ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்! (Post No.5392)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 4 September 2018

 

Time uploaded in London – 6-34 am (British Summer Time)

 

Post No. 5392

 

TAMIL WORDS IN THE RIG VEDA

உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். கி.மு 1700 முதல் கி.மு.6000 வரை பலராலும் தேதி குறிப்பிடப்பட்ட நூல். இந்துக்களைப் பொறுத்தமட்டில் இதன் பழமைக்காக மதிக்கவில்லை. வேதம் இன்றி இந்து மதம் இல்லை. இந்தப் பெருமைமிக்க நூலில் நிறைய தமிழ் சொற்கள் இருக்கின்றன. மொழியியல் விதிகளைப் பயன்படுத்திப் பார்த்தால் மறைந்திருக்கும் மேலும் பல தமிழ்ச் சொற்கள் மேலுக்கு வரும்.

 

எதற்காக இந்த ஆராய்ச்சி?

 

நிறைய பேர் ரிக் வேத ஸம்ஸ்க்ருதம் பழமையானது என்றும் அதற்குப் பின்னர் வந்த பாணினி-காளிதாசன் கால ஸம்ஸ்க்ருதம் வேறு என்றும் சொல்லுவர். ஓரளவுக்கு அது உண்மைதான். இது எல்லாப் பழைய மொழிகளுக்கும் பொருந்தும். பழங்கால தமிழ், ஆங்கிலம் ஆகிய எந்த மொழியின் பழைய இலக்கணமும் வேறு; சொற்களின் பொருளும் வேறு.

இவ்வளவு பழமை வாந்த நூலில் உள்ள சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துவது வியப்புக்குரிய விஷயம்!

 

இதோ சில தமிழ்ச் சொற்கள்:-

எண்கள் பற்றி:-

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள எண்களில்முதலில் மண்டலம், பின்னர் மந்திரத் துதியின் எண், அதிலுள்ள மந்திர வரியின் எண் என்ற வரிசையில் கொடுத்துள்ளேன். இந்த எண்களை எடுக்க உதவிய நூல் பகவான் சிங்கின் ‘வேதிக் ஹரப்பன்ஸ்’ Vedic Harappans என்ற நூலாகும்.

 

உஷ் ட் ர – ஒட்டகம் (ரிக். 1-138-2; 8-5-37;8-6-48)

கர்தப- கழுத (ர=ல)/ கழுதை (1-29-5; 3-53-23)

காகம்பிர- காகம் (6-48-17)

மயூர- மயில் (1-191-4; 3-45-1; 8-1-25)

சிம்ஹ- சிங்கம் (5-44-1)

உட்ச- ஊற்று (2-16-7)

கூப – கூவம்/ கிணறு 1-105-17

குல்யா – குளம் , கால்வாய்

நீர் – நீர்

பூமி-புவி 2-14-7

யூப – 5-2-7 சங்கத் தமிழ்

புஷ்ப/ பூ – அதர்வ 8-712

பலி- 1-70-9

மது- தேன் 1-90-6

மத்ஸ்ய/ மச்ச – 10-68-8

ரத்ன- 1-20-7

ரஜ்ஜுப் பொருத்தம் – ரஜ்ஜு 1-162-8

ராஜசூயம்- அதர்வ – 4-8-1

புறநானூற்றின் அடிக்குறிப்பில் ராஜசூயன் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயர் உள்ளது

சங்கு- அதர்வ 4-10-1

களம்- நெல் அடிக்கும் களம் (10-48-7)

XXXX

 

சில சொற்களை அப்படியே தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளனர். அது ரிக்வேத காலம் முதல் இன்று வரை புழக்கத்தில் இருப்பதும் வியப்புக்குரிய செய்தி. இதோ சில சொற்கள்:

 

ரிஷபம் (6-16-47) (இடபம்/விடை – தேவாரத்தில்

வாரணம் (யானை) – ஆண்டாள் வாரணம் ஆயிரம்

கபி/கவி – குற்றாலக் குறவஞ்சி (10-86-5)

கோ (3-1-23)- கோவலன்/ கோபாலன் சிலப்பதிகாரம்

xxx

இன்னும் சில சொற்கள் சர்வ சாதாரணமாக பேச்சு வழக்கிலும் பத்திரிக்கைகளிலும் புழக்கத்தில் இருக்கின்றன.

ஸர்ப- சர்ப்பம்/பாம்பு (10-16-6),serpent

ம்ருக (மான்) – மிருகம்

மேஷ- மேட ராசி/ மேஷராசி

வராக – வராஹ அவதாரம்

ஹம்ச- அன்னம் (2-34-5)

ஆரண்யப் பசு – காட்டு மிருகம்/ எருமை (10-90-8) ;ஆரண்யம் (காடு) என்ற சொல் வேதாரண்யம் முதலிய ஊர்ப்பெயர்களில் காணப்படும்

பாச (கயிறு)- 2-27-16)

பஹு அன்ன – நிறைய உணவு

 

(பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ)

அன்னம் – உணவு இப்பொழுதும் புழக்கத்தில் உள்ள சொல் – அன்ன தானம்

அங்குச- அங்குசம் (8-17-10)

 

கச (கசையடி)- (5-83-3)

தண்ட – தடி (8-33-6)

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் – தமிழ்ப் பழம்ழொழி

 

பந்தன – கட்டுதல் (5-12-4); ரக்ஷா பந்தன்

தான்ய – தானியம் (5-53-13)

பீஜ – விதை (ப=வ) (5-53-13)

சகன் – சாணம் (அதர்வண வேதம் 3-14-4)

வது/ பெண்5-37-3

ஸ்வப்ன – சொப்பனம் – 2-28-10

வசனம், வாக்கியம், வார்த்தை

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது?

ரிக் வேதம் என்பது உலகிலேயே பழைய நூலாக இருந்தாலும் அவற்றிலுள்ள சொற்களை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் தவிர நூற்றுக் கணக்கான சொற்கள் உள்ளன. இன்னும் ஆங்கிலத்தில் நமக்குத் தெரிந்த சாதாரன சொற்களையும் ஒப்பிட்டால் அடுத்த நிமீடமே நமக்கு ஏறத்தாழ ஆயிரம் ரிக்வேதச் சொற்கள் தெரிந்து விடும். முப்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில, ஜெர்மானிய, பிரெஞ்சு அறிஞர்கள் வேதங்களைப் பற்றி எழுதியுள்ளனர். இப்படி வெளிநாட்டுக்காரர்களே வேதத்தைப் படிக்க இயலுமானால் நம்மால் முடியாதா? இதை உணர்ந்து அனைவரும் முறையாக வேதத்தைப் பயிலல் வேண்டும்.

நிற்க

 

நான் ஒரு புதிய கருத்தை வெளியிட்டு வருகிறேன். பரஞ்சோதி முனிவர்கள் முதலானோர் மறைமுகமாக வெளியிட்ட கருத்து அது. அதாவது தமிழும் ஸம்ஸ்ருதமும் சிவ பெருமானின் உடுக்கையின் இரண்டு பக்கங்களில் இருந்து பிறந்தன. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரு தாயின் இரண்டு பிள்ளைகள்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியைஉலகமெலாம் தொழுதேத்தும்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்

கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்

 

–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

கடவுள் தந்த தமிழ்

வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி

நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்

தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)

 

 

அவ்வாறில்லாவிடில் சிவ பெருமான், அகத்தியனை வடக்கிலிருந்து அனுப்பித் தமிழுக்கு இலக்கணம் செய்யக் கேட்டிருக்க மாட்டார். இந்த இரண்டு மொழிகளுக்குள்ள தொடர்பு போன்ற நெருக்கம் வேறு எந்த மொழிக்கும் இடையில் காண முடியாதது. சந்தி இலக்கணம், வேற்றுமை உருபுகள் முதலிய பல அம்சங்களில் இரண்டும் ஒன்றே!

வாழ்க தமிழ்! வளர்க ஸம்ஸ்க்ருதம்!!

 

–subham–

 

 

 

மூளை நன்கு செயல்பட உடல்பயிற்சி (5391)

WRITTEN BY S NAGARAJAN

Date: 4  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-17 AM (British Summer Time)

 

Post No. 5391

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

திருநெல்வேலியிலிருந்து ஆர்.சி.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் வெளிவரும் ஆரோக்கிய மேம்பாட்டு மாத இதழ் ஹெல்த்கேர். இதில் ஜூலை 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. தொடர்பு மின்னஞ்சல் editor@tamilhealthcare.com

மூளை நன்கு செயல்பட எவ்வளவு நேரம் உடல்பயிற்சி செய்ய வேண்டும் ?

மூலம் : கிறிஸ்டோபர் வாஞ்செக்

தமிழாக்கம் : ச.நாகராஜன்

அனைவருக்குமே உள்ள கவலை வயதாக ஆக, மூளையின் செயல்பாடு குறைந்து கொண்டே வருகிறதே, ஞாபகமறதி அதிகமாகிறதே, உடலின் அவயவங்கள் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே என்பன போன்றவை தாம்!

நன்கு உடல்பயிற்சி செய்யுங்கள் என்பது பொதுவான அறிவுரை.

யோகா, தாய்-சி போன்றவற்றையும் பலரும் பரிந்துரை செய்கின்றனர்.

எதைச் செய்வது, எவ்வளவு நேரம் செய்வது என்பதில் ஒரே குழப்பம்.

 

தினசரி செய்யுங்கள் என்கின்றனர் சிலர். வாரத்திற்கு இவ்வளவு மணி நேரம் என்கின்றனர் சிலர்.

இப்படிச் செய்ய முடியாதவர்கள் கவலைப்படுகின்றனர்.

கவலை போக்கும் விதமாக இப்போது நல்ல செய்தி வந்துள்ளது.

 

ஆறு மாத காலத்தில் 52 மணி நேரம் உடல் பயிற்சி செய்தால் போதும் என்கிறது நவீன மருத்துவ ஆய்வு ஒன்று! இது மூளையை நன்கு செயல்படுத்த உதவும் என்கிறது ஆய்வு முடிவு!

பொதுவாக உடல்பயிற்சியானது, சிந்தனையாற்றலை நன்கு தூண்டி விடும்; உடலையும் மனதையும் பண்படுத்த உதவும்; மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்; அல்லது மூளை செயலிழப்பைத் தடுக்கும் என்பன போன்றவற்றை ஆய்வு முடிவுகள் அறிவித்துள்ளன!

 

நியூராலஜி கிளினிகல் ப்ராக்டீஸ் என்ற பத்திரிகையில் 30-5-2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை அகில உலக ஆய்வு ஒன்றை விரிவாக வெளியிட்டிருக்கிறது.

 

நடைப்பயிற்சி, ஓட்டம், வெயிட் தூக்குதல், யோகா, தாய்-சி எல்லாமே நலம் பயப்பவையே! இதில் எதைச் செய்தாலும் ஆறு மாதத்தில் 52 மணி நேரம் செய்தால் போதும்!

“இந்த 52 மணி நேரத்தையும் கூட உங்களுக்கு உகந்த முறையில் பிரித்துக் கொள்ளலாம். இப்போது ஒரு மணி நேரம்; பின்னால் இன்னொரு மணி நேரம் என்று” என்கிறார் ஆய்வைச் செய்த மியாமி மில்லர் ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜாய்ஸ் கோமஸ் -ஆஸ்மான் (Joyce Gomes-Osman) என்னும் நியூரோஸயிண்டிஸ்ட் பெண்மணி.

 

இது அனைவருக்கும் பெரிய ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். தினசரி ஒரு மணி நேரம் என்பது போன்ற கடுமையான விதி முறைகள் தேவை இல்லை.

 

குறைந்த தீவிரம் உடையவை யோகாவும் தாய்-சியும்.

அதிக தீவிரப் பயிற்சி என்பது வலுவை அதிகரிக்கும் கடினமான பயிற்சிகளும் ஏரோபிக் பயிற்சிகளும். இவை இரண்டுமே பலனளிக்கின்றன என்கிறார் கோமஸ்.

உடல் பயிற்சி சம்பந்தமாக முன்னர் செய்யப்பட்ட 100 ஆய்வுகளை இந்தப் புதிய ஆய்வு ஆராய்ந்தது. இதில் பங்கு கொண்டவர்கள் மூளை செயல்பாடு பற்றிய ஆய்வுக்கு உட்பட்டவர்கள். மொத்தம் 11000 பேர்கள் இவற்றில் பங்கு கொண்டனர். அவர்களின் சராசரி வயது 73!

ஆய்வு தந்த முடிவின் பொதுவான அம்சம் எந்த முறையில் உடல் பயிற்சி செய்யப்பட்டாலும் ஆறு மாதங்களில் 52 மணி நேரம் செய்தால் அவை மூளை சிந்தனையாற்றலைக் கூர்மைப் படுத்துகின்றன என்பதே!

இந்த 52 மணி நேரத்திற்குக் குறைவாகச் செய்யப்பட்ட பயிற்சிகள் நல்ல முடிவுகளைத் தரவில்லை என்பதே ஆய்வு தரும் செய்தி!

உடல் பயிற்சி சிகிச்சை முறையைத் தருகின்ற நியூரோ ஸயிண்டிஸ்ட் என்ற முறையில் கோமஸ், “என்னுடைய நோயாளிகளுக்கு ஒரு சரியான டோஸை தர ஆசைப்பட்டேன், இப்போது தான் அது சாத்தியமாகி இருக்கிறது” என்கிறார்.

 

 

“இன்னும் அதிக செயல்பாட்டுடன் இருங்கள் என்று பொதுவாக நாங்கள் கூறி விடுகிறோம் எங்களிடம் சிகிச்சை பெற வருபவர்களிடம். ஆனால் அதன் அர்த்தம் என்ன? அவருக்கு தினமும் 30 நிமிடப் பயிற்சி தேவையா? அல்லது ஒரு மணி நேரம் தேவையா? எந்த விதமான உடல் பயிற்சி வேண்டும் என்பதைச் சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது தெளிவாக 52 மணி நேர லட்சியத்தை முன் வைக்க முடிகிறது” என்கிறார் அவர் முத்தாய்ப்பாக!

 

இதய நோயாளிகளுக்கு அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்த இதுவே வழி!

 

டாக்டர் டக்ளஸ் ஷார் என்பவர் ஓஹையோ ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் வெக்ஸ்னர் மெடிகல் மையத்தில் உள்ள மூளை செயல்பாடு மற்றும் நினைவுத் திறன் குறைப்பாடு பற்றிய மையத்திற்கு டைரக்டர். அவரும் இந்த ஆய்வு முடிவை ஏற்றுள்ளார். “மூளை செயல்திறனுடன் இயங்க உடல் பயிற்சி இன்றியமையாதது என்பதே முக்கிய செய்தி. நீண்ட கால அடிப்படையில் அதைச் செய்யவேண்டும். அவ்வளவு தான்” என்கிறார் அவர்.

 

ஷார் மேலும் கூறுகையில், “ உடல் பயிற்சியின் போது மூளையானது நன்கு செயலூக்கம் செய்யப்படுகிறது. நமது தசைகளை எப்படிக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதை நாம் கற்க வேண்டும். ஆகவே பயிற்சிகளின் போது அதிக கவனம் தேவை. ‘use it or lose it’ – பயிற்சியைச் செய்யுங்கள்; அல்லது பலனை இழந்து விடுங்கள் என்பதே தாரக மந்திரம் என்கிறார்.

 

அத்தோடு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே இருந்து யாருடனும் பழகாமல் இருப்பது பயனளிக்காது என்றும் அவர் கூறுகிறார்,

பிரேஸில், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள், உடல் பயிற்சியானது மூளையின் செயல்பாட்டு வேகம், திட்டமிடுதல், கவனம் கொள்ளுதல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது என்கின்றனர். பொதுவாக வயதாக ஆக, இவைதான் அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சினை என்பதால் இந்த ஆய்வின் முடிவு ஒரு வரபிரசாதமே.

இனி ஆறு மாதத்தில் 52 மணி நேர பயிற்சி என்பதை மேற்கொள்வோம். செயல்பாட்டுடன் கூடிய முளையால் உடல் இயக்கம் கொண்டு நலம் பெறுவோம்.

 

***

மூலம் : கிறிஸ்டோபர் வாஞ்செக்

தமிழாக்கம் : ச.நாகராஜன்

நன்றி : லைவ் ஸயின்ஸ்

 

 

கொலைகார மூலகம் (THALLIUM) பற்றிய சுவையான தகவல்கள்! (Post No.5390)

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 3 September 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 5390

 

 

கொலைகார மூலகம் (THALLIUM) பற்றிய சுவையான தகவல்கள்! (Post No.5390)

 

 

உலகில் கண்டறியப்பட்டுள்ள நூற்றுக்கும் மேலான மூலகங்களில் ஒன்று தால்லியம் (THALLIUM) . இது கொலை வழக்குகளில் அடிபட்டதாலும், துப்பறியும் நாவல் புகழ் ‘அகதா கிறிஸ்டி’ நாவல்களில் அடிக்கடி தலைக் காட்டியதாலும் புகழ் பெற்றுவிட்டது.

 

இது ஒரு உலோகம். வெள்ளியை விட  அதிகம் கிடைக்கும்  உலோகம். இதன் பிறப்பே சர்ச்சைக்குரியது. அட! கர்ணன் போன்றோரின் பிறப்பில்தான் சர்ச்சை என்று நினைத்தால் ஒரு மூலகத்தின் பிறப்பிலுமா சர்ச்சை?

 

ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி சோதனைச் சாலையில் சல்ப்யூரிக் அ மிலக் குடுவையில் பச்சைக் கோட்டைக் கண்டார். ஆஹா, இது ஒரு புதிய பொருள் இதற்குத் தல்லியம் என்ற திருநாமாத்தைச் சூட்டுவோம் என்று கருதி நாமகரண சடங்கையும் நடத்தி விட்டார். அவர் பெயர் வில்லியம் க்ரூக்ஸ் WILLIAM CROOKES (1832-1919). இது 1861-இல் நடந்தது.

 

ஆனால் ப்ரான்ஸ் நாட்டில், 1862-இல் கிளாட் அகஸ்ட் லாமி CALUDE AUGUST LAMY (1820-1878) இதற்கும் ஒரு படி மேலே சென்று தால்லியத்தை வடிகட்டி, உலோகக் கட்டியாக செய்து, லண்டனில் உள்ள ஒரு கண்காட்சிக்கும் அனுப்பி விட்டார். அந்தக் கமிட்டி அவரைப் பாராட்டி ஒரு பதக்கமும் கொடுத்து விட்டது. பிரஞ்சு அகாடமி இவர்தான் இந்த மூலகத்தின் கண்டு பிடிப்பாளர் என்று அறிவித்துவிட்டது

 

 

ஒரிஜினல் விஞ்ஞானிக்கு வந்ததே கோபம்! அவருடைய விஞ்ஞான சஞ்சிகை மூலம் விட்டு விளாசினார். ஒவ்வொரு இதழிலும் பிய்த்துக் குதறினார். போகப் போக அது பிரான்ஸ்- பிரிட்டன் ‘ரசாயன’ யுத்தமாகப் பரிணமித்தது. “வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு , கொடுத்த மெடலை  வாபஸ் வாங்கு” என்ற கோஷம் பெரிதானது

 

நமக்கு வேண்டாமப்பா, இந்த வம்பு என்று சர்வதேச கண்காட்சிக் கமிட்டி அவருக்கும் ஒரு பதக்கத்தைக் கொடுத்தது.

இனித்தான் சுவையான கதைகள்!

 

விஷம் வைத்து ஆட்களைத் தீர்த்துக் கட்டுவோர், அந்த சடலத்தை எரித்துவிட்டால், கொலைத் தடயம் மறைந்து விடும் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். பிரிட்டனில் கிரஹாம் யங் என்பவர், ஒரு கொலை வழக்கில் வகையாகச் சிக்கிக் கொண்டார். அவரால் கொலை செய்யப்பட்ட (BOB EGLE) பாப் ஈகிள் என்பவரின் சடலத்தை எரித்த சாம்பல் கிடைத்தது . அதை ஆராய்ந்ததில் தால்லியம் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. இது குற்றம் தொடர்பான (FORENSIC SCIENCE) தடய அறிவியலில் ஒரு புதிய மைல் கல்லாக விளங்குகிறது. ஒரு சோதனையின் பெயர் அடாமிக் அப்ஸார்ப்ஷன் ஸ்பெக்ட் றோமெட்ரி . இந்த சோதனை நடத்தப்பட்ட போது, எந்த ஒரு சடலத்தை எரித்தாலும் காணப்படும் அளவுக்கும் மேலாக அந்த சாம்பலில் தால்லியம் இருந்தது தெரிந்தது. அவர் விஷம் வைத்துக் கொன்றது உறுதியானது.

 

அகதா கிறிஸ்டியின்  ‘ஆகாத’ நாவல்

அகதா கிறிஸ்டியை (AGATHA CHRISTE) அறியாத ஆங்கிலப் புதினப் பிரியர்கள் கிடையாது. அவர் 1961ஆம் ஆண்டில் தி பேல் ஹார்ஸ்(THE PALE HORSE) என்ற ஒரு துப்பறியும் நவீனத்தை வெளியிட்டார். அதில் தால்லியம் விஷக் கொலை வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட தடயத்தை எ[ப்படி திசை திருப்பிவிட முடியும் என்றும் எழுதி இருந்தார். அந்தக் கதையில் மந்திர தந்திர சாபங்கள்தான் (MAGIC CURSES) ஆளைக் கொன்றது என்ற பாணியில் கதைப்போக்கு இருந்தது.

 

1980 முதல் 1990 ஆண்டுகளில் இராக் நாடு, தனது அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்ட தாலியத்தைப் பயன்படுத்தியதாக மேலை நாடுகள் செப்புகின்றன. இது இயற்கையில் ஆட்கள் இறந்தது போலவும் காட்டவும் உதவும்.

 

கிரஹாம் யங் என்ன செய்தார்?

இவர் இங்கிலாந்தில் ஹார்ட்போர்ட்ஷைரில் பொவிங்டன் என்ற ஊரில் வேலை பார்த்தார். தொழிற்சாலையில் சக ஊழியர்களின் ‘காப்பி’யில் தால்லியம் சல்பேட் (THALLIUM SULFATE) என்ற ரசாயனத்தைக் கலந்தார். பல ஊழியர்கள் நோயால் வருந்தினர். இருவர் இறந்தனர். ‘ஏனைய்யா! உமது தொழிற்சாலையில் இந்தக் கோரம் ? என்று வினவியபோது, ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழிக்கு இணங்க அவரே தன்னைக் காட்டிவிட்டார். ‘ஒருவேளை தால்லியம் காரணமாக இருக்கலாம்’ என்று உளறிவிட்டார்.

(நுணல்= தவளை)

பின்னர் டாக்டர்கள் பரிசோதனையில் அவர்கள் தால்லியத்தால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப் பட்டது.

 

யங் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை 1972-ல் பெற்றார்.   1990-ல் தற்கொலை செய்துகொண்டார்.  இதில் துயரம் என்னவென்றால், அவர் ஏற்கனவே குடும்பத்தினருக்கு விஷம் வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, மன நோய்க்கான மருந்தைச் சாப்பிட்டவர். மனநோய் மருந்துகள் நன்றாக வேலை செய்கிறது என்று டாக்டர்கள் பகர்ந்தவுடன் அவர் விடுதலை செய்ய்ப்பட்டிருந்தார் அதற்குப் பின்னர்தான் பெரிய கொலை வழக்கு!

 

ஆனால் தால்லியம் ரசாயன விஷத்தால் இறந்த எல்லாவற்றையும் கொலை என்றும் கருதிவிடக்கூடாது.  1987ம் ஆண்டில் கயானா ( (GUYANA, தென் அமெரிக்கா) நாட்டில் 44 பேர் மர்மமாக இறந்தனர். நுற்றுக் கணக்கானோர் நோயில் வீழ்ந்தனர். அவர்கள் குடித்தது வெறும் பசுவின் பால். பின்னர் ஆராய்ந்ததில் கரும்புத் தோட்டத்தில் எலிகளைக் கொல்ல வைக்கப்பட்ட தால்லியம் கலந்த வெல்லக் கட்டிகளை அந்த பசுக்கள் மேய்ந்தது கண்டறியப்பட்டது. அதன் உடலில் ஏறியவிஷம் பாலில் கலந்து அப்பாவிகளைத் தப்பாகக் கொன்றது. தப்பாமல்  கொன்றது.

 

குறி வைத்தது எலியை; கொடுத்ததோ மனித பலியை!

 

தால்லியம், எலி மருந்து, கண்ணாடித் தொழிற்சாலை  ஆகியவற்றில் பயன்படுகிறது அதன் ஐஸடோப் (ISOTOPE) இருதய நோய்ப் பரிசோதனைகளில் பயன்படுகிறது. ஒரு காலத்தில் தலையில் ஏற்படும் புழுக்களைக் கொல்லவும் (RINGWORMS IN SCALP) பயன்பட்டது. தலை முடியை உதிர வைத்தால்தான் தலையில் சிகிச்சை தரமுடியும் . தால்லியம் கலந்த ரசாயனப் பொருட்கள் அதைச் சுலபமாக செய்து முடித்தமையால் அதற்கு ‘முடி சூடும் பெருமை’ கிடைத்தது.

 

1930களில் தாலியம் அஸிடேட் ரசாயனத்தை முகத்தில் வளரும் முடியை அகற்றவும் பயன்படுத்தினர்.

 

‘தலை மயிரும் தால்லியமும்’– கதை முடிந்தது!

வேதியியல் பயிலும் மாணவர்களுக்கு உதவும் குறிப்புகள்:

Chemical symbol TI
Atomic number 81
Atomic weight 204.3833
Melting point 304 C
Boiling point 1457 C

 

–சுபம்–

 

Element of Murder and Agatha Christie! (Post No.5389)

 

COMPILED BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 3 September 2018

 

Time uploaded in London – 7-54 am (British Summer Time)

 

Post No. 5389

 

 

Some interesting information about the element Thallium is given below:

Thallium is not a rare element; it is ten times more abundant than silver.
1.Thallium was once part of medical pharmacopeia, being prescribed by doctors as a hair remover and given as a pre treatment for ring worm of the scalp. Thallium did not kill the ringworm, but it caused a patients hair to drop out, so that the condition could be more easily treated.

2.A radio- active synthetic isotope thallium-201, which has the half- life of 73 hours, is used in the diagnosis of heart disease.

3.Murder Mystery
Murderers who poison people may think they are in the clear once their victim has been cremated. However, in the case of Graham Young it provided him with no such protection. His case became a milestone in forensic detection because the ashes of Bob Eagle, one of his victims, were reclaimed and analyse d by a technique known as atomic absorption Spectormetry. This revealed a level of 5 p.p.m. of thallium. This was well above any natural level of this element in cremated remains, and proof that he had been poisoned with it.

4.Agatha Christie’s element of murder

Agatha Christie is often blamed for bringing thallium sulfate to the attention of would be poisoners. Her detective story The Pale Horse, which was published in 1961, described the symptoms of thallium poisoning. It showed how this could easily be attributed to other causes- in this case to black magic curses. In the 1980s and 1990s the Iraqi regime used thallium sulfate to dispose of its opponents, who appeared to die of natural causes.

Agatha Christie s fictional story may also have suggested thallium as a suitable
Poison to Graham Young, who, in 1971, put thallium sulfate into his workmates coffee at a factory at Bovingdon in Hertfordshire, England. Several workers were taken ill and two died of a mysterious illness. It was only when Young himself suggested that the cause might be thallium, that the strange illness was correctly diagnosed.

Young was arrested, tried and found guilty of murder in 1972 and sentenced to life imprisonment. He had been previously on trial for poisoning his family and ordered to be detained in a secure prison for the criminally insane, but he was released after appearing to respond successfully to psychiatric treatment. He committed suicide in 1990.

Rat Poison
5.Not all thallium deaths are malicious. Some are accidental, such as the incident in Guyana in 1987 which affected hundreds of people, of whom 44 died, when they drank the milk from cows that had eaten molasses which had been poisoned with thallium sulfate in order to kill sugar cane rats .

Chemical symbol TI
Atomic number 81
Atomic weight 204.3833
Melting point 304 C
Boiling point 1457 C

 


6.Who discovered it? Another controversy!

British scientist William crookes,1832-1919 observed some thing in his experiment new and named it thallium .
But French scientist Claude August Lamy did thorough research and extracted thallium metal and so French credited him with the discovery! He was awarded a medal by the London exhibition committee. He sent the metal ingots to London exhibition. Crookes became furious and campaigned to withdraw the medal through his magazine. Eventually the exhibition committee felt obliged to award Crookes a medal also.

— Subham—-

1324 திருப்புகழ் பாடல்களில் 857 சந்தங்கள்! (Post No.5388)

WRITTEN BY S NAGARAJAN

Date: 3  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 7-29 AM (British Summer Time)

 

Post No. 5388

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

1324 திருப்புகழ் பாடல்களில் 857 சந்தங்கள்! 178 தாள அமைப்புகள்!

 

ச.நாகராஜன்

 

அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,

 

“எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே” என்ற வாக்கால் கூறியுள்ளார்.

திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் பாடல்களில் ஒன்று இதை வலியுறுத்துகிறது :

 

அருணகிரி நாதர்பதி னாறா யிரமென்

றுரைசெய் திருப்புகழை யோதீர் – பரகதிக்கஃ

தேணி யருட்கடலுக் கேற்றம் மனத்தளர்ச்சிக்

காணி பிறவிக் கரம்

பதினாயிரம் திருப்புகழை ஓதி உணர்ந்தால், அது

பரகதிக்கு ஏணி

அருள் கடலுக்கு ஏற்றம்

மனத்தளர்ச்சிக்கு ஆணி

பிறவிக்கு அரம்.

அருணகிரிநாதரே திருப்புகழின் மஹிமையை இப்படி கூறியுள்ளார்:

 

சந்தம்

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்

தனத்தன தனத்தம் …… தனதான

பாடல்

 

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்

 

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்

 

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்

 

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்

 

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்

தகுத்தகு தகுத்தந் …… தனபேரி

 

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

தளத்துட னடக்குங் …… கொடுசூரர்

 

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா

 

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.

 

ஆம்,   சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு.

 

திருப்புகழ் நினைத்ததும் அளிக்கும்; மனத்தையும் உருக்கும்;

நிசிக் கருவறுக்கும் – பிறவாமல்

 

நெருப்பையும் எரிக்கும்;  பொருப்பையும் இடிக்கும்

நிறைப்புகழே திருப்புகழ்!

 

இது அருணகிரிநாதர் திருத்தணிகையில் அருளிய திருப்புகழ் வாக்கு.

கண்ட கண்ட ஆராய்ச்சிகளையெல்லாம் செய்யும் தமிழுலகில் உருப்படியான ஆராய்ச்சியைச் செய்துள்ளவர் முனைவர் திருமதி இ.அங்கயற்கண்ணி. திருப்புகழ் பாடல்களில் சந்தக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து சென்னை பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி பட்டத்தை  பெற்றுள்ளார்.

 

திருப்புகழிசை என்ற நூலில் முதல் முயற்சியாக 51 திருப்புகழ் பாடல்களுக்கு சந்த அமைப்பிக்கேற்றவாறு தாளங்கள் அமைத்து  அவற்றிற்குச் சுரதாளக் குறிப்புகளையும் தந்துள்ளார்.

போற்றப்பட வேண்டிய பெரிய முயற்சி. அரிய முயற்சி. வெற்றிகரமான முயற்சி.

திருப்புகழ் அமைப்பைப் பற்றித் தன் அரிய ஆராய்ச்சியின் வாயிலாக இவர் தரும் ஆய்வுத் தகவலில் ஒரு பகுதி இதோ:

 

 

“ திருப்புகழ்ப் பாடல்கள் கிருதி, கீர்த்தனை, பதம், ஜாவளி போன்ற இசை உருப்படிகளின் அமைப்பைப் போன்றல்லாது, பெரும்பான்மையான பாடல்கள் எட்டுப் பிரிவுகளைக் கொண்டதாக அமையக் காண்கிறோம். ஒரு குறிப்பிட்ட தலத்தில் உறையும் முருகப் பெருமானை எட்டுப் பிரிவுகளில் புகழ்ந்து பாடப்பெறும் “பதிக” மரபினை இதில் காண முடிகிறது. இதைக் கண்டிகை என்றும், சரணங்கள் என்றும் கூறலாம். சாதாரணமாக, ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு வரிகள், மூன்று வரிகள் அமைந்துள்ளன. சில பாடல்களில் ஒவ்வொரு பிரிவிலும் ஆறு, ஒன்பது மற்றும் 12 வரிகள் அமைந்துள்ளன.

 

 

சான்றுகள் :

விட மடைசு வேலை (4) ஒரு பிரிவில் இரண்டு வரிகள்

உனைத்தினந் தொழுதிலன் (7) ஒரு பிரிவில் மூன்று வரிகள்

சகடத்திற் குழையிட்டெற்றி (146) ஒரு பிரிவில் ஆறு வரிகள்

இதமுறு விரைபுனல் (353) ஒரு பிரிவில் ஒன்பது வரிகள்

விந்துப் புளகித (559) ஒரு பிரிவில் பன்னிரெண்டு வரிகள்

 

எட்டு வரி மற்றும் நான்கு வரிகளைக் கொண்ட சிறிய பாடல்களும் காண முடிகின்றது.

 

 

சான்றுகள் :

சந்ததம் பந்தத் (15)   – எட்டு வரிப்பாடல்

காலனிடத் தணுகாதே (388)  – நான்கு வரிப்பாடல்

 

திருப்புகழ்ப் பாடல்களில் ஒவ்வொரு பிரிவும் ஒரு குறிப்பிட்ட சந்தம் மூன்று முறை ஒரே சீராக மடங்கி வந்து இறுதியில், “தன தானா” என்னும் சந்த அமைப்புடைய தனிச் சொல்லுடன் முடிவுறுவதாக விளங்குகின்றது. இஃது தங்கப்பதக்கத்தில் அமைந்த ஒரு மதாணியைப் போல் விளங்குகின்றது. இசைமரபில் “தொங்கல்” என வழங்கப்படும்.

 

 

திருப்புகழ்ப் பாடல்களின் தனிப்பட்ட சிறப்பிற்கு ‘தொங்கல்’ என்னும் இவ்வமைப்பே காரணமாகும். இவ்வாறான தொங்கலே திருப்புகழை மற்ற இசை இலக்கியப் பாடல்களினின்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. இந்தத் தொங்கல் காணப்படும் இடத்தை வைத்தே பாடல்களில் பிரிவுகள் கணக்கிடப்படுகின்றன. அவ்வாறு கணக்கிடும்போது திருப்புகழில் எட்டுப் பிரிவுகளே வருகின்றன. பெரும்பான்மையான பாடல்கள், “பெருமாளே” என்ற தொங்கலுடன் முடிவுறுகின்றன.”

 

அடுத்து திருப்புகழில் உள்ள சந்த அமைப்புகளையும் தாள வகைகளையும் நுணுகி ஆராயும் அம்மையார் அங்கயற்கண்ணி தன் முடிவாகக் கூறுவது இது தான்:

“ இவ்வாறு திருப்புகழ்ப் பாடல்களை தாள இலக்கணத்தோடு தொடர்புபடுத்தி, ஆராய்ந்ததன் மூலம் மொத்தமாக 857 சந்தங்களும் அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன.”

 

அருமையான இந்தத் தகவலை இவரது ஆய்வு தந்து விட்டது.

நமக்குக் கிடைத்துள்ள 1324 பாடல்களில் 857 சந்த பேதம்; 16000 பாடல்களும் கிடைத்திருந்தால்….!!

 

தமிழுக்குத் தனியொரு பெருமையைத் தருவது திருப்புகழ்; பொருளாலும் சந்த அமைப்பினாலும், தாள வகைகளாலும், எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றிக் குமரனைத் தொழும் பக்தி அநுபூதியைத் தருவதாலும் திருப்புகழுக்கு ஈடு இணை இல்லை!

 

வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத

நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி

குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்

திருப்புகழைக் கேளீ ர் தினம்!

 

****

 

குறிப்பு: திருப்புகழிசை என்ற நூல் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 160 பக்கங்கள் கொண்ட இந்த நூலைப் பற்றி தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு எழுதித் தெரிந்து கொள்ளலாம்.

பாடல்களில் பிராக்கட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் பாடலின் எண்ணாகும்.

 

–subahm–

Tamil and Sanskrit names in Cambodian Inscriptions and Folktales (Post No.5387)

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 2 September 2018

 

Time uploaded in London – 15-10 (British Summer Time)

 

Post No. 5387

 

 

Tamil and Sanskrit names in Cambodian Inscriptions and Folktales (Post No.5387)
South East Asian countries were ruled by Hindu kings for over one thousand years. Influence of Sanskrit language is seen everywhere, but Tamil influence was not noticed by many. When I read two books written by Judith M Jacob, senior lecturer at SOAS, University of London, I made some marginal notes and I give them below:-

Slave names in Cambodian inscriptions have beautiful Tamil and Sanskrit names. Some musicians and dancers have very poetic names e.g Vasanta mallika, (spring jasmine) in Khmer inscription K 557.

We may compare it with the 400 beautiful names in Rajaraja Choza inscriptions in Thanjavur. He had given the names of all the 400 dancers employed in the big Hindu temple. Some of them are beautiful Tamil names and others were beautiful Sanskrit names.

Xxx


Slaves in Cambodia were treated as ‘goods’ possessed by an owner. They were gifted to temples along with lands and other goods.
A case suggesting two dependent parents is recorded on inscription K904,A1.23,
“me kandan, ta kandan ku Kandan” meaning mother of Kandan, father of Kandan.

Kandan is a Tamil name derivedfrom Sanskrit Skanda.
Va and Ku are used frequently in inscriptions, Va is Mr and Ku is Mrs or Miss.

In folk tales Kandhan , with Tamil spelling, Kam Raj, Krishna Kumar and Suvanna Kumar ( Swarnakumara) are used. Though these names are Tamilized Sanskrit words these are more common in Tamil Nadu than other parts of India.

 

Order of details in Inscriptions
Pre-Angkor inscriptions followed the same order in giving details like India. Here also we see Indian influence.
The date or name of the reigning king;
The title and name of donors;
The name of the god;
Names of the people from whom the donor obtained land to offer to the foundation;
The extent, location, capacity of the donated rice fields;
The names of the donated slaves with an indication of their duties;
Details of the subsistence given to the religious personnel;
Details of other lands given to the foundation, orchards, market, garden etc
List of precious objects given to the foundation;
The statement s that the revenues are to be combined with those of another foundation ;
Warning of punishment for anyone using or abusing the belongings of the foundation.

King Vikramaditya
‘Satra keng kantrai’ is a collection of legal tales known also in Laos, Thailand and Burma. In each case the dispute cannot be solved by a mere judge and has to be referred to the king. His judgments are wise and fair. When two women claim to be the mother of one child, for example, he settles the case very much as Solomon did.
It is like our Vikramaditya, a wise and just king.

 

Tamil Anangu
The frequent appearances in the stories of spirits ‘anak ta’ always associated with a specific locality such as a strangely shaped tree trunk or huge rock may be compared with ‘Thaakku Anangu’ in Sangam Tamil literature and Brahmarakshas in Sanskrit literature. This shows clear Indian influence. (Thaaku Anangu= Anak Ta)

When we look at all these stories we come across Sanskrit or Tamil words or parallel Indian stories. That shows even Solomon’s stories are borrowed from India and adapted.

Dhananjay
‘Themen Chey’ is a story known in Cambodia, Burma and Thailand. It is the corrupted form of Dhananjayan, one of the popular names of Arjuna. Also a common name among business community of Tamil Nadu. In the story, he is a poor boy who rises first to be the servant of a rich man, then to attend upon the king, and finally to be the most eminent man in the land.

–subham–

 

நிழல் அதிசயம்- ஹிந்து விஞ்ஞானம் (Post No.5386)

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 2 September 2018

 

Time uploaded in London – 7-08 am (British Summer Time)

 

Post No. 5386

 

இந்துக்கள் ஏராளமான வழிகளில் எதிர்காலத்தை அறிவர். காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994), ரிக் வேத பண்டிதர் கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சா ஸ்திரிகளை அழைத்து தன் கையில் அக்ஷதையைப் போடச் சொல்லி, அதை எண்ணி, தானெவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என்று கண்டு பிடித்ததை முன்னர் எழுதியுள்ளேன்.

 

நாடி ஜோதிடம் உண்மை என்றும் இதை நாஸா (NASA, USA) விஞ்ஞானிகள் ஆராய வேண்டும் என்றும் எழுதினேன். நூற்றுக்கு 90 சதவிகித நாடி ஜோதிடர்கள் பித்தலாட்டக் காரர்கள் என்ற போதிலும், கையின் அமைப்பைப் பார்த்தே ஒருவர் பிறந்த வருடம், இடம்  முதலியவற்றைக் கண்டுபிடிக்கும் விஷயம் நாடி ஜோதிடத்தில் இருப்பதை எழுதினேன்.

 

பெரிய சைவ ஆசார்யர்களும் கூட புத்தகத்தில் நூலை நுழைத்து (ROPE OR THREAD ASTROLOGY)  அந்தப் பக்கத்தில் வரும் செய்தியைக் கொண்டு, குழந்தை பிறக்கும் என்று சொன்ன செய்தியை ஒரு கட்டுரையில் தந்தேன்.

ஒற்றைத்த் தும்மல் ;போட்டால் ஆகாது; இரட்டைத் தும்மல் கேட்டால் காரியம் சித்திக்கும் என்பதை அறிவோம்.

 

மீனாட்சி கோவில் போன்ற இடங்களி வரையப்பட்ட தாமரை போன்ற சிற்பத்தில் கைவைத்து காரியம் கைகூடுமா என்று கண்டு பிடிப்பது பற்றியும் எழுதினேன்.

 

கிளி ஜோதிடம், பஞ்சபக்ஷி சாத்திரம், வராஹமிஹிரரின் கருங்குருவி ஜோதிடம், பல்லி சொல்லுக்குப் பலன், ஸீதாராம சக்ரம், எண் ஜோதிடம், கை ரேகை ஜோதிடம், ஜாதக ஜோதிடம், முகத்தைப் பார்த்து சொல்லும் (FACE READING) ஜோதிடம், குற வஞ்சி குறி சொல்லுதல், சாமி ஆடுவோர் குறி சொல்லுதல்– வெற்றிலையில் மாயக் கறுப்பு மை தடவி பார்த்தல்— இப்படி எண்ணற்ற வகைகளைத் தந்தேன்.

 

நேற்று மூச்சுக் காற்று ஓடும் திசையை வைத்து நீங்களே ஆரூடம் சொல்லலாம் என்று எழுதினேன்

இப்போது இன்னும் ஒரு அதிசயச் செய்தியக் காண்போம்

கீழ்கண்ட தகவல் பிரபஞ்ச உற்பத்தி என்னும் 1900ம் ஆண்டு நூலில் உளது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்த பார்ப்பது அவஸியம்.

 

முனிசாமி முதலியார் 1900ல் வெளியிட்ட பிரபஞ்ச உற்பத்தி நூலில்

சாயா தெரிசனக் குறிப்பு

 

“ஆகாயத்தில் மேக மறைவுகளில்லாமல் பரிசுத்தமாய் வெய்யில் காணும்போது, பூமியில் மேடு பள்ளம் இல்லாத இடத்தில் நின்று கொண்டு, தன்னுடைடைய நிழல் ஐந்து அடி முதல் பத்து அடி நீளத்திற்கு உட்பட்ட தருணத்தில்,  த்னது நிழலின் முகமாக பார்த்தபடி நின்று, , அந்த நிழலின் கை, கால், தலை, கழுத்து இவ்வுறுப்புகளில் ஒன்றை கண் சிமிட்டாமல், கால் அல்லது அரை நாழிகை மட்டும் பார்த்து (ஒரு நாழிகை 24 நிமிடம்), அப்படியே ஆகாயத்தை நோக்கிப் பார்க்கவும்.

 

ஆகாயத்தில் அவன் உருவம் தோன்றும். அவ்வுருவமானது பொன் நிறமாக இருந்தால் அவனுக்கு செல்வம் வரும்.  வெண்மையாக இருந்தால் பிராண பயமில்லை; ஆயுள் வளரும். செம்மை நிறமாகில் மனக்குறை, சஞ்சலம், அபாண்டம் சம்பவிக்கும். கருமையாகில் தேக நலன் கெடும். அன்றியும் அவ்வுருவில் கை அல்லது  காலாவது தோன்றாமல் இருந்தால் ஆறு மாதத்தில் மரணம் உண்டாம். இதுவுமன்றி தலையே தோன்றாமல் கவந்தமாய் தோன்றினால்  மூன்று மாதத்தில் மரணம்.

 

இம்மதிரியாய் சந்திரனிலும் பார்ப்பதுண்டு.

இதற்கு ‘சாயா புருஷ தரிசனம் என்று சொல்லுவார்கள்.

 

இச்சாயா தெரிசனத்தை இடைவிடாமல் 12 வருஷம் பார்த்துக் கொண்டு வந்தால் தன் முன் நிற்கும் நிழல் தன்னுடன் பேசும். அப்படிப் பேசும் பருவம் நேரிடுங்கால்,  அதன் முகாந்திரமாய் அட்ட மா சித்தும் (அஷ்ட மஹா சித்தி) பெறலாகும். பெருவதன்றிப் பின்னும் சில நாட்களில் தன்னிழல் உருவமாகித் தன்னுடனே  திரியும். படுத்தால் தானும் படுக்கும் எழுந்தால் தானும் எழும்பும்; அன்றியும் இவனுக்கு நேரிடும் நன்மை தீமைகளை முன்னதாக தெரிவிக்கும். இன்னும் அநேக அற்புதங்களை விளைவிக்கும் என்று  பெரியோர் சொல்லுகிறார்கள்”.

 

XXX

இவற்றையெல்லாம் அறிவியல் ரீதியில் ஆராய பணம் வேண்டும். மேலை நாட்டு மருத்துவக் கம்பெனிகள் புதிய மருந்துகளைச் சோதிக்க பெரிய ஆராய்ச்சி அமைப்புகள் வைத்துள்ளன. தனிப்பட்ட முறையில் செய்யும் ஆராய்ச்சிகளையும் விலைக்கு வாங்கி தாங்களும் அதை மெய்யெனக் கண்டு பிடித்து, மருந்து மாத்திரைகளைத் தயாரித்து கோடி கோடியாச் சம்பாதிக்கின்றனர். நம்மிடம் பணம் இருந்தால் நாமும் முறையான ஆராய்ச்சிகளைச் செய்து முடிவுகளை வெளியிடலாம. பல ஊர்களில் தல மரங்கள் (ஸ்தல வ்ருக்ஷங்கள்) இத்தனை ஆயிரம் ஆண்டுப் பழமை என்றெலாமெழுதி வைக்கின்றனர். தற்காலக் கருவிகளைக் கொண்டு இவற்றின் வயதை எளிதில் காணாலாம். புத்தரின் பல் (TOOTH) என்று கண்டி முதலான இடங்களில் வைத்துள்ளனர் . அதை அறிவியல் முறையில் ஆராய்ந்து வயதைக் கண்டு பிடிக்கலாம். புத்தர் வாழ்ந்ததாக கூறப்படும் ஆண்டுகளில் 600 ஆண்டுகள் வரை வேறுபாடுள்ளது. ஒரு தரப்பினர் சொல்லுவது போல அவர் கி.மு 1400 வாக்கில் வாழ்ந்தார் என்று நிரூபிக்கப்பட்டால் இந்திய வரலாறே தலைக் கீழாக மாறும். ஆராய்ச்சி செய்ய மனமும் பணமும் தேவை!

–சுபம்–

சிலையை வைத்து வழிபடலாமா – இஸ்லாமியரின் கேள்வி (Post No.5385)

WRITTEN BY S NAGARAJAN

Date: 2  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-45 AM (British Summer Time)

 

Post No. 5385

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

சிலையை வைத்து வழிபடலாமா – இஸ்லாமியரின் கேள்வி – ரமண மஹரிஷியின் பதில்!

 

ச.நாகராஜன்

 

ரமண மஹரிஷியிடம் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வருவோர் ஏராளம். இடக்காக கேள்வி கேட்டு அவரைத் திணற வைக்க வேண்டும் என்று வருவோரும் உண்டு.

அவரவர்க்கு அவரவர் பாணியில் பதில் தருவது பகவானின் விசேஷ சமத்கார திறன்.

 

இரு சம்பவங்களை இப்போது இங்கு பார்க்கலாம்.

இஸ்லாமியர் இருவர் மஹரிஷியிடம் வந்தனர். அவர்களுள் ஒருவர் சம்பாஷணையைத் தொடங்கினார்.

இஸ்லாமியர் : கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி : அப்படி என்று யார் சொன்னது?

இஸ்: நல்லது, அப்படியானால் கடவுளுக்கு உருவம் இல்லை என்றால் சிலையை வைத்து வழிபடலாமா?

மஹ: கடவுளை விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் யாருக்கும் புலனாகாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

 

இஸ்: ஆம். என்னை இன்னார் என்று சொல்ல முடியும்.

மஹ: அப்படியானால் நீங்கள் அங்கங்களை எல்லாம் கொண்ட ஒரு மனிதர். ஆறடி உயரம் கொண்டவர், தாடி கொண்டவர், இல்லையா?

 

இஸ்: நிச்சயமாக.

 

மஹ: அப்படியானால் ஆழ்ந்த உறக்கத்தின் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?

 

இஸ்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கியதாக உணர்கிறேன். ஆகவே ஊகத்தின் அடிப்படையில் தூக்கத்திலும் நான் இருந்ததாக உணர்கிறேன்.

 

மஹ: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு உடலை ஏன் புதைக்க வேண்டும். உடல் தன்னை புதைப்பதை எதிர்த்து புதைக்கக் கூடாது என்று மறுக்க அல்லவா வேண்டும்?

இஸ் : இல்லை, நான் நுண்மையான உயிராக பரு உடலில் இருக்கிறேன்.

 

மஹ: ஆகவே உண்மையில் நீங்கள் உருவமற்றவர் என்பதை அறிகிறீர்கள். ஆனால் இப்போது உங்களை உடலுடன் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள். நீங்கள் உருவமுடன் இருக்கும் வரையில்  உருவமற்ற கடவுளை உருவமுள்ளவராக ஏன் வழிபடக் கூடாது?

 

கேள்வி கேட்ட இஸ்லாமியர் விழித்தார். முழித்தார்.

29-12- 1935 தேதியிட்ட குறிப்பில் முனகல வேங்கடராமையா Talks with Sri Ramana Maharishi – Volume I  என்ற நூலில் முன்னர் நடந்த சம்பாஷணை ஒன்றைத் தந்துள்ளார் இப்படி.

ரமணரை மடக்க வேண்டும் என்று வருவோர் அவரது பதிலால்  திணறுவதும் திருப்தியுறுவதும் வழக்கம்.

*

 

இன்னொரு சுவையான சம்பவம்:

 

ஒருநாள் இளைஞன் ஒருவன் மஹரிஷியிடம் வந்தான்.

இளைஞன்: ஸ்வாமி! ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில் நிர்விகல்ப சமாதியில் இருக்கச் செய்தது போல் மஹரிஷியும் நிர்விகல்ப சமாதியில் என்னை நிலைபெறச் செய்ய முடியுமோ?

இதைக் கேட்டவுடன் மஹரிஷி, “கேட்பது விவேகானந்தர் தானோ?” என்றார்.

 

கேள்வி கேட்ட இளைஞன் வாயடைத்து நின்று விட்டான். பின்னர் சென்று விட்டான்.

*

கேட்பவர்க்கு கேட்கும் பாணியில் பதில் தரும் மஹரிஷியின் Artless Art of Repartee – சுடச்சுட பதில் தரும் கலை – வியக்க வைக்கும் ஒன்று. இப்படி ஏராளமான பதில்களில் பெரிய ஆன்மீக விளக்கங்களும் இடம் பெறும்.

***

 

 

HINDUS’ NEW METHODS OF FORTUNE TELLING! (Post No.5384)

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 1 September 2018

 

Time uploaded in London – 20-23 (British Summer Time)

 

Post No. 5384

 

 

HINDU SCIENCE: DO YOU WANT TO BE A SOOTHSAYER OR A FORTUNE TELLER?

 

Let us look at two new Hindu methods of sooth saying today; very easy to follow. You can master it very quickly!

 

Hindus have several methods of predicting one’s future. I have already given details about rope trick astrology, lizard predictions, black bird predictions, parrot astrology, sea shell (Prasnam) astrology, face reading, palmistry, amazing Nadi Jothidam (palm leaf reading), Sneezing predictions, Five Bird (Pancha Pakshi Shastra) Astrology and horoscope reading. Probably Hindus are the only race that has so many prediction methods. In addition to these approved methods there are some voodoo methods as well. Instead of crystal gazing they will look at a betel leaf tarred with special black ink! We can call it Betel Leaf Gazing!

 

if you hear one sneeze it is bad; if any one sneezes twice it is a positive sign. And then there are predictions on the basis of Fox crossing your way, crow flying above, cat crossing your way, white necked eagle (Garuda) flying above etc.

 

Now I want to tell you something I Have read yesterday in the British Library in London. It is a Tamil book published in 1901. We had a book in our house in Madurai titled ‘Swarodaya Vinjanam’. Unfortunately, I lost it. Now I have got a very brief description of what was in the lost book.

How to predict:

Hindus believe that our breathing alternates in the two nostrils. If you closely watch your breathing, the breathing is done through one nostril for some time and then it changes to another nostril. Sometimes the air goes in and comes out using both the nostrils.

 

Hindu scriptures say breathing starts with right nostril at 6 am in the morning and then it changes to left at 8 am. it alternates like this every two hours. If someone comes to you and asks some advice, you check your breathing. If it is done through your right nostril and the person who asked your advice also stands on the same side, you say, ‘YES, YOU WILL WIN’, ‘YOU WILL BE SUCCESSFUL’, ‘DO IT’, ‘GO AHEAD WITH YOUR PLAN’ etc.

Possible questions:

Can I buy a new car now? new house now?

Can I go abroad?  send an application now?

Can I get a promotion in my job?

Can I win the election?

Can I get married now?

Will I get my lost property?

Can I win the court case? etc

 

When your breathing is done by left nostril and the person stands on the left side, then you say Yes.

 

But if the person stands on the opposite side to your breathing nostril; you tell the person not to do it. If the breathing is done by both nostrils also, it is NOT a positive answer. The Right nostril is called Sun Part (Pingalai) and the left side is called Moon Part (Ida Kalai in Tamil). The central part (both nostrils) is called Sushumna or Suzu Munai in Tamil.

One more rule is there! The person should be standing or sitting below your level. You should be in a raised seat or higher level.

 

This looks very strange. Someone has to prove it scientifically or disprove it. But all Hindus have certain basic rules for practising astrology or any science. You must be selfless and follow purity in ‘word, deed and thought’. It is called Tri Karana Suddhi (Three Dimensional Purity). If someone practises a Hindu science whether it is medicine or astrology without that purity, the very same science will bring the person down. Every day we read in newspapers that this ascetic was arrested that ascetic was jailed. This is because the moment you get some extraordinary powers the angels in charge of them will send you temptations. You will naturally become greedy or wish something bad i.e. abuse of women or abuse of power or becoming greedy. That is the end of you!

 

These prediction methods are in our books for very long. Nothing new. I repeat what I have read yesterday in the British Library.

Shadow Science Mystery

This is the second method; it will sound like some science fiction story!

It is called Chaya Darsan Prediction (Shadow Watching/seeing)

When the sky is clear and the sun is shining bright and when you can see a long shadow of you i.e. five to ten feet long, you look at it facing the same direction of your shadow. If you watch it for ten or 15 minutes from head to foot (of your shadow) and look up in the sky you will see your figure in the sky. If it is of golden colour, you will get lot of money or property. If your figure in the sky is of white colour, then you will be healthy and have a long life. If you see it in red colour, something bad will happen and if it is in black colour it is very bad for your health or life. If nay part of the body is missing in the figure, it is a life threatening sign. Some people look at moon and follow the same predictions.

 

If someone practises this art for 12 years, the shadow will communicate with you. It will speak to you and come with you. Once it starts talking to you,  you will get the Ashta Ma siddhi (Eight Paranormal Powers). The shadow will sit with you, walk with you and lie down with you. It will warn you any dangers that may come to you. And you can do miracles.

 

This looks like a fairy tale story. But one has to practise it. Looking at moon on certain days in a month is part of Hindu religious ceremony. If one sees 1000 crescent moons in one’s life, a big celebration is organised for that person. Probably this is also part of that Chaya Darsan.

Sometime ago I wrote that NASA scientists of USA must do some research about Hindu Nadi Jothidam. Though most of the Nadi Jyoshya astrologers are frauds nowadays, there is a big science in it. By looking at one’s hand they can tell your birth day and name. So we need some scientific research on such strange astrological methods. I wish I get some funding for such research!

 

–subham–

 

 

கம்போடியாவில் கந்தன், காமராஜ்! (Post No.5383)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 1 September 2018

 

Time uploaded in London – 9-09 am (British Summer Time)

 

Post No. 5383

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கந்தன், காமராஜ் பொன்ற பெயர்கள்  தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாகக் காணப்படும்  பெயர்கள்;  இந்தப் பெயர்கள்  ஸம்ஸ்ருதச் சொற்கள் என்றாலும் தமிழ்நாட்டில் நிறைய புழக்கத்தில் உள்ளது. இந்தப் பெயர்களும்  ஏனைய சில பெயர்களும் கம்போடியா நாட்டிலும் உள்ளன.  இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு நிலவிய தமிழர்களின்  செல்வாக்கைக் காட்டும்.

 

லண்டன் (SOAS) பல்கலைக்கழகத்தில் சீனியர் விரிவுரையாளராக வேலை செய்த ஜூடித் ஜாகப் (CAMBODIAN LINGUISTICS, LITERATURE AND HISTORY BY JUDITH JACOB AND EDITED BY DAVID A SMYTH) எழுதிய புஸ்தகத்தை நான் ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் இதோ:

 

ஒரு கல்வெட்டில் ‘மே கந்தன், தா கந்தன், கு கந்தன்’ என்று வருகிறது – இதன் பொருள் கந்தனின் தாய், கந்தனின் தந்தை, அவர்களுடைய மகன் கந்தன் என்பதாகும்.

 

(வா என்பது திரு, கு என்பது குமாரி அல்லது திருமதி)

 

கம்போடியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் நாட்டுப்புற கதைகளில் தனஞ்ஜயன் (அர்ஜுனனின் பெயர்) மிகவும் அடிபடும். கிட்டத்தட்ட தெனாலிராமன் கதைகள் போல பல நிகழ்ச்சிகள் இருக்கும்.

 

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ‘தாக்கு அணங்கு’ கம்போடிய கதைகளிலும் உண்டு . காடு, மலை, மரம், ஏரி, குளம் ஆகியவற்றை ஆக்ரமிக்கும் பிரம்ம ராக்சஸ் போன்றவை அணங்கு என்னும் தேவதைகள்

 

ஒரு நாட்டுப்புற கதையிலும் கந்தன் வருகிறான்.

 

இதோ அந்தக் கதை:-

பிரம்ம தத்தன் என்ற அரசனின் மனைவி பெயர் காக்கி. (கார்கி என்பவள் உபநிஷத்தில் வரும் புகழ்பெற்ற பெண்மணி). கருடர்களின் அரசனுடன் ராஜா, சதுரங்கம் விளையாடுவான். அவன் காகியைக் காதலிக்கத் துவங்கினான். அரசனுக்குத் தெரியாமல் காதல் சமிக்ஞைகளைச் செய்வான். அவளும் காதல் வலையில் விழுந்தாள். ஒருநாள் கருட அரசன் ஒரு புயலை உருவாக்கி, எல்லோரும் பயந்துகொண்டு இருந்த சம்யத்தில் ராணியை அணுகி தன்னுடைய நாட்டுக்கு வரும்படி வலியுறுத்தினான். அரசனுக்கு நடந்தது தெரியாது. புயல் ஓய்ந்த பின்னர் கருட அரசன் வழக்கம்போல சதுரங்கமாட வந்தான். அரசனுக்கு அவன் மீது சந்தேகம் ஏற்படவே தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி கந்தனை அழைத்து ஒரு பூச்சி ரூபத்தில் கருடனுன் போய், ரஹஸியத்தை அறிந்து வா என்று அனுப்பினான்

அங்கே கந்தனும் காக்கியைக் காதலித்தான்; பின்னர் திரும்பி வந்தான்; மறு நாளன்று வழக்கம்போல கருட ராஜா ‘செஸ்’ விளையாட வந்தபோது யாழ் வாத்தியத்தையும் வாசித்தனர். அப்போது காக்கியின் வேசித்தனத்தையும் ஏசினர் (கந்தனும் அவனுடைய ராஜா பிரம்மத்ததனும்).

 

கருட ராஜாவுக்குக் கோபம் வரவே அவளைத் திருப்பிக் கொண்டுவந்து விட்டான். பிரம்மதத்தனும் அவள் மீது கோபம் கொண்டு ஒரு படகில் வைத்து நதியில் அனுப்பிவிட்டான்.

 

இந்தக் கதையிலும் கந்தன் என்ற பெயர் தமிழ் வழக்குப்படி ‘கந்தன்’ என்றே வருகிறது; ‘ஸ்கந்த’ என்பது ஸம்ஸ்க்ருத மூலம்.

காமராஜ், அருண்ராஜ்

 

மற்றொரு கதையில் காமராஜ், அருண்ராஜ் என்ற பெயர்கள் வருகின்றன. இன்னொரு கதையில் கிருஷ்ணகுமார், சுவண்ண (ஸ்வர்ண) குமார் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

 

ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்றபோதிலும் அவை தமிழர் பயன்படுத்தும் வடிவத்தில் இருப்பது தமிழ் மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.

 

 

 

 

அடிமைகளின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்

 

அங்கோர் ஆட்சிக்கு முந்தைய கம்போடியாவில் (Pre-Angkhor) படித்த மக்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையே பயன்படுத்தினர். அப்படிப்பட்ட பெயர்கள் அடிமைகளாக இருந்தவர்களிடமும் காணப்படுகின்றன. ‘வசந்த மல்லிகா’ என்பது ஒரு அடிமைப் பெண்ணின் பெயர்.

 

அடிமைகள், நாம் பயன்படுத்தும் பலசரக்கு சாமான்களைப் போல,

நடத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் எப்படி அடிமை ஆயினர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.

 

கோவிலுக்கு தானம் செய்யும் போது இத்தனை அரிசி மூட்டை அல்லது நிலம், இத்தனை அடிமை என்று எழுதப்பட்டது.

 

 

இந்தியாவில் காணப்படும் கல்வெட்டுகளைப் போலவே, கம்போடியக் கல்வெட்டுகளில் பின்வரும் தகவல்கள் இருக்கின்றன:

 

1.ஆளும் அரசனின் பெயர் அல்லது ஆண்டு;

2.தானம் செய்வோரின் பெயர்கள், பதவி;

3.எந்தக் கடவுளுக்கு தான்ம்

4.யார் யார் கொடுத்ததை அறக்கொடைக்கு எழுதுகின்றனர்.

5.அறக்கொடைக்காக அப்படி நிலத்தை விட்டுக் கொடுத்தோருக்கு என்ன நஷ்ட ஈடு அளிக்கப்பட்டது;

6.தானம் செய்யப்பட்ட நிலங்களின் பரப்பு

7.நிலத்துடன் தானம் செய்யப்பட அடிமைகளின் பெயர், அவர்கள்

செய்யப் போகும் வேலை;

8.குருமார்களுக்கான ஊதியம்

9.அறக்கொடை நிறுவனங்களுக்கு இத்தோடு கூடுதலாகத் தரப்படும் நந்தவனம், கடை முதலியன.

10.கொடுக்கப்படும் வேறு விலையுயர்ந்த பொருட்கள்

11.வருவாயை என்ன செய்வது, எப்படிச் செலவிடுவது;

12.எவரேனும் இந்த தானத்துக்குப் பாதகம் செய்தால் அவருக்குக் கிடைக்கும் தண்டனை.

இந்தக் கல்வெட்டு அமைப்பும் இந்தியாவின் செல்வாக்கைக் காட்டுகிறது. தமிழ்க் கல்வெட்டுகளும் இதே வரிசையில் விஷயங்களைத் தருகின்றன.

 

–சுபம்–