார். பல அறிஞர்களைச் சந்தித்து கண் திருஷ்டி பற்றிய அவர்களது கருத்தையும் கேட்டு திரைப்படத்தில் அதை அவர் தந்துள்ளார். முடிவான கருத்து என்னவென்றால் இதை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட முடியாது என்பது தான்!

நியூயார்க்கில் வாழும் மரியா பராட்டா (Maria Barattaa Ph.D)ஒரு உளவியல் நிபுணர்.

அவர் இத்தாலியைச் சேர்ந்தவர். சைக்காலஜி டு டே இதழில் கண் திருஷ்டி பற்றி உளவியல் ரீதியாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் ஒரு சுவையான சம்பவத்தை விவரிக்கிறார்.

தனது 92 வயதான இத்தாலிய அப்பாவிடம் தனக்கு வயிறு சரியில்லை என்றும் ‘’மால் ஓச்சியோ” இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் சொல்ல, அவர் உடனே, “எதையாவது கண்டதைச் சாப்பிட்டிருப்பாய்” என்று பதில் கூறியவர், “எதற்கும் இருக்கட்டும்” என்று திருஷ்டியைப் போக்கும் பிரார்த்தனை மந்திரத்தையும் மகளுக்காக உச்சரித்தாராம்.

இந்தியாவில் திருஷ்டி சுற்றிப் போடும் பழக்கம் போலவே இத்தாலியிலும் அவ்வப்பொழுது திருஷ்டி சுற்றிப் போடுவது வழக்கம்!

இத்தாலிய நம்பிக்கையின் படி தாயத்துகளை நீங்களாக வாங்கிப் போட்டுக் கொள்ளக் கூடாது; யாராவது ஒருவர் தான் அதை உங்களுக்குத் தர வேண்டும்!

வரலாற்றை அலசிப் பார்த்தால் பல பிரபலங்கள் தீய திருஷ்டிப் பார்வையைக் கொண்டவர்களாக இருப்பது தெரியவரும்.

இந்தப் பட்டியலில் ஆங்கிலக் கவிஞர் பைரன், போப் ஒன்பதாம் பயஸ், போப் பதிமூன்றாம் லியோ, இரண்டாம் கெய்ஸர் வில்லியம், மூன்றாம் நெப்போலியன் உள்ளிட்ட பலர் இடம் பெறுகின்றனர்.

போப் ஒன்பதாம் பயஸ் கையில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த ஒரு நர்ஸை ஜன்னல் வழியே பார்த்தார். சில விநாடிகளிலேயே அந்தக் குழந்தை இறந்து விட்டது. இது அனைவருக்கும் பரவியது. இதன் பின்னர் அவர் செய்யும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் கெட்ட விளைவுடனேயே முடிந்தது. அவர் 1878ஆம் ஆண்டு மறைந்தார்.

இதே போல போல் போப் பதிமூன்றாம் லியோ பார்வையும் மற்றவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துமாம். அவர் போப்பாக இருந்த காலத்தில் ஏராளமான கார்டினல்கள் இறந்து விட்டதால் அவரைக் கண்டாலேயே அனைவருக்கும் பயமாம் – தனக்கும் சாவு வந்து சேருமோ என்று தான் பயம்! முத்தாய்ப்பாக அறிவியல் என்ன சொல்கிறது என்பது கண் திருஷ்டியின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஆனந்தம் தரும் செய்தியாக அமைகிறது. அதையும் பார்த்து விடுவோம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

மேதைகள் எவ்வளவு நேரம் தினமும் தூங்குவார்கள்?

இதோ ஆராய்ச்சி தரும் தகவல்கள் :

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தினமும் 10 மணி நேரம் தவறாமல் உறங்குவார். இது தவிர பகல் நேரத்தில் குட்டித் தூக்கமும் அவருக்கு உண்டு.

இதற்கு நேர்மாறானவர் பிரபல விஞ்ஞானியான நிகோலஸ் டெல்ஸா. அவர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தான் இரவில் தூங்குவார்.

இதை ஈடு கட்டும் விதமாக பகல் நேரத்தில் குட்டித் தூக்கமாக பல முறை அவர் தூங்குவதுண்டு.

லியனார்டோடாவின்சியின் தூக்கப் பழக்கம் சற்று விசித்திரமானது. செயல்படாமல் நெடுநேரம் இருக்கக் கூடாது என்பது அவரது கொள்கை. ஆகவே அவர் 20 முதல் 120 நிமிடம் வரை தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். இப்படி பகலிலும் இரவிலுமாகச் சேர்த்து ஒரு நாளக்கு ஐந்து மணி நேரத்திற்கு மேல் அவர் தூங்க மாட்டார். இதனால் அவர் இடைவிடாது செயலூக்கத்துடன் தனது பணிகளைச் செய்து வந்தார். இப்படி உறங்கும் பழக்கத்திற்கு டா வின்சி தூக்க அட்டவணை (The Da Vinci Sleep  Schedule) என்றே பெயர் வைக்கப்பட்டு விட்டது. இதற்கு உபர்மேன் தூக்க அட்டவணை (Uberman Sleep Schedule) என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது ஒரு நாளை ஆறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் 20 நிமிடம் மட்டுமே தூங்கும் முறைக்கு இந்தப் பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே உறங்க முடியும்.

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சரியாக இரவு 10 மணிக்கு உறங்கப் போவார்.காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பார்.

தாமஸ் ஆல்வா எடிஸனோ இரவு 11 மணிக்கு உறங்கச் சென்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவார். ஸ்பேஸ்  கம்பெனியின் உரிமையாளரான இலான் மஸ்க் இரவு 1 மணியிலிருந்து காலை 7 மணி வரை ஆறு மணி நேரம் மட்டுமே உறங்குகிறார்.

வெற்றிகரமான மேதைகள் பொதுவாகக் குறைந்த நேரமே தூங்குகின்றனர். பெரிய சாதனைகளைப் புரிகின்றனர்!

 

****

 

304 Ramayana sculptures in two Thai temples alone! (Post No.5040)

WRITTEN by London Swaminathan 

Date: 23 May 2018

Time uploaded in London –21-45 (British Summer Time)

Post No. 5040

PICTURES ARE FROM BHARAT KALYAN; THANKS
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

HINDU GODS IN THAILAND-1

Thailand has got lot of Hindu sculptures from Ganesh to Kubera. Vedic gods Indra, Yama, Vishnu, Shiva and Brahma are also found in different places. Ramayana scenes are in the panels in many temples. We see them more from the Khmer period.

 

Art in Thailand is divided  seven different periods:

Dvaravati period – 6th to 11th century CE

Srivijaya period – 8th to 13 th century

Lobpuri period – 11th to 13th century CE

Sukothai period 13th to 14th century CE

Ayuththaya period 17th to 18th century CE

Thonburi – 1767 to 1782

Bangkok  1782-  to date

It is from the Lobpuri period Rama story begins to appear. It was the period when Khmer influence spread from Cambodia.

The best Ramayana sculptures and paintings are in

1.Prasad Panom Rung temple

2.Pimai temple

3.Emerald Buddha- Wat Phra Keao

4.Wat Phra Jetubon

5.Vihata of Wat Nang Phya

 

 

During the Lobpuri period small figures of bronze Hanuman idols used as standards on top of wooden poles.

Sukhothai period provides very few Ramayana sculptures

Since the Burmese burnt down the libraries, temples etc. in 1767, a lot of sculptures were destroyed in Ayuththaya (Ayodhya) period.

In the Thonburi and Bangkok periods kings themselves were great scholars , we have very good paintings in the temple of Emerald Buddha- Wat Phra Keao.

The bas reliefs  as many as 152 in number, found in Wat Phra Jetubon, the funerary temple of the present ruling dynasty, depicts the central episodes of the Ramayana story.

The mural paintings in the Vihara of Wat Nang Phya in Phitsnulok in Nothern Thailand and the 152 marble panels give the complete story of Ramayana. Apart from these there are wooden panels depicting scenes from Ramayana.

Wat Po Vihara also has some Ramayana sculptures. The significance of these Thai sculptures is showing the unknown characters of original Valmiki Ramayana.

 

‘Ramayana is song of human heart, it has a romantic kind of charm for the people of Thailand and gives them unbounded joy and happiness even in the present times when the glory of the east is being fast shadowed by the glamour of the west’ – Sathya Vrata Shastri

 

The National Museum of Thailand in Bangkok has a couple of interesting pieces of art connected with the story of Rama. just in front of it in the open stands a majestic figure of Rama with a  bow in hand symbolising  as it does the love of Thais  for that great hero. Inside the building the most noteworthy object, among others is a wooden screen painted in gold and lacquer, a relic of the period of the first king of the present dynasty. On one side of it is depicted the scene of Indrajit  who transforms himself  into Indra and shoots arrows that turn out to be Nagas/ snakes and on the other Ravana’s death (From Sathya Vrata Shastri’s  book)

 

 

In the second part, I will give the details of the sculptures of other Hindu gods.

-to be continued

–Subham-

புத்த மத அதிசயம்! தண்ணீர் மீது நடந்தான் அரசன்!! (Post No.5039)

WRITTEN by London Swaminathan 

Date: 23 May 2018

Time uploaded in London – 17-28 (British Summer Time)

Post No. 5039

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
 

ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘அங்குத்த நிகாய’ என்ற புத்த மத நூலுக்கு புத்தகோஷர் எழுதிய பாஷ்யத்தில் பின்வரும் சம்பவத்தை விவரிக்கிறார்:

 

கப்பினா என்ற அரசன் 1000 மந்திரிகளுடன் கங்கைக் கரைக்குச் சென்றான்.

 

(இந்துக்கள் 60,000 என்பதை பயன்படுத்துவது போல பௌத்தர்கள் 500 அல்லது 1000 என்ற எண்ணைப் பயன்படுத்துவர். பொருள்= அதிகமான)

 

கங்கை நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மன்னன் சொல்கிறான்: படகுகள் செய்ய நம்மிடம் அடிமை வேலை ஆட்களோ நம்முடைய சேவகர்களோ இல்லை. ஆனால் வானம் முதல் பூமி வரை புகழும், அருளும் பரப்பிய நம்  குருநாதர் உண்மையிலேயே ஞானம் பெற்ற புத்தராக இருப்பாரானால் என்னுடைய குதிரைகளின் குளம்புகளில் கூடத் தண்ணீர் படாமல் இருக்கட்டும். இதைச் சொல்லிவிட்டு மன்னன், தனது குதிரைகளை ஆற்றின் மீது நடக்கவிட்டான். குதிரைகளின் காலில் ஒரு துளி கூடத் தண்ணீர் படவில்லை மறு கரைக்குச் சென்றனர்.

 

நெடுந்தொலைவு சென்றனர். மீண்டும் ஒரு ஆறு வந்தது. அதுவோ ஆழமான நதி. ஆயினும் முன்னர் சொன்ன ஒரு சொல்லை வைத்துக் கொண்டே துணிச்ச்சலாக குதிரைகளை விட்டனர். அவை நனையாமல் ஆற்றின் மீது நடந்து சென்றன. கடைசியாக சந்திரபாகா என்ற பெரிய நதியை அடைந்தனர். அங்கும் புத்தர் பெயர் சொல்லி எளிதில் நதி மீது நடந்தனர். இறுதியில் மன்னன்   புத்தர் காலடியில் சரண் புகுந்தான்.

அவனது மஹாராணி அநோஜாவும் இச்செய்தியைக் கேட்டாள். அவள் 1000 ரதங்களுடன் புறப்பட்டாள். கங்கை நதிப் பிரவாஹத்தைக் கண்டவுடன் தன் கணவன் செய்தது போலவே புத்தர் உண்மையான குருவானால் எனக்கும் வழி திறக்கட்டும் என்றாள். அப்படியே நிகழ்ந்தது.

 

ஆக ரிக் வேதத்தில் துவங்கி பைபிளின் புதிய ஏற்பாடான பீட்டர் சம்பவம் வரை இந்து, சமண, பௌத்தர்கள் ‘நீரின் மேல் நடந்த அற்புதம்’ உள்ளது (விவரங்களை முதல் இரண்டு கட்டுரைகளில் காண்க)

 

இன்னொரு அற்புதமும் புத்தர் கதையில் இணைக்கப்பட்டுள்ளது. மன்னன் கப்பினாவும், மஹா ராணி அநோஜாவும் புத்தர் பக்கத்தில் வந்து நின்ற போது ஒருவரை ஒருவர் காண முடியாதபடி புத்தர் செய்துவிட்டாராம். ஏனெனில்

காதல் மலர்ந்து விடும்; காமம் பரவிவிடும் என்று.

 

இருவரும் பௌத்த மதத்தைத் தழுவிய பின்னர் அந்த மாயத் திரையை புத்தர் விலக்கி விட்டாரம். அதாவது ஒருவரை ஒருவர் கண்டனர். ஆனால் காமம் மலரவில்லை.

 

இதே போல மஹாவம்ச பாஷ்யத்திலும் உளது. இவை எல்லாம் ரிக்வேத துதியின் எதிரொலி என்றால் மிகை ஆகாது.

 

திலீபன் என்ற ரகுகுல மன்னன் நீரின் மீது சென்ற போது அவன் தேர் தண்ணீரில் மூழ்கவிலை என்று மஹாபாரதம் பகரும்.

 

 

 

இதே போல யசா என்பவர் புத்தரிடம் ஓடிச் சென்றவுடன் அவனுடைய அம்மாவுக்கு வருத்தமாம; கணவனை விரட்டி மகனக்கூட்டி வர அனுப்பினாள் புத்தரிடம் அவர் போனார். என் மகன் இங்கே வந்தானா? என்று கேட்டதற்கு புத்தர் ஈரெட்டாக,  மழுப்பலாகப் பதில் தந்தார்; யசனை கண்ணுக்குத் தெரியாதபடி மறையச் செய்து விடுகிறார்.

 

 

அவனது அப்பாவுக்கு ஞான உபதேசம் செய்து மதம் மாற்றிய பின்னர் கண்ணுக்குத் தெரியாமல் வைத்திருந்த யசனக் காட்டுகிறார். யசனைத் தாயின் துயரத்தைத் துடைக்க த்நதை அனுப்பிய காலையில் புத்தரும் அவஓடு சென்று யசனின் தாயார், மனைவி மகள் ஆகியோரையும் மதம் மாற்றுகிறார்.

 

இப்படிப் பல கதைகள் பௌத்த நூல்களில்!! புத்தரே நீரின் மீது நடந்ததாகவும் கடலின் மீது பறந்து இலங்கைக்கு வந்ததாகவும் சில கதைகள் உண்டு. ஏசு பற்றியும் இப்படிப் பல கதைகள் உண்டு.

–சுபம்–

ஈற்றடி இங்கே! முதலடி எங்கே? சொல்லுடா, தமிழா! (Post No.5038)

WRITTEN by London Swaminathan 

Date: 23 May 2018

Time uploaded in London – 16-05 (British Summer Time)

Post No. 5038

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

தமிழா, திருக்குறள் , திருக்குறள் என்று வாய் கிழியக் கத்துகிறாயே! அந்த உலகப் புகழ் பெற்ற நூல் உனக்குத் தெரியுமா? நீயே உன்னை ஆத்ம சோதனை செய்து கொள். இதோ பத்துக் குறள்கள். முதலடி சொல்லு பார்ப்போம்:

1.வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

 

2.அன்பு ஈனும்  ஆர்வம் உடைமை அது ஈனும்

 

 

3.வறியார்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

 

4.வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

 

 

5.அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

 

6.கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

 

7.அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

 

8.சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

 

9.வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

 

10.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

 

 

11.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

 

12.ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

 

13.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

 

14.ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

 

15.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

 

16.கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

 

 

விடைகள்

 

1.வேண்டாமை வேண்ட வரும்

 

  1. நண்பென்னும் நாடாச் சிறப்பு

 

  1. குறியெதிர்ப்பை நீர துரைத்து

 

  1. தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று

 

 

  1. புன்கண்நீர் பூசல் தரும்
  2. தாளை வணங்காத் தலை

 

  1. தீயுழி உய்த்துவிடும் –

 

  1. சுற்றமாச் சூழ்ந்து விடும்

 

 

  1. கோல்நோக்கி வாழும் குடி

 

10.நாவினாற் சுட்ட வடு

 

  1. செய்நன்றி கொன்ற மகற்கு

 

  1. சான்றோன் எனக்கேட்ட தாய்

 

  1. தெய்வத்துள் வைக்கப்படும்

 

  1. வேந்தனும் வேந்து கெடும்

 

  1. செல்வர்க்கே செல்வம் தகைத்து

 

  1. களை கட்டதனோடு நேர்

–Subham–

பாரதியார் பற்றிய நூல்கள் – 49 (Post No.5037)

Written by S NAGARAJAN

 

Date: 23 MAY 2018

 

Time uploaded in London –  5-43 AM   (British Summer Time)

 

Post No. 5037

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 49

க.கைலாசபதி அவர்களின் ‘இரு மகா கவிகள்

 

ச.நாகராஜன்

pictures from Taitini Das are used;thanks. 

1

பாரதி ஆர்வலர் .கைலாசபதி அவர்கள் மகாகவி பாரதியாரையும் வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பற்றியும் ஒப்பிட்டு எழுதியுள்ள நூல் இது. 114 பக்கங்கள் கொண்ட இந்த நூல் என்சிபிஎச் பிரைவேட் லிமிடெட், சென்னை -2 பதிப்பகத்தாரால் செப்டம்பர் 1962ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

மிக அழகாகவும், தெளிவாகவும் இரு கவிஞர்களைப் பற்றிய முக்கிய விஷயங்களை பத்து அத்தியாயங்களில் தருகிறார் நூலாசிரியர்.

 

Taitinidas Dance Troupe

2

இரவீந்திரநாத் தாகூரைப் பற்றி மகாகவி பாரதியார் எழுதியுள்ள இந்தக் குறிப்புடன் நூல் ஆரம்பிக்கிறது:

கீர்த்தியடைந்தால் மஹான் ரவீந்திரரைப் போலே அடைய வேண்டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் பூமண்டல முழுமையும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுக்களோ வங்க பாஷையிலே உள்ளன. வெறும் மொழிபெயர்ப்புகளைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத் தான் இந்தக் கீர்த்தி.

தாகூர் இறப்பதற்கு இருபது ஆண்டுகள் முன்னதாகவே இறந்தவர் பாரதியார். அவரை விட இருபத்தோரு ஆண்டுகள் இளையவர்.

இருவரது கவிதைகளின் ஆழத்தையும், கவிஞர்களின் பார்வையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளையும் அலசி ஆராய்கிறது இந்த நூல்.

3

ஒரு முக்கிய நிகழ்ச்சியை இந்த நூல் இரண்டாம் அத்தியாயத்தில் பதிவு செய்கிறது. அது வருமாறு:

மகாகவி பாரதியாருடைய சரிதையைத் தமிழில் எழுதியவர்களில் ஒருவரான சுத்தானந்த பாரதியாரும், ஆங்கிலத்தில் எழுதியுள்ள பேராசிரியர் பி.மகாதேவனும்  ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளனர். பாரதியார் இரவீந்திரநாத் தாகூருடன் கவிதைப் போட்டி நடத்த விரும்பினார் என்பதைக் காட்டும் அந்தச் சம்பவத்தைச் சுத்தானந்தர் பின்வருமாறு எழுதியுள்ளார்.

பாரதி : அப்பா! இப்போது டாகூர் எங்கிருக்கிறார்?

சிஷ்யன் : மதுரையில்.

பாரதி : உடனே புறப்படு. சலோ மதுரை.அவனை ஒரு கை பார்க்கிறேன்.

சிஷ்யன் : நாம் போவதற்குள் டாகூர் சென்று விட்டால்..?

பாரதி : அட அபசகுனமே! நமது தமிழ்நாட்டுக்கு டாகூர் வந்து நம்மைக் காணாமல் செல்லுவதா?

சிஷ்யன் : விலாசம் தெரியாதே!

பாரதி : அட சீ! “டாகூர் மதுரை என்றால் தந்தி பறக்கும் ஐயா!

சிஷ்யன் : சரி, என்ன செய்தி அறிவிக்க?

பாரதி : ‘தமிழ்நாட்டுக் கவியரசர் பாரதி, உம்மைக் கண்டு பேச வருகிறார் என்று உடனே தந்தி அடியும்.

சிஷ்யன் : அங்கே போய் என்ன செய்யப் போகிறீர்?

பாரதி : ஓய் ஓய், நாம் டாகூருக்கு ஒன்று சொல்லுவோம்.நீர் வங்கக் கவி; நாம் தமிழ்க் கவி, விக்டோரியா ஹாலில் கூட்டம் கூட்டுவோம். உமது நோபல் பரிசைச் சபைமுன் வையும். நாமும் பாடுவோம்.நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு ‘அப்ளாஸ் கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார்கள். உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்ல வேண்டியது என்போம்.

Dancer Taitini Das in Tagore Celebrations

சிஷ்யன் : அதெப்படி? அவர் வங்காளத்தில் பாடுவார். நீர் தமிழில் பாடுவீர். வங்காளத்திற்குக் கிடைத்த நோபல் பரிசு உமது தமிழுக்கு எப்படிக் கிடைக்கும்?

பாரதி : அட, அட ஜெயமே! சர்வேசுவரன் தமிழனுக்கு எல்லாம் வைத்தான்; புத்தி மட்டும் வைக்கவில்லை. நேற்றுப் பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்க வேண்டும். கற்பகோடி காலம் வாழ்ந்த தமிழ் அந்தப் பரிசு லாயக்கில்லையோ?

சிஷ்யன் : மன்னிக்க வேண்டும். தமிழ் வங்கத்திற்குத் தாழ்ந்ததில்லை. ஆனாலும் அவர் உலக மகாகவி, உலகப் புகழ் பெற்றவர்.

பாரதி : நாம் உலகப் புகழ் பெற முடியாதோ? அட தரித்திர மனிதா! அந்த இழவுக்குத் தான் நோபல் வெகுமதியை டாகூரிடமிருந்து வெல்ல வேண்டும் என்கிறோம்!

இந்த மாதிரியே பேசிக் கொண்டு பாரதியார் இரவில் எட்டையபுரம் வந்தார். (1919) பிறகு நன்றாகச் சாப்பிட்டுத் தலையைச் சாய்த்தார்; மறுநாள் காலையில் தான் எழுந்தார். நோபல் வெகுமதி விஷயம் மறந்தே போயிற்று.

         

இது யோகி சுத்தானந்த பாரதியார் தீட்டிய சித்திரம். 1918-ல் பாரதியார் புதுச்சேரி வாழ்க்கை அலுத்துப் போய்த் தமது மனைவியின் ஊரான கடயத்திற்குச் சென்றார். கடயத்தில் ஈராண்டு வாழ்க்கை; அப்பொழுதுதான் மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

நூலாசிரியர் ரவீந்திரரைப் பாரதியார் பாராட்டி எழுதியதையும் அவரது சிறுகதைகள் சிலவற்றை மொழிபெயர்த்திருப்பதையும் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ ரவீந்திர திக் விஜயம் என்னும் கட்டுரையை 1921 ஆகஸ்டு 25ல் சுதேசமித்திரனிலே பாரதியார் எழுதினார்.அதற்கடுத்த மாதம் செப்டம்பர் 11ம் தேதி பாரதி அமரராகிறார்.

புதுச்சேரியில் இருந்த காலத்தில் (1908-1918) தாகூர் சிறுகதைகளில் எட்டைப் பாரதியார் மொழி பெயர்த்தார்.

தாகூருடைய ஐந்து கட்டுரைகளை பாரதியார் மொழி பெயர்த்திருக்கிறார். 1917-ல் ‘மாடர்ன் ரிவியூசஞ்சிகையில் இந்தக் கட்டுரைகள் வெளிவந்தன.

        

4

மூன்றாம் அத்தியாயத்தில் தாகூர் உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்ததையும் பாரதியார் இந்தியாவில் முகிழ்ந்த மறுமலர்ச்சியானது இந்து மதத்தின் அடிப்படையில் இருந்ததை ஏற்றுக் கொண்டதையும் நூலாசிரியர் விவரிக்கிறார்.

மகாத்மா காந்தியை எமது தலைவர் என்று தாகூர் பாராட்டினாலும் அவர் ஆரம்பித்த வெகு ஜன இயக்கத்தைக் கண்டித்தார். ஆனால் பாரதியாரோ, “ஸ்ரீ காந்தியின் நெறியையும் திடசித்தத்தையும் பார்த்தால் இப்படிப்பட தெய்வீக குணங்களமைந்த புருஷனும் உலகத்திலிருக்கிறானாவென்று யோசிக்க வேண்டியதாயிருக்கிறது” என்று மகாத்மாவை வெகுவாகப் பாராட்டினார்.

      

5

இந்தியா முழுவதையும் கவர்ந்த சக்தி வழிபாட்டை ஏறத்தாழ தாகூர் நிராகரித்தார் என்றே சொல்ல வேண்டும் என்று ஆறாம் அத்தியாயத்தில் விவரிக்கும் நூலாசிரியர் பாரதியார் சிவாஜி உற்சவம் கோலாகலமாக நடைபெற வேண்டும் என்று ‘இந்தியா பத்திரிகையில் வேண்டுகோள் விடுத்ததையும் சக்தி வழிபாட்டை பாரதியார் மேற்கொண்டதையும் விவரிக்கிறார்.இருவருக்கும் உள்ள வேறுபாடு நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.

 

6

ஏழாம் அத்தியாயம் தாகூர் இயந்திரங்களைப் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் அவை சிருஷ்டிக்கு முரணானவை என்று கருத்துக் கொண்டிருந்த போது பாரதியாரோ அதற்கு நேர் முரணான கருத்தைக் கொண்டிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறது.

7

மகாகவிகள் இருவரும் தமது எழுத்துக்களில் கவிதையே நித்தியத்துவத்தைப் பெறும் என்பதை உணர்ந்திருந்தனர்.இருவரும் மேலான இசை உணர்வு கொண்டவர்கள். இது இருவருக்கும் உள்ள ஒற்றுமை.

 

இது போன்ற ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டும் நூல் அரவிந்தருடனான பாரதியாரின் தொடர்பை விரிவாக இறுதி அத்தியாயங்களில் சுட்டிக் காட்டுகிறது.

 

    

 

நூலாசிரியர் இலங்கையின் பிரபலமான எழுத்தாளர். இலங்கை சர்வகலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இந்த சிறந்த ஆய்வு நூலை எழுதியுள்ளதன் மூலம் இரு கவிஞர்களைப் பற்றிய சிறந்த ஒப்பீடு நமக்குக் கிடைக்கிறது.

பாரதி ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூலாக இது அமைகிறது.

****

மேலும் ஒரு தண்ணீர் அதிசயம்: சுவையான சமண மத சம்பவம் (Post No.5036)

 

மேலும் ஒரு தண்ணீர் அதிசயம்: சுவையான சமண மத சம்பவம் (Post No.5036)

 

WRITTEN by London Swaminathan 

Date: 22 May 2018

Time uploaded in London – 13-19 (British Summer Time)

Post No. 5036

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஸத்யத்தின் பெயரில் ஸபதம் செய்தால் நீர் மீது நடக்கலாம், ஆறுகளை வழிவிடும்படி விரட்டலாம் என்பது ரிக் வேதத்தில் துவங்கி பைபிளின் புதிய ஏற்பாடு வரை இருப்பதை முந்தைய கட்டுரைகளில் விளக்கினேன். சமண மதத்தில் மிகவும் சுவையான நிகழ்ச்சி ஒன்று  விடுகதைக் கதை  — புதிர்போடும் சம்பவம் — ஒன்று உளது.

 

பாவதேவசூரி என்பவர் எழுதிய பார்ஸ்வநாத சரிதத்தில் இது உளது,

ஆறு விலகிப் போய் வழிவிட்டது!

ஒரு நாட்டில் ஒரு சமண மன்னன் இருந்தான். அவனது சஹோதரன் ஸோமா என்பவன் சமணத் துறவி ஆகிவிட்டான். தனது தலைநகருக்கு வெளியே ஸோமா முகாம் இட்டிருக்கும் செய்தி வந்தவுடன்  ஸோமாவைப் பார்த்து நமஸ்கரிக்க மன்னன் சென்றான். அவன் தர்மோபதேசத்தைக் கேட்டுவிட்டு திரும்பிவந்தான். ராணியிடமும் சங்கதிகளைச் சொன்னான்.

ராணிக்கும் பேரார்வம் பிறந்தது. எனது மைத்துனரும் சந்யாஸியுமான ஸோமாவை நானும் நம்ஸ்கரித்து ஆசி வாங்குவேன் அது வரை சாப்பிட மாட்டேன் என்று ஸபதம் கொண்டாள்.

 

மாலையில் தேரில் ஏறிச் சென்றாள். நகரின் குறுக்கே ஓடும் ஆற்றில் பெரு வெள்ளம். அரண்மனைக்கு திரும்பி வந்தாள்.

நாதா! ஏதேனும் ஒரு வழி சொல்லுங்களேன். உங்கள் ஸஹோதரரை  தரிசித்து ஆசி பெற வேண்டும் என்றாள்.

 

ஓ, அதுவா, மிக மிக எளிது ஆற்றரங்கரைக்குப் போய் நதியிடம் நான் செப்புவதைக் கூறு:

“என் கணவன், கடந்த பல ஆண்டுகளாகப் பிரம்மசர்ய விரதம் இருப்பது உண்மையானால் நதியே எனக்கு வழி விடு”.

 

இதை கேட்ட அவளுக்கு ஒரே மயக்கம். நான் தான் மைத்துனர் சந்யாசம் பெற்ற பின்னர் கர்ப்பம் அடைந்து இருக்கிறேனே. என் கணவர் பிரம்மசர்யத்தை அனுஷ்டிக்க வில்லையே. இருந்தபோதிலும் நதியிடம் சொல்லிப் பார்ப்போம் என்று சொன்னாள்

என்ன அதிசயம்! நதியும் இடது பக்கமும் வலது பக்கமும் விலகிப் போய் வழிவிட்டது.

 

 

ஸோமாவைச் சந்தித்த போது இந்த அதிசயம் பற்றி விளக்கம் கேட்டாள். அவர் சொன்னார்: “உன் கணவன் மனத்தளவில் பிரம்மச்சாரி. மனமே பெரிது. அவர் கள்ளம் கபட மற்றவர். நான் ராஜ்ய பாரத்தை விட்டதால் அவர் சுமக்கிறார். அவர் மாசு மரு அற்றவர்”.

 

பின்னர் எல்லோரும் அமர்ந்து விருந்து உண்டனர்

 

அவளும் அது சரி; நான் திரும்பிப் போகும் போது ஆற்றின் வெள்ளம் தணியாவிட்டால் நான் என்ன செய்வேன்? எப்படி அரண்மனைக்குப் போக முடியும்? ஒரு வழி  சொல்லுங்களேன் என்றாள்.அதற்கு ஸோமா சொன்னர்.

“இதுவா பிரமாதம்! என் மைத்துனரும் சந்யாஸியுமான ஸோமா எப்போதும் உண்ணா நோன்பு கடைப் பிடிப்பவர் என்பது உண்மையானால், ஏ நதி

தேவதையே எனக்கு வழி விடு” என்று சொல் என்றார்.

 

அவளுக்கு மேலும் தலை சுற்றியது .இப்பொழுதுதானே ஸோமா என்னுடன் அமர்ந்து விருந்து உண்டார் .அவர் எங்கே உபவாஸம் இருந்தார்?  என்று எண்ணி வியந்தாள் ஆயினும் முனிவர் சொன்னபடியே நதி தேவதையிடம் சொன்னவுடன், நதியும் விலகி வழ்விட்டது. அவளுக்கு ஒரே ஆச்சரர்யம்!!

 

கணவனிடம் போய்க் கேட்டாள் “நீர் போட்ட புதிருக்கு எனக்கு விடை கிடைத்துவிட்டது ஆனால் உம்முடைய சஹோதரர் போட்ட புதிருக்கு விடை வேண்டும். அவர் என்னுடன் அமர்ந்து விருந்து உண்டார். ஆனால் சந்யாசம் ஏற்றது முதல் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லுகிறாரே!”

 

“உண்மைதான்! அவர் உபவாஸமே இருக்கிறார். பெண்ணே! உனக்கு இன்னும் சமய உண்மை விளங்கவில்லை.  உயர்ந்த குணம் படைத்த துறவிக்கு சாப்பிடுவதற்கும் சாப்பிடாததற்கும் வித்தியாசமே தெரியாது.

 

மனம் என்பது வேர்; வாக்கு என்பது தலைப்பகுதி; மதம் என்னும் பெரிய மரத்தின் பரந்த கிளைகளே ஒருவனின் செயல். வேரிலிருந்துதான் (மனம்) எல்லாம் தோன்றுகின்றன”.

 

இதைக் கேட்டவுடன் ராணிக்குத் தெளிவு பிறந்தது.

 

ரிக் வேதத்தில் நதிகளுடன்  விஸ்வாமித்ர மஹரிஷி பேசியதைப் போலவே இந்த சமய உரையாடலும் அமைந்து இருக்கிறது.

 

இன்னும் சில புத்த மதக் கதைகளும் உண்டு.

 

புத்த மத சம்பவங்களை இன்னுமொரு கட்டுரையில் காண்போம்.

 

–SUBHAM–

கடலை விரட்டிய தமிழ் மன்னன் ; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள் (Post No.5035)

கடலை விரட்டிய தமிழ் மன்னன் ; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள் (Post No.5035)
WRITTEN by London Swaminathan 

Date: 22 May 2018

Time uploaded in London – 7-30 am (British Summer Time)

Post No. 5035

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

பழங்காலத்தில் கீழை நாடுகளில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஒருவர் சத்தியத்தின் பெயரில் சூளுரைத்து கடலை விரட்டலாம். தண்ணீர் மீது நடக்கலாம்; நதிகளை ஓடாமல் செய்யலாம் என்று நம்பினர். இந்தக் கதைகள் சிலப்பதிகாரம், திருவிளையாடல் புராணம், புத்த, ஜைனமத நூல்களில் உள்ளன. மோஸஸ் கடலைக் கடந்த கதை, ஜீஸஸ் சிஷ்யன் கடலைக் கடந்த கதை எல்லாவற்றுக்கும் மூலம் ரிக்வேதம் என்று முதல் கட்டுரையில் நேற்று காட்டினேன்.

 

 

தமிழர்களைப் போலவே சீனாவிலும் மன்னன் செய்த செயலைப் பார்க்கையில் இரு ஒரு பழங்காலச் சடங்கோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

திருவிளையால் புராணத்தில் ஒரு கதை இருக்கிறது; அதன் தலைப்பு “கடல் சுவற வேல்விட்ட படலம்”. 96 அஸ்வமேத யாகம் செய்த உக்கிரகுமார பாண்டியன் மீது இந்திரன் பொறாமை அடைந்தான். ஏனெனில் எவரேனும் 100 அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரன் பதவி பறிபோய்விடும் இதனால் இந்திரன் மதுரை நகர் மீது கடல் தண்ணீர் பாயும்படி ஏவிவிட்டனன். இது தமிழ்ச் சங்கம் இருந்த தென் மதுரையாக இருக்கலாம்.  பாண்டிய மன்னன் சிவ பக்தன் என்பதால் சிவபெருமானே அவன் கனவில் தோன்றி கடலைக் கட்டுக்குள் வைக்க அனுப்பினான் என்பது கதை. உடனே அவன் இரவோடு இரவாக கடல் மீது வேல் ஒன்றை எறிய  அது பின்வாங்கியது.

உண்மை பேசுவோர், நியாயமான ஆட்சி நடத்துவோருக்கு இப்படிப் பட்ட அபூர்வ சக்திகள் இருந்ததாக மக்கள் நம்பினர். நல்லாட்சி நடக்கும் நாட்டில் பயிர்கள் தாமாகவே செழித்து வளரும் என்று வள்ளுவனும் செப்புவான்.

சீனாவில் நடந்த அதிசயம்

மிலிந்த பன்னா என்னும் நூலில் ஒரு கதை வருகிறது:–

“மன்னாதி மன்னா! சீனாவில் ஒரு மன்னன் நாலு மாதங்களுக்கு ஒரு முறை, கடலுக்குக் காணிக்கை செலுத்துவதற்காக சபதம் செய்கிறான். அவன் தேரில் ஏறி கடலுக்குள் ஒரு லீக் ( மூன்றரை மைல்) தொலைவு செல்வான் அவன் உள்ளே நுழைந்தவுடன் கடல் பின் வாங்கி விடும். அவன் தேர் வெளியே வந்தவுடன் கடல் அந்த இடத்தில் பாய்ந்து முழுகடித்துவிடும்”.

இது புத்தமத நூலில் உள்ள கதை. ஆக பரசுராமன் கோடரியை எறிந்து கேரள பூமியை மீட்ட கதை, மஹாவம்சம் எனும் இலங்கை நூலில் உள்ள கதை ஆகியன எல்லாம் ஸத்தியத்தின் மூலம் சபதம் செய்து தண்ணீரைக் கட்டுப்படுத்த முடியும் என்று காட்டுகின்றன; நிலம் தரு திருவில் பாண்டியன், கடல் சுவற வேல் விட்ட உக்கிரப் பெருவழுதி அல்லது உக்கிர குமாரன் அகியோர் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்திலும் உண்டு.

 

From my earlier post:–

மஹாவம்சக் கடல் கதை

சுனாமி/ கடல்கோள்
அத்தியாயம் 22-ல் ஒரு காதல் கதை வருகிறது. இது காகவனதீசன் மன்னன் காலத்தில் நடந்தது.
கல்யாணி என்னும் நகரில் தீசன் என்ற மன்னனின் மனைவிக்கு (ராணிக்கு) ஜய உதிகன் என்பவன் ஒரு காதல் கடிதத்தை புத்த பிக்கு போல வேடம் அணிந்த ஒருவர் மூலம் அனுப்புகிறான். அவன் ராஜா ராணி வரும் போது அதை ராணியின் முன்னால் போடுகிறான். சத்தம் கேட்டுத் திரும்பிய தீசன், ராணிக்கு வந்த காதல் கடிதத்தைப் படித்துவிட்டுக் கோபம் அடைகிறான். கோபத்தில் உண்மையான தேரரையும், தேரர் வேடத்தில் இருந்த போலியையும் வெட்டி வீழ்த்துகிறான். இதனால் கடல் (அரசன்) கோபம் கொண்டு பொங்கி நாட்டுக்குள் புகுந்தது. இது கி.மு 200க்கு முன் நடந்தது.

இது போன்ற சுனாமி தாக்குதல் கதைகள் பல தமிழ் இலக்கியத்திலும் உண்டு. கடல்மேல் வேல் எறிந்து கடலின் சீற்றத்தை அடக்கிய பாண்டியன் கதைகளை திருவிளையாடல் புராணத்தில் (கடல் சுவற வேல் எறிந்த உக்ர பாண்டியன்) காணலாம். ராமனும் கடல் பொங்கியவுடன் வருண பகவானுக்கு எதிராக கடலில் அம்புவிட்டதை ராமாயணத்தில் படிக்கிறோம்.

உடனே கடலின் சீற்றத்தை அடக்குவதற்காக, தீசன் தன் மகளை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து அனுப்புகிறான். அது கரை ஒதுங்கியபோது காகவனதீசன் அவளைக் கண்டு கல்யாணம் செய்துகொள்கிறான்.

 

இதில் நமக்கு வேண்டிய விஷயம் கடல் பொங்கிய (சுனாமி) விஷயமாகும். இதன் காலத்தை ஆராய்தல், முதல் இரு தமிழ்ச் சங்கங்களை விழுங்கிய கடற்கோள்களின் (சுனாமி) காலத்தை அறிய உதவலாம். சிலப்பதிகாரத்தில் ஒரு கடற்கோள் பற்றி நாம் படிக்கிறோம்.

வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
-காடுகாண் காதை, சிலப்பதிகாரம்

இதை ஒப்பிட்டால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் மற்றும் முதல் இரு தமிழ்ச் சங்கங்களில் ஒன்றின் காலம் ஆகியன உறுதிப்படலாம். இலங்கை கடற்கோள் நடந்தது கி.மு.200–க்கு முன்.

 

xxx

சம்பந்தர் செய்த அற்புதம்

தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்ற பாடலகளைப் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றுமுள்ள ஏனைய சிவனடியார்கள் வாழ்விலும் நதி நீர் , கடல் நீர் முதலியவற்றை அடக்கி ஆண்ட செய்திகள் உள. திருஞான சம்பந்தர் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிய   போது   படகோட்டிகளும் பயந்து தயங்கி நின்றதாகவும் அவர் அடியார்களுடன் படகில் ஏறி தேவாரம் பாட, படகு அமைதியாக தவழ்ந்து மறு கரை சேர்ந்ததாகவும் ஸ்தல புராணங்கள் நுவலும். கொள்ளம்புதூரில் வெட்டாறு வெள்ளப் பெருக்கெடுத்தபோது சம்பந்தர் நதி கடந்த அதிசயம் சைவ வரலாற்றில் உள்ளது

 

கொள்ளம்புதூரில் ஆண்டுதோறும் ஓட (படகு) விழா நடப்பதோடு அந்த ஆற்றுக்கே ஓடம்போக்கி ஆறு என்றும் பெயர் வைத்துவிட்டனர்.

to be continued…………….

–subham–