உயர்தோளா!
செயல்களின் முடிவு நிலையைக் காட்டும் ஸாங்கியத்தில் எல்லாச் செயல்களின் வெற்றிக்கும் கூறப்பட்டுள்ள
இந்த 5 காரணங்களையும் என்னிடமிருந்து
உணர்வாய் (18-13)
அதிஷ்டானம்
ததா கர்த்தா காரணஞ்ச ப்ருதக்விதம்
விவிதாஸ்ச
ப்ருதக் சேஷ்டா தைவஞ் சைவாத்ர பஞ்சமம்
பகவத்
கீதை – 18-14
இருப்பிடமாகிய
உடலும், அவ்வாறே செயலைச் செய்பவனும், வெவ்வேறாண கருமேந்திரியங்களும்
ஞானேந்திரியங்களும் செய்யும் செயல்களும் ஐந்தாவதாக தெய்வமும்
சரீர
வாங்மனோபிர் யத் கர்மப்ர்ராரபதே நரஹ
ந்யாய்யம்
வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவஹ
—பகவத் கீதை 18-15
சரீரத்தாலும்
வாக்காலும் மனத்தாலும் நியாயமாகவோ, அநியாயமாகவோ எந்தச் செயல் செய்தாலும் அவை கரும பலனுக்கு
காரணங்களாகும்.
ஐந்து
காரணங்களில் ஒன்றான தெய்வம் எப்படிச் செயலாற்றும் என்பதற்கு ராமகிருஷ்ண மடம்
வெளியிட்ட பகவத் கீதை உரையில் அண்ணா சொல்லும் கதை:–
ஒரு பெண் புறா தன் நாயகனைப் பார்த்து
“நமது முடிவு காலம் வந்துவிட்டது; வேடன்
ஒருவன் வில்லையும் அம்பையும் ஏந்திக் கீழே நிற்கிறான்; மேலே வல்லூறு வட்டமிடுகிறது” என்று பயந்து
கூறிக்கொண்டிருக்கையில் ஒரு பாம்பு அவ்வேடனைக் கடித்தது; அவன் விட்ட அம்பு குறி தவறி வல்லூறைக் கொன்றது; புறா தப்பிப் பிழைத்தது. விதியின் போக்கு வெகு அதிசயம்.
ஹிந்து பண்பாட்டின் சிகரமாக விளங்குபவை நமது ஆலயங்கள். அற்புதமான
அமைப்பைக் கொண்டிருக்கும் ஆலயங்களில் ஒரு அதிசயமாக விளங்குபவை சூரிய பூஜை ஸ்தலங்கள்.
சிவன் கோவில்களில் சூரியனுக்குத் தனி இடம் ஒன்று உண்டு. சிவ
பூஜையில் சூரிய பூஜைக்குத் தனியான இடம் உண்டு.
சூரியனுக்கென்றே தனியாகக் கோவில்களும் உண்டு; சில சிவன் கோவில்களில் தனி இடமும் உண்டு.
SUN TEMPLE AT MODHERASUN LIGHT DOING WONDERS AT PONDY VARADARAJA PERUMAL TEMPLE
சூரியனைத் தொழுவதால் பாவம் தொலையும்; புண்ணியம் சேரும்; ஆக இது
இனி வரும் பிறவிகளுக்கான நல்ல ஒரு அஸ்திவாரமாக அமையும்.
சூரிய வழிபாடு உடல் நலத்தை வாழ்நாள் முழுவதும் சீராக இருக்கச்
செய்து பூரண ஆயுளை நல்கும். சூரிய நமஸ்காரம் நல்ல பல உடற்பயிற்சிகளை முறையாகத் தொகுத்து
நம்மை மேம்பட வைக்கும் ஒரு யோகா பயிற்சி.
அடுத்து சூரிய வழிபாடு எதிரிகளை அழிக்கும். புற எதிரிகளையும்
அழிக்கும், அகத்திலே தோன்றுகின்ற காம, க்ரோதம் போன்றவற்றையும் அகற்றும்.
அது ஜயத்தைத் தரக் கூடியதும் கூட. இராமரே அகஸ்தியரால் ஆதித்ய
ஹ்ருதயம் உபதேசிக்கப்பட்ட பின்னரே இராவணனை அழிக்கிறார்.
பரம மங்களகரமானது. ஐஸ்வர்யத்தையும், பல சித்திகளையும் நல்க வல்லது.
ஒரிஸாவில் புவனேஸ்வரத்திற்கு அருகில் அமைந்துள்ள கொனார்க் சூரிய
கோவில் கற்களினால் அமைந்தது. அற்புத சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டது.
குஜராத்தில் உள்ள மெசேனா மாவட்டத்தில் புஷ்பவதி நதி தீரத்தில்
மொதிராவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சூரியன் கோவில் ஒரு உலக அதிசயம்.
இரவும் பகலும் சம கால நேரங்களாக வரும் மார்ச் 21 மற்றும் செப்டம்பர்
21 ஆகிய நாட்களில் (Spring and Autumnal Equinoxes) சூரிய ஒளி நேராக
மூலக் கோயிலில் விழுகிறது. அதாவது சூரிய பூஜை நிகழ்கிறது.
இப்படி சூரிய ஒளி நேராக கர்பக்ருஹத்தில் விழுந்து சூரியன் இறைவனை
பூஜிக்கும் ஸ்தலங்கள் பாரதம் நெடுக ஏராளம் உண்டு.
தொகுப்பின் ஒரு பெரிய கலைக்களஞ்சியமாகி விடும்.
சூரியன் பூஜித்த தலங்கள் 12.
1.கேதாரம்
2. திருக்கோலக்கா – சூரிய புட்கரிணி; கார்த்திகை ஞாயிறு விசேஷம்
3. திருவெண்காடு – சூரிய புட்கரிணி; ஆவணி ஞாயிறு விசேஷம்
இவற்றில் சூரியனுக்கு ஆலயமுள்ள இடங்கள் – மீயச்சூர்,
திருநாகேஸ்வரம், குடந்தைக் கீழ்க்கோட்டம் ஆகியவை.
சூரியன் பூஜித்த இதர ஸ்தலங்களில் குறிப்பிடத்தகுந்தவை
– இன்னம்பர் ( இனன் என்றால் சூரியன்), திருவையாறு, திருத்தானமுடையார் கோயில், திருக்கழுக்குன்றம்,
பருத்திநியமம், ஆடானை
தமிழ்நாட்டில் சூரிய ஒளி மூலக் கோயிலில் விழும் கோயில்கள் பல. மாதவாரியாக அப்படி அதிசய நிகழ்வு ஏற்படும் ஸ்தலங்களின் பட்டியல் வருமாறு :
சித்திரை
1,2,3 தேதி கூடலை ஆற்றூர்
1 முதல் 7 தேதி புறவார் பனங்காட்டூர்
5,6,7 தேதி ஆடுதுறை
7 முதல் 18 முடிய 12 நாட்கள் செம்பொன்பள்ளி
11,12,13 தேதி குடந்தைக் கீழ்க்கோட்டம் – நாகேஸ்வர ஸ்வாமி
புரட்டாசி
7,8,9 தேதி பைஞ்ஞீலி
19,20,21 தேதி புள்ளிருக்கு வேளூர் (மாலையில்)
19,20,21 கடவூர் (மாலையில்)
ஐப்பசி
9 முதல் 15 முடிய (7 நாட்கள்) எத்தாப்பூர் சாம்பமூர்த்தி கோயில்
14ஆம் தேய்பிறை நாள் முதல் 7 நாட்கள் நெல்லிக்கா (மாலையில்)
மாசி
1 முதல் 7 முடிய 7 நாட்கள் எத்தாப்பூர் சாம்பமூர்த்தி கோயில்
13,14,15 கண்டியூர்
(மாலையில்)
17 முதல் 21 முடிய 5 நாட்கள் குன்றத்தூர் (சேக்கிழார்)
18 முதல் 24 முடிய 7 நாட்கள் நெல்லிக்கா (மாலையில்)
19,20,21 புள்ளிருக்கு வேளூர் (மாலையில்)
21 முதல் 25 முடிய 5 நாட்கள் பூந்தமல்லி வைத்தியநாதர்
23,24,25 அழுந்தூர்
பங்குனி
1 முதல் 7 முடிய 7 நாட்கள் மாயூரம் வள்ளலார் கோவில் (மாலையில்)
7,8,9 பைஞ்ஞீலி
12,13,14 சித்தூர் மாவட்டம் நாகலாபுரம்
13 முதல் 22 முடிய 10 நாட்கள் தெளிச்சேரி (மாலையில்)
13,14,15 வேதிகுடி, திருத்தணி ஆறுமுகசாமி
23 முதல் 27 முடிய 5 நாட்கள் நாவலூர்
25 முதல் 29 முடிய 5 நாட்கள் மாயூர வட்டம் பொன்னூர்
மேற்குறித்த தேதிகளுக்கு ஆதாரமாக இருப்பவை சிவத்தல மஞ்சரியும்
பஞ்சாங்கங்களும் ஆகும்.
இன்னும் மதுரை, லால்குடி, காவிரி தென்கரையில் உள்ள கண்ணம்பாடி
அருகில் உள்ள இடத்துறை என்பன போன்ற இடங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
திருப்பனந்தாளில் சூரிய தீர்த்தம் புழுதிகுடி மடத்திற்குப் பின்னால்
உள்ளது.இங்கு பைரவர் காவலாக இருக்கிறார். சூரியன் பூஜித்தது பாஸ்கர லிங்கம்.
மதுரை மாரியம்மன் கோவிலின் அருகில் அமைந்துள்ள முக்தீஸ்வரர்
கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி முடிய, செப்டம்பர்
மாதம் 18ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி முடிய சூரிய ஒளிகிரணம் மூலவர் மீது விழுகிறது.
ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த நாட்களில் கூடுவது வழக்கமாகி விட்டது!
இன்னும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சூரியனார் கோவில்
உள்ளிட்ட புகழ் பெற்ற தலங்களின் பெருமையைச் சொல்ல ஆரம்பித்தால்
முடிவே இருக்காது. சூரிய என்சைக்ளோபீடியா தான் தயாரிக்க வேண்டும்!
இப்படிப்பட்ட கோவில்களின் சிற்ப அமைப்பை யாராலும் வியக்காமல்
இருக்க முடியாது.
சூரியனின் ஒளிக்கிரணங்கள் நேராக மூலவர் மேல் விழும்படி எப்படி
சிற்பிகள் கோவிலை நிர்மாணித்தனர், கிழக்கு நோக்கிய கோவில்களில் காலையிலும் மேற்கு நோக்கிய
கோவில்களில் மாலையிலும் காலம் காலமாக இன்று வரை சூரிய கிரணங்கள் எப்படி விழுகின்றன
என்பதை நினைத்துப் பார்த்தால் பாரதத்தின் சிற்பக் கலையின் மேன்மையையும், நமது பக்தியின்
உச்ச நிலையையும் உணர்ந்து மகிழலாம்.
இப்படி சூரிய ஒளி விழும் நாட்கள் சூரிய பூஜை நாட்கள் என்று விசேஷமாகச்
சிறப்பிக்கப்பட்டு அந்த நாட்களில் அந்த வேளையில்
சிறப்பு பூஜைகள் நிகழ்கின்றன.
இந்த நாட்கள் பெரும்பாலான இடங்களில் சௌரமான கணக்குப்படி அமைந்திருப்பதும்
ஒரு அதிசயமே.
சூரிய பூஜை நிகழும்
அதிசயக் கோவில்களில் சூரிய பூஜை நாட்களில் சென்று நாமும் வணங்கி வழிபட்டு மேன்மை அடையலாம்!
Baahubalam-
Strength of shoulder; Amaatyabalam- strength of minister; Dhanabalam- Strength
of wealth; Abhijaatabalam- strength derived through birth; Prajnaabalam- strength
of knowledge.
–Vidura
Niti 5-52
Xxx
Pliithadosa—Disorders
of the spleen
Vaata- air;
Pitta- fire; Kapha- Water; Sannipaata – vitiation of the above three; Sonita-
Blood
-Charaka
Sutra- 19-4
Xxx
Five ‘M’s
Those who
are involved in Vamachara worship (anti clockwise)use the following ‘M’ s:-
சென்னையிலிருந்து
வெளியாகும் மாத இதழ் கோகுலம் கதிர். அதில் ஜூலை 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
உலக உலா
உலக
உலாவில் இடம் பெறும் முதல் நாடு அமெரிக்கா!
பூலோக
சொர்க்கம் அமெரிக்கா!
ச.நாகராஜன்
உலகப் புகழ் பெற்ற
அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மன் “அமெரிக்கா பாடுவதை நான் கேட்கிறேன்; பல்வேறு
ஆனந்தக் களிப்புப் பாடல்களை நான் கேட்கிறேன்” ( I hear
America singing, the varied carols I hear) என்று ஆனந்தக் களிப்புடன்
பாடினார். பல்வேறு தொழில்புரிவோரின் ஆனந்த இசையை அவர் தன் கவிதையில்
பட்டியலிட்டார்!
இன்னொரு கவிஞரோ, “வாழ்வின் எல்லாப்
பிரச்சினைகளுக்கும் விடை அமெரிக்கா தான்; அதுவே சுதந்திரத்தின் இல்லம், தனி
ஒருவனின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தி திருப்தி அடையும் இடம்,
உலகம் அமெரிக்காவைப் போற்றுகிறது, அழகின் ஒப்பற்ற வடிவம், பெருமிதத்தின்
எடுத்துக்காட்டு -அமெரிக்கா தான்” என்று
புகழ்கிறார்.
(America is the answer,
To all of life’s problems
America, the home of freedom
And self actualization.
The world revers America,
Paragon of beauty,
Epitome of pride; -Samuel
Nze)
உலகம் போற்றும் முதலிடத்தைப் பெற்றுள்ள அமெரிக்காவின்
சிறப்புக்கள் பல.
முதலில் கருத்துச் சுதந்திரம் அங்கு 100 விழுக்காடு
முழுமையாக உள்ளது. தன் கருத்தை – மனதில் பட்டதை – தைரியமாகச் சொல்லலாம்.
ஒவ்வொருவரின் தனித் திறமையும் அங்கு மதிக்கப்படுகிறது; அதை
பரிபூரணமாக வெளிப்படுத்தும் வாய்ப்பும் அங்கு கிடைக்கிறது. அறிவின் சிகரமாகக்
கோலோச்சும் அமெரிக்காவில் லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் 838 மைல் நீளம் புத்தக
அலமாரிகள் உள்ளன. இவற்றில் உள்ள நூல்களின் தொகுப்புகள் சுமார் 16.80 கோடி என்ற
எண்ணிக்கையில் உள்ளது.
சந்திரனில் முதலில் காலடி எடுத்து வைத்தவர் ஒரு அமெரிக்கர்
என்ற பெருமையில் ஆரம்பித்து எந்த ஒரு உலக மாற்றத்திற்கும் காரணம் அமெரிக்கக்
கண்டுபிடிப்பு தான் என அடித்துச் சொல்லும் அளவு அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்
உள்ளன.
உலகின் பல்வேறு
மாறுதல்களுக்குக் காரணமான டிரான்ஸிஸ்டர், மின்சார பல்பு, ஆகாய விமானம், மொபைல்
செல், இண்டர்நெட் என்று ஒரு நீண்ட பட்டியலை உருவாக்கியது அமெரிக்காவே.
இப்போது சான்பிரான்ஸிஸ்கோவில் கூகிள் இயக்கும் டிரைவர்
இல்லாத காரின் சோதனை ஓட்டத்தைப் பார்த்து வியக்கும் போதே அருகில் டெஸ்லா (TESLA)
தயாரிக்கும் படிம எரிபொருளான பெட்ரோல்,
டீஸல் இல்லாத எலக்ட்ரிக் கார்களை ஏராளமாகப் பார்க்க முடிகிறது. 2020 இல ஊபர்
பறக்கும் டாக்ஸிகளை இங்கு இயக்க இருக்கிறது! ஆக, அடுத்த உலக மாற்றம் தயார்!
நாஸா என்ற அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் செவ்வாயை
நோக்கித் தன் பார்வையைப் பதித்திருப்பதோடு பன்னாட்டு விண்வெளி
நிலையத்திலிருந்து விண்வெளியில் ஒரு
சாலையை உருவாக்கி வேற்று கிரகங்களுக்குப் போக வழியை உருவாக்கும் வழிகாட்டியாக
ஆகும் அளவு விண்ணளவு உயர்ந்து விட்டது.
ஒரு அமெரிக்கர் உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும்
வரவேற்பு தான்! 116 நாடுகளுக்கு விஸா இல்லாமல் ஒரு அமெரிக்கரால் செல்ல முடியும்;
இன்னும் ஒரு 44 நாடுகளில் அங்கு சென்றவுடன் விஸாவைப் பெற்றுக் கொள்ளலாம்! எந்தவித
கெடுபிடியும் கிடையாது!
இரும்புத்திரை
நாடான ரஷியாவுடன் ஒரு குளிர் யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி வந்த அமெரிக்கா சோவியத்
பிளவுபட்டவுடன் போட்டி போட ஆளின்றித் தலை நிமிர்ந்து நிற்கிறது.
இத்தனைக்கும் ரஷியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எல்லை அளவில்
உள்ள இடைவெளி 3.8 கிலோமீட்டர் தான்.
ஆம், பெரிங் ஸ்ட்ரெய்ட் (Bering Strait) என்னும்
தீவுப் பகுதியில் ரஷ்யாவிற்கும் தீவுகள் உண்டு; அமெரிக்காவிற்கும் தீவுகள் உண்டு.
ரஷியத் தீவுக்கும் அமெரிக்க தீவிற்கும் இடையே உள்ள குறைந்த தூரம் 3.8 கிலோ
மீட்டர்!
உலகின் பெரிய
பொருளாதாரத்தைக் கொண்ட நாடு அமெரிக்கா என்றாலும் அமெரிக்கர்கள் க்ரெடிட் வழியிலியே
வாழ்க்கையைக் கழிக்கின்றனர். கடன் இல்லாமல் ஒரு பத்து டாலர் நோட்டைச் (சுமார் 700
ரூபாய் தான்) சொந்தமாகக் கொண்ட ஒரு அமெரிக்கர் பெரும் பணக்காரர் என்று
வேடிக்கையாகச் சொல்லப்படுவதிலிருந்தே அவர்களின் வாழ்க்கை ஒரு ‘கடன்கார வாழ்க்கை’ என்று
தெரிந்து கொள்ளலாம்; என்றாலும் அபரிமிதமான செல்வ வளத்தோடு இருக்கும் ஒருவன்
அனுபவிக்கும் வாழ்க்கையை ஒவ்வொரு அமெரிக்கரும் அனுபவிக்க முடியும் என்பதும் தெரிய
வரும்!
உலகின் பொழுதுபோக்குத் தலங்களை எடுத்துக் கொண்டாலும்
முன்னணியில் இருப்பது அமெரிக்காவே.
‘சின் சிடி’ -பாவ
நகரம் – (Sin
city) என்று அழைக்கப்படும் லாஸ் வேகாஸ் நகரானது இரவில் மட்டும் ஆட்டம் போடும் நகரம்!
சூதாடிகளின் சொர்க்கமும் இது தான்!
மாலை ஐந்து மணிக்கு இங்கு உலவ ஆரம்பித்து மறு நாள் காலை
ஐந்து மணிக்கு உலாவை முடிக்கும் போது சொர்க்கம் என்றால் என்ன என்பதை நேரடியாகப்
பார்த்து, உணர்ந்து, அனுபவித்து மகிழ முடியும். ஐம்புலன்களுக்கும் விருந்து தரம்
நகரம் இது. இங்குள்ள ஹோட்டல் அறைகளில் ஒருவன் தங்க ஆரம்பித்து அனைத்து
ஹோட்டல்களிலும் தங்கி முடிக்க வேண்டுமென்றால் நானூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
ஆக, இணையில்லா இன்ப புரி இந்தப் ‘பாவ நகரம்’ தான்.
அருகில் இருப்பது ஹாலிவுட். அமெரிக்காவின் பல பகுதிகளில்
ஷூட்டிங்கை முடித்து திரைப்படம் வெளியிடப்பட்டாலும் அதை ஹாலிவுட் படம் என்றே சொல்ல
ஆரம்பித்து விட்டனர். யுனிவர்ஸல் ஸ்டுடியோவில் சுற்றுலா செல்ல ஒரு நாளக்கு
பல்லாயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர்.
எப்படி ‘ட்ரிக் ஷாட்கள்’ எடுக்கப்படுகின்றன
என்பதை ஒரு காட்சியாக அங்கு பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரிப்போம்; ‘அட’ இதையா
தியேட்டரில் பிரமிப்புடன் பார்த்தோம்’ என்று
தோன்றும்.
ஒரு அடி ஆழமுள்ள சிறிய குட்டையில் கதாநாயகன் நீந்துவதை
ஆழ்கடலில் அவன் உயிருக்குப் போராடும் அளவு போராட்டம் நடத்தி நீந்துவதாக
திரைப்படத்தில் பார்க்கிறோம் என்பதை இன்னொரு கண்காட்சி காண்பிக்கிறது; வியப்பின்
எல்லைக்கே சென்று விடுவோம்; இப்படிப் பல காட்சிகள்! கம்ப்யூட்டர் கிராபிக்ஸைப்
பற்றிச் சொல்லவே வேண்டாம்!!
இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்கா எல்விஸ்
ப்ரீஸ்லி போன்ற பிரம்மாண்டமான இசைக் கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது.
அமெரிக்காவின் இசைத் துறை பிரம்மாண்டமான ஒன்று. 2018இல் உலகளாவிய விதத்தில் 5150
கோடியாக இருந்த போது அமெரிக்க இசைத்துறையின் பங்கு 1960 டாலர் என்ற அளவு இருந்தது.
38 லட்சம் சதுரமைல் பரப்பளவுள்ள அமெரிக்காவில் 50
மாகாணங்கள் உள்ளன. இதன் தேசியக் கொடியில் உள்ள 50 நட்சத்திரங்கள் இந்த 50
மாகாணங்களையே குறிக்கிறது.
65.8 லட்சம் நீளமுள்ள சாலைகளைக் கொண்டதால் உலகில் அதிக அளவு
சாலை வசதியைக் கொண்ட முதல் நாடாக இது திகழ்கிறது.
எந்த ஒரு நேரத்திலும் அமெரிக்க வானில் 5000 விமானங்கள்
பறந்து கொண்டே இருக்கின்றன! அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சொந்தமாக 965 விமானங்களை
இயக்குகிறது.
அமெரிக்காவில் மொழிச் சண்டையே கிடையாது. ஏனெனில்
அதிகாரபூர்வமான அரசு மொழி என்று ஒன்று அங்கு இல்லை. மக்கள் ஆங்கிலம் மற்றும்
ஸ்பானிஷ் மொழிகளைப் பேசுகின்றனர், அவ்வளவு தான்!
ஒஸாமா பின் லேடன்
இரட்டை கோபுரத்தை 2001 செப்டம்பர் 11ஆம் தேதி தாக்கி அழித்தான். தேசபக்தியுள்ள
அமெரிக்கர்கள் அந்த இடத்தில் ஒரு பெரும் நினைவுச் சின்னத்தை எழுப்பியுள்ளனர்.
அங்கு நாளும் அஞ்சலி செலுத்த வருவோர் ஏராளம். பின் லேடனை எப்படிப் பிடித்து
நாட்டின் கௌரவத்தை நிலை நாட்டினர் என்பதை 2012இல் வெளியான ஜீரோ டார்க் தர்ட்டி (Zero
Dark Thirty) என்ற படம் அற்புதமாகச் சித்தரிக்கிறது.
மொத்தத்தில் அமெரிக்கன் என்பதில் வரும் கடைசி நான்கு
எழுத்துக்கள் அமெரிக்கர்களின் தேசியப் பண்பைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறது! ஆம்
AMERICAN
என்பதில் வரும் கடைசி நான்கு எழுத்துக்கள் I CAN.
“I ought not to be surprised by anything at my time of life,
said a well known minister, but one of my flock did manage to take my breath
away. I was preaching about the Father’s tender wisdom in caring for us all;
illustrated by saying that the Father knows which of grows best in sunlight and
which of us must have shade.
“You know you plant roses in the sunshine, I said, and
heliotrope and geraniums; but if you want your fuchsias to grow they must be
kept in a shady nook.”
After the sermon, which I hoped would be a comforting one, a
woman came to me, her face glowing with pleasure that was evidently deep and
true.
“Oh Dr,,,,,, I
am so grateful for that sermon, she said, clasping my hand and shaking it
warmly. My heart glowed for a moment, while I wondered what tender place in her
heart and life I had touched. Only for a moment though.”
“Yes, she went
on fervently, I never knew before what was the matter with my fuchsias”
Xxxx
Doubting Thomas in the audience!
George Whitfield, the celebrated preacher, was on one
occasion, describing a blind man s approach unknowingly to the edge of a
precipice.
“Tap, tap, went his stick, feeling the way. Shuffle, shuffle, came his feet. Rods of distance dwindled to yards, yards dwindled to inches. The last full step took him to the edge; his stick reached into vacancy and slipped from his hand. He moved forward to retrieve it; he lifted one foot over vacancy”……….. — and the skeptical, licentious Lord Chesterfield, who was in the audience, leaped to his feet, crying out, “My God! He is gone!”
Xxxx
Oh, devil,
pardon me, please!
The celebrated preacher, Rowland Hill, was greatly annoyed
whenever any noise diverted the attention of his hearers from what he was
saying. On one occasion, a few days before his death, he was preaching to a
crowded congregation, and in the middle of his discourse observed a commotion
in the gallery.
“What is the matter there, he exclaimed, The devil seems
to have got amongst you!”
A plain,
country-looking man started to his feet, and addressing Mr Hill in reply said,
“No sir—it aren’t
the devil as is doing it! It is a fat
lady what is faint; and she is a very fat un, sir, as don’t seem likely to come
to again in a hurry”.
Oh, that is it –
is it? Observed Mr Hill, drawing his hand across his chin. Then I beg the lady’s
pardon – and the devil’s too.”
தமிழர்களின் வானியல் அறிவு நுட்பமானது. வேத வானியலும்
தமிழர்களின் வானியலும் ஒன்றே தான். ஒத்துப் போவது தான்.
நுட்பமானது அது.
வானியலில் நுட்பமான கணிதம் ஜா கணிதம் என்று சொல்லப்படுகிறது.
இதைப் பற்றி மாயவரம் ஸ்ரீ
V.சுப்பிரமணிய சாஸ்திரிகள் நன்கு விளக்கியுள்ளார்.
1969ஆம் ஆண்டு இவர், கால லக்ஷணம், லீலாவதி பஞ்சாங்கம், கலியுக கடிகாரம், லீலாவதி கிரக
கணிதம், நட்சத்திர மண்டலம், சந்திர க்ரஹணம், சூரிய க்ரஹணம், லீலாவதி ஜாதக கணிதம் உள்ளிட்ட
பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவர் கூறியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்தால் சில
விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஜா கணிதம் என்றால் என்ன?
30 வருடத்தில் சனி ஒரு சுற்று சுற்றி வருகிறது.
27 நாள் 8 மணியில் சந்திரன் ஒரு சுற்று சுற்றி வருகிறது.
ஆகாய வீதி பற்றிய கணிதம் இக்காலத்தில் இரு விதமாகக்
கணித்துக் கூறப்படுகிறது.
ஒன்று வாக்கியம் (பாம்புப் பஞ்சாங்கம் என்று நடைமுறை
வழக்கில் அறியப்படுவது இது)
இன்னொன்று திருக்கணிதம்.
வாக்கியப்படி பஞ்சாங்கம் சொல்பவர்கள் தேவதைகளுக்கு
தலைகள், கைகள், கால்கள் விசேஷமாக உண்டு என்று சொல்கின்றனர்.
திருக்கணிதம் கணிப்பவர்கள் சந்திரனுக்கு வடக்கில்
சனி, குரு அல்லது சித்திரை நட்சத்திரம் என்று கூறி அதன் படி கணிக்கின்றனர்.
வாக்கிய கனிதம் வேத காலத்தது.
வேத காலத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை செய்யும் போது
வானவீதியில் காலப் போக்கால் சில வித்தியாசங்கள் தென்பட்டன.
அதைச் சரி செய்ய ஜா வாக்கியங்களை காலத்திற்கு ஏற்ப
கணித, வான சாஸ்திர, ஜோதிட நிபுணர்கள் ஏற்படுத்தினர்.
மகர ஜா, மந்த ஜா, கடக ஜா ஆகியவை செவ்வாய், புதன்,
குரு, சுக்கிரன், சனி ஆகியவை சம்பந்தப்பட்டவற்றிற்கு உகந்தவை.
மேஷாதி ஜா, கடகாதி ஜா, துலாதி, மகராதி ஆகியவை சூரியனுக்கும்
சந்திரனுக்கும் சம்பந்தமுடையவை; அதற்குப் பயன் படுபவை.
ராகு மற்றும் கேதுவுக்கு ஜா வாக்கியங்கள் கிடையாது.
நுட்பமான இந்த ஜா வாக்கியங்கள் வானத்தில் காலப் போக்கில்
ஏற்படும் சிறிய மாறுதல்களைக் கூடக் கவனித்து கணிதத்தை இன்னும் அதி நுட்பமாக ஆக்கின.
தமிழ் நாட்டில் தான் அற்புதமாக பஞ்சாங்கம் கணிக்கப்படும்
முறை உருவானது.
திருவையாற்றில் அதி நுட்பமான வான சாஸ்திரத்தை அறிந்த
நிபுணர்கள் வாக்கிய பஞ்சாங்கத்தையும் திருக்
கணித பஞ்சாங்கத்தையும் கணித்தனர்.
இரு கை விரல்களை வைத்து மனப்பாடமாக இருந்த சூத்திரங்களை
அடிப்படையாகக் கொண்டு இவர்கள் துல்லியமாகக் கணித்த படியே சூரிய சந்திர கிரகணங்கள் நிகழும்
என்பது எவ்வளவு ஆச்சரியகரமான விஷயம்!
இந்த நிபுணர்களை அழைத்து இவர்களின் கலை அழிந்து போகாமல்
காக்க ஹிந்து ஜோதிட, வானவியல் ஆர்வலர்களும் மத்திய மாநில அரசும் முன் வர வேண்டாமா?
அடுத்து வருடங்கள் இரு வகை.
சாந்திரமான (அதாவது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட)
ஸம்வத்ஸரம்; இன்னொன்று ஸௌரமான (அதாவது சூரியனை அடிப்படையாகக் கொண்ட) ஸம்வத்ஸரம்.
சாந்திரமான ஸம்வத்ஸரம் 355 ராத்திரிகள் கொண்டது.
ஸௌரமான ஸம்வத்ஸரம் 365 ராத்திரிகள் கொண்டது.
இந்த இருவகை ஸம்வத்ஸர கணிதமும் இன்று தேவைப்படுகிறது.
இரவு பகல் எப்படி உண்டாகிறது என்பதை நன்றாகப் படித்தாலும்
அதன் உண்மை இது வரை மாயையாகவே அறிய முடியாதபடியே உள்ளது.
வானத்தில் ஏற்படும் கிரக சேர்க்கைகள் அற்புதமானவை.
அதையொட்டி பூமியில் ஏற்படும் நுட்பமான மாறுதல்கள்,
விளைவுகள் கூறப்பட்டன. அந்த சேர்க்கைகள் பூமியில் வாழும் மானிடர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும்
நல்ல மற்றும் தீய விளைவுகள் கூறப்பட்டன.
யுத்தம், சமாதானம், வளம், வறட்சி ஆகியவையும் சுட்டிக்
காட்டப்பட்டன.
இவை மாபெரும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை.
ஏராளமான நிபுணர்களும், நிறைய பொருள் செலவும் ஏற்படும்;
இதற்குப் பல அடிப்படை வசதிகளும் வேண்டும்.
காலம் கை கூடினால் இந்த ஆய்வு முடிக்கப்படும் போது
ஹிந்து ஞானம் நன்கு வெளிப்படும். அதன் நன்மையும் புலப்படும்.