
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,765
Date uploaded in London – 21 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நாஸ்திகனுக்கு என்ன வேலை சனாதன தர்மத்தில்?
ச. நாகராஜன்

கடவுள் நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு கோவிலில் என்ன வேலை? சனாதன தர்மத்தில் தான் என்ன வேலை?
அடிப்படை உரிமைகள் Vs இறைபக்தியும் நம்பிக்கையும் என்ற விஷயத்தில் சும்ப்ரீம் கோர்ட் நீதிபதி பி.வி. நாகரத்னா 21-4-26 செவ்வாய்கிழமையன்று கடவுள் நம்பிக்கையிலும் மத சடங்குகளிலும் நம்பிக்கை இல்லாத ஒரு நபர் அந்த கொள்கைகளின் உண்மையை எப்படி எதிர்க்கலாம் என்ற கேள்வியைக் கேட்டார். இவர் சுப்ரீம் கோர்ட்டின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட குழுவிற்குத் தலைவர்.
சபரிமலை ஐயப்ப தந்திரியின் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞரான பெண்மணி வி. கிரி. ஒரு நாஸ்திகருக்கு ஒரு கோவிலின் தெய்வம் பற்றியோ அங்குள்ள வழக்கான வழிபாட்டு முறைகள் நம்பிக்கைகள் பற்றியோ கேள்வி கேட்க எந்த ஒரு உரிமையும் இல்லை என்றார்.
நீதிபதி நாகரத்னா பத்து முதல் 50 வயது வரையுள்ள பெண்மணிகள் சபரிமலைக்குச் செல்லலாமா என்பதைப் பற்றி ஒரு நாஸ்திகர் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்டார்.
இதை அப்படியே ஒத்துக் கொண்ட சீனியர் அட்வகேட்டான கோபால் சுப்ரமணியன் ஒரு மதசார்பற்ற அமைப்பின் மதசார்பற்ற நடைமுறைகள் வேண்டுமானால் வழக்குமன்றத்தில் விவாதிக்கப்படலாமே தவிர மதத்தின் வழிபாட்டுமுறைகள் அரசியல் சட்டத்தால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி அஹ்சானுடின் அமானுல்லா ஒரு நடைமுறை சமயசார்பற்றதா அல்லது மதத்தின் அடிப்படையில் அமைந்ததா என்பதை ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் விசாரிக்கலாம் என்றார்.
நீதிபதி ஆர் மஹாதேவன் நம்பிக்கை என்பது நம்பிக்கை தான். நடைமுறை பழக்கம் என்பது வேறு. என்றாலும் அதுவும் நம்பிக்கையின் அடிப்படையில் உள்ள ஒன்றே தான் என்றார்.
விவாதத்தில் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
அடிப்படையாகப் பார்த்தால் ஒரு ஹிந்து நாஸ்திகனாக இருக்கவே முடியாது.

நாஸ்திகம் என்பது அறியாமையாலும், மனித கர்வத்தினாலும் சமூகத்தின் அறக் கோட்பாட்டை பாதிக்க முனையும் ஒரு தவறான கொள்கை.
மாதவிடாய் ஏற்படும் வயதில் உள்ள பெண்கள் காலம் காலமாக சபரிமலை கோவிலுக்குச் செல்வதில்லை.
இதை அரசியலாக்கி ஆதாயம் தேட முனைவோருக்கு நமது நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
**