Written by London Swaminathan
Post No. 15,744
Date uploaded in London –16 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 25
திருக்கள்வனூர்
காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கள்வனூர் (கள்வப்பெருமாள் திருக்கோயில்) காமாட்சி அம்மன் கோவிலுக்குள் அமைந்துள்ளது.
திருக்கள்வனூர் (கள்வப்பெருமாள் கோயில்) 108 வைணவ திவ்ய தேசங்களில் 55-வது தலமாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற, ஆதிவராகப் பெருமாள் நின்ற கோலத்தில் அருளும்
மூலவர்: கள்வப்பெருமாள் (ஆதிவராகப் பெருமாள் – நின்ற திருக்கோலம்)
தாயார்: அஞ்சிலை வல்லி நாச்சியார் (சவுந்தர்யலட்சுமி)
தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி
விமானம்: வாமன விமானம்
சிறப்பு: காமாட்சி அம்மன் கருவறைக்கு அருகில், ஒரு சைவக்கோவிலுக்குள் அமைந்திருக்கும் வைணவத்தலம்
பெருமாள் மகா லட்சுமியின் அழகை ரசித்து “கள்வன்” (திருடன்) போல மறைந்திருந்து பார்த்ததால், இங்கு கள்வப்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற, ஆதிவராகப் பெருமாள் நின்ற கோலத்தில் அருளும் இத்தலம், கணவன்-மனைவி ஒற்றுமை மற்றும் செல்வம் பெருக வழிபடப்படுகிறது.
இந்தத் திருத்தலத்தைப் பற்றி திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தை (பாசுரம்: 1018) மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருக்கள்வனூர் பாசுரம் (பெரிய திருமொழி 2.9.2):
“கலைதரு ஞானத் தொடும்அறி வான்கருத்துடை ஒருவனைநிலையுடை மூவுல கத்தவன் கள்வன்நீரகத் தாயவென் னாதேஅலைகடல் மாகட லுள்அன்று துயின்றஅப்பனை யெனக்கருள் செய்தமலையன தோள்மதன் காமக்கள்வனூர் அஞ்சிலை நாச்சியாரே.”
திருமங்கையாழ்வார் இந்தத் தலத்தில் எம்பெருமானை ‘கள்வன்’ என்றே அழைத்து, அவர் காஞ்சியில் காமாட்சி அம்மன் கோவிலுக்குள், அஞ்சிலைவல்லி நாச்சியார் சமேதராகத் தென்கிழக்கு நோக்கி ‘ஆதிவராகப் பெருமாள்’ (கள்வப்பெருமாள்) ஆக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் என்பதைப் பாடியுள்ளார்.
சைவக் கோவில்களுக்குள் பாடல் பெற்ற பெருமாள் கோவில் (திவ்ய தேசம்) அமைந்திருப்பது சிதம்பரம் நடராஜர் கோவிலிலும், காஞ்சிபுரத்தில் உள்ள இந்தத் தலத்திலும், ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும் மட்டுமே. முதலில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் உள்ள அரூப மகாலட்சுமியை வழிபட்ட பிறகே, கள்வப் பெருமாளையும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
இந்த திவ்யதேசம் காமாட்சி அம்மன் கோவிலின் உள்ளே ஒரு தூணுக்கு இடையில் சந்நிதி போன்ற ஒரு சிறிய இடத்தில் அமைந்துள்ளது. பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். மூலவர் ஸ்ரீ ஆதி வராகப் பெருமாள் (கள்வப்பெருமாள் ) நின்ற திருக்கோலத்தில், மேற்கு நோக்கிய அபய ஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். தாயாருக்கு தனி சன்னதி இல்லை. ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திரு நிலாத்திங்கள் துண்ட பெருமாள் தாயாருடன் இணைந்திருப்பதை போல், இத்தலத்திலும் தாயார் அஞ்சிலை வல்லி நாச்சியார் பெருமாளுடன் இணைந்திருக்கின்றார். முதலில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் உள்ள அரூப மகாலட்சுமியை வழிபட்ட பிறகே, கள்வப் பெருமாளையும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
மகாலட்சுமி, ஒருமுறை தனது அழகைப் பற்றி அகங்காரம் கொண்டபோது, விஷ்ணு அவளுக்கு சாபமிட்டார். சாபத்தால் தன் அழகை இழந்த மகாலட்சுமி, அதை மீண்டும் பெறுவதற்காக காமாட்சி அம்மனை நாடினாள். அப்போது, மகாலட்சுமியும் காமாட்சியும் பேசிக் கொண்டிருந்ததைக் கள்ளத்தனமாக விஷ்ணு மறைந்திருந்து கேட்டார். இதை அறிந்த காமாட்சி, விஷ்ணுவை ‘கள்வன்’ என்று செல்லமாக அழைத்தார். அதனால், இந்தக் கோவிலில் பெருமாள், கள்வப் பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
திருக்கள்வனூர் பெருமாளை வணங்குபவர்களுக்கு, இழந்த அழகு, செல்வம், கணவன்-மனைவி ஒற்றுமை ஆகியவை திரும்பக் கிடைக்கும். திருகள்வனூர் கள்வப் பெருமாளையும், காமாட்சி அம்மனையும் வேண்டிக் கொண்டால் அண்ணன் – தங்கை ஒற்றுமை சிறப்பாக அமையும் என்பத ஐதீகம். இங்கு காமாட்சி அம்மனே பிரதான தெய்வம் என்பதால், பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் ஏதும் கிடையாது. தனியாக விழாக்களும் கிடையாது.
–subham—
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-25; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருக்கள்வனூர்