அற்புத மலையில் அருளாட்சி புரிந்த அதிசய மஹரிஷி : பகவான் ரமணர்! (Post No.7440)


Written  by S.NAGARAJAN

Post No.7440

Date uploaded in London – 10 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

9-1-2020 தேதியிட்ட மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை;

ரமண மஹரிஷி அவதரித்த நாள் 1879, டிசம்பர் 30;

2020 ஜனவரி 11 ஆம் தேதி ரமண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அவரைத் துதித்து அருளாசி வேண்டுவோம்.

அற்புத மலையில் அருளாட்சி புரிந்த அதிசய மஹரிஷி : பகவான் ரமணர் !

ச.நாகராஜன்

திருவண்ணாமலை உலகின் பழம்பெரும் மலை என்பதோடு அதிசய மலையும் கூட!

அங்கு அருளாட்சி புரிந்த பகவான் ரமண மஹரிஷியின் வாழ்வு அதிசயமான ஒன்று; அன்பர்களுக்கு ஆனந்தம் தருவதும் கூட!

(அவதார தினம் : டிசம்பர் 30, 1879 சமாதி தினம் : ஏப்ரல் 14, 1950)அக்னி ஸ்தலம் என்று மிகவும் போற்றித் துதிக்கப்படும் அண்ணாமலை பற்றிய புராண சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே.

காலத்திற்குத் தக்கவாறு அடியார்களுக்கு அருள் புரிய சிவபிரான் உளங் கனிந்தார் போலும்; ரமண மஹரிஷியைத் தன் பால் திருவண்ணாமலைக்கு ஈர்த்து பல அருள் விளையாடல்களை அவரை வைத்து நிகழ்த்தச் செய்தார். பல்லாயிரம் மக்களை ஆன்மீகத்தில் உயர்த்த வழி வகுத்தார்.

ரமண அவதாரம்

 அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள திருச்சுழியில் 1879ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஆருத்ரா தரிசன நாளன்று சுந்தரம் ஐயருக்கும் அழகம்மாளுக்கும் குழந்தையாக வந்துதித்தார் ரமணர். அவருக்கு வேங்கடராமன் என்று பெயரிடப்பட்டது.

மற்றவர்களைப் போலவே இருந்தாலும் கூட இள வயதிலேயே சகஜ சமாதி எனப்படும் அரிய நிலை வேங்கடராமனுக்கு இயல்பாக வாய்த்திருந்தது. ஒரு நாள் அவரது உறவினர் ஒருவர் நான் திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன் என்றார். திருவண்ணாமலை என்ற சொல் அவரை வெகுவாகப் பாதித்தது.

1896ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் அவருக்கு மரண பயம் தோன்றியது. தொடர்ந்து ஏற்பட்ட அனுபவத்தில்  பெறுதற்கரிய ஞானத்தில் உயர் நிலையை அவர் பெற்றார். 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி ரயிலில் ஏறிய அவர் திருவண்ணாமலையை அடைந்தார். தொடர்ந்து சமாதி நிலையை எய்திய 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை திருவண்ணாமலையை விட்டு வேறு ஒரு இடத்திற்கும் அவர் செல்லவில்லை.

கடுமையான தவத்தின் மூலம் சேஷாத்ரி ஸ்வாமிகள், காஞ்சி பரமாசார்யர், நாராயண குரு உள்ளிட்ட மகான்கள் வியந்து போற்றும் மஹரிஷியாக, காவ்யகண்ட கணபதி சாஸ்திரி அவரை அழைத்த ரமணர்  என்ற பெயரால் அவரை உலகம் அறிந்து கொண்டது.

ஏராளமானோர் அவர் அருள் நாடி வரவே ரமணாசிரமம் உருவானது.

அற்புதங்கள் ஆயிரம்!

ரமணரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களுக்கு எண்ணிக்கையே இல்லை; பல்வேறு அன்பர்களும் நவீன காலத்திற்கேற்றபடி அவற்றைக் குறிப்புகளாக எடுத்ததோடு புத்தகங்களாக எழுதியும் வெளியிட்டனர்; ஆகவே தான் அதிகாரபூர்வமான ஆவணங்கள் மூலம் அவை அனைத்தையும் அறிந்து பரவசப்பட முடிகிறது.

கட்டுரையின் இடம் கருதி சில சம்பவங்களை மட்டும் இங்கு பார்ப்போம். அமுதத் துளியில் எந்தப் பகுதியைச் சுவைத்தாலும் இனிக்கும் என்பது போல பகவானின் வாழ்க்கையில் நிகழ்ந்த எந்த சம்பவமும் சுவையானதே; அரிய ரகசியத்தையோ செய்தியையோ அது சொல்வதும் இயல்பானதே.

ரமணரிடம் வந்த ஃப்ராங்க் ஹம்ப்ரீஸ்

 நூற்றுக் கணக்கான மேலை நாட்டோர் திருவண்ணாமலை வந்து ரமணரை தரிசனம் செய்து பயன் பெற்றனர்; தங்கள் அனுபவங்களைப் பல்வேறு நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

முதன் முதலாக வந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஃப்ராங்க் ஹம்ப்ரீஸ் என்பவர். அவர் 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அஸிஸ்டண்ட் சூபரிடெண்டெண்டாக பம்பாய்க்கு வந்தார். பம்பாய் வரும் போதே அவரது உடல் நிலை மோசமானது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தனது மனதை வலியிலிருந்து திருப்ப முயற்சி செய்து ஆவி உடலில் மேலெழும்பி சஞ்சரிக்க ஆரம்பித்து வெல்லூர் வரை வந்தார். அங்கு நரசிம்மய்யா என்பவரைப் பார்த்தார்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு ஒருவாறாக அவர் மார்ச் மாதம் உடல் நிலை தேறினார். அதே மாதம் 18ஆம் தேதி வெல்லூருக்கு அவர் வந்தார். அங்கு தான் ஆவி உடலில் பார்த்த நரசிம்மய்யாவை நேரில் கண்டு வியந்தார். மீண்டும் உடல் நிலை மோசமாகவே ஊட்டிக்குச் சென்ற அவர் அதீதமான தனது அனுபவங்களை நரசிம்மய்யாவிற்குக் கடிதம் மூலம் எழுதி விளக்கம் கேட்டு வந்தார். ஏதேனும் ஒரு பெரிய மகானைச் சந்திக்க முடியுமா என்ற தனது ஆவலைக் கடிதம் மூலம் தெரிவித்த அவர் வெல்லூர் வந்த போது தன் மனதில் தோன்றிய ஒரு குகையின் படத்தையும் குகை வாயிலில் நிற்கும் மகானின் படத்தையும் வரைந்து நரசிம்மய்யாவிற்குக் காட்டினார். அந்த மகான் தான் ரமணர்.

இப்படி எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த பல அயல் நாட்டினருக்கும் அருள் பாலித்து அவர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர் ரமணர்.

உலகின் மிகப் பெரும் எழுத்தாளரான பால் பிரண்டன் (Paul Brunton) ரமணரைச் சரண் அடைந்த சம்பவம் சுவையான ஒன்று. காஞ்சி மஹாபெரியவாளைச் சந்தித்த பிரண்டன் அவரைத் தனக்குக் குருவாக இருந்து வழிகாட்ட முடியுமா என்று கேட்ட போது அவர் ரமணரைத் தரிசிக்குமாறு அருளுரை புகன்றார். அதன் படி ரமணரைச் சந்தித்த பிரண்டன் தான் கேட்க விரும்பிய கேள்விகளுக்கெல்லாம் அவர் சந்நிதியில் உடனுக்குடன் தன் மனதிலேயே பதில் கிடைப்பது கண்டு வியந்தார்.

பகவான் ரமணருடனான தன் அனுபவங்களையும் ரமணரின் உபதேசங்களையும் பல நூல்களின் வாயிலாக அவர் வெளிப்படுத்தினார்.

உலகம் முழுவதும் ரமணரின் புகழ் பரவ ஆரம்பித்தது. பால் பிரண்டனின் ‘எ செர்ச் இன் சீக்ரட் இந்தியா” (A Search In Secret India) பல்லாயிரம் பிரதிகள் விற்பனையான அருமையான ஒரு புத்தகம். அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

மிகவும் பிரபலமான ஆங்கில எழுத்தாளரான சாமர்செட் மாம் (Somerset Maugham) திருவண்ணாமலைக்கு ரமணரை தரிசிக்க வந்தார். தான் கேட்க வேண்டிய கேள்விகளைக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு அவர் சந்நிதியின் முன் அமர்ந்தார். ஒவ்வொரு கேள்வியாக அவர் மனதில் எழ அதற்கான அற்புதமான பதில் அவர் மனதிலேயே தோன்றியது. ஒரு கேள்வியையும் அவர் கேட்கவில்லை. ஹிந்து மதம் பற்றிய அவரது ‘பாயிண்ட்ஸ் ஆப் வியூ’ என்ற புத்தகம் அரிய சம்பவங்களையும் கருத்துக்களையும் கொண்ட நூலாகும்.

ரமணர் பற்றி அரவிந்த மஹரிஷி

மஹரிஷி அரவிந்தர் புதுவை அடைந்தவுடன் ஆரம்ப நாட்களில் அவரை மாலை நேரங்களில் அன்பர்கள் சந்தித்து அளவளாவி அவரது அருளாசி பெறுவது சாத்தியமாக இருந்தது.

வருடம் 1938. டிசம்பர் மாதம் 23ஆம் தேதி.

சாதகர் ஒருவர் ரமணாசிரமத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

ரமண மஹரிஷி வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அரவிந்தர் விவரித்தார்.

ஆசிரமச் செயல்பாட்டிலும் பக்தர்கள் நடந்து கொண்ட விதத்திலும் சற்று அதிருப்தி கொண்ட ரமணர் மலையை நோக்கி  மெதுவாக நடக்க ஆரம்பித்தார். குன்றின் இடையே ஒரு சிறு இடைவெளியை அவர் கடக்க வேண்டியிருந்தது. அந்த இடைவெளியில் காலை குறுக்காக நீட்டி வைத்துக் கொண்டு ஒரு வயதான கிழவி அமர்ந்திருந்தாள். மஹரிஷி அவரது காலை எடுக்குமாறு வேண்டினார். ஆனால் அவரோ மறுத்தார். மஹரிஷி அவரைக் கோபத்துடன் கடக்க யத்தனித்தார். கோபம் கொண்ட கிழவி, ”ஏன் இப்படி  அமைதியற்று இருக்கிறாய்? அருணாசலத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்காமல் ஏன் இப்படி அலைகிறாய்? திரும்பிப் போ, சிவனை அங்கே வழிபடேன்” என்றார்.

கிழவியின் பேச்சு ரமணரின் சிந்தனையைத் தூண்டி விட்டது. அவர் திரும்பி வழி நடந்தார். சிறிது தூரம் சென்ற பின் அவர் திரும்பிப் பார்த்த போது அந்தக் கிழவியை அங்கே காணோம். அப்போது தான் அவருக்கு திடீரென்று தோன்றியது, மஹா சக்தியே கிழவி ரூபத்தில் அங்கு வந்து அவருக்கு அருணாசலத்திலேயே இருக்குமாறு அருளியதாக!

அரவிந்தர் கூறிய இந்த சம்பவம் போல ரமணர் காட்டினுள் ஏகாந்தமாக இருப்பதற்காகச் சென்ற போதெல்லாம் அன்னை மீனாட்சியே அவரை ஆசிரமத்திற்குத் திரும்பி அங்கிருந்து பக்தர்களுக்கு வழிகாட்டுமாறு உணர்த்தி இருப்பதை அவரே குறிப்பாகச் சொல்லி இருக்கிறார்.

ஒவ்வொரு கணத்திலும் மஹாசக்தியே ரமணரை வழி நடத்தி வந்தாள். ஆசிரமம் ஆரம்பிப்பதிலோ அல்லது அதை நடத்துவதிலோ ரமணருக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. ஆனால் மஹாசக்திக்கோ அவர் மூலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்ற சங்கல்பம் இருந்தது.

ஒரு கட்டத்தில், “என்னை இம்சிக்கிறா” என்று கூறிய ரமணர், அந்த இம்சையை அன்னையின் கட்டளையாக சிரமேற்கொண்டு ஆசிரமத்தை நடத்த அனுமதி தந்தார் – ஆனால் ஆசிரம விதிமுறைகளை  மிகக் கடுமையாகப் பின்பற்றினாலும் அதில் பற்று சிறிதுமின்றி இருந்தார்.

அற்புதமான ரமண அவதாரம் பராசக்தியின் சங்கல்பம் என்றே முடிவு செய்யலாம்.

கடவுளின் அருள் அனைவருக்கும் உண்டா?

 பகவான் ரமண மஹரிஷியிடம் பக்தர் ஒருவர் வந்தார்.

அவர் கேட்டார்: கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் தானே!

ரமணர் : ஆமாம்.

பக்தர் : அவரது கருணையும் அனைவருக்கும் பொதுவானது தானே!

ரமணர் : ஆமாம்

பக்தர் : அப்படியானால் அவர் எனக்கு மட்டும் ஏன் கருணை காட்ட மாட்டேன் என்கிறார்.எப்பொழுதும் துன்பம் தானே எனக்கு வருகிறது.

ரமணர் : நீ பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்திருக்கிறாயே. அதை நிமிர்த்தி வைத்தால் தானே கருணை மழை பொங்கித் ததும்பும்!

பக்தர் புரிந்து கொண்டார். இறைவன் அனைவருக்கும் சமமான கருணையைத் தான் பொழிகிறார். அதை ஏற்க நாம் தயாராக – பாத்திரத்தைத் திறந்து வைத்து – இருக்க வேண்டும்.

மனதைத் தூய்மையாக, ஏற்கக்கூடிய பக்குவ நிலையில் வைக்க வேண்டும்.

அத்துடன் பாத்திரம் சிறிய அளவா, அண்டாவா அல்லது மிகப் பெரியதா என்பதையும் நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இறைவனின் கருணை மழையைப் போலவே பகவான் ரமணரின் கருணை மழையும் அனைவருக்கும் பொதுவானது.

இடையன் பூவனுக்கு ரமணரின் அருள்!

பகவானிடம் அருளாசி பெற பாரதத்தின் முதல் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் வந்தார். அருளாசி பெற்றார்.

ராஜாஜி வந்தார். மகாகவி பாரதியார் வந்தார். இன்னும் மைசூர் மஹாராஜா, பரோடா மஹாராஜா, மஹாத்மா காந்திஜியின் செயலாளரான மஹாதேவ தேசாய், பரமஹம்ஸ யோகானந்தா, நாராயண குரு, காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள், பால் பிரண்டன், சாட்விக், சாமர்செட் மாம் உள்ளிட்ட ஏராளமான துறவிகள், தேசியத் தலைவர்கள், பேரறிஞர்கள், எழுத்தாளர்கள் வந்தனர். ரமண தரிசனத்தால் பெரும் பேறு பெற்றனர்.

அனைவர் மீதும் அவரது கருணை மழை சமமாக இருந்தது.

உயர்தட்டில் இருந்தவர்களுக்குத் தான் அவரது கருணை என்பது இல்லை; ஏழையாக, சாமானியராக, எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும் கூட அவர்களுக்கும் அவர் பொது தான்; அவர்கள் மீதும் அவரது கருணை அளப்பரியதாக இருந்தது.

ஒரு சம்பவம்.

பூவன் என்ற ஆட்டிடையனின் ஆடு தொலைந்து விட்டது. ஒரே கவலை. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. ஆடு கர்ப்பமாக வேறு இருந்தது. அவனுக்கு நம்பிக்கையே போய் விட்டது. காட்டு மிருகங்கள் அதை அடித்துத் தின்று விட்டதோ!

ஒரு நாள் ஆசிரமம் வழியே சென்று கொண்டிருந்த அவன் பகவானைப் பார்க்க, அவர் அவனை எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். பூவன் தனது ஆடு தொலைந்த விஷயத்தைச் சொன்னான். பகவான் வழக்கம் போலப் பேசாமல் இருந்தார். பிறகு அவனிடம் சில கற்களைத் தூக்கத் தனக்கு உதவுமாறு கேட்டார். அவனும் சந்தோஷமாக அந்த வேலையைச் செய்தான். அந்தப் பணி முடிந்ததும் பகவான், “இந்தப் பக்கமாகப் போ” என்று ஒரு வழியைச் சுட்டிக் காட்டினார். “அங்கு உன் ஆட்டை வழியில் காண்பாய்” என்றார் அவர். அதே மாதிரி தனது ஆட்டை இரண்டு குட்டிகளுடன் அவன் கண்டான்!

பூவன், “என்ன அற்புதமான பகவான் இவர்! அவரது வார்த்தைகளின் சக்தியைப் பாருங்கள். என்னப் போன்ற ஒரு ஏழையைக் கூட அவர் மறக்கமாட்டார். எனது பையன் மாணிக்கத்தைக் கூட அவர் அன்புடன் நினைவு வைத்துக் கேட்கிறார். பெரியவர்கள் எப்போதுமே அப்படித்தான்.  கோடையில் பசுக்களைப் பார்க்கும் சிறு பணியை அவருக்காகச் செய்வதில் எனக்கு சந்தோஷம்.” என்றான்.

முனகல வெங்கடராமையா தொகுத்திருக்கும் அற்புத நூலான

Talks with Sri Ramana Maharshi  என்ற நூலில் 16 டிசம்பர் 1936 தேதியிட்ட பதிவில் கூறப்படும் சம்பவம் தான் மேலே உள்ள சம்பவம்!

ஒரே சமயத்தில் இரு இடங்களில் தோற்றம்

வேளச்சேரி ரங்க ஐயர் என்பவர் பகவான் ரமணரின் பள்ளிப்படிப்புக் காலத்தில் வகுப்புத் தோழராக இருந்தவர். அவர் தனது ஒரு அனுபவத்தை இப்படி விளக்கியுள்ளார்.

“ஒரு முறை நான் ஸ்காந்தஸ்ரமத்தில் பகவானை விட்டு சிறிது நேரம் வெளியில் சென்றேன். அவர் அப்போது உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். நான் திருப்பி வந்த போது அவர் வெளியில் ஒரு படுக்கையில் அமர்ந்திருந்தார். உள்ளே இருந்தவர் வெளியில் வந்திருக்கிறார் போலும் என்று நினைத்த நான் அதைப் பற்றி பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை.

ஆனால் ஆசிரமத்தின் உள்ளே சென்ற போது அவரை எப்படிப் பார்த்தவாறு வெளியில் சென்றேனோ அதே போல அவர் உள்ளேயே இருந்தார். இதைப் பற்றி (உள்ளே இருப்பவரை வெளியேயும் பார்த்ததை) பகவானிடம் நான் சொன்ன போது அவர் சிரித்தவாறே கூறினார் :” அதை அப்போதே ஏன் சொல்லவில்லை? அந்தத் திருடனை அப்போதே நான் பிடித்திருப்பேனே!”

ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருப்பது போன்ற இந்த மாதிரியான அசாதாரணமான நிகழ்வுகளுக்கெல்லாம் பகவானின் பதில் இப்படித்தான் இருக்கும்! இப்படிப்பட்ட நிகழ்வுகளை அவரிடம் சொன்னால் அவர் அதை ஒதுக்கி விடுவார் அல்லது அதை ஜோக்காக எடுத்துக் கொண்டு விடுவார்.  அற்புத நிகழ்வுகளில் தனது பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டு தங்கள் முக்கிய லக்ஷியமான ஆத்மனை அறிவது என்பதை விட்டுவிடக் கூடாதே என்பதால் தான் அவர் இப்படிச் செய்தார்.

நாகம் காத்த ரமணபக்தை

மா பிரோஜா தலயார்கான் (Ma FirozaTaleyarkhan 1898-1984) மிக மிக செல்வச் செழிப்புடைய பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர்.

ரமணரை அடைக்கலம் புகுந்து திருவண்ணாமலையில் வாழ்ந்த அவரது சரித்திரம் மிக சுவையான ஒன்று.

ஏராளமான அனுபவங்களை அவர் தொகுத்து எழுதியுள்ளார். அதில் ஒன்று தான் அவரை நாகம் காத்து வந்ததை பகவான் சுட்டிக் காட்டிய சம்பவம்.

ஆண்டு 1945. ஒரு நாள் அலஹாபாத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தவரும் சிறந்த ரமண பக்தருமான டாக்டர் சையத்தின் மனைவியும் சூனா என்பவரும் திருமதி தலயார்கானின் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மெக்காவில் உள்ள கபாலாவை (Kharbala) பற்றி திருமதி சையத் விவரித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் தான் அவர் மெக்கா சென்று திரும்பியிருந்தார்.

திருமதி தலயார்கானின் எதிர்புறத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்கள் திடீரென்று அவரை விசித்திரமாகப் பார்த்தனர்.

திடீரென்று அவர்கள், “உங்களுக்குப் பின்னால் பாம்பு இருக்கிறது, ஜாக்கிரதை” என்று அவர்கள் கத்தினர். உண்மையில் அவருக்குப் பின்னால் ஒரு பாம்பு படம் விரித்துக் கொண்டு நின்றிருந்தது.

தலையை மெதுவாகத் திரும்பிப் பார்த்தார் அவர். பாம்பு அவரை தீண்டி இருக்கக் கூடும். ஆனால் அது மெதுவாக நாற்காலியிலிருந்து இறங்கி வெளியே ஊர்ந்து சென்றது. தோட்டக்காரரைக் கூப்பிட்ட திருமதி தலயார்கான் அந்தப் பாம்பைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார். ‘பாம்பு பாம்பு’ என்ற சத்தத்தால் அந்த இடம் சற்று களேபரமானது.

திருமதி தலயார்கானுக்கு அண்டை வீட்டில் வசித்து வந்த ராஜகோபாலய்யங்கார் அப்போது தான்  ஆசிரமத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். ராஜகோபாலய்யங்கார் பகவானை அருகிலிருந்து கவனித்து வந்த பகவானின் அணுக்கத் தொண்டர்.

சத்தம் கேட்டு அவர் ஓடி வந்தார்.

திருமதி தலயார்கானைப் பார்க்க வந்திருந்த இரு பெண்மணிகளும் நடந்த விஷயத்தைப் பரபரப்புடன் ராஜகோபாலய்யங்காருக்கு விளக்கினர்.

அவர் திருமதி தலயார்கானை நோக்கி, “பாம்பை அடித்துக் கொன்று விட்டீர்களா?” என்று கேட்டார்.

அதைத் தன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று பதில் அளித்தார் திருமதி தலயார்கான்.

உடனடியாக அவர் ஓடோடிச் சென்று பகவான் ரமணரிடம் நடந்த விஷயத்தை விவரித்தார்.

பகவானின் முதல் கேள்வி பாம்பை தலயார்கான் அடித்துக் கொன்று விட்டாரா என்பது பற்றித் தான்.

இல்லை என்ற பதில் வந்ததும் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் பகவான் ரமணர்.

“நல்லது” என்ற அவர், அந்த பாம்பு தான் அவரைப் பாதுகாத்து வரும் நாகம் என்றார்.

ஒரு நாள் காலை திருமதி தலயார்கான் படுக்கையிலிருந்து எழுந்த போது அவர் பிரார்த்தனை செய்யும் மேஜைக்கு அருகில் ஒரு பாம்பின் ஒரு பெரிய தோல் உரிக்கப்பட்டு கிடந்ததைக் கண்டார்.

அவர் தூங்கிக் கொண்டிருந்த போது திறந்திருக்கும் ஜன்னல் வழியாக உள்ளே அது வந்திருக்கக் கூடும்!

வெல்லூர் மாவட்ட நீதிபதியாக அப்போது இருந்த அனந்தநாராயணன் (பின்னால் மதராஸ் ஹை கோர்ட் நீதிபதியாக இருந்தவர்) இந்தச் சம்பவத்தைக் கேட்டு முதலில் இதை நம்பவில்லை.

ஆனால் அடுத்த நாள் காலை உணவருந்திய பின்னர் இருவரும்  வீட்டின் வாசலில் கைகளை அலம்பிக் கொண்டிருந்த போது அவரே அந்த நாகம் ஊர்ந்து செல்வதைப் பார்த்தார்.

முதலில் நம்பாதவர் இப்போது அதிசயப்பட்டு முழு விஷயத்தையும் நம்பினார்.

அந்த நாகத்தைப் பற்றிய உண்மையை பகவான் விளக்கியதால் அதைப் பற்றிய பயம் இல்லாமல் மா தலயார்கான் வாழ்ந்து வந்தார்.

இப்படிப் பல சம்பவங்கள் அவரது வாழ்க்கையில்  நிகழ்ந்துள்ளன. பகவானின் அருளுக்குப் பாத்திரமான அவர் தனது சுவையான அனுபவங்களை Sages, Saints and Arunachala Ramana என்ற நூலில் விவரித்துள்ளார்.

திருவண்ணாமலை ரகசியம்

திருவண்ணாமலை அப்படி என்ன ஒரு அற்புதமலை? இந்தக் கேள்வி அனைவருக்கும் எழுவது சகஜமே.

ஒரு முறை பால் பிரண்டன் திருவண்ணாமலை பற்றிப் பல்வேறு கேள்விகளைக் கேட்டு ரமணரைக் குடைந்தார்.

மலைக்குள்ளே குகைகள் உள்ளனவா என்று கேட்டார் பிரண்டன்.

ரமணர், “ எனது அகக் காட்சிகளில் குகைகள், நகரங்கள், தெருக்களைக் கண்டுள்ளேன்” என்று பதில் கூறினார்.

சித்தர்கள் அதனுள் இருக்கின்றனரா என்று கேட்டார் பிரண்டன். “பெரிய சித்தர்கள் இருக்கின்றனர்” என்றார் ரமணர்.

சித்தர்கள் இமயமலையில் இருப்பதாக அல்லவா சொல்கின்றனர் என்று அடுத்து கேட்ட பிரண்டனுக்கு விடையாக ரமணர், “கைலாயம் சிவனின் இருப்பிடம் தான்; ஆனால் சிவனே தான் இந்தத் திருவண்ணாமலை” என்று கூறினார்.

திருவண்ணாமலையின் ரகசியத்தை இப்படி விண்டுரைத்த ஒரே ரிஷி ரமணர் தான்.

நெருடலான கேள்விகளுக்குப் பதில்

ரமணாசிரமத்திற்கு வரும் அனைவருமே பெரும் பக்தர்கள் என்று சொல்லி விட முடியாது. ரமணரின் மீது தங்கள் கருத்துக்களை ஏற்றி அதன் மூலம் ஆதாயம் பெற நினைத்தோரும் உண்டு. அப்படிப்பட்டவர்களின் கேள்விகளுக்கு அவர்கள் மனம் நோகாமல் பதில் சொல்லி அனுப்பி விடுவார் ரமணர்; சாதாரணமாக அவர் பேசுவதே அபூர்வம். என்றபோதிலும் இடைவிடாது அன்றாடம் நூற்றுக் கணக்கில் வந்து அவரை தரிசித்த பலருக்கு அவர் அருளுரையாகச் சிலவற்றைச் சொல்வதுண்டு.

ஒரு முறை வெளிநாட்டிலிருந்து ஒரு பத்திரிகையாளர் பகவான் ரமண மஹரிஷியைத் தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்தார்.

அவரிடம் அவர், “பகவான்! நாங்கள் பெர்த் கண்ட்ரோலுக்காக (குடும்பக் கட்டுப்பாட்டிற்காக) ஒரு இயக்கம் ஆரம்பிக்கப் போகிறோம். பெர்த் கண்ட்ரோல் (Birth Control) பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? அதை எங்கள் பத்திரிகையில் வெளியிடுவோம்” என்றார்.

ரமணர் மௌனமாக இருந்தார்.

வந்த பத்திரிகையாளர் திருப்பித் திருப்பித் தான் கேட்ட கேள்வியையே கேட்டுக் கொண்டிருந்தார்.

உடனே பகவான், “அன்பரே! நீங்களும் நானும் ஏற்கனவே பிறந்து விட்டோம். அதை இந்த நிலையில் கட்டுப்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் நீங்களும் நானும் நிச்சயமாக ஒரு நாள் இறக்கப் போகிறோம். ஆகவே அது பற்றி நீங்கள் இன்னும் அதிகக் கவலைப்பட வேண்டாமா? தயவுசெய்து டெத் கண்ட்ரோல் (Death Control) பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்!”

வந்த பத்திரிகையாளர் நகர்ந்தார்.

என்ன ஒரு அற்புதமான பெரிய உபதேச உரையை ரமண மஹரிஷி எளிய சொற்களால் அருளி விட்டார் என அனைவரும் வியந்தனர்!

சாமர்த்தியமான கேள்விக்கு பதில்!

அன்பர் ஒருவருக்கு ‘இன்ஸ்டண்ட் ஞானியாக’ வேண்டும் என்று ஆசை. ரமண பகவானிடம் வந்தார்.

“நீங்களோ பகவான். ஆகவே எனக்கு எப்போது ஞானம் பிறக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எப்போது ஞானி ஆவேன் என்பதைச் சொல்லுங்கள்” என்றார் அவர்.

ரமணர் அவரை நோக்கி, “ நான் பகவான் என்றால் ஆத்மாவைத் தவிர இரண்டாவது வஸ்து இல்லை. ஆகவே ஞானியோ அல்லது அஞ்ஞானியோ, இரண்டாவதாக ஒருவர் இல்லை. நான் பகவான் இல்லை என்றால் நானும் உங்களைப் போல ஒருவன் தான்! எனவே உங்களுக்குத் தெரிந்த அளவே தான் எனக்கும் தெரியும். எப்படிப் பார்த்தாலும் உங்கள் கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது.”

கேட்டு அறிவதில்லை ஞான அனுபவம்! உணர்ந்து அறிவதே ஞானாநுபூதி!

ரமணரிடம் சாமர்த்தியமாகப் பேசித் தங்கள் கருத்துக்களை அவர் மேல் ஏற்றி அவரைப் பயன்படுத்த நினைத்தோர் ஏமாந்தே போனார்கள். இப்படிப்பட்ட நூற்றுக் கணக்கான சுவையான சம்பவங்கள் உண்டு.

நிஷ்காம்ய கர்மம் என்றால் என்ன?

நிஷ்காம்ய கர்மம் – பலனை எதிர்பாராமல் செயலைப் புரிவது – என்றால் என்ன?

ரமணர் பெரிய கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலைத் தருவார். ஒரு சம்பவம் இது:-

வெல்லூர் வர்கீஸ் கல்லூரியைச் சேர்ந்த தெலுங்கு பண்டிதர் ரங்காச்சார் என்பவர் ஒரு நாள் (25-12-1935 அன்று) ரமண மஹரிஷியிடம் நிஷ்காம்ய கர்மம் என்றால் என்ன என்று கேட்டார். பதிலே இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து ரமணர் அருணாசலமலையை மீது ஏறலானார். பக்தர்கள் பின் தொடர்ந்தனர். பண்டிதரும் தொடர்ந்தார்.

வழியிலே முள் நிறைந்த கம்பு ஒன்று கீழே கிடந்தது. அதை மஹரிஷி கையில் எடுத்துக் கொண்டார். ஓரிடத்தில் உட்கார்ந்து மெதுவாக அந்த முள்களைச் செதுக்கி எடுத்தார். கம்பில் இருந்த முண்டு  முடிச்சுகளைத் தேய்த்து அதைச் சீராக்கினார். ஒரு சொரசொரப்பான இலையை எடுத்து அதைத் தேய்த்து வழவழப்பாக்கினார்.

சுமார் ஆறு மணி நேரம் இந்த வேலை தொடர்ந்தது. கம்பு பளபளவென்று பாலிஷானது. அனைவரும் இதைப் பார்த்து எப்படி இருந்த கம்பு இப்போது எப்படி மாறி உள்ளது என வியந்தனர்.

பிறகு ரமணருடன் பக்தர் குழு நகரத் தொடங்கியது.

அப்போது ஒரு இடையன் அங்கே வந்தான். தனது கம்பைத் தொலைத்து விட்டு மிக்க கவலையுடன் இருந்த அவனைப் பார்த்த மஹரிஷி தன் கையிலிருந்த கம்பை அவனிடம் கொடுத்து விட்டு மேலே நகரலானார்.

தனது கேள்விக்கு பிராக்டிகல் பதிலே – நடைமுறை பதிலே – கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தார் பண்டிதர்.

பிரதிபலன் எதிர்பாராமல் தம் கடமையைச் செய்வதே நிஷ்காம்ய கர்மம்!

பகவானின் உபதேச மொழிகள்

மிக நீண்ட சொற்பொழிவுகளோ பெரிய கஷ்டமான வழிகளைச் சொல்வதோ ரமணரிடம் இல்லை.

அவரது உபதேசம் மிக மிக எளிமையானது; சாமான்யரான எந்த ஒருவர் நினைத்தாலும், இறைவன் அருளும் கூட இருந்தால், சுலபமாகக் கடைப்பிடிக்கக் கூடியது! செலவில்லாததும் கூட!

‘நான் யார் என்பதை தொடர்ந்து தியானித்து வா என்றார் அவர்.

உன்னைக் கண்டுபிடித்து அறிந்து விட்டால் அனைத்தையும் கண்டுபிடித்தவன் ஆவாய் என்பது அவர் அருள் உபதேசம்.

தன்னை அறிவதே ஆன்மீகம்!

அவர் அரிதாக அவ்வப்பொழுது இயற்றிய அருமையான  ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகம், உபதேசவுந்தியார், உள்ளது நாற்பது, ஏகான்ம பஞ்சகம், அப்பளப்பாட்டு உள்ளிட்ட நூல்கள் ரமணாசிரமம் வாயிலாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ரமண பக்தர்கள் 

ஆயிரக்கணக்கான சுவையான சம்பவங்களைப் புத்தக உருவத்தில் தந்துள்ளனர். அனைத்தும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏன் இதர மொழிகளிலும் கூட உள்ளன. இவற்றை ரமணாசிரமத்தில் வாங்கிப் படித்துப் பயனடையலாம்.

ரமணர் யாத்திரை இடங்கள்

ரமணரின் அருளைப் பெற விரும்பும் ஒருவர் நினைத்த இடத்திலிருந்து அவரை வணங்கலாம்; அருளைப் பெறலாம். அவர் வாழ்ந்த திருவண்ணாமலை ரமணாசிரமம், ஜெனித்த திருச்சுழி இல்லம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்குக் கோபுரத்திற்கு நேர் எதிரில் அமைந்துள்ள தெருவில் அவர் ஞானம் பெற்ற இல்லம் ஆகியவை அன்பர்கள் ஆன்மீக உயர்வுக்காக நாடிச் செல்லும் யாத்திரை இடங்களாக அமைந்துள்ளன.

 இறுதி நாட்களில் அவர் கையில் கட்டி ஒன்று தோன்றவே அன்பர்கள் மனம் கலங்கினர். ஆனால் ரமணரோ, “நான் எங்கு போகப் போகிறேன். இங்கே தான் இருப்பேன் என்று அருளினார்.

ஆகவே அந்த அருள் வாக்கினால் அவரை அங்கு துதிப்போர் அனைவரும் ஆன்மீக அனுபவங்களை இன்றளவும் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.

உலகாயத நோக்கில் ஒவ்வொருவருக்கும் எதிர்ப்படும் பிரச்சினைகள் அவரை வணங்கியவுடன் தீர்ந்து போவது ஒரு ஆச்சரிய அனுபவமாகும்.

1950ஆம் ஆண்டு எப்ரல் 14ஆம் நாள் இரவு 8.47க்கு அவர் மேலாம் நிலையை அடைந்து விண்ணில் கலந்த அதே கணத்தில் வானில் ஒரு பெரும் ஜோதி வேகமாகச் சென்றது.

ரமண ஜோதி பூவுலகில் தன் உடலை உகுத்து விண்ணில் ஜொலிக்கும் ஜோதியாக மாறியதைப் பார்த்தோர் அதிசயித்தனர்.

அற்புதமான அண்ணாமலையில் அருளாட்சி புரியும் அதிசய மஹரிஷி ரமணரை நினைத்தாலும் துதித்தாலும் குறைகளை எல்லாம் களையலாம்;கோடி நலம் பெறலாம் என்பது திண்ணம்!

****

tags — அதிசய மஹரிஷி,  பகவான் ரமணர்

SIGNIFICANCE OF NUMBER SIXTEEN!(Post No.7439)

Abhirami bhattar praying to goddess.

Compiled by London swaminathan

Post No.7439

Date uploaded in London – 9 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non commercial blog.

Tamil devotional poet Abhirami Bhattar is a house hold name in Tamil Nadu. Equally famous was Kalamegham whose name means that he pours down poems like a black rainy cloud. These two poets and and an anonymous poet prays to God and Goddess to pay them SIXTEEN GREAT THINGS.

Whenever a newly married couple seeks the blessings of the elders, they used to bless them saying LET BOTH OF YOU GET THE SIXTEEN and LIVE A LONG LIFE.

So there are at least three Tamil poems giving the List of 16 Great Things. Though the lists slightly vary, I will give below the most popular one of Abhirami Bhattar, a great devotee of Goddess Uma/Parvati/Abirami

English Translation
O, Goddess of old Kadavur, Younger Sister of Vishnu who is ‘sleeping’ on the ocean, who is inseparable from Amutheesar, O Abhirami, please bless me with the following:–


1)Good and Proper Education,

2) Long life,

3)Good Friends,

 4)Inexhaustible Prosperity,

5)Youthfulness,

6)Disease free (healthy) body,

 7)Calm mind (tranquillity),

8)Affectionate wife,

9)Children with good character,

10)Name and Fame,

11)Truthfulness,

12)Philanthropy,

13)Theft free Wealth,

14)Good government,

15)Worry free life, and

16) Association with your great devotees.

An alternative translation runs like this :– Life long Learning, Long life, Untarnished Friendship, Undiminished Prosperity, Eternal youth, Healthy Life, Unending exuberance, Ever loving Spouse, Unfaltering Children, Ever rising reputation, Truthfulness, Generosity at all times, Wealth that never ceases to grow, Honesty/ Fair play ( a country with a just government), Life free of sorrows, Love of God or association with god loving people/devotees.

xxx

16 GREAT THINGS  (SIMILAR THOUGHT FROM ENGLISH POEMS)

A Prayer Found in Chester Cathedral

Give me good digestion, Lord,
And also something to digest;
Give me a healthy body, Lord,
With sense to keep it at its best.

Give me a healthy mind, good Lord,
To keep the pure and good in sight;
Which, seeing sin, is not applauded,
But find a way to set it right.

Give me a mind that is not bored,
That does not whimper, wine and sigh;
Don’t let me worry overmuch
About the fussy thing called “I”.

Give me a sense of humour, Lord,
Give the grace to see a joke;
To get some happiness from life,
And pass it on to other folk.

Unknown

Xxxxx

Enormous Wealth

What We Need

A little dash of purpose,
An effort made to cheer,
A little more of courage,
And less of doubt and fear;
A little more of lifting,
And pulling all our weight,
A little less of leaning,
And leaving it to fate.

A little less of grabbing,
Of selfishness and greed,
A little more of helping,
A fellow that’s in need;
A little more of working,
With smiles instead of frowns,
A little less of kicking,
A fellow when he down.

A little less complaining,
About the things that mar,
A little more adapting,
To all the things that are;
A little more of caring,
And willingness to fight,
A little more of daring,
For what we feel is right.

A little splash of humour,
To brighten up the way,
A little joy to follow,
And linger through the day;
A little touch of laughter,
To cause a little mirth,
Is simply what we’re needing,
To gladden this old earth.

Hope Spencer

xxxx

about life

Hindus use cow’s urine for its anti-bacterial properties

Hindus’ greatest contribution to civilization is cow and its milk. They domesticated it and found out the value of milk.

16 Types of Gifts

(From Wisdom Library)

Mahādāna (महादान).—There are sixteen Mahādānas or “Great gifts”. They are: (1) Tulāpuruṣadāna, (2) Hiraṇyagarbha dāna, (3) Brahmāṇḍa dāna, (4) Kalpakavṛkṣadāna, (5) Gosahasradāna, (6) Hiraṇyakāmadhenudāna, (7) Hiraṇyāśva dāna, (8) Hiraṇyāśvaratha dāna, (9) Hemahastiratha dāna, (10) Pañcalāṅgalakadāna (11) Dhārādāna, (12) Viśvacakradāna (13) Kalpalatā dāna, (14) Saptasāgaraka dāna, (15) Ratnadhenu dāna, (16) Mahāpūtaghaṭa dāna. (Agni Purāṇa, Chapter 210).

Tamil and Sanskrit inscriptions say that the great kings did 16 Daanaas (gifts or Donations). The list slightly differs in different Hindu scriptures. But all include Food, Gold, Cows, Land.

Other common gifts were golden images of a Pipal tree, Meru Hills, Divine Tree Karpaka Vruksha, Divine Cow Kamadhenu etc.

The lists say that giving a girl to a worthy man is a good gift and it is known as Kanyaa Dhaanam.

Giving education and helping someone to get married are also great gifts.

The general term for Great Gifts is Maha Dhanam. But the actual meaning of the word is giving gold to a Brahmana equal to one’s own weight.

Great Tamil king Cheran  Senguttuvan weighed himself against gold and gave it to a Brahmin known as Matalan, according to Tamil Epic Silappadikaram.

Hindu king Mulavarman of Indonesia of fourth century CE and Krishna Devaraya of 14th century did 16 Gifts Ceremony.

Sanskrit-English dictionary

Mahadana in Sanskrit glossary (from Wisdom Library)

Mahādāna (महादान).the gift of gold equal to one’s own weight; अथातः संप्रवक्ष्यामि महादानस्य लक्षणम् (athāta sapravakyāmi mahādānasya lakaam).

Derivable forms: mahādānam (महादानम्).

Mahādāna is a Sanskrit compound consisting of the terms mahā and dāna (दान).

Tamil Encyclopaedia ‘Abidana Chintamani’ by Singaravelu Mudaliyar gives a list of over 30 Daanaas (gifts) with full information.

English word donation is derived from Sanskrit word Dhaana.

Hindus worship cow on festival days

Xxxx Subham xxxx

எண் 16-ன் மஹிமை – பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! (Post No.7438)

Compiled by London swaminathan

Post No.7438

Date uploaded in London – 9 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for non-commercial use; thanks

Abhirami bhattar

முப்பதுக்கும் மேற்பட்ட முழு ‘தான’ விவரங்களையும் தமிழ் என்சைக்ளோபீடியாவான அபிதான சிந்தாமணியில் சிங்கார வேலு முதலியார் கொடுத்துள்ளார்.

xxx

இன்னும் ஒரு விளக்கம்

OLD   ARTICLES

16 வகை தானம் (Post No.7957) | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2019/12/18 › 16-வகை-…

  1.  

18 Dec 2019 – … posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000. TAGS – மூல வர்மன் , கல்வெட்டு, 16 வகை தானம்தானங்கள்.

16 வகை கடற்காற்று | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › 16-வகை-கடற்…

  1.  

31 May 2018 – பதினாறு வகைக் காற்றுகளுக்கு தனிதனி ஸம்ஸ்க்ருதப் … அவனிடமுள்ள கொஞ்ச நஞ்சத்தையும் தானம் செய் வேண்டும் என்றனர்.

Abhirami

Xxxxx subham xxxxxxx

EMERALD FOR CHASITY, RUBY FOR LOVE !(Post No.7437)

Compiled by London swaminathan

Post No.7437

Date uploaded in London – 9 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for non-commercial use; thanks

English newspapers in Britain have published a news item that the British believed in gem power. The news appeared yesterday (8-1-2020). Hindu beliefs about gem power existed in Britain 500 years ago.

The lovers’ ring lost in a field 500 years ago

A MEDIEVAL gold ring discovered in a field is likely to have been a 15th century love token, an expert says.

The band, found by a detectorist in York in 2016 and now on display at the Yorkshire Museum, is thought to have been owned by gentry or those ‘associated with royalty’ because it is set with a ruby and an emerald.

Adam Parker, of the Yorkshire Museum Trust, which bought the ring for £20,000, said emeralds were linked with chastity and rubies with love so it could have been ‘a betrothal charm’.

He said the ‘exotic’ ring, which was buried for 500 years, may have been dropped, or stolen and hidden.

It was likely to have had its origin in the Middle East or North Africa.

But experts, while describing the gold ring set with ruby and emerald as an ‘incredible treasure’, say its provenance cannot be proved.

Mr Ibbotson, 52, from Blackpool, found it in a field at Fulford, near York, in December 2016. It was officially declared treasure and he and the landowner received £10,000 each. Now, after more than two years of research, Mr Ibbotson believes it could be the ring on the index finger of Anne of Cleves in Hans Holbein’s 1539 portrait.

–subham–

XXX

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 7 (Post No.7436)

இந்தத் தொடரில் கடைசிக் கட்டுரை

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 77436 (Post No.)

Written by S NAGARAJAN

Uploaded in London on  – 9 JANUARY 2020

Post No.7436

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ச.நாகராஜன்

வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது. இந்த ஸ்தோத்திரங்களின் மூலமும் ஆங்கிலத்தில் அர்த்தமும் கிடைக்காதா என எண்ணுபவர்கள் கட்டுரையின் கடைசி பாராவைப் பார்க்கவும்.

இத்தொடரில் இறுதிக் கட்டுரை இது.

24) சுதர்சனாஷ்டகம்

8 + பலஸ்துதி, ஆக 9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கிய சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்தமான ஒன்று. விஷ்ணுவின் சுதர்சன சக்ரத்தை நோக்கி செய்யப்படும் துதிகள் இவை. விஷ்ணுவின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் முதலாவதானது சுதர்சனம். சில ஆலயங்களில் சுதர்சனருக்குத் தனி சந்நிதி உண்டு. திருமோகூரில் குறிப்பிடத்தகுந்த சுதர்சன சந்நிதி உள்ளது.

பாஞ்சராத்ர ஆகமத்தின் பழைய சம்ஹிதையான அஹிர்புத்ன்ய சம்ஹிதையில் சுதர்சனத்தின் பெருமை பல அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது.

கவிதை ஜாலங்களுடன் சக்தி வாய்ந்த வார்த்தைகள் மூலம் தேசிகர் இந்த அஷ்டகத்தில் சுதர்சனரைப் போற்றுகிறார்.

திருப்புட்குழியில் வாழ்ந்து வந்தோரின் கொடிய ஜுரம் போக இந்த அஷ்டகத்தை தேசிகர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. இன்னொரு சாரார் தேசிகர் வாதுக்குச் செல்லு முன் இதை இயற்றி வாதுக்குச் சென்றதாகவும் மற்ற தத்துவங்களை முன்வைத்தோர் தோற்று விட்டதாகவும் கூறுகின்றனர்.

இதில் உள்ள எட்டு ஸ்லோகங்களை அர்த்தத்துடன் மனதில் ஊன்றிப் படிப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும் என்று உறுதி கூறுகிறார் ஒன்பதாவது ஸ்லோகத்தில், ஸ்ரீ வேதாந்த தேசிகர்.

25) ஷோடசாயுத ஸ்தோத்ரம்

 19 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஷோடசாயுத ஸ்தோத்ரம். ஒரு சமயம் திருப்புட்குழியில் வாழ்ந்தோர் கொடிய ஜுரம் ஒன்றினால் பாதிக்கப்பட்டு வருந்த, அப்போது தேசிகர் இதை இயற்றி அவர்களின் ஜுரத்தைப் போக்கடித்ததாகக் கூறப்படுகிறது.

சுதர்சனருக்கு ஆயுதேஸ்வரன் – ஆயுதங்களின் ஈஸ்வரன் – என்று பெயர். 16 ஆயுதங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சுதர்சனர் இடது கையில் எட்டையும் வலது கையில் எட்டையும் வைத்திருக்கிறார். மிக முக்கியமான சுதர்சன சக்கரத்தை அவர் தன் கையில் வைத்திருக்கிறார்.

18வது ஸ்லோகத்தில் தேசிகர் இந்த 16 ஆயுதங்களுடன் சுதர்சனர் இந்த உலகத்தைக் காத்து வருவதாகக் குறிப்பிடுகிறார்.

19வது ஸ்லோகத்தில்  16 ஆயுதங்களையும் போற்றித் துதிக்கும் இந்த ஸ்லோகங்களை யார் ஒருவர் சொல்கிறாரோ அவருக்கு நலமும் வளமும் கூடும் என்கிறார்.

26) ஸ்ரீ கருட தண்டக:

 4 + 3 ஆக 7 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட தண்டகம்.

விஷ்ணுவின் வாகனம் கருடன். நித்யசூரிகளில் ஒருவரான கருடர் வேதத்தில் புகழப்படுபவர். அவருக்கு ருத்ரா மற்றும் சுகிர்தி என இரு மனைவிகள் உண்டு. விஷ்ணுவின் வியூக தோற்றங்களில் அவர் சங்கர்ஷண அம்சமாக கருதப்படுகிறார்.

ஒரு சமயம் சர்வதந்த்ர சுதந்த்ர பட்டம் கொண்ட வேதாந்த தேசிகரை பாம்பாட்டி ஒருவன் சவாலுக்கு அழைத்தான். தன்னால் கட்டவிழ்த்தப்படும் பாம்பை அவரால் அடக்க முடியுமா என்று கேட்டான்.

உடனடியாக தேசிகர் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு கட்டுண்டது. உடனடியாக ஒரு கருடன் வந்து அதைக் கொத்திக் கொண்டு போனது. இதைக் கண்டு திடுக்கிட்டு வியந்த பாம்பாட்டி தேசிகரிடம் மன்னித்து அருளுமாறும் அது ஒன்று தான் தன் பிழைப்புக்கான சாதனம் என்றும்  வேண்ட தேசிகர் இரக்கம் கொண்டு இந்த தண்டகத்தைப் பாட கருடன் திரும்பி வந்து பாம்பைக் கீழே போட்டது.

இதில் உள்ள சந்தச் சிறப்பை சம்ஸ்கிருத ஆர்வலர்கள் வெகுவாகப் போற்றுவர்.

27) ஸ்ரீ கருட பஞ்சாஷத்

 52 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட பஞ்சாஷத்.

கருடரை தியானித்த தேசிகருக்கு கருடன் தரிசனம் தந்து ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார்.

வர்ணகா என்று கூறப்படும் ஐந்து பகுதிகள் கொண்ட இது, கருட மந்திரத்தின் ஐந்து அக்ஷரங்களைச் சுட்டிக் காட்டுகிறது.

முதல் பகுதி பர வ்யூஹ வர்ணகம். இரண்டாவது பகுதி அம்ருதாஹரண வர்ணகம். மூன்றாவது பகுதி நாகதமன வர்ணகம். நான்காவது பகுதி பரிஷ்கார வர்ணகம். ஐந்தாவது பகுதி அத்புத வர்ணகம்.

கருடர் விஷ்ணுவுக்கு பல அம்சங்களில் சமமானவர் எனக் கூறும் தேசிகர் தனது இறுதி ஸ்லோகத்தில் பாம்பினால் ஏற்படும் உடல் மற்றும் மனோ பாதிப்புகள், வியாதிகள்,விதியின் தீய விளைவுகள் அனைத்தும் இந்த ஸ்லோகங்களைப் படிப்பதால் போய் விடும் என்று கூறி அருள்கிறார்.

28) ஸ்ரீ யதிராஜ சப்ததி

 74 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ யதிராஜ சப்ததி. ஸ்ரீ ராமானுஜரைப் போற்றித் துதிப்பவை இந்த ஸ்லோகங்கள். தயா சதகம் போலவே வெவ்வேறு சந்தங்களில் அமைந்திருக்கிறது இந்த சப்ததி. இதில் அனைத்து ஆசாரியர்களையும் குறிப்பிடுகிறார் தேசிகர். விஷ்ணுவில் ஆரம்பித்து  பெரிய நம்பியில் முடிக்கிறார்.

ராமானுஜரின் மஹத்தான அருமை பெருமைகள் தேசிகரால் விரித்துரைக்கப்படுகின்றன.

முராரியின் பஞ்ச ஆயுதங்கள் ஓருரு எடுத்து ராமானுஜராக அவதரித்ததாக தேசிகர் 12ஆம் ஸ்லோகத்தில் கூறுகிறார்.

இதைப் படிப்பவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனியென – கரதல ஆமலகம் போல – தர்ம வழியைக் காண்பர் என்றும், அவர்களது அறிவு சார்ந்த வார்த்தைகள் ஏனையோருக்கு பகல் நேர நக்ஷத்திரம் போலத் திகழுமென்றும் தேசிகர் 74வது ஸ்லோகத்தில் கூறுகிறார்.

என்னுரை

இதுவரை தேசிகரின் பரந்த இலக்கியத்தில் 28 முத்துக்களைக் கண்டோம்.

இதை மூலத்துடன் முழுவதுமாகப் படிக்க ஆசை கொண்டோர் ஸ்லோகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் போனஸாக சேர்த்துப் பெறலாம்.

மறைந்த மேதை ஸ்ரீமான் எஸ்.எஸ். ராகவன் மற்றும் டாக்டர் எம்.எஸ். லக்ஷ்மிகுமாரி, டாகர் எம்.நரசிம்ஹாசாரி ஆகியோர் Sri Vedanta Desika’s Stotras (with English Translation) என்ற புத்தகத்தில் மேலே கண்ட 28 ஸ்தோத்திரங்களைத் தொகுத்து வழங்கியுள்ளனர். அரிய இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1995இலும் இரண்டாம் பதிப்பு 2002இலும் வெளியாகியுள்ளன.

இதை வெளியிட்டு பெரும் சேவையைச் செய்திருப்போர் : Sripad Trust, 19, Second Main Road, C.I.T.Colony, Chennai – 600 004. பக்கங்கள் 351.

ஆர்வமுள்ள அன்பர்கள் இந்த நூலைப் படித்துப் பெரும் பயன் பெறலாம்.

இந்தக் கட்டுரைத் தொடர் வழங்க உத்வேகமூட்டியது இந்த நூலே.

நமது நன்றியை இவர்களுக்குப் பதிவு செய்து இந்தத் தொடரை முடிக்கிறேன்.

ச.நாகராஜன்

Old articles on Vedanta Desika

அறுபது நகரங்களுக்குச் சென்ற மணி …



https://tamilandvedas.com › 2019/10/21 › அறுபத…

  1.  

Translate this page

21 Oct 2019 – அறுபது நகரங்களுக்குச் சென்ற மணி-சுவையான சம்பவங்கள் (Post No.7121). WRITTEN BY London …

வேதாந்த தேசிகரின் … – Tamil and Vedas



https://tamilandvedas.com › 2019/10/28 › வேதாந…

  1.  

Translate this page

வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாறும் அவர் செய்த அற்புதங்களும்- 1 (Post No7149). Compiled by …

வேதாந்த தேசிகரின் வாழ்க்கை …



https://tamilandvedas.com › 2019/10/29 › வேதாந…

  1.  

Translate this page

29 Oct 2019 – வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாறும் அவர் செய்த அற்புதங்களும்- 2 (Post No7152).

Kalki Purana | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › kalki-purana

  1.  

3 Apr 2015 – The title of the book is ‘KALKI PURANA’. The Sanskrit text was … Vedanta Desika in his famous hymn ‘Daya Satakam’ says. Maa saahasokti …

STORY OF THE BELL THAT TRAVELED TO 60 TOWNS! (Post …



https://tamilandvedas.com › 2019/10/20 › story-of-the-b…

  1.  

Translate this page

20 Oct 2019 – Vedanta Desikan wrote over 100 books. He was considered the incarnation of The Bell that Brahma used in the worship of Lord Venkateswara …

100 year life | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › 100-year-life

  1.  

Translate this page

6 Dec 2017 – … such as Facebook friends, Books, Google and newspapers; thanks. … Sri Ramanuja lived for 120 years and Vedanta Desika lived for 101 …

Foot Prints worship | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › foot-prints-worship

  1.  

15 Aug 2012 – Vedanta Desika, one of the Vaishnavaite Acharyas of Tamil Nadu wrote 1000 slokas on Lords Padukas (shoes)in one night! An amazing feat.

–subham–

உலகில் பெரிய பணக்காரர்கள் (Post No.7435)

உலகில் பெரிய பணக்காரர்கள் (Post No.7435)

Written by London Swaminathan

Uploaded in London on  – 8 JANUARY 2020

Post No.7435

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

பழைய பட்டியல் 1992ல் நான் தினமணிக்கு எழுதிய செய்தி.

புதிய பட்டியல் இதோ –

RankNameWorthRise/FallSource of wealth
2019 (2018)
1 (2)Sri and Gopi Hinduja and family£22bn£1.356bnIndustry and Finance
2 (4)David and Simon Reuben£18.664bn£3.568bnProperty and Internet
3 (1)Sir Jim Ratcliffe£18.15bn£2.9bnChemicals
4 (3)Sir Len Blavatnik£14.37bn£889mInvestment, Music and Media
5 (12)Sir James Dyson and family£12.6bn£3.1bnHousehold goods and Technology
6 (7)Kirsten and Jorn Rausing£12.256bn£1.408bnInheritance and Investment
7 (6)Charlene de Carvalho-Heineken and Michel de Carvalho£12bn£900mInheritance, Brewing and Banking
8 (8)Alisher Usmanov£11.339bn£783mMining and Investment
9 (13=)Roman Abramovich£11.221bn£1.888bnOil and Industry
10Mikhail Fridman£10.9bnNew entryIndustry
11 (5)Lakshmi Mittal and family£10.669bn£3.998bnSteel
12 (74)Anil Agarwal£10.57bn£8.72bnMining
13 (9)Guy, George and Galen Jr Weston and family£10.5bn£450mRetailing
14 (10)The Duke of Westminster and the Grosvenor family£10.1bn£136mProperty
15 (11)Ernesto and Kirsty Bertarelli£9.711bn£52mPharmaceuticals
16 (13=)Hans Rausing and family£9.606bn£273mPackaging
17 (15)Sir David and Sir Frederick Barclay£8bn£600mProperty, Media and Internet retailing
18 (19)John Fredriksen and family£7.543bn£840mShipping and Oil services
19 (21)Denise, John and Peter Coates£6.856bn£1.102bnGambling
20 (20)Earl Cadogan and family£6.85bn£150mProperty
Lakshmi mittal

WHAT IS ARDRA FESTIVAL? WHY DO HINDUS BATHE SHIVA FOREVER? (Post No.7434)

Written by London Swaminathan

Uploaded in London on  – 8 JANUARY 2020

Post No.7434

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

By London swaminathan

ARDRA FETIVAL FALLS ON 10TH JANUARY, 2020.

Devotees of Lord Vishnu celebrated Vaikunda Ekadasi on 6th January 2020. Every year a famous Shiva Festival follows Vaikunda Ekadasi. It is known as Aardra Festival. Temples all over South India celebrate both these festivals in a grand manner.

What is Aardra?

Aardra or Aarudra or Thiruvaathirai (in Tamil) is a star in the 27 star system in Hindu astronomy. It is part of the Orion Constellation in the Northern sky. The name of this star is Betelgeuse . tamilandvedas.com, swamiindology.blogspot.com

Aardra in Sanskrit means WET. This star is associated with Lord Shiva. It is customary for the Hindus to keep the statues of Shiva always wet. So in every temple, there is a Shiva Linga on which there is a vessel with a very small hole. Milk or water will always be dripping on the head of Lord Shiva. Hindus know the famous saying,

VISHNU IS ALANKARA PRIYA

SHIVA IS ABISHEKA PRIYA

Vishnu idols are decorated beautifully with the finest jewellery and clothes.

Shiva idols are always bathed with water, milk or honey.

Alankara means decorating with ornaments and clothing.

Abhisheka means ritual bathing.

Kanchi Shankaracharya Swamiji (1894-1994) explains it beautifully,

“Lord Isvara (Shiva) in his manifestation as Dancing Nataraja , gives his darshan in the early morning of the day on which the confluence of full moon (Purnima) and the star Aardra occurs. This revelation of the Lord is known as Aardra Darsanam. The combination of Aardra and the full moon occurs once a year, in the month of Maargazi (Maargasiirsha in Sanskrit) corresponding to December-January. The meaning of the Sanskrit word Aardra is wet or dripping. In the context of Aardra Darsan, aardra signifies wet with COMPASSION or ‘nanaintha manasu’ in Tamil. This is the period of the year when Nature, which is nothing else than a manifestation of God, puts on a wet cloak of dew. What a wonderful combination is the cool soothing rays of the full moon and the dripping dew that envelops the earth! On such an auspicious day we should also perform abisheka with a heart overflowing with compassion towards our fellow beings and earn His blessings.”

-January 5, 1958 (Acharya’s Madras Discourses, B G Paul & co, Madras (Chennai).

Xxx

Chidambaram is one of the Pachabhuta Sthala (Five Elements Shrines), where this festival is celebrated on a grand scale. Hindus in South India believe that five shrines are very holy because Lord Shiva manifested himself in the form of five natural elements –tamilandvedas.com, swamiindology.blogspot.com

Chidambaram – Akasa /  space or vacuum

Thiruvanaikovil near Trichy – Appu / Water

Tiruvannamalai – Agni / fire

Kalahasti – Vayu / air

Kanchipuram – Prithvi / earth.

Of these five temples, Chidambaram is the place where God is worshipped formless and so Hindus consider it as the most sacred place. Near the vacuum hall which is curtained, there is the most famous Dancing form of Lord Shiva known as Nataraja illustrating the cosmic principle. This explains all that is discovered so far in science from nuclear science to Black holes.

What do Hindus do on Aardra festival day?

In all the South Indian temples Abhisheka (ritual bathing of Shiva with water, milk, honey, coconut water, curd/yoghurt ,ghee, sandal paste, pomegranate juice, fruit salad/Panchamrita, cooked food , holy ash etc. Hindus flock to the Shiva temples in thousands and thousands. Many Shiva temples have ten day long festivals with Chariot Procession/ Rath Yatra during this season.

This ceremony commences at about midnight and lasts till late in the morning. When the bathing is over the image is choicely decorated with costly jewels donated by the kings and devotees. This is done behind the screen/curtain and when it is raised the whole hall rings with the hymns of praise chanted by thousands of pilgrims. tamilandvedas.com, swamiindology.blogspot.com

Pandit Natesa Sastri adds in his book Hindu Feasts (year 1903) ,

“In Chidambaram the procession of Nataraja takes place in the evening. This is the most impressive scene of the Aardra festival and the Ananda Tandavam – the dance in ecstatic joy – takes  place on the occasion. The bearers of the image have a mode of marching slowly, so as to give the image the appearance of dancing. The garbagriha (sanctum sanctorum) is reached after a slow march of three or four hours; and this completes the Aardra festival. tamilandvedas.com, swamiindology.blogspot.com

Shiva temples in Tiruvarur, Lalgudi, Perur, Madurai, Tirunelvely, Kanchipuram also celebrate it with lots of devotees visiting the temple.

Great Saiva philosopher Manikkavasagar spent his last days in Chidambaram and a small festival to honour the philosopher takes place in this (Chidambaram) temple . Manikkavasagar festival is celebrated in Tirupperundurai, Thiruvathavur and Madurai as well.

In Kerala

Malayalees celebrate Thiru Aathirai (Aardra) with dance and music. The women wear traditional dress and dance in circles with Ardra songs in Malayalam.

Saivite Hindus all over Tamil Nadu prepare special Sweet Pudding today called Kali with a special side dish (Kuuttu).

Two festivals with special Titles

Word Thiru is a honorific title in Tamil. This is a cognate word with Sri and SIR title in English.

T becomes S and S becomes T in many world languages. Thus we equate SRI=THIRU=SIR

(TION= SION in English)

Kanchi Shankaracharya (1894-1994) points out two relevant things in his discourses. tamilandvedas.com, swamiindology.blogspot.com

He says that Tamils and Malayalees have rightly added the honorific Thiru with only two stars in the 27 star system.

Thiru Onam (sravna)

Thiru Aathirai (ardra).

Both these are celebrated grandly in Vishnu and Shiva temples. One for Vishnu and one for Shiva showing both are one. More over they are spaced in a way to cover the whole year.

How to solve your problems?

Kanchi Pramacharya (1894- 1994) concludes beautifully one of his discourses on Ardra festival thus,

“Many people come to me every day and pour into my ears heart rending tales of their sorrows and afflictions. What solace can I offer to them except to tell them that their heart aches from dukkha and taapa will be assuaged if they perform abisheka to Parameswara with faith and devotion, doing daily puja to Him. In this sacred Margazi (Margasirsa), everyone should get up at ushath kala, long before dawn, and turn his thoughts to God and thereby find remedy for all his troubles and tribulations.” tamilandvedas.com, swamiindology.blogspot.com

Discourse on December 5, 1957 in Madras.

From The Acharya’s Call, Part 1, B G Paul & Co, Madras 1964.

Before concluding he quotes two beautiful Sanskrit verses which show all surrounding Shiva are cool such as moon, Ganga on his head, winter season and abisheka from devotees. By keeping Shiva cool, we get his blessings. Keep Lord Shiva cool to keep ourselves cool (happy).

–subham–

அரையர் சேவை- ஒரு சுவையான சம்பவம் (Post No.7433)

Written by London Swaminathan

Uploaded in London on  – 8 JANUARY 2020

Post No.7433

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

முன்னடிக்காரரும் பின்னடிக்காரரும்

இராப்பத்து, பகல் பத்து காலங்களில் பெருமாள் கோவில் களில் நடக்கும் அலங்காரமும் பெருமாள் புறப்பாடும் அரையர் சேவையும் காணக் கண் கோடி வேண்டும். பக்தர்கள் அல்லது அரையர் ஆகியோர் மாறி மாறிப் பாடுவர். முதல் இரண்டு அடிகளை ஒரு வரிசையில் உள்ளோர் பாட, மறறொரு வரிசையில் உள்ளோர் பின்னிரண்டு அடிகளை பாடுவார்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு சுவையான சம்பவம் நினைவுக்கு வருகிறது. மதுரை வடக்கு மாசிவீதி யாதவர் தெரு. அங்கே ஒரு கிருஷ்ணன் கோவில் மிகவும் புகழ் படைத்தது. மதுரை மீனாட்சி கோவிலுக்கு அடுத்தபடியாக உற்சவ நாள் அனைத்திலும் நாலு மாசி வீதிகளில் சுவாமி/  பெருமாள் வலம் வருவது இந்தக் கோவில் ஒன்றே. கூடல் அழகர் பெருமாள் கோவில் 2000 ஆண்டுப் பெருமை பெற்ற இருந்தையூர் என்றாலும் நாலு மாசிவீதிகள் வழியாக  ஊர்வலம் வராது . அப்போது நாங்கள அண்ணன் ,தம்பிகள் அனைவரும் பெருமாளுக்கு இருபுறமும் நின்று சாமரம் விசிறி வீசுவோம். எதற்காக?? அரை அணா காசுக்காக.! எங்கள் நெற்றியில் விபூதி பட்டை இருந்தாலும் அய்யர் வீட்டுப் பிள்ளை என்பதால் எங்களை யாதவ மானேஜர் விசிறி ,, சாமரம் போட அனுமதிப்பார். மேலும் ஐயங்கார் பையன் களும் போட்டிக்கு வரவில்லை. அப்போது ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை முதலிய இடங்களில் இருந்து பக்தி சிரத்தையான தென்கலைப் பிரிவினர் –அய்யங்கார் குடும்பத்தினர் — எங்கள் வீட்டில் தங்குவர். நாங்கள் ஐயர்கள் என்பதால் என் தாயார் சமைப்பதை அந்த வீட்டுப் பெண்மணிகள் சாப்பிட மாட்டார்கள்.

என் அம்மாவும் அவர்களுக்கு சகல உபசாரம் செய்து ஒரு த னி  குமுட்டி அடுப்பு கொடுத்து ஒரு மூலையில் சாணியால் மெழுகி அங்கே சமைத்துக்கொள்ள உதவி செய்வார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு முறை இரவு  அரட்டை துவங்கியது. அவர்களுடன் வந்த இளைஞன் மதுரை ராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் பயில்பவன். பேச்சு வாக்கில் தனக்கு நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் 4000 பாடல்களும் மனப்பாடமாகத் தெரியும் என்று சொன்னான். நாங்கள் அண்ணன், தம்பி அனைவரும் சேர்ந்து அது முடியவே முடியாது என்றோம் .என் தந்தை ‘காத்ரேஜ் பீரோ’ முழுதும் 6000 புஸ்தகம் வாங்கி வைத்திருந்ததால் திவ்யப் பிரபந்தத்தை எடுத்து சவால் விட்டோம்.

வடக்கு மாசி வீதியிலுள்ள எங்கள் வீட்டு முதல் அறைக்கு பகுத்தறிவுப் பாசறை என்று பெயர். எப்போதும் ஒரு அரட்டைக் கச்சேரி கும்பல் இருக்கும். பகல் நேரமானால் எல்லோருக்கும் ‘ஓசி’க் காப்பியும் கொடுப்போம்.

அந்த இளைஞரிடம் ஒரு பாடலின் துவக்க வரியை வாசித்து சொல்லுங்கள் பார்ப்போம் என்றோம் . அரையர் கள் பாடுவதற்கே ஒரு ராகம் உண்டு. அதில் அழகாக இரண்டு அடிகளை ராகத்துடன் பாடி விட்டு நிறுத்தினார். எல்லோரும் நன்றாக இருக்கிறது; ம்…. ம்….. தொடருங்கள் என்று உற்சாகக் குரல் கொடுத்தோம்.அவர் பாடவில்லை. ஏன்? ஏன்? என்று எல்லோரும் ஒரே நேரத்தில் குரல் கொடுத்தோம். நான் முன்னடிக்காரன் ; பின்னடிக்காரன் இங்கே இல்லையே; அவர் எங்கே? என்று கேட்டார். அதாவது 4 வரிப் பாடலில் முதல் இரண்டு அடிகளை ஒரு கோஷ்டியும் எதிர் வரிசையில் நிற்கும் மற்றொரு கோஷ்டி பின்னிரண்டு அடிகளையும் பாடுவது வழக்கமாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாங்கள் அனைவரும் வெடிச் சிரிப்பு சிரித்தோம். பாடல் தெரிந்தாலும் கூட பின்னடிக்காரர்கள் பாடாவிட்டால் அடுத்த  அடி ஞாபத்துக்கு வராது! எனவே எல்லோரும் இளம் வயது என்பதால் தமாஷ் அத்துடன் முடிந்தது. அறையர்கள் அவர்களுக்கே உரித்தான பட்டுத் தொப்பி / குல்லாய்களுடன் பாடும் பாசுரம் / பாட்டு – திருவாய்மொழி –இன்றும் மனக்கண் முன் நிற்கிறது. அந்த நாட்கள் பொன்னான நாட்கள்.! tamilandvedas.com, swamiindology.blogspot.com

Tags –  அரையர் சேவை,  சுவையான சம்பவம்

–subham–

அரையர் சேவை, சுவையான சம்பவம்

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 6 (Post No.7432)

Written by S Nagarajan

Uploaded in London on  – 8 JANUARY 2020

Post No.7432

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

அடுத்து அவர் அருளியுள்ள இன்னும் சில ஸ்தோத்திரங்களைப் பார்ப்போம்.

***

தொடரும்

பறக்கும் தட்டு மர்மம் நீடிக்கிறது! (Post No.7431)

written by London Swaminathan

Uploaded in London on  – 7 JANUARY 2020

Post No.7431

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

தினமணிப் பத்திரிக்கையில் 1992ம் ஆண்டு நான் எழுதிய பறக்கும் தட்டுச் செய்தியை இணைத்துள்ளேன்.

27 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னும் மர்மம் நீடிக்கிறது. ஒரு பறக்கும் தட்டையும் பிடிக்க முடியவில்லை. அகில் வரும் பிற கிரக மனிதர்களைப் பிடித்ததும் இல்லை. ஆயினும் அவ்வப்போது சில மனிதர்களைப்  பார்த்ததாக மட்டும் பத்திரிகைகள் செய்தி வெளியிடும்.

இதோ லேட்டஸ்ட் Latest பறக்கும் தட்டு UFO) நியூஸ்

UFO bombshell: US Senator vows to declassify UFO files if she wins US presidential race

UFO files will be declassified to the public in the event of Amy Klobuchar winning the race to the White House, the US Senator has announced.

பறக்கும் தட்டு பற்றி அமெரிக்க அரசாங்கம் இதுவரை சேகரித்து வைத்துள்ள ரகசிய பைல்களை அம்பலப்படுத்துவேன் என்று ஜனநாயகக்  கடசி வேட்பாளர் அமி நேற்று அறிவித்துள்ளார் . இவர் ஜன நாயகக் கடசி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நவம்பர் மாதத் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதி ஆனால்……………………… இது நடக்கும்.

UFO sighting: ‘Strange lights’ and ‘creepy stuff’ over the UK spark an alien UFO frenzy

UFO sightings and reports peaked last week when a mysterious chain of moving lights cut across the night skies over parts of the UK, prompting some to speculate aliens had finally visited Earth.

By SEBASTIAN KETTLEY

PUBLISHED: 15:59, Tue, Dec 31, 2019 | UPDATED: 15:59, Tue, Dec 31, 2019

The UFOs or unidentified flying objects were seen over Wales and England earlier last week. Eyewitness accounts shared on social media reported a train of bright lights moving across the starlit sky.

வேல்ஸ், இங்கிலாந்து பிரதேசங்களுக்கு மேல் பறக்கும் தட்டுகள் சென்றதாக ஒரு செய்தி வெளியானது. இப்படி வாரம்தோறும்  செய்தி வருவதால் உண்மை எது, பொய் எது என்றே தெரிவித்தில்லை. கடந்த ஒரு வாரத்தில் லண்டன் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை மட்டும் காட்டினேன்.

UFO-  UNIDENTIFIED  FLYING OBJECTS.

 உலக நாடுகள் தபால் தலைகளிலும் பறக்கும் தட்டுப் படங்களைப்  போட்டு மக்களின் ஆர்வத்தைத் தக்கவைக்கின்றன.