விலங்குகள் கனவு காணும்! தமிழர்கள் கண்டுபிடிப்பு! (Post No.13,875)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,875

Date uploaded in London – 11 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

விலங்குகள் கனவு காணும்; தமிழர்கள் கண்டுபிடிப்பு

விலங்குகள் கனவு காணுமா ? என்று கூகுள் google  செய்து பார்த்தீர்களானால் கடந்த ஐந்து ஆண்டுகளில் விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியான பல கட்டுரைகளைக் காண்பீர்கள். அவர்கள் ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல அதை எழுதி இருக்கிறார்கள். சம்ஸ்க்ருத நூல்களில் கூட இல்லாத விலங்குகளின் கனவுகள், சங்க கால இலக்கியத்தில் உளது; பிற்காலத்தில் இதை ஏனைய தமிழ் நூல்களிலும் காணலாம்.

கனவுகள் பற்றி பிராமணர் கண்டுபிடிப்பு  

உலகில்  கனவுகளின் உண்மை நிலையினைக் கண்டுபிடித்தவர்கள் வேத காலப் பிராமணர்கள்; மனிதர்களோ உயிரினங்களோ கனவு காணாமல் தூங்க முடியாது என்று கண்டு பிடித்ததால் இன்றும் கூட தினமும் முக்காலம் செய்யும் சந்தியாவந்தன கிரியையில் கெட்டகனவு  வரக்கூடாது என்று மந்திரம் சொல்கிறார்கள். இப்போது விஞ்ஞானிகளும் எல்லோரும் தினமும் கனவு காண்பதை ஒப்புக்கொள்கிறார்கள்

கனவுகள் பற்றி கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவோ கட்டுரைகளை எழுதிவிட்டேன் (அடியிலுள்ள இணைப்புகளைக் காண்க)

வேதகால கனவுகள் முதல் கிரேக்கர், சுமேரியர், எகிப்தியர் கனவுகள் பற்றி இதுவரை கண்டுவிட்டோம். ஆயினும் ஒரு வியப்பான விஷயம், தமிழர்கள் மட்டுமே விலங்குகள் காணும் கனவுகள் பற்றி விரிவாகப் பாடியுள்ளனர்.

பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்தில் துவங்கும் மனிதர்களின் கனவுகள் திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் பெரிய புராணம் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி, தேவாரம் என்று பல நூல்களில் பல்கிப் பெருகி பழமொழிகளையும் ஆக்ரமித்து ஆயிரத்துக்கு மேலான்  இடங்களில் பரிணமிக்கிறது.  சங்க இலக்கியங்களில் மட்டுமே நாற்பதுக்கும் மேலான கனவுகள் காணப்படுகின்றன. 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் (Second Century BCE) பாடிய கவிதைகளிலும் கனவுகள் இருந்தாலும் அவன் கூட விலங்குகள், பறவைகள்  கனவு கண்டதாகப் பாடவில்லை. ஆயினும் பஞ்சதந்திரக் கதைகளிலும் அதற்கு முன்னர் காளிதாசன் எழுதிய காவியங்களிலும் விலங்குகளும் பறவைகளும் நம்மைப் போன்ற உணர்ச்சியும் அறிவும் உடையன  என்பதை தெளிவாகவே — மிகத் தெளிவாகவே – வருணித்துள்ளனர். காளிதாசனின் உலகப் புகழ்பெற்ற நாடகம்– சாகுந்தலம் — என்பதன் பொருளே பறவைப் பெண்; சகுந்தலாவை வளர்த்தது பறவைகள் என்பதால் இப்படி பெயரிட்டார் கவிஞர். அந்த சம்ஸ்க்ருத சொல்லில் இருந்துதான் சகுனம் / ஆரூடம் என்பனவற்றை நாம் பயன்படுத்துகிறோம் சகுன= பறவை;

ஷேக்ஸ்பியரும் கூட கானகப் பெண் சகுந்தலாவைப் பார்த்து Tempest டெம்ப்ஸ்ட் நாடகத்தில் மிராண்டா என்ற அப்பாவிப் பெண் கதாபாத்திரத்தைப் படைத்தார். இரண்டு நாடகங்களையும் படிப்போருக்கு ஒற்றுமைகள் உள்ளங்கை நெல்லிக்கனி என புலப்படும்.

****

இதோ விலங்குகளின் கனவுகள்

1.கனவு நற்றிணை பாடல் 87; வௌவால் கனவு

நற்றிணை 87, நக்கண்ணையார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்

ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,

வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு

நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,

அது கழிந்தன்றே தோழி, அவர் நாட்டுப்  5

பனி அரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை

துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,

பெருந்தண் கானலும் நினைந்த அப் பகலே.

பொருள்

முள் போன்ற பற்களையுடைய வௌவால் உயர்ந்த ஒரு கிளையில் தொங்கியபடி தூங்கும் பொழுதிலே, போர்களில் வெற்றி அடையும் சோழ மன்னனான ஆற்காட்டில் உள்ள அழிசியின் பெரிய காட்டில் உள்ள நெல்லிக்கனியின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக் கனவு கண்டாற்போல்…….

****

2.யானையின் மதநீரை வண்டு/ தேனீ கனவு காண்டல்அகநானூறு 132

அகநானூறு 132தாயங்கண்ணனார்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

ஏனலும் இறங்கு குரல் இறுத்தன, நோய் மலிந்து,

ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி

ஏதில மொழியும் இவ்வூரும், ஆகலின்,

களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி,

வால் நிணப் புகவின், கானவர் தங்கை  5

அம் பணை மென்தோள் ஆய் இதழ் மழைக்கண்

ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின்,

கொண்டனை சென்மோ, நுண் பூண் மார்ப,

துளி தலைத் தலைஇய சாரல் நளி சுனைக்

கூம்பு முகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை  10

வேங்கை விரி இணர் ஊதிக் காந்தள்

தேனுடைக் குவி குலைத் துஞ்சி யானை

இருங்கவுள் கடாஅம் கனவும்

பெருங்கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.

தேனீயானது யானையின் மத நீரைக் கனவு கண்டது

****

3.கடற்காக்கை இறால் மீனை கனவு காண்டல்அகநானூறு 170

அகநானூறு 170, மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார், நெய்தற் திணை – தலைவி நண்டிடம் சொன்னது

கானலும் கழறாது கழியும் கூறாது,

தேன் இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது

ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே,

இருங்கழி மலர்ந்த கண் போல் நெய்தல்

கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇத்,  5

தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து

பறைஇய தளரும் துறைவனை, நீயே,

சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால்

கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்

கடல் சிறு காக்கை காமர் பெடையொடு  10

கோட்டு மீன் வழங்கும் வேட்ட மடி பரப்பின்

வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து,

நின்னுறு விழுமம் களைந்தோள்

தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே.

கடற்காக்கைகள் அவற்றின் பெட்டைகளுடன் சுறாமீன் வழங்கும் கடலில் இறால் மீன்களை (ருசிக்காக) கனவு கண்டன.

****

4.கவரிமான் நரந்தம் புல்லைப் பற்றி கனவு காணல் – பதிற்றுப் பத்து 11

பொலன் அணி எருத்த மேல்கொண்டு பொலிந்த நின்

பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே,  20

கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி

பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்,

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்

தென்னங் குமரியொடு ஆயிடை

மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.  25

(ஆரியர் – கற்றுணர்ந்த ரிஷி முனிவர்கள் தவம் செய்யும் இமயமலை. காளிதாசன் எழுதிய குமார சம்பவத்தில் உள்ள  இந்த வரிகள் புறநானூற்றின் இரண்டாவது பாடலிலும் உளது ).

கவரிமான்கள் நல்ல சுவையான நரந்தம் புல்லினை மேயும் கனவுடன் தூங்குகின்றன.

****

My Old Articles on Dream கனவு

வேதத்தில் கனவு

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

கனவுகளின் பொருள் என்ன (Dream Interpretation) என்ற ஆராய்ச்சியும் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது.

விநோதக் கனவுகள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

4 Aug 2015 — ஒரு ஜெர்மன் இளவரசனுக்கு எலிக் கனவு வந்தது. அந்தக் கனவில் மூன்று எலிகள் வந்தன.


கிரேக்கர் கனவுகள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

எகிப்திய, சுமேரிய கனவுகளும் இந்துமத கனவுகளும் … இந்து மதத்தில் உள்ளது போலவே, …


Dreams in Vedas

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › dreams-in-vedas

31 Jul 2015 — … வேதம் ரிக்வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர். Blog Stats. 15,489,852 hits. Follow …

அதிசயக் கனவுகள் -2 (Post No.9673)

Tamil and Vedas

https://tamilandvedas.com › அத…

·

1 Jun 2021 — அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். கனவு பற்றிய அருட் … By S Nagarajan

அதிசயக் கனவுகள் (Post No.9645)

May 25, 2021 By S Nagarajan

Tamil Discovery! Do Animals Dream? (Post No.13872)

Tamil and Vedas

https://tamilandvedas.com › tamil-…

22 hours ago — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. https://www.pustaka.co.in/home/author/london-swaminathan.

Do our Dreams Have Meaning?

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2011/12/29 › do-our-drea…

29 Dec 2011 — For instance, the Chandogya Upanishad (V 2-8-9) says seeing a woman in a dream means a previous sacrifice (fire ceremony) was successful. But it … 

—subham—

Tags -விலங்குகள், கனவு, காணும், தமிழர்கள் கண்டுபிடிப்பு ,

Leave a comment

Leave a comment